நடப்புச் செய்திகள், ஆக்கங்களுடன் தமிழில் தனித்துவமான கருத்தாடல்கள் சங்கமிக்கும் இடம்
341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி: தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார் - நிமல் புஞ்சிஹேவா
By NANTHINI
29 JAN, 2023 | 10:39 PM
(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வார காலத்துக்குள் வெளியிடப்படும். இம்முறை 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எம்மால் செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேர்தல்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு,அத்தீர்மானங்கள் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தும் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் இணக்கத்துடன் எடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது.
ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த சார்ல்ஸ் பதவி விலகியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட அல்லது பிற காரணிகளினால் அவர் பதவி விலகியிருக்கலாம். பதவி விலகல் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வது கடந்த 21ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.
கால மதிப்பீட்டுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான திகதியை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வெளியிடுவார்கள். இதற்கமைய வேட்பு மனுத்தாக்கலை அடிப்படையாக கொண்ட விடயங்கள், தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இவ்வாரம் வெளியிடப்படும்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், தேர்தலை நடத்தக்கூடாது என பிறிதொரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எம்மால் செயல்பட முடியாது என்றார்.
https://www.virakesari.lk/article/146967
நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் 'திசைக்காட்டி'யின் ஆட்சி வரும் - அநுர குமார
By T. SARANYA
29 JAN, 2023 | 09:35 AM
(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கவுள்ளதால் தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் எம்மை ஆளத் தேவையில்லை என நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
" நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், மணற் கடத்தல்கார்கள், மதுக்கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் போன்றவர்களாவர். நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்கள் , மக்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தொழில்முறை பணியாளர்கள் 15 சதவீதம் உள்ளனர். அவர்களின் ஊதியத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் 500 பேர் வரையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது வைத்தியர்கள் 500 பேர் இந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு இவர்கள் நாட்டை விட்டு செல்வதால் நாடு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும்.
வெகு சீக்கிரமே எமது திசைக்காட்டியின் அரசாங்கம் தோன்றும். எவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் " என தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/146935
PreviousNext
மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் பாரிய ஊர்வலம்
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து ஹட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) நடைபெற்றது.
குறித்த ஊர்வலம் ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் நகர் ஊடாக டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்? மலையக மக்களை சிதைக்காதே? உறுதியளித்த பல்பலைக்கழகம் எங்கே? மலையக மக்களை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஊர்வலத்தில் சென்றதுடன், இவர்கள் இந்தியவிலிருந்து வரும் போது கொண்டு வந்த கலை அம்சங்களும் இதன் போது இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் கலை கலாசார அம்சங்கள் இடம்பெற்றதுடன் அவர்கள் தொடர்பான விசேட கருத்துரையும் இடம்பெற்றன.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இவர்களின் வாழ்வில் சொல்லக்கூடிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்த 200 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் கூட எங்களுக்கு என்று தனியான வீடு கிடையாது. காணி கிடையாது. ஒழுங்கான பாதைகள், பாடசாலை கல்வி சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். இதனை எடுத்து கூறும் முகமாகதான் இந்த 200 வருட ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்காலத்திலாவது இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்று நம்புகின்றோம் என தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய கிறிஸ்துவ குழு லங்கா சபை, மெத்தோதிஸ் தேவஸ்தானம் உட்பட அருட் தந்தையர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றன.
குறித்த ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பொது மக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-
https://tamil.adaderana.lk/news.php?nid=170226
புதிய பதிவுகள்




ஊர்ப்புதினம்
- 341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி: தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார் - நிமல் புஞ்சிஹேவா
- கடவுச்சீட்டுகளை வழங்க மேலும் 50 பிராந்திய மையங்கள்
- நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் 'திசைக்காட்டி'யின் ஆட்சி வரும் - அநுர குமார
- நீதியமைச்சருக்கு த.தே.கூ கண்டனம்
- மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் பாரிய ஊர்வலம்
- அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் - எம். கணேசமூர்த்தி

உலக நடப்பு
- New Zealand Flood: வரலாறு காணாத மழை; தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்; நிலைமை மோசமடையலாம் என தகவல்
- Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்?
- ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு!
- சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
- கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு
- சுற்றி வளைத்து தாக்கிய போலீஸ், 'அம்மா' என கதறிய நிக்கோல்ஸ் - வீடியோ மூலம் வெளிப்பட்ட தகவல்கள்

தமிழகச் செய்திகள்
- மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை
- இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக
- தமிழ்நாடு அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்
- வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு
- 'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்?
- மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

வாழும் புலம்
- சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு
- தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை
- கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்!
- ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை

அரசியல் அலசல்
சமூகவலை உலகம்

கதைக் களம்

கவிதைக் களம்

விளையாட்டுத் திடல்

தமிழும் நயமும்

எங்கள் மண்
- இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா !
- போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?
- தேசவழமைச் சட்டம் பற்றி சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன்
- அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்
- (VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்
- தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!
- மாவீரர் நாள் மரபாகி வந்த கதை