நலமோடு நாம் வாழ

வைட்டமின் டி அதிகரிக்க வெயிலில் நிற்க வேண்டிய சிறந்த 3 மணி நேரம்

1 day 21 hours ago

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஆ. நந்தகுமார்

  • பிபிசி தமிழ்

  • 30 ஜூலை 2025

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது.

''பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்'' என்கிறார் அவர்.

பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வு கட்டுரை வெளியானது.

அதன்படி, நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதேசமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். (சித்தரிப்புப்படம்)

இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ரத்தத்தில் 10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7  நானோகிராமாக உள்ளது.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படும் நிலையில், கிராமப்புறத்தில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவில்லை என்றாலும் கடுமையான குறைபாடு என்ற நிலை சற்று குறைவாகவே இருக்கிறது.

வைட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

சென்னையை சேர்ந்த கர்ப்பிணிகள் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 62% பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, 'பல்வேறு வகையான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கொண்ட நகர்ப்புற தென்னிந்தியர்களில் வைட்டமின் டி குறைபாடு' என்ற ஆய்வில் சென்னையை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு.

அத்துடன் பஞ்சாப், திருப்பதி, புனே, அமராவதி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காட்டின.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி குறைபாடு கரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு

காரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது. இந்திய வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் அதே சமயம் சென்னை போன்ற வெப்ப மண்டல நகர்புறபகுதியில் ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருவதாகச் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.

''உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்'' என்கிறார் அவர்.

''நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது'' என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவர் பீட்டர்.

சில நிமிடங்கள் வெளியே இருப்பதன் மூலம் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மாசுபாடு, உடைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல் தடுப்பு போன்றவை உங்கள் உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவதைத் தடுக்கின்றன என்கிறார் பீட்டர்.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி பற்றாக்குறை ஆபத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை?

ஒரு இந்திய ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் வெளியில் நடக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்க சிறந்த நேரம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது

வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

''சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை'' என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி.

இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பூமியின் வளிமண்டலம் சூரியன் கீழ்வானில் இருக்கும்போது UVB கதிர்களை தடுத்துவிடுகிறது. அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் மிகவும் குறைந்த (45 டிகிரிக்கு குறைவாக) கோணத்தில் இருப்பதால் UVB கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுகின்றன.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

''பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.'' என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ய்வு

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருகிறது

சமாளிப்பது எப்படி?

வாசுகி போன்ற பெரும்பாலான நகர்ப்புறவாசிகளுக்குத் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்றது.

''உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்.'' என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாட்டை குணப்படுத்த சில சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

''என்னதான் பல சப்ளிமெண்ட்கள் கிடைத்தாலும் நேரம் கிடைக்கும்போது வெயிலில் நிற்பது போன்ற எளிமையான, செலவில்லாத மருந்துதான் சிறந்தது என தோன்றுகிறது'' என்கிறார் வாசுகி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly4ny450vpo

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

6 days 12 hours ago

நடை பயிற்சி, 7,000 அடிகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜோஷ் எல்ஜின்

  • பிபிசி செய்திகள்

  • 26 ஜூலை 2025, 08:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது.

10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம்.

லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது.

மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங்.

10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது.

1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது.

ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார்.

10,000 படிகள் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • இதய நோய் - 25% குறைவு

  • புற்றுநோய் - 6% குறைவு

  • டிமென்ஷியா - 38% குறைவு

  • மன அழுத்தம் - 22% குறைவு

ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது.

வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது.

உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன.

உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் .

"நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார்.

ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார்.

லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார்.

சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார்.

"அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo

எம்ஆர்ஐ ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி? - மருத்துவர்களின் ஆலோசனை

1 week 2 days ago

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால் எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு.

எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும்போது, அந்த குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார். அப்போது மின்காந்த

எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது என்றே பெரும்பாலான மருத்துவ அமைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இதனை பரிந்துரைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன? எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம்.

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு வலியில்லா செயல்முறையாகும்.

எம்ஆர்ஐ (Magnetic Resonance Imaging) என்பது உடலின் உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மருத்துவ தொழில்நுட்பம் ஆகும்.

எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • மூளை மற்றும் முதுகுத் தண்டு

  • எலும்புகள் மற்றும் மூட்டுகள்

  • மார்பகங்கள்

  • இதயம் மற்றும் ரத்த நாளங்கள்

  • கல்லீரல், கருப்பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற உள்ளுறுப்புகள் என உடலின் பல்வேறு பகுதிகளை பரிசோதிக்க எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுகிறது.

இந்த ஸ்கேனின் முடிவுகள் உடலின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சைகளைத் திட்டமிடவும், முந்தைய சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை மதிப்பிடவும் உதவும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது என்ன நடக்கும்?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரையின்படி, எம்ஆர்ஐ ஸ்கேனர் கருவி என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட, இரு முனைகளிலும் திறந்திருக்கும் ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட ஒரு தட்டையான படுக்கையில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தலை அல்லது கால் முதலில் என ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.

சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உடல் பகுதியின் மேல், அதாவது தலை அல்லது மார்பு போன்றவற்றின் மேல் ஒரு ஃபிரேம் வைக்கப்படலாம். இந்த ஃபிரேம்-இல் ஸ்கேன் செய்யும் போது உங்கள் உடலால் அனுப்பப்படும் சிக்னல்களைப் பெறுவதற்கான ரிசீவர்கள் இருக்கும். சிறந்த, தரமான எம்ஆர்ஐ படத்தை உருவாக்க இது உதவும்.

ஸ்கேன் செய்யப்படும் பகுதியின் அளவு மற்றும் எத்தனை படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்கேன் 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதுவொரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது முடிந்தவரை அசையாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை.

எம்ஆர்ஐ ஸ்கேனரை இயக்க ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கேனரால் உருவாக்கப்படும் காந்தப்புலத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்தக் கணினியை இயக்குவார்.

"ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களையும், எம்ஆர்ஐ தொடர்பான விதிகளையும் முறையாக பின்பற்றினால் எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு சிறந்த மருத்துவ தொழில்நுட்பமாகும்" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார்.

"எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்க அனுமதிக்கப்படலாம். குழந்தைகள் என்றால், பெற்றோர்களில் ஒருவர் குழந்தையுடன் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் நோயாளிக்கான அனைத்து விதிகளும் பொருந்தும்" என்கிறார் அவர்.

எம்ஆர்ஐ அறைக்குள் நுழைவதற்கு முன், உங்களிடம் பல்வேறு கேள்விகள், ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் படிவத்தைப் பயன்படுத்தி கேட்கப்படும். உங்கள் உடலில் 'பேஸ்மேக்கர்' போன்ற கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அந்த படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறைக்கு முன் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் போன்றவற்றை நிச்சயம் அகற்ற வேண்டும்.

அடுத்து, உங்களிடமுள்ள அனைத்து உலோகப் பொருட்களையும், உலோக நகைகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்படும். உங்களுடன் எம்ஆர்ஐ அறையில் இருக்கப்போகும் நபரும் அனைத்து விதமான உலோகப் பொருட்களையும் அகற்றிவிட வேண்டும், ஸ்கிரீனிங் படிவத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.

"காரணம், எம்ஆர்ஐ கருவி சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் உடலில் உலோகம் இருந்து, அது காந்தத்தால் ஈர்க்கப்பட்டால், பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும். எனவே உடலில் ஏதேனும் உலோகம் அல்லது மின்னனுக் கருவிகள் இருந்தால் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

  • பர்ஸ், பணப்பை, கிரெடிட் கார்டுகள், காந்தப் பட்டைகள் கொண்ட அட்டைகள்

  • செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள்

  • காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள்

  • உலோக நகைகள் மற்றும் கடிகாரங்கள்

  • பேனாக்கள், சாவிகள், நாணயங்கள்

  • ஹேர்பின்கள், ஹேர் கிளிப்புகள் மற்றும் சில ஹேர் ஆயின்மென்ட்கள்

  • ஷூக்கள், பெல்ட் கொக்கிகள், பாதுகாப்பு பின்கள்

  • உலோகப் பொருள் கொண்ட எந்தவொரு ஆடை போன்ற வெளிப்புற பொருட்களை எம்ஆர்ஐ அறைக்கு நிச்சயம் கொண்டு செல்லக்கூடாது என 'ரேடியாலஜிஇன்ஃபோ' இணையதளம் எச்சரிக்கிறது.

"சுத்தத் தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது, ஆனால் தங்க நகைகள் உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் உடலுக்கு ஆபத்து என்பதோடு மட்டுமல்லாது உலோகப் பொருட்கள் எம்ஆர்ஐ படங்களை சிதைத்துவிடும்." எனக் கூறுகிறார்.

பொதுவாக எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு முன், மருத்துவமனை நிர்வாகத்தால் 'மெட்டல் டிடக்டர்' போன்ற சாதனம் கொண்டு ஒருவர் சோதிக்கப்படுவார் என்கிறார் விஸ்வநாத்.

உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள் குறித்த எச்சரிக்கை

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் இப்போது நவீன தொழில்நுட்பம் கொண்டு எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன'

"ஒருவரின் உடலுக்குள் இருக்கும் உலோக அல்லது மின்னணு கருவி (இம்பிளான்ட்), எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாது (MRI Compatible) என சான்று பெற்றது என்றால் அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதில் பிரச்னையில்லை" என்கிறார் விஸ்வநாத்.

இத்தகைய இம்பிளான்ட் சாதனங்கள் அல்லது உடலுக்குள் இருக்கும் உலோகங்களுக்கு உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது அமெரிக்காவின் 'மாயோ கிளினிக்' மருத்துவ அமைப்பு.

  • பேஸ்மேக்கர்- ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மின் சாதனம்.

  • செயற்கை இதய வால்வுகள்.

  • இதய டிஃபிபிரிலேட்டர்.

  • மருந்து உட்செலுத்துதல் பம்புகள்.

  • நரம்பு தூண்டுதலுக்கான கருவிகள்.

  • உலோக கிளிப்புகள்.

  • அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் உலோக பின், ஸ்க்ரூ, பிளேட், ஸ்டென்ட் அல்லது ஸ்டேபிள்ஸ்.

  • கோக்லியர் இம்பிளான்ட்ஸ் (காது கேளாமை போன்ற பிரச்னைக்கு)

  • தோட்டா அல்லது வேறு எந்த வகையான உலோகத் துண்டு.

  • கருப்பையக சாதனம்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் விஸ்வநாத். "கர்ப்பிணிப் பெண்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் காந்தப் புலன்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால், சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதால் பாதுகாப்பானது தான்" என்கிறார்.

பிற சவால்கள் என்ன?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

படக்குறிப்பு, கிளாஸ்ட்ரோபோபியா உடையவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

ஆனால், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் குறுகிய அல்லது மூடப்பட்ட இடங்களில் தனியாக இருப்பது தொடர்பான அச்சம் கொண்டவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்றும் விஸ்வநாத் குறிப்பிடுகிறார்.

"எம்ஆர்ஐ செயல்முறை பெரும்பாலும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாஸ்ட்ரோபோபியா கொண்டவர்களுக்கு அப்படியே அசையாமல் படுத்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தணிக்க அவர்களுடன் உறவினர் அல்லது நண்பர் இருக்கலாம்" என்கிறார் அவர்.

ஸ்கேனர் கருவிக்குள் கால்கள் முதலில் செல்வது பதற்றத்தைக் குறைக்க உதவலாம், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

சில எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனப்படும் பொருளும் ஒருவரது உடலுக்குள் செலுத்தப்படும். இது உடலின் சில திசுக்கள் மற்றும் ரத்த நாளங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் காண்பிக்கும்.

சில நேரங்களில் இந்த கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள்,

  • காய்ச்சல், சோர்வு

  • தோல் வெடிப்பு

  • தலைவலி

  • தலைச்சுற்றல்,

போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

அதேநேரம், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் திசு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 'கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்' குறித்து மருத்துவரிடம் முன்பே கலந்தாலோசிப்பது சிறந்தது என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.

"எம்ஆர்ஐ ஸ்கேன்களின் போது பயன்படுத்தப்படும் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகும். அதைக் குறித்து அச்சம், பதற்றம் கொள்ள தேவையில்லை" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz09kxzyl39o

டெட்டானஸ் தடுப்பூசி

1 week 6 days ago

519175913_24463025363353976_208348608358

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும்.

செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை.

தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்

ஆறாவது வாரம்

பத்தாவது வாரம்

பதினான்காம் வாரம்

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள்

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள்

அதற்குப் பின் பத்து வயதிலும்

பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,

ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும்

அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்..

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம்

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

https://www.facebook.com/100002195571900/posts/24463025596687286/?rdid=9R4LokMDKkQyVDfQ#

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

3 weeks ago

#சுகர்னு docter கிட்ட போறாங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
#ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

################### ###############

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

- இணையத்தில் படித்தது. -

ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் 366 மாரத்தான்கள் ஓடிய மனிதர் - இதயத்தில் ஏற்பட்ட மாற்றம்

3 weeks 1 day ago

ஹூகோ ஃபாரியஸ் நீலச்சட்டை அணிந்து  ஓடிக்கொண்டிருக்கிறார். அவரை மூன்று பேர் சைக்கிளில் தொடர்கின்றனர்.

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, மனித உடல் தீவிர உடல் செயல்பாட்டிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க ஹூகோ ஃபாரியஸ் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்

கட்டுரை தகவல்

  • ஜூலியா கிரான்சி

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2023இல் ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை அடுத்தடுத்து நிறைவு செய்து ஒரு உலக சாதனையைப் படைத்தார்.

அதாவது தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மழையோ, வெயிலோ, உடல்நலக் குறைவோ, காயமோ எது வந்தபோதிலும், தினசரி 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறார்.

இந்த அசாதரண சாதனையைச் செய்த 45 வயதான பிரேசில் தொழிலதிபர் ஹூகோ, 12 மாதங்களில் 15,000 கி.மீ ஓடும்போது அவரது இதயம், அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவ ஆய்வில் பங்கேற்றார்.

"நான் பெரிய தடகள வீரர் அல்ல. அதற்கு முன்பு எனது வாழ்நாளில் நான் ஒரு மாரத்தான் மட்டுமே ஓடியிருந்தேன்," என்றார் அவர்.

"ஆனால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க, விளையாட்டு மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்தது"

சிரித்த முகத்துடன் ஹூகோ ஃபாரிஸ்.

பட மூலாதாரம்,CLAYTON DAMASCENO

படக்குறிப்பு, தனது பயணம் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கும் என ஃபாரியஸ் நம்புகிறார்

தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார்.

"வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, 'நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?' என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது," என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

ஹூகோ, "18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்."

"இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்."

அறிவியல்ரீதியான பங்களிப்பு

ஹூகோ மருத்துவ கருகவிகளுடன் இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் காட்சி

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, சாவ் பாலோசாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இதயவியல் நிபுணர்கள் ஹூகோ ஃபாரியஸின் இதய செயல்பாட்டைக் கண்காணித்தனர்

கடந்த 1984இல் தெற்கு அட்லான்டிக்கை படகில் கடந்த பிரேசில் படகோட்டி ஏமிர் கிளின்க் தனக்கு உத்வேகமாக இருந்ததாக ஹூகோ கூறுகிறார். "ஆனால் அவரைப் போல படகோட்டுவதற்குப் பதிலாக நான் ஓடுவேன்," என்று அவர் முடிவெடுத்தார்.

அவர் தனது முத்திரையைப் பதிக்க விரும்பினார், எனவே இதற்கு முன் செய்யப்படாத ஒரு சவாலை அவர் தேடினார். பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார்.

பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார்.

"என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்," என்கிறார் அவர்.

"நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையை முற்றிலும் நிச்சயமற்ற ஒன்றுக்காக மாற்றிக்கொண்டேன். எனவே இது கவலை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே மனபாரத்தைக் குறைத்து குறிக்கோள் மீது கவனம் செலுத்த இந்தக் கோணத்தைப் பற்றிய புரிதல் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர் இருப்பது அவசியம்.

தனது முயற்சியில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்த தொழில்முறை அமைப்புகளில் ஒன்றுதான் சாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர்.

"எனது இதயம் இந்த சவாலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது - அளவில் பெரிதாகுமா அல்லது சிறியதாகுமா, அரித்மியா(சீரற்ற இதயத் துடிப்பு) ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா - என்பதை ஆய்வு செய்ய என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அந்த நிறுவனத்தின் இதயவியல் நிபுணர்களிடம் கேட்டேன்."

"ஏனெனில், இதன்மூலம் நான் அறிவியலுக்கும் பங்களிப்பு செய்ய விரும்பினேன்."

நீங்கள் 366 மாரத்தான்கள் ஓடினால் உங்கள் இதயம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதயவியல் நிபுணர் மற்றும் ஆய்வாளரான மரியா ஜானியேர் ஆல்வ்ஸ் இந்த ஆய்வில் பங்கேற்றார்.

"இது இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்று. இதயத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும்," என விளக்குகிறார் அவர்.

ஹூகோ "இதயநோய் அபாயம் இல்லாமல்" சவாலை முடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் "தீவிரமற்ற அளவுகளை முக்கியமாகக் கொண்டு" அவருக்கான வரம்புகளை நிர்ணயம் செய்தனர்.

ஹூகோ, மாதந்தோறும் எர்கோஸ்பைரோமெட்ரி (உடற்பயிற்சியின் போது ஒரு நபரின் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு முறை) மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஈ.சி.ஜி) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

"பெரிய அளவிலும், நுண்ணிய அளவிலும் இதயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது மற்றும் உடல் பயிற்சியால் ஏற்படும் ஒழுங்கின்மை, தகவமைப்பு அல்லது தவறான தகவமைப்பு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாக இருந்தது," என்று மருத்துவர் ஆல்வ்ஸ் கூறினார்.

'பாதுகாப்பு மணடலம்'

தோட்டத்தில் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் ஹூகோ

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஹூகோ ஃபாரியஸ் உடலின் மீதான அழுத்தத்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாமல் இல்லை

இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது.

நாளின் எஞ்சிய பகுதியைத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடல் ஓட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்த வசதியாக இரு குழந்தைகளின் தந்தையான இவர் எப்போதும் காலை நேரத்திலேயே ஒடினார்.

அதே போல் அவர் எப்போதும் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள அமெரிக்கானா நகரில் கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே ஓடினார்.

உடற்பயிற்சியின் கால இடைவேளை மற்றும் அளவு அதிகம் இருந்தபோது இதய தசை பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிவியல் இதழான அர்கிவோஸ் பிரேசிலிரோஸ் டி கார்டியோலோஜியாவில் (Arquivos Brasileiros de Cardiologia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு செய்தது.

எந்த இதய தசை மாற்றமும் பெரும்பாலும் இயற்கையான, ஆரோக்கியமான உடலியல் ரீதியானவையாக இருந்ததுடன் எந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கவில்லை.

"எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டுப் பயிற்சியின் தீவிரம் மிதமாக இருக்கும் வரை அதிக அளவு விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்ப இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்கிறார் மருத்துவர் ஆல்வ்ஸ்.

"குறிப்பிட்ட வரம்புகள் இருந்தாலும், பயிற்சிகளுக்கு இடையில் உடல் சீராவதற்குப் போதிய அவகாசம் இருந்தால் பயிற்சி பெற்ற ஒரு வீரரின் இதயத்தால், மிகத் தீவிர அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது" என இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத விளையாட்டு இதயவியல் நிபுணர் ஃபிலிப்போ சாவியோலி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹூகோ ஓடிக்கொண்டிருக்கும் காட்சி

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சவாலை நிறைவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்

சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார்.

"ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது," என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, "நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது."

ஹூகோ இந்த சவாலை அதீத தீவிரத்தில் மேற்கொண்டிருந்தால், அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் அவர், போதிய பயிற்சி அல்லது மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய சவாலை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.

"இதிலுள்ள அபாயம் கணிசமானது மற்றும் அறிவுறுத்தத்தக்கது அல்ல," என்றார் அவர்.

"உரிய தயாரிப்பு இல்லாமல் இதைச் செய்தால், அரித்மியா, வீக்கம் அல்லது திடீர் இறப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் எச்சரித்தார்.

'உங்கள் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்'

ஹூகோவை பொறுத்தவரை ஆய்வின் முடிவு ஒரு வரவேற்கத்தக்க ஆச்சர்யமாக இருந்தது. "நான் என் வாழ்வில் அடைய முடியும் என கற்பனைகூடச் செய்திராத உடல் தகுதியை எட்டினேன். அதிலும், பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.

ஆனால் அந்த சவால் அபாயங்கள் இல்லாததாக இருக்கவில்லை. "குளிர், வெயில், மழை, போக்குவரத்து, காயம் என நான் அனைத்து விதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டேன்" என்கிறார் அவர்.

அவர் மூன்றுமுறை வயிற்றுப்போக்கை தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதில் மிக மோசமான வயிற்றுப் போக்கு ஐந்து நாட்களுக்கு நீடித்தது.

"நான் 4 கிலோ எடை இழந்தேன், என் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம்."

தனது 120வது மாரத்தானை ஓடிய நேரத்தில், நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பிளான்டர் ஃபாஸியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் கால் பாதத்தின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார்.

பின்னர் தனது 140ஆவது மாரத்தானை ஒட்டிய கட்டத்தில் கீழ்வயிறு மற்றும் உள் தொடையில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைகளைப் பாதிக்கும் புபால்ஜியா (Pubalgia) அல்லது விளையாட்டால் ஏற்படும் ஹெர்னியா எனப்படும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

தனது குடும்பத்தினருடன் கைகோர்ந்து இறுதி கட்டத்தை நிறைவு செய்த ஹூகோ

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது 366ஆவது மாரத்தானின் இறுதிக் கட்டத்தை தனது குடும்பதினருடன் சேர்ந்து கடந்தார்

அதன் பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் - அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை - ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான்.

"உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார்.

"யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்கிறார் ஹூகோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xv9n29gkro

’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’

3 weeks 2 days ago


சிறப்புக்கட்டுரைகள்

’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’

’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’

இரா. தமிழ்க்கனல்

Published on: 

21 Jun 2025, 2:30 pm

Share

நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம்.

அந்த உரையாடலிலிருந்து...

பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம்

பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம்

யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே?

உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள்.

இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை.

நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள்.

வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள்.

இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன்.

சமாதி என்றால் இறந்துவிடுவார்களா?

இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா.

சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது?

யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன.

திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன.

திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார்.

கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள்.

சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை.

உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார்.

இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்...

கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள்.

உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள்.

புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது!

எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது?

தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள்.

எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும்.

யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே...

இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும்.

கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை.

Andhimazhai
No image preview’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...
நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

3 weeks 2 days ago

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ்.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம், இது சாதாரணமான ஒன்றுதான் என்பதுடன் அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.

பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளிலும், நாக்கின் பின்பகுதியிலும் தங்கிவிடும் பாக்டீரியாக்களுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம் போன்றது.

இந்த பாக்டீரியாக்களை அகற்றாவிட்டால், அவை அங்கு பெருகி, கடுமையான ஈறு நோய்களை ஏற்படுத்தலாம்.

ஆனால், இதைத் தடுக்க வழிகள் உள்ளன.

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?

உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ், இது ஈறு விலகல் என்றும் அழைக்கப்படுகிறது.

"வயது வந்தவர்களில் பாதி பேர் ஏதோ ஒரு வகையில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்," என இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பல் மறுசீரமைப்பு மருத்துவத்தின் இணை பேராசிரியரான மருத்துவர் பிரவீன் ஷர்மா, பிபிசியின் வாட்ஸ் அப் டாக்ஸ்? என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"துர்நாற்றத்தை, வாய் குழியிலிருந்து வரும் துர்நாற்றமாக நீங்கள் கருதலாம்," என்று அவர் வாயை குறிப்பிட்டு கூறுகிறார்.

"இது 90% வாய் துர்நாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்."

மீதமுள்ள 10% வாய் துர்நாற்றத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன.

"கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு இருக்கும்," என்கிறார் டாக்டர் ஷர்மா.

"வயிற்றுப் பிரச்னைகள், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வகையான புளிப்பான சுவாசம் இருக்கும். எனவே, உடல் முழுவதும் ஏற்படும் நோய்கள் வாய்க்குழியில் வெளிப்படும்.

இதைப் பற்றி செய்யக்கூடியது என்ன?

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம்.

பிரச்னையின் வேரை அடையுங்கள்

உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தேங்கும் பாக்டீரியாவை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால், அது நுண்ணிய புண்களை ஏற்படுத்தி அதற்கு பின் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஜின்ஜைவைடிஸ், ஈறு நோயின் ஆரம்ப நிலை, ஆனால் இது சரிசெய்யக் கூடியது என்பது நற்செய்தி.

"ஜின்ஜைவைடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், உங்கள் ஈறுகள் சிவப்பாக வீங்கி, மற்றும் பல் துலக்கும் போது ரத்தம் வடிவதையும் வைத்து நீங்கள் கவனிக்கலாம்," என்கிறார் மருத்துவர் ஷர்மா.

"இது மேலும் மோசமடைந்து பீரியோடோன்டைட்டிஸ் ஆக மாறும்."

சிவப்பு, வீக்கம் அல்லது பல் துலக்கும் போது ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறதா என் உங்கள் ஈறுகளைப் பரிசோதியுங்கள், ஆனால் நடவடிக்கை எடுக்க அவகாசம் இருக்கிறது என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம்.

"பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். ஏனெனில் 'ஓ, நான் ஏதோ தவறு செய்கிறேன், அதனால்தான் ரத்தம் வடிகிறது, என அவர்கள் நினைக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் ஷர்மா.

"இது கிட்டத்தட்ட தலைகீழாக உள்ளது - ரத்தம் வரும் ஈறுகளை ஒரு அறிகுறியாகக் கருதி, 'ஓ, நான் முன்பு சரியாக துலக்கவில்லை, இனி கொஞ்சம் நன்றாக துலக்க வேண்டும்,' என்று நினைக்க வேண்டும்." என்றார்.

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

படக்குறிப்பு, ஆரோக்கியமான பல்லில் ஈறுநோய் எவ்வாறு வளர்கிறது என்பதைக் காட்டும் கிராபிக்ஸ்

கவனம் செலுத்தி பல் துலக்குங்கள்

சரியாக பல் துலக்குவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் ஷர்மா.

"உங்கள் பற்களை துலக்கும் போதோ அல்லது பற்களை சுத்தப்படுத்தும் போதோ, நீங்கள் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கக் கூடாது," என்கிறார் அவர்.

நீங்கள் கண்ணாடி முன் நின்று முறையாக கவனம் செலுத்துவது சிறந்தது.

வலது கை பழக்கமுள்ள பலர் தங்களை அறியாமலே தங்களது இடதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர், இடது கை பழக்கமுள்ளவர்கள் தங்களது வலதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர். இது குறைவான கவனம் செலுத்தப்படும் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து இரண்டு புறமும் கவனமாக ஒரே அளவு பல்துலக்குங்கள்.

பல் துலக்கும் நுட்பத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்

முதலில் பற்களுக்கிடையில் தூய்மைப்படுத்த தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஷர்மா.

"பிளேக் (பற்களில் ஏற்படும் படிவு) அகற்றுவதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதற்கு, பற்களுக்கு இடையில் தூய்மைப்படுத்தும் பிரஷ்களை (இன்டர்டெண்டல் பிரஷ்) பயன்படுத்துவது சிறந்தது," என்று அவர் கூறுகிறார்.

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்டர்டெண்டல் பிரஷை பயன்படுத்திய பின்னர் உங்கள் வாயில் பிரஷை நகர்த்தும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை அனைத்துமே கவனமாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல் துலக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம்.

பலரும் பிரஷை பல்லுக்கு 90 டிகிரி கோணத்தில் பிடித்து முன்னும் பின்னும் அழுத்துவதன் மூலம் பல் துலக்குகிறார்கள், ஆனால் இந்த முறை ஈறு பின்னடைவை உண்டாக்கலாம்.

பிரஷ்ஷை பல்லுக்கு 45 டிகிரி கோணத்தில் பிடித்து மென்மையாக துலக்குங்கள். கீழ் பற்களின் ஈறு வரிசையை நோக்கி பிரஷின் நார்களை வைத்து மேற்பற்களின் ஈறு வரிசையை நோக்கி துலக்குங்கள். இது ஈறுவரிசையின் அடியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும்.

சரியான நேரத்தில் பல் துலக்குங்கள்

உணவுக்குப் பின் பல் துலக்குவது சரியானது என நம்மில் பலருக்கு கற்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல.

"காலை உணவுக்கு முன் பற்களை துலக்குவது சிறந்தது," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு பற்களைத் துலக்குவது பற்களின் கனிம பாகமான எனாமல் மற்றும் டெண்டினை மென்மையாக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை நீங்கள் செய்யக்கூடாது."

உணவில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் மேல் பாதுகாப்பாக உள்ள எனாமல் மற்றும் அதற்கு கீழ் உள்ள டெண்டினை மென்மையடைய வைக்கிறது. எனவே உணவு உட்கொண்ட உடனே பற்களை துலக்குவது உங்களது எனாமலை பாதிப்படைய வைக்கலாம்.

"நீங்கள் காலை உணவு உட்கொண்ட பிறகு பல் துலக்குவதை விரும்பினால், உங்கள் காலை உணவுக்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது நேர இடைவேளை விடவேண்டும்." என்கிறார் மருத்துவர் ஷர்மா.

நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளித்த பின்னர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் துலக்குவது சிறந்ததென்றாலும், சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பல் துலக்குவது போதுமானதாக இருக்கும்.

நீங்கள் தூங்கும்போது எச்சில் சுரப்பது குறைகிறது, இது இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் உங்கள் பற்களை அதிக சேதப்படுத்த அனுமதிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் முழுமையாக சுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு இரவு நேரமே சிறந்தது.

சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யுங்கள்

நடுத்தர விறைப்புள்ள நார்களைக் கொண்ட பிரஷைப் பயன்படுத்துங்கள்.

பற்பசைகள் விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டியதில்லை.

"அதில் ஃபுளோரைட் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே," என்கிறார் மருத்துவர் ஷர்மா.

இந்த கனிமம் பல்லின் எனாமலை வலுப்படுத்தி பல் சொத்தையாவதற்கு கூடுதல் எதிர்ப்பை தருகிறது.

பல் சொத்தையாவதை தடுக்கும் வகையில் பல் துலக்கிய பின்னர், பற்பசையையும், ஃபுளோரைடையும் துப்புங்கள், ஆனால் வாய் கொப்பளிக்காதீர்கள்.

ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், மவுத்வாஷ் உபயோகிப்பதும் பயனுள்ளது, ஏனெனில் இது ப்ளேக் மற்றும் பாக்டீரியா உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது பற்பசையில் உள்ள ஃபுளோரைடை நீக்கிவிடக் கூடும் என்பதால் பல் துலக்கிய பிறகு இதைப் பயன்படுத்த வேண்டாம்.

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம், ஈறு நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதிக அளவிலான சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பல்சொத்தை ஏற்படுத்தலா.

தீவிர ஈறு நோயை கண்டுகொள்ளுங்கள்

ஈறு விலகல் (பீரியோடோன்டிடிஸ்) அதிகரித்தால், பற்களுக்கு இடையே இடைவெளிகள் உருவாகத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம், மேலும் பற்களை தாங்கி நிற்கும் எலும்பு அரிக்கப்படும்போது, பற்கள் தளர்ந்து போகலாம்.

இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பற்கள் உதிரும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம். நீங்கள் நீடித்த துர்நாற்றத்தையும் அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்.

இறுதியாக, உங்களது சுவாசத்தைப் புத்துணர்ச்சியுள்ளதாக்க சில குறிப்புகள்:

  • உங்கள் வாய் காய்ந்துபோய் இருந்தால் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

  • நாக்கு சுத்தப்படுத்தும் கருவியைக் கொண்டு உங்கள் நாக்கை சுத்தப்படுத்துங்கள். இது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய உணவுத் துகள்கள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது.

  • உங்கள் சுவாசம் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என்பது சரியாக தெரியாவிட்டால் அதை ஒரு நண்பரையோ, குடும்ப உறுப்பினரையோ பரிசோதிக்கவிடுங்கள்.

ஆனால் யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்!

29 ஏப்ரல் 2025 தேதியிட்ட பிபிசி-யின் What's Up Docs? பாட்காஸ்ட் எபிசோடை தழுவி எழுதப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wp9x58p5yo

மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்

4 weeks 2 days ago

இதய நோய், மனிதன், ஆரோக்கியம், மாரடைப்பு, பக்கவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம்.

கட்டுரை தகவல்

  • அமீர் அஹ்மது

  • பிபிசி உலக சேவை

  • 2 ஜூலை 2025, 02:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம்.

ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.

இதயநோய் மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான இதயம் என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கும்.

"நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதயத்துக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கலாம்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரான எவன் லெவின்.

ஆனால், இது ஆரோக்கியமான இதயம் உங்கள் மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும் என சொல்லுமளவு எளிதானதா என்கிற கேள்வியும் உள்ளது

மாரடைப்பு என்றால் என்ன?

இதய நோய், மனிதன், ஆரோக்கியம், மாரடைப்பு, பக்கவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்க வேண்டும்

இதயத்துக்கான ரத்த ஓட்டம் திடீரென தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இதயத்துக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது, இதய தசைகள் சேதமடையலாம் அல்லது இறக்க தொடங்கலாம். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் இதயத்தின் தசைகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தைச் சந்திக்கலாம். இதயத்தின் ஒரு பெரும் பகுதி இதுபோல் சேதமடைந்தால், மரணத்தை விளைவிக்கும் வகையில் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது (இது கார்டியாக் அரெஸ்ட் அல்லது மாரடைப்பு என அழைக்கப்படுகிறது).

மாரடைப்பு மரணங்களில் பாதி, அறிகுறிகள் ஏற்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் நிகழ்கின்றன. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகள் மருத்துவ அவசரமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம்.

பிளேக்ஸ் (plaques) எனப்படும் கொழுப்புப் பொருள்கள் இதய ரத்த நாளங்களில் தேங்கி, ரத்தம் எளிதில் பாய முடியாத அளவு அதனை குறுகலாக்கும் கரோனரி இதய நோய்தான் மாரடைப்புக்கு பொதுவான காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சுமார் 805,000 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதில், 605,000 பேர் முதல் முறையாக மாரடைப்பை அனுபவிக்கிறார்கள், 200,000 பேர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு வரலாம் என்பதை ஒருவர் அறிவது எப்படி?

இதய நோய், மனிதன், ஆரோக்கியம், மாரடைப்பு, பக்கவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மாரடைப்பின் வலி நெஞ்சிலிருந்து கைகளுக்குச் செல்லலாம்

மாரடைப்பு பலவிதமான அறிகுறிகளுடன் ஏற்படலாம், இதில் மிகவும் பொதுவானது மார்பு வலி – ஆனால் இது ஒரு கூர்மையான வலியாக மட்டும் இல்லாமல் மார்பு முழுவதும் கடுமையான அழுத்தம் மற்றும் இறுக்கமாக இருக்கும்.

சில பெண்கள் இந்த மார்பு வலியோடு, கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வலியை உணரலாம்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர் ஐலின் பார்சேகியன், மாரடைப்பு தொடக்கத்தில் அஜீரணக் கோளாறு என தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறுகிறார். ஆனால், அஜீரணக் கோளாறு போலல்லாமல் இடது கை, தாடை, முதுகு மற்றும் வயிறு போன்ற உங்கள் உடலின் பிற பகுதிகளிலும் மாரடைப்பு பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது.

தலைச்சுற்றல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையும் இதில் அடங்கும்.

மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், சமயங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்களுக்கு முன்பே கூட எச்சரிக்கை அறிகுறிகள் தென்படலாம். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சுவலி சரியாகாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்.

"மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ரத்த ஓட்டம் சீரமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட இதய தசைகள் இறக்கத் தொடங்கலாம், அவசர மருத்துவ பணியாளர்கள் வரும்வரை ஒரு ஆஸ்பிரினை மெல்லும்படி நான் அறிவுறுத்துகிறேன்," என்கிறார் மருத்துவர் ஐலின் பார்சேகியன்.

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

"உங்கள் வயது, எடை, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களுக்கு எதிராக இருந்து, மார்பு அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழையுங்கள்," என்கிறார் அமெரிக்க இதயநோய் நிபுணர் மருத்துவர் இவான் லெவின்.

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

இதய நோய், மனிதன், ஆரோக்கியம், மாரடைப்பு, பக்கவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியமானதாகிறது.

உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்வதற்காக உங்கள் ரத்தத்தில் காணப்படுவதுதான் (கொழுப்பு) கொலஸ்ட்ரால். அதே நேரம், சில வகை கொழுப்பு அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

நமது இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒன்று என இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 6 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறை கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த உணவுகளில் இறைச்சி பை (meat pie), கேக்குகள், பிஸ்கட்கள், சாசேஜ்கள், வெண்ணெய் மற்றும் பனை எண்ணெய் உள்ள உணவுகள் அடங்கும்.

நிறைவுறாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த நாள அடைப்புகளை நீக்க உதவக் கூடியவை என்பதால் சமச்சீரான உணவாக அவை சேர்க்கப்பட வேண்டும்.

இந்த உணவுகளில் எண்ணெய் மீன்கள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அடங்கும்.

ஆரோக்கியமான உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான எடை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை இதயநோய் மருத்துவ நிபுணர் இவான் லெவின் பரிந்துரைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "எப்போதும்" புகைப்பிடிக்கவோ அல்லது வேப் (Vaping) செய்யவோ கூடாது என்பதுதான் அவரது மிக முக்கிய அறிவுறுத்தல்.

24,927 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சிகரெட்டுகளை மட்டும் புகைப்பவர்களுக்கு உள்ள இதய நோய் அபாயம் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் இருப்பதாக அமெரிக்க இதய சங்கம் தெரிவிக்கிறது. இருப்பினும் இ-சிகரெட்டுகளை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30-60% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே ஒரு மாரடைப்பை அனுபவித்தவர்களில், சுமார் ஐந்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டாவது மாரடைப்புக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஸ்டேடின்கள் மற்றும் எஸெடிமிப் (ezetimibe) மருந்துகளை பரிந்துரைப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு மருந்துகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள்.

"எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவு இதய கோளாறுகளின் அபாயம் குறைகிறது என்பதை பல பத்தாண்டுகளின் தரவு காட்டுகிறது," என்கிறார் டாக்டர் ஐலின் பார்சேகியன்.

இளம் தலைமுறையினரிடம் மாரடைப்பு அதிகரிப்பு

இதய நோய், மனிதன், ஆரோக்கியம், மாரடைப்பு, பக்கவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இளைஞர்களின் வாழ்க்கை முறை மாரடைப்பை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதாக இதய நோய் மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர்.

மாரடைப்பு அபாயம் பொதுவாக வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, ஆனால் அமெரிக்க தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (US National Center for Health Statistics) தரவுகள் இளைஞர்களிடையே மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

2019இல், 18 முதல் 44 வயது வரையிலானவர்களில் 0.3% பேர் மாரடைப்பை அனுபவித்தனர். 2023ஆம் ஆண்டு இது 0.5% ஆக உயர்ந்தது.

2019-ல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 0.3% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் இது 0.5% ஆக அதிகரித்திருந்தது.

இந்த அதிகரிப்புக்கு, இந்த வயதினரிடையே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்தது மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களைக் காரணமாக கூறுகிறார் மருத்துவர் இவான் லெவின்.

"நாம் அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நச்சான, அதிகம் நகரவே தேவையில்லாத உடல் இயக்கமே இல்லாத வாழ்க்கை முறைக்குள் செல்வது கவலை அளிக்கிறது," என்கிறார் அவர்.

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கும் அத்திரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) உருவாக்குவதற்கு புகைப் பிடிப்பது ஒரு காரணியாக அறியப்படுகிறது, ஆனால் இளைஞர்கள் மீது வேப் (vapes) பயன்படுத்துவதன் அறியப்படாத தாக்கம் பற்றிய கவலைகளும் மருத்துவர் இவான் லெவின் போன்ற இதயநோய் நிபுணர்களுக்கு உள்ளது.

டாக்டர் ஐலின் பார்சேகியன் கூறுகையில் "பரம்பரை ஹைப்பர்லிபிடமியா (familial hyperlipidaemia) போன்ற மரபணு ஆபத்து காரணிகளும் இள வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் போன்ற சூழல்களும் இதற்கு பங்களிக்கின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது." என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdd5y14ppo

பள்ளிகளில் 'வாட்டர்பெல் திட்டம்' - மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்?

1 month ago

தமிழக பள்ளிகளில் 'வாட்டர்பெல் திட்டம்' எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்?

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி செய்தியாளர்

  • 28 ஜூன் 2025, 10:35 GMT

    புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார்.

மாணவனின் பெற்றோரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, காலையிலிருந்து மாலை வரை தண்ணீரே குடிக்காமல் விளையாடியதே இதற்குக் காரணமென்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். பொதுவாகவே அந்த மாணவன் மிகவும் குறைவாகவே தண்ணீர் குடித்து வந்ததாக மாணவனின் பெற்றோர் கூறினர்.

இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள 'வாட்டர் பெல்' திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

'வாட்டர் பெல்' தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்?

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி,

  • அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும்.

  • காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

  • தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம்.

  • இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்

தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்!

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,DR.SRINIVASAN

படக்குறிப்பு,மருத்துவர் சீனிவாசன், குழந்தைகள் சிகிச்சை நிபுணர்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன்.

''பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.

இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர் சீனிவாசன், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கிறார்.

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,DR.DURAIKANNAN

படக்குறிப்பு,மருத்துவர் துரைக்கண்ணன், ஊட்டச்சத்து நிபுணர்

பொதுவாக நீரிழப்பு (Dehydration) அதிக வியர்வை, விளையாட்டு போன்ற அதிகமான உடல் செயல்பாடு (Activities), அதிக வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் என்று விளக்கும் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், நீரிழப்பால் உடலின் சமநிலை பாதிக்கும் (electrolyte imbalance) என்கிறார். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான் எல்லா வயதினருக்குமே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.

''குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன்.

நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள்

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட் (Electrolytes) சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர் சீனிவாசன், அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும். சில நேரங்களில் ரத்தப்போக்கு (Bleeding) ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் குறையுமென்றும் அவர் எச்சரிக்கிறார்.

''ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு (cramps) ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.

ஒரே வயதுடைய மாணவர்களிடையே உயரம், எடை போன்றவற்றில் நிறைய மாறுபாடு இருக்கும் நிலையில், 'எல்லோரும் சராசரியாக இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்' என்ற கருத்து சரியானதுதானா என்ற கேள்வியும் பலரிடமும் எழுப்பப்படுகிறது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், சராசரியாக ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்பாட்டுக்கேற்ப இந்த அளவு மாறுபடும் என்றார். உயரம், எடையை விட பாடம் படிப்பது, பாட்டுப்பாடுவது, விளையாடுவது என அந்தந்த நேரத்தின் செயல்பாட்டின் அளவைக் கணக்கில் கொண்டே தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரின் கருத்து. இந்த அளவு குறையும்போது, அவர்களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது; செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்படும் என்கிறார் அவர்.

கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. இதைப் பற்றி விளக்கும் மருத்துவர் சீனிவாசன், மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் மலைப்பகுதிகளில் 'வாட்டர் பெல்' வைத்து, தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன்.

''எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதோ, வெப்பம் அதிகமாகியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.'' என்கிறார் அவர்.

''சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்''

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன், ''பள்ளிக்குழந்தைகளை தண்ணீர் குடிக்க அனுமதித்தால் மட்டும் போதாது. சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றே பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். பெரும்பாலான மாணவிகள், பள்ளிகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் அதிகளவில் சிறுநீர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளுக்கு 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.'' என்கிறார்.

"குளிர் பானங்கள் தண்ணீருக்கு மாற்று அல்ல"

வாட்டர் பெல் திட்டம், தமிழ்நாடு, பள்ளிகளில் புதிய திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் (aerated drinks), உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார்.

''மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் (obesity) ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் மருத்துவர் துரைக்கண்ணன்.

தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்.

''தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்து பலவிதமான அறிவுறுத்தல்களை சங்கம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கழிப்பிடம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.'' என்று நந்த குமார் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9w184w2vg2o

புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது

1 month ago

Editorial   / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0     - 52

image_91617eda65.jpg

இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது.

குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 Tamilmirror Online || ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை

French scientists discover new blood type in Guadeloupe woman - CBS News

அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

1 month 1 week ago

அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.

தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார்.

"நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார்.

சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்)

மூளை அனீரிஸம் என்றால் என்ன?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது.

இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது.

வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன.

  • இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி

  • மூளை

மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது.

மூளை அனீரிஸத்தின் வகைகள்

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும்.

ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன.

மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம்.

மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள்

மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்:

  • திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல)

  • நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு

  • குமட்டல் மற்றும் வாந்தி

  • வெளிச்சத்தை பார்க்கும்போது வலி

வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.

அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது?

ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

  • புகைப்பிடித்தல்

  • உயர் ரத்த அழுத்தம்

  • குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்)

  • சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன

  • தலையில் ஏற்பட்ட காயம்

  • மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது.

மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை.

சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும்.

சர்ஜிகல் கிளிப்பிங்

இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது.

சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

எண்டோவாஸ்குலர் சிகிச்சை

இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன.

சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.

ஃப்லோ டைவர்சன்

இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது.

இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி?

ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான்.

இந்த விஷயங்களை தவிருங்கள்:

  • புகைப்பிடித்தல்

  • பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது

  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது

  • கூடுதல் எடை அல்லது உடல் பருமன்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o

குழந்தைகளிடையே நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பது ஏன்? 3 காரணங்களும் தீர்வுகளும்

1 month 1 week ago

உடல் பருமன், ஆரோக்கியம், நீரிழிவு, உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அன்பு வாகினி

  • பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்

  • 18 ஜூன் 2025, 08:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.

இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உடல் பருமன், ஆரோக்கியம், நீரிழிவு, உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மூன்று காரணங்கள் என்ன?

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம்.

குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது.

இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது.

மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன.

விளம்பரங்களின் தாக்கம்

உடல் பருமன், ஆரோக்கியம், நீரிழிவு, உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் குழந்தைகளின் உணவுத் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

'ஜங்க் ஃபுட்' தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விளம்பரப்படுத்துவதால், குழந்தைகள் அவற்றை 'ட்ரெண்டி' என்று கருதுகின்றனர்.

ஜங்க் ஃபுட்டின் சுவை, அவை தரும் அனுபவத்தை மட்டுமே விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. உடல் பருமன், நீரிழிவு, பல் சிதைவு போன்ற நீண்டகால பாதிப்புகள் பற்றி அதில் எதுவும் காட்டப்படுவதில்லை.

பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' அமைக்கும் முயற்சி

உடல் பருமன், ஆரோக்கியம், நீரிழிவு, உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இந்த பிரச்னையை சமாளிக்க தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சிபிஎஸ்இ (CBSE), மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சிபிஎஸ்இ 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 'சர்க்கரைப் பலகை' அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரைப் பலகை (Sugar Board) என்பது அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தகவல் பலகையாகும்.

இந்தப் பலகைகளில் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான முக்கியத் தகவல்கள் இடம்பெறும். முதலில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.

அதேபோல், அவர்கள் அன்றாடம் உண்ணும் சிற்றுண்டிகள், பானங்களில் எவ்வளவு சர்க்கரை அடங்கியுள்ளது என்பதை விளக்கும் தகவல்கள் தரப்படும்.

அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள், பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதனுடன், ஆரோக்கியமான மாற்று உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும்.

இந்த முயற்சி மாணவர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தவும், அதிக - சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் உதவும்.

இதன்மூலம், பள்ளி கேன்டீன்களில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் இயலும். இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, பள்ளி கேன்டீன்களில் ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

முழுமையான தீர்வுக்கான வழிகள்

உடல் பருமன், ஆரோக்கியம், நீரிழிவு, உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த 'உணவுக் கொள்கை' மாதிரியை உருவாக்க வேண்டும்.

இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

'சர்க்கரைப் பலகை' போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை.

இதற்கு ஒரு முன்மாதிரியாக, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகள் உணவு-பானங்களில் அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது சோடியம் (உப்பு) இருப்பதை எளிதில் அடையாளம் காண உதவும் 'முன்பக்க எச்சரிக்கை லேபிள்களை' (Front-of-Pack Warning Labels) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த லேபிள்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை நுகர்வோருக்கு தவிர்க்க உதவுகின்றன.

இதேபோல், இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உடனடியாக எச்சரிக்கை லேபிளிங் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அதேநேரத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் பொருட்கள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால், அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

இந்த நிலைமை பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

ஒருங்கிணைந்த திட்டம் தேவை

தற்போதைய 'சர்க்கரைப் பலகை' முயற்சி குழந்தைகளின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிலையான மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த தேசிய பல்துறை செயல்திட்டம் தேவை.

இதை அவசர கால அடிப்படையில் உருவாக்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம், சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் தீர்வுகள் காண்பதற்கும் அரசாங்கம், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பட வேண்டும்.

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்து ஆகும்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4e31l3rx4o

ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்

1 month 2 weeks ago

விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்

விந்தணு

படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கேத்தரின் லாதம்

  • பதவி,

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன.

இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது.

"விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன.

விந்தணு, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?

"உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ்

"விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை."

விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.

மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது."

விந்தணு

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு

கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன?

"விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்."

விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி

விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார்.

அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது.

டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார்.

விந்தணு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது

"பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக்

ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன.

"விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை."

ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன.

விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் .

1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது.

நுண்ணுயிரியலாளர், அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணு, மனிதன்

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார்

ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு.

விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது.

விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும்.

மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை.

இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது.

பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்

எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன.

நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது.

பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்.

பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது .

"சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை.

விந்தணுக்கள் மிகச் சிறியவை

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம்

உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்."

பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும்.

"பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்."

பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார்.

ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்."

விந்தணு

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது

இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார்.

இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார்.

விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்."

கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை.

"நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்."

ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது."

விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

1 month 2 weeks ago

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

இனிப்பு வகைகளையும் சீனி சம்மந்தமான உணவுகளையும் அறவே நீக்கும்படி கூறியுள்ளீர்கள், ஆனால் நார்சத்துக்காக பழங்களை உண்ணச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த பழங்களில் காணப்படும் சர்க்கரையாகிய பிரக்டோசு (Fructose) கெடுதல் விளைவிக்காதா? தயவு செய்து அறியத்தரவும்.

பழங்களில் காணப்படும் பிரக்டோசு கெடுதல் விளைவிக்காது.

குடல் ஆரோக்கியம்: தோசை, தயிர், டார்க் சாக்லேட் போன்ற எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது?

1 month 2 weeks ago

ஒரு நபரின் மூளையை அவர்களின் குடலுடன் இணைக்கும் ஒரு கிராஃபிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு நபரின் மூளையை அவர்களின் குடலுடன் இணைக்கும் ஒரு கிராஃபிக்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஆர்மென் நெர்செசியன்

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

காரணமேயில்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயற்சிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

குடல் ஆரோக்கியம் என்பது செரிமானம் என்பதுடன் அடங்கிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம் மற்றும் நமது ஒட்டுமொத்த உயிர் சக்தியின் ஆணிவேர் என்று சொல்லலாம்.

நாம் உண்ணும் ஊட்டச்சத்து நிறைந்த, சீரான உணவில் டிரில்லியன்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் செழித்து வளர்கின்றன.

ஆனால் நாம் செய்யும் மோசமான உணவுத் தேர்வுகள் இந்த நுட்பமான உடலுறுப்பை சீர்குலைத்து, செரிமான பிரச்னைகள், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

குடல் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நமது குடலின் ஆரோக்கியம் நமது நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் நல்வாழ்வு உணர்வைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

குடல் ஆரோக்கியம் பற்றி பேசிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பாக்டீரியா எதிர்ப்பு உயிரியல் மையத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜூலி மெக்டொனால்ட், குடலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் செரிமான அறிகுறிகள் மூலம் மட்டுமல்லாமல் வேறுபல வழிகளிலும் வெளிப்படும் என்று சொல்கிறார்.

கைரேகைகள் ஒருவரைப் போல மற்றொருவருக்கு இருக்காது என்பதைப் போலவே, ஒவ்வொரு நபரின் குடல் நுண்ணுயிரியமும் தனித்துவமானது.

இதன் பொருள், சில தனிநபர்கள் இயற்கையாகவே மீள்தன்மை கொண்ட செரிமான அமைப்புகளைக் கொண்டிருக்கலாம், சிலருக்கு செரிமானக் கோளாறுகள் இருக்கலாம்.

மரபியல், சுற்றுச்சூழல், உணவுமுறை போன்றவை மட்டுமல்ல, ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாரா அல்லது இயற்கையான பிரசவம் மூலம் பிறந்தாரா என்பது போன்ற ஆரம்ப கால வாழ்க்கை காரணிகள் அனைத்துமே குடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கின்றன.

நமது குடல் நுண்ணுயிரியின் இந்த தனித்துவமான தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது.

நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் முக்கிய குழுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் காண முடிந்தாலும், உடல்நலக் குறைவு மற்றும் நோய்க்கு காரணமான சரியான நுண்ணுயிரிகளை சுட்டிக்காட்டுவது இன்றுவரை சிக்கலானதாகவே உள்ளது.

நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ

"குடல் நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையில் நமது உணவுத் தேர்வுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி சக மற்றும் ஆலோசகர் மருத்துவரான டாக்டர் பெஞ்சமின் முல்லிஷ் கூறுகிறார்.

"இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தல் அல்லது நார்ச்சத்து அதிகரிப்பது போன்ற உணவில் ஏற்படும் மாற்றங்கள் குடல் பாக்டீரியாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகளில் பார்த்திருக்கிறோம்."

எடுத்துக்காட்டாக, தயிர் மற்றும் கேஃபிர் போன்ற புளித்த பால் பொருட்களை அறிமுகப்படுத்துவது, ஒட்டுமொத்த நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையை அதிகரிக்காவிட்டாலும்கூட, லாக்டோபாசில்லஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது.

ஆனால் உணவுமுறை மட்டுமே குடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தும் காரணி என்று சொல்லிவிட முடியாது.

நமது குடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிற முக்கிய தாக்கங்கள் பின்வருமாறு:

  • தூக்கம் மற்றும் மன அழுத்தம்: தூக்கக்குறைவு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது

  • உடற்பயிற்சி: ஆரோக்கியமான நுண்ணுயிரியலை ஊக்குவிக்க உடல் செயல்பாடுகள் அவசியமானவை

  • நுண்ணுயிரி மருந்துகள்: மருத்துவம் மற்றும் விவசாயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடு குடல் பாக்டீரியாவை சீர்குலைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர் கலந்துக் கொண்ட அந்த ஆய்வில் ஆரோக்கியமான, பெரியவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் மீதான ஆய்வில், புரோபயாடிக்குகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, குடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைப்பையும் பராமரிக்க அவசியமான லாக்னோஸ்பைரா பாக்டீரியாவை பெருக்க உதவும் என்று கண்டறியப்பட்டது.

குடலுக்கும் மூளைக்குமான தொடர்பையும் குறிப்பிடும் டாக்டர் முல்லிஷ், "வேகஸ் நரம்பு, மூளை மற்றும் குடலை இணைக்கிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக் கடத்திகள் குடலில் உருவாகின்றன. நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் மன நலனையும் குடல் ஆரோக்கியம் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது."

ஆரோக்கியமான குடலுக்கான சிறந்த உணவு

புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் உள்ளன, இவை குடல் நுண்ணுயிரியை சமநிலைப்படுத்த உதவும் உயிருள்ள பாக்டீரியாக்கள் ஆகும்.

புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புளித்த உணவுகளில் பிரபலமானவை:

  • தயிர்

  • கெஃபிர்: பால் (மாடு, ஆடு அல்லது செம்மறி) மற்றும் கேஃபிர் தானியங்கள் (பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் கலவை) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பால் பானம்

  • சார்க்ராட்: துண்டாக்கப்பட்ட முட்டைகோஸ் மற்றும் உப்புடன் தயாரிக்கப்படும் புளிக்க வைக்கப்பட்ட முட்டைக்கோஸ்

  • கிம்ச்சி: நாபா முட்டைக்கோஸ், முள்ளங்கி, பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மீன் சாஸ் மற்றும் சால்ட்மிசோ ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கொரிய உணவு

  • மிசோ: சோயாபீன்ஸ், உப்பு மற்றும் கோஜி (பெரும்பாலும் அரிசி அல்லது பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஜப்பானிய பேஸ்ட்

  • டெம்பே: சோயாபீன்ஸ் மற்றும் ரைசோபஸ் அச்சு கலாச்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உறுதியான, புரதம் நிறைந்த இந்தோனேசிய தயாரிப்பு

  • பிற: கொம்புச்சா (உலகளவில்), தோசை (இந்தியா), மற்றும் நாட்டோ (ஜப்பான்)

குறிப்பு: புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை புதிதாக உண்ணத் தொடங்குபவராக இருந்தால், செரிமான பிரச்னையைத் தவிர்க்க, சிறிய அளவில் சாப்பிடத் தொடங்குங்கள்.

கிம்ச்சி போன்ற புளித்த உணவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொரிய சிறப்பு உணவான கிம்ச்சி போன்ற புளித்த உணவுகள், அவற்றின் சுகாதார நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டன.

நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, புரோபயாடிக் உணவுகளில் காணப்படுவதைப் போல நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது, மேலும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இரைப்பை குடல் நோய்களின் அபாயத்தைக் குறைத்து எடையை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பின்வருவன அடங்கும்:

  • முழு தானியங்கள் (ஓட்ஸ், குயினோவா, பழுப்பு அரிசி போன்றவை)

  • பருப்பு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்றவை)

  • பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழங்கள், பெர்ரி போன்றவை)

  • காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட்போன்றவை)

  • பருப்புகள் மற்றும் விதைகள் (பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவை)

குறிப்பு: வீக்கம் அல்லது அசௌகரியத்தைத் தடுக்க படிப்படியாக நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும். செரிமானம் மேம்பட தண்ணீர் அதிகம் குடிக்கவும்.

தயிர், புரோபயாடிக், பெர்ரி, ப்ரீபயாடிக், குடல் ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தயிர் போன்ற புரோபயாடிக்குகளை, பெர்ரி போன்ற ப்ரீபயாடிக்குகளுடன் சேர்த்து உண்பதால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்

பாலிஃபீனால்கள் என்பது குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மையை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட தாவர சேர்மங்கள் ஆகும்.

பாலிஃபீனால் உள்ள உணவுகள் பின்வருமாறு:

  • டார்க் சாக்லேட் (குறைந்தது 70% கோகோ)

  • க்ரீன் டீ

  • பெர்ரி

  • ஆலிவ் எண்ணெய்

குறிப்பு: பாலிஃபீனால் நிறைந்த உணவுகளை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் (அவகோடோ அல்லது கொட்டைகள் போன்றவை) இணைந்து உண்டால், உடல் அதிக அளவிலான பாலிஃபீனாலை உறிஞ்ச ஏதுவாக இருக்கும்.

எலும்பு சூப்பில் கொலாஜன் மற்றும் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது குடல் புறணி ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

இருப்பினும், இந்த நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.

குறிப்பு: இதை சூப்களில் பயன்படுத்தியும், தனியாகவும் சமைத்து உண்ணலாம்.

குடல் ஆரோக்கியத்திற்கு குலைக்கும் உணவுகள்

மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ரசாயனங்கள், பதப்படுத்துதல் மற்றும் நொதித்தல் பொருட்கள் உள்ளன, அவை குடல் பாக்டீரியா கலவையை மாற்றி வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

பொதுவான உதாரணங்கள் பின்வருமாறு:

  • பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் (சிப்ஸ், பட்டாசுகள், உடனடி நூடுல்ஸ்)

  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (ஹாட் டாக், தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, டெலி இறைச்சிகள்)

  • சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள்

  • தயார்நிலை உணவுகள்

குறிப்பு: கொட்டைகள், பழங்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரானோலா போன்ற குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தேர்வுசெய்யலாம்.

அஸ்பார்டேம் மற்றும் சாக்கரின் போன்ற சில செயற்கை இனிப்புகள், குடல் பாக்டீரியா மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

செயற்கை இனிப்புகள் உள்ள உணவுப்பொருட்கள்:

  • டயட் சோடாக்கள்

  • சர்க்கரை இல்லாத கலோரி குறைந்த திண்பண்டங்கள்

குறிப்பு: ஸ்டீவியா அல்லது மாங்க் பழம் போன்ற இயற்கை மாற்றுகளைத் தேர்வு செய்யவும்.

துரித உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, துரித உணவுகளில் பெரும்பாலும் அதிக பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை உள்ள உணவுகள் அடங்கும், எனவே அவற்றை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்

அதிக சர்க்கரை உள்ள உணவு, தீங்கு விளைவிக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் வீக்கத்தையும் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் பின்வருமாறு:

  • பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள்

  • வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா

  • சர்க்கரை பானங்கள் (சோடா, எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள்)

குறிப்பு: இனிப்பு உண்ண விரும்பினால் பழங்கள் அல்லது டார்க் சாக்லேட் உண்ணுங்கள்.

அனைத்து வகை மதுபானங்களும் குடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தூக்க முறைகளைத் தொந்தரவு செய்வதன் மூலமும், மன நலனைப் பாதிப்பதன் மூலமும், குடல் நுண்ணுயிரிகளின் கலவையை மாற்றுவதன் மூலமும் குடல் பாதிக்கப்படும்.

சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் நிறைந்திருந்தாலும், இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்து தவறானது என்று, ஐபிஎஸ் (எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி) ஆலோசகர் உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன் பிபிசியிடம் கூறினார். ஏனெனில் பாலிபினால்களினால் ஏற்படும் நன்மைகளை சிவப்பு ஒயினின் உள்ள ஆல்கஹால் ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று அவர் கூறுகிறார்.

குறிப்பு: மது அருந்தும்போது குடலுக்கு உகந்த உணவுகளுடன் மிதமாக குடிக்கவும்.

சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகம் உள்ள உணவுகளை உண்பதால், குடல் நுண்ணுயிரியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் குறைத்து, மீன், கோழி அல்லது தாவர அடிப்படையிலான மாற்றுகள் என மெலிந்த புரதங்களைத் தேர்ந்தெடுப்பதை பரிசீலிக்கவும்.

குறிப்பு: சிவப்பு மாமிசத்தை தவிர்த்து, நுகர்வை படிப்படியாக குறைக்க முயற்சிக்கவும்.

சிறிய மாற்றங்கள், பெரிய தாக்கம்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று உணவு நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது என்று டாக்டர் மெக்டொனால்ட் பரிந்துரைக்கிறார்.

"நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை நார்ச்சத்து வளர்க்கிறது, செரிமான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது."

தினமும் குறைந்தது 30 கிராம் நார்ச்சத்துடன், பல்வேறு வகையான, தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற பரிந்துரைக்கிறார், உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன்.

முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை குடல் நுண்ணுயிரிகளை வளர்க்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

ஆரோக்கியமான குடலுக்கான எளிய குறிப்புகள்:

  • உணவு பன்முகத்தன்மையை அதிகரிக்கவும் (வெவ்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளை உண்ணவும்)

  • புரோபயாடிக்குகளை (தயிர், கேஃபிர்) ப்ரீபயாடிக்குகளுடன் (நார்ச்சத்து நிறைந்த உணவுகள்) சேர்த்து உண்ணவும்

  • செரிமானத்திற்கு உதவ நீர்ச்சத்தை பராமரியுங்கள்

  • தியானம், உடற்பயிற்சி மற்றும் தூக்கத்துடன் மன அழுத்தத்தைக் குறைக்கவும்

  • அவசியமில்லாத பட்சத்தில் ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்

சிறிய, நிலையான உணவுமுறை மாற்றங்கள் என்பது தீவிரமான மாற்றங்களை விட நிலையானவையாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் சிறிய, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது நீண்டகால குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று திருமதி ஜாக்சன் கூறுகிறார்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனத்துடன் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம், அத்துடன் மன நலனையும் மேம்படுத்தலாம்.

https://www.bbc.com/tamil/articles/cx2qzp0k7dpo

குடலில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாவை அழிக்க 'மல மாத்திரை' உதவுமா?

1 month 3 weeks ago

சூப்பர்பக்ஸ், பாக்டீரியாக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பி

பட மூலாதாரம்,GSTT

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்

  • பதவி, மருத்துவம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 8 ஜூன் 2025

ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட "poo pills" பயன்படுத்த பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.

இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம்.

ஆண்டிபயாடிக் மருந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மல மாதிரிகளில் ஆபத்தான எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள குடலில் கவனம் செலுத்தும் விதமாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் இந்த மாத்திரைகளை பரிசோதித்து வரும் டாக்டர் பிளேர் மெரிக் கூறுகிறார்.

மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்கள், அவை தங்கியிருக்கும் குடலில் இருந்து வெளியேறி, உடலில் வேறு இடங்களில் குறிப்பாக சிறுநீர்ப்பாதை அல்லது ரத்த ஓட்ட தொற்றுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

"'உங்கள் குடலில் இருந்து சூப்பர்பக்ஸை அகற்ற முடியுமா?' என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது," என்கிறார் டாக்டர் மெரிக்.

'மல மாத்திரைகள்' என்ற வார்த்தையைக் கேட்டு, இது அபத்தமான யோசனையாக இருப்பதாக கருதவேண்டாம். மலம் மாற்று அறுவை சிகிச்சை, டிரான்ஸ்-பூ-ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், C. difficile எனப்படும் கடுமையான குடல் பாக்டீரியா தொற்றின்போது, மல மாற்று அறுவை சிகிச்சைகள் சூப்பர்பக்ஸையும் அகற்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர்.

ஆண்டிபயாடிக், மருந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருந்து எதிர்ப்பு பாக்டீரியா தொற்று பாதித்த நோயாளிகளை மையமாகக் கொண்டு ஆறு மாதங்களாக புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த நோயாளிகளுக்கு, மல வங்கிக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பெறப்படும் மல நன்கொடைகள் ஒவ்வொன்றும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், மலத்தில் இருக்கும் செரிக்கப்படாத உணவுகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய மலம் உலர்த்தி பொடியாக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது.

மாத்திரையின் உள்ளே செலுத்தப்படும் இந்த மலத் துகள்கள், வயிற்றின் வழியாக சேதமின்றிச் சென்று குடலை அடைந்து, அங்கு கரைந்து அதன் உள்ளிருக்கும் மலத்துகள்கள் வெளியாகும்.

பெரிய அளவிலான ஆய்வுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் 41 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த மல மாத்திரையை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயாராக இருப்பதாகவும், தானம் பெறப்பட்ட பாக்டீரியாக்கள் குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகும் நோயாளிகளின் குடலில் இருப்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

அதிகரித்து வரும் சூப்பர்பக்ஸின் தாக்குதலை சமாளிக்க மல மாத்திரைகள் உதவும். மேலும், குடலின் உட்புறத்தில் உணவு மற்றும் இடத்திற்கான போட்டியில் சூப்பர்பக்ஸும், தானம் செய்யும் பாக்டீரியாக்களும் நுண்ணுயிர் போருக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் "நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகள்" இருப்பதாக டாக்டர் மெரிக் கூறுகிறார்.

அத்துடன், உடலில் இருந்து அவற்றை முற்றிலுமாக அகற்றலாம் அல்லது "பிரச்னைகளை ஏற்படுத்தாத அளவிற்கு அவற்றைக் குறைக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு குடல் பாக்டீரியாக்கள் மிகவும் மாறுபட்டதாக மாறும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது சிறப்பான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும், இது "நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடும்". எனவே புதிய தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது கடினம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"இந்த ஆய்வு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, அனைத்து பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதை உணர்த்தும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது," என்று டாக்டர் மெரிக் தெரிவித்தார்.

நாம் பிறந்த சில மணிநேரங்களில் நம் உடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள், நுரையீரல் தொற்றுடன் இளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை பாதியாகக் குறைப்பதாக, இந்த வார தொடக்கத்தில் விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர்.

நமது உடலின் செல்கள், நமக்குள் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இது கிரோன் நோய் முதல் புற்றுநோய், மன ஆரோக்கியம் வரை அனைத்திலும் நுண்ணுயிரியலை உட்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

விரிவான ஆய்வுகளில் சூப்பர்பக்ஸுக்கு எதிராக மல மாத்திரைகள் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டால், ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருத்துவ நடைமுறைகள் உடலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும்.

"இந்த நபர்களில் பலருக்கு மருந்து எதிர்ப்பு உயிரிகளால் அதிக அளவிலான தீங்கு ஏற்படுகிறது," என்று டாக்டர் மெரிக் சொல்கிறார்.

தற்போது 450க்கும் மேற்பட்ட நுண்ணுயிரியல் மருந்துகள் உருவாக்கத்தில் இருப்பதாக, பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) தெரிவித்துள்ளது.

"அவற்றில் சில வெற்றி பெறும், எனவே மிக விரைவில் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் பாதிப்புகளை சமாளிக்கமுடியும் என நான் நினைக்கிறேன்," என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் கிறைசி செர்காகி கூறினார்.

"எதிர்காலத்தில், நுண்ணுயிரியல் சிகிச்சைகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்ற முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp3q0lp8w0jo

அறிகுறிகளே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகங்கள்

1 month 3 weeks ago

அறிகுறிகளே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகங்கள் - ஆபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்புக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டம் குறித்து சமீபத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "விவசாய தொழிலாளர்கள், கட்டட வேலை செய்வோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் என 2 கோடி பேர் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பால் இவர்களும் பாதிக்கப்படக்கூடும்.

1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில் 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்." என்று கூறினார்.

சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து நிபுணர்கள் பகிர்ந்த தகவல்கள் இங்கே…

"சிறுநீரகம் சார்ந்த நோய்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், மற்றொன்று தடுக்க இயலாத சிறுநீரக பிரச்னை.

தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன. அதில், முதன்மையாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய வாழ்வியல் நோய்களால் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவற்றை நாம் தடுக்க முடியும்.

ஆனால், மரபியல் ரீதியாக ஏற்படும் சிறுநீரக பிரச்னைகளை நாம் தடுக்க முடியாது." என விளக்குகிறார் சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி.

"ஆரம்பத்தில் நாம் வேட்டையாடும் சமூகங்களாக இருந்தோம். அதன்பின், வேளாண்மை செய்ய ஆரம்பித்தோம். இப்போது, கடைகள், ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்து, வீட்டுக்கே இன்று உணவு வருகின்றது. துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம். இப்படியான சூழலில் நம் உடலுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து உண்ண வேண்டும். அதுதான், நம் சிறுநீரகங்களை காப்பதற்கு நாம் செய்யும் அதிகபட்ச தடுப்பு வழியாக இருக்கும்," என்றார் மருத்துவர் சங்கநிதி.

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பை தடுப்பதில் உப்பின் அளவை குறைப்பதும் பெரும் பங்கு வகிக்கிறது

சிறுநீரக ஆரோக்கியம் என்று வரும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உப்பு, சர்க்கரையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

"ஏனெனில், நீங்கள் ஒரு டயாலிசிஸ் பிரிவுக்கு செல்வதாக எடுத்துக்கொள்வோம். அங்குள்ள சிறுநீரக நோயாளிகளுள் 70% மேல் நீரிழிவு நோயாளிகளாகவே இருப்பார்கள்." என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி.

சிறுநீரக ஆரோக்கியம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை சங்கநிதி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவு மிக முக்கியம், அப்படியென்றால் ஒருநாளுக்கு எவ்வளவு உப்பு எடுக்க வேண்டும்?

உப்பை பொறுத்தவரையில் 5 கிராம்தான் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது.

''ஒரு சிறிய டீஸ்பூன் அளவுக்கான உப்பைதான் தினமும் எடுக்க வேண்டும். அதுதவிர, நாம் அப்பளம், ஊறுகாய், ஃபிரெஞ்சு ஃப்ரை, சிப்ஸ், பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் என, தேவைக்கு மிக அதிகமாக உப்பை எடுத்துக்கொள்கிறோம். பதப்படுத்துவதற்காகத்தான் நாம் ஆரம்பத்தில் உப்பை பயன்படுத்தினோம், உப்பின் பயன்பாடு ஆரம்பத்தில் சுவையை அதிகப்படுத்துவது அல்ல. எனவே, நம்மால் எவ்வளவு உப்பை குறைக்க முடியுமோ அவ்வளவையும் குறைக்க வேண்டும்'' என்கிறார் சங்கநிதி.

கர்ப்பத்தின் போதே ஒருவர் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை, உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், இது இரண்டும் கருவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என கூறுகிறார் சங்கநிதி

''அதுமட்டுமல்லாமல், ஒரு குழந்தைக்கு உப்பே இல்லாமல் உணவைப் பழக்க வேண்டும். குழந்தைகளின் சுவை நரம்பை உப்பு, சர்க்கரை சுவைக்கு மட்டும் பழக்காமல், அதன் உண்மையான சுவைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பருவத்திலே இதை பழக்கினால் எளிது. இல்லையென்றால், 40 வயதில் ஒருவர் உப்பு, சர்க்கரையை கைவிடுவது கடினமாக இருக்கும்.'' என்கிறார் அவர்

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பின் தீவிர நிலை, நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி) என அறியப்படுகிறது

தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும்?

''ஒருவர் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். சிறுநீரக கல், சிறுநீரக கட்டிகள் உள்ளவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால், சிறுநீரக பிரச்னை ஏற்பட்டவுடன், அதை சரி செய்கிறோம் என்ற பெயரில் தண்ணீரை நாமே அதிகமாகக் குடிக்கக் கூடாது, அப்போது மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஒரே நாளில் இடைவெளி விட்டு விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்கக் கூடாது.''என கூறுகிறார் சங்கநிதி

"ஒரு ஆரோக்கியமான நபர் சாதாரணமான நாட்களில் 3 லிட்டர் வரையும் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் 4 லிட்டர் வரையும் தண்ணீர் அருந்த வேண்டும்'' என்கிறார் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்னென்ன?

"சிறுநீரக பிரச்னை பெரும்பாலும் அறிகுறிகளே காண்பிக்காது. ஒருவேளை சிறுநீரில் புரதம் வெளியேறினால், சிறுநீர் நுரை, நுரையாக வரலாம். ரத்தம் வெளியேறினால் சிவப்பாக இருக்கும். கல் இருந்தால் முதுகு பின்பகுதியில் இருபுறமும் வலி ஏற்பட்டு அது, சிறுநீர் வெளியேறும் பாதைக்கு பரவும். சிறுநீரில் கிரியேட்டினின் அதிகமாக இருப்பது அறிகுறிகளில் தெரியாது. கடைசி நிலையில்தான் கால் வீக்கம் ஏற்படும்." என்கிறார், மருத்துவர் சங்கநிதி.

சிறுநீர் வாயிலாக வெளியே செல்லக்கூடிய பொருட்கள் வெளியேறாமல் அதனுள்ளேயே இருப்பதுதான் கிரியேட்டினின் (creatinine).

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருவர் ஒரு நாளைக்கு தோராயமாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி கூறுகையில், "சிறுநீரக செயலிழப்பில் அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. கால் வீக்கம் இருக்கலாம், சிறுநீர் குறைவாக வெளியேறலாம், நோய் கொஞ்சம் தீவிரமாகும்போது மூச்சுத்திணறல், ரத்தசோகை, பசியின்மை ஏற்படலாம். அந்த அறிகுறிகளே தீவிர நிலையில்தான் தென்படும்.

தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தமும் சில சந்தர்ப்பங்களில் அறிகுறியாக இருக்கலாம்." என்றார்.

சிறுநீரக பாதிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது?

நாள்பட்ட சிறுநீரக நோய் (chronic kidney disease - CKD) தான் சிறுநீரக பிரச்னையின் தீவிர நிலையாக கருதப்படுகிறது என்று கூறும் சங்கநிதி, இதில் ஐந்து கட்டங்கள் உள்ளதாக விளக்கினார்.

"கிரியேட்டினின் அளவை வைத்துதான் ஒருவர் எந்த கட்டத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன் அளவு உயர்ந்தால் எந்தளவுக்கு நோய் தீவிரமாக உள்ளது என்பதை கூற முடியும். ஐந்தாம் கட்டம் என்றால் கிட்டத்தட்ட இறுதி நிலை எனலாம். அதாவது, சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்துவிட்டது என அர்த்தம். அப்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது தீர்வாக இருக்கும். நிரந்தரமான சிறுநீரக நோயாக மாறிவிட்டால் அதை முழுவதும் குணப்படுத்த முடியாது. தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகளை மட்டுமே சரிசெய்ய முடியும்." என்றார்.

கிரியேட்டினின் அளவை வைத்து 'கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்' (Glomerular filtration rate) என்பதை அளவிடுகின்றனர். அதாவது, கிரியேட்டினின் அளவையும் நோயாளியின் வயதையும் வைத்து இதன் மதிப்பை அளவிடுகின்றனர்.

'' அதன் அளவு 90க்கு மேல் இருந்தால் பிரச்னையல்ல, 90 மி.லி.க்கு கீழ் இருந்தால் நாள்பட்ட சிறுநீரக நோய் என்பதை உறுதிசெய்வோம். 15 மி.லி.க்கு கீழே சென்றால் இறுதி நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் என்பார்கள்.'' என்றார் சங்கநிதி.

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் நிபுணர்கள்

"40 வயதுக்கு மேல் எல்லோருக்கும் ஜி.எஃப்.ஆர்(கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்) அளவு குறையும். ஆனால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இதன் அளவு ஆண்டுக்கு 5 மி.லி. என்ற அளவில் குறைகிறது. ஆரம்ப நோய்நிலையில், இதன் அளவு குறைவதை சற்று மாற்றியமைப்பதற்கான மாத்திரைகள் வழங்கப்படும்." என்கிறார், சங்கநிதி.

சிறுநீரில் புரதம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் ஆரம்ப நிலையில் வழங்கப்படும் என்கிறார், மற்றொரு சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி. "அவை பெரும்பாலும் நீரிழிவு, ரத்த அழுத்த மருந்துகளாகத் தான் இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார்.

என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும்?

கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பதற்கான ரத்தப் பரிசோதனை, ரத்தம் வெளியேறுகிறதா என்பதை சோதிக்க ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அல்டிராசவுண்ட் மூலம் சிறுநீரகம் எப்படி இருக்கிறது, அதன் அளவு சரியாக இருக்கிறதா, கல், கட்டி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும் என்கிறார் சங்கநிதி.

"மேலும், கிரியேட்டினின் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தைப் பார்த்தாலே அதற்கு வயதான தோற்றம் ஏற்பட்டிருக்கும். உட்புறம், வெளிப்புறம் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம்." என்றார்.

மேலும், "டைப் 1 நீரிழிவு நோயாக இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் எப்போதாவது நாம் பரிசோதிக்கும் போதுதான் தெரியும். ஆனால், நீரிழிவு நோய் நமக்கு எப்போதிலிருந்து இருக்கிறது என்பது தெரியாது. எனவே, நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படும் போதே சிலருக்கு சிறுநீரக நோய் இருக்கலாம்." என்றும் கூறுகிறார் அவர்.

வருமுன் காப்பது எப்படி?

இந்தாண்டு உலக சிறுநீரக தினத்தின் (மார்ச் 13) கருப்பொருளே, 'உங்கள் சிறுநீரகத்தை அறிந்துகொள்ளுங்கள்' (Know your kidney) என்பதுதான். அதில், ஏ, பி, சி, டி, இ என்கின்றனர். A என்பது ஆல்புமின், அதாவது புரதம் வெளியேறுவது, B என்பது ரத்த அழுத்தம் (blood pressure), C (கொலஸ்டிரால்), D என்பது நீரிழிவு நோய் (diabetics), E என்பது (eGFR), F என்பது குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என்பது (family history). இந்த ஆறு அம்சங்களையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார், சங்கநிதி.

என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்?

நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன மாதிரியான சரிவிகித உணவுமுறையை கடைபிடிக்கிறோமோ அதுவே நம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் முக்கியம் என பரிந்துரைக்கிறார் சங்கநிதி.

"வாஸ்குலார் (ரத்த நாளங்கள் தொடர்பான) நோய்களைத் தடுக்க பொட்டாசியம் எடுக்க வேண்டும், அதுவே சிறுநீரக பிரச்னை வந்துவிட்டால் பொட்டாசியம் சம்மந்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

உப்பை கூடுமானவரை குறைக்க வேண்டும். மேலும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆன்டி ஆக்ஸிடென்ட், நிறைந்த, கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்." என அவர் பரிந்துரைக்கிறார்.

கட்டட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது ஏன்?

"இந்த தொழிலாளர்கள் வெயிலில் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் போதுமான அளவில் அருந்த மாட்டார்கள். கழிவறை வசதி இல்லையென்றால் தண்ணீர் போதுமான அளவில் குடிக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு சுகாதாரமான கழிப்பட வசதியையும் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் ஜெயலஷ்மி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c861e6y826zo

கல்லீரல் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன?

1 month 4 weeks ago

கல்லீரல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கல்லீரல் 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்பு (பிரதிநிதித்துவ படம்)

5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் தற்போது தனது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்து வருகிறார். தீபிகாக்கு கல்லீரல் புற்றுநோய் (இரண்டாம் நிலை) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம் கூறியுள்ளார்.

நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களுடன் உடல்நலன் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, தான் எதிர்கொண்ட கடினமான நாட்களைப் பற்றி நினைவுகூர்ந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தீபிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கடந்த சில வாரங்களாக கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றின் மேற்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு எனது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பிறகு அது இரண்டாம் நிலை புற்றுநோய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது எங்களுக்கு மிகவும் கடினமான நேரம்."

"நான் இதை தைரியத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனும் எதிர்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ், நாங்கள் இதைக் கடந்து வருவோம் என்று நம்புகிறேன். எனது குடும்பம் எனக்கு ஆதரவாக நிற்கிறது. உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எனக்கு பலத்தைக் கொடுக்கின்றன. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தீபிகா தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை தீபிகா கக்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

பிக் பாஸ் சீசன் 12இன் வெற்றியாளரான தீபிகா கக்கர், இந்திய தொலைக்காட்சியின் பிரபலமான நடிகை. 'சசுரல் சிமர் கா' என்ற மெகா சீரியல் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. 'பால்டன்' திரைப்படத்திலும் தீபிகா கக்கர் நடித்துள்ளார்.

இவர் தனக்கு இருக்கும் புற்றுநோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியதைத் தொடர்ந்து, கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது எவ்வளவு ஆபத்தானது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன?

கல்லீரல், மனித உடலின் மிகவும் சிக்கலான உறுப்புகளில் ஒன்று. இது, ஐநூறுக்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. கொழுப்பு மற்றும் புரதத்தை செரிமானம் செய்வது, நச்சுகளை அகற்றுதல், பித்த சுரப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவது ஆகியவை கல்லீரலின் செயல்பாடுகளில் முக்கியமானவை.

புற்றுநோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது தனது வேலையைச் சரியாகச் செய்வது தடைபடும் என்பதுடன் கல்லீரலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.

கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய்களின் வகைகள்

முதன்மை கல்லீரல் புற்றுநோய்: கல்லீரலில் ஏற்படும் இந்தப் புற்றுநோய் கட்டி மிகவும் ஆபத்தானது. ஆஸ்திரேலிய புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, முதன்மை கல்லீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

  • ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (HCC) அல்லது ஹெபடோமா: முதன்மைக் கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையாக அறியப்படும் ஹெபடோமா, கல்லீரலின் முக்கிய செல்களான ஹெபடோசைட்டுகளில் தொடங்குகிறது.

  • சோலாங்கியோகார்சினோமா: இது பித்தநாள புற்றுநோய் என்றும் அறியப்படுகிறது. சோலாங்கியோகார்சினோமா பித்த நாளங்களை உள்ளடக்கிய செல்களில் தொடங்குகிறது (இது கல்லீரலை குடல் மற்றும் பித்தப்பையுடன் இணைக்கிறது).

  • ஆஞ்சியோசர்கோமா: இந்த வகை முதன்மைக் கல்லீரல் புற்றுநோய் ரத்த நாளங்களில் ஏற்படுகிறது. இது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படக் கூடிய அரிய வகை கல்லீரல் புற்றுநோயாகும்.

இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்: உடலின் ஒரு பகுதியில் தொடங்கிய புற்றுநோய், பிறகு கல்லீரலுக்கு பரவுவது இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தின்படி, 2024ஆம் ஆண்டில், 3,208 பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் சராசரி வயது 69 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

கல்லீரல் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய் உடலின் மற்றொரு பகுதியில் தொடங்கி பின்னர் கல்லீரலுக்குப் பரவுகிறது (சித்தரிப்புப் படம்)

கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமானது. இந்தப் புற்றுநோய் மேம்பட்ட நிலையை அடையும் வரை நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.

அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:

  • விலா எலும்புகளுக்குக் கீழே வலது பக்கத்தில் கட்டி

  • வயிற்றின் மேல் வலது பகுதியில் சங்கடம் ஏற்படுவது

  • வயிற்றில் வீக்கம்

  • வலது தோள்பட்டைக்கு அருகில் அல்லது பின்புறத்தில் வலி

  • மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல்)

  • லேசாக அடிபட்டாலும் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படுதல்

  • வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது பலவீனமாக உணர்வது

  • குமட்டல் மற்றும் வாந்தி

  • பசியின்மை அல்லது சிறிதளவு உணவு உண்டாலே வயிறு நிரம்பியதாக உணர்வது

  • காரணமின்றி உடல் எடை இழப்பு

  • வெளிர், நிறமற்ற மலம் மற்றும் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறுவது

  • காய்ச்சல்

கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

கல்லீரல் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தின்படி, நீண்டகால தொற்றுநோயை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ்கள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • கொழுப்பு கல்லீரல் அல்லது மரபணுக் கோளாறுகள், இதில் ஹீமோக்ரோமாடோசிஸ் அல்லது ஆல்ஃபா 1-ஆன்டிட்ரிப்சின் குறைபாடும் அடங்கும்

  • டைப் 2 நீரிழிவு நோய்

  • ஹெபடைடிஸ் பி அல்லது சி

  • மது அருந்துதல்

  • உடல் பருமன்

  • புகைப் பிடித்தல்

  • ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பு

ஹெபடைடிஸ் பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் (சித்தரிப்புப் படம்)

கல்லீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் விஷயங்களில் கவனம் செலுத்துவதே, புற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்று கூறப்படுகிறது. புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் எந்தவொரு அம்சத்தையும், ஆபத்து காரணி என்று வகைப்படுத்தலாம். புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் எந்தவொரு அம்சத்தையும் புற்றுநோய் பாதுகாப்புக் காரணி என்று அழைக்கலாம்.

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க ஆபத்து காரணிகளைத் தவிர்ப்பதும் புற்றுநோய் பாதுகாப்புக் காரணிகளை அதிகரிப்பதும் முக்கியம்.

ஹெபடைடிஸ் பி-ஐ தடுக்கும் வழிகள்:

  • ஹெபடைடிஸ் பி ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது சிறப்பானது. பச்சிளம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுவது அவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தடுப்பூசி பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  • நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றுக்கு சிகிச்சை பெறுதல்: நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்று உள்ளவர்களுக்கு, இன்டர்ஃபெரான் மற்றும் நியூக்ளியோஸ்(டி)ஐடி அனலாக் சிகிச்சை ஆகியவை உதவும். இந்த சிகிச்சைகள் கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்.

  • அஃப்லாடாக்சின் பி1-ஐ குறைத்தல்: அஃப்லாடாக்சின் பி1 அதிகமாக உள்ள உணவுகளைக் குறைத்து, அஃப்லாடாக்சின் பி1 குறைவாக உள்ள உணவுகளை உண்பது, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

கல்லீரல் புற்றுநோய்க்கான சாத்தியமான சிகிச்சைகள்

கல்லீரல் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTYIMAGES/PETER DAZELEY

அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இணையதளம் வழங்கும் தகவல்கள்படி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல சிகிச்சைகள் உள்ளன. சில சிகிச்சைகள் நிலையானவை (தற்போது பயன்பாட்டில் உள்ளன) வேறு சில சிகிச்சைகள், தற்போது மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

1. கண்காணிப்பு: பரிசோதனையின்போது, ஒருவருக்கு இருக்கும் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான புண்கள் கண்காணிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து சோதனைகளைச் செய்துகொள்வது அவசியம். கண்காணிப்பு கட்டத்தில் எந்தவித சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, ஆனால் புண்ணின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, அதாவது, நிலை முன்பைவிட மோசமடைந்துள்ளதா என்பது கவனமாக அவதானிக்கப்படுகிறது. அதன் நிலை அடுத்த கட்டத்திற்குச் சென்ற பின்னரே சிகிச்சை தொடங்கப்படும்.

2. அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சையில், புற்றுநோய் காணப்படும் கல்லீரலின் பகுதி அகற்றப்படுகிறது. கல்லீரலை மீண்டும் உருவாக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டால், அது மீண்டும் வளர்ந்து தனது செயல்பாட்டைத் தொடரும்.

3. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சிலருக்கு முழு கல்லீரலும் அகற்றப்பட வேண்டியிருக்கும். அந்தச் சூழலில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சையில், முழு கல்லீரலும் அகற்றப்பட்டு, தானமாகப் பெறப்பட்ட ஆரோக்கியமான கல்லீரல் மாற்றப்படுகிறது. இதில், புற்றுநோய் கல்லீரலுக்கு மட்டுமே பரவி பிற உறுப்புகளுக்குப் பரவாதபோது மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும், மற்றொரு நபரிடம் இருந்து கல்லீரலை தானமாகப் பெறுவது எளிதானது அல்ல.

4. நீக்குதல் சிகிச்சை (Ablation therapy): புற்றுநோய் பகுதியை நீக்கவோ அல்லது அழிக்கவோ நீக்குதல் சிகிச்சை பயன்படுகிறது. கல்லீரல் புற்றுநோய்க்குப் பல்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

5. எம்போலைசேஷன் சிகிச்சை: அறுவை சிகிச்சை செய்தோ அல்லது நீக்குதல் சிகிச்சையை (Ablation therapy) செய்தோ புற்றுநோய்க் கட்டியை அகற்ற முடியாதவர்களுக்கும், கல்லீரலுக்கு அப்பால் கட்டி பரவாதவர்களுக்கும் பயன்படுத்தப்படுவது எம்போலைசேஷன் சிகிச்சை. புற்றுநோய்க் கட்டிக்கு, ரத்த ஓட்டம் செல்வதை நிறுத்துவது அல்லது குறைப்பதை உள்ளடக்கிய சிகிச்சை இது. கட்டிக்குப் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்லாதபோது அதன் வளர்ச்சி குறைகிறது.

6. டார்கெட் தெரபி: இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை என்பது குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்க, மருந்துகள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சிகிச்சை.

7. நோய் எதிர்ப்பு சிகிச்சை: புற்றுநோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் வழிமுறைக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை என்று பெயர். உடலில் உருவாக்கப்படும் அல்லது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

8. கதிர்வீச்சு சிகிச்சை: இது, உடலின் புற்றுநோய் பகுதிக்கு உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் அல்லது பிற வகையான கதிர்வீச்சை அனுப்பி புற்றுநோயைக் குணப்படுத்துவதும் சிகிச்சை முறை. இந்தச் செயல்முறை பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், கல்லீரல் புற்றுநோயை எந்த அளவுக்கு குணப்படுத்த முடியும் என்பது, புற்றுநோயின் நிலை மற்றும் அது எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cql2436d77lo

மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் 'கோல்டன் ஹவர்' என்பது என்ன? உடனிருப்பவர் என்ன செய்ய வேண்டும்?

2 months ago

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மோகன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்த்தார்.

நான் மருத்துவரை அழைத்து வரச் சென்றேன். ஆனால் பாதி வழியிலே உடல்நிலை சீராகிவிட்டது, வேண்டாம் என திரும்பி வந்துவிடச் சொன்னார். நான் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பரான சித்த மருத்துவர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் கால தாமதம் செய்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலே இறந்துவிட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.

இந்த நிகழ்வு மருத்துவ சிகிச்சையில் கோல்டன் ஹவரின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கோல்டன் ஹவர் என்றால் என்ன?

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிகிச்சை வழங்குவதற்கான நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நோய் அல்லது மருத்துவம் தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை வழங்கிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.

கோல்டன் ஹவர் என்பது ஒவ்வொரு நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் ஹவர் என்பது சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்கவாதம் மற்றும் பிரசவம் வரை அனைத்துக்கும் பொருந்தும் என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி.

முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வரை அனைத்துமே கோல்டன் ஹவர் என்று தெரிவித்தார் அவர்.

இதனை மேலும் விவரித்தவர், "கோல்டன் ஹவர் என்பது சுய விழிப்புணர்வில் இருந்தே தொடங்குகிறது. ஒருவர் தனக்கு உடல்நிலை மோசமடைகிறது என உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுய பரிசோதனை அல்லது சிகிச்சை செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்" என்றார் அவர்.

முதலுதவியின் முக்கியத்துவம்

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை, முதலுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது

கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது என்கிறார் குழந்தைசாமி. "ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டால் முதலாவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கோல்டன் ஹவரில் தான் வருகின்றன."

"இதனை மருத்துவத் துறையில் Right side error, Wrong side error என அழைப்பார்கள். ஒருவர் தான் நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு எந்தத் தீவிரமான பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தால் அது Right side error ஆகும். அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார். இதற்கு ஆகின்ற நேரம் மற்றும் செலவை விரயமாக கருதக்கூடாது."

"அதே நேரம் ஒருவர் தனக்கு பெரிய பாதிப்பு இல்லை என எண்ணி சிகிச்சை எடுக்காமலோ அல்லது மருத்துவமனைக்குச் சொல்லாமலோ தவிர்த்து அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனை Wrong side error என்பார்கள். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்றார்.

உடன் இருப்பவர்களின் பங்கு என்ன?

உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது பாதிக்கப்படுவரால் துரிதமாக முடிவெடுக்க முடியவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதும் கோல்டன் ஹவரில் தான் அடங்கும் என்றார் குழந்தைசாமி.

"உதாரணத்திற்கு ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என்றால் அவரை நடக்க வைக்கக்கூடாது. பரவலாக ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் போது என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும். அது தாமதமாகிறது என்றால் உடனடியாக சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க முடியும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமோ செல்ல வேண்டும்" என்றார்.

பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்னைகள் ஏற்படுகிறபோது தான் கோல்டன் ஹவர் முக்கியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்?

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை, முதலுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிற போது நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார் நரம்பியல் மருத்துவரான சதிஷ்குமார். "ஒவ்வொரு நிமிடமும் 1.9 மில்லியன் செல்கள் செயலிழக்கும். நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பேச்சுத்திறன், சிந்திக்கும் திறன் பாதிப்படைந்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால் மூளை ரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பாதிப்பு ஏற்படாமல் சரி செய்துவிட முடியும்."

"அதற்கு முன் முழுமையாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்காது. இதில் உடனடி மரணம் ஏற்படுவது அரிதென்றாலும் நாள்பட்ட பாதிப்புகள் உருவாகும். 30-40 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டு தொடக்க நிலையிலே கண்டறிந்தால் எளிதாக சரி செய்துவிட முடியும்" என்றார்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு ஏற்படுகிறபோது ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன்.

மாரடைப்பு என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுகிறபோது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும். ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோக ஆரம்பிக்கும். எனவே ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மாரடைப்பு சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கிற மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c787vq23xpxo

Checked
Sat, 08/02/2025 - 02:38
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed