புதிய பதிவுகள்2

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு

1 month 4 weeks ago
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு. உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார். உக்ரைனின் வெகுஜன போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற பருபி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை ஆதரித்ததோடு, 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவி விலகச் செய்ய வழிவகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445303

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

1 month 4 weeks ago
குற்றவாளிகளைக் காட்டிக்கொடுப்பது குற்றமென்று, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு கையெழுத்து வாங்கி, குற்றங்களில் ஈடுபடாத தனது இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்குகிறார் சரத் வீரசேகர. 🤔

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 month 4 weeks ago
பாகம் - 4 நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன். வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார். ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார். பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார். இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது. திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன. (தொடரும்)

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

1 month 4 weeks ago
முதன் முறையாக ஒரே தரத்தில் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு செல்வ சந்நதி ஆலயத்தில் திருமணம் முடித்து வைப்பது புதிய விடயம் இல்லை. இப்படியான திருமண வைபவம் செல்வ சந்நிதி ஆலயத்தில் நீண்டகாலம் நடைபெற்று வருகின்றது. இந்த தடவை சமூக ஊடகத்தின் கவனத்தை பெற்றுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், முன்பு கொடையாளி எவராவது அனைத்து திருமண தம்பதியினருக்குமான திருமண செலவை ஏற்றுள்ளார்களா என தெரியவில்லை. இப்படியொரு தானம் கிடைப்பதும், கொடுப்பதும் மிகப்பெரியதொரு ஆசீர்வாதம்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் அஸ்வின்!

1 month 4 weeks ago
27 Aug, 2025 | 11:02 AM இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கும் என்பார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது காலம் இன்று தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணியாற்றிய அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ.-க்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அஸ்வின் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தனது ஐ.பி.எல். பயணத்தில், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். https://www.virakesari.lk/article/223471

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

1 month 4 weeks ago
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 முக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்! 30 Aug, 2025 | 09:25 PM இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பாதாள உலகக் குழுவினரை அழைத்துவந்த விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223796

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 4 weeks ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 30 Aug, 2025 | 09:04 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223795

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

1 month 4 weeks ago
வேலை நிறுத்தம் நிறைவடைந்து ஒரு வாரம் கடந்தும் தேங்கியுள்ள ஒன்றரை கோடி தபால் பொதிகள் 30 Aug, 2025 | 03:37 PM தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இவ்வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் நாடளாவிய ரீதியில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்தியம் பொறுத்தப்பட்டமை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறித்த சுற்று நிரூபம் என்பனவே இதற்கு பிரதான காரணியாகும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 24ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது தபால் மா அதிபர் மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவை செலுத்துவதற்காக பணிக்கு திரும்புமாறு சுற்று நிரூபமொன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கமைய ஒட்டுமொத்த தபால் பணியாளர்களும் அவ்வாறே செயற்பட்டோம். மத்திய தபால் பரிமாற்ற சேவையில் 30 சதவீதமானவை மேலதிக வேலை நேர கொடுப்பனவு முறைமையை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சேவைகளுக்கு பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. பணியாளர்களை ஒதுக்குவதற்கு பதிலாகவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே இந்த சேவைகள் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரதி பலனாக 10 மில்லியனுக்கும் அதிகமான தபால் பொதிகள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கியுள்ளன. தபால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சகல தபாலகங்களிலும் சுமார் 5 நாட்களுக்கான தபால் பொதிகள் குவிந்துள்ளன. இவ்வாறு நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக நம்புகின்றோம். இந்த பொதிகளுக்குள் தரம் ஒன்றுக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், உயர்தர பரீட்சைகளுக்கான கடிதங்கள், நேர் காணல்களுக்கான கடிதங்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் என பல முக்கிய ஆவணங்கள் உள்ளன. பொது மக்களுக்கான முக்கிய கடிதங்களை இவ்வாறு தேக்கி வைத்திருப்பதற்கு தபால்மா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நெருக்கடிக்கு அவரே முற்றுமுழுதாக பொறுப்பு கூற வேண்டும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தபால் துறை முற்றாக வீழ்ச்சியடையும் என்று எச்சரிப்பதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223782

"போட்டியாளர் அல்ல , கூட்டாளி" - மோதியின் பயணம் குறித்து சீன ஊடகங்கள் எழுதுவது என்ன?

1 month 4 weeks ago
7 வருடங்களுக்குப் பின்னர் சீனா சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி 30 Aug, 2025 | 09:58 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகவுள்ளதால், ஜப்பானிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சீனா பயணம் : முக்கியத்துவம் என்ன? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட வரி விதிப்பு என டிரம்ப் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சீனாவில் நடக்கவிருக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை (ஆகஸ்ட் 31 ) மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் தணியத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், எல்லைப் பிரச்சினைகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/223798

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

1 month 4 weeks ago
ஆரம்பத்திலிருந்தே ஐ. நா. வில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவகாசம் கேட்பதும் பொய்யுரைப்பதும் உள்நாட்டில் ரவுடித்தனம் காட்டுவதும் இராணுவத்தை காட்டி தாம் தப்புவதும் இவர்களது வாடிக்கை. இது சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இவர்கள் ஊழல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பாதாள உலகை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களே. குற்றவாளிகளை காப்பாற்றுவதில் சந்திப்பதில் காட்டும் ஆர்வம், துடிப்பு, வக்காலத்து வாங்குவது, நிஞாயப்படுத்துவது இவற்றில் இருந்தே இவர்கள் யாரென்பது தெளிவாகிறது. ஒரு கள்ளனை கைது செய்தவுடன் எல்லா கள்ளரும் துடிக்கின்றனர். தாங்களாகவே தங்களையும் இனங்காட்டிக்கொள்கின்றனர். கையில் இருக்கவே இருக்கிறது செம்மணி அகழ்வு, ரணில் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை. எடுத்து விடவேண்டியதுதான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் குறைவில்லை. பதினாறு ஆண்டுகளை கடத்தியவர்கள் இனிமேல் கடத்துவது ஒன்றும் கஸ்ரமில்லையே. 'ஆறின கஞ்சி பழங்கஞ்சியே.'

நடனங்கள்.

1 month 4 weeks ago
எச்சரிக்கை. 18+ 👈 பால்குடிகள் ,குஞ்சுகுருமன்கள் மற்றும் கண்ணியமானர்களுக்கு உகந்த நடனமல்ல. சதிராட்டம் என்பது இது தானோ? https://www.youtube.com/watch?v=vy3BRUrNj9s

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

1 month 4 weeks ago
ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

1 month 4 weeks ago
பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி. அப்படியே மாத்தரைப் பக்கம் போய் பாலசிங்கம் நடேசனின் மனைவி விசித்திராவின் தாய், தந்தை மற்றும் அவரது குடும்பப் படங்களை இணைத்தீர்களென்றால் நல்லது. உங்களால் முடியாதா என்ன?

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

1 month 4 weeks ago
Sea Black Tigers Vessel The following reply boxes in this forum thread will cover the different types and classes of Sea Black Tigers vessels that were used. Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Human Torpedoes - Under Construction 1 Not named IBM Img. Credits: HI Sutton Not named 1 2 Not named IBM Not named 1

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!

1 month 4 weeks ago
இப்பவே தொடங்கி ..நாடகத்துக்கு ஒத்திக்கை பார்ப்பினம் ...நடிக்கிறதுக்கு வைத்தியருக்கும் பெரும் தொகை குடுபட்டிருக்கும்
Checked
Tue, 10/28/2025 - 11:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed