புதிய பதிவுகள்

அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் முடிவெடுக்க வேண்டும் - ரிஷாத் பதியுதீன்Published By: Vishnu09 Apr, 2026 | 12:29 AMimage(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.Beaches & Islandsபாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ட்ரம்ப் என்ற பைத்தியம் ஈரான் தொடர்பில் அறிவித்திருந்த அறிவிப்பால் முழு உலக
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலிApr 8, 2026 - 10:23 PMஇஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலிஇஸ்ரேல், இன்று (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தாக்குல்களில் 837 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.https://adaderanatamil.lk/news/cmnqacrg0001c356pde7kudp8
Screenshot-2024-04-19-152740-750x430-1.j38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்!அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம்  ஆரம்பமாகியது.இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்.இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளரான அன்னை பூபதி என அழைக்கப்படும் பூபதி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத
அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் முடிவெடுக்க வேண்டும் - ரிஷாத் பதியுதீன்Published By: Vishnu09 Apr, 2026 | 12:29 AMimage(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.Beaches & Islandsபாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ட்ரம்ப் என்ற பைத்தியம் ஈரான் தொடர்பில் அறிவித்திருந்த அறிவிப்பால் முழு உலக நாடுகளும் அச்சமடைந்திருந்த நிலையில் உலக மக்களின் பிராத்தனை காரணமாக தற்போது ஈரானின் 10 நிபந்தனைகளை ட்ரப்பும் அவரது அடிவருடிகளும் ஏற்றுக்கொண்டு தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன. ஈரானுக்கு பக்கபலமாக இருந்த ரஷ்யா, சீனா போன்ற முதுகெலும்புள்ள நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் அதேபோன்று ஸ்பைன் போன்ற நாட்டு தலைவர்கள் தைரியமாக முடிவெடுத்ததன் காரணமாக நேட்டோ நாடுகள் ட்ரம்புக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு முடிவெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. எனவே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் இடம்பெற இருக்கிறது. அந்த பேச்சுவாரத்தை வெற்றிபெற வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அட்டகாசம் பலஸ்தீன் மக்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் கண்டோம். இஸ்ரேல் பலஸ்தீன் மக்கள் மீது மேற்கொண்ட அநியாயங்கள் சொல்ல முடியாதவை. என்றாலும் தற்போது இந்த யுத்தத்தில் இஸ்ரேல் பாரிய அழிவை சந்தித்திருக்கிறது இந்த பாதிப்பில் இருந்து இஸ\ரேல் மீள எழுவதற்கு இன்னும் 10 வருடங்களாவது செல்லும் என்றே கூறப்படுகிறது.அத்துடன் யுத்த நிறுத்தத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கை இஸ்ரேலுக்கு படுதோல்வி என இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் தோல்வியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெதன்யாகுவின் தேவைக்கே ட்ரம்ப் இந்த யுத்தத்தை ஆரம்பித்தார். இந்த யுத்தம் நான் எடுத்த தீர்மானம் அல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எடுத்த தீர்மானம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தீர்மானம் எடுக்க தெரியாத ஒரு தலைவரையே அமெரிக்க மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்திருக்கிறார்கள். ஈரானின் முக்கியமான தலங்களை தாக்குவதாக ட்ரம்ப் அறிவித்தபோது ஈரான் மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வதற்கும் அச்சப்படாமல் தங்களின் நாட்டை பாதுகாக்க வீதிக்கு வந்தார்கள். இதுதான் இஸ்லாமியர்களின் பண்பாகும்.எனவே அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும் இராணுவத்தையும் வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும். அதேபோன்று அரபு நாடுகள் ஒற்றுமையாக செயற்பட ஆரம்பித்தால் இஸ்ரேலை பணியச்செய்து பலஸ்தீன் மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க முடியுமாகும் என்றார்.https://www.virakesari.lk/article/243077
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலிApr 8, 2026 - 10:23 PMஇஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலிஇஸ்ரேல், இன்று (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தாக்குல்களில் 837 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.https://adaderanatamil.lk/news/cmnqacrg0001c356pde7kudp8
புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு08 Apr, 2026 | 02:53 PMimageவட இந்திய மாநிலமான அசாம் - தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.‌இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
பிரான்ஸில் ஈழத்தமிழ்த் தாயும் மகளும் சடலங்களாக மீட்புimage_408fe9ffc6.jpgபிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது 20 வயது மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் பின்னணி:பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.பாதிக்கப்பட்டவர்கள்:உயிரிழந்தவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க தாயும், அவரது 20 வயது மகளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விசாரணை மற்றும் தற்போதைய நிலை:இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்
இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்April 7, 2026— கருணாகரன் —இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, சமத்துவக் கட்சி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரும் காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர். 4e08b8f1-88cb-40bc-b22f-79b4841b0a0b.jpe
பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்‎8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...AVvXsEiTnyE6lEcV21t9pUUIZgq8Ju0kbOMFj_LxrjUKqOj_1JvF-eO-at9P1_b3tzx0Z28Itn3jYMsnMX-WDn7MGVi1zLX6_HIn8vTYEJud31lHYDbUByTiYtqz5Ri9yTgfGQEUjn_hwF224EcLMvMmnuJxeJ2vCdinlBbhmT0qUZ8NB218aTC5_wHDySi1F5sH=w400-h225 ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்Published By: Vishnu30 Mar, 2026 | 10:33 PMimage(நா.தனுஜா)படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்21 Mar, 2026 | 11:47 AMimage(இணையத்தள செய்திப் பிரிவு )மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.written by admin December 13, 2020Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில்
ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்பட மூலாதாரம்,NASAபடக்குறிப்பு,ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்கட்டுரை தகவல்ரெபெக்கா மொரெல்,அறிவியல் ஆசிரியர்,அலிசன் பிரான்சிஸ்,கெவின் சர்ச் (ஜான்சன் விண்வெளி மையம்)11 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஆர்டெமிஸ் 2-ல் பயணித்த விண்வெளி வீரர்களைத் தவிர வேறு எவருமே இதுவரை பூமியிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை.இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில், ஆர்டெமிஸ் 2 குழுவினர் புதிய சாதனையைப் படைத்தனர். மனிதர்கள் பூமியிலிருந்து பயணம் செய்த மிக அதிக தூரம் என்ற சாதனையை அவர்கள் முறியடித்தனர்.1970-ல் அபோல்லோ 13 குழுவினர் படைத்த 2,48,655 மைல்கள் (4,00,171 கிலோமீட்டர்) தூரம் என்ற சாதனையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் விஞ்சினர்.சந்திரனின் பின்புறம் பயணம் செய்தபோது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடைந்தது. இது 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) என்ற சாதனை தூரத்தை எட்டியது.ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம்
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்மதமாற்றம்1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
எப்போதும் தோற்பவர்கள்-----------------------------------------large.SearchingWoman.jpgஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்
சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் இலங்கைக்கு வருகை ; வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை08 Apr, 2026 | 04:26 PMimageவடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காணும் விதமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்துக்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்துக்கான நிபுணர் பிரட் வப்டிஸ் முதல் முறையாக இலங்கைக்கு செவ்வாய்கிழமை (07) விஜயம் செய்தார்.அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ், கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு இலங்கையில் முதல் தடவையாக 3 கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை, இரண்டு வாரங்களாக மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார்.எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இவ்விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் வட கிழக்கு மாகாணத்தில்
தனித்து விடப்படும் முதியவர்கள்NillanthanBy Nillanthan - 4 months agoLess than a minuteFacebookTwitterGoogle+WhatsappShare via EmailIMG-20251020-WA0017-1024x682.jpgபுலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம்