2 months 1 week ago
யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம் General08 August 2025 யுக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. வாசிங்டனும் மொஸ்கோவும் ஒரு சாத்தியமான உச்சி மாநாட்டை எவ்வாறு நடத்தப்போகின்றன என்பது குறித்து இதுவரை அறிவிப்புக்கள் வெளியிடவில்லை. இந்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்று கிரெம்ளினும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் புடின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தமைக்கு பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதலாவது சந்திப்பாக அது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் செலன்ஸ்கியை சந்திக்கப்போவதில்லை என்று புடின் தெரிவித்துள்ள நிலையில், புடினுடனான சந்திப்பில், செலன்ஸ்கி இணைத்துக்கொள்ளப்படுவதைத் தாமும் விரும்பவில்லை என்று ட்ரம்ப்பும் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/413561/ukraine-ceasefire-trump-and-putin-meeting-in-doubt
2 months 1 week ago
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் 08 August 2025 காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரதேசத்திற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்கவும், தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது அமைச்சரவை பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது. அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல். காசா பகுதியை இராணுவ மயமாக்குதல். காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு. ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/413568/israeli-defense-cabinet-approves-plan-to-capture-gaza-city
2 months 1 week ago
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய பாராளுமன்றத்தில் பணியாற்றிய பாராளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலோர் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான சிறீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டாளர் ரணில் விக்ரமசிங்கவின் தீவிர ஆதரவாளர். அவர் முன்னாள் சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்களின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு பல முறைப்பாடுகளை செய்துள்ளவர். ஆனால் ‘’எனக்கு முகம் தெரியாத சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதிக்கேற்ற புலனாய்வு பிரிவில் சொத்துக் குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார். இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன். என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் சிறீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்குப் பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாகவும் , தமிழரசு கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது என்னோடு சேர்ந்திருந்து எனது கைகளைத் தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாகக் கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு, பின்னணியில் இருந்து கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்காலத் தடையைப் பெற்றிருந்தார்கள். அந்த அடிப்படையில், இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நிதி குற்றப் புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சஞ்சே மகாவத்த என்ற நபருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் . என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்தவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களைப் பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன். இணையத்தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது. இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன். அதனை எவரும் பார்க்கமுடியும். ஆகவே, என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார். சிறீதரன் மீதான இந்த சட்ட விரோத சொத்துக்குவிப்பு முறைப்பாட்டின் பின்னணியில், அவரது தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைகள் சம்பந்தப்பட்டிருப்பது உள் வீட்டுத் தகவல்களாகக் கசிந்துள்ளது. இதற்கு சிறீதரன் எம்.பியை தமிழரசுக் கட்சியிலிருந்து மட்டுமல்லாது எம்.பி. பதவியிலிருந்தும் அகற்றுவதே இந்த தலைகளின் திட்டமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தலைமைக்கு சிறீதரன் கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துத் தோற்றவர்கள், சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி தோற்றவர்கள் தற்போது சிங்களத்தரப்போடு சேர்ந்து சிறீதரன் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், கட்சி நடவடிக்கையாக சிறீதரன் மீது கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமை குற்றச்சாட்டுடன் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டையும் முன் வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதே இவர்களின் திட்டம். தமிழரசுக் கட்சியின் இந்த பெரிய தலைகளுக்கு சிறீதரன் மீது ஏன் இந்த வன்மம் என் று பார்த்தால் அது சிறீதரன் மீதான வன்மம் அல்ல அவரின் எம்.பி. பதவி மீதான மோகமே காரணம் என உள்வீட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசின் தலைவர் பதவியிலும் பாராளுமன்ற எம்.பி. பதவியிலும் சிறீதரனிடம் தோற்றவர்களினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் ‘’மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் செல்வோம் .தேசியப்பட்டியல் மூலம் ஒருபோதும் பாராளுமன்றம் செல்ல மாட்டோம் ‘’ என தெரியாத்தனமாக சூளுரைத்துவிட்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தோற்று இன்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமுடியாத நிலை. அதனால்தான் சிறீதரனை ஏதோவொரு வழியில் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் .அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் சிறீதரனுக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில், பாராளுமன்றம் செல்லமுடியும் என்ற திட்டத்தில் சிறீதரனின் எம்.பி. பதவி மீது இலக்கு வைத்தே இவ்வாறு தொடர்ந்தும் சிறீதரனை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றது அந்த உள்வீட்டுத்தகவல். சிறீதரனின் எம்.பி.பதவிக்கு எவ்வேளையும் ஆபத்து ஏற்படலாம் என்பதனை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அளித்துள்ள விளக்கமொன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.அந்த விளக்கத்தில் சுமந்திரன் பின்வருமாறு கூறுகின்றார். கட்சியின் ஒழுக்கக் கோவையுடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் தாராளமாக வெளியே போகலாம்.கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு மாறாக, செயற்படுவதனை எந்த மானமுள்ள அரசியல் கட்சியும் அனுமதிக்காது. கட்சிக்குள் இருந்து கொண்டு பலவிதமான கேள்விகளை எழுப்பலாம் கருத்துரைக்கலாம். கட்சி செய்வது தவறு என்று கூறலாம். இவை செவிமடுக்கப்படும். ஆனால், இறுதியில் ஒரு தீர்மானத்தைக் கட்சி எடுத்தால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவில்லாமல் பேசியவர்கூட கட்சியின் தீர்மானத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும். வெளியே போய் நின்று கொண்டு நான் இதனை எதிர்த்தேன். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்வது முறையற்ற செயற்பாடு. கட்சி கட்டுப்பாட்டோடு இயங்காது விட்டால், அது ஒரு கட்சி அல்ல. கட்சி ஒரு கொள்கையை அறிவித்தால் இல்லை அதனை நான் ஏற்கமாட்டேன் என்றால், அவர் வேறு கட்சிக்குப்போக வேண்டும். இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இந்த விடயத்தில் எமது மத்தியக் குழுவும் செயற்குழுவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்சியின் தீர்மானம். கொள்கைக்கு மாறாக, செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அவர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியாகக்கூட நிவாரணம் எதுவும் கிடைக்காது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனவே, கட்சி ஒழுக்கக் கட்டுப்பாடு காரணமாக நடவடிக்கை எடுக்கும்போது, எந்த நீதிமன்றமும் அதில் தலையிடாது. ஆகவே, எதையும் செய்து விட்டு கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு நான் இணங்க மாட்டேன். இது என்னுடைய சுதந்திரம், நான் இன்னொரு வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொல்லி நடப்பவர் கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால், வழக்கம் போலவே சிறீதரனின் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாமை, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறீதரனிடம் தோற்றதுபோலவே இந்த சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டிலும் இந்த பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலையே உள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரிய-தலைகள்-தோற்றுப்போகும்-நிலை/91-362524
2 months 1 week ago
மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-காற்றாலை-திட்டத்தை-இடைநிறுத்த-தீர்மானம்/175-362550
2 months 1 week ago
பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவியது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை,ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.[ https://newuthayan.com/article/பனை_மரங்களுக்கு_தீ_வைத்த_விஷமிகள்!
2 months 1 week ago
திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது நேற்றையதினம் (07) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றுவரை முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிரான_போராட்டம்!
2 months 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 months 1 week ago
அந்த அய்யாவுக்கு ...இதை ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்பிடுங்க சாமி
2 months 1 week ago
இணுவில் இப்போது நல்ல முன்னேற்றம் போல் உள்ளது.
2 months 1 week ago
இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமைச்சரே, மேலும் பல நாடுகளுக்கும் இலவச விசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கையரசு. இலவச விசாவை காட்டி சுற்றுலாப்பயணிகளைஅழைத்து, கல்லாப்பெட்டியை நிரப்புவதற்காக. எங்கே நீங்கள் இலங்கை அரசோடு இணைந்து தமிழரை நசுக்கினீர்களோ, அவ்வாறே உங்களுக்கு எதிராக இஸ்ரேலோடு இலங்கை இணைந்துவிடுமோ என அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். இலங்கையே யுத்தக்குற்றவாளிகள் பிறந்த, நிறைந்த நாடு. இதில இவர் வேற புனித நாடு போல கதையளக்கிறார். எல்லோருக்கும் சப்பித்துப்புவதற்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். சிங்கள கிறிஸ்தவர்களை சொல்லப்பயம். ஏன் நீங்கள் அழுத்தங்களை கொடுப்பது? தமிழருக்கு சமஉரிமை வழங்கக்கூடாது என்பதற்காக சகல ஒத்துழைப்புகளையும் வழங்கினீர்கள். உங்களுக்குத்தான் அதிக பலம், உரிமை இருக்கிறது கேட்பதற்கு கேட்டுப்பாருங்கள். இப்போ புரியும், தமிழர் ஏன் போராடினார்கள் என்பது. உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே வரப்போவதில்லை கூப்பாடு போட்டுப்பாருங்கள், போராடிப்பாருங்கள் என்ன பதில் கிடைக்கிறது என அறிய ஆவல்! சும்மா சுற்றுலா வருபவர்களை நிரந்தரவாசிகளாக்கப்போகிறார்கள் கூப்பாடு போட்டு.
2 months 1 week ago
இவரும் வெகு விரைவில் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்படலாம். உண்மையை எதிர்கொள்ள பயம், அதனால் உண்மையை வெளிக்கொணர்பவர்களை அச்சுறுத்துவது. அடக்கி ஒடுக்கினாலும் உண்மை வீறு கொண்டு எழும் என்பதற்கு இந்த மனித புதைகுழிகள் சான்று.
2 months 1 week ago
எதிரிகள் கையிலெடுக்கும் இறுதி ஆயுதம் இது. நாட்டில் தமிழருக்கெதிரான அடக்குமுறையில் குளிர் காய்ந்த, காய காத்திருக்கும் கூட்டம் பதட்டமடைந்திருக்கு.
2 months 1 week ago
முஸ்லீம் மக்கள் சார்பாக போராட போகின்ற போது DJ Tom Monagle யும் கூட்டி கொண்டு போங்கோ நல்லாக கூவுவார்
2 months 1 week ago
முதலில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இந்த சமுக அக்கறை தொடங்க வேண்டும்
2 months 1 week ago
வகுப்பு எடுத்து ,கட்டுரை வரைந்து ,யூ டியுப் போட்டு தமிழ் அரசியலை இல்லாமல் பண்ணிபோடுவினம் சிலர்...
2 months 1 week ago
ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு August 7, 2025 6:53 pm ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார். குறித்த பதிவு, ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், ஒரு பெண் மற்றும் ஜனாதிபதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் படங்கள் மற்றும் பிற பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாகக் கூறினார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்தப் புகாரைப் பதிவு செய்ததாகவும், இந்தச் செய்தி மற்றும் தொடர்புடைய தகவல்களைப் புகாரளித்த சமூக ஊடகக் கணக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rumor-linking-the-president-with-a-woman-complaint-filed-with-cid/
2 months 1 week ago
ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச் சிதைவது. முன்னையது ஆரோக்கியமானது என்றால், பிந்தியது, பின்னடைவைத் தரக்கூடியது. பாதகமானது. ஏனென்றால், இங்கே நிகழ்ந்திருப்பது, சிந்தனையின் முதிர்வினாலான வெவ்வேறு நிலைப்பாடுகள், போக்குகள், பரிமாணங்கள், பரிணாமங்கள் அல்ல. இவை தனிநபர் மற்றும் அணி முரண்பாடுகளினால் உருவான முனைப்புகள். எனவே இதை நாம் சிதைவின் முனைப்பு என்றே சொல்ல வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாக ஈழத் தமிழரின் அரசியல் இப்படியிருக்கவில்லை. அப்பொழுதும் மாற்றுத் தரப்புகள், பிற அரசியற் போக்குகள் இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியக் கட்சிகளுக்கான ஆதரவு எனப் பல முனைகளும் முனைப்புகளும் இருந்தன. இருந்தாலும் தமிழரசுக் கட்சி பின்னாளில் அதனுடைய வழித்தோன்றலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவையே பெருந்திரள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. தமிழ்த்தரப்பாகவும் அவையே கருதப்பட்டன. இன்னொரு நிலையில் 1980 களில் 30 க்கு மேற்பட்ட ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்ததையும் நினைவு கொள்ளலாம். ஆனால், அப்படியெல்லாம் இருந்தது பல சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக வெளியே தோன்றினாலும், நடைமுறையில் அவை தம்முள் குறுகிச் சிறுத்து, சிதைவை உள்மையமாகவே கொண்டிருந்தன. என்பதால்தான் எந்த இயக்கமும் வரலாற்றில் நிலைகொள்ள முடியாமல் போனது. மட்டுமல்ல அவை அனைத்தும் பெருந்திரள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தவுமில்லை. அப்படித்தான் முன்னரும் பிற தரப்புகள் – மாற்று அரசியல் தரப்பினர் போன்ற சக்திகளும் மக்களிடம் பேராதரவைப் பெறவில்லை. நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அத்தகைய மாற்று அரசியல் செல்வாக்குப் பெறவில்லை. அதாவது, அவற்றின் உள்ளடக்கச் செழுமைக்கு ஏற்றவிதத்தில் மக்களிடம் அவை செல்வாக்கைப் பெறத்தவறின. என்பதால், தமிழ்த்தேசிய நிலைப்பட்டிருந்த அல்லது ‘ஏகப்பிரதிநிதித்துவம்’ என்றுசொல்லப்பட்ட ‘தமிழ்த்தேசியவாத அரசியல்’தான் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. புலிகளின் காலத்திலும் புலிகளுக்குப் பின்னும் கூட இந்த நிலைமையே நீடித்திருந்தது. ஆக, நீண்ட காலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட (ஏகநிலைப்பட்ட) அரசியலே ஈழத் தமிழர்களுடையதாக இருந்தது. அது முற்போக்கானதோ பிற்போக்கானதோ என்பதற்கு அப்பால் இதுதான் உண்மையான நிலைமையாகும். இந்த நிலையில் தற்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த்தேசியவாத அரசியல் இப்பொழுது சிதறுண்டுள்ளது. சிதறுண்டுள்ளது என்பதன் பொருள், தலைமைத்துவக் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அல்லது தலைமைத்துவக் கடப்பாட்டை இழந்து நிற்கிறது. அதனால் பல அணிகள்,குழுக்கள் எனப் பிளவுண்டு சிதைந்திருக்கிறது. கருத்து நிலையில் மட்டுமல்ல, அணுகுமுறைகளில், செயற்பாடுகளில், கட்டமைப்புகளில் எல்லாம் இந்தப் பிரிவையும் பிளவையும் அவதானிக்கலாம். தமிழ் இனத்துவ அடையாள அரசியலை 1970 க்கு முன்னர் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் அடுத்தடுத்துத் தலைமை தாங்கினர். சரி பிழைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரையும் ஏற்றுச் செல்கிற போக்கு அரசியற் தரப்பினரிடத்திலும் இருந்தது. தமிழ்ச்சமூகத்திடமும் இருந்தது. பிறகு இதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுவீகரித்துக் கொண்டார். 2009 வரையில் தன்னைத் தமிழ்த் தேசியவாதத்தின் தலைமைச் சக்தியாக ஸ்தாபித்து வைத்திருந்தார் பிரபாகரன். 2009 க்குப் பிறகு, புலிகளின் வீழ்ச்சியோடு இந்த நிலை சிதையத் தொடங்கியது. புலிகளின் வீழ்ச்சியோடு நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் புலிகளை ஆதரித்த சக்திகள் பிளவு பட்டன. ஆனாலும் இலங்கைச் சூழலில் நிலவிய அரசியல் நெருக்கடிகள், ஆட்சித்தரப்பினரின் இறுக்கமான போக்குகளால் தமிழ்த்தேசியவாதம் என்ற அடையாளமும் அதற்கான கட்டமைப்பும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) மெல்லிய அளவிலேனும் பேணப்பட்டது. இதற்கு ஒரு எல்லைவரை, தளம்பல்களுடன் சம்மந்தன் தலைமை தாங்கினார். சிதைவுகளைக் கட்டுப்படுத்தி, மீளமைப்பை அல்லது ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடிய அளவுக்கு அவருடைய தலைமைத்துவம் கடப்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், அந்தக் கட்டமைப்பும் (கூட்டமைப்பும்) பின்னாளில் சிதைவடையத் தொடங்கியது. இதனால் தமிழ் அரசியல் பரப்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளும் அணிகளும் படபடவெனத் தோற்றம் பெற்றன. எல்லா இடங்களிலும் பல அணிகளும் கட்சிகளும் உருவாகின. முன்னெப்போதும் இல்லாத ஒரு வளர்ச்சியாக கிழக்கில், கிழக்கு மைய அரசியற் சிந்தனையும் அரசியற் சக்திகளும் தலையெடுத்தன. வடக்கிலும் பல கட்சிகள் உதயமாகின. இப்பொழுது தமிழ்த்தேசிவாத அடையாளத்தைச் சுமந்தபடி 12 க்கு மேற்பட்ட கட்சிகள் இலங்கையில் உண்டு. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் இதை விட அதிகமுண்டு. அங்கே இமாலயப் பிரகடத்தினர் ஒன்றாகவும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்போர் ஒன்றாகவும் பிரபாகரன் இறந்து விட்டார் என்போர் இன்னொன்றாகவும் நாடு கடந்த தமிழீழத்தினர் வேறொன்றாகவும் எனப் பல அணிகள். இவ்வாறு பல முனைகளில், பல நிலைப்பட்டதாக, பல அணிகளாக, குழுக்களாக சிதைவடைந்த தமிழ்த் தேசியவாத அரசியலில் மிஞ்சியிருப்பது வெறும் பிரகடனங்களும் வரட்சியான அரசியல் போக்குமே. இவற்றில் எந்த ஒரு தரப்பிடமும் செயற்திறனும் புத்தாக்கச் சிந்தனையும் இல்லை. எல்லாம் ஒன்றை ஒன்று நிராகரிப்பதிலும் அதற்கான காரணங்களைத் தேடுவதிலும் குறியாக உள்ளனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைப்படுத்துவதைப்பற்றிச் சிந்திப்பனவாக இல்லை. மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட அரசியலை எத்தகைய அடிப்படையில் வெற்றியடையச் செய்யலாம் என்று முயற்சிப்பதாகவும் கடந்த காலப் படிப்பினைகளிலிருந்தும் உலக அரசியல் போக்கிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஏனென்றால், சிதைவில் உருப்படியானவற்றை எதிர்பார்க்க முடியாது. சிந்தனையினால் வேறுபடும் நிலை இருந்தால்தான் வித்தியாசங்களும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் வளர்ச்சிப் போக்கும் காணப்படும். இங்கே நிலவுவது தனிநபர் அல்லது அணி வேறுபாடுகள், போட்டிகள் என்பதால் இவற்றுக்கிடையே காழ்ப்பும் அதனடியான குழிபறிப்புகளும் அதற்கான பழித்துரைப்புகளுமே மிஞ்சியிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். என்பதால்தான் ஒவ்வொரு அணியும் மறு அணியை நிராகரிக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை இழக்காரம் செய்கிறது. அப்படித்தான் புலம்பெயர் சூழலிலும் ஏட்டிக்குப் போட்டியும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் நடக்கிறது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்திய சமூகம், அதற்காகப் பல்லாயிரக் கணக்கானோரைப் பலி கொடுத்த (தியாகம் செய்த) ஒரு இனக்குழாம், தன்னுடைய அரசியல் பின்னடைவைக் குறித்தோ, பாதிப்பைக் குறித்தோ, தோல்வியைக் குறித்தோ சிந்திக்காமல், வெற்றி பெறுவதைப்பற்றி எண்ணாமல், இப்படிச் சிதைந்து கொண்டிருப்பது அதனுடைய நிரந்தர அழிவுக்கே இட்டுச் செல்லும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இந்தப் போக்கின் உச்சமாகவே புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சுவிற்சர்லாந்தில் இந்த ஓகஸ்ட் மாதத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அஞ்சலி செலுத்தக் கூடாது என்ற எதிர்ப்பும் வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பகிரங்கமாகவே மோதுகின்றன. இந்த மோதுகை அர்த்தமற்றது மட்டுமல்ல, காலம் கடந்த ஒன்றுமாகும். 16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது. ஒரு தரப்பு 13 ஆவது திருத்தம் – மாகாணசபையிலிருந்து மேலே போவோம் என்கிறது. இன்னொரு தரப்பு மாகாணசபையைப் பற்றிய பேச்சே எடுக்கக் கூடாது என்கிறது. இதனால் யாருக்கு லாபம்? எதிர்த்தரப்புக்குத்தானே! இப்படியே பிளவுண்ட – எதிரெதிரான – முரண்பட்ட போக்கினால் பலமடைவது நிச்சயமாக எதிர்த்தரப்புகளேயாகும். நிச்சயமாக மக்களல்ல. எதிர்த்தரப்புகள் பலமடையும்போது இந்தத் தரப்புகள் பலவீனப்படுகின்றன. இந்தத் தரப்புகள் பலவீனப்படும்போது இவற்றை ஆதரிக்கும் மக்களும் பலவீனப்படுகிறார்கள். தமிழ் (தேசியவாத) அரசியலின் நிலையும் தமிழ் மக்களின் நிலையும் இன்று இதுதான். ஆனாலும் இதையிட்ட கவலைகளோ, மீள்பார்வையோ, குற்றவுணர்ச்சியோ இந்தத் தரப்புகள் எவற்றிடமும் இல்லை. தமிழ் ஊடகப்பரப்பு, சிந்தனைப் பரப்பு போன்றவற்றிலும் இல்லை. அல்லது போதாது. காரணம், மக்களுக்கான அரசியலை செய்வதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தால்தானே அதில் உள்ள சிக்கல்கள், தவறுகள், முரண்பாடுகள், போதாமைகள் பற்றியெல்லாம் தெரியும். இவை செய்து கொண்டிருப்பதோ தனிநபர் அல்லது அணி அல்லது குழு அல்லது கட்சி அரசியல் மட்டுமே. என்பதால் அதற்கான, அதற்கு அளவான அளவில்தான் இவை சிந்திக்கின்றன. அந்தளவில்தான் இவர்களால் – இவற்றில் சிந்திக்க முடிகிறது. எனவேதான் தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று சிதைந்து பலவீனப்பட்டுள்ளது என்கிறோம். இதை மாற்றிப் புதிதாகச் சிந்திக்க வேண்டுமானால், உலகளாவிய அரசியல் மாற்றங்கள், தேசியவாத அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்கள், அதனுடைய வளர்ச்சி, பிராந்திய அரசியல் சூழல், உலகளாவிய பொருளாதாரப் போக்குகள், உள்நாட்டு நிலைவரம், மக்களின் நிலைமை, பின்போர்க்காலச் சூழல், ஜனநாயக அடிப்படைகளைப் பேணும் அக்கறை எனப் பலவற்றிலும் விரிவு கொள்ள வேண்டும். அதற்கான உள நிலை முக்கியமானது. தனிநபர் முதன்மைப்பாடு, கட்சி நலன், குழு மனோபாவம் போன்றவற்றைப் பேணிக் கொண்டு இவற்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது மக்கள் நலன் அரசியலை முன்னெடுக்கவும் ஏலாது. இரண்டும் எதிரெதிர் துருவங்களாலானது. ஆகவே, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான ஒழுக்கத்துக்கு – முறைமைக்கு – தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்போதையும் விட மோசமான பின்னடைவையே தமிழ் அரசியலும் தமிழ்ச் சமூகமும் சந்திக்கும். இது எச்சரிக்கைதான். https://arangamnews.com/?p=12244
2 months 1 week ago
07.08.2025 நேரம் இரவு 9.30 மணி #####...மன்னாரின் கனிய மணலகழ்வு...எங்கள் மக்களைச் சூழவுள்ள பேராபத்து...###### மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது. மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற் மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள் மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. மன்னார் தீவு 26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. தாழ்வுப்பாடு எழுத்தூர், சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்) விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின் கனியமணல் அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும். அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும். இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும். ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது; 1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும். 4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது. அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது தொடர்பாக உங்களுக்கு தேவைப்படும் புவியியல் சார்ந்த ஆலோசனைகளை எப்பொழுதும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். உங்களோடு இருப்பேன். ( இந்த கனிய மணல் அகழ்வோடு தொடர்புபட்ட அரசியல் மற்றும் பொது வெளியில் பகிர முடியாத பல விடயங்களை தவிர்த்தே இந்தப் பதிவினை எழுதியுள்ளேன் என்பதனைக் கருத்தில் கொள்க). - நாகமுத்து பிரதீபராஜா - https://www.facebook.com/Piratheeparajah
2 months 1 week ago
இளமைக் கவிதைகள் இறக்கை விரிக்கின்றன .......... நல்லாஇருக்கு ......... ! 👍
2 months 1 week ago
சசிகாந்த செந்தில் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த மக்களவை உறுப்பினர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. அண்மையில் வடகரோலினாவில் நடந்த FeTNA ஆண்டு விழாவில் இவரது பேச்சைக் கேட்டேன். உலகில் வலதுசாரிகள் ஆட்சி ஏன் ஓங்கி வருகிறது என்பது பற்றிப் பேசினார். மிக அருமையான உரை. "சாதாரண மக்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம், இந்த வலது சாரிகளுக்கு எதிராகப் பேசாமல் இருப்பது தான்" என்று கூறியிருந்தார், அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. அந்த உரையிலும், ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள், அது இன்னும் தொடர்கிறது என்று பேசியிருந்தார்.
Checked
Tue, 10/21/2025 - 01:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed