வாழும் புலம்

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல்

3 hours 7 minutes ago
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல்
 

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவு- அறிக்கையில் தகவல்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/247481

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை

1 day 2 hours ago
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை

Published By: Rajeeban

31 Mar, 2023 | 01:04 PM
image

பலதசாப்த காலமாக  தமிழ் மக்கள்  எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை இலங்கை மேலும் பல வருடங்களிற்கு தொடரமுடியும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

Sabry-and-Wijeyadasa-6.jpg

இலங்கையின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்களிற்கு குறிப்பாக சீருடை மற்றும் காவி உடை அணிந்தவர்களின் குற்றங்களை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களிற்கு இலங்கை அரசாங்கத்தின் இந்த வகையான சூழ்ச்சிகள் புதியவை இல்லை எனவும் பிரித்தானியதமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம்  மற்றும் பேரினவாத பௌத்த மதகுருமாரை பாதுகாப்பது குறித்த அதன் வரலாறு சுயவிளக்கமளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை தானகவே உருவாக்கிக்கொண்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து உலகம் பெருமளவிற்கு அனுதாபம் கொண்டுள்ள போதிலும் இலங்கையின் தமிழ் மக்கள் பொருளாதாரம் கழுத்தை நெரித்தல் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை என்ற இரட்டை முனை கொண்ட வாளை எதிர்கொள்கின்றனர் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள தவறிவிட்டது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இராணுவமயமாக்கல் (19 படையணிகளில் 16 படையணிகள் தமிழர் தாயாகத்திலேயே உள்ளன,) தமிழர்தொல்பொருட்கள் அழிக்கப்படுதல் வரலாற்று ரீதியாக இந்து கோவில்கள் காணப்படும் பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் பெருமளவில்  ஏற்படுத்தப்படுதல் தமிழ் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுதல் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் ஸ்திரமிழக்க செய்யப்படுதல் தமிழ் மக்களை அவர்களின் தாயகத்திலேயே பகைத்தல் இலங்கையில் தமிழ் மக்கள் இன்னமும் எதிர்கொள்ளும் முடிவற்ற நெருக்கடிகளாக காணப்படுகின்றன என  பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையின் கீழ் மூடிமறைக்கப்படுகின்றன எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் வரலாற்றை மூடி மறைப்பதற்காக  ஆணைக்குழுக்களையும் விசாரணைகளையும் தனது தீமைகள் மறக்கப்பட்டு மறையும் வரை அதற்கான கால அவகாசத்தை பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதற்கு அப்பாலும் இலங்கையின் இரு அமைச்சர்கள் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் இலங்கை விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்க பாணியை எவ்வாறு பயன்படுத்துவது என ஆராய்வதற்காகவே இந்த கற்றல் பயணம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அத்தகைய முயற்சி புரளியை தவிர வேறு இல்லை சர்வதேச சமூகத்தை குறிப்பாக எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கப்போகும் நாடுகளை ஏமாற்றுவதற்கான முயற்சியே இதுஎனவும் பிரித்;தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/151834

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

5 days 21 hours ago
கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

K800_KT2023-Nord-52-300x200.jpgதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது.

அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்றது. பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களின் நிலைகள் அறிவிக்கப்பட்டது. அதேவேளை அவர்களுக்கான மதிப்பளிப்பு எமது 33ஆவது அகவை நிறைவு விழா அரங்கிலே வழங்கப்படவுள்ளது. போட்டி முடியும்வரை அமைதியாக இருந்த மக்கள் திரள் நிறைவாகத் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வடமாநிலத் தமிழாலயங்களிடையான கலைத்திறன் போட்டி 2023 நிறைவுற்றது.

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023

K800_1043-300x200.jpgஎம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிஇ இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது.
தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள்இ பெற்றோர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென ஒருங்கிணைந்ததோடுஇ அரங்காற்றுவோரும் கலைச் சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது.

09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டிஇ கலைத்திறனை வெளிப்படுத்தி முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றதைத் தொடர்ந்துஇ நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது.

K800_1144.jpg
K800_1137.jpg
K800_1129.jpg
K800_1120.jpg
K800_1113.jpg
K800_1106.jpg
K800_1095.jpg
K800_1086.jpg
K800_973.jpg
K800_984.jpg
K800_1008.jpg
K800_1027.jpg
K800_1043.jpg
K800_1051.jpg
K800_1063.jpg
K800_1076.jpg
K800_963.jpg
K800_939.jpg
K800_926.jpg
K800_902.jpg
K800_899.jpg
K800_893.jpg
K800_876.jpg
K800_872.jpg
K800_772.jpg
K800_784.jpg
K800_796.jpg
K800_802.jpg
K800_817.jpg
K800_824.jpg
K800_848.jpg
K800_858.jpg
K800_667.jpg
K800_669.jpg
K800_672.jpg
K800_699.jpg
K800_717.jpg
K800_729.jpg
K800_737.jpg
K800_739.jpg
K800_656.jpg
K800_627.jpg
K800_613.jpg
K800_570.jpg
K800_562.jpg
K800_539.jpg
K800_524.jpg
K800_521.jpg
K800_404.jpg
K800_434.jpg
K800_439.jpg
K800_442.jpg
K800_467.jpg
K800_475.jpg
K800_480.jpg
K800_499.jpg
K800_402.jpg
K800_388.jpg
K800_356.jpg
K800_334.jpg
K800_329.jpg
K800_290.jpg
K800_285.jpg
K800_260.jpg
K800_110.jpg
K800_147.jpg
K800_155.jpg
K800_193.jpg
K800_203.jpg
K800_217.jpg
K800_226.jpg
K800_253.jpg
K800_103.jpg
K800_76.jpg
K800_64.jpg
K800_54.jpg
K800_48.jpg
K800_38.jpg
K800_33.jpg
K800_28.jpg
K800_13.jpg

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023 – குறியீடு (kuriyeedu.com)

துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி?

3 weeks 1 day ago

துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி?

துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி?

ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது.

அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை!

3 weeks 2 days ago
மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை!

March 9, 2023

 

இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள்

தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆணடு கார்த்திகை மாதம் 7ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் திகதி வரை குலதுங்க ஜோசப் முகாம் (SFHQ-W) தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ICPPG அவர் பங்கேற்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு அனுப்பப்பட்டது போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல குறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் குழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு தீவிரமான செய்தியை அனுப்புமாறும் கோரியுள்ளது. இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.

ICPPG பணிப்பாளர் திருமதி அம்பிகை செல்வகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

https://globaltamilnews.net/2023/188434/

சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது!

3 weeks 6 days ago
சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது!
சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது.
2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.
தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான வீசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.
இந்த பின்னணியில் பிரித்தானியா தங்களது குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தநிலையில், புதிய திருத்தங்களுடன் இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அந்த நாட்டு உள்துறை செயலாளர் சுவெல்ல பிரேவமானினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செயல்பாட்டிற்கு அமைச்சர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தமது ஐந்து முன்னுரிமை நடவடிக்கைகளில், ‘படகுகளை கட்டுப்படுத்தல்’ என்ற விடயத்தையும் உள்ளடக்கியுள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டம் மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது என தெரிவித்துள்ளதுடன், அது கவலையளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா

1 month ago
ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி)

0893bc11-ae98-4004-bf23-1db1e033ad13-300மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக, பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து Conservative, Labour தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எமது நீதிக்காய் காத்திரமான பங்களிப்பை வலியுறுத்தியவாறு தொடரும் பயணமானது, இன்று மாலை Labour கட்சியை சார்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான Siobhain McDonagh அவர்களுடைய அலுவகத்தில் சந்திப்பினை தொடர்ந்து முதலாவது நாளுக்கான ஈருருளிப்பயணம் முடிவு பெறும் .
தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.

Video Player
 
00:00
 
02:00
93382350-bc9c-4f8c-b650-03e356127ff5.jpe
e1e345a9-59e4-4472-9cf2-b15ea3e550721.jp
090d5533-ae55-44ab-852f-98c77baf033b.jpe
0893bc11-ae98-4004-bf23-1db1e033ad13.jpe
d5fccea1-9b97-45ac-bba0-34b74b8a8e46.jpe
e1e345a9-59e4-4472-9cf2-b15ea3e55072.jpe
WhatsApp-Image-2023-02-17-at-17.36.32-1.
WhatsApp-Image-2023-02-17-at-17.36.32.jp
WhatsApp-Image-2023-02-17-at-17.36.31-1.
WhatsApp-Image-2023-02-17-at-17.36.31.jp

ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி) – குறியீடு (kuriyeedu.com)

ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி

1 month 1 week ago

சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்

1 month 1 week ago
சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர்

இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

swiss-300x200.png

சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார்.

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது.

அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/240077

 

தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு

1 month 2 weeks ago
தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு 8-13.jpg

லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு மாணவர் அமைப்புகளின் கையெழுத்தோடு கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை அழைப்பதற்கு பல காரணங்களை முன்வைத்து அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், 1995 கடற்படைத் தேவாலய குண்டுவெடிப்பு, 1995 நாகர்கோவில் பள்ளி படுகொலை, 1996 குமாரபுரம் படுகொலை, 1998 தம்பலகாமம் படுகொலைகள் மற்றும் 1999 புதுக்குடியிடுப் படுகொலை உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை மேற்கோள் காட்டியுள்ள மாணவர்  சந்திரிக்காவை அழைத்திருப்பதை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=238296

 

 

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ்.

1 month 2 weeks ago
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ்.

#K1024_UNO-06.03.jpg

 

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். – குறியீடு (kuriyeedu.com)

சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா

1 month 2 weeks ago
சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா

WhatsApp-Image-2023-02-12-at-13.41.07-15கடந்த வாரம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு பிரித்தானிய தமிழ் மக்களும் இணைந்து கரம் கொடுக்கும் பணியை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
முன்னெடுத்து வருகின்றது.

WhatsApp-Image-2023-02-12-at-13.41.07.jp
WhatsApp-Image-2023-02-12-at-13.41.05-1.
WhatsApp-Image-2023-02-12-at-13.41.05.jp
WhatsApp-Image-2023-02-12-at-13.41.04-1.
 

சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா – குறியீடு (kuriyeedu.com)

என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் என பிரிட்டன் நீதிமன்றில் சத்தமிட்ட இலங்கை தமிழர் - நடந்தது என்ன?

1 month 2 weeks ago

பிரிட்டனில் கடந்த வருடம் இடம்பெற்ற குதிரை காவலர் படையின் அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை நபர் நீதிமன்றத்தில் என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் என சத்தமிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது கந்தையா எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும் நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளார்  

2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களை இணையத்தில் பார்வையிட்டுள்ளார்.

எனினும் நீதிமன்றத்தில் குதிரை காவல்படையினர் தன்னை சுட்டுக்கொல்வார்கள் என்பதற்காகவே தான் அவர்களை நோக்கி கத்தியுடன் ஓடியதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னை சுடவேண்டும் என விரும்பினேன் என அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது அவர் என்னை இலங்கைக்கு செல்லவிடுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.‘F*** off! You can f*** off Britain. I want to go back to Sri Lanka!’

அதன் பின்னர் அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் அவர் எவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களை நோக்கி ஓடினார் என்பதை நீதிமன்றத்திற்கு அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.

என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் என பிரிட்டன் நீதிமன்றில் சத்தமிட்ட இலங்கை தமிழர் - நடந்தது என்ன? | Virakesari.lk

சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு 

2 months ago
சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு 

spacer.png

சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

https://www.thaarakam.com/news/d49be552-3e92-48ff-a546-cb3a37390a97

தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் –  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை

2 months ago
தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் –  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை
தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்கள் ஏற்பட்டதாகவும் சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்தையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

 

https://athavannews.com/2023/1322088

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2 months ago
கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை! lead_large.jpg ** ADVANCE FOR SUNDAY, JAN. 27 ** Prisoners reach through the bars in the F Cellhouse at the Oklahoma State Penitentiary in McAlester, Okla., where they are housed in old-fashioned cells with metal bars, Friday, Jan. 18, 2008. Sometimes they use small mirrors to get a glimpse of their neighbors and the correctional officers. (AP Photo)

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன.

அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார்.

அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://akkinikkunchu.com/?p=236368

 

ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்!

2 months 1 week ago
ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்! 9-17.jpg

கனேடிய அரசு ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை வரவேற்றுள்ள கனேடிய தமிழ் அமைப்புகள், பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாகவும் கனடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான பயணத்தடையை மேற்கொள்ளுமாறு கோருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தகவல்களையும் தமது மனுக்களில் இணைப்பதற்காக ஆராய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பிள்ளையானின் சகாக்களின் தகவல்களும் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 29ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://akkinikkunchu.com/?p=236102

ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை

2 months 2 weeks ago
ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை 13-9.jpg

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு தடை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை உலகத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

முற்போக்கான நாடுகளும் தடை விதிக்கவேண்டும்

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூஷிலாந்து உட்பட ஏனைய முற்போக்கான நாடுகளும் அவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மொத்தமாகவும் முழுமையாகவும் மீறியதற்காக, மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா அண்மையில் தடைகளை விதித்தது.

மனித உரிமை மீறல்

அத்துடன் இலங்கையின் இராணுவப் பணிப்பாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதே இரண்டு இராணுவ அதிகாரிகளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவினால் முன்னதாக தடைக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.

இதனை விட முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் இரகசிய இராணுவ படைப்பிரிவின் தலைவர் பிரபாத் புலத்வத்த ஆகியோருக்கும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல்

இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் கனேடிய அரசாங்கங்களின் நடவடிக்கைகளையும், அந்த நாடுகள் நீதி  சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக நிற்பதை வரவேற்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்படாத நிலையில், சர்வதேச சமூகம் ஒருதலைப்பட்சமான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய விக்ரமசிங்க நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

 

 

https://akkinikkunchu.com/?p=235519

கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?

2 months 2 weeks ago
கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?
மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கைக்குலுக்குவது, கைக்கோர்த்து நடப்பது, ஒருவரை ஒருவர் ஹக் செய்வது, தொட்டு பேசுவது என எந்த விதமான நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.
கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?
கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?ட்விட்டர்
 

லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவ மாணவிகள் ஒருவரோடு ஒருவர் கைக்குலுக்கிக் கொள்ளக் கூடாது, கட்டி அணைத்துக்கொள்ள கூடாது போன்ற புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

மாணவர்கள் ரிலேஷன்ஷிப்புக்குள் போகக்கூடாது என்பதால் இப்படியான சட்டத்தை போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 
newssensetn%2F2023-01%2F93eef8d5-34e6-40
 

லண்டனின் வடகிழக்கு பகுதியிலுள்ள க்லெம்ஸ்ஃபோட் என்ற இடத்தில் ஹைலாண்ட்ஸ் பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் தொட்டு பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவலளித்த பள்ளி மேலாண்மை, “உங்கள் குழந்தைகளின் நலன் கருதியே இப்படியான சட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

 

மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கைக்குலுக்குவது, கைக்கோர்த்து நடப்பது, ஒருவரை ஒருவர் ஹக் செய்வது, தொட்டு பேசுவது என எந்த விதமான நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.

இந்த செயல்களை “முரட்டுத்தனமானது” என்று பள்ளி நிர்வாகம் வரையறுத்துள்ளது

”மாணவர்கள் சகஜமாக பழகுவதாக நினைத்து இவ்வாறான செயல்பாடுகளை வெளிப்படுத்தலாம். ஆனால், சிலருக்கு இது அசௌகரியத்தை தரக்கூடும். சிலர் இதனால் பாதிக்கப்படலாம், அல்லது காயங்கள் கூட ஏற்படலாம்” எனக் காரணம் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

பள்ளி வளாகத்துக்குள் யாரும் காதலிக்கவும் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது

மேலும் மாணவர்கள் பள்ளியில் தொலைப்பேசியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக இல்லை. இதற்கு மாணவர்கள், பெற்றோர் என இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

https://www.newssensetn.com/world-news/school-bans-pupils-from-all-forms-of-physical-contact-even-hugs-and-handshakes-to-prevent-relationships

பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள்

2 months 3 weeks ago
பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள்

23-63ba0e9fa6407-300x200.jpgபிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது.

எதிர்வரும் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன.

ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரிசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இப்பெருநாளினை மையப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல பரிசில்கள் வழங்கும் வகையில் நல்வாய்ப்பு சீட்டும் வர்த்தக நிலையில் வழங்கப்படுகின்றது.

இயல் இசையென தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமிக்க, பரிஸ் 10ம் வட்டார நகரசபையின் அங்கீகாரத்துடனும், வட்டார காவல்துறையின் ஒத்துழைப்புடனும் வெளியரங்க நிகழ்வாக இது அமைய இருக்கின்றது.

இது தொடர்பில் இலங்கை – இந்திய வர்த்தக சங்கம் ஜனவரி 5ம் நாள் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, இந்நிகழ்வு தொடர்பான விபரங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.பிரான்ஸ் வாழ் தமிழர்களின் ஓர் அடையாளமாக லா சப்பல் தமிழர் வர்த்தக மையமானது, பிரெஞ்சு ஊடகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் என பல்வேறு மட்டங்களிலும் ஓர் அங்கீகாரத்தினை பெற்றுள்ள நிலையில், இப்பகுதியில் தமிழர்களின் பண்பாட்டு பெருநாளாகிய தைத்திருநாளினை கொண்டாடுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைவதோடு, இதன்பால் கிடைக்கின்ற சமுக,பண்பாட்டு அங்கீகாரமானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு புதிய கதவுகளை பிரெஞ்சு தேசத்தில் திறக்கும் என்ற நம்பிக்கையினை சங்கத்தின் தலைவர் இராசையா சிறிதரன் வெளிப்படுத்தினார்.

வர்த்தகர்களின் நிகழ்வாக மட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் இணைத்த ஒர் கூட்டுநிகழ்வாக, 2 யூரோ பெறுமதியான நல்வாய்ப்பு சீட்டு வர்த்தக நிறுவனங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொருளாளர் ஏகாம்பரம் மதிவதணன் , நிகழ்வரங்கில் குலுக்கல் முறையில் அதிஷ்டம் பார்க்கப்படும் என்றார்.

கரகாரட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழர்களின் மரபுசார்ந்த கலைவடிவங்கள் நிகழ்வரங்கார அமைய இருப்பதோடு, நடனம், பாடல் , இசை என இயல் இசையோடு, தமிழர் திருநாள் தொடர்பில் பிரான்ஸ் மொழியில் காணொளி ஆவணம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது என உபதலைவர் வின்சன் றூபன் தெரிவித்திருந்தார்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்ற கோடைகால பெருநிகழ்வாக தேர்த்திருவிழா அமைவதுபோல், எதிர்காலத்தில் தமிழர் திருநாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுக்கின்ற குளிர்கால புத்தாண்டு நிகழ்வாக இப்பகுதியில் தைத்திருநாள் அமையும் என்ற நம்பிக்கையினை முன்னாள் தலைவரும்,செயற்குழு உறுப்பினருமாகிய செல்லத்துரை சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் – குறியீடு (kuriyeedu.com)

Checked
Sat, 04/01/2023 - 13:45
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed