கதை கதையாம்

சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -

3 days 23 hours ago

சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -

- ஶ்ரீரஞ்சனி -

சிறுகதை

14 டிசம்பர் 2025

women_meeting_at_temple2.jpg

sriranjani_AI7.jpgஇதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.

சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன்.

“ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா.


“ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.”

“ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ.

“மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.”

“ஓ!”

“சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....”

“ஓ, very sad, I am sorry.”

“அது ஒரு காலம்... ம்ம், சோகத்தைத்தவிர எதையும் பாத்ததில்லை. புதுப் பள்ளிக்கூடத்தில நான் தனிச்சுப்போயிருந்தன். என்ர பல் அசிங்கமாக இருக்கு, நான் வடிவில்லை எண்டெல்லாம் கேலிபண்ணிச்சினம். பள்ளிக்கூடம் போறதே பெரிய தண்டனை போலிருந்துது.”

“எவ்வளவு தூரம் நீங்க பாதிக்கப்பட்டிருந்திருப்பீங்க எண்டு விளங்குது.” மெல்லிய குரலில் சொன்னா அவ.

“அம்மா மொத்தத்திலை ஜடமாகவேயிருந்தா. போதாததுக்கு பணக் கஸ்டம் வேறை. அந்த நேரம் மிசிஸ் பரம் இருந்திருக்காட்டி நான் என்ன செய்திருந்திருப்பன் எண்டு நினைச்ச்சா, இப்பகூட எனக்கு நெஞ்சு கனக்கும். நான் பள்ளிக்கூடத்திலை சேந்த சில நாள்களிலைதான் அங்கை அவவுக்கு வேலை கிடைச்சிருந்தது. இளமையாயும் நல்ல வடிவாயும் இருந்த அவவை எல்லாரும் பிரமிப்போடைதான் பாப்பினம். ஒரு கட்டத்திலை என்ர பிரச்சினை அவவுக்கு விளங்கிச்சுதோ என்னவோ, வீட்டை வா, படிக்கலாமெண்டு தன்ர வீட்டுக்குக் கூப்பிட்டு அவ எனக்குப் பாடம் சொல்லித் தரத் தொடங்கினா. அதுக்குப் பிறகுதான் மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடை பழகத் துவங்கிச்சினம். அவவே என்னிலை கரிசனை காட்டுறா எண்டதுதான், அதுக்குக் காரணமா இருந்திருக்கலாமெண்டு நான் நினைக்கிறன்.”


“ஓ, விளங்குது. அப்படியொரு ரீச்சர் கிடைக்க நீங்க கொடுத்துவைச்சிருக்கிறீங்க.”

“என்ர பிள்ளையளுக்கும் அவவைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கிறன். ஒரு கட்டத்தில எனக்கு எல்லாமா இருந்த அவவைப் பத்தி, என் வேதனையை விளங்கி எனக்கு உயிர்ப்பளித்த அவவின்ர உளவியலைத்த்தான் அங்கை நடக்கவிருக்கிற கூட்டத்தில பேசப்போகிறன்,” என் குரலில் நன்றியும் பெருமிதமும் கலந்திருந்தது.

“அப்ப உங்கடை பேச்சு அந்தமாரி இருக்கும்.” அழகான வெண்ணிறப் பற்கள் தெரிய அவ புன்முறுவல் செய்தா. மூன்று மாதமா யோசித்து, யோசித்து எழுதி, எழுதிப் பின் திருத்தித் திருத்தி நான் எழுதினேனா என நானே வியந்துபோன அந்தப் பேச்சை எண்ணிப்பார்த்துக் கொண்டேன்.

விமானம் பறக்கத் தொடங்கியது. சூரிய உதயம் யன்னலுக்கூடாகத் தெரிந்தது. செந்நிறச் சூரியக் கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. மூன்று தசாப்தங்களின் பின்னர் மிசிஸ் பரமைப் பார்க்கப்போகின்றேன் என மூன்று மாதங்களாக மனசுக்குள் பீறிட்டுக்கொண்டிருந்த களிப்பு இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இதயம் ஆனந்தத் தாண்டவமாடியது.

பல்கலைக்கழகத்துக்காகக் காத்திருந்த காலங்களில் அவ பள்ளிக்கூடம் முடிந்து எங்களின் ஒழுங்கையால் போவதைப் பார்ப்பதற்காக ஒழுங்கையில் தற்செயலாக நிற்பதுபோல, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விடயம் செய்துகொண்டு நின்றது நினைவுக்கு வர எனக்குள் சிரிப்பு வந்தது.

மீளவும் மிசிஸ் பரமோடை உறவைத் தொடர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் நிறைவாக இருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் பொறுப்பில்லை. நிதி நெருக்கடியில்லை. வேலையில் லீவு கிடைக்குமா என யோசிக்க வேண்டியதில்லை. நினைத்ததைச் செய்யமுடிகிறது, முதுமை சில வகைகளில் உதவியாக இருக்கின்றதுதான் என நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

X X X X

விமானம் தரையிறங்கியபோது இரவாகியிருந்தது. செயற்கை ஒளியில் சுவிற்சிலாந்து பிரகாசித்தது.

“மிசிஸ் பரமின்ரை புண்ணியத்திலை உன்னைப் பாக்க முடிஞ்சிருக்கு. பாத்து எத்தனை வருஷமாய்ச்சு,” கட்டிக்கொண்டாள் என்னைக் கூட்டிச்செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மைத்துனி அருள்.

“என்ன செய்ய அருள், இப்பத்தான் நேரம் வந்திருக்கு, இனி அடிக்கடி வருவன்!”

“ஓ, மிசிஸ் பரமைப் பாக்கலாம் எண்டபடியால், இனி அடிக்கடி வருவாய்.”

“இல்லையடியப்பா, பிள்ளையள் வளர்ந்திட்டுதுகள் இனிப் பொறுப்பில்லையெண்டு சொல்றன்.”

“நீ சொன்னாப்பிறகு, அவவின்ர பேச்சுகளைக் கேட்கிறனான். மனிசி அந்தமாரித்தான் பேசுது.”

“அவ உண்மையிலேயே ஒரு காந்தமடி.”

“வீட்டுக்குப் போய் குளிச்சு உடைமாற்றிக்கொண்டு படுக்கைக்குச்சென்றபோது, “விடியக் கோயிலுக்குப் போவம், என்ன? முதலிலை முருகனைப் போய்த் தரிசிப்பம்.” என்றாள் அருள்.

“ஓகே, போவம்.”

ரொறன்ரோவிலை கோயிலுக்குப் போறனியோ?”

“அங்கை போறனானோ, இல்லையோ, நீ போகேக்கே நான் வரத்தானே வேணும்.”

“நாளைக்குத் தேர் எண்டபடியால், உனக்குத் தெரிஞ்ச ஆக்களும் அங்கை வரக்கூடும்”

“ஆக்களைப் பாக்கத்தானே அந்தக் காலத்திலும் மாவிட்டபுரத்துக்கு, கீரிமலைக்கு எண்டெல்லாம் போறனாங்கள்,” கண்ணடித்தேன் நான்.

“உனக்கெல்லாம் பகிடிதான். சாமி கும்பிடப் போறம். போற இடத்திலை ஆக்களைப் பாக்கிறம்.”

“சரி, சரி. முதலிலை சாமியைக் கும்பிடுவம். பிறகு ஆர் வந்திருக்கினமெண்டு பாப்பம்.” சிரித்தேன் நான்.

X X X X

தேர் வெளிவீதியில் சுற்றிவந்துகொண்டிருந்தது. வீதி மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. “பக்க கோடிகளுக்கு எங்கும் குறைவில்லை,” அருளுக்குக் கூறிச் சிரித்தேன். திடீரென என் முகத்தை இரண்டு கைகள் மூடிக்கொள்ள, ‘யாரெண்டு சொல்லும் பாப்போம்,” எனக் குரலொன்று ஒலித்தது. குரலை எனக்கு மட்டுக்கட்டவே முடியவில்லை. தடுமாறிய என் முன்னால் கைகளை எடுத்துவிட்டுச் சிரித்தபடி நின்றிருந்தாள் சொர்ணா.

“ஏய் சொர்ணா, நீர் எங்கையிருக்கிறீர் எண்டு நான் இப்ப எத்தனை வருஷமா தேடிக்கொண்டிருக்கிறன். சோசல் மீடியாக்கள் ஒண்டிலும் நீர் இல்லையா?” சொர்ணாவைக் கண்ட மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது. எங்களின் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் வந்துசேர்ந்திருந்த சொர்ணாவும் நானும் பன்னிரண்டாம் வகுப்புவரை உற்ற சினேகிதிகளாக இருந்தோம். 83 கலவரத்தின் பின்னர் சொர்ணா திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதாக அறிந்தேன். அத்துடன் தொடர்பு விட்டுப்போயிருந்தது.

“மலேசியாவிலை இருந்தனாங்க, இப்ப இங்கை வந்து மூண்டு வருஷமாகுது. உம்மை இங்கை சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்லை. நீரும் இங்கையா இருக்கிறீர்?”

“இல்லை, நான் கனடாவிலை இருக்கிறன். மிசிஸ் பரமுக்கு பவள விழா நடக்குதெல்லோ. கேள்விப்பட்டனீரோ? அதுதான் வந்தனான்.”

“ஓ.” சுரத்தில்லாமல் சொன்னாள் சொர்ணா. பின்னர் பரஸ்பரம் எங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதைத்தபடி, தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

அருள் என்னைவிட 10 வயது இளையவள் என்பதால் சொர்ணா என் சினேகிதி என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என் சினேகிதியைச் சந்தித்துக்கொண்டதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அருளுக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் இவர்கள் எனக் கதைத்துமுடித்து வீட்டுக்குப் போனோம். பயண அலுப்பும், கோவில் அலுப்பும் என்னை நித்திரை மயக்கத்துக்குள் அமிழ்த்திவிட்டது.

X X X X

வியாழனும் வெள்ளியும் ஊர் பார்ப்பதில் மறைந்துபோனது. மலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த சுவிற்சிலாந்தின் அழகு கண்களுக்குப் பெருவிருந்தாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் மிசிஸ் பரமின் பவள விழா. சனிக்கிழமைதான் சொர்ணாவைச் சந்திப்பதாக இருந்தது. அவளைச் சந்திக்கும்போது பவளவிழாவுக்கு அவளும் வருவதை உறுதிப்படுத்த வேண்டுமென நினைத்துக்கொண்டேன். அன்று நான் பேசப்போகும் பேச்சு எப்படியிருந்ததெனச் சொல்வதற்கும் பூசிமெழுகாமல் கதைக்கும் சொர்ணா வருவது நல்லதென நினைத்தேன். அத்துடன் மிசிஸ் பரம் சொர்ணாவினதும் ஆசிரியராக இருந்ததால், சொர்ணா வருவா என்ற நம்பிக்கையும் இருந்தது.

இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படி சொர்ணாவை அருள் அழைத்திருந்தாள். முதல் நாளிரவு தொலைபேசியில் பேசிய சொர்ணா, பகவதியையும் அழைத்து வரட்டுமா, பகவதியும் உம்மைப் பார்க்க ஆசைப்படுகிறா என்றாள். ஓ, நிச்சயமாக, பகவதியும் இங்கேயா இருக்கிறா. எனக்கும் அவவைப் பார்க்க ஆசையாயிருக்கு. கூட்டிக்கொண்டு வாரும் என்றேன், நான்.

மாலை ஐந்து மணியளவில் பகவதியும் சொர்ணாவும் வந்திறங்கினர். பகவதி அன்று பார்த்தமாதிரியே இருந்தாள். “தனிச்சுச் சுதந்திரமாய் சுத்துற காலம் வசந்திக்கு வந்திருக்கு,” நக்கலடித்தாள் பகவதி.

“நீர் மட்டும் என்னவாம்? எங்கை மனிசன், எங்கை பிள்ளையள்?” நானும் பகவதியை வம்புக்கிழுத்தேன்.

“அவையும் வந்தால் நாங்க என்னெண்டு பழங்கதையள் கதைக்கிறது. அவைக்குப் போரடிக்குமெண்டு விட்டிட்டு வந்திட்டம்,” என்றாள் சொர்ணா சீரியசாக.

நேரம் போனதே தெரியாமல் வம்பளந்துகொண்டிருந்தோம். எங்களின் சிரிப்பொலியில் அருளின் வீடு அதிர்ந்தது. “ஏழு மணியாகுது, வாங்கோ சாப்பிடுவம்,” என அருள் கூப்பிட்டாள். தோசை முறுகலாகவும் ருசியாகவும் இருந்தது. தோசை சுடப் பஞ்சிப்பட்டு, கடையில் வாங்குமெனக்கு தோசைகளை ஒவ்வொன்றாக அருள் சுட்டுத் தந்தது, ஒரு காலத்தில் அம்மா சுடச்சுடச் காத்திருந்து சாப்பிடுவதை நினைவுபடுத்தியது.

“தோசை சுடுறதுக்காகக் காய்ஞ்ச தென்னோலைகளை ஒண்டொண்டாப் பிரிச்செடுத்து அம்மா கட்டாக்குறதை, பிறகு ஓலைகள் எரியேக்கை சுவாலை உயரமாய் எழுந்து தேயுறதை ... எல்லாத்தையும் பாக்கிறதிலை ஒரு சுகம் இருந்தது. எல்லாம் ஒரு காலம். இப்ப எனக்கு இந்தத் தோசைகள் அம்மாவையும் அவ தோசை சுடுறதையும் ஞாபகப்படுத்துது,” என்றேன் நான்.

“கொழும்பில இருக்கேக்கையும் அப்படியோ அம்மா தோசை சுட்டவ?” வெகுளித்தனமாகக் கேட்பதுபோல என்னைக் கேலிசெய்தாள் பகவதி.

“கொழும்பு வாழ்க்கை ஆருக்கு ஞாபகமிருக்கு. அப்பாவை அழிச்ச அந்தக் கொழும்பு வாழ்க்கையை மறக்கோணுமெண்டு மறந்தனோ, என்னவோ. எனக்கது ஒண்டுமே நினைவில்லை. .ஆனா யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் மிசிஸ் பரம் செய்ததுகளை வாழ்க்கைக்கு மறக்கேலாது.”

சில கணங்கள் பெரும் அமைதி நிலவியது. நான் அதை உடைத்தேன்.

“It’s okay. அப்பா போய், இப்ப எத்தனை வருஷமாச்சு. மனசிலை வடுவாயிருக்குதான், ஆனா, அந்த நேரத்திலை பட்ட வேதனை இப்ப இல்லை. கொழும்பை ஏன் ஞாபகப்படுத்தினதெண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, பகவதி.”

“அதில்லை, வசந்தி. நீர் மிசிஸ் பரமை உச்சந்தலையிலை வைச்சிருக்கிறீர். அதுதான் சொல்லலாமோ வேண்டாமோ எண்டு யோசிக்கிறம்,” சொர்ணாவைப் பார்த்தபடி சொன்னாள் பகவதி.

“என்னத்தைச் சொல்லலாமோ, வேண்டாமோ எண்டு யோசிக்கிறியள்?”

“அவவைப் பத்தித்தான். அந்த நேரத்திலை ஒத்தடமாயிருந்த மிசிஸ் பரமைத்தான் உமக்குத் தெரியும். அவ ஒத்தடமாயிருந்தா, ஏனெண்டால் உங்களுக்கிடையில முரண்கள் இருக்கேல்லை.” தோளைக் குலுக்கியபடி சொன்னாள் அவள்.

“எனக்கு விளங்கேல்லை.”

“நான் என்ன சொல்றன் எண்டால், அவவை முன்னுக்கு வைச்சால், அவவோடை முரண்படாட்டா ஒரு பிரச்சினையும் வராது... அருள், உண்மையிலேயே தோசை சுப்பர். சம்பலும்தான். இஞ்சிபோட்டு அரைச்சிருக்கிறீர், என்ன?”

தலையைக் கீழும் மேலுமாக ஆட்டின அருள் “தாங்கஸ்,” என்றாள். எனக்கோ கதை திசைமாறுவது விருப்பமில்லாமல் இருந்தது.

“என்ன நடந்தது எண்டு சொல்லுமன்?” அவசரப்பட்டேன் நான்.
“சொர்ணா இப்ப நடத்துற முதியோர் சங்கத்தை அவதான் முதலில நடத்தினவ. பிறகு கொமிற்றியிலை கருத்து வேறுபாடு வந்தவுடனை எல்லாத்தையும் உதறிப்போட்டுப் போட்டா. கணக்கு வழக்குகளைக்கூடக் குடுக்கேல்லை. கடைசியில சொர்ணா தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டியிருந்துது. எல்லாத்தையும் சரிப்பண்ணலாமெண்டு அவவின்ர வீட்டுக்கு சொர்ணா நாலைஞ்சு தடவை போய்க் கெஞ்சிக் கேட்டும் பழைய பைல்கள் ஒண்டையும் அவ குடுக்கமாட்டன் எண்டிட்டா. அதாலை ஒடிற்றிங்கிலை சங்கம் பட்டபாடு சொல்லிமுடியாது.”

“ஏன் அப்படிச் செய்தவ, எனக்கு நம்பேலாமல் இருக்கு!” குழப்பத்துடன் நான் சொர்ணாவைப் பார்த்தேன்.

“அதுதான் சொன்னனே, முரண்வரேக்கைதான் ஒராளின்ரை சுயம் தெரியும். இவையின்ர சங்கச் செயலாளர் அவவுக்கு ஆதரவாயிருக்கேல்லை எண்டதாலை அவரின்ர மனிசி செத்ததுக்குக்கூடத் துயரம் விசாரிக்கேல்லையாம் எண்டால் பாருமன்.”

“அவ இப்பிடிச் செய்தவ எண்டதை எனக்கு நம்பேலாமல் இருக்கு.”

“நீர் இதையும் நம்பமாட்டீர். இங்கை அவ வந்திருந்த துவக்கத்தில பிள்ளையளோடை சரியாய்க் கஷ்டப்பட்டவ. சொல்லிக் காட்டக்கூடாது எண்டாலும், உமக்கு விளங்கட்டுமெண்டதாகச் சொல்றன். நான் அவவுக்கு நிறைய உதவிசெய்திருக்கிறன். ஜக்கற், அது இதெண்டு கணக்குப்பாக்காமல் வாங்கிக்கொடுத்திருக்கிறன். அப்படியிருந்தும், அவ பேசின ஒரு பேச்சிலை இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிட்டன் எண்டு என்னை இப்ப தூரவைச்சிட்டா. சொர்ணாவின்ர பிரச்சினையைத் தீக்கிறதுக்காக நானும் ஏதாவது செய்வமெண்டு பாத்தன். ஆனா அந்த மனுசி கதைச்சால்தானே. அவவின்ர வண்டவாளங்கள் தெரிஞ்சிருந்தால், நீர் இங்கை வந்திப்பீரோ என்னவோ! …. நாங்களும்தான் பிழைவிடுறனாங்கதான், இல்லையெண்டில்லை. ஆனா, பெரிய ஆள்தோரணையிலை மனிசரா வாழோணுமெண்டு மற்றவைக்கு ஆலோசனை வழங்கிற, வழிகாட்டியா இருக்கிறதா பெயரெடுக்கிற இவ இப்பிடி நடக்கலாமோ...?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி என் முகத்தைப் பார்த்தாள், பகவதி.

“எனக்கு என்னத்தைச் சொல்லுறதெண்டு தெரியேல்லை, பகவதி… நீர் கேட்கிற கேள்வியில அர்த்தமிருக்கு... அவவுக்கு இப்பிடியுயொரு பக்கமிருக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை.”

“பகவதி சொன்னதெல்லாம் உண்மை, வசந்தி. ஆனா, அதுக்காண்டி... நீர் அவவை வெறுக்கோணும் எண்டில்லை. உமக்கு அந்த நேரம் அவ எல்லாமா இருந்திருக்கிறா. அதுக்கு நீர் நன்றியாய் இருக்கத்தானே வேணும்.” மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னாள் சொர்ணா.

“எண்டாலும், உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கேக்கை, எப்படி நான் அவவை உயர்த்திப் பேசுறது?”

“இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். அழைப்பிதழிலை பேரெல்லாம் போட்டாச்சு, பேசத்தானே வேணும்,” என்கிறாள் அருள், தோசையை என் தட்டில் வைத்தபடி. எனக்குத் திடீரெனப் பசி போய்விட்டது.

X X X X

அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மண்டபம் மலர் அலங்காரங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாகக் கூடியிருந்தனர்.

பொன்மஞ்சள் நிறச் சீலையில் மேடையின் நடுவில் மலர்மாலையுடன் மிசிஸ் பரம் அமர்ந்திருந்தா. பக்கத்தில் அவவின் கணவர் பரம் அவவின் சேலை நிறத்துக்குத் தோதான சேர்ட்டுடன் கையில் ஒரு கைத்தடியுடன் இருந்தார். மாணவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களின் வாழ்க்கையில் அவ எவ்வளவு தூரம் பங்களித்திருந்தா என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

நானும் அருளும் போய் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டோம். என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நன்றியைப் பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என் சினேகிதிகளின் அனுபவங்களைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கும் உள்ளதென என் மனம் எனக்கு ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

என் பெயர் அழைக்கப்பட்டது. என் இதயம் துடிக்க மறுத்ததுபோல, நெஞ்சுக்குள் அடைத்தது. மூன்று மாதங்களாகத் தயாரித்த பேச்சு கையில் இருந்தது. ஆனால், மனதில் சொர்ணாவும் பகவதியும் கூறிய கதைகள்தான் சுழன்று கொண்டிருந்தன.

‘வசந்தி மோகன்,’ என் பெயரை அழைத்துக்கொண்டிருப்பவரின் குரல் மீளவும் ஒலித்தது. மெதுவாக எழும்பினேன். மேடைக்குப் போகும் படிகளில் இரண்டு படிகளைத் தாண்டிவிட்டேன். ஆனால் அடுத்த படியில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை. என் தலை என்னையும் அறியாமல் இடமும் வலமும் ஆடியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஆழமாக மூச்செடுத்தேன். ‘பேசினால் உண்மை வெளிப்படும். பேசாதே,’ என என் மூளை எச்சரித்தது. தொண்டை காய்ந்து போயிருந்தது. மெதுவாக ஒலிவாங்கிக்கு முன்னால் போய் நின்றுகொண்டேன்.

“அன்பான மிசிஸ் பரம் அவர்களே, ஆசிரியர்களே, என் அன்புத் தோழர்களே,

மிசிஸ் பரம், எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல. தனிமையிலும் துயரத்திலும் நான் சிக்கித்தவித்தபோது, எனக்கு ஆதாரசுருதியாக இருந்த ஒரு கனிவான மனிதர். ‘நீ முக்கியமானவள்’ எனச் சொல்லும் தோரணையில் அவர் என்னுடன் நடந்த விதமும் அவரின் அன்பும் என் வாழ்க்கையை மாற்றியது. என் வாழ்க்கையின் இருண்ட அந்த நாள்கள் என் நினைவுக்கு வரும்போதெல்லாம், மிசிஸ் பரம் காட்டிய வெளிச்சம் ஒருபோதும் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அவர் காட்டிய கருணைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

ஆனால், நண்பர்களே,” - ஒரு கணம் நிறுத்தினேன்.

“மனிதர்களைப் பற்றிய ஒரு உண்மையை நாங்களெல்லாம் ஏற்கவேண்டும். மனிதர்களில் எவரும் ஒரு முகம் கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. அதிலும் சிலருக்கு முற்றிலும் எதிரெதிரான முகங்கள் உள்ளன. அதனால், ஒருவருக்குத் தெய்வமாகத் தோன்றுபவர், இன்னொருவருக்கு அரக்கராகத் தெரியலாம். குறித்தவரின் நினைவுகள் ஒருவரை மகிழ்விக்கின்ற அதேவேளையில் இன்னொருவருக்கு வலியைக் கொடுக்கலாம்.”

மீளவும் ஒரு கணம் என் பேச்சை நிறுத்திவிட்டு மிசிஸ் பரமைத் திரும்பிப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் ஓடுவதுபோல எனக்குத் தெரிந்தது.

மண்டபத்தில் ஓரிரு கணங்கள் பெரும் அமைதி நிலவியது. பின் நீண்டதொரு கைதட்டல் ஒலித்தது.

நான் தொடர்ந்தேன். “எனவே முழுமையானதொரு மனிதரைப் பற்றிப் பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. வாழ்க்கையில் நான் இழந்துபோன பிடிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் பற்றியே பேச வந்திருக்கிறேன்...”

“தெல்லிப்பழைச் சைவ வித்தியாசாலையில் மிசிஸ் பரம் ஆசிரியராகப் பதவியேற்றபோது, அவரின் அபிமான மாணவியாக இருந்த வசந்திக்கு நன்றி கூறிக்கொண்டு, இனி அடுத்ததாக....” தலைமை வகித்தவர் பேசிக்கொண்டிருந்தார்.

அருளின் அருகே வந்தமர்ந்த எனக்கு உடம்பு படபடத்தது. முகத்தில் அனல் அடிப்பது போலிருந்தது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்ட அருள், “வீட்டுக்குப் போவோமா” என்றாள்.

sri.vije@gmail.com

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9494-2025-12-14-13-07-25

கெய்ஷா - ஜெயமோகன்

6 days 13 hours ago

கெய்ஷா - ஜெயமோகன்

geisha-001

அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை

கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள்.

கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும்

கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன்

அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம்.

காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு

ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா?

ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை.

ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ  என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்?

அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்?

அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள்.

வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல்  தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது

அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான்.

“நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ”

நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன்.

“அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன்

அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன்

“நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது”  என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன்.

“கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை

பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன்.

அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள்.

அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள்.

நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்”

அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன்.

“உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள்.

நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு”

அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்”

“பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன்.

அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன்.

அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள்.

நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன்.

அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள்.

“பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்”

அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது

“இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன்.

அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள்.

“கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்”

அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள்.

“ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள்

ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்.

“நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள்.

நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ”

அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று  காமம் அடைவார்கள். ”

“கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ”

”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள்

“நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்”

“ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன்.

”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள்.

நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன.

பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன்.

“நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.

அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன்.

அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள்.

“நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன்

”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன்.

“பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ”  என்றேன்.  அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன்.

“ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன்.

என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள்.

”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன்

அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே

என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள்.

அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன்.

“நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது.

“இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன்.

அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன்

அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என்  மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள்.

மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன்.

“மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை”

“இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள்.

நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது”

முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன்.

“நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்”

நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள்.

“இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள்.

”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன்.

அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன்.

என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல.

பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

“இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன்.

“உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன்.

“வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள்.

நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு

“பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள்.

நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன்

உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள்.

என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது

“நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள்.

அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது.  ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை.

https://www.jeyamohan.in/90446/?fbclid=IwdGRleAOivjtleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEefOHACDTwVR1IGZdDI3iMUUkyBDa8hiTuE9UMQXfxasmb_3FtnaEbMELEwjM_aem_N0Q_r5uLV3bqeex1S7GMiw

பொப்பி என்பது புனைபெயர் - ஷோபாசக்தி

2 weeks ago

பொப்பி என்பது புனைபெயர்

ஷோபாசக்தி

பொப்பி என்பது புனைபெயர்

பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி.

அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டுமே அவளுக்கு ‘பொப்பி’ என்ற புனைபெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், அவளைக் குறித்து மூன்று விவரங்களை முன்கூட்டியே வாசகர்களுக்குச் சொல்லிவைக்க முடியும். அவளுக்கு அப்போது இருபது வயது. ஆங்கில மொழி பேசக்கூடியவள். ஆங்கில மொழியைப் பேசும்போது, B மற்றும் V ஒலியை அவளால் உச்சரிக்க முடியாது. கலே நகரத்தில் இருந்த ‘ஜங்கிள்’ அகதி முகாமில் அவள் காணப்பட்டாள்.

கருமையான சுருள் தலைமுடியும் வெளிறிய சருமமும் கொண்ட பொப்பி சற்றுக் குள்ளமானவள். அவளது முழுவட்ட முகத்தில் தலைமுடி சுருள் இழைகளாய் விழுந்து பேரிச்சம் பழங்கள் போன்றிருக்கும் அவளது கண்களின் ஓரங்களை மறைக்கும். அவள் பேசும்போது, சிவந்து தடித்த கீழுதடு ஒருபுறமாகக் கோணிக்கொள்வது போலிருக்கும். எப்போதுமே அவளுடைய குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் அவளுடைய குரலில் எதிரொலியும் கலந்திருக்கிறது. அவளுடைய தங்கையும் உருவத்தில் ஏறக்குறைய பொப்பியைப் போலவே இருந்தாள். தங்கைக்குப் பதினைந்து வயதிருக்கும்.

சகோதரிகள் இருவரும் ஆந்ரே பணியாற்றிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக்கு முதன்முதலாக வந்தபோது, ஆந்ரே கைகளில் விரித்து வைத்திருந்த செய்தித்தாளுடன் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். பிறந்ததிலிருந்தே உற்சாகமற்ற மனநிலையுடனும், நான் ஏன்தான்  எப்போதுமே சோகமாக இருக்கிறேன் எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுச் சோகத்தைப் பெருக்கியவாறும் இருக்கும் ஆந்ரே காலையில் ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்து வைத்துக்கொண்டு, மதியம் பன்னிரண்டு மணிவரை ஒரேயொரு வாடிக்கையாளர்கூட வராத இடத்தில் தூங்குவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்!

சில மாதங்களுக்கு முன்புவரை கலே நகரத்தின் இந்தக் கடற்கரை  உல்லாசப் பயணிகளால் நிரம்பித் ததும்பியது. அவர்களைக் குறிவைத்துக்  கடற்கரை வீதியில் நான்கைந்து  ‘பணப் பரிவர்த்தனை’ கிளைகள் இருந்தன. இப்போது, ஆந்ரே பணியாற்றும் இந்தக் கிளை மட்டுமே இருக்கிறது. கலே கடற்கரை, அகதிகளாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பிரெஞ்சு சிறப்புக் காவல்படையினராலும் மட்டுமே இப்போது நிறைந்துள்ளது.

வடக்கு பிரான்ஸின் விளிம்பில் கலே நகரம் இருக்கிறது. இந்த நகரத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆங்கிலக் கால்வாயில் விரிந்து கிடக்கும் டோவர் நீரிணையின் நீளம் முப்பத்து மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நீரிணை மிக ஆழமானது. வருடம் முழுவதும் குளிர்ந்த நீரைக் கொண்டது. இந்த அபாயமான நீரிணையைக் கடந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்காகப் பத்தாயிரம் அகதிகள் கலே நகரத்தில் காத்திருக்கிறார்கள்.

திடீரெனக் குவிந்த இந்த அகதிகளால் நகரத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. நகரத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஒரு அகதி இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக அந்த நகரம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இதுவே என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள். சுற்றுலாப் பயணிகள் கலே நகரத்திற்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்களை நம்பியிருந்த பல தங்கும்விடுதிகளும் உணவகங்களும் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதனால்  நகரத்து மக்கள் பலருக்கு வேலைகள் பறிபோயின. ஆந்ரே வேலை செய்யும் கிளை எப்போது மூடப்படுமோ என்ற கிலியிலும் அதனால் பெருகிய துக்கத்துள்ளும் ஆந்ரே மூழ்கியிருந்தான்.

காற்று நிரப்பிய சிறிய ரப்பர் படகுகளில் மூட்டைகள் போல அகதிகளை அள்ளிப் போட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் குழுக்கள் நகரத்தின் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். இதைத் தவிர, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் சரக்குந்துகளைப் பயன்படுத்தி நீரிணையைக் கடந்து செல்லும் முயற்சியிலும் அகதிகள் இறங்கியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் வரும் சரக்குந்துகளின் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவற்றை வேகம் குறைக்கச் செய்து, சரக்குந்துகளுக்குள் திருட்டுத்தனமாக அகதிகள் நுழைந்துகொண்டார்கள். அந்த நீரிணைக்குக் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் அய்ம்பது கிலோ மீட்டர்கள் நீளமான ரயில் சுரங்கப் பாதைக்குள் இறங்கி நடந்துசெல்ல முற்பட்ட பல அகதிகள் ரயில் மோதி இறந்து போனார்கள். அவர்களின் பிணம் கூட இங்கிலாந்தைச் சென்றடையவில்லை.

கலே நகரத்து மக்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் – இங்கிலாந்து இருநாட்டு அரசாங்கங்கள், காவல்துறையினர், கடற்படையினர், எல்லைப்படையினர் எல்லோருமே குழப்பத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது. தெளிவாக இருந்தவர்கள் அந்தப் பத்தாயிரம் அகதிகள் மட்டுமே. எப்படியாவது கடலைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். ரப்பர் படகுகள் கடலில் மூழ்கி அகதிகள் நாளாந்தம் இறப்பதாலோ, சரக்குந்துகளில் மறைந்திருந்து சென்றவர்கள் மூச்சுத் திணறிக் கொத்தாக இறப்பதாலோ, சுரங்கப் பாதையில் ரயில் மோதி இறப்பதாலோ இந்த அகதிகள் தங்களது பயணத்தைக் கைவிட ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. எப்படியாவது ஒருநாள் உயிரோடு கடலைக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கலே நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள்.

அவ்வாறு அலைந்துகொண்டிருந்த பொப்பியும் அவளது சகோதரியும் ‘வெஸ்டர்ன் யூனியன்’  கிளைக் கூண்டுக்கு முன்னால் வந்துநின்று, கூண்டின் முகப்புக் கண்ணாடியில் தட்டியபோது, ஆந்ரே தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டான். அவனது முக்கோண வடிவ முகத்திற்கு அந்த வட்டமான  மூக்குக் கண்ணாடி பொருத்தமில்லாமல் இருந்தது. செந்நிற ஆட்டுத்தாடியைச் சொறிந்துகொண்டே கண்களைத் தாழ்த்தி, தெருவின் எதிர்ப் பக்கத்திலிருந்த காவல் கூண்டைப் பார்த்தான். அந்தக் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் அந்தப் பெண்களையே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி தனது குளிரங்கிக்குள் கையை நுழைத்து ஒரு பொதியை எடுத்துப் பிரித்தாள். இரண்டு பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து முகப்புக் கண்ணாடியில் இருந்த அரைவட்டத் துளை வழியாக உள்ளே தள்ளிக்கொண்டே “மிஸ்டர்! நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று ஆந்ரேயிடம் கனத்த குரலில் கேட்டாள்.

“ஆம். பேசுவேன்” என்றான் ஆந்ரே.

“எங்களுடைய தந்தை ‘வெஸ்டர்ன் யூனியன்’ மூலமாக எங்களுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைக் கொடுங்கள்.”

பொப்பியின் பாஸ்போர்ட்டை ஆந்ரே எடுத்து விரித்துப் பரிசீலித்துவிட்டு, கணினியைத் தட்டி உசுப்பியவாறே “ட்ரான்சக்ஸன் நம்பர்?” என்று கேட்டான்.

பொப்பி தன்னுடையை சகோதரியைப் பார்த்தாள். அந்தச் சிறுமி பத்து இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லச் சொல்ல, ஆந்ரே கணினி விசைப்பலகையில் மெதுமெதுவாகத் தட்டினான்.

பொப்பியிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஆந்ரே பச்சைநிற ஈரோத் தாள்களை எடுத்து அரைவட்டத் துளை வழியாக வெளியே தள்ளிவிட்டான். பொப்பி அந்தப் பணத்தை எடுத்து நிதானமாக மூன்று தடவைகள் எண்ணிப் பார்த்துவிட்டுத் தனது குளிரங்கிக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘நன்றி’ என்பது போலச் சகோதரிகள் இருவரும் ஆந்ரேக்குத் தலையைத் தாழ்த்தினார்கள். ஆந்ரே சோர்வுடன் தலையை மெதுவாக அசைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து, மாலை அய்ந்து மணிக்கு ஆந்ரே  கணினியை அணைத்துவிட்டு, தனது குளிர் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கிளையை மூடுவதற்குத் தயாரானபோது, கிளையின் முகப்புக் கண்ணாடியில் படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சகோதரிகள் இருவரும் தெருவில் நின்றிருந்தார்கள். ஆந்ரே கைகளைக் கத்தரிக்கோல் போல் குறுக்கே வைத்து அசைத்து  ‘மூடியாகிவிட்டது’ எனச் சைகை காட்டினான். பொப்பி பதிலுக்கு மீண்டும் முகப்புக் கண்ணாடியைப் பலமாகத் தட்டினாள். ஆந்ரே அரைவட்டத் துளையை மூடியிருந்த மறைப்பை நீக்கிவிட்டு, அந்தத் துளையை நோக்கிக் குனிந்து “மூடியாகி விட்டது. நாளைக்கு வாருங்கள்” என்று சொன்னான்.

இன்று தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருவதாக அவன் சொல்லியிருந்தான். சந்தை மூடுவதற்கு முன்பாக அங்கே சென்று தாயாருக்குப் பிடித்தமான நத்தைகளையும் தாயாருக்கு அந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிச் செல்ல வேண்டும். நகரம் முழுவதும் குழப்பமான முறையில் அகதிகள் நடமாட்டம் இருப்பதால், அவனது தாயார் பயந்துகொண்டு சந்தைக்குப் போவதில்லை. சென்ற வாரம் ஆந்ரே தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தாயார் தனது வற்றிப் போன உடம்பை ஆடாமல் அசையாமல் வைத்துக்கொண்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். “இந்த நகரத்தை விட்டு நாங்கள் போய்விட வேண்டும்” என்றார்.

அந்தச் சகோதரிகள் அங்கிருந்து நகருவதாக இல்லை. “மிஸ்டர்! எங்களுக்குப் பணம் வந்திருக்கிறது. அவசரமாக எங்களுக்குப் பணம் தேவை. தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என்றாள் பொப்பி.

“கிளையை மூடியாகி விட்டது. கணினியை அணைத்துவிட்டேன். நாளைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு வாருங்கள்!”

அதைக் கேட்டதும் பொப்பியின் சகோதரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். தெருவின் எதிர்ப் பக்கம் காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி ஏதோவொரு மொழியில் உரக்கக் கத்தியதும் அழுதுகொண்டிருந்த சிறுமி தனது உதடுகளை இறுக மடித்து வாயை மூடிக்கொண்டே சத்தம் வராமல் விம்மினாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

விம்மியவாறே தனது கால்களைத் தரையில் மாறி மாறி உதைத்துத் தெருப் புழுதியைக் கிளப்பிகொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து ஆந்ரே உண்மையிலேயே பதறிவிட்டான். “பொறுங்கள்…பொறுங்கள்…” எனச் சொல்லியவாறே நாற்காலியில் அமர்ந்து கணினிப் பொத்தானைச் சொடுக்கினான். விம்மிக்கொண்டிருந்த பெண் விம்மலுக்கிடையே பத்து எண்களைச் சொன்னாள். ஆந்ரே பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே சுருட்டி பொப்பி தனது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினாள். எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் ‘என்ன?’ என்பது போல ஆந்ரேயைப் பார்த்தார். ஆந்ரே அவரைப் பார்த்து ஒரு சமாதானமான புன்னகையைச் செய்துவிட்டு, கிளையை மூடிவிட்டு, தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்குப் போனான்.

அடுத்த நாள் காலையில், செய்தித்தாள் வாங்குவதற்காக வீதியோரப் பத்திரிகைக் கடையில் ஆந்ரே நின்றிருந்தபோது, அவனது தோளை யாரோ தட்டினார்கள். ஆந்ரே திடுக்கிட்டுத் திரும்புவதானால் கூட மிக மெதுவாகவே திரும்புவான். அதற்குள் தோளில் தட்டுவது யாராக இருக்கும் என யோசித்தான். அவனுக்குத்தான் நண்பர்கள் என்று யாருமே இல்லையே. வேலை! வேலையை விட்டால் மலிவு விலைச் சந்தை! சந்தையை விட்டால் அவனுடைய சிறிய அறை! வாரத்திற்கு ஒருமுறை தாயாரின் வீடு என்பதுதானே அவனது சிறிய வாழ்வு.

ஆந்ரேயின் தோளைத் தட்டியவள் பொப்பி. “மிஸ்டர் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் ஓடிவிட்டேன்.”

ஆந்ரே மங்கலான புன்னகையைச் செய்தவாறே “உங்களது சகோதரி எங்கே? தனியாக வரமாட்டீர்களே” என்று சும்மா கேட்டு வைத்தான்.

உடனேயே பொப்பியின் வட்ட முகம் மலர்ந்து விரிந்துபோனது. “நேற்று இரவே அவள் படகில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள். படகில் அனுப்பிவைக்கும் கடற்காகங்களுக்கு – அந்தக் குழுவை அப்படித்தான் எங்களது ஜங்கிள் முகாமில் குறிப்பிடுவார்கள் – பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேற்று உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம். நீங்கள் சிரமம் பாராமல் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லையென்றால், நேற்று அவளால் போயிருக்கவே முடியாது. நன்றி மிஸ்டர்” என்றாள்.

“பரவாயில்லை… என்னுடைய பெயர் ஆந்ரே. நீங்கள் தங்கையுடன் போகவில்லையா?”

“இல்லை. ஆனால், சீக்கிரமே நானும் போய்விடுவேன். அப்பா அனுப்பிவைத்த பணம் அவளை அனுப்ப மட்டுமே போதுமானதாக இருந்தது. அவள் சின்னப் பெண். அவளைத்தானே முதலில் அனுப்ப வேண்டும். வரும் வியாழக்கிழமை அப்பா மீண்டும் பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள உங்களிடம்தான் வருவேன். அடுத்த படகில் நான் இங்கிலாந்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்…மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்…”

இரவு படுக்கையில் கிடந்து புரண்டுகொண்டிருந்த ஆந்ரே புகை பிடிப்பதற்காக எழுந்துசென்று, கடற்கரையை நோக்கியிருந்த ஜன்னலைத் திறந்தான். அந்த நேரத்திலும் கடற்கரையில் அகதிகள் உரக்கப் பேசியவாறே கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இன்று இரவும் ரப்பர் படகுகள் கடலைக் கடக்கவிருக்கின்றன என ஆந்ரே நினைத்துக்கொண்டான். பொப்பியும் இரண்டு நாட்களில் போய்விடுவாள் என்ற நினைப்பு அவனுள் வந்தபோது, அவனுக்குள் ஏனோ துயரம் பெருகியது. இது பொப்பிக்கான உபரித் துயரமா அல்லது எப்போதுமே தன்னோடு ஒட்டியிருக்கும் பெரும் துக்கம்தானா எனப் புரியாமல் அவன் குழம்பிப்போனான். உண்மையில், அவனில் துக்கம் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சற்றுச் நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அவனுக்குள் பெரும் உளக் கொந்தளிப்பு ஏற்படவும், அந்தப் பதைபதைப்பைத் தாங்க இயலாமல் எழுந்து கட்டிலில் நின்றுகொண்டான்.

பொப்பியின் முகம் அவனுள் மெதுமெதுவாக நுழைந்து வெள்ளி முத்திரை போன்று பதிந்துகொண்டது. அவன் இதுவரை காதல் வயப்பட்டதில்லை. தனக்குள் தோன்றியிருக்கும் உணர்வு காதல்தானா? இது எப்படிச் சாத்தியம்? என்று அடுத்துவந்த நாட்களில் அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான்.

வியாழக்கிழமை காலையிலிருந்து அவன் பொப்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். மதிய உணவுக்குக்கூட கிளையை மூடாமல் பக்கத்துக் கடையில் ஒரு  வரட்டு ‘சாண்ட்விச்’ வாங்கிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். வெறுமனே கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். பொப்பியின் பாஸ்போர்ட் விவரங்கள் கணினியில் இருந்தன. கிளையை மூடும் நேரமாகியும் பொப்பி வரவில்லை. ஆந்ரே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளையை மூடினான். பொப்பி ஏன் வரவில்லை? என்ன நடந்திருக்கும்? என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கியவாறே தனது சைக்கிளில் ஏறி ஆந்ரே அமர்ந்தபோது, காவல் கூண்டுக்குள் இருந்த பொலிஸ்காரர் “என்ன தம்பி இன்று கிளையைத் தாமதமாக மூடுகிறாய்? அய்ந்து மணிக்குமேல் ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கமாட்டாயே…” என்று கேட்டார்.

ஆந்ரே ஏதோ ஒரு யோசனையில் சைக்கிளை மிதித்தான். மூன்று மிதிகளில் அது தெருவைக் கடந்து காவல் கூண்டருகே போய் நின்றது. “மிஸியூ. ஜோன் மிஷெல்… ஏன் இன்று நகரம் வழமையைவிட அமைதியாக இருக்கிறது? தெருவில் மனித நடமாட்டமே இல்லையே. ஏதாவது அகதிகள் பிரச்சினையா?” என்று ஆந்ரே பொலிஸ்காரரைக் கேட்டான்.

“கெட்டது போ! தம்பி நீ கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்பவன். தெருவில் எப்போதும் போல அகதிகள் அலைந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு மனிதனிடம் வதிவிட அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக அவனைச் சிறையில் அடைக்கக்கூடாது என்றொரு பாழாய்ப்போன சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் ஒழிக்கப்பட்டால், நீ சொல்வது போல உண்மையிலேயே இந்த நகரம் அமைதியாகத்தான் இருக்கும்” என்றார் பொலிஸ்காரர்.

சைக்கிளை மிதித்துக்கொண்டிருக்கையில் பொப்பியின் ஞாபகமே ஆந்ரேயை முழுவதுமாக நிறைத்திருந்தது. சைக்கிள் அவனது அறையைச் சிறிய தயக்கத்துடன் கடந்து, ஜங்கிள் முகாமை நோக்கிச் சென்றது.

2

ஜங்கிள் முகாம், கலே நகரத்தை ஒட்டியிருந்த சிறு காட்டில் தோன்றியிருந்தது. இந்த முகாம் பிரெஞ்சு அரசாங்கத்தாலோ அல்லது வேறெந்தத் தொண்டு நிறுவனங்களாலோ அமைக்கப்பட்டதல்ல. அகதிகளால் உருவாக்கப்பட்ட இந்த முகாமை ‘அய்ரோப்பாவின் மிகப் பெரிய சேரி’ என்றுதான் ஊடகங்கள் வர்ணித்தன.

முகாமில் காணப்பட்ட தேசிய இனங்களையும் மொழிகளையும் கணக்கெடுப்பது அரசாங்கங்களாலேயே இயலாத காரியம். விவிலியக் கதையில் வரும் அழிந்த பாபேல் கோபுரம் போல அந்த முகாம் இருந்தது. அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், சீனர்கள், ஆபிக்கர்கள், வங்காளிகள், இந்தியர்கள், இலங்கையர்கள், அல்பேனியர்கள் எனப் பல இனத்தவர்கள் அங்கே இருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஒழுங்கற்ற சிறு கூடாரங்கள் அந்தச் சிறு காட்டில் அகதிகளால் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரம், சூடேற்றும் கணப்புகள், சுகாதாரம் எதுவுமற்ற அந்தக் கூடாரங்களில் பசி பட்டினியும் கடுங்குளிரும் நோயும் நிறைந்திருந்தன. மனிதக் கடத்தல்காரர்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நள்ளிரவில் கூடாரங்களுக்குள் நுழைந்து அகதிகளின் முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் பிரெஞ்சுக் காவல்துறையின் தொல்லை ஒவ்வொரு நாளுமே இருந்தது. தங்களுடைய நிம்மதியான உறக்கம் முப்பத்துமூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, அதை ஒருநாள் கண்டடைவோம் என்று அகதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தத் திடீர் முகாமில் முனைப்புள்ள சில அகதிகளால் சிறிய மளிகைக் கடைகளும் உணவகங்களும் கூட அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவகங்களுக்கு முன்னால் ‘காபூல் ரொஸ்ரோரண்ட்’, ‘தாஜ்மகால் தர்பார்’, ‘இஸ்தான்புல் கஃபே’ என்றெல்லாம் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பொரித்த கோழிக்கால் விற்கும் கடையொன்றுக்கு ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

மரத் தூண்களாலும் தடிகளாலும் பலகைகளாலும் சிறிய மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்துக் கோயில் போன்றவையும் முகாமில் அமைக்கப்பட்டிருந்தன. அகதிகளிலேயே மதகுருமார்களும் இருந்ததால் அந்த வழிபாட்டிடங்கள் குழப்பமில்லாமல் இயங்கி வந்தன.

அந்த முகாமில் ஏழாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களில் ஆயிரம் குழந்தைகளும் இருந்தன. முகாமிலிருந்த அகதிகளுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களையும் குளிர்காப்பு ஆடைகளையும் மருந்துகளையும் விநியோகித்தன. என்றாலும், அவை அகதிகளுக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. விநியோகம் நடக்கும் நாட்களிலெல்லாம் அகதிகளிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு.

முகாமில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறான ஒரு அகதி முகாம் இதற்கு முன்பு உலகில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஒரே நாட்டை அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் அகதி முகாம்கள் அமைக்கப்படும். அந்த முகாம்களை ஓர் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்துவதாக இருக்கும். ஆனால், இந்த அகதி முகாம் அவ்வாறனதல்ல. பெருமழை, பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போல் தோன்றிய முகாம் இது.

ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இரண்டு இனத்தவரோ அல்லது இரண்டு மதத்தவரோ நேருக்குநேர் போர் புரிந்திருப்பார்கள். அவர்களிடையே காலங்காலமாகப் பகையுணர்ச்சியும் வெறுப்பும் மண்டிக் கிடக்கும். ஆனால், ஜங்கிள் முகாமிலோ இந்த இரண்டு பிரிவினரும் சேர்ந்து தங்கியிருக்க வேண்டியிருந்தது. பல நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகள் கூடாரங்களின்மீது ஏற்றப்பட்டு அலங்கோலமாக இருந்தன. அந்தக் கொடிகள் எதிர்த் தரப்பால்  இரவுகளில் கிழித்து எறியவும்பட்டன. இதனால், அங்கே அடிக்கடி மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. இதற்கொரு முடிவு கட்டுவதற்காக அங்கே பேச்சுவார்த்தைகளும் அகதிகளால் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து கடைசியில் ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, கூடாரங்களில் பறந்த எல்லா நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகளும் இறக்கப்பட்டு, முகாமின் நடுவில் ஒரேயொரு கொடி மட்டும் உயரமான கம்பத்தில் ஏற்றப்பட்டது. அது பிரித்தானியாவின் ‘யூனியன் ஜாக்’ கொடி.

ஜங்கிள் முகாமின் உச்சியில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்ட பிரெஞ்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த யூனியன் ஜாக் கொடியை பிரெஞ்சு மண்ணில் நாட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலம் போர் செய்தும் அது நடக்காமல் போனது. ஆனால், இந்த அகதிகள் அதை நிமிடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆந்ரே வீதியோரத்தில் சைக்கிளை நிறுத்திவைத்து, அந்தக் கொடியைக் கொஞ்ச நேரம் அண்ணாந்து பார்த்தவாறே இருந்தான். உண்மையில், அவன் இப்போதுதான் அந்தக் கொடியை நேரில் பார்க்கிறான். அவன் இதுவரை இங்கிலாந்துக்குச் சென்றதில்லை.

ஜங்கிள் முகாம் மாரிகாலக் கடல் போன்று இரைந்துகொண்டிருந்தது. காடு முழுவதும் மனிதர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். இதில் எங்கே போய், எப்படிப் போய் பொப்பியைக் கண்டுபிடிப்பது என ஆந்ரேக்குப் புரியவில்லை. வீதியிலிருந்து கிளைத்த ஒரு ஒற்றையடிப் பாதை புற்களுக்குள்ளால் ஜங்கிள் முகாமை நோக்கித் தாழ்வாகச் சென்றது. ஆந்ரேயின் சைக்கிள் அந்த ஒற்றையடிப் பாதையால் இறங்கிச் சென்றது.

ஆந்ரே அகதிக் கூடாரங்களை நெருங்கியபோது, அங்கே ஏற்கெனவே தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு திறந்த வாகனத்திலிருந்து அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே மிக நீண்ட வரிசை வளைந்து வளைந்து நின்றுகொண்டிருந்தது. பொப்பி ஏதாவது நோயில் விழுந்து, அந்த வரிசையில் நின்றிருப்பாளோ என்றுகூட ஆந்ரேக்குக் கற்பனை வந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனான். ஒரு தேநீர்க் கடையைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

தேநீர்க் கடையை நடத்திக்கொண்டிருந்த கிழவர் நீண்டதாடி வைத்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசினார்.

“நீங்கள் மருத்துவக் குழுவோடு வந்தவர் என நினைக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்த்தாலே மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. தேநீர் அருந்துகிறீர்களா? புதினாவும் ஏலக்காயும் கலந்த கறுப்புத் தேநீர் உள்ளது.”

ஆந்ரே தேநீரைப் பருகியவாறே அந்தக் கிழவரிடம் “அய்யா… நான் பொப்பி என்ற ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்” என ஆரம்பித்து, அவளது பாஸ்போர்ட்டில் அவன் பார்த்து ஞாபகத்தில் வைத்திருந்த அவளது வயது, நாடு போன்ற விவரங்களையும் சொல்லிவிட்டு “அவளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

கிழவர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக்கொண்டார். பிறகு “பொப்பி… இந்தப் பெயரை இங்கேதான் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே. எனக்கு எழுபது வயதாகிறதல்லவா…காலையில் கேட்டது மதியம் மறந்துவிடுகிறது” என்றவாறே கண்களைச் சுருக்கினார்.

“அவளது தங்கைகூட சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள்…” என்றான் ஆந்ரே.

“நீங்கள் நாளைக்கு வாருங்களேன். நான் விசாரித்து வைக்கிறேன். நாளைக்கு கறுவாப்பட்டையும் எலுமிச்சை இலைகளும் போட்டுத் தேநீர் தயாரிக்கவுள்ளேன்.”

ஆந்ரே தனது மேலங்கிப் பைக்குள் இருந்து சதுர வடிவமான ‘வெஸ்டர்ன் யூனியன்’ அட்டையை எடுத்து அந்தக் கிழவரிடம்  கொடுத்தவாறே “ஒருவேளை நான் சொல்லும் பொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால், இந்த அட்டையிலுள்ள அலைபேசி இலக்கத்திற்கு அழைக்கச் சொல்லுங்கள்” என நம்பிக்கையில்லாமலேயே சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். இரவு கவிந்துகொண்டிருந்ததால் அந்தக் காடு முழுவதும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஆந்ரே வீதிக்கு வந்ததும் ஜங்கிள் முகாமை ஒருதடவை திரும்பிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் இறங்கியிருப்பது போல் அந்தக் காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அடுத்தநாள் காலையிலிருந்தே அய்ந்து நிமிடத்துக்கு ஒருமுறை தனது அலைபேசியை எடுத்து ஆந்ரே பார்த்தவாறேயிருந்தான். அன்றைக்கென்று ஆங்கிலேய மாலுமிகள் கூட்டமொன்று நாணய மாற்றுச் செய்வதற்காக வந்து அவனை மொய்த்துப் பிடித்துக்கொண்டது. அதைப் பெரிய தொந்தரவாகக் கருதிக்கொண்டே தனது கவனம் முழுவதையும் ஆந்ரே அலைபேசியிலேயே வைத்திருந்தான். மாலையாகி, கிளையை மூடும் நேரமும் வந்தபோதுதான், முகப்புக் கண்ணாடியில் பொப்பி மெல்லத் தட்டினாள்.

“ஆந்ரே… என்னைத் தேடி முகாமுக்கு வந்தீர்களா என்ன! இந்த அட்டையைத் தேநீர்க்கடை அய்யா எனது கூடாரத்திற்கு வந்து கொடுத்தார்.”

“ஆம். எனக்கு அந்தப் பக்கம் ஒரு வேலையிருந்தது. அப்படியே முகாமுக்கும் வந்து எட்டிப் பார்த்தேன்.நேற்று வியாழக்கிழமை. பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் வரவில்லை…”

“கடவுள் உங்களுக்கு நன்மை செய்வார் ஆந்ரே! அப்பா அலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார். அவரால் பணம் அனுப்ப முடியவில்லையாம். எங்கள் பகுதியில் போர் இப்போது மிக உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதால், எங்களது பழத்தோட்டத்தை விலைக்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்களாம். அப்பா என்னை இன்னும் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். எப்படியும் பணம் அனுப்பிவிடுவார். நீங்கள் கிளையை மூடும் நேரத்தில் வந்து பணத்தைத் தருமாறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன்” என்றவாறே தலையைச் சாய்த்து வணக்கம் சொல்லிவிட்டு, பொப்பி அங்கிருந்து புறப்பட்டாள்.

ஆந்ரே கிளையை மூடும்போது, பொப்பி கடலைக் கடந்துவிடுவாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் துக்கத்தைப் பெருக்கலாயிற்று. இது என்ன மாதிரியான பைத்தியகாரத் துக்கம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

அவன் சைக்கிளில் ‘தேசிய வீரர்கள் நினைவுச் சின்னம்’ அமைந்திருந்த சதுக்கத்தைக் கடந்தபோது, பொப்பி வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவளருகே ஆந்ரேயின் சைக்கிள் தானாகவே நின்றது.

“ஆந்ரே என்ன இந்தப் பக்கம்?” என்று பொப்பி கீழுதட்டைக் கோணிக்கொண்டே கேட்டாள். “எனது அறை இந்த வீதியில்தானே இருக்கிறது. அதைக் கடந்துதான் நீங்கள் ஜங்கிள் முகாமுக்குப் போக வேண்டும்” என்றான் ஆந்ரே. சைக்கிளைத் தள்ளியவாறே பொப்பியோடு சேர்ந்து நடந்துகொண்டே கேட்டான்:

“உங்களின் தங்கை இங்கிலாந்தில் எப்படியிருக்கிறாள்? உங்களுக்காகக் காத்திருப்பாளே…”

“உண்மைதான். அவள் எனக்காகக் காத்திருப்பாள். அவள் என்னைப் போல் தைரியமானவள் கிடையாது. எங்களது அம்மா போல் எல்லாவற்றுக்கும் பயந்தவள். அதுதான், அன்று அவள் தெருவில் நின்று எப்படிக் குழறி அழுதாள் என்று நீங்கள் பார்த்தீர்களே! இங்கிலாந்துக்குப் போவதற்கு அவள் படு உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், அன்றிரவு கூடாரத்திலிருந்து அவள் கடற்காகங்களோடு கிளம்பும்போது, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது எனச் சொல்லி, அவளைத் தைரியப்படுத்தி அனுப்பிவைத்தேன். ஒரு அகதியின் எதிர்காலத்தை அந்த அகதி தீர்மானிப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தானே அதைத் தீர்மானிக்கின்றன. இல்லையா ஆந்ரே… அவள் அந்தக் கரையைப் போய்ச் சேர்ந்ததும் இங்கிலாந்து அரசாங்கம் அவளைப் பொறுப்பெடுத்து மான்செஸ்டர் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறது எனக் கடற்காகங்கள் என்னிடம் சொன்னார்கள். இங்கிலாந்து எண்ணிலிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. ஜங்கிள் முகாமில் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால் அழைப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவள் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும்…” என்று பொப்பி பேசிக்கொண்டே போக, ஆந்ரேக்கு ஒரேயொரு யோசனைதான் அப்போது மூளைக்குள் ஓடியது. பொப்பி எவ்வளவு தெளிவாக, அர்த்தமாகப் பேசுகிறாள். எனக்கு இவ்வளவு வயதாகியும் இதெல்லாம் வரவில்லையே. கிளையைத் திறந்து வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த வேலை போய்விடுமா? போனால் என் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் இரவு முழுவதும் பினாத்திக்கொண்டு இருக்கிறேனே.

இருவரும் பேசிக்கொண்டே ஆந்ரேயின் அறையை நெருங்கியபோது “பொப்பி எனது அறைக்கு வந்து என்னோடு தேநீர் அருந்திச் செல்வீர்களா?” என்று ஆந்ரே சட்டெனக் கேட்டான்.

“ஆந்ரே!” என்று வியப்புடன் கண்களை விரித்த பொப்பி “போகலாம்” என்றாள்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து தேநீர் அருந்தும்போது, பொப்பி நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, தேநீர் மேசையில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டாள். அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள்.”உங்களது அறை மிகச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் இருக்கிறது ஆந்ரே. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தேகம் கதகதப்பாகிறது” என்றாள்.

“பொப்பி உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். எனக்கு அந்த விஷயம் புரியவே இல்லை. ஜங்கிள் முகாமிலுள்ளவர்கள் பிரான்ஸிலேயே அகதியாகப் பதிவு செய்து இருக்கலாமே. ஏன் உயிரைப் பணயம் வைத்து ரப்பர் படகுகளில் கடலைக் கடக்கிறீர்கள்?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் ஆந்ரே. சிலருக்கு இங்கிலாந்தில் உறவுகள் இருப்பதால் அவர்களிடம் போகிறார்கள். பிரான்ஸை விட இங்கிலாந்தில் அகதிகளுக்கான சலுகைகள் அதிகம், இலகுவாக வேலை கிடைக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சிலர் கடலைக் கடக்கிறார்கள். ஆனால், நான் போகும் காரணம் வேறு.”

“உங்கள் தங்கை அங்கே இருக்கிறாள்…”

அது மட்டும் இல்லை. எங்களது கிராமத்திலிருந்து கிளம்பும்போதே இங்கிலாந்துதான் இறுதி நிலம் என்ற உறுதியான முடிவோடுதான் புறப்பட்டேன். யாராவது ஒருவர் என்னைப் பிரெஞ்சுக் குடிமகள் ஆக்குகிறேன் என்று சொன்னால்கூட அதை மறுத்துவிட்டு, நான் இங்கிலாந்துக்குத்தான் போவேன்.”

ஆந்ரேக்கு ஏமாற்றம் தலைக்கேறி அடித்தது. அவன் ஒரு பரிதாபமான புன்னகையைச் செய்து அதைச் சமாளித்தவாறே “ஏன் அப்படி ஒரு உறுதியான தீர்மானம்? என்று கேட்டான்.

“உங்களிடம் அதைச்  சொல்லலாம் ஆந்ரே… தவறில்லை. எங்களது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்தமாகப் பழத் தோட்டங்கள் இருந்தன. காய்கறி விவசாயமும் உண்டு. பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள்தான். எங்களது வீடு கிராமத்திற்குச் சற்று ஒதுக்குப்புறமாகப் பழத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது.

யுத்தம் எங்களது பகுதிக்கு வந்தபோது எல்லாமே குலைந்துபோயின. பத்துப்பேர் ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்து ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தூக்கிச் செல்வதை நினைத்துப் பாருங்கள். பயந்து போய்விடுவீர்கள். ஆனால், அவர்களிடம் உதைவாங்கித் தரையில் இரத்தத்திற்குள் விழுந்து கிடந்த அப்பா “தைரியமாக இரு! பொப்பி தைரியமாக இரு!’ என்று கத்தினார். தங்கை அப்போது பாடசாலைக்குப் போயிருந்ததால் தப்பித்துக்கொண்டாள்.

என்னைத் தூக்கிச் சென்றவர்களுக்கு அவர்களது முகாம் வரை என்னைக் கொண்டு செல்லப் பொறுமையில்லை. வழியிலேயே புதர்களைக் கண்ட இடத்திலெல்லாம் என்னை உள்ளே தூக்கிப்போட்டு என்மீது படுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்னை முகாமுக்குக் கொண்டு சென்றபோது, எனது உடலின் எல்லாத் துவாரங்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! எல்லாத் துவாரங்களிலிருந்தும்!”

ஆந்ரேயின் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் சட்டென மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக்கொண்டான். ஏன் இவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்? இவள் எப்போது பதிலை நிறுத்துவாள்? என மருகத் தொடங்கினான். பொப்பி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்:

“அவர்கள் யாருக்கும் எங்களுடைய மொழி தெரியாது. எங்களுக்கும் அவர்களுடைய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் பேசத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் போலவே பிடித்து வரப்பட்டிருந்த பெண்கள் சாறு பிழிந்த சக்கைகளானதும் அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள். என்னையும் இரண்டொரு நாட்களில் சுட்டுவிடுவார்கள் என நான் எண்ணினேன். ஆனால், நான் தைரியமாகவே இருந்தேன். எனது உடலில் சக்தி, இரத்தம், வெப்பம் எல்லாமே போயிருந்தாலும் தைரியம் மட்டும் என்னோடிருந்தது.

அந்த முகாமுக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்தான். அவன் இளைஞன். அவன் எனது முகத்தைக் கைகளால் நிமிர்த்திப் பார்த்தபோது, நான் ஆங்கிலத்தில் அவனிடம் பேசினேன். அந்த இளைஞன்தான் என்னைக் காப்பாற்றினான் என்பதைக் காட்டிலும் ஆங்கிலமே என்னைக் காப்பாற்றியது என்றுதான் சொல்வேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன்.”

ஆந்ரே முழுவதுமாகத் துக்கத்துள் மூழ்கியிருந்தான். இப்படியான கதைகளைக் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லை. அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்தான்.

3

அதற்குப் பின்பு ஆந்ரே, பொப்பியைச் சந்திக்கவேயில்லை. அவள் வருவாள் என அவன் காத்துக்கொண்டிருக்கவுமில்லை. பொப்பி அவனது கழுத்துவரை துக்கத்தை நிரப்பிவிட்டுப் போயிருந்தாள். அவன் கண்களை மூடியவாறே துக்கத்தில் அமிழ்ந்திருந்தான். பொப்பி என்னவானாள் என எப்போதாவது யோசனை வரும். அவள் தெளிந்த புத்தியுள்ள பெண், கண்டிப்பாக ஏதோவொரு வழியில் இங்கிலாந்துக்கு -அவளது இறுதி நிலத்திற்கு – போய்ச் சேர்ந்திருப்பாள் என நினைத்துக்கொள்வான்.

மூன்று மாதங்கள் கழிந்தபோது, குளிர் மடிந்து வசந்தம் தொடங்கியது. ஜங்கிள் அகதி முகாமை முற்றாக அகற்றப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்தது. அதிரடிக் காவல்படை ஜங்கிள் முகாமுக்குள் இறக்கப்பட்டு, அகதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரான்ஸின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். முகாமில் அமைக்கப்பட்டிருந்த அகதிக் கூடாரங்கள் பிரிக்கப்பட்டு, குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டன. அகதிகளால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயமும் பள்ளிவாசலும் கோவிலும் கடைகளும் புல்டோசர்கள் வைத்து உடைத்துத் தள்ளப்பட்டன. அந்தச் சிறு காட்டில் அதீத மனித நடமாட்டத்தால் செத்துக் கிடந்த புற்கள் இயந்திரங்களால் ஆழ உழுது புரட்டப்பட்டபோது, நிலத்துக்குள் ஒரு பெண்ணின்  சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. ‘அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் அங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

ஆந்ரே காலை ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தவாறே பத்திரிகையை விரித்தபோதுதான் அந்தச் செய்தியை அறிந்தான். புதைக்கப்பட்டிருந்த உடல் பொப்பியுடையதாக இருக்குமோ என ஆந்ரேக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது. அவளாக இருக்காது என்றும் மனம் சொன்னது. அவன் தடுமாறினான். மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து, மெதுவாக நடந்து வீதியைக் கடந்து காவல் கூண்டை நோக்கிச் சென்றான். காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் “ஏய் தம்பி! சாலையில் வாகனங்களைக் கவனி! தூக்கத்தில் நடக்கும் வியாதியும் உனக்கு வந்துவிட்டதா?” என்று சத்தம் போட்டார்.

“மிஸியூ.ஜோன் மிஷெல்…ஜங்கிள் முகாமில் ஒரு பெண்ணின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி படித்தேன். என்னதான் நடக்கிறது கலே நகரத்தில்? உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?”

அந்தப் பொலிஸ்காரர் சற்றே குரலைத் தாழ்த்தியவாறே “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன் தம்பி… விஷயம் உன்னோடேயே இருக்கட்டும். கொலையாளிகளில் ஒருவனை இன்று அதிகாலையில் பெல்ஜியத்தில் வைத்து நமது ஆட்கள் கைது செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டானாம். ஜங்கிள் முகாம் விஷயமென்றால் எங்களது ஆட்கள் வேகமாகத்தான் செயற்படுகிறார்கள் பார்த்தாயா” என்றார்.

ஆந்ரே மறுபடியும் வீதியைக் கடந்து, கிளைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மூளை ஜங்கிள் முகாமில் அலைந்துகொண்டிருந்தது. அப்போது, அலைபேசி மணி ஒலித்தது. சோர்வுடன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “வணக்கம்! வெஸ்டர்ன் யூனியன்” என்றான். அவனது காதிற்குள் கனத்த குரல் எதிரொலியுடன் கேட்டது:

“ஆந்ரே! நான் பொப்பி. லண்டனிலிருந்து பேசுகிறேன்…”

ஆந்ரே எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதுக்குள் வைத்தவாறே முகப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிறிய விழிகள் அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன.

“ஆந்ரே…பொப்பி பேசுகிறேன். கேட்கிறதா?”

“பொப்பி! உண்மையிலேயே நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். உங்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்று இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.”

“அது என்னுடைய தங்கை. நான் இங்கிலாந்து வந்தவுடனேயே அவளைத் தேடியலைந்துவிட்டு, அவளைக் காணவில்லை என இங்கிலாந்துக் காவல்துறையிடம் முறையீடு செய்திருந்தேன். இப்போதுதான் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னார்கள். என்னால் பிரான்ஸுக்கு வர முடியாது. அங்கே எனக்குத் தெரிந்தவர் நீங்கள் ஒருவர்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கொஞ்சம் விசாரித்து எனக்குச் சொல்கிறீர்களா?”

“நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன். இந்தத் துயரம் நிகழ்ந்தே இருக்கக்கூடாது” எனச் சொன்ன ஆந்ரே ஒரு விநாடி நிறுத்தி “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பொப்பி?” என்று கேட்டான்.

“தைரியமாக இருக்கிறேன்” என்றாள் பொப்பி.

Art : meithu

https://thadari.com/poppy-is-a-nickname-shobasakthi/

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

1 month ago


“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை  – கு.மணி

Posted inStory

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

Posted byb3859e7d7d51687ce989542ecb0cc7755ef15e61Bookday04/11/2025No CommentsPosted inStory

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை

– கு.மணி

பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட.

ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும்.

ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார்.

ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர்.

ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை..

அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது.

ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது.

சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்..

மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை.

மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன்.

மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள்.

சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர்

ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர்.

அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான்.

மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர்.

இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர்.

ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன?
என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும்

”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது.

எழுதியவர்: 

480814665_1209405367420071_5918455006205

– கு. மணி
த/பெ:குருசாமி
தெற்குப்புதுத் தெரு
சக்கம்பட்டி -625512
ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம்

https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/

அன்புள்ள, அப்பாவுக்கு....

1 month ago

ba30694a1cb1a23666ff28e75be08d8e.gif

ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார்.

அதை எடுத்துப் பார்த்தார்.

அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என்னை மன்னித்து விடுங்கள்.

என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.

அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.

நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.

அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்.

என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது.

அங்கு நாங்கள் தங்கியிருப்போம்.

அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான்.

அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம்.

கஞ்சாவை நானும் புகைத்தேன்.

ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.

எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.

எனக்கு பதினைந்து வயதாகிறது.

என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,

லிண்டா..!

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..

கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது..

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.

அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு;

அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.

எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.

எடுத்து கையெழுத்து போடுங்கள்.

நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன்.

உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

😂 🤣

காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது

1 month 1 week ago

காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது

October 21, 2025

வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author).

vvg-image.png?resize=681%2C330&ssl=1

தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation:

எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்குத் தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று  சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு தேவையானது மட்டுமல்ல தாங்கவும் முடியாதது.

சரோஜினி என்னைத் தேடிக் கத்திக் கொண்டு வந்த போது நான் ரஞ்சன் விட்டுவிட்டுப் போன சில பொருட்களை எரித்துக் கொண்டிருந்தேன். சமையலறைக்குப் பின்னாலிருந்த முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்றி சரோஜினி எதுவுமே கேட்கவில்லை. துர்நாற்றம் வீச அங்கே என்ன உருகிக் கொண்டிருந்தது என்பதில் அவள் அக்கறைப் படவில்லையாக்கும். 

“நான் அவங்களைக் கண்டன்!” அவள் அடித்துச் சொன்னாள், “அதிரடிப்படைப் பெடியங்கள் அவரைக் கொண்டு போனாங்கள்.”

இராணுவத்தினர் அவனைக் கொண்டு போக முன்னர் மூன்று முறை இங்கே வந்ததைச் சொல்லி நான் அவளைத் திருத்தவில்லை. இராணுவமும் விசேட அதிரடிப்படையும் வெவ்வேறு.

எனது இழப்பில் பங்கெடுக்க அவளுக்குள்ள ஆவலைக் கண்டதால் “உனக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டேன்.

“அடிக்கடி குடிக்க வாறவன் தான் ரஞ்சனைக் கொண்டு போனவன்,” என்றாள்.

அது உண்மை. ரஞ்சனைக் கொண்டு போக வந்த ஆமிக்காரன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனவன் தான். புலிகள் பக்கம் முந்தி இருந்த கருணாவோடு ஒரு காலத்தில் சேர்ந்திருந்த எனது கணவன் பிறகு குடிக்கவெல்லாம் ஆரம்பித்துவிட்டான். சுற்றத்தினருக்கு அவன் மேல் நல்ல விருப்பமும் நம்பிக்கையும் இருந்தன, ஆகவே அவன் புலிகளை விட்டுத் திரும்பி வந்த பிறகு அவர்கள் அவனுக்குத் தேவையானது எல்லாவற்ரையும் தாராளமாகவே கொடுத்து வந்தார்கள். இது இராணுவத்தினருக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அடிக்கடி ரஞ்சனுடன் பேசுவதற்காக அழையா விருந்தாளிகளாகவும் வரத் தொடங்கி விட்டார்கள். ரஞ்சனுக்கு சிஙகளம் அத்துப்படி. 

சரோஜினி வளவளப்பதைக் காதில் போடாமலே கேட்டுக்கொண்டு நான் ‘கப்பேடு’க்குப் போய் ஒரு பானத்தை வார்த்துக்கொண்டேன். எனது கணவனைக் கொண்டு போனவன் திரும்ப வரக்கூடும். வந்தால் அவனுக்கு இனியும் விஸ்கியெல்லாம் கொடுத்து உபசரிக்க மாட்டேன். ரஞ்சன் மதுபானங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கின்றான் என்று எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. இப்போ அவன் போய்விட்டதால் எஞ்சி இருப்பதெல்லாம் என்னுடைய சொத்துத் தானே.

//

உண்மையாக அவன் காணாமற் போன நாளுக்கும், உத்தியோகபூர்வமாக ‘காணாமற்போய்விட்டான்’ என்று பதியப்பட்ட நாளுக்கும் இடையில் முப்பது நாள் இடைவெளி. அது ஏன் என்று கேட்டால் நான் உங்களுக்குச் சொல்லக் கூடியது இதுதான்: அவனைக் கொண்டு போனதை நான் என் கண்களாலேயே கண்டிருந்தாலும்கூட, சரோஜினி வீடுதேடி வந்து சாட்சியம் சொல்லியிருந்தாலும்கூட, அதை முழுதாக நம்புவதற்கு எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகும் என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்ததால், காணாமற் போனதை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்ய இன்னும் மூன்று வாரங்கள் சென்றன. எனது கணவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. சாமியறைக்குள்ளே போய்க் கடவுளுக்கு முன்னாலே நகராமல் நிற்க வேண்டும் போல இருந்தது. ஒழுங்கையில் இருந்தவர்கள் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்: எப்படி ரஞ்சனை அவர்களால் கொண்டு போக முடிந்தது? ஏன் அதை எல்லோருக்கும் சொல்ல எனக்கு அவ்வளவு காலம் பிடித்தது? வம்படிப்பவர்கள் எனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுத் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் கேட்டது. நானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சிந்தித்தேன். அதைத்தான் வம்பர்களும் எதிர்பார்த்தார்கள்.

கடைசியாக, தளர்ந்து விழுந்து விடாமல் வீட்டு வாசலுக்கு வெளியே செல்லும் அளவுக்குத் தைரியம் வந்ததும், காணாமற் போனதைப் பதிவு செய்யச் சென்றபோது நான் முதல் முதலாகச் சொன்னது துஷாரவுக்குத் தான். நானும் ரஞ்சனும் திருமணம் செய்த காலத்தில் இருந்தே பக்கத்து மூலையிலுள்ள இராணுவக் காவல் முனையில் சென்ட்ரி வேலை பார்த்து வருபவன் அவன். நான் விஷயத்தைச் சொன்னபோது அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கடுமையாக யோசித்தான், யார் செய்திருக்கலாம் என்று ஊகிப்பதற்காக ஒரு தொலைபேசிப் புத்தகத்தை மானசீகமாகத் தட்டிப் பார்ப்பது போல. ஆனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் அழுதபோதுகூட அவன் கண்டுகொள்ளாதவன் போல நடித்தபடி சீருடைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த கைக்குட்டையை மட்டும் கருணையுடன் எடுத்து நீட்டினான். அதற்குப் பிறகு எனது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் மரியாதை காட்டுவது போலத் தலையைக் குனித்துக் கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு காணாமற் போன பதிவை விசாரணை செய்வதற்காக ஒரு இராணுவக் கேணலை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான். லேசாக ஊசிப் போனமாதிரி நாறும் எனது வீட்டுக் கூடத்துக்கு அழைத்துப் போய், தேனீர் கொடுத்து, என் கதை முழுவதையும் சொன்னேன். கேணல் மும்முரமாக விவரங்களை எழுதிக்கொள்ள துஷார அவருக்குப் பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். கிரிஷான் அப்போ ஒரு குழந்தை. எனக்குப் பின்னால் அழுதபடி நின்று கொண்டிருந்தான். அவனது விசும்பல்களைக் கேட்ட கேணல் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலே ரஞ்சன் நிற்பது போல, வெவ்வேறு மனிதர்கள் தன்னைத் தூக்கி வைத்திருப்பதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவன் போல, கிரிஷான் உடனேயே மௌனமாகிவிட்டான்.

நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி, தான் கேட்க வேண்டியவை எல்லாம் கேட்டு முடித்த பிறகு கேணல் எனக்கு விதிமுறைகளை விளக்கத் தொடங்கினார். எனது கணவனைக் கைது செய்ததாக எந்த விதத் தகவலும் அவர்களிடம் இல்லையாம். ஆகவே, அவன் காணாமல் மட்டும்தான் போயிருக்கிறானாம். எந்த நேரமும் திரும்பி வரலாமாம். அவனை இழந்ததற்கு எனக்கு ஏதாவது நட்ட ஈடு தருவதானால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு தான் சாத்தியமாம். நான் பேயறைந்த மாதிரி நின்றிருந்தேன். கிரிஷான் இன்னும் சின்னவன். நான் பிரசவத்துக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போனது கிடையாது. கையிலே காசு எதுவுமே கிடையாது. “என்ன செய்யப் போகிறாய்?” என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் கேணல் கேட்டார். அப்போதுதான் “சேர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்,” என்று துஷார சொன்னான்.

இப்படித்தான் நான் முந்திப் படித்த பள்ளிக்கூடத்திலேயே துப்புரவு வேலை செய்ய ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைகளுக்கும் தேவையான தகைமைகள் என்னிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் பாதை எனக்கு நன்றாகவே பிடித்தது. நடந்து போகிற வழியில், எங்களிடமிருந்து பறித்த காணிநிலங்களில் இப்போ இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அழகான உல்லாசப்போக்கிடம் தெரிந்தது. அப்பாவின் பழைய வீடும் பாட்டி குளித்த கிணற்றடியும் தெரிந்தன. கிணறு முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. எல்லையில் போட்டிருந்த முள்ளுக் கம்பி வேலி வரைக்கும் போனால் உடைந்து போன கிணற்றின் சீமெந்து வட்ட விளிம்பு தெரியும். நான் கிரிஷானைத் தூக்கிக் கொண்டு போகிற போதெல்லாம் துஷார எனக்குக் கை காட்டுவான். பிறகு கிரிஷான் வளர்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரத் தொடங்கியபோது, ஆமிக்காரர்கள் தகப்பனில்லாத அவனைப் பார்த்துச் சிரித்தபடி “ஹலோ சின்னவன்” என்று அழைப்பார்கள். அவர்களின் கண்களில் இலகுவாக வரும் கனிவு என் கணவனின் ஞாபகமூட்ட, எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். அவர்களின் தாய்களைப் பற்றி நினைவு எனக்கு வந்ததும், கிரிஷானை இறுக்கிக் கட்டிப் பிடிப்பேன்.

என்னைப் போல ஒரு கணவனில்லாத பெண்ணுக்கு, கையில் பணமில்லாத ஒரு தாய்க்கு, மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். சீமெந்துத் தரைகளை வட்டவட்டமாக ஈரத்துணியால் துடைத்தேன். கரும்பலகைகளைக் கழுவினேன். மாணவர்கள் சிந்தி விட்டுப்போன புத்தகங்களை மீண்டும் புத்தகத்தட்டுகளில் அடுக்கினேன். அவர்கள் பகலுணவு சாப்பிட்ட மேசைகளைத் துடைத்தேன். நான் அங்கே படித்த கால ஞாபகங்கள் வந்து போயின. மாணவர்கள் என்னைக் கருணையோடு நடத்தினார்கள். ஆசிரியர்கள் என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஒரு கருணைதான். அங்கு துப்புரவு வேலை செய்வது எனக்குப் பெரிய அவமானம் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். நான் படித்த காலங்களில் கணிதத்தில் வகுப்பிலேயே நான்தான்கெட்டிக்காரி. ஆங்கிலத்தில் அதைவிடக் கெட்டிக்காரி. எனது ஆங்கிலத் திறமையைப் பார்த்து விட்டு நான் வெளிநாடு போவேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், மத்தியகிழக்கு நாடொன்றுக்கு, அல்லது ஐரோப்பிய நாடொன்றுக்குக் கூடப் போகும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் தும்புக்கட்டையோடு மண்டபத்தில் பின்னால் நின்று கொண்டு பார்ப்பேன். எல்லோரும் என்னைக் கண்டுகொள்ளாத மாதிரியே நடந்து கொள்வார்கள். ஆகவே எனக்கும் தங்கு தடையின்றி எல்லோரையும் போல நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது போன்ற உணர்வு வரும். நான் ஒரு முழுமையான மனைவியாகவும் இல்லை, முழுமையான விதவையாகவும் இல்லை, ஒரு புலியாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை. ரஞ்சன் எனக்குப் பக்கத்தில் நிற்கின்றான் என்று கற்பனை செய்து கொள்வேன். அவனது அகலமும் ஆழமும், அவன் உடம்பு எடுத்திருக்கக் கூடிய இடமும் என் கற்பனையில் துளிர்ப்பன. தாறுமாறாக வளர்ந்த அவனது மீசை, அவனது புன்னகை, எல்லாம் நினைவில் வந்து போயின. “உன்னுடைய மகனும் இங்கே ஒரு நாள் படிப்பான்,” என்று யாரோ பெருந்தன்மையாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னதற்கு நான் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் வெறுப்பைப் பொங்க வைத்தது.

//

அந்த முதல் வருடம் வாரத்துக்கு ஒரு முறை துஷாரவையும் கேணலையும் பார்க்கப்போய் ரஞ்சனைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று விசாரிப்பேன். கண்ணியமாகவே ஆரம்பிப்பேன்: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுந்தானே, என்று கெஞ்சினேன்; என்னை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள், என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தவர்கள். எனக்கு அவன் திரும்பிக் கிடைப்பது மட்டும் தான் தேவை. ஆமிக்காரர் தான் அவனைக் கடத்திக் கொண்டு போனார்கள் என்றால் நான் யாருக்குமே சொல்ல மாட்டேன், சொல்லத் தேவையுமில்லை. அவன் இப்போது புலிகளோடு இல்லை. வெறுமனே கிரிஷானின் அப்பா மட்டும்தான். தயவு செய்து அவன் எங்கே என்று சொல்ல மாட்டீர்களா? கேணல் ஒரு கூடாத மனிதரல்ல. துஷாரவை விடத் தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து வந்தவர். என்னை மௌனமாக வெறித்துப் பார்ப்பார். இரண்டாவது வருடம், எனக்கு குறைச் சம்பளத்தில் நிறைய வேலை இருந்தபோது மாதமொருமுறை மட்டும் தான் போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது ரஞ்சன் பக்கத்திலேயே படுத்திருப்பதாக ஒரு பிராந்தி. எப்போவாவது ஒரு நாள் சரோஜினி தெருவைக் கடந்து வந்து அவன் எங்கே சிறை வைக்கப் பட்டிருக்கிறான் என்று தான் கேட்ட வதந்தியைப் பகிர்ந்து கொள்வாள். உன்ரை மனிசன்.அந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே நேரத்தைப் பார்க்காமல் அவள் சொல்லும் கதை கேட்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள். எனது தனிமை அவளைச் சங்கடப் படுத்தியிருக்கலாம். எனது கணவன் இருந்தபோது அடிக்கடி வந்து போன அயலவர்களும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. தெருவில் காணும் போது கண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். கடைசியில் மூன்றாம் வருடத்தில் கேணலுடனான உரையாடல்கள் சம்பிரதாயபூர்வமாயின. ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பேன். பல அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைக் காட்டுவேன். அவர் மறதியோடு தலையாட்டும் போது ஒரு நாளுமே நற்செய்தி வரப்போவதில்லை என்ற உண்மை எனக்கு உறைக்கும். என்னைப் பார்த்துச் சிரித்த, சிரிக்கக் கூடிய, மனிதர்கள் துஷாரவும் அவனது நண்பர்களும் தான். முள்ளுக்கம்பியின் பின்னால் எங்கள் வீடுகள் இருந்த காணியில் ஒரு வளரும் குழந்தை போல அந்த ஆமி ஹோட்டல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு சீமெந்து வார்க்கும் ஆமிக்காரர்களின் முகங்கள் வியர்வையால் மின்னுவன.

//

ஒவ்வொரு மாதமும் ஏழாந்திகதி கலண்டரைப் பார்த்தபடி என் காலம் போனது. நான் ஒரு ஏழை என்று முதலே சொல்லியிருக்கிறேன் தானே. முதல் வருடம் முடியும் போது கிரிஷானிடம் காலணி இல்லாமல் போனது; இரண்டாம் வருடம் முடியும்போது.அவனது உடைகள் அளவில்லாமற் போயின. மூன்றாம் வருடத்தின் இறுதி நாட்களில் அவனை அசப்பில் பார்த்தால் ரஞ்சன் தன் வாழ்க்கையின் அதல பாதாள கட்டத்தில் இருந்தத்தைப் போலவே இருந்தான். புலிகளுடன் இருந்த காலம் ரஞனைப் பொறுமை போன, உடல்தேய்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. கிரிஷான் இன்னும் என் செல்லக் குட்டிதான், ரஞ்சனைப் போலவே முகம் கொண்ட அமைதியான  குட்டி. ஆனால் அவனுக்கு நான்கு வயது என்றாலும், நாள் போகப்போக அவன் வளராமல் தேய்கிற மாதிரி இருந்தது.

அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு ஒரு புதுத் தலைமையாசிரியர் வந்தார். என்னைப் பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் பின்னுக்கு நின்று வேலை செய்யச் சொன்னார். அவர் இராணுவத்தினரின் நண்பர். நான் எப்படிப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்ற கதை அவருக்குத் தெரியும். நான் சொல்வது புரிகிறது தானே—அவரது சொந்தப் பொருள்களைத் துப்பரவாக்கவும் பராமரிக்கவும் அவருக்குத் தேவையிருந்தது. தையல் வேலை, திருத்த வேலை, கோப்புகளைக் கோவைப் படுத்தும் வேலை—வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய உடன்பட மாட்டார்கள். அவருக்குத் தேவையாயிருந்தது ஒரு சுறுசுறுப்பான, கெட்டித்தனமான, காசில்லாத, ஆகவே யாரிடமும் ஏதும் சொல்லி முறையிடமாட்டாத பெணதான். பகல் வேலைகளில் கிரிஷான் கன்னியர் மடப் பாலர் பள்ளிக்குச் செல்வான். மாலை நேரங்களில் அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பிள்ளைகளைப் பராமரிக்க மாட்டார்கள். மாலை நேரங்களில் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள எனக்கு யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அதற்கு, என்வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது, சுகம் விசாரிக்க வரும் இராணுவத்தினர் கூட ஒரு  காரணமாக இருக்கலாம். நான் கிரிஷானை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு மாலை வேலைக்குப் போகலாமா? அவன் அமைதியான பிள்ளை. தலைமையாசிரியர் சம்மதிப்பார் தானே. கிரிஷான் தொடர்ந்து வரமுடியாத ஏதாவது இடத்துக்கு  நான் போகவேண்டுமென்றால் என் பிள்ளை பொறுமையாகக் காத்திருப்பான். அதற்கு அவன் இப்போ நன்றாகப் பழகிவிட்டான். 

கிரிஷானைக் கூட்டிக் கொண்டே வேலைக்குப் போவது என்று நான் தீர்மானித்துவிட்டபோது துஷார வழமை போல ஒரு கோப்பை தேனீர் கேட்டு வந்தான். அப்படி அவன் வரும்போது எனக்கு மறுப்புச் சொல்ல முடிவதில்லை. அவனுக்கும் வயசு வந்துவிட்டது. அவனது கழுத்து ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தாகப் பரந்திருந்தது. படையினர் செய்யும் கடினமான கட்டட வேலைகளால் அவனது கைகளும் தோள்களும் செழிப்பாகத் திடர்ந்து முறுகியிருந்தன. என்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த பிஸ்கட்களை அவனுக்குக் கொடுத்து, நான் வேலைக்குப் போக வேண்டுமென்று சொன்னேன். அவன் கிரிஷானைப் பார்த்தபடி, “உன் மகனை ஒருமுறை பாத்துட்டுப் போகலாம் எண்டுதான் வந்தன்,” என்றான். “நீ திரும்ப வேலைக்குப் போறியா?” என்று குழம்பிய முகத்தோடு கேட்டான். “இப்போ பின்னேரமல்லவா? நான் அவனைப் பாத்துக் கொள்றன்,” என்றான்.

இராணுவத்தில் இருந்தாலும் இன்னமும் ஒரு சிறு பையனாகவே இருந்த துஷாரவை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு என் பையனைப் பார்த்தேன்—அவன் ரஞ்சனைப் போல ஒரு புலியாக ஒருநாளும் வரப்போவதில்லை. இந்த உண்மைகள் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் சந்தித்திருந்த மற்ற சில இராணுவத்தினரைப் போல அல்லாமல் துஷார தான் எனது நண்பன் என்றே தன்னை வரித்துக் கொண்டான். துஷாரவோடு கிரிஷானை விட்டுவிட்டு தனது அலுவலகத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரிடம் வேலைக்கு நடந்து போனேன். 

//

எனது நேரம்—ரஞ்சனின் நேரம்—முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்தார். அந்த விசேட நிகழ்வுக்காகப் பள்ளிக்கூடத்தைத் துப்புரவாக்க இன்னும் சிலரைத் தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகள் தேசிய கீதம் பாடுவதற்குப் பயிற்சி செய்தார்கள். எனக்குப் புதுச்சீருடை வழங்கப்பட்டது. வழக்கம் போல மண்டபத்தின் பின்பக்கத்தில் என்னை நிற்க விட்டார்கள். நான் இந்த வருகையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் துஷாரவுக்கும், மட்டக்களப்பில் இருந்த மற்ற இராணுவத்தினருக்கும், இந்த மனிதரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிகுந்த உற்சாகம் இருந்தது என்று எனக்குத் தெரியும். அவரது முகம் ஒரு புதிய முகம், ஆனால் அதே நேரத்தில் பழைய முகமும் தான்—பல முந்தைய அரசுகளில் பங்கெடுத்திருக்கிறார். இப்படியான பெருந்தகைகள் விஜயம் செய்யும் போது வழக்கமாக நடப்பது போலவே இராணுவத்தினர் வந்து முன்வரிசையில் நின்று அணிவகுப்பு மரியாதை செய்தார்கள். 

அவர் உரையாற்றிய போது நான் ரஞ்சனைப் பற்றி நினைத்தேன். அரசியல் என்றால் அவனுக்கு உயிர். பின்சுவரோடு சாய்ந்தபடி நான் எனது தும்புக்கட்டையை இறுகப் பிடித்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருந்தும் அந்த மனிதரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது ஒரு உறுதியில்லாத முகம். எனது ஊரில் எஞ்சியிருந்த கணவர்களெல்லாரும் வெளியேறியோ எடுத்துச் செல்லப்பட்டோ காணாமற் போன பல வருட யுத்த காலத்தில் அவர் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையால் அவரது தாடை மறைந்து முகம் செழிப்பாக இருந்தது. அதே காலத்தில் துஷாரவுகளும் அவர்களது கேணல்களும் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறி எங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்தார்கள். 

அரசாங்கப் பிரதிநிதி சிங்களத்தில் பேசினார். இதற்கெல்லாம் கோபம் கொந்தளிக்கத் தேவையான சக்தி எனக்குள்ளே வரண்டு போய்ப் பலகாலம். சோகம் மட்டும்தான் மிச்சம். அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்க முயற்சித்தேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியாது. அவர் ஒரு வசனத்தைச் சொன்ன போது அரங்கிலிருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு. சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்தேன். சரியாகப் புரியவில்லை. வாயைத்திறந்து “என்ன?” என்று கேட்டேன். முதலில் எனக்குள்ளே மட்டும். பிறகு பக்கத்திலிருந்த தற்காலிக வேலையாளரைப் பார்த்து. ஆனால் அவளுக்கும் சரியாகக் கேட்கவில்லை, சிங்களமும் நன்றாகத் தெரியாது. பல முக்கியஸ்தர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கேட்பவர்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தாங்கள் சொன்னவற்றை திருப்பிச் திருப்பிச் சொல்லுவார்கள் அல்லவா? இவரும் அப்படிச் சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இரண்டு பேரும் கழுத்தை வளைத்து அரசாங்கப் பெருந்தகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தோம்.

ஆனால் அவர் எதையும் திருப்பிச் சொல்லவில்லை.

நான் பிறகு துஷாரவைக் கேட்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்னென்றால் ரஞ்சனைக் கேட்டிருப்பேன். இராணுவத்தினர் எனது கணவனை அடிக்கடி சந்திக்க விரும்பியதற்கு ஒரு காரணம் மொழிபெயர்ப்பு இல்லாமலே அவர்கள் அவனைச் சங்கடப்பட வைக்க முடிந்தது.

//

அரசாங்கப் பிரதிநிதி சொன்னது என்னவென்றால், இப்போது காணாமற் போனவர்கள் எல்லாரும் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்பதே. துஷார மெல்லிய குரலில் சொன்னான். எங்களுக்கு இது தெரிந்த விஷயம் தானே என்றான். அவன் அழுகையின் விளிம்பில் நின்றதும் எனக்கு அழுகையே வராததும் அவன் எத்தகைய கருணையுள்ளம் கொண்டவன் என்பதை உங்களுக்கு விளக்கும். அவன் எனக்கு இதைச் சொன்னபோது கிரிஷானைத் தன் மடியில் முகம் பார்த்தபடி வைத்திருந்தான். இந்தமுறை தேனீருக்குப் பதிலாக விஸ்கியைக் கொடுத்திருந்தேன். தனது மன உளைச்சலை எனது மகனுக்குக் காட்டி விடக்கூடாது என்று அவனைத் திருப்பி முழங்காலில் குதிரைச் சவாரி விளையாட்டுக்குப் போல இருத்தினான்.

“அம்மா, குதிரை!” கிரிஷான் தமிழில் சொன்னன். “Horse,” என்று நான் ஆங்கிலத்தில் சொன்னேன். பிறகு துஷாரவைப் பார்த்து, “திருப்பிச் சொல்லு,” என்றேன். “அந்தச் சொல்லைச் சிங்களத்தில் திருப்பிச் சொல்லு.”

துஷாரவின் மடியில் கிரிஷான் ஒரு குட்டி துஷாரவைப் போலத் தெரிந்தான். ஓரு குட்டி ரஞ்சனைப் போல. நான் வேலை செய்யும் தலைமை ஆசிரியரின் ஒரு குட்டி வடிவம் போல. எது உண்மை என்று சொல்லும் திறமை என்னை விட்டுப் போய்விட்டது. நேரம் முன்னோக்கி எதிர்காலத்துக்குப் போக வேண்டுமா, பின்னோக்கிக் கடந்த காலத்துகுப் போக வேண்டுமா, அல்லது அப்படியே தற்காலத்தில் உறைந்து நிற்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.

//

உங்கள் கணவரைக் கொண்டு போய் மூன்று வருடங்கள் முடிந்ததும் அவர்கள் உங்களுக்கு நட்ட ஈடு செலுத்துவார்கள். உங்களுக்கு இந்தத் தொகை உரித்து என்று ஒரு சான்றிதழ் தருவார்கள். நான் ரஞ்சனுக்காகக் காத்திருந்தேன். அவன் மறைந்து போய் மூன்று வருடம் முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது இன்னுமொரு மனிதனை என்னிடம் கொண்டு வந்தார்கள்.

கைவிலங்குகள் அவன் கைகளைப் பிணைத்திருந்தன. அவன் முகம் வீங்கியிருந்த விதத்தைப் பார்க்க எனக்கு என்ன செய்வது என்றோ அவனோடு எப்படிப் பேசுவது என்றோ தெரியவில்லை. நான் முந்தி ரஞ்சனோடு இருந்த காலத்தில் அவன் முகத்தை என் உள்ளங்கையால் அரவணைத்த மாதிரி இந்த மனிதனின் முகத்தையும் என் உள்ளங்கையில் ஏந்தியிருந்தாலும் அவன் முகத்தில் பரவியிருந்த காயங்களுக்கூடாக அவனது எலும்புகள் எங்கே இருக்கின்றன என்று கூடச் சொல்ல முடியாது. அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த துஷார தன் கண்களை என்பக்கம் எதிர்பார்ப்புடன் திருப்பினான். கட்டப்பட்டிருந்த மனிதன் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்தான். நான் தான் என்று அவர்களுக்குச் சொல்லு கண்ணம்மா, அவர்களுக்குச் சொல்லு குஞ்சு. ஆனால் அது எனக்குத் தெரிந்த வாயல்ல. வரண்டு வீங்கிப் போயிருந்த அவன் நாக்கால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. அவன் கன்னங்கள் அழுகிய பழங்கள் போல வீங்கியிருந்தன. அவனுக்குத் தண்ணீரோ தேனீரோ விஸ்கியோ கொடுக்கலாமா என நினைத்தேன். அவனோடு தமிழில் பேச எனக்கு அனுமதி தருவார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அல்லது அந்த அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நான் படித்துக் கொண்ட ஒரேயொரு சிங்கள வசனத்தை அவனுக்குச் சொல்லலாமா: காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது.

“இவன் உங்கட புருஷன் எண்டு சொல்றார்,” கேணல் எனக்கு விளக்கினார். “நீங்க ஒவொரு மாசமும் எங்ககிட்ட விசாரிக்க வருவீங்க. ஆனபடியாத்தான் இவன உங்ககிட்ட கொண்டு வந்தோம். நாங்க எல்லாம் சரியாத்தான் செய்வம் எண்டு இப்ப உங்களுக்கு தெரியுங் தானே. இவந்தான் உங்க புருஷன் எண்டா அவனைக் கூட்டிக் கொண்டு நீங்க எங்கயாவது துர இடத்துக்குக் போக வேணுங்.. பக்கத்து ஊரில கொஞ்சம் காணித்துண்டு இரிக்கு. உங்களுக்கு வேணுமெண்டா உங்க காணியக் குடுத்துட்டுப் பதிலா அதை எடுக்கலாம்.”

போகவேணும். போகலாம். இந்தச் சொற்களின் அர்த்தங்கள் மொழிக்கு மொழி மாறலாம். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்பட வேணும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கட்டாயமாகக் கருத வேணும். இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கருதலாம். இதைத்தான் அரசாங்கப் பிரதிநிதி சொல்ல விளைந்தார். எங்களுக்கு விமோசனம் தருகிறார் என நினைத்தாரா?

வேணும், -லாம், இந்த சொல் விகுதிகள் எல்லாவிடமும் வியாபித்து இருக்கின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்னவாக இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத மனிதனோடு என் வீட்டை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை. அவனுடைய புலி அடையாள அட்டையை எரித்து உருக்கி விட்டேன் என்று ரஞ்சனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் அட்டை இப்போ வேறேதோவாக உருமாறியிருந்தது. அந்த மனிதனை எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும்போல இருந்தது. எங்கே போயிருந்தாய்? உனக்கு என்ன செய்தார்கள்? நான் இல்லை என்று சொன்னால் உனக்கு என்ன நடக்கும்? உன்னைக் காப்பாற்ற என்றாவது நான் ஆம் என்று சொல்லி உன்னுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்? எனது கணவன் ஒரு நாளும் திரும்பி வர முடியாமற் போகும். எனக்குப் பின்னால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த முன்பின் தெரியாத மனிதனும் ஒரு மனிதன்தான். யாருக்கோ சொந்தமானவன்தான். இப்போ நான் இவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில வேளை யாருமே அவனை ஏற்றுக் கொள்ளாமற் போகலாம். நான் அவனை இருட்டிலும் இருண்ட இடத்துக்குத்தான் அனுப்பி வைத்ததாக இருக்கும்.

எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று எனக்குத் தெரியாது. நான் யார், என்னிடம் என்ன உள்ளது என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிஷானின் குரல் என் பின்னே கேட்டது. அவன் சின்னஞ்சிறு கை என் கையுடன் பின்னிக் கொண்டது.

“அம்மா, இது அப்பாவா?” அவன் கேட்டான்.

காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்று அந்த அரசாங்கப் பிரதிநிதி சொன்னார். ஆனால் அவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்: அவர்கள் மேல் அன்புவைத்தவர்களால் தவிர.

“அப்பாவா?” கிரிஷான்மீண்டும் கேட்டான்.

“இல்லை கண்ணா,”

 “இல்லை, இல்லை,” நான் கேணலைப் பார்த்துச் சொன்னேன். கேணல் தலையாட்டினார், முதலில் மெதுவாக, பிறகு உறுதியாக. நான் திரும்பவும் சொன்னேன், “இது அவரல்ல.”

“நிச்சயமாகவா?” என்று கேட்டார்

 “நிச்சயமா,” என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் என் மனத்தை எதுவும் மாற்றியிருக்காது என்றாலும், நான் செய்தது சரியா என்று எப்பொழுதுமே எனக்குத் தெரிய வராது என்பதும் எனக்குப் புரிந்திருந்தது. அந்த மனிதனின் முகத்தை அதன் பின் காண்பதற்கே எனக்குப் பயமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் தருணத்தில் அவன் முகமில்லாத மனிதனாகவே நின்றான். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள்.

அவர்கள் போன பிறகு நான் திரும்ப ஒரு முறை அந்தக் கலண்டர் இருந்த இடத்துக்குச் சென்றேன். இந்தமுறை நான் ரூபாய்களைப் பற்றி நினைக்கவில்லை. எனது நெஞ்சைக் கட்டி இறுக்கியிருந்த உணர்வு எப்போதாவது ஒருநாள் விலகுமா என்பதைப் பற்றி நினைத்தேன். எத்தனை நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் எனக்கு விதவைப் பட்டம் அளிக்கும் என்று அந்தக் கலண்டர் கூறியது. ஆனால் என்முன்னே நீண்டு இருக்கும் என் எஞ்சிய வருடங்களை யாராலும் அளக்க முடியாது. என் நீண்ட வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன

https://ezi.asokan.org/2025/10/21/காணாமற்போனவர்கள்/?fbclid=IwdGRleAN76QhjbGNrA3vVS2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR75GU23D98e6cXAcZ0arxZfrZl1L6KfpKvnqC1YCnoqvn7ZsUQkaMCeSZIHzg_aem_Se7s0UWJ08rE2ycxU-0u_A

சமிக்கை-கிறிஸ்டி நல்லரெத்தினம்

1 month 3 weeks ago

சமிக்கை

கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments

வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது.

oonjal3-300x158-1.jpg?resize=600%2C400&s

அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும்.

அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார்.

அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு.

ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை.

அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான்  ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். 

எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும்.

எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை  தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார்.

அப்புவின் எலும்பு  முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். 

ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை  காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே!

அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?”  என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும்  உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது!

ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். 

அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய்  திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார்.

கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது.

‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும்.

வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! 

x.   x.     x.     x.      x.    x.     x

நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி….

அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை.

அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர  வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா?

அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. 

ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு  “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா?  சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?”  என பயம் காட்டினார்.

செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது.

அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே  இப்போது கண்டார்.

நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது.

செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற  நம்மட கோயிலடி சண்முகத்தின்ர  கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப்  போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார்.

அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன்.

அம்மா அப்புவை அந்த வயோதிபர்  மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். 

அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது..

தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன.

தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும்  தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது  போல் பாசாங்கு செய்து,  மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி  வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன?

மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட  ஜீவன்களின் பிரதிநிதிதான்  அப்பு இன்று.

அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும்.

அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும்  அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. 

‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட  இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். 

அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். 

மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம்.

‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“  என்றபோது  அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார்.

‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம்.  அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின.

அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’  உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது.

பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று!

https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/

சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -

1 month 4 weeks ago

சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -


Generated%20Image%20October%2021,%202025%20-%2012_07PM.png


- இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 

'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'

சின்னம்மா  வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.

'என்ன  சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'

"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."

"என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"

"அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே"

'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது."

 சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள்  சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்'  வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது.

இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான்  ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத்  தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன். 

vng_santha_akka23.JPG 

சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து  வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது.

சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற  வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை.

ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து!  சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன்.

சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா  அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல்  புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது.  அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது.

கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்."

"என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?"

"ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு.  வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார்.  

எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும்,

"கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன்.

இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான்.  அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா.

நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து  விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன்.  இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன்.

என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன்.

"கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ  தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட  பொடி கார்ட்  கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா.

பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர்.

அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ  பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக்  குளத்தின் ஆழத்தில்  புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே.

"டாடி"

என் சின்னவள் அழைத்தாள்.

பதிலுக்கு " என்னம்மா" என்றேன்.

"டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள்.

இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்.  அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள்.

எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது  வியப்புடன் நோக்கினாள்  என் இளைய மகள்.

girinav@gmail.com

22.10.2023 ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்)

vng_story_santha_akka.jpg

https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_37.html?fbclid=IwY2xjawNkrgxleHRuA2FlbQIxMABicmlkETFyNDAxNzc0bjN1aTZreTZDAR4nYgk-MaWmcqRSV0UGqKRJnarLhrBwLuweYhFzZsqJNR8KC_HZ1KEW-AZk6Q_aem_Ulbig9zfNlgHkWaVY7mZjA

சொண

2 months ago

-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0

அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். 

“தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” 

அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து, பிளேன்டீயை உறிஞ்சி குடிக்கிறான். அதன் சுவை அவனுக்கு ஏதோ செய்ய அம்மாவிடம் திரும்பி. “அம்மாவோ.. தேத்தண்ணி கசப்பா இருக்ககும்மா.பால் டீ தாங்க..” 

”அட போடா தம்பி.. பால் டீக்கு நான் எங்க போவேன்.. அப்பா ஸ்டோருலாதான் வேலை செய்யிது. … என்னத்துக்கு பிரயோஜம்.. ஒரு நாளாவது நல்ல தேத்தண்ணி குடிச்சிருப்பமா.” 

பச்ச தண்ணியில் முகப் கழுவிய குளிர் நடுக்கத்தில். கட்டியிருந்த சாரத்தில் முகத்தை துவட்டிக் கொண்டு அவள் கையில் இருந்த தேத்தண்ணிய வாங்கி குடித்தவன். முகம் கோணம் மாறியவனாக வாசலில் சென்று துப்பிவிட்டு. கெட்ட வார்த்தையில் தேத்தண்ணிய திட்டினான்.. 

“ராஜி..ஓய் ராஜி. அட என்னாப்பா செய்ற.. டைம் போச்சி..ஓடியா..போகலாம். “ 

செல்வராஜை அழைத்தப்படி பெருமாள் வாசலில் நிற்கிறான். 

”ஏய் தேத்தண்ணி கொஞ்சம் ஊத்துப்புள்ள.” 

செல்வராஜ் பெருமாளை ஏக்கமாக பார்த்தவன். 

“ஆத்தா அய்யாவுக்கு அந்த தண்ணிய ஊத்து..” என்று நக்கலாக சொல்கிறான். அவள் சிரிப்பை அடக்க முடியாது மீதமாக இருந்த சாயத்தை பிளாஸ்டிக் ஜொக்கில் ஊற்றி பெருமாளிடம் தந்தவள்.. 

“மச்சான்.. குடிச்சிப்புட்டு ராங்கி பேச கூடாது-‘ 

பெருமாள் முகம் மாறும் என்ற எண்ணத்தில் அவர்கள் பார்க்க, ”த்து?” என்று துப்பிவிட்டு அவன் அவர்களை முறைக்க. அவள் உடனே, 

“இந்த மொறப்பு எல்லாம் ஒண்ணும் ஆகது மச்சான்…ஏமச்சான்…  உனக்கு ஒரு பிடி தேயிலை துாளை கொண்டு வந்து தர துப்பில்ல. ஸ்டோரு பெக்டறியிலதான் வேலை ஆனால் சொணைய குடிச்சி குடிச்சி சொறனையே இல்லாம போயிருச்சி.” 

நாம நட்டு நாம நம்ம பிள்ளளைகளை போல காத்து பார்த்து நட்ட தேயிலை நமக்கு சொந்தமில்லலை- அட்டை கடியில வேகாத வெயிலில மழையில நாம காலத்திற்கும் கஸ்டம் பட்டாலும் கடசியில நமக்கு அந்த கழிச்சி கட்டின சொணையதான் குடிக்கனும்.. தலைவரு மாறுக இதெல்லாம் கேட்க மாட்டாங்க… போ மச்சான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாவது நல்ல தேயிலை துாள்ள தேதண்ணி குடிச்சிடனும்.” 

செல்வராஜிம் பெருமாளும் அவள் உண்மையாகவே பேசுகிறாள் என்ற ஆதங்கத்தை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த பார்வையில் ஏதோவொன்று இருந்தது. 

இந்த தேயிலை ஆலையின் சத்தம் அவனுக்கு பழகி போயிருந்தது. ஆனாலும் இன்று அந்த ஆலையின் சத்தங்களை விட அவன் உள் மனதில் மனைவியின் ஆதங்கமான வார்த்தையின் சத்தம் அவனை சதா நேரமும் சங்கடமாக மாற்றியது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் இந்த தேயிலை ஆலையின் தொழிலாளியாக இருக்கிறான். இதுவரை ஒரு நாள் கூட ஒரு பிடி தேயிலை அவன் அங்கே இருந்து திருடினது இல்லை, அவனுக்குள் ஏதோவொரு அறம் அவனை அப்படி செய்ய தூண்டியது இல்லை. அவன் அதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை. 

“மச்சான் என்ன யோசிக்கிற. நாம அந்த பெக்டறியில ஒரு பிடி தேயிலை துாளை எடுக்கிறது திருட்டு இல்ல மச்சான்.. கீலோ கிலோ அய்யா மாறுக திடுடுறாங்க… ஆனால் நாம கொஞ்சோண்டு எடுக்கறது குத்தம் இல்ல. அது நமக்கு உள்ள உரிமை மச்சான்..” 

பெருமாள் சாக்கு மலையயை கடந்து வரும் போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. எப்படியோ அவன் மனது ஒரு தீர்மானத்திற்கு வந்தது. ஆனாலும் அவனுக்குள் உள்ள ஒருவன் வேண்டாம், இதேல்லாம் நல்லது இல்லை. நேர்மையா இருந்திட்டு போயிருனும் தம்பி. தனது தகப்பன் பேசும் நீதி கதைகளை நினைத்து கொண்டான் அவன். 

அதிகாலையின் குளிரான வேளையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக படுத்திருக்கிறார்கள். அருகில் சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவள் சிணுங்கும் குரலில்.. 

“மச்சான்….” 

“ம்..” 

”லேபர் டஷ்ட்டுனா என்னா மச்சான்..?” 

சொணதான் டஷ்ட்டு தேயிலை.. கழிவுதான் அது..” 

”நாம குடிக்கும் டீ. கழிவுதான்..” 

”நமக்கெல்லாம் தொறமாறு குடிக்கிற தேயிலை கிடைக்காதா.. நாம என்ன நாக்கு செத்த ஜென்மங்களா.. எப்ப மச்சான் நாமளும் அது மாதிரியான தேத்தண்ணியை குடிப்போம்..” 

என அவனது காதுகளில் முணுமுணுக்கிறான்.. வெறித்த பார்வையோடு மோட்டுவளையை பார்த்து அவன் படுத்திருக்கிறான். 

இருண்ட திரையில் கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. மெல்லிய காலை பொழுது கதவின் ஊடாக வீட்டுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறது. மெல்ல முன்பு நகர்ந்து வாசலின் ஊடாக அப்படியே தேயிலை தோட்டம் நிரம்பி ததும்பும் மலைவெளியில் பரவுகிறது. மஞ்சு மூட்டங்கள் தூரத்து சிகரங்களில் தழுவ, அப்படியே அந்த அதிகாலை நேரத்து மலைப் பிராந்தியத்தை மெல்ல வலம் வருகிறது. தொலைவில் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட அந்த தேயிலை தயாரிப்பு ஆலை அமைந்திருப்பது தெரிகிறது. அப்படியே வெண்பனியின் ஊடாக குளிர் கொட்டி கிடக்கின்றது, வெண்மை பரவுகிறது 

வாசல் சுதவை திறந்து கொண்டு செல்வராஜ் வெளியில் வருகிறான். தூக்க கலக்கத்தில் வெளியே வரும் அவனது மனதில் ஏதோவொரு விரக்தி தெரிகிறது. வீட்டுக்கு முன்புறம் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை எடுத்து வாயை கொப்பளித்து, முகத்தை கழுவி ஆசுவாசமடைகிறான்.. அப்படியே தோளில் போட்டிருந்த புதிய துண்டால் முகத்தை துடைத்தபடியே அண்ணாந்து வானத்தை பார்க்கிறான். அருகில் மரங்களின் ஊடாக பாயும் வெளிச்சம் அவனது முகத்தில் ஒளி கோடுகள் தீட்டுகிறது. அவன் அண்ணாந்து பார்க்கையில் வானத்தில் மேகங்கள் அலைகின்றன.காலை நேர வெளிச்ச ரேகைகள் அப்படியே மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றன. லயத்தின் ரேடியோ சத்தம் பேச்சி சத்தம், காலை நேர பரப்பரப்பு தெரிகிறது. 

இன்றைய பொழுதாவது நல்லபடியா விடியனும் என மனதுக்குள் முணுமுணுத்தபடியே வாசலை நோக்கி திரும்பி நடக்கிறான். 

இதற்கிடையில் வீட்டுக்குள்ளிருந்து அன்பரசு படியிலிருந்து இறங்கி வலப்புறமாக ஓடுகிறான். வீட்டின் அழுக்கு படிந்த மங்கிய நிறம் கொண்ட சன்னலில் இருந்து அடுப்பின் புகை ஒரு பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல வெளியே பரவுகிறது. ஏக்க பெருமூச்சை விட்டபடியே அப்படியே அக்காடவென வாசலில் வந்து அமர்கிறான். 

அவன் லேசாக வலது புறம் திரும்ப, அங்கே சிறுவன் விட்டிலோ அல்லது வண்ணத்துப்பூச்சியோ எதுவோ பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். 

அவன் மறுபடியும் மகன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைக்க திரும்புகையில் அவள் வந்து பிளாஸ்டிக் ஜொக்கில் கருப்பு தேனீரை கொண்டு வந்து வைக்கிறாள். 

“டேய் அன்பரசு இங்க வா.” 

என சிறுவனை அழைத்தபடியே மீண்டும் உள்ளே சென்று மறைந்து விடுகிறாள். அவன் அந்த தேநீரை வெறித்து பார்க்கிறான். அவன் நினைவு மெல்ல தேநீரை நோக்கி குவிகிறது. 

காலையில் அவனது காதுகளில் கிசுகிசுத்த எப்ப மச்சான் நல்ல தேத்தண்ணிய நாம குடிக்க போறோம்– என்ற அவளது குரல் எதிரொலிக்கிறது. 

அவன் தேநீரை எடுத்து பருகியதும், அதை மீண்டும் மனதுக்குள்ள சொல்லியபடியே அடுத்த வாய் பருகுகிறான். சிறுவனும் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடுகிறான். படியில் குடித்து முடித்த காலி ஜொக்கை வைக்கிறான்…அப்படியே அந்த மஞ்சல் நிற ஜொக்கை பார்த்தப்படி உட்காந்திருக்கிறான். 

அரையின் இருட்டிலிருந்து டப்பென்ற ஓசையுடன் பெட்டி மூடிகிறது… சிறுவன் கையில் எதையோ எடுத்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான். அவனது கையில் மறைத்து வைத்திருக்கும் டொபி காகிதத்தால் தனது ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு அப்படியே சுற்றி சுற்றி பார்க்கிறான்…சிவப்பு வண்ணத்தில் அந்த தேயிலை தோட்டமும், மலை பிராந்தியமும், வீடும், கட்டிடங்களும் சுழன்று சுழன்று வருகின்றன 

அன்பரசு கையில் உள்ள டொபி தாள்கள் அடர் பிரவுண் நிற திரையாக மாற்றி மாற்றி மெல்ல பின்னோக்கி நகர்கிறது. சாராய போத்தலில் ஊற்றப்பட்ட கருப்பு தேநீர் அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. சாராய போத்தல் இப்போது அன்பரசு பார்வையில் நீல வண்ணமாக தெரிகிறது. அன்பரசை அந்த தோற்ற மாற்றம் ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றது, 

செல்வராஜ் சட்டையை சரி செய்த படி மாட்டுகிறான். அவள் கண்ணாடியை பார்த்து தனது முகத்தை சரி செய்து கொள்கிறாள்…தலைக்கு போடும் முக்காட்டு துணியை எடுத்துக் கொள்கிறாள். அவனும் சாரத்தை மடித்து கலுசன் தெரியும் வகையில் கட்டிக் கொள்கிறான். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை வெயில் மெல்ல ஏறிக் கொண்டிருக்கிறது. அந்த கருப்பு தேநீர் ஊற்றப்பட்ட சாராய போத்தலை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் கிளம்புகின்றனர். 

இருவரும் வெளியில் வந்து கதவை பூட்டப் போகும் நேரத்தில் சிறுவன் இருவரையும் இடித்துக் கொண்டு உளளே ஓடிப் போகிறான். பெட்டியை திறந்து சில பொருட்களை எடுத்து தனது கால்சட்டை மற்றும் சட்டை பைகளுக்குள் திணித்துக் கொள்கிறான். 

அன்பரசு மற்றொரு டொபி காகிதத்தால் பார்த்தபடியே நடந்து செல்கிறான. முற்றிலும் மாறுபட்ட வண்ணத்தில் அந்த மலை பிராந்தியம் ஒளிர்கிறது. செடிகள், மரங்கள் அனைத்தும் முற்றிலும் வேறு வண்ணத்தில் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள அனைத்துமே மாறுபட்ட வண்ணத்தில் தெரிகின்றன. அது மெல்ல மெல்ல ஊஞ்சாலாடியபடியே அந்த காட்சி செல்கிறது. அன்பரசின் பார்வையில் அது ஒரு சினிமா திரை போவே உள்ளது.  

அன்பரசு கடந்த இரண்டு நாட்களாகவே பாடசாலை போவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அவன் வீட்டில் இருக்கட்டும் என்று அம்மாவும் சரி என்று சொல்லி விட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் எப்போதும் தேயிலை மலையில் அப்பா வேலை செய்யும் டீ பெக்டறி பக்கம்தான் விளையாடுவான். இன்று அவன் தனியாகதான் விளையாட வேண்டும். கூட்டாளிகள் எல்லாம் ஸ்கூல் போய்விட்டர்கள். 

செல்வராஜிக்கு இருப்பது ஒரே மகன் இவன் மட்டுமே. அன்பரசு தான் வழமையாக விளையாடும் சைக்கிள் ரிம்மை விறகு காம்ராவில் இருந்து எடுத்துக் கொண்டான். அவர்கள் மூவரும் ஒற்றையடி பாதையில் நடந்து தார்ரோட்டில் நடக்க தொடங்கினார்கள். அன்பரசின் சைக்கிள் ரிம் சத்தம் மலைப்பகுதியில் ஒலிக்க தொடங்கியது. அவன் உற்சாகமாக சைக்கிளை செலுத்தினான். அந்த சத்தம் அவனுக்குள் கிளர்ச்சியை தந்தது. 

வெயில் நன்றாக ஏறிவிட்ட பொழுதில் தேயிலை தோட்டத்தின் மலைச் சரிவுகளில் மேடும் பள்ளமுமாக வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் இரண்டு பேரும் நடக்கிறார்கள். அவர்களை அன்பரசு பின் தொடர்கிறான் சைக்கிள் ரிம்முடன்.. அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு இழுக்க மாட்டாத குறையாக வெறுக் வெறுக் கென அந்த பிராந்தியத்தை வெற்று கால்களால் கடந்து கொண்டிருக்கின்றனர்., பாதை பிரியும் ஓரிடத்தில் நிற்கிறது. இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் இடமும் வலமுமாக பிரிந்து நடக்கிறார்கள். தேயிலை தயாரிப்பு ஆலையை நோக்கி அவன் நடக்கிறான். அவனுடன் அன்பரசும் கூடவே செல்கிறான். கொழுந்து பறிக்கும் மலைச் சரிவை நோக்கி அவள் நடக்கிறாள். 

செல்வராஜ் பெக்டறி வாசலில் காலலுக்கு நிற்கும் சிவாவிடம் அன்பரசை பார்க்க சொல்லி விட்டு உள்ளே செல்கிறான். அன்பரசு தேயிலை கழிவுகள் கொட்டப்படும் சொணை உள்ள பகுதியில் வண்டியை ஓட்டி விளையாடுகிறான்.அங்கே தேயிலை ஆலையில் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட தேயிலை சொண மலை போல கொட்டப்பபட்டு கிடக்கிறது. அதன் நறுமனம் சுகமாக இருக்கின்றது. அதன் ஈரகசிவு தரையில் வழிந்து போனதன் அடையாளங்கள் அங்கே தெரிகின்றது. பயங்கர சத்தத்துடன் தேயிலை தயாரிப்பு கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் பரபரவென வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். லாரியில் வந்து கொழுந்துகள் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்கப்படுகின்றன…உலர வைக்கப்படுகின்றன. வகை பிரிக்கப்படுகிறது. தனித்தனியாக அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இவற்றின் ஊடாக அவன் வேலை செய்து கொண்டே பக்கவாட்டில் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துக் கொள்கிறான். மிகவும் உயரிய ரக தேயிலை தயாரிக்கும் அந்த எந்திரம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து வரும் இசை லயமிக்க ஒலியும், வாசனையும் அப்படியே அவனை மெய் மறக்கச் செய்கின்றன.. அதையே வெறித்து பார்க்கிறான். 

திடீரென அலறல் சத்தம் கேட்கிறது.. சத்தம் கேட்ட திசையை நோக்கி தொழிலாளர்கள் அனைவரும் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனும் ஓடுகிறான். அங்கே கையில் ரத்தம் சொட்ட சொட்ட சக தொழிலாளி வலியால் துடித்தபடி நிற்கிறான். ஆனால் கொழுந்து ஏற்றும் லொறி அவசர நேரத்தில் இல்லாத போது. அவன் வாசலில் தேயிலை பெட்டிகளை கொழும்புக்கு ஏற்றும் சிங்கள டைவர்கள் பரபரப்பாக நிற்க. 

செல்வராஜ் முறைப்பாக டிமேக்கரை பார்த்துவிட்டு காயம் பட்டவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடுகிறான் — ஆனால் வேறு வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தால் அங்கு ஓரமாக நிற்கும் சிவாவின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவன் காயப்பட்டவனுடன் செல்கிறான்.. 

வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் வேர்க்க விறுவிறுக்க செல்வராஜ் ஆட்டோவை செலுத்துகிறான். 

விரல்கள் துண்டிக்கப்பட்ட ரத்த கறை படிந்த கையின் மீது மருந்து தடவி வெள்ளை நிற பாண்டேஜ் கட்டப்படுகிறது. 

அங்கு ஆஸ்பத்திரியில் டாக்டர் இவர்களை இரக்கத்துடன் பார்த்தபடி சிகிச்சை அளிக்கிறார். இவ்வளவு லேட்டாவாவே வருவீங்க. என கண்டிக்கும் குரலில் இனிமையாக கேட்கிறார். இருவரும் உறைந்த மவுனத்துடன் நிற்கின்றனர். 

தரையில் ரத்தம் சிந்திய இடத்தை சிப்பந்தி ஒருவன் துடைக்கிறான் 

தொலைவில் மலையில் தூரத்து சரிவுகளில் அவள் உள்பட பலர் கொழுந்துகளை பறித்து தங்களது முதுகுப்புறம் தொங்கவிட்டுள்ள கூடையில் போட்டப்படி இருக்கின்றனர். தங்களுக்குள் பேசியபடியும், பாடியபடியும் வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. 

அவள் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். அவளும் சக பெண்களும் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது யாரோ ஒருவர் பார்த்து வேலை பாருங்கள், பயங்கரமா அட்டைப் பூச்சி இருக்கு என்று எச்சரிக்கின்றனர். ஆமா அக்கா என்று இவள் பதில் அளிக்கும் போதே யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. அனைவரும் போய் பார்க்கிறார்கள்.. அவளை மறைவாகக் கொண்டு சென்று அட்டையை எடுத்து போடுகிறார்கள். கொழுந்து இலைகளின் மீது ரத்தம் படிகிறது. அதை ஏதோ ஒரு கை பறித்து கூடைக்குள் போடுகிறது. 

அவன் உள்பட சக பணியாளர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் அவன் அந்த உயரிய தேயிலை எந்திரத்தை வெறித்து பார்க்கிறான். லாரிகளில் கொழுந்து இலைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஒரு தேயிலையில் உறைந்த ரத்தம் இருக்கிறது.-கொட்டிய தேயிலைகளை அள்ளி தேயிலை அரைக்க மூடைகளில் கொண்டு செல்கிறார்கள். எந்திரத்தின் அருகே அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ரத்த கறை படிந்த அந்த தேயிலை அவளை கடந்து எந்திரத்துக்குள் செல்கிறது. அதை அவன் கவனிக்க வில்லை. 

சுற்று முற்றும் பார்த்தபடியே மெல்ல உயரிய தேயிலை ரக எந்திரத்தை நோக்கி மீண்டும் அவன் நடக்கிறான். யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரு கைகளாலும் தேயிலையை அள்ளிக் கொண்டு சட்டையின் கை மடிப்புகளில் மறைக்க முயற்சிக்கிறான். 

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்கவே கையை உதறிக் கொண்டு அங்கிருந்து சற்று நகர்ந்து வேறு திசையில் திரும்ப முயலும் போது எதிரில் டிமேக்கர் அய்யா வந்து நிற்கிறான். அய்யாவை கண்டதும் இவனுக்கு வேர்த்து கொட்டுகிறது. அவனை கண்டதும் அய்யாவின் முகம் கடுகடுப்பாக மாறுகிறது. 

பயங்கரமாக கெட்ட சொற்களால் அவனை ஏசுகிறான். அங்கே மற்றவர்கள் கூடி விடுகின்றனர். இன்னொரு தரம் இப்படி செஞ்ச போலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறாள். அனைவரும் அவளை கூடி கேலியும் இரக்கமுமாக பார்க்கின்றனர். அவன் அப்படியே அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறான். 

அவள் வேகமாக மலைப் பாதைகளில் நடந்து வருகிறாள், அப்படியே வெறித்து பார்த்தவளாக நடந்து வந்தவள் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்து வெறித்து பார்க்கிறாள். பின்னர் குலுங்கி குலுங்கி அழுகிறாள். இயற்கை அப்படியே அசைவற்று அவளை நோக்குகிறது. பின்னர் சற்றெக்கெல்லாம் ஆசுவாசமடைந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். 

மதுபானக்கடையிலிருந்து வெளியில் தள்ளாடியபடியே வெளியில் வருகிறான் அவன். “டேய்..எங்களுக்கெல்லாம் நல்ல டீ குடிக்க வக்கில்லையாடா.. நாங்களும் மனுசங்கதானடா.” என்றபடியே… ஏதேதோ புலம்புகிறான்…அப்படியே சாலையின் ஓரத்தில் போதையில் சரிந்து விழுகிறான், அப்போது உயரிய தேயிலை ரகங்களை ஏற்றிக் கொண்டு நகரங்களுக்கு விரையும் லாரிகள் அவனை கடந்து செல்கின்றன.. 

மூன்று பேரும் படுக்கையில் படுத்து கிடக்கின்றனர். அவள் இடது புறமும், இவன் வலது புறமும் நடுவில் மோட்டு வளையை பார்த்தபடி சிறுவனும் படுத்து 

கிடக்கின்றனர். சிறுவன் தனக்கு தானே ஏதோ பேசிய படியும், கதை சொல்லிய படியும் தூங்க முயற்சிக்கிறான். காட்சியில் இருள் பரவுகிறது. இருட்டில் கதவு தடதடவென தட்டப்படும் ஓசை கேட்கிறது.” மச்சான்.. வெளியில் வாய்யா…ஒரு செமத்தியான விருந்து… யோவ் மச்சான்…”இவன் தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று கதவை திறக்கிறான். அப்படியே வெளிச்ச வெள்ளம் வீட்டுக்குள் பாய்கிறது. வெளியிலிருந்து தேவதூதன் போல தோன்றச் செய்யும் வகையில் அந்த வெளிச்ச வெள்ளத்தின் ஊடாக அவனது சக பணியாளன் வருகிறான்.. இவனை கையை பிடித்துக் கொண்டு இழுத்து செல்லாத குறையாக அழைத்து செல்ல முயல்கிறான். சட்டையை அணிந்ததும், அணியாததுமாக அவனுடன் கிளம்பி செல்கிறான். 

அந்த மலை பிராந்தியமே மிகவும் அற்புதமாக ஜொலிக்கிறது. நாம் இத்தனை நாளாக பார்க்கும் மலை தானா இது என்பது போல அதிசயமாக அதை பார்க்கிறான்…வந்தவன் அங்கிருந்து அவனை அங்குள்ள துரையின் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். மேலாளர் மாளிகை அப்படியே பங்களா போல ஜொலிக்கிறது. உயர் ரக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் நளினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. சீருடை அணிந்த நட்சத்திர பணியாளர்கள் 

அனைவருக்கும் மிகவும் பணிவாக விருந்து பரிமாறுகின்றனர். அந்த உயரிய ரசு தேநீருக்காக இவன் ஆவலுடன் காத்திருக்கிறான். அவளை நோக்கி தேவதைகள் போல வரும் அவர்கள் மிகுந்த வேலைப்பாடு கொண்ட கண்ணாடி கோப்பையில் தேநீரை ஊற்றுகின்றனர். திராட்சை ரசத்தை நினைவு கூறும் விதமாக அதனை வியந்து பார்த்தபடியே எடுத்து பருகுகிறான். 

வீடு திரும்பும் வழியில் பறவைகள் ஆனந்த ஒலி எழுப்புகின்றன. மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலை முகடுகளை மேகங்கள் முத்தமிடுகின்றன. ஓடை இசையோடு சலசலத்து ஓடுகிறது. இவனது கையில் மேலாளர் கொடுத்த பையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான துணிகள், பரிசு பொருள்கள் கனக்கின்றன. அவளது நடையில் உற்சாக துள்ளல் மிளிர்கிறது. 

அணில் தாவி ஓடி மரத்தின் மீது ஏறி இவனை பார்க்கிறது. வெட்டுக்கிளிகள் கிறீச்சிடுகின்றன. 

அவன், அவள், சிறுவன் 3 பேரும் சிறிய டூர் செல்கின்றனர். வெளிப்புறத்தில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, உயரிய உணவுகளை சாப்பிடுகின்றனர். அருகில் விலையுயர்ந்த பொம்மைகளை, சிறு வண்டிகளை வைத்துக் கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். 

வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்பின் சிவந்த ஒளியில் அவளது முகம் ரத்தினமாய் ஜொலிக்கிறது. ஒரு வகை வசீகரம் அவளது முகத்தில் தெரிகிறது. மெல்ல அவனது கை வந்து அவளது தோளை அழுத்துகிறது. அவள் விரகத்தில் புன்முறுவலித்தபடியே நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். தொலைவில் புத்தாடை அணிந்த சிறுவன் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.. 

அவனது வீடு அப்படியே மிகவும் கலை ரசனையுடன் வண்ணப்பூச்சில் ஜொலிக்கிறது. ஜன்னல்களில், சுவரில் அழகிய ஓவியங்கள் 

தீட்டப்பட்டுள்ளன. வீட்டின் முற்றம் மிகவும் சுத்தமானதாக உள்ளது. தண்ணீர் தொட்டி வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதிதாக மிளிர்கிறது. வீட்டின் மீது ஓட்டு கூரையின் மீது அமர்ந்து அதை சரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது திரும்பி அவளை காதலுடன் பார்த்தபடியே பணியில் ஈடுபட்டிருக்கிறான்… அவ்வாறு ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு கையை ஓட்டின் மீது வைக்கப் போக, தடுமாறி மேலிருந்து தடால்புடாலென் கீழே விழுகிறான். சடசடவென சத்தம் கேட்கிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. அவன் கண்டது எல்லாம் கனவு என்று ஏற்றுக்கொள்ள வெகு நேரம் அவனுக்கு தேவைப்படுகிறது. 

வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. எழுந்து சென்று கதவை திறக்கிறான். உன்னை தொரை பங்களாவில் பைப் ரிப்பேர் பார்க்க வரச் சொன்னார் என்கிறான் வந்தவன். முன்பு அவனை விருந்து அழைத்துச் செல்ல வந்த அவனே தற்போதும் வந்திருக்கிறான். இவன் திரும்பி பார்க்கிறான். சற்றே விழித்த நிலையில் அவளும், அரைகுறை உறக்கத்தில் சிறுவனும் படுக்கையில் புரண்டு கொண்டு இருக்கிறார்கள். 

சட்டையை அணிந்தபடியே அவனுடன் சேர்ந்து அந்த வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் நடந்து செல்கிறார்கள். 

மேலாளரின் வீட்டின் பின்புறம் மழை நீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபடியே அந்த வீட்டை நோட்டமிடுகிறான். அந்த வீட்டம்மாள் உயரிய தேநீரை அவரது கணவரான மேலாளருக்கு ஊற்றி கொடுக்கிறாள். அவர் முன் புற அறையில் உள்ள மேஜையின் மீது வைத்து விட்டு கணக்கு வழக்குகளை பார்த்தபடியே தேநீரை உறிஞ்சி குடிக்கிறார். அந்த ஒலி அவனை தொந்தரவு செய்கிறது. குழாயை டம்டம்மென்று போட்டு அடிக்கிறான். ணங்ணங் என்ற அந்த ஒலி அந்த பிராந்தியம் முழுவதும் சுழல்கிறது. சத்தம் தாங்காமல் முகத்தை சுளித்துக் கொண்டே மேலாளர் தேநீரை பருகுகிறார். இடையில் எழுந்து வந்து இவனை முறைத்து பார்த்து விட்டு செல்கிறார், 

அப்போது எங்கிருந்தோ வந்த டிமேக்கர் அய்யா, மேலாளர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். இதை கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு மேலாளர் அங்கிருந்து ஓடுகிறார். சத்தம் கேட்டு எட்டி பார்த்த இவன் வாசலுக்கு வந்து முன் அறையை பார்க்கிறான். அங்கே மேஜையில் மேலாளர் பாதி குடித்த தேநீர் கண்ணாடி குவளையில் தளும்பிக் கொண்டிருக்கிறது. 

இவனது மனம் ஊசலாட்டத்தில் ஆடுகிறது. மெல்ல அந்த கண்ணாடி குவளையை நோக்கி செல்கிறான். அந்த பாதி நிரம்பிய தேநீர் குவளையை நோக்கி குவிகிறது. மெல்ல அருகில் சென்று அதை எடுத்து குடித்து விடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அதை பார்த்தபடியே திக் பிரமை பிடித்தவன் போல நிற்கிறான். அப்போது அந்த அம்மாளின் குரல் கேட்கிறது. சட்டென சுயநினைவு வந்தவனாக தனது கையில் இருக்கும் எச்சில் கோப்பையை அருவருப்புடன் பார்க்கிறான். ஒரு கணம் முகம் அப்படியே சுருங்கி கருத்துவிடுகிறது. கோப்பையை டக்கென மேஜையில் வைத்து 

விட்டு, அந்த மாளிகையை பார்க்கிறான். மாளிகை பேய் மாளிகை போல இருண்டு தெரிகிறது. அவமானத்தால் குன்றி வெளியே வருகிறான். வானம் கருத்து அந்த மாளிகையின் மேற்புறத்தில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. அப்படியே திடும்மென இடியும் மின்னலும் வெட்டி சரிகின்றன. 

சற்றைக்கெல்லாம் மழை வெடித்து கிளம்புகிறது. அப்படியே இறுகிய அவமானமுற்ற மனதுடன் மழையில் நனைந்தபடியே மலைப்பாதைகளில் விறுவிறுவென நடந்தபடியே வீட்டை நோக்கி நடக்கிறான். மழை விடாமல் பெய்கிறது. 

இவன் வீட்டை நெருங்கும் வேளையில், பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை இரவல் வாங்கிக் கொண்டு மழையில் மெலிதாக நனைந்தபடியே அவள் வீட்டுக்கு வருகிறாள். இவன் அப்படியே இறுக்கமான முகத்துடன் வாசலில் அமர்ந்து மழையை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் இவனை விநோதமாக பார்த்தபடியே வீட்டுக்குள் செல்கிறாள். அடுப்பில் தேநீர் தயாராகும் ஒலி கேட்கிறது. 

தலையை துவட்டுவதற்காக லுங்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு போகிறாள் 

அவனருகில் கிடக்கும் லுங்கியுடன் தலையை துவட்டாமலேயே அவன் வெறித்து பார்த்தபடியே இன்னும் இருக்கிறான். அவள் வழக்கம் போல தேனீரை தயாரித்து கொண்டு வந்து வாசல் படியில் வைக்கிறாள். இவனை ஒருமாதிரி பார்த்து விட்டு மீண்டும் போய் விடுகிறாள். கருப்பு தேநீரை வெறித்து பார்த்தபடியே அதை எடுத்து ஒரு மிடறு பருக முயற்சிக்கிறான். முகம் மாற்றம் அடைந்து தூவென.. துப்புகிறான்.. குவளையை ஆத்திரத்தோடு தூர வீசி எறிகிறான். அவனது உறைந்த முகத்தில் கோபம் இயலாமை தெரிகிறது. 

மறுநாளும் மேலாளரின் வீட்டில் குழாயை சரி செய்யும் பணியில் 

ஈடுபட்டுள்ளான். என்ன செல்வராஜ்.. வேல எல்லாம் முழுசா முடிஞ்சிருச்சா என்று கேட்டபடியே மேலாளர் வீட்டுக்குள் சென்று தனது மனைவியிடம் ஏதோ கிசுகிசுக்கிறார். 

சிறிது நேரத்தில், யேய் செல்வம் இங்க வா.. இந்த தேத்தண்ணிய குடிச்சுட்டு வேலய பாருல, இது சாதாரண டீ இல்லல..ஹைகிளாசு..வாழ்க்கை ஒருவாட்டியாவது நீறு குடிச்சிருப்பயாடே குடிச்சுப் பாரு”அப்படியே சொர்க்கத்துக்கு போய்ருவ– அவனது கண்களில் ஆர்வமும், தாகமும் ஒருசேர மின்னுகிறது. 

வெள்ளை நிற தகர குவளையில் ஊற்றப்பட்ட அந்த கருப்பு தேநீரை பருகுகிறான்— அவனது கண்கள் அப்படியே சந்தோஷத்தில் மலர்கிறது. முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது. 

வீட்டுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறான். அவள் அடுப்பில் ஏதோ வேலையாக இருக்கிறாள்–நிஜமாத்தான்டி சொல்ரேன்..நம்ம புள்ளதாண்ட ஆணை, என்றபடியே அந்த ஆளு என்ன வீட்டுக்குள்ள கூப்பிட்டு அந்த நல்ல டீய கொடுத்தாருடி 

அவள் எழுந்து வந்து அவனது அருகில் அமர்ந்து கொள்கிறாள் 

என்னய்யா எப்டிய்யா இருந்துச்சு அந்த தேத்தண்ணீ நம்மத விட ரொம்ப ருசியா இருந்துச்சுய்யா.. சொல்லுய்யா.. என சிணுங்கினாள்.. அது டீ இல்லடி ” அமுதம்.. அதோட பார்த்த நம்ம வீட்டு டீ கழனி தண்ணிய வீட மோசம்.. என்ன செய்ரது கால கிரகம் இல்லாட்டி நாம வாங்கி வந்த வரம்— இதெல்லாம் எப்போ மாறும்னு தெரியல என கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறாள்.. அவளும் அவனது வாடிய முகத்தை கண்டு கவலை கொள்கிறாள்.நம்ம மகனுக்கு அது கிடைக்கும்மாய்யா.. என தனது ஆசையை மறைத்துக் கொண்டு குழந்தையின் பேரை சொல்லி தனது கோரிக்கையை வைக்கிறாள். அவன் ஆயாசத்துடன் பெருமூச்சு விடுகிறான். அப்படியே வெளிவாசலை பார்க்கிறான். 

காலை நேரம். மூன்று பேரும் கிளம்பி செல்கின்றனர். வழக்கம் போல செல்லும் பாதையில் வளைந்து நெளிந்து நடந்து செல்கின்றனர். இன்றைக்கு உச்சிக்கு வேலைக்கு செல்வதால், அவனுடன் சிறுவனை அழைத்துச் செல்லும்படி சொல்கிறாள். தந்தையும் மகனும் இப்போது இடது புறமாகவும், அவள் வலதுபுறமாகவும் பிரிந்து நடக்கின்றனர். 

தேயிலை தயாரிக்கும் ஆலை. வளாகத்தில் ஒரு இடத்தை காண்பித்து அங்கேயே விளையாடும்படி சிறுவனிடம் சொல்கிறான். சிறுவனும் புது இடம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக தலையாட்டுகிறான். பரபரவென வேலைகள் நடந்தேறுகின்றன. சிறுவன் தனது லென்சால் அங்குள்ளவற்றவை உருப்பெருக்கி பார்த்து விளையாடிக் கொண்டிருக்கிறான். இம்முறை எப்படியும் உயரிய ரக தேயிலையை திருடி, தனது குழந்தைக்கும், மனைவிக்கும் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விபரீதமாக தோன்றுகிறது. 

உயர் ரக தேயிலை தயாரிக்கும் எந்திரத்தை பார்த்தபடியும், அவ்வப்போது ஜன்னலின் வழியே சிறுவன் மற்றும் மனைவியை பார்த்தபடியும் வேலையில் ஈடுபடுகிறான். மதிய வேளை. ஆள் அரவமற்ற பொழுது, எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. மின் வெட்டாக இருக்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கிறான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அவன் மெல்ல அடுத்த பகுதிக்கு சென்று, கைகளில் உயரிய ரக தேயிலையை அள்ளி சட்டையின் மடிப்புகளில் மறைத்துக் கொள்கிறான்.  

அங்கே இரு ரகசிய விழிகள் அவனை வேவு பார்க்கின்றன. சற்று நேரத்தில் பணியாளர்கள் அங்கு வரவும், டிமேக்கர் கிளார்க் காவலாளி அனைவரும் அங்கு வருகின்றனர். வேகவேகமாக வந்த அய்யா அனைவரின் முன்பாகவும் அவளை கன்னத்தில் அறைகிறான். அவனது சட்டையை கொத்தாக பிடித்து தரதரவௌ முற்றத்தை நோக்கி இழுத்து வருகிறான். சிறுவன் பயந்தபடியே ஓடி தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டு நடப்பதை பார்க்கிறான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியா சூழல் மாறுகின்றது. தொலைபேசியில் எண்கள் சுழல்கின்றன. ஜீப்பின் ஒலி கேட்கிறது. சரசரவென இரண்டு மூன்று மூட்டைகள் அவனுக்கு அருகில் வந்து அவன் மீதாக வீசி யெறியப்படுகின்றன. தரையில் மண்டியிட்டு அவன் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்சுகிறான். போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். யார் அதை கண்ணால் பார்த்த சாட்சி என கேட்கின்றனர். அவனை அய்யா வீட்டுக்கு அவனை அய்யா வீட்டுக்கு அழைத்து சென்றவன் முன்னால் வருகிறான். அனைவரின் முன்பாகவும், செல்வராஜின் கை மடிப்பு விரிக்கப்படுகிறது அதிலிருந்து உயரிய ரக தேயிலை தூள் அப்படியே கொட்டி காற்றில் பரவுகிறது. 

கூட்டத்திலிருந்து விலகி அடர்ந்த நிற சட்டை அணிந்த பெருமாள் வெளியேறி வேகமாக ஓடிச் செல்கிறான். போலீஸார் செல்வராஜையும், அவனது அருகே வீசப்பட்ட தேயிலை மூடைகளையும் ஜீப்பில் ஏற்றுகின்றனர். அவனை சுமந்து கொண்டு ஜீப் கிளம்புகிறது. 

ஜீப் கிளம்பியதும் அதை துரத்திக் கொண்டு ஓட முயலும் சிறுவனை அங்கிருப்பவர்கள் தடுக்கின்றனர். மலைப்பாதையின் ஊடாக ஜீப் சிவப்பு விளக்குடன் பயணிக்கிறது. தொலைவில் பச்சை கம்பளம் விரித்தது போன்ற தேயிலை செடிகளின் ஊடாக அவள் சாலையை நோக்கி வேகமாக தொலைவில் ஓடி வருகிறாள். பச்சை மலை பிராந்தியத்தின் நடுவில் அந்த தேயிலை தயாரிப்பு ஆலை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அதன் வளாகத்தில் புள்ளிகளாய் சிலர் திரண்டு நிற்பதும், அந்த சிறுவன் அழுதபடியே கையை நீட்டி அழுவதும், அன்பரசு கால் சட்டை பையில் உள்ள டொபி பேப்பர்கள் பல வண்ணத்தில் அங்கே சிதறி காற்றில் பற்க்கின்றது.அவள் விடாமல் ஓடிக் கொண்டிருப்பதும், மலைச்சாலையில் வளைந்து வளைந்து நெளிந்து செல்லும் ஜீப்பும் என காட்சி அப்படியே மங்கி மறைகிறது 

– 22.07.2023 

மலையகம் 200 – விம்பம் லண்டன் அமைப்பு நடத்திய  சிறுகதை போட்டியில் இரண்டாம் இடம் பரிசு 30 ஆயிரம் பணபரிசு பெற்ற கதை.  

மாரி மகேந்திரன் 

மாரி மகேந்திரன் சினிமா கவிதை மற்றும் சிறுககைகள் புத்தகம் தமிழில் வந்துள்ளது. பிரசன்ன விதானகே திரைப்படத்தில் பனி ஆற்றி உள்ளார். தமிழகத்தில் தமிழ் சினமாவில் உதவி இயக்குனராகவும் பனி ஆற்றியுள்ளார். இவர் தற்போது வசிப்பது பொகவந்தலா என்ற நகரத்தில். காட்சி மொழி என்ற உலக சினிமா இதழ் ஆசிரியர்.

https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a3/

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

2 months ago

இன்னா செய்தாரை ஒருத்தல்!

%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0

‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான்.

“நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கறோம். படிச்ச நீங்க இப்படி கவலைப்பட்டா எப்படி?” மனைவி ரம்யா ஆறுதல் சொல்லி அணைத்த போதிலும் மனம் ஏற்காமல் தவித்தான்.

‘சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்று தனது முதல் புராஜெக்ட் இப்படி சொதப்பி விட்டதே…. நாளை விடியாமலேயே இருந்து விட்டால் நிம்மதி. தலைமை செயல் அதிகாரி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ….?’ கவலையால் உறக்கம் பிடிபடாமல் தவித்தான் வருண்.

வருண் படிப்பில் கெட்டிக்காரன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை முதல் மாணவன் தான். படிப்பிற்காக எதையும் தியாகம் செய்வான். எதற்காகவும் படிப்பை தியாகம் செய்ய மாட்டான்.

“என்னடா மச்சா ஒரு படத்துக்கு வர மாட்டேங்கிறே….? காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிக்கிற சேது அவனோட அக்கா கல்யாணத்துக்கு கூப்பிட்டு ஒட்டு மொத்தமா எல்லாருமே நாங்க போயிட்டு வந்தோம். நீ மட்டும் தான் மிஸ்ஸிங்… இப்படி படிச்சு, வேலைக்கு பேயி சம்பாதிச்சு என்னடா பண்ணப்போறே….? ரதி மாதிரி இருக்கிற ராதா உன்னையே சுத்தி, சுத்தி வாரா…. நீ கண்டுக்காம போறே… போடா நீயெல்லாம்…. ஒரு….” 

“முழுசா சொல்லிட வேண்டியது தானே….? ஏண்டா பாதிய முழுங்கறே….? த பாரு ஒன்னா படிக்கிறவங்கெல்லாம் ஒன்னில்லை…. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ…. அப்பா, அம்மா தங்களோட ஆசைகளை துறந்து கஷ்டப்பட்டு நம்ம எதுக்கு படிக்க வைக்கிறாங்க…? இப்படி பாஸ் மட்டும் பண்ணிணாப்போதும்னு ஊரச்சுத்தறதுக்கா….? சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக முடியல. இதுல கூட படிக்கிறவனோட அக்கா, அக்காவோட பிரண்ட்ஸ் னு போனா…. போயிட்டே இருக்கலாம். நெறையப்பேர் எழவுக்கும், கல்யாணத்துக்கும் போயே பல பேர் வாழ்க்கைய வீணாக்கிட்டிருக்காங்க. பொன்னான காலத்த வீணாக்கலாமா….? ஏதாவது புதுசா யோசிக்கலாமே….?” வருணின் மனநிலை, அறிவுரை புரியாத நண்பன் நரேன் அங்கிருந்து வெளியேறினான்.

வருண் தனது முயற்ச்சியால், திறமையால் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்தில் பல படி உயர்ந்து நின்றான். கல்லூரியில் ஊரைச்சுற்றும் உடன் படிப்போர் இருந்தது போலவே வேலை செய்யும் இடத்திலேயும் நிறைய பேரைப்பார்த்தான்.

“என்ன வருண் பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பா….? பார்டின்னு கூப்பிட்டா வரனம். பொண்ணுகளோட கடலை போடனம். எதுவும் பேசாம உம்மனா மூஞ்சி மாதிரி இருந்தீன்னா ஒரு நாளைக்கு உன்னை விட்டு டீம் மொத்தமா விலகிடும். டீம் லீடர்னா சொன்ன வேலைய செய்யறவங்களை வாரம் ஒரு தடவ பார்ட்டிக்கும், மாசம் ஒரு தடவை டூர் டிரிப்பும் கூட்டிட்டு போகனம். செலவு உன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்க வேண்டியதில்லை. கம்பெனி பாத்துக்கும்….” மது போதையில் தள்ளாடியபடி உடன் வேலை செய்யும் ரஞ்சன் பேசிய போது பிரசர் கூடியது.

விடுமுறையின்றி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்ததால் அசோசியேட் பிரின்சிபலாக பதவி உயர்வு பெற்றது பலருக்கும் புருவத்தை உயர்த்தச்செய்தது. வருடத்துக்கு ஐம்பது லட்சங்களுக்கு மேல் சம்பளம். பலரது பொறாமை கண்கள் வருண் மேல் ஈட்டி போல் பாய்ந்தது.

வருணுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் தலைமை எடுத்த முடிவால் மகாலட்சுமி இரண்டு கண்களையும் ஒரு சேர திறந்து வருணை பார்த்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம் என பேசிக்கொண்டனர்.

உயர்பதவிக்கு வந்தாலும் வருணுக்கு கீழ் வேலை செய்தவர்கள் ஒத்துழைக்காததோடு வருணை கம்பெனியை விட்டே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடச்செய்ய வேண்டும் என அடுத்தது பதவிக்காக காத்திருந்த ரஞ்ஜன் தனது சொந்த சம்பளத்தையே வார இறுதி நாளில் பார்ட்டிகளில் வாரி இறைத்ததின் பலனாக வருணை நம்பி எடுத்திருந்த புராஜெக்ட் சரியான நேரத்தில் வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஒப்பந்தப்படி கொடுக்க முடியாமல் போனது.

காலையில் எழுந்ததும் கோவிலுக்கு சென்று விட்டு பதட்டத்துடன் அலுவலகம் சென்றான். 

தலைமைச்செயல் அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரையே பதிலாக வெளிப்படுத்தினான்.

“உங்களுக்கு இந்தக்கம்பெனில் இனி வேலை இல்லை”

அதிர்ந்தவன் ” ஸார்….” என்றான்.

“ஜெர்மன்ல இருக்கிற கம்பெனிக்கு உங்களை அனுப்ப முடிவு பண்ணிட்டேன். அதோட உங்களோட இடத்துக்கு அடுத்து சீனியாரிட்டி பிரகாரம் வர வேண்டியவர் ரஞ்சன் தான். ஆனா ரகுவை போட்டிருக்கேன். ரஞ்சனோட மொத்த டீமையும் வேலைல இருந்து தூக்கிட்டேன்.

“ஸார்….”

“என்ன வருண். உங்கள தூக்கிட்டதா சொன்னதுக்கு அதிர்ச்சியடைஞ்ச நீங்க உங்களுக்கு எதிரா செயல்பட்ட ரஞ்சன் டீமை தூக்கினதுக்கு அதிர்ச்சியடையறீங்க…?”

“எனக்கு வேலை போனா நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ரஞ்சனோட நண்பர்களை தூக்கினா பல குடும்பம் வீதிக்கு வந்திடுமே..‌.?”

“வரட்டும். ஏன் வருது? தப்பு பண்ணியிருக்காங்க. அவங்க பொறாமைப்பட்ட உங்களை வீட்டுக்கு அனுப்ப நெனைச்சு சம்பளம் கொடுக்கிற கம்பெனிக்கு கெட்ட பேரு, நஷ்டம், கால விரையத்தக்கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி…” உறுதியாகவும், இறுதியாகவும் சொன்ன தலைமை செயல் அதிகாரியிடம் எதுவும் பேச இயலாமல் வெளிநாடு செல்ல வேண்டியதற்கான வேலைகளை துவங்கினான்.

மறுநாள் வருண் வீட்டில் ரஞ்சன் உள்பட அவனது டீம் இருபது பேர் வந்திருந்தனர். காலையில் குளித்து விட்டு வருவதற்குள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி ரம்யா.

“ஸாரி வருண். எங்க நிலைமை இப்படியாகும்னு தெரியலை. உன்னை தூக்க நெனைச்ச நாங்க கம்பெனியால தூக்கப்பட்டிருக்கோம். உன்ன மாதிரி சம்பளத்துல சேமிப்பெல்லாம் கிடையாது. இந்த மாசம் வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாட்டு செலவு மத்த செலவுன்னு எதுக்குமே வழி இல்லை. இதுல நெறைய பேருக்கு பேரண்ஸோட ஆஸ்பத்திரி, மாத்திரை மருந்து செலவு வேற… எங்களை மொத்தமா மன்னிச்சிடு…” என காலில் விழ, உருகிப்போனான் வருண்.

“சேரி நானும் எனக்கு கெடைச்சிருக்கிற வெளிநாட்டு வேலைய ரிசைன் பண்ணிடறேன். நாம எல்லாரும் சொந்த ஊருக்கு போயி விவசாயம் பார்க்கலாம். ஓகேவா.‌.?” காதில் கேட்டவர்கள் யாருக்கும் வாயில் பேச்சு வரவில்லை.

“இப்படி கம்பெனி வேலைய நம்பி இருக்கிற நீங்க கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி செய்யலாமா? செய்திருக்க கூடாது தானே…? நீங்க எனக்கு எதிரா நடந்திட்டதை கம்பெனி கண்டு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு வெளி நாட்ல வேலை கெடைச்சிருக்கு. கம்பெனிக்கு உங்களோட கேர்லஸால நஷ்டம் வரக்கிடையாது. திட்டமிட்ட சதியால ஏற்பட்ட நஷ்டத்த ஈடு கட்ட தினமும் ரெண்டு மணி நேரம் ஆறு மாசத்துக்கு கம்பெனிக்கு வேலை பார்க்கனம். ஓகே வா…?”

அனைவரும் கோரஸாக ‘ஓகே ஸார்” என கூற, தனது தலைமைச்செயலதிகாரியிடம் பேசி, இங்கே நடந்ததைச்சொல்லி, இழந்த வேலையை அனைவருக்கும் மீட்டுக்கொடுத்ததோடு, தானும் உள் நாட்டிலேயை அலுவலகம் மாறாமல் வேலை செய்து கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஆறு மாதங்களில் மீட்டுக்கொடுத்த வருணுக்கு கம்பெனியின் தலைமைச்செயல் அதிகாரி பதவி கிடைத்தது.

‘சாதாரணமாக நல்லவர்களாக இருக்கிறவர்களை விட தான் செய்த தவறை உணர்ந்து திருந்தியவர்கள் மிகவும் மேலானவர்கள்’ என தனது டைரியில் எழுதி வைத்து விட்டு, பிறரால் தனக்கு கெடுதல் வந்தாலும் தன்னால் பிறருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வருண், இன்று தனது மேன்மையான குணத்தால் பல குடும்பம் கெட்டுப்போகாமல் பாது காத்த திருப்தியில் தனது பணியில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தத்துவங்கினான்.

https://www.sirukathaigal.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி

2 months 3 weeks ago

சிறுகதை

சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி -

- ஶ்ரீரஞ்சனி -

சிறுகதை

25 செப்டம்பர் 2025

mother_and_daughter2300.jpg

* ஓவியம் - AI

sriranjani_photo.jpg
கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது.

“Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா.

‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது.

இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள்.

“நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை.

இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை.

இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது…

உங்கட வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை எல்லாம் எப்பிடி ஆரோக்கியமான முறையில வெளிப்படுத்தலாமெண்டு நீங்க எல்லாரும் அறிஞ்சிருக்கிறது அவசியம்,” தாழ்ந்த குரலில் சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டுப் பிரின்சிப்பல் பேசுகின்றார். அவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன.

“லக்கியாவுக்கு நிகழ்ந்த சோகம் தங்களுக்கும் நிகழலாமோ எண்டு அஞ்சுறவை, அப்பிடி நிகழாமலிருக்கிறதுக்கு என்னெல்லாம் செய்யலாமெண்டு சொல்ற சில கையேடுகளை அலுவலகத்தின்ர முன்பக்கத்தில வைச்சிருக்கிறம். அப்படிப் பயப்படுகிறவையும் தயவுசெய்து என்னை வந்து சந்தியுங்கள்.” பிரின்சிப்பலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த மிசிஸ். ஜோன் தொடர்கிறார்.

அஞ்சலி முடிந்து வகுப்புக்கு அமைதியாய்போன எங்களைப் பார்த்து, “படிக்கிற மனநிலை இண்டைக்கு ஒருத்தருக்கும் இருக்காது. உங்கட கரிசனைகளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு ஆராவது விரும்பினா, என்னோடை கதைக்கலாம். அல்லது நாங்க லைபிரரிக்கும் போவம்,” என்கிறார் சயன்ஸ் ரீச்சர் மிஸ்ரர் ரைலர் ஆதரவானதொரு குரலில்.

இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் நிமாலும் லைபிரரிக்கே வருகிறா. பிறகு ஜிம்மிலை விளையாட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டு லஞ்சுக்குப் போகிறோம். “AIஇன்ர உதவியோடை எங்கட படங்களையும் உடுப்பில்லாமல் பண்ணித் தங்களுக்கை பகிர்ந்துகொள்ளுவினமோ எண்டு எனக்குப் பயமாய்க்கிடக்கு! இவங்க எவ்வளவு அருவருப்பான விஷயங்களைச் செய்யிறாங்க.” பக்கத்திலிருந்த கிரிஸ்ரினா குசுகுசுக்கிறாள். அவளின் தொண்டை கட்டிப்போயிருக்கிறது.

“பீற்றருக்கு லக்கியாவிலை சரியான விருப்பமிருந்தது, அதாலை அவளுக்கு அவனைப் பிடிக்கேல்லை எண்டதை அவனாலை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. அதுதான் இத்தனை பிரச்சினை,” தலையைக் குனிந்தபடி சொல்கிறான் ஈதன்.

“அவை விரும்பினா, நாங்க சம்மதிக்கோணும், எங்களுக்கெண்டு விருப்பு வெறுப்பு ஒண்டுமில்லையெண்டு அவை நினைக்கினம்.” பெருமூச்செறிகிறாள் அக்சயா.

“ஓம், ஆம்பிளையளுக்கு வாயிருக்கு, பொம்பிளையளுக்குக் காதுமட்டும்தானிருக்கு. என்னைத்தை அவை சொன்னாலும் நாங்க கேட்டுக்கொள்ள வேண்டியதுதான், திருப்பிக் கதைக்கக்கூடாது. கதைச்சால் எல்லாவகையாலும் எங்களைத் துன்புறுத்துவினம், பிறகு கொலையும்செய்வினம்” பல்லை நெருமுகிறாள் ஆர்த்தி.

“வகுப்பிலை பீற்றர் இருக்கிறதே தெரியாது. இந்தப் பூனையும் பால்குடிக்குமோ எண்டமாதிரி அத்தனை அமைதியாய் இருந்தான்.” தலையை வலமும் இடமுமாக ஆட்டுகிறாள் திரேசா.

“இனி அம்மா பார்க்கிலை விளையாடப்போறதுக்கும் விடமாட்டா.” கவினின் முகம் வாடிப்போயிருக்கிறது.

“கேட்டவுடனை லக்கியாவின்ர அம்மா மயங்கிப்போனாவாம். பாவம் லக்கியா. பெரிய சிங்கரா வரவேணுமெண்டு கனவுகண்டவள். எனக்கிப்ப பீற்றரைக் கொல்லோணும் போலையிருக்கு!” மேசையில் முஷ்டியால் அடிக்கிறாள் மரியா. அவளின் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணீர் அவள் கன்னங்களை முழுமையாக நனைக்கிறது.

“பீற்றரின்ர தாயும் தகப்பனும் ஆள் மாறிவந்திட்டியள், அவன் அப்பிடியான ஆள் இல்லையெண்டு பொலிஸ் காருக்குப் பின்னாலை ஓடினவையாம், பாவம் அதுகள், அதுகளுக்கு மகனைப் பற்றித் தெரியேல்லை,” அலெக்ஸ் சொல்ல, “ஓமோம், அவன் எங்கே செய்தவன், பிழையாய்த்தான் கைதுசெய்து போட்டினம்!” கோவமாக எள்ளல் செய்கிறாள் லீசா.

எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பீற்றரின் அம்மாவும் அப்பாவும் தங்கைச்சியும் எனக்கு முன்னால் அழுதுகொண்டு நின்றிருப்பதுபோலவும், இலக்கியாவின் அம்மா தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதுபோலவும் எனக்குப் பிரமையாக இருக்கிறது. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கமறுக்கிறது. லஞ்சுக்குப் பின் வகுப்புக்குப் போகிறோம், கவுன்சிலர் மிசிஸ். ஜோன் எங்களுக்காக அங்கு காத்திருக்கின்றா.

“என்னோடை கதைக்க விரும்புறவை என்ர அலுவலகத்துக்கு வரலாமெண்டது உங்களுக்குத் தெரியும். இப்ப நான் சிலதைப் பொதுவாய்க் கதைக்கவிரும்புறன்,” குரலைச் செருமிக்கொண்ட அவ ஆரம்பிக்கின்றா. “உங்கட வகுப்பிலை இருந்த ஒரு மாணவி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள், ஒரு மாணவன் அதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறான், இது ஜீரணிக்கமுடியாத பெரிய சோகம்... உங்களுக்குள்ளை பலவிதமான உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருக்கும். அவை எதுவுமே தப்பானதில்லை. எங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக நாங்க எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு மூச்சுப்பயிற்சி செய்துபாப்பமா? பாதங்களை நிலத்தில வைச்சிருந்தபடி, கதிரையில பின்னுக்குச் சாய்ந்து செளகரியமாக இருங்கோ.

முதலில 1 2, 3, 4 என மனசுக்குள்ளை எண்ணினபடி ஆழமா மூச்செடுங்கோ. பிறகு 1 2, 3, 4 என மெதுவாக எண்ணிமுடிக்கும்வரைக்கும் மூச்சைப் பிடிச்சிருங்கோ. அதுக்குப் பிறகு 1 2, 3, 4 என மனசுக்குள்ளை சொல்லிக்கொண்டு மூச்சை மெதுவா வெளியேற்றுங்கோ. பிறகு 4 செக்கன் காத்திருந்திட்டுத் திரும்பவும் இப்பிடி மூன்று முறை செய்வம், சரியா?”

மிசிஸ். ஜோனுடன் சேர்ந்து அப்படிச் செய்தபோது இதயம் படபடப்பது சற்றுக் குறைந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது.

“கொஞ்சம் ரிலாக்ஸாவிருக்கா? மன அழுத்தத்தை எப்போதாவது உணரும்போது இப்படிச் செய்துபாருங்கோ. 13 வயசு - கொஞ்சம் கஷ்டமான காலகட்டம்தான். தங்கியிருத்தலிலிருந்து விலகிச் சுயாதீனமா இருக்க முயற்சிக்கிற இந்தக் கட்டத்தில நிறையக் குழப்பங்கள் இருக்கும். அதோடை பருவமடைகிற காலம் இது, உங்கட உடம்பிலை சுரக்கிற ஓமோன்களின்ர தாக்கத்தையும் நீங்க சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆரம்பப் பாடசாலை ஒன்றிலையிலிருந்து இந்த இடைநிலைப் பாடசாலைக்கு வந்திருக்கிறீங்க. உங்களில் சிலருக்கு நெருக்கமான ஒரு நட்பு இன்னும் கிடைக்காமலிருக்கலாம். தனிமையை, வெறுமையை நீங்க உணரக்கூடும். பாடங்கள் சிரமமானதாக இருக்கலாம். வீட்டில உங்களிட்டை எதிர்பாக்கிறதுகளை உங்களால செய்யமுடியாம இருக்கலாம். இந்த அழுத்தங்கள் எல்லாத்தையும் தாங்கிற சக்தி உங்களுக்கு இல்லாமலிருக்கலாம்... தயவுசெய்து உங்கட உணர்ச்சிகளைப் பற்றிப் பெற்றோரோடையோ, ஆசிரியர்களோடையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களோடையோ மனம்விட்டுக் கதையுங்கோ. என்ர கதவு உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். வார விடுமுறை கழிஞ்சு பாடசாலைக்குத் திரும்பிவரேக்கை எல்லாருக்கும் கொஞ்சமாவது அமைதி கிடைக்குமெண்டு எதிர்பாப்போம்.”

மிசிஸ் ஜோன் போனதும், மீளவும் லைபிரரிக்குப் போகிறோம்.

பள்ளிக்கூடம் முடிந்ததும், பீற்றரின் வீட்டருகில் என்ன நிகழ்கின்றதென அறியும் ஆர்வத்தில் வழமையில் வீட்டுக்குப் போவதுபோல எங்களின் தெருவில் திரும்பாமல், அதற்கு முன்பாகவிருந்த தெருவில் திரும்புகிறேன். பின் அங்கிருந்து எங்களின் தெருவை நோக்கி நடக்கிறேன். எங்களின் தெருவின் தெற்குப் பக்கத்தில்தான் பீற்றரின் வீடிருந்தது. அவனின் வீட்டுக்கு அண்மையில் செல்லச்செல்ல என் உடல் நடுங்குகிறது, நெஞ்சடைக்கிறது. ஆனால், அவனின் வீட்டுக்கு வெளியில் எந்தச் சஞ்சாரமும் இருக்கவில்லை. அவனின் வீட்டைக் கடந்து எங்கள் வீட்டுக்கு எப்படிப் போனேன் என்றே தெரியவில்லை, கால்கள் தடுமாறுகின்றன.

எங்களின் வீடு வழமைவிட அதிக நிசப்தமாக இருப்பதுபோலிருந்தது. எதைச் செய்யவும் எனக்குப் பிடிக்கவில்லை. சோபாவில் படுத்துக்கொள்கிறேன். மனம் எங்கெல்லாமோ அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. நேரம்போகப்போக மேலும் துக்கமாகவும், களைப்பாகவும், பசியாகவும் இருக்கிறது. குளிரூட்டியில் இருந்த பீசாவை மைக்கிரோவில் சூடாக்கியபடி instagramஐப் பார்ப்போமா என நினைத்தாலும், அதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கொலையைப் பற்றி அதிலை என்னவெல்லாம் பேசிக்கொள்வார்களோ என்ற என் நினைவைத் தொலைபேசியின் ஒலி குழப்புகிறது. FB messangerஇல் லீசாதான் அழைக்கிறாள்.

“ஹாய் லீசா”

மறுமுனையில் விசும்பல் ஒலி. “ஏய் லீசா, என்ன நடந்தது?” எனக்குள் ஆயிரம் கேள்விகள். “என்ர போனைப் பறிச்சுப்போட்டினம், சுவேதா. கொம்பியூட்டரும் இனி லிவ்ங் ரூமிலைதான் இருக்குமாம். லக்கியா பீற்றருக்குப் போட்ட கொமன்ற்ஸ் பற்றி எனக்குத் தெரியுமோ? அதைப் பற்றி நானும் ஏதேனும் எழுதினேனா? ஏன் அதுகளைப் பற்றி ரீச்சர்மாரிட்டை சொல்லேல்லை எண்டு ஒரே அறுவை.”

“ஓ, சொறி லீசா. பீற்றர் ஒரு incel, அவனாலை கேர்ள்ஸ் ஐக் கவரமுடியாதெண்டு லக்கியா அவனை bully பண்ணேக்கை, நீரும் அதைப்பற்றி ஏதாவது எழுதினீரா?”

“இல்லை, நான் ஒண்டும் எழுதேல்லே, ஆனா லக்கியான்ர கொமன்ற்றுக்கும், மற்றவை சொன்னதுகளுக்கும் லைக் போட்டனான். அதுதான் வீட்டிலை பெரிய பிரச்சினை”

“இங்கையும் என்ன நடக்கப்போகுதோ தெரியாது. பீற்றரின்ர வீட்டுக்காரரைத் தெரியுமெண்டதாலை, நான் அதுக்கொரு கொமன்றும் எழுதேல்லை. ஆனா வேறை ஆக்களுக்கு என்னெல்லாம் எழுதியிருக்கிறன், எதையெல்லாம் லைக் பண்ணியிருக்கிறன் எண்டு பாக்கோணும். அம்மா வாறதுக்கிடையிலை எல்லாத்தையும் அழிச்சுப்போடோணும். சொறி, லீசா, உமக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கேல்லை.”

“இது பொலிஸ் கேஸ் எண்டதாலை என்ன பிரச்சினையெல்லாம் வருமோ தெரியாது எண்டு அப்பா பயப்படுத்துறார். என்ர Instagram எக்கவுண்டையும் அழிச்சுப்போட்டார். அத்தையோடை கதைக்கிறதுக்காண்டி FBஐ விட்டிருக்கினம். போன் இல்லாமல் எனக்கு ஒரே விசராயிருந்துது. ஆரோடையாவது கதைக்கோணும் போலையிருந்து... கடைக்குப் போனவை வருகினம்போலை இருக்கு, பிறகு கதைக்கிறன்.”

ஒரு மணித்தியாலத்துக்குள் அப்பாவும் அம்மாவும் வந்திடுவார்கள். எனக்குப் பதற்றமாகவிருக்கிறது. ‘கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை’ என்று இந்த நிலையைத்தான் சொல்கிறவைபோலும்.

“சுவேதா, இதென்ன லஞ்சுக்குக் கொண்டுபோன சாப்பாடு அப்படியேயிருக்கு, Microwaveக்குள்ள பீசா கிடக்குது. நீ ஒண்டுமே சாப்பிடேல்லையே? கீழை வா!” வந்ததும் வராததுமாக அம்மா சத்தமாகக் கூப்பிடுகிறா. அப்பா மேலே வந்து என் அறைக்கு முன்னால் நிற்கிறார்.

“சுவேதா, என்ன செய்யிறாய்?"

“ஒண்டுமில்ல, எனக்குத் தலையிடிக்குது"

“சாப்பிடாட்டிலும் தலையிடிக்கும், வா, வந்து முதலிலை சாப்பிடு"

போய்ப் பீசாவை எடுத்துக்கடிக்க ஆரம்பித்தபோது, “கொத்துரொட்டி வாங்கிக் கொண்டுவந்தனான். உதை வைச்சிட்டு அதைச் சாப்பிடு,” என்று அம்மா சொல்ல, அப்பா அதை எடுத்துக்கொண்டுவந்து தருகிறார்.

எனக்குப் பிடித்த சிக்கன் கொத்து. ஆனால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “சாப்பிட்டு முடி, உன்னோடை ஆறுதலாய்க் கதைக்கோணும்,” அம்மா சொல்ல என் மனம் குறுகுறுக்கத் தொடங்குகிறது.

“சும்மா பீடிகை போடாம நேரடியாய்க் கேளும்,” என்ற அப்பா, அவரே ஆரம்பிக்கிறார்.

“வகுப்பிலை எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும். பாவம் அந்தப் பிள்ளை லக்கியா! என்ன பாடுபட்டிருக்கும். நினைச்சுப்பாக்கவே முடியேல்லை. மனசுக்குப் பெரும் கஷ்டமாயிருக்கு. சமூக ஊடகமெண்டு ஒண்டு வந்ததும் வந்தது, அந்தக் காலத்திலை எங்களுக்கிருக்காத பிரச்சினைகளெல்லாம் உங்களுக்கு வந்திட்டுது.” சொல்லிமுடித்துவிட்டு என்னையே உற்றுப்பார்க்கிறார், அவர்.

“13 வயசிலை மூளை முழுசா வளர்றதில்லை. அதாலை சிந்திச்சுச் செயலாற்றுறது கஷ்டம்தான்... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கிறம் எண்டது உனக்குத் தெரியோணும், எங்களோடை நீ என்னத்தையும் கதைக்கலாம், என்ன?” என்கிறா அம்மா, உறுதிதரும் குரலில்.

‘ம்ம், திட்டம்போட்டு நல்லாய்த்தான் கதைக்கினம். இப்பிடிக் கதைச்சால் நான் விட்ட பிழையெல்லாம் சொல்லுவன் எண்டு நினைக்கினம்போல, ஆனா சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியும்தானே,’ என்ர மூளை என்னை எச்சரிக்க, நான் எதுவுமே பேசாமலிருக்கிறேன்.

“இண்டைக்குக் கதைக்கிறது உனக்குக் கஷ்டமாயிருகெண்டா நாளைக்கு ஆறுதலாய்க் கதைப்பம்,” என்ற அம்மாவைத் தொடரவிடாமல், “லக்கியாவோடை எனக்குப் பழக்கமில்லை. பீற்றரோடையும் ஒரு நாளும் கதைச்சதில்லை. நடந்ததுகளைப் பற்றிக் கதைக்கோணுமெண்டால் கவுன்சிலரோடை கதைக்கலாமெண்டு பள்ளிக்கூடத்தில சொன்னவை,” இந்தக் கதை மீளவும் தொடராமல் இருப்பதற்காக அவசரப்படுகிறேன் நான்.

“எங்களோடை கதைக்கேலாதெண்டால். கவுன்சிலரோடையாவது கதை, என்ன? கதைப்பியோ?” என்ற அம்மாவைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டுகிறேன். பின்னர் என்னுடைய அறைக்குப் போன நான் படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்துக்கொள்கிறேன். அடக்கமுடியாமல் அழுகை அழுகையாக வருகிறது.

கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்கிறது. “நாங்களும் வேலையாலை பிந்தித்தான் வாறம். வீட்டிலை அவள் கதைக்கிறதுக்கும் ஒருத்தருமில்லை. சின்னப்பிள்ளையிலை நீந்துறதுக்கு, சொக்கர் விளையாடுறதுக்கு அதுக்கு இதுக்கெண்டு கூட்டிக்கொண்டுபோனமாதிரி கூட்டிக்கொண்டு போறதுக்கும் எங்களுக்கு இப்ப நேரமில்லை.”

“தனியப் போய்வாற வயசு அவளுக்கு இப்ப வந்திட்டுத்தானே. அவளை பிஸியாக்கோணும், விருப்பமான புரோகிராம்களிலை சேத்துவிடோணும். அல்லது Instagram, twitter எண்டு நேரத்தைச் செலவழித்து வீண்பிரச்சினைகளைத்தான் விலைக்கு வாங்கினதாயிருக்கும்.”

“ம்ம், வேலையாலை வந்து நீர் சமைக்காட்டிலும் பரவாயில்லை, அவளோடை மனம்விட்டுப் பேசப்பாரும். ஒன்றாய் நேரத்தைக் கழிக்கப்பாரும். தேவைப்பட்டால் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம். சமூக வேலை அது இதெண்டு ஓடித்திரியிறதை நானும் குறைக்கிறன்.”

“ஓமப்பா, நாங்க வேலையாலை வந்த களைப்பிலை, ‘வா சாப்பிடு’, ‘சாப்பாடு காணுமோ’, ‘homework செய்துபோட்டியோ’, ‘நேரமாகுது படு', எண்டு சும்மா பேருக்குக் கதைச்சால் என்ணெண்டு பிள்ளையள் மனம்விட்டுக் கதைக்கிறது. ஆறுதலாயிருந்து கதைச்சாத்தானே அதுகளும் கதைக்கலாம்.”

“அவள் சின்னப்பிள்ளையாயிருக்கேக்கை நீர் அப்பிடிக் கதைச்சனீர்தானே. அப்ப அவள் உமக்கெல்லாம் சொல்லுறவள்தானே. திரும்பவும் அப்பிடியொரு ஐக்கியத்தை உருவாக்கப் பாருமப்பா. இந்த வயசிலை பிள்ளைகளுக்கு வாற உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நாங்க விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும். மனம்விட்டுக் கதைக்கோணும். அப்பிடியில்லாம நெடுகப் பிழைகண்டுகொண்டிருந்தம் எண்டால் எங்களுக்கு ஒண்டும் தெரியவராது.”

“ஓம், இதை நாங்க ஒரு wakeup call மாதிரி நினைக்கோணும், பிள்ளை வழிமாறினா, என்னத்தைச் சம்பாதிச்சும் பயனில்லை. இண்டைக்கு முழுக்க வேலையிலை எனக்கு இதே நினைப்பாய்த்தானிருந்துது? லக்கியாவின்ர பெற்றோரின்ர நிலையிலைருந்து யோசிச்சுப்பாருங்கோ, எப்பிடியிருக்கும்?”

“ம்ம், பீற்றரின்ர குடும்பமும் பாவம்தான். அவையும் பிசியாக இருந்திட்டினம். இப்ப அவைக்கும் பெருங்கஷ்டமாயிருக்கும்.”

“அவனுக்குச் சுயமதிப்பு இருக்கேல்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியேல்லை. போதாதற்கு எப்பிடிப் பழிவாங்குறது எண்டதைத்தானே ரீவி புரோகிறாம்களும் சினிமாவும் பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்குது. நாங்களும் பிஸியாயிருந்தால் யார் அதுகளுக்கு வழிகாட்டுறது?”

அம்மா விசும்புவது கேட்கிறது.

“பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கோணுமெண்டு போனை வாங்கிக்குடுத்தால், இப்ப அதாலை வேறை பிரச்சினையாய்க்கிடக்கு… அந்தப் பிள்ளை எங்கை போய்வாறள் எண்டதையெல்லாம் கண்காணிச்சுத் திட்டமிட்டுக் கொலைசெய்யிறளவுக்கு மனசிலை அவன் வன்மத்தை வளத்திருக்கிறானே…” அப்பாவின் குரல் உடைகிறது.

“சூழலின்ர பாதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் எங்களாலை பாதுகாக்க முடியுமெண்டு எனக்குத் தெரியேல்லை, எண்டாலும் எங்களாலை ஏலுமானதை நாங்க செய்யோணும்!” அம்மா நா தழுதழுக்கச் சொல்கின்றா.

அம்மாவின் விசும்பலும் அப்பாவின் கரிசனையும் என்னையும் விம்மச்செய்கின்றது. படுக்கையில் புரண்டுபுரண்டு படுக்கிறேன். நித்திரைவருவது மாதிரித் தெரியவில்லை. இருந்தாலும், வருமென்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொள்கிறேன்.

:sri.vije@gmail.com


https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9358-2025-09-25-03-40-32?fbclid=IwY2xjawNCrTBleHRuA2FlbQIxMABicmlkETE4bUZFQVBUZjFXZFpMQ2MxAR7ZjRHT7zB7w9ybArj_7I4QgNL7IuNIQlnO6X--cdmYJnMwQGdsYFwE1HgxNw_aem_vZ3_mns0u6NAPvg-Efbvnw

Checked
Thu, 12/18/2025 - 20:15
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed