நடப்புச் செய்திகள், ஆக்கங்களுடன் தமிழில் தனித்துவமான கருத்தாடல்கள் சங்கமிக்கும் இடம்
இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி நடப்பதாக ஈழத் தமிழர்களின் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முகமது ஆலம் கூறியதாவது: இலங்கையில் மீனவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டம் அமைப்பது தொடர்பாக இந்திய குழு ஒன்று ஆய்வு செய்துவிட்டு திரும்பி உள்ளது.
இலங்கைக்கான எரிபொருட்களை இந்தியா வழங்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் வகையில் இந்தியா செயற்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள வளங்களை இலங்கை அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். ஆனால் எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கிறது இலங்கை அரசு. இதனால் இலங்கை வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு பகுதியையும் கூறு போட்டு அரசாங்கம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அதானி குழுமத்தின் துறைமுகங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் இலங்கையில் கால் பதிக்கிறது அதானி குழுமம். இலங்கையின் வடக்குப் பகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாம் ஏற்க முடியாது. இவ்வாறு ஈழத் தமிழ் மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர்.
https://tamil.oneindia.com/news/srilanka/eelam-tamils-oppose-to-adani-groups-project-in-northern-srilanka-464074.html
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட சில பிரிவினர் மாத்திரம், அத்தியாவசிய சேவையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தரப்பினர் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார சரிவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் ரணில் அரசின் திட்டங்கள் என்னென்ன?
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்? - முழுமையான விளக்கம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றிரவு கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த ஏனைய தரப்பினர், தமது வீடுகளில் இருந்தவாறு தமது பணிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள அசௌரியமான சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறு இல்லையென்றால், பெட்ரோலிய கூட்டுதாபனம் வசம் காணப்படுகின்ற, குறிப்பிட்டளவு எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலான தீர்மானத்தை, அந்தந்த பாடசாலைகளின் பிரதானிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருக்கு எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.
பட மூலாதாரம்,PMD
படக்குறிப்பு,
ஹேமந்த ஹேரத்
பாரியளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தாத, கிராமிய மட்டத்திலுள்ள பாடசாலைகளை நடத்தி செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதைதவிர, பிரதான நகரங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முறையாக விநியோகிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கான பொது போக்குவரத்து சேவைகளை, அரச பேருந்துகளை பயன்படுத்தி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை பெரும்பாலும் இடைநிறுத்துவதற்கு ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறை ஆகியவற்றை, கையிருப்பில் காணப்படுகின்ற எரிபொருளை கொண்டு, முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டு மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
அவசர நோய் நிலைமைகளின் போது என்ன செய்வது?
இலங்கையில் தனிநபர்களுக்கு எரிபொருள் விநியோகம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமது வீடுகளிலுள்ளவர்கள் அல்லது அயலவர்களுக்கு ஏதேனும் அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் செயற்பட முடியாத நிலைமையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அவசர நோய் நிலைமையை எதிர்கொள்ளும் நோயாளி ஒருவரை, விரைவில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் தற்போது பாரிய சவால் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமையினால், பிறந்து இரண்டு நாளேயான சிசுவொன்று பதுளை மாவட்டத்தில் உயிரிழந்திருந்தது.
அதேபோன்று, நிகவரெட்டிய பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கர்ப்பிணித் தாய் ஒருவர், தனது சிசுவை, வீட்டிலேயே ஈன்றெடுத்த சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.
கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்கி மக்கள், இன்று முழுமையாகவே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசர தேவைகளின் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம், பிபிசி தமிழ் வினவியது.
நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அவசர ஆம்புலன்ஸ் சேவையை, அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையானது, நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், மக்கள் தமக்கான போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை அடையாளம் கண்டு, அதற்கான முன் ஆயத்த திட்டங்களை செய்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் போது, உதவிகளை வழங்கும் வகையில், தமது பிரதேசங்களில் அவசர தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில், வாகனமொன்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு, சுகாதார தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
அவசர நோய் நிலைமைகளின் போது, 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
போலீஸ் நிலையமொன்றில் ஒரு ஆம்புலன்ஸ் மாத்திரமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், அவசர தேவைகளின் போது, போலீஸார் தமது வாகனங்களில் உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் வினவியது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
''போலீஸ் அதிகாரிகள், மக்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். போலீஸாருக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேவை தற்போது காணப்படுகின்றது. எனினும், பொதுமக்களுக்காக செய்ய இயலுமான அனைத்து விதமான சேவைகளையும் அர்ப்பணிப்புடன் செய்ய நாம் தயாராகவுள்ளோம்" என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களை நடத்திச் செல்வதில் சிரமம்
போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படை ஆகியன எரிபொருள் விநியோகிப்பதற்கான அத்தியாவசிய சேவைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகத்துறையை இதில் சேர்க்கவில்லை.
இதனால், இலங்கையில் ஊடகத்துறையை நடத்திச் செல்வதில் தற்போது பாரிய சிரமங்கள் காணப்படுகின்றன.
ஊடக நிறுவனங்களிலுள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை விநியோகிப்பது தொடர்பில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றுடன், ஊடகத்துறை அமைச்சு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தேவையான பெட்ரோலை விநியோகிக் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
பொதுப் போக்குவரத்து இயங்கும்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்கள் இன்று சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனினும், தனியார் பஸ்களின் போக்குவரத்து இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், மக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தும் முச்சக்கரவண்டி போக்குவரத்து தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றமையினால், மக்கள் இன்று பல்வேறு விதமான துன்பங்ளை அனுபவித்து வருகின்றனர்.
https://www.bbc.com/tamil/sri-lanka-61935978
இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (28/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளால், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27/06/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் - அரசு முடிவு
"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர்
இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன?
அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
https://www.bbc.com/tamil/sri-lanka-61961996
புதிய பதிவுகள்



- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
- பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
- தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி
- இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
- பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
- பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி
- இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
- பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
- உபத்திரவ நாய்: மரநாய்.
- பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி
- பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
- பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி
- உபத்திரவ நாய்: மரநாய்.

ஊர்ப்புதினம்
- இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
- இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
- யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது
- இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்
- இலங்கையின்... ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு, உதவ தீர்மானித்தது சீனா!
- இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

உலக நடப்பு
- பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி
- அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?
- தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !
- ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி
- பெலரஸூக்கு... குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக, ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு
- ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்

தமிழகச் செய்திகள்
- "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன?
- நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள்
- கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?
- LGBTQ+: "திருமணம், குழந்தை தத்தெடுப்பு உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்" - திரும்பிப் பார்க்க வைத்த 'சுயமரியாதை' பேரணி
- ஜெயலலிதா மரணம்: ஓகஸ்ட் 3´இல், இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.
- குமரியில் ஜாமீன் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்ம மரணம்: காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்


வாழும் புலம்
- உரிமைக்காக எழு தமிழா!
- தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்
- கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்
- சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு.
- தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நிதி திரட்டியது குற்றமல்ல அது எனது உரிமை... நீதிவிசாரணை அமர்வு

அரசியல் அலசல்
சமூகவலை உலகம்

கதைக் களம்

கவிதைக் களம்

விளையாட்டுத் திடல்
- மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி
- கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ
- பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்!
- SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி
- புதிய சாதனையை படைத்த வீரர்!

தமிழும் நயமும்
எங்கள் மண்
- தமிழீழ படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள் - ஆவணம்
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Spy Tigers images
- கடன் வாங்கி தன் இனத்தை கொன்று குவித்த இலங்கை.
- இயற்கை உரம் இங்கு 10/- ரூபாய்க்கு வாங்கலாம்!
- முருங்கை பயிர்ச்செய்கை!
- வற்றாப்பாளை கண்ணகி அம்மன் வைகாசி பொங்கல்!
- சுழிபுரம் பறாளாய் முருகனின் தேர்த்திருவிழா!