Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களத்தின் சகோதர எழுத்தாளருக்கு முதல் பரிசு
#12
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->2002 அன்று வாசித்த போது மனது றொம்பவே சங்கடப்பட்ட விடயம் அதனால் இந்த நேரத்தில் இதை மீள நினைவுபடுத்த விரும்பினேன்  

<img src='http://www.vikatan.com/av/2002/jan/06012002/p18.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2002/jan/06012002/p20.jpg' border='0' alt='user posted image'>
இலக்கியம்
கனவுகளைச் சுமந்தவர்!  

கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது சி.சு. செல்லப்பா எழுதிய 'சுதந்திர தாகம்' நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், கௌரவத்துக்குரிய இந்த விருதைப் பெற்றுக்கொள்ள  
அவர் தற்போது உயிரோடு இல்லை!  



சின்னமனூர் சுப்ர மணியம் ஐயர் மகன் செல்லப்பாவுக்கு பாரதியார்தான் ஆதர்சம். பாரதியைப் போலவே நிறைவேறாத கனவுகளைச் சுமந்துகொண்டு திரிந்தவர் அவர். ஒவ்வொரு முறை புத்தகம் வெளியிடும் போதும் அச்சாகி வந்தி ருப்பவற்றைப் பார்த்து, 'இதையெல்லாம் விற்றால் லட்ச ரூபாய் கிடைக்கும். இன்னும் நிறைய புத்தகம் போடலாம்' என்பாராம். கடைசிவரை திருவல்லிக் கேணி பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள அவரது வீடு புத்தகங்களால் நிறைந்ததுதான் மிச்சம்!  

இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் அவரைப் பார்க்க வந்த வல்லிக்கண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ''என் வாழ்க்கை யில் நான் கொண்டிருந்த இரண்டு லட்சியங்களும் நிறைவேறிவிட்டதால், சந்தோஷமாக சாகப் போகிறேன். ஒன்று, என் இலக்கியக் கனவான 'சுதந்திர தாகம்' நூலை அச்சில் பார்த்துவிட்டேன். இரண்டு, யாரிடமும் எதற்காகவும் காசுக்காக கையேந்தக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தேன். இரண்டிலும் எனக்கு நிறைவுதான்!'' என்று கூறியிருக்கிறார்.  

தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவரான செல்லப்பா, தன்னுடைய இருபதாவது வயதில் எழுத ஆரம்பித்தவர். எழுத்தைப் பற்றி அவருக்குள் எழுந்த உக்கிரமான கனவு வேறெந்த வேலையிலும் ஈடுபடவிடாமல் அடித்து விட்டது. திருமணமாகி மனைவி மீனாட்சியுடன் சென்னைக்கு குடித்தனம் வந்த பிறகு நல்ல சம்பளத்தில் கிடைத்த சில வேலைகளையும் இதனால் உதறும்படி ஆயிற்று. அதில் ஒன்று தினமணியில் உதவி ஆசிரியர் பணி.  

இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் (1959-ல்) 'எழுத்து' பத்திரிகையைத் தொடங்கினார். இன்றைக்கு இருக்கக்கூடிய நவீனப் படைப்பாளிகள் பல பேரை இறக்குமதி செய்த 'எழுத்து'வை இலக்கியத்தின் திருப்புமுனை எனலாம். ஆனால், அதற்காக வத்தலக்குண்டில் இருந்த தாயாரின் பூர்வீக நிலத்தையும், மனைவியின் நகைகளையும் அவர் விற்க வேண்டியிருந்தது. பிறகு, 'எழுத்து பிரசுரம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கிப் புத்தகங்களை வெளியிட்டார். அவற்றை விற்பதற்காக ஊர் ஊராக அலைந்திருக்கிறார்.  

மதுரை கல்லூரியில் படித்தபோது உப்புசத்தியாக் கிரகத்தில் பங்குபெற்றுச் சிறைக்குச் சென்றவர் செல்லப்பா. அதைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்தான் சுதந்திர தாகம்.  

கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை எண்பது வயதுக்கு மேல் கைகள் நடுங்க நடுங்க எழுதியவருக்கு அதை புத்தகமாகக் கொண்டு வருவதுதான் பெருங்கஷ்டமாக இருந்திருக்கிறது. நூல் வருவதற்குள் தான் இறந்துவிடுவோமோ எனத் தவித்திருக்கிறார். பெரும் நெருக்கடிகளுக்கிடையே 'வெளி' ரங்கராஜ் போன்ற நண்பர்களின் உதவியோடு 'சுதந்திர தாகம்' நூல் வடிவம் பெற்றது.  

செல்லப்பா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அதன் மூலம் வந்த தியாகிகள் பென்ஷனில்தான் குடும்பம் ஓடியது. சுப்பிரமணி என்று ஒரு மகன் உண்டு. (இப்போது பெங்களூரில் வங்கி அலுவலராகப் பணிபுரிகிறார்.) குடும்பச் சுமை அனைத்தையும் தாங்கிக் கொண்டவர் அவர் மனைவி மீனாட்சியம்மாள்தான்.  

''நாங்கள் சி.சு. வீட்டுக்குச் செல்லும்போது அவர் மனைவி கதவுக்குப் பின்னே நின்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் வரும்போது இருவருமாகச் சேர்ந்து அதை வீட்டுக்குள் அடுக்குவதைப் பார்த்திருக் கிறோம்'' என்கிறார் வல்லிக்கண்ணன்.  

எழுதும் நேரம் தவிர மற்ற நேரத்தை பஞ்சினால் ஆன சிறு பொம்மைகள் செய்வதிலும் கொல்லையில் தோட்டம் வைப்பதிலும் செலவிட்டார் சி.சு. தவிர புகைப்படம் எடுப்பதிலும் அலாதியான ஆர்வம் கொண்டி ருந்தார். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அப்போது இவர் எடுத்த படங்கள் மிகப் பிரபலம்.  

லட்சியவாதியான செல்லப்பா சமரசம் செய்து கொள்ளாத பிடிவாதக்காரர். இவர் கஷ்டப் படுவது அறிந்து ஒரு முறை கோவை ஞானி ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியிருக்கிறார். 'அன்பளிப்புகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே...' என்ற பதிலோடு அதை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார் சி.சு. விருதுகள் விஷயத்திலும் இதுதான் நடந்தது. இலக்கியச் சிந்தனை, ராஜராஜன், கோவை ஈ.எஸ். தேவசிகாமணி, அக்னி-அட்சரா விருது என பலவற்றை மறுத்துவிட்டார். கடைசியாக அமெரிக்கவாழ் தமிழர் அமைப்பு வழங்கிய 'விளக்கு' விருதை மட்டும் ஏற்றுக்கொண்டார். அதுவும் பரிசுப் பணம் இருபத்தையாயிரத்தை புத்தகம் போடச் சொல்லி அவர்களிடமே வழங்கிவிட்டார்.  

சாகித்ய அகாடமி பரிசு பெற்றிருக்கும் இவரது 'சுதந்திர தாகம்' நூல் வெளிவந்த போது தமிழக அரசின் நூலகத் துறை அதை நிராகரித்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவர் இறந்தபின் 99-ல் நூலகத்துறை புத்தகத்தை வாங்கிக் கொண்டது. கடைசி காலங்களில் அவருடன் இருந்த உறவினரும் எழுத்தாளருமான சங்கர சுப்பிரமணியம் சொல்கிறார் - ''சுதந்திர தாகம் நூலுக்கான நூலகப் பணம் ரூபாய் லட்சத்து மூவாயிரம் வந்தபோது அவர் உயிரோடு இல்லை. அவரோடு சேர்ந்து கஷ்டப்பட்ட அவரது மனைவியும் இப்போது உயிரோடு இல்லை. விருதுகள் குறித்து சி.சு-வுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. இப்போது அவர் இருந்திருந்தால், இந்த விருதை வாங்கி இருக்க மாட்டாரோ என்று தோன்றுகிறது. சி.சு. விஷயத்திலும் நாம் நம்முடைய யோக்கியதையைக் காட்டிவிட்டோம்!''  

- ராஜுமுருகன்
படங்கள்: ஸ்னேகிதன், அருண்மொழி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதுக்கு என்ன சொல்வீர்கள்..... :x Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 12-26-2003, 10:37 PM
[No subject] - by anpagam - 12-27-2003, 12:17 AM
[No subject] - by vasisutha - 12-27-2003, 04:16 AM
[No subject] - by Paranee - 12-27-2003, 04:22 AM
[No subject] - by kuruvikal - 12-27-2003, 09:38 AM
[No subject] - by ampalathar - 12-27-2003, 11:24 AM
[No subject] - by இளைஞன் - 12-27-2003, 11:37 AM
[No subject] - by shanmuhi - 12-27-2003, 11:45 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:53 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:11 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 01:47 AM
[No subject] - by ampalathar - 12-28-2003, 08:41 AM
[No subject] - by kuruvikal - 12-28-2003, 11:30 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 01:55 PM
[No subject] - by vasisutha - 12-29-2003, 03:51 AM
[No subject] - by kuruvikal - 12-29-2003, 11:14 AM
[No subject] - by vasisutha - 12-29-2003, 06:10 PM
[No subject] - by shanthy - 12-29-2003, 08:44 PM
[No subject] - by anpagam - 12-29-2003, 11:20 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)