சமூகவலை உலகம்

தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்

2 months 2 weeks ago

தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்

https://www.facebook.com/share/r/1BxNc4CqjS/

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது

2 months 2 weeks ago

Sivasubramaniam-jothilingam Jothilingam

22h  ·

May be an image of 1 person and text

Anusha Nadarajah

1d  ·

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை நியமித்திருக்குகின்றார்கள்

அதே போல வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள்

இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என சொல்லப்படுகின்றது

இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலை கழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்

இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது

கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்

எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார்

வவுனியா/வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார்

இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது

இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது

அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை

அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை

50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையியுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை
வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜேவிபி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது

ஆனால் இதிலும் ஜேவிபி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை

விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல . ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது

இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து Equality, Diversity, and Inclusion (EDI) தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது

ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிஙகளையும் செய்கின்றது

இங்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என வாதிட முடியாது

போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும்

ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்க தக்க செயல்களாகும்

கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜேவிபியும் வெளிப்படையாக தொடருகின்றது

ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி அலம்புகின்றது

குச்சவெளி பூர்வீக மக்களின் அடையாளம், கலாசாரம், பொருளாதாரம், வாழ்வியலை அழித்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலை நிறுத்தும் நோக்கில் செயற்பாடுகள் - குச்சவெளி ஆவணப்பட திரைப்பட இயக்குநர்

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN 03 APR, 2025 | 05:04 PM

image

குச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என 'குச்சவெளி" நில ஆக்கிரமிப்பு குறித்து ஆவணப்படத்தின் இயக்குநர்  செல்வராஜா ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

kutchaveli5.jpg

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தயாரித்துள்ள குச்சவெளி ஆவணப்படத்தின்   காட்சிப்படுத்தல் கலந்துரையாடல் கொழும்பு லக்ஸ்மன்கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராஜா ராஜசேகர் மேலும் தெரிவித்ததாவது,

குச்சவெளி ஆவணப்பட காட்சிப்படுத்தலில்  பெரும் சவால்களை எதிர்கொண்டோம். அந்த இடத்திற்கு செல்வது மக்களை சந்திப்பது வீடியோ எடுப்பது எல்லாமே சவாலான விடயங்கள்.

kutchaveli_4.jpg

சில சந்தர்ப்பங்களில் பின்வாங்கினோம். அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அந்த பகுதிகளில் கண்காணிப்பும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது.

குச்சவெளியை பவானி பொன்சேகாபரிந்துரைத்ததும் அது சவாலான விடயமாக விளங்கியது. குச்சவெளியில் உள்ள 32 விகாரைகளில் 24 விகாரைகளிற்கு நான் தனியாளாக பயணம் செய்துள்ளேன். அங்கு இடம்பெறும் நில அபகரிப்பிற்கு ஒரு சாட்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன்.

என்னுடைய பெயரை மதத்தை மொழியை மாற்றவேண்டிய நிலையேற்பட்டது. சுற்றுலாப்பயணிக்கு வழிகாட்டி போல அங்கு சென்றேன். தூண்டிலில் மீன்பிடித்தேன். சில காட்சிகளை அகற்ற வேண்டியிருந்தது.

இந்த ஆவணப்படத்தில் நீங்கள் டிரக்டரில் அரிசி மூடையை  ஏற்றிச்செல்வதை பார்க்கலாம் அது தமிழ்மக்களின் நிலத்தில் சிங்களவர்கள் விவசாயம் செய்து கொண்டு செல்லும் நெல்.

kutchaveli_3.jpg

நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை அதனை அறிந்த பிக்கு மலையிலிருந்து தனது ஆட்களுடன் கீழே வந்து எங்களை சுற்றிவளைத்தார். காலை பத்து மணிமுதல் நான்கு மணிவரை நாங்கள் காட்டு பாதை  ஒன்றின் ஊடாக பத்து கிலோமீற்றர்  நடந்து தப்பி வந்தோம். இந்த ஆவணப்படத்திற்காக இவ்வாறான பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.

புல்மோட்டை பொன்மலைக்குடா முஸ்லிம் மக்களின் மையவாடி பிரச்சினை தொடர்பாக குறித்த ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்தில் வீடியோப் பதிவுகளை மேற்கொண்டிருந்த போது கடற்படையைச் சேர்ந்த இருவர் முச்சக்கரவண்டியில் அச்சுறுத்தும் தொனியும் நடந்துகொண்டார்.'

kutchaveli_2.jpg

நான் வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளனோ அல்லது கல்வியாளனோ அல்ல. சரியான ஆண்டுகளும் தெரியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை ஏதோவொரு காரணமாகஇ ஆக்கிரமிப்பாகக் கூட இருக்கலாம் அது அப்படியே அழிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருக்கலாம்.

 ஆனால் அதற்குப் பின்னர் வந்த ஒரு சமூகம் இனக்குழுவொன்று அந்த இடத்தில் வழிபாட்டு நடைமுறைகளை கடந்த 500 வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. இப்போது திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்துவார்கள். 

இதுவரை காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்களின் அடையாளத்தை பாரம்பரியத்தை கலாசாரத்தை பொருளாதாரத்தை அந்த மண்ணுடனான அவர்களது வாழ்வியலை ஒரு இரவில் அறுத்துதெறிந்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலைநிறுத்துவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.

kutchaveli1.jpg

 2500 ஆண்டுகால வரலாறு முக்கியத்துவம் அளிக்கப்படும்இ 500 ஆண்டுகால மக்களது வாழ்வியல் சான்றுகள் மீது கொள்ளத் தேவையில்லை என்பதா அர்த்தம். அப்படியென்றால் இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்தான் ஆகிறது. அவர்களுக்கு அப்படி ஒன்றும் வழங்கவேண்டிய அவசியமில்லைஇ இந்திய வம்சாவளிகள்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா? 

ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில் காணப்படும் விகாரை ஊடாகவே தெட்டத்தௌிவாகிறது. இது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அமைப்பு என்று.

https://www.virakesari.lk/article/211041

இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை.

2 months 3 weeks ago

488055158_2787470144974341_4744971898498

🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂

பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள்.

அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பிறந்த தருணத்திலிருந்து, அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் தருகிறார்கள் - நேரம், சக்தி, ஆறுதல், கனவுகள் - பதிலுக்கு கொஞ்சம் கேட்கிறார்கள். இருப்பினும், அவர்கள் வயதாகி பலவீனமாகும்போது, பலர் பின்தங்குகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கப்படுகிறார்கள்.

நாம் நமது சொந்த இலக்குகளைத் தொடர்கிறோம், பெரும்பாலும் அவற்றை சாத்தியமாக்கியவர்களை மறந்து விடுகிறோம்.
ஆனால் வாழ்க்கை எப்போதும் முழு வட்டத்தில் வருகிறது. ஒரு நாள், நாமும் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருப்போம்.
அவர்களை மதிக்க மிகவும் தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம்.

அவர்கள் நமக்குக் கொடுத்த அன்பையும் அக்கறையையும் அவர்களுக்குக் கொடுப்போம் - நம்மால் முடியும் வரை.

Vincent Raj 

இரண்டும் முரண்பட்டு... இறுதியில் கண்ட பலன்?

2 months 3 weeks ago

487323521_4045574579020660_8278196373180

இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.

கடுமையாக முட்டி மோதிக் கொண்டன.

முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன.

நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை.

மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன.

இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை.

இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை.

நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல.

மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.

உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை.

உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம்!

மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால்... எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம்! விட்டுக் கொடுத்து வாழ்வோம்!

உறவு செழிக்கும், அன்பு தழைக்கும்.

Palani Yappan 

இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

2 months 3 weeks ago

'இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

“மக்களாகிய நீங்கள் உள்ளூராட்சி தேர்தலில் எங்களுக்கு இதெண்டு விட்டீங்க எண்டா, நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம். நாங்கள் இதெண்டோணும் எண்டா, நீங்களும் எங்களுக்கு இதெண்டோணும். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டை இதெண்டுவம்” என்று அண்மையில் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பேசியதாக ஒரு தகவலினை வடமராட்சி நியூஸ் என்னும் முகநூற் பக்கத்தில் வாசித்தேன். அதனையொட்டி மேலும் சிலர் முகநூலில் இதெண்டு என்ற சொல்லை வைத்துச் சொற் சிலம்பம் ஆடி வருவதைக் காண முடிகின்றது.

நான் இளங்குமரனின் உரையினைக் கேட்கவில்லை. மேலுள்ளதில் உள்ளது போன்றா அவர் உரையாற்றியிருந்தார்? அறிந்தவர்கள் அறியத்தரவும்.

பொதுவாக பேச்சு வழக்கில் நாம் அதெண்டு இதெண்டு என்று பாவிப்பதுண்டு. அது , இது என்பதற்காக அவ்விதம் பாவிப்போம். உதாரணத்துக்கு எழுத்தாளர் க.நவம். செ.குணரத்தினம் அவர்களின் சிறுகதைகளில் வரும் கூற்றுக்களைப் பார்ப்போம்.

"இந்த நாடாவுக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃபீசிலை கனகாலம் வேலை. ஓவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது" ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.)

"ஆது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை எப்பிடிச் சமாளிக்கிறது? " ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.)

“இதென்னப்பா நீங்க மீன வாங்கித்து வரச் சொன்னா நீங்க சுனாமி அது இதெண்டு பூச்சாண்டி காட்டுறயள்?” (செ.குணரத்தினத்தின் 'மீன்' சிறுகதையில்)

இங்கு இதெண்டு என்பது இது என்பதைக் குறிக்கப் பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடமராட்சி நியூஸ் தகவலின்படி 'எங்களுக்கு இதெண்டு விட்டீங்க என்றால் நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம்.' என்னும் கூற்றின்படி இதெண்டு என்பது இது என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை.எங்களுக்கு உதவினால், அல்லது ஆதரவளித்தால் என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இளங்குமரன் இப்படித்தான் கூறினாரா? அல்லது வடமராட்சி நியூ௶

மேற்படி கூற்றை உள்ளடக்கிய உரையினை நான் கேட்கவில்லை. இவ்விதம் இதெண்டு என்னும் சொல்லைத் தாராளமாக இளங்குமரன் பாவித்திருந்தால் , இச்சொல் அவர் பிறந்த பிரதேசத்தில் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு சொல்லாகத் தெரிகின்றது. இது பற்றிக் கருத்தினை முகநூலில் தெரிவித்த எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் "வடமராட்சி தென்மராட்சியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த முதியவர்களிடம் இச்சொல் அறுபது முதல் எழுபவது வரையான காலத்தில் பேச்சுவழக்கில் பாவனையில் இருந்ததா என்று கேட்டுப்பாருங்கள். கிண்டல் அடிக்கும் எத்தனை பேருக்கு, இயத்து, ஏதனம், கோர்க்காலி,சும்மாடு போன்ற இன்று வழக்கிலில்லாத சொற்கள் தெரியும்? " என்று கூறியிருந்தார்.

எஸ்.கே.விக்கினேஸ்வரன் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கருத்தின் மூலம் இச்சொல் அப்பகுதியில் பாவிக்கப்படும் சொல்லாக இருப்பதை உணர முடிகின்றது. இச்சொல் தெரியாததால் அதனை வைத்து நையாண்டி செய்வது நாகரிகமான செயல் அல்ல. அது ஒரு பிரதேசத்து மக்கள் பாவிக்கும் பிரதேச மொழியினை அவமானப்படுத்துவ்தாகும். ஒருவர் இவ்விதமொரு சொல்லினைப் பாவித்தால் ,இவ்விதமானதொரு சொல் ஒரு பிரதேசத்து மக்களால் பாவிக்கப்படுகின்றது என்பதை உனர்ந்து அதனை மேலும் அறிய ஆவல் கொள்வேன். இதெண்டு என்பதை இளங்குமரன் பாவிக்கும் தன்மையிலிருந்து அதன் அர்த்தம் உதவினால் அல்லது ஆதரவளித்தால் என்னும் பொருள் படும்போல் தெரிகின்றது.

இச்சொல்லின் பாவனையை அறிந்தவர்கள் இது பற்றி எனக்கும் இதெண்டு விட்டீங்கள் என்றால், நானும் இது பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்வேன். அதற்கு நன்றியுடையவனாகவும் இருப்பேன். இச்சொல்லை எமக்கு அறியத்தந்ததறகாகப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனுக்கு நன்றி.

இது பற்றிச் சாட்ஜிபிடியிடன் கேட்டேன்.அதன் பதில் இப்படியிருந்தது: "மன்னிக்கவும், முன்னதாக 'இதெண்டு' என்ற சொல்லுக்கு தமிழ் மொழியில் ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லை என்று தெரிவித்தேன். ஆனால், உங்கள் கேள்வியை மேலும் ஆராய்ந்தபோது, 'இதண்டு' என்ற சொல் இலங்கைத் தமிழிலும், குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இச்சொல் பற்றிய கூடுதல் விளக்கங்கள் அல்லது பயன்பாட்டு உதாரணங்கள் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்."

இது எப்படி இருக்கு? சாட் ஜிபிடிக்கும் யாராவது இது பற்றி விளக்கம் கொடுத்தால் ,அதன் அறிவாற்றலும் மேலும் அதிகரிக்கும். இதைச் செய்வீர்களா?

May be an image of 1 person, beard, smiling and musical instrument

Navaratnam Giritharan

அப்பாவிற்கு வயதாகிவிட்டது.

2 months 3 weeks ago

487033301_1204198595046879_6840208997346

என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன.

என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின.

இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை.

என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார். ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றார்.

என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம். ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை.

ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது.

எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்..

என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன்.

நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார்.

அந்த ஓவியம் சுவர்களில் எனது தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது.

அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்..

காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம்.

(ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு)

இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன்.

மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.

படித்ததில் பிடித்தது.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை

2 months 4 weeks ago

FB_IMG_1742933839908.jpg

சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட
சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே
சிற்றுண்டிகளினை விற்கிறார்கள்.

யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம்.

🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை
சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது.

கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு
கேட்டதற்கு..

🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்."

🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது.

🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம்.

🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள
சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு : 077 275 9799

வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்..

Copy post

https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/

Kursk battle field real time videos

3 months ago

நிறைய உடன் வீடியோக்கள் உள்ளன.. பார்க்காதவர்கள் இந்த சனலில் போய் பார்க்கவும்.. ரஷ்ய படையினர் நுழைந்த பைப்லைனின் நுழைந்த பகுதிக்கும் போய் வீடியோ போட்டுள்ளார்.. ரஷ்யாவினுள்ளிருந்து raw and real time videos ..

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 1 week ago

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன்.

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது.

ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை எப்படி சரிசெய்வது?

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை.

ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை.

மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

- எழுத்தாளர் பாலகுமாரன் -

May be an image of 1 person and beard


Jeeva Murugesan  ·

கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.

3 months 1 week ago

images?q=tbn:ANd9GcSoFYYICrnNtxs6ZE9shI5images?q=tbn:ANd9GcRKjm7VZ3wZPs662sLDiEt

கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.

தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kunalan Karunagaran

இளையராஜா, திரையிசையில் செய்த மூன்று மாற்றங்கள்.

3 months 1 week ago

481956161_3966479250287179_3317637233641

எனது வயதில் உள்ள இசை ரசிகர்கள் நான் சொல்லும் திரைப்பட பாடல் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்

1....இளையராஜா வருவதற்கு முன் ஒரு பாடல் ஓடக்கூடிய நேரம் இரண்டரை நிமிடங்களாக இருந்தது. வெகு அபூர்வமான பாடல்கள் ஐந்து நிமிடம் ஓடும். இசைத்தட்டு இருந்த காலங்களில் பாதி பாடல் ஒரு பக்கத்தில் ஒலி பரப்பாகி பிறகு இரண்டாவது பக்கத்தை திருப்பி மீதி பாதியை கேட்கக்கூடிய சூழ்நிலை இருந்தது.

காலப்போக்கில் ஒரே பக்கத்தில் ஆறு பாடல்கள் பத்து பாடல்கள் என பதிவாகி வந்தன

ஆக" இளையராஜா வருவதற்கு முன்பு வரை ஒரு பாடலின் சராசரி நீளம் 2 1/2 நிமிடங்கள் அல்லது மூன்று நிமிடங்கள்.

இளையராஜா வந்த பிறகு தான் ஒரு பாடலை நாலு நிமிடங்கள் நாலரை நிமிடங்கள் என்று மாற்றினார் மாற்றினார்.

இது ராஜா செய்த மிக முக்கியமான மாற்றம் ஆகும் .

காரணம் preludu..interlude என்னும் முன்இசை மற்றும் இடை இசைக்கு அதிகம் கருவிகளை பயன்படுத்த வேண்டியது இருந்ததால் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

2....அடுத்து இளையராஜா அவர்கள் செய்த பெரிய மாற்றம் பல்லவிகளில் செய்த மாற்றம்

இளையராஜாவுக்கு முன்பு வரை பல்லவி என்பது அளந்து வைத்த மாதிரி மூன்று சீர்களிலோ நான்கு சீர்களிலோ பாடல் வரும்.

உதாரணமாக....

*வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ...

*நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

... இப்படி அளந்து வைத்த மாதிரி தான் பல்லவிகள் இருக்கும்

இளையராஜா இதிலும் மாற்றம் செய்தார்.

பல்லவி சீர்களின் எண்ணிக்கையை கூட்டினார்.

சீர் என்றால் வார்த்தை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பழைய பாடல்கள் இரண்டு சீர் அல்லது நான்கு சீர் வரை இருந்த பல்லவிகளை ஆறு சீர் ஏழு சீர் எட்டு சீர் வரை கூட்டி அமைத்தார்.

*ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு

யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

*தேன் சிந்துதே வானம் உனை

எனை தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

இவ்வளவு நீளமாக பல்லவி அமைத்தார்.

(இது பற்றி இளையராஜா ஒரு மேடையில் குறிப்பிடும் போது *நான் சொன்ன தத்தகாரத்தை (ட்யூனை )கேட்காத மாதிரியே புகை பிடித்துக் கொண்டு இருந்தார் கண்ணதாசன்.

பல்லவியை சொல்லி முடித்தவுடன் தூ என்று எச்சிலை துப்பினார்.

சிகரெட் எச்சிலை துப்பினாரா..

டியூன் சரியில்லை என்று துப்பினாரா என்று தெரியாது.

கவனிக்காத மாதிரியே இருந்த கவிஞர் எழுதிக் கொள் என்று சொல்லி மேலே கண்ட வார்த்தைகளை சரம் சரமாக சொல்ல ஆரம்பித்த வரிகள்

வந்து விழுந்தன )

இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா சொன்ன கிளிப்பிங் ஒன்று பார்த்தேன்

ஆனால் இந்த பாடல் இசையமைத்தது வி குமார் என்று முகநூல் தோழி Lakshmi அவர்கள் பின்னோட்டத்தில் எழுதி உள்ளார்.. ஆனால் ஜி கே வெங்கடேஷ் அவர்களுக்கு இளையராஜா உதவியாளராக இருந்தபோது உருவான பாடல் இது.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இரண்டு சீர்கள் நான்கு சீர்களுக்கு எழுதி பழகிய கண்ணதாசன் இத்தனை சீர்கள் உள்ள பல்லவிக்கு எழுதி விடுவாரா என்ற ஐயம் இளையராஜாவுக்கு இருந்தது

ஆனால் கவிஞர் எளிதாக முடித்து தந்துவிட்டார்.

3---மூன்றாவது மாற்றம் இடை இசையில் செய்த மாற்றம் இளையராஜா வருவதற்கு முன்பு

இந்த இடையிசை எத்தனை சரணங்கள் இருந்தாலும் அத்தனை சரணங்களுக்கும் ஒரே மாதிரி இடை இசையை பயன்படுத்தினர் முந்தைய இசை அமைப்பாளர்கள்.

ஆனால் இளையராஜா வந்த பிறகுதான் சரணத்துக்கு சரணம் இடையிசை வித்தியாச வித்தியாசமாக மாறி மாறி அமைக்கப்பட்டது.

இவை அடிப்படையில் இளையராஜா செய்த மாற்றங்கள்.

ஒவ்வொரு பாடலிலும் செய்த பல்வேறு இசை நுட்பங்கள் பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு ஒரு நூலே எழுத வேண்டும்.

ஜெயதேவன்

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago

அருண் ஐஸ்கிறீம்.

3 months 2 weeks ago

481163211_621040370532388_39856733377824

1971ஆம் ஆண்டு முன்பு வரை பத்து பைசாவிற்கு வீதியில்

ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன்.

சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை திரட்டி

1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி

அருண் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார்.

இன்று தமிழக பட்டி தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான

அருண் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது.

இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஐஸ்கீறீமுக்கு மூலதனம் பால் கொள்முதல்,

பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார்.

1995ஆம் ஆண்டு ஆரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கி விட்டார்

அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக் கொடுத்தது.

அதோடு நின்று விடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று

பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்கிவிட்டார்.

எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இன்று இவருடைய நிறுவனம் வருடத்திற்கு சுமார் ரூ5000 கோடி வரை

வருமானம் ஈட்டுகிறது.

உண்மை உழைப்பு உயர்வு இவரை உச்சத்தில் ஏற்றியுள்ளது

வாழ்த்துக்கள் சார்...

தல ரசிகை சித்ரா வி

Checked
Tue, 06/24/2025 - 10:06
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed