08-12-2005, 08:32 AM
kurukaalapoovan Wrote:சதியின் முதலாவது கட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. சமாதான தீர்வு முயற்சி என்ற நாடகத்தின் பின்னணியில் ஆரவாரங்களின்றி பல நகர்வுகள் புலிகளின் சுயாதீன-தன்நிறைவான பொருளாதார வணிக மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை சர்வதேசரீதில் தடுக்க முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலப்பகுதியில் வெளிப்பார்வைக்கு ஊடகங்கள் ஆரவாரித்ததெல்லாம் "வெளிநாடு சென்று திரும்பும் புலிகளின் பயணப் பொதிகள் சேதிக்கப்படவில்லை" "கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம்; VSAT தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளது" "சக்தி மிக்க ஒலிபரப்பு சாதனங்கள் புலிகளின் குரலுக்கு வழங்கப்பட்டுள்ளன" "ரணில் அரசு தீர்வையற்ற இறக்குமதி சலுகை வழங்கிறது புலிகளிற்கு". இதை உண்மையில் நன்கு திட்டமிட்டு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல்ரீதியான யுத்;தமாக கூட பார்க்கலாம். இப்படியான ஒரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பறவர்களாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அதன் மறைந்த தலைவர் அரபாத்தையும் பார்க்கலாம்.
.
சரியான விடயம் தான் குருக்ஸ். இதே மாதிரியான கருத்தைத்தான் அமரர் மாமனிதர் சிவராமும் தமிழ்தேசியத் தொலைக் காட்சியின் பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். அதில் அவர் புரிந்துனர்வு ஒப்பந்தத்துக்கு முன்னர் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம்தான். தீச்சுவாலை நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் தயார்படுத்தலுக்கு உதவியது என்றும் அதுக்கு தூண்டுதலாய் இருந்தது அமெரிக்கா என்றும் சொல்லி இருந்தார்.
ஆனால் அப்போது பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. அனால் இப்போதுதான் தெரிகிறது அவர்கள் விரித்த வலைக்கருகிலேயே புலிகளும் தங்களது வலையை விரித்து வைத்திருந்தனர் என்று. காரணமாக ஒன்ரைச்சொல்லலாம் அது அப்போது இல்லாத அளவு இப்போது அரசாங்கம் உட்பட்டிருக்கும் சர்வதேச அழுத்தம். ஏன் சொல்கிறேன் என்றால் புலிகளுக்கு நன்குதெரியும் இந்தியாவைப்பற்றியும் அமெரிக்காவப்பற்றியும் அவர்களது வெளியுறவுக்கொள்கைகள் பற்றியும்.
எது எப்படியானாலும் சிவராம் அவர்கள் சொன்னதன் சுருக்கம் என்னவென்றால் தமிழர்கள்தான் அவர்களின் தலை விதியை எழுதிக்கொள்ள வேண்டும், தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
::