புதிய பதிவுகள்

Subscribe to புதிய பதிவுகள் feed
Updated: 4 min 33 sec ago

செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை தேர்தல் – அரசு உறுதி செய்தது

1 hour 11 sec ago
செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை தேர்தல் – அரசு உறுதி செய்தது

 

npc.jpg?w=160&h=160-சந்துன் ஏ ஜயசேகர-

13 வது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக சில மாதங்களாக நீடித்த ஐயப்பாடு காரணமாக உறுதிப்படுத்தப் படாமல் இருந்த வடக்கு மாகாண சபை தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடக்கும் என அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், பெட்ரோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தேச வடக்கு மாகாண சபை தேர்தலை பின்போடும் எந்த நிலைப்பாடும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அத்துடன் 13 வது திருத்தச்சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவோ அரசு எண்ணவில்லை என்றும் கூறினார்.

மாகாண சபை நடைமுறையில் உள்ள சட்ட அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என என்னால் உறுதிப்படுத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என தெளிவாக கூறியுள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள மாகாண சபை முறைமைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. 1978 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டையே தீக்கிரையாக்கிய மக்கள் விடுதலை முன்னணி பின்னர் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணி அரசில் உள்ள ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் யாப்பா கூட்டணி கட்சிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை கொடிருக்க உரித்துடையவை என்றார்.

13 வது திருத்தச்சட்டத்தை நீக்க பாராளுமன்றத்தில் தனியார் அங்கத்துவ பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஜாதிக ஹெல உறுமய எடுத்து வரும் முனைப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தனியார் அங்கத்துவ பிரேரணைகள் ஆரம்ப காலம் தொட்டே சமர்பிக்கப்பட்டு வருகின்றன. எனினும் 13 வது திருத்தச்சட்டத்தை நீக்க அரசு விரும்பவில்லை. குறித்த தனியார் அங்கத்துவ பிரேரணைகள் அந்த கட்சிகளின் நிலைப்பாடுகளே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் அல்ல எனவும் கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தவோ, அல்லது திருத்தங்கள் செய்யவோ அரசு உத்தேசித்தால் அவை சகல பங்குதாரர்களின் ஒப்புதலுடனேயே செய்யப்படும். அதிகாரப்பகிர்வு, மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசு அமைத்துள்ளது.

துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்னும் பிரேரரிக்கவில்லை. அதிகாரப்பகிர்வு அல்லது அரசியலமைப்பு திருத்தம் என்பவற்றை முழுமையான அனைத்து கட்சிகளுடனான அரசியல் கலந்துரையாடல் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்படும்

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் பட்சத்தில் ஒன்றிணைந்த இலங்கை என்ற கோட்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டதாக அரசு அதை மகிழ்வுடன் வரவேற்கும் என அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா கூறினார். (Dailymirror)

http://kattankudi.info/2013/05/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/#more-78504

 

ஐபாட்டும் நானும்

3 hours 24 min ago

உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும் காவிக்கொண்டு திரிவேன்.

ஒருமுறை மகளிடம் எல்லா இலக்கங்களையும் பதிந்து தந்தால்  £5 பவுண்ட்ஸ் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தும் பயனில்லை. ஒரு முப்பது இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு உங்கள் காசும் வேண்டாம் உந்த வேலையும் வேண்டாம் என்று தந்துவிட்டுப் போய் விட்டாள். கணவர் ஒரு நாளைக்கு பத்துப் பாத்தாப் பதியன் என்றுகூறினார். அதுக்கும் மனம் கேட்கவில்லை.

சரி எத்தனை விடயங்களுக்காகப் போராடி வெண்டிருக்கிறன். உந்த டெக்னோலொயி  விசயத்தையும் ஒரு கை பாக்கிறதுதான் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கணவரிடம் எனக்கு ஐபாட் ஒண்டு வாங்கித் தாங்கோ என்றேன். உனக்கு போனே ஒழுங்காப் பாவிக்கத் தெரியாது . உதை வாங்கி என்ன செய்யப் போறாய் என்றார். எனக்கு போற இடங்களில பயன்படுத்த இலகுவாக இருக்கும். அதோடை கொண்டுபோகவும் சுகம் அது இது என்று ஒருவாறு கதை விட்டதில் மனிசனும், அட இவள் என்னட்டை வாங்கித் தரச்சொல்லிக் கேட்டுப் போட்டாளே எண்ட சந்தோசத்தில சரி வாங்கு என்றுவிட்டார்.  நான் மனிசனுக்குச்  சொல்லாமலேயே பல பொருட்களை வாங்கிவிடுவன். திட்டுக்குப் பயந்து பிறகுதான் சொல்லுற வழக்கம் எண்டதையும் சொல்ல வேணும். ஆனா இது கொஞ்சம் விலை அதிகம் என்பதால் சொல்லியே தீரவேண்டிய கட்டாயம் ஒருபுறம், திட்டும் கிடைக்காதுதானே என்ற நினைப்பும் மறுபுறமுமாய் ஒரு மாதிரி சம்மதம் வாங்கியாச்சு.

அடுத்து பிள்ளையள். படிக்கிற பிள்ளையள் இருக்கேக்குள்ள அவைக்கு வாங்காமல் நான் வாங்க ஒரு மாதிரி இருந்தபடியால் மூத்த மகளைக் கேட்டேன். உங்களுக்கு ஐபாட் வச்சிருக்க விருப்பமோ எண்டு. எனக்குத்தானே நல்ல போன் இருக்கு. வீட்டில மடிக் கணணி இருக்கு. உது என்னத்துக்கு என்றாள். சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது. மற்றவரைக் கேட்டபோது அவரும் இதே பதில்தான். கடைசி மகளை கேட்கவே இல்லை. ஏனெனில் அவர் இப்பதான் ஒன்பதாம் வகுப்பு. அவவுக்கு உதெல்லாம் தேவை இல்லை என்றனர் மற்ற இருவரும்.

அப்பாடா என்று மனதுள் நினைத்துக்கொண்டு நான் ஒரு ஐபாட் வாங்கப்போறன் என்றவுடன் ஒருவித அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தவர்கள் உடனே சிரிக்க ஆரம்பித்தனர். அம்மா உங்களுக்கு உது என்னத்துக்கம்மா என்று. போனையே விழுத்தி உடைக்கிறனீங்கள். ஐபாட் பாவம் என்றாள்  மகள். எனக்கு சரியான ரோசம் வந்திட்டுது. நான் வாங்கத்தான் போறன். உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு ஆசையாக இருக்கு வாங்கப் போறன் என்றதுக்கு, வாங்குங்கோ ஆனால் அதைச் செய்துதாங்கோ இதைச் செய்துதாங்கோ என்று எங்களிட்டை வரக்கூடாது என்று கூறிவிட்டனர்.

எனக்கும் ரோச மானம் இருக்கும் தானே. அதனால் உங்களிடம் ஒன்றுமே கேட்கப் போவதில்லை என்றுவிட்டு, கணவரிடம் இன்றே வாங்கலாமோ என்றேன். சரி வாங்கு. வான்குகிறதுதான் வாங்குகிறாய் நல்லதாக வாங்கு என்று அப்பிளில் கடைசியாக வந்த மொடலை வாங்கித் தந்தார்.   வாங்கின புதிசில கொஞ்சம் அதோட மல்லுக்கட்டினன்தான். கட்டிலில் கொண்டுபோய் வைத்து, சோபாவில் சாய்ந்துகொண்டு, குசினியில் சமைத்துக்கொண்டு என்று எல்லா விதமாகவும் ஆசைதீர வைத்துப் பயன்படுத்தினன். கொஞ்சநாள் போக அது அலுத்துப்போச்சு. நேற்று கணவர் கேட்டார் ஐபாட் இப்ப நீ பாவிக்கிறதில்லையோ என்று. நெடுகப் பாவிக்கிறதும் கூடாதுதானே. அதுதான் இருந்துவிட்டு வீட்டில் பாவிக்கிறனான் என்றேன். இப்ப அலுத்துப் போச்சு என்று எப்பிடிச் சொல்ல முடியும்.

 

பராக்கிரமபாகு போன்று ஜனாதிபதி மஹிந்தவும் குளத்தை கட்டியிருக்கலாம்

3 hours 57 min ago
பராக்கிரமபாகு போன்று ஜனாதிபதி மஹிந்தவும் குளத்தை கட்டியிருக்கலாம்

 

images34.jpgமத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,

ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளயில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளத்தை கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

ஏழரைச் சனி என்ன செய்யும்?

4 hours 35 min ago
 

                            
shanee_saturn+1.gif
 
                                              காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. 
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். 
முதல் சுற்று: 
பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.  

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும். 

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும். 

இரண்டாவது சுற்று:
இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள். 

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?  
வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். 
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  
இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி
பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

 
மூன்றாவது சுற்று: 
கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

 

ஸ்வீடனில் கலவரம்!

5 hours 6 min ago
 

ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர்.

செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.

sweden-riots.jpg

 

பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றமை நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/world.php?vid=686

 

வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1

5 hours 13 min ago
 

மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது.

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

article-2328550-19EB8FC4000005DC-314_634

இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

article-2328550-19EB37CE000005DC-679_634

இதனை "all-in-one entertainment system" என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது.

எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது.

இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில

CPU with eight x86-64 cores

8 GB of DDR3 RAM

500 GB hard drive

Blu-ray Disc optical drive

4K resolution (3840×2160) video output Support

7.1 surround sound

Built-in Skype

Set-top box integration

இதனை குரலால் மற்றும் அசைவுகளுக்கு ஏற்பட்ட இதனை முற்றாக கட்டுப்படுத்தமுடியும்.

இதனால் டிவியை பார்க்கவோ, இணையத்தை உபயோகிக்கவோ, செனல்களை மாற்றுவதையோ இலகுவாக மேற்கொள்ள முடியும்.

இது மட்டுமன்றி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியதாக X பொக்ஸ் 1 உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக படங்களை பார்த்த வண்ணம் மின்னஞ்சல்களை வாசிக்க முடியும்.

xboxasadada.jpg

மைக்ரோசொப்ட் இதற்கான தனது கினெக்ட் மோஷன் சென்சிங் தொழிநுட்பத்தை முற்றிலுமாக மீள வடிவமைத்துள்ளது.

இது என்ன விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என மைக்ரோசொப்ட் அறிவிக்கவில்லை.

article-2328550-19EB37C7000005DC-299_634

இதன் முன்னைய வெளியீடான Xbox 360 ஆனது உலகம் பூராகவும் 77 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க

 

http://www.virakesari.lk/article/technology.php?vid=193

 

படைகளுக்கு காணியா? திக்கத்தில் கடும் எதிர்ப்பு; அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

5 hours 14 min ago
திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர்.
 
பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/400 கிராம சேவையாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16 ஆவது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் கடந்த மாதம் 12 திகதி அங்கு ஒட்டப்பட்டன.
 
இந்த நிலையில் மேற்படி காணியை எதிர்வரும் 20 திகதி அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருவார்ள் என்று கடந்த 9 ஆம் திகதி காணி உரிமையாளர்களுக்கு எந்தவித ஒப்பமும் இன்றி அநாமதேயமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கடந்த 20 திகதி நில அளவை செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு நேரடியாகச் சென்ற போது 31 காணிகளின் உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் தமது பணியைக் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.
 
31 காணி உரிமையாளர்களும் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 

http://onlineuthayan.com/News_More.php?id=777882055923157105

 

தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை

5 hours 15 min ago
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. 
 
இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். 
 
அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், "நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. 
 
அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். 
 
வடமாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது'' என்று தெரிவித்திருந்தார்.
 
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் நேற்று உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: 
 
"முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறி யுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். 
நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. 
 
தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது.
  
பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது. 
 
இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. 
 
எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது. 
 
எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்''  என்றார்

 

http://onlineuthayan.com/News_More.php?id=455922056123750690

 

தேடப்பட்ட லஷ்கர் தீவிரவாதி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

5 hours 16 min ago

ஸ்ரீநகர்: போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் ஸ்ரீநகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், படேஹ்கடல் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 

 

 

அப்போது நடந்த மோதலில் போலீசாரல் மிகவும் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஒருவரான ஹிலால் மௌல்வி சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சுமார் 15 நிமிடம் நடந்த இந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15198

 

கல்பாக்கம் அணுஉலைக்கு எதிராக மேதாபட்கர் கையெழுத்திட்டார்

5 hours 17 min ago

காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் இனிமேல் புதிய அணுஉலை திறக்கக்கூடாது என ஏற்படுத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று கையெழுத்திட்டார்.

சுமார் 30 வருடமாக கல்பாக்கத்தில் அணுஉலை இயங்கி வருகிறது. 2 அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் 'பாவினி' என்ற ஒரு அணுஉலையை கட்டி வருகிறார்கள். இந்த அணுஉலையைத் தொடர்ந்து, மேலும் புதிய அணுஉலைகள் கட்டக்கூடாது எனக்கூறியும், கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், வாயலூர், கொக்கிலமேடு போன்ற சுமார் 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

அணுஉலைக்கு சொந்தமான பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் சுற்றுவட்டார மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 24 மணிநேர மருத்துவமனை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதே போல் சமீபத்தில் நடந்த போராட்டம், கலவரமாக மாறி, தடியடி வரை சென்றது. அப்போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 11.30க்கு கல்பாக்கத்தை அடுத்துள்ள சதுரங்கபட்டினத்திற்கு வந்தார் சமூக ஆர்வலர் மேதா பட்கர். ஜவருல்லா எம்.எல்.ஏ. மற்றும் டாக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அவரை வரவேற்றனர். அணுஉலைக்கு எதிராக டாக்டர் புகழேந்தி, ஜவருல்லா எம்.எல்.ஏ., மல்லை சத்யா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று மேதா பட்கர் தனது கையெழுத்தை அதில் பதிவு செய்தார்.
 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15203

 

பறிபோனது டக்ளஸின் பதவி சிலாவத்தைக்கு புதிய நிர்வாகம்

5 hours 18 min ago
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது.
 
முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது.
 
இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.
 

புதிய நிர்வாகத் தலைவராக அ.வேதா ரணியம்பிள்ளையும், செயலாளராக ச.இராசேந்திரமும், பொருளாளராக சி.மருதநாயகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 http://onlineuthayan.com/News_More.php?id=644732056523743669

 

                            

 

வடக்கு காணி விவகாரங்களில் ஐ.நா தலையீடு

5 hours 21 min ago

காணி சுவீகரிப்பில் அரசு உறுதி ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஹத்துருசிங்க தெரிவிப்பு:-

 

 

வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருவதாக யாழ் கட்டளைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு வலிகாமம் காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சில தரப்பினரும் ஊடகங்களும் காணி சுவீகரிப்பு தொடர்பில் பிழையான தகவல்களை பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இராணுவத்தின் பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக கேள்வி எழுப்பியதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
 
காணி சுவீகரிப்பில் அரசு உறுதியாகவுள்ளது ஐ.நா. பிரதிநிதிகளிடம்  ஹத்துருசிங்க தெரிவிப்பு
 
வலி.வடக்கில் காணிகள் சுவீகரிப்பில் அரசு உறுதியாக உள்ளதை ஐக்கியநாடுகள் சபை பிரதிநிதிகளிடம் விளக்கினார் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. காணிகளை இராணுவம் அல்ல அரசே சுவீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
 
ஐ.நா. சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிரதித் தலைமை அதிகாரி மார்க்பிரசோபா ஆகியோர் அடங்கிய குழுவினர் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹந்துரு சிங்கவை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பலாலியில் சந்தித்துப் பேசினர். 
 
இதன்போது கருத்து வெளியிட்ட யாழ். தளபதி ஹத்துருசிங்க.
 
இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அவர்களின் தூண்டுதலில் சில ஊடகங்களும் வலி.வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
 
உண்மையில் அந்தக் காணிகள் பலாலி விமானம் நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புக்காக அரசால் சுவீகரிக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.
 
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாழ். மாவட்டத்தில் படைகளை தொடர்ந்து வைத்திருப்பதற்கு சிறிய அளவு நிலப்பரப்பு சுவீகரிக்கப்படுகின்றது என்றும், அரசியல் கட்சிகளால் சொல்லப்படுவதைப் போல அந்தப் பகுதிகளில் பெருமளவிலான மக்கள் காணிகளை இழக்கவில்லை எனவும் அதன் உண்மையான அளவு அவர்கள் குறிப்பிடுவதை விட குறைவு என்றும் ஹத்துருசிங்க ஐ.நா. பிரதிநிதிகளிடம் கூறினார்.
 
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை கடற்கரையோரமாக அரச காணியில் குடியேற்ற ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுவீகரிக்கப்படும் காணிகளில் பெரும்பான்மையானவை அரச திணைக்களங்களுக்குரிய காணிகள் என்றும் யாழ். தளபதி கூறினார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92057/language/ta-IN/article.aspx

 

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் கைது

5 hours 23 min ago
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறையினர் கூட்டாக இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தெற்காசிய வலய நாடுகளைச் சேர்ந்த மக்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கைகளில் குறித்த கும்பல் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் 11 பேரும், பிரான்ஸில் 7 பேரும் மொத்தமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களிடமிருந்து பணம், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92058/language/ta-IN/article.aspx

 

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது – அரசாங்கம்

5 hours 24 min ago
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன.
 
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92048/language/ta-IN/article.aspx

 

மட்டக்களப்பு புல்லுமலையில் பசில்ராஜபக்சவிடம் துண்டுபிரசுரம் கொடுத்த இருவர் கைது

5 hours 25 min ago

மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய  தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளனர்.

 

u.jpg

 

குறிப்பிட்ட துண்டுபிரசுரத்தில் உறுகாமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஏற்கனவே ஏறாவூரில் ஈராக் அரசாங்கத்தினால் சதாமுசைன் கிராமம் என்ற பெயரில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டு உள்ளதாகவும். ஆனால் இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடுகளை இன நல்லிணக்கம் என்றபெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள உறுகாமம் வாழ் தமிழர்கள் இது சம்பந்தமாக ஒரு துண்டுபிரசுரத்தையும் வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட துண்டுபிரசுரங்களை நேற்று சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலமையிலான குழுவினரிடம் வழங்கியுள்ளனர். 

 

இதனை அவதானித்த இலங்கை புலனாய்வுத்துறையினர் துண்டுபிரசுரங்களை வழங்கிய இருவரை பின்னர் கைதுசெய்து கரடியனாறு பொலீசில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

u2.jpg

 

கைதுசெய்யப்பட்ட இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதே நேரம் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளை சிங்கள,முஸ்லீம் குடும்பங்களுக்கு வழங்குவதன் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறும் கிராம தலைவர்கள் தமிழர்களின் யுத்த அழிவுகளை பொருட்படுத்தாது முப்பதாண்டுகால யுத்தத்தில் உறுகாமம், புல்லுமலை, மங்களகம போன்ற பகுதிகளில் வாழ்ந்த மூவின மக்களுக்கும் ஒரேயளவிலான பாதிப்புக்களே ஏற்பட்டதென கூறுவதை ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள உறுகாமத் தமிழர்கள் அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற போர்வையில் இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து தமிழர்களின் காணிகளை மற்றயோருக்கு வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இந்தச் செய்தி மட்டக்களப்பில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அதிகரிக்கவைக்கும் செய்தி எனக் கருதுபவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில்  பதிலை அனுப்பி வைத்தால் குளோபல் தமிழ்ச் செய்திகள் அதனையும் பிரசுரிக்கும்.

ஆ.ர்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92074/language/ta-IN/article.aspx

 

 

 

கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் - பரபரப்பு தகவல்

7 hours 49 min ago

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்' என்றார்.

இது சம்பந்தமான விசாரணையை தற்போது போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள் பற்றி கணக்கெடுக்கப்படுவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் நடிகைகள் பலர் இதில் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகைகளும் இதில் மாட்டுகிறார்கள்.

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்த சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்படும் என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தரகர்களின் மொபைல் போன்களில் நடிகைகள் போன் நம்பர்கள் உள்ளனவா என்றும் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். கவர்ச்சி நடிகைகளாக வலம் வரும் இரண்டு நடிகைகள் மீது மட்டும் போலீசாரின் சந்தேகப் பார்வை இறுகியுள்ளது. மேலும் சில இளம் நடிகைகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14877:cricket-gambling-c-tamil-actress-news-information&catid=39:cinema&Itemid=107

 

ஐ.பி.எல்., சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன், குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை.

8 hours 34 min ago

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர்.

எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமும், சீனிவாசனிடமும் விசாரணை நடத்தினர்.

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த போலீசார் அவரது உறவினர் சிக்கியிருப்பதால் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இன்று காலை 10 மணி முதல் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14876:ipl-,-gambling-chennai-super-kings-srinivasan,-the-mumbai-police-investigation-kurunat-meyyappan&catid=40:sports&Itemid=108

 

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் டெல்லி துவக்க வீரர் ? பாகிஸ்தான் நடுவர் போலீஸ் வலையில்.

8 hours 54 min ago
 

 

ipl-5-delhi-daredevils-need-to-guard-agaஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார்

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14875:new-delhi-start-ipl-player-gambling-pakistan-umpire-police-trap&catid=40:sports&Itemid=108

 

ஓநாய்களின் ஓலம்..!

9 hours 6 min ago

sheep_and_wolf.jpg

 

ஈழத்திரு நாட்டில்..

பூர்வீகமாக

வாழ்ந்த மண்ணில்..

அடிமைப்பட்ட

மந்தைக் கூட்டம் ஒன்றின்

விடுதலைக்காய்

புலி ஒன்று

சொந்த வாழ்வை

சொத்தாக்கி உழைத்தது.

 

கூட இருந்த குள்ள நரிகளும்

எட்ட நின்ற

ஓநாய்களும்

மந்தைகளின் வளர்ச்சி கண்டு

வாயூறி நின்றன.

சில கறுப்பாடுகளும்

மந்தையில் காட்டிக்கொடுக்க

தயாராகி நின்றன.

 

அப்பப்ப

திருடித் தின்றதை விட...

ஒட்டுமொத்தமாய்

தின்று தீர்க்க

தீனியாக்கிட

கூட்டுச் சேர்ந்து

கும்மாளம் அடிக்க

ஓநாய்கள்..

சிங்கக் குகையதில்

கழுகுகளின் காலடியில்

தவம் கிடந்தன.

 

கால நேரமும்

வாய்ப்பாகிப் போக

சிங்கம் ஒன்றின்

பேரினக் கோரப் பசிக்கு

மந்தைகள் இரையாகின.

சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள்

மிச்சம் தூக்க..

ஓநாய்கள் எலும்பி பொறுக்கி

தின்று கொழுத்து

தினவெடுத்து மகிழ்ந்தன.

 

பாவம் புலியும்

மந்தைகளின் சரிவோடு

தான் வாழாது மெளனிக்க..

வரலாற்றுத் துயர் நீட்டத்தில்

சிதறி ஓடி

குடிபெயர்ந்திட்ட

தூர இரு மந்தைகளில்

ஒரு சிறு கூட்டம் மட்டும்

கொலைகள் கண்டு

ஆர்ப்பரித்தன.

நடந்த கொலைகளுக்கு

உலகம் நாலு கேள்வி கேட்க

குரல் எலுப்பின..!

 

உலகின் நீதிக் குரல்

மெளனமாய்

நீண்டு செல்ல...

அந்தக் கால வெளியில்

தந்திரமாய் ஓடி

ஒளித்திட்ட

சிங்கமும்..

தூரப் பறந்துவிட்ட கழுகளும் காகங்களும்

ஒட்டி நின்றி வேடிக்கை பார்க்க..

இன்றோ...

ஓநாய்கள் மட்டும்

ஓலமிடுங்கின்றன.

 

கட்டாய மந்தையில்

ஆடுகளைக் கட்டி வைத்தது புலி..!

சிங்கமதை அவிழ்த்துவிட்டு

தந்ததே மீட்சி

விடுதலை..!

அழகழகாய் அடுக்கடுக்காய்

படுகொலைக்கு

பழிதீர்ப்பிற்கு

தத்துவம் பேசுகின்றன...!

இன்னும் சில

ஆடடித்த

பெருமை சொல்லி

ஆர்ப்பரிக்கின்றன.

மிச்சம் மீதி எலும்பு பொறுக்க

துயர் பகிர்விற்கும்

நீலிக்கண்ணீருக்கும்

அங்கு குறைச்சல் இல்லை..!

 

உருசித்த எலும்புகளின்

சுவை தடவி

ஓநாய்கள் இன்று

ஓடி ஓடி ஓலமிடுகின்றன.

புலியும் தாமும்

சரிநிகர் சமானம் என்று

கற்பனையில் ஒரு

சமன்பாடும் போடுகின்றன...!!!

 

வேளை வரும்

கொன்றது தின்றதுக்கு

கணக்குச் சொல்ல

நாளிகை வரும்...!

மெளனித்த புலியதும்

மந்தைகளுக்காய்

புதுப்பரணி பாடும்.

அதுவரை

கொட்டமடிக்க

ஓநாய்களுக்கு

பசுத்தோல்கள் பல...

இலவசமாய்

சன நாய் அகச்

சந்தையில்...!!!!

இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது:பசில் ராஜபக்சே

9 hours 47 min ago

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது. இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை மந்திரியுமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14874:sri-lanka-is-one-of-india-in-helping-countries-basil-rajapakse&catid=5:business-general&Itemid=101

 

Pages