விளையாட்டுத் திடல்

பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை!

2 days 22 hours ago
பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை!

 

967212-1024x633.jpg

கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது.

அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு.

இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந்துள்ள மெஸ்ஸி, கையில் உலகக் கோப்பையை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.

“நான் இதை ஒருபோதும் எண்ணி கூட பார்த்ததில்லை. சிறுவயதில் இருந்தே நான் தொழில்முறை கால்பந்து வீரராக இருக்க வேண்டும் என கனவு கண்டேன். அதையே செய்தேன். எனது பயணம் நீண்டது. தோல்வியை தழுவி உள்ளேன். ஆனால், வெற்றியை நோக்கி எனது எண்ணம் இருந்தது. அதற்காக களத்தில் சமர் புரிய வேண்டும். அதே நேரத்தில் ஆட்டத்தை அனுபவித்து ஆட வேண்டும். நாங்கள் மிகவும் சிறப்பான மற்றும் அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதீத அன்பைப் பெறுகிறோம். தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம் இது” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி, ஆர்ஜெண்டினா அணிக்காக இதுவரை 99 சர்வதேச கோல்களை பதிவு செய்துள்ளார்.

Messi honored with a statue next to Maradona, Pelé | The Peninsula Qatar

Roy Nemer on Twitter: "The Lionel Messi statue has been unveiled and it will be based in the CONMEBOL headquarters next to the statues of Pelé and Diego Maradona. https://t.co/31lZK4ooSy" / Twitter

https://thinakkural.lk/article/246942

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி

3 days 9 hours ago
சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி

Published By: SETHU

29 MAR, 2023 | 11:35 AM
image

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார்.

கியூராசாவ்  - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார்.

ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. 

இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின்  20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மெஸி புகுத்திய கோல் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது.

Messi-----Curacao---Argentina-AFP-3.jpg

2006 ஆம் ஆண்டு குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் மெஸி தனது முதல் சர்வதேச கோலைப் புகுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசெம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று  போட்டியில் சம்பியனாகிய பின்னர் ஆர்ஜென்டீனா விளையாடிய 2 ஆவது போட்டி இதுவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பனாமாவுடனான போட்டியில் ஆர்ஜென்டீனா 2:0 விகிதத்தில் வென்றது. அப்போட்டியில் மெஸி ஒரு கோலைப் புகுத்தியிருந்தார்.

Messi-----Curacao---Argentina-AFP-2.jpg

ஆர்ஜென்டீனா சார்பில் அதிக கோல்களைப் புகுத்திய வீரர்களில் மெஸிக்கு அடுத்ததாக கெப்ரியேல் படிஸ்டுவா 56 கோல்களையும் சேர்ஜியோ அகுவேரா 41 கோல்களையும் புகுத்தியுள்ளனர்.

சர்வதேச ரீதியில் ஆகக் கூடுதலான கோல்களைப் புகுத்திய வீரர்களில் லயனல் மெஸி 3 ஆவது இடத்தில் உள்ளார். போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்களையும் ஈரானிய வீரர் அலி தாயி 109 கோல்களையும் புகுத்தியுள்ளனர்.

Messi-----Curacao---Argentina-AFP-4.jpg

 

கியூராசாவ் 

கியூராசாவ் (Curacao)  என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் வெனிசூவேலாவுக்கு அருகிலுள்ள ஒரு தீவு நாடாகும். நெதர்லாந்தின் இறையாண்மைக்கு உட்பட்ட நாடு இது.              (சேது)  Photos: AFP

https://www.virakesari.lk/article/151653

சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை

5 days 4 hours ago
சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை
ரொனால்டோ சாதனை மேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

யூரோ 2024 தகுதிச் சுற்றில் லக்சம்பர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து உலகிற்கு தனது மீள் வருகையை அவர் மீண்டும் அழுத்தமாக உரைத்துள்ளார்.

கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. ரொனால்டோ தலைமை தாங்கிச் சென்ற போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் வெளியேறியதுடன், அந்த அணி விளையாடிய கடைசி இரு நாக் அவுட் போட்டிகளிலுமே தொடக்கத்தில் அவர் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சௌதி புரோ லீக் மூலம் புதிய அவதாரம்

35 வயதை எட்டிவிட்டதால் ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால், மான்செஸ்டர் அணியுடனான உறவு கசந்து, சௌதி புரோ லீக் தொடருக்கு மாறிய ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர தவறவில்லை.

அதேநேரத்தில், உலகக்கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த போர்ச்சுகல் அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பயிற்சியாளர் பொறுப்பில் பெர்னாண்டோ சான்டோசுக்குப் பதிலாக ரொபர்டோ மார்டினெஸ் அமர்த்தப்பட்டார். புதிய பயிற்சியாளரின் நம்பிக்கையைப் பெற்ற ரொனால்டோ கணிப்புகளைப் பொய்யாக்கி போர்ச்சுகல் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.

 
யூரோ தகுதிச்சுற்றில் தொடர்ந்து அசத்தல்

உலகக்கோப்பைக்குப் பிறகு போர்ச்சுகல் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ 2024 தகுதிச்சுற்றில் அவர் அசத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து அசத்திய ரொனல்டோ, லக்சம்பர்க் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே லக்சம்பர்க் அணியின் தடுப்பரணை உடைத்து முதல் கோலை அடித்து போர்ச்சுகல் அணிக்கு அவர் முன்னிலை பெற்றுத் தந்தார்.

ரொனால்டோ சாதனைமேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

யூரோ தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் முதலிடம்

போர்ச்சுகல் அணியின் ஜோவா ஃபெலிக்ஸ் 15-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 18-வது நிமிடத்திலும் கோல் அடித்து தங்களது அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத் தந்தனர். நட்சத்திர வீரர் ரொனால்டோ 31-வது பாதியில் மீண்டும் ஒரு கோல் அடித்து தான் வலுவாக திரும்பி வந்திருப்பதை கால்பந்து உலகிற்கு பறைசாற்றினார்.

முதல் பாதியில் போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மாற்று ஆட்டக்காரர்களாக வந்த ரஃபேல் லிவோ, நெவெஸ் ஆகியோர் கோலடிக்க, முடிவில் போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க் அணியைப் பந்தாடியது.

யூரோ 2024 தகுதிச் சுற்றில் 'J' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி இதுவரை தான் ஆடிய 2 போட்டிகளிலும் ஒரு கோல் கூட வாங்காமல் வெற்றி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. புதிய பயிற்சியாளர் ரொபர்டோ மார்டினெஸின் அணுகுமுறை சிறப்பான பலனை அளித்திருப்பதாக போர்ச்சுகல் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோ சாதனை மேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கால்பந்தில் சாதனைமேல் சாதனை

யூரோ 2024 தகுதிச்சுற்றில் ரொனால்டோ தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன், லக்சம்பர்க் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடிய முதலிரு போட்டிகளிலுமே தலா 2 கோல்கள் அடித்து தனது திறமையையும், சிறப்பான பார்மையும் அவர் நிரூபித்துள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் அதிக கோல் அடித்தவரான ரொனால்டோ, தனது சாதனை கோல் கணக்கை 35-ஆக உயர்த்திக் கொண்டுள்ளார். 37 ஆட்டங்களில் விளையாடியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

யூரோ தகுதிச்சுற்றுக்கு முன்பாகவே, சர்வதேச கால்பந்திலும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தம் வசம் வைத்திருந்த ரொனல்டோ 196 போட்டிகளில் 122 கோல்களை அடித்து, சாதனை சிகரத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cmm8zmv0m43o

வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

5 days 9 hours ago
வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை
தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி அசாத்திய சாதனை புரிந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் ரன் மழை பொழிந்தது. இரு அணிகளும் சேர்ந்து 517 ரன்களைக் குவித்தன. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஆட்டத்தில் 500 ரன்களுக்கும் மேல் குவிக்கப்பட்ட ஆட்டமாக இது அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஜான்சன் சார்ல்ஸ் அடித்த அபார சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைக் குவித்தது.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி குயின்டன் டி காக்கின் அதிரடி சதத்தின் உதவியுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைக் குவித்து 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சாதனை வெற்றியை ருசித்தது.

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்ல்ஸ் 39 பந்துகளிலேயே சதம் கடந்து அசத்தினார். மொத்தம் 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள், 11 சிக்சர்களை விளாசி 118 ரன்களைக் குவித்தார்.

தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சதம் அடித்த மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்ல்ஸ்

அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இருவரும் 58 பந்துகளில் 135 ரன்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்த்தனர்.

ஜான்சன் சார்ல்ஸ் அவுட்டாகி வெளியேறியதும் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பொவல் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். அதிரடி காட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைக் குவித்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

6-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்த தென் ஆப்ரிக்கா

டி20 போட்டிகளில் 250 ரன்களைக் கடந்து இதுவரை எந்த அணியும் வென்றதே இல்லை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி நிச்சயம் என்ற ரசிகர்களின் எண்ணத்தை தென் ஆப்ரிக்க வீரர்கள் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் பொய்யாக்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்காவின் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் - ரைஸா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி தொடக்கம் முதலே எந்தவொரு அழுத்தமும் அணியின் மீது விழாமல் பார்த்துக் கொண்டனர்.

அதாவது, இருவரது பேட்டில் இருந்தும் பவுண்டரி, சிக்சர்களாக பந்து பறந்து கொண்டிருந்ததால் ஸ்கோர் போர்டு ஏகத்திற்கும் எகிறியது. முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்ட குயின்டன் டி காக், இரண்டாவது ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சர்களாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

முதல் ஓவரில் இருந்தே தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டைக் காட்டிலும் மிக அதிகமாகவே பராமரிப்பதில் சிக்கல் எழவே இல்லை. இருவருமே களத்தில் ருத்ர தாண்டவமாடியதால் தென் ஆப்ரிக்க அணி ஆறாவது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது.

தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தென் ஆப்ரிக்க அணிக்கு சரவெடி தொடக்கம் தந்த குயின்டன் டி காக் - ஹென்டிரிக்ஸ்

தென் ஆப்ரிக்காவின் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் - ஹென்டிரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு வெறும் 65 பந்துகளில் 152 ரன்களைக் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

களத்தில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி ரன் மழை பொழிந்த குயின்டன் டி காக் 44 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது.

மறுமுனையில், தென் ஆப்ரிக்க அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்த மற்றொரு தொடக்க வீரர் ஹென்டிரிக்ஸ் 28 பந்துகளில் 68 ரன்களை விளாசினர். அவர் மொத்தம் 11 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் அடித்தார்.

அடுத்து வந்த ருஸ்ஸோவும், டேவிட் மில்லரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தென் ஆப்ரிக்க அணியின் ரன் ரேட் மிகவும் வலுவாக இருந்ததால் பெரிய அளவில் நெருக்கடி எழவில்லை.

தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 38 ரன்களைக் குவித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். கேப்டனுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற ஹெயின்ரிச் லாஸ்ஸன் 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.

முதல் பந்து முதலே பவுண்டரி, சிக்சர்களாக விளாசத் தொடங்கிவிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் வெற்றி இலக்கை எட்டும் வரையிலும் தங்களது வேகத்தை குறைக்கவே இல்லை. அவர்களது வேகத்திற்கு அணை போட வெஸ்ட் இண்டீஸ் அணி பலவாறாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

தென் ஆப்ரிக்க அணியின் ஆவேச ஆட்டத்திற்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இமாலய இலக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியுமா என்று ரசிகர்கள் மலைத்திருந்த ஒரு ஸ்கோரை தென் ஆப்ரிக்க அணி போகிற போக்கில் எட்டிவிட்டது.

அதிரடி சரவெடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்க அணி 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிவிட்டது.

தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரசிகர்கள் மனதில் நிழலாடிய 17 ஆண்டுகளுக்கு முந்தைய ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க வெற்றிகரமாக இலக்கை துரத்திப் பிடித்த இந்த ஆட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்காக அமைந்தது.

இந்த ஆட்டம், 2006-ம் ஆண்டு வான்டரர்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் போட்டியை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலே கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்று கருதப்பட்ட அந்த காலத்தில், ஆஸ்திரேலிய அணி குவித்த 434 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து தென் ஆப்ரிக்க அணி மலைக்க வைத்தது. இந்த ஆட்டத்தின் வீடியோ பதிவு டி.வி.டி.யாக பதிவு செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டது என்பதில் இருந்தே அந்த ஆட்டம் கிரிக்கெட் உலகில் எவ்வளவு தூரம் வியந்து பார்க்கப்பட்டது என்பதற்கு சான்று.

தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட முதல் ஆட்டமாக இது அமைந்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 489 ரன்கள் சேர்க்கப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அப்போது, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய சாதனை ஆட்டத்தில் தோல்வியின் பக்கம் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் இதுவே அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இம்மாதம் நடந்த ஆட்டம் ஒன்றில் முல்தான் சுல்தான்ஸ் - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மோதிய ஆட்டத்தில் 515 ரன்கள் குவிக்கப்பட்டதே உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதையும், தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் தகர்த்துள்ளது.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 22 சிக்சர்களையும், தென் ஆப்ரிக்க அணி 13 சிக்சர்களையும் விளாசின.

இரு அணிகளும் சேர்ந்து 46 பவுண்டரிகளை அடித்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் இந்த அளவுக்கு சிக்சர்களோ, பவுண்டரிகளோ அடிக்கப்பட்டதே இல்லை. அந்த வகையிலும் இந்த ஆட்டம் சாதனை ஆட்டமாக அமைந்துவிட்டது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில், 2006-ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் போல, டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இந்த ஆட்டமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு வகை கிரிக்கெட்டிலும் சாதனை ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியாக தென் ஆப்ரிக்காவே இருப்பது சிறப்பம்சம்.

https://www.bbc.com/tamil/articles/cz5pyzy1dmro

உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம்

6 days 22 hours ago
உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம்
ஸ்வீட்டி பூரா

பட மூலாதாரம்,BFI

25 மார்ச் 2023, 15:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம்.

சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

 
நீத்து கங்காஸ்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

நீத்து கங்காஸ்

முன்னதாக, 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீத்து கங்காஸ்.

இவர் 2022ஆம் ஆண்டுக்கான பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் லுட்சைகான் என்பவரை 5-0 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

டெல்லியின் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cd1326239ygo

ஆசிய கிண்ண கிரிக்கெட் 2023 செய்திகள்

1 week ago
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள்

Published By: VISHNU

24 MAR, 2023 | 01:46 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள்  பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது.

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் தங்களால் பங்குபற்ற முடியாது என இந்தியாவும் இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டால் தங்களால் பங்குபற்ற முடியாது என பாகிஸ்தானும் ஏட்டிக்குப்போட்டியாக அறிவித்திருந்தன.

இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில் தற்போது இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானைவிட வேறு எந்த நாடு நடத்தும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், இலங்கை ஆகிய நாடுகளில் ஒன்று இந்தியா சம்பந்தப்பட்ட 5 போட்டிகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தும் இந்தப் போட்டிகளை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு போட்டிகளில் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 6 அணிகளும் லீக் சுற்றில் இரண்டு குழுக்களில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். சுப்பர் 4 சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இதன் பிரகாரம் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

இந் நிலையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கவென ஒரு செயற்குழ நியமிக்கப்பட்டுள்ளது. பங்குபற்றும் நாடுகளுடன் அக் குழுவினர் கலந்துரையாடி விமானப் போக்குவரத்து, ஒளிப்பரப்பும் அட்டவணைகள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்வர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஒரு தொகுதிப் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்ப்பட்டுள்ளது. துபாயில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்திற்கு புரிம்பாக ஆசிய கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள் கலந்துரையாடியபோதே கொள்கையளவில் இந்த இணக்கம் காணப்பட்டது.

https://www.virakesari.lk/article/151313

காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்

1 week 1 day ago
காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்
லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 மார்ச் 2023, 05:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது.

மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'.

கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணிக்காக நேற்று களமிறங்கினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜெண்டினா vs பனாமா

கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் வென்று, தாயகம் திரும்பிய மெஸ்ஸி மற்றும் அவரது அணியினருக்கு தலைநகர் பியூனஸ் ஐரிஸில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

கூட்டத்திற்கு நடுவே திறந்த பேருந்தில் கோப்பையுடன் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி வீரர்கள் வலம் வரும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், மெஸ்ஸி உட்பட அனைத்து வீரர்களும் ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

மெஸ்ஸியால் உலகக்கோப்பையை அர்ஜென்டினா மக்கள் மத்தியில் கொண்டு சென்று கொண்டாட முடியாமல் போனது. இந்தக் குறையை நீக்கும் வகையில் அமைந்தது, நேற்றைய அர்ஜெண்டினா, பனாமா அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி.

இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, அர்ஜென்டினாவின் தலைநகரத்தில் இருக்கும் மிகப்பெரிய மைதானமான எல் மானுமெண்டல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையை வென்ற பிறகு 'சாம்பியன்' என்ற அந்தஸ்துடன் அர்ஜென்டினா அணி முதல்முறையாக நேற்றைய போட்டியில் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் 'சாம்பியன்ஸ்' என்று பொறிக்கப்பட்ட அர்ஜென்டினா அணியின் பிரமாண்ட ஜெர்ஸி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

உலககோப்பையை மைதானத்திற்கு கொண்டு வந்த அந்தத் தருணத்தில், அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி கொண்டாடித் தீர்த்தனர்.

ஆட்டத்திற்கு முன்பு மைதானத்தில் அர்ஜென்டினாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியின் வீரர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். குறிப்பாக பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, கண்ணீர் மல்க தேசிய கீதத்தைப் பாடினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

'ரத்தக் காயம்'

நட்பு ரீதியான ஆட்டம் என்றாலும், சர்வதேச அரங்கில் இந்தப் போட்டி குறித்து பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

உலகக்கோப்பையை வென்ற பிறகு, முதல் முறையாக அர்ஜென்டினா அணி விளையாடும் சர்வதேச போட்டி என்பதாலும், சொந்த நாட்டில் நடப்பதாலும் அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை அதிகமாகக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணியும் பனாமா அணியும் ஆக்ரோஷமாக மோதினர்.

முக்கியமான சாதனை ஒன்றைப் படைக்க கோல் போஸ்டை தொடர்ந்து முற்றுகையிட முயன்றார் லியோனெல் மெஸ்ஸி.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பனாமா அணி வீரர் கல்வான், மெஸ்ஸியை தடுக்க முயன்று மஞ்சள் அட்டை பெற்றார். கோல் போஸ்டை முற்றுகையிட மெஸ்ஸி முன்னேறியபோது அவரைத் தடுக்க அவரது காலில் மோதி மெஸ்ஸியை கீழே விழச் செய்தார் பனாமா வீரர்.

கீழே விழுந்த மெஸ்ஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது. அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிய மெஸ்ஸி, மஞ்சள் அட்டைக்கு எதிராக கிடைத்த ஃபீரிகிக்கை கோலாக்க தவறினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

நட்பு ரீதியிலான போட்டி என்ற போதிலும், காயம் ஏற்படும் அளவுக்கு போட்டி விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணி கோல் போஸ்டை முற்றுகையிட்டு வந்தது. அந்த அணியின் மெஸ்ஸி, டி மரியா, என்சோ பெர்னாண்டஸ், ஜூலியன் அல்வாரெஸ் என பலரும் கோலடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் முதல் பாதி வரை பல முயற்சி செய்தும், அர்ஜென்டினா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

சாதனை படைத்த மெஸ்ஸி
Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

இரண்டாவது பாதியிலும், அர்ஜெண்டினா அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. உலக சாம்பியன் அணியை தடுக்க பனாமா அணியும் பதில் தாக்குதலைத் தொடுத்து வந்தது. இதனால் பல முறை பனாமா அணி ஃபவுல் செய்தது.

75 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், மெஸ்ஸி அடிக்கும் கோலை காண மைதானத்திற்கு வந்திருந்த 80 ஆயிரம் பேரும் அந்த ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

பனாமா அணி செய்த தவறின் காரணமாக, அர்ஜெண்டினா அணிக்கு 4 முறை ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்று வாய்ப்பையும் கோலாக மாற்றத் தவறிய அர்ஜென்டினா, 77வது நிமிடத்தில் கிடைத்த ஃபீரிகிக் வாய்ப்பை கோலாக மாற்றியது.

மெஸ்ஸி அடித்த ஃபீரிகிக் கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்த போது, அதை மீண்டும் வலைக்குள் திணித்து கோலாக்கினார் அல்மாடா.

1-0 என முன்னிலை பெற்ற அர்ஜெண்டினா அணி, மற்றுமொரு சாதனையைப் படைக்க தன்முனைப்புடன் ஆடியது.

மெஸ்ஸி கோல் அடிக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிரணி முழு திறன் கொண்டு தடுத்தது.

அத்தனை பேரையும் தாண்டி 88வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தனது இடதுகாலால் மெஸ்ஸி அடித்த ஃபீரி கிக், கோல் கீப்பரை தாண்டி வலைக்குள் தஞ்சம் புகுந்தது.

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த கோல் மூலம் சர்வதேச அரங்கில், 800 கோல்கள் அடித்து சாதனை படைத்தார் மெஸ்ஸி. சர்வதேச அளவில், ரொனால்டோவுக்கு பிறகு இந்த பட்டியலில் அதிக கோலடித்து மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளின் மூலம் 828 கோல்கள் அடித்திருக்கிறார்.

ஆட்ட நேர முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது அர்ஜென்டினா அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

போட்டி முடிந்த பிறகு, உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி மைதானத்தைச் சுற்றி கோப்பையுடன் வலம் வந்தது. ஒவ்வொரு வீரரும் உலகக்கோப்பையின் மாதிரியை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cv2rqe10vpdo

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

1 week 4 days ago
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

Published By: SETHU

21 MAR, 2023 | 02:58 PM
image

பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்,

இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற்றுக்கொண்டுள்ளார். 

Kylian--Mbappe-1200.jpg

பிரெஞ்சு அணி எம்பாப்வேயின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்துடன் யூரோ 2024 கிண்ண  போட்டியில் மோதவுள்ளது. பிரான்ஸில் இப்போட்டி நடைபெறும். உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின் பிரான்ஸ் பங்குபற்றும் முதல் போட்டி இதுவாகும். 

https://www.virakesari.lk/article/151067

டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை

1 week 6 days ago
டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை
ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மார்ச் 2023

மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன.

தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்?

கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், ஒருநாள் போட்டிகள் அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளின் எல்லை கடந்து கிரிக்கெட்டை பரவலாக்கியதில் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

 
ஒருநாள் போட்டி அறிமுகத்தால் டெஸ்டிற்கு நெருக்கடி

நாள்கணக்கில் விளையாடியும்கூட டெஸ்ட் போட்டிகளில் பல தருணங்களில் முடிவு கிடைக்காமல் போகும் அதேநேரத்தில், ஒரே நாளில் வெற்றி, தோல்வியைத் தெரிந்து கொள்ள வழிவகுக்கும் ஒருநாள் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவற்பைப் பெற்றன.

ஒருநாள் கிரிக்கெட்டில், 1975ஆம் ஆண்டு உலகக்கோப்பை அறிமுகமான பிறகு கிரிக்கெட் வெகுவேகமாக இளைஞர்களிடையே பிரபலமாகத் தொடங்கியது.

இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களின் வரவேற்பு குறைந்து போகவே, டெஸ்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது உண்டு. இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யமானதாக மாற்ற போட்டி நாட்கள் 5ஆக குறைப்பு என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அதேபோன்றதொரு நெருக்கடி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டி அறிமுகம்

2003ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 போட்டிகள் படிப்படியாக பிற நாடுகளிலும் பிரபலமாயின.

2004ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும், 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் டி20 போட்டிகள் அறிமுகமாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

இந்தியாவில் ஜீ எண்டெர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் பின்புலத்தில் 2007ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான அமைப்பு சார்பில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) முன்னெடுக்கப்பட்டது.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியை ஜாம்பவானாக்கிய டி20 உலகக்கோப்பை

கிரிக்கெட்டின் புதிய குழந்தையான டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பைப் புரிந்துகொண்ட ஐ.சி.சி. அதே ஆண்டில் முதன் முதலாக டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தியது.

அப்போதைய இந்திய அணியில் முன்னணி வீரர்களாகத் திகழ்ந்த சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய மும்மூர்த்திகளும் ஒதுங்கிக் கொள்ள, தோனி தலைமையிலான இளம் படை யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று அசத்தியது. அது முதல் தோனி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக, சச்சினுக்கு அடுத்த ஜாம்பவானாக உருவெடுத்தார் என்பது தனிக்கதை.

2002ஆம் ஆண்டே மாற்றத்தின் அவசியத்தை உணர்த்திய சச்சின்

டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பு, கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அச்சுறுத்தலாகிப் போனது.

குறிப்பாக, ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் மீது கேள்விக்குறி விழுந்தது அன்றுதான். ஒருநாள் போட்டிகள் இனியும் வேண்டுமா என்ற பட்டிமன்றம் சர்வதேச கிரிக்கெட்டில் அப்போதே தொடங்கிவிட்டது.

ஒருநாள் போட்டிகள் வேண்டுமா? வேண்டாமா? ஒருநாள் போட்டிகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?

இது போன்ற விவாதங்கள் சூடு பிடித்தன.

ஆனாலும், ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர், 2002ஆம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தியா - இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி மழை காரணமாக முதல் நாள் கைவிடப்பட, அடுத்த நாளில் மீண்டும் தொடங்கி நடைபெற்ற போதும் அதை முடிக்க மழை விடவில்லை. இதனால், 110 ஓவர்கள் பந்துவீசியும்கூட அந்தப் போட்டியில் முடிவு கிடைக்காமல் போகவே, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2002 சாம்பியன்ஸ் கோப்பையுடன் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி, இலங்கை கேப்டன் ஜெயசூர்யா

டி20 வருகையால் கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு

அப்போதே, ஓவர்கள் குறைப்பு என்பதற்குப் பதிலாக ஒரு நாள் போட்டிகளை நடத்தும் விதத்தில் மாற்றம் செய்யலாம் என்று சச்சின் யோசனை கூறியிருந்தார். இதுகுறித்துப் பல முறை பேசியிருந்தாலும், 2011ஆம் ஆண்டுதான் அலுவல்பூர்மாக ஐ.சி.சி.யிடம் தனது யோசனையை அவர் முன்வைத்தார்.

அப்போதைய ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி லோர்கட்டிடம் கடிதம் வாயிலாக தனது யோசனையை சச்சின் தெரியப்படுத்தினார்.

சச்சின் யோசனை குறித்து ஐ.சி.சி. வெளிப்படையாகக் கருத்து ஏதும் தெரிவித்திராத நிலையில், உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே உள்ளூரில் அறிமுகப்படுத்திய டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின.

பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிளப் டி20 போட்டிகளில் விளையாட வசதியாக, மிக விரைவிலேயே தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தொடங்கினர்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி

அவர்களில், 31 வயதிலேயே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை இங்கிலாந்து கைப்பற்றக் காரணமாகத் திகழ்ந்த அவர், அந்த அணியின் கேப்டனாக புகழின் உச்சியில் இருந்தபோதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

"மிக நெருக்கமான கிரிக்கெட் போட்டி அட்டவணையால் டெஸ்ட், ஒருநாள், டி20 என கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் கவனம் செலுத்துவது இயலாத காரியம், அதிகப்படியான சுமையைக் குறைக்கவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என்ற பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பு, ஒருநாள் போட்டிகளுக்கான முடிவுரையின் தொடக்கம் என்றே கிரிக்கெட் உலகில் பலரும் கருதினர்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாசிம் அக்ரம்

ஒருநாள் போட்டி - வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி கருத்து

கிரிக்கெட் வீரர்களின் சுமையைக் குறைக்க ஒருநாள் போட்டிகளை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்தார். இந்திய அணியின் முனனாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ, ஒரு நாள் போட்டிகளில் ஓவர்களின் எண்ணிக்கையை 40-ஆகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

டி20 போட்டிகளைப் போல் அல்லாமல், ஆட்டத்தில் பின்தங்கிய ஓர் அணி சுதாரித்துக்கொண்டு மீண்டு எழுவதற்கு வாய்ப்பு தரும் ஒருநாள் போட்டிகள் நீடித்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலியுறுத்தியுள்ளார்.

தோணி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய இரண்டையும் கைப்பற்றிய இந்திய அணி கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் வரவேற்பு காணப்படுகிறது. மற்ற அணிகள் மோதும் போட்டிகளின்போது மைதானம் வெறிச்சோடியே கிடக்கிறது. டி20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர், அதில் நிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் திரில் அனுபவம் ஒருநாள் போட்டிகளில் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது யோசனையை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தனியார் விளையாட்டு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது முந்தைய யோசனையை மீண்டும் அவர் நினைவூட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருநாள் போட்டியிலும் 4 இன்னிங்ஸ்கள் - சச்சின் யோசனை

ஓவர்களை குறைப்பதற்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளைப் போல ஒருநாள் போட்டிகளையும் தலா 25 ஓவர்களுடன் 4 இன்னிங்ஸ்கள் கொண்டதாக மாற்றவேண்டும் என்பது சச்சின் முன்வைக்கும் யோசனை. இதனால், பிட்ச் சூழல், காலநிலை போன்றவற்றால் டாஸ் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் சாதகம், இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால் போட்டி ஒருதரப்பாக இல்லாமல், இன்னும் சுவாரசியமானதாக மாறும் என்பது அவரது கருத்து.

15வது ஓவர் முதல் 40வது ஓவர் வரையிலும் ஒருநாள் போட்டிகள் எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது என்பதை சச்சின் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் எடுக்கப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதமே இல்லாமல் போயிருப்பதாகவும், ஐசிசி-யின் புதிய விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் சச்சின் கூறுகிறார்.

வீசப்படும் ஒவ்வொரு பந்தும் ஒரு கேள்வியைப் போன்றது, அவ்வாறு பந்துவீச்சாளர் முன்வைக்கும் கேள்விக்கு பேட்ஸ்மேன் அளிக்கும் பதிலே கிரிக்கெட் என்கிறார் சச்சின்.

கேள்வியே சுவாரஸ்யமில்லாமல் போனால் ஆட்டம் எப்படி ருசிக்கும் என்கிறார் சச்சின். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, பந்தை எச்சில் கொண்டு துடைக்கக் கூடாது என்று கொண்டு வரப்பட்ட விதியைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சின் யோசனை - ஐ.சி.சி. என்ன சொல்கிறது?

இரு அணிகளும் மாறி மாறி 25 ஓவர் கொண்ட இன்னிங்ஸ்களை விளையாடுவதால் ஆட்டத்தில் எங்கும் தொய்வு இருக்காது. டாஸில் வெல்லும் அணிக்கு மட்டுமே உள்ள சாதகம் குறைந்து, எதிரணியும் போட்டியில் வெல்ல சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஒருநாள் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தனது யோசனைகளைப் பகிர்ந்துள்ளார். முன்பு போல, முத்தரப்பு கோப்பை, நான்கு நாடுகள் ஆடும் தொடர் போன்றவை நடத்தப்பட வேண்டும் என்பது அவரது யோசனை.

ஆனால் ஐசிசி-யோ, ஒருநாள் போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்து வருவதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளது. நாடுகளுக்கு இடையிலான போட்டி அட்டவணையில் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமாகவே இருப்பதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cg3z9lxllw0o

"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள்

2 weeks 1 day ago
"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள்
மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட் மைதானத்தில் தேர்ட் மேன் பகுதியில் ஊன்றுகோல் உதவியுடன் ஃபீல்டிங் செய்ய முடியுமா?

ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோல் உதவியுடன் பேக் ஃபுட்டில் கட்ஷாட் அடிக்க முடியுமா?

சாத்தியமே இல்லை என்கிறீர்களா? ஆனால், இந்த சூப்பர் பெண்களுக்கு இது எல்லாமே சாத்தியம்தான்.

பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதெல்லாம் கிடக்கட்டும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தானது எனக் கருதப்படும் ஜார்கண்ட் மாநிலம் வாசிப்பூரில் வளர்ந்தவர் தாஸ்னிம் (26). இப்போது எல்லோரும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கான பள்ளி ஆசிரியையாக உள்ளார் அவர்.

 

வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போதுமான வருவாய் உள்ள குஜராத் மாநிலத்தின் பழங்குடி சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் லலிதா (26). அவருக்கு இப்போது ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. அவருடைய வீட்டில் இப்போதும் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. முழுமையான மின் இணைப்பும் இல்லை.

தாஸ்னிம், லலிதா இருவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒருவர் தினமும் டிவியில் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர். மற்றொருவருக்கு வீட்டில் அப்படி விளையாட்டை டிவியில் பார்க்கும் வசதி இல்லை. ஆனால், இப்போது இருவருமே தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொன்று, அவர்கள் எதிர்கொண்ட போலியோ பாதிப்பு.

பெண் நேயர்களுக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இதழியல் திட்டமான BBCShe-இன் ஒரு பகுதியாக TheBridge உடன் இணைந்து இந்தச் செய்தியைத் தயாரித்துள்ளோம்.

“குழந்தைப் பருவத்தில் நான் இர்ஃபான் பதான் ரசிகை. ஒரு மேட்சைக்கூட விடாமல் பார்ப்பேன். ஆனால், எனக்கான எல்லை எது என்பது எனக்குத் தெரியும். ஸ்டேடியத்துக்கு போய் விளையாடுவதெல்லாம் இருக்கட்டும், ஸ்டேடியம் போய் ஒரு மேட்ச் பார்ப்பதுகூட எனக்குச் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால், போலியோ நோய் தாக்கியதன் காரணமாக வாழ்க்கை குறித்து எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. மன அழுத்தத்துடனேயே இருந்தேன்,” என்கிறார் டாஸ்னிம்.

“இப்போது புதிய நம்பிக்கை வந்திருக்கிறது. மக்களுக்கு என்னைத் தெரியத் தொடங்கியிருக்கிறது,” என்கிறார் அவர்.

பெரிதும் ஆண்களே விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை, தங்களுடைய உடல் குறைபாடுகளைக் கடந்து டஜன் கணக்கான டாஸ்னிம்களும் லலிதாக்களும் விளையாடி வருகிறார்கள்.

இந்தியாவில் 1.2 கோடி மாற்றுத் திறனாளிப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் தங்களுக்கு உதவும் வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாத கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.

ஆனாலும், நாம் பார்க்கும் இந்தப் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கான தங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்துகிறார்கள். இதற்காக சமூக கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், தேவையான தளவாடங்களைப் பெறுவதற்கும், பயணம் செய்வதற்கும் போராடுகிறார்கள். இதன் மூலம், தடைகளைக் கடந்து சாதிப்பதற்கு கனவு காண்பதற்காக சமூகத்தின் ஒரு பகுதிக்கு இவர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள்.

முதல் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி
மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

மொபைலில் கிரிக்கெட் பார்க்கும் லலிதா

2019இல் இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட் முகாம் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் உதவியோடு குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

“மாற்றுத் திறனாளிப் பெண்கள், சாதாரண பெண்களைவிடவும் அதிக மன உறுதியோடும், தங்களை நிரூபிக்கவேண்டும் என்ற ஊக்கத்தோடும் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏதாவது கூடுதலாக செய்து, இந்த விளையாட்டுக்கு ஏற்றவர்களாகத் தங்களை ஆக்கிக்கொள்ள எப்போதும் அவர்கள் முயன்றுகொண்டே இருக்கிறார்கள்,” என்கிறார் இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதன்மை பயிற்சியாளர் நிதேந்திர சிங்.

குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாம் சில பெண்களுக்கு வாழ்க்கையில் புதிய பாதையைக் காட்டியது. சிறப்பான திறமையுடைய பெண் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண இந்த முகாம் உதவியது. இப்படி அடையாளம் காணப்பட்டவர்கள், பின்னாளில் இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணியை அமைப்பதற்கு வினையூக்கிகளாக இருந்தார்கள்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்

ஆனால், அதன் பிறகு முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்து வந்தது.பல மாநிலங்களில், மாநில அளவிலான மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணியை அமைப்பதே போராட்டமாக இருந்தது.

2021இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இதுவரை இதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி செய்யும் வகையிலான அரசாங்க கொள்கையும் ஏதுமில்லை. மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான எந்தத் தெளிவான பாதையும் இல்லை.

பாரா பேட்மின்டன், பாரா தடகளம் ஆகியவற்றுக்கு பாராலிம்பிக்சும், தேசிய அளவிலான போட்டிகளும் நடப்பதால், அவற்றுக்கு ஒப்பீட்டளவில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஒப்பீட்டளவில் நல்ல வாய்ப்பு உள்ளது. வேலை வாய்ப்புக்கான தெளிவான பாதை இல்லாவிட்டாலும்கூட, தங்களுடைய விடாமுயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் சில மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்த அணிக்கு எந்த ஒளிமயமான எதிர்காலமும் இல்லாவிட்டாலும்கூட, குஜராத் முழுவதிலும் இருந்து 10-15 பெண்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றுகூடி பயிற்சி செய்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் லலிதா(26). குஜராத் மாநிலம், டாஹோட் பகுதியில் உள்ள உமரியா கிராமத்தைச் சேர்ந்த இவர் வாரம் 150 கி.மீ. பயணம் செய்து பயிற்சிக்காக வதோதரா வந்து செல்கிறார்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்
 
படக்குறிப்பு,

ஆலியா

இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவருடைய இடது காலில் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், பேட்டிங் செய்யும்போது அட்டகாசமான ஃபுட்வொர்க்கை வெளிப்படுத்துவதற்கு இது லலிதாவுக்குத் தடையாக இல்லை. ஊன்றுகோல் உதவியோடுதான் இவர் கிரீசில் நிற்கிறார். ஆனால், இவரது நிற்கும் வாட்டமும் மட்டையின் வீச்சும் எந்தத் தொழில்முறை கிரிக்கெட் வீரரோடும் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது.

“முதன்முதலாக நான் கிரிக்கெட் பார்த்தது மொபைலில்தான். 2018இல் அப்படிப் பார்த்தபோதே எனக்கு கிரிக்கெட் விளையாடவேண்டும்போல இருந்தது. இப்போதுகூட எனக்கு கிரிக்கெட் பார்க்க வீட்டில் ஒரு தொலைக்காட்சி இல்லை. ஆனால், சர்வதேசரீதியில் என் நாட்டுக்காக விளையாடுவது குறித்து நான் கனவு காண்கிறேன்,” என உற்சாகத்தோடு கூறுகிறார் லலிதா.

தலித் கூலித் தொழிலாளியான அவரது கணவர் பிரவீன் அவருக்கு ஒப்பிடமுடியாத ஆதரவை அளிக்கிறார். லலிதா பயிற்சிக்குச் செல்லும்போது அவருடன் பிரவீனும் 8 மணி நேரம் பயணம் செய்கிறார். மனைவி பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களது 5 மாத குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்.

“நாங்கள் பயிற்சிக்குக் கிளம்பும்போது, ஆட்கள் லலிதாவின் உடையைப் பற்றி ஏதாவது சொல்வார்கள். காரணம், கிராமத்தில் எந்தப் பெண்ணும் பேண்டும், டி ஷர்ட்டும் அணிவதில்லை. நடக்கவே முடியாதபோது எப்படி அவர் விளையாடுவார் என்றும் அவர்கள் பேசுவார்கள்.

அவர்கள் சொல்வதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. என் மனைவி முன்னேறிச் செல்லவேண்டும். எங்களுக்கெல்லாம் பெருமையைத் தரவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் அவர்.

மாற்றுத் திறனாளி பெண் கிரிக்கெட்

விளையாட்டுக்கு ஆணா, பெண்ணா என்ற பாகுபாடு இல்லை. தேவையெல்லாம், பெண்களால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்று நம்புவதும், ஆதரவு வழங்குவதும்தான் என்ற கூற்றுக்கு வாழும் சான்றாக இருக்கிறார் பிரவீன்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பாலின சிக்கல்கள் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால், டாஸ்னிம், லலிதா ஆகியோர் எதிர்கொள்ளும் வேறு சிக்கள்கள் உண்டு. அவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

போதிய ஆதரவு இல்லாத நிலை

மாற்றுத் திறனாளி கிரிக்கெட்டுக்கு தேவை வெறும் உபகரணங்கள் மட்டுமே அல்ல. இதற்கு வேறு வகையான ஃபீல்டு செட்டிங் தேவை. கால்களில் மாற்றுத் திறன் உடைய பேட்ஸ்வுமனுக்கு ரன்னர்கள் தேவை. எல்லா வீரர்களின் திறனையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள பவர்பிளே முறை உருவாக்கப்படவேண்டும்.

“பெண்கள் பிரீமியர் லீக் போன்ற சில முயற்சிகளால் இன்று சில பெண் விளையாட்டு வீரர்கள் பெயர்களாவது தெரிகிறது. ஆனால், இப்படி ஒரு டோர்னமென்ட் விளையாடுவதற்குக்கூட எங்களுக்கு வசதிகள் இல்லை,” என்கிறார் ஆலியா கான். இவர் இந்தியாவின் முதல் தேசிய மாற்றுத்திறனாளி பெண்கள் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த விளையாட்டை விளையாட முயல்வதால் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

“நல்லா இருக்கும் பெண்களே கிரிக்கெட் விளையாட முடியாது. இதில் ஒரு கையை வைத்துக்கொண்டு உனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டுமா?' என்பது போன்ற சொற்களை நான் பலமுறை கேட்டுவிட்டேன்.

சமுதாயத்தில் பெண்களுக்கு என்ன நிலைமை தெரியுமா? நானெல்லாம் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே வந்து விளையாடி நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற பேச்சை அடிக்கடி கேட்கிறேன்,” என்கிறார் அவர்.

திவ்யாங்க கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் ஆஃப் இந்தியா (இந்திய ஊனமுற்றோர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் DCCBI) ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பை வழிநடத்தும் பெண் நிர்வாகிகள் இல்லை.  பார்வையற்ற பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் இதைவிட சிறப்பான ஏற்பாடு உள்ளது. நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி மூலமாகவும், இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் (CABI) மூலமாகவும் இதற்கான உதவிகள் வருகின்றன.  “BCCI, DCCBI, CABI ஆகிய அனைத்து அமைப்புகளுமே ஒன்று சேர்ந்து மாற்றுத் திறனாளி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உதவும் அமைப்பை உருவாக்கவேண்டும். விளையாட்டு வருகிறார்கள், விளையாடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இதைப் பார்ப்பதற்குக்கூட ஒருவரும் இல்லை. அவர்களாலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்?” என்று கேட்கிறார் இவர்களுக்கான பயிற்சியாளர் நிதேந்திர சிங்.  நல்ல நிலையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. விளம்பரத்தின் மூலமும் வருவாய் வருகிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டும் வருகிறார்கள். இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை இல்லாமலேயே மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடிவருகிறது. அதீதமான ஆர்வம் காரணமாகவும், சமூதாயத்தில் தங்களுக்கு என ஓர் இடம் வேண்டும் என்பதற்காகவும், தடைகளை உடைப்பதற்கான துணிச்சல் இல்லாத தங்களைப் போன்ற மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இவர்கள் தாங்களே முயற்சி எடுத்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.    (BBCShe தொடர். தயாரிப்பு: திவ்யா ஆர்யா, பிபிசி)
 
படக்குறிப்பு,

களத்திலும் வீட்டிலும் லலிதா

திவ்யாங்க கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் ஆஃப் இந்தியா (இந்திய ஊனமுற்றோர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் DCCBI) ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பை வழிநடத்தும் பெண் நிர்வாகிகள் இல்லை.

பார்வையற்ற பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் இதைவிட சிறப்பான ஏற்பாடு உள்ளது. நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி மூலமாகவும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் (CABI) மூலமாகவும் இதற்கான உதவிகள் வருகின்றன.

“BCCI, DCCBI, CABI ஆகிய அனைத்து அமைப்புகளுமே ஒன்று சேர்ந்து மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உதவும் அமைப்பை உருவாக்க வேண்டும். விளையாட வருகிறார்கள், விளையாடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இதைப் பார்ப்பதற்குக்கூட ஒருவரும் இல்லை. அவர்களாலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்?” என்று கேட்கிறார் இவர்களுக்கான பயிற்சியாளர் நிதேந்திர சிங்.

நல்ல நிலையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. விளம்பரத்தின் மூலமும் வருவாய் வருகிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை இல்லாமலேயே மாற்றுத்திறனாளி பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

அதீதமான ஆர்வம் காரணமாகவும் சமூதாயத்தில் தங்களுக்கென ஓர் இடம் வேண்டும் என்பதற்காகவும் தடைகளை உடைப்பதற்கான துணிச்சல் இல்லாத தங்களைப் போன்ற மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இவர்கள் தாங்களே முயற்சி எடுத்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

(BBCShe தொடர். தயாரிப்பு: திவ்யா ஆர்யா, பிபிசி)

https://www.bbc.com/tamil/articles/c87vl80pp4jo

 

உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

2 weeks 2 days ago
உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

Published By: VISHNU

15 MAR, 2023 | 06:37 PM
image

(என்.வீ.ஏ.)

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது.

1403_litton_das.jpg

முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

1403_najmul_hassain_shanto.jpg

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1403_banglasdesh_clean_sweep_eng__3_-_0_

13 ஓவர்கள் நிறைவின்போது இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் அவ்வணி வெற்றியீட்டி ஆறுதல் அடையும் என நம்பப்பட்டது.

1403_eng_vs_bang.jpg

ஆனால், கிரிக்கெட் விசித்திரமான விளையாட்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

14ஆவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் மாலனும் அடுத்த பந்தில் ஜொஸ் பட்லரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஓட்ட வேகம் குறைந்ததுடன் விக்கெட்களும் சரளமாக விழத்தொடங்கியது.

டேவிட் மாலன் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஜொஸ் பட்லர் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார்.

ஜொஸ் பட்லர் கவர் திசையில் பந்தை அடித்துவிட்டு அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்தபோது பந்தை பிடித்த மெஹிதி ஹசன் மிராஸ் நேராக விக்கெட்டை நோக்கி எறிந்து அவரை ரன் அவுட் ஆக்கினார்.

இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து ஆட்டத்தின் பிடியை தளரவிட்டிருந்தது.

அவர்களைவிட பென் டக்கட் 11 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தன்விர் இஸ்லாம், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

லிட்டன் தாஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி பங்களாதேஷை பலப்படுத்தியிருந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் ரொனி தாலுக்தாருடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

லிட்டன் தாஸ் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 73 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரொனி தாலுக்தார் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ், தொடர்நாயகன்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ.

முதல் இரண்டு போட்டிகள்

இரண்டு அணிகளுக்கும் இடையில் சட்டோக்ராமில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

மிர்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 4 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

https://www.virakesari.lk/article/150620

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?

2 weeks 2 days ago
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?
ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை"

- இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள்.

இந்த பின்னணியில்தான் சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முகமது ஷமியைக் குறிவைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று சில ரசிகர்கள் முழக்கமிட்டது தொடர்பான இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவின் எதிர்வினை உற்று நோக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த டெஸ்டின் முதல் நாளில் எல்லைக்கோடு அருகே நின்றிருந்த முகமது ஷமியை நோக்கி சில ரசிகர்கள் அவ்வாறு முழக்கமிட்டார்கள்.

 

அடுத்து வந்த இரு நாட்களில் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுவே பேசுபடுபொருளாக மாறிப் போனது. அந்த காட்சி அடங்கிய வீடியோவை பலரும் பகிர்ந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அது வைரலாகிப் போனது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

நான்காவது டெஸ்டின் இறுதியில், அதாவது ஐந்தாவது நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகான பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

"ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். அங்கே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று அவர் பதில் தந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் தொடர்ச்சியாகவே, முகமது ஷமிக்கு இதற்கு முன்பு நிகழ்ந்த இதேபோன்றதொரு நிகழ்வை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அது 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை தருணம்...

அது வரையிலும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை தன் வசம் வைத்திருந்த இந்திய அணி முதன் முறையாக அந்த அணியிடம் தோற்றுப் போனது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியாக அது அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் முகமது ஷமிக்கு அன்றைய தினம் மோசமானதாக அமைந்துவிட்டது. 3.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அவரே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலராக இருந்தார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் முதன் முறையாக இந்திய அணி தோல்வியுற்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ரசிகர்களின் அதிருப்தி முகமது ஷமி மீது திரும்பியது. பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமியையும், அவர் சார்ந்த மதத்தையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர்.

ரசிகர்களிடம் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் வந்த எதிர்வினையை, அடுத்து வந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய கேப்டன் விராட் கோலி துணிச்சலாக எதிர்கொண்டார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒருவர் மீது அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான செயல். களத்தில் வெற்றிக்காக நாங்கள் எவ்வளவு தூரம் கடுமையாக முயன்றோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஷமி போன்ற ஒருவர் இந்தியாவுக்கு எத்தனை போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

"உண்மையில், அந்த நபர்கள் மீது கவனம் செலுத்தி என் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க நான் மட்டுமல்ல, ஷமியோ அல்லது அணியில் உள்ள வேறு யாருமோ விரும்பவில்லை" என்று விராட் கோலி கடுமையாக எதிர்வினையாற்றினார்.

விராட் கோலி மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு பக்கபலமாக குரல் கொடுத்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் அதிரடி வீரர் சேவாக் உள்பட பலரும் முகமது ஷமியை ஆதரித்தும், விளையாட்டின் இயல்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் உடனடியாக பதிவு செய்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த வேளையில், 2021-ம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட போது அப்போதைய பொறுப்பு கேப்டன் ரஹானே தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்.

தனியார் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ள முகமது சிராஜ், ""அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் என்னை நோக்கி கருப்புக் குரங்கு என்று ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த நாளும் அது தொடர்ந்த போது எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்." என்றார்.

ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இனவெறி தாக்குதல் குறித்து நடுவரிடம் முறையிட தீர்மானித்த நான் அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் தெரிவித்தேன். இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை நீங்கள் வேண்டுமானால் களத்தில் இருந்து வெளியே இருக்கலாம் என்று நடுவர்கள் கூறினர். ஆனால் கேப்டன் ரஹானேவோ, நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், மதிக்கிறோம், நாங்கள் ஏன் களத்தை விட்டு வெளியேற வேண்டும்? அவர்களை வெளியேற்றுங்கள்? நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? என்று திட்டவட்டமாக கூறினார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய வீரர் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிய ரசிகர்கள் மீது குஜராத் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், ரசிகர்களின் செயல்கள், விமர்சனங்களுக்குப் பதிலளித்து தேவையில்லாமல் சர்ச்சைகளை பெரிதாக்கக் கூடாது என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா அதுபோன்ற பதிலை அளித்திருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3gzkq7g4p9o

இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர்

2 weeks 3 days ago
இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர்

Published By: DIGITAL DESK 5

15 MAR, 2023 | 03:36 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை வலைபந்தாட்டத் தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் 'வீரகேசரி'க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார்.

அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உலகத் தரம்வாய்ந்த சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடக் கிடைத்ததைப் பாக்கியமாக கருதுவதாகக் குறிப்பிட்ட தர்ஜினி சிவலிங்கம், இங்கு விளையாடுவதன் மூலம் தனது திறமை மென்மேலும் அதிகரிக்கிறது என்றார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தற்போது நடைபெற்றுவரும் விக்டோரியா லீக் வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் அணியில் 6ஆவது வருடமாக இலங்கையின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார்.

உலக வலைபந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவில், தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஜினி (தர்ஜினி) சிறந்த அனுபவத்தைப் பெறுவதுடன் அவரது உடற்தகுதியிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுவதாக நிக்கோல் குறிப்பிட்டார்.

பலசாலிகளான அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஈடுகொடுத்து விளையாடுவதில் இலங்கை வீராங்கனைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் தர்ஜினி எவ்வாறு ஈடுகொடுத்து விளையாடுகிறார் என அவரிடம் கேட்டபோது,

'வலைபந்தாட்ட விளையாட்டில் நிறைய விடயங்களைக் கற்பதிலும் சவால்களை எதிர்கொள்வதிலும் ஜினி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் இளம் வீராங்கனைகயாக இங்குவருகை தந்த அவரது வலைபந்தாட்ட ஆற்றல் குறையவில்லை என்றே கூறவேண்டும். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அவரிடம் இருக்கிறது. எனவே தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியில் அவர் இடம்பெறுவது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன்' என்றார் நிக்கோல்.

அவுஸ்திரேலியாவில் தர்ஜினியை எல்லோரும் ஜினி என்று செல்லமாக அழைத்துவருகின்றனர்.

அட்லான்டா 1996 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மென்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் மென்செஸ்டர் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மென்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் இடம்பெற்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, பத்து அணிகள் பங்குபற்றும் விக்டோரியா லீக் வலைப்நதாட்டப் போட்டி தற்போது நடைபெற்றுவருவதுடன் தர்ஜினி விளையாடும் அணியான சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் தனது ஆரம்பப் போட்டியில் ஜீலோங் கௌகார்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை (19) சந்திக்கவுள்ளது.

அப் போட்டியில் 6ஆவது வருடமாக சிட்டி வெஸ்ட் ஃபெல்கன்ஸ் அணியில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார்.

மெல்பர்னில் அமைந்துள்ள அல்டோனா நகரை மையமாகக் கொண்டு விளையாடும் நடப்பு சம்பியன் ஃபெல்கன்ஸ் அணி இந்த வருடமும் சம்பியனாகும் குறிக்கோளுடன் பங்குபற்றவுள்ளதாக தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடும் எனத் தெரிவித்த தர்ஜினி சிவலிங்கம், உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கு தன்னை தயார்படுத்த இந்த சுற்றுப் போட்டி பெரிதும் உதவும் என்றார்.

விக்டோரியா லீக் வலைபந்தாட்டப் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீராங்கனைகள் சன்கோர்ப் சுப்பர் வலைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதிபெறுவர். சன்கோர்ப் சுப்பர் வலைபந்தாட்டத்திலிருந்தே அவுஸ்திரேலிய தேசிய வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவர்.

சிங்கப்பூரில் 2018இலும் 2022இலும் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சம்பியனாவதற்கு தர்ஜினி சிவலங்கம் பெரும் பங்காற்றியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக் உள்ளக அரங்கில் 2015இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் தர்ஜினி இல்லாத இலங்கை சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்து 16ஆவது இடத்தைப் பெற்றது.

ஆனால், 4 வருடங்கள் கழித்து இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் தர்ஜினி சிவலிங்கத்தின் பிரதான பங்களிப்புடன் சிங்கப்பூரை 2 தடவைகள் வெற்றிகொண்ட இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 15ஆம் இடத்தைப் பெற்றது. 2019 உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் 7 போட்டிகளில் தர்ஜினி மொத்தமாக 348 கோல்களைப் புகுத்தி வரலாறு படைத்திருந்தார்.

2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லிவர்பூலில் வைத்து தர்ஜினி தெரிவித்த போதிலும் 3 வருடங்கள் கழித்து ஆசிய வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி தனது அதிகபட்ச பங்களிப்பின் மூலம் இலங்கையை ஆசிய சம்பியனாக உயர்த்தியிருந்தார்.

tharjini_sivalingam.jpg

victorian_netball_league.jpg

asia_cup_netball_2022.jpg

asia_cup_2018.jpg

https://www.virakesari.lk/article/150595

ஐபிஎல் அணியின் வீரர் விலகல்!

2 weeks 6 days ago
ஐபிஎல் அணியின் வீரர் விலகல்!
 
1678588926-IPL-2-586x365.jpg

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜை ரிச்சர்ட்சன். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தனது காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஜை ரிச்சர்ட்சன். இத்தகவலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆஷஸ் தொடரிலும் அவரால் பங்கேற்கமுடியாது எனத் தெரிகிறது. ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி.

https://oosai.lk/12567/

பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனது எப்படி?

2 weeks 6 days ago
பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனது எப்படி?
உஸ்மான் கவாஜா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'இதற்கு முன்பு நான் இந்தியாவில் இரண்டு சுற்றுப்பயணங்களைச் செய்தேன். அந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான் மைதானத்திற்கு ட்ரிங்ஸ் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு இந்தப்பயணம் மிக நீண்டதாக இருந்தது.’

வியாழனன்று மாலை உஸ்மான் கவாஜா இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் நிம்மதி உணர்வு தெளிவாகத் தெரிந்தது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் (நரேந்திர மோதி ஸ்டேடியம்) அபாரமாக விளையாடி 180 ரன்கள் குவித்த உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்ற இறங்கங்கள் இருந்தன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 1986 இல் பிறந்த கவாஜாவின் குடும்பம் அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது.

 

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கவாஜா ஒரு பேட்டியில் கூறினார்.

வக்கார் யூனிஸ், சயீத் அன்வர், வாசிம் அக்ரம் போன்ற பாகிஸ்தான் அணி வீரர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

பாண்டிங் காயத்தால் கவாஜாவுக்கு வாய்ப்பு
உஸ்மான் கவாஜா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2011 ஆஷஸ் தொடரின் போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் உஸ்மான் கவாஜா மற்றும் ரிக்கி பாண்டிங்

2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடந்து வந்தது.

சிட்னியில் நடந்த இந்தத்தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான ரிக்கி பாண்டிங் காயம் காரணமாக விளையாடவில்லை.

அவரது இடத்தில் கடைசி 11 பேரில் ஒருவராக விளையாட உஸ்மான் கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் கவாஜா.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 37 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களையும் அவர் எடுத்தார்.

இருப்பினும் இதற்குப் பிறகு கவாஜா அணிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றபடி இருந்தார்.

கவாஜாவின் பேட்டிங் சாதனைகள்
உஸ்மான் கவாஜா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,@UZ_KHAWAJA

இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா மொத்தம் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் 50.89 என்ற சராசரியில் நான்காயிரத்திற்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 சதங்கள் அடித்துள்ளார்.

தற்போதைய பார்டர் கவாஸ்கர் தொடரைப் பற்றி பேசினால் அதில் உஸ்மான் கவாஜா தான் அதிக ரன் குவித்தவராக உள்ளார்.

இந்தத் தொடரில் அவர் இதுவரை மொத்தம் 333 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, கவாஜா அதிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

தனது ’கம் பேக்’ பந்தயத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் சதம் அடித்தார். இந்த ஆண்டு ஜனவரியில் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்ததில் இருந்து கவாஜா மொத்தம் 6 சதங்களை அடித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் கவாஜா 74 க்கும் அதிகமான சராசரியில் ரன் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 180 ரன்கள் எடுத்த இன்னிங்ஸின் போது கவாஜா ஒரு தனித்துவமான சாதனையையும் படைத்தார்.

இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 422 பந்துகளை எதிர்கொண்டார். இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் இவ்வளவு அதிக பந்துகளை எதிர்கொண்ட முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அவர்தான்.

1979 இல் கிரஹாம் யலோப் நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

பைலட் ஆன உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,@UZ_KHAWAJA

 
படக்குறிப்பு,

உஸ்மான் நான்கு வயதில் பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். இந்த படத்தில் அவர் தனது தந்தையுடன் காணப்படுகிறார்

கிரிக்கெட் தவிர விமானத்தை பறக்கச்செய்வதிலும் விருப்பம் கொண்டவர் உஸ்மான் கவாஜா.

நியூ சவுத் வேல்ஸின் ஏவியேஷன் பள்ளியில் அவர் விமான பைலட் பயிற்சி பெற்றுள்ளார்.

அவர் ஒரு பயிற்சி விமானி ஆவார். அவரிடம் விமானத்தை இயக்கும் உரிமம் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ 380 ஐ அவர் இயக்கும் வீடியோ வெளியானது.

'விமானத்தை பறக்கச்செய்வது கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் உதவியது. நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் என்ன ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து, உச்சத்தை எட்ட முடியும் என்பதை உணர்ந்தேன்’ என்று கிரிக்கெட் மற்றும் விமானத்தின் மீதான தனது ஆர்வம் குறித்து கவாஜா குறிப்பிட்டார்.

கட்டுரை - நவீன் நேகி

https://www.bbc.com/tamil/articles/c4njgye48npo

200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் உலக சாதனை

3 weeks ago
200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் உலக சாதனை

Published By: SETHU

10 MAR, 2023 | 04:50 PM
image

பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சிட்னியில் இன்று ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார்.

அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

21 வயதான கெய்லீ மெக்கோவ்ன், 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் உலக சாதனையாளராகவும் விளங்குகிறார் இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Kaylee-McKeown---Australia-swimming--wor

https://www.virakesari.lk/article/150217

நியூஸிலாந்து இலங்கை கிரிக்கெட் தொடர்

3 weeks 2 days ago
நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இலங்கை; திமுத், குசல் அரைச் சதங்கள் குவிப்பு

Published By: NANTHINI

09 MAR, 2023 | 01:42 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது.

முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 7ஆவது ஓவரில் ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோவின் விக்கெட்டை இழந்தது. அவர் 13 ஓட்டங்களைப் பெற்றார். (14 - 1 விக்.) 

0903_dimuth_karunaratne.jpg

தொடர்ந்து அணித் தலைவர் திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் திறமையாக துடுப்பெடுத்தாடி, அரைச் சதங்கள் குவித்ததுடன், 2ஆவது விக்கெட்டில் 137 பெறுமதிமிக்க ஓட்டங்களை பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 151 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டமிழந்தனர். 

திமுத் கருணாரட்ன மிகவும் பொறுப்புணர்வுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அதேவேளை, குசல் மென்டிஸ் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடினார்.

83 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 16 பவுண்டறிகளுடன் 87 ஓட்டங்களை பெற்றதுடன், திமுத் கருணாரட்ன 87 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

0903_kusal_menidis_in_action.jpg

தொடர்ந்து முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி, 4ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.  

இந்நிலையில் தினேஷ் சந்திமால் 6 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 27 ஓட்டங்கள் சேர்ந்தபோது திறமையாக  துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (260 - 5 விக்.) அவர் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசியிருந்தார்.

0903_sri_lanka_team_line_up_for_national

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினால் அடுத்த டெஸ்ட் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் ஆடுகளம் புகுந்த நிரோஷன் திக்வெல்ல 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (268 - 6 விக்.)

எனினும், தனஞ்சய டி சில்வாவும் கசுன் ராஜித்தவும் திறமையாக துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களை பகிர்ந்ததுடன் அணி 300 ஓட்டங்களை கடக்க உதவினர்.

தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும் கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதீ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

0903_new_zealand_team_line_up_for_their_

https://www.virakesari.lk/article/150068

ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி

3 weeks 2 days ago

 

ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி
 
Share
23-64042758b1d18.jpg

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார்.

வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள்ளார்.

மகளின் சாதனைகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக சிறுமியின் தாய் காதம்பரி வினோத் தெரிவித்துள்ளார்.

இயற்கையாகவே சாகச வளைய நடனத்தில் மமாதி அபார திறமைகளை வெளிப்படுத்தி வந்தார் என அவரது தாய் கூறுகின்றார். 

https://www.analaifm.com/2023/03/05/ஒன்பது-வயதில்-உலக-சாதனைக/?utm_source=ReviveOldPost&utm_medium=social&utm_campaign=ReviveOldPost&fbclid=IwAR20VgQKfZx1Q2v1lySL-iiLRcmcmCDq4TteLvV_lZGhTarLNdxOF0KnFXE

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி

3 weeks 3 days ago
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி

Published By: DIGITAL DESK 5

08 MAR, 2023 | 10:02 AM
image

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 

116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. 

ஆரம்ப நாள்  நிகழ்வு வியாழக்கிழமை (09) முற்பகல் 8.30 மணிக்கு  இடம்பெற்று போட்டி முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுடன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு பூர்த்தியாவதால் போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இரு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் காணப்படுகிறது.

https://www.virakesari.lk/article/149946

3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி

3 weeks 3 days ago
3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி

Published By: DIGITAL DESK 5

07 MAR, 2023 | 04:31 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது  சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த  இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால்  வெற்றி ஈட்டிய இங்கிலாந்து 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

355669.webp

இந்நிலையில், நேற்றைய தினம் பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற 3 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி 50 ஒட்டங்களால் இலகு வெற்றியை பதிவு ‍செய்தது. இந்த வெற்றிக்கு ஷகிப் அல் ஹசனின் சகலதுறை ஆட்டம் பெரிதும் உதவி இருந்தது.

துடுப்பாட்டத்தில் 75 ஓட்டங்களை விளாசிய ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து அணியின் ரெஹான் அஹமத்தின் விக்கெட்டை வீழ்த்திய ஷகிப், சர்வ‍தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 300 விக்கெட்டுக்களை  வீழ்த்திய முதலாவது பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மேலும், சனத் ஜயசூரிய, ஷஹிட் அப்ரிடி ஆகியோருக்கு அடுத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ஓட்டங்கள் அடித்தும் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3 ஆவது வீரராகவும் பதிவானார். 

355691.webp

https://www.virakesari.lk/article/149923

Checked
Sat, 04/01/2023 - 14:46
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed