விளையாட்டுத் திடல்

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026

2 days 15 hours ago

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து

19 JUN, 2025 | 05:57 AM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன.

இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின.

பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும்.

குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும்.

10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும்.

லீக் போட்டிகள் யாவும் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதியும் நடைபெறும்.

லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள் (குழு 2)

ஜூன் 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்)

ஜூன் 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்)

ஜூன் 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி)

ஜுன் 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி)

ஜூன் 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்)

icc_women_s_t20_world_cup_schedule.jpg

https://www.virakesari.lk/article/217868

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

4 days 15 hours ago

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 02:49 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது.

இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

angelo_mathews.png

சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

sl_vs_bang..png

இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார்.

அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ.

https://www.virakesari.lk/article/217564

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்

6 days 20 hours ago

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 17 ஜூன் 2025, 03:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது.

ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்?

ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம்

தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்?

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது.

ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன?

கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.

கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்?

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர்.

அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது.

அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது.

பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.

ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது.

இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது.

பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும்.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி

மாற்றம் கொண்டுவர என்ன காரணம்?

ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார்.

நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன?

பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும்

ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 week ago

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 06:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது.

இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன.

defending_champions_australia_2021_w_wc.

இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும்.

மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.

இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள்

செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு

அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு

அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி

அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு

அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு

அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு

அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு

முழு அட்டவணை (Full Schedule)

icc_women_s_world_cup_schedule_1.jpg

icc_women_s_world_cup_schedule_2.jpg

https://www.virakesari.lk/article/217658

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் - 18இன் கீழ் கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீராங்கனைகள் ஆதிக்கம்: கலேல்ல கலைமகள் வித்தியாயலயத்திற்கு முதலாவது பதக்கம்

1 week 2 days ago

Published By: VISHNU

13 JUN, 2025 | 12:04 AM

image

(நெவில் அன்தனி)

தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12)  18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

jeyaruban_rubika_of_vaddukoddai_jaffna_c

அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.

கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.

இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார்.

பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம்

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஐந்து புதிய சாதனைகள்

போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

https://www.virakesari.lk/article/217305

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி

1 week 6 days ago

10 JUN, 2025 | 06:04 PM

image

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.

வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார்.

இப்போட்டியின் இறுதி அங்கமாக நாளை காலை 8.30 மணிக்கு இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றில், சென். பற்றிக்ஸ் கல்லூரியும் சென். ஜோன்ஸ் கல்லூரியும், மற்றைய போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன எனவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பகல் 1 மணியளவில் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் மாலை 3 மணிக்கு இறுதிப் போட்டியும் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM_

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM.

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM_

WhatsApp_Image_2025-06-10_at_2.32.20_PM.

https://www.virakesari.lk/article/217101

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி - ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

1 week 6 days ago

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி

51 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019)

ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும்.

இந்த 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.

தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்,

எம்.எஸ். தோனி - இந்தியா

கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா

ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா

மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா

டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து

வீராங்கனைகள்:

சனா மிர்- பாகிஸ்தான்

சாரா டெய்லர்- இங்கிலாந்து.

இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, "ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள்

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ்

இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது.

2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர்.

2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி.

இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, "தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு." என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c249j903qjjo

சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்ற சாய் சுதர்சன் தனித்து நிற்பது எப்படி?

2 weeks 3 days ago

சாய் சுதர்சன், தமிழ்நாடு, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எஸ்.தினேஷ் குமார்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது.

இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார்.

எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் பிற கிரிக்கெட் உச்ச நட்சத்திரங்கள் போல பி.ஆர். ஏஜென்சி வைத்து தன் புகழை பரப்புவதில் சாய் சுதர்சன் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 2 வருடங்களில் எவ்வளவோ சாதனைகள் செய்தும் கூட அவை பேசுபொருளாக மாறாததற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கவனச்சிதறல் இல்லாமல் தன் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு இந்த மீடியா வெளிச்சமின்மை சுதர்சனுக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்றர் சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒரு பேட்டர் உண்மையான குணம் அவருடைய பேட்டிங்கில் வெளிப்பட்டுவிடும். ஒரு பேட்டர் தன் முழு திறமையையும் வெளிக்கொணர விரும்பினால், தன் இயல்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பேட்டிங்கின் அடிப்படை லட்சணம், கட்டுக்கோப்பாக இருப்பது. வாழ்க்கையை மனம்போன போக்கில் வாழும் ஒருவர் நல்ல பேட்டராக இருக்க முடியாது" என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் சைமன் ஹியூஸ்.

சாய் சுதர்சன் தன் இயல்புக்கு நேர்மையாக இருப்பதால்தான் அவருடைய ஆட்டத்தை போலவே அவருடைய பேச்சிலும் அமைதியும் வசீகரமும் ஒருசேர இழையோடுகின்றன.

ஒரு சிறந்த பேட்டருக்கான அடிப்படை என ஐந்து லட்சணங்களை கிரிக்கெட் எழுத்தாளர் மார்க் நிக்கோலஸ் வரையறுத்துள்ளார். உயர் இடது முன்கை (high left elbow), அசைவற்ற தலை (A still Head), நேரான பேட் (Gun-barrel straight bat), ஷாட் விளையாடும் போது அலைபாயாத உடல் (Body Shape), ஆதிக்கம் செலுத்தும் உடலின் இடது பாகம் (dominant left side of the body).

இவை அனைத்தும் இயல்பாகவே சாய் சுதர்சனுக்கு வாய்த்துள்ளன. கூடவே ரேஞ்ச் ஹிட்டிங் (Range Hitting) பயிற்சியின் மூலம், T20-க்கு அவசியமான வலுவையும் கூட்டிக் கொண்டார். சுதர்சனின் பேட்டிங் டெக்னிக்கை கவாஸ்கருடன் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒப்பிடுகிறார். ஆனால், கவாஸ்கர் போல சுதர்சனை ஒரு முழுமையான கிளாசிக்கல் பேட்டர் என்று சொல்லிவிட முடியாது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி அவதானிப்பது போல மைக் ஹஸ்ஸி பாணியிலான ஒரு வீரர் இவர். கட்டுக்கோப்பான டெக்னிக், கடுமையான உழைப்பு, நேர்மறையான சிந்தனை. இதுதான் சுதர்சனின் தாரக மந்திரம். அவருடைய பேட்டை உயர்த்திப் பிடிக்கும் பாணி, சில சமயம் லாராவை நினைவூட்டுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ல் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் பங்கேற்றிருந்தார்.

இந்தியாவில் திறமையான பேட்டர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், உச்சபட்ச கிரிக்கெட்டில் எல்லாரும் சாதிப்பதில்லை. பிரித்வி ஷா தொடங்கி ரஜத் படிதார் வரை நிறைய உதாரணங்களை சொல்லலாம். சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்?

ஒரு நல்ல வீரருக்கு அழகு, கிடைத்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்வது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 பேட்டர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய முதல் 3 ஆட்டங்களுக்குள் சதமோ அரைசதமோ அடித்தவர்கள். சாய் சுதர்சன் தனது அறிமுக ஒருநாள் ஆட்டத்தில் அரை சதமும் அறிமுக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சதமும் அடித்தவர்.

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலையான இடமின்றி இருந்த அவர், 2023 சீசனில் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். உள்ளூர் லிஸ்ட் ஏ, டி20 அறிமுக ஆட்டங்களில் கூட சுதர்சன் சோடை போகவில்லை என்பது அவருடைய மனத்திட்பத்துக்கு (Temperement) சான்று.

சாய் சுதர்சன் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அம்சம், அவருடைய ஃபுட் ஒர்க். கிரிக்கெட்டில் ஒருவர் சாதிப்பதற்கு நல்ல லென்த்தில் (good length) வீசப்படும் பந்துகளை விளையாடுவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வகையான பந்துகளே அதிகம் வீசப்படுகின்றன. இந்த ஐபிஎல் சீசனிலேயே ஷமி, பும்ரா போன்றவர்களின் அத்தகைய பந்துகளை சுதர்சன் அநாயசமாக எதிர்கொண்டதை பார்த்தோம்.

இதை எப்படி சுதர்சன் சாதிக்கிறார்?

ஒன்று, இறங்கிவந்து விளையாடி பவுலரின் திட்டத்தை கெடுத்து, தனக்கு வேண்டிய இடங்களில் பந்துவீச மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லையென்றால், தனக்கு இருக்கும் அற்புதமான டைமிங்கை (Timing) பயன்படுத்தி, பந்தின் பாதையை கணித்து நன்றாக உள்வாங்கி கடைசி நொடியில் ஆளில்லாத பகுதிக்கு விரட்டுகிறார்.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சனின் பலவீனங்கள்

ஒரு சிறந்த பேட்டர் சரியாக கால்களை நகர்த்தினால் மட்டும் போதாது; தலையையும் சரியாக நகர்த்த வேண்டும் என்கிறார் இங்கிலாந்து பேட்டிங் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன். குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள, இந்த தலை நகர்வு மிகவும் அவசியம். 6 அடி உயரம் என்பதால் கால்களுடன் தலையையும் முன்னகர்த்தி விளையாடும் போது சுதர்சனால் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளருக்கும் நெருக்கடி கொடுக்க முடிகிறது. தலை முன்செல்ல அதனைத் தொடர்ந்து காந்தம் போல உடலும் கால்களும் பின்னே செல்கின்றன. கோலி தன்னுடைய பேட்டிங்கில் உச்சத்தில் இருந்தபோது இதே பாணியில் தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டார்.

சாய் சுதர்சன் ஆட்டத்தில் பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது கூட சில சமயங்களில் பவுன்சர் பந்துகளுக்கு அவர் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம், பவுன்சர் வீசினால் அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று பந்துவீச்சாளர்கள் நம்பும் நிலை இல்லை.

இந்திய இடக்கை பேட்டர்கள் பவுன்சர் பந்துகளுக்கு தடுமாறுவது புதிதல்ல. கங்குலி, யுவராஜ், ரெய்னா என ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு பவுன்சரை எதிர்கொள்வதில் சுதர்சன் பலவீனமானவர் அல்ல. முடிந்தவரை மைதானத்தின் கோணங்களை பயன்படுத்தி அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி விடுகிறார். கோலிக்கும் ஆரம்ப காலத்தில் இந்த பிரச்னை இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சாய் சுதர்சனின் டெக்னிக் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் செல்லுபடியாகாது என தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கூறிருந்தார். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியாகத்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று சுதர்சன் விளையாடினார். இந்த ஐபிஎல் சீசனில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது, அந்த குறைபாடு பெரிதாக வெளிப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த பலவீனத்தை வைத்துக் கொண்டே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் அவர் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, தாறுமாறான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவர் ரன் குவித்துள்ளார். இந்தியா ஏ அணி சார்பில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட் அனுபவம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம். பவுன்சர் விளையாடுவதில் குறைபாடுள்ள பிராட்மேன்தான் 99.94 என்ற சராசரியில் ரன் குவித்தார் என்பதை எப்படி புரிந்துகொள்வது?

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆடினார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் அவ்வளவு எளிதாக தனது பேட்டிங்கில் திருப்தியடைந்து விடமாட்டார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு, "டி20 ஆட்டங்களில் தன்னுடைய ஆட்டம் இன்னும் முழுமைபெறவில்லை; இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது" என கூறியுள்ளார். உலகமே பார்த்த ஐபிஎல் தொடரில் 759 குவித்த ஒருவர் இப்படி பேசினார் என்பதை நம்ப முடிகிறதா?

சுதர்சன் மட்டுமல்ல எந்தவொரு உச்சபட்ச பேட்டரும் தங்களுடைய ஆட்டத்தில் நிறைவு பெற்றுவிட மாட்டார்கள். சச்சின், சங்ககாரா போன்றோர் கடைசி ஆட்டம் வரை தங்கள் பேட்டிங் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளவே முயன்றார்கள்.

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய் சுதர்சனிடம் உள்ள பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சம், விமர்சனங்களை அவர் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பாங்கு. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மாட்டார் என்றார்கள். கவுண்டி போட்டியில் கலந்துகொண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அடிப்படைகளை மெருகேற்றிக்கொண்டார். டி20-க்கு ஏற்ற வீரர் இல்லை என்றார்கள். ஆஸ்திரேலியாவின் பிரபல பவர் ஹிட்டிங் பயிற்சியாளர் ஷனான் யங் (Shanon young) பயிற்சியின் கீழ் தன் ஆட்டத்தின் வேகத்தை கூட்டிக்கொண்டார்.

இப்போது அவர் டெஸ்டில் தாக்குப்பிடிப்பாரா என விமர்சகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் அதற்கும் தனது பேட்டால் பதில் கொடுப்பார் என நம்புவோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j5yl4dr68o

UK national league football match வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் வீரர் திரு விமல் அவர்கள் TAMIL EELAM JUSTICE என்ற பாதாதையை 52 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் wembley மைதானத்தில் தூக்கிப் பிடித்தவாறு வலம் வந்தது அனைத்து பார்வையாளர்களின் கவனத்தையும

3 weeks 1 day ago

Whats-App-Image-2025-06-01-at-6-13-22-PM

Whats-App-Image-2025-06-01-at-6-13-22-PM

சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்

3 weeks 4 days ago

26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர்.

இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி  வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதேபோல், நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதேபோல், இந்தப் போட்டியில் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அவர் கொழும்பில் வசிப்பவர், அதே பகுதியில் சமையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர்கள் மூவரும் முதல் முறையாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுவது சிறப்பு.

மூவரும்  ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர், மேலும் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவும் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

Tamilmirror Online || சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

3 weeks 5 days ago

New-Project-315.jpg?resize=750%2C375&ssl

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார்.

பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

https://athavannews.com/2025/1433587

தோனி ஐபிஎல் ஓய்வை அறிவிக்க தடையாக இருப்பது என்ன? - 2 முக்கிய காரணங்கள்

4 weeks 1 day ago

தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தினேஷ் அகிரா

  • பதவி, கிரிக்கெட் நிபுணர்

  • 25 மே 2025, 12:03 GMT

தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும்.

தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா?

தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகளின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்.

தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில்.

இந்த முடிவுக்கு வந்து சேர்வதற்கு வழக்கமாக தோனி எடுத்துக்கொள்ளும் காலம் 3–4 ஆண்டுகள்.

2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல் மண்ணில் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வியது. ஆனால், தோனி அவசரப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2015–ல், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் யாரும் எதிர்பாராத சமயத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனி ஐபில் களத்தை விட்டு விலகாததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார் தோனி

'ஓய்வுக்கு பின்னான கவலை'

2015 உலகக் கோப்பையின் போதே தோனியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன.

ஆனால் 2019 உலகக் கோப்பை முடிந்த பின்னர் சாவகாசமாக சில மாதம் கழித்து ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அவர் அறிவித்தார்.

தோனியின் முந்தைய ஓய்வறிப்புகளின் போது இப்போது போல ரசிகர்கள் காத்துக்கிடக்கவில்லை. களத்தை விட்டு விலக அவர் முடிவெடுக்கும் போதெல்லாம், அது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தபோதும், அவர்கள் உண்மையில் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்தமுறையோ தோனி எப்போதுதான் ஓய்வுபெறுவாரோ என்று கேட்டு கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் சோர்ந்து போயுள்ளனர். ஏன் தோனி களத்தை காலிசெய்ய மறுக்கிறார்?

கோபத்தில், விரக்தியில் ரசிகர்கள் சிலர் விமர்சிப்பதை போல, இதை வெறுமனே சுயநலம் என்று மட்டும் சுருக்கிட முடியாது.

தோனி மட்டுமல்ல தான் விரும்பிய துறையில் உச்சத்தை தொட்ட எவர் ஒருவரும் அந்த களத்தை விட்டு அவ்வளவு எளிதாக விலக மாட்டார்கள்.

தன்னுடைய ஆளுமையை செதுக்கிய கிரிக்கெட்டை விட்டு முற்றும் முழுவதுமாக விலகுவது என்பது தோனிக்கு கடினமான முடிவாக இருக்கக் கூடும்.

ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையே, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை மன உளைச்சலுக்கு தள்ளுகிறது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் டேவிட் ஃபிரித். சைலன்ஸ் ஆஃப் தி ஹார்ட் : கிரிக்கெட் சூசைட்ஸ் (Silence Of The Heart: Cricket Suicides) என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தோனி ஐபில் களத்தை விட்டு விலகாததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை

வணிக நோக்கமா?

தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடைய பெருவிருப்பத்துடன் சேர்ந்து சிஎஸ்கே நிர்வாகத்தின் ஆதரவும் அதற்கு பின்னால் ஒரு பெரும் வணிக நோக்கம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இதை வெறுமனே கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்துகொண்டு விட முடியாது.

ரசிகர்களின் ஆதரவும் அபிமானமும் இருந்ததால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இத்தனை ஆண்டுகள் தோனியால் விளையாட முடிந்தது. பிறகு இப்போது ஏன் ரசிகர்கள் தோனியை ஓய்வுபெற சொல்கிறார்கள்?

கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். கிரிக்கெட்டின் பாணி, கிரிக்கெட் வீரர்களின் சிந்தனை முறைகளில் நிகழும் மாற்றம் என இதனை புரிந்துகொள்ளலாம்.

தலைமுறை மாற்றம் என்பது மிகவும் நுட்பமாக நிகழும். ரஹ்மான் யுகம் முடிந்து அனிருத் யுகம் தொடங்கியதை போல. சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் திடீரென சரிவை சந்திப்பதை பார்க்கிறோம். தொடர்ச்சியாக அவர்களுடைய படங்கள் தோல்வியை சந்திக்க தொடங்கும். இதற்கும், அவர்களுடைய பாணியில் இருந்து அந்த படங்கள் பெரிதாக விலகியிருக்காது. அதே பாணி திரைப்படங்கள் தான், அதே ரசிகர்கள் தான். ஆனால், அப்போது ரசித்தவர்கள் ஏன் இப்போது ரசிக்கவில்லை?

தோனி ஐபில் களத்தை விட்டு விலகாததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

ஆகச்சிறந்த ஐபிஎல் கேப்டன்

2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம்.

இப்போது நவீன கிரிக்கெட், குறிப்பாக T20 கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் நிதானித்து விளையாடி, பிறகு மிடில் ஓவர்களில் வேகத்தை கூட்டி, இறுதிக்கட்டத்தில் மின்னல் வேகத்தில் முடிப்பது தோனியின் யுகம்.

ஆனால், இன்று மின்னல் வேகத்தில் தொடங்கி வேகத்தை மட்டுப்படுத்தாமல் அதே வேகத்தில் முடிப்பதாக புதுயுக கிரிக்கெட் உருவெடுத்துள்ளது.

தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவின் அவதானிப்பு கவனிக்கத்தக்கது.

''தோனி ரிஸ்க் எடுப்பவர் அல்ல. ரிஸ்க்கள் குறித்து மதிப்பிடுபவர். ஆனால், இன்று மதிப்பீடு செய்வதற்கு எல்லாம் நேரமில்லை. ரிஸ்க் எடுக்காமல் விளையாடுவதுதான், இன்று ரிஸ்க் என்பதாக மாறிவிட்டது'' என்கிறார் சித்தார்த் மோங்கா.

இந்த தலைமுறை இடைவெளிக்கு சரியான உதாரணமாக சிஎஸ்கேவுக்கும் மற்ற அணிகளுக்கும் ஆட்டத்தை அணுகுவதில் உள்ள வித்தியாசத்தை சொல்லலாம்.

தோனியையும் சிஎஸ்கேவையும் பிரிந்துப் பார்க்க முடியாது. சிஎஸ்கேவின் ஆட்ட பாணி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் ஸ்டீபன் ஃபிளமிங் உடன் சேர்ந்து தோனி தான் வரையறுத்தார்.

அந்தப் பாணி காலாவதி ஆனதை உணராததால் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் அனுபவம் என்ற பெயரில் வயதான வீரர்களை எடுத்து சொதப்பியது. பாதி போட்டித் தொடர் முடிந்த பிறகுதான், தனது தவறை உணர்ந்து ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரவிஸ் என இளம் வீரர்கள் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது.

சிஎஸ்கேவின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

தோனியின் ஓய்வு குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கரின் விமர்சனம்.

அணியில் தோனியின் இருப்பே சிஎஸ்கே அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்கிறார் பாங்கர்.

ஆகச்சிறந்த ஐபிஎல் கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம்.

களத்தில் தோனிதான் தலைவன்

தோனி கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, களத்தில் அவர் இருக்கும்போது அவர்தான் தலைவன். அவர் கண்ணசைவில் தான் எல்லாம் நடக்கும். அப்படி இருக்கையில், எப்படி ஒரு கேப்டனால் தனக்கான அணியை கட்டமைக்க முடியும், தனக்கான ஒரு பாணியை புதிதாக வரித்துக்கொள்ள முடியும்? தோனியின் நிழலில் இருந்ததால்தான் ருதுராஜ் கெய்க்வாட்டால் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால், தோனியோ அணியின் நலனை கருத்தில் கொண்டுதான் தான் தொடர்ந்து விளையாடி வருகிறேன் என நம்புகிறார். சரியான நேரத்தில் மாற்றம் (Transition) நிகழ வேண்டும், அப்போதுதான் தான் இல்லாத போதும் அணி வருங்காலத்திலும் ஆதிக்கத்தை தக்கவைக்க முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனால், இந்த சிந்தனையும் கூட இப்போது எல்லாம் காலாவதியாகி வருவதை பார்க்கலாம். இந்த சீசனில் புதிய தலைமையின் கீழ் களமிறங்கிய பஞ்சாப் அணி, கடந்த காலத்தின் எந்தவொரு சுவடும் இன்றி புதிய பாணியில் விளையாடி அசத்துவதை என்ன சொல்வது?

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. சிஎஸ்கேவுக்காக களமிறங்கிதான் அவர் அணியின் முகமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crk2jdzld7po

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

4 weeks 2 days ago

சுப்மன் கில் கேப்டன்: இந்திய அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்?

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 24 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள் இனி இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக பல இளம் தலைமுறை வீரர்களுக்கான கதவு இந்திய அணியில் திறந்துள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது

இதன்படி, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் வரிசையில் சுப்மன் கில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக மன்சூர் அலிகான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் இளம் வயதில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளனர்.

பிரிட்டனில் டெஸ்ட் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அதேநேரம் சவாலானதும் கூட. சிறந்த பேட்டர், பந்துவீச்சாளரின் திறமை பிரிட்டன் மண்ணில் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும், உலகரங்கில் உயர்த்தப்படுவார்.

இங்கிலாந்து தொடரிலிருந்துதான் கங்குலி, திராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆதலால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் முத்திரை பதித்துவிட்டால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உலகளவில் கவனிக்கப்படும்.

வாய்ப்பும், சவாலும் ஒன்றாகக் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கில் தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் சகாப்தம் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் 2025-27ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியும் இதிலிருந்து தொடங்குகிறது.

ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர். அபிமன்யு ஈஸ்வரன் பலமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை, இந்த முறையும் அதே நிலையா என்பது தொடரில் தெரிந்துவிடும்.

நீண்டஇடைவெளிக்குப்பின் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளனர்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து சுழற்பந்துவீச ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குஜராத் அணியில் சாய் சுதர்சனின் பங்களிப்பு அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது

18 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி

பிரிட்டனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்கில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எச்ஜ்பாஸ்டனிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ம்தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், ஜூலை 23ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் 4வது டெஸ்ட் போட்டியும், 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது.

கடைசியாக பட்டோடி டிராபி டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்று வென்றது. அதன்பின், கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இளம் கேப்டன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புதான்.

இந்திய அணி குறித்த பார்வை

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்

பட்டோடி டிராபி டெஸ்ட் தொடருக்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இன்று (மே24) அறிவித்தனர்.

அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு 30 வயதுக்குள் இருக்கும் வீரர்களுக்கே அதிகமான முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, கருண் நாயர், பும்ரா மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள், மற்ற வகையில் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், கருண்நாயர், துருவ் ஜூரெல் ஆகியோர் உள்ளனர். இதில் தொடக்க வீரருக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.

கோலியின் இடத்தில் யார்?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பு

டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சாய் சுதர்சன் பயன்படுத்தப்படலாம் என்றாலும், சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை சாய் சுதர்சன் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு இருந்தால், விராட் கோலியின் 4வது இடத்தில் கருண் நாயர் அல்லது கே.எல்.ராகுல் களமிறங்கலாம்.

ரிஷப் பண்டுக்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5 வேகப்பந்து வீச்சாளர்கள்

பிரிட்டன் மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும், இந்திய அணி டெஸ்ட் ஆடும்போது அங்கு குளிர்காலம் இருக்கும் என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளி்க்கப்பட்டுள்ளது.

பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் ஆகியோரும், ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அளவு உடல்நிலை தகுதியாக இல்லை என்பதால், அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்த சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா, தேவ்தத்படிக்கல், தனுஷ் கோட்டியான் ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்

சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பண்ட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுர்சன், அபமன்யு ஈஸ்வரன், கருண் நாயகர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங்.

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக வீரர் இருவருக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் அற்புதமான ஆட்டம் அவருக்கான இடத்தை டெஸ்ட் அணியில் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் கன்சிஸ்டென்சி எனப் பெயரெடுத்த சுதர்சன் இங்கிலாந்து தொடரில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அபிமன்யு ஈஸ்வரனின் இவரின் தந்தை தமிழர், தாய் பஞ்சாபி என்றாலும், அவர் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார்.

கில்லுக்கு புதிய அனுபவம்

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இந்திய ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியை இதற்கு முன் வழிநடத்தியது இல்லை.

ஆனால் 2024ம் ஆண்டு ஜிம்பாப்பே சென்ற இந்திய T20 அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்து வழி நடத்தியிருக்கிறார்.

2020-21 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில்தான் டெஸ்ட் போட்டியில் சுப்மன் அறிமுகமாகினார். இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,893 ரன்கள் சேர்த்து 35 சராசரி வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் கில் 42 சராசரியும், வெளிநாடுகளில் 27 சராசரியும் வைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இதுவரை 2021-24 வரை 10 போட்டிகளில் ஆடி 592 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் பிரிட்டன் மண்ணில் 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய கில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் அதிகமான ரன்கள் குவித்த கில், வெளிநாடுகளில் பெரிதாக இதுவரை ரன்கள் குவித்ததில்லை.

8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர்

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , கருண் நாயர்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருண் நாயர் கடைசியாக 2017ம் ஆண்டு மார்ச் 25 முதல் 28ம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் இப்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர் முச்சதம்(303) அடித்ததுதான் சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர்த்து உள்நாட்டுப் போட்டிகளில் முதல்தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவ வீரர் என்பதாலும், பிரிட்டனில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதாலும் சமீபத்திய உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ், ஷமி ஏன் இல்லை

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸ், ஷமி பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் "கணுக்கால் காயத்திலிருந்து உடல்நலன் தேறி ஷமி இப்போதுதான் வந்துள்ளார். ஐபிஎல் ஆடியபின் மீண்டும் லேசாக வலிவரத் தொடங்கியுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நிலையில் உடல்நிலை இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு கூடுதலாக ஓய்வு அளிக்கப்பட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த வீரர். ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக ஸ்ரேயாஸ் ஆடியுள்ளார். இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறதா?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து அகர்கர் கூறுகையில் " வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பும்ராவால் 5போட்டிகளிலும் பங்கேற்க முடியாது, அவரின் வேலைப்பளுவை கவனத்தில் வைத்திருக்கிறோம். அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர், அதிலும் பிரிட்டன் மண்ணில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். கவுண்டி அணியிலும் அர்ஷ்தீப் ஆடியுள்ளார்.

நிதிஷ், ஷர்துல் இருவரும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். சில நேரத்தில் கடைசிவரை பேட்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். வேகப்பந்துவீச்சில் வெரைட்டி தேவை என்பதை கருதி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

சுப்மன் கில் எழுச்சி எப்படி?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலியுடன் சுப்மன் கில்

சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அகர்கர் பேசுகையில் " ரோஹித் சர்மாவுக்குப்பின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க பல வாய்ப்புகளை கடந்த ஓர் ஆண்டாக பரிசீலித்தோம், அலசினோம். வீரர்களிடமிருந்தும் ஓய்வறையில் இருந்து கருத்துக்களைக் கேட்டோம். அதில் சுப்மன் கில் குறித்து நல்லவிதமான கருத்துக்கள் வந்தன. இளம் வீரர், தொடர்ந்து தன்னை வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டைப் போல் கில் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு இதைவிட சிறந்தவராக இருப்பார் என நம்புகிறோம்.

ஏதோ ஒரு சில டூருக்காக மட்டும் கேப்டன்களை தேர்வு செய்யக்கூடாது. கடந்த ஆண்டிலிருந்து கில் ஆட்டம் வளர்ந்து வருகிறது. நிச்சயமாக சிறந்த கேப்டனாக கில் வருவார். இங்கிலாந்து தொடரில் ஒவ்வொருவரின் திறமையும் பரிசோதிக்கப்படும். ஆஸ்திரேலியத் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். ரோஹித், கோலி இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயமாக சவாலாக இந்தத் தொடர் அமையும். பேட்டிங்கைப் பொருத்தவரை கவலை இல்லை, அனுபவம்தான் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கும்.

ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு நிச்சயமாக ரிஷப் பண்ட் துணையாக இருப்பார். இரு இளம் வீரர்களுமே அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd7gy40l3pdo

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!

1 month ago

cr-20250421tn6805f6dbb3b05.jpg?resize=60

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!

ஆசிய கிரிக்கெட் சங்கம்  சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில்  அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும்  மின்னஞ்சல் மூலம் BCCI  தெரிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் சங்கத்  தலைவராக பாக்கிஸ்தான் அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையிலேயே இந்திய கிரிக்கெட் சபை இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த வருடம்  இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பைத்  தொடரில் இந்தியா சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432262

ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!

1 month ago

New-Project-71-1.jpg?resize=600%2C300&ss

ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர்.

3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதேவேளை, இந்த தொடரில் குகேஷ் 6 வது இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432137

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

1 month 1 week ago

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப் போட்டியை ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது

14 MAY, 2025 | 01:40 PM

image

(நெவில் அன்தனி)

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்குகின்ற நிலையில் தனது தடையை மறந்துவிட்டு புதுமனிதனாக இறுதிப் போட்டியை கெகிசோ ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது.

தடைசெய்யப்பட்பட்ட ஊக்கமருந்து அல்லது போதைப் பொருள் பாவித்த குற்றத்தின்பேரில் ரபாடாவுக்கு தடைவிதிககப்பட்டது. இதனை அடுத்து அவரது நல்வாழ்வு குறித்து கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) தனது கரிசனையை வெளியிட்டது.

1405_kagiso_rabada...png

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துதை அல்லது பொதைப் பொருளை ரபாடா பாவித்துள்ளார் என்பது பரிசோதனையில் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஒரு மாத கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டது. இந்த விடயத்தை அறிந்த உடனேயே ரபாடாவின் நல்வாழ்வு குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் அக்கறை செலுத்தத் தொடங்கியது.

ரபாடா தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து அல்லது போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுபவர் அல்லர் என்பதை பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் டெம்பா பவுமா, தேசிய அணி மற்றும் உயர் செயல்திறன் நிலைய பணிப்பாளர் எனொக் நிக்வே ஆகியோர் புரிந்து கொண்டு ரபாடா குறித்து திருப்தி அடைந்துள்ளனர்.

இந்தத் தடையைத் தொடர்ந்து நல்வாழ்வு தொடர்பாக நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ள ரபாடா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்.

1405_kagiso_rabada.png

மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்கும் டேர்பன் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான SA20 போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் திகதி ரபாடா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்திருப்பது கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் அவர் என்னவகையான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளைப் பாவித்தார் என்பதை ஜூன் மாதம் 4ஆம் திகதி உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவனை இல்லாத விளையாட்டுத்துறைக்கான தென் ஆபிரிக்க நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

அதாவது ரபாடாவின் மேன்முறையீட்டுக்கான 30 தின கால அவகாசம் முடிவடைந்த பின்னரே அந்த அறிவிப்பு விடுக்கப்படவள்ளது.

அந்த நிறுவனத்தின் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான விதிகளின் பிரகாரம் கெனபிஸ், கொக்கெய்ன், ஹெரொய்ன் அல்லது மெய்மறந்த மகிழ்ச்சிக்கான ஊக்கமருந்து ஆகிய நான்கில் ஒன்றை ரபாடா பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ரபாடா ஒரே ஒரு தடவை மாத்திரம் பரவசம் அடைவதற்காக அவற்றில் ஒன்றைப் பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளை ரபாடா பாவித்தார் என்ற தகவல் வெளியானது முதல் அவருடன் நல்வாழ்வு குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வந்ததாக ஊடக சந்திப்பில் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின்போதே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தென் ஆபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு  முதல் தடவையாக   முன்னேறியுள்ள தென் ஆபிரிக்கா சந்திக்கவுள்ளது.

இறுதிப் போட்டி லண்டன், லோர்ட்ஸ் விளையாட்ரங்கில் ஜூன் மாதம் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களில் போட்டியில் முடிவு கிட்டாவிட்டால் 16ஆம் திகதி போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.

இறுதிப் போட்டிக்கான தென் ஆபிரிக்க கிரிக்கெட் குழாத்தில் ரபாடா தலைமையிலான 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் மூவர் இறுதிப் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆபிரிக்க குழாம்

டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கேஷவ் மஹராஜ், மார்க்கோ ஜென்சன், கோர்பின் பொஷ், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன்.

1405_sa_squad_for_wtc_final.png

https://www.virakesari.lk/article/214689

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை

1 month 1 week ago

Published By: VISHNU

12 MAY, 2025 | 07:17 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர்.

1000262555.jpg

கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான  வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும்  வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். 

1000262556.jpg

ஆண்கள் பிரிவில்

1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம்

4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம்

2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம்

2தங்கம் 1வெள்ளி  2வெண்கலம் 

3ஆம் இடம் வவுனியா மாவட்டம்.

1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம்

4ஆவது மன்னார் மாவட்டம்.

1தங்கம் 1வெண்கலம். 

பெண்கள் பிரிவில் 

1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம். 

5தங்கம் ,4வெள்ளி 3வெண்கலம். 

2ஆம் இடம் வவுனியா மாவட்டம். 

1தங்கம் 1வெள்ளி 1வெண்கலம். 

3ஆம் கிளிநொச்சி மாவட்டம். 

3,வெண்கலம்.

முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண் வீர வீராங்கனைக்கான யூடோ பயிற்சியினை வரலாற்று ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்யுத்த யூடோ பயிற்றுவிப்பாளரான P. ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.

1000262553.jpg

1000262552.jpg

1000262547.jpg

1000262550.jpg

1000262549.jpg

1000262546.jpg

1000262548.jpg

1000262545.jpg

https://www.virakesari.lk/article/214556

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்

1 month 2 weeks ago

விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு!

Published By: DIGITAL DESK 2

10 MAY, 2025 | 11:24 AM

image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லையென அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு அணியின் தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக விராட் கோலி இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை அடித்தமை ஒரு இன்னிங்சில் அதிகபட்ச விராட் கோலியின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

https://www.virakesari.lk/article/214345

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !

1 month 2 weeks ago

IPL-2021-1.jpg?resize=750%2C375&ssl=1

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில்
குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒரு வார காலத்துக்குப் பின்னர் இந்தியாவினால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முடியாவிட்டால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் குறித்த போட்டிகளை தங்களால் நடத்த முடியும் என ரிச்சட் கோல்ட் பரிந்துரை முன்வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தும் சாத்தியம் நிலவுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1431519

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா விடைபெற்றார்

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

08 MAY, 2025 | 12:16 PM

image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வுபெறுவதாக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, தனது இன்டக்ராம் கணக்கில் பதவிட்டுள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை (07) இரவு பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.  

அவரது இந்தத் தீர்மானம் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.

அவுஸ்திரேலியாவுக்கான டெஸ்ட் தொடர் விஜயத்தில் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். 

எனினும் அந்தத் தொடர் 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தோல்வியில் முடிவடைந்து நான்கு மாதங்கள் கழித்தே ரோஹித் ஷர்மா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

'அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது நாட்டை வெள்ளை அங்கியுடன் பிரதிநிதித்துவம் செய்வது பெருங் கௌரவமாகும். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறுகிறேன்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவேன்' என இன்டக்ராமில் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

போடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் ரோஹித் ஷர்மா, கடைசிப் போட்டியிலிருந்து தானாகவே விலகிக்கொண்டிருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற சூட்டோடு சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்திருந்தார்.

2023 ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு தலைமை வகித்த ரோஹித் ஷர்மா, இந்த வருடம் பாகிஸ்தானினும் துபாயிலும் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சம்பியனாக வழிநடத்தி இருந்தார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ள ரோஹித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளார்.

ஆனால், ஆபிரிக்கக் கண்டத்தில் 2027இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் வரை அவரால் தொடர முடியுமா என்பது சந்தேகமே.

இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணித் தலைவர் பதவியை ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்க தெரிவாளர்கள் விரும்பவில்லை என்ற தகவல் புதன்கிழமை மாலை கசிய ஆரம்பித்தது.

இதனை அடுத்தே அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 2013இல் அறிமுகமான ரோஹித் ஷர்மா, இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4301 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். அவரது சராசரி 40.6 ஆகும்.

தனது அறிமுக டெஸ்ட் தொடரில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக 288 ஓட்டங்களை மொத்தமாக குவித்து துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் டெஸ்ட் அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரோஹித் ஷர்மா கடுமையாக போராட வேண்டி இருந்தது.

எனினும் 2019இல் ஆரம்ப வீரர் ஸ்தானத்தை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ரோஹித் ஷர்மா அதன் பின்னர் அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

2021, 2023 ஆகிய வருடங்களில் நடைபெற்ற இரண்டு ஐசிசி டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய ரோஹித் ஷர்மா, அவுஸ்திரேலியாவை அந்த சொந்த மண்ணில் 2021இல் இந்தியா ஈட்டிய வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றியிலும் பங்களிப்பு செய்திருந்தார்.

4.jpg

6.jpg

5.jpg

7.jpg

8..png

 9.png

https://www.virakesari.lk/article/214177

Checked
Tue, 06/24/2025 - 07:05
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed