02-19-2006, 11:37 AM
TYO எனப்படும் தமிழ் இளையோர் அமைப்பு பல நாடகளில் செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் வெகு அண்மைக்காலத்தில்தான் ஒஸ்ரேலியாவிலே நிறுவப்பட்டு தனது செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதன் சிட்னிக்கான 2006 இன் முதலாவது கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது. இதன்போது எதிர்காலத்தில் ஒஸ்ரேலியாவில் முன்னெடுக்க இருக்கும் பணிகள் குறித்து செயற்திட்டங்கள் திட்டமிடப்பட இருக்கின்றன என அதன் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தாயகத்தில் நடைபெறும் விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உலகின் பல நாடுகளுக்கும், பல்வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கொண்டுசெல்கின்ற வாய்ப்பு தமிழ் இளையோருக்கு இருப்பதனால் அவ்வாறான செயற்திட்டங்களும் இடம்பெற இருக்கின்றன. அண்மையில் தாயகப் பகுதிகளுக்கு சென்று திரும்பிய மாணவர்களுடனான சந்திப்பும் இடம் பெறுகின்றது. பல துறை சார் மாணவர்களும் அங்கு சென்று தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தார்கள்.
..