Jump to content

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vin_Mahalingam-150-news.jpg

வடஇந்தியாவில் இருந்து அண்ணளவாக 2500 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையால் நாடுகடத்தப் பட்ட அரசகுமாரன் விஜயனும் கூட்டாளிகளும் இலங்கைக்கு வந்து மலைப்பாங்கான காட்டுப்பகுதியாய் இருந்த தென்னிலங்கையின் பெரும்பகுதியில் வாழ்ந்த பூர்வீக தமிழ்க் குடிமக்களோடு சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து மேலும் வரவழைக்கப்பட்ட பெண்களுடன் பல்கிப் பெருகி காலப்போக்கில் கோட்டே, கண்டி என்ற இரு சிங்கள இராச்சியங்களை உருவாக்கினார்கள். பாளி சமஸ்கிருதம் தமிழ் என்பன கலந்து உருவானதே சிங்கள மொழியாகும். பின்னர் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பவுத்த மதத்தையும் பின்பற்றி சிங்கள பவுத்தர்களாக வாழ்ந்து வந்தார்கள்.


  

இலங்கையின் வடகிழக்குப் பகுதியான சமதரைப் பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த நாகரீகம் ஆன்மிகம் வாழ்வியல் கல்வி விஞ்ஞானம் வானசாஸ்த்திரம் கலைகள் மொழி இலக்கியம் என்பவற்றில் மிகச் சிறந்து விளங்கிய தமிழர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு அவர்களது ஆட்சி மிகப் பலமானதாக இருந்தது.

ஆனால் அன்னியரின் படையெடுப்பால் முழு இலங்கையின் ஆட்சியும் படிப்படியாகப் பறிபோனது.முழு இலங்கையையும் ஒன்றாக்கி தமது ஆட்சியில் வைத்திருந்த ஆங்கிலேயர் 1948ல் ஜனநாயக ஒற்றை ஆட்சிமுறை என்ற உருவில் முழு இலங்கையின் ஆட்சியையும் சிங்களமக்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். சிங்கள மொழி உலகில் சிறிலங்காவில் மாத்திரமே உள்ளது. அங்கு சிங்களவர் 75 வீதமாக வாழ்வதால் அந்தத் தீவை தமக்கான தனித்துவமான சிங்களப் பவுத்த நாடாக்கி விட வேண்டுமென்று பவுத்த சிங்களவர் மிக நீண்ட காலமாக அரும்பாடு பட்டு வருகின்றனர்.

பல காலமாகவே அவர்களுக்குச் சவாலாக இருக்கும் தமிழினத்தை அழித்து விடவேண்டு மென்று அதைக் கட்டமைக்கபட்ட முறையில் செய்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் பெரும் சவால்களையும் சந்தித்துள்ளதோடு இனியும் சந்திக்கத் தயாராகவும் உள்ளார்கள். என்ன விலை கொடுத்தும் தமிழின அழிப்பைப் பூர்த்தியாக்கி முழு இலங்கையையும் தனிச் சிங்களப் பவுத்த நாடாகியே தீர்வதென்று கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

மறுபக்கத்தில் தொன்றுதொட்டு சிறப்பான அரசியற் தலைமையில் மனிதத்துவம் மேலோங்க உயர்வான மென்மையான வாழ்வை மேற்கொண்ட வடகிழக்கில் வாழும் தமிழர் தென்னிலங்கையோடு சேர்க்கப்பட்டதால் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு அரசியல் அதிகாரத்தையும் இழந்து தமது பொருளாதாரம் மொழி கலை பண்பாடு கலாச்சாரம் மதம் என்பவற்றோடு தாயக பூமியையும் காப்பாற்ற முடியாமல் சிங்களப் பவுத்த ஆட்சியாளரால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இன அழிப்புக்கு உள்ளாகித் தத்தளிக்கிறார்கள். இலங்கை ஒற்றை ஆட்சியில் 2/3 பங்கு பெரும்பான்மையால் எதையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் 25% மாக இருக்கும் தமிழர்களால் அவர்களுக் கெதிரான எந்தச் சட்ட மூலத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது சாதகமான சட்ட மூலத்தை ஏற்படுத்தவோ முடியாது.

இதுதான் இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனை.

சிங்களவர் தலையிட முடியாத தமிழர் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் ஒரு அரசியற் தீர்வே இன்றைய தேவை.

பிரச்சனையைச் சரியாகப் புரிந்துகொண்டு தேவையையும் அதாவது தீர்வையும் முறையாக விளங்கிக்கொண்டு அதை அடைவதற்கான செயற்பாடுகளச் செயற்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா இனவெறி அரசு தமிழின அழிப்பை நிறைவேற்றக் கையாளும் கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள்:-

1.தமிழரை மதரீதியாக, பிரதேச வாரியாகப் பிரித்தாளும் தந்திரம்.தமிழருக்குள் பிரிவினைகளைத் தூண்டி பிரித்துத் துண்டாடி மோதவிடுதல்.

2.சலுகைகளையும் அரசஉதவிகளையும் காட்டி அல்லது மிரட்டி முடிந்தளவு தமிழரை தம்பக்கம் இழுத்தல்.

3. அபிவிருத்திக்கென்றும் படையினர் தேவைக்கென்றும் மத்திய அரசின் தொழிற் சாலைகளுக் கென்றும் இராணுவக் குடியிருப்புக் கென்றும் பாரிய அளவில் தமிழர் நிலங்களைக் கொள்ளை அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி அவர்களுக்கே அபிவிருத்தி அனைத்தையும் செய்து கொடுத்தல். நிலத்தை அபகரித்து அங்கு சிங்களவரைக் குடியேற்றுவதன் மூலம் தமிழருக் கென்று தாயகபூமி இருப்பதை இல்லாமற் செய்தல்.

4. தமிழர் பகுதியில் உள்ள வளங்களை, வளமான நிலங்களை தமிழர் அனுபவிக்க விடாமல் அவற்றை பறித்து சிங்களவருக்கு கொடுத்தல்,

5. பவுத்தமதத் திணிப்பு சிங்கள மொழி கலாச்சாரத் திணிப்பு மேலும் அவற்றுக்கான பெரும் ஊக்குவிப்பு மூலம் தமிழரின் மதம் தனித்துவமானமொழி பண்பாடு கலாச் சாரங்களை அழித்து அல்லது கலப்புச் செய்து சிதைத்து அப்படி ஒரு தனித்துவமான இனம் இல்லை என்று காட்டுதல்.

6.தமிழர் சுய பொருளாதார அபிவிருத்தி அடைய விடாமல் தடுத்து அவர்களை சிங்கள ஆட்சியின் தயவில் தங்கி வாழும் இனமாக வைத்திருத்தல், தமிழர் பிரதேச அபிவிருத்திகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்

7. படுகொலை செய்தல், வெளிநாடுகளுக்குத் துரத்தல், கருத்தடை செய்தல் பசி நோயால் இறந்துபோக அனுமதித்தல் போன்றவற்றால் தமிழர் தொகையை மேலும் குறைத்தல்.

8.தாம் தமிழருக்குச் செய்யும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியாதவாறு பிரகடனப் படுத்தாத இராணுவ ஆட்சியைத் தொடருதல்.

9.தமிழருக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்காமல் அடிமைப்படுத்தி வைத்திருத்தல்.

10.பேச்சுச்சுதந்திரம் ஊடகசுதந்திரம் மற்றும் மனிதசுதந்திரம் போன்ற அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குதல்.

11. சர்வதேச ஆதரவு தமிழருக்குக் கிடைக்காமல் தமக்குச் சார்பாக இருப்பதற்கான சகல தந்திரங்களையும் கையாளுதல்.

12. ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழ்நாட்டு எதிர்ப்பலைகளையும் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களையும் நிர்மூலமாக்கல்.

13.மதுபானங்களையும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் நீலஆபாசப் படங்களையும் தமிழர் பகுதிகளில் மிகத் தாராளமாக வழங்கி மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பாழடிப்பதோடு தமிழினத்தை ஒரு குற்றச்செயல் மலிந்த தீவிரவாதத் தன்மைகொண்ட கல்வியில் பின்தங்கிய காட்டுமிராண்டி இனமாகக் காட்டுதல்.

14.முழு இலங்கையுமே சர்வதேசக் கடனில் மூழ்குவதையோ வல்லரசுகளின் பிடியில் சிக்குவதையோ கூடக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு உதவும் சுயநல நாடுகளோடு கைகோர்த்து தமிழின அழிப்பை நிறைவேற்றல்.

15. தாமே ஒருசில புல்லுரிவிகளை வைத்து உருவாக்கும் குழுவை, புலிப்படை என்று காட்டி அவர்கள் மூலம் தாம் விரும்பாத தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்தல்.

ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றுக்கோ அல்லது சில, பல வற்றிற்கோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைப்போர் அல்லது உதவியாக இருப்போர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும். தெரிந்து கொண்டே வேண்டுமென்றே தமது அல்லது தமது அமைப்பின் சுய நலன்களுக்காக அப்படிச் செய்வோரை இனத் துரோகிகளாகவே கருத வேண்டும். தமிழர் நலன் சார்ந்த கட்சிகளுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் குழுக்களுக்குள்ளும் உடைப்புகளை ஏற்ப்படுத்துவோர், தம்மைத் தவிர மற்றெல்லாரையும் சிதைத்து அழிக்க வேண்டுமென்று செயற்படுவோர் ஸ்ரீலங்கா அரசின் செயற் திட்டங்களிற்கு உதவுகின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழர் தரப்பில் கட்சிகள் அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒருங்கிணைப்பு அவசியமே தவிர ஒரே கட்சியோ ஒரே அமைப்போ இருக்க வேண்டியதில்லை. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்திருப்பதும் அறிவுடமையாகாது. வேறுவழியின்றி இப்போது நாம் மேற்கொள்வது சர்வதேச ஜனநாயக அரசியற் போராட்டம். ஜனநாயகத்தின் அடிப்படையே எதிர்க்கட்சி இருக்கவேண்டும், அதாவது மாறுபட்ட அபிப்பிராயங்களையும் உள்வாங்கி பெரும்பான்மையால் தீர்மானிக்கப் படுவதே ஜனநாயக முறையாகும். சர்வாதிகாரமாக தமக்கு மட்டும் சரிஎன்று பட்ட கொள்கைகளை முடிவுகளை அனைவருக்கும் திணிப்பதை ஜனநாயகமோ, இன்றைய சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அந்தவழி தமிழின அழிவிற்கே வழிவகுக்கும். சர்வதேசத்தால் மீண்டும் நாம் அழிக்கப்படுவோம்.

எமது பிரச்சனைக்குத் தீர்வுக்காண நாம் மேற்கொண்ட 30 வருட ஜனநாயக சாத்வீக உள்நாட்டு அரசியற் போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டம் என்பன தோற்கடிக் கப்பட்ட நிலையில் சற்றும் கூடச் சலிப்படையாமல் தொடர்ந்து எமது போராட்டத்தைச் சர்வதேச ராஜதந்திர அரசியற் போராட்டமாகத் தொடர்கிறோம். அதில் நாம் வெற்றி பெறவேண்டுமானால் எவ்வாறு செயற்படலாம்:-

தாயகம், புலம்பெயர்தமிழர், தமிழகம் என்ற மூன்று தளத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவேண்டும்.

1.தாயகம்:-

வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு தொடர்ந்தும் உறுதியோடு செயற்பட வேண்டும். வடமாகாண சபை அமைச்சரவைத் தெரிவைப்போல் பதவிகள் தகுதி அடிப்படையில் மட்டும் வழங்கப்பட வேண்டும்.வடமாகாணசபை முதலமைச்சர், ரவிகரன் போன்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் கீழ் மாகாண அரியநேந்திரன் போன்றவர்களைப் போல் அனைத்து உறுப்பினரும் சுறுசுறுப்பாக மிக வீரியமாகச் செயற்பட வேண்டும். மக்களுக்கு எங்கே பிரச்சனை வருகிறதோ உடனடியாகவே அந்த இடத்தில் உறுப்பினர் தலைமையில் மக்கள் திரண்டு போராட / செயற்பட வேண்டும். எதிர்ப்பும் இணக்கமுமாக முடிந்தளவு ராஜதந்திரமாக அரசின் இனவழிப்பைத் தடுத்துக் கொண்டு மக்களின் உடனடி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதோடு சர்வதேச ராஜதந்திர அரசியல் முறையால் இனத்தின் நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவையும் மற்றும் எமக்குச் சார்பான மேற்குலகத்தையும் உரியமுறையில் கையாண்டு எமது தேவைகள் நிறைவேறும் போது அவர்களது தேவைகளும் நிறைவேறக்கூடிய வழிவகைகளை விளக்கி அதைச் சாத்தியமாக்கக் கூடியவாறான எமது வெளிநாட்டுக் கொள்கைகளையும் நட்பையும் வெளிப்படுத்தி எமது தேவைகளைப் பெற முயற்ச்சிக்க வேண்டும். தமிழ்த்தேசீய மக்கள் முன்னணி ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் முன்வைப்பதோடு ஸ்ரீலங்கா அரசை எதிர்ப்பதில் தமிழரின் உரிமைகளைப் பெறுவதில் போட்டியாக நிற்காமல் வடமாகாணத் தேர்தலில் நின்றதுபோல் இன ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இங்கிலாந்துப் பிரதமர் வந்தபோது தமிழ்த் தேசீயக் கூட்டமைப்போடு ஒருங்கிணைக்கப்படாத ஒருவகைப் போட்டிப் போராட்டத்திற்கு உதவியாய் நின்று படையினரின் பாதுகாப்பு வேலியை உடைக்க முற்பட்டு படையினர் அதைச் சாட்டாகச் சொல்ல வழி அமைத்தது போல் நடந்து கொள்ளாமல் புரிந்துணர்வோடு இனநன்மையை கருத்திற்கொண்டு ஒருங்கிணைவாகச் செயற்படவேண்டும். தேர்தல்களில் த.தே.கூ.வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம்.

2. புலம்பெயர் தமிழர்:-

2009 மே மாதத்திற்குப் பின் நிலத்தில் உள்ளவர்களால் எதுவுமே செய்ய முடியாதென்றும் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருந்த இனவழிப்பை தடுத்துநிறுத்தப் புலம்பெயர் தமிழரால் மட்டுமே முடியுமென்றும் செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தலைமைப் போட்டியால் கட்டுப்பாட்டுப் போட்டியால் ஜனநாயக வழிமுறைகளை விரும்பாத பழைய வழிமுறைகளில் ஊறிப்போனவர்களால் இனவழிப்பு அரசுக்கெதிராகச் செயற்பட வேண்டியவர்கள் தமக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டதால் ஒருவரையொருவர் அழிப்பதிலேயே தம் சக்தியை வளங்களைச் செலவிட்டதால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியவில்லை.

ஒரே அமைப்பு, ஒரே தலைமை மட்டுமே இருக்கவேண்டு மென்ற; வழங்களைத் தம்வசம் கொண்டிருந்த; பழைய முறைகளில் ஊறிப்போனவர்களின் அழுங்குப் பிடியில் இருந்து விடுபட்டு ஏனைய பரந்த சிந்தனை கொண்ட ஜனநாயக அமைப்புகள் ஆரோக்கியமான செயற்பாடு களை முன்னெடுக்க முடியவில்லை. யாரால் எதுவுமே முடியாதென்று நினைத்தோமோ அதே தாயகமக்களே இப்போது வரலாறு காணாத 78 % வாக்குப் பெரும்பான்மையோடு வடமாகாண சபையையும் உருவாக்கி இனவெறி அரசின் இன அழிப்பு வேகத்தையாவது குறைக்க முடிந்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் தமது உணர்ச்சி வசப்பட்ட மாய வலையில் இருந்து விடுபட்டு அறிவுபூர்வமான உணர்வு பூர்வமான ஆக்கபூர்வமான சிந்தனை செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு அமைப்புத்தான் வேண்டும் அது நாமே தான், மற்றவை எல்லாம் அழிக்கப் படவேண்டும் என்ற ஜனநாயக விரோதச் சிந்தனையில் இருந்து விடுபட்டு நாம் இப்போது மேற்கொள்ளக் கூடியது மேற்கொண்டிருப்பது சர்வதேச ஜனநாயக அரசியற் போராட்ட மென்பதை உணர்ந்துகொண்டு அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

தமது சுயநன்மைக்காக இன நன்மையை விற்காத எவரையும் அதாவது விலைபோகாத வர்களை; வழிமுறைகள் பற்றிய அவர்களது அபிப்பிராய பேதங்களுக்காக நாம் தூற்றுவதைக் கைவிட்டாலன்றி எம்மினத்திற்கு விமோசனம் கிடையாது. இனநன்மை க்காக செயற்படுவோருக்கிடையில் இருக்கக் கூடிய அபிப்பிராய பேதங்களுக்காக ஒருவரைஒருவர் வசைபாடுவதும் துரோகிஎன்று முத்திரை குத்தி ஒதுக்குவதும் தான் எம்மினத்தின் சாபக்கேடாக உள்ளது. பொறுப்புகளில் உள்ளவர்கள் ராஜதந்திரமாக சமயோசிதமாகச் சந்தர்ப்பத்திற்கேற்ப செயற்படவும் கருத்துகளை வெளிப்படுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளது. அவர்கள் ஒரு முடிவை எடுக்கும்போது 100 காரணங்களைக் கருத்திற்கொண்டு அதை எடுப்பார்கள்.

எமக்குத் தெரிந்த ஒருசில காரணங்களை வைத்துக் கொண்டு அந்த முடிவு பிழை என்றும் உடனே அவர்களைத் துரோகி என்றும் சொல்லி வசைபாடி அவர்களுக்கு எதிராக; முழு விபரமும் அறியாத பொதுமக்களைத் தூண்டி விடுகிறோம். அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி எமது தலைமைகளை நாமே களங்கப்படுத்தி காரியங்களைக் கெடுத்து விடுகிறோம். மக்களின் உணர்ச்சிகளுக்குத் தீனிபோட்டு வாழும் சில ஊடகங்களும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன. சுடு சுடு செய்திக்காக இனம் அழிக்கப்படுவதைக்கூட கவனியாமல் ஊடக தர்மத்தையும் மீறி செயற்படுவது மிக ஆபத்தாகும். ஊடகங்கள் லாபநோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பக்கச் சார்பின்றி இனநன்மை கருதிச செயற்பட்டால் நமது வெற்றி நிட்ச்சயமே.

நாம் இங்கு ஆரம்பத்தில் கண்டுகொண்டதுபோல் எமது பிரச்சனையும் அதற்கான தீர்வும் அனைவருக்கும் ஒன்றேதான். அதை அடையும் வழிமுறைகளில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்.

1.தனி ஈழம்

2.ஒன்றுபட்ட இலங்கைக்குள் தாயகம் தேசீயம் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு.

3.உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி ஆட்சி

4.13 + 5.வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி

இவை எவையுமே எமது தேவையோ, குறிக்கோளோ நோக்கமோ அல்ல. எமது நோக்கத்தை அடைவதற்கான வழிகள்தான் இவை. அவற்றின் அடிப்படையில் நாம் பிளவுபடத் தேவை இல்லை.சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து எந்த வழிமுறை சாத்தியமோ அப்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பயணம் பண்ணும் போது அந்தப் பாதை மூடப்பட்டால் இன்னொரு மாற்றுப் பாதையால் நாம் பயணத்தைத் தொடர் வதில்லையா?. ஆகவே எந்த வழி நல்ல வழி என்பது இப்போதைக்கு அர்த்தமற்றது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் இலக்கை நோக்கி சரியான திசையில் பயணிக்க வேண்டியதே நாம் செய்யவேண்டியதாகும்.

ஒவ்வொரு கட்டமைப்புகளும் தத்தம் பிரத்தியேகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு இனத்திற்குப் பொதுவான விடயங்களில் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். தமிழர் அல்லாதவர்களோடு, வேற்றின அமைப்புகளோடு, வேறு நாடுகளோடு, சர்வதேச அமைப்புகளோடு எந்தவொரு தமிழர் கட்டமைப்பும் தனியாகத் தொடர்பு கொள்ளக் கூடாது. அமைப்புகள் தமக்குள் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தி ஒரு பொதுக்குழு வாகத்தான் சர்வதேச அமைப்புகளோடு ஒரே குரலில் பேசவேண்டும். அனைவராலும் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப் படும் அடுத்த மார்ச் மாதம் வரவிருக்கின்ற மனித உரிமைப் பேரவையில் அப்படியாகச் செயற்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாக அறியும் போது ஆனந்தமாக உள்ளது. அதை நழுவவிடாமல் நடைமுறைப் படுத்தத் தவறவே கூடாது. அனைவரும் எம்மால் ஆனமட்டும் அப்படியான ஒருங்கிணைந்த முயற்சியை ஊக்கப்படுத்தி அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேமுறையில் தொடர்ந்து பயணிப்போம்.

அனைத்துப் புலம்பெயர் நாடுகளுக்கும் பொதுவாக ஒரு தமிழர் அமைப்பு வேண்டுமாயின் அது அனைத்து நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்தந்த நாடுகளில் பதிவுசெய்து இயங்கக் கூடியதாக தனது பெயரையும் கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும். அது ஒவ்வொரு நாட்டிலும் இறுக்கமான ஒற்றுமையுடன் இயங்க நாடுவாரியான ஒருவகை சமஸ்டி முறையான கட்டமைப்பு மிகப் பொருத்தமாய் இருக்கும்.

3. தமிழகம்

ஈழத் தமிழர் பிரச்சனையைப் பேசாமல் எந்தவொரு கட்சியும் அங்கு அரசியல் செய்ய முடியாத அளவுக்கு அங்கு நிலைமை இருப்பது ஈழத் தமிழரின் தவப்பானாகும். அதனால் ஈழப் பிரச்சனையை தத்தம் தேவைக்குப் பயன்படுத்த ஒவ்வொரு கட்சியும் முயல்வது உண்மைதான். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த அலையை நாம் எவ்வாறு எமக்குச் சாதகமாக்கப் பயன்படுத்தலாம் என்று தான் பார்க்க வேண்டும். என்னதான் இருப்பினும் அவர்களும் நாமும் ஒரே மொழி கலாச்சாரம் உள்ளவர்கள். நாம் அவர்களது தொப்புள் கொடி உறவுகள். 20 மைல் கடலால் மட்டும் பிரிந்திருப்பவர்கள். எமது விடுதலையானது தமிழக உதவியின்றி சாத்தியமாகாது. அங்குள்ள மாணவர் சமுதாயத்தையும் அவர்களது கல்விக்கு பாதகமில்லாமல் நாம் உரிய முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத் தலைவர்களின் உதவியோடு இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் எமக்கான மக்கள் ஆதரவை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது. தமிழ் நாட்டு கட்சிப் பிரிவினைகளுக்குள் நாம் அகப்பட்டு விடாமல் சாதுரியமாகச் செயற்பட வேண்டும். பொது மக்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்பார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைத்து விட்டால் அவர்கள் நீதியின் பக்கமே நிற்பார்கள். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு செயற்பட முடியாது. இந்தியாவிலும் தமிழ் நாட்டைப் போல் ஏனைய மாநில மக்களுக்கும் ஈழத்தமிழரின் உண்மை நிலையை எடுத்துக் கூறும் வழிவகைகளைக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இப்போது முழு இந்தியாவிலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தேர்தலில் அதை உணரமுடியும். அந்த நிலையை இன்னும் வலுவாக்க வேண்டும்.

ராஜதந்திர அரசியற் செயற்பாடுகள்:-

தாயகத்திலும் சரி சர்வதேசத்திலும் சரி ஒரு நேரத்தில் ஒரு எதிரியை மட்டுமே குறிவைக்க வேண்டும். அப்போது அதற்கு ஆதரவாக இருக்கக் கூடிய அனைவரதும் அனைத்துத் தரப்பினரதும் (அவர்கள் எமது கொள்கைகளை ஆதரிக்காத வர்களாக இருந்தாலும்) அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. ஒவ்வொரு கட்டச் செயற் பாடுகளிலும் அந்தந்த செயற்பாடுகளுக்கு அந்தந்தநேரம் யார் ஆதரவாக இருப்பார்களோ அவர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். அப்போது ஆதரவாக இருந்தவரை பின்பு எதிர்க்க வேண்டி ஏற்ப்படலாம். அரசியலில் யாரையும் நிரந்தர நண்பனாகவோ நிரந்தர எதிரியாகவோ கொள்ளக் கூடாது. எந்த ஒரு நாட்டையும் நிரந்தர எதிரியாகக் கருதக் கூடாது. அத்துடன் எந்த ஒரு நாட்டு மக்களையும் எப்பொழுதுமே எதிரிகளாகக் கொள்ளக் கூடாது. பொது மக்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்பார்கள்.

உலகில் எந்தஒரு நாட்டிலும் நீதிக்காக தார்மீக அடிப்படையில் செயற்படும் அரசு

இல்லை. அரசுகள் எல்லாம் ஆட்சியில் இருப்போரின் நன்மை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமது பொருளாதார அரசியல் ஆதிக்க நன்மை என்பவற்றின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன. அவ்வாறான தமது நன்மைகள் எதுவும் பாதிக்கப் படாதென்று கண்டால் மட்டும் நீதி மனித உரிமைகளைப் பார்ப்பார்கள். ஆகவே ஈழத்தமிழருக்கு யாராவது நன்மை செய்ய முன்வருகிறார்கள் என்றால் நிட்சயம் அதில் அவர்கள் ஏதோ நன்மையை எதிர்பார்க்கிறார்கள் என்பது பொருள். இலங்கையின் இனப் பிரச்சனையை இந்தியாவும் ஏனைய நாடுகளும் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்படுத்துகின்றன. தமது நன்மை லாப நோக்கங்களுக்கு, பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படும் மகிந்த அரசை வீழ்த்தி தமக்கு ஒத்துவரக் கூடிய ஒரு அரசாங்கத்தை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

அத்துடன் அமைதி நிலவும் ஒரு நாட்டில்தான் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும். அத்துடன் திறந்த பொருளாதாரக் கொள்கை இருந்தால்த்தான் சர்வதேச வர்த்தகம் முதலீடுகள் தடைகளின்றி நடைபெறும். தமிழர் அங்கு சமத்துவமாக வாழ்வதில் சர்வதேசத்திற்குப் பிரச்சனை இல்லை. தனித்துவமான சிங்களப் பவுத்த நாடு தான் வேண்டுமென்பது சர்வதேசத்தின் நோக்கமல்ல. இவற்றிற்குத் தடையாக இருக்கும் மகிந்தவைப் பணிய வைக்க அவர்கள் தமிழர் பிரச்சனையைத் தான் அவருக்கெதிரான குற்றச்சாட்டாக முன்வைக்கக் கூடியதாக உள்ளது.

அதை நாம் பயன்படுத்தி எமது நோக்கத்தை நிறைவேற்ற அவர்களுடன் சேர்ந்து செயற்படவேண்டும். எமக்குத் தனிநாடு என்பதை இன்றைய சூழ்நிலையில் இந்தியாவோ சர்வதேசமோ விரும்பவே மாட்டார்கள். அதனாற்தான் இனவழிப்பு என்பதை முன்னிலைப் படுத்தாமல் போர்க்குற்ற விசாரணை மட்டத்தில் மட்டும் நிற்கிறார்கள். எமக்கான காலம் கனியவில்லை. எதிர்காலச் சர்வதேச மாற்றங்களைப் பொறுத்துத் தான் அதன் சாத்தியப் பாடுகள் அமையும். அந்த நிரந்தர சத்திர சிகிச்சையாலத்தான் இலங்கையின் நோயை முற்றாகக் குணப்படுத்தலாம் என்றாலும் அதுவரை உயிர் போகாமற் காப்பாற்ற முதலுதவிகள் மிக அவசியம். முழுமையான சிகிச்சையை மட்டும்தான் ஏற்கமுடியும் வேறெதுவும் வேண்டாம் என்றால் உயிரே போனபின் (இனவழிப்பு நடந்தபின்) என்னதான் செய்ய முடியும்.

ஆகவே உடனடியாகக் கிடைக்கக் கூடிய முதலுதவியைத் தடுப்போர் இன அழிப்பில் இருந்து இனத்தைக் காப்பாற்றாமல் இனத்தின் முழு அழிவையே தேடுகிறார்கள் என்பதை உணரவேண்டும். முதலுதவியை முதலுதவியாகவே கருதி முடிந்த விரைவில் நிரந்தரச் சிகிச்சையை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நின்றுகொண்டு முதலுதவிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். 2014 மார்ச்சில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம்,அதில் அமெரிக்கப் பிரேரணை (அடுத்த வருடம் அமேரிக்காவும் இந்தியாவும் பேரவையில் இருந்து வெளியேறுவர்) பின்னர் இந்தியாவில் தேர்தல். அடுத்து இலங்கையில் தேர்தல், இப்படியான நிகழ்வுகளை நாம் முறையாகப் பயன்படுத்தியே ஆகவேண்டும்.

 

V.Vin.Mahalingam

 

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=101537&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

மிக்க நன்றியும் பாரட்டுகளும் உங்கள் தெளிவான சிந்தனைக்கும் முழுமையான செயல் திட்டத்திற்கும்.. இதனை எம்மக்கள் திரும்ப திரும்ப வாசித்து அறிவைப்பெற்று செயல்படவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.. மீண்டும் நன்றி வின் மகாலிங்கம் ஐயவிற்கு

Link to comment
Share on other sites

உதை வாசித்துவிட்டு போய் கனவு காண அந்த மாதிரி இருக்கும் .அண்ணைக்கு வேற வேலை இல்லை போலிருக்கு அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய எங்கடை ஆட்களை கேட்டுதான் .

Link to comment
Share on other sites

உதை வாசித்துவிட்டு போய் கனவு காண அந்த மாதிரி இருக்கும் .அண்ணைக்கு வேற வேலை இல்லை போலிருக்கு அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய எங்கடை ஆட்களை கேட்டுதான் .

1538673_798789500137668_1350784283_n.jpg

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கா இனவெறி அரசு தமிழின அழிப்பை நிறைவேற்றக் கையாளும் கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள்:-

1.தமிழரை மதரீதியாக, பிரதேச வாரியாகப் பிரித்தாளும் தந்திரம்.தமிழருக்குள் பிரிவினைகளைத் தூண்டி பிரித்துத் துண்டாடி மோதவிடுதல்.

2.சலுகைகளையும் அரசஉதவிகளையும் காட்டி அல்லது மிரட்டி முடிந்தளவு தமிழரை தம்பக்கம் இழுத்தல்.

3. அபிவிருத்திக்கென்றும் படையினர் தேவைக்கென்றும் மத்திய அரசின் தொழிற் சாலைகளுக் கென்றும் இராணுவக் குடியிருப்புக் கென்றும் பாரிய அளவில் தமிழர் நிலங்களைக் கொள்ளை அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி அவர்களுக்கே அபிவிருத்தி அனைத்தையும் செய்து கொடுத்தல். நிலத்தை அபகரித்து அங்கு சிங்களவரைக் குடியேற்றுவதன் மூலம் தமிழருக் கென்று தாயகபூமி இருப்பதை இல்லாமற் செய்தல்.

4. தமிழர் பகுதியில் உள்ள வளங்களை, வளமான நிலங்களை தமிழர் அனுபவிக்க விடாமல் அவற்றை பறித்து சிங்களவருக்கு கொடுத்தல்,

5. பவுத்தமதத் திணிப்பு சிங்கள மொழி கலாச்சாரத் திணிப்பு மேலும் அவற்றுக்கான பெரும் ஊக்குவிப்பு மூலம் தமிழரின் மதம் தனித்துவமானமொழி பண்பாடு கலாச் சாரங்களை அழித்து அல்லது கலப்புச் செய்து சிதைத்து அப்படி ஒரு தனித்துவமான இனம் இல்லை என்று காட்டுதல்.

6.தமிழர் சுய பொருளாதார அபிவிருத்தி அடைய விடாமல் தடுத்து அவர்களை சிங்கள ஆட்சியின் தயவில் தங்கி வாழும் இனமாக வைத்திருத்தல், தமிழர் பிரதேச அபிவிருத்திகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்

7. படுகொலை செய்தல், வெளிநாடுகளுக்குத் துரத்தல், கருத்தடை செய்தல் பசி நோயால் இறந்துபோக அனுமதித்தல் போன்றவற்றால் தமிழர் தொகையை மேலும் குறைத்தல்.

8.தாம் தமிழருக்குச் செய்யும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியாதவாறு பிரகடனப் படுத்தாத இராணுவ ஆட்சியைத் தொடருதல்.

9.தமிழருக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்காமல் அடிமைப்படுத்தி வைத்திருத்தல்.

10.பேச்சுச்சுதந்திரம் ஊடகசுதந்திரம் மற்றும் மனிதசுதந்திரம் போன்ற அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குதல்.

11. சர்வதேச ஆதரவு தமிழருக்குக் கிடைக்காமல் தமக்குச் சார்பாக இருப்பதற்கான சகல தந்திரங்களையும் கையாளுதல்.

12. ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழ்நாட்டு எதிர்ப்பலைகளையும் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களையும் நிர்மூலமாக்கல்.

13.மதுபானங்களையும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் நீலஆபாசப் படங்களையும் தமிழர் பகுதிகளில் மிகத் தாராளமாக வழங்கி மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பாழடிப்பதோடு தமிழினத்தை ஒரு குற்றச்செயல் மலிந்த தீவிரவாதத் தன்மைகொண்ட கல்வியில் பின்தங்கிய காட்டுமிராண்டி இனமாகக் காட்டுதல்.

14.முழு இலங்கையுமே சர்வதேசக் கடனில் மூழ்குவதையோ வல்லரசுகளின் பிடியில் சிக்குவதையோ கூடக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு உதவும் சுயநல நாடுகளோடு கைகோர்த்து தமிழின அழிப்பை நிறைவேற்றல்.

15. தாமே ஒருசில புல்லுரிவிகளை வைத்து உருவாக்கும் குழுவை, புலிப்படை என்று காட்டி அவர்கள் மூலம் தாம் விரும்பாத தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்தல்.

ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றுக்கோ அல்லது சில, பல வற்றிற்கோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைப்போர் அல்லது உதவியாக இருப்போர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும். தெரிந்து கொண்டே வேண்டுமென்றே தமது அல்லது தமது அமைப்பின் சுய நலன்களுக்காக அப்படிச் செய்வோரை இனத் துரோகிகளாகவே கருத வேண்டும். தமிழர் நலன் சார்ந்த கட்சிகளுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் குழுக்களுக்குள்ளும் உடைப்புகளை ஏற்ப்படுத்துவோர், தம்மைத் தவிர மற்றெல்லாரையும் சிதைத்து அழிக்க வேண்டுமென்று செயற்படுவோர் ஸ்ரீலங்கா அரசின் செயற் திட்டங்களிற்கு உதவுகின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

Link to comment
Share on other sites

சாத்தான் வேதம் ஓதுவதேன்பது உதைத்தான் .

இவர்களின் பிழைப்பே உதில் தானே நடக்கின்றது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.