சமூகச் சாளரம்

பெண்கள் குடிப்பதை இயல்பாக்கம் செய்வது

1 day 21 hours ago

 

AVvXsEgtXKjQkO-eFe3SNEMFF0dSEDWeLfNY3DYOIQVBdtdE2XkXIIObWt63S9jqw7cLa6kG1ZAQJW1xb41cbx6tae6U1iosf-v8heK2A72wxapmuO2rCKxEZO0gBsUHKwpHvzqQCsmYGJf2hTNOJOZ4fHENX1Wr0uig9m4mrqIE1UiNFxb-yVpr8nC9NvDk8Q=w400-h229

 

AVvXsEhzAs6Iz5dmOLiTLPtVL4445ZlzB_iyhBkoQE2Ce6pr_qIjy8KN7YyIXCUiYjkmTKZ3_zF9DN1Id3LyBUUao7frqVt0pZp0RS2bhnMaLbybl4oT1sisxNqGXrugBMpsDz2MAMi60PSvX68bf81qKGCDcYR62GIrRIJiwYygo3T4zMzxKG9hP_6CFGhkUg=w400-h158
 
 

இன்றைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள், சிறுமிகள் குடிப்பது, புகைப்பது, போதை மருந்தை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. அங்கங்கே குடித்துவிட்டு சாலையை மறித்து தகராறு பண்ணும், சாலை விபத்தை ஏற்படுத்தும், போதை மருந்தை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தற்கொலை முயற்சி பண்ணும் பெண்களைப் பற்றின செய்திகளைப் பார்க்கிறோம். அனேகமாக எல்லா கார்ப்பரேட் ஆசிரமங்களுக்குள்ளும் போதை மருந்து பழக்கத்தில் சிக்கிய ஏகப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இச்செய்தியும் நமக்குத் தெரியும். சாலை முனையில் நின்று கப்பு கப்பென்று சிகரெட்டை ஊதித்தள்ளும் சிறுமிகளை நான் பெங்களூரில் பரவலாகப் பார்க்கிறேன். பெங்களூரில் உள்ள மதுக்கடைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். நான் சந்திக்கும் இளம்பெண்களுக்கு பாதி பேர் பக்கத்தில் வந்தாலே சிகரெட் நெடி அடிக்கிறது. சென்னையிலும் பப்களில் இளம்பெண்கள் குடித்துவிட்டு ஆடுவதில்லையா? வீட்டில் வைத்து குடிக்கும் பெண்கள் இல்லையா? போதை மீட்பு மையம் ஒன்றிற்கு ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சென்றிருந்த போது பாதிக்குப் பாதி இளம்பெண்களைக் கண்டேன். (போதை மருந்து பழக்கமானது குடியுடன் அல்லது குடிக்கு அடுத்தபடியாகவே ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.) ஆனால் இதைப் பற்றின விவாதங்களை நீங்கள் டிவி, அச்சு ஊடகங்கள் எங்குமே காண முடியாது. இதைப் பேசினாலே நாம் பிற்போக்காளர் என முத்திரை குத்தப்பட வாய்ப்பதிகம். ஒதுங்கி நின்று இப்பெண்களைப் பார்த்து “பொம்பளைப் பிள்ளையா இருந்தும் எப்படி பப் அடிக்குது?” என பொருமி விட்டு அதில் தலையிடாமல் போவதே நம்மூர் வழக்கம். இந்த பொதுமக்களின் ஒரு பகுதியாகவே நமது எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் வருகிறார்கள். ஆக ஊடகங்களில் இருந்து பொதுமக்கள் வரை பெண் போதையாளர்களை கண்டுகொள்ளாமல் விட வேண்டும், ஆண் குடித்துவிட்டு சலம்பிக் கொண்டு போனால் அவனை குடிகாரன் என கேவலமாகப் பேச வேண்டும் என்பதே நடைமுறையாக உள்ளது. ஏன் இந்த தயக்கம்?  

யோசித்துப் பாருங்கள் - குடிப்பது, போதை மருந்தை பயன்படுத்துவதற்கும் முற்போக்கு சிந்தனைக்கும் என்ன சம்மந்தம்? இதைப் பேசினால் நவீன பெண்கள் சமூக அவமதிப்பை சந்திப்பார்கள் என்றால் குடிக்காமல் இருப்பது, போதை மருந்துகளைத் தவிர்ப்பது அப்பெண்களுக்குத் நலம் பயக்கும் தானே? ஆணுக்கு பாதகமாக இருக்கும் ஒரு பழக்கம் பெண்ணுக்கு மட்டும் ஏன் சுதந்திரமாக, சமத்துவமாக, முன்னேற்றமாக, முற்போக்காக பார்க்கப்படுகிறது? நாம் இந்த பாசாங்கைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

 

ஊடகங்களுக்கு முதலில் வருகிறேன். அண்மையில் ஒரு பத்திரிகையாளர் என்னை குடும்பநல நீதிமன்ற விவகாரங்களைப் பற்றி பேட்டி எடுத்தார். அவர் அப்போது தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் அருள் துமிலனிடம் பேட்டி எடுத்து அதை ஒரு வெகுஜன பத்திரிகையில் பிரசுரிக்க கொண்டு சென்ற போது அதைப் போட முடியாது என மறுத்துவிட்டார்கள் என்பதை சொன்னார். “ஏதாவது பெண்கள் பிரச்சினைன்னா எழுதி எடுத்து வாங்க, போடலாம். ஆம்பளைங்க கவலைகளை எல்லாம் போட முடியாதுங்க.” என்று எடிட்டர் சொல்லியிருக்கிறார். நான் அவரிடம் சொன்னேன், “நீங்கள் அதை இலக்கிய, இடைநிலை இதழ்களில் கூட போட முடியாதுங்க. வணிக இதழ்களுக்காவது வணிக நோக்கம் இருக்கும், ஆனால் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களை நடத்துவதும் நவமுதலாளித்துவ சிந்தனை தானே?  அதனாலே அவர்களும் இது பெண்களுக்கு எதிரான சிந்தனை என்று கூறி புறக்கணித்துவிடுவார்கள். ஆண்களைப் பற்றி பேசினாலே அது பெண்களுக்கு எதிரானதாக எப்படி ஆகும் என யோசிக்க மாட்டார்கள்.” அண்மையில் ஒரு டிவி விவாத நிகழ்ச்சி இயக்குநரிடமும் இதைப் பற்றி விசாரித்த போது தமது நிறுவனத்தின் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நிகழ்ச்சியை எடுக்க வேண்டி இருக்கிறது, அதில் ஒரு முக்கிய விதி பெண்களை விமர்சிக்கும் நோக்கில் எதையும் நிகழ்ச்சியில் பேசக் கூடாது என்பது என்றார். பேஸ்புக்கில் கூட நான் இதை பிரசுரித்தால் நான்கு பெண்கள் போய் ரிப்போர்ட் அடித்தால் அதைத் தூக்கிவிட்டு என்னையும் தடை செய்துவிடுவார்கள். அட ஏன் இப்படி? நவமுதலாளிகள் ஏன் இவ்வளவு தீவிர ‘பெண்ணியவாதிகளாக’ இருக்கிறார்கள்? சந்தை பொருளாதாரம் தான் காரணம்.

 

இன்று பெண்கள் நவதாராளவாத சந்தையின் பிரதான வாடிக்கையாளர்களாக மாறி வருகிறார்கள். ஆண்கள் நீண்ட காலமாகவே இருக்கிறார்கள், ஆனால் பெண்கள் புது வரவு. அதனால் அவர்களை விமர்சித்து நுகர்வில் இருந்தோ, சந்தையில் பங்கேற்பாளர்களாகவோ செயல்படும் அவர்களை ஊக்கமழிக்க கூடாது என நவமுதலாளிகள் நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த வணிக நோக்கமே இன்று பால் சமத்துவமின்மையாக, ஆண்கள் மீதான தொடர் அவமதிப்பாக மாறியிருக்கிறது. 

 

போதைப் பழக்கத்தை எடுத்துக் கொண்டால் பெண்கள் எந்தளவுக்கு அதிக அளவில் குடிகாரர்கள் ஆகிறார்களோ அந்தளவுக்கு மது உற்பத்தியாளர்கள், கடைகாரர்கள், பப்கள், இந்த அமைப்புகளை சார்ந்திருக்கும் உணவகங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை இடங்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், கார் நிறுவனங்கள் என பலரும் இரட்டிப்பு லாபமடைவார்கள் (பெண்கள் வெளியே வந்து சமூகமாக்கல் செய்தாலே இந்த பண்டங்கள் அதிகமாக விற்பனையாகும், சமூகமாக்கலுக்கு மது போதை ஒரு முக்கிய ஊக்கி.). ஆக நவமுதலாளிகளின் இன்றைய அடிப்படையான தேவை பெண்கள் குடிப்பதை, புகைப்பதை இயல்பாக்குவதே. நவமுதலீட்டிய லாப நோக்கு சிந்தனையே நமது தமிழ் சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் நுண்ணுணர்வாகவும் உருமாறுவதால் அவர்களும் இந்த இயல்பாக்கம் அவசியம் என நினைக்கிறார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக முதலாளிகள் என பலரும் இந்த இயல்பாக்கத்துக்காக வேலை செய்தாக வேண்டும் என மறைமுக அழுத்தம் உண்டு. ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் முடியாது. அதனால் அதற்கு பெண்ணுரிமை, பெண் சமத்துவம், பெண்கள் எல்லாரும் பாவம், குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அவர்களை வைத்து இதை பொருட்டாக்கிப் பேசலாகாது, இது ஒரு பிரச்சினையே இல்லை எனப் பேசுவார்கள். ஆனால் இவர்களுடைய சொந்த மகளோ தங்கையோ போதை அடிமையானால் என்ன செய்வதென தத்தளித்துவிட்டு அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். போதைப் பழக்கம் ஆணைப் போன்றே பெண்ணையும் சிறுகசிறுக அழித்து செயல்படத் தகுதியற்றவர்களாக ஆக்கும். ஆண்களை விட சற்று கூடுதலாகவே இது பெண்களை பாதிக்கும் என்கிறது அறிவியல். ஆனால் இது நவமுதலீட்டிய சந்தையின் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் நாம் இதைப் பேசுவதே பாவம் என நினைக்கத் தலைப்படுகிறோம்.

 

என்னுடைய கோரிக்கை எல்லாமே பெண் குடிக்கிறாள், பெண் புகைக்கிறாள் என்பதாலே அதை இயல்பாக்காமல் இருக்க வேண்டும். அதைப் போலவே அதை மிகைப்படுத்தி வானுக்கும் பூமிக்குமாக குதிக்காமலும் இருக்க வேண்டும். இதை ஒரு சமூகப்பிரச்சினையாக, உடல்நல சீர்கேடாக மட்டுமே பேச வேண்டும். முக்கியமாக பால் சமத்துவத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும். 

மறுக்க முடியாத, வேதனை தரும் உண்மை.

1 week 3 days ago
May be an image of 1 person and text
 
📱 இன்றைய தலைமுறையினருக்கு
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
📱 படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...
📱 யாருக்குமே மரியாதை தரக்கூடாது..
📱 தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...
📱 எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
📱 சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..
📱 பெண்கள் மீது மரியாதையே இல்லை..
📱 ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...
📱 வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..
📱 ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..
📱 ஒரு வரி கூட வாசிப்பதில்லை..
📱 தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...
📱 ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..
📱 வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..
📱 பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..
📱 சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..
📱 எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..
📱 ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....
📱 இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
📱 பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
📱 பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..
📱 தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...
📱 அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....
📱 இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
📱 பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
📱 இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
📱 மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.
📱 காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
📱 கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....
 
🌹*இவை மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை*..........🌹
 

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

2 weeks 3 days ago
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மார்ச் 2023, 02:50 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன.

அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்டும் ஏதேனும் அவர்கள் கண்டிக்கும் வகையிலான தவறைச் செய்யும்போது அதிலிருந்து தப்பிக்க இன்னும் சாமர்த்தியமாக, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் எப்படி பொய் சொல்லலாம் என்பதைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளேன்.

அந்தப் பொய்களால் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதில் வெற்றியும் கண்டுள்ளேன். இதை நம்மில் கிட்டத்தட்ட அனைவருமே செய்திருப்போம். இப்படி பெற்றோரிடம், ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் என்று குழந்தைகள் பொய் சொல்வதை பார்த்திருப்போம்.

அத்தகைய பொய்களைச் சொல்ல குழந்தைகள் கற்றுக்கொள்வதே பெற்றோரிடம் இருந்துதான் என்றும் அந்தப் பழக்கம் தொடரவும் பெற்றோரே காரணம் என்றும் மனநல மருத்துவர் சிவபாலன் கூறியபோது ஆச்சர்யமாக இருந்தது.

மனநல மருத்துவர் கௌதம் தாஸ், “பெற்றோர் பொய் சொல்வதைப் பார்க்கும்போது குழந்தைகளும் பொய் சொல்லக் கற்றுக் கொள்கிறார்கள். அதேவேளையில், பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாதபோது, அதை நிறைவேற்ற வைப்பதற்காகப் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள்,” எனக் கூறுகிறார்.

 

அனைத்து பெற்றோர்களுமே தங்கள் குழந்தைகளை நேர்மையான மனிதர்களாக வளர்க்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். அதனாலேயே அதில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகள் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும்போது அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், அப்படி சிறார்கள் மீது பெற்றோர் கோவப்படுவதால் அவர்கள் பொய் சொல்வது குறைவதில்லை அதிகரிக்கவே செய்கின்றன என்கிறார் மருத்துவர் சிவபாலன். “நீங்கள் ஒருமுறை அவர்கள் சொன்ன பொய்யைப் பெருங்குற்றமாகக் கருதி தண்டித்துவிட்டால், அடுத்த முறை நீங்கள் கண்டுபிடிக்காதவாறு எப்படிப் பொய் சொல்லலாம் என்று குழந்தைகள் சிந்திக்கத் தொடங்குகின்றனர். தண்டிப்பதாலேயே அவர்களை மீண்டும் பொய் சொல்லாமல் இருக்க வைக்க முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

இது ஒருபுறமிருக்க, அத்தகைய பொய்களைச் சொல்லத் தொடங்குவதற்கேகூட அத்தகைய தண்டனைகள்தான் காரணம் என்கிறார் மருத்துவர் கௌதம் தாஸ். வீட்டுப்பாடம் செய்யாமல் வரும்போது அதற்காக ஆசிரியர்கள் தண்டிப்பதும் அந்த விஷயம் தெரியவரும்போது பெற்றோர்கள் கண்டிப்பதும் நடக்கும்போது, அவற்றில் இருந்து தப்பிக்க, அடுத்தமுறை வீட்டுப்பாடம் செய்யத் தவறும்போது குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்.

“ஒருவருக்கு தண்டனை வழங்குவதாலேயே அவர் மாறிவிடுவார் என்று இல்லை. அவர்களுக்குத் தன்மையாக எது சரி என்பதைக் காட்டி வழிநடத்த வேண்டும்,” எனக் கூறுகிறார் கௌதம் தாஸ்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள்

குழந்தைகள் பொய் சொல்வது குறித்த பேச்சு எழும்போது முதலில் பொய் என்றால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

பொய் சொல்வது இரண்டு வகைப்படும் என்கிறார் மருத்துவர் சிவபாலன். ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு அதை வெளியே சொல்லாமல் மறைப்பது அல்லது ஒரு விஷயத்தைச் செய்யாமலேயே அதைச் செய்துவிட்டதாகச் சொல்வது அதில் முதல் வகை.

இப்படியான பொய்களைச் சொல்பவர்களுக்கு அதன்மூலம், தண்டனையில் இருந்து தப்பிப்பது போன்று ஏதேனும் ஓர் ஆதாயம் கிடைப்பதாக இருக்கும்.

இரண்டாவது வகையான பொய் மிகவும் இயல்பாகச் சொல்லப்படுவது. ஓரிடத்தில் பொய் சொல்வதே அவசியமாக இருக்காது. ஆனால், அவர்களுக்குப் பொய் சொல்வது ஒரு பழக்கமாகவே மாறியிருக்கும். பழக்கத்தின் பேரில் இயல்பாக, அவசியமே இல்லாமல் பொய்களைச் சொல்வார்கள்.

இந்த இரண்டு வகை பொய்களையுமே மிகச் சாதாரணமாக அனைத்து மனிதர்களுமே சொல்கிறார்கள். இது சாதாரணமானதுதான்.

பல நேரங்களில் குழந்தைகள் நாம் சொல்லித்தராத நேரத்தில், நம் செயல்பாடுகளைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் சிவபாலன். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்கள் தம் குடும்பத்திலுள்ள பெரியவர்களின் நடத்தைகளைப் பார்த்துத்தான் பல விஷயங்களைச் செய்கிறார்கள். அப்படியான விஷயங்களில் பொய் சொல்லும் பழக்கமும் ஒன்று என்கிறார் சிவபாலன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கொண்டு பேசியவர், “குழந்தைகள் முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பொய் சொல்லக் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். இதைக் கடந்துதான் வெளியில் இருந்து கற்கிறார்கள்.

ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரிடமிருந்து அவர்கள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாலும் தமது வீட்டில் உள்ளவர்கள் பொய் சொல்வது தவறு எனக் கூறி அதைத் தமது நடவடிக்கைகளின் மூலமாகக் குழந்தைக்கு உணர்த்தும்படி நடந்துகொண்டால், அவர்களுடைய மனதில் அது ஆழமாகப் பதிவாகும்.

அப்படிச் செய்யாமல், வீட்டிலேயே தான் செய்யும் காரியத்தை அப்பாவிடம் சொல்லிவிடாதே என்று அம்மாவும் தான் செய்யாத வேலையை அம்மாவிடம் செய்துவிட்டதாகச் சொல்லுமாறு அப்பாவும் குழந்தை முன்பாகவே கூறினால், குழந்தையின் பழக்கத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார்.

இயல்பாக அனைத்து குடும்பங்களிலுமே இத்தகைய செயல்பாடுகளைக் கடந்து வந்திருப்போம். இதைப் பார்க்கும் குழந்தைகளும் தங்களுக்குத் தேவையான நேரங்களில் செய்யாத வீட்டுப்பாடத்தைச் செய்ததாகச் சொல்லலாம், செய்த தவறைச் செய்யவில்லை எனச் சொல்லலாம்.

“அப்படிச் சொல்வது தவறு இல்லை போலும் என்று சிறிது சிறிதாகக் குழந்தைகளுடைய மனதில் பதிவாகும். அது வெளியுலகுடனான அவர்களது பழக்க வழக்கங்களிலும் பிரதிபலிக்கும்,” என்கிறார் சிவபாலன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பொய்’ குழந்தைகளின் கற்பனைத் திறனை வெளியே கொண்டு வருகிறது

அடிப்படையில் குழந்தைகளுக்கு எது பொய், எது உண்மை என்ற வேறுபாடே தெரியாது என்கிறார் சிறார் எழுத்தாளரும் நீண்டகாலமாக குழந்தைகளிடையே பணியாற்றி வருபவருமான விஷ்ணுபுரம் சரவணன்.

“குழந்தைகளுக்கு ரயில், ரயில் பொம்மை இரண்டுமே ஒன்றுதான். ‘நீ இதைச் செய்தால் உனக்கு ஒன்று வாங்கிக் கொடுப்பேன்’, ‘நீ வீடு வரைக்கும் அமைதியாக அடம்பிடிக்காமல் வந்தால், உனக்கு இதைச் செய்து கொடுப்பேன்’ என்று பெற்றோர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விடுவதில் தொடங்குகிறது, குழந்தைகளிடையே பொய்களுக்கான அறிமுகம்.”

“இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, அதைச் செய்ய முடியாமல் போகும்போது அதைச் சமாளிக்க பெற்றோர் கூறும் பொய்கள்தான், பள்ளிகளில் வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் விடும்போது அதைச் சமாளிப்பதில் குழந்தைகளிடம் பிரதிபலிக்கின்றன.

ஆனால், அது தவறு என்று ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரிவதில்லை. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும்போது அதற்கு சாக்காகச் சில விஷயங்களைச் சொல்வதை மற்றவர்களுடனான பழக்க வழக்கத்தில் ஒரு முறை என்றுதான் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நமக்குத்தான் அது பொய்யாகத் தெரிகிறது. நம்மை ஏமாற்ற முயல்கிறார்கள் எனக் கருதுகிறோம்,” எனக் கூறுகிறார் சரவணன்.

இது நடக்காமல் இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் குழந்தைகளுக்கு நம்மால் செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பதும் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை உடனே முடியவில்லை என்றாலும் சற்றுத் தாமதமாகவாவது நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்கிறார் சரவணன்.

அதோடு, இன்னொருபுறம் இப்படியான பொய்கள் குழந்தைகளுடைய கற்பனைத் திறன் வெளிப்படவும் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்.

பொதுவாக ஒரு பொய்யைச் சரியாகச் சொல்வதற்கு, அந்தப் பொய்யைச் சொல்பவர்கள் முதல் பொய்யைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் உரையாடல்களின் நீட்சியிலும் அந்த முதல் பொய்யை உண்மையாக்கும் வகையில் பேசியாக வேண்டும். இதில் ஏதேனும் ஓரிடத்தில் அந்த நீட்சி தடைபட்டாலும்கூட அவர் பொய் சொல்கிறார் என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.

“குழந்தைகளால் அப்படி அடுக்கடுக்காக, எதிரில் நிற்பவரால் கண்டுபிடித்துவிட முடியாதவாறு ஒரு நீட்சியாகப் பொய்களைச் சொல்ல முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து உண்மை வெளிப்படும். குழந்தைகள் சொல்லும் பொய் ஒருகட்டத்தில் நடைமுறையில் இருந்து விலகிச் செல்லும்.

அவர்கள் சொல்லும் காரணங்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அவர்கள் அடுக்கும் காரணங்களில் ஏதாவதொரு கட்டத்தில் உண்மையைச் சொல்லிவிடுவார்கள். அந்தக் காரணங்களில் அவர்களது கற்பனைத் திறன் அபாரமாக வெளிப்படும். பொய் சொல்வதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறன் மேம்படுகிறது.

அந்தக் கற்பனைகளை ரசித்தவாறு நாம் பொறுமையாக அவர்களோடு நீண்ட உரையாடலை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். அதற்கு அவர்களைப் பேசவிட வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, அவர்கள் பொய் சொல்கிறார்கள் எனத் தெரிந்த உடனேயே, மிரட்டி, கண்டித்து தடுத்துவிடக் கூடாது. அது அடுத்த முறை சிக்கிவிடாமல் இன்னும் சாதுர்யமாகப் பொய்களை வடிவமைக்கத்தான் அவர்களை இட்டுச் செல்லும்,” எனக் கூறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொய் சொல்வது பெருங்குற்றமா?

குழந்தைகள் பொய் சொல்வதை பெற்றோர்கள் ஒரு குற்றமாகப் பார்க்கக்கூடாது எனக் கூறும் சிவபாலன், அது தவறு என்பதை அவர்களே புரிந்துகொள்ளும் வகையில், பொய் சொல்வது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தன்மையாகக் கையாள வேண்டும் என்கிறார்.

குறிப்பாக, குழந்தைகளை மணிக்கணக்கில் அமர வைத்து அறிவுரைகளை அள்ளி வீசுவதால் அவர்களுக்கு எதுவும் புரிந்துவிடாது என்று கூறும் அவர், குழந்தைகள் நம்முடைய செயல்பாடுகளின் வழியேதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு நாம் எதை அறிவுறுத்த நினைக்கிறோமோ அப்படியே வாழ்ந்து காட்டவேண்டும் என்கிறார்.

பொய் சொல்லக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டுமெனில், முதலில் நாம் பொய் சொல்லாமல் இருக்கவேண்டும். அதன்பிறகு, “பொய் சொல்வது தவறான செயல். அதைச் செய்யக்கூடாது. நாங்களெல்லாம் இருக்கிறோம் பார்த்தாயா அப்படி இருக்க வேண்டும்’ என்று பொய் சொல்வது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நாம் குழந்தைக்கு முன்பாக நடந்து காட்ட வேண்டும்,” என்கிறார் சிவபாலன்.

“அய்யோ பொய் சொல்லிவிட்டோமே, அது தப்பாச்சே!’ என்று குழந்தைகளே யோசிக்கும் வகையில் அவர்களுக்கு முன்பாக நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.”

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கொண்டு பேசியவர், “பெற்றோர்கள் இருவரும் கலந்துபேசி, குழந்தையின் முன்பாக உண்மையைப் பேசவும் நேர்மையாக நடந்து கொள்ளவும் வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை தண்டனையின் வழியே அவர்களுடைய பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது,” எனக் கூறினார்.

“குழந்தைகளுக்கு 8 வயது வரைக்கும் பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். 8 முதல் 15 வயது வரை ஆலோசகராகச் செயல்பட வேண்டும். அதற்கு மேல், அவர்களுக்குத் தோழராக இருக்க வேண்டும். வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல், தோழமையுடன் பழகுதல் மூன்றையும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

வயதைப் பொறுத்து குழந்தைகளிடம் பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும். சிறு வயதில் பொய் சொல்லும்போது, அது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கு மேல் ஓர் ஆலோசகராக, பொய் சொல்வதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவுறுத்த வேண்டும்.

15 வயதைக் கடக்கும்போது ஒரு தோழரைப் போல் நடந்துகொள்ள வேண்டும். அந்த வயதில் அவர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காதபட்சத்தில், அவர்களுக்கு உறுதுணையாக நின்று பாதுகாக்க வேண்டும். ஒருகட்டத்தில் அவர்களே புரிந்து கொள்வார்கள். தண்டனை வழங்குவதால் பொய் சொல்வது நிர்ணயம் ஆகுமே தவிர சரியாகாது,” எனக் கூறினார் மருத்துவர் கௌதம் தாஸ்.

https://www.bbc.com/tamil/articles/c3gdek23gyeo

சுவிஸில் கணவர் , மனைவியை கொன்றது ஆணவக் கொலையா? ஆண் உளவியல் கொலையா?

3 weeks 2 days ago

சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் ஈழத் தமிழர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

57 வயது நிரம்பிய கணவர் , மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயது நிரம்பிய தனது மனைவியை பலரும் பாத்திருக்கையில் கொலை செய்துள்ளார்.

ஒரு உணவு விடுதியில் காலை 8.30 அளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தனது மனைவியை, கணவன்  ஒன்பது தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது கொலையாளி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது போலீசாரிடம் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடும்ப வன்முறை என்பது புலத்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் வழக்கமான நிகழ்வாகவே உள்ளது.

பெரும்பாலும் மூத்த தலைமுறையினர் புலம்பெயர்ந்து வந்தாலும் தமது பரவணிப் பழக்கத்தைக் கைவிடும் மனநிலைக்கு இதுவரை வரவில்லை என்பதை அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் ஊடாக அறிய முடிகின்றது. ஆனாலும் – ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர – பகிரங்கக் கொலைகள் மிக மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளன.

சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் நடைபெற்ற கொலைக்கான காரணம் எதுவென காவல் துறைத் தரப்பில் இருந்து இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைக் கொலை செய்வதை – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் – ஏற்றுக் கொள்ள முடியாது. அது மனித மாண்புக்கு எதிரானது. சட்ட அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் மன்னிக்கப்பட முடியாத குற்றம்.

ஆனால், தமிழர்கள் புலனாய்வுத் துறையினரையும் விடவும் புத்திசாலிகள். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டார் என்றதும், காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை அவர்கள் தாமாகவே ஊகித்துக் கொள்கின்றனர்.

பெண்ணின் நடத்தைப் பிறழ்வே கொலைக்கான உந்துதலாக இருக்கக் கூடும் எனத் திடமாக நம்பும் இத்தகையோர் – குறிப்பாக பிற்போக்குச் சிந்தனை கொண்ட ஆண்கள் – அத்தகைய ஆணவக் கொலைகளின் ஊடாக ஆணின் கௌரவம் நிலைநாட்டப் படுவதாக எண்ணிப் பெருமிதமும் கொள்கின்றனர். பெண்ணின் சுயம் பற்றியோ சுதந்திரம் பற்றியோ அவர்களுக்குப் புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை. ஆகக் குறைந்தது பெண்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் செவிமடுக்கக் கூட அத்தகையோர் தயாராக இருப்பதில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதிலும் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன. நாகரிகத்தின் உச்சத்தை மனித குலம் தொட்டு விட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்திலும் கூட பெண்கள் இரண்டாந் தரப் பிரசைகளாகவே நடாத்தப்படுகின்றனர். பண்பாடு, கலாசாரம், மரபு என்ற அடிப்படைகளில் அவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். சமூக ஒழுக்கத்தை பெண்கள் மாத்திரமே கடைப்பிடிக்க வேண்டும், காக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். அவை மீறப்படும் போது வெகுண்டெழும் அவர்கள் பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இதன் உச்சக் கட்டமாக பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். இத்தகைய கொலைகள் ஊடாக சமூகத்தின் பண்பாடு காக்கப்பட்டு விட்டதாக நம்பும் ஆண் வர்க்கம் அதனைக் கொண்டாடுவதை உலகின் பல பகுதிகளிலும் காண முடிகின்றது.

இத்தகைய போக்குக்கு ஐரோப்பாக் கண்டமும் விதிவிலக்கு அல்ல என்பதைப் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன. உலகில் வாழ்வதற்குச் சிறந்த நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள ஒரு நாடுகளுள் ஒன்றான சுவிற்சர்லாந்தில் ஆண்டுதோறும் 20 பெண்கள் ஆணவக் கொலைக்கு ஆளாகின்றனர். ‘குடும்ப கௌரவத்தைக்’ காக்கும் நோக்கிலான இந்தக் கொலைகளின் காரணகர்த்தாக்களாக பெரும்பாலும் அவர்களின் கணவர்கள் அல்லது முன்னாள் கணவர்களே உள்ளனர்.

தங்கள் பலத்தை(?) வெளிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு பெண்களைக் கொலை செய்யும், கொடுமைப்படுத்தும் ஆண்கள் ஒன்றை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆண்களையும் பெண்களையும் அறிவியல் அடிப்படையில் ஒப்பிடும் போது பலம் மிக்கவர்கள் பெண்களே என்பதே உண்மை. தங்கள் பலத்தின் மீதான அவநம்பிக்கையே பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க ஆண்களைத் தூண்டுகிறது.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலம் இதனைத் தெளிவாக விளக்க முடியும். ஶ்ரீலங்காவைப் பொறுத்தவரை பெரும்பான்மைச் சமூகமான சிங்கள இனம் சிறுபான்மைச் சமூகமான தமிழ் இனத்தை ஒடுக்குகின்றது. தான் பெரும்பான்மை இனம் என்ற உணர்வுக்கும் அப்பால், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் கரங்கோர்த்து விட்டால் தாம் பிராந்தியத்தில் சிறுபான்மை இனமாகி விடுவோம் என்கின்ற ஒரு அச்சம் சிங்கள இனத்திடம் உள்ளது. அது மாத்திரமன்றி பூமிப்பந்தில் சிங்களவர்கள் வாழும் ஒரே நாடாக ஶ்ரீலங்கா மாத்திரமே உள்ளது. ஆனால், தமிழர்களோ உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதனால் உருவான உளச்சிக்கலே சிங்கள இனம் ஶ்ரீலங்காவில் பெரும்பான்மை இனமாக இருந்தாலும், ஒருவித சிறுபான்மைச் சிந்தனையில் இருக்கக் காரணம். இதன் விளைவாக அவர்கள் தமிழர்களை அடக்கி ஆள நினைக்கின்றனர்.

பெண்கள் விடயத்தில் ஆண்களிடம் நிலவும் மனோபாவமும் இத்தகையதே.
புலம் பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை பெண்கள் தரப்பில் தப்பே இல்லையா என்ற கேள்வியைச் சிலர் எழுப்பக் கூடும். தப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். தண்டனை வழங்கக் கூடிய இடத்தில் ஆண்கள் இருக்கிறார்களா? அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதா? அந்த உரிமையை வழங்கியது யார்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

புலம் பெயர் நாடுகளைப் பொறுத்தவரை முதன்முதலில் புலம்பெயர்ந்தவர்கள் ஆண்களே. இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த போது என்ன மனோநிலையுடன் வந்தார்களோ அதே மனோநிலையுடனேயே தற்போதும் வாழ நினைப்பது அவர்களின் முதல் தப்பு. பெண்களை இரண்டாம் பட்சமாக நினைக்கும், தம்மை விட அவர்களை அறிவில் குறைந்தவர்களாக நினைக்கும் அதே மனோபாவம் இங்கும் தொடரவே செய்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை, தாயகத்தில் கட்டுப்பெட்டிகளாக(?) வாழ்ந்த அவர்கள் புலம் பெயர் நாடுகளில் தளைகளை உடைத்து, பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொண்டு, சாதனைப் பெண்களாக வலம்வருவதை பாரம்பரிய சிந்தனை கொண்ட ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தமது கைப்பிடியில்(?) இருந்து விலகிச் செல்லும் அத்தகைய பெண்களை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் ஏதோ ஒரு விதத்தில் அவர்களைப் பழிவாங்க நினைக்கின்றனர்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் அநேகர் ஏதோவொரு விதத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களே.

போரின் வடுக்களைத் தாங்கியவண்ணம் நாட்டைவிட்டு வெளியேறிய அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் சிகிச்சை புலம் பெயர் நாடுகளில் அவர்களுக்குக் கிட்டுவதில்லை. போரின் விளைவால் உருவான மன அழுத்தம், புலம் பெயர் நாடுகளில் நிலவும் பணியிடச் சூழல் அழுத்தம், குடும்பச் சூழலில் உருவாகும் மன அழுத்தம் எனப் பல்வேறு உளச் சிக்கல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்களில் பலர் அதீத மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கம் குடும்பங்களில் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது.

சமூகத்தில் உருவாகக் கூடிய கலந்துரையாடல் மூலமே இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், அதற்கான விருப்பும், தகைமையும் தமிழ்ச் சமூகத்திடம் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. திறந்த மனத்துடனான உரையாடலுக்குத் தயாராக இல்லாத ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கும் வரை இது போன்ற கொலைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு காண்பது எட்டாக்கனியாகவே விளங்கப் போகின்றது.

சமூகத்தில் அக்கறை கொண்ட தனிநபர்களும், பொது அமைப்புகளும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் மாத்திரமே பல பெறுமதியான மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும். செய்வார்களா?

https://www.ceylonmirror.net/108143.html

 

அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்

3 weeks 3 days ago
அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

பட மூலாதாரம்,MAHESH/SARANYA

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது.

திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும்.

வழக்கமாக திருமணம் பகல் நேரத்திலேயே நடக்கும் என்பதாலும், மண்டபத்திலோ, வீடுகளிலோ, பந்தலிலோ உள்ளரங்கத்தில்தான் திருமணம் நடக்கும் என்பதாலும் உண்மையிலேயே மணமகனும், மணமகளும் அருந்ததி பார்ப்பது நடைமுறையில் இல்லை. மேலே காட்டி அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று கேட்கும் ஒரு சடங்கு அவ்வளவே.

16ஆம் நூற்றாண்டில் தாண்டவராய சுவாமிகள் எழுதிய கைவல்ய நவநீதம் என்ற நூலில்,

 

"தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார் போல்

ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்..." என வருகிறது ஒரு பாடல் வரி.

அதாவது வானத்தில் மரங்களைக் காட்டி அதன் பின்னால் இருக்கும் பிறையைக் காட்டுவது போல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி அவற்றுக்குள் உள்ள அருந்ததி நட்சத்திரங்களைக் காட்டுவது போல, உருவத்தை முதலில் காட்டி பிறகு, அருவமாக இருக்கிற மூலப் பொருளை விளக்கத் தொடங்கினார் என்று அந்தப் பாடலின் பொருள் செல்லும்.

எனவே, ஒரு காலத்தில் உண்மையிலேயே வானத்தில் அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் நடைமுறை திருமண சடங்குகளில் இருந்ததா, அப்படி எனில் திருமணம் இரவில் நடந்ததா, இந்தப் பாடலில் திருமணம் பற்றிய குறிப்பு இல்லாததால், அருந்ததி காட்டும் நடைமுறை திருமணத்தோடு தொடர்பற்ற ஒன்றாக இருந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

விண்வெளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எது எப்படி என்றாலும் இது ஒரு சடங்கு. அது அந்த அளவில் இருப்பது வேறு. ஆனால், இது போன்ற சடங்குகளுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதாகவும், இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்த உண்மைகளை பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்துவிட்டதாகவும் கூறும் வீடியோக்கள் பரவி வருகின்றன.

அதைப் போல பகிரப்பட்டுவரும் ஒரு வீடியோவில் பேசும் பெண், பொதுவாக இரட்டை நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் நிலையாக இருக்கும், மற்றொரு நட்சத்திரம் நிலையாக உள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும். ஆனால், அருந்ததி (மிஸார்) - வசிட்டர் (அல்கோர்) நட்சத்திரங்கள் லட்சியத் தம்பதிகளைப் போல ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. வானத்தில் சிறு புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களின் செயல்பாட்டைக் கண்டறிந்து திருமண சடங்கில் வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்.

இதில் கூறப்படும் வானியல் விவரங்கள் உண்மையா என்று இந்தக் காணொளியை மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் அனுப்பிக் கேட்டோம்.

வெங்கடேஸ்வரன் கூறும் மூன்று காரணங்கள்
த.வி.வெங்கடேஸ்வரன்

பட மூலாதாரம்,TVVENKATESWARAN

 
படக்குறிப்பு,

த.வி.வெங்கடேஸ்வரன்

அவர் இந்தக் காணொளியில் கூறப்படும் வானியல் சார்ந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றார். மூன்று அடிப்படைகளில் இவற்றை முற்றிலும் மறுக்க முடியும் என்று கூறிய அவர் விரிவாக அளித்த விளக்கம் இதோ:

முதல் காரணம்:

பூமியிலிருந்து சுமார் 81.7 ஒளியாண்டு தொலைவில் அருந்ததி (அல்கோர்) உள்ளது. ஆனால் வசிட்டர் (மிஸார்) 82.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. எனவே இரண்டும் அசல் ஜோடி அல்ல.

பார்வைக்கு இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் ஜோடிபோல நாடகம் ஆடும் விண்மீன்கள் தான் இவை. இதுபோன்ற போலி ஜோடி விண்மீன்களை 'தோற்றமயக்கம் தரும் ஜோடி' என வானவியலில் அழைப்பார்கள்.

எப்சிலன் லைரே போன்ற அசல் ஜோடி விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றுகின்றன. இவை அசல் ஜோடி விண்மீன்கள். அல்ஜிடி போன்ற தோற்ற மயக்கம் தரும் ஜோடிகள் இடையே ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே தொடர்பு ஏதுமில்லை.

ஆப்டிகல் பைனரி நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாது, இரண்டு விண்மீன்களும் வெவ்வேறு தொலைவுகளில் இருந்தாலும் பார்வைக் கோட்டில் ஒரே திசையில் அமைவதால் ஏற்படும் தோற்ற மயக்கம் காரணமாக, இவை ஜோடி போலத் தோற்றம் தரும்.

எனவே, வசிட்டரும் (மிஸார்) அருந்ததியும் (அல்கோர்) ஜோடியே அல்ல. தொலைவில் ஒரே திசையில் இருக்கும் உயரமான இரண்டு மலைகள் பார்வைக்கு இணைந்து மலைத்தொடர் போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுத்துவது போல வசிட்டர் - அருந்ததி விண்மீன்கள் போலி ஜோடி.

 

இரண்டாவது காரணம்:

ஒரு ஒளிபுள்ளியாக வெறும் கண்களுக்கு புலப்படும் அருந்ததி (அல்கோர்) விண்மீனுக்கு உண்மையிலேயே அல்கோர்-B என்று அழைக்கப்படும் அசல் இணை உள்ளது. வேறு சொற்களில் கூறினால், அருந்ததியின் அசலான இணை வசிட்டர் விண்மீன் அல்ல; அல்கோர்-B என்னும் வேறொரு விண்மீன்.

மூன்றாவது காரணம்:

உண்மையான இரட்டை விண்மீன் தொகுப்பு அனைத்திலுமே இரண்டு விண்மீன்களும் சுற்றி வரவே செய்யும். இரண்டு விண்மீன்களும் உண்மையில் ஒன்றை ஒன்று சுற்றுவதில்லை. பதிலாக இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையம் என்ற புள்ளியையே இரண்டும் சுற்றிவரும்.

புவி, சூரியனை சுற்றுவதாக எளிதாக கூறுகிறோம். ஆனால், உண்மையில் இரண்டுக்கும் இடையில் உள்ள நிறைமையத்தை ஒட்டியே புவி சுற்றி வருகிறது. அந்த நிறை மையத்தை சூரியனும்கூட சுற்றவே செய்கிறது. ஆனால், சூரியன் சுற்றுகிற வட்டம் மிகச் சிறியதாக இருக்கும். ஆட்டு உரலில் குழவிக்கல் சுற்றிவருவதைப் போல சூரியன் சுற்றுவது ஒரே இடத்திலேயே அமைந்திருக்கும்.

எனவே வசிட்டரும் அருந்ததியும் அசல் ஜோடி என்றாலும் கூட தட்டாமாலை போல சுற்றுவது அவற்றின் சிறப்பு குணம் இல்லை. எல்லா ஜோடி விண்மீன்களுக்கும் இருக்கும் குணம் தான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இந்த கட்டுரையின் நோக்கம் சடங்குகளை ஆராய்வதல்ல. அவற்றைக் குறைகூறுவதும் அல்ல. ஆனால், சடங்குகள் அறிவியல் ரீதியில் அமைந்தவை என்று கூறுவதன் மூலம் அறிவியல் உண்மைகள் திரிக்கப்படுவதையும், அறிவியல் எது, நம்பிக்கை எது என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆராய்ந்து உண்மையை உரைப்பதுமே.

https://www.bbc.com/tamil/articles/cp3zrxy6n0po

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது…

3 weeks 4 days ago

 

images-6.jpeg
 

 

நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வைத்து ஒரு வித்தியாசமான ஜோடியைப் பார்த்தேன் - இருவரும் எனக்கு எதிரே தான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். அந்த ஆண் இடைவிடாமல் தன் பெரிய வாயைத் திறந்து பேசிக்கொண்டே இருக்க அவள் அந்த வாயை ரசித்துக் கொண்டு ஒரு மங்காத புன்னகையுடன், ஒளிரும் கண்களுடன், அவற்றில் பொங்கும் காதலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்படி ஒரு அபாரமான கெமிஸ்டிரி இருவருக்கும். ஆனால் அவர்களுடைய முக அமைப்பின் ஒற்றுமையைக் கண்டு இருவரும் அண்ணன் தங்கையோ என்று கூட சந்தேகம் எழாமல் இல்லை. மதிய இடைவேளையின் போதும் இருவரும் “பாய்ஸ்” படத்து “வாய்தா வாய்தாம்பாங்களே ஜட்ஜய்யா அது இதுதானா” என்பது போல சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர் இங்கு திரும்பினால் அவளும் இங்கேயே திரும்புகிறாள், அவள் அங்கு திரும்பினால் அவரும் அங்கேயே திரும்புகிறார். இவள் நின்றால் அவர் நிற்கிறார், இவள் நடந்தால் இவரும் கூடவே உரசிக்கொண்டு நடக்கிறார். சாப்பிடும் இடத்தில் அரை அங்குல இடைவெளிதான் இருவருக்கும் எப்போதும். சாப்பாட்டையும் இவர் ஊட்ட அவள் சாப்பிடுகிறாள், நடுநடுவே அவள் சாப்பாட்டை முழுங்கும் இடைவெளியில் பேசிக்கொண்டே இருக்கிறார். அவளும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
மணி ரெண்டே முக்கால் இருக்கும். மியூச்சுவல் பெட்டிஷன் போடும் ஜோடிகள் நீதிபதி அம்மாவின் அலுவலக அறைக்கு சென்று சாட்சியம் கொடுத்து விண்ணப்பத்தில் ஒப்பமிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் இந்த ஜோடியும் பரஸ்பரம் பேசாமல் சிறிய இடைவெளி விட்டுக்கொண்டு வந்து ஒப்பமிடுகிறார்கள். நீதிபதி அம்மா நீங்கள் இதிலுள்ள நபர்கள் நீங்கள் தானே, விபரங்களை படித்துதானே ஒப்பமிட்டீர்கள், இதிலுள்ள தகவல்கள் உண்மை தானா என்றெல்லாம் கேட்டுவிட்டு தீர்ப்புநாளை குறிப்பிடுகிறார். இவர்கள் வெளியே வந்ததும் பழையது போல ஒட்டிக்கொண்டு பரஸ்பரம் போனைப் பார்த்து சிரித்துக்கொண்டு கண்களை பரிமாறி அன்பைக் காட்டிக்கொண்டு நடக்கிறார்கள். 

எனக்கு சத்தியமா புரியல? இவங்களுக்கு என்னதான் வேணும்?

Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2023/02/blog-post_23.html

விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு

1 month ago
விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு
 
20210712_232614.jpg

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை  நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. 

இந்த மானுடம்  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும்  கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில்  விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் தன்மை கொண்டவை. 

பொதுவாக வாழ்க்கை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. இதில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் தனக்கான உயிர்வாழ்ப் பாதையினை இயற்கை கொடுத்த வழியில் வாழ்ந்து, தங்களுடைய இறுதி நிலையினை இயற்கை விட்ட வழியில் எய்துகின்றன. இதற்கு எதிராக அவைகள் சுயநினைவினை இழந்து, வேண்டுமென்று பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, தன்னுடைய வாழ்வினை இடையில் அதாவது தற்கொலையில் முடித்துக் கொள்வதில்லை. இவைகள் அனைத்தும் பெரும்பாலும் இயற்கை மரணத்தையும் சில நேரங்களில் அகால மரணங்களை அடையுமே தவிர, எவையும் தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை. இவை அபூர்வத்திலும் அபூர்வம். 

ஆனால்,  சில மனிதர்கள் மட்டுமே  வாழ்விற்கு முரணான வகையில் இந்தத் தற்கொலைகளையும் அதன்  எண்ணங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். 

மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு இரண்டு மரணங்கள் உண்டு. ஒன்று, இயற்கை மரணம். இன்னொன்று, தவிர்க்கமுடியாத அகால மரணம். இதில் மூன்றாவதான தற்கொலை மரணம் என்ற எண்ணம் இந்த விலங்கு  உயிரினத்திற்கே பொருந்தாத ஒன்று. 

ஆனால், மனிதன் மட்டுமே மூன்று வகையான மரணத்திற்கு உரிமை உள்ளவனாக இருக்கிறான். ஒன்று இயற்கை மரணம், இரண்டாவது அகால மரணம், மூன்றாவது தற்கொலை மரணம். இதில் மூன்றாவது மரணம் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும். 

தற்கொலை விடயத்தில் ஏன் விலங்கினங்களை மனிதனுடன் ஒப்பிட வேண்டும் என அய்யம்  எழலாம். அதாவது, விலங்கினங்கள் ஐந்து அறிவு கொண்டவை. மனிதன் ஆறு அறிவு கொண்டவன். இவை இப்படி இருக்கையில், ஏன் இந்த ஒப்பிடுகை எனச் சிந்திக்க வேண்டும்.  தொடக்கத்தில் சொன்னதைப் போன்று தற்கொலை மரணங்கள் மனிதனுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. ஆனால், விலங்குகளுக்கு இவை இல்லவே இல்லை. இன்னொன்று, அதற்கு அப்படி ஒரு கேடுகெட்ட இயற்கை அறிவோ செயற்கை அறிவோ இல்லை என்பது இயற்கையின் அற்புதம்; அதிசயம். இதே அதிசயத்தினையும் இதனைவிடப் பன்மடங்கு கூடுதலான பகுத்தறிவினையும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்துள்ளது என்பது இதனைவிட அதிசயத்திலும் அதிசயம். 

மேலும், மனிதன்  பகுத்தறிவுள்ளவன். எதனையும் சிந்திக்கக் கூடிய சாதிக்கக் கூடியவன். இந்த உலகையே தலைகீழாக மாற்றிக் காட்டும் அதீதத் திறமையுள்ளவன் என்ற பாராட்டிற்கும் அழியா பெருமைக்கும் சொந்தக்காரன். 

இந்தத் தற்கொலை விடயத்தில் ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை விட, மிக மிகத் தாழ்ந்து போகிறான் என்னும்போது,  விலங்கினங்கள் இவனை விட ஒரு படி என்ன, ஆயிரம் படி மேம்பட தக்கதாகவே உள்ளது என்பது தான் உண்மை. 

சில மனிதர்கள், வாழ்வு என்பது வாழ்வதற்குத்தான் என்பதை மறந்து தாழ்ந்து போகிறார்கள். மனித வாழ்வு என்பது வாழ்வதற்காக மட்டுமே. இந்த மானுடம் அனைத்தையும் வெல்லும் தகுதி படைத்தவை. அதற்கான கால நேரங்களை - சூழல்களை இம்மானுடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கான நல் வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அதனை யாராவது தட்டிப் பறித்து கொள்வார்களா என்ன ?  இல்லை. 

இந்த மானுடப் பிறப்பு என்பது ஒரு முறைதான். அதனைத் தனக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டு பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். 

தற்கொலை செய்வதனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள புவிக்கு எந்தக் கடுகளவும் தீமையும் ஏற்படப் போவதில்லை. 

இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினந்தோறும் சூரியன் உதிக்கும்; சூரியன் மறையும். மழை பெய்யும், புயலடிக்கும், பணி கொட்டும், வெள்ளம் வரும், இன்னும் இதில் ஏராளம். இந்த இயக்கம் அனுதினமும் நடந்து கொண்டேதான் இருக்கும். இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

ஆனால், இந்தத் தற்கொலை  செய்வதில் பெரும் கேடு உண்டு. அவை அவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் இவை மிகப்பெரிய பேரிடியாக இருக்கும். இவை கொஞ்ச நாள் கழித்து இவையும் மறைந்துபோகும். பின்பு எதார்த்த உலக ஓட்டத்தில் அவனின் குடும்பத்தார்கள் கலந்துவிடுவார்கள். பின்பு இதனைப் பற்றி நினைப்பதற்கு ஏதும் அங்கு இருக்கப்போவதில்லை. 

இப்பொழுது இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். வாழ்க்கை வாழ்வதற்கா? அல்லது இடையில் முடித்துக் கொள்வதற்கா? என்று. 

உண்மையான மனிதத் தன்மை கொண்டவர்கள் வாழ்வினை வாழத்தான் என்பதனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதில் எந்த மாற்றமுமில்லை. இவை இயற்கையின் விதி அல்ல நியதி. விதி மூட நம்பிக்கை சார்ந்தது; விதி என்பது இயற்கை மெய்ஞானம் சார்ந்தது. இறுதி முடிவு இப்படி இருக்கையில், முன்னமே சொன்னதனைப் போன்று நாம்  உயிருடன் இருந்தாலும் இயற்கையின் இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 

இடையில் தன்னை வேண்டுமென்று  மாய்த்துக்கொண்டாலும், இந்த இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம். அப்படி என்றால், இன்றே இப்பொழுது இந்த நிமிடமே அந்த மலிவான எண்ணத்தை விட்டொழித்து, அந்த இடத்தில் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். 

இப்படி எளிமையாகச் சொன்னால் அவை எப்படி முடியும் என்ற எண்ணமும் வரக்கூடும். இருந்தாலும் இறுதி முடிவு வாழ்வா, தற்கொலையா என்றால் வாழ்வுதான் என்ற விடை மட்டுமே மிஞ்சும். 

எனவே, நாம் இயற்கை மரணத்தினை  அடையும் முன்பே நம்மால் என்னவெல்லாம்  சாதிக்க முடியுமோ அதனையெல்லாம் சாதிக்கத் துடிக்க வேண்டும். நாமும் சாதிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும். இதுதான் மனிதனின் இயற்கைக் குணம். 

இந்தப் புவி நமக்கானது; இந்தச் சூரியன் நமக்கானது. இந்தக் காற்று நமக்கானது; இந்த மலை நமக்கானது; இந்த மழை நமக்கானது; இந்த நட்சத்திரங்கள் நமக்கானது. இன்னும் சொல்லப்போனால்,  இந்த அண்டவெளி  நாம் வாழ்வதற்கான அத்துனை சாதகங்களையும் செய்து கொண்டே இருக்கிறது.  இப்படி அனைத்தும் நாம் வாழ்வதற்கான அனைத்து நல் சூழ்நிலைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கையில், நாம் மட்டும் ஏன் இந்த இயற்கைக்கும்,  மனித இனத்திற்கே முரணான ஒரு கேடு கெட்ட தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். 

நீங்கள் சுவாசிப்பது உங்களுக்காக; நீங்கள் உண்பது உங்களுக்காக. நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்வது உங்களுக்காக. இன்னும் சொல்லப்போனால்,  இந்த உடலே உங்களுக்கானது என்பதனை மறந்து விடவேண்டாம். மேலும் மது மற்றும் புகைப்பழக்கத்தினால்  உடலினை அழித்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, இழந்த உடலினைத் திரும்ப பெறப்போகிறேன் என்று லட்சம் லட்சமாம் பணத்தினைச் செலவழிப்பது பைத்தியக்காரத்தனம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்கள், மலைகள், காடுகள் என அனைத்தும் எல்லையில்லாத் தன்மை  கொண்டிருக்கையில், நமக்கான வாழ்வும் சாதனை எல்லையில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இடையில் கெடுத்துக் கொள்வதற்கும் மாய்த்துக் கொள்வதற்கும் அல்ல. 

கட்டுரையாளர்:                            க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.

https://aerithazh.blogspot.com/2021/07/blog-post_13.html

மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா?

1 month ago

 

கேள்வி: தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களே. இது ஏன்? நீங்கள் இதை ஏற்கிறீர்களா? இந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது.

பதில்: ஆம், பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான். குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலை, அங்கு பெண்கள் உழைக்கிறார்கள், அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறது. ஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன்.

அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு:

1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும், புனிதமான சேவையாகவும் கண்டு, இதற்கு ஆண்கள் தம் மனசாட்சிக்கு உகந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று அரசு கூறக் கூடாது. இதை ஒரு பணியாக வரையறுக்க வேண்டும். இது மிக முக்கியம்.

2. வீட்டிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு, மனைவியின் உழைப்பால் யாரெல்லாம் பயனடைவார்கள், என்னென்ன பணிகள் குடும்பத்தை நடத்துவதில் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும், அவற்றில் எவையெல்லாம் செய்ய ஒரு மனைவி தயாராக உள்ளார் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த பட்டியலை ஒரு ஆவணமாக அரசு நிறுவனம் ஒன்றிற்கு மனைவி சமர்ப்பித்து தன் ஊதியத்தை கோரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். நியாயமாக கணவனின் ஊதியம் அல்லது வியாபாரம் என்றால் மாத வருமானத்தில் இருந்து 30-35% இருக்க வேண்டும்.

3. உணவை சமைக்க, உணவை விளம்ப, துணி துவைத்து காயப்போட, வீட்டை சுத்தம் பண்ண, குழந்தையை பார்த்துக்கொள்ள, குழந்தைக்கு உணவளிக்க, ஆடை அணிவிக்க, குளிப்பாட்ட ஒரு மனைவி தயாரா என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். இன்னின்ன பணிக்கு இவ்வளவு சம்பளம் என வரையறுக்க வேண்டும்.

4. நியாயமாக செக்ஸையும் இந்த பட்டியலில் கொண்டு வர வேண்டும். ஆனால் நம்முடையது ஒரு ஒழுக்கவாத சமூகம், இதைப் படிக்கிறவர்கள் என்னை செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வேண்டாம்.

5. ஆனால் கணவனிடம் பிரியமாக இருப்பதை நிச்சயமாக உழைப்பாக வகைப்படுத்த வேண்டும். ஏனென்றால் (அ) எல்லா கணவர்களுக்கும் இது இன்று கிடைப்பதில்லை; ஏனென்றால் (ஆ) பிரியம் இன்று taken for granted ஆக இருப்பதனால், சட்டமும் இதைப் பொருட்படுத்தாதாலே விவாகரத்தின் போது கூட பிரியமின்மையை காரணமாகக் காட்ட முடிவதில்லை. கத்துவது, மிரட்டுவது உள்ளிட்டு மனரீதியாக கொடுமைப்படுத்துவது என போலி காரணங்களை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு விசயம் (இ) இன்றைய கடுமையான வேலைச் சூழலில், நேர நெருக்கடியில் அன்பு காட்டுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அக்கறை காட்டாவிட்டால் உழைக்காவிட்டால் அது நடக்காது. அன்பு இல்லாமல் போவதும் ஒரு துயரம், ஒரு இழப்புதானே? ஆக, அன்பு செலுத்த ஒரு மனைவி தயாரா இல்லையா என்பதை அறிந்து அதற்கு எவ்வளவு ஊதியம் என்பதையும் வரையறுக்க வேண்டும்.

6. அடுத்து முக்கியமாக குழந்தைப் பேறு. (அ) ஒரு பெண் குழந்தைப் பேறில், வளர்ப்பில் பங்கேற்றால் அதையும் உழைப்பாக கருதி ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். பின்னர் மணவிலக்கின் போது ஒரு ஆண் தன் குழந்தையை வளர்ப்பதற்கான உரிமையை இதை வைத்து கோர வேண்டும், அதை சட்டம் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஊதியம் செலுத்தாவிடில் அவள் குழந்தையைப் பெற்றிருக்கவோ வளர்த்திருக்கவோ மாட்டாள் தானே? அவ்விடத்தில் சட்டம் தாய்மையை மிகைப்படுத்தி புனிதப்படுத்தாமல் அதை ஒரு உழைப்பாக கருதுவதே நியாயமாகவும் இருக்கும், ஆணுக்கும் தன் தந்தைமையை ஒரு உரிமையாக முன்வைக்க உதவும். (ஆ) பத்து மாசம் சுமந்து பெறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணுவதை நிறுத்த உதவும். அதற்கு ஒரு கட்டணத்தை கொடுத்து விட வேண்டும்.

7. அடுத்து மிக முக்கியமாக, குழந்தை வளர்ப்பு: குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும், உணவளித்து குளிப்பாட்டி வளர்க்கவும் வேறு ஆட்கள் இருந்தால் இதற்கு ஊதியம் இல்லை.

8. இப்போது மிக முக்கியமான நிபந்தனை வருகிறது - சம்பளம் கொடுப்பதால் இது ஒரு வேலை என்பதால் கணவன் ஒரு வேலை கொடுக்கிற முதலாளி ஆகிறான். இதை சட்டம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நடைமுறையில் உள்ள விதிகள் குடும்பத்துக்கும் பொருந்தவேண்டும். வருடத்திற்கு ஒரு முறை performance review meeting நடத்தி மனைவியால் தன் பணியை கணவனுக்கு திருப்தியளிக்கும் விதம் பண்ண முடிந்திருக்கிறதா என விசாரித்தறிய, உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தன் பணியையும் ஊதியத்தையும் இழக்கிறார் (ஆனால் மனைவியின் அந்தஸ்து போவதில்லை.) குறைகள் இருந்தால் அவற்றை களைவதாக அவர் உத்தரவாதம் அளித்து வேலையில் தொடரலாம். கணவன் தன் எதிர்கால எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம். இதை ஆவணப்படுத்தி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

9. எந்த வேலையிலும் உள்ளதைப் போல மனைவிக்கு விடுப்பெடுக்க உரிமை உண்டு. இத்தனை நாட்களுக்கு இன்னின்ன விடுப்புகள் என்பதை ஆவணப்படுத்தி மனைவியின் ஒப்புதல் பெற வேண்டும். விடுப்பை முன்கூடியே சொல்லி கணவனின் ஒப்புதலுடன் பெற வேண்டும். எந்த வேலையிலும் உள்ளதைப் போல வேலை நீக்கம் செய்யும் ஒரு மாதத்திற்கு முன் கணவன்  அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

10. இதில் பாலின பாகுபாடு கூடாது மனைவி வேலைக்கு செல்கிறவர் எனும் பட்சத்தில், கணவன் வேலைக்கு சென்றாலும் இல்லாவிடினும் இந்த பணிகளை அவன் எடுத்து நடத்த முன்வந்தால் அதையும் மேற்சொன்ன நடைமுறைகளின் படி ஆவணப்படுத்தி, அவனுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அங்கு மனைவி முதலாளியாகவும், கணவன் ஊழியனும் ஆவான்.

இப்படி ஊதியத்தை அரசு முறைப்படுத்தி ஆவணப்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஒரு தொகையை சொல்லி அதை ஊதியமாக கொடுக்க சொன்னால் அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக இன்று தமிழில் ஆண் பெண்ணியவாதிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் பெண் பெண்ணியவாதிகளை விட அதிகம். இவர்கள் கதி அதோகதியாகும். அது மட்டுமல்ல ஆண்கள் திருமண அமைப்பில் இருந்தே தப்பி ஓடிவிடுவார்கள். அல்லது சம்பளத்தில் இருந்து 25% என குறைந்த பட்ச தொகையை ஊதியமாக அறிவித்தால் அது வீட்டு செலவிக்கான பணத்தில் ஒரு முக்கியமான பகுதியை எடுத்துவிடும் என்பதால் அப்பணமும் மனைவியிடம் இருந்து பறிக்கப்படும். மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கணவர்களுக்கு அது பெரும் தொந்தரவாகும், அவர்கள் கொடுக்க மறுப்பார்கள், மனைவி நீதிமன்றத்துக்கு சென்றால் அது குடும்பத்தை உடைக்கும். ஆக மனைவிகள் தமக்கு அளிக்கப்படும் பணத்தை திரும்பக் கொடுப்பார்கள். இப்படி இந்த சம்பளம் ஒரு சடங்காக மட்டும் சுருங்கும். 10% என்றால் அது இப்பெண்களுக்கு நியாயமான ஊதியமாக இருக்காது. வங்கிக்கடன் போன்ற சிக்கல்களில் உள்ள குடும்பங்களில் 10% கூட பெரியஓட்டையை ஏற்படுத்தும். மனைவி மீது கசப்பு அதிகமாகும். ஆனால் இதற்கு ஒரு விருப்பத்தேர்வை தந்து, அதை ஒழுங்காக ஆவணப்படுத்தினால் அது கணவனுக்கோ மனைவிக்கோ நெருக்கடியாக மாறாது. அதனாலே மேற்சொன்ன முறைமையை பரிந்துரைக்கிறேன்.  

Posted 1 week ago by ஆர். அபிலாஷ்

தப்பிப் பறந்த சிட்டு

1 month ago

 

IfgeMY.jpg


ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அம்மாவின் பணம் மற்றும் சிலரிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வீட்டை செம்மையாக திருத்தி எழுப்பியிருக்கிறார். அப்போது இப்பெண் இவரை அழைத்து “ஏன் உங்களிடம் 25 லட்சம் கூட சேவிங்க்ஸாக இல்லையா? இப்படித்தான் நகையை விற்பீர்களா?” என்று பிரச்சினை பண்ணியிருக்கிறாள். இதே போல தொடர்ந்து பணம் குறித்து பல்வேறு விசாரணைகள், மிரட்டல்கள், எதையாவது மறுத்துப் பேசினால் அழுது ஒரே டார்ச்சர். இவரும் அவளுக்கு முதிர்ச்சியில்லை, வீட்டில் வளர்ப்பு சரியில்லை போல என பொறுத்திருக்கிறார். இவரது அம்மாவும் அவளை அழைத்து அறிவுரைத்திருக்கிறார். அவளோ தொடர்ந்து அதே போல மிரட்டல், கத்தல், அழுகை என நவரசங்களை காட்டி கலங்கடிதிருக்கிறார். கடைசியாக திருமணத்துக்கு முன்பு இவரது அம்மா, சகோதரி மற்றும் உறவினர்களுக்கு புது துணியெடுத்துக் கொடுத்ததற்கு “ஏன் இப்படி உன் பணத்தை வீணடிக்கிறாய்? இப்போதே இப்படியென்றால் கல்யாணத்துக்குப் பின்னால் எப்படி கட்டுப்பாடாக இருப்பாய்? உன்னைக் கட்டிக்கொண்டு நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?” எனக் கேட்டு தகராறு பண்ணியிருக்கிறார். இவரால் திருமணம் இவ்வளவு நெருங்கி வந்த பிறகு அதை ரத்து பண்ணவும் மனம் வரவில்லை. அது தவறு எனும் உறுத்தல். இன்னொரு பக்கம் அப்பெண்ணின் டார்ச்சரால் நிம்மதியே இல்லை. என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தத்தளித்தபடி இருந்தவர் பேஸ்புக்கில் என் பதிவைப் படித்து மனம் தெளிந்திருக்கிறார். அப்பெண்ணை அழைத்து “முடியாது” என்று உறுதியாக சொல்லி திருமணத்தையும் ரத்து பண்ணியிருக்கிறார். 

இதை அவர் தன் நண்பர்களிடம் சொன்ன போது “நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாலே தப்பித்து விட்டாய்” என்று பாராட்டியிருக்கிறார்கள். நானும் “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க” என்று சொன்னேன். “என் நண்பர்கள் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள், தப்புக்க முடியாது” என்று சிரித்தார். “உங்களுக்கு நன்றி சொல்வதற்காகத் தான் அழைத்தேன்.” என்றார்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த போது நான் இந்தளவுக்கு மகிழ்ந்ததில்லை. என் படைப்புகள் பலமுறை பாராட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் எனக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு இது தான். என்னால் முதன்முதலாக இச்சமூகத்துக்கு ஒரு பயன் ஏற்பட்டிருக்கிறது. இது போதும்!

இழப்பும் துக்கமும்! - சத்குரு

1 month 1 week ago
இழப்பும் துக்கமும்!
KaviFeb 11, 2023 07:23AM
2VmHzJvp-sadhguru.jpg

சத்குரு

கேள்விநெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது?

பதில்

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை.

பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை. இது எவ்வாறெனில், நீங்கள் ஒரு குழுவினராக ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். தற்போது திடீரென ஒருவர் அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் அந்த விளையாட்டில் இப்போது ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. அதை உங்களால் கையாள முடியவில்லை.

யாரோ ஒருவரைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொண்டீர்கள். உங்கள் மனதில் பல திட்டங்களை வகுத்துள்ளீர்கள் – “நான் இந்த நபரை மணந்துகொள்ளப் போகிறேன், நான் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன், நான் அந்த குழந்தைகளை இவ்வாறு வளர்க்கப் போகிறேன்” என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள். ஆனால் தற்போது இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டப் பின்னர் திடீரென உங்கள் கனவுகள் எல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன. உங்களை எவ்வாறு கையாள்வது என்று உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் ஒரு ஏமாற்றத்தில் ஆழ்ந்து போகிறீர்கள்.

உங்கள் மருட்சி நீங்குகிறது என்றால் பிழையான ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்குகிறீர்கள் என்று பொருள். உங்களின் மருட்சி அழியும் போது மாயை அகன்றுவிடுகிறது – உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் தகுந்த தருணம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் மிகுந்த துன்பமும், நாசம் விளைவிக்கும் செயல்முறையாகும் விதமாக தங்களுக்குள் இதை மாற்றிவிடுகிறார்கள்.

Loss and grief sadhguru

உங்கள் துக்கம் என்பது நீங்கள் முழுமையடையாமல் இருப்பதால் நிகழ்வது. துக்கம் என்பது ஒருவர் இறக்காத போதுகூட நிகழக்கூடும். மக்கள் தாங்கள் வெற்றிகரமாக இல்லாத காரணத்தினால் கூட துக்கமாக இருக்கலாம். மக்கள் தாங்கள் அடைய நினைத்ததை அடையாமல் போனதாலோ அல்லது அவர்களின் வீடு எரிந்து போனதாலோ அல்லது அவர்களின் கார் தொலைந்து போனதாலோ கூட துக்கமாக மாறலாம்.

ஒரு குழந்தை தன்னுடைய பொம்மை தொலைந்து போனால் கூட துக்கமாக இருக்கக்கூடும். அந்த குழந்தை தன் பெற்றோர்களை விட அந்த பொம்மையின் இழப்பை பெரிதாகக் கருதக்கூடும். தன்னுடைய நாய்க்குட்டி தொலைந்து போனால் தன் தாத்தாவை இழந்ததைக் காட்டிலும் பெரிதாக துக்கப்படக்கூடும். நான் இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். மக்கள் இவற்றால் மிக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதுதான் மனித இயல்பு. அந்த குழந்தைக்கு தன் நாய்க்குட்டியிடம் இருக்கும் பந்தம் தன் தாத்தாவோடு கொண்டிருக்கும் பந்தத்தைவிட மிக ஆழமானது.

ஒருவரை நீங்கள் இழந்து போவதால் எதனால் முழுமையற்றவராக உணருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டும். இந்த உயிர் முழுமையானதாகவே இங்கு வந்திருக்கின்றது. இந்த உயிரை அதன் தன்மையிலேயே நீங்கள் உணர்ந்து கொண்டால் முழுமையற்று இருப்பது என்பது பற்றிய கேள்வியே அங்கு எழாது. இந்த உயிர் முழுமையானது. முழுமையற்ற உயிர் இருக்கின்றதென்றால் படைத்தவன் மோசமான வேலையை செய்திருக்கிறான் என்று அர்த்தம்.

அவ்வாறில்லை, இது மிகவும் மகத்தான வேலை – பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்வதற்கெல்லாம் அப்பாற்பட்டது இது. இது மிக அற்புதமான வேலையும் கூட. உயிரை அதன் தன்மையில் நீங்கள் உணர்ந்திருந்தால் எதுவும் உங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தாது. ஏனெனில் இது முழுமையான உயிர். இதை நீங்கள் உங்கள் தொழிலைக் கொண்டோ, உங்கள் காரைக் கொண்டோ, உங்கள் வீட்டைக் கொண்டோ, உங்கள் குடும்பத்தைக் கொண்டோ, வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது.

இந்த உயிர் பலவற்றோடு தொடர்பு கொள்ளலாம், உறவு கொள்ளலாம், உடன் இருக்கலாம் அல்லது உள் வாங்கலாம். எனினும் அது தானாகவே ஒரு முழுமையான உயிர். அதன் தன்மை அவ்வாறானதே. இத்தகைய ஒரு அனுபவ நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எதை இழந்தாலும் சரி – உங்கள் வேலை, பணம் அல்லது உங்களுக்கு பிரியமான ஒருவர் – எதை இழந்தாலும் நீங்கள் துக்கமடைய மாட்டீர்கள்.

மனிதர்களைப் பொறுத்தவரையில், ஒருவரை அவரது இறப்பினால் நாம் இழந்துவிட்டால், அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இழந்த உடமைகளை திரும்பப் பெற இயலும், இழந்த பதவிகளை திரும்பப் பெறலாம், பணம் மற்றும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஒரு மனிதரை இழந்தால் அதை ஈடுசெய்ய முடியாது. அந்த வகையில் அது மிக ஆழமான துக்கமாக இருக்கும்.

இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் நம் தன்மையை நாம் படத்தொகுப்பு போல உருவாக்கியுள்ளோம். நாம் எதை வைத்திருக்கிறோம், நம் பதவிகள், நாம் கொண்டுள்ள உறவுகள் மற்றும் நம் வாழ்வில் உள்ள மனிதர்கள் ஆகியவற்றை வைத்தே நாம் யார் என்பது அமைகிறது. இதில் ஏதோ ஒன்றை நாம் தொலைத்துவிட்டால் நம் தன்மையில் அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் நாம் துன்பப்படுகிறோம்.
 

 

https://minnambalam.com/featured-article/loss-and-grief-sadhguru-article-in-tamil/

யாரும் யாருடனும் இல்லாத காலம்

1 month 2 weeks ago

தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக பத்தாண்டுகள் கூடுதலாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று. நான் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் போது ரோட்டரேக்ட் அமைப்பின் சார்பாக எங்களை ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துப் போனார்கள். அங்கு நாங்கள் செலவிட்ட ஒரு மணிநேரத்தின் போது அந்த தாத்தா, பாட்டிகளை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஒரு ஆங்கிலோ இந்திய மூதாட்டி எங்களை உட்கார வைத்து தன் பழைய புகைப்படங்களைக் காட்டி பாடல்கள் பாடிக் காட்டினார். அவரை அப்படியே தூக்கி நம் வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என நாங்கள் சில நிமிடங்கள் ஆலோசித்து விட்டு கலைந்து போனோம். 


இன்று நிலைமை இன்னும் கொடுமையாகி விட்டது - முதியோர் தாமே தனியாக வாழ்வதே பிரைவெஸிக்கு நல்லது என நினைக்கிறார்கள். அல்லது பிள்ளைகள் குற்றவுணர்வே இன்றி தம் பெற்றோரைக் கழற்றி விட்டுவிடுகிறார்கள். இரண்டு தரப்புமே அது தான் சரி என நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு தனித்தீவு - கணவனுக்கும் மனைவிக்கும் தத்தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் கூட தனியாக உணர்கிறார்கள். ஐந்து வயது குழந்தை தனக்கு டிப்ரஷன் உள்ளதாக சொல்கிறது. எல்லாரும் சேர்ந்து வாழும் அமைப்பில் இந்த சிக்கல்களை களையலாம் என நம்புகிறேன். குறைந்தது உரையாட ஒரு சூழல் உருவாகும். பெற்றோரின் அனுபவம், பக்குவம் பிள்ளைகள் நெருக்கடியில் இருக்கையில் உதவும். 

முன்பு நான் சென்னையில் வாழ்ந்த குடியிருப்பில் கீழ்த்தளத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் இருந்தது. கணவன், மனைவி, இரு பிள்ளைகள் என அழகிய குடும்பம். கணவர் துறைமுகத்தில் வியாபாரம் பண்ணி வந்தார். அவருடைய அப்பா பக்கத்து தெருவில் இன்னொரு வீட்டில். இவருக்கு வியாபாரத்தில் ஒரு பிரச்சினை - ஒரு டீல் தவறாகப் போக பெருத்த நஷ்டமாக கடன் வாங்கி சமாளிக்க முயன்று மேலும் சிக்கிக் கொண்டார். ஒருநாள் விடிகாலையில் வீட்டில் உள்ள எல்லாருக்கும் விஷம் வாங்கிக் கொடுத்து தானும் தற்கொலை பண்ணினார். இவர்களுடைய பிணங்களுடன் மூன்று வயதுக் குழந்தையின் பிணத்தை வெளியே எடுத்த போது பார்த்து நின்ற உறவினர்கள் கதறி அழுதார்கள். பத்து வயதுக் குழந்தை ஒன்று மட்டும் விஷம் அருந்தி இருந்தும் எப்படியோ பிழைத்தது. அதனை உறவினர் ஒருவர் தத்தெடுத்துக் கொண்டார். இந்த குடும்பத் தலைவனின் அப்பா அன்று மாரில் அடித்து அழுதது இன்னும் நினைவுள்ளது: “இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதென்று என்னிடம் சொல்லியிருந்தால் நான் எப்படியாவது உதவியிருப்பேனே. ஏன் சொல்லவில்லை?” எனக்கு உறுதியாகத் தோன்றியது - இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்திருந்தால் நிச்சயமாக இந்த கூட்டுத்தற்கொலை நடந்திருக்காது. கண்காணிக்கப்படுகிறோம் எனும் உணர்வே ஒருவிதத்தில் குடும்பத்துக்குள் இறுக்கத்தை தளர்த்தும், ஆதரவுண்டு எனும் எண்ணம் தற்கொலை முடிவை தள்ளிப்போட வைக்கும். ஆனாலும் ஏன் தனித்தனியாக ஒரே தெருவிலோ பக்கத்து பக்கத்து தெருக்களிலோ வாழ்கிறார்கள்?

இன்னொரு பக்கம் தனியாக வாழும் முதியோர் பணத்துக்காக கொல்லப்படுவது அல்லது நோயுற்று தனியாக இறப்பது வெகுசாதாரணமாகி விட்டது. பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் நஞ்சுண்டன் தனியாக இறந்து போய் சில நாட்களுக்குப் பிறகே அவரது உடலைக் கண்டெடுத்ததாக நினைவு. நான் பெங்களூருக்கு வந்து தனியாக வாழ்ந்து கொண்டிருந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அடிக்கடி ரத்த சர்க்கரை வெகுவாக குறைந்து உறக்கத்திலேயே வலிப்பு வந்து கீழே விழுந்து விடுவேன். (இப்போது அப்படி வருவதில்லை.) சர்க்கரை அளவு வெகுவாக இறங்கும் போது ஒரு மின்னதிர்ச்சி போல ஏற்படும் என சொல்வார்கள். இது நம்மை மயக்கத்தில் இருந்து தானே தெளிவிக்கும். அப்படித்தான் நான் விழித்துப் பார்த்தால் தரையில் கிடப்பேன். என்ன நடந்ததென்றே நினைவிருக்காது. நாக்கையோ உதட்டையோ கடித்திருப்பேன். அதை வைத்து எனக்கு உறக்கத்தில் வலிப்பு வந்திருந்ததென ஒருவாறு கணிப்பேன். அப்போதெல்லாம் நான் விழுந்த வாகில் தலையில் அடிபட்டு செத்திருந்தாலோ அல்லது மயக்கத்தில் இருந்து மீளாமலே அப்படியே காலமாகி இருந்தாலோ எத்தனை நாட்களுக்குப் பிறகு என் உடலைக் கண்டெடுப்பார்கள் என யோசிப்பேன். நஞ்சுண்டனின் நிலைதான். அந்த எண்ணமே அவலமான உணர்வைத் தரும். சாகலாம், ஆனால் தனியாக சாகக் கூடாது என நினைப்பேன். 

இது நகரங்களின் ஒரு தனித்த சிக்கல். என்னுடைய சொந்த ஊரில் என் வீட்டுக்கு எதிரிலுள்ள வீட்டில் ஒரு மூதாட்டி வாழ்கிறார். அவர் காலையில் ஒரு மணிநேரம் தாமதமாக எழுந்தால் கூட என்னுடைய அம்மாவோ வேறு அண்டை வீட்டாரோ போய் கதவைத் தட்டி விசாரிப்பார்கள். அவர் எந்த நேரத்துக்கு எழுகிறார், என்ன சாப்பிடுகிறார், எப்போது தூங்குகிறார், உடல் நலமாக இருக்கிறாரா என எல்லாமே அண்டை வீட்டாருக்கு அத்துப்படி. இப்படித்தான் பரஸ்பரம் மக்கள் அக்கறையுடன் சேர்ந்து வாழ வேண்டும், ஒரு தனிமனிதன் மீது அவனுடன் இருக்கும் சமூகமும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும என்பேன். இங்கே நகரங்களிலோ இதை ஒரு அந்தரங்க அத்துமீறல் என நினைக்கிறார்கள்.

வாணி ஜெயராம் கீழே விழுந்து அடிபட்ட போது யாராவது ஒரு உறவினர் கூட இருந்திருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருக்கலாம், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் தானே? குறைந்தது 1% வாய்ப்பாக இருந்திருக்கும் தானே. அவர் மேலும் பல ஆண்டுகள் சமூகத்துக்கு பங்களித்திருக்கலாமே?

சென்னையிலும் சில குடும்பங்களில் நலமில்லாத தம் பெற்றோரை கூட வைத்து பாதுகாக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அண்மையில் நான் சென்னை சென்றிருந்த போது அத்தகைய ஒரு குடும்பத்துடன் தான் ஒருநாள் தங்கினேன். அவர்களுக்கு ஆயிரம் சிரமங்கள். பணமில்லை, ஆரோக்கியமில்லை, கடும் நெருக்கடி, ஆனாலும் பரஸ்பரம் விட்டுவிடாமல் பாதுகாத்து சார்ந்திருக்கிறார்கள். இத்தகையோரை நாம் அங்கீகரித்து ஒரு உதாரணமாக முன்னெடுக்க வேண்டும். இவர்களுக்கு விருதுகள் அளிப்பதும் நல்ல முடிவாக இருக்கும். இத்தகையோருக்கு அரசு ஒரு உதவித்தொகையை அறிவித்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

பெற்றோரை கூட வைத்துக் கொள்வது - பொருளாதாரம் அனுமதிக்கும் பட்சத்தில் - கட்டாயம் என அரசு ஒரு சட்டம் போட்டால் இப்போதுள்ள பிரச்சினையை ஓரளவுக்கு சரி பண்ணி விடலாம். இதை மென்மையாக வலியுறுத்தும் சட்டம் ஒன்று அண்மையில் அரசால் கொண்டு வரப்பட்டாலும் கட்டாயமாக நிறைவேற்றப்படுவதில்லை. என்னிடம் கேட்டால் மைக்ரோ குடும்பம் எனும் பெயரில் அப்பா, அம்மாவைத் தனியாக விடுவோருக்கு முதலில் வரியை அதிகரிக்க வேண்டும். அடுத்து பெற்றோரோ பிள்ளைகளோ தனியாக வாழ்ந்து செத்துப் போனால் அவர்களைத் தனியாக விட்ட பிள்ளைகள் அல்லது பெற்றோர் மீதான ஒரு கொலைக்குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும்படி தனிச்சட்டம் ஒன்று வர வேண்டும். இப்படி கடுமையான நடைமுறைகள் இருந்தால் ஒழிய இந்த மக்களைத் திருத்த முடியாது. (பொருளாதார நெருக்கடியை மட்டுமே இதற்கு விதிவிலக்காக கருத வேண்டும்.)
அதிலும் எந்த வசதியும் இல்லாத ஏழைகளுக்கு உள்ள குடும்பப் பற்று மத்திய, மேல் வர்க்கங்களுக்கு இருப்பதில்லை. கோவிட் லாக்டவுனின் போது பல ஆயிரம் மைல்கள் நடந்தே சொந்த ஊருக்குப் போன மக்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒருவரிடம் ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு ரிஸ்க் எடுத்துப் போகிறீர்கள் என்று கேட்ட போது “லாக்டவுனின் போது என் அம்மாவும் மனைவியும் போனில் அழைத்தார்கள். நான் தனியாக இங்கே இருக்கிறேன் என்று அறிந்ததில் இருந்து அவர்கள் சாப்பிடவில்லை என்றார்கள். அதனால் போகிறேன்.” என்று சொன்னார். தன் பெற்றோரும் மனைவியும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அன்றாடங்காய்ச்சிகளிடம் உள்ள இப்படியான பாசத்தை, ஒட்டுதலை மத்திய வர்க்கம் என்றால் பார்க்க முடியாது. சாப்பிடாமல் காத்திருப்பது போக நாம் சாப்பிட்டோமா என்று கூட கவலைப்பட மாட்டார்கள். எல்லாருக்கும் சொந்த காரியம் மட்டும் சிந்தாபாத். ஏனென்றால் அன்றாடங் காய்ச்சிகள் பரஸ்பரம் சார்ந்திருப்பதைப் போல மத்திய, மேல் வர்க்க மனிதர்கள் இல்லை. அதை நாகரிகம், வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் கருதுகிறார்கள். சார்பின்மை நம்மை தனிமையானவர்களாக மாற்றிவிட்டது. 

சமூக நீதி, சாதி ஒழிப்பென்றெல்லாம் வீராவேசமாகப் பேசும் நாம் 'குடும்ப நீதி' பற்றி முதலில் பேச வேண்டும். மனிதர்களின் தனிமை பற்றி பேச வேண்டும். இன்றைய பல குழந்தைகளுக்கு தகப்பன் இல்லை, கடைசி காலத்தில் முதியோரைப் பார்த்துக் கொள்ள பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இல்லை. தனிக்குடும்பத்தில் கூட்டுத்தற்கொலைகள் நடந்த பின் பெற்றோர் வந்து நின்று புலம்புகிறார்கள். ஊடகங்கள் இந்த அதிமுக்கிய பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பதே முற்போக்கு என நினைக்கிறது. என்ன எழவெடுத்த காலம் இது!

நவீன பெண்களுக்கு குடும்பம் ஏன் தேவையில்லை? நவீன ஆண்களால் ஏன் குடும்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை?

1 month 2 weeks ago

 

divorced-man-accident-lying-hospital-136822343.jpg


அண்மையில் ஒரு இளம் எழுத்தாள நண்பர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார்:

“வணக்கம் அபிலாஷ்,
உங்களிடம் ஒரு கேள்வி.

பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்ப அமைப்பை எந்த அளவிற்கு பாதிக்கிறது? (வறுமையில் வாடும் குடும்பம், பொறுப்பற்ற கணவன் போன்றவை விதிவிலக்கு).”

நான் சொன்னேன்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் பல குடும்பங்களை உடைக்கிறது. இருவருமே பொருளாதார சுதந்திரம் கொண்டிருக்கையில் பரஸ்பர சார்பு தேவையில்ல. பரஸ்பர சார்பு இல்லையெனில் குடும்பம் எதற்கு?

அவர் மேலும் சொன்னார்: இரண்டு நாட்களுக்கு முன்பு melinda gates-இன் வலைதளத்தை வாசித்தேன். அது ஒரு women empowerment பற்றிய தளம். அதில் ஒரு வார்த்தை கூட குடும்பம் என்ற சொல் இல்லை.

நான் சொன்னேன்: சரியாக அவதானித்தீர்கள். இன்றைய நவீன பெண்களுக்கு குடும்பம் தேவையில்லை. குழந்தைகளும் வருமானமும் போதும். கணவர் பெரும்பணக்காரர் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்வார்கள்.

இதைப் பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்:

குடும்பம் எதற்கான அமைப்பு? ஆணுக்கு குழந்தைகளைப் பெற, குடும்ப சொத்துரிமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட, முடிந்தால் அதை பெருக்கிட, முக்கியமாக ஒரு ஆணுக்கு தன் சொத்துக்களுக்கு (நிலம் புலம், குலமரியாதை, பணம்) வாரிசாக வரும் பிள்ளை தன் சொந்த ரத்தம் என்பதை உறுதி செய்ய. இதுவே தெளிவாக காட்டவில்லையா குடும்ப அமைப்பு பெண்களுக்கானது அல்ல, ஆண்களுக்கானது என்று. 

இதனாலே ஒரு மணமுறிவானது பெண்ணை விட ஆணையே அதிகமாக மனரீதியாக உருக்குலைக்கிறது. அவன் தனிமையாகிறான். அவன் தன் சுயமரியாதையை, கௌரவத்தை, ஆண் அதிகாரத்தை, சமூக அடையாளத்தை இழந்துவிட்டதாக நம்புகிறான். இன்று ஒரு நண்பரிடம் இதைப் பற்றி பேசும் போது அவர் சொன்னார்: விவாகரத்திற்குப் பின்பு ஒரு பெண் விடுதலையாகிறாள், ஆண் கைவிடப்பட்டு அனாதையாகிறான். இன்று மணமுறிவுக்குப் பின் மிக அதிகமாக தற்கொலை பண்ணுகிறவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகிறவர்கள், போதை அடிமையாகி அழிகிறவர்கள் ஆண்களே, பெண்கள் அல்ல. மேற்சொன்ன காரணம் தான். 

பெண்களுக்கு இன்று திருமணத்தில் இருந்து என்ன கிடைக்கிறது?
திருமணம் வைபவம் தருகிற கொண்டாட்ட மனநிலை, சமூக அந்தஸ்து, வரதட்சிணையாக தரப்படும் தங்கம், பணம் போன்றவை. முன்பு இந்த தங்கமும் பணமும் பெண்ணிடம் இருந்து கணவனின் குடும்பத்தின் உரிமையாகும். இன்று தனிக்குடும்பங்களில் அது எளிதில் நடக்காது. அப்பெண் இந்த தங்கத்தை தன் கணவனுடன் பகிர்வதை விரும்புவதில்லை. வறுமையில் வாட நேர்ந்தால் ஒழிய அவள் இந்த செல்வத்தை தனதாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறாள். என் உறவினர்களில், தோழர்களில் கணிசமான பெண்கள் இப்போதும் திருமணத்தின் போதும், பின்னரும் தமக்கு போடப்பட்ட தங்க நகைகளை வைத்திருக்கிறார்கள். கணவன் வீடு கட்டும் போது அவன் தன் சொந்த பணத்தில், தன் பெற்றோரிடம் இருந்து பெற்ற நிலத்தில் கட்டவேண்டும், அதற்கு தன் நகையையோ பணத்தையே கேட்கக் கூடாதென கோருகிறார்கள். ஆனால் வீட்டின் மீது மட்டும் தமக்கு உரிமை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கூடவே இன்றைய பெண்கள் சொத்திலும் பங்கைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவே சில பத்தாண்டுகளுக்கு முன்பென்றால் கூட்டுக் குடும்பங்களில் இந்த அசையும் சொத்து அப்படியே கடலில் காயம் போல கரைந்துவிடும். அசையா சொத்தும் ஆணுக்கு சென்று விடும். ஆக அன்று பெண்ணுக்கு ஆணின் ஆதரவு அவசியமாக இருந்தது. இன்றைய பெண்ணுக்கு இல்லை.

மேலும் இன்று அனேகமாக எல்லா பெண்களும் நன்கு படித்திருக்கிறார்கள். கடுமையாக உடலுழைப்பைக் கோரும், ஆபத்தான வேலைகளில் ஆண்கள் நிறைந்திருக்க, வசதியான உட்கார்ந்து செய்யும் மூளையுழைப்பு வேலைகளில் ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விட அதிகமாக பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஒரு கல்லூரி ஆசிரியனாக சொல்கிறேன் - இளங்கலை பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 70% மேல் பெண்களுடையனவை தாம். சில கல்லூரிகளில் முழுக்க மாணவிகளாகி விடக் கூடாதே என்று கருதி ஆண்களுக்கும் சரிவிகிதமாக இடமளிக்க முயல்கிறார்கள், ஒரு மறைமுக இட ஒதுக்கீட்டை ஆண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருபாலின கல்லூரிகளில் ஆண்களே இருக்க மாட்டார்கள். அப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளுக்கே. பள்ளியிலும் நீண்ட காலமாக இதுவே நிலை. பெண்ணடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் என ஜல்லியடிக்கும் நிறைய பேர் இந்த பாரித்த மாற்றங்களை சுத்தமாக கவனிப்பதில்லை. கடந்த இரு பத்தாண்டுகளில் முன்னெப்போதும் காணாத அளவுக்கு பெண்கள் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். வெயிலில் நிற்கிற, சுரங்கத்திற்கு இறங்குகிற, கடுமையான கட்டுமான, ராணுவ சேவைப்பணிகளுக்குத் தான், தெருத்தெருவாக அலைகிற மார்க்கெட்டிங் பணிகளுக்கும், தூக்கத்தைத் தொலைக்கிற டிரைவிங், டெலிவெரி பணிகளுக்கும் தான் படித்த ஆண்கள் தேவை. அதிக சம்பளம் தருகிற, அதிக வசதியான நல்ல பணிகளை படித்த பெண்கள் சாமர்த்தியமாக தேர்வு செய்கிறார்கள். 

சரி நவீனப் பெண்ணுக்கு பொருளாதார ஆதரவு தேவையில்லை? மண உறவில் இருந்து வேறென்ன பெண்ணுக்கு கிடைக்கிறது?
கௌரவம்? 
இன்று தனிப்பெண்ணுக்கே நகரங்களில் அந்த கௌரவம் தாராளமாக உண்டு. அதுவும் மணவிலக்காகி குழந்தையுடன் வாழும் பெண்ணென்றால் சற்று இரக்கமும் அன்பும் கௌரவத்துடன் கிடைக்கும். 
குடும்பத்துக்காக உழைக்கிற பெண்களை சகபெண்கள் ஏதோ அடிமையைப் போலத் தான் பார்க்கிறார்கள். ஹவுஸ் வைப், ஹோம் மேக்கர் என்று இப்போதெல்லாம் பெண்கள் தம்மை கௌரவமாக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. நவீனப் பெண் சற்று கூச்சத்துடன் தான் இதை சொல்கிறாள். 

கணவனின் வேலை, சமூக கௌரவத்தில் இருந்து கிடைக்கும் அடையாளம்? இதை இன்றும் நவீனப் பெண் விரும்புகிறாள் என்றாலும் அவள் தன் கணவன் ஒரு அசாதாரண ஆணாக, அதிகாரமும், புகழும், செல்வமும் படைத்தவனாக இருக்க வேண்டும் என விரும்புகிறாள். கல்லானாலும் கணவன் என்றல்ல, கல்லென்றால் அவன் தலையை கல்லைத் தூக்கிப் போடவே அவள் விரும்புகிறாள். ஆக பெரும்பாலான நவீனப் பெண்கள் சமூக அடையாளத்துக்கு கணவனை சார்ந்தில்லை.

குழந்தைக்கு அப்பா? இது முன்னர் மிக முக்கியமாக இருந்தது. தன் குழந்தைக்கு அப்பா இல்லாமல் போனால் சமூகம் தூற்றுமே எனும் கவலை பல பெண்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியதை அன்றைய கறுப்புவெள்ளைப் படங்களைப் பார்த்தால் தெரியும். இன்று குழந்தையை அப்பா இல்லாமல் தனியாக வளர்க்கும் பெண்ணை நம் சமூகம் ஒரு சாதனையாளராகவே பார்க்கிறது. அவளுக்கு தனி கௌரவத்தை அளிக்கிறது. அதே நேரம் குழந்தைக்கு இனிஷியலாக மட்டும் அப்பாவின் பெயர் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் இதுவும் தேவைப்படாது.
இதை ஒரு சமூகச் சீரழிவாக அல்ல, எதார்த்தமாகவே நான் பார்க்கிறேன். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இந்நிலை நீண்ட காலமாகவே உள்ளது. அங்கு குடும்பத்தில் ஆணுக்கு எந்த இடமும் மரியாதையும் இல்லை. அவன் ஒரு தேவையில்லாத உதிரி மட்டுமே. சம்பாதிப்பது, குழந்தையை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது எல்லாமே பெண்கள் தாம். ஆண் என்பவன் காட்டில் சுள்ளி பொறுக்கி விற்று அதில் கிடைக்கிற காசில் சாப்பிட்டு குடித்துவிட்டு எங்காவது ஓரமாகப் படுத்துக் கிடப்பவன் மட்டுமே. அவன் பெண்ணின் கட்டுப்பாட்டை மீறினால் வீட்டில் இருந்து வெளியேற்றிட பெண்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு அஞ்சியே அந்த ஊர் ஆண்கள் மிகவும் அடங்கிப் போவார்கள். நவீன சமூகங்கள் போகப் போக அனேகமாக இந்த வடகிழக்கு சமூகங்களை பிரதிபலித்து வருகின்றன. 

ஆணிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு? அண்மையில் ஒரு பேஸ்புக் பதிவு பார்த்தேன். பெண் உடலளவில் எவ்வளவு பலவீனமானவள் என்று. வழக்கம் போல ஒரு ஆண் எழுதியது தான். அது ஆண்கள் தம்மையே ஆறுதல்படுத்திக்கொள்ள, தம்மை உயர்வாக உணர எழுதிக் கொள்வது. உண்மையில் பெண்கள் ஆண்களை விட மனதளவில் பலமானவர்கள், அதிக ஆரோக்கியமானவர்கள், உடலளவிலும் மனதளவிலும். ஆணை விட அதிக ஆயுட்காலம் வாழ்பவர்கள் பெண்களே. புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களும் பெண்ணுக்கு குறைவாகவே வருகின்றன. ஆண்களை விட பலமடங்கு குறைவாகவே பெண்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். இன்றைய நவீன பெண்ணுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆண் சுத்தமாகத் தேவையில்லை. அவர்கள் எந்தவிதத்திலும் ஆணை சார்ந்தில்லை.

பாலியல்? வெறுமனே செக்ஸுக்காக ஒரு ஹை வால்டேஜ் ஆணை ஒரு ஆண் வாங்கி வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வாள் என்று நான் நம்பவில்லை. மேலும் எதிர்காலத்தில் அழகான இளமையான கிகோலோக்கள் இப்போதுள்ளதை விட பலமடங்கு அதிகரிப்பார்கள்; அவர்கள் பெண்ணுக்குள்ள பாலியல் தேவையையும் நிறைவேற்றுவார்கள்.  

சமூக, குடும்ப அழுத்தங்கள்? தங்கம், திருமண சடங்கின் கவர்ச்சி ஆகியவை தவிர இந்த அழுத்தங்களும் தான் நவீன பெண்கள் மணமுடிக்க முக்கிய காரணம். ஆனால் இப்படி பெற்றோரின் வற்புறுத்தலால் மணமுடிக்கும் பெண்கள் இயல்பிலேயே கணவனிடத்து ஒரு வெறுப்பில் தான் இருப்பார்கள், அவர்கள் விரைவில் மணவிலக்கு கோரவே வாய்ப்பதிகம். மணவிலக்கு கோருகிற கணிசமான பெண்கள் வைக்கும் காரணம் ஒன்று மாமியாருடன் வரும் பிரச்சினை அல்லது கணவனுடன் மனம் உவந்து வாழ முடியவில்லை என்பதே. அடி உதை, துரோகம் எல்லாம் அரிதான காரணங்களாகி விட்டன. பொருத்தமின்மையே மிகவும் பிரசித்தமான மணவிலக்கு தாரக மந்திரமாகி விட்டது. எனக்கு பொருத்தமின்மையின் பின்னுள்ள உந்துதல் கணவனின் தேவையின்மையே என்று தோன்றுகிறது.

மேலும் இன்றைய பெற்றோர்கள் தமது பெண் குழந்தைகள் பொருளாதார தன்னிறைவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் இக்காரணத்திற்காகவே தமது மகள்களின் திருமணத்தை தள்ளிப்போட்டு அவர்களின் சம்பளப் பணத்தில் வாழ்கிறார்கள். மணவிலக்கின் போதும் அவர்கள் தம் மகள்களை ஆதரிக்கிறார்கள். கணவனுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்தலே போதும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் எதிர்காலத்தில் இந்த நவீன பெற்றோர் தம் மகள்களை திருமணத்திற்கு வற்புறுத்தாமல் விட்டுவிடக் கூடும். நவீன ஜப்பானிய சமூகத்தில் இன்று நடப்பதைப் போல நிறைய சிங்கிள் பெண்கள், படித்த பெண்கள் வேலை பார்த்துக்கொண்டே தம் பெற்றோருடன் வாழ்வார்கள். படித்த ஆண்கள் தூங்க வீடில்லாமல் சாலையோரமாக படுத்துறங்குவார்கள்.

இவ்வாறு எப்படிப் பார்த்தாலும் நவீனப் பெண்ணுக்கு மணவுறவு அவசியம் இல்லை!

இப்படிப்பட்ட சூழலில் நவீன ஆண் என்ன செய்ய வேண்டும்? முதலில் குடும்ப வாழ்க்கை பெண்ணை விட தனக்கே அதிகம் அவசியம் என அவன் புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறவு அதற்காகவே உருவாக்கப்பட்டது, அது அடிப்படையில் சுரண்டலை, அசமத்துவத்தை முன்னெடுப்பது என்பதை எந்த குற்றவுணர்வும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முற்போக்குவாத கொத்துபுரோட்டா தத்துவங்களை அள்ளி மூளையில் நிறைத்துக் கொள்ளக் கூடாது. எதார்த்தம் உலகம் வேறு, இவர்கள் பேசும் லட்சியங்கள் வேறு. இந்த லட்சியங்களை நம்ப முனைந்தால் வாழ்நாள் பூரா செருப்படி தான் கிடைக்கும்.

ஆக, தன்னுடன் தாம்பத்தியத்தில் பங்குபெறும் பெண்ணுக்கு அதனால் என்ன பயன்மதிப்பு என அவன் யோசித்து பின்னர் தாலிகட்ட வேண்டும். “இந்த மணவாழ்வில் நீ என்ன பெற்றுவிடப் போகிறாய்? உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், நகை, சொத்து என்றால் அதை சம்பாதித்துக் கொடுக்கும் தகுதி உங்களுக்கு உண்டா? இல்லையென்றால் தாலியைக் கட்டாதீர்கள். வேண்டுமென்றால் ரக்‌ஷாபந்தன் கட்டலாம். 
காதல் என்பது காதலுக்குள் மட்டுமே செல்லுபடியாகும், மணவாழ்வில் அல்ல. மணவாழ்வு என்பது அடிமைப்பணி. குடும்பம் ஒரு செயற்கையான அமைப்பு. பயன்மதிப்பு இல்லாத போது ஒரு பெண் அதனுள் உழைப்பை செலுத்த ஒன்று அவள் பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அவளுக்கு ஒரு போதாமை இருக்க வேண்டும், அவள் ஆணை எதற்கோ சார்ந்திருக்க வேண்டும். அப்படியான பெண் கிடைத்தால் ஒழிய இந்த மணவாழ்வு எனும் பொறியில் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. (ஆண் ஏன் பெண்ணை சார்ந்திருக்கக் கூடாது என்றால் இன்றைய பெண்கள் அத்தகைய ஆண்களை விரும்புவதில்லை) மற்றபடி உங்களைத் தேவையில்லாதவருடன் 50-60 வருடங்கள் வாழலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணி இறங்கினால் டவுசர் கிழிந்து போகும்.

உங்களுக்கு சமமாகப் படித்த, உங்களுக்கு சமமாக வேலை செய்யவும், தன்னிறைவாகவும் வாழ முடிகிற, எந்தவிதத்திலும் உங்கள் பங்களிப்பை சார்ந்திராத ஒரு பெண்ணைத் தேர்வு செய்யாதீர்கள். ஒரு பொறியியலாளர் ஒரு பொறியியலாளரை, ஒரு மருத்துவர் ஒரு மருத்துவரை மணப்பதெல்லாம் - நீங்கள் அப்பெண்ணை விட ஐந்து, பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்க வரையில் - சுத்த அபத்தம். இதனால் உங்களுக்கு மட்டுமல்ல அப்பெண்ணுக்கும் நிம்மதியிழப்பே எஞ்சும். 

முற்போக்கு மண்டையன்கள், லிபரல் ஏமாற்றுப்பேர்வழிகள் ‘மணவாழ்வு என்பது இரண்டு சமமான மனிதர்கள் இணைந்து மகிழ்ச்சியை நாடும் சுயமரியாதையான ஒரு உறவு’ என்று சொல்வார்கள், அந்த பொய்யை நம்பாதீர்கள். அப்படி சொல்பவர்களின் குடும்பத்துக்குள் எட்டிப் பார்த்தாலே உண்மை பல்லிளிக்கும். சுரண்டல் இல்லாமல் குடும்பம் இல்லை. யாராவது ஒருவர் அதிகம் சுரண்டப்பட தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், யாராவது ஒருவருக்கு தன்னை அதிகமாக கைவிடுவது அவசியமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த அமைப்பு தகர்ந்து போகும். (அப்படி தகர்ந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை இல்லை; ஆனாலும் உங்களுக்கு குடும்பம் வேண்டுமெனில் அதன் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டு இருங்கள்.)

உங்களுக்கு குடும்ப வாழ்க்கை வேண்டுமா, சமத்துவம், சமநீதி போன்ற லட்சியங்களை நம்பாதீர்கள். சமத்துவ கோஷம் போடுகிறவர்கள் உங்களை தங்கள் அதிகாரத்தின் மூலம் சுரண்டவும், நசுக்கவுமே முயல்கிறார்கள் என நினைவுகொள்ளுங்கள். எப்படி சமூகத்தில் படிநிலை உள்ளதோ தாம்பத்திய உறவுக்குள்ளும் அப்படித்தான். எப்படி சமூகத்தில் நாம் நமது உணர்வுகளுக்கோ பண்புக்காகவோ அல்ல, பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் மட்டுமே ஏற்கப்படுகிறோமோ உறவிலும் அப்படித்தான். சினேகம், புரிந்துணர்வு எல்லாம் அதன் மீது பூசப்படும் வாசனை திரவியம் அன்றி, ஒரு குடும்ப வாழ்வு அதைக் கொண்டு ஓடாது. அன்பு, மரியாதை போன்ற பண்புகளால் உங்களை மெல்லுணர்வு கொண்டவர்களாக மாற்றினால் அது உங்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக பெண்களிடம் காட்டும். அதற்கு மேல் உங்களை மதிக்கவோ ஏற்கவோ மாட்டார்கள். உங்களுடைய வலிமை என்ன, உங்களுடன் இருப்பதால் ஒருத்திக்கு கிடைக்கும் அனுகூலம் என்னவென நேரடியாகவே காட்டுங்கள், அதை முழுமையாக ஏற்கத் தயாராக உள்ள பெண்ணை மட்டுமே பரிசீலியுங்கள். 

இந்த தன்னலம் மிக்க, சுரண்டல் மிக்க நவீன உலகில் நீங்களும் சுயநலமும் ஆதிக்கவுணர்வும் கொண்டவராக உங்களைக் காட்டிக் கொள்ளுங்கள். அதை நிரூபியுங்கள். நவீன உலகில் பணமும் அதிகாரமும் தன்னம்பிக்கையுமே ஆணின் புகலிடம், காதல், அன்பு, கருணை, நுண்ணுணர்வு அல்ல. இணக்கமான, பிரியமான ஆண்களையே விரும்புகிறோம் என வெளிவேஷம் போடும் நவீனப்பெண்கள் உள்ளுக்குள் வலுவான ஆதிக்கமான உறுதியான ஆணையே நாடுகிறார்கள். நவீன காலத்தில் அவனாலும் தன்னைவிட பலவீனமான பெண்ணைக் கண்டடையும் ஆணாலும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். நவீன உலகம் ஒரு வனம், அங்கு நீங்களும் விலங்காக இருக்கவில்லை என்றால் வேட்டையாடப்படுவீர்கள்!

மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்! - சத்குரு

1 month 2 weeks ago
மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!
Feb 04, 2023 10:17AM IST ஷேர் செய்ய : 
sadhguru.jpg

சத்குரு

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.

உங்களுக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது

சத்குரு: மன அழுத்தம் எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது? அடிப்படையில், நீங்கள் ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று எண்ணினீர்கள், ஆனால் அது நடக்கவில்லை.

யாரோ, எதுவோ நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள். உலகம் அல்லது விதி நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டுமென்று எண்ணினீர்கள், அது நடக்கவில்லை. சொல்லப்போனால், என்ன நிகழ்கிறதோ அதற்கு எதிராக நீங்கள் ஆகிவிட்டீர்கள், அவ்வளவுதான். நீங்கள் ஒருவருக்கு, ஒரு சூழ்நிலைக்கு எதிராக இருக்கலாம் அல்லது நீங்கள் வாழ்க்கைக்கு எதிராக கூட இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு மன அழுத்தம் மென்மேலும் ஆழமாக செயல்படும்.

நீங்கள் ஏன் ஏதோ ஒன்றிற்கு எதிராக இருக்கிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் நினைத்தபடிநடக்கவில்லை என்பதால்தான். இந்த உலகம் முழுமையாக நீங்கள் நினைக்கும் படி ஏன் செயல்பட வேண்டும்? இந்த உலகம் உங்கள் எண்ணப்படி செயல்படாது என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு படைத்தவரின் மீது நம்பிக்கை இல்லை அல்லது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை அல்லது இரண்டும் இல்லை, அதனுடன் உச்சநிலையில் உங்களுக்கு நான் என்னும் அஹங்காரம் இருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது உங்களுக்கு (ள்) என்ன நிகழ்கிறது

மன அழுத்தம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அது ஆழமாக சுயசேதம் செய்துவிடும் தன்மையிலானது. மன அழுத்தம் உடையவர்கள் தங்களை தாங்களே அதிகம் காயப்படுத்திக்கொள்வார்கள். கொலை செய்வது உடல் ரீதியாக கொல்வது மட்டும்தான் என்று அர்த்தமில்லை. வாளை எடுத்து சென்று மற்றொருவரை கொலை செய்யும் ஒருவருக்கு – அவரது அஹங்காரம் அவ்வளவு உணர்ச்சிமிக்கதாக இருக்காது – அது மன அழுத்தம் உள்ள ஒருவரின் அஹங்காரம் போல வளர்த்தெடுக்க தேவையிருக்காது.

ஒரு வன்முறையாளரை மிக எளிதாக சமநிலைக்கு கொண்டுவர முடியும். நீங்கள் இதை தெருவில் பார்த்திருக்கிறீர்களா? மக்கள் சண்டைக்கு தயாராகும்போது, கொஞ்சம் ஞானமுடன் ஒருவர் இருந்து இதை சரியாக கையாண்டால், ஒருவரை ஒருவர் கொல்ல தயாரானவர்கள், ஒரு நிமிடத்தில் அதை கீழே போட்டுவிட்டு நண்பர்களாகி அடுத்த நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிடுவார்கள். ஆனால் மன அழுத்தம் உள்ளவர் விஷயத்தில் இப்படி இல்லை.

இதை அவர் வாழ்க்கை பூராவும் சுமந்து கொண்டிருப்பார். அவர்கள் சுய நினைவுடன் இதை செய்கிறார்களோ இல்லையோ, அந்த மனிதர்கள் அவர்களின் கத்தியை தீட்டிக்கொண்டே இருப்பார்கள், அவர்களின் இதயத்தையே வெட்டிக் கொண்டு இருப்பார்கள். எதற்காக ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள வேண்டும்? பொதுவாக இது அனுதாபம் கிடைப்பதற்காக நடக்கும். மிகுந்த மன அழுத்தம் உள்ள ஒருவருக்கு சாதாரண அனுதாபம் போதுமானதாக இருக்காது, யாரோ ஒருவர் அவருடன் சேர்ந்து ரத்தம் சிந்த வேண்டும்.

நீங்கள் காயப்படுவதற்கு உங்களுக்குள் என்ன இருக்கிறது? உங்கள் உடலை ஒரு குச்சியால் அடித்தால், உடல் காயப்படும்; அது வேறு விஷயம். அதைத் தவிர வேறு என்ன உங்களுக்குள் காயப்படுகிறது? மனமும் உள்தன்மையும் காயப்பட முடியாது, அஹங்காரம் மட்டும்தான் காயப்பட முடியும். “நான் வளர வேண்டும்” என்று நீங்கள் சொன்னால், உங்கள் அஹங்காரத்தை மிதித்து அதனைத் தாண்டி முன்னோக்கி செல்வது என்பதுதான் அதன் அர்த்தம்.

Stress causes and how to get rid of it

மன அழுத்தத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்துவது

ஒருவரால் எந்த உணர்ச்சியையும் ஆக்கபூர்வமான சக்தியாக தங்கள் வாழ்வில் உருவாக்க முடியும். நீங்கள் முழுமை இல்லாதவர் என்று உங்கள் சோகம் (கவலை) உங்களுக்கு நினைவூட்டினால், அது நல்லது. இந்த சோகத்தை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். இந்த சோகத்தை எப்படி உருவாக்கப் போகிறீர்கள், கோபமாகவா அல்லது அன்பாகவும் கருணையாகவுமா? நீங்கள் கவலையாக இருக்கும்போது கருணை மிகுந்தவராவது ரொம்ப சுலபம்.

அது ஏற்கனவே கரைந்து போகும் தன்மையுடைய உணர்ச்சி. அதை நீங்கள் மேலும் கரைவதற்கு பயன்படுத்தினால் அது உங்களின் பூரண நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும். ஆனால் நீங்கள் சோகம் அடைந்தால், எரிச்சல், கோபம் அடைந்து இந்த மொத்த உலகமே தவறு என்று எண்ணினால், நீங்கள் ஒரு முட்டாள்தான்.

துரதிருஷ்டவசமாக, மக்களிடத்தில் இப்போது உண்மை என்னவென்றால், அவர்கள் வாழ்வில் ஓர் பலமான அடி விழும்போதுதான் அவர்களின் மனிதநேயம் செயல்படும். பெரும்பாலானவர்களுக்கு சோகமும் வலியும் உணரும் வரை முதிர்ச்சி ஏற்படாது. இல்லையென்றால் தனக்கும் தன்னை சுற்றியுள்ள எவருக்கும் என்ன நிகழ்கிறது என்று அவர்களுக்கு புரியவே புரியாது

யோகாவில் மன அழுத்தம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலையில் கையாளப்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் தேவையான சமநிலையும், குதூகலமும் ஏற்படுத்தினால் ஆனந்தமாக இருப்பது இயற்கையாகவே நடக்கும். ஆனந்தமாக இருப்பவரிடம் மன அழுத்தம் இருக்கவே முடியாது.

கே: சத்குரு, ஆனந்தமாக இருப்பது இயற்கையானது என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் மன அழுத்தம் கூட மனிதரிடம் ஓர் இயற்கையான உணர்ச்சிதானே?

சத்குரு: நீங்கள் எப்போது மன அழுத்தத்தை இயற்கையானது என்று தீர்மானம் செய்தீர்களோ, அதிலிருந்து வெளியே வர வேறு வழியே இல்லை. நீங்கள் குழந்தையாக இருக்கும்போது ஆனந்தமாக இருப்பது இயற்கையாகவே நிகழ்ந்தது, மன அழுத்தம் இருந்ததில்லை. மன அழுத்தம் இயற்கையானது என்று தீர்மானிக்காதீர்கள்.

மன அழுத்தம் என்றால் வாழ்க்கைக்கு தேவையான குதூகலத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று அர்த்தம். இது உங்கள் உடலிலும் நிகழலாம். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் உங்கள் உடலும் தோற்றுப் போகும். உங்களுக்குள் வாழ்க்கை குதூகலமாக இல்லை – அது கீழ்நோக்கி சென்று அதன் குதூகலத்தை இழந்துவிட்டது. ஏனென்றால் நீங்கள் அதை சரியாக கையாளவில்லை.

நீங்கள் அதன் மீது வெளியில் உள்ள முட்டாள்தனங்களை மிக அதிகமாக திணிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான உணர்ச்சிகளை மேல்நிலையில் வைத்திருக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.

மன அழுத்தத்தின் மூலம்

மன அழுத்தம் என்பது ஒருவகையான வேதனை. நீங்கள் பரவசமாக இல்லாமல் வேதனையான ஒருவராய் மாறிவிட்டால், அதற்கு காரணம், உங்களின் உயிர் சக்தியின் பெரும்பகுதி உணர்வுபூர்வமாக இல்லாமல், கட்டாயமாக நடைபெறுகிறது. வெளிசூழ்நிலையின் எதிர்வினை காரணமாக அது நடக்கிறது. நீங்கள் எப்போது கட்டாயமாக செயல்படுகிறீர்களோ, மன அழுத்தத்தில் இருப்பது இயற்கையானது, ஏனென்றால் வெளிசூழ்நிலைகள் நூறு சதவிகிதம் உங்கள் கட்டுப்பாட்டில் எப்போதும் இருப்பதில்லை.

இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது, இதற்கெல்லாம் நீங்கள் எதிர்வினை ஆற்றினால், காணாமல் போவதும், பரிதாபகரமான நிலையை அடைவதும் இயற்கையே. அதிகமான அளவிற்கு வாழ்க்கைக்கு வெளிப்படையாக இருந்தீர்கள் என்றால் அந்த அளவிற்கு பரிதாபமானவராகவும் நீங்கள் மாறுவீர்கள்.

மனிதர்கள் தங்கள் மனநிலையில் மன அழுத்தத்தை பலவகையில் ஏற்படுத்த முடியும். அவர்கள் விலைமதிப்பற்றதாக கருதும் ஏதோ ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். பெரும்பாலான மக்களின் சோகம், குறிப்பாக மேல்தட்டு சமூகங்களில், அவர்களிடம் அனைத்தும் உள்ளன, அதே சமயத்தில் அவர்களிடம் எதுவும் இல்லை.

மன அழுத்தம் என்பது எங்கோ ஒருவகையான நம்பிக்கையற்ற தன்மையை உருவாகிவிட்டது. நீங்கள் இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு ஏழ்மையான கிராமத்திற்கு சென்றால், அவர்கள் நொடிந்து போயிருப்பார்கள், ஆனால் உங்களால் ஆனந்தமான முகங்களை காணமுடியும், ஏனென்றால் அவர்களுக்கு நாளை நல்லபடியாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. மேல்தட்டு சமூகங்களில் அந்த நம்பிக்கை போய்விட்டது, மன அழுத்தம் உருவாகிவிட்டது அதற்கு காரணம், வெளியிலிருந்து எதையெல்லாம் உபயோகிக்க முடியுமோ அவை அனைத்தும் தீர்மானிக்கப்பட்டுவிட்டன.

ஒரு ஏழையினால், “நாளை எனக்கு ஒரு புதிய ஜோடி செருப்பு கிடைத்தால், எல்லாம் சரியாகிவிடும்” என்று எண்ண முடியும். அவருக்கு ஒரு புதிய ஜோடி செருப்பு கிடைத்தால், அவர் ஆனந்தமானமுகத்தோடு ஒரு அரசனைப்போல் நடப்பார். ஏனென்றால் வெளிசூழ்நிலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.

மேல்தட்டு சமூகங்களில் வெளிசூழ்நிலை தீர்மானமாகிவிட்டது, ஆனால் உள்சூழ்நிலை தீர்மானமாகவில்லை, அதனால் நம்பிக்கையின்மையும், மன அழுத்தமும் அங்கு இருக்கிறது. அங்கு சாப்பாடு இருக்கிறது, வீடு இருக்கிறது, உடை இருக்கிறது, எல்லாமே இருக்கிறது, ஆனாலும் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. அது என்னவென்று அவர்களுக்கு சற்றும் புரியவில்லை.

நாம் எப்படி வெளிசூழ்நிலைக்காக வேலை செய்கிறோமோ அதுபோல உள்சூழலையும் சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த உலகம் அழகாகும். வாழ்வின் (புறநிலை) வெளிநிலை அம்சத்தை மட்டும் சரிசெய்யாமல் உள்நிலையில் நம்மை யார் என்று அறிந்துகொள்ளும் கவனமும் வேண்டும் என்பதைத்தான் நாம் ஆன்மீக வழிமுறை என்று சொல்கிறோம்

மன அழுத்தம் கவனத்தை கோரும் தன்மையுடையது. உங்களுக்கு எதையாவது குறித்து வலுவான உணர்ச்சிகளோ அல்லது தீவிரமான எண்ணங்களோ இல்லாதிருந்தால் உங்களுக்கு மன அழுத்தம் வராது. நீங்களேதான், உங்களுக்காக அல்லாமல், உங்களுக்கு எதிராக செயல்படும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள்.

ஆகவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக, சக்தி வாய்ந்தவராக, நீங்களே இருக்கிறீர்கள். நான் இதை சொல்வது ஒருவரின் உடல்நிலை குறித்து அக்கறை இல்லாமலோ அல்லது இரக்கமில்லாமலோ அல்ல, ஆனால் ஒருவருக்கு வாழ்க்கை இந்த தன்மையில்தான் நிகழ்கிறது.

பெரும்பாலான மன அழுத்தங்கள் சுயமாக உருவாக்கப்பட்டதுதான். சிலர் நோய்க்கூறு காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சராசரியாக மற்ற அனைவரும் பைத்தியக்காரத்தனத்திற்கு தள்ளப்படுவது சாத்தியம், ஏனெனில் புத்திசாலித்தனம், பைத்தியக்காரத்தனம் இதற்கிடையில் உள்ள கோடு மிக மெலிதானது. மக்கள் அதை தள்ளிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் கோபப்படும்போது, அதை தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் புத்திசாலித்தன எல்லையை தள்ளிக்கொண்டு பைத்தியக்காரத்தனத்தை நோக்கி நகர்கிறீர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப வருவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நோய் வருவதற்கு உங்களுக்கு சலுகைகள் இருக்கிறது. உங்கள் குழந்தை பருவம் முதல், நீங்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது தான் அதிகபட்ச கவனம் உங்கள் மீது வந்தது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது பெரியவர்கள் உங்களிடம் கத்தினார்கள். நீங்கள் ஆனந்தத்தில் கத்தியபோது அவர்கள் உங்களை நோக்கி திரும்ப கத்தினார்கள்.

நீங்கள் சோர்ந்து போயிருந்த போது அவர்கள் உங்களிடத்தில் “பூ-பூ, பூ-பூ” என்று செய்தார்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது உடலில் நோய் வந்தபோது நன்றாக இருந்தது, ஏனென்றால் உங்கள் தாய்-தந்தை, உங்களை சுற்றி இருந்த அனைவரின் கவனமும் உங்கள் மீதே இருந்தது. அந்த நாளில் நீங்கள் பள்ளிக்கு செல்லத் தேவையில்லை. அதனால் நீங்கள் உடலில் நோயை ஏற்படுத்தும் கலையை கற்றீர்கள்.

ஆனால் உங்களுக்கு திருமணம் ஆனவுடன் மனதில் நோயை ஏற்படுத்தும் கலையை கற்றீர்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், ஓர் மூலையில் போய் உட்கார்ந்து மன அழுத்தம் உள்ளது போல நீங்கள் நடிக்கலாம். மக்கள் உங்கள் மீது கவனம் செலுத்துவார்கள். அதனால் நீங்கள் இந்த விளையாட்டை ஆடிக்கொண்டே இருந்தால் ஒருநாள் உங்களால் அந்தக் கோட்டைத் தாண்டி திரும்ப வரமுடியாது. அந்த நாள் நீங்கள் மருத்துவ ரீதியாக நோய்வாய்ப்பட்டு விடுவீர்கள்.

மன அழுத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது?

உடல்நிலையில் ரசாயன முறையில் ஓர் சமநிலையை பராமரிப்பதற்கு உடல் ரீதியான செயல்பாடு மிக அவசியம். கடந்த சில தலைமுறைகளில் நமது உடல் ரீதியான செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் உடல் நிலையில் ரசாயன சமநிலையை பராமரிப்பது என்பது சிரமமாகிவிட்டது. மன அழுத்தம் அதனுடைய ஒரு வெளிப்பாடுதான். சிலர் மூலையில் முடங்கிப்போவார்கள், இரு துருவங்களாக இருக்கும் மற்றவர்கள் வன்முறையான நிலைக்கு செல்வார்கள்.

நடைமுறையில் உள்ள வழக்கம் அவர்களுக்கு அமைதி ஏற்பட ரசாயனம் கலந்த மாத்திரை ஊசி இவற்றை உபயோகிப்பது. இது அந்த தனிமனிதரின் ஆற்றலை அழித்துவிடும்.

சமநிலை ஏற்படுவதற்கு ஒரு மிக எளிமையான மற்றும் சிறந்த வழி என்னவென்றால், உடல் ரீதியாக இயற்கை சூழ்நிலையில் அதிகமான செயல் செய்வது – இளவயதிலேயே செய்வது ஏற்றதாக இருக்கும். இன்னொரு அம்சம் உணர்வுபூர்வமாக பஞ்சபூதங்களுடன் தொடர்பில் இருப்பது – நிலம், நீர், காற்று, சூரியஒளி அல்லது நெருப்பு மற்றும் ஆகாயம். மற்றொரு அம்சம் நீங்கள் உண்ணும் உணவு பற்றியது – அதிக பதப்படுத்தப்பட்ட உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னொரு கூடுதல் அம்சம் இன்றைய நவீன தலைமுறையிடம் உணர்வுபூர்வமான பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் அடையும் துன்பம். அவர்களால் தங்களின் உணர்வுகளை சரியான முறையில் ஒருவரிடமும் விதைக்க முடிவதில்லை, ஏனெனில் யாரும் நீண்ட நாட்கள் அவர்களுடன் இருப்பதில்லை.

மொத்தத்தில், மன அழுத்தம் அதிகமாக காரணம் மாறிவரும் வாழ்க்கை முறைதான். மிக அதிகமாக சாப்பிடுதல், அதற்கு தேவையான செயல் இல்லை, இயற்கையுடன் தொடர்பு இல்லை, பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லாமல் இருப்பது, உணர்வுகளை பாதுக்காக்க தெரியாமல் இருப்பது – மன அழுத்தம் இத்தனை தீவிரமாக இன்றைக்கு உலகில் பரவியதற்கு இவைதான் முக்கிய காரணங்கள்.

இந்த அம்சங்களை சரியாக கையாண்டால், நம்மால் மன அழுத்தம் மற்றும் இதர மனக்கோளாறுகள் கணிசமாக உருவாவதையும், மேலும் பரவுவதையும் குறைத்துகொள்ள முடியும்.
 

 

https://minnambalam.com/featured-article/stress-causes-and-how-to-get-rid-of-it/

 

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

1 month 2 weeks ago
குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஆர்யா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,VISAGE

நேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது?

எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்?

டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இறுதியாக அவரது லிவ் இன் துணை ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.

 

 

ஒரு படித்த, அதிகாரம் பெற்ற, சுதந்திரமான பெண் ஏன் மரியாதை இல்லாத, வன்முறை நிறைந்த உறவில் தொடர்ந்து இருக்கிறார்?

தனது கணவனிடம் இருந்து பிரிந்துவாழும் முடிவை எடுக்க தீபிகா 7 ஆண்டுகளை எடுத்துகொண்டார். முதன்முதலில் அறையில் தொடங்கிய வன்முறை மூட்டு எலும்பு முறிவுவரை ஏற்பட்ட பின்னர் அவர் இந்த முடிவை எடுத்த நிலையில், எதற்காக உறவில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க அவர் நீண்ட காலத்தை எடுத்துகொண்டார். இறுதியாக அவருக்கு உதவியது யார்? உறவில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் என்ன? அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டபோது, அவர் மனம் திறந்து தனது கதைகளை கொட்டினார்.

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சில வாசகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய மன மற்றும் உடல் ரீதியான வன்முறைகள் பற்றிய விவரம் உள்ளது)

 

அவர் என்னை கொன்றிருப்பார். என் நல்ல நேரம், நான் சரியான சமயத்தில் இந்த உறவில் இருந்து வெளியேறினேன்.

திருமணம், காதல் ஆகிய பந்தத்தில் நம்பிக்கை வைக்கும்படி நாம் வளர்க்கப்படுகிறோம். இது அனைத்தும் சரியாக இருக்கிறது. நாம் பொறுத்துகொள்ளலாம் என்று நம்மை எண்ண வைக்கிறது.

அப்படிதான் எனக்கும் இது தொடங்கியது.

என் கணவர் என்னை முதன்முதலில் அடித்தபோது, அவர் அழுத்தத்தில் உள்ளார் என்று என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டேன். அது வெறும் கோபம்தான், கலைந்துவிடும் என்று நினைத்தேன்.

எங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், கருச்சிதைவு ஏற்பட்டு, எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

என் கர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நான் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. நான் என் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன், அவருக்கு அது பிடிக்கவில்லை.

குழந்தை ஏழரை மாதங்களிலேயே பிறந்ததால் பதற்றம் அதிகரித்தது. அவள் பிறக்கும்போது வெறும் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்தாள்.

ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்ட நான் அப்போதுதான் மயக்கத்தில் இருந்து விழித்தேன். என் கணவர் உள்ளே வந்து கத்திக்கொண்டு இருந்தார். கிடைத்த பொருட்களை வீசி எறிந்தார். அவரை அமைதிப்படுத்த செவிலியர்கள் அழைக்கப்பட்டனர்.

அவர் என் பெற்றோரை வெறுக்கத் தொடங்கினார், மேலும் அவர்களை என்னிடமிருந்து விலக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார். என் வாழ்வில் ஒன்று பெற்றோர் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும் என்று கூறினார்.

வெறுப்பில் எங்கள் வீட்டைவிட்டும் அவர் வெளியேறினார். எனினும், எனது மகளுக்கு அப்பா தேவை . எனவே, திரும்பி வரும்படி அவரிடம் கெஞ்சினேன்.

அவரும் ஒரு நிபந்தனையுடன் திரும்பிவந்தார். அதாவது, அவர் வீட்டில் இருக்கும்போது என் குடும்பத்தினர் யாரும் வரக்கூடாது. என்னை முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,IMAGESBAZAAR

முதல் அறை

அவர் பேயாக மாறியதுபோல் தோன்றியது. அவர் என் குடும்பத்தை பற்றி மரியாதை குறைவாக பேசுவார். அவமரியாதை செய்தார்.

இவை அனைத்துமே வார்த்தை துஷ்பிரயோகம். ஆனால், அந்த நேரத்தில் அதுகுறித்து எனக்கு புரிதல் இல்லை. அது 2005ஆம் ஆண்டு. இந்த பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்படவில்லை.

இறுதியாக ஒருநாள், வார்த்தை துஷ்பிரயோகம், உடல் மீதான தாக்குதலாக மாறியது. அவர் என்னை முதன்முறையாக அறைந்தார்.

உடனே, மன்னிப்பும் கேட்டார். தன் கையை வெட்டிக்கொள்வதாகவும், எனக்கு பூக்கள் வாங்கி தருவதாகவும் கூறினார்.

கோபத்தில் ஒரே ஒரு அறைதானே அறைந்துவிட்டார் என்றும் மீண்டும் இதுபோன்று நடக்காது என்றும் நானும் நினைத்தேன். அவரை மன்னித்து மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றேன்.

முதல் மனநல மருத்துவர், கோபத்தை கட்டுப்படுத்த சில மாத்திரைகளை வழங்கினார். ஆனால், என் கணவர் அதை மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துகொண்டார் பின்னர் நிறுத்திவிட்டார்.

இரண்டாவது மனநல மருத்துவர், “கணவர் சொல்லும் அனைத்தையும் நான் அனுசரித்து சென்றால்தான் இந்த நிலை மாறும் ” என்று கூறினார்.

ஆனால், இதுவும் தீர்வாக அமையவில்லை. ஏனென்றால், அவரது கருத்துடன் நான் உடன்பட மறுத்தப்போது அவர் மீண்டும் என்னை அறைந்தார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,IMAGESBAZAAR

அறைகள் தழும்பாக மாறத் தொடங்கியது

நான் மீண்டும் கர்ப்பமானேன். ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் வன்முறை தொடர்ந்தது. இந்த முறை என் கணவர் என்னை தாக்கியபோது தழும்பு ஏற்பட்டது.

என் பெற்றோரிடம் இருந்து நான் அதை மறைத்தேன். இரண்டு குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுகொண்டு விலகிச் செல்வது சாத்தியம் என்ற நம்பிக்கை என் மனதில் இல்லை.

இந்த சுழற்சி மீண்டும் தொடங்கியது. என்னை அடிப்பார், மன்னிப்பு கேட்பார், கோபம் மீது பழிபோடுவார், என் மீது பழிபோடுவார். தற்கொலை செய்துகொள்வதாக கூறுவார், ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொள்வார்.

இந்த முறை வேறு மனநல ஆலோசகரிடம் சென்றோம். அவர், “அனைத்து வீடுகளிலும் இது நடக்கிறது. இது குடும்ப வன்முறை அல்ல, ஏனென்றால் அவர் உன்னை தொடர்ந்து அடிக்கவில்லை. எனவே, வீட்டுக்கு சென்று குடும்ப வாழ்க்கையை தொடருங்கள் ” என்றார்.

நான் மூன்று ஆலோசகர்களிடம் சென்றும் யாருமே எனக்கு சரியான தீர்வை வழங்கவில்லை. அவர்கள் வழங்கிய தவறான அறிவுரைகளை நான் பின்பற்றிகொண்டிருந்தேன்.

ஆனால், வன்முறை குறைந்தபாடில்லை. அடுத்த முறை கணவர் என்னை அடித்தபோது, என் இரண்டு வயது மகன் மடியில் இருந்தான். அவனை பாதுகாப்பதற்காக நான் கீழே விழுந்து, தலையில் காயமும் ஏற்பட்டது.

இறுதியாக, நான் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். என்னால் முடிந்தது, ஏனென்றால் என்னிடம் ஒரு படுக்கை அறையுடன் கூடிய அடிக்குமாடி குடியிருப்பு இருந்தது மேலும் பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் , என் மனம் சுதந்திரமாக இல்லை.

அப்போதுக்கூட என் பெற்றோரிடம் நான் உண்மைகளை கூறவில்லை. கணவருடன் கருத்துவேறுபாடு இருப்பதை கூறினேனே தவிர அவர் என்னை அடித்ததை கூறவில்லை.

நான் என் பெற்றோரிடம் சொன்னதை என் கணவர் அறிந்தால், அவர் பெற்றோர் மற்றும் எனக்கு இடையே இடைவெளியை மீண்டும் உருவாக்க முயற்சிப்பார், கோபப்படுவார், அது மேலும் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று நான் பயந்தேன். மேலும், திருமண பந்தத்தின் பலம் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,SUPRABHAT DUTTA

ஒரு நபர் உறவில் துஷ்பிரயோகம் செய்தால், அவர் உங்களை மதிப்பதை நிறுத்திவிட்டார் என்று அர்த்தம். அந்த முதல் அறையை பொறுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், நாம் அதனை தொடரும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம்

நான் என்னைதான் குற்றம் கூறுவேன். என் முடிவுகளை கேள்விகேட்டேன். அனைத்தையும் சரி செய்ய முடியும் என்று நம்பினேன்.

என் கணவர் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டார். தன்னை மாற்றிக்கொள்வதாக சத்தியம் செய்தார். இது திருமண பந்தத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது. எனவே, மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் நான் வீட்டுக்கு திரும்பினேன்.

என் மகனுக்கு மூன்று வயது ஆனதும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முறை கணவர் என் தலையை சுவற்றில் மோதினார். என்னை அடித்தார்.

என் கால் முறிந்தது. நான் மருத்துவரிடன் சென்று கட்டுப்போட்டுகொண்டு வீடு திரும்பியபோது, நான் நடிப்பதாக கூறிய கணவர் என்னை மீண்டும் அடித்தார்.

மிகவும் அச்சமாக உணர்ந்தேன். எப்படியோ தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு என் பெற்றோரிடம் தெரிவித்தேன். பின்னர் காவல் நிலையம் சென்றேன்.

மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினேன். என் குழந்தைகளுக்கு கடினமான நேரமாக அது இருந்தது. அவர்கள் இரண்டு திசைகளிலும் இழுக்கப்பட்டனர்.

என் கணவரின் சகோதரியும், என் மாமனாரும் வீட்டுக்கு திரும்பி வரும்படி எனக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தனர்.

 

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,DUA AFTAB / EYEEM

இது என் இரண்டாவது திருமணம். இதனை சரியாக அமைத்துகொள்ள விரும்பினேன்.

முதன்முறை காதல் திருமணம் ஆனது. அப்போது எனக்கு 20 வயது மட்டுமே, சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான போதிய அறிவு எனக்கு அப்போது இல்லை. எனவே, ஒரு வருடத்திற்குள்ளேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன்.

அதன் பிறகு 16 வருடங்கள் நான் திருமணம் பற்றி நினைக்கவில்லை. நான் மகிழ்ச்சியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக இருந்தேன். எனது ஆசிரியர் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததோடு எனது எண்ணப்படி நான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

எனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் டேட்டிங் இணையதளத்தில் எனது சுயவிவரத்தை உருவாக்கினேன். அங்குதான் அவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் அக்கறையுள்ளவராகவும், எங்கள் நகரத்திற்கு இடம் மாறவும், என்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாகவும் இருந்தார்.

எங்கள் முதல் சந்திப்பின் ஏழு மாதங்களுக்குள், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் வயது முதிர்ச்சியடைந்திருந்ததால் விரைவில் கருத்தரிக்க விரும்பினோம். நான் கர்ப்பமானேன். ஆனால் இரண்டு மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டது.

திரும்பி பார்க்கும்போது, அப்போதுதான் எல்லாமே மாற தொடங்கியது என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவர் விரைவாகவே கோபம் அடைய தொடங்கினார். எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தினார்.

அந்த நேரத்தில் அனைவருமே, “திருமணமான புதிதில் இது சகஜம்தான் ” என்று கூறினார்கள்.

அப்போது அவர் என்னை அடிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் பொருட்களை எறிந்து, கோப்பைகள் மற்றும் தட்டுகளை உடைப்பார். எந்நேரமும் வீட்டில் ஒரு பதற்றம் நிலவியது. இதுவும் ஒரு வகையான வன்முறைதான், ஆனால் அவர் என்னை அறைந்தபோதுதான் எனக்கு அது புரிந்தது.

சிந்தித்துப் பார்க்கையில், என் திருமணத்தைக் காப்பாற்றும் விருப்பத்துடன் சமூகம் என்ன கூறுமோ என்ற அழுத்தமும் என்னைத் தடுத்து நிறுத்தியதாக உணர்கிறேன். என்னைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, என் கணவர் மாறுவார் என்று காத்திருந்தேன்.

இந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, என் முழங்கால் முறிவு என்னை இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறச் செய்த பிறகும், நான் திரும்பினேன். கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்தேன்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,EVGENIIA SIIANKOVSKAIA

என் தந்தையை அவர் அடித்தார்

ஓராண்டுக்கு அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், என் கணவர் வேலையை இழந்தார். அதே நேரத்தில் அவரது தந்தையும் காலமானார்.

வாழ்க்கை மீண்டும் அழுத்தம் நிறைந்ததாக மாறியது. எனக்கு மீண்டும் அடி விழத் தொடங்கியது. இந்த முறை அதிகரிக்கவும் தொடங்கியது. வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை அவர் என்னை அடித்தார்.

அவரது தந்தை இறந்த துக்கத்தில் என் கணவர் இருந்ததால், மற்றவர்களை தொடர்புகொண்டு இந்த வன்முறை குறித்து கூறுவது எனக்கு கடினமாக இருந்தது. அவரை விட்டு பிரியவும் முடியாமல், அவரது வன்முறை குறித்து வெளியே சொல்லவும் முடியாமல் தவித்தேன்.

பிறகு ஒரு இரவு கோபத்தில் என் மீது பொருட்களை வீசத் தொடங்கினார். பாட்டில்கள், நாற்காலிகள் என கைக்கு கிடைத்ததை வீசினார். கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இவை அனைத்தும் எனது ஐந்து மற்றும் ஏழு வயதுக் குழந்தைகளுக்கு முன்னால் நடந்தது. எங்கள் வீட்டின் கதவும் திறந்திருந்தது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தார்கள், அன்று எங்களைப் பார்க்க வந்த என் தம்பியும் பார்த்தான்.

ஆனால் அன்று இரவு காவல் நிலையத்திற்குச் செல்லும் தைரியும் எனக்கு இல்லை. நான் மிகவும் பயந்திருந்தேன். என் சிறிய குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் என் குழந்தைகளை அழைத்துச் சென்று என் தந்தையுடன் காரில் அமர்ந்தேன், என் கணவர் பானெட்டில் ஏறிகொண்டு காரை நிறுத்த முயன்றார்.

அடுத்து நிகழ்ந்ததை என்னால் ஏற்றுகொள்ளவே முடியாது, என் 78 வயதான தந்தையை அவர் தாக்க தொடங்கினார். என் தந்தையின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வரத் தொடங்கியது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர், நான் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தேன். என் அனைத்து நம்பிக்கைகளும் போய்விட்டன.

நான் முதல்முறையாக அடி வாங்கிய 7 ஆண்டுகள் கழித்து, 2012ல் நாங்கள் பிரிந்துவிட்டோம்.

எனினும், விவாகரத்து பெற எனக்கு மேலும் 4 ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஈடாக எங்கள் குடியிருப்பில் எனது பங்கை என் கணவருக்கு வழங்க நான் ஒப்புக்கொண்டேன்.

எங்கள் திருமணம் முடிந்தது, ஆனால் வன்முறை தொடர்ந்தது.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,LUCY LAMBRIEX

விவாகரத்துக்கு பிந்தைய வன்முறை

எனது கணவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று எனது அப்போதைய வழக்கறிஞர் தவறாக அறிவுறுத்தினார். இதன் விளைவாக, விவாகரத்து மற்றும் சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை தனது குழந்தைகளைப் பார்க்க என் கணவருக்கு உரிமை கிடைத்தது.

நான் காவல் நிலையத்திற்குச் சென்று, என் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி பயப்படுகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்களோ, உன் குழந்தைகள் உன் கணவருக்கும் குழந்தைகள்தான் பின்னர் என்ன பயன் என்று சொன்னார்கள்.

ஆனால் என் பயம் தவறாகவில்லை.

சிறிது காலம் கழித்து என் மகள் என்னிடம் தன் தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினாள். தனது தந்தை குளியலறைக்கு வந்தார் என்றும் உடைகளில் கைவைத்தார் என்றும் கூறினாள். அப்போது என் மகளுக்கு ஏழு வயது.

இது என்னை நொறுங்கிபோக செய்தது. நான் இப்போது என் மகளை அவளது சொந்த தந்தையிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசில் புகார் செய்தேன். என் கணவரும் பதிலுக்கு என் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால், என் கணவரின் குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. எனது மகள் சுமத்திய குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் எங்கள் மகளுடனான அவரது உறவு மீளமுடியாமல் முறிந்தது.

என் மீது போடப்பட்ட மூன்று வழக்குகளையும் அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,FIZKES

நான் இப்போது வக்கீல்களை மாற்றிவிட்டேன், குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

நான் அதையும் செய்திருக்கலாம், ஆனால் வாழ்க்கை எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. என் மகன் பள்ளியில் கிழே விழுந்து இறந்தான். அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.

என் எல்லா பலமும் என்னைவிட்டு போவதை போல் நான் உணர்ந்தேன்.

நான் நிறைய போராடிவிட்டேன். தற்போது நிறுத்த விரும்புகிறேன்.

இந்த நேரத்தில், நான் ஒரு புதிய ஆலோசகரை சந்தித்தேன். முதலில் என்னைக் கவனித்துக் கொள்ளவும் பிறகு மற்ற முடிவுகளை எடுக்கவும் அவர் என்னைத் தூண்டினார். நான் விரும்பும் நேரத்தில் , நான் தயாராக இருக்கும்போது மட்டுமே அடுத்த அடியை எடுத்து வைக்க கூறினார்.

என் மகள் இப்போது வளர்ந்துவிட்டாள். மேலும், தற்போது சண்டையிடுவதற்கான தன்னுடைய நேரம் என்றும் அவள் கூறினாள்.அவள் பெரியவள் ஆனது, தன் தந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் திறந்து நீதியைப் பெற முயற்சிப்பாள்.

என்னைப் பொறுத்தவரை, நான் அனைவரையும் மன்னித்துவிட்டேன். தேவையான அளவு போராடி இப்போது நிம்மதியாக இருக்கிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, அதை கோபத்திலும் வெறுப்பிலும் கழிக்க நான் விரும்பவில்லை.

மிக முக்கியமாக, நான் என்னை மன்னித்துவிட்டேன். எனது வன்முறைத் திருமணத்திலிருந்து வெளியே வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு, அந்த நச்சுச் சூழலுக்கு என் குழந்தைகளை உட்படுத்தியதற்காக நான் உணர்ந்த அவமானத்தில் இருந்தும் குற்ற உணர்வில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன்.

நல்ல வேளை, நான் கொல்லப்படவில்லை. இது நீண்ட காலத்தை எடுத்துகொண்டது, நான் காயப்பட்டேன். ஆனால், தற்போது நானும் என் மகளும் சுதந்திரமாக இருக்கிறோம்.

 

(*உயிர் பிழைத்தவரின் அடையாளம் அவரது கோரிக்கையின் பேரில் மறைக்கப்பட்டுள்ளது)

நீங்கள் ஏதேனும் வன்முறையை எதிர்கொண்டால், தேசிய மகளிர் ஆணையத்தால் நடத்தப்படும் உதவி எண்ணை அழைக்கவும் - +91 782717017

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் உதவி பெற, நீங்கள் Aks Crisis Line - +91 8793088814 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cp902m9znzro

நியமான வாழ்வியல் எது ?

1 month 4 weeks ago

 

நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல்  ( நசல்) எது?  இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன?  தனக்கு எதுவுமே ஆவதில்லை.அப்படி ஏதாவது நிகழ்ந்தாலும் நானே பலசாலி எழுந்து திரும்பவும் அவர்களை தாக்கி வெற்றி பெறுவேன்.
 
இப்படி பலபல எண்ணங்களை அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுவதால் அவர்களின்
இந்த விளையாட்டுகள் தான் நிஜமான உண்மை வாழ்வியல் என அவர்கள் மனதில் உறுதியாகிறது.
இந்த கொடூர மனநிலையை பாடசாலையில் விளையாடும் நேரங்களில் தனக்கு முன்னால் ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி தனித்தனியாக விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் காண்கிறேன்.
இதற்கு காரணம் சேர்ந்துவிளையாடும் போது எதிரில் உள்ளவர் கட்டளைகளை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது வெற்றியாளர் ஆகிறார் என்பது ஏற்றுக் கொள்ள மறுக்கும் மன நிலை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.  அவர்களின் அருகில் போய்  "ஏன் தனியாக விளையாடுகிறாய்
வா" எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவோம் என்று கேட்டால் தள்ளு தள்ளு இவர்களை சுட்டு
கொண்டு இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லுகிறார்கள்.
இவ்வளவுக்கும் இவர்கள் எட்டுவயதை இன்னும் எட்டி பிடிக்காதவர்கள்.
 
இந்த சிறுவர்களின் மனதில் பாலியல் சம்பந்தமான எண்ணங்களும் மிகவும் ஒருகொடூரமான கற்பனையில்உலா வர தொடங்கி விட்டது.என்பதும் மிகவும் ஒரு கசப்பான செய்தி.இவர்களின் எதிர் காலத்தைஒரு கணம் சிந்தித்தால் பதட்டத்தில் உடல் நடுங்குகிறது.காரணம் வளர்ந்து வரும் காலங்களில் தங்களின் எதிர்பார்ப்பு
நிறைவேறாத பட்சத்தில் இவர்கள்தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எதுவும் செய்வார்கள்.உயிரையும் எடுப்பார்கள்.
 
ஆறு வயது சிறுவன் தன் பள்ளிஆசிரியரை சுட்டு கொலை செய்ததில் இருந்து இளம் சமூகம்
செய்யும் கொடூர நிகழ்வுகளை மட்டும் தான் தினமும் காதால் கேட்க தொடங்கி விட்டோம்.
இப்படியான விளையாட்டுகளை அதிக பணம் செலவு செய்து வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்
விளையாட்டுக்களில் பார்ப்பதற்கும் நிஜத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன
என்பதை சொல்லி கொடுக்க மறந்து விடுகிறார்கள்.
 
அதனால் முதலில் பெரியவர்கள்தங்களின் முகமூடிகளையும் மாஜ கண்ணாடிகளையும் கழட்டி வைக்காத வரை ஒன்றும் அறியாத குழந்தைகள் வாழ்வியல் பயங்கர பாதாளத்தை நோக்கி மட்டுமே செல்லப்போகிறது....
 
நன்றி   முகநூல்

 

"நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண்

1 month 4 weeks ago
"நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண்
ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH

 
படக்குறிப்பு,

ஐஸ்வர்யா சம்பத்

22 ஜனவரி 2023, 05:25 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை.

ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்கள் எப்போதும் அழுதுகொண்டு கவலையுடன் இருப்பார்கள், தனியாக இருப்பார்கள் என்பதில்லை. நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது” என உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா.

சென்னையில் பொறியியல், பெங்களூருவில் எம்பிஏ படித்த ஐஸ்வர்யா, மும்பையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஹெச்.ஆர்-ஆக பணிபுரிந்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக, தனியாக வாழப் பழகிய ஐஸ்வர்யா, தன்னுடைய 20களில் பார்த்த காதல் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல காதலர் - கணவர் அமைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு திருமணமே வேண்டாம் என அவர் முடிவெடுத்தது ஏன்?

 

”குச் குச் ஹோத்தா ஹை’, ‘அலைபாயுதே’ திரைப்படங்களைப் பார்த்து அதில் வரும் கதாநாயகர்களைப் போன்று வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என நினைத்திருக்கிறேன். மாதவன் என்னை வசீகரித்தார். அதே மாதிரி பைக்கில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலை பாடிக்கொண்டு என்னுடைய பார்ட்னர் வருவார் என்றெல்லாம்கூட நினைத்திருக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா.

கல்லூரி, வேலை எனச் செல்லும்போது காதல் உறவுகள் அமையவில்லையா, ஏன் திருமணம் வரை அந்த உறவுகள் நீடிக்கவில்லை என்று கேட்டால், “நான் இரண்டு முறை காதல் உறவுகளில் மிகத் தீவிரமாக இருந்துள்ளேன். ஆறு ஆண்டுகள் வரை நீடித்த அந்த உறவு, திருமணம் வரை செல்லவில்லை. அதற்குப் பிறகும் தீவிரமாக அல்லாமல் சில உறவுகளில் இருந்திருக்கிறேன்.

பிடிக்கிற மாதிரி இருக்கும். ஆனால், அது திருமணம் செய்துகொள்வது வரை செல்லாது. இந்த உறவுகளின் வாயிலாக, ஆண்கள் அவ்வளவு நேர்மையாக இருப்பதில்லை என நான் புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக ஆண்கள் மீது வெறுப்பு இல்லை. நான் கொண்டிருந்த உறவுகளில் இடைவெளிகள் இருந்திருக்கிறது. நான் சந்தித்த ஆண்கள் கூறும் சில விஷயங்களில் ’பிடிப்பு’ இருக்காது. அதற்காக ஆண்களை மொத்தமாகக் குறை சொல்ல முடியாது,” என்கிறார். 

வீட்டில் பார்த்த சில வரன்களும் தனக்கு திருமண உறவை நோக்கிச் செல்வதற்கு ஏற்றதாக அமையவில்லை என்கிறார் ஐஸ்வர்யா.  ”28-29வது வயதில் எனக்காகப் பார்த்த மாப்பிள்ளை ஒருவர் செல்போனில் என்னிடம் பேசினார். தன்னைப் பற்றி மட்டுமே அவர் பேசினார். உணவு உட்பட எல்லாவற்றிலும் தனக்குப் பிடித்தமானதைக் கூறிக்கொண்டிருந்தார்.

ஒருமுறை கூட எனக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கேட்கவில்லை. எனக்கு வெறுத்துவிட்டது. நன்கு படித்த, வங்கித்துறையில் நல்ல நிலையில் உள்ள அவருக்கே எதிரில் உள்ள ஒரு பெண்ணின் விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதுதான் ஆணாதிக்க மனப்பான்மை,” என்கிறார் ஐஸ்வர்யா. 

“என்னுடையமீதி வாழ்க்கையைச் சேர்ந்து கழிக்கும் அளவுக்கு யார் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் அவரைத்தான் நாம் தினமும் காலையில் பார்க்கப் போகிறோம். அதனால் இணையும் முன்பாகப் பெரிதும் யோசிக்க வேண்டும். திருமண வாழ்க்கை ஒரு சிறை போன்றதுதான். அந்த சுவற்றுக்குள்ளேதான் நீங்கள் இருக்க வேண்டும்.

25 வயதில் பார்ட்னரை கண்டுபிடித்து 28 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது சரிவராது. இவர்தான் சரியானவர் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு ஒருவரைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை” எனத் தீர்க்கமாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”

தான் வளர்ந்த குடும்ப சூழல் மிக முற்போக்கானது என்றும் ஆனால் வெளி உலகத்தில் ஆண்களிடம் தான் பல முரண்களைச் சந்தித்ததாகவும் கூறுகிறார், ஐஸ்வர்யா. 

”அம்மா கிரிஜா போடிநாயக்கனூரை சேர்ந்தவர். அப்பா சம்பத் கோயம்புத்தூரை சேர்ந்தவர். என்னுடைய குடும்பத்தில் பெண்கள் முற்போக்குடன் வலுவானவர்களாக இருந்தவர்கள். அம்மா சத்தமாகத்தான் பேசுவார். வெட்கப்பட மாட்டார், தன் கருத்துகளைக் கூறுவார். பாட்டி, அம்மா, அம்மாவின் சகோதரிகள் எல்லோருமே இப்படித்தான். அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன். 

நாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மனிதத்தை விரும்புபவர்கள், "உண்மையான திராவிடர்கள்." “நீ பொண்ணு, நீ இப்படி இருக்கக்கூடாது” என யாருமே சொன்னது கிடையாது. அப்பா, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பவர். 

என்னுடைய பாதுகாப்புக்காக சில அறிவுரைகளைக் கூறுவார்களே தவிர, அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறியது கிடையாது. ”உனக்கு வயசாகிடுச்சு, நீ திருமணம் செய்துக்கணும்” என்று இதுவரை என் பெற்றோர் கூறியது இல்லை. திருமணத்திற்காக எந்த சமாதானமும் தியாகமும் செய்துகொள்ள வேண்டியதில்லை என்று கூறுவார்கள்.

"உத்தர பிரதேசம், பிகார், கொல்கத்தா, மும்பையில் ஆணாதிக்க மனப்பான்மை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் ஏன் அவ்வளவு இல்லை என நான் நினைக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் பெரியார்” என, தான் வளர்ந்த சூழல், திருமண உறவு குறித்த தனது முடிவில் செலுத்திய தாக்கம் குறித்து கூறினார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH

ஆணாதிக்க மனப்பான்மை

"அந்தக் காலத்தில் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. ஆனால், இப்போது அப்படியில்லை. பொருளாதார சுதந்திரம் உள்ளது. ‘திருமணத்திற்குப் பிறகு அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்” என்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் ஆணாதிக்கம் பெரும் பிரச்னை. என்னுடைய அப்பா அப்படியில்லை. அப்படிப்பட்ட சூழலில் இருந்துவிட்டு நான் வெளியே செல்லும்போது அதற்கு முரணான ஆட்களைச் சந்தித்தேன். காதலித்தவர்களும் அப்படி இருந்தனர்,” என்கிறார் ஐஸ்வர்யா. 

குடும்பத்தைத் தாண்டி உறவினர்கள், நண்பர்கள் திருமணம் குறித்துக் கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால், “அதற்கு பயந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது. சிங்கிள் பெண்ணாக நீங்கள் உங்களைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்” என்றார். 

“பயணங்களே வாழ்க்கைத் துணை”

துணை இல்லாமல் தனிமையில் வாழ்க்கையைக் கழிப்பது அழுத்தம் நிறைந்ததாக இல்லையா, எப்படி உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறீர்கள் என ஐஸ்வர்யாவிடம் கேட்டால், ”என் மகிழ்ச்சிக்கு பயணங்கள்தான் காரணம்” என்கிறார். 

”முதல்முறை தனியாகப் பயணித்தபோது நிச்சயமாக பயமாக இருந்தது. ஏனெனில், இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணித்தது இல்லை. மும்பை, பெங்களூருவில் தனியாக இருந்திருந்தாலும் பயமாகத்தான் இருந்தது.

31 வயதிலிருந்து தனியாகப் பயணிக்க ஆரம்பித்தேன். ஹெச்.ஆராக பணிபுரிந்தபோது எனக்கு சில லட்சங்களில் வருமானம் இருந்தது. அதைச் சேமித்து வைத்திருந்தேன். எனக்கு பாரிஸ் செல்ல வேண்டும் என ஆசை இருந்தது. ஏன் திருமணம் செய்துகொண்டு ’ஹனிமூன்’ வரை காத்திருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. 

முதலாவதாக தாய்லாந்துக்கு சென்றேன். ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக இந்தியா திரும்பிவிடலாம் என்றுதான் தாய்லாந்தை தேர்ந்தெடுத்தேன். 

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்துள்ளேன். 5-6 மாதங்கள் வரை பயணிப்பேன். தனியாகப் பயணித்தபோதுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்க ஓர் ஆண் தேவையில்லை என்பது எனக்குப் புரிந்தது. நாமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம். என் வாழ்க்கையை நான் வாழ ஆரம்பித்தேன்.

“பொறுப்பே இல்லாம ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கா”, “உனக்கு வாழ்க்கைல ஏதாவது பிடிப்பு இருக்கா?”ன்னு என்னோட நண்பர்களே சொல்லுவாங்க, ஆனா அவங்கதான் திருமண வாழ்க்கையில மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்கன்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH

பெரும்பாலும் ‘ஏர் பி&பி’ என்ற முறையில், பட்ஜெட் செலவில்தான் பயணிக்கிறார் ஐஸ்வர்யா. 

’ஏர் பி&பி’ முறையில் ஒரு வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஹோட்டலில் தங்காமல் ஒருவரின் வீட்டில் தங்கும்போது உள்ளூர் அனுபவம் அதிகமாகக் கிடைக்கும் என்கிறார் ஐஸ்வர்யா.

பயணங்களின்போது அவர் சந்தித்த பெண்கள், தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாதைக்கு மிக முக்கியக் காரணம் என்கிறார்.

”பாங்காக்கில் கொசாமோயி (Ko Samui) தீவுக்குச் சென்றேன். அங்கு எம்மா என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியாக வாழும் பெண்ணை சந்தித்தேன். சென்னை வரை தனியாக அவர் பயணித்துள்ளார். அவருடன் இணைந்து நீண்ட நாட்கள் தாய்லாந்தில் பயணித்தேன். பயணங்களின்போது மெக்சிகோ, அர்ஜெண்டினாவை சேர்ந்த என்னைப் போன்ற பல பெண்களைச் சந்தித்துள்ளேன்.

ஆஸ்திரியாவுக்கு பயணம் செய்தபோது அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு நடிகையைச் சந்தித்தேன். 37-38 வயதில்தான் அந்நாட்டில் திருமணம் குறித்தே சிந்திப்போம் என அவர் கூறினார். ஒவ்வொரு நாட்டிலும் இந்த வயது மாறுகிறது. 

65 வயது வரை ’சிங்கிளாக’ உள்ள பெண்கள் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களுடைய வாழ்க்கை, விருப்பங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்.”

பிரான்ஸ், குரேஷியா, ஸ்பெயின், இத்தாலி, ருமேனியா, செக் ரிபப்ளிக் உள்ளிட்ட நாடுகளுக்குத் தனியாகப் பயணித்துள்ள ஐஸ்வர்யா, பயணிக்கும்போது தன்னுடைய வேலையிலிருந்து விலகி, ஓராண்டுவரை இடைவெளி எடுத்து தன்னுடைய சேமிப்பைக் கொண்டு பயணிப்பதாகக் கூறுகிறார்.

”ஐரோப்பாவில் சுமார் 6 மாதங்கள் வரை இருந்திருக்கிறேன். ஒரு நாட்டுக்குச் செல்லும்போது எதுவுமே பிளான் செய்ய மாட்டேன். 3-5 நாட்கள் என செல்ல மாட்டேன். ஒரு டைம்டேபிள் போட்டுப் பயணிக்க முடியாது. எங்கு செல்கிறேனோ அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு நான் என்னைத் தகவமைத்துக்கொள்வேன். உள்ளூர் ஆளாகவே மாறிவிடுவேன். உள்ளூர் ஆட்கள் நம்முடன் நண்பர்களாகி விடுவார்கள். தனியாக இருக்க மாட்டீர்கள்,” என உற்சாகத்துடன் கூறுகிறார் ஐஸ்வர்யா.

பயணங்களின்போது உணவுக்கு அதிகமாக செலவழிக்காமல் இருக்க, ஜூஸ், பிரெட், சீஸ், பழங்கள் இவற்றைத்தான் அதிகமாகச் சாப்பிடுவதாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா.

அம்மா ஆனால்தான் நீ பெண் எனக் கூறுவார்கள், அப்படியெல்லாம் இல்லை. அப்படி சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைக் கேட்டுக் கேட்டு அதைத்தான் உண்மை என நம்புகிறோம். நீங்கள் குரோஷியாவில் ஏட்ரியாட்டிக் கடலை பார்க்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழவில்லை என்று அவர்களிடம் நான் சொல்வேன்.” 

பயணங்கள் வாயிலாக பல மொழிகளைக் கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, தெலுங்கு, மலையாளம், இந்தி, ஸ்பானிஷ், இத்தாலி, குரோஷியன், போர்ச்சுகீஸ் என 9 மொழிகள் தனக்குத் தெரியும் என்கிறார். பயணங்கள் தவிர்த்து புத்தகங்களையும் தன் துணையாக கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. 

"நான் நிறைய படிப்பேன், பயணங்களின்போது புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். தனியாக ரெஸ்டாரண்ட் செல்லும்போது புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். புத்தகங்கள் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. புத்தகம் படிக்கும்போது நாம் வேறு ஓர் உலகத்தில் இருப்போம்,” என்றார்.  

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH

“தனிமையில் வாழவில்லை”

”சிங்கிள்’ பெண்கள் என்றால் எப்போதும் கவலையாக இருப்பார்கள் என்றுதான் சமூகம் நினைக்கிறது. ஆனால், நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யமாக செய்ய நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்த விஷயம் ‘பார்ட்னர்’ மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. 

திருமணம் செய்யவில்லை என்றால், நீங்கள் தனியாக இருப்பீர்கள் என்பதில்லை. உங்கள் வாழ்க்கையில் நிறைய பேர் வருவார்கள்.  திருமணம் ’நார்மல்’ என்றும் சிங்கிளாக இருப்பது ’நார்மல்’ இல்லை எனவும் நினைக்கிறோம். ஆனால், எதிர்கருத்துதான் ’நார்மல்’ என நான் கூறுகிறேன்” என்றார் ஐஸ்வர்யா.

இதற்குப் பின் திருமண எண்ணம் தோன்றுமா எனக் கேட்டால், “நான் இனி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என தீர்க்கமாகக் கூறுகிறார். 

“உங்கள் மீது நம்பிக்கை வேண்டும்”

”40 வயதாகிவிட்டது என்பதால் நான் சோர்ந்துவிடவில்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இல்லையென்றால் உலகம் உங்களிடம் அன்பாக இருக்காது. அதனால் உங்களை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். என்னை மற்றவர்கள் ’ஆண்ட்டி’ என்றுகூட கூறலாம். ஆனால், எனக்கு என் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மற்றவர்கள் கூறும்போது நமக்கு கவலை இருக்காது. 

புதிதாக ஒன்றை முயல்வதற்கு எப்போதும் தயங்கக்கூடாது என்பதுதான் பயணங்கள் வாயிலாக நான் கற்றுக்கொண்ட ஒன்று. தெரியாத இடத்திற்குச் செல்லும்போது நிச்சயம் உங்களுக்கு உதவி வந்து சேரும்,” என்றார். 

தன்னுடைய பயணங்கள், தான் சந்தித்த பெண்கள் குறித்து புத்தகம் எழுதத் திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்தகட்டமாக, ஐரோப்பா சென்று பாலினம், மனித உரிமைகள் குறித்து படிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cekx5dpx0e4o

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

2 months 2 weeks ago
சுதந்திரத்தின் குறியீடு மயிர் பெருமாள்முருகன்

spacer.png

ல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை. 

இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளும் பாணி ‘அடங்காமை’ என்று அர்த்தப்படுத்தும் வகையிலானது. ஆசிரியரின் அதிகார மனநிலையைச் சீண்டுவதாக அது இருக்கிறது என்னும் கருத்தை மையப்படுத்திப் பலவற்றை இக்கட்டுரைகளில் பேசியுள்ளேன்.  

பழந்தமிழ் முதல் நவீன இலக்கியம் வரை

‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலில் இந்த மயிர்ப் பிரச்சினையை வைத்துச் ‘சிலுப்பி சிலம்பரசன்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். ஒரு மாணவர் தம் தலை மயிரை மேலும் கீழுமாக அசைப்பதைக்கூடத் தாங்க முடியாதவர்களாக ஆசிரியர்கள் இருப்பதைப் பேசும் கட்டுரை அது. அந்நூலுக்கான முன்னுரையின் தலைப்பு ‘ஆசிரியருக்கு உகந்த கருவி கத்திரிக்கோல்.’ 

ஒரு மாணவரைப் பார்த்ததும் அவர் தலை மயிர் மீதுதான் ஆசிரியரின் கண் முதலில் பதிகிறது. கையில் கத்திரிக்கோலைக் கொடுத்துவிட்டால் வெட்டுவதற்கு ஆசிரியர்கள் தயங்க மாட்டார்கள். சில பள்ளிகளில் அப்படி நடந்த செய்திகளும் வந்திருக்கின்றன. அடக்கம், அடங்காமை ஆகியவற்றின் குறியீடாக ஆசிரியருக்கு மயிர் தோன்றுகிறது. மாணவர்களை அடக்கி மேய்த்தல்தானே கல்வி நிறுவனங்களின் வேலை?

 

6245f0f1b6036.jpeg

மாணவர்களை அணுகுவதில் நேரும் மயிர் தொடர்பான பிரச்சினை பற்றித் தொடர்ந்து கவனம் கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது. சமீப காலத்தில் இந்தப் பார்வை என்னிடம் கூடியிருப்பதாகவும் தோன்றுகிறது. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தலை மயிர் எப்படியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆசையுள்ளது. திரைப்படங்களில் காட்சி ரூபமாகப் பதிவாகியிருப்பவற்றையும் காண வேண்டும். இவையெல்லாம் மிகவும் முக்கிய ஆவணம். புத்தகம் கைக்கு வந்துசேர்வதற்கு முந்தைய நாள் இரவு பார்த்த படம் ‘கட்டா குஸ்தி.’ அப்படத்திலும் மயிர் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையில் மாற்றத்தைக் கோரும் காலம் இது. பெண்கள் பரவலாகக் கல்வி கற்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கற்ற பிறகு கணிசமாக ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களின் உடை, தோற்றம், உணவு ஆகியவை பெருமளவு மாறிவிட்டன. திருமணம், குடும்பம், வாழ்முறை பற்றிய பார்வைகளிலும் மாற்றங்கள். ஆனால், அந்த அளவுக்கு ஆண்களிடம் மாற்றம் வரவில்லை. புற வாழ்முறையை மாற்றிக்கொண்டாலும் பெண்கள் தம் தாயைப் போன்றவர்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். 

தம் வாழ்க்கையில் பெண்ணைப் பற்றி யோசிக்கும்போது அவர்களுக்குத் தாய்தான் நினைவுக்கு வருகிறார். சேலையும் தலைமயிரும் தாயின் தோற்ற அடையாளம். அவற்றுக்கும் அன்புக்கும் அல்லது தாய்மைக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்று நம்புகிறார்கள். வாழ்வியல் விழுமியங்களில் இன்று உருவாகியுள்ள மாற்றங்கள் ஆண்களின் மனதை அவ்வளவாகத் தீண்டவில்லை. மாற்றங்களை உணர்ந்து தம்மையும் மாற்றிக்கொள்ளும் ஆண்கள் சுலபமாக இன்றைய பெண்களையும் திருமண வாழ்வையும் எதிர்கொள்கிறார்கள். மாற மறுப்பவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.

பொய் மயிர் எனும் ரகசியம்

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெண்களைப் பற்றிய பழைய விழுமியங்களுக்கும் இன்றைய மாற்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் பேசுகிறது. பெண்களைப் பற்றிப் பேசும் ஆண்களின் பழமைப் பார்வைகள் கேலிக்குரியனவாகப் படத்தில் வெளிப்படுகின்றன. பெண்கள் பேசுபவனவும் அப்பார்வைகளும் நவீனமாகவும் தர்க்கத்திற்கு ஏற்றவையாகவும் உள்ளன. வெகுஜனப் படம் ஒன்றில் இப்படிப் பழைய விழுமியங்களை எள்ளி நகையாடி அவற்றுக்கு எதிராகக் காட்சிகள் அமைவது அபூர்வம். நம் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பெண்களின் உடை, மயிர் பற்றியெல்லாம் அளந்து அறிவுரை பிதற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் முக்கியமானதாகவே படுகிறது. இனி வெகுஜன கருத்தியலும் மாற்றம் பெறும் என்பதற்கான அறிகுறி இப்படம். 

 

624f213d5f1b2.jpg

பெண்களைப் பற்றிச் சுயபார்வை அற்ற கதாநாயகன் தன் மாமன் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். பெண்ணை அடக்கி ஆள்பவன்தான் ஆண். அதற்குப் பெண் படித்திருக்கக் கூடாது; ஆண் என்ன செய்தாலும் கேட்கக் கூடாது; சமையல் செய்துகொண்டு ஆணின் வரவை எதிர்பார்த்து வீட்டிலிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். கூடுதலாகப் பெண் என்றால் நீள மயிர் வேண்டும் என்கிறான். இடுப்புக்குக் கீழ் தொங்கும்படி மயிர் கொண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். கதாநாயகி ‘கட்டா குஸ்தி’ கற்று அப்போட்டிகளில் திறம்படச் செயல்படுபவள். தந்தையின் கட்டாயத்திற்காகக் குஸ்தி கற்றதையும் பட்டப்படிப்பு முடித்ததையும் மறைத்து பொய் மயிரை நீளமாகப் பொருத்திக்கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். 

ரகசியத்தின் வாசனை

திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் குஸ்தி, படிப்பு ஆகியவற்றை மறைத்திருப்பதில் அவளுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. பொய் மயிரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போதே அவன் ‘முடியப் பாத்தியா? பாம்பு மாதிரி எவ்வோ நீளம்’ என்று வியக்கிறான். ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்’ என்று வருணிக்கும் மரபில் வருபவன் என்பதை அவன் சொல்லும் உவமையே உணர்த்துகிறது.

திருமணத்திற்கு நாயகன் ஒத்துக்கொள்ள முக்கியமான காரணம் முழங்காலைத் தொடும் நீள மயிர். அந்தப் பொய் மயிர் ரகசியத்தைப் பாதுகாக்க அவள் பெரும்பாடு படுகிறாள். முதலிரவு முடிந்து காலையில் எழுகிறாள். பொய் மயிர் கழன்று படுக்கையில் கிடக்கிறது. அதன் மீது கணவன் படுத்திருக்கிறான். அவன் தூக்கத்தைக் கலைக்காமல் பெரும்பாடு பட்டு மயிரை உருவி எடுக்கிறாள். குளிக்கையில் அதைக் கழற்றித் தொங்கவிடுகிறாள். கழுத்து வரை இருக்கும் தன் சொந்த மயிரை நீரில் நனைத்து ஆனந்தமாகக் குளிக்கிறாள்.  பொய் மயிரை அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். 

பொய் மயிர் நனையாமல் இருப்பதைக் கண்ட கணவன் ‘போய்த் தலைக்குக் குளிச்சிட்டு வா’ என்று மீண்டும் அவளைக் குளியலறைக்கு அனுப்புகிறான். அதற்கு ஷாம்பு போட்டுக் கழுவி அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். கணவனுக்குத் திருப்தி. பொய் மயிரை உண்மையென நம்பும் கணவன் அதற்குச் சாம்பிராணிப் புகை போட்டுவிடுகிறான். ‘இதெல்லாம் உங்கம்மா உனக்குச் சொல்லித் தர்லியா?’ என்று கேட்கும் அவன் ‘முடி வளக்கறது பெரிசில்ல, அத மெயின்டெயின் பண்ணனும். அதுதான் முக்கியம்’ என்று அவளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்கிறான்.

 

6252fc83694f8.jpg

அவள் மயிரை அப்படி ரசிக்கிறான். சடையை முன்னால் எடுத்துவிட்டுக்கொள்ளச் சொல்லி அழகு பார்க்கிறான். மயிரை மோந்து பார்த்து அதன் மணத்தில் மெய் மறக்கிறான். மயிர் அவன் முகத்தில் மோதுவதில் கிளர்ச்சி அடைகிறான். மனம் நம்பும்போது பொய் மயிரும் இவ்வாறு மயக்கம் தரும் போல. இக்காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு நகைப்பையே தருகின்றன. இப்படியெல்லாம் அவன் ரசனைக்கு உரியதாக இருப்பது பொய் மயிர்தான் என்பதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்னும் பதற்றத்திலேயே எப்போதும் நாயகி இருக்கிறாள். அது தொடர்பான காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்தாலும் பல கோணங்களில் பார்க்கத் தூண்டுகின்றன. 

குளியலறையில் எரிச்சலுடனும் சினத்துடனும் பொய் மயிரைப் போட்டுத் துவைத்து எடுக்கிறாள். அது மயிரைத் துவைப்பது அல்ல, மயிர் பற்றி இன்னும் நீடிக்கும் விழுமியப் பார்வையைப் போட்டு அடித்துத் துவம்சம் செய்வதுதான். நீள மயிரைப் பராமரிப்பது சாதாரணம் அல்ல. கொஞ்சமாக இருக்கும் மயிரைப் பராமரிப்பதே இன்றைய காலத்தில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. கல்வி, வேலை உள்ளிடப் பல பொதுவெளிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மயிர் குறைவாக இருப்பதுதான் வசதி. ஆண்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளக் கழுத்தில் உரசும் அளவுக்கு மட்டும் வளர்த்துக்கொள்வது போதுமானதாக இருக்கிறது. அதையும் அலையவிடும் பாணியில் சீவிக்கொள்வதை விரும்புகிறார்கள். 

துறத்தலும் சுதந்திரமும்

முந்தைய காலத்தில் சடை போட்டுக்கொள்ளப் போதுமான மயிர் இல்லை என்றால் சவுரி முடி வைத்துக்கொள்வார்கள். கொண்டை போட்டுக்கொள்பவர்களும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சவுரி சேர்ப்பார்கள். கிராமத்துச் சந்தைகளில் சவுரிக் கடைகள் தனி வரிசை கட்டி இருக்கும். இன்று அப்படி இல்லை. சாதாரண நாட்களில் சவுரி வைத்து நீளச் சடை போடுதல் வழக்கொழிந்து போயிற்று. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மரபான அலங்காரம் செய்கிறார்கள். அப்போது சவுரி முடி வைத்து இடுப்புக் கீழ் வரை விட்டுப் பின்னுகிறார்கள். நீள மயிர் என்பது இன்று சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.

 

6259802f6265d.jpg

இள வயதில் வழுக்கை விழும் ஆண்களுக்காகத்தான் நவீனமான பல கடைகள் செயல்படுகின்றன. பெண்களும் தம் மயிரைப் பராமரிக்க நவீன முடிதிருத்தகங்கள் பல உள்ளன என்றபோதும் அவை மரபிலிருந்து மாறுபட்டவை. பெண் என்றால் நீள மயிர் இருக்க வேண்டும் என்பது காலாவதியான மிகப் பழைய பார்வை. அதை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்க்கும் ஆண்கள் ஏமாந்துதான் போக வேண்டும். அவர்களுக்குத் திருமண வாழ்க்கை பிரச்சினைதான்.

இப்படியெல்லாம் பேச வாகாக இப்படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் உச்சமான ஒரு காட்சி. எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன் அடிவாங்கிக் கிடக்கிறான். அவனைக் கொல்ல ஒருவன் முயல்கிறான். அப்போது வெகுண்டெழும் கட்டா குஸ்தி சாம்பியனான கதாநாயகி எதிரிகளை அடித்து நொறுக்கிக் கணவனைக் காப்பாற்றுகிறாள். சண்டையின்போது ஒருகட்டத்தில் அவளது பொய்மயிரை ஒருவன் பிடித்து இழுக்கிறான். அந்த நெருக்கடியிலும் பொய்மயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று ‘விடுரா’ என்று அவனை எச்சரிக்கிறாள். அவன் ‘என்ன, வலிக்குதா?’ ஏளனமாகக் கேட்கிறான். முடியைப் பிடித்து இழுத்தால் பெண்கள் அடங்கிவிடுவார்கள் என்று எண்ணம். மனைவியை அடிக்கும் கணவன் பற்றிக்கொள்ளத் தலை மயிர் பிடியாகப் பயன்பட்டதுண்டு. அதைப் பற்றிய உரையாடல் ஒன்றும் படத்தில் உள்ளது.

மயிரைப் பற்றிக்கொண்டு ஏளனமாகப் பேசுபவனைத் திரும்பி அடிக்கிறாள் நாயகி. அவனை அடிக்கும்போதும் விடாமல் இழுப்பதால் அவன் கையோடு வந்துவிடும் பொய்மயிர் கணவனின் முகத்தில் மோதிக் கீழே விழுகிறது. அதிர்ச்சியோடு அதைக் கணவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பொய்மயிர் கழன்றதும் பெரிய பாரம் தன் தலையிலிருந்து இறங்கிவிட்ட நிம்மதியுடன் அவன் தலையை அசைக்கிறாள். இயல்பான கழுத்தளவு மயிரைச் சிலிர்த்துக்கொண்டு இருபுறமும் அசைத்துப் பின் தலையை மேலுயர்த்துகிறாள். கண்களை மூடிக் கையால் நடுத்தலையைத் தடவுகிறாள். காற்றில் அலைந்து எல்லாப்புறமும் பறக்கிறது மயிர்க்கற்றை. இது ஒருகணக் காட்சி. 
 

spacer.png

பொய் மயிரைத் துறந்ததும் அவள் அனுபவிக்கும் சுதந்திரம் அக்கணத்தில் அற்புதமாகக் காட்சியாகிறது. இக்காட்சியை மட்டும் கிட்டத்தட்டப் பத்து முறை பார்த்திருப்பேன். மயிர் அலைதலும் அப்பெண்ணின் முகம் கொள்ளும் ஆனந்தமும் ஆசுவாசமும் பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பை ஏற்படுத்தின. அது வெறும் மயிர் அல்ல; குறியீடு. ஆம், மயிர் என்பது இன்றைய தலைமுறை பெற்றிருக்கும் சுதந்திரம், சமகால வாழ்வியல் ஆகியவற்றை உணர்த்தும் காத்திரமான குறியீடு.

 

https://www.arunchol.com/perumal-murugan-on-hair-style-and-gatta-kusthi

 

 

கடந்தும் நிற்கும் நினைவுகள்…

2 months 2 weeks ago
கடந்தும் நிற்கும் நினைவுகள்…
image

ஒவ்வொரு முறையும் ஒரு வருடத்தைக் கடந்து போகும் போது, 'இந்த வருடத்தில் எனக்கு அது கிடைக்கவில்லையே, எனக்கு இது நடக்கவில்லையே' என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். இவ்வாறு நாம் சலிப்போடு கடந்துபோகும் ஒவ்வொரு வருடமும் ஒரு பாடம் தான். அத்தனை ஆண்டுகளும் அனுபவம் தான். 

மலை உச்சியில் நின்று பார்க்கும்போது ஊரின் மொத்த அழகும் தெரிவதுபோல, ஒரு வருடம் முடியும் போது அதைத் திரும்பிப் பார்த்தோம் என்றால் அதன் மொத்த அர்த்தமும் புரியும். கடந்த வருடத்தில் நாம் திரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள் பற்றி இங்கு பார்ப்போம். 

1. கடந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த சில நல்ல மனிதர்கள் யாரென்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு கிடைத்த நல்ல நண்பர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். 

2. கடந்த ஆண்டு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் தவற விட்டிருக்கலாம். அதையே நினைத்து வருத்தப்படலாம். போனது வெறும் வாய்ப்பு தான், வாழ்க்கையில்லை. வானம் அளவுக்கு வாய்ப்புகளை, வரப்போகும் வருடங்கள் கொண்டுவரப் போகின்றது. 

3. கடந்த வருடத்தில் உங்களை அதிகமாக சிரிக்க வைத்த நாள் எது? மகிழ்ச்சியில் உலகத்தையே மறக்க வைத்த நாள் எது? என்று யோசித்து பாருங்கள். அது உங்கள் பிறந்த நாளாகவும் இருக்கலாம். அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் நீங்கள் செலவழித்த நாளாகவும் இருக்கலாம். அந்த தினத்தை திரும்பிப் பாருங்கள். எப்போது நினைத்தாலும் சின்ன சிரிப்பை சிதற வைக்கும் நாட்களை, சின்ன சின்ன ஞாபகங்களை கொடுத்த ஆண்டுக்கு நன்றி சொல்லுவோம். 

4. வழக்கம்போல கடந்த வருடமும் சில அவமானங்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அதை நினைத்து மனம் நொந்து இருக்கலாம். கிடைத்த அவமானங்களை கவனமாக சேர்த்து வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றும் வல்லமை பெற்றது. 

5. கடந்த வருடத்தில் உங்களுக்குப் பிடித்த சிலர், உங்களிடம் இருந்து விலகி இருக்கலாம். அவர்களிடம் இருந்து எந்த செய்தியும் உங்களுக்கு வராமல் இருக்கலாம். அதைப் பற்றி அதிகம் யோசிக்காதீர்கள். சில மனிதர்களைக் கடந்து போக பழகிக்கொள்ளுங்கள். 

6. கடந்த வருடம் நீங்கள் மிகவும் ரசித்து சாப்பிட்ட உணவு எது? எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும். அந்த உணவைப் பற்றி மனதில் அசைபோட்டுப் பாருங்கள். 

7. உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர், உங்கள் நண்பர் அல்லது உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த நபர்களில் யாராவது, உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து இருக்கலாம். 'இவங்க இப்படி பண்ணிட்டாங்களே' என்று அதை நினைத்து வருடம் முழுவதும் வருத்தப்பட்டு இருப்பீர்கள். முடிந்தால் அவர்களை மன்னியுங்கள். மன்னிப்பை விட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை. மன்னிக்க மனம் வராத நேரத்தில் மறக்க கற்றுக்கொள்ளுங்கள். சில நேரங்களில் மறதி கூட வரம் தான்.

 

https://www.virakesari.lk/article/144729

வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள்

2 months 3 weeks ago
வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி மீது நமக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்பிக்கை வருகிறது. ஆண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படும் விசித்திரமான பாரம்பரிய கொண்டாட்டாங்களைப் பார்க்கலாம்.
New Year 2023 : வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை - விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள்

 

புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வருடத்தின் முதல் நாள் என்பதால் அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களுக்கு தெரிந்த கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆனால் இப்படியெல்லாமா புத்தாண்டை தொடங்குவார்கள் என வினோதமாக பார்க்க வைக்கும் சில நிகழ்வுகளும் உலகம் முழுவது நடைபெறுகிறது.

 
 
சோளக்காட்டு பொம்மை எரிப்பு

தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் புத்தாண்டை கொண்டாட சோளக்காட்டு பொம்மைகளை எரிக்கும் வினோத பழக்கம் இருக்கிறது.

அந்த சோளக்காட்டு பொம்மைகளுடன் பழைய கெட்ட நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும், காகிதங்களையுன் எரிக்கின்றனர்.

இவ்வாறு நள்ளிரவில் சோளக்காட்டு பொம்மைகளை எரித்து நெருப்பின் ஒளியில் புத்தாண்டை வரவேற்பதன் மூலம், பழைய மோசமான நிலையை எரித்து புதிதாக பிறக்க முற்படுவது தான் இந்த கொண்டாட்டம்.

 

உடைந்த தட்டுகள்

டென்மார்கில் ஒருவர் புத்தாண்டு அன்று எழும் போது அவரது வீட்டு வாசலில் எத்தனை உடைந்த தட்டுகளைப் பார்கிறாரோ அவ்வளவு அதிர்ஷ்டம் எந்த ஆண்டு அவருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த உடைந்த தட்டுகாள் எங்கிருந்து வரும்?

அவரவர் வீடுகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத தட்டுகளை இவ்வாறு நண்பர்கள் மற்றும் விருப்பமான உறவினர்கள் வீட்டு வாசலில் உடைத்து போடுவர்.

அதிகமான நண்பர்களைக் கொண்டவர் வாசலில் அதிக தட்டு இருப்பது லாஜிக். அதிக தட்டுகள் அதிக அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் என்பது நம்பிக்கை.

 
 
108 மணியோசைகள்

ஜப்பானில் புத்தாண்டு அன்று 108 முறை மணி அடிக்கப்படுகிறது. இப்படி 108 மணியோசையைக் கேட்பவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இது ஒரு புத்த பாரம்பரியம்.

தவிர, சிரித்தபடி மகிழ்வாக இருப்பது ஆண்டு முழுவதும் நம்மை மகிழ்வாக இருக்கச் செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

newssensetn%2F2022-12%2F01bae7bb-7676-4a
 
கலர் உள்ளாடைகள் அணிவது

புத்தாண்டு குறித்து உலகம் இருக்கும் நம்பிக்கைகளில் இது விநோதமான ஒன்று.

நாம் எந்த நிற உள்ளாடை  அணிகிறோம் என்பது கூட நமக்கு அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்குமாம்.

இந்த ஆண்டில் நாம் அதிக அன்பை நாடுகிறோம் என்றால் சிகப்பு நிற உள்ளாடை அணிய வேண்டுமாம்.

நமக்கு செல்வம் வேண்டுமென்றால் மஞ்சள் நிறமும் அமைதி வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலும் உள்ளாடை அணிய வேண்டுமாம்!

 

வட்டமான பொருட்கள்

பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கையும் மிகவும் வினோதமானது தான்.

புத்தாண்டு பிறக்கும் இரவில் தங்களைச் சுற்றி வட்டமான பொருட்களை வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

நாணயங்கள் முதல் வளையங்கள் வரை பல வகையான பொருட்களை தங்களை சுற்றி வைத்துக்கொள்வது அதிர்ஷ்டம் தான்.

வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரியும் பழக்கம்

புத்தாண்டு அன்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்க பழைய பொருட்களை தூக்கி எரியும் பழக்கம் என்பது பரவலாக உலக நாடுகளில் பார்க்க முடியும்.

இத்தாலியில் மக்கள் தங்களது பழைய சோபா, பீரோ, நாற்காலி என உபயோகமற்ற வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரிவது வழக்கமாம்.

பொருட்களை ஜன்னல் வழியாக வீசி அது உடைவதைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

 
காகித குப்பையை எரியும் மக்கள்

வெள்ளைக் காகிதங்களையும் வண்ண வண்ண சிறிய காகிதங்களையும் தங்களது ஜன்னல் வழியாக வீசி எரிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர் அர்ஜென்டினா மக்கள்.

இது போல காகிதங்களை எரிவது பழைய விஷயங்களைத் துறந்துவிட்டு புதிய வாழ்க்கைகுள் நுழைவதைத்தான் குறிக்கிறது.

 
மிருகங்களிடம் பேசுங்கள்; கரடி ஆட்டம் போடுங்கள்

ரோமானிய விவசாயிகள் புத்தாண்டு அன்று தங்களது விலங்குகளுடன் நேரம் செலவிடுகின்றனர்.

அவற்றுடன் பேசி அவற்றை மகிழ்வாக வைத்திருந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

ரோமானிய மக்கள் புத்தாண்டு அன்று கரடி வேஷமிட்டு ஆடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி ஆடினால் தீய சக்திகள் தங்களை அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.

ரோமானியாவின் இதிகாச கதைகளில் கரடிகள் மக்களைக் காக்கும் ஹீரோக்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரேசில் பருப்பு – ஸ்பெயின் திராட்சை

பிரேசிலில் புத்தாண்டு அன்று லென்டில் (மைசூர் பருப்பு) எனப்படும் பருப்பை சாப்பிட்டால் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

அது தவிர மாதுளை மற்றும் சிக்கன் உண்பதையும் பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.

இதேப் போல ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறந்ததும் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் பிறக்கும் என நம்புகின்றனர்.

Thinakkural.lk

Checked
Tue, 03/21/2023 - 14:44
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed