புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 hour 10 minutes ago
இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞............... இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞.................

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

2 hours 18 minutes ago
அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

2 hours 24 minutes ago
https://www.facebook.com/share/p/1ZR8ABCqth/?mibextid=wwXIfrமிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு வலிமையும் வெற்றியும் படைத்த நீங்கள் சிலிக்கான் வேலியின் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம், அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்? அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்: “இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த பயன்படுத்தப்படாத பிரஸ் மூளையை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன், அங்கிருந்துதான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையில்.” I believe that Sanatana Dharma and Brahminical culture are the main reasons for his humble nature.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 hours 34 minutes ago
இந்த மைதான‌த்தில் முத‌ல் ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி தான் ப‌ல‌ முறை வென்று இருக்கு இல‌ங்கை ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் ஏன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்தா என்றால் தெரியாது............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 hours 45 minutes ago
இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுது என்ன‌ அழ‌கு எத்த‌னை அழ‌கு @ரசோதரன் ர‌சோத‌ர‌ன் அண்ணா இந்த‌ காணொளிய‌ பார்த்தால் உட‌ன‌ ம‌ன‌சை ப‌றி கொடுக்க‌ போகிறார்🥰😁👍.........................

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

2 hours 52 minutes ago
ஈழப் போராட்டத்தில் முதல் தனது உயிரை அர்பணித்தவர் ஷோபா என்ற ஈபிஆர்எல்எவ் போராளியே. இவர் இறந்தது மே 03 1985 மாலதி முதல் பெண் போராளி என்பது தவறான தகவல். மாலதி விடுதலைபுலிகளின் முதல் பெண் போராளி என்பதே சரியான தகவல்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

3 hours 5 minutes ago
விஜை சில சமயம் அதிமுக+பிஜேபி உடன் கூட்டணி போகாமல் - தனியே தொகுதி உடன்பாடு மட்டும் செய்துகொள்ள கூடும் என நினைக்கிறேன். 40-60 தொகுதிகளை விஜைக்கு ஒதுக்கி விட்டு, ஏனையவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடலாம். விஜை இந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தலாம். இரு பகுதியிம் ஆளை ஆள் திட்டாமல் அதே நேரம் ஒரே மேடை ஏறாமல் வாக்கு கேட்க லாம். பிகு தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான். திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம். நாதக போலித் தமிழ் தேசியம். கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 hours 14 minutes ago
என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

3 hours 22 minutes ago
என்னக்கு Trump இன் அனேகமனா கொள்கைகள் மீது உடன்பாடு இல்லை ( சிலவற்றில் உடன்பாடு). ஆனால் அவரது 5 வருட ஆட்ச்சியில் எதுவித யுத்தத்தையும் தொடங்காதற்க்காக அவருக்கு Nobel பரிசு கொடுக்கலாம். ஒபமவுக்கு கொடுத்தது ஒரு நகைப்புக்கு உரியது எனநினைக்கிறேன். (நான் தவறாக இருக்கலாம்)

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 hours 24 minutes ago
ஆடுகள அறிக்கை பார்க்கவில்லை, ஆனாஅல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதான ஆடுகள நிலவரத்தினடிப்படையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இது ஒரு கறுப்பு நிற ஆடுகளம், அதனால் இலங்கை அணி சுழற்பந்து வீச்சிற்கு முன்னுரிமை அளித்தாலும், முதலில் பந்து வீச்சினை தெரிவு செஉதிருப்பட்கு ஆச்சரியமாக உள்ளது. ஆடுகளம் ஆரம்பத்தில் ஈரமாக இருகக்கும் அத்துடன் மேக மூட்டமான நிலையில் வேக பன்ட்கு வீச்சிற்கும் சாதகமாக இருக்கும், பந்து முதலில் துடுபாடுபவர்களுக்கு இலகுவாக வரும் பின்னர் ஆடுகளம் மெதுவாக தொடங்கும் போது இரண்டாவது இனிங்ஸ் கடினமாக இருக்கும், புதிய பந்தில் இலகுவாக ஓட்டங்களை எடுத்தாலும் பந்து மெட்குவாக தொடங்கும் போது ஓட்டம் எடுப்பட்கு கடினம், இந்த ஆடுகளம் 250 ஆடுகளம் போல இருக்கின்றது ஆனால் இங்கிலாந்து அதனை விட அதிகமாக எடுக்கும் போல உள்ளட்கு இலங்கை அணி இரண்டாவதாக ஆடுவதால் மிக கடினமான சூழ்நிலையினை எதிகொள்ள வேண்டி ஏற்படலாம், பந்தை நேர்கோட்டில் விளையாட வேண்டும் ரிவர்ஸ் சுவீப், சுவீப் போன்ற சுழல் பன்ட்கு வீச்சு அடிகளை இந்த ஆடுகளத்தில் பந்து மெட்குவான பின்னர் விளையாடுவது கடினமாக இருக்கும், அத்துட இரண்டாவட்கு இனிங்ஸிலும் நிலமை பந்தினை குறுக்காக ஆடுவது கடினமாகிவிடும் என க்ருதுகிறேன்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

3 hours 42 minutes ago
யார் என்ன வேணும் எண்டாலும் எழுதுங்கோ பிரச்சைனயே இல்லை.மற்றவைர்களை எவ்வளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ அந்தளவுக்கு தரக்குறைவாகத் தான் நினைப்பது, பேசுவது..சொல்லப் போனால் வைத்தியர் அடுத்த டிரம்ப்.இப்படி நிறைய எழுதலாம்..🖐

குட்டிக் கதைகள்.

4 hours 41 minutes ago
ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, தான் உட்கார வேண்டிய நாற்காலி கூரையில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கரும்பலகையில் சென்று இப்படி எழுதினார்: இன்றைய தேர்வு - 15 நிமிடங்கள், 30 மதிப்பெண்கள். கேள்வி 1. நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 2. நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிட்டு, உங்கள் செயல்பாடுகளைக் காட்டுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 3. நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும்,அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள்~28 மதிப்பெண்கள் √.😜 100% பொழுது போக்கு ·

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

5 hours 4 minutes ago
பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி Published By: Vishnu 11 Oct, 2025 | 03:36 AM (நெவில் அன்தனி) குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூஸிலாந்தின் பந்துவீச்சு இலக்கை நோக்கியதாக இருக்கவில்லை. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் 16 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை இனாமாகக் கொடுத்தனர். எனினும், அணித் தலைவி சொஃபி டிவைன், ப்றூக் ஹாலிடே ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஜெஸ் கேர், லீ தஹுஹு ஆகியோர் பதிவு செய்த தலா 3 விக்கெட் குவியல்களும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ப்றூக் ஹாலிடே 69 ஓட்டங்களையும் சொஃபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களைவிட சுசி பேட்ஸ் 29 ஓட்டங்களையும் மெடி க்றீன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. 15 ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. ஆனால் மத்திய வரிசை விராங்கனைகள் பாஹிமா காத்துன் (34), நஹிடா அக்தர் (17), ரபியா கான் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷுக்கு 125 ஓட்டங்களைக் கடக்க உதவினர். உதிரிகளாக 30 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கிடைத்தது. பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/227445

காஸாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி – மக்களின் கொண்டாட்டத்தை காட்டும் 10 படங்கள்

5 hours 12 minutes ago
காசா போர் நிறுத்தம்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுமி Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 04:15 PM காசா முனையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, அங்கு வசிக்கும் பனியாஸ் என்ற சிறுமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை (10) காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இதன் மூலம், இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காசா மோதல் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. போர் முடிவடைந்ததை அறிந்த பனியாஸ், காணொளி ஒன்றில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம். இன்று காலை மிகவும் வித்தியாசமானதும் சிறப்பானதும் ஆகிறது. போர் முடிவடைந்தது! நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நாங்கள் காசாவுக்கு திரும்பிச் செல்லவிருக்கிறோம். இன்று வீட்டில் அமர்ந்து இருந்தபோது, அம்மா வந்து ‘ஒரு நல்ல செய்தி உண்டு’ என்றார். அது போர் முடிவடைந்துவிட்டது என்பதுதான்! அந்த நிமிஷத்தில் நான் குதித்து மகிழ்ந்தேன். இது எனது வாழ்வில் மறக்க முடியாத காலை. சந்தோசத்தில் அழுதேன்.” அதேபோல், பனியாஸ் மேலும், “எனது முதல் நம்பிக்கை — போர் முடிவடையும் என்பதுதான். இரண்டாவது நம்பிக்கை — எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். மூன்றாவது நம்பிக்கை — காசா விரைவில் மீண்டு எழ வேண்டும். இப்படி ஒரு போரை மீண்டும் நாம் சந்திக்க வேண்டாம்.” இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காசா மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை தருணமாக மாறியுள்ளது. பனியாஸ் தனது காணொளி செய்தியின் இறுதியில், “காசா மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/227416

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

5 hours 20 minutes ago
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா குழு : டியூரா பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா குழு : டியூரா பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே வெட்கமா குழு : டியூரா பெண் : இதழோடு சோமபானம் தான் சுரந்து விட்டதா குழு : டியூரா பெண் : இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா பெண் : நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே பெண் : சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பெண் : பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா ஆ ஹோ குழு : தூது இல்லே தூது இல்லே தூது இல்லே தூது இல்லே பெண் : கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சனை போல நீயும் வந்தாய் பெண் : சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய் பெண் : மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா நீ சொல்ல வந்ததை குழு : சொல்ல வந்ததை பெண் : சொல்லி விடுமா குழு : சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா ........! --- தூது வருமா தூது வருமா ---
Checked
Sat, 10/11/2025 - 14:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed