புதிய பதிவுகள்

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பிPublished By: Digital Desk 303 Apr, 2026 | 03:53 PMimageமட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்குமேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்துவந்தது.இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை வியாழக்கிழமை மாலை (02) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.இந்நிலையில், இவ்விடயம் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும்
விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல்"யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,"உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி"உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' -  குவைத்தில் நடந்த தாக்குதல் உணர்த்துவது என்ன?பட மூலாதாரம்,Getty Imagesபடக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல்கட்டுரை தகவல்கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத்பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த
பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பிPublished By: Digital Desk 303 Apr, 2026 | 03:53 PMimageமட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்குமேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்துவந்தது.இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை வியாழக்கிழமை மாலை (02) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.இந்நிலையில், இவ்விடயம் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின் பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியிரந்தோம் என இதன்போது போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,போரதீவுபற்று பிரதேசசபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை இன்போது பிரசன்னமாகியிருந்தனர்.1001348144.jpg1001348145.jpg1001348147.jpghttps://www.virakesari.lk/article/242651
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' -  குவைத்தில் நடந்த தாக்குதல் உணர்த்துவது என்ன?பட மூலாதாரம்,Getty Imagesபடக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல்கட்டுரை தகவல்கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத்பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும்
தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடிதம்கடிதம்கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம்
26-69ce9c2a0ed00.png?resize=750%2C375&ssதமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி.சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.2010-ஆம் ஆண்டில் ‘எம்.வி. சன் சீ’ (M.V. Sun Sea) கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் ஒருவரான குமார் துரைசிங்கம் என்பவரின் எதிர்காலம் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்தசங்கரி, “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது.நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்கட்டும். கடந்த காலங்களில், ‘சன் சீ’ கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், அங்கு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரிக்க கனடிய
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்April 2, 2026பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் — அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.  சிங்களவர்கள் ஏற்காமல் சமஸ்டி சாத்தியமில்லைசமஸ்டிக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக பார்க்கிற சிங்கள இனம் சமஸ்டியை ஏற்காதே? சிங்கள பௌத்த பேரினவாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்ற சிங்கள மக்கள் தமிழர்களின் கோரிக்கையை எப்படி ஏற்பார்கள்? பெரும்பான்மையான சிங்களவர்கள் அதனை ஏற்கும்
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்ஓம்கார் கரம்பேல்கர்பிபிசி மராத்தி4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப்
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்Published By: Vishnu30 Mar, 2026 | 10:33 PMimage(நா.தனுஜா)படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்21 Mar, 2026 | 11:47 AMimage(இணையத்தள செய்திப் பிரிவு )மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.written by admin December 13, 2020Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில்
உலக தாய்மொழி தினம் இன்றுFeb 21, 2026 - 10:49 AMஉலக தாய்மொழி தினம் இன்றுஉலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது. பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன. 1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்2 ஏப்ரல் 2026, 00:49 GMTஆர்டெமிஸ் 2Reutersநாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது.இந்திய நேரப்படி, வியாழன் அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது.ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்மதமாற்றம்1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்------------------------------------------------------------------large.Destruction.jpgதேசங்கள் வெட்கம் அற்றவைமெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போலஅடித்து பிடுங்கி அழித்துக் கொண்டேதர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவைபோலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள்நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்துவந்த பின் முகமூடியை  கழட்டி எறிந்து விட்டுகுதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஅயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டேபயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள்ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும்அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள்ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும்இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும்ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும்வெட்கமற்ற தேசங்கள் போலவேஅபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
2026-03-31T214831Z_1832960964_UP1EM3V1O23வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி.23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும்.4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது.போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது.இத்தாலி
தனித்து விடப்படும் முதியவர்கள்NillanthanBy Nillanthan - 4 months agoLess than a minuteFacebookTwitterGoogle+WhatsappShare via EmailIMG-20251020-WA0017-1024x682.jpgபுலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம்