சமூகவலை உலகம்

கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்

2 months 4 weeks ago

கத்தரிக்காய் வியாபாரிகள்

 

AVvXsEgLKt1AuRXQM6SQYq6q-N0pjjVFLvqtiuQ54lgakMDxfo-iQZZzzkAHmuBHwGu4tDuDhRuEmbLvxEY4XxS3Z1WYwwts5chrQClhIN-52cv2Bp20y8hjQkKQkEOyDGtIAMXy0OqbleBwU0lqShrQL1yqZ4oNZrL6tAVTQ_64mC8HygVzra7t_zUFzezsxG8H=w640-h336

முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும்.

செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்?

இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது.

குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா!

கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_66.html

செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது

3 months 1 week ago

வன்னித் தேசம்

23h  · 

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்' ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான, சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. "பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்" என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள். கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி "13 வயது தொடங்கி 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அனைவரையும் என்னிடம் நம்பி ஒப்படையுங்கள். 'தலையாட்டி' முன்னால் விட்டு அடையாளம் காட்டி விட்டுப் பத்திரமாக உங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம்! என்று அந்தக் குருவானவருக்கு உறுதி அளித்து விட்டு எனது அண்ணன்,நான், எனது ஒரு தம்பி உட்பட 13 வயது தொடங்கி 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பேரைக் கைது செய்து மண்டைதீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களில் பலர் 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பவில்லை. ராணுவம் பிலிப்பு நேரியார் கோயில் வளவைச் சுற்றி வளைத்து நின்ற போது தனது பாதுகாப்புக்காக தனது அக்காவின் மகளைக் கையில் தூக்கி வைத்திருந்த எனது நண்பன் சிவபாலன் இராணுவம் எங்களை வெளியே அழைத்துச் சென்ற போது அந்த அக்காவின் குழந்தையை அக்காவிடமே கொடுத்து விட்டு எங்களுடன் வந்தான். எவ்வளவு உயிர்ப் பயம் இருந்தால் இளைஞர்கள் அக்காவின், தங்கையின் பிள்ளையைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு 'திருமணம் ஆனவர்கள்' போல நடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.😌" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t81/1/16/1f60c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> எங்களைப் பிலிப்பு நேரியார் ஆலய வளவில் இருந்து தொலை தூரத்திற்கு அஃதாவது கிறீஸ்தவ மதகுரு மற்றும் அந்த ஆலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களுக்கு எங்கள் கதறல் சத்தம் கேட்காத தொலைவுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் எனக்கும் என்னோடு அழைத்து வரப்பட்ட சுமார் 200 பேருக்கும் நடந்ததெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாதவைகள். எனது அண்ணன் உட்பட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப் பட்டது, சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கூட 'தர்க்கவியல் ரீதியாக'(Logic) ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இராணுவத்தைக் கண்டதும் உயிர்ப் பயத்தின் காரணமாக அக்காவின் குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்த 'இயக்கத்துடன்' எந்த வித தொடர்பையும் பேணாத எனது நண்பன் சிவபாலனும், தமிழகத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து எங்கள் உறவினர் ஒருவரின் கடையில் நம்பிக்கைக்கு உரிய ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த 'முருகனும்' இன்னும் 23 பேரும் "இராணுவத்திற்கு சில வேலைகளில் உதவ வேண்டி இருக்கிறது, 25 பேர் தேவை; எழுந்து வாருங்கள்! இரண்டு நாட்களில் விட்டு விடுவோம்! என்று இன்னொரு ராணுவ அதிகாரியும் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் ஒரு கட்சியால் 'பாவமன்னிப்பு' கொடுக்கப் பட்டுள்ள தோழரும் சொன்னதை நம்பி அல்லவா எழுந்து சென்றார்கள். அந்த 'எந்தப் பாவமும் அறியாத 25 பேரும் கூட' 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பாததை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. செம்மணியில் 'குழந்தைகளின் எலும்புக் கூடுகளும்' தோண்டி எடுக்கப் படுவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாக்களுடன் அரியாலை, கைதடி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அப்பா, சில வேளை அம்மாக்களுடன் இராணுவத்தால் பிடிக்கப் பட்டு இப்போது புதை குழிகளில் இருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப் படும் அந்தப் பிஞ்சுகளுக்கும் அஞ்சலி! 💐" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te3/1/16/1f490.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌸" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf0/1/16/1f338.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💮" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t70/1/16/1f4ae.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4e/1/16/1fab7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🏵" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f3f5.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌹" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f339.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌺" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t99/1/16/1f33a.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌻" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f33b.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌼" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9b/1/16/1f33c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6f/1/16/1f337.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">(அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் சுமார் 35 வயதைத் தொட்ட நடு வயது ஆண்களாக, பெண்களாக மருத்துவராக, பொறியியலாளராக, ஆசிரியர்களாக இன்ன பிற பதவிகளில் இருந்திருப்பார்கள்)

கீழே உள்ளது வேறு ஒருவர் எழுதிய பதிவு:

------------------------------------------------

முன் சைக்கிள் பார்ல எங்கள ஏத்திற்று பின்னுக்கு கரியல்ல அம்மாவ ஏத்திற்று அப்பா போவார் இது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் இப்படித்தான் பல குடும்பங்கள் செம்மணி தாண்டிப் போகும்போது இராணுவம் சோதனைக்கு என்று கூப்பிடும்.

அங்கு என்ன நடக்கும்?

அப்பாவையும் நிர்வாணமாக்கி அப்பா கண் முன்பே இராணுவம் அவர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வார்கள். ஒருவனா இல்லை; அத்தனை பேரும் கொடுமை செய்து கெடுப்பார்கள். பின் குடும்பத்தையே அடித்து கொன்று குழி தோண்டிப் புதைப்பார்கள் இது அங்கு வழமையாக நடந்தது.

ஒருவர் அல்ல இருவர் அல்ல ஒன்பது இராணுவமும் இரண்டு காவல்துறையும் சேர்ந்து பாடசாலை மாணவி கிருசாந்தியை வன் கொடுமை செய்ததாக அதே இராணுவ முகாம் இராணுவ சிப்பாயின் வாக்குமூலம் உள்ளது

உங்களுக்கு தெரியுமா?

கிருசாந்தியை தேடிச்சென்ற பக்கத்து வீட்டு அண்ணனையும், அவளின் தாயையும் சகோதரனையும் கொலை செய்யும்போதும் கூட அங்கு கிருசாந்தியை கூட்டு பாலியல் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.

கிருசாந்தியின் தாயையும் சகோதரனையும் மற்றவரையும் அவர்கள் அடித்துக் கொல்லும் போது நேரம் இரவு 10:00 மணி. கூட்டு பாலியல் செய்து முடிந்து கிருசாந்தியை கொலை செய்து புதைக்கும்போது நேரம் நள்ளிரவு 12:00

இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைக்கப்பட்ட இடம்தான் செம்மணி 😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😢" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te/1/16/1f622.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

மறந்து வாழ ஆசைப்படுகிறீர்களா?

அப்படி வாழ்ந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
Muthukrishnan Viswanaath 

505264207_24114036841525017_138466397756

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும்

தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !!

கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்...

எல்லை மீறிய பாலகிருஷ்ணன் !

இனியும் பொறுத்துப் போதல் கூடாது !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.

ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு.

மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள்.

இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி.

அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி.

இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல.

(அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை.

மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது.

அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார்.

கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று

அல்ல.

மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.)

இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள்.

சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர்.

அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?!

இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம்.

இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு.

இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன்.

மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான்.

இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது.

இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள்.

ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர்.

ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது.

ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான்.

ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர்.

ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள்.

காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள்.

இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு.

இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது.

அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள்.

தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?!

அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது !

இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார்.

வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான்.

இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல்.

ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது.

இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம்.

இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல.

ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார்.

இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட...

வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ?????

என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?!

ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார்.

அது.....

சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம்.

வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!

சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?!

வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025

உண்மையிலேயே NPP தீய சக்தியா?

3 months 2 weeks ago

எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.

1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?

2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?

3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?

4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?

5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?

6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?

7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?

8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.

9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?

இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் இவை

1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?

இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம்.

தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார்.

தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை.

இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு. இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல் மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு.

இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா?

2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார். மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம்.

3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?'

இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால் நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப் படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில் ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத் தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று கருதுகின்றேன்.

4. 'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? ' தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக் காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம்.

அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இத்னைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.

இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக உறுதியுடன் செய்ற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்ம இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்ற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி.

502833191_10161311523968372_265693266980

502503833_10161311524318372_348294325509

502579085_10161311576648372_459077745366

https://www.facebook.com/search/top/?q=NPP%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D


சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் ; “புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்”

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 04:46 PM

image

புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர்

தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு  செலவிடப்படுகின்றது. 

வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன.

புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. 

புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 

புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு, 

- சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல்.  

- இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல். 

- இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல். 

- “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல்.

தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது. 

எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். 

புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. 

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019).

தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.  

இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன.

2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. 

இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக  உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. 

வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

8.jpg

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார்.

இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது.

- தனி சிகரட் விற்பனையை தடை செய்தல்

- எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் 

- முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்

- கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல்

- புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல்.  

- சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்

- வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல்

- சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல்

- இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல் 

- NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல். 

புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

Image_06.jpeg

மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

அதில்,  மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி  நிஷான் டி மெல்,  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/216093

Checked
Thu, 09/18/2025 - 07:53
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed