உலகச் செய்திகள்

Subscribe to உலகச் செய்திகள் feed
Updated: 39 min 56 sec ago

நியூயார்க்: மேலாடை அணியாமல் செல்லும் பெண்களுக்கு இனி தண்டனை கிடையாது

Tue, 21/05/2013 - 18:59

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

எனினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல நகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட் நியூயார்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்தபோது அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வக்கீல், '1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நியூயார்க் கோர்ட், 'முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, நியூயார்க் நகரில் பணியாற்றும் 34 ஆயிரம் போலீசாருக்கு நகர போலீஸ் தலைமையகம் நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

'பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்'என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.maalaimalar.com/2013/05/20145844/Police-action-dropped-against.html

 

நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ' போல்ட்' புறா

Tue, 21/05/2013 - 16:34

130402062846_china_bird_304x171_ap.jpg

சீனாவில் பறவை விரும்பிகள் மிக அதிகம்

 

மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

 

ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது.

பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர்.

இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.

120429175816_pigeons_304x171_bbc_nocredi

வேகத்தின் விலை நான்கு லட்சம்

தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.

இந்த அளவுக்கு பணம் கொடுத்து ஒரு புறாவை வாங்குவது விலை மதிப்பிலாத ஒரு கலைப் பொருளை வாங்குவது போல என்று போட்டிகளில் பங்குபெறும் புறாக்களை வளர்க்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் தெரியாத ஒருவரின் ஓவியத்தைவிட பிக்காஸோவின் ஒரு ஓவியம் பல மடங்கு மதிப்பு வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130521_pigeon_recordsale.shtml

"ஆப்பிள் தன்னிகரற்றது - வரி ஏய்ப்பிலும்" - அமெரிக்க செனெட் ஆய்வு

Tue, 21/05/2013 - 16:32
130510143642_apple_color_624x351_getty.j

ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக், அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக், இது சம்பந்தமாக காங்கிரஸ் மன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட துணை நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துக்கொண்டும், வரி விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு நாட்டில் இருந்தும் செயல்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும் வரி செலுத்தாமல் தப்புவதில் தன்னிகரற்ற கில்லாடியாக ஆப்பிள் விளங்குவதாக இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய செனெட் குழுவின் தலைவரான செனெட் உறுப்பினர் கால்ர் லெவின் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130521_appletax.shtml

பர்மா மதக் கலவரம்: முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை

Tue, 21/05/2013 - 16:03
பர்மா மதக் கலவரம்: முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2013 - 11:29 ஜிஎம்டி
130507152401_burma_meiktila_304x171_bbc_

மெய்க்டீலா மதக் கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர்

பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது.

மத்தியப் பகுதி நகரான மெய்க்டிலாவில் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டுவந்த தங்க நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட சச்சரவை ஒட்டி நிகழ்ந்த வன்முறையில், புத்த பிக்கு ஒருவரைக் கொன்ற குற்றத்துக்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் மிகவும் மோசமான வன்முறைகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

பௌத்தக் கும்பல்கள் மத்திய பர்மாவில் முஸ்லிம்களின் வீடுகளையும் வழிப்பாட்டிடங்களையும் தாக்கியபோது நாற்பதுக்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் அவரவர் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர்

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130521_burmaverdict.shtml

 

ஓக்லஹோமா டொர்னேடோ: சுழலில் சிக்கி டஜன் கணக்கானோர் பலி

Tue, 21/05/2013 - 10:20

அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர்.

மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்,

இது ஒரு பேரழிவு இயற்கைச் சீற்றம் என்று பிரகடனம் செய்துள்ள அதிபர் ஒபாமா, மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த டொர்னேடோ மணிக்கு 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130521_oklahomatornado.shtml

அமெரிக்க மாநிலங்களை சூறையாடிய புயல்! 51 பேர் பலி!! (வீடியோ)

Tue, 21/05/2013 - 05:21

gss-130520-moore-storm-shot.grid-8x2.jpg

 

 

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயலினால் பல மாகாணங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புயலினால் இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். 

 

வீடியோ, படங்கள்

'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி!

Mon, 20/05/2013 - 06:29

20-pete-santilli-hillary-clinton-300.jpg

'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி!

 

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை பிறப்பிறுப்பில் சுட்டு சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என ஆபாசமாக விமர்சித்ததன் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர்.

 

அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின் போது ஹிலாரி கிளிண்டனை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு காரணம் ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் என தன்னிலை விளக்கம் வேறு கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிட்டே சாண்டில்லி.

 

மேலும், பிட்டே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களாவது...

 

‘அந்த இடத்தில் சுட வேண்டும்...

 

‘ஹிலாரியை கைது செய்து விசாரித்து ‘அந்த' இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்.

 

அதுவும், என் கையால் நானே இந்த தண்டனையை தர வேண்டும்.துப்பாக்கியால் சுட்டதும் ஹிலாரி உடனடியாக இறந்து விடக்கூடாது.

 

வலியின் வேதனையை அவரது கண்களில் நான் பார்க்க வேண்டும்.

 

மரண வலியால் துடிக்கும் அவரது அருகில் சென்று, உன்னால் கொல்லப்பட்ட எல்லா அமெரிக்கர்களின் சார்பாகவும், கடற்படை ‘சீல்' வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாகவும் உனக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நான் கூற வேண்டும்.

 

ஒபாமாவுக்கும் தான்...

 

இதே போன்ற தண்டனையை ஒபாமாவுக்கும் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியல்வாதிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பிட்டே சாண்டில்லியின் இந்த கருத்து.

-தற்ஸ் தமிழ்-

 

இந்திய இராணுவத்துக்குள் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஊடுருவல் - முக்கிய தகவல்களை வழங்கிய அதிகாரி கைது!

Sun, 19/05/2013 - 17:46
indian-army-1952013-150.jpg

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார்.

  

இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் உயரதிகாரி தல்பத் சிங் தின்கர் தெரிவித்தார். இது குறித்து தின்கர் மேலும் கூறுகையில், "சின்ஹா, 4 முறை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு பயணித்து, ஐஎஸ்ஐ முகவரிடம் முக்கியமான தகவல்களை அளித்துள்ளார். உளவு பார்த்ததற்காக அவருக்கு இந்தியா மற்றும் நேபாள ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தொகை எவ்வளவு என்று உறுதியாகக் கூற முடியாது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்வாராவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன' என்றார்.

 

போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சின்ஹாவிடம் உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ராணுவ செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக போலீஸாக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் புரியும். சின்ஹா, ராணுவத்தில் எழுத்தராகப் பணிபுரிவதால் அவர் மீது ராணுவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

 

சின்ஹா, 1995-ம் ஆண்டு கீழ்நிலை எழுத்தராக பணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவருடன் தொடர்பு கிடைத்தது. இவர், நேபாளத்தில் உள்ள ஐஎஸ்ஐ முகவரிடம் சின்ஹாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=83011&category=IndianNews&language=tamil

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் மீண்டும் போர் பதற்றம்

Sun, 19/05/2013 - 15:06

கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டன.

இதனால் கொரியா தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஐ.நா. தலையீட்டின் பேரில் பதட்டம் தணிந்தது. இருந்தும் அமெரிக்கா- தென் கொரியாவின் போர் பயிற்சி ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள ஐப்பான் கடலில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இவற்றில் 2 ஏவுகணைகள் காலையிலும், மாலையில் மற்றொரு ஏவுகணையும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இவை குறைந்த தூரம் சென்று தாக்க கூடியவை. இதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பகத்தில் மீண்டும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இதை வட கொரியா மறுத்துள்ளது. இது வெறும் ராணுவ பயிற்சிதான், ஏவுகணை சோதனை இல்லை என தெரிவித்துள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1305/19/1130519004_1.htm

 

 

உலகில் இன்வெறி கொண்ட பத்து நாடுகள். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒரு சர்வே

Sun, 19/05/2013 - 10:00

உலகில் இனவெறி கொண்ட நாடுகள் குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இனவெறி என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது. கறுப்பர்கள், வெள்ளையர்கள் என்ற இனவெறி அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், தற்போது எடுக்கப்பட்ட சர்வேயில் அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இன்னும் அதிகளவில் இனவெறித்தன்மை காணப்படுவதாக அந்த சர்வே கவலையுடன் தெரிவித்துள்ளது.

இனவெறி கொண்ட உலகின் முதல் பத்து நாடுகள்:

1. ஹாங்காங்

2.பங்களாதேசம்

3.ஜோர்டான்

4.இந்தியா

5.எகிப்து

6. சவுதி அரேபியா

7.ஈரான்

8.வியட்நாம்

9.இந்தோனேஷியா

10.தென்கொரியா

 

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=61082

 

பாதுகாப்பற்ற உடலுறவால் பாலியல் நோயை பரப்பிய ஒண்டோரியோ நபர் அதிரடி கைது.

Sun, 19/05/2013 - 09:28

பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒண்டோரியோவை சேர்ந்த ஒரு நபர், அந்த நோயை பிறருக்கு பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு பெண்களிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gary Beckford என்ற ஒண்டோரியோவை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஓரு ஆண்டாக பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அவர், தன்னுடைய நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதத்தில் இரு பெண்களோடு வேண்டுமென்றே பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி உடலுறவு கொண்டுள்ளார். இதை மிகவும் தாமதமாக அறிந்த அந்த இரண்டு பெண்களும் கொடுத்த புகாரின் பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

புகார் கொடுத்த இரண்டு பெண்களுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

http://www.thedipaar.com/new/news/news.php?id=61085

 

கனடா: பிறந்த பச்சிளங்குழந்தையை உயிரோடு புதைத்த 30 வயது பெண் அதிரடி கைது.

Sun, 19/05/2013 - 09:25

கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

New Brunswick என்ற பகுதியை சேர்ந்த பெண், கடந்த 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய குழந்தையை snowbank என்ற இடத்தில் உயிரோடு புதைத்ததாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்தை தோண்டி, குழந்தையின் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குழந்தையை உயிரோடு புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரை Moncton provincial court என்ற நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மீண்டும் மே மாதம் 21ஆம் தேதி ஆஜர்படுத்துமாறும் அதுவரை காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தை எந்த காரணத்திற்காக உயிரோடு புதைத்தார், குழந்தையின் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=61084

 

காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி போலீஸாரால் மீட்பு.

Sun, 19/05/2013 - 09:23

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி ஒருவர் எவ்வித ஆபத்தும் இன்றி சனிக்கிழமை  மீட்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்க்ழமை இரவு 8.30 மணியளவில், Islington and Finch avenues அருகிலுள்ள Moneterrey Drive என்ற இடத்தில் Roshelle Sookram என்பவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்களால்  புகார் கொடுக்கப்பட்டது.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த டொரண்டோ போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பயனாக சனிக்கிழமை மாலை 3 மணியளவில் Roshelle Sookram கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார், இரவு முழுவதும் அவருக்கு என்ன ஆனது என்பதை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு வந்து அழைத்து சென்றனர்.

 

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=61083

 

£420,000க்கு மேல் சம்பாதிக்கும் பிரிட்டிஷ் பேங்கர்கள்: இனி தலையில் கூரை இடிக்கும்!

Sat, 18/05/2013 - 20:19

பிரிட்டிஷ் வங்கியாளர்கள் (bankers)முகங்களில் கவலை தோன்றியுள்ளது. காரணம், இவர்களுக்கு கிடைத்துவரும் ‘வானை தொடும்’ போனஸ்களுக்கு ஒரு கூரை வரப்போகிறது. கூரையை தாண்டிச் செல்ல முடியாது!

ஐரோப்பிய ஒன்றிய வங்கி அதிகாரசபை (European Banking Authority) வங்கியாளர்களின் போனஸ்களுக்கு உச்சவரம்பு கொண்டு வருகிறது. ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்து வந்த பிரிட்டிஷ் பேங்கர்கள் பலர் (இவர்கள் பெரும்பாலும் லண்டனில் இருந்து இயங்குபவர்கள்” இதனால் பாதிக்கப்படவுள்ளனர்.

சரி. லண்டனில் அப்படி எத்தனை பேர் வங்கிகளில் ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு (£420,000) மேல் சம்பாதிக்கிறார்கள்?

ஒரு சிறிய கணக்கு சொல்கிறோம், பாருங்கள்.

லண்டனில் உள்ள Barclays வங்கியின் தலைமையகத்தில் மட்டும், கடந்த 2012-ம் ஆண்டு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்தவர்களின் எண்ணிக்கை, 1,338. ஒரு வங்கியில் உள்ள எண்ணிக்கை இது! லண்டனில் எத்தனை வங்கிகளுக்கு தலைமையகம் உள்ளது?

ஐரோப்பிய ஒன்றிய வங்கி அதிகாரசபை வங்கியாளர்களின் போனஸ்களுக்கு கொண்டுவரவுள்ள உச்சவரம்பு எப்படியென்றால், ஐரோப்பிய வங்கிகள் எதுவுமே தமது வங்கியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தை விட அதிக தொகையில் போனஸ் வழங்க முடியாது! (வங்கி பங்குதாரர்கள் அனைவரும் வாக்களித்தால், சம்பளத்தைவிட இரு மடங்கு போனஸ் வழங்கலாம். அதுதான் மாக்சிமம்!)

வங்கியாளர்கள் பலருக்கு கிடைக்கும் வருமானமே போனஸ்தான்.

குறிப்பிட்ட ஒரு வங்கி அந்த ஆண்டு எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறதோ, அதன் குறிப்பிட்ட சதவீதத்தை வங்கியாளர்கள் போனஸாக பெறுவது வழமை. ஒவ்வொரு வங்கியாளருக்கும் இந்த சதவீதம் ஒப்பந்தப்படி மாறுபடும்.

பொதுவாக, ஆண்டு வருமானம் 3 லட்சம் பவுண்ட்ஸ் பெறும் ஒருவருக்கு, வங்கி சூப்பர் லாபத்தில் இயங்கினால், 7-8 லட்சம் பவுண்ட்ஸ் போனஸ் கிடைக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

மேலேயுள்ள உதாரணத்தில் குறிப்பிடும் பேங்கருக்கு இனி அதிகபட்ச போனஸ் 3 லட்சம் பவுண்ட்ஸ் மட்டுமே! வங்கி பங்குதாரர்கள் அனைவரும் வாக்களித்தால் 6 லட்சம்வரை போகலாம். ஆனால் அது சுலபமல்ல.

உதாரணமாக, Barclays வங்கியின் தலைமையகத்தில் மட்டும், கடந்த 2012-ம் ஆண்டு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்த 1,338 பேருக்கும் வங்கி பங்குதாரர்கள் வாக்களிக்க வேண்டுமென்றால், தகராறில்தான் போய் முடியும்!



http://www.tamilyouthcafe.com/

 

கோக்க-கோலா ரகசிய ஃபார்முலாவை விற்க போவதாக மிரட்டல்

Sat, 18/05/2013 - 11:40

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.

தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை நானும், என் மனைவி அர்லேனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது.

பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கோக்க-கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கோக்க-கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்புகொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை.
எனவே அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம்(ஆன் லைன்) மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 50 லட்சம் அமெரிக்க டொலர்களை முன்னர் அறிவித்தேன். தற்பொழுது 1.5 கோடி டொலர்களாக உயர்த்தி விட்டேன்.

விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1305/18/1130518013_1.htm

 

ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம்

Sat, 18/05/2013 - 03:49
ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம்

 

nepal.png

 

நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள். இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது.

 

இந்த விபத்தில் விமானிகள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

சி.பி.ஐ. விசாரணையில் யாரும் குறுக்கிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: ப. சிதம்பரம்

Fri, 17/05/2013 - 15:07
சி.பி.ஐ. விசாரணையில் யாரும் குறுக்கிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: ப. சிதம்பரம்

Written by tharsan   // May 17, 2013   //

sithamparam.jpgபிரதமர் மன்மோகன் சிங் சி.பி.ஐ. க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டறிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார். இது மூன்று வார காலத்திற்குள் புதிய சட்ட வரைவை தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் இது குறித்து கூறியதாவது:-

சி.பி.ஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவோம். அது விசாரணையில் முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்பதற்கு உறுதி அளிக்கிறோம்.

ஆனால் உலகில் உள்ள அனைத்து அமைப்புகளும் யாரோ ஒருவருக்கு பதில் சொல்ல பொறுப்புடையவர்கள். அவை நிர்வாகம், சட்டம், நீதிமன்றம் போன்றவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்.

அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம், சி.பி.ஐ யின் விசாரணையில் யாரும் குறுக்கிடுவதில்லை என்பதை உறுதி செய்வதே. இதனை எனது குழு உறுதிசெய்யும் என்று கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://news.tamilstar.com/archives/34183

 

பதவி போவது நிச்சயம் என்பதால் கடைசி நேரத்தில் மேசையை திருப்பி வைத்து ஓடும் முயற்சி

 

புக்கிகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்பு!

Fri, 17/05/2013 - 10:45

புதுடெல்லி: ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் ( புக்கிகள்) இடையே நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்பை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.


அந்த உரையாடல்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

சந்திலா:  யெஸ்...சொல்லு பிரதர்.நான் (மைதானத்திற்கு) போய் சிக்னல் கொடுக்கிறேன். முதல் ஓவர் முடியட்டும், நான் பார்க்கிறேன்.

அமித் ( புக்கி):  முதல் ஓவரை நம்பிக்கையோடு வீசுங்கள்...அப்புறம் அதே நம்பிக்கையோடு இரண்டாவது ஓவரை எங்களுக்காக வீசுங்கள்.

சந்திலா: ஓ.கே.,ஓ.கே. அப்படியே செய்கிறேன்.

அமித்: உங்களது சிக்னல் என்னவாக இருக்கும்?

சந்திலா: நான் என்னுடைய இரண்டு டி சர்ட்டுகளையும் மேலேயும், கீழேயும் இழுக்கிறேன்.அப்புறம் ஓவர் தொடங்கும்போது மேலே பார்க்கிறேன்.

( இந்த ஓவரில் சந்திலா சிக்னல் கொடுக்க மறந்துவிட்டாலும், ஏற்கனவே உறுதி அளித்தபடி 14 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் சிக்னல் கொடுக்க மறந்துவிட்டதால் சந்திலாவுக்கு ஏற்கனவே கொடுத்த ரூ. 20 லட்சத்தை  புக்கி திரும்பக்கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் 20 லட்சத்தை திருப்பிக்கொடுத்துள்ளார் சந்திலா)

_________________________________________________________________________________________________________________

இரண்டாவது உரையாடல், ஸ்ரீசாந்தின் நெருங்கிய நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தனும், புக்கி சந்த்தும் பேசியது ஆகும். மே 9 ஆம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் ஸ்ரீசாந்த் இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 14 ரன்களாவது வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அந்த போட்டியின்போது ஸ்ரீசாந்த் சார்பில் பேசிய ஜிஜூக்கும், புக்கி சந்த்க்கும் இடையே நடைபெற்ற உரையாடல் வருமாறு:

சந்த்: சிக்னல் என்னவாக இருக்கும்?

ஜிஜூ: நான் அவனிடம் ( ஸ்ரீசாந்த்) சொல்லி இருக்கிறேன்.

 

வழக்கத்தில் இல்லாத ஏதாவது ஒன்றை அவர் செய்யமாட்டார்.இரண்டாவது ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக தன்னுடைய டவலை (பேண்ட்) பாக்கெட்டில் திணித்துக்கொள்வார்.

சந்த்: பிரதர்...ஓவர் தொடங்குவதற்கு முன்னர் எங்களுக்கு சற்று அவகாசம் கொடுக்குமாறு அவரிடம் அறிவுறுத்துங்கள்,அப்படி செய்தால்தான் நாங்கள் எங்களது புக்கிங்கை தொடங்க முடியும்.

_________________________________________________________________________________

அடுத்ததாக ராஜஸ்தான் ராயல் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது சந்திலாவுக்கும், அங்கித் சவாணுக்கும் இடையே நடந்த உரையாடல். இந்த போட்டியில் சந்திலா விளையாடவில்லை என்றபோதிலும், சவாணை இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 13 ரன்களையாவது வழங்க தூண்டி, அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அந்த உரையாடல் வருமாறு:

சவாண்: நான் வெளியே இருக்கிறேன்.

சந்திலா: ஓ.கே. நான் ஆமாம் என்று சொல்ல வேண்டுமா?

சவாண்: யெஸ்...ஆனால் எவ்வளவு?

சந்திலா: அவர்கள் 12 என்று சொல்கிறார்கள்.

சவாண்: நோ...அது சாத்தியம் என்று நான் கருதவில்லை.அது ரொம்ப அதிகம்.

சந்திலா: அது செய்யப்பபடும் என்று நான் அவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நான் யெஸ் சொல்லட்டுமா?

சவாண்: ஓகே. யெஸ் சொல்லுங்கள்.

சந்திலா: ஒரு ஓவருக்கு 60 ( லட்சம்) என்று நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன்.

சவாண்: யெஸ் ஓகே. நான் எனது கைக்கடிகார பட்டையை திருப்பி சிக்னல் கொடுக்கிறேன். மற்றதை நாம் BBM ல் பேசிக்கொள்வோம்.

( பின்னர் இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் சவாண், எப்பொழுதெல்லாம் இரண்டாவது ஓவரை வீசுகிறாரோ அப்பொழுதெல்லாம் 14 ரன்களோ அல்லது அதற்கு மேலேயோ வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். )
 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14975

 

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு - தமிழகத்தில் விமானப்படையை பலப்படுத்துகிறது இந்தியா!

Fri, 17/05/2013 - 09:55
SU-30-1752013-150.jpg

இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார்.

  

இப்போது திறக்கப்பட்டாலும், இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளாகும். 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து, சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. "சுகோய்' என, அழைக்கப்படும், இந்த ஜெட் விமானங்கள், மணிக்கு, 3,200 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவை. தஞ்சாவூர் விமானப்படை தளம், முழு அளவில் தயாரானவுடன், 16 முதல், 18 சூப்பர் சானிக், சுகோய் விமானங்கள், இங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதே, தஞ்சாவூரில் புதிதாக விமான தளம் அமைப்பதற்கான, முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக, டில்லியில், நேற்று விமானப் படையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், எப்போதும் ராணுவத்தின் கண்காணிப்பும், பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தென்பகுதி, கடல் சூழ்ந்த பகுதி. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையில், 2009ம் ஆண்டில், உள்நாட்டு போர் நிறைவு பெற்றது. இந்த போருக்கு முன் வரை இருந்த நிலைமை வேறு. போருக்கு பின், சீனாவின் ஆதிக்கம், அதிகம் உள்ளது. இலங்கையின், ஹம்பன்தொடாவில், சீனா துறைமுகத்தை கட்டி முடித்துள்ளது.அதேபோல், பாகிஸ்தானிலும், காலூன்ற ஆரம்பித்து உள்ளது.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய பெருங்கடலில், சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, சீன கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பின்னணியில் தான், தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விமானப்படை தளம், 2018ம் ஆண்டில், முழுமையாக தயாராகி விடும். இதன் கட்டமைப்பு, சுகோய் விமானங்களை நிறுத்துவதற்காகவே, வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், மற்ற ரக விமானங்கள் எல்லாம், வந்து செல்லும். முழுமையாக தயாரான பின், கடைசியாக, இங்கு சுகோய் விமானங்கள் நிறுத்தப்படும்.

 

ஏற்கனவே, 6,000 அடியாக இருந்த ஓடுதளம், தற்போது, 12 ஆயிரம் அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமானதள கட்டுப்பாட்டு அறையும் தயாராகியுள்ளது. விமானப்படை தளத்தைச் சுற்றிலும், வேலி கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தீயணைப்பு சேவையின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், விமானங்கள் தரையிறங்க மற்றும் கிளம்பிச் செல்ல தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து, மொத்தம், 272 சூப்பர்சானிக், சுகோய் விமானங்களை வாங்குவதற்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு, 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

 

இவற்றில், 170 விமானங்கள் ஏற்கனவே, "டெலிவரி'யாகி விட்டன. இந்த விமானங்கள் தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் புனே, உ.பி.,யின் பரேலி, அசாமின் தேஜ்பூர், பஞ்சாபின் ஹல்வா, ராஜஸ்தானின் ஜோத்பூரிலும் உள்ள விமானப்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

http://www.seithy.com/breifNews.php?newsID=82872&category=IndianNews&language=tamil

சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Fri, 17/05/2013 - 04:06
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான மக் கள் யூனியன் பொதுச்செயலாளர் ஜெயா விந்தயாள், சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமாஞ்சி கிருஷ்ணமோகன் ஆகியோர் மீது சர்ச்சைக்கிடமான வகையில் கருத்துக்கள் வெளியிட்டார். இது தொடர்பான புகாரின்பேரில், பிரகாசம் மாவட்ட போலீசார் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின்படி வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். ஏற்கனவே மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்தபோது, அவருக்கு எதிரான கருத்தினை இதே 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில் ஷஹீன் ததா என்ற பெண் கருத்து வெளியிட்டதாலும், அந்த கருத்துக்கு அவரது தோழி ரேணு சீனிவாசன் ஆதரவு தெரிவித்ததாலும் இருவர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின் படி வழக்கு பதிந்து கைது செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரேயா சிங்கால் என்ற சட்டக்கல்லூரி மாணவி ஒரு பொது நல வழக்கு தொடுத்தார். 'தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏ அரசியல் சட்டத்துக்கு எதிரானது, அதை செல்லாது' என அறிவிக்க வேண்டும் என்பதுதான் வழக்கில் வைக்கப்பட்டுள்ள முறையீடு ஆகும். எனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடுபவர்களை மாநில அரசுகள் கைது செய்வதை சுப்ரீம் கோர்ட்டு தடுக்க வேண்டும் என்று கோரி ஸ்ரேயா சிங்கால் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர மனுவாக கருதி, உடனே விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது. அந்த அவசர மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஷ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடுவோரை கைது செய்யக்கூடாது என பொத்தாம்பொதுவாக ஒரு உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். இருந்தபோதிலும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால், உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதியைப்பெறாமல் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தி, மத்திய அரசு கடந்த ஜனவரி 9-ந்தேதி அனுப்பியுள்ள அறிவுரையை கண்டிப்புடன் அமல்படுத்துவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள அறிவுரைக்குறிப்பில், 'தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின்படியான புகாரைப் பதிவு செய்து, ஒருவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது, மெட்ரோபாலிட்டன் நகரங்களில் போலீஸ் ஐ.ஜி., மாவட்ட அளவில் போலீஸ் துணை கமிஷனர் அல்லது போலீஸ் சூப்பிரண்டின் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக்கூடாது' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இத்தகைய வழக்குகளில் உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதி பெற்றே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு இப்போது உறுதிப்படுத்தி உள்ளது.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14750:if-you-do-not-consent-to-the-release-of-the-social-websites-supreme-court-order&catid=37:india&Itemid=103

Pages