வாழும் புலம்

இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு

15 hours 32 minutes ago

இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு

24 Feb, 2026 | 10:53 AM

image

இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில்  தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.

வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை தூண்டி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை நீண்ட காலத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கச் செய்கிறது.

எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி பல மாதங்கள் வரை நீடித்த பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் புலேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கான முதற்கட்டச் சோதனைகளுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துள்ளார். நிதி உதவி மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.

"இது மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இலையுதிர்காலத்தில் ஒருமுறை இந்த நேசல் ஸ்ப்ரேயை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் , கொரோனா மற்றும் பொதுவான சளி போன்ற பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு பெற முடியும்," என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/239434

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

1 day 9 hours ago

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

Feb 23, 2026 - 12:29 PM

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கரீதியான வாதங்கள் மூலம் அணுகுவதும் சமூகத்திற்கு முக்கியமானது என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு அழைப்பு விடுத்தமைக்காக இரு சங்கங்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் சங்கம் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், புத்திசாலித்தனமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களுக்கு முன்னிலையில் கடினமான கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்றும், தமது கருத்துக்களைப் பாதுகாப்பதோடு மாற்றுக் கருத்துக்களுடன் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழுமியங்களுக்கு மதிப்பளித்தே தாம் இந்த அழைப்பை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தத்திற்குரியது. இடையூறு விளைவிப்பதை விட கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை முன்வைப்பதும், அச்சுறுத்தல் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கம் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் சமூகத்திற்கு மிக முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.

பயனுள்ள நல்லிணக்கமும் முன்னேற்றமும் திறந்த உரையாடல்கள் மூலம் வெவ்வேறு பார்வைகள் சந்திக்கும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே, எனது கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உட்பட அனைத்து விமர்சகர்களையும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன். இத்தகைய தொடர்புகளையும் வாய்ப்புகளையும் நிராகரிப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. விவாதம் இன்றி பிளவுகள் மூலம் உறவுகளைக் கையாள்வது பலவீனமான செயலாகும்.

இரு சங்கங்களும் விடுத்த அழைப்பிற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எதிர்காலத்தில் உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன். நாமல் ராஜபக்‌ஷ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlytrmar0007356py8sjusxx

திருமணசேவை

2 days 6 hours ago

புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் ஒரு முஸ்லிம் நண்பனை அண்மையில் சந்தித்தபோது பலதும்பத்தும்கதைக்கையில் தனது மகளுக்கு மணம்முடிந்து விட்டதை கூறினான். குறுகிய காலத்தில் நாட்டுக்குக் கூடவராமல் இது எப்படி சாத்தியம் என்றபோது கூறினான் மாகாணம் சார்ந்த ஒரு இணையத்தளம் தங்களிடம் இருப்பதாகவும் அதில் பல்வேறு தலைப்புகளில் கருத்துப்பரிமாற்றங்கள் நடப்பதாகவும்( நமது யாழ் இணையம் போல்) ஒரு தலைப்பு திருமணசேவை எனவும் கூறினான். தங்களது சமூகத்தில் வரன், வதுவை உள்ளவர்கள் சாதாரணமாக தெரியப்படுத்துவதாகவும் தேவையானவர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தனிப்பட விடயத்தை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

நாமும் நமது களத்தில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு வரன், வதுவை இருந்தால் அதைத்தெரியப்படுத்தும் சேவை ஒன்றைச்செய்வது நன்மையான விடயம் அல்லவா ?

உதாரணம் கனடாவில் மொன்றியல் நகரிலே வைத்தியராக இருக்கும் மகளுக்கு அவரது பெற்றோர் வரன் தேடுகிறார்கள்.மேலதிக தகவல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

உறவுகள் என்ன நினைக்கிறீர்கள் ?

நல்லதை நினைப்போம், நல்லதைச் செய்வோம்.

வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்

2 days 21 hours ago

வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்

Dec 17, 2020

வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்

அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர்.  என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்.

தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’  என்ற கவிதையை,  இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து  வெளியிட்டவர் இவர்.

அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார்.

அவர் ஒரு ‘சங்கீத பூஷணம்’ என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு ‘சங்கீத பூஷணம்’ கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும்தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்கக் கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சினிமா பாடலும் இசைதான்’ என்று பதில்  சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி.

மாலினி மீது வைத்த காதல்தான் ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான  பாடலாகும்.

அதைத் தொடர்ந்து  M.P.பரமேஷ்

  1. நீயின்றி நிலவு

  2. போகாதே தூர போகாதே

  3. நீ வாழுமிடமெங்கே

  4. மனமாளிகை ரோஜா

  5. எழுதுகிறேன் பாட்டு

  6. அழைக்குமோசை கேக்கலையா

  7. பாடலெனக்கிது முதல் தரம் தான்

என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத் தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட இசைத் தட்டில் இருந்த ‘உனக்கு தெரியுமா’ பாடல் சாதனை படைத்தது.

அது மட்டுமல்லாது 4-வது இசைத் தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசை தட்டுகளிலும்  M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும், இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள்தான்.

பின் வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும்.

  1. உனக்கு தெரியுமா / Thigu neela asthekai

  2. பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan

  3. அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai

  4.  மனமாளிகை ரோஜா / Thura arte athithe

ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத் தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது.

இந்த இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டோம்.

“இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய காரணம் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்காமல் போனதுதான்.

எனது பாடசாலை தோழர்களையும், மற்றும் சில இசைக் கலைஞர்களையும் இணைத்துதான் முதலில் எனது இசைக் குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கும் அது குறிக்கோளாக இல்லை.

ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது.

அவர்கள் என் இசைக் குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக எம்முடன் இருக்க முடியவில்லை. இலங்கையில் இசைக் கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை.

m.p.paramesh-1.jpg

இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம்  பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில ‘உனக்கு தெரியுமா’, ‘மீனிசை பாடிவரும்’, ‘யாழ் பாடி யாழ்பணம்’, ‘திருகோணமலை எங்கள் நாடு’ என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

“இந்த பிரபலமான பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து விடு” என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத் தட்டுகள் வெளியிடும் முன் “இசைத் தென்றல்” என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம்.

அப்போது எனது அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக் கொண்டேன். தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக் கருவி(keyboard) வாசிப்பவராக இருந்தார்.  அத்துடன் வாத்தியக் கருவி ஒருங்கமைப்பாளராக(orchestrator)வும் இருந்தார்.  அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள்.

மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன்,  அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள்.  நான் பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது  என்று பொறுப்புக்களை  கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று தங்கி இசைத் தட்டு வெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன்.  

என் நண்பனும்,  எனது இசைக் குழுவில் முக்கிய நபராக இருந்த மகேஷ் எனக்கு பொருளாதார ரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிட கூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்யவில்லை.  

நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும்பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை இசைக் கலைஞர்களையம் நாடினேன். அவர்கள் மிகவும் திறமையான வாத்திய இசைக் கலைஞர்கள்.

அந்தக் காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது, அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும்பொழுது அவர்களை பயன்படுத்தி ஒழுங்கு செய்தேன்.

அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notationதான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வாரத் தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான் அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையானவற்றை கேட்டும், சொல்லியும்,  பாடியும் பெற்றுக் கொண்டேன்.

அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்கு உதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் Pappa Myskin அவர்கள்.  மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி  கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத் தரம் இணைத்தவர்கள்.

ஆனால், இந்த நேரத்தில்.. இப்போதைய காலக்கட்டத்தில் எனது தம்பி “அனைத்துப் பாடல்களையும் நான்தான் இசையமைத்தேன்…” என்று சொல்வது பச்சைப் பொய். அத்துடன் “நான்தான் சகல ஸ்வாரத் தட்டுகளை notation எழுதினேன்” என்று சொல்வது அந்த ஹிந்துஸ்தானிய notation-களை எழுதிய சகல கலைஞர்களையும் அவமானப்படுத்தும் பொய்யாகும்.

இதை, நான் இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன்.  இசைத் தட்டுகளில், இசையமைப்பில் ஏன் அவர் பெயர் இருக்கின்றது என்று சிலர் கேட்டனர். தனது பெயரை போடாமல்விட்டால் பிரிந்துவிடுவேன் என்று சொல்வார். அதனால்தான் போட வேண்டியதாகிவிட்டது.

எனக்குத் தெரியாமல் record-ல் பெயர்களை மாற்றினார். records print ஆகி வரும்பொழுதுதான் நானே அதைப் பார்த்தேன். அப்போதே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், எதையும் மாற்ற முடியவில்லை… அதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை.

இசையமைப்பில் வேண்டுமென்றே என் அனுமதியின்றி அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். என் பெயரை அதிலிருந்து அவர் அழிக்காமல்விட்டது எனது அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் தம்பிதானே என்று விட்டு விட்டேன்.

தனது பெயரை உரிமை இல்லாமல் போட்ட பின்னரும் என்னை  விட்டு பிரிந்து போய் சொந்தமாக இசைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் காலத்தில் அவர் வேண்டுமென்றே செய்த தவறை இன்றும் கடைபிடிக்கிறார்.

இத்தனை காலமும் நான் இதைப் பற்றி பொருள்படுத்தாமல் இருந்தேன். குடும்ப விடயம் என்று கருதி வெளியில் பேசுவதில்லை. இப்பொழுது நான் பேசியாக வேண்டும்.

நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் பிரபாலினிதான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமை கொண்டாட என் அனுமதி இல்லை. இசையமைப்புக்கும், வாத்தியக் கருவி ஒருங்கமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத என் தம்பி இன்றும் குழப்பத்தில் “எனது பாடல்களுக்கெல்லாம் நான்தான் இசையமைப்பாளர்” என்று சொல்லிக் கொள்வது தவறு மற்றும் பொய்.

என் மனைவிக்கு என் காதலை தெரிவிக்க நான் எழுதி இசையமைத்து பாடிய “உனக்கு தெரியுமா” பாடலுக்கும் இதுதான் நிலைமை…” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.  

கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அண்ணா அவர்கள்.  இதுவரையிலும் 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார்,

ஆனாலும், பொருளாதார ரீதியில் எல்லாவற்றையும் தரமான முறையில் பதிவு செய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை மட்டுமே பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார்.

இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார்.

M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான  மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள்கூட மறந்துவிட்டார்கள்  என்பது கவலைக்குரிய விடயம்தான். 1986-ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார்.

அவர் மனைவி மாலினி 2000-ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகளான, ஈழத்து மெல்லிசை குயில் “பிரபாலினி பிரபாகரன்” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.

பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்கப்படுபவர் இந்த ஈழத் தமிழ் மகள்.

கடந்த ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழாவைக் கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பல விருதுகளை பெற்ற பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றி மணி பத்திரிகையின்  வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார்.     

இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

பரமேஷ் அவர்களின் பாடல்களை  itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.


https://tamilcinetalk.com/tamil-eelam-singer-music-director-m-p-paramesh-story/?fbclid=IwY2xjawQHO3BleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe2q5jz2lmVoJjwhQzLpT-_KzevRtxbdRhbeZO_gmz0eVEv49ugEjaVTP1z4Y_aem_F1pbhkZepXLubhEFf3n9wg

அவுஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது

4 days 6 hours ago

அவுஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது

20 Feb, 2026 | 02:28 PM

image

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது.

மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அவரது தலைமையில், வீடற்றவர்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது அர்ப்பணிப்பான சமூகப் பணியை முன்னிட்டு, வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“ஆண்டின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையும் பொறுப்பும் அளிக்கிறது. இது எனது சேவையை மேலும் சிறப்பாக செய்யும் உந்துதலை அளிக்கிறது” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

“ஒரு நல்ல குடிமகனாக இருப்பது என்பது, சமூகத்தின் நலனுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகும். நமது சிறிய செயல்களே தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன்.

இந்த விருது எனது சேவை, பொறுப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் உறுதியை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மோசஸ் வேதமுத்துவின் இந்த சாதனை, தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

WhatsApp_Image_2026-02-20_at_2.09.32_PM.

https://www.virakesari.lk/article/239154

Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்

1 week 3 days ago

Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ?

இப்படியும் செய்யலாமா?

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

1 week 3 days ago

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

இலங்கை, பிரிட்டன், புதிய விசா விதிகள்

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள மொழி சேவை

  • 14 பிப்ரவரி 2026, 02:56 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும்.

பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார்.

தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது.

காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம்.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Mahesh Kelum

படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது'

பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர்.

ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர்.

"இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ்.

இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார்.

2023-ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்'

கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார்.

தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார்.

"ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குஷானி சுரவீரா இலங்கையை விட்டு கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை'

குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

"நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும்.

அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி.

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார்.

'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்'

"இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார்.

தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார்.

காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Kanchana Ranasinghe

படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

"எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார்.

பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன?

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர்.

அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன?

தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

  • குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது.

  • பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

1 week 4 days ago

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on February 12, 2026 by சமர்வீரன்

60 0

K800_KTP-MN-151-300x200.jpg

வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர்.

அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன.

தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது.

K800_KTP-MN-3.jpg

K800_KTP-MN-84.jpg

K800_KTP-MN-125.jpg

K800_KTP-MN-126.jpg

K800_KTP-MN-119.jpg

K800_KTP-MN-120.jpg

K800_KTP-MN-121.jpg

K800_KTP-MN-122.jpg

K800_KTP-MN-123.jpg

K800_KTP-MN-124.jpg

K800_KTP-MN-113.jpg

K800_KTP-MN-114.jpg

K800_KTP-MN-115.jpg

K800_KTP-MN-116.jpg

K800_KTP-MN-117.jpg

K800_KTP-MN-118.jpg

K800_KTP-MN-107.jpg

K800_KTP-MN-108.jpg

K800_KTP-MN-109.jpg

K800_KTP-MN-110.jpg

K800_KTP-MN-111.jpg

K800_KTP-MN-112.jpg

K800_KTP-MN-102.jpg

K800_KTP-MN-103.jpg

K800_KTP-MN-104.jpg

K800_KTP-MN-105.jpg

K800_KTP-MN-106.jpg

K800_KTP-MN-96.jpg

K800_KTP-MN-97.jpg

K800_KTP-MN-98.jpg

K800_KTP-MN-99.jpg

K800_KTP-MN-100.jpg

K800_KTP-MN-101.jpg

K800_KTP-MN-90.jpg

K800_KTP-MN-91.jpg

K800_KTP-MN-92.jpg

K800_KTP-MN-93.jpg

K800_KTP-MN-94.jpg

K800_KTP-MN-95.jpg

K800_KTP-MN-85.jpg

K800_KTP-MN-86.jpg

K800_KTP-MN-87.jpg

K800_KTP-MN-88.jpg

K800_KTP-MN-89.jpg

K800_KTP-MN-78.jpg

K800_KTP-MN-79.jpg

K800_KTP-MN-80.jpg

K800_KTP-MN-81.jpg

K800_KTP-MN-82.jpg

K800_KTP-MN-83.jpg

K800_KTP-MN-71.jpg

K800_KTP-MN-72.jpg

K800_KTP-MN-73.jpg

K800_KTP-MN-74.jpg

K800_KTP-MN-75.jpg

K800_KTP-MN-76.jpg

K800_KTP-MN-77.jpg

K800_KTP-MN-66.jpg

K800_KTP-MN-67.jpg

K800_KTP-MN-68.jpg

K800_KTP-MN-69.jpg

K800_KTP-MN-70.jpg

K800_KTP-MN-59.jpg

K800_KTP-MN-60.jpg

K800_KTP-MN-61.jpg

K800_KTP-MN-62.jpg

K800_KTP-MN-63.jpg

K800_KTP-MN-64.jpg

K800_KTP-MN-65.jpg

K800_KTP-MN-54.jpg

K800_KTP-MN-55.jpg

K800_KTP-MN-56.jpg

K800_KTP-MN-57.jpg

K800_KTP-MN-58.jpg

K800_KTP-MN-48.jpg

K800_KTP-MN-49.jpg

K800_KTP-MN-50.jpg

K800_KTP-MN-51.jpg

K800_KTP-MN-52.jpg

K800_KTP-MN-53.jpg

K800_KTP-MN-41.jpg

K800_KTP-MN-42.jpg

K800_KTP-MN-43.jpg

K800_KTP-MN-44.jpg

K800_KTP-MN-45.jpg

K800_KTP-MN-46.jpg

K800_KTP-MN-47.jpg

K800_KTP-MN-33.jpg

K800_KTP-MN-34.jpg

K800_KTP-MN-35.jpg

K800_KTP-MN-36.jpg

K800_KTP-MN-37.jpg

K800_KTP-MN-38.jpg

K800_KTP-MN-39.jpg

K800_KTP-MN-40.jpg

K800_KTP-MN-26.jpg

K800_KTP-MN-27.jpg

K800_KTP-MN-28.jpg

K800_KTP-MN-29.jpg

K800_KTP-MN-30.jpg

K800_KTP-MN-31.jpg

K800_KTP-MN-32.jpg

K800_KTP-MN-19.jpg

K800_KTP-MN-20.jpg

K800_KTP-MN-21.jpg

K800_KTP-MN-22.jpg

K800_KTP-MN-23.jpg

K800_KTP-MN-24.jpg

K800_KTP-MN-25.jpg

K800_KTP-MN-11.jpg

K800_KTP-MN-12.jpg

K800_KTP-MN-13.jpg

K800_KTP-MN-14.jpg

K800_KTP-MN-15.jpg

K800_KTP-MN-16.jpg

K800_KTP-MN-17.jpg

K800_KTP-MN-18.jpg

K800_KTP-MN-4.jpg

K800_KTP-MN-5.jpg

K800_KTP-MN-6.jpg

K800_KTP-MN-7.jpg

K800_KTP-MN-8.jpg

K800_KTP-MN-9.jpg

K800_KTP-MN-10.jpg

K800_KTP-MN-1.jpg

K800_KTP-MN-2.jpg

K800_KTP-MN-154.jpg

K800_KTP-MN-155.jpg

K800_KTP-MN-156.jpg

K800_KTP-MN-157.jpg

K800_KTP-MN-148.jpg

K800_KTP-MN-149.jpg

K800_KTP-MN-150.jpg

K800_KTP-MN-151.jpg

K800_KTP-MN-152.jpg

K800_KTP-MN-153.jpg

K800_KTP-MN-144.jpg

K800_KTP-MN-145.jpg

K800_KTP-MN-146.jpg

K800_KTP-MN-147.jpg

K800_KTP-MN-137.jpg

K800_KTP-MN-138.jpg

K800_KTP-MN-139.jpg

K800_KTP-MN-140.jpg

K800_KTP-MN-141.jpg

K800_KTP-MN-142.jpg

K800_KTP-MN-143.jpg

K800_KTP-MN-130.jpg

K800_KTP-MN-131.jpg

K800_KTP-MN-132.jpg

K800_KTP-MN-133.jpg

K800_KTP-MN-134.jpg

K800_KTP-MN-135.jpg

K800_KTP-MN-136.jpg

K800_KTP-MN-127.jpg

K800_KTP-MN-128.jpg

K800_KTP-MN-129.jpg

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

1 week 5 days ago

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

February 12, 2026 11:53 am

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

2 weeks 1 day ago

Police.jpg?resize=750%2C375&ssl=1

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, 

சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். 

அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது.

Image

https://athavannews.com/2026/1463740

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!

2 weeks 2 days ago

images?q=tbn:ANd9GcRoDKgxSlJ1BZesz5I_aaf images?q=tbn:ANd9GcT_SPa5_BaMz_vLlqaCUAh

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!

ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.

கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

HR Tamil News

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

2 weeks 5 days ago

IMG-20260204-WA0082.jpg?resize=750%2C375

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியை தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20260204-WA0081.jpg?resize=600%2C450&ssl=1 IMG-20260204-WA0080.jpg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2026/1463312

📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!

2 weeks 6 days ago

📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!

adminFebruary 3, 2026

covid.png?fit=717%2C717&ssl=1

கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

🚨 இவர்கள் மீது முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இயங்காத நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்றது. அதிக கடன் பெறுவதற்காக நிறுவனத்தின் வருவாயை மிகைப்படுத்திக் காட்டியது. வணிக வளர்ச்சிக்காகப் பெறப்பட்ட பணத்தை தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்கும், சொத்துக்கள் வாங்கவும் பயன்படுத்தியது.

⚖️ இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய அரசாங்கம் மற்றும் புலனாய்வுத் துறையினர் இந்த மோசடிகளைக் கண்டறியத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக:

  1. பல வணிகர்களின் இயக்குநர் தகுதி (Directorship) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  2. மோசடி செய்யப்பட்ட நிதியைத் திரும்பப் பெற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  3. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

⚖️ சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள்: ஒரு விரிவான பார்வை

கொவிட் காலத்தில் பெறப்பட்ட கடன்களை (Bounce Back Loans) வணிக வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், சொந்த லாபத்திற்காகவோ அல்லது போலி கணக்குகள் மூலமாகவோ கையாடல் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தற்போது “Zero Tolerance” கொள்கையை கடைபிடிக்கிறது.

  1. இயக்குநர் தகுதி நீக்கம் (Director Disqualification)

இதுவே தற்போது மிக அதிகமாக எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் 2 முதல் 15 ஆண்டுகள் வரை எந்தவொரு நிறுவனத்திற்கும் இயக்குநராக இருக்க முடியாது.

2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 736 இயக்குநர்கள் கொவிட் கடன் மோசடிக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சராசரி தடைக்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

இவர்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் தொழிலை நிர்வகிக்கவோ முடியாது. தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

  1. கைது மற்றும் சிறைத்தண்டனை (Arrests & Imprisonment)

கடுமையான மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) பதியப்படுகின்றன.

தேசிய புலனாய்வு அமைப்பு (NATIS) மற்றும் திவால் சேவை (Insolvency Service) இணைந்து இதுவரை நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தி பலரைக் கைது செய்துள்ளன.

சமீபத்திய தீர்ப்புகளில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (சில சமயங்களில் இடைநிறுத்தப்பட்ட தண்டனை – Suspended Sentence) மற்றும் கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  1. சொத்து முடக்கம் மற்றும் நிதி மீட்பு (Asset Seizure)

அரசாங்கம் இழந்த பணத்தை மீட்க புதிய சட்ட அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

‘Public Authorities (Fraud, Error and Recovery) Bill’ மூலம் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும், அவர்களின் வீடுகள் அல்லது சொத்துக்களை சோதனை செய்து கைப்பற்றவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் £1.8 பில்லியன் மதிப்பிலான நிதி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை விற்று அரசாங்கக் கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  1. நிறுவனங்களை கலைக்கத் தடை (Blocking Dissolution)

கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பிப்பதற்காக பல வணிகர்கள் தமது நிறுவனங்களை மூடுவதற்கு (Dissolve) முயற்சி செய்கின்றனர். அரசாங்கம் தற்போது இத்தகைய நூற்றுக்கணக்கான நிறுவனங்களை மூடுவதற்கு தடை விதித்துள்ளது. கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை அல்லது விசாரணை முடியும் வரை நிறுவனத்தைக் கலைக்க முடியாது.

முக்கிய குறிப்பு: உங்கள் நிறுவனம் முறையாக இயங்கி, அரசாங்க விதிகளைப் பின்பற்றி கடன் பெற்றிருந்தால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், வருமானத்தை மிகைப்படுத்திக் காட்டியிருந்தாலோ அல்லது பணத்தை தனிப்பட்ட தேவைக்கு மாற்றியிருந்தாலோ உடனடியாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

சமீபத்தில் ஜனவரி 2026-ல், இரண்டு கொவிட் கடன்களைப் பெற்ற ஒரு வணிகருக்கு 18 மாத சிறைத்தண்டனையும், £5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் பெற்ற பணத்தில் பெரும் பகுதியைத் திருப்பிச் செலுத்திய போதிலும் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையாக வரி செலுத்தி வணிகம் செய்யும் சமூகத்தின் பெயருக்கு, இத்தகைய சிலரின் பேராசை பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது கவலைக்குரியது.

https://globaltamilnews.net/2026/228331/

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன்

1 month ago

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன்

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 04:06 PM

image

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக் காலத்திலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், தற்போது இது பிரித்தானிய அரசியல் நாட்காட்டியில் ஒரு வருடாந்த நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வில் பிரித்தானிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள், சமூக தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், அரச பணியாளர்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தலைமுறை தாண்டி பல துறைகளில் பிரித்தானிய சமூக வளர்ச்சிக்கு தமிழர்கள் வழங்கி வரும் பங்களிப்பை இந்த நிகழ்வு பிரதிபலித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது உரையில், இந்த நிகழ்வு அங்கீகாரத்தையும் புதுப்பிப்பையும் குறிக்கும் ஒன்றாகும் என தெரிவித்தார்.

“பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் திடநம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார்.

தனது பெற்றோர் இலங்கையில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியாவில் கடினமாக உழைத்ததாகவும், அந்தக் கதையே லண்டன் முழுவதும் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்குப் பொதுவான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தைப்பொங்கல் அறுவடையையும் நம்பிக்கையையும் குறிக்கும் திருநாளாகும் என அவர் குறிப்பிட்டதுடன், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழ் பழமொழி புதிய ஆண்டிற்கான புதுமையும் முன்னேற்றத்தையும் குறிக்கிறது என்றார்.

மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகை மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது அரசின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, போர் குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விதித்துள்ள தண்டனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

WhatsApp_Image_2026-01-22_at_3.44.44_PM.

WhatsApp_Image_2026-01-22_at_3.44.35_PM.

WhatsApp_Image_2026-01-22_at_3.44.04_PM.

https://www.virakesari.lk/article/236721

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

1 month ago

images?q=tbn:ANd9GcSQK-0Bj7u1SgetBTrjUCq

சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக...

(City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

வாழ்த்துகள் ஜெயக்குமார்.

Inuvaijur Mayuran

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!

1 month 1 week ago

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!

adminJanuary 16, 2026

uk1.jpg?fit=800%2C450&ssl=1

இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.

uk2.jpg?resize=800%2C450&ssl=1

“அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.”

பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார்.

https://globaltamilnews.net/2026/226663/

பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை

1 month 1 week ago

பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%

பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணையில் ஜோசப் கே.வின் மகள் தாயாருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

அதேவேளை, ஜோசப் கேவின் வதிவிட அனுமதி காலவதியான நிலையில், அவர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்தினருடன் அவர் இணைந்து இருப்பது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இலங்கை தமிழரான ஜோசப் கே.க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://akkinikkunchu.com/?p=356145

கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்

1 month 1 week ago

கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்

image_2d88927900.jpg

கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது.

அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மதுபான விற்பனை குறைந்து வருவதும் மற்றுமொரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. முன்பு மதுபான விற்பனை உணவகங்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டி தந்ததால் செலவுகளை ஈடுகட்ட முடியுமாக இருந்தது.

ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும் மக்கள் இப்போது குறைவாகவே மதுபானம் அருந்துகின்றனர். இதனால், உணவகங்கள் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்கின்றன.

இந்நிலையில், உள்ளூர் சமூகங்களுக்கு தனித்துவமான உணவுகளை வழங்கும் சிறு உணவகங்கள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பெருந்தொகையான உணவகங்கள் மூடப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர்.

கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகளவான தமிழர்கள் உணவகங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கனடாவில்-தமிழர்கள்-வேலைவாய்ப்பை-இழக்கும்-அபாயம்/50-371011

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

1 month 2 weeks ago

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர்.

இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/

Checked
Tue, 02/24/2026 - 22:39
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed