புதிய பதிவுகள்

எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள் - அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், தனிநபர்கள் உட்பட 324 பேர் ஜனாதிபதிக்கு கூட்டுக் கடிதம்07 Apr, 2026 | 05:04 PMimage(நா.தனுஜா)பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மதத்தலைவர்கள் உள்ளடங்கலாக 324 பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.அதற்கமைய இதுகுறித்து எஸ்.ராஜேஸ்வரி, இ.மாதவராஜா, எஸ்.கதிர்காமத்தம்பி ஆகியோர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஐவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், அமைதி மற்றும்
ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனாApr 7, 2026 - 10:20 PM ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனாஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு எதிராக வாக்களித்ததே இதற்குக் காரணமாகும்.  பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானி தலைமையில் நடைபெற்ற இந்தத் தீர்மானமிக்க கூட்டத்தில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பல வாரகால
தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீட்டுத் திட்டம்!Apr 7, 2026 - 05:13 PMதோட்டத் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீட்டுத் திட்டம்!இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, மண்சரிவு மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது அவசியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மண்சரிவு அபாயம் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வீடுகளை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.இப்புதிய
எஞ்சியுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள் - அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், தனிநபர்கள் உட்பட 324 பேர் ஜனாதிபதிக்கு கூட்டுக் கடிதம்07 Apr, 2026 | 05:04 PMimage(நா.தனுஜா)பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மதத்தலைவர்கள் உள்ளடங்கலாக 324 பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.அதற்கமைய இதுகுறித்து எஸ்.ராஜேஸ்வரி, இ.மாதவராஜா, எஸ்.கதிர்காமத்தம்பி ஆகியோர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஐவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய ஒன்றியம், இனக்கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், கிழக்கு சிவில் செயற்பாட்டாளர்கள் பேரவை, சமூக அபிவிருத்தி நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இளைஞர் உரிமைகள் கூட்டிணைவு என்பன உள்ளடங்கலாக 41 சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டு ஆசியர் சேவை சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், கூட்டு ரயில்வே ஊழியர் சங்கம், கூட்டு தாதியர் சேவை சங்கம் என்பன உள்ளடங்கலாக 23 தொழிற்சங்கங்களும் சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், கலாநிதி திருநாவுக்கரசு பாலமுருகன், செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ, சட்டத்தரணி நிமந்தி பெர்னாண்டோ, ஊடகவியலாளர் செல்வராஜா ராஜசேகர் ஆகியோர் உள்ளடங்கலாக 225 தனிநபர்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:இலங்கையில் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீண்டகாலமாக நிலவும் ஒரு பிரச்சினையாகும். அரசியல் விமர்சகர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டு, அவசரகாலச்சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்படும் போக்கு தொடர்கிறது. 1970 மற்றும் 1980களில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன எழுச்சி, சுமார் 30 வருடகாலம் நீடித்த ஆயுதமோதல் என்பவற்றில் ஆரம்பித்து, சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகமும், 2022இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து எழுச்சியடைந்த 'அரகலய' போராட்ட செயற்பாட்டாளர்களும் இலக்குவைக்கப்பட்டமையானது அரசு தமது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு பயங்கரவாதச் சட்டங்களையும் அவசரகால வழிகாட்டல்களையும் ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காண்பிக்கிறது.இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரில் எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளில் 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்ட செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இன்னமும் நடைபெற்றுவருகின்றன. அதாவது அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பதாகவே அவர்கள் தமது வாழ்வின் இரு தசாப்த காலத்தை சிறைக்கம்பிகளுக்கு மத்தியில் கழித்திருக்கிறார்கள். அவர்கள் வழக்கு விசாரணைக்காகக் காத்திருந்த காலப்பகுதியில் தமது இளமைக்காலத்தை முழுமையாக இழந்திருக்கிறார்கள். ஏனைய 8 பேரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி இக்காலப்பகுதியில் அவர்கள் பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளின் சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியின் பிரகாரமும், நல்லிணக்கத்தை முன்னிறுத்திய நடவடிக்கை என்ற அடிப்படையிலும் அந்த 10 அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட்டு, மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இடமளிக்கப்படவேண்டும் என்பதே அந்த கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கூட்டு வேண்டுகோளாக இருக்கிறது. 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்துவரும் ஜே.வி.பி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார். எனவே கடந்த காலத்தில் அரச ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்த தற்போதைய அரசாங்கம், தமது இளமைக்காலத்தின் பெரும்பகுதியை சிறைச்சாலைக்குள் கழித்த, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகளையும் மேற்குறிப்பிட்டவாறு நிபந்தனையின்றி விடுவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.அதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் 10 தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டோர் உள்ளடங்கலாக பயங்கரவாத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஏனையோரின் வழக்குகள் குறித்து ஆராய்தல், குறிப்பாக சுமார் 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்ததன் பின்னரும், நீண்டகால தடுத்துவைப்பின் பின்னரும் சகல குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்குதல் மற்றும் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறுவதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதிய சட்டங்களை முன்மொழியாதிருத்தல் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தக் கூட்டுக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.https://www.virakesari.lk/article/242985
ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனாApr 7, 2026 - 10:20 PM ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனாஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு எதிராக வாக்களித்ததே இதற்குக் காரணமாகும்.  பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானி தலைமையில் நடைபெற்ற இந்தத் தீர்மானமிக்க கூட்டத்தில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பல வாரகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய (VII ஆவது அத்தியாயம்) கடுமையான நிபந்தனைகளைக் கொண்டிருந்த இத்தீர்மானம், படிப்படியாகத் தளர்த்தப்பட்டு இறுதியில் "
இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்!Published By: Digital Desk 306 Apr, 2026 | 05:45 PMimage(இணையத்தள செய்திப் பிரிவு)இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'கயல்' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை வம்சாவளி நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள குடியிருப்பொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் இளம் நடிகையின் மரணம் சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது இல்லத்தில் சுபாஷினி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி, தமிழ் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு சென்றார். ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்ட அவர், தனது
26-69d1199de8ed3.webpஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை.இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோணத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக களமிறங்கும் வீனஸ் வீரப்புலி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும்.வீனஸின் தந்தை அஜந்த வீரப்புலி, இலங்கையின் முன்னாள் முதல் தரக் கிரிக்கெட் வீரர் ஆவார்.இலங்கை வீராங்கனைஅவர் கோல்ட்ஸ், NCC, லங்கன் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய அணிகளுக்காக 36 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1,243 ஓட்டங்களை குவித்துள்ளார்.கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அஜந்த, தனது மனைவி கிறிஸ்டீனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.பிரித்தானியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வரும் அவர், தனது மகளையும் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளார்.வீனஸ் வீரப்புலி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகக்குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளார்.இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை ஷார்லட் எட்வர்ட்ஸ் பெயரில்
பரீட்சை முடிவுகளும் ஆசிரியர்களின் வோல்டேஜ்ஜும் - நிலாந்தன்IMG-20260404-WA0018-1024x460.jpgபரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், சில வாரங்களுக்கு முன்னதாக ஈழத்தமிழ் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதிக்கப்பட்ட ஒரு காணொளியை இங்கு குறிப்பிடவேண்டும். இக்காணொளி வெளிவந்து இரண்டு ஆண்டுகள். காணொளியில் பேசியிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்தஸ்ரீ. அவர் சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இங்கு அவர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமூட்டும் உரைகளை ஆற்றியிருக்கிறார்.தன்னுடைய யாழ் விஜயத்தின் விளைவாக அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், தமிழ்நாடு, கோவையில் ஓரிடத்தில் உரையாற்றும்போது அவர் “யாழ்ப்பாணத்து ஆசிரியர்களுக்கு வோல்டேஜ் குறைவு” என்று கூறியிருக்கிறார். அதைக் குறித்து யாழ்ப்பாணம்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் அவரிடம் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ஜெயந்தஸ்ரீ கூறும் பதில் அக்காணொளியில் உண்டு.தனது உரையில் ஜெயந்தஸ்ரீ வோல்டேஜ் என்று தான் கருதுவது “அறிவு ரீதியான வோல்டேஜ் மற்றும் மொழி அறிவு ஆகிய இரண்டையும்” என்று
ரேபிஸ் : "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை" - நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம்ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்படக்குறிப்பு,ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினிகட்டுரை தகவல்பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காக57 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல் இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அதிகாரிகள் கண்காணிப்புடன் தகனம் செய்யப்பட்டது.ரேபிஸ் நோயின் தாக்கம் என்ன? சிறு அலட்சியம் கூட எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி2 மாதம் கழித்து தீவிரமான ரேபிஸ் பாதிப்புதூத்துக்குடி மாவட்டம்
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...AVvXsEiTnyE6lEcV21t9pUUIZgq8Ju0kbOMFj_LxrjUKqOj_1JvF-eO-at9P1_b3tzx0Z28Itn3jYMsnMX-WDn7MGVi1zLX6_HIn8vTYEJud31lHYDbUByTiYtqz5Ri9yTgfGQEUjn_hwF224EcLMvMmnuJxeJ2vCdinlBbhmT0qUZ8NB218aTC5_wHDySi1F5sH=w400-h225 ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்Published By: Vishnu30 Mar, 2026 | 10:33 PMimage(நா.தனுஜா)படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்21 Mar, 2026 | 11:47 AMimage(இணையத்தள செய்திப் பிரிவு )மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.written by admin December 13, 2020Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில்
ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்பட மூலாதாரம்,NASAபடக்குறிப்பு,ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்கட்டுரை தகவல்ரெபெக்கா மொரெல்,அறிவியல் ஆசிரியர்,அலிசன் பிரான்சிஸ்,கெவின் சர்ச் (ஜான்சன் விண்வெளி மையம்)11 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஆர்டெமிஸ் 2-ல் பயணித்த விண்வெளி வீரர்களைத் தவிர வேறு எவருமே இதுவரை பூமியிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை.இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில், ஆர்டெமிஸ் 2 குழுவினர் புதிய சாதனையைப் படைத்தனர். மனிதர்கள் பூமியிலிருந்து பயணம் செய்த மிக அதிக தூரம் என்ற சாதனையை அவர்கள் முறியடித்தனர்.1970-ல் அபோல்லோ 13 குழுவினர் படைத்த 2,48,655 மைல்கள் (4,00,171 கிலோமீட்டர்) தூரம் என்ற சாதனையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் விஞ்சினர்.சந்திரனின் பின்புறம் பயணம் செய்தபோது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடைந்தது. இது 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) என்ற சாதனை தூரத்தை எட்டியது.ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம்
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்மதமாற்றம்1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்------------------------------------------------------------------large.Destruction.jpgதேசங்கள் வெட்கம் அற்றவைமெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போலஅடித்து பிடுங்கி அழித்துக் கொண்டேதர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவைபோலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள்நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்துவந்த பின் முகமூடியை  கழட்டி எறிந்து விட்டுகுதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஅயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டேபயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள்ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும்அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள்ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும்இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும்ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும்வெட்கமற்ற தேசங்கள் போலவேஅபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
2026-03-31T214831Z_1832960964_UP1EM3V1O23வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி.23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும்.4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது.போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது.இத்தாலி
தனித்து விடப்படும் முதியவர்கள்NillanthanBy Nillanthan - 4 months agoLess than a minuteFacebookTwitterGoogle+WhatsappShare via EmailIMG-20251020-WA0017-1024x682.jpgபுலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம்