1 hour 36 minutes ago
இலங்கை ஒன்றிரண்டு போட்டிகள் வெல்லும் என்றுதான் நானும் நினைத்து, இன்று வெல்லக்கூடும் என்று நினைத்தேன். முக்கியமாக அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடினார்கள். அதோட, சாமரி ஒரு 100 அடித்தால்தான் ஏதாவது வாய்ப்பு.
1 hour 50 minutes ago
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மேலே சில கட்சிகளை போலி என்றேனே? அப்படி ஒரு போலிதான் காங்கிரசும். ரஜீவை திமுக புலிகளை வைத்து கொலை செய்தத்து என்பார்கள் சில வருடங்களில் கூட்டணி. அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள். ஆகவே தான் -(சங்கி) கொள்கையில் தடம் மாறாமல் இருக்கும் பாஜக மிக ஆபதானவர்கள். ஜெயலலிதா பற்றி நீங்கள் எழுதுவதில், திமுகவில் சில குடும்பங்கள், தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் கூட, களைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நானே இவை பற்றி பலதடவை எழுதியிம் உள்ளேன்.
1 hour 58 minutes ago
ஐயா, உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இப்போ வாசகருக்கும் விளங்கி இருக்கும். நீங்கள் கோட் பண்ணி இருக்கும் எனது எழுத்துக்களை மீள ஒருதரம் வாசிக்கவும். அப்போதும் விளங்கவில்லை எனில் சொல்லவும், விரிவாக விளக்கம் தரலாம். புலவருக்கு விளங்கியாதால் லைக் போட்டுள்ளார்.
2 hours ago
கிளிநொச்சியில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளில் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவேந்தல் நிகழ்வு Published By: Vishnu 11 Oct, 2025 | 04:10 AM தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/227448
2 hours 4 minutes ago
சித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎…… பெண்ணடிமை, சாதி, மூடநம்பிக்கை….. என பல இழிவுகளை 9ம் நூற்றண்டில் லெப்டு ரைட்டு வாங்கியிருக்காப்பல 🤣
2 hours 4 minutes ago
11 Oct, 2025 | 10:54 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு வெள்ளிக்கிழமை (10) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் பாடல்களாக வழங்கியுள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர். குறிப்பாக தேனிசை தென்றல் தேவா, உன்னிமேனன் உட்பட பலர் பாடியுள்ளதுடன் இலங்கையில் இருந்தும் 25இற்கு மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர். இதன் முதல் வெளியீடு தமிழகத்தில் இடம்பெற்ற நிலையில் இரண்டாவது வெளியீடு யாழில் இடம்பெற்றது. இந்த படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வைகோ, திருமாவளவன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர். நேற்றைய பாகம் 02 வெளியீட்டின் முதல் இறுவட்டினை யாழ். இந்திய துணை தூதுவர் சிறீமான் சாய் முரளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய இறுவட்டுகளை தமிழ்த்துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். தமிழ்ச்சங்க செயலாளர் லலீசன், பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். லிடியன் நாதஸ்வரம் தனது கல்வியை தரம் 02 வரையிலும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி தனது கல்வியை தரம் 07 வரையிலும் கற்றிருந்த நிலையில் உலகம் போற்றும் இந்த சாதனையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227459
2 hours 8 minutes ago
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்.காங்கிரஸ் ஆட்சியில அதுவும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் ஆட்சியிலதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திமுக பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்ததது. கடந்த பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்தும் பெரும்பான்மை போதாவிட்டால் திமுக காங்கிரசைக் கழட்டி விட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்திருக்கும்.ஒரு ஈழத்தமிழனாக காங்கிரசும் திமுகவும் சேர்ந்து எம்மினத்தைக் கருவறுத்த தார்மீகக் கோபம் எனக்கு இருப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.அந்த அளவுக்கு பாஜகவோ அதிமுகவோ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எம்ஜியார் புலிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து போராட்டத்துக்கு உதவினார்.ஜெயலலிதா ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராக பேசியிருந்தாலும் கடைசிகாலங்களில் தமிழக சட்டசபையில் தமிழ்ஈழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீரம்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.ஆறரைக்கோடி தமிழ்மக்களின் சார்பான முக்கிய தீர்மானம் அது.அந்தவகையில் அதுமட்டுமன்றி அதிமுகவில் எப்போதும் புதிய முகங்கள் அமைச்சர்களாவும் சட்டசபை உறுப்பினர்களகாவும் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் அதி கூடிய எண்ணிக்கையில் தமிழர்களளுக்கு அந்த வாயப்பளிக்கப்பட்டது. சாதராண கிளைக்கழக செயலாளராக இருந்த தமிழரான எடப்பாடி முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.திமுகவில் இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு விடயம் இதுஇதலைமப்பதவி கருணநிதி குடும்பத்திடம் இருக்க அமைச்சர்களாக ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் இருப்பார்கள் அவர்களிடமிருந்து அவர்களின் வாரிசுகளுக்கு அந்தப்பதவிகள் தொடரும். பெரும்பாலானவர்கள் தெலுங்கு வம்சாவழியினராக இருப்பார்கள்.சிறுபான்மை வாக்குகளைக் கவர்வதற்காக ஆ இராசா >திருமாவளவன்போன்றவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். திருமாவுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்குமளவுக்குத்தான் அவர்களின் சமூகநீதி இருக்கிறது.ஜெயலலிதா அதிமுக உறுப்பினர்கள் சிலர் ப. தனபால்அவர்களைக்கெளரவக் குறைவாக நடத்தியதைக் கேள்விப்பட்டு அவரை சபாநாயகராக்கி அவர் வரும்போது முதல்வர உட்hட அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் பெறுப்பைக் கொடுத்தார்.
2 hours 8 minutes ago
இந்தியா - ஆப்கானிஸ்தானின் நெருக்கத்தால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் அன்ஷுல் சிங் பிபிசி நிருபர் 11 அக்டோபர் 2025, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டுடன் சீனா தனது தொடர்புகளை அதிகப்படுத்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தாலிபனுடனான தொடர்புகளை இந்தியா அதிகரித்து வருகிறது, ஆனால் முதல் முறையாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி டெல்லிக்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார். வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார். அதே நேரத்தில் காபூலில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மிஷனை தூதரகமாக மாற்றுவதாக ஜெய்சங்கர் அறிவித்தார். 2021 ஆகஸ்டில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு காபூலில் இருந்த தூதரகத்தை மூடியது இந்தியா. தற்போது வரை இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே தாலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளை "பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கியது" என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை "நெருங்கிய நண்பர்" என அழைத்துள்ள முத்தக்கி இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஆப்கானிஸ்தான் பரஸ்பர நலன்கள் 1990களில் தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியா அவர்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. ஆனால் 2021-இல் தாலிபன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறிய பிறகு இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அளவான தொடர்பை மேற்கொண்டது. இன்று இந்தியா மற்றும் தாலிபன் நலன்கள் இணையும் பல்வேறு இடங்கள் உள்ளன. இரு தரப்பும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் குறியாக இருப்பதாக இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுடைய கூட்டறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, பிராந்தியம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்லாமிய அரசு கோரசான் (ISIS-K) அமைப்பை தாலிபன்கள் கருதுகின்றனர். பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. இதற்கிடையில், தாலிபன்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஐஎஸ்ஐஎஸ்-கே போன்ற அமைப்புகளை பலவீனப்படுத்த விரும்புகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் தலைவருமான அனுராதா சினோய், முத்தக்கியின் வருகையை இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளின் எதிர்காலத்திற்கு நேர்மறையான நகர்வாகப் பார்க்கிறார். பிபிசியிடம் ஹிந்தியிடம் பேசுகையில், "அமீர் கான் முத்தக்கியை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நல்ல நகர்வை மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையென்றால் இந்தப் பிராந்தியத்தில் (தெற்கு ஆசியா) நிலையற்றத்தன்மை அதிகரிக்கும், ஏனென்றால் பக்ரம் விமானப்படை தளத்தை திருப்பி எடுத்துக் கொள்ளப்போவதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் இந்தியாவை ஆதரித்தது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் நலன்களும் உள்ளன." என்று தெரிவித்தார் அனுராதா சினோய். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2021-இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தாலிபன் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் அதன் வெளியுறவு அமைச்சர். இருப்பினும், இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதில் ஆப்கானிஸ்தானில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தனது அதிருப்தியை எக்ஸ் ஊடகத்தில் பதிவு செய்த ஆப்கானிய பத்திரிகையாளர் ஹபீப் கான், "ஆப்கானிஸ்தான் குடிமகனாக, இந்தியாவை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியா இங்கு நிறைய பணிகளைச் செய்துள்ளது. சல்மா அணை, பாராளுமன்றம் மற்றும் சாலைகளை இந்தியா கட்டியது. ஆனால், தாலிபன்களுடனான உறவை இயல்பாக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. தாலிபன்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றி ஆட்சி செய்துவருகின்றனர். அவர்கள் அதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மற்றுமொரு பதிவில், இந்தியர்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள், ஆனால் இந்தியர்களைவிட ஆப்கானியர்கள் அதிகமாக பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். பாகிஸ்தானின் பினாமியாக செயல்பட்ட தாலிபன்கள், தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பெண்களின் கல்வியைத் தடை செய்தவர்கள். தாலிபனை நண்பனாக இந்தியா நினைப்பது தவறான புரிதலைக் கொடுக்கிறது, இது வரலாற்றில் இந்தியாவை தவறான பக்கத்தில் நிறுத்துகிறது," என்று ஹபீப் கான் என்று தெரிவித்துள்ளார். தாலிபன்கள் நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். உலகளாவிய நிலையற்றத்தன்மையால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதார சவால்களைச் சந்தித்து வருகிறது. 2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அந்த கட்டமைப்புகளை பராமரிக்க தாலிபானுக்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 'ஆழமான கலாசார உறவுகள்' அதிகார மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் நம்புகிறார். "இந்தியாவிற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. தாலிபனைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் மாறியிருக்கலாம், ஆனால் பொது மக்களிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருந்து வருகிறது, இதுவே இந்தியாவின் உண்மையான பலம்" என்று அனில் திரிகுணாயத் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது தாலிபன்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாக அந்தப் பேட்டியில் குறிப்பிடும் அணில், "இந்தியாவின் முக்கியமான கவலை தாலிபன்கள் அல்ல, பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் தான். அவர்கள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்கிற தெளிவான உத்திரவாதத்தை தாலிபன் அரசு வழங்கியுள்ளது. முன்பு இது போன்றதோரு சூழ்நிலை இல்லை. ஆனால் இப்போது அவர்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. புல்வாமா தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளனர், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்." சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்கானிஸ்தானில் தனது எல்லையை விரிவுபடுத்துகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குள் ஆப்கானிஸ்தான் முழுமையாக சென்றுவிடுவதை இந்தியா விரும்பவில்லை. தாலிபன்களும், ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதை விரும்பவில்லை, எனவே அதுவும் இந்தியா போன்ற மாற்று நட்பு நாடுகளைத் தேடுகிறது. பட மூலாதாரம், Getty Images 'பாகிஸ்தானுக்கு அடி' இந்தப் பயணம் 'பாகிஸ்தானுக்கு அடி' மற்றும் தாலிபன் அரசை மறைமுகமாக அங்கீகரிப்பதை நோக்கிய முக்கியமான படி என்று உத்தி சார்ந்த விவகாரங்கள் வல்லுநரான பிரம்மா செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது இந்தியா-தாலிபன் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதில் ஒவ்வொரு தரப்பும் தங்களின் உத்தி சார்ந்த நலன்களை மேம்படுத்த நடைமுறை ஒத்துழைப்பை வலியுறுத்துகின்றன." என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் ஆப்கானிஸ்தானில் பிராந்திய அதிகார சமநிலையில் சாத்தியமான மாற்றத்தை குறிப்பதாகவும் செலானி தெரிவிக்கிறார். இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-தாலிபன் இடையேயான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. பிபிசி ஹிந்தி நிகழ்வில் பேசிய அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஹர்ஷ் வி.பந்த், "பாகிஸ்தானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தாலிபன்களுக்கு தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. அவர்கள் இனிமேலும் பாகிஸ்தானைச் சார்ந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாகிஸ்தானை அதிகமாகச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது" என்று அவர் கூறினார். தாலிபன்கள் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் "உத்தி சார்ந்த கூட்டாளிகள்" எனக் கருதப்பட்டனர், ஆனால் சமீப ஆண்டுங்களில் இரு தரப்புக்கும் இடைய உறவு இறுக்கமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தாலிபன்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தெற்கு ஆசிய விவகாரங்களைக் கவனித்து வரும் வல்லுநர் மைக்கேல் கூகல்மேன் முத்தக்கியின் பயணத்தை இந்தியாவிற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார். "இந்தியா-தாலிபன் உறவுகள் சுமூகமாகி வருவது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் நடைமுறை சார்ந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட அணுகுமுறை இருப்பதை பிரதிபலிக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் தனது நலன்களை மேலும் சிறப்பாக முன்னிறுத்த இந்தியாவை அனுமதிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் தாலிபன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை ராஜாங்க ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது." என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் மைக்கேல் கூகல்மேன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போது வரை ரஷ்யா மட்டுமே தாலிபனை அங்கீகரித்துள்ளது. சவால்கள் என்ன? சமீப ஆண்டுகளில் இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு தாலிபன் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது, ஆனால் இந்த உறவுகளை வலுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவிற்கு அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச அளவில் பிரச்னைகள் உருவாக்கக்கூடிய பல பெரிய சவால்கள் உள்ளன. இந்தியா தற்போது வரை தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்தியா பேச்சுவார்த்தையை தொடர விரும்புகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் அதன் பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்க அங்கீகாரம் வழங்குவதை தவிர்த்து வருகிறது. தாலிபன் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், பெண்களின் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெண்களின் உரிமைகளை மதிப்பதாகக் கூறும் தாலிபன் அரசு, அது ஆப்கன் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய தனது சொந்த புரிதலுக்கு உட்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கிறது. மேற்கத்திய நாடுகளும் தாலிபன் அரசை எச்சரிக்கையுடனே பார்க்கின்றன. தாலிபன் உடன் இந்தியா மிகவும் நெருக்கமானால் சர்வதேச விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தாலிபன்களை இந்தியா உடனடியாக அங்கீகரிக்காது எனக் கூறும் அனுராதா சினோய் பேச்சுவார்த்தைகளை நிறுத்த முடியாது என்கிறார். மேலும் அவர், "பெண்களின் உரிமைகளை தாலிபன்கள் மொத்தமாக பறித்துவிட்டார்கள் என்பது உண்மை தான். மேற்குலக நாடுகள் தொடர்ந்து தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, ஆனால் அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என இந்தியாவிற்கு தெரியும். பெண்களின் சுதந்திரம் தொடர்பான கேள்விகளும் தற்போதும் உள்ளன. இந்த விவகாரங்கள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட முடியும் என்பது தெளிவாகிறது." என்றார். தி இந்து நாளிதழின் ராஜாங்க விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பதிவில், "தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி, காபூலில் இந்தியா தூதரகத்தை திறந்தால், இந்தியாவிற்கு தாலிபன்கள் நியமித்த தூதரை அழைக்குமா? என்பது தான். ஆப்கன் குடியரசு கொடி இருந்த இடத்தில் தாலிபன்களின் கொடி பறக்குமா? தூதரக்த்தில் தாலிபன் அதிகாரிகள் வேலை செய்வார்களா? ரஷ்யாவைப் போல இந்தியாவும் தாலிபன் அரசை அங்கீகரிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5j5d4j19vo
2 hours 18 minutes ago
10 Oct, 2025 | 11:29 AM இன்று (ஒக்டோபர் 10) உலக மனநல தினம்! உலக மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் உடல் நலனுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது மன நலம் / உள நலம் (Mental Health). ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சியும் ஒற்றுமையும் பொருளாதார முன்னேற்றமும் கல்வித் தரமும் குடும்ப பிணைப்பும் – இவை அனைத்தும் மனநலத்துடன் ஆழமாக பிணைந்திருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக உலக மக்கள் மனநல பிரச்சினைகளை புறக்கணித்து வந்தனர். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம் (World Mental Health Day)” அனுஷ்டிக்கப்படுகிறது. இது, World Federation for Mental Health (WFMH) என்ற அமைப்பினால் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் பின்பு, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இதனை பரவலாக்கின. இன்று உலகெங்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகள் இந்நாளை மனநல விழிப்புணர்வுக்கான தளமாகக் கொண்டாடுகின்றன. மனநலத்தின் உளவியல் (Psychological Significance) மனநலத்தை உளவியல் (Psychology) அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். மனநலம் என்பது வெறும் மனநோய் இல்லாமையை மட்டும் குறிக்கவில்லை. அது ஒருவரின் அமைதி, சிந்தனை தெளிவு, உணர்ச்சி கட்டுப்பாடு, சமூக உறவுகளை பராமரிக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் வலிமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகிறது. Sigmund Freud தனது உளவியல் கோட்பாட்டில், மனம் மூன்று அடுக்குகளால் ஆனது. Id, Ego, Superego. இவற்றின் சமநிலையே மனநலத்தை தீர்மானிக்கிறது. Carl Rogers “Person-Centered Therapy” மூலம் மனிதர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சூழல் மனநலத்தை உறுதி செய்கிறது என்றார். Aaron Beck உருவாக்கிய Cognitive Behavioral Therapy (CBT), மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும் முக்கிய சிகிச்சை முறையாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உளவியல் துறையில் மனநலத்தின் முக்கியத்துவம் சிகிச்சை மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அறிவியல் என்பதும் தெளிவாகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 1 பில்லியன் பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மனச்சோர்வு (Depression) மற்றும் பதட்டக் கோளாறு (Anxiety Disorders) அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார் என்பதே WHOவின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம். கொவிட்-19 பேரழிவுக்குப் பின், மனநல பிரச்சினைகள் 25% வரை அதிகரித்துள்ளன. குறிப்பாக, இளம் வயதினரின் தற்கொலை விகிதம் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய அளவில் உயர்ந்துள்ளது. நமது நாட்டைப் பொருத்தமட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்கொலைகளில் 50% மன நோய்களால் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உலகளாவிய ரீதியிலும் பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பாரியமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணங்களாக தொலைபேசி அடிமை மற்றும் இணைய அடிமைத்தனம், போதை அடிமை காணப்படுகின்றன. இதனால், மனநல பிரச்சினைகள் ஒரு உலகளாவிய சவால் எனக் கருதப்படுகின்றன. அதே சமயம், மனநல சிகிச்சைக்கு செலவிடப்படும் நிதி உலகளவில் மருத்துவ செலவினங்களில் 2%க்கும் குறைவுதான். இது மிகப்பெரிய சமநிலையின்மையை காட்டுகிறது. இலங்கையில் மனநலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், இன்னும் பல சவால்கள் உள்ளன. சமூகக் களங்கம் ஸ்ரிக்மா (Stigma): மனநோயாளிகளைக் குறைத்து மதிக்கும் பார்வை இன்னும் நீங்கவில்லை. போர் மற்றும் இயற்கை பேரழிவுகள்: உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, கொவிட் தொற்று மற்றும் அண்மைக்கால பொருளாதார நெருக்கடி ஆகியவை பல ஆயிரக்கணக்கான மக்களின் மனநலத்தை பாதித்துள்ளன. சிறுவர் மற்றும் இளைஞர்கள்: கல்விச் சுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, சமூக அழுத்தங்கள், போதைப்பொருள் அடிமை காரணமாக இளைஞர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளன. சுகாதார வசதிகள்: இலங்கையில் 10 இலட்ச மக்களுக்கு சுமார் 0.3 %மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். WHO பரிந்துரைத்த அளவுக்கு இது மிகக் குறைவு. ஆனால், நேர்மறை மாற்றங்களும் உள்ளன. இலங்கையில் National Mental Health Policy (2005–2015, தொடர்ந்து 2016–2025) நடைமுறையில் உள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் உளவியல் படிப்புகளை வழங்குகின்றன. சமூக மட்டத்தில் NGOகளும் Red Cross போன்ற அமைப்புகளும் மனநல விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டிருக்கின்றன. ஆய்வுகள் மற்றும் தரவுகள் (Research & Statistics) மனநல பிரச்சினைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Lancet Psychiatry (2021) வெளியிட்ட ஆய்வின் படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உலகளவில் பெண்களிடம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. Sri Lanka Journal of Psychiatry யில் வெளியான கட்டுரைகள், போருக்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் PTSD (Post-Traumatic Stress Disorder) விகிதம் மிக உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. University of Colombo மேற்கொண்ட ஆராய்ச்சியில், இலங்கை மாணவர்களில் 20% பேர் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. இந்த தரவுகள், மனநலம் என்பது தனிநபர் பிரச்சினை அல்ல; சமூக, பொருளாதார, கலாச்சார சவால் என்பதைக் காட்டுகின்றன. சமூக விளைவுகள் (Social Impact) மனநல குறைபாடு ஏற்படுத்தும் சமூக விளைவுகள் மிகப் பரவலானவை: 1. குடும்ப உறவுகள் – மன அழுத்தம், வன்முறை, புரிதல் பற்றாக்குறை காரணமாக குடும்பங்கள் சிதறுகின்றன. 2. பொருளாதாரம் – உலகளவில் மனநல பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உற்பத்தித் திறன் இழப்பாகும். 3. சமூக வன்முறை – மன அழுத்தம் மற்றும் போதைப்பழக்கம் சமூக குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கின்றன. 4. இளைஞர் எதிர்காலம் – கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்குவதை மனநல குறைபாடுகள் அதிகரிக்கின்றன. படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வு (Creativity & Awareness) மனநலத்தை மேம்படுத்துவதற்கான படைப்பாற்றல் முயற்சிகள் மிகவும் முக்கியம். கலை மற்றும் இசை சிகிச்சை (Art & Music Therapy) மன அழுத்தத்தை குறைத்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. சமூக நாடகங்கள்,வீதி நாடகங்கள், குறும்படங்கள், கவிதைகள் - பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாற்றல் முயற்சிகளாக் காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் – இன்றைய தலைமுறைக்கு மனநல செய்திகள், சுய பராமரிப்பு குறிப்புகள், ஆன்லைன் ஆலோசனைகள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேர்க்கை நம் முன்னோர்கள் கூட மனநலத்தை மேம்படுத்துவதில் பங்களிக்கின்றவையும் குறிப்பிடத்தக்கது. தீர்வுகள் மற்றும் முன்னேற்ற வழிகள் மனநல பிரச்சினைகளை சமாளிக்க தனிநபர், குடும்பம், சமூகம், அரசு, உலகளாவிய நிலை என அனைத்திலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. 1. விழிப்புணர்வு – மனநோய்கள் குறித்து சமூகத்தில் உள்ள தவறான நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். இதற்கான உலர் கல்வி மற்றும் கழிவுபடுத்தல்கள் அவசியமாகின்றன. 2. ஆலோசனை சேவைகள் – பள்ளிகள், கல்லூரிகள், வேலைத்தளங்களில் மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். எங்க கருத்தரங்குகள் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தல் வேண்டும். 3. சட்ட, கொள்கைகள் – மனநல பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். 4. சமூக ஆதரவு – குடும்ப பாசம், நண்பர்களின் புரிதல், சமூகத்தின் ஒத்துழைப்பு – இவை மனநல சிகிச்சையை எளிதாக்கும். 5. ஆராய்ச்சி – இலங்கையிலும் உலகளாவிய அளவிலும் மனநல ஆராய்ச்சிகளுக்கான நிதி மற்றும் கல்வி வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். உலக மனநல தினம் என்பது ஒரு நாளைய விழிப்புணர்வு மட்டுமல்ல. அது, ஒவ்வொரு நாளும் நம்மை நாமே பராமரிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஒரு உலகளாவிய இயக்கம். மனநலத்தை புறக்கணிப்பது மனித முன்னேற்றத்தையே புறக்கணிப்பதாகும். “உடல் நலம் போல் மன நலமும் – வாழ்வின் அடிப்படை உரிமை” என்பதைக் கொண்டே நாம் சிந்திக்க வேண்டும். இலங்கை முதல் உலகம் வரை, ஒவ்வொரு சமுதாயமும் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தும் நாள் தூரத்தில் இல்லை. மனித குலம் மன அமைதியுடன் வாழும் உலகம் தான் உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம். - நடராசா கோபிராம், உளவியல் சிறப்புக் கலை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். https://www.virakesari.lk/article/227388
2 hours 24 minutes ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்த சம்பவத்தை ஒட்டி மின்னல் நேரங்களில் செய்ய வேண்டியது என்ன, மின்னனு சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) விடுமுறை தினத்தன்று வெளிவே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர். செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள். விவசாயியான இவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல் தாக்கியதில் 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Getty Images கடலை ஒட்டிய பகுதிகளில் தான் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன். மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்று கூறும் அவர் திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். "மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு." என்று தெரிவித்தார் ரமணன். அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மலைப்பகுதிகளில் நேரடி மின்னல் தாக்குதல் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் பொது மருத்துவரும் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான ஆர்.நந்தகுமார். பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று விவரிக்கிறார். நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது. மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது மின்னணு சாதனங்களை மின்னல் தாக்குமா? செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இடி, மின்னல் சமயங்களில் பயன்படுத்தலாமா என்பது தொடர்பான கேள்விகளும் இதனையொட்டி எழுகின்றன. இதற்கான விளக்கத்தை பிபிசியிடம் முன்வைத்தார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் முதுநிலை விஞ்ஞானியும் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றும் த.வி. வெங்கடேஸ்வரன். "உராய்வினால் மின்னல் ஏற்படுகிறபோது நிலையான மின்சாரம் (static electricity) இறங்குவதற்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அவை ஒன்று நிலத்தில் இறங்கும் அல்லது துருதுருத்திக் கொண்டிருக்கும் கம்பி போன்ற உலோகங்களில் இறங்கும். நாம் தரையில் நிற்கிறபோது நமது காலுக்கு அடியில் ஈரம் இருந்தாலும் அங்கு இறங்கும். அதனால் தான் பொதுவெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது." "மின்னல் என்பது மின்னணு சாதனங்களில் இறங்காது. அதனால் மின்னல் தாக்குதலால் நமது கைகளில் அல்லது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வீடுகளில் இருக்கின்றபோது சார்ஜிங்கில் உள்ள செல்போனை பயன்படுத்தக்கூடாது. வெளியிலும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் செல்போன் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை." எனத் தெரிவித்தார். எனவே மின்னணு சாதனங்களை பயன்படுத்தவது பிரச்னை இல்லை. அவற்றை எங்கிருந்து எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே மின்னல் ஆபத்து உள்ளது. இடி, மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்? இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் குழாய்களில் மின்சாரம் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும் குளிக்கவோ, கை கழுவவோ, பாத்திரங்களை சுத்தம் செய்யவோ கூடாது லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது. சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம். வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும் திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும் மறைவான இடங்களில் எங்கும் ஒதுங்க முடியவில்லையென்றால் நிலத்தில் கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து காதுகளை அடைத்துக் கொண்டு குனிய வேண்டும் நிலத்தில் படுப்பதை தவிர்க்க வேண்டும் நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். பட மூலாதாரம், Getty Images மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? உயிரிழப்பைத் தாண்டி மின்னல் தாக்குவதால் நீண்ட கால காயங்கள் மற்றும் குறைபாடு ஏற்படலாம் எனவும் என்.டி.எம்.ஏ தெரிவிக்கிறது. மின்னல் தாக்குதலில் வெளிப்புற காயங்கள், உட்புற காயங்கள் இரண்டு வகைகளாகவும் பாதிப்புகள் இருக்கும் என்கிறார் நந்தகுமார் "தோல், தசை தொடங்கி அனைத்து உறுப்புகளையும் மின்னல் தாக்குதல் பாதிக்கும். ஒரு தீக்காயம் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் எல்லாம் நிகழுமோ அவை அனைத்தும் உருவாகும். தசைகளை கடுமையாக பாதிக்கும்." என்றார். "பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடு, மூச்சுத் திணறல், சீரற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி, தூங்குவதில் பிரச்னை, தலைசுற்றல், தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்." என்றும் குறிப்பிட்டார். மின்னல் தாக்குவதில் மூளை மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் தான் அதிகம் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார். "மிக தீவிரமாக தாக்கினால் மூளைச் சாவு அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காயமடைபவர்களுக்கு மறதி போன்ற நீண்டகால சிக்கல்கள் ஏற்படும்." "இதயத்தில் ரத்த அழுத்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். உடனடியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் தான் மின்னல் தாக்குதலில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிக குறைவாக இருக்கிறது." என்றார். மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை, மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும். மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qyq1l4q0o
2 hours 35 minutes ago
இலங்கை இனி விளையாடும் இரண்டு போட்டிகளில் இலங்கையை தெரிவு செய்து இருக்கிறேன்...............இரண்டு போட்டிகளிலும் முட்டை கிடைக்க அதிக வாய்ப்பு................... இலங்கை இனி விளையாடும் இரண்டு போட்டிகளில் இலங்கையை தெரிவு செய்து இருக்கிறேன்...............இரண்டு போட்டிகளிலும் முட்டை கிடைக்க அதிக வாய்ப்பு.......................
2 hours 37 minutes ago
11 Oct, 2025 | 03:45 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, கால்நடை கடத்தல், கோஷ்டி போதல் போன்றவை அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்கள் பொலி சாருக்கு வழங்கப்பட்டாலும் சில வேளைகளில் அசமந்த போக்குடன் பொலிசார் நடந்துகொள்கின்றமையால் இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுட்டி காட்டியுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கும்போது, போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாகவும் கால்நடைகள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது என தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகவும் அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார். அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டதுடன் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்வாறாக மாடவட்ட ரிதியாக குற்ரச்சாட்டுகள் முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/227481
2 hours 47 minutes ago
2 hours 54 minutes ago
இலங்கை சொந்த மண்ணில் படு தோல்வி😋.................... இங்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் இங்லாந்தை இலங்கை மகளிர் அணி இரண்டு முறை தோக்கடிச்சவை ஆனால் சொந்த மண்ணில் இலங்கை மகளிரீன் விளையாட்டு சரி இல்லை நானயத்தில் வென்ற கையோட மட்டைய தெரிவு செய்து இருக்கனும்................................. நீங்கள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது நானயத்தில் வென்றால் உந்த மைதானத்தில் மட்டைய தான் தெரிவு செய்து இருக்கனும் பந்து வீச்சை தெரிவு செய்தது தவறு என நான் நினைக்கிறேன்....................
3 hours 27 minutes ago
நன்றாக இரசிக்கிறீர்கள். 😆
3 hours 42 minutes ago
🤣............... வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.
3 hours 51 minutes ago
வசி அண்ணா செம்பாட்டன் அண்ண வாதாவூரன் சகோ ஈழப்பிரியன் அண்ணா............. இலங்கை வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறீங்கள் 11 உறவுகள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கினம்.....................................
3 hours 53 minutes ago
இதை பகிர்ந்த அதே ஆள்தான் மேலே பாரதியாரை எல்லாம் இழுத்து சாம்பு மவன் வேம்பு, சங்கி இல்லை என எழுதினார் என்பதை சபையோர் கருத்தில் எடுக்க வேண்டும்🤣. NTK = RSSS என்பது இதைத்தான்.
3 hours 59 minutes ago
உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை. அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.
4 hours 13 minutes ago
வீர வணக்கம்.
Checked
Sat, 10/11/2025 - 17:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed