ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்....
ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்....
ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்....
முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும்.
செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்?
இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது.
குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா!
கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்
23h ·
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்' ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான, சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. "பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்" என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள். கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி "13 வயது தொடங்கி 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அனைவரையும் என்னிடம் நம்பி ஒப்படையுங்கள். 'தலையாட்டி' முன்னால் விட்டு அடையாளம் காட்டி விட்டுப் பத்திரமாக உங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம்! என்று அந்தக் குருவானவருக்கு உறுதி அளித்து விட்டு எனது அண்ணன்,நான், எனது ஒரு தம்பி உட்பட 13 வயது தொடங்கி 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பேரைக் கைது செய்து மண்டைதீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களில் பலர் 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பவில்லை. ராணுவம் பிலிப்பு நேரியார் கோயில் வளவைச் சுற்றி வளைத்து நின்ற போது தனது பாதுகாப்புக்காக தனது அக்காவின் மகளைக் கையில் தூக்கி வைத்திருந்த எனது நண்பன் சிவபாலன் இராணுவம் எங்களை வெளியே அழைத்துச் சென்ற போது அந்த அக்காவின் குழந்தையை அக்காவிடமே கொடுத்து விட்டு எங்களுடன் வந்தான். எவ்வளவு உயிர்ப் பயம் இருந்தால் இளைஞர்கள் அக்காவின், தங்கையின் பிள்ளையைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு 'திருமணம் ஆனவர்கள்' போல நடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.😌" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t81/1/16/1f60c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> எங்களைப் பிலிப்பு நேரியார் ஆலய வளவில் இருந்து தொலை தூரத்திற்கு அஃதாவது கிறீஸ்தவ மதகுரு மற்றும் அந்த ஆலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களுக்கு எங்கள் கதறல் சத்தம் கேட்காத தொலைவுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் எனக்கும் என்னோடு அழைத்து வரப்பட்ட சுமார் 200 பேருக்கும் நடந்ததெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாதவைகள். எனது அண்ணன் உட்பட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப் பட்டது, சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கூட 'தர்க்கவியல் ரீதியாக'(Logic) ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இராணுவத்தைக் கண்டதும் உயிர்ப் பயத்தின் காரணமாக அக்காவின் குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்த 'இயக்கத்துடன்' எந்த வித தொடர்பையும் பேணாத எனது நண்பன் சிவபாலனும், தமிழகத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து எங்கள் உறவினர் ஒருவரின் கடையில் நம்பிக்கைக்கு உரிய ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த 'முருகனும்' இன்னும் 23 பேரும் "இராணுவத்திற்கு சில வேலைகளில் உதவ வேண்டி இருக்கிறது, 25 பேர் தேவை; எழுந்து வாருங்கள்! இரண்டு நாட்களில் விட்டு விடுவோம்! என்று இன்னொரு ராணுவ அதிகாரியும் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் ஒரு கட்சியால் 'பாவமன்னிப்பு' கொடுக்கப் பட்டுள்ள தோழரும் சொன்னதை நம்பி அல்லவா எழுந்து சென்றார்கள். அந்த 'எந்தப் பாவமும் அறியாத 25 பேரும் கூட' 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பாததை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. செம்மணியில் 'குழந்தைகளின் எலும்புக் கூடுகளும்' தோண்டி எடுக்கப் படுவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாக்களுடன் அரியாலை, கைதடி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அப்பா, சில வேளை அம்மாக்களுடன் இராணுவத்தால் பிடிக்கப் பட்டு இப்போது புதை குழிகளில் இருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப் படும் அந்தப் பிஞ்சுகளுக்கும் அஞ்சலி! 💐" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te3/1/16/1f490.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌸" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf0/1/16/1f338.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💮" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t70/1/16/1f4ae.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4e/1/16/1fab7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🏵" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f3f5.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌹" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f339.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌺" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t99/1/16/1f33a.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌻" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f33b.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌼" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9b/1/16/1f33c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6f/1/16/1f337.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">(அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் சுமார் 35 வயதைத் தொட்ட நடு வயது ஆண்களாக, பெண்களாக மருத்துவராக, பொறியியலாளராக, ஆசிரியர்களாக இன்ன பிற பதவிகளில் இருந்திருப்பார்கள்)
கீழே உள்ளது வேறு ஒருவர் எழுதிய பதிவு:
------------------------------------------------
முன் சைக்கிள் பார்ல எங்கள ஏத்திற்று பின்னுக்கு கரியல்ல அம்மாவ ஏத்திற்று அப்பா போவார் இது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் இப்படித்தான் பல குடும்பங்கள் செம்மணி தாண்டிப் போகும்போது இராணுவம் சோதனைக்கு என்று கூப்பிடும்.
அங்கு என்ன நடக்கும்?
அப்பாவையும் நிர்வாணமாக்கி அப்பா கண் முன்பே இராணுவம் அவர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வார்கள். ஒருவனா இல்லை; அத்தனை பேரும் கொடுமை செய்து கெடுப்பார்கள். பின் குடும்பத்தையே அடித்து கொன்று குழி தோண்டிப் புதைப்பார்கள் இது அங்கு வழமையாக நடந்தது.
ஒருவர் அல்ல இருவர் அல்ல ஒன்பது இராணுவமும் இரண்டு காவல்துறையும் சேர்ந்து பாடசாலை மாணவி கிருசாந்தியை வன் கொடுமை செய்ததாக அதே இராணுவ முகாம் இராணுவ சிப்பாயின் வாக்குமூலம் உள்ளது
உங்களுக்கு தெரியுமா?
கிருசாந்தியை தேடிச்சென்ற பக்கத்து வீட்டு அண்ணனையும், அவளின் தாயையும் சகோதரனையும் கொலை செய்யும்போதும் கூட அங்கு கிருசாந்தியை கூட்டு பாலியல் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.
கிருசாந்தியின் தாயையும் சகோதரனையும் மற்றவரையும் அவர்கள் அடித்துக் கொல்லும் போது நேரம் இரவு 10:00 மணி. கூட்டு பாலியல் செய்து முடிந்து கிருசாந்தியை கொலை செய்து புதைக்கும்போது நேரம் நள்ளிரவு 12:00
இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைக்கப்பட்ட இடம்தான் செம்மணி 😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😢" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te/1/16/1f622.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">
மறந்து வாழ ஆசைப்படுகிறீர்களா?
அப்படி வாழ்ந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும்
தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !!
கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்...
எல்லை மீறிய பாலகிருஷ்ணன் !
இனியும் பொறுத்துப் போதல் கூடாது !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு.
மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள்.
இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி.
அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி.
இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல.
(அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை.
மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது.
அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார்.
கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று
அல்ல.
மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.)
இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள்.
சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர்.
அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?
எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?!
இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம்.
இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு.
இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.
இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன்.
மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான்.
இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது.
இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள்.
ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர்.
ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது.
ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான்.
ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர்.
ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள்.
காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள்.
இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு.
இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது.
அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள்.
தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?!
அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது !
இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன்.
அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார்.
வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.
ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார்.
நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான்.
இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல்.
ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது.
இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம்.
இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல.
ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார்.
இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட...
வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ?????
என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?!
ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார்.
அது.....
சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம்.
வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!
சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?!
வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025
கடவுள்களை உருவாக்கியது கதைகளே...
https://www.facebook.com/share/v/16V6HsqRhi/
எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?
இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் இவை
1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?
இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம்.
தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார்.
தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை.
இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு. இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல் மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு.
இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா?
2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார். மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம்.
3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?'
இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால் நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப் படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில் ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத் தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று கருதுகின்றேன்.
4. 'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? ' தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக் காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம்.
அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இத்னைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.
இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக உறுதியுடன் செய்ற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்ம இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்ற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி.
Published By: DIGITAL DESK 3
30 MAY, 2025 | 04:46 PM
புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர்
தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது.
வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன.
புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது.
புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு,
- சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல்.
- இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல்.
- இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல்.
- “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல்.
தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது.
எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019).
தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன.
2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன.
இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது.
வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார்.
இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது.
- தனி சிகரட் விற்பனையை தடை செய்தல்
- எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
- முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்
- கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல்
- புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல்.
- சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்
- வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல்
- சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல்
- இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்
- NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.
அதில், மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, மஹிந்த ராஜபக்ஷ புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் கடுமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும்.
அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் 'இனம்' மற்றும் 'மதம்' போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் 'ரணவிருவாக்களை' (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) 'தரமிறக்கும்' விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார்.
போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் 'ரணவிருவா' (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக 'சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
தென்னாசிய கலாச்சார பாரம்பரியங்களை பொருத்தவரையில் போர் வீரர்களை 'வெற்றி வீரர்கள்' என வர்ணிப்பதும், அவர்களை அதிமானுடர்களாக கட்டமைப்பதும் வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வந்திருக்கும் இயல்பான ஒரு செயல். தமிழில் கலிங்கத்துப் பரணி தொடக்கம் கலைஞரின் 'பாயும் புலி பண்டார வன்னியன்' வரையில் அனைத்துப் போர் இலக்கியங்களும் இந்த ரணவிரு ' Concept' ஐயே முன்வைக்கின்றன. எவரும் அந்தப் போர் வீரர்களை வெறும் சிப்பாய்களாக பார்ப்பதுமில்லை; வர்ணிப்பதுமில்லை.
'இரத்தத் திலகம்' (1963) தொடக்கம் 'அமரன்' (2024) வரையில் திரையிடப்பட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும் 'ஜவான்களை' வீரமும், தேச பக்தியும் நிறைந்த உத்தம புரிஷர்களாக சித்தரித்துக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று சொல்லலாம்.
'எம்மைப் பொருத்தவரையில் அவர்கள் எமது தாய் மண்ணுக்காக போராடி உயிர் நீத்தவர்கள். வெறும் Soldiers அல்லது Officers அல்ல. தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசித்த ரணவிருவாக்கள். ஜனாதிபதி ஆனாலும் சரி அவர்களை இவ்விதம் சிறுமைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது' என்பது எதிர் தரப்பினர் ஆவேசத்துடன் முன்வைக்கும் வாதம்.
'டயஸ்போரா' புலிகளிடமிடமிருந்து காசு மற்றும் இன்னபிற காணிக்கைளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி மாபெரும் தேசத் துரோகத்தை இழைத்திருக்கிறார்' என கடும் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசியிருக்கிறார் விமல் வீரவங்ச -
"ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது மட்டுமன்றி, அவர் 'இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு', 'இறைமை' மற்றும் 'பிரிவினைவாத பயங்கரவாதம்' போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்........ இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது..........."
"டயஸ்போரா" புலிகளின் மனதை கொஞ்சமும் புண்படுத்தக் கூடாது என்ற கரிசனையுடன் நிகழ்த்தப்பட்ட உரை இது" என்கிறார் உதய கம்மன்பில.
மறுபுறம், 1983 வன்செயல்களைத் தூண்டிய முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மற்றொரு யூடியூப் சண்டியராக எழுச்சியடைந்திருக்கும் ராஜாங்கன சந்தாரதன தேரர் என்ற சர்ச்சைக்குரிய பிக்கு 'அடேய் அநுர, நீ புலிகளுக்கு ....... தை கொடுக்கும் துரோகி....... உன்னை நாங்கள் சும்மா விடப் போவதில்லை....' எனக் கடுமையாக ஜனாதிபதிக்கு அச்சுறுத்துல் விடுத்திருக்கிறார்.
தீவிர சிங்கள தேசியவாதிகள், அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (பலங்கொடை கஸ்ஸப தேரர் போன்ற) ஒரு சில முன்னணி தேரர்கள் மற்றும் பிரபல்யமான யூடியூபர்கள் பலரும் இது தொடர்பாக AKD ஐ கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்.
"கடும் மத வெறுப்பாளர்களான எமது ஆட்சியாளர்களும், அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில காவியுடை கயவாளிகளும் புத்த சாசனத்தையும், நமது இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்....."
"இதனைப் பார்த்துக் கொண்டு மகாநாயக்க தேரர்கள் வாளாவிருக்கக் கூடாது. 'இந்த ஆட்கள் இனிமேலும் நமது நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்க முடியாது' என்ற செய்தியை அவர்கள் மக்களுக்கு விடுக்க வேண்டும்" என்று ஆவேசத்துடன் பேசுகிறார் மட்டக்களப்பிலிருந்து சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் அம்பிட்டியே சுமனரதன தேரர்.
'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்' என்ற விதத்தில் சமூக ஊடகங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது.
வடக்கிலும், தெற்கிலும் வருடாந்த போர் நினைவேந்தல் நிகழ்வுகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சுயநல அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவிகளாக மாறி வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பின்னணியில், ஜனாதிபதியின் உரைக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கும் தென்னிலங்கையின் 'மாபெரும் தேசாபிமானிகளுக்கு' சவால் விடுக்கும் விதத்திலான ஓர் அங்கதக் குறிப்பு இது -
"சிங்களவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ சட்ட திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 'சிப்பாய்' (சொல்தாதுவா) என்ற சொல்லை நீக்கி விட்டு, 'ரணவிருவா' எனப் பெயரிடுவதற்கும், ரணவிரு நலன்புரிச் சேவைகளுக்கென ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒவ்வொரு சிங்களப் பிரஜையிடமிருந்தும் வருடாந்தம் ரூ. 1000/- ரணவிரு நினைவேந்தல் வரி ஒன்றை அரவிடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".
- பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி
மறுபுறம், வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது -
"...............மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்."
"இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்".
"இந்தத் தேர்தலில் பிரதான நீரோட்டத்திலிருக்கும் அனைத்து 'தேசியம்' பேசும் தமிழ் கட்சிகளும் அன்று 'மனிதக் கேடயங்களை விடுவியுங்கள்' என்று குரல் கொடுக்கவில்லை".
"மாறாக 'உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள்' என்று கூறி உசுப்பேத்தியவர்கள்".
"........கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கிறோம் என்பது எமது சமூகத்தின் அவலம்............."
"உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், நினைவுச் சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ எதிர்காலம் நாசமாய் போன எங்கள் இனம் பற்றியதோ அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது".
"அது வேண்டுமென்றால் உங்களுக்கான வாக்கு வங்கி சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்."
"தீர்வுகளை, அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் உள்ளுக்குள்ளே தான் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி தந்திரோபாயங்கள் மூலம் (கடந்த காலத்தில் தவறவிட்டது போல அல்லாது) பெற்றுக்கொள்ள வேண்டும்."
ஒரே வரலாற்று நிகழ்வுக்கு இரு தரப்புக்கள் வேறு வேறு வியாக்கியானங்களை வழங்குவதை 'Contested Histories' என்று சொல்வார்கள். இலங்கையை பொருத்தவரையில் 1956 ஆட்சி மாற்றத்தையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரையும் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் நோக்கி வருகின்றன.
2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் மாபெரும் இனப் படுகொலை என வர்ணித்து, அங்கு மரணித்தவர்களுக்கு வருடாந்தம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில், தெற்கு சிங்கள தரப்பு அதனை ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டமாக பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றது.
ஆனால், இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு 'Paradigm Shift' ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் -
".....இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்..........."
".........தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ......... தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை........... நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்................ அதில் எந்தத் தவறுமில்லை."
- அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க
"இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை"
"தவறுகள் தொடர்ந்தால் வரலாறு மன்னிக்காது"
மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் குறித்து NPP யிடமோ அதன் மூலக் கட்சியான JVPயிடமோ தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லை
மாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளையானை என்பது அவர்களின் கருத்து.
எனினும் அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் இருப்பதனையும், தமிழ் மக்கள் அதனை போராடிப் பெற்றனர் எனவும் தோழர் அநுரமார திஸ்ஸநாயக்கா கூறியிருந்தார்.
இப்போ ஜனாதிபதியானதன் பின் அவர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவாரா என்பது தெளிவாகவில்லை.
முன்னைய மாகாண சபைத் தேர்தலில் JVP போட்டியிட்டாலும் கொள்கை ரீதியாக மாகாண சபையை எதிர்த்தது.
இதே நிலைப்பாட்டையே அகில இலங்கைத் தமிழ்காங்கிரசும், தமிழ்த்தேசிய முன்னணியும் கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவது ஆனால் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பது.
இங்கே மாகாண சபை வெறும் கோதா அல்லது முட்டையா என்ற விவாதம் தொடரட்டும். ஆனால் அரசியல் அமைப்புச்சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தில் இருப்பது மாகாணசபை முறை மட்டுமே.
இந்த அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு கதையை நம்பி மாகாண சபைமுறைமையினை தமிழ் கட்சிகள் விட்டுவிட வேண்டாம் என, இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் தயான் ஜெயத்திலக அண்மையில் கூறியிருந்தார்.
1980களில் இருந்து 2009 வரை பல தைப்பெங்கல்கள், தீபாவளிகளை கடந்துவிட்டோம். இன்னும் கனவில் கூட தமிழ் ஈழத்தை காணவில்லை.
விடுதலைப் பொராட்டத்தில் இணைந்திருந்த போது இந்த நம்பிக்கையை பலருக்கு விதைத்து அவர்களின் வாழ்வை சிதைத்த வேதனை என்போன்ற பலரின் மனதை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஆக சுயநிர்ணய உரிமை, சமஸ்டி, ஒருநாடு இரண்டு தேசம் என்பவற்றிற்காக போராடுபவர்கள் போராடட்டும். கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம்.
ஆட்சியாளர்கள் கூறியதை முழுமையாக தந்தார்களா? தருவார்களா? என்ற கேள்விகளுக்கு அப்பால் அவர்கள் தருவதாக கூறியவற்றை நாம் நிராகரித்துள்ளோம் என்பது முக்கியமானது.
ஒருவேளை சர்வதேசத்தையும், பிராந்தியத்தையும், தமிழ் மக்களையும் திருப்த்திப்படுத்த NPP அரசாங்கம் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தரப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? என்பது குறித்து சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் கொடுத்த படிப்பினைகளை கருத்தில் எடுக்காததன் பயனை தமிழ்க் கட்சிகள் அனுபவிக்கின்றன.
குறிப்பாக உள்ளுராட்சி சபைகளிள் தனித்து ஆட்சியமைக்க முடியாது ஆதரவுக்கரம் நீட்டி அவை அலைகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை ஒற்றுமையை புறந்தள்ளியதால் வடகிழக்கின் பெருமாபாலான சபைகள் தொங்குகின்றன.
மாகாணசபைத் தேர்தலிலும் இந்த துர்ப்பாக்கிய நிலையை உணராவிட்டால் மாகாண சபையும் தொங்கும் சபையாகும் என்பதில் சந்தேகம் இல்லை்
குறிப்பாக மாணாக சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர், ஒருமித்த நிலைப்பாட்டடைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக இருப்பது காலத்தின் அதி முக்கிய தேவையாக இருக்கிறது.
அந்தப் பொது வேட்பாளர் அதிகார மைய்யத்தின் சேகராக, அடிமையாக, விலைபோகும் ஒருவராக, சொந்த நலனை முதன்மைப்படுத்துபவராக, தற்துணிவு அற்றவராக, முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாதவராக, அரசியல் அறிவும், நிர்வாக திறனும் ஒருங்கே அமையப்பெற்றவராக இல்லாதிருப்பின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதில் பயனில்லை.
கடந்து போன வடக்கு கிழக்கின் மாகாண ஆட்சிமுறை சிறந்த பாடத்தை மக்களுக்கு புகட்டிச் சென்றுள்ளது.
இதுவைரை இருந்த மாகாண ஆட்சிகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என அதனை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
மிகக் குறுகிய காலமே இணைந்த வடகிழக்கு மாகாண சபையை ஆட்சிபுரிந்த EPRLF அதன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், மாகாண சபையின் முக்கியஸ்த்தர்கள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.
ஆனால் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிய விதம், அந்தக் கட்டமைப்புக்கான அதிகாரிகளை தேர்வுசெய்த முறைமை, செயல்திறனும், நிர்வாக திறனும் உடைய சிவில் நிர்வாக அதிகாரிகளை அமைச்சுக்கள், திணைக்களங்களில் இணைத்தமை குறித்து நல்ல அபிப்பிராயம் இருந்தது.
நேரடியாக டில்லியும், தீக்ஸித்தும் ஜே.ஆர் ஜெயவர்த்தனவையும், அவரது அமைச்சரவையையும் கட்டுப்பாட்டுள் வைத்திருந்ததோடு, அமைதிப்படையும் மாகாண கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்திருந்தன.
இவை இருந்தாலும் அரசியல் ஆளுமையும், நிர்வாகத் திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும், தற்துணிவும் இல்லாத முதலமைச்சர் கதிரைக்கு பாரமாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டு இருக்காது. குறிப்பாக போகும் போது தமிழீழ பிரகடனத்தையும் செய்திருக்க முடியாது.
அதிகாரத்தை பரவலாக்க விரும்பாத, இனவாத அரசாங்கங்களோடு முட்டி மோத வேண்டியகதிரை முதலமைச்சர் கதிரை.
அதனால் முதலமைச்சர் வேட்பாளர் தனியே புத்திஜீவியாகவோ, அரசில் மோதாவியாகவோ, நீதிபதிகளாகவோ, அல்லது அரசியல் பின்புலம் அற்ற நிர்வாக அதிகாரியாகவோ இருப்பதனால் மட்டும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நிர்வகிக்க முடியாது. ஆட்சிபுரிய முடியாது.
அதற்கு அரசியல் புன்புலமும், அரசியல் அறிவும், நிர்வாகத் திறனும், மொழி ஆற்றலும், அர்ப்பணிப்பும் மக்கள் மீதான கரிசனையும் உடைய ஒருவரையே தேர்வுசெய்ய வேண்டும்.
அவரை கண்டுபிடியுயுங்கள். அவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொதுவாட்பாளராக நிறுத்துங்கள்.
இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை. மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் வரலாறு எம்மை மன்னிக்காது. #ஞாபகங்கள்
All reactions:
5656
எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்.
ஓரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள 'டோம்போரோ' தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன.
எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள்.
அதேபோல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. எரிமலை வெடிக்கும்போது, ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த பல ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தால் வெளிப்படும் அழிவு சக்தியைவிட, அதிக அழிவு சக்தியை அது வெளிபடுத்துகிறது.
அப்படி எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படுவதை உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, மக்கள் தப்பித்துகூட ஓட சந்தர்ப்பம் தராமல் நிறைய உயிர்களை அழித்திருக்கின்றன.
எரிமலை வெடிக்கும்போது டன் கணக்கில் எடையுள்ள பெரிய எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷ வாயுக்களைக் கொண்ட மேக மூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன.
பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தினால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்த தீக்குழம்ப்பு சுற்றி இருக்கும் எல்லா இடங்களுக்கும் பரவி அனைத்தையும் எரித்துவிடுகிறது.
இப்படி அழிக்கும் எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு அழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் கொண்டுவந்து சேர்ப்பது எரிமலை வெடிப்பால்தான் நடக்கிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது. உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி, அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ வைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.
பூமிக்கு வெகு ஆழத்திலிருக்கும் பல தாதுப்பொருள்கள் வெளியே தூக்கி எறியப்படுவதால், பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன் படுகின்றன. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை மனிதனால் வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் பெரும் நன்மைகள்.
- உங்களில் ஒருவன். -
அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு---
”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
சரி- ஏற்கிறோம்--
A) ஆனால், யாழ்ப்பாணம் -நகதீவ எனவும் திருகோணமலை -பெற்றிக்கோட்டை என்றும் தமிழ் வரலாற்று பாடநூலில் சிங்களப் பெயர்களாக ஏன் மாற்றினீர்கள்?
B) சிங்கள இனவாதம் பாடநூலில் ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
C) வரலாற்று பாடநூலை பௌத்த தேரர்கள்தான் எழுதுகின்றனரே! தமிழ் வரலாற்று பாடநூலுக்கும் அது மொழி பெயர்க்கப்படுகிறதே!
D) இன அழிப்பு என்பது மக்களை கொல்வது மாத்திரமல்ல. அந்த மக்களின் மரபுரிமைகளை அழித்தல், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள், வரலாற்றுத் திரிபுகள், சமயத்தை வரலாற்று பாடநூலில் புகுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இன அழிப்புத்தான்.
கீழே சில கேள்விகள் - விளங்கங்கள் உண்டு. பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.
------ -----
நீங்கள் உட்பட சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு என்வென்றால், விடுதலைப் புலிகளுடன் நடத்த போரை மாத்திரம் வைத்தே இனப் பிரச்சினை விகாரத்தை நோக்குகின்றீர்கள்.
ஆனால், தமிழர்கள் கோருகின்ற “இன அழிப்பு” நீதி விசாரணை என்பது, 1956 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா படுகொலையில் இருந்து 1958 ஆம் ஆண்டு கொழும்பு கலவரம் உள்ளிட்ட 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நீடித்து, பின்னர் கடந்த 15 வருடங்களில் காணி அபகரிப்பு - சிங்கள குடியேற்றம் - தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய வரலாற்று மற்றும் சிங்களச் சொற்கள் திணிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து வர வேண்டும்.
குறிப்பாக 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கம் உடைந்து, 1921 இல் தமிழர் மகாசபை உருவானதில் இருந்து, ஏறத்தாள நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் இது.
ஆனால், நீங்கள் உட்பட சிங்கள தலைவர்கள் அனைவருமே, இந்த விவகாரத்தை மிக இலகுவாக ”தமிழ் இனவாதம்” என்றும் புலிகளின் பயங்கரவாதம் எனவும் சித்தரித்து மூடி மறைக்கின்றீர்கள்.
2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறுகின்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயரில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
A) யாழ்ப்பாணம் - நகதீவ
B) திருகோணமலை - பெற்றிக்கோட்டை
C) யாழ். ஊர்காவற்துறை -சூக்கிரசித்த,
D) யாழ். கந்தரோடை - கந்துருகொட.
E) காங்கேசன்துறை - ஜம்புகோள பட்டுன
F) கதிர்காமம் - கஜராஜகம அல்லது கத்தரகம.
அதேவேளை ----
1) அரச செயற்பாடுகள் - ரஜகரிய
2) கிரமாத் தலைவன் - தமிக
3) குடும்பத் தலைவன் - குர்கபதி
4) கிராம சேகவர் - கிராம நிலதாரிய ----
என்ற சிங்கள சொற்கள் தமிழ் வரலாற்று பரீட்சை வினாத் தாளில் உண்டு.
ஐ.நா.கல்வித் திட்ட யுனெஸ்கோ விதிகளின் பிரகாரம், பாடநூல்கள் அந்த அந்த மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். அதுவும் வேறொரு இனத்தின் வரலாற்று பாடநூலில், இன்னொரு சமய வரலாற்றை புகுத்த முடியாது.
ஒரு நாட்டில் எத்தனை தேசிய இனங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு தேசிய இனங்களின் வரலாறுகளும் சமநிலையில் பாடநூலில் வர வேண்டும்.
ஆனால் இலங்கைத்தீவில் அப்படியல்ல.
அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 மைத்திரி - ரணில் என்று மார்தட்டிய, நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கமே, வரலாற்று பாடநூல்களில் சிங்கள சொற்களை புகுத்தியது.
எழுத இன்னும் ஏராளம் உண்டு. இவை சில உதாரணங்கள் மாத்திரமே.
ஆனாலும் மேலும் சில குறிப்புகள்--
1) யாழ்ப்பாண இராஜியம், வரலாற்று பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2) திருகோணமலை கந்தாளாய் குளம் குளக்கோட்ட மன்னன் கட்டியது. ஆனால் அக்கபோதி மன்னன் கட்டியதாக பாடநூலில் மாற்றப்பட்டுள்ளது.
-- சோழகங்க தேவன் என்ற இயற்பெயரையுடைய குளக்கோட்டன் என்ற மன்னன், இலங்கைத்தீவின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசத்தை ஆட்சி செய்தான்.
--- திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று கோணேசர் கல்வெட்டில் உண்டு. ஆகவே எக் காரண - காரிய அடிப்படையில் அக்கேபோ மன்னன் என்று மாற்றினீர்கள்? ----
சரி - யாழ்ப்பாணம் என்ற வரலாற்று பெயரை - நகதீவ என்றும், தமிழர்களின் புராதன நகரமான திருகோணமலை என்ற பெயரை பெற்றிக்கோட்டை எனவும் யாரைக் கேட்டு மாற்றினீர்கள்?
1983 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் சிங்கள அரச அதிபரை திருகோணமலைக்கு நியமித்தது முதல் இன்று வரை அங்கு எத்தனை சிங்களக் குடியேற்றங்கள்?
சில்வா என்ற அரச அதிபர் திருகோணமலையின் தமிழ் இன விகிதாசாரத்தை மாற்ற வரைபடம் வரைந்தவர். சில்வா பற்றி அமரர் சம்பந்தன் 2006 இல் நாடாளுமன்ற உரை ஒன்றில் விளக்குகிறார்.
நன்றி-
அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்
கொழும்பு-
Published By: RAJEEBAN
19 MAY, 2025 | 11:26 AM
படம் - 2006 செப்டம்பர் மாதம் முகமாலையில் இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலின் பின்னர் ஏ9 வீதியில் காணப்பட்ட பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் வெடிபொருட்கள்
I do not see the war in Sri Lanka as a victory
நாங்கள் முன்னர் வெற்றி என அழைத்தது உண்மையில் மௌனமான ஒரு தருணம், காயங்களை ஆற்றுவதன் மூலம் இடம்பெறாத ஒரு விடயம், ஆனால் சோர்வின் மூலம் சாத்தியமான ஒரு விடயம்.
இது அமைதியின் விடியல் இல்லை, மாறாக உயிர்பிழைத்தலின் நிழல்.
யுத்தம் ஈவிரக்கமற்ற தன்மைக்கு முடிவை காணவில்லை, மாறாக அதனை இயல்பான விடயமாக்கியது. அது ஒரு தலைமுறைக்கு உடைந்த இதயங்களுடன் வெற்று நம்பிக்கைகள் மற்றும் சொல்லப்படடாத துயரங்களுடன் வாழ கற்றுக்கொடுத்தது.
மிகவும் அடிப்படையான மனித பண்புகளான இரக்கம், சமத்துவம், கண்ணியம் ஆகியவை சுயநலம் மற்றும் பயத்தின் கீழ் புதைக்கப்பட்டன.
தேசிய ஒற்றுமை என்ற பெயரில், வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள், தேசபக்தர்கள் துரோகிகள் நினைவில் இருப்பவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் என புதிய சமூக பிளவுகளை உருவாக்கினோம்.
இந்த அடையாளங்கள் உண்மை அல்லது நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. மாறாக விலக்கிவைத்தல் என்ற பலவீனமான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டன.
பதினைந்து ஆண்டுகளின் பின்னரும் இலங்கையில் நாங்கள் இந்த மரபினால் துயரங்களை அனுபவிக்கின்றோம்.
இனம், மதம் அல்லது பிராந்தியத்தை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பிரஜையும் சமமாக பங்கேற்கவும், சுதந்திரமாக பேசவும் கண்ணியமாக வாழவும், அனுமதிக்கும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப தவறிவிட்டோம்.
வீதிகளை அமைத்துள்ளோம். ஆனால் நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை.
தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஆனால் பொறுப்புக்கூறலை இன்னமும் உருவாக்கவில்லை.
இறந்தவர்களை எண்ணிவிட்டோம். ஆனால் உயிருடன் உள்ளவர்களை இன்னமும் செவிமடுக்கவில்லை.
போரின் உளவியல் காயங்களை நாங்கள் உண்மையிலேயே குணப்படுத்திவிட்டோமா?அந்த காயங்கள் தொடர்ந்தும் மாறாமலிருப்பதாக நாம் நினைத்தால் நாங்கள் ஏன் இன்னமும், வெற்றிக்காக செலுத்திய விலையை பற்றி சிந்திப்பதற்கு பதில் யுத்தவெற்றியை கொண்டாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்?
நாம் இன்னமும் மௌனத்தை அமைதி என்றும், ஒழுங்கை நீதி என்றும் தவறாக புரிந்துகொள்கின்றோம்.
போர் முடிவடைந்து மற்றுமொரு ஆண்டை நாங்கள் குறிக்கும் இந்த தருணத்தில்வென்று நிலம் கொள்ளுதலை கொண்டாடுவதை தவிர்ப்போம். பணிவுடனும் நேர்மையுடனும் நாம் சிந்திப்போம்.
ஒவ்வொரு இலங்கையரும் தனது சொந்த வீட்டில் இருப்பதாக உணரும்போதுதான், உண்மையான வெற்றி கிடைக்கும், எந்த சமூகமும் அச்சுறுத்தலானதாக காணப்படாமலும், எந்த பிரஜையும் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக உணராமல் இருக்கும்போதுதான் உண்மையான வெற்றி சாத்தியம்.
அதுதான் நாங்கள் ஒருவருக்குகொருவர் கடன்பட்டிருக்கும் அமைதி, அதுதான் நாம் இன்னமும் வெல்லப்படாத சுதந்திரம்.
இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக...
தற்கொலைகளைத் தடுக்க முடியாதா ? 🤔">Let’s Talk Mental Health with Dr.Sivathas
In this powerful and thought-provoking video, Prof. Selvam Kannathasan sits down with a respected clinical psychologist Dr.S.Sivathas to discuss the growing issue of suicide among young people and the critical importance of mental health awareness in today’s world. Drawing from real-life experiences and professional insight, they explore the emotional struggles faced by youth and how society can respond with empathy, understanding, and support.
Dr.Sivathas emphasizes the need to recognize mental health as a vital part of overall well-being—especially during the formative years of life. The conversation highlights how timely intervention, open dialogue, and emotional education can save lives and empower young minds to navigate challenges with strength and resilience.
Watch this video to understand why mental health matters, how we can break the stigma, and what we can all do to create a safer, more compassionate future for the next generation.
ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது.
இந்த யுத்தம் முடிந்த பின், 16 வருடங்களின் பின்னும், இந்த நாடு வளர்ச்சிப்பாதையில் போகாமலும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் குரல்களை அசட்டை செய்தும் கொண்டிருக்கின்றதென்றால், நிச்சயம் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டங்களினால்தான் அந்த நாடு உருப்படாது போனது என்று மனச்சாட்சியுள்ள எந்த இலங்கையரும் இனியும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். மாறவேண்டியதும்/மாற்றவேண்டியதும் இந்த அரசு/அரசாங்கங்கள் கொண்டிருக்கின்ற சிந்தனைகளையும், அவர்களினூடு ஏதோ ஒருவகையில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதத்தையுந்தான். போர் முடிந்து வருகின்ற தேர்தல்களில் பெரும்பான்மை ஆட்சியமைக்கின்ற ஒவ்வொரு சிங்களக் கட்சிக்கும் இனப்பிரச்சினையை எளிதாகத் தீர்க்கின்ற தீர்ப்புக்கள் மக்களால் அளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அரசமைக்கும் அவர்கள் கோருவதோ இதையெல்லாம் மறந்து 'இலங்கையர்கள்' என்ற ஒற்றைக்குடைக்குள் வந்தால் எல்லாமே மறக்கப்பட்டு நாடு சுபீட்சம் அடைந்துவிடும் என்பதாகும்.
இன்றைய ஜேவிபி கூட்டு அரசின் ஜனாதிபதியான அநுரவே அடிக்கடி தமது கொல்லப்பட்ட தோழர்களை, தமது இயக்கம்/கட்சி எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை நினைவுபடுத்தித்தான் பேசிக் கொண்டு இருக்கின்றார். கடந்தகால அரசுக்களால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு மட்டுமில்லை, உங்கள் தோழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் பொதுமன்றில் கொண்டுவருவதற்கு இதைவிட வேறொரு அரிய தருணம் எதுவுமில்லை என்று நீங்கள் அறிவீர்கள். மேலும் நீங்கள் இன்று ஏறிநிற்கும் ஜனாதிபதி என்ற அரியாசனம் கூட, கொல்லப்பட்ட உங்கள் தோழர்களின் புதைகுழிகளின் மேல்தான் இருக்கின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
எது நடக்கின்றதோ/ இல்லையோ நாம் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை தொடந்து நினைவுபடுத்தியபடி இருப்போமாக.
அது சுடரேந்திய தொடரோட்டம்!
**"
(படம்: நன்றி இணையம்)
இளங்கோ டிசெ
https://www.facebook.com/share/p/18nQv9Ccnr/?mibextid=wwXIfr
ஏன் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது தெரியுமா? – வைரலாகும் எக்ஸ் பதிவு..
Devika ManivannanUpdated: Wednesday, May 14, 2025, 17:54 [IST]
10 மற்றும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் வாயிலாகவே அவர்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர மலை பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஸ்வெட்டர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை கல்வித்துறையில் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.
போக்குவரத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு ,1990 இலே அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பொதுவாக பெண் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்கிய காலகட்டத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது .
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அதேபோல மூவலூர் ராமாமிர்தம் அம்மா நினைவு திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிலேயே மணமகள் எட்டாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இது 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மணமகள் என்றால் பத்தாயிரம் ரூபாயாகவும் 2010 ஆம் ஆண்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
1973 ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக பெண்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். 1990இல் அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு இங்கு தான் வழங்கப்பட்டது. பெண்களுக்கு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் திட்டம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் .
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்டவையும் தமிழ்நாட்டில் தான் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய முதல் மாநிலமும் தமிழ்நாடு தான் என தமிழ்நாட்டின் முன்னோடியான திட்டங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் லைக்கையும் பெற்றுள்ளது.
சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க.
ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்....
ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்...
ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு...
ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க...
ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க...
இன்று இலங்கையில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகளை ஆராய்கிறார்கள் SINNAKUDDY TV யில்