விளையாட்டுத் திடல்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்

3 days 6 hours ago

நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள்

Published By: Vishnu

05 Jan, 2026 | 11:51 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன.

champions_legue_logo.jpg

மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

st_mary_s___1_.jpg

இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது.

முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.

st_mary_s___2_.jpg

அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது.

இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்

ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார்.

ஜாவா லேன் வெற்றி

தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

java_lane__1_.jpg

போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார்.

15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா  மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

java_lane__2_.jpg

java_lane__3_.jpg

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார்.

ஜாவா லேனுக்கு இலகு வெற்றி

https://www.virakesari.lk/article/235312

செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்த யாழ். வீரர் அபிஷான்

4 days 4 hours ago

400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான்

05 Jan, 2026 | 01:09 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார்.

அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். 

download__3_.jpg

இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி விளையாடி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தினர்.

செரெண்டிப் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக அமைந்தது.

போட்டியின் முதல் 18 நிமிடங்கள் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் வீண் போயின.

vijayakumar_vignes_no_9_captain_of_seren

அதன் பின்னர் இரண்டு அணியினரதும் பந்துபரிமாற்றங்கள் மோசமாக இருந்ததால் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடப்படவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய இரண்டிலும் திறமையை வெள்ளிப்படுத்திய செரெண்டிப் கழகம அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியே சென்றன.

serendib_sc.jpg

இவ்வாறு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட செரெண்டிப் கழகம் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கழகத்தின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் விளையாடியது.

இதன் பலனாக உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் பரிமாறிய பந்தை ஆறு யார் கட்டத்துக்கு அருகிலிருந்தவாறு அபிஷான் பலமாக உதைத்து கோலாக்கி, செரெண்டிப் கழகத்திற்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அபிஷான், 'இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததால் நானும் எனது மூத்த சகோதரனும் யாழ்ப்பாணத்திலேயே பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஏனைய செரெண்டிப் வீரர்களுடன் எங்களுக்கு பயிற்சிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், செரெண்டிப் கழக முகாமைத்துவம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முழு நேரமும் விளையாடவைத்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்காக அணி முகாமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஏனைய வீரர்களுடன் நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியில் செரெண்டிப் கழகத்தை நான் வெற்றிபெறச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என தூய தமிழ் மொயில் தெரிவித்தார்.

பெலிக்கன்ஸ் கழகத்திடமும் பொலிஸ் கழகம் தோல்வி

இதே மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி குழு போட்டியில் பொலிஸ் கழத்தை எதிர்த்தாடிய குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பொலிஸ் கழகம் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தோல்வியைத் தழுவியது.

pelicans_sc__2_.jpg

பெலிக்கன்ஸ் கழகம் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோஜோ அனோக்யே 25 யார் தூரத்திலிருந்து தாழ்வாக உதைத்த பந்தை நோக்கி இடதுபுறமாகத் தாவிய பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனினால் தடுக்க முடியாமல் போனது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்த பொலிஸ் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீண்போயின.

ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் கழக வீரர் கயான் ரிவால்டோ பலமாக உதைத்த பந்தை பெலிக்கன்ஸ் கோல்காப்பாளர் ரங்கன ஜயசேகர வேகமாக செயல்பட்டு திசை திருப்பினார். அவரது திறமையான கோல் தடுப்பும் பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

https://www.virakesari.lk/article/235242

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

5 days 1 hour ago

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

Jan 4, 2026 - 06:21 PM

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது 

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. 

இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. 

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

1 week 1 day ago

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர்

01 Jan, 2026 | 01:11 PM

image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர்.

vimath_dinsara_captain.jpg

kugadas_mathulan...png

துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும்.

இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

vigneswaran_akash_hartley_-_hartley_poin

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

https://www.virakesari.lk/article/234928

நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.

2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

1 week 1 day ago

2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,செளதி ப்ரோ லீக் தொடரில் அல் கலீஜ் அணிக்கெதிராக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தார் 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் போட்டியில் 4-1 என ரொனால்டோவின் அல் நசர் அணி வெற்றி பெற்றது.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த கோப்பையை வென்றதும் தனித்துவமாகக் கொண்டாடினார். நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது போல் வால்ட்டில் 6.3 மீட்டர் தூரம் தாண்டி, தன்னுடைய முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியத்தார் ஸ்வீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அந்த சாதனை படைத்ததும் கேலரியில் இருந்த ரசிகர்களோடு அவர் அதைக் கொண்டாடினார்

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல ஐபிஎல் கோப்பையை ஏந்த காத்திருந்த கோலி, அந்தக் கனவு நனவானதும் தன் உணர்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லியில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார் கியூபாவைச் சேர்ந்த கியார்மோ வரோனா கொன்சாலஸ். எறிவதற்கு முன்பாக அவர் இப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியின் ரசிகர்கள் வைத்த பேனர் இது. அந்த அணி மேனேஜர் லூயிஸ் என்ரீக்கேவின் மகள் ஜானா 2019-ஆம் ஆண்டு இறந்தார். 9 வயதான ஜானா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜானா பிஎஸ்ஜி அணியின் ஜெர்ஸி அணிந்திருப்பதுபோன்று வடிவமைத்து தங்கள் மேனேஜரை ரசிகர்கள் நெகிழவைத்தனர். இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தியது பிஎஸ்ஜி. அவர்களின் நீண்ட நாள் லட்சியத்தை, என்ரீக்கே பதவியேற்ற பிறகே அவர்களால் அடையமுடிந்தது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,14 வயதில் சதம் அடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அன்று பதிவு செய்திருந்தார் வைபவ்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைக் கொண்டாடும் விராட் கோலி. இது கோலியின் 52வது ஒருநாள் போட்டி சதம். இதன்மூலம், ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) கோலி முறியடித்தார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் தகுதிச் சுற்றின்போது நியூசிலாந்து வீரர் ஜார்டி பீமிஷ் தடுமாறி கீழே விழ, பின்னால் ஓடிவந்த வீரரின் ஷூ அவரது முகத்தில் பட்டது. இருந்தாலும், மீண்டும் எழுந்து ஓடி தகுதி பெற்ற பீமிஷ், இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கமும் வென்றார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது இந்தியா. கடினமான அந்தப் போட்டியில் சதமடித்து இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அந்தத் தொடரின் பாதியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தவர், அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று இப்படியொரு ஆட்டத்தையும் கொடுத்தார். இந்தியாவை வெற்றி பெற வைத்த பிறகு கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெமிமா.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவில் நடந்த முதல் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செல்சீ சாம்பியன் பட்டம் வென்றது. வழக்கமாக கோப்பையை அணியிடம் அளிப்பவர்கள், அதன்பிறகு விலகிவிடுவார்கள். ஆனால், செல்சீ அணிக்குக் கோப்பையைக் கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கேயே சில நேரம் இருந்து அந்த அணியின் கொண்டாட்டத்தோடு பங்கெடுத்தது பரவலாகப் பேசப்பட்டது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வெகுகாலம் ஐசிசி கோப்பைக்காகக் காத்திருந்த தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே அடையாமல் ஆதிக்கம் செலுத்தி தங்கள் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தது தென்னாப்பிரிக்க அணி.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த டியோகோ ஜோடா, ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருடைய முன்னாள் அணியான வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஜோடாவின் குழந்தைகளை மைதானத்துக்குள் அழைத்து வந்தார் லிவர்பூல் அணியின் கேப்டன் வேன் டைக். இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்து ஸ்டம்பை நோக்கிச் செல்ல, அதைத் தடுக்க கால்பந்து வீரரைப் போல் காலை நீட்டி உதைத்தார் இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crrkryxpr5zo

உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

1 week 2 days ago

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

Dec 31, 2025 - 01:30 PM

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். 

மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார்

1 week 3 days ago

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார்

Published By: Digital Desk 3

30 Dec, 2025 | 01:16 PM

image

(என்.வீ.ஏ.)

South Asians & Diaspora

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக  அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார்.

akshu_fernando.png

கழக மட்டத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் றாகமை விளையாட்டுக் கழகம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய கடைசி போட்டியில் (2018 டிசம்பர் 14) முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து  கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலைக்குரிய முடிவை குறிக்கிறது.

முன்னாள் சக அணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அக்ஷு பெர்னாண்டோவை அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது குணம் மற்றும் சிறந்த மனப்பான்மைக்காக கிரிக்கெட் சமூகம் என்றென்றும் நினைவுகூறும் என்பது உறுதி.

அவரது ஆத்துமம் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

https://www.virakesari.lk/article/234742

சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

1 week 5 days ago

சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சாதனைகள், சர்ச்சைகள் என 2025-ல் நடந்த 10 முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.

இந்தியாவின் பெண்கள் உலகக் கோப்பை வெற்றி

50 ஓவர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. லீக் சுற்றில் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்திருந்த இந்திய அணி, அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்தது.

7 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் உலக சாதனை ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கலக்கிய இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா இந்தத் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார். 22 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், தொடரின் டாப் விக்கெட் டேக்கராகவும் தொடர்ந்தார். இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா, தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்னாப்ரிக்கா

1998-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பிறகு தென்னாப்ரிக்க அணியால் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியாமல் இருந்தது. அரையிறுதி, இறுதி என கடைசி கட்டம் வரை வந்தாலும், கடைசியில் தோற்றுவிடுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி.

கடந்த 2 ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. கடினமான இலக்காகக் கருதப்பட்ட 282 ரன்களை, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக எதிர்பார்த்ததை விடவும் எளிதாகவே அடைந்தது தென்னாப்ரிக்கா. இன்னும் கூட பவுமாவின் தலைமையில் வெற்றிகரமான அணியாக டெஸ்ட் அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது தென்னாப்ரிக்கா.

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஆர்சிபி - முதல் கோப்பையும், அதன்பிறகான அசம்பாவிதமும்

தென்னாப்ரிக்காவைப் போல் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸும் தங்களின் ஒரு கோப்பைக்காக வெகுகாலம் காத்திருந்தது. 17 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் சாம்பியன் ஆக முடியாமல் இருந்தது. ஆனால், 2025 சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணி.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஏலத்தின்போது ஒட்டுமொத்தமாக அணியின் கட்டமைப்பை அவர்கள் மாற்ற, களத்தில் அது பெருமளவு அந்த அணிக்குக் கைகொடுத்தது. கோலியோடு சேர்த்து, ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா, குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் என ஒரு இந்திய 'கோர்' உருவாக்கப்பட்டது. முதல் முறையாக அணியை வழிநடத்திய பட்டிதாரும் சிறப்பாக செயல்பட, இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி கோப்பை வென்றது.

இந்த வெற்றியைக் கொண்டாட ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால், மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட 11 பேர் இறந்தனர். அதோடு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா

உலகின் பிரசித்தி பெற்ற டெஸ்ட் தொடராகக் கருதப்படும் ஆஷஸ், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளையுமே வென்று தொடரை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டீவ் ஸ்மித், கவாஜா என பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், அதில் ஒருசிலர் போட்டிகளில் விளையாட முடியாத நிலையிலும் ஆஸ்திரேலியா இந்தத் தொடரைக் கைப்பற்றியது.

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளங்கியது. மேலும், 'பாஸ்பால்' அணுகுமுறையால் அவர்கள் அதிரடியாக ஆட முற்பட்ட விரைந்து ஆட்டமிழந்தது மீண்டும் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டது.

இருந்தாலும், தொடரை இழந்த பிறகு, மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவின் படி, கடந்த 15 ஆண்டுகளில், 16 தோல்விகள் மற்றும் 2 டிராக்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது.

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெற்றது. இந்தத் தொடர் முழுவதுமே பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்தியா அங்கு விளையாட மறுத்ததால் இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபையில் நடந்தன.

தொரின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. 2002 (இலங்கையுடன் சேர்ந்து கூட்டு சாம்பியன்), 2013க்குப் பிறகு இது இந்திய அணியின் மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாக அமைந்தது. மேலும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இது இந்தியாவின் முதல் ஐசிசி கோப்பை.

விராட் கோலியின் 52வது ஒருநாள் சதம்

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இந்திய வீரர் விராட் கோலி. முன்பு டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்திருந்தார். அதை ஒருநாள் போட்டிகளில் கோலி முறியடித்தார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த சாதனையைப் படைத்தார் விராட் கோலி.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்ததால், கோலியின் செயல்பாடுகள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த அந்தத் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் ஃபார்மை நிரூபித்த அவர், சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அதுமட்டுமல்லாமல், அதற்கடுத்த போட்டியிலும் சதமடித்து, தன் ஒருநாள் போட்டி சத எண்ணிக்கையை 53 ஆக உயர்த்தியிருக்கிறார் கோலி.

லாராவின் சாதனையை முறியடிக்காத வியான் முல்டர்

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

பலரும் சாதனை படைப்பதால், சாதனைகளை முறியடிப்பதால் பேசப்படுவார்கள். கோலியைப் போல். ஆனால், தென்னாப்ரிக்க வீரர் வியான் முல்டர் இந்த ஆண்டு ஒரு சாதனையை முறியடிக்காததற்காகப் பெருமளவு பேசப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் புலவாயோவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அந்தப் போட்டியில் தென்னாப்ரிக்காவின் கேப்டனாக செயல்பட்டிருந்த வியான் முல்டர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்த அவர், பிரயன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் சாதனையை (400 ரன்கள்) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 367 ரன்கள் எடுத்திருந்தபோது, அணியின் இன்னிங்ஸையே டிக்ளேர் செய்தார்.

இந்த அதிர்ச்சிகரமான முடிவு பற்றிப் பின்னர் பேசிய அவர், "பிரயன் லாரா ஒரு ஜாம்பவான். அப்படியொரு வீரர் அந்த சாதனையை வைத்திருப்பதுதான் சிறப்பான விஷயம். இப்படியொரு சூழ்நிலை மீண்டும் வந்தால், நான் இதையேதான் அப்போதும் செய்வேன்" என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பார்வையற்றோர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்புவில் நடந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன்மூலம் மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் ஆனது.

குரூப் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளையும் வென்றிருந்த இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளையுமே வென்று சாம்பியன் ஆனது இந்தியா.

14 வயதிலேயே வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி பெயர் வந்தபோதே அது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த 13 வயது சிறுவனை அப்போது 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத அவருக்கு, இரண்டாவது பாதியில் வாய்ப்பு கொடுத்தது ராயல்ஸ் அணி. அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சூர்யவன்ஷி, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஆடினார்.

தன் முதல் ஐபிஎல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், இரண்டாவது போட்டியில் சதமே அடித்தார். இதன்மூலம் இளம் வயதில் ஐபிஎல் சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதுமட்டுமல்லாமல், 35 பந்துகளிலேயே சதத்தை நிறைவு செய்து, ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார் அவர்.

அதோடு நின்றுவிடாமல் இந்தியா ஏ, பிகார் அணிகளுக்கும் தொடர்ச்சியாக சாதனை செயல்பாடுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.

இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றி

2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 20 ஓவர் ஃபாமர்ட்டில் நடந்த இந்தத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இது இந்தியாவுக்கு 9வது ஆசிய கோப்பை பட்டம். அதேபோல், இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா முதல் பட்டத்தை வென்றது.

இந்தத் தொடர் முழுவதுமே பல சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இந்தியாவில் நடக்கவிருப்பதாக இருந்த இந்தத் தொடர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அரசியல் பதற்றத்தின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர், போட்டிகளின்போது பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்தனர். அதுமட்டுமல்லாமல், இரு நாட்டு வீரர்களுமே கொண்டாட்டங்களின்போது ஐசிசி ஒழுங்கு விதிமுறைகளை மீறினார்கள்.

இறுதியாக கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அரசின் அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து பெற இந்திய அணி மறுத்தது. கோப்பையை நக்வி தன்னோடு எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் தன்னை சந்தித்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் நக்வி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c4genj0rgj4o

சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?

2 weeks 1 day ago

சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தத்தமது போட்டிகளில் சதங்கள் அடித்தனர் (கோப்புப் படம்).

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தத்தமது போட்டிகளில் சதங்கள் அடித்தனர் (கோப்புப் படம்).

25 டிசம்பர் 2025, 03:13 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

இதற்கு நட்சத்திர போட்டியாளர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பாக விளையாடுவதும் காரணமாக இருக்கிறது.

விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மா அல்லது தற்போது கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியில் 32 பந்துகளில் வேகமாக சதம் அடித்த சாகிப் உல் கனி போன்ற பொதுமக்கள் அதிகம் அறியாத பல கிரிக்கெட் வீரர்களும் இதில் உள்ளனர்.

டி20 இந்திய அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷானும் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக திறம்பட பேட்டிங் செய்து 33 பந்துகளில் சதம் அடித்தார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தற்போது ஒரு குழுவுக்குள் இடம்பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், போட்டி குறித்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும்.

டெண்டுல்கரை விஞ்சிய கோலி

விராட் கோலி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் (கோப்புப் படம்).

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,விராட் கோலி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் (கோப்புப் படம்).

பெங்களூருவில் நடந்த ஆந்திர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், உள்நாட்டு கிரிக்கெட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.

விராட் கோலி 2009-2010ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தான் கடைசியாக பங்கேற்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அவர் உள்நாட்டு போட்டிக்கு திரும்பியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் 299 ரன்கள் எனும் இலக்கை துரத்திய டெல்லி அணி சார்பாக விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் அடித்தார்.

லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 16,000 ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இதன்மூலம் விராட் கோலி மிஞ்சினார். இந்த சாதனையை தன்னுடைய 330வது இன்னிங்ஸில் அவர் படைத்துள்ளார்.

கிரிக்கெட் வலைதளமான இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ அளித்துள்ள தகவலின்படி, சச்சின் டெண்டுல்கர் 16,000 ரன்கள் என்ற சாதனையை தன்னுடைய 391வது இன்னிங்ஸில் அடித்தார். டெண்டுல்கர் விளையாடிய 551 லிஸ்ட் ஏ போட்டிகளில் 538வது இன்னிங்ஸ் வரை 21,999 ரன்கள் வைத்திருந்தார். இதில், 452 ஒருநாள் சர்வதேசஇன்னிங்ஸ்களில் அடித்த 18,426 ரன்களும் அடக்கம்.

ஆனால், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 296 இன்னிங்ஸ்களில் 14,557 ரன்களை அடித்திருந்தார்.

ரோஹித் ஷர்மாவின் தனித்துவமான சாதனை

ரோஹித் ஷர்மா டேவிட் வார்னரின் சாதனையையும் சமன் செய்துள்ளார் (கோப்புப் படம்).

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோஹித் ஷர்மா டேவிட் வார்னரின் சாதனையையும் சமன் செய்துள்ளார் (கோப்புப் படம்).

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நன்றாக விளையாடினார். இவர் இந்த தொடரில் கடைசியாக 2017-2018ம் ஆண்டு சீசனில் பங்கேற்றிருந்தார்.

இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் ரோஹித் இந்த தொடருக்கு மீண்டும் திரும்பியுள்ளார். சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அவர் சதம் அடித்தார். ஜெய்பூரில் நடந்த அப்போட்டியில் மும்பை, சிக்கிம் அணியை 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது, இதில் 94 பந்துகளில் ரோஹித் ஷர்மா 155 ரன்களை அடித்தார்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிகளவிலான 150 ரன்களை குவித்த டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்தார்.

இந்த சாதனையை டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் 9 முறை படைத்துள்ளனர்.

இதன்மூலம், இந்த தொடரில் சதம் அடித்த இரண்டாவது அதிக வயதுடைய வீரரானார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, ரோஹித் ஷர்மா இந்த சதத்தை தன்னுடைய 38 வயதில் (238 நாட்கள்) அடித்துள்ளார்.

முன்னதாக, வங்காள அணியின் அனுஸ்டுப் மஜும்தார் 2023-2024ம் ஆண்டு சீசனில், தன்னுடைய 39வது வயதில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.

விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பங்குபெறுவது குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தங்களின் ஆட்டத்திற்காக பாராட்டை பெற்றிருந்தனர்.

அதிக இலக்கை வைத்த பிகார் அணி

வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் (கோப்பு படம்)

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் (கோப்பு படம்)

கிரிக்கெட்டில் ஆச்சர்யங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதுதான் பிகார் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதும் நடந்தது. ஒருநாள் போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு 575 என்ற இலக்கை நிர்ணயித்த பிகார், 397 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த அதிக ரன்கள் இலக்குக்கு மூன்று பேட்ஸ்மேன்களின் திறமையான ஆட்டம் காரணமாக இருந்தது. இதில், கிரிக்கெட்டில் தற்போது பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் வைபவ் சூர்யவன்ஷி வ் எறும் 84 பந்துகளில் 190 ரன்களை அடித்திருந்தார்.

இரண்டாவதாக, சாகிப் உல் கனி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 128 ரன்களையும் ஆயுஷ் லோஹாருகா 116 ரன்களையும் அடித்தனர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தின்படி, சாகிப் உல் கனி 32 பந்துகளில் சதம் அடித்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களில் மிக வேகமாக சதமடித்தவர் ஆனார். முன்னதாக, இந்த சாதனையை 35 பந்துகளில் சதம் அடித்து அன்மோல்ப்ரீத் சிங் படைத்தார்.

வைபவ் சூர்யவன்ஷி 59 பந்துகளில் 150 ரன்களை அடித்திருந்தார், இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 64 பந்துகளில் 150 ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்தார்.

மற்றொருபுறம், டி20 அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன், திறம்பட பேட்டிங் செய்தார்.

கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் அவர் 125 ரன்களை விளாசினார், 33 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.

ஆனால், அவருடைய அதிரடியான பேட்டிங்குக்கு மத்தியிலும் கர்நாடகா அணியை அவருடைய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகா அணி 48வது ஓவரில் ஜார்க்கண்டின் 412 ரன்களை தாண்டியது. இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் கர்நாடக அணிக்காக 147 ரன்களை அடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1w9xyvg5wro

அலெக்ஸ் கேரி - பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்

2 weeks 2 days ago

தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும்

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை"

பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

அதனால் கடந்த சில நாள்களாகவே, ஸ்டம்புக்கு அருகே நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அவர் பிடிக்கும் வீடியோக்கள் பெருமளவு பகிரப்பட்டுவருகின்றன. அவரது இந்த கீப்பிங் அணுகுமுறை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது.

பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம்.

ஆனால், அந்த பிரிஸ்பேன் ஆட்டத்தில் அதை அடிக்கடி செய்தார் கேரி. அதுவும் மைக்கேல் நெஸர், ஸ்காட் போலாண்ட் போன்றவர்கள் பந்துவீசும்போது, மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வந்த பந்துகளுக்கு அப்படி நின்றார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், கேரி அதை எளிதாகச் செய்வதுபோல் தெரிந்தது. லெக் சைட் செல்லும் பந்துகளைக் கூட சிறப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தார் அவர்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேட்சையும் அவர் சிறப்பாகப் பிடித்தார். நெஸர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸுக்கு எட்ஜாக, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதை எளிதாகப் பிடித்தார் கேரி. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு பாராட்டப்பட்டது.

பிரிஸ்பேனோடு நிற்காமல், தெற்கு ஆஸ்திரேலியாவில் (அடிலெய்ட் ஓவல் மைதானம்) நடந்த மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்தார் அவர். போலாண்ட் பந்துவீசியபோது ஸ்டம்புக்கு அருகிலேயே நின்றிருந்த அவர், வில் ஜேக்ஸ் உடைய கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தார்.

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெஸர் பந்துவீச்சில், ஸ்டோக்ஸை கேட்ச் பிடித்தார் கேரி

"தைரியமான செயல்பாடு"

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வீரரும் விக்கெட் கீப்பருமான பாபா இந்திரஜித், "ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு செயல்பாட்டை கேரி கொடுத்தார்" என்று கூறினார்.

"இந்தியா போன்ற ஆடுகளங்களில் இதுபோல் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று கீப்பிங் செய்வது சற்றே எளிதாக இருக்கும். ஆனால், வேகமும், பௌன்ஸும் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அப்படிச் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அங்கு கூடுதல் பௌன்ஸ் இருக்கும். அவர் அதை அசாதாரணமாகச் செய்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் முதல் முறையாக அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை" என்று கூறினார்.

டிரிபிள் எம் ரேடியோவில் அதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "இதைவிட சிறந்த, இதைவிட தைரியமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டைப் பார்க்க முடியாது" என்று கூறினார். இயான் ஹீலி, அலீஸா ஹீலி என ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் கீப்பர்கள் பலரும் கேரியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அனைத்து கீப்பர்களும் இப்படி அதைப் புகழ்வதற்குக் காரணம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்றார் என்பது மட்டுமல்ல. பிரிஸ்பேன் போன்ற ஒரு ஆடுகளத்தில், பகலிரவு போட்டி ஒன்றில் அவர் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இந்திரஜித் சொல்வதுபோல் கூடுதல் பௌன்ஸ் கொண்ட ஒரு ஆடுகளத்தில் கேரி அப்படி செயல்பட்டிருக்கிறார். பகலிரவு போட்டியில், செயற்கை விளக்குகளுக்கு நடுவே அப்படி செயல்படுவது கூடுதல் சவால். அதிக ஆபத்தும் கூட. இருந்தாலும், அவர் அந்த இடத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டதால்தான் அதை 'தைரியமான செயல்பாடு' என்றிருக்கிறார் ஹாடின்.

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அடிலெய்டில் வில் ஜேக்ஸின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடிக்கும் அலெக்ஸ் கேரி

ஸ்டம்புக்கு அருகே நிற்பதன் காரணம் என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீப்பர்கள் பின்னால் நிற்பார்கள் என்பதால், அது நன்றாக நகர்வதற்கான சுதந்திரத்தை பேட்டர்களுக்கு தரும். ஸ்விங்கை சமாளிக்க, பெரிய ஷாட் அடிக்க, சில சமயம் பௌலர்களைக் குழப்பவும் கிரீசுக்கு வெளியே பேட்டர்கள் நகர்வார்கள். பேட்டர்களின் இந்த நகர்வுகளைத் தடுக்கவே சில சமயம் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் கீப்பர்கள் முன்னால் வருவார்கள்.

இங்கிலாந்து பேட்டர்கள் அவர்களின் 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையின் காரணமாக அதீதமாக நகர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பந்திலுமே ரன் அடிக்கப் பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் நகர்வதைக் காணமுடியும். அவர்களின் அந்த 'அட்டாக்கிங்' அணுகுமுறையை கட்டுப்படுத்த, கேரி கீப்பிங்கில் 'அட்டாக்' செய்தார். அவர் ஸ்டம்புக்கு அருகே நின்றது, இங்கிலாந்து பேட்டர்களின் நகர்வுக்குப் பெருமளவு முட்டுக்கட்டை போட்டது.

"வேகப்பந்துவீச்சுக்கு கீப்பர்கள் 'upto the stumps' (ஸ்டம்புகளுக்கு அருகே) வந்து நிற்பது பொதுவாகவே பேட்டர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஸ்பால் உத்தி காரணமாக இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்கூப், பேடில் போன்ற ஷாட்கள் ஆட தொடர்ச்சியாக நகர்வார்கள். ஆனால், கேரி இப்படி முன்னாள் வந்து நிற்பது அவர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும்" என்று கூறினார் இந்திரஜித்.

மேலும் பேசிய அவர், "இது ஷாட்கள் ஆடுவதில் மட்டுமல்ல, பந்துகளை விடுவதற்குமே யோசிக்கவைக்கும். நீங்கள் பந்தை 'well left' (ஆடாமல் விடுவது) செய்யும்போது உங்கள் கால்கள் சற்று மேலே எழும்ப வாய்ப்புள்ளது. அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகே நின்றால், அங்கு ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் பேட்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்" என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், கேரி ஒரே ஓவரில் தன் இடத்தை அடிக்கடி மாற்றுகிறார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகே இருப்பவர், அடுத்த பந்தே பின்னால் சென்று நிற்கிறார். இப்படிச் செய்வது, பந்தில் லென்த் குறித்து பேட்டர்கள் மனதில் கேள்விகள் எழுப்பலாம் என்கிறார் இந்திரஜித்.

அதேசமயம், இது வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே ஒருசில சவால்களைக் கொடுக்கும். கீப்பர்கள் முன்னே நிற்கும்போது 'ஷார்ட் லென்த்' பந்துகள் வீசமுடியாது. பந்து கொஞ்சம் லெக் திசையில் வெளியே சென்றால் பவுண்டரி ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும்.

இதன் காரணமாக கீப்பர்கள் முன்னால் வந்து நிற்க சில சமயங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லும் இந்திரஜித், ஆஸ்திரேலிய பௌலர்கள் ஒருமித்த கருத்தோடு இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும்போது கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகே வந்து நிற்பது, பேட்டர்களின் நகர்வை பாதிக்கும் என்கிறார் பாபா இந்திரஜித்

இதை கேரி எப்படி சாத்தியப்படுத்துகிறார்?

பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த கீப்பிங் அணுகுமுறைக்குத் தான் சிறப்பான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அலெக்ஸ் கேரி.

"வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று பயிற்சி செய்வதில்லை. சில சமயங்களில் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் அடிப்படைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தவேண்டும் அவ்வளவே - அது நாதன் லயானின் பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று நிறைய கீப்பிங் செய்திருப்பது" என்று சொல்லும் கேரி, "நான் இருக்கும் பொசிஷன்களை நம்புகிறேன். பின்னர் என் உள்ளுணர்வு, பந்தைப் பிடிப்பதற்கு ஏற்ற சரியான இடத்துக்கு என்னைக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார்.

சிறப்பான பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை என்று சொல்லும் அவர், வலது கை பேட்டர்களுக்கு எதிராக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்டர்களுக்கு வீசும்போது, அவர் நேராக நிற்பதில்லை. ஸ்டம்பில் இருந்து இரண்டு அடி பின்னால் நின்று, தன் இடது காலை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக வைத்திருக்கும் அவர், வலது காலை சற்று பின்னே வைத்துக்கொள்கிறார். பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக வலது பக்கம் இடுப்பை நகர்த்த அது உதவுவதாகக் கூறுகிறார் அவர்.

அவரது இந்த அணுகுமுறை பற்றி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளரான ஆர்த்தி சங்கரன் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும்போது கைகள் இலகுவாக (soft hands) இருக்கவேண்டும். 'Hard hands' ஆக இருக்கக்கூடாது. அப்போதுதான் பந்து கிளவுஸில் தங்கும். கைக்கும் அடிபடாது. அதற்காகத்தான் பொதுவாக பந்தைப் பிடித்து கையை சற்றுப் பின்னே கொண்டுசெல்வார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அப்படி கைகளை இலகுவாக வைத்துப் பிடிக்க உடலை நன்கு நகர்த்தவேண்டும். அது கடினமான விஷயம். அதனால், தன் வலதுபக்க இடுப்பை நன்கு நகர்த்துவதற்காக கேரி அப்படி நிற்கிறார்" என்று அவர் கூறினார்.

வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நிற்பதற்கு பயிற்சி எடுப்பதில்லை என்று சொல்லும் கேரி, எதேச்சையாக இந்த முறையைக் கண்டறிந்திருக்கக் கூடும் என்று சொல்லும் ஆர்த்தி சங்கரன், அவர் இடது கை பேட்டர்களுக்கு அப்படி நிற்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். "ஒருவேளை அவரது இடதுபக்க இடுப்பு எளிதாக நகர்வதாகவும், வலதுபுறம் நகராமலும் இருக்கலாம். அதனால், அவர் வலது காலைப் பின்னால் வைத்து, அந்தப் பக்கம் நகர்வதை எளிமையாக்க நினைத்திருக்கலாம்" என்றார்.

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இப்படி ஸ்டம்புக்கு அருகே வந்து கீப்பிங் செய்வதற்காக தான் தனியாக பயிற்சி எடுப்பதில்லை என்கிறார் கேரி

தோனி - கேரி இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும்

கேரியின் இந்த அணுகுமுறை ஒருவகையில் தோனிக்கு நேர்மாறாக இருக்கிறது என்றும், இன்னொரு வகையில் தோனியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்றும் ஆர்த்தி சங்கரன் கூறுகிறார்.

தோனியின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது மின்னல்வேக ஸ்டம்பிங். அவர் அதை வேகமாகச் செய்வதற்கான காரணம் - பெரும்பாலான கீப்பர்கள் போல், பந்தைப் பிடித்தவுடன் அதன் தாக்கத்தைக் குறைக்க தோனி தன் கையை பின்னால் எடுத்துச் செல்லமாட்டார். கைகளை உறுதியாக வைத்திருப்பார் (Firm Hands). அதனால், கையை பின்னால் எடுத்துச்சென்று மீண்டும் ஸ்டம்ப் நோக்கி கொண்டுவருவதற்கான நேரம் அவருக்கு மிச்சமாகும். இதுதான் அவருடைய அதிவேக ஸ்டம்பிங்குகளின் ரகசியம். இது வழக்கமான கீப்பிங் இலக்கணத்துக்கு எதிரானது என்றாலும், அதுதான் அவரது பலமாக இருக்கிறது.

இந்த இடத்தில்தான் தோனியிடமிருந்து கேரி வித்தியாசப்படுகிறார் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "கேரி பந்தைப் soft hands-ஓட பிடிக்கப் பார்க்கிறார். அதற்காக நகரத் தயாராக இருக்கிறார். அதனால், அவர் ஸ்டம்பிங் விஷயத்தில் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்று கூறினார் அவர். இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்களுக்கு அப்படி நிற்கிறார்கள் என்றாலும், அவர்கள் பிரதானப்படுத்தும் விஷயம் மாறுபடுகிறது என்கிறார் அவர்.

அதேசமயம், "தன்னுடைய உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து, அதை தன்னுடைய ஆட்டம் மேம்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு கேரி ஒரு நல்ல உதாரணம். இந்த எண்ணம் தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சொல்கிறார் ஆர்த்தி. தோனி தன்னுடைய 'firm hands'-ஐ பயன்படுத்துவதுபோல், கேரி தன் வலதுபக்க இடுப்பைப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

மஹேந்திர சிங் தோனி - ஸ்டம்பிங்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பந்தைப் பிடிக்கும் விஷயத்தில் தோனிக்கும், அலெக்ஸ் கேரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இருவருமே கீப்பிங் இலக்கணத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே!

பிரிஸ்பேன் ஆஷஸ் (2025) டெஸ்ட் போட்டியிலிருந்து கேரியின் இந்த கீப்பிங் பரவலாகப் பேசப்படுவருகிறது. ஆனால், இதேபோன்ற செயல்பாட்டை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 2022 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதேபோல் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார் அவர்.

மைக்கேல் நெஸர் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப்பிங் செய்த அவர், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜாஷுவா டா சில்வா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்தார். அந்த இரண்டு பந்துகளுமே மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் வீசப்பட்டிருந்தன.

அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய கேரி, "முதல் இன்னிங்ஸில் பந்தின் நகர்வைத் தடுக்க ராஸ்டன் சேஸ் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே சென்று ஆடினார். அதனால், முன்னாள் வந்து நிற்கும் திட்டத்தை அப்போதே சொன்னேன். ஆனால், முதல் இன்னிங்ஸில் அதை செயல்படுத்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதற்குப் பலன் கிடைத்தது" என்று கூறினார்.

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பிங்

பட மூலாதாரம்,Getty Images

இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 177 கேட்ச், 19 ஸ்டம்பிங் என 196 எதிரணி பேட்டர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கீப்பர்களாகக் கருதப்படும் ராட் மார்ஷ், இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாடின் ஆகியோரை விடவும் அதிகம்.

அதனால் தான் இன்று சிறந்த கீப்பர்கள் பற்றிய விவாதத்தில் கேரியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின் எஸ்இஎன் ரேடியோவுக்குப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி, "அவர் தான் தற்போதைக்கு உலகின் சிறந்த கீப்பர் என்று நினைக்கிறேன். அதுவும், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே..." என்று கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx237lyzp0jo

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை

2 weeks 2 days ago

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:38 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார்.

கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார்.

கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்துகளிலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார்.

கம்போடியாவின் ஆரம்ப வீரர் ஷா அப்ரார் ஹுசெய்ன் 6 பந்துவிச்சாளர்களை சமாளித்து 37 ஓட்டங்களுடன் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.

ஆனால், 7ஆவது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா தனது முதல் பந்திலேயே ஷா அப்ரார் ஹுசெய்னை ஆட்டம் இழக்கச் செய்தார்.

அடுத்த இரண்டு பந்துகளில் நிர்மல்ஜித் சிங், சந்தோயுன் ரதனாக் ஆகியோரையும் கடைசி இரண்டு பந்துகளில் மொங்தாரா சொக், பெல் வன்னாக் ஆகியோரையும் ஜீட் ப்ரியந்தனா ஆட்டம் இழக்கச் செய்து அரிய சாதனையை நிகழ்த்தினார்.

அப் போட்டியில் இந்தோனேசியா 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தர்மா கேசுமா 68 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்து பின்னர் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கம்போடியா 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவரை வீசி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதே தினத்தன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கம்போடியாவின் சவாலை முறிடியத்து 3 ஓட்டங்களால் இந்தோனேசியா வெற்றிபெற்றது.

இந்தோனேசியா 20 ஓவர்களில் 141 - 5 விக்., கம்போடியா 20 ஓவர்களில் 138 - 7 விக்.

ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவர் வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்தார்.

இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் இரண்டு ரன் அவுட்கள் அடங்கு இருந்தன.

இங்கிலாந்தில் 2010இல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொஹமத் ஆமிர் வீசிய கடைசி (20ஆவது) ஒவரில் ப்றட் ஹெடின், மிச்செல் ஜோன்சன் ஆகியோரை முதல் இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்தார்.

அடுத்த இரண்டு பந்துகளில் மைக்கல் ஹசி, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள்.

மொஹமத் ஆமிரின் கடைசிப் பந்தில் ஷோன் டெய்ட் ஆட்டம் இழந்தார்.

இது இவ்வாறிருக்க, அயர்லாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான ரி20 போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயர்லாந்து வீரர் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

நோர்த் வெஸ்ட் வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணியின் தலைவராக விளையாடிய கேர்ட்டிஸ் கெம்ஃபர், 12ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும் 14ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சாதனையை நிலைநாட்டி இருந்தார்.

https://www.virakesari.lk/article/234245

இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்

2 weeks 3 days ago

இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா

Published By: Digital Desk 1

22 Dec, 2025 | 07:29 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

2112_sl_vs_ind__captains_possing_with_th

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து  121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தபத்து  15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

2112_vishmi_gunaratne.png

விஷ்மி குணரட்ன உட்பட மூன்று வீராங்கனைகள் அநாவசியமாக இல்லாத ஓட்டங்களை எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார்கள்.

பந்துவீச்சில் க்ரான்தி கௌட், தீப்தி ஷர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷபாலி வர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

2112_jemima_rodrigues.png

தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிககப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஜெமிமா ரொட்றிக்ஸ் 10 பவுண்டறிகள் உட்பட 69 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத்  கோர்  15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/234053

நியூஸிலாந்து மெற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் செய்திகள்

2 weeks 5 days ago

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல்

18 Dec, 2025 | 06:27 PM

image

(நெவில் அன்தனி)

மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து  பலமான நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

1812_tom_latham_and_devon_convey.png

அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

1812_tom_latham.png

91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும்.

மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

1812_devon_convey.png

கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை.

மைல்கல் சாதனைகள்

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர்.

அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும்.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும்.

இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது.

கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும்.

https://www.virakesari.lk/article/233757

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

3 weeks 6 days ago

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

Dec 13, 2025 - 07:56 PM

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். 

இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

3 weeks 6 days ago

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

12 Dec, 2025 | 02:05 PM

image

(நெவில் அன்தனி)

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக  நியூஸிலாந்து  வெற்றிகொண்டது.

1112_jacob_tuffy.__2_.png

2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார்.

முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை.

கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

1112_michael_ray__1_.png

ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர்.

களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை.

ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

1112_devon_convay__2_.png

1112_mitchell_hay__1_.png

டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது.

மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.)

நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.)

ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி.

https://www.virakesari.lk/article/233177

இருபதுக்கு இருபது

4 weeks ago

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

@கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே.

அடுத்து ஐபிஎல் லும் வருகிறது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் | Ticket Sales For Twenty20 World Cup Begin

ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா,

ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும்.

ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tamilwin
No image previewஇருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

4 weeks 1 day ago

சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

4 weeks 2 days ago

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும்.

தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.

எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார்.

அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார்.

இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார்.

sharujan_taking_runs_with_his_partner.jp

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு  போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார்.

இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. 

https://www.virakesari.lk/article/232873

பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்

1 month ago

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று

05 Dec, 2025 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது.

1_flags_of_canada_mexico_and_usa.png

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக  உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.

2002 உலகக் கிண்ணப்  போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும்.

நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள்

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன.

இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன.

3_fifa_draw_procedere..jpg

ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி.

ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா.


ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா.

ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2.

ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும்.

4_fifa_word_cup_qualified_teams.png

2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும்.

ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும்.

சம அளவிலான போட்டித் தன்மை  

சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும்.

அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக  (Top half and Bottom half) விளையாடும்.  அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். 

5_pathway_for_fifa_groupings.png

இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது.

12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது.


ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது.

பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள்

வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

6_pm_of_canada_march_carney.jpg

7_mexico_president_claudia.png

8_us_president_donald_trump...JPG

கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர்.

அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.

ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

பீபா உலகக் கிண்ணம் 2026

பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.

72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும்.

மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும்.

கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும்.

ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும்.

9_new_york_new_jersey.jpg

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும்.

இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

2_fifa_world_cup_2026.png

10_fifa_world_cup_2026_players.png

https://www.virakesari.lk/article/232570

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

1 month ago

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

02 Dec, 2025 | 03:11 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது.

1222.PNG

மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன.

சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர்.

அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின்  கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார்.

கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார்.

வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார்.

duplantis_and_maclauglin_lavrone.jpg

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார்.

அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும்   400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார்.

இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது.

அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார்.

nicola_olylagers.jpg

emmanuel.jpg

பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார்.

maria_peres.jpg

sabastian_sawe.jpg

வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார்.

rising_stars_ed_serem_and_zang_giale.jpg

பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார்.

ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/232249

Checked
Fri, 01/09/2026 - 14:54
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed