வாழும் புலம்

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்' - உமாகுமரன்

2 months 4 weeks ago

Published By: RAJEEBAN

25 MAR, 2025 | 10:47 AM

image

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் .

மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்.

உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.

https://www.virakesari.lk/article/210123

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

2 months 4 weeks ago

Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM

image

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.

2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.

https://www.virakesari.lk/article/210109

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

3 months ago

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது.

கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது.

ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது.

எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை.

பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும்.

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி.

கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்.

மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை.

டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார்.

ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது.

தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு.

கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.

அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை.

லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை.

veedu.com
No image previewகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...
சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என

Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.

3 months 1 week ago

பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி.

தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர்.

இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.

மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!

3 months 1 week ago

Screenshot-2025-03-15-at-5.13.50%E2%80%A

Politics

மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!

March 15, 2025

Post Views: 68

தமிழர் கெரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சர் பதவி!சிவதாசன்

எதிர்பார்க்கப்பட்டதைப் போல கனடிய மத்திய லிபரல் கட்சியின் தலைவராக, சுமார் 85% வாக்குகளால், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி நேற்று (வெள்ளி) கனடாவின் 24 ன்காவது பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். தெற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சீரற்ற ஆட்சியில் கனடா எதிர்பார்க்கும் சவால்களைச் சமாளிக்கும் வல்லமையுள்ள ஒருவராக மார்க் கார்ணி பார்க்கப்பட்டதும் அவரது தெரிகுக்கு ஒரு முக்கிய காரணம்.

நாடு தழுவிய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்குமிடையேயிருந்த பாரிய வித்தியாசம் இப்போது தகர்ந்து இரு கட்சிகளும் சமநிலையில் (37%) இருப்பதற்கு மார்க் கார்ணியின் வரவு முக்கிய காரணம். “தோல்வியடைந்த ட்றூடோ அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர் மார்க் கார்ணி” என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் மீண்டும் மீண்டும் உரத்துக் கதறிய பின்னரும் கணிசமான மக்கள் கார்ணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது கூர்ந்து அவதானிக்கத் தக்கது.

கார்ணியின் தற்போதைய அரசு, ஏறத்தாழ, ஒரு காபந்து அரசு தான். தெற்கே இருக்கும் erratic கோமாளி எப்படி நடந்துகொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே கார்ணியின் திட்டமிடல் இருக்குமென எதிர்பார்க்கலாம். ட்றூடோவுக்கும் ட்றம்பிற்குமான பகைக்கான வேறு பின்புலங்கள் இருப்பினும் கார்ணி ட்றூடோவின் பாதையிலிருந்து சற்று விலகிச் செல்வதே சாணக்கியமாக இருக்கும். கரி வரிச் சுமையைப் பொதுமக்கள் தோள்களிலிருந்து இறக்கி வைப்பதாக கார்ணி அறிவித்தது நல்ல விடயம். இதன் மூலம் பொய்லியேவ் கைகளிலிருந்து முக்கியமான ஒரு ஆயுதத்தைப் பிடுங்கி விட்டார். இது போல இன்னும் பல ஆயுதக் களைவுகளை எதிர்பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் அரசியல் பட்டையில், கொள்கை ரீதியாக, ட்றூடோ இடது பக்கத்தில் இருந்தவர். பெரும்பாலான உலக நாடுகள் இப்போ வலது பக்கம் சரிந்துகொண்டிருக்கும் காலம். ஆனால் 1960 களுக்குப் பிறகு கனடா பெரும்பாலும் மத்தி அல்லது இடது என்ற இடக்களிலேதான் இருந்துவந்தது. மல்றோனி காலம் வரை இதுதான் நிலைமை. ஹார்ப்பர் கொஞ்சம் வலது பக்கம் இழுத்துச் சென்றிருந்தாலும் இடது எப்போதுமே அதைச் சரியான இடத்தில் தான் வைத்திருந்தது. ட்றூடோ அதை கொஞ்சம் அதிகமாகவே இடது பக்கம் தள்ளிச் சென்றுவிட்டார். கார்ணி அதைக் கொஞ்சம் வலது பக்கம் நகர்த்துவதன் மூலம் “நான் ட்றூடோவல்ல”என்ற செய்தியைத் தெற்குக்கு அனுப்புவார். இது அவசியமானதும் கூட. இதனால் ட்றூடோவை ஓடும் பஸ்ஸின் கீழ் கார்ணி தள்ளிவிட்டதாகக் குறைகாணத் தேவையில்லை. இது கோமாளிக்குக் குதூகலத்தைக் கொடுக்கும் எனபது மட்டுமல்லாது ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ கணக்கில் அதுவும் தனது திருவிளையாடல்களைக் கொஞ்சம் தணிக்க முயற்சிக்கும்.

Gary-1.jpg

ட்றூடோ அமைச்சரவையில் இருந்த 37 அமைச்சர்களை 24 ஆகக் குறைத்திருப்பது நல்ல விடயம். இது ‘தற்காலிக அரசு’ என்பதற்காக இருக்கலாம். ஆனால் இந்த மாத முடிவிற்குள் பொதுத் தேர்தளுக்கான திகதியைக் கார்ணி அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். இத் தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியமைத்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. நான் ஏற்கெனவே பலதடவைகள் கூறியது போல பொய்லியேவ் தனக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார். அவரது ஆலோசக சேனை முதலில் துரத்தப்படவேண்டும்.

இந்த புதிய அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அவதானத்திற்குரியது. இந்த அமைச்சரவையில் கிறீஸ்டியா ஃபிறீலாண்டைத் தவிர , ஆனந்த், ஆனந்தசங்கரி உடபடப் பெரும்பாலானோர் ட்றூடோ விசுவாசிகள். இதனால் இந்த அரசில் கொஞ்சமேனும் ட்றூடோவின் ஆளுமை இருக்கும். முன்னாள் பிரதமர் ஜான் கிரைத்தியேன் ஒரு மூத்த ட்றூடோ விசுவாசி. இளைய ட்றூடோ ஆட்சியிலும் அவரது ஆலோசனை தொடர்ந்தும் இருந்துவந்தது. வளைகுடாப் போரின்போது coalition of the willing குடைக்குள் போக மறுத்த துணிச்சலான அரசியல் ஜாம்பவான். ட்றம்ப் போன்றோரைக் கையாள்வதற்கு கிரைத்தியேனின் ஆலோசனை அவசியமானது. இந்த அமைச்சரவைத் தெரிவில் அவரது கை இருந்திருக்குமெனவே எதிர்பார்க்கலாம். ஃபிறீலாண்டிற்கு போக்குவரத்து அமைச்சைக் கொடுத்து அவமானப்படுத்தியிருக்கிறார் கார்ணி / ட்றூடோ. இது இலங்கையில் மீன்பிடி அமைச்சுக்கு இணையான ஒரு அவமான அமைச்சு. பாவம் ஃபிறீலாண்ட், அடுத்த தடவை தெரிவானால் இன்னும் நான்கு வருடங்கள் கார்ணிக்குப் பின்னால் நின்று தலையாட்டிக்கொள்ள வேண்டும்.

மார்ச் 24 ஐப் போல் புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம். 37 முதல் 51 நாட்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அதுவரை கோமாளியின் சேட்டைகள் தொடர்ந்தால் கார்ணியின் கட்சி கரையேறும். அல்லது பொய்லியேவ் தனது புதிய வியூகத்தை அறிவிக்க வேண்டும். கோமாளியின் சேட்டைகள் தளர்ந்து போனால் உள்ளூர்ப் பிரச்சினைகள் தலை தூக்கும். கார்ணி சாமர்த்தியசாலியானால் கோமாளியை உசுப்பேத்திக் காரியங்களைச் சாதிக்கலாம். அல்லது றைட் லெஃப்டினண்ட் டக் ஃபோர்ட்டை முன்னரங்கத்திற்குத் தள்ள வேண்டும். இது வரை அவதானித்ததில் பொய்லியேவ்-ஃபோர்ட் கூட்டணி உருவாகுவதற்கான எந்தவித அசுமாத்தமுமில்லை. இந்த அணி கை கோர்க்குமானால் கார்ணிக்கு கொஞ்சம் கஷ்டம்.

கெரி ஆனந்த சங்கரிக்கு முக்கியமான நீதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது. அது அவரது கடும் உழைப்பிற்கான வெகுமதி. தமிழ் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மை உலகறிந்த விடயம். ஆனந்தசங்கரியைப் பற்றிப் பல குற்றம் குறைகள் பலதரப்புகளாலும் முன்வைக்கப்படுவது உண்மை. ஆனால் ஒரு உலகப் பார்வையில் அவருக்கு கனடிய அரசினால் வழங்கப்பட்ட கெளரவம் தமிழருக்கு வழங்கப்பட்ட கெளரவம் எனவே நான் பார்க்கிறேன். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அனித்தா ஆனந்தும், சம தட்டில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய இன்னுமொரு தமிழர். 1993 இல் ஒரே ஒரு சீக்கியர் பாராளுமன்றத்திற்குச் சென்றிருந்தார். 2015 இல் ட்றூடோவின் அரசில் 18 சீக்கிய உறுப்பினர்கள் இருந்தார்கள். நமது சட்டியிலிருந்து ஒரு நண்டாவது வெற்றிகரமாக வெளியே போய்விட்டது அதிசயம் தான். பார்ப்போம்.

இலங்கை அரசியல் விடயத்தில் அமைச்சர் ஆனந்தசங்கரி கொஞ்சம் அமத்தி வாசிக்கவேண்டி ஏற்படும். எதிர்க் கட்சியில் தெரிவாகப் போகும் தமிழர் இத்தடியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டி ஏற்படும். எப்படியானாலும் ஓடினால் போதும் என்று மகாஜனங்கள் பொறுமை காப்பர்.

வரப்போகும் தேர்தலின் முடிவுகள் எப்படியாகவும் இருக்கட்டும். கோமாளியின் குருட்டடிகளுக்கு உச்சக்கூடிய தலைமை கனடாவில் இருக்க வேண்டும்.

புதிய பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்! (Images & Video Courtesy: Gary Anandasangarie)

https://veedu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-24-%e0%ae%86/?fbclid=IwY2xjawJDA2VleHRuA2FlbQIxMQABHZnO0A7X97X_tiYezuu5faIymY0aSYuRU6P6UR_0eFyu1EcWz5iV57FAjw_aem_B6gTIpjlWZI4KA8vqOLDeQ#google_vignette

13 தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?; ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி கூறிய பதில்

3 months 1 week ago

“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மண்டபத்தில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர்(Justice) வி. இராம சுப்பிரமணியம், இந்தியாவின் மனித உரிமை நிலைமை பற்றி ஓர் நீண்ட உரையாற்றியிருந்தார். இவர் தமிழ் நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது உரையில், “படிப்பிக்கும் பொழுது யாரும் ஏதும் முக்கிய கேள்வி கேட்டால், இவ் விடயம் பாடத்திட்டத்தில் (syllabus) இல்லையென கூறுவது சுலபமென கூறியிருந்தார்”.

இராம சுப்பிரமணியத்தின் உரையை தொடர்ந்து சபையில் கேள்விகள், அபிப்பிராயங்கள், கருத்துக்கள் கூறுவது ஆரம்பமாகியது. அவ்வேளையில், அக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். அதாவது, சிறிலங்காவில் யுத்தம் முடிந்த காலம் தொட்டு, இந்தியாவினால், தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வாக 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா கூறிவந்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, இந்தியா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அமைதியாக உள்ளது? இவ் அமைதி, 13ம் திருத்த சட்ட விடயத்தில் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இவ்வினா வெளிநாட்டு விடயமாகையால் இராம சுப்பிரமணியம் இவ் வினாவிற்கு பதில் கூறுவதை தவிர்த்திருந்த பொழுதிலும், இந்தியாவிற்கான ஐ.நா. பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ (Mr. Arindam BAGCHI) அவர்கள், சபையில் உடனே பதில் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, “சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வான 13வது திருத்த சட்டம் என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்பினால், இவ்விடயமாக டெல்கியில் கதைத்து உறுதிப்படுத்தலாமெனவும் கூறியிருந்தார்.

அரின்டம் பாக்ஜீ, சிறிலங்காவில் 2014ம் முதல் 2018 ஆண்டுவரை இந்தியாவின் துணை தூதுவராக கடமையாற்றியதுடன், இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில் சிறிலங்காவின் தூதுவர் திருமதி கிமாலி அருணதிலாக உட்பட, மண்டபம் நிறைந்த ராஜதந்திரிகள், தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/316060

பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள ஈழத்தமிழன்; தேர்வு வாக்குக்கு அழைப்பு

3 months 1 week ago

suje_1-300x200.jpeg

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார்.

இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர்.

ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும்.

அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள்  “cœur léger ”  எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும்.

மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள  “cœur léger ”  எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார்.

https://thinakkural.lk/article/315975

மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு

3 months 1 week ago

Screen-Shot-2025-03-10-at-2.05.33-AM.png

மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு

சிவதாசன்

நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி.

ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் பெற்ற, பல லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது படகு கவிழப்போகிறது எனத் தெரிந்ததும் அவரைத் தனியே விட்டுப் பாய முயன்றார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் ஃபிறீலாண்ட். அவரோடு தொடர்ந்தும் துணை நின்றவர்கள் மெலனி ஜோலி மற்றும் டொமினிக் லெப்ளாங்க் போன்றவர்கள். பின்னணியிலிருந்து அவருக்கு ஆதரவு தந்தவர் ட்றூடோவின் நீண்டகால ஆலோசகரான மார்க் கார்ணி. ட்றூடோவுக்கு பழிவாங்கும் குணம் இருப்பதென்பது இதற்கு முன்னரும் பல சம்பவங்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

நிதியமைச்சராக இருந்த ஃபிறீலாண்ட் நிதி, பொருளாதார விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவரல்ல. அவர் ஒரு ஊடகவியலாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். லிபரல் கட்சியின் பல பிரபலமற்ற கொள்கைகளில் ஒன்றான ‘கரி வரி’ யின் பாரம் முழுவதையும் அவரே தாங்கவேண்டி ஏற்பட்டது. இது தொடர்பாக ட்றூடோவுடன் உரசிக்கொண்டதன் விளைவு அதல பாதாளத்துக்கு விழுத்தியிருக்கிறது. கார்ணியை உச்சிக்குக் கொண்டு வருவதன் மூலம் தான் இழந்த பள பளப்பை மீளப்பெற்றுவிடமுடியும் என்ற ட்றூடோவின் கணிப்பு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு ட்றம்பிற்கே அவர் நன்றி சொல்ல வேண்டும்.

தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நால்வரில் ட்றம்ப் போன்ற ஒரு கொடுங்கோலரை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை மார்க் கார்ணிக்கே உண்டு என வாக்காளப் பெருமக்கள் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு, அத்தோடு establishment க்கும் அவரே தான் தெரிவு. ட்றம்பிற்கும் ஐரோப்பாவுக்குமிடையேயான முறுகல் நிலையில் பலமான கனடா ஐரோப்பாவுக்கு அவசியம். எனவே அவரது தேர்தல் செலவுகளுக்கென இந்த establishment அள்ளிக் கொடுத்திருந்தமையையும் கவனிக்க வேண்டும். கடந்த வாரங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ட்றூடோவுக்கு வழங்கப்பட்ட மரியாதை ட்றம்பிற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படவேண்டும். எனவே கார்ணியின் வெற்றி ட்றூடோவின் வெற்றியேதான். கார்ணியின் வருகையால் லிபரல் கட்சி இன்னுமொரு தவணை ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ட்றூடோவின் படகிலிருந்து பாய்ந்து ஓடியவர்கள் மிதப்பார்களோ தெரியாது.

இதில் அதிர்ஷ்டமில்லாதவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிய்ர் பொய்லியேவ் தான். பாவம். எப்படித்தான் உருமாற்றங்களைச் செய்தாலென்ன இளம் வாக்காளரை அவரால் கவரமுடியாமலிருக்கிறது. ட்றூடோவின் கரி வரியை வைத்துக்கொண்டு கரை சேரலாம் என அவரும் அவரது ஆலோசக சேனையும் நினைத்திருக்கலாம். கரி வரியை விட மக்களுக்கு ட்றம்ப் என்ற கொடுங்கோலரே முக்கியம் என்பதை டக் ஃபோர்ட் போன்ற கன்சர்வேட்டிவ் காரர் சிக்கெனப் பிடித்த விவேகம் பொய்லியேவுக்கும் அவரது சேனைக்கும் புலப்படவில்லை. கார்ணியின் வெற்றிக்குப் பிறகு கரி வரியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓட முயற்சிக்கிறார் பொய்லியேவ். ஆனால் “நான் கரி வரியை இல்லாமற் செய்யப் போகிறேன்” என வந்ததும் வராததுமாக கார்ணி அறிவித்ததன் மூலம் முதலாவது பந்திலேயே அவுட்டாக்கி விட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதி நடைமுறையின்படி எதிர்வரும் அக்டோபர் 20 (2025) இல் 45 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஏறிவரும் லிபரல் செல்வாக்கில் மிதக்கும் கார்ணி மிக விரைவில் தேர்தலை நடத்துமாறு ஆளுனருக்குப் பரிந்துரைக்கலாம். தெற்கில் அடித்துவரும் சூறாவளி எப்படியான விளைவுகளைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் கனடியர்களின் தேசிய உணர்வை உச்சத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது. ட்றூடோவின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. அடுத்த தேர்தலில் கார்ணி ஆட்சியமைப்பாராகில் அது ட்ற்டோவுக்கான வெற்றி.

ட்றம்ப் ஒரு சுத்துமாத்து வண்டில் வியாபாரி. நேர்மை என்பதை அறியாதவர். ஏமாற்று வேலைகளால் தான் கட்டியெழுப்பிய வணிக சாம்ராஜ்யத்தைப்போல நாட்டையும் கட்டி எழுப்பலாம் எனக் கனவு காணும் ஒருவர். இறக்குமதித் தீர்வை மூலம் கனடிய பொருளாதாரத்தை முடக்கி அதை தனது 51 ஆவது மானிலமாக்கிவிடலாமெனக் கனவு காண்பவர். கார்ணியின் வெற்றிப் பேச்சின்போது “ஹொக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடா அமெரிக்காவை வென்று விடும்” என்பதை அமெரிக்கர்களுக்கு விடும் எச்சரிக்கை போல் ட்றம்பிற்கு விடுத்திருக்கிறார். ஆனால் பொய்லியேவோ இன்னும் கரி வரியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அடுத்தடுத்த வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடப்படும் என எதிர்பார்க்கலாம்.

லிபரல் கட்சித் தலைவர் தேர்வில் 150,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வெற்றி விழாவில் 1,600 பேர் பங்குபற்றி ட்றூடோவுக்கு பிரியாவிடை வழங்கியிருக்கிறார்கள். அவர் 2015 இல் அவர் வந்தபோது கர்ச்சித்த அதே மிடுக்கோடுதான் விடைபெற்றும் போகிறார். அவரது பல progressive கொள்கைகள் தோல்வி கண்டிருக்கின்றன. அதற்கு அவர் மட்டும் காரணமில்லை. பல மர்ம விசைகளின் நூற்பொம்மைகளாக இருக்காவிட்டால் ஆசனம் பறிபோய்விடும். கார்ணிக்கும் அதே நிலைமை தான்.

கார்ணி பிறப்பால் ஒரு பிரித்தானியர். பிரித்தானிய, கனடிய, ஐரிஷ் குடியுரிமைகளுக்குச் சொந்தக்காரர். அவரை முன்தள்ளியமைக்கு ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு பங்குண்டு. ட்றம்பின் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வரை கார்ணி போன்றோரே அவர்களுக்குத் தேவை, பொய்லியேவ் அல்ல. வருட ஆரம்பத்தில் 20 புள்ளிகள் பின்னால் இருந்த லிபரல் கட்சி இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியை விட மேலே போகும் நிலையில் இருக்கிறது. அதிர்ச்சி தரும் மாற்றம்.

https://veedu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1/?fbclid=IwY2xjawI8aBVleHRuA2FlbQIxMQABHbfd6FQ4hx622f3oeATieMDZGi6mWkEZxxzvzc4_KXNMyriMOpCL03z2dQ_aem_LoqgEIa0MDr-5owa877yaA

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

3 months 2 weeks ago

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடா (Canada) - டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் டொரோண்டோவின் - ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில் நேற்று (மார்ச் 7) இரவு இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் தீவிர விசாரணை

இந்நிலையில், அங்கு விரைந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும், சுமார் 12 பேருக்கு லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம் | 12 Injured In Shooting At Pub In Toronto Canada

இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டொரோண்டோ ஆளுநர் ஒலிவியா சோவ் கூறுகையில், இந்த துயர சம்பவத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம் | 12 Injured In Shooting At Pub In Toronto Canada

https://ibctamil.com/article/12-injured-in-shooting-at-pub-in-toronto-canada-1741422565#google_vignette

Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!

3 months 2 weeks ago

Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!

March 7, 20250

Share0

markham-960x504.jpg

Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர்.

இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார்.

வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு  48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார்.

26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கூறினர்.

இந்த சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பிட இல்லம் கடந்த காலங்களில் பல முறை குறி வைக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தின் மீது குறைந்தது ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் மாத்திரம் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தூரத்தில் இருந்து குறிப்பிட இல்லத்தை நோக்கி சுட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை காவல்துறைனர் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த கொலைக்கான சாத்தியமான நோக்கம் குறித்து ஊகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு சந்தேக நபர்கள் புதிய ரக, கருப்பு நிறமுடைய, நான்கு கதவுகள் கொண்ட Acura TLX வாகனத்தில் குறிப்பிட இல்லத்தில் இருந்து வேகமாக செல்வதை கண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் சந்தேக நபர்கள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


https://thesiyamnation.com/41110/

Checked
Tue, 06/24/2025 - 10:06
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed