எங்கள் மண்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03

1 day 20 hours ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 03 / 'புத்தர் தனது முதல் இரண்டு வருகைகளின் போது, இலங்கையின் பூர்வீக குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, உண்மையில் ஒரு பயங்கரவாதியாக நடந்து கொண்டாரா?'

புத்தர் தனது முதல் வருகையின் போது இலங்கையின் பூர்வீக குடிமக்களைப் பயமுறுத்தினார். மேலும் அவர்களை வேறு ஒரு தீவுக்கு, திரும்பி வர முடியாதவாறு கட்டாயப்படுத்தி துரத்தினார். புத்தரின் இந்த செயல்கள் மற்றும் தந்திரோபாயங்களால், அவர்கள் மிகவும் பயந்தனர்; அவர்கள், புத்தரால் காட்டப்பட்ட வேறு ஒரு தீவுக்கு திரும்பி பார்க்காமல் ஓடினார்கள்.

இரண்டு நாக இளவரசர்களுக்கு இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே துறந்தவர். அது மட்டும் அல்ல, பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும், அதை ஏற்காதவர் அவர். அதாவது, இரு தரம் அரியணையை துறந்தவர். எப்படி இதற்கு உரிமைகோருவார்?. யாராவது, சொந்தபுத்தி உள்ள மற்றும் உண்மையான புத்த தர்மத்தை அறிந்த சமய வாதிகள், இதற்குப் பதில் சொல்லட்டும்.

இதே போன்ற நிகழ்வு தமிழ் காவியமான ‘’மணிமேகலை’ யிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மரியாதையுடன் இங்கு அது முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஏனேன்றால் அந்தப் பிரச்சனை சிம்மாசனத்துக்காக அல்ல, புத்தர் அமர்ந்து உபதேசம் செய்யும் இருக்கைக்காக மட்டுமே. இரண்டு நாக இளவரசர்களில் எவராலும் அதை தூக்கி எடுக்க முடியவில்லை, அதே நேரத்தில் அதற்காக சண்டையை நிறுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. அவ்வேளையில் தான் புத்தர் வந்து, அவர்களின் சண்டையை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து அவர்களுக்கு உபதேசித்தார் என்கிறது தமிழில் பொது ஊழி (CE) ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட மணிமேகலை.

மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், கல்யாணியை ஆட்சி செய்த நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது. எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்?

மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும். ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அல்லது இந்தியா புராணங்களிலோ அது என்றும் பதியப்படவில்லை.

பிந்தைய அத்தியாயம் ஒன்றில், மன்னன் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தீசன் மகிந்த தேரரிடம் பல தேரர்கள் அங்கு இருக்கிறார்களா என்று விசாரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது! தீபவம்சம் 12-55 மற்றும் மகாவம்சம் 14-13 யை இது சம்பந்தமாக பார்க்கவும். புத்தரின் மூன்றாவது இலங்கை வருகையின் போது அவருடன் ஐந்நூறு தேரர்கள் பறந்து வந்த அந்த பயணத்தை எப்படி மறந்தார்களோ நான் அறியேன் பராபரமே! ஒருவேளை மன்னருடன் மக்களும் மிகக் குறுகிய நினைவுகள் கொண்டவர்களாக இருக்கலாம்?. மேலும் இராசாவலிய நூலில், புத்தரின் இலங்கை வருகை பற்றிய கால விவரங்களில், சிறிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', என்ற குறிப்பின்படி, புத்தர் மத்திய கங்கை சமவெளியிலும் அதைச் சுற்றியும் முன்னும் பின்னுமாக நடந்து, குறுக்கே நடந்து, மிகக் குறைந்த பகுதியில் அறிவுரை வழங்கினார் [உபதேசித்தார்]. கல்கத்தாவிலிருந்து பெனாரஸ் மற்றும் அலகாபாத் வழியாக, இன்றைய டெல்லியின் கிராண்ட் டிரங்க் சாலையின் [Grand Trunk Road] தெற்கே வரை கூட அவர் அன்று வரவில்லை என்கிறது அந்த வரலாற்று ஆய்வு நூல்.

புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள். சித்தார்த்தா என்பது பிறக்கும்போது அல்லது பிறந்த சிறிது நேரத்திலேயே கொடுக்கப்பட்ட பெயர். புத்தர் மிகவும் நேர்மையான மற்றும் அற்புதமான மனிதர், சோகம், துன்பம் மற்றும் மனித வாழ்க்கையில் சிக்கிய அவலங்கள் ஆகியவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிக்க பாடுபட்டார். இளவரச வாழ்க்கையின் சுகங்களை அறிந்த ஒரு நபராக இருந்தும், அவ்வற்றை முற்றாக துறந்த ஒருவர். அவர் நாடு அல்லது மொழி என்பனவற்றில் சிக்காமல், அதை பொருட்படுத்தாமல் ஒரு உலகளாவிய ஆசிரியராக இருந்தார். மேலும் ஒரு புதிய மதத்தை உருவாக்க அவர் என்றும் கூட நினைக்கவில்லை. இருப்பினும், மனுவின் கோட்பாட்டில் உள்ள அசிங்கமான நிலை அளவுக்கு இல்லாவிட்டாலும், அவர் ஒரு சாதி அமைப்பை நம்பியதாகத் தோன்றுகிறது. இந்த புத்தரின் உண்மையான குணத்தை, இயல்பை வைத்து, அவர் எந்த நேரத்திலும் தீவிரவாதியாக, பயங்கரவாதியாக இருந்து இருப்பாரா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Part: 03 / 'Is really The Buddha behaved as a terrorist to strike fear in the original inhabitants of Lanka on his alleged first two visits?'

He terrorised the original inhabitants of Lanka in his first visit, and uprooted them to another island, never to return. They were so terror stricken because of the Buddha’s actions and tactics; they ran to the other island shown to them. The Buddha struck fear and terror in the two Naga (serpent) princes, uncle and nephew, and in their soldiers who were fighting for a throne in his second visit. He obtained the throne for himself. It is sacrilege on his character, as he renounced his legitimate throne and another throne offered to him by a contemporary king, Bimbisara. Having renounced throne twice, would he have claimed any throne, which did not belong to him? Similar event is described in the Tamil Epic ‘’Manimekalai’, and it respectfully ended the issue. It was not for a throne but for a seat on which the Buddha used to sit and preach. Any one of the two Naga princes could not take it, at the same time unwilling to stop fighting for it. Then the Buddha came, sat on it and preached them.

The Buddha came, by flying, with five hundred Theras on his third visit to Lanka on the invitation of the Naga (Serpent) king at Kalyani. One may wonder how the Serpent king sent an invitation to the Buddha who was more than one thousand five hundred travel miles away! One high school geography textbook indicates the sea travel distance from Calcutta to Colombo as two thousand three hundred Kilometres. Five hundred Theras too flew along with the Buddha. It would have been a spectacular sight to see the five hundred and one to fly! In a later chapter, the king Devanampiya Tissa would inquire from Mahinda Thero whether many Theros were there! See 12-55 of the Dipavamsa and 14-13 of the Mahavamsa in this regard. People, along with the king, had very short memories to forget the flying visits of the five hundred Theros who accompanied the Buddha on his alleged third visit to Lanka. There are minor differences in details about time of Buddha’s visits in the Rajavaliya.

But as per the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', The Buddha preached in a very limited area, walking back and forth and crisscrossing, in and around the central Gangetic plain. He never came down far south of the present day Grand Trunk Road from Calcutta to Delhi via Benares and Allahabad '.

The Buddha means the person who attained enlightenment. Siddhartha is the given name at birth or shortly after the birth. The Buddha is a very sincere and wonderful person who strived to find answers for tragedy, suffering, and sadness entangled with human life. A person, who knew the comforts of the princely life, renounced it never to return. He was a universal teacher, irrespective of the country or the language, and never intended to create a new religion. However, he seemed to have believed in the caste system, though not to the ugly level as in the Code of Manu. With these Buddha's real character, please think, whether He would have terrorist any one at any time?

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 04 தொடரும் / Will Follow

511014401_10229693355780940_731997098414

510817867_10229693355660937_865200700124

510746560_10229693355820941_699716966622


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

5 days 22 hours ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 02 / 'புத்தரின் வருகைக்கு முன்பே இலங்கையில் மனித இனம்'

புத்தர் நிர்வாணம் அடைந்து, அதாவது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை நீக்கி, ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வான்வழியாகப் பறந்து, இலங்கைக்கு தன் முதல் வருகையை நிகழ்த்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், புத்தர் எங்களைப்போல் ஒரு மனிதர், கட்டாயம் தன்பாட்டில் இலங்கைக்கு பறந்திருக்க முடியாது. பௌத்தர்கள் அதை நம்புவது அவர்களைப் பொறுத்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து, புத்தருக்கு முன்பே, அனுமன் ஒரு மலையைச் சுமந்து இலங்கைக்கு பறந்தார் என்று இன்னும் பல இந்துக்கள் நம்புவது போல, அவர்களும் நம்பலாம். அவ்வளவுதான்! மற்றும்படி அது உண்மை நிகழ்வாக இருக்க முடியாது. ஆனால், இந்துக்கள் அதன் அடிப்படையில், இலங்கை தமக்கே உரிமை என்று என்றும் கோரவில்லை.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' பக்கம் 8ல் தெளிவாகக் கூறுகிறது, 'எந்த நேரத்திலும் அவர் (புத்தர்) காசி [வராணசி / பெனாரஸ்] யில் இருந்து 250 மைல்களுக்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிடுகிறது. புத்தர் பறந்து இலங்கைக்கு வந்த பயணங்கள் உண்மையற்றதுடன் வரலாற்று சிறப்புகள் கொண்டதும் அல்ல. அவரது முதல் வருகையின் நோக்கம், அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த உயிரினங்களை அகற்றுவதன் மூலம், இலங்கையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தரின் காலத்தில், இலங்கையில் கோரமா [கோரமான விலங்குகள்] போன்ற இயக்கர்கள், அரக்கர்கள், போன்ற மனிதனுக்கு கீழான உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுவது பரிதாபகரமான பொய் ஆகும். புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான பல தொல்பொருள் சான்றுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் சில மாதிரிகள் கீழே தரவுள்ளேன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் காலத்தில், இயக்கர், அரக்கர், பூதம் [Yakkhas, Rakkhasas and Bhutas] போன்ற உயிரினங்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறுவது, அறிவியல் ரீதியான பரிணாமக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' என்ற நூலில், சுமார் 174 செமீ (ஐந்தடி எட்டரை அங்குலம்) உயரம் கொண்ட பலாங்கொட மனிதன் சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்ததாக கூறுகிறது. அவரது எலும்புக்கூடு 1950 களில் கண்டு பிடிக்கப்பட்டது. 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001' என்ற நூலின் பக்கம் 77 இன் படி இது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதனுக்கு உடையது என்கிறது. 'உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்' [‘First Farmers in Global Perspective’] என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திரு. ஆர். பிரேமதிலகாவின் ஆய்வு கட்டுரையில்: "குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி உள்ளிட்ட ஆரம்பகால இரும்புக் கால பண்பாட்டின் ஆரம்ப சான்றுகள், நாட்டின் புராதன நகரமான அனுராதபுரத்தில், கி.பி. 900 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதே தாளில்; பார்லி மற்றும் ஓட்ஸின் [barley and oats] ஆரம்ப மேலாண்மை ஹார்டன் சமவெளியில் [இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளி / Horton Plains] 15,500 B. C. இல் நடந்தது என்பது தெளிவாகிறது, இது விஜயனின் வருகைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத் தக்கது. மேலதிக குறிப்புகளுக்கு, 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake' என்ற ஆய்வின் கட்டுரையைக் பார்க்கவும். இது இந்தியாவின் லக்னோவில் நடந்த ‘உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 18 – 20 ஜனவரி 2006 இல் இந்த கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக. பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கா தனது ‘விஜயனுக்கு முந்தைய விவசாயம் [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] ’ என்ற கட்டுரையில், “இலங்கையில் 300,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இருந்தன என்று கூறுகிறது. மேலும் ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தீபகற்பத்தின் [தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம். தீவு போல் தோன்றும் தீவு அல்லாதது தீபகற்பம் ஆகும்] தென்கோடி முனைக்கு நடந்து பரவியிருக்கலாம். பின்னர் ஒரு காலம் அது பிரிந்து இலங்கையாக மாறியிருக்கலாம் என்கிறது. அதுமட்டும் அல்ல, இறுதிப் பிரிவிற்குப் பிறகும், கடல் மட்டம் குறையும் போதெல்லாம் தரைப்பாலங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 50,000 ஆண்டுகளில் படகுகள் மூலம் பாக்கு நீரிணை கடக்கப்பட்டு இருக்கும். எனவே தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மக்களிடையே தடையற்ற மரபணு ஓட்டமும் மற்றும் பாலியல் உறவுகள் அல்லது இனப்பெருக்கம் கூட நடந்து இருக்கும். தென்னிந்தியாவின் பாம்பன் கடற்கரையில் (இது தம்பபன்னி கடற்கரைக்கு நேர் எதிரே உள்ளது. தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும் என அறியப் படுகிறது) இருந்த இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் மற்றும் இலங்கையின் இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது.

இந்த இரண்டு கடற்கரைகளிலும், முத்து குளித்தலும் மற்றும் கடல் அடியில் உள்ள உற்பத்திப் பொருட்களும் எடுக்கப்பட்டன. இலங்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் சங்குகள் பெரியதாக இருந்தன, இது தென்னிந்திய மக்களை இலங்கைக்கு அழைத்து வந்திருக்கலாம்? பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கவின் கட்டுரை, விஜயனின் வருகைக்கு முன்னர் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய, மேல் அதிகமான தரவுகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake'' என்ற குறிப்பைப் பார்க்கவும். R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தனது குறிப்பில், ‘சிங்கள மக்கள் தென்னிந்தியாவின் தமிழர்கள் மற்றும் கேரளர்களுடனும், வங்காளத்தின் உயர் சாதிக் குழுக்களுடனும், குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் தொகையை விட நெருக்கமாக உள்ளனர்’ என்கிறது. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia , என்ற குறிப்பைப் பார்க்கவும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் 1980 களுக்கு முந்தியவை என்பதால், இந்த கட்டுரை 1970 களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்).

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.

உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.

Part: 02 / 'Human occupation in Sri Lanka before the alleged visits of Buddha'

The Buddha’s alleged first visit, by flying through air, to Lanka took place, as per the chronicles, nine months after his attaining Nirvana; the enlightenment. The Buddha was a human, and he could not have flown to Lanka. It is perfectly all right for the Buddhists to believe in it, as Hindus from India also believe that Hanuman flew to Lanka carrying a mountain in their Epic Ramayana. But the Hindus have never claim sole ownership over Lanka based on it as it happened as per epic, before Buddha’s alleged first visit.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' clearly says on page 8 that ‘At no time did he (Buddha) go farther than 250 miles from Benares. Buddha’s flying visits to Lanka are not true and have no historical merits. The alleged purpose of his first visit was to make Lanka fit for men by removing the beings existed at that time. It is a pathetic lie to say that there were sub-human beings in Lanka at the time of the Buddha, about 2500 years ago. There are many archaeological evidences for the human occupation of Lanka prior to the alleged visits of Buddha, and a few samples are given below. It is against the evolutionary concept to say that sub humans like Yakkhas, Rakkhasas and Bhutas inhabited Lanka about two thousand five hundred years ago, during the time of the Buddha.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' says that The Balangoda man of about 174 cm (five feet and eight and a half inch) in height lived in Lanka about 28,000 years ago. His skeletal remains were found in the 1950s. This belongs to an anatomically modern human as per the page 77 of Reference 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001'. Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’: “The earliest evidence of the Early Iron Age culture including horse breeding, iron production, and paddy cultivation found at Anuradhapura, ancient city of the country has been dated around 900 B. C.’. In the same paper, the author says; ‘It is clear that incipient management of barley and oats occur around 15,500 B. C. in the Horton Plains’, well before the arrival of Vijaya. See the Reference 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006' in this regard. Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”. Unquote • Prof T. W. Wikramanayake’s article gives other data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake' in this regard. R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference 'The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s)' in this regard.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 03 தொடரும் / Will Follow

508718590_10229614250163349_475357283161

509349028_10229614249603335_410920183408

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி / Part: 01

1 week 1 day ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 01 / 'அறிமுகம்'

தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) போன்ற இலங்கையின் பண்டைய காலவரிசைப்படி [Sri Lankan chronicles such as The Dīpavamsa, Mahāvaṃsa, Cūḷavaṃsa, and Rājāvaliya] நிகழ்வுகளை பதிவு செய்த புராண நூல்களின் அடிப்படையில், சிங்கள பௌத்தர்கள் தங்களை இலங்கைத் தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற அந்த நூல்களின் வழியாகச், உண்மையை அறிவியல் ரீதியாகவும் சான்றுகள் ரீதியாகவும் அலசி, நியாயமான காரணங்களைக் கண்டறிவதே இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் பல புத்தகங்கள் இன்று இருந்தாலும், நேரத்தையும் இடத்தையும் மிச்சப்படுத்த இந்த மூன்று பண்டைய முதன்மை புத்தகங்கள் மட்டுமே இங்கு கருத்தில் எடுக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் அவையின் தொடர்ச்சியே அல்லது பிரதிகளே, என்றாலும் சில சில கூடுதல் சேர்த்தல் அல்லது விடுபட்டலுடன் எழுதப்பட்டவை ஆகும். சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், பிக்குகள் (புத்த குருமார்கள்) மற்றும் கல்வியாளர்கள், 1920 களில் இருந்து, இலங்கையின் உண்மையான வரலாற்றின் நூலே மகாவம்சம் என மேற்கோள் காட்டி, பண்டைய இலங்கைத் தமிழர்களின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள்.

தீபவம்சமும் மகாவம்சமும் விஜயனின் புராண வருகையிலிருந்து மகாசேனன் (பொ.பி. 277 - 304) மன்னனின் ஆட்சியின் இறுதி வரை ஒரே எண்ணிக்கையிலான மன்னர்களை உள்ளடக்கி உள்ளது. என்றாலும் இங்கு சம்பந்தப்பட்ட காலம், மகாவம்சத்தின்படி சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள் மற்றும் தீபவம்சத்தின்படி எண்ணூற்று முப்பத்தேழு ஆண்டுகள் ஆகும். எனவே அந்த வேறுபாடு ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் இராசாவலிய நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், மன்னன் மகாசேனனனின் ஆட்சியின் முடிவு மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்த உள்ளோம்.

சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது மகாவம்சத்தின் தொடர்ச்சி ஆகும். இதுவும் பாளி மொழியில் தான், சிங்கள மொழியைத் தவிர்த்து எழுதப்பட்டது ஆகும். இந்நூல், கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி குறிப்பிடுகிறது. எனவே இங்கு ஆழமாக அது அலசப்பட மாட்டாது. என்றாலும் அது தேவைப்படும் போது அல்லது பொருத்தமானதாக இருக்கும் போது, அதுவும் கவனிக்கப்படும். எனவே தீபவம்சம் மற்றும் மகாவம்சம் மற்றும் அதே காலகட்ட இராசாவலியில் மட்டுமே முதன்மையாக இங்கு கவனம் செலுத்தப்படும்.

தீபவம்சம் கிருஸ்துக்கு பின் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாவது பகுதியில், பெயர் அறியப்படாத எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட நூலென நம்பப்படுகிறது. அதேவேளை, தீபவம்சம் தொகுக்கப்பட்டு சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகாவம்சம், மகாநாமா தேரர் என்ற ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபவம்சம் கொச்சை பாளி மொழியிலும் மகாவம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாளி வசனங்களிலும் உள்ளது. உண்மையில், மகாவம்சமானது தீபவம்சத்தை ஒரு சிறந்த இலக்கிய பாணியுடன், விரிவுபடுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு, மறுசீரமைத்த, அதே நேரம் பல கதைகளை அல்லது வேறுபாடுகளை புகுத்திய ஒரு நூல் என்றும் கூறலாம்.

தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் காணப்படுகிறார். இருப்பினும், மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன், இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப் படுகிறது. என்றாலும் எல்லாளனை, துன்மார்க்கமாக அல்லது தீய நெறியில் ஆட்சி செய்ததாக இராசாவலிய கூறுகிறது. இராசாவலிய சமீபத்திய 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று தொகுப்பாகும். மேலும் இது விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் (கி பி 1701) எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது, சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பகுப்பாய்வின் நோக்கம், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று நாளாகமங்களின் தொனி மற்றும் உள்ளடக்கங்கள் [tone and contents], தீபவம்சத்தில் உள்ள தூய பௌத்த ஆர்வம் அல்லது விருப்பத்திலிருந்து, ராஜவலியத்தில் காட்டப்பட்டுள்ள தமிழர்களின் இறுதி வெறுப்புக்கு எவ்வாறு மாறின என்பதைக் காண்பிப்பதாகும். மகாவம்சம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டு காலப்பகுதியில், அதாவது சுமார் 300 கி.பி. முதல் 1700 கி.பி. வரை, இரண்டிற்கும் இடையில், தொனியின் மாற்றத்தின் அறிகுறியை வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இங்கு எமது முக்கிய நோக்கம், இவ்வற்றை, அங்கு காணப்படும் உண்மையை அலசுவதேயாகும் அல்லது வெளிப்படுத்துவது ஆகும்.

தீபவம்சமும் மகாவம்சமும் அத்தியாயங்களாகவும் அத்தியாயங்கள் செய்யுள் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீபவம்சம் 1-1 தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இன் செய்யுள் வசனம் 1 ஐக் குறிக்கிறது. அது ; "புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததையும், புத்தரின் நினைவுச்சின்னம் மற்றும் அரச மர [போதி மர] கிளை இலங்கைக்கு கொண்டுவந்ததையும், மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடுகளையும், தீவில் நம்பிக்கையைப் பரப்புதலையும், மனிதர்களின் தலைவரின் வருகையையும் அவ்வாற்றின் வரலாற்றையும் நான் முன்வைப்பேன்." என்கிறது. மகாவம்சத்திலும் இதே போன்ற அமைப்பே உள்ளது. இந்த முதன்மை மூன்று நாளேடுகளிலும் அவற்றின் உண்மைத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் அவற்றுக்கிடையேயான ஒவ்வுமை அல்லாது இசைவு ஆகியவற்றினை ஒப்பிடப்பட்டு, வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கீழே என் கருத்துக்களை நேர்மையாக பதியவுள்ளேன்.

Part: 01 / 'Introduction'

Sinhala Buddhists claim themselves as the rightful owners of the island of Lanka based on their ancient chronicles like the Dipavamsa, the Mahavamsa, the Culavamsa, and the Rajavaliya etc. It is intended to go through the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya to see any valid reasons with consistent narratives for the rightful ownership of Lanka to the Sinhala Buddhists alone. There are other books too, but only these three books are considered here to save time and space. The Sinhala Buddhist politicians, monks (bikkhus) and academicians played havoc in the life of Tamils since 1920s citing the Mahavamsa as the beginning and the continuation of the true history of Ceylon. The Dipavamsa and the Mahavamsa cover the same number of kings, from the legendary arrival of Vijaya to the end of the reign of the king Mahasena. The period involved is about eight hundred and thirty five years as per the Mahavamsa and eight hundred and thirty seven years as per the Dipavamsa. Though the Rajavaliya covers longer period, the focus will be limited to the end of the rule of the king Mahasena. The Culavamsa is the continuation of the Mahavamsa and therefore will not be deeply analysed here but we may refer to it when it is necessary or relevant. The focus will be therefore on the Dipavamsa and the Mahavamsa, and the same period in the Rajavaliya.

The Dipavamsa is the earliest and believed to be compiled between the beginning of the fourth century A. D. , and the first third of the fifth century A. D., and by an unknown author. The Mahavamsa is compiled about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa, and Mahanama is the author. The Dipavamsa is in crude Pali language, but the Mahavamsa is in choice Pali verses. The Mahavamsa is conscious and intentional rearrangement of the Dipavamsa with a better literary style with much enlarged and enriched details, whether factual or not. The important personalities in the Dipavamsa are Devanampiya Tissa and Mahinda Thera. The incomparable monarch as per the Dipavamsa is Elara. However, the prominent personality in the Mahavamsa is Dutthagamani. The Mahavamsa also depicts Elara in excellent terms. The Rajavaliya, however, says Elara ruled wickedly. The Rajavaliya is a very recent compilation, and covers the period from the legendary arrival of Vijaya to the end of the reign of Wimala Dhamma Suriya (1701 A.D.). The aim of the analysis is to show the transition of the tone and contents of the three chronicles of the same period from the pure Buddhist interest or desire in the Dipavamsa to the ultimate hatred of the Tamils shown in the Rajavaliya. The Mahavamsa is falling in between the two over the period of about one thousand and four hundred years, from, say, about 300 A. D. to 1700 A. D.

The Dipavamsa and the Mahavamsa are divided into chapters and the chapters are divided into verses. Two numbers separated by hyphen are used to refer to a particular verse in a particular chapter. Thus, 2-7 makes reference to the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses 36 to 39 of the chapter 4. Dipavamsa 1-1 refers the verse 1 of the chapter 1 of the Dipavamsa; ”I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. Similar reference is adopted for the Mahavamsa too. The Rajavaliya is not in the metric form, and the previously mentioned reference is not applicable.

Summaries of the Dipavamsa, the Mahavamsa and the Rajavaliya are given separately as Appendixes to this chapter, which may be referred for specific and greater detail. All the three chronicles are compared, contrasted and commented below for their truthfulness, the historical value, and the consistency among them.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 02 தொடரும் / Will follow

507978314_10229551776681551_422240180711

505345800_10229551774201489_678869513080

506645763_10229551775641525_414755778787

506638659_10229551774921507_580485736677


மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்

4 weeks 1 day ago

கடற்புலி
லெப்.கேணல் பிரசாந்தன்

வின்சன் ஜெயச்சந்திரன்

தருமபுரம், கிளிநொச்சி

13420.jpg

https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA=

லெப்.கேணல் செல்வி

கணபதிப்பிள்ளை கலாதேவி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

19366.jpg

https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=

🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்

1 month 1 week ago

இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்

வணக்கம்.

ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும்.

நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும்.

இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள்.

அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம்.

இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது.

1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது.

அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர்.

இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர்.

இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம்.

இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன்.

ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம்.

ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல.

ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும்.

ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது.

ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும்.

இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு:

Quote

"1990களில், ஒரு கட்டத்தில், முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொலைவெறிக் கோரத் தாக்குதல்கள் ஓய்ந்தாலும், பின்னாளில் ஜெனீவா போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் முளைவிட்டது. அது ஏற்கனவே செயலுற்றுக்கொண்டிருந்த ஏனைய ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. இத்தகவலானது 2006ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் ஜெனிவாவில் வைத்து 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெருத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

"ஆனால் இவ்வறிக்கையின் முழு விரிப்பும் புலிகளால் ஏனோ பொதுவெளியில் - ஊடகங்களுக்கு - வெளியிடப்படவில்லை. கசிந்த குறிப்பிடத்தக்க தகவல்களை சண்டே லீடர் வாரயேடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வெளியிட்டது. இத்தகவலையெடுத்து பல்வேறு தமிழ் நாளேடுகள் வெளியிட்டிருந்தன.

"இவ்வறிக்கையில், குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழுக்கள் என்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் முழு விரிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).

"தென் தமிழீழத்தில் ஜிகாத் குழுக்களின் முதன்மைத் தளங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற சிறிலங்காப் படைகளின் வன்வளைப்பிற்குட்பட்ட பரப்புகள் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).

"மேலும், அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருடன் இந்த ஆயுதக் குழுக்கள் கமுக்கமாக செயற்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

"அத்துடன் இவ்வறிக்கையில் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கியோர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிகாத் அமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகள் 2006ம் ஆண்டிற்கு முன்பு இஸ்லாமிய மதக் கல்வியைப் பெறுகிறோம் என்ற போர்வையில் பாக்கிஸ்தானிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் பாக்கிஸ்தானுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாக்கிஸ்தானின் மலைச் சாரல்களில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சியை அவர்களிடத்தில் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2006ம் ஆண்டில் சிறிலங்காவிற்கான அரசதந்திரியாக பணியாற்றிய பாக்கிஸ்தான் உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஜிகாத் ஆயுதக்குழுவிற்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து உதவியதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது (வீரகேசரி வழியாக யாழ் களம் 2: புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு, 12/03/2006).

"முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தானுக்குமான தொடர்பை பின்னாளில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

"விக்கிலீக்ஸின் தகவலின் படி, தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் நொக்ஸ் குழு (மதிப்பிற்குரிய ஆங்கிலேயன் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது), ஒசாமா குழு, ஜெட்டி குழு (Jetty==இறங்குதுறை. இதில் துறைமுகத்தில் வேலை செய்யும் முஸ்லீம்களே பெருவாரியாக இடம்பெற்றிருந்தனர்.) ஆகியன செயற்பட்டன. அம்பாறையில், முஜாகிதீன் குழு செயலுற்றது. 2006இன் நிலைமையின் படி 150 ஆயுததாரிகள் இதில் உறுப்பினராய் இருந்துள்ளனர். இந்த ஆளணி எண்ணிக்கையானது ஒசாமா குழுவை விட அதிகமாகும். இந்தக் குழுக்களிடம் புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தேச வஞ்சகமிழைத்த கருணா குழுவினது ஆயுதங்கள் இருந்தனவாம் (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA).

....................

"இவ்வாறாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் தவிபு ஆல் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்படி எதுவும் இல்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடியொட்ட மறுத்துரைத்தார். ஆயினும் பஃவ்ரெல் (PAFFREL) அமைப்பு தம்மிடம் இதற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதென்று தினக்குரல் 19/03/2006 அன்று செய்தி வெளியிட்டுள்ளது."

Expand

இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம்.

அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம்.

இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது.

ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள.

இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies).

மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம்.

இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே.

இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும்.

இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும்.

ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா.

இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன்.

நன்றி

தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் | தொடர்

1 month 3 weeks ago

தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்

இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம்.

இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.

என் கண்முன்னே எல்லாம் முடிந்துவிட்டது – மருத்துவப் போராளி அலன்

1 month 3 weeks ago

என் கண்முன்னே எமது இறுதி மருத்துவமனை எரிந்து போனது. காயப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அனைவரும் உடல் சிதறி போனார்கள் – மருத்துவப் போராளி அலன்

விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க் கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூட தன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப் போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதியான மருத்துவமனையை, அதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்ட மருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றிய மருத்துவப் போராளி அலன் அவர்களை இன்று சந்திக்கப் போகிறோம்.

தமிழீழ மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும் மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன?

பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் தான் இருந்தது. பெரும் காலங்கள் அங்கே சத்திரசிகிச்சை கூடங்களிலையே மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கி வந்தேன். அத்தோடு கடற்புலிகளின் படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன். அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளான நெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள் இயங்கிய போது அம் மருத்துவமனைகளிலும் என் பணி விரிந்திருந்தது.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றி கூறுங்கள்.

உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும் மருத்துவ வளங்கள் குறைவு. அதாவது மருத்துவர்களோ அல்லது மருத்துவப் பொருட்களோ எமக்கு தாராளமாக கிடைப்பதில்லை அதனால் மக்களுக்கான மருத்துவப் பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலமையின் ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டு தொடங்கினோம். அங்கே வாழ்ந்து வந்த அரச மருத்துவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத் தொடங்கினோம்.

இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பது உச்சமாக இருக்கும். மருந்தை விட ஒருவரின் மனதில் நீ வருத்தக்காறன் இல்லை என்ற நினைப்பை ஊட்டினாலே பெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும். இது பண்டையகாலங்களில் இருந்து வந்த மரபு. அதைப் போல அங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும் சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கி நின்றார்கள்.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரச மருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியது. அது எவ்வாறு சாத்தியமானது?

இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தன. சத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டது. இலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாக கொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனான மருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாக இருந்தது.

அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

இல்லை என்றே நான் கூறுவேன். அவர்களும், நாங்களும் இணைந்து தான் அதிகமான காலங்களில் பணியாற்றி இருக்கின்றோம். அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின் மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களை உருவாக்குவதில் இருந்தது. அதே நேரம் அவர்கள் மக்களுக்கான மருத்துவப் பணியிலோ, போராளிகளின் மருத்துவப்பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோ, எமது நிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாக பங்கெடுத்தது இல்லை. மக்கள் பணிக்காக நாம் இணைந்திருந்தோம்

மருத்துவத் தடை, பொருளாதாரத் தடை என்பன இறுக்கமாக இருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறு இயக்கினீர்கள்?

இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்ட மருத்துவமனை. அதனால் எமது படையக மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல் மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப் பிரச்சனைகளை நாம் கையாண்டோம். அதற்காக எமது பிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப் பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின.

Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார் மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காத நிலையில் )அனைத்து வகையான மக்களும் சிகிச்சையை பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறு கையாண்டீர்கள்?

எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கான சுதந்திரத்துக்கானது. இதில் சிகிச்சைக்காக வரும் மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாக எதிர்பார்க்கவில்லை. மிக அவசரமான அல்லது முக்கியமாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவே செய்தோம். அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சை பெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவச மருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகை மக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம்.

இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது Dr. பொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின் வான்படை தாக்குதலை மேற் கொண்டது. அப்போது அங்கே என்ன நடந்தது?

புதுக்குடியிருப்பு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையை பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம், விடுதிகள், வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதி என பல பகுதிகளை கொண்டிருந்தது. அதில் இறுதி நேரம் எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமது “வான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால் “ அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சை கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில், சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து அங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம்.

அதே நேரம், மல்லாவி, அக்கராயன்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் நெட்டாங்கண்டல் போன்ற மருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன் பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம். அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையில் தான் எமது மருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலை செய்தது. அதில் 60 க்கு மேல் மக்கள் சாவடைந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.

இத்தாக்குதல் திட்டமிட்டு Dr. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரச மருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா?

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடாத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல. வழமையாகவே சிங்கள தேசம் செய்கின்ற விடயம் தான். அதுவும் மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்த போதும் ( சிகப்பு நிற + குறியீடு) எந்த மனச்சாட்சியும் இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது சிங்களப்படைகள்.

அத் தாக்குதல்களில் மருத்துவர்கள், நோயாளர்கள் அல்லது பணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா?

ஓம், பல தடவைகள் நடந்திருக்கின்றது. இறுதிச் சண்டையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால், கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடாத்தியது இனவாதப்படை. இவ்வாறான தாக்குதல்களில் பல மருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் பல மருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

குறிப்பாக மேஜர் அல்லி, செவ்வானம், இறையொளி என்று எமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம் மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும் சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தியதாக அறிவித்திருந்தது. இது உண்மையா?

ஓம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்ட, மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்த போது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப் படைகள் தாக்குதலை நடாத்தின. அந்த நிலையில் பல நோயாளர்கள் இறந்து போனார்கள்.

நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில் பணியில் நின்றேன். எனக்கு தகவல் ஒன்று வந்தது. உடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறு பணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்றமருத்துவ அதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து பின் நகர்ந்திருந்தனர். அங்கிருந்து வெளியேறும் போது பல மருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல் தெரிவித்தது. அதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான் இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றிருந்தேன்.

அப்போது அங்கே சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்து போயிருந்தார்கள். அவர்களைக் கடந்தே நான் மருந்துக் களஞ்சியம், மருத்துவர் விடுதி என அனைத்து இடங்களையும் அலசி அம் மருந்துகளை எடுத்து வந்தேன். ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்ரம, அடுத்த நாள் அரச செய்தி ஊடகமான ரூபவாகினியில் விடுதலைப்புலிகள் தங்கி நின்ற மருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார்.

இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாக கூற முடியும். எம் போராளிகள் இறுதி நேரத்தில் கூட வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதை விரும்புவதில்லை. அதே நேரம் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல் நடாத்திய போது எமது படையணிகள் தங்களது நிலையை புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு வீதிக்கு அருகில் அமைத்திருந்தார்கள். இந்த நிலையில் எம் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டு வர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும் கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லை. அதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்த துப்பாக்கிகளும் இருக்கவில்லை. தளபாடங்கள் மட்டுமே உடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது.

அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள் என்பதற்கு நான் ஒரு சாட்சி.

புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும் போது புவியியல் நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா?

எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளை நிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (GPS – Global Positioning System ) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC ) ஊடாக

கொடுப்போம். அதை விட கூரைகளில் சிகப்பு நிற குறியீட்டை வரைந்திருப்போம். இவற்றை வைத்துக் கொண்டே திட்டமிட்டுத் தாக்குதல்களை மேற் கொண்டார்கள் சிங்களப்படைகள். என்னைப் பொறுத்தவரை நாம் அமைவிடத்தை அடையாளப் படுத்தியதன் பின்னரே அதிகமாக தாக்குதலை நடாத்தினார்கள்.

நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவி ஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்த போது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில் நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன். அந்த ஒரு வாரமும் எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என்பொறுப்பில் இருந்த அம் மருத்துவமனைக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டது. உண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்தது மட்டும் தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும்.

அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்கு நேரடியாக உந்துகணையால் (RPG ) தாக்குதலை நடாத்தியது. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட பின்பே மருத்துவமனைகள் அதிகமாக தாக்கப்பட்டன. அதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்தது. இது இறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின் நிலை?

இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 என படிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறது. அதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்து சென்றார்கள். அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச் சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்து மக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள். ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டது.

குடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக் கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்தது சிங்கள அரசு.

உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்ட உடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலை செய்தார்கள். அப்போது உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. அம் மருத்துவமனையை குறி வைத்து பெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்தது சிங்களப்படைகள். உடையார்கட்டுச் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகை நினைவில்லை) மக்களை கொன்று குவித்தது. பாதுகாப்பு வலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள். அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களை சாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில் வைத்து செய்கிறது சிங்களப்படை. அப்போது 20 பேருக்கு மேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள். காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன். இறந்த உடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களை தென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காக வெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன். அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் நடந்தது.

இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும். இவ்வாறு மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம் செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும்.

இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள் ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அதாவது தென் இலங்கை பகுதிகளில் வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால், எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவது குறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்பு முனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறு தயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும், அதே நேரம் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச் சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி கேட்டார்கள்.

தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்கு அமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள். சிங்கள வல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன் மட்டும் சண்டையிடுங்கள். நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும் ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடாத்த வேண்டாம் என்று பணித்தார். இவ்வாறு தான் எம் தலைவர் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். சிங்கள அரசைப் போல கொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களை கொன்றொழிக்கவில்லை. அதே வேளை எம் பராமரிப்பில் எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்? அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதை இச்சிங்கள அரசு அறியாது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு காயப்பட்ட சிங்கள இராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்?

நிச்சயமாக விடுதலைப்புலிகளின் மருத்துவர்களுக்கு தேசியத் தலைவர் வலியுறுத்துவது இதைத் தான். எதிரி என்றாலும் அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள் போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்று. அதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடு களத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்த போது அவர்களையும் எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம். இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவம் சிகிச்சை பெற்றார்கள். அதில் இருவர் மேயர் தர அதிகாரிகளாகவும், ஒருவர் லெப்டினன் தர அதிகாரியாகவும், மிகுதியானவர்கள் கோப்ரல் தர படையாகவும் இருந்தார்கள். அதை விட இவர்கள் என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிற்றுக் காயம் மற்றும் தலைக் காயம் போன்ற பாரிய காயங்களுடனே வந்தார்கள். இவர்கள் பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்து காப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள். அதில் மூவர் ICRC ஊடாக சிங்கள அரசிடம் கையளிக்கப்பட்டிருந்தார்கள். ஏனைய மூவரும் விடுதலை செய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்த காரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் மட்டும் தானா இருந்தார்கள்?

இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள். அதை விட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பல இராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம். அதே நேரம் விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாக பலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்க வைத்திருந்தோம். எனக்குத் தெரிய பலர் அங்கே இருந்தார்கள்.

உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள் போதுமான அளவில் இருந்ததா?

இல்லை. உணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப் போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்தது சிங்கள அரசு. அதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள் கையிருப்பில் இல்லை. அதே நேரம் கைவிடப்பட்ட புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டு வந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்து வந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்தது. அதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை.

வலிநிவாரணி, தொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லை. அதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக் குளுசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல் போயிருந்தது. ஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவின. அதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும் External Fixation கள் கையிருப்பு இல்லாத நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாக இருந்தது.

சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள் உணவுக்கு பெரிதும் சிரமப் பட்டிருப்பார்களே.?

நிச்சயமாக,

நான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்த சண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாக காட்டியது என்றே கூறலாம். அதாவது பண்டமாற்றுப் பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள் செய்திருந்தார்கள். அதாவது பணம் என்ற பரிமாற்றுச் சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக் கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்தது. அவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாக கையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள் உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்ட மக்கள் தான் அதிகமாக இருந்தார்கள். உழைப்புக்கு பணம் வாங்க மறுத்தார்கள். பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத் தாளாகவே இருந்தது. ஒரு சோற்றுப் பருக்கை தான் அங்கு பெறுமதியாக காணப்பட்டது. இவ்வாறு தான் மக்கள் வாழ்ந்தார்கள். உண்ண உணவில்லை.

தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றை நடமுறைப் படுத்தியதால் தான் பசியில் சாவடைந்த மக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இல்லா என்றால் பசியில் அங்கிருந்த அனைவருமே இறந்திருப்பார்கள்.

இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறு கையாண்டீர்கள்?

உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அது. சண்டை தொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்து வந்துவிட்டோம். நான் வட்டுவாகல்பகுதியில் இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாக மாற்றி இருந்தேன். அதனை சுற்றி சிறு கிடங்குகளை பதுங்ககழி போல உருவாக்கி, மேலே தறப்பாளை கட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம். இது தான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை.

எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்?

எல்லாவகையான காயங்களும் வந்தன. நான் இறுதியாக வட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தன. அதை விட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தன. இறுதிக் காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தி இருந்தான்.

இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கி நின்றார்களா ?

காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையை சுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள். அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வு செய்து நாம் சிகிச்சை வழங்குவோம். உதாரணமாக ஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும் என்றால் உடனடியாக அதை செய்தோம். சிகிச்சை செய்தும் பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும் காயக்காறர்களை இரத்தத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டு ஏனைய காயக்காறரை கவனிப்போம். வேறு ஒன்றையும் செய்ய முடியாத நிலை.

மிக கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிர வேண்டும். ஒரு இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்கு கால் மற்றும் கைகளில் காயம் இருந்தது. அதனால் சத்திரசிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சைக்குப் பின்னான சிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ் சிறிய மருத்துவ பதுங்ககழிக்குள் படுக்க வைத்திருந்தேன். அப்போது, திட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீது சிங்களப் படைகள் செய்தன. அத் தாக்குதலில் 50 இற்கும் மேலான மக்கள் இறந்தனர். அதேநேரம் 6 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பல மக்கள் மீண்டும் காயமடைந்திருந்தனர். அதில் அவனும் ஒருத்தன்.

அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான்.

“ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்…”

என்று கத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடி வருகிறான். இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியே விழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றன. எனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒரு நிலையில் இருக்காது. அப்போது எங்களின் போராளி மருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார். அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சை Laparotomy செய்வதற்காக தயார் படுத்தினேன். மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்த இளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம். அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. அதை தருவதற்கு அங்கே யாராலும் தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளி உயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறது. அக்குருதியை வைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம்.

இதைப் போலவே இன்னும் ஒன்று, சிறு வயது பிள்ளை ஒன்று தலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறாள். அவளைக் கொண்டுவந்தது அவளது பேரன். அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். பரிசோதித்த நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. அவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம் தெரியப்படுத்தலாம் என்று வந்த போது, அவர் அந்த வீட்டு வாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறது. அத் தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன். அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார்.

இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது.

அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என் குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியை கொடுத்து, மக்களைக் கொண்டு வெட்டிய ஒரு பதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்த மக்களை புதைத்தேன். கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றி பல மக்கள் இறந்திருந்தார்கள். எம்மால் எதையும் செய்ய முடியவில்லை. உடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்த பதுங்ககழியில் புதைத்தோம். பண்டமாற்று பொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்று கொடுமையான இச்செயலையும் தந்திருந்தது.

இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது?

காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டு சண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார்கள். ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும் அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

இறுதி நாள் என்ன நடந்தது ?

16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும் அதிகமான மக்களும் இருந்தார்கள். பெரும்பாலும் கால் உடைவுக் காயங்கள் தான் அதிகம். அவ்வாறான நிலையில் அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “ அப்பா. அம்மா உறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக் கூடியவர்கள் போங்கோ என்று. அப்படி போனவர்கள் ஓரிரண்டு பேர் தான். மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள்.

இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைச் சுற்றி இராணுவம் வந்துவிட்டது. அதன் பின் அங்கே எதையும் செய்ய முடியாத சூழல். முடிவெடுக்க முடியவில்லை. என் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள். அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல். நான் அவர்களை கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின் குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது,

“ டொக்டர் நீங்களும் எங்கள விட்டிட்டு போக போறீங்களா” என்று ஒரு தம்பி கேட்டான. என்னால் அவனுக்கு எதை செய்ய முடியும்? அவர்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. அவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டு வருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கி செல்கிறேன். அங்கே நண்பனின் குடும்பத்திடம் என் குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறேன்.

என்னால் அந்த இடத்துக்கு கிட்ட போக முடியவில்லை. அவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள். எப்படியோ நான் அங்கே போய் சேர்கிறேன்150-200 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்து படுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள். இவ்வாறு மருத்துவமனைக்கு போய் சேர்ந்த போது அப் போராளிகள் மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும் அதனால் அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள்.

நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச் செல்லுமாறு பணித்தேன். அதன் பின் அப் போராளிகளோடு பேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும் கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்தது. அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள். அதனால் அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போது ஒரு தம்பி, டொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோட பிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாக போறன் என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. அவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்று ஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன். அதேவேளை அங்கே இருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில் கேட்கிறது.

நான் என்ன செய்ய முடியும்? எதையும் முடிவெடுக்க முடியாதவனாய் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒரு சகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை கூட்டிக் கொண்டு போய் என் மனைவி மகனோடு விடலாம் என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பெரும் தொகையான 60 MM எறிகணைகள் எம் மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன். அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலான எறிகணைகள் வெடித்துச் சிதறின. அத்தனையும் மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணை என்பது எனக்கு புரிந்து போனது.

தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்த என்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர். ஆனாலும் நான் காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக் கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன். அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பி வந்திருந்தான். மச்சான் உன்னோட இடத்துக்கு 60MM ஆல பராச் பண்ணி விட்டான். எதுவும் மிஞ்சவில்லை. எல்லாமே சிதறிப் போய்விட்டது. ஒருத்தன் கூட உயிரோட இல்ல. அவன் தெரிஞ்சு தான் அடிச்சிக்கான்.

எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல் கதைத்துவிட்டு வந்த அப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு வினாடிகளும் இப்படி சிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனது. என்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை.

மனைவி மகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லை. மன நெகிழ்வோடு நான் இருந்த போது நண்பனும் மற்ற சகோதரனும் என்னை தம்மோடு வருமாறு பணிக்கின்றனர். அதன் மேல் அங்கே ஒன்றும் இல்லை என்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்ற நினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப் பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன்.

https://eelamaravar.wordpress.com/2019/05/19/mullivaikal-hospital-attack/

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும் - தமிழ்தேசிய பேரவை

1 month 4 weeks ago

Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM

image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

492690587_666158336278043_87591868740282

டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

மாநகரசபையின் வருமானங்கள் மற்றும் அரச அரசசாரத நிதிகள் உரிய முறையயில் திட்டமிடப்பட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி இலஞ்சம் ஊழல் அற்ற பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு  சைக்கிள் சின்னத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆணை அமையட்டும்.

எமது ஆட்சிக்காலத்தில் மாநகரசபைக்காக மக்கள் என்ற எண்ணம் நீக்கப்பட்டு மக்களிற்காகவே மாநகரசபை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டு மக்களிற்கான சேவைகளிற்கே முதன்மையளிக்கப்படும்.

தேங்கியிருக்கும் மக்கள் சார் தேவைகள் அனைத்தும், நாம் ஆட்சி அமைத்து மூன்று மாத காலத்திற்குள் மக்கள் நடமாடும் சேவைகள் ஊடாக சீர்செய்யப்படும்.

கழிவகற்றல், மின்விளக்கு பொருத்தல், குடிநீர் தொடர்பான சேவைகள் முறைப்பாட்டு பெறுதல்கள் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படுவதுடன், சோலை வரி உட்பட ஏனைய சேவைகளும் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படும்.

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகசீர்கேடுகள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து யாழ்மாநகரசபையின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் 24 மணிநேரமும் கண்காணிக்ககூடிய வகையில் தரமான கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் சட்டவிரோத செயற்பாடுகளிற்கு ஆதரவாக செயற்படுவோருக்கு பாரபட்சம் இன்றிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன் மழைநீர் சேகரிப்பு திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும்.

உள்ளுர் வீதிகள் பாரபட்சமின்றி செப்பனிடப்பட்டு திருத்தப்படுவதோடு வடிகால் அமைப்பும் சீர் செய்யப்பட்டு தெருவிளக்குகளும் பொருத்தப்படும்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மதகுகளும் பாலங்களும் சீராக்கப்படுவதுடன் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு அவசியமான பாலங்கள் மதகுகளை அமைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நகரத்தின் பிரதான வடிகால்களில் இருந்து கடலிற்கு செல்லும் வடிகால்கள் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நிபுணத்துவ ஆய்வுடன் சீரமைக்கப்படும்.

492169776_666153842945159_46710378523553

சிறப்பாக செயற்படும் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சபையினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளில் இவர்களிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

யாழ்மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலயங்கள் பள்ளிவாசல் மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதுடன் அவற்றிற்கு தேவையான உதவிகள் சிறப்பான முறையில் வழங்கப்படும்.

யாழ்மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்கப்படுவதுடன், குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படும்.

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும்.

யாழ்ப்பாண மாநகரசபையின் உண்மையான மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகவுள்ள சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

நீங்கள் வாக்களிக்கும் இறுதி நேரத்திலும் கூட சிந்தனை கலையான திடமான மாற்றத்தை உருவாக்க தமிழ்தேசிய பேரவையாக பயணிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே வாக்களிக்கவேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/212803

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு

3 months 2 weeks ago

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன.

நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.

சமூக விரோத செயற்பாடு

இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன.

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு | Jaffna Famous Youtuber Controversy Rajeevan Mp

இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் சிறப்பு உரிமை

பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு | Jaffna Famous Youtuber Controversy Rajeevan Mp

இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

3 months 2 weeks ago

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

March 07, 2025

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்ச்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவன் சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவன். எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொண்டிருந்தாலும் தேச விடுதலைக்காய் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளி அறிவுச்சோலை நிலவன்.

அமுதன்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வாறுதோற்றம் பெற்றது? அதன் அடிப்படைக் கோட்பாடு என்னவாக இருந்தது?. 

நிலவன் :- தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்? போராட்ட வரலாறு என்ன? எதற்காகப் போராடினார்கள்? தெரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்தை தலை நிமிர்த்தி  தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாகவும்   உலகிற்கு அடையாளப் படுத்தியவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள். புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தார்கள். தமிழீழ பூமியில் உக்கிரமாகப் பௌத்த சிங்கள அரசின் கொடுமைகளுக்கும், கொலை வெறிக்கும், தமிழ்  இன அழிப்புக்கும், ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மரபுவலி இராணுவமாக வளர்ச்சி பெற்று ஒரு நடைமுறை அரசினை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள்.

தமிழினம் உருத்தோன்றிய காலம்முதல் வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணினதும் எமது மக்களினதும் விடுதலைக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள் தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்து மாவீர்களா விதையாகிப் போனார்கள். உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கு  உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகளின்தேசிய எழுச்சிக் கோசத்தின் இலட்சியம் ஆகும்.

தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்தார்கள். தேச விடுதலை என்பது, ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட விடுதலை. அதை  எந்தச் சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத- யாருக்கும் கீழ்ப்படியாத ஒட்டுமொத்த சுதந்திரம். அதனை அடைவதற்கான போராட்டத்தை விடுதலைப் புலிகள் மட்டுமே இறுதி வரை முன்னெடுத்தனர். தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தினார்கள்.

தமிழீழ அரசின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. “தமிழீழம்” எனும் தமிழர் தாயக பூமி முழுமையான விடுதலையைக் காண்கின்ற வேளையில் அங்கே ஆதரவற்றர்கள், இயலாமையில் வாழ்பவர்கள், ஏழைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், கையேந்தி நிற்பவர்கள், என்று யாருமே இருக்கக்கூடாது. போரினால் ஏற்படும் நிரந்தரமான தாக்கங்களுள் மக்கள் நசுங்கிப் போக இடமளிக்கக்கூடாது. மாறாக எல்லா வகையிலும்தலை சிறந்த நாடாக, இந்த உலகிற்கே முன்மாதிரியான ஒரு நாடாகத் தமிழீழம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகமிக உறுதியாக இருந்தார்,

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபகரன் அவர்களுன் தலைமையில் நடைபெற்ற தேச விடுதலைக்கான இன விடுதலைப் போராட்டம் ஒரு புனிதமானது, அது அறம் வீரம், தியாகம், விடுதலை உணர்வு ஆகிய உயரிய இலட்சியப் பண்புகளைக் கொண்ட இலட்சியமாக திகழ்வது.  தமிழீழ மக்களின் தேசிய அபிலாசையாக வரலாற்றுரீதியாக எழுந்த தனியரசுக் கோரிக்கைக்கு ஒரு செயற்பாட்டு வடிவம் கொடுத்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் இலட்சிய உறுதியுடனே போராளிகளாய் நாம் போராடியிருந்தோம்.

A4-300x201.jpg

அமுதன் :- தமிழ் மக்களின் போற்றுதற்குரிய “மேதகு  வே. பிரபாகரன்” அவர்களால் “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்ற கட்டமைப்பு உருவாக்கம்  எவ்வாறு இருந்தது?

நிலவன் :- 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (Liberation Tigers of Tamil Eelam) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார். அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து, உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் அன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப் போராகச் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.

மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது . எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப் பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது பண்பாடு ,கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும் என்பதை நடை முறையில் நிகழ்த்திக் காட்டினார்.

விடுதலைப் புலிகள் முப்படைகளுடன் கரும்புலிகள் என்ற சிறப்பு இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு

நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கில் தமிழீழக் காவல்துறை, நீதித்துறை  குற்றப் புலனாய்வு பிரிவு என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது. பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத் திட்டங்களையும் உருவாக்கினார் எங்கள் தாயுள்ளம் படைத்த தலைவர் அவர்கள்.

தமிழீழம் என்ற எம் தாய் நாட்டிற்கு வந்திருந்த  ஐ.நா.அதிகாரிகள் விடுதலைப் புலிகள்  அமைப்புக்களின் வளர்ச்சி கண்டு வியந்தார்கள். போரின் அனர்த்தங்களுக்கு மத்தியில்   சிறிவர்கள் , முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாலிகளுக்கு இப்படியும் ஒரு அரும்பணியா? என்று அவர்கள் வியப்புடன் வினவியுள்ளனர்.

B3-300x201.jpg

அமுதன் :- “காந்தரூபன் அறிவுச் சோலை” இல்லத்தின் உருவாக்க வரலாறு பற்றிக் குறிப்பிடுக?

நிலவன் :- காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் பற்றி அதன் உருவாக்கம் பற்றியும், அதற்கு  காரணமானவர் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!.

சிறுவயதில் இருந்து தாய்தந்தையை, இழந்திருந்த  கடற்கரும்புலி மேஜர்.காந்தரூபன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரினால் வளர்க்கப் பட்டவர்களில் ஒருவன். தமிழீழக் கனவு மற்றும் கொள்கைகள் பிடித்துப் போகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதை விடுத்து ஆரம்பத்தில் தலைவர் அவர்களினால் படிப்பதற்கு ஊக்கப்படுத்திட காந்த ரூபனோ தான் இந்த நாட்டிற்காக போராடுவதையே உயர்ந்ததாக நினைப்பதாக தலைவரிடம் கூறினான்.

1987 இன் ஆரம்பத்தில். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படை முகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தார். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டு விடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சக நண்பர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்.இருந்தபோதும், குப்பி (சயனைட் ) விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டிருந்தது.

காந்தரூபனிற்கு இப்போது நிறை உணவு தேவைப்பட்டது. சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கு பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப்பசு ஒன்றைக் காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பார்.

தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற 1988, 1989ம் ஆண்டு காலப் பகுதியில்….  அப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றார். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தார். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். ‘”அண்ணை…. என்னைக் கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ’” என்றார்.

தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து “கடற்புறா”  அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார். காலங்கள் கடக்க காந்தரூபன் கரும்புலியாக தான் போக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதனை தலைவர் அவர்களிடம் கூறினார் காந்தரூபன். கரும்புலிகள் அணியில் இணைவதை  ஆரம்பத்தில் தலைவர்  அடியோடு அதனை மறுத்து விட்டார். சில ஆண்டுகளில் காந்தரூபன்  தனது திறமையினால் கடற்புலிகள் அணியோடு இணைந்து அதில் தனது தனித்துவமான திறமைகளை வெளிக் காட்டியதுடன் கடற் புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல்.சூசை அவர்களிடம் தனது கரும்புலி ஆசையைக் கூறி நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனுமதி கிடைத்தது.

ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டு மிருந்தவன்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸும். மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும் புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் “எடித்தாரா”வைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்திற் கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத் தொடங்கி யிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்த காலம்.

தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் காந்தரூபன்  தலைவரிடம் சொன்னார்.”தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம சொந்தக்காரரின் ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாமல் படிக்க வசதி இல்லாமல் எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை நான் அனுபவித்ததில் கண்டனான் அண்ணை….நீங்கள்  என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேண்டும்” என்றார்.

“அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …”.  தலைவரின் இதயத்தை இந்த வார்த்தைகள் தொட்டன. இந்த தமிழீழ மண்ணில் இனி யாரும் அநாதைகளாக இருக்க கூடாது. அவர்களுக்கு தாங்கள் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும்” இதுவே என இறுதி ஆசை என கூறினார். அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர்.

A1-300x197.jpg

அமுதன் :- காந்தரூபன் அறிவுச் சோலை இல்லத்தின் உருவாக்கமும் அதன் எதிர்கால நோக்கமும் என்ன என்பதைத் தலைவரின் தெளிவுபடுத்தலிலிருந்து பதிவு செய்க?

நிலவன் :- 1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.

தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச்சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும்.

இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம்.

 ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பித் தலைவரிடம் கேட்டு கரும்புலியாய்ச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்றுகேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின்  ஆசையை நிறை வேற்றும் முகமாக “காந்த ரூபன் அறிவுச்சோலை” எனப்பெயரிடப்பட்டது. என அவர் பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அமுதன் :- தலைவரின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப் பட்ட இல்லங்கள்,கல்விக் கூடங்கள் பற்றிய விளக்கங்களையும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தருக?

நிலவன் :- தமிழ் இன மீட்புக்கான இன விடுதலைப் போரை நடாத்திக் கொண்டு மறுபுறம் தமிழீழத்தின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையிற் கட்டியெழுப்பும் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார் தலைவர் அவர்கள். அந்த வகையில் தமிழீழத்தில் உருவான சேவை வழங்கும் கல்விக் கூடங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் தோற்றம் கண்டது. அவற்றில்  “செஞ்சோலை” “காந்தரூபன் அறிவுச்சோலை,” அன்புச் சோலை, வெற்றிமனை, லெப். கேணல் நவம் “அறிவுக்கூடம்” போன்றவை ஆகும்.

யுத்தத்தினாலும் சந்தர்ப்ப சூழ் நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. ஆதரவற்ற முதியோர்களுக்காக அன்புச்சோலையும், போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வெற்றிமனையும், யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக லெப். கேணல் நவம் அறிவுக்கூடமும் உருவாக்கப்பட்டன.

1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. யாழ் கல்வளை சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை காலப்போக்கில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது.

போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்ப்ந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய், போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993,1994,1995ம் ஆண்டு காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவிலிலும்

செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டு செயற்பட்டு வந்தது .  அதுவும் நீடிக்கவில்லை.  இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாவியில் வடகாடு, முல்லைத்தீவு, வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளிபுனம் கிளிநொச்சி என ஓடி ஓடி ஓய்து போகாமல்  பிள்ளைகளின்  கல்வி மற்றும் வினைத்திறன் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன.

தலைவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்பட்டனர் குழந்தைகள் செஞ்சோலைப் பிள்ளைகள். பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் அங்கு கைக் -குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி கல்வி வழங்கப் படுகிறது. இங்கு முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவூட்டப்பட்டது. கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதல்ல வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதே அதன்  நோக்கமாக இருந்தது.

கலைகள், விளையாட்டுக்கள் , கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றுடன் நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.

C1-300x225.jpgC2-300x150.webp

அமுதன் :- தலைவர் மேதகு அவர்களின் சீரிய சிந்தனை நோக்கில் பாதுகாப்பு, அரவணைப்பு முறைமைகளோடு நிர்வகிக்கப்பட்ட இல்லங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பற்றிக் குறிப்பிடுக?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து மற்றும் பிரிந்து  தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. செஞ்சோலை’ ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” அமைப்புக்களில் எமது எதிர்கால வாரிசுகள் கட்டுக்கோப்பான முறையில் வளர்கப்பட்ட அதே வேளை முல்லைத் தீவில் செந்தளிர் சிறுவர் இல்லம், 2000 ஆம் ஆண்டு ஆராம்பிக் கப்பட்டது. கைக் குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காகக் குருகுலம் ஒன்றும், தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் நடத்தப் பட்டது. காந்தி நிலையம் என்ற பெயரில் சிறுவர் பராமரிப்பு இல்லம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நடாத்தப் பட்டது.

மேலும், தாய் மண்ணிற்கான தமது பிள்ளைகளை ஈந்து தனித்து நிற்கும் பெற்றோரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்  தனது நேரடிக் கண்காணிப்பில்  ஆதரவற்ற முதியோர்களுக்காக, ‘”அன்பு முதியோர் பேணலகம்’” போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக “வெற்றிமனையும்”, யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக “லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்” இவர்களுக்கு பொதுக் கல்வி, கணினிப் பயிற்சி, தொழிற் கல்வி அளிக்கப்பட்டு புனர்வாழ்வும் அளிக்கப்பட்ட்டது. அதோடு மனநோயாளி களுக்காக “மயூரி இல்லம்” “சந்தோசம் உளவள மையம்”  என பல அமைப்புக்களையும், பல உள்கட்டு மானங்களையும் உருவாக்கினார்கள்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஐந்து இல்லங்கள் உட்பட, தமிழர்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட நாற்பத் தைந்து சிறுவர் இல்லங்கள் இயங்கின. போரினால் இழப்புகளை ச் சந்திக்காத குடும்பங்களே இல்லை என்ற நிலையில், குடும்பத்தை இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வேதனைக் குரியதாகும். உளவியல் சிக்கல்கள் உட்படப் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு, திசை மாறிப் போகும் நிலை அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நிலை இன்னும் அதிக சிக்கலானது. இந்நிலையை மாற்றி, போரினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஆண் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலத்திற்கு நல்வழி காட்டவும் உருவாக்கப்பட்ட சிறிவர் இல்லங்களாக அன்று இயங்கின.  போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் 2009கு முன்னர்  வரை  செவ்வனே நடந்து கொண்டிருந்தது.

C6-300x200.jpg

அமுதன் :- ஒரு மக்கள் மயமாக்கப்பட்ட விடுதலை இயக்கமான “தமிழீழ விடுதலைப் புலிகள்”பற்றிய மாறுபட்ட கருத்தைக் கொண்ட சர்வதேசத்திற்கும் அதனைச் சார்ந்தவர்களுக்கும் அந்த அமைப்பு பற்றிய  தீர்க்கமான நிதர்சனம் யாதாக இருக்கும்?

நிலவன் :- விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே! உங்கள் சுயமூளையுடன் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.  உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் விடுதலைக்கு போராடும் ஈழத் தமிழர்களாய் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை! தமிழர்கள் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்றும், ஆயுத விரும்பிகள் என்றும் இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் செய்யப்படும் பிரச்சாரங்கள் உண்மைக்கு மாறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப் படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப்போரிற்கு ஒரு இருண்ட காலமே ஆகும். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை 2009ஆம்ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற் கனவாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல, ஏற்கனவே இத்தாலியின் நாப் போலி மாநகர நீதிமன்றம், டென்மார்க் உயர்நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம்  பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பளித்த நிலையில்  சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றமும் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று கூறி நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 16 ஜூன் 2018இல் வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்தின் த ஹேக் மாவட்ட நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப் போராளிகள் என இலங்கை அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக 21ஏப்ரல்2019ஆம் ஆண்டின் ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.

CNN – அமெரிக்கா.- இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

BFM – பிரான்ஸ்.-விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்க வில்லை.

சிறீலங்கா அரசு- அதே வேளை  கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கும்  பின் விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை .

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகக் காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப் பட்டு ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தவர்கள். தமிழினத்தின் வீரத்தையும், தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தார்கள்.

மனிதநேயமிக்க மனவலிமை படைத்த மகத்தான தலைவனை கொண்ட தமிழீழத்தில் ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில்  பல அர்த்தங்கள் உண்டு. “செஞ்சோலை” ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” சிறார்கள் எந்தளவு எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்டார்கள் என்பதை தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த உரைகள் விளங்குகின்றன.

“எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்கவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மானிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப் படுத்தியிருந்தார்.

“இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்ல, தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப்போராட்டச் சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விரூட்சங்களாக மாறி, ஒரு காலம் தமிழீழத் தேசத்தின் சிந்தனைச் சோலையாக சிறப்புற வேண்டு மென்பதே எனது ஆவல்.” இது தலைவர் அவர்களின் உள்ளக் கிடக்கைப் பேரவா என்று கூடச் சொல்லலாம் இவைகளே நினைவுக்கு வருகின்றன.

ஒரு வீரஞ்செறிந்த விடுதலை வரலாற்றின் அற்புதமான அர்ப்பணிப்புகளாக எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக தமிழர் இராணுவமாக வாழ்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.  தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெரும் விருட்சத்தை வெட்டி வீழ்த்த நினைத்து  தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ஆக்கிரமிப் பாளர்கள் சிதைத்தி ருந்தாலும் தமிழர்களின் இன விடுதலைக்கான சுதந்திர வேட்கையினைச் சிதைத்து  விட முடியவில்லை.

தமிழர் தாயகப்பூமியில், தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாகு வதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, தன்னெழுச்சியால் மேலிடும் உணர்வுகளோடு, தமிழீழத் தாய்மண்ணில் பேரெழுச்சிகொண்ட போராளிகளாய்   எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை பின்னடைவுகள் வந்தாலும் நாம் எமது இலட்சியத்தில் உறுதி பூண்டு தமிழீழம் விடுதலையடையும்வரைத் தொடர்ந்தும் போராடுவோம்.

-தொடரும்

https://www.uyirpu.com/?p=19525

Checked
Tue, 06/24/2025 - 07:05
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed