புதிய பதிவுகள்2

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 month 3 weeks ago
பாகம் - 7 தம்பலகாமத்தில் ஜோண் சில்வா என்றொருவன் இருக்கிறான். தமிழர் மத்தியிலேயே இவனும் இருந்து வந்திருக்கிறான். பட்டிமேட்டில் உள்ள பிள்ளையார் கோயில் காணியில்தான் இவனது வீடு இருந்தது இவனுக்கு இரண்டு பெண்களும் ஆண்பிள்ளையும் உண்டு. இவனது மகனை றாலாமி' என அனைவரும் அழைப்பர். இவனது பெயர் விஜேதாஸ. என்ன காரணத்தினாலோ ஜே. வி. பி. யினர் றாலாமியைச் சுட்டு விட்டனர். தம்பலகாமத்தில் நிறைய மாடுகள், எருமைகள் உண்டு. இங்கு பாலை வாங்கி அதைக் கொழும்புக்கு அனுப்பி வியாபாரம் செய்வதுதான் ஜோண் சில்வாவின் தொழில். அதனால் இவன் பெரிய பணக்காரனாகி விட்டான். அத்துடன் தம்பலகாமம் கோணேசர் கோயிலுக்குச் சொந்தமான காணியில் விவசாயம் செய்துவந்தான். ஆரம்பத்தில் இவனுக்கு குத்தகைக்கு வயலைக் கொடுத்து வந்த கோணேசர் கோயில் நிர்வாகம் பின்னர் குத்தகையை ஏலத்தில் விட ஆரம்பித்தது. ஏலத்தில் இவனுக்கு நிலம் நிலம் கிடைக்காமல் போயிற்று. பின்னர் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் போய் அத்துமீறியிருந்தான் அத்துமீறி இருக்கும் இவனை வெளியேற்ற தமிழரான உதவி அரசாங்க அதிபர் முயற்சித்தார். இவனுக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தது. அன்றிலிருந்து தம்பலகாமத்துக்கு சிங்களவரே உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறிய சிங்களவனைக் காப்பாற்ற உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு தொடர்ந்து சிங்களவரை அரசு நியமிக்கிறது என்றார். தம்பலகாமம் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் வயல் உள்ளது?' என்று கேட்டேன். 'ஆயிரம் ஏக்கர் வரையில் இருக்கும்' என்றார். தொடர்ந்து தம்பலகாமம் கோயில் வீதியில் அரசமரம் ஒன்று நின்றது. தற்போது அது வெட்டப்பட்டுவிட்டது. அரசமரம் அங்கே இருந்தபடியால் தம்பலகாமம் கோயிலுக்குச் சொந்தமான காணியின் அரைப்பங்கு சிங்களவர் வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி சிங்களவரை குடியேற்றும் முயற்சிகளில் ஜோண்சில்வா ஈடுபடுகிறான் என்றார். அது சாத்தியப்படக் கூடிய விஷயமா? என்று கேட் டேன். "ஏன் இன்று 13ஆம் கட்டை, ஜெயந்திபுர எல்லாம் சிங்களவர் குடியேறவில்லையா? குடியேறிய பின் சிங்களப் பெயரை வைத்தால் அதன் பின் அது சிங்களக் கிராமம்தானே! அதுதானே இங்குள்ள நடை முறை என்றார். அரசமரம் நின்ற இட மெல்லாம் சிங்கள இடமாம்; புதிய விளக்கம் (பின்னர்நான் சந்தித்த துரைநாயகம் என் பவரும் அரசமரத்தை வெட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். பாராளுமன்றத்தில் கூட சிறில் மத்யூ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். திரு. துரைநாயகம் ஒரு கட்டத்தில் "முளைக்கும் ஒவ்வொரு அரச மரத்தையும் வெட்டுவதன்மூலம் எதிர் காலத்தில் வெட்டுப்படவிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை வெட்டுகிறோம்' என்று விளக்கம் கொடுத்தார்.) “அதெப்படி”? என்று நான் கேட்டபோது 'அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்த விகாரை இருக்கவேண்டும். புத்தவிகாரை ன் மணி ஓசை கேட்கும் இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான நிலம் என்று சிறில் மத்யூ ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். சிறில் மத்யூ ஊட்டிய இன வாத விதைதான் இன்று தானே முளைக்கும் அரசமரத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான இடமென்று வாதிட வைக்கிறது' என்று விளக்கம் கொடுத்தார். சிங்கள ஊர்காவல்படையி னரைத் தூண்டி விடுவது ஜோண்சில்வாதான் என்றார். சிங்கள ஊர்காவல் படையால் இந்தமுறையும் தொந்தரவு உண்டா? என்று கேட்டோம் - தற்சமயம் மிகப்பிரச்சினையானவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினர் - முன் னர் சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை என்றிருந்து பின்னர் இந்திய இராணுவம் என்றிருந்து தற்பொழுது முஸ்லிம் ஊர்காவல்படை தமிழர் அழிப்பை பொறுப்பேற்றிருக்கிறது. எப்போதும் தமிழர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழின அழிப்பில் நடிகர்கள்தான் மாறியிருக்கிறார்களேயொழிய பாத்திரங்கள் மாற வில்லை என்றார் விரக்தியுடன். இந்திய இராணுவம் அப்படியென்ன வித்தியாசமாகச் எல்லா இடமும் செய்தது? தமிழரைச் சுட்டது போல இங்கேயும் சுட்டிருக்கும்!' என்றேன். தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த நவரட் ணம் என்பவரை உடம்பில் துணியால் சுற்றி ரின்னர் ஊற்றித் தீமூட்டியது. இப்படி வேறெங்காவது செய்துள்ளதா? என்று சினத்துடன் கேட்டார். கோவிக்க வேண் டாம். இதையொத்த சம்பவங்கள் பலதைச் செய்துள்ளது தான். ரின்னர் ஊற்றிக் கொளுத்தியது நான்இப்போது தான் அறிகிறேன். சரி நீங்கள் ஜோண்சில்வாவைப் பற்றிக் கூறுங்கள் என்றேன். 'ஜோண்சில்வாவினால் ஊக்குவிக்கப்படும் சிங்கள ஊர்காவல்படை போன கலவரத்தில் புதுக்குடியிருப்பில் மட்டும் முப்பத்து மூன்று பேரைக் கொன்றது' என்றார். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். போன கலவரத்தில் கோயிலடியில் அகதிகளாக இருந்தவர்களிடம் இராணுவம் வந்து நீங்கள் பழைய தொழில்களைச் செய் யலாம். இனிப் பிரச்சினையில்லை என்றனர். அதை நம்பி, புதுக்குடியிருப்பில் உள்ள அரிசிமில் ஒன்றுக்கு வேலைக்குப் போன தமிழர்கள் 33 பேரை ஊர்காவல் படை கடத்திக்கொண்டு போய்ச் சுட்டது. அதுமட்டுமல்ல பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மில் உரிமையாளர் சபாரட்ணத்தின் கைவிரலில் மோதிரம் இருப்பதைக் கண்டு விரலையும் வெட்டிக் கொண்டு போனது என்றார். இம்முறையும் இப்படி ஏதும் திட்டமிருக்குமா? என்று கேட்டேன். பட்டிமேட்டில் உள்ள ஸ்ரீ சாரதா வித்தியாலயத்துக்கு வந்து அகதிப்பிள்ளை களைப் படிக்கச் சொல்கிறார்கள். அது இராணுவமுகாமுக்குக் கொஞ்சம் தொலைவிலுள்ளது. படிக்கப்போகும் பிள்ளைகளை அப்படியே அள் ளிக்கொண்டு போகும் திட்ட மிருக்கும் என்பதால் பிள்ளைகள் படிக்கப் போகவில்லை என்றார். ஏன் இராணுவ முகாமிலேயே பிடிக்கிறார்கள் தானே என்று கேட்டேன். இராணுவ முகாம் பக்கத்தில் உள்ள இடத்தில் என்றால் தாங்கள் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கும்; கொஞ்சம் தள்ளியென்றால் தங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஊர்காவல்படை தான் கொண்டு போயிருக்கலாம் என்று இராணுவத்தினர் தப்பிக்கப் பார்ப்பார்கள். இப்படித்தானே போன கலவரதில் மில்லில் இருந்து கொண்டு போய் முப்பத்து மூன்று பேரைக் கொன்றவர்கள் என்றார். தமிழின அழிப்பில் தான் எத்தனை வகை என்று எண்ணிக் கொண்டேன். அகதிமுகாம்களில் நடக்கும் விடயங்கள் பற்றி இதற்கு முடிவு காண சுயமாக ஏதாவது செய்தார்களா? என்று கேட்டேன். இதற்கு என்ன செய்ய முடியும். பொறுப்பான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே கையைவிரிக்கும் போது என்றார். (தொடரும்)

செம்மணி மனிதப்புதைகுழி - முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 

1 month 3 weeks ago
நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 04:34 PM (இராஜதுரை ஹஷான்) நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு. எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. https://www.virakesari.lk/article/223947

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

1 month 3 weeks ago
ஜனாதிபதி கச்சதீவிற்கு விஜயம் Published By: Vishnu 01 Sep, 2025 | 09:56 PM யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார். குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார். ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார். மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223973

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month 3 weeks ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது. இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும். குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும். 5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன. லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/223953

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: Vishnu 01 Sep, 2025 | 07:29 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223972

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது. கட்டுரை தகவல் ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது. SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள். இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. 'நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல' என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது. மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது. 2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது. இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது. டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப். இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன. "ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்." என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார். ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது. Play video, "டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா? பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன. "மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது. டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். "இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு." என்கிறார். இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். "மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது. எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும். தோற்றங்களும் விளைவுகளும்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை. ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். "டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது." என்றார். 7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது. "சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்" என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர். எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது. "இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்" என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப். ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது. ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். "எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. "இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது." என்றார். மேலும், "ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது" என்றார். ரஷ்யாவின் பங்கு: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது. இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும். ஆனால் "ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை." என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார். மேலும், "யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது" எனக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும். "இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு" என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார். அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா? இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். "கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார். டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம். விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும். மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது. இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன. மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட. எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது. "இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்." என்கிறார் பேராசிரியர் காங்குலி. உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர். "இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு" என அவர்கள் கூறுகின்றனர். டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77627lg867o

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பாத்பைன்டர் பவுன்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

1 month 3 weeks ago
Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன. அதேவேளை தற்போது நிலவும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கிவரும் தலைமைத்துவம் குறித்து மிலிந்த மொரகொட தனது பாராட்டை வெளிப்படுத்தியதுடன், அது பிராந்திய உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நேர்மறையாகப் பங்களிப்புச் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/223968

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 month 3 weeks ago
விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர். அனைவரும் அரசாங்கம் மீது வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது. நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும். யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது. பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்கு கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார். விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தமது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றியும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf18gnkd0060o29nzt3gx8mr

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 3 weeks ago
‘வாழ்வாதாரமே பாதிக்கும் அபாயம்’ - போராட்டத்தில் இறங்கிய தமிழர்கள்; மன்னாரில் என்ன பிரச்னை? இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டில் காற்றாலை செயல்பாடு தொடங்கியது. மன்னார் தீவுப் பகுதியில் 36 காற்றாலைகள் தற்போது இயங்கி வருகின்ற நிலையில், புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, மக்கள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றாலை மின்சாரம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போரட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். #Colombo #Mannar #WindForm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

1 month 3 weeks ago
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

1 month 3 weeks ago
யாழ். பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமயப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1331807308948546?ref=embed_post -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf123tn1005gqplpajgipsnp

சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது. மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது. மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன. "தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது. சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த். சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த். மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர். மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர். மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர். அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த். தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjmrr3n3m9o

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ...... ! --- என்னவளே அடி என்னவளே ---

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 month 3 weeks ago
யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானம்... 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் 40,000 இருக்கைகளுடன் கட்டப் படவுள்ளது. 3 ஆண்டுகளில் கட்டடப் பணியை நிறைவேற்றத் திட்டம். #################### ################## முதலில் ஒரு தமிழனுக்கு தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் குடுங்க. Dushy Fly

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 B பகுதி: 24 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது. "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015) எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498 "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த" என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல். இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. நாக மக்கள் ஒரு காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்கால பழங்குடியினர் என்று சிலரால் நம்பப்படுகிறது. மகாவம்சம், மணிமேகலை போன்ற பல பண்டைய நூல்களில் நாகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாடு தமிழ் இலக்கியத்தில் நாக நாடு என்றும், பாலி இலக்கியத்தில் நாகதீபம் என்றும், கிரேக்க வர்த்தமானி [Greek gazetteer / வர்த்தமானி என்பது ஒரு வரைபடம் அல்லது நிலவரைத் தொகுப்பு இணைந்து பயன்படுத்தப்படும் புவியியல் அகராதி ஆகும் / A gazetteer is a geographical dictionary or directory used in conjunction with a map or atlas.] நாகதிபா [Nagadiba] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகபூமி என்ற பெயர் யாழ்ப்பாணம், உடுத்துறையில் இருந்து எடுக்கப்பட்ட பிராமி பொறிக்கப்பட்ட நாணயத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையிலிருந்து ஒரு தமிழ் கல்வெட்டிலும் காணப்பட்டது. நாக வழிபடும் பாரம்பரியம் இன்னும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்த வார்த்தைக்கு பல மூலங்கள் உள்ளன. தமிழில் "நாகரிகம்" என்றால் பண்பட்ட மக்கள் என்றும் பொருள் படும். சமஸ்கிருதம், பாலி மற்றும் தமிழ் மொழியில் "நாக" என்பது "பாம்பு" அல்லது "அரவம்" என்று பொருள்படும். க.இந்திரபாலா போன்ற அறிஞர்கள், இவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைத்துக் கொள்ளத் தொடங்கிய பழங்கால பழங்குடியினராகக் கருதுகின்றனர். தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒளியர், பரதவர், மறவர், பறையர், கள்ளர், பள்ளி மற்றும் எயினர் [Oliyar, Parathavar, Maravar, Paraiyar, Kallar, Palli and Eyinar] ஆகியவர்கள் நாக பழங்குடியினர் என்கிறார். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம். சங்க இலக்கியத்திற்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாக முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு!. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 C தொடரும் / Will Follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31112551158393458/?

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 month 3 weeks ago
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!; இவ்வாண்டு இறுதிக்குள் முதல் போட்டி நடைபெறுமென தெரிவிப்பு 01 Sep, 2025 | 06:21 PM யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (1) பிற்பகல் ஆரம்பித்துவைத்தார். யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு என்பதையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 3 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பாராட்டினார். https://www.virakesari.lk/article/223967

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

1 month 3 weeks ago
தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கில் கிஞ்சித்தும் அரசியல் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது. உளுத்துப் போன பழைய அரசியல் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் மக்கள முற்றாக நிராகரிக்கப்பட போகின்றனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

1 month 3 weeks ago
மாற்றத்தின் முன்னுதாரணம்! வாசிக்க: “பொதுமக்களின் நிதியை பயன்படுத்தி” மற்றும் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படவில்லை! மக்கள் பணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் சிறு சிறு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஜனாதிபதிகள் வரையிலும் தமது பெயரை பொறித்தலும் இடங்களுக்கு தம் சுயப்பெயரை சூட்டுதலும் இருந்த கலாசாரத்தில் எத்தனை மாற்றம்… இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கடவுச்சீட்டு அலுவலகத்தில் இந்த மாற்றம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. Vaanam.lk ################# ################## ################ நல்லவைகளை பாராட்டுவோம். யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழியை முதல் மொழியாகவும், எந்தவொரு எழுத்துப்பிழைகளும் இன்றி, சனாதிபதி பெயர் குறிப்பிடாது அமையப்பெற்றுள்ளமை நாட்டின் தலைவர் ஓர் கல்வியாளன் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. Prashanthan Navaratnam

குட்டிக் கதைகள்.

1 month 3 weeks ago
ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான், ''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன். ''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.'' நீ பொய் சொல்கிறாய்.. நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான். உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான், ''இல்லை,இல்லை, நீ பொய் சொல்லவில்லை.'' என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,''நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,' 'அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். கதை கருத்து காமெடி
Checked
Tue, 10/28/2025 - 23:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed