புதிய பதிவுகள்2

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
Crush of large crowd at rally for Indian actor-politician Vijay leaves at least 31 dead, over 50 injured. Reuters — At least 31 people were killed and more than 50 injured on Saturday at a rally held by Tamil actor Vijay, who is campaigning for election, state officials said. “Thirty-one people died with more than 50 people now hospitalized,” said V. Selvaraj, a senior police official in the district of Karur in Tamil Nadu, where the incident occurred. Large crowds had gathered for the meeting, part of Vijay’s ongoing state tour for his political party Tamilaga Vettri Kazhagam. Vijay, who is a well-known actor and goes by only one name, launched a political party last year and began campaigning this month ahead of state elections that are to be held early next year. State lawmaker Senthil Balaji told reporters that 58 people were hospitalized after what he said was a stampede. He added that Tamil Nadu Chief Minister MK Stalin will visit the area on Sunday. “The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening,” Prime Minister Narendra Modi said in a post on X. Calls to Tamil Nadu state’s health ministry and Tamil Nadu Chief Minister MK Stalin’s office went unanswered. “The news coming from Karur is worrying,” Stalin said in an X post, adding that he had directed ministers and officials to provide urgent medical aid to those who collapsed at the Karur rally and ordered additional assistance from nearby Tiruchirappalli. https://www.cnn.com/2025/09/27/india/india-actor-politician-vijay-rally-intl

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
தொடர்ந்தும் கூடும் சனத்தை பார்த்த பிறகும் - ஊர் மத்தியில் தரும் இடத்தை ஏற்று கொண்டதன் மூலம் - விஜை தனக்கு தானே ஆப்பு வைத்துள்ளார். இது அவரினதும், அவரை சூழ உள்ளோரதும் அரசியல் முதிர்ச்சி அற்ற நிலையையே காட்டுகிறது. இதில் ஏதேனும் சதி இருக்கலாம் இல்லை என்றாலும்….போன 2 சனிக்கிழமை கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும் பொலிஸ் 100 அடி வீதியை கொடுத்தது - இதை எதிர்பார்த்தே செய்தார்கள் என்றே நினைக்க வைக்கிறது. விஜை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் அரசியல் ஒவ்வொரு அடியாக அழிவை நோக்கி போகிறது. விரைவாக வெளியே வந்து, பேட்டி கொடுத்து ஆவன செய்ய வேண்டும். முதலாவது மன்னிப்பு. இரெண்டாவது நட்டைஈடு, உறவினருடன் ஆறுதல். மூன்றாவது - இதில் சதி இருப்பதாக சந்தேகிக்கின் சிபிஐ விசாரணை நேரா அமிதாஷாவிடம் கோர வேண்டும். பிகு திமுக, அதிமுக, பாஜக வை தாண்டி ஒரு மாற்று சக்தி வரமுயன்றால் இப்படித்தான் அடக்குவார்கள். சும்மா மேசையில் வாய் கிழிய கத்திவிட்டு, பெட்டி வாங்கும் அரசியல்வாதிகளை விட்டுவிடுவார்கள். ஆனால் விஜை திமுகவின் அடித்தளத்தை அசைக்க முயன்றார். அதற்குத்தான் இந்த எதிர்வினை. ஆனால் திமுகவை எதிர்பதாக சொல்லும் பலர் - விஜையை போட்டு துவைப்பதிலேயே இப்போ ஆர்வம் காட்டுவார்கள், யாழ் களத்திலும் இதை காணலாம்😂.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
இன்று காலையில் டென்மார்க் அக்காவுடன் கதைத்து கொண்டு இருந்தபோது அவர் தொலைக்காட்சியில் விஜயின் இந்த பிரச்சார கூட்டத்தை பார்த்து கொண்டு இருந்தார். என்ன சனமடாதம்பி என்றார். கண்ட கண்ட இடங்களில் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது தான் விஜய்க்கு ஆப்பாக முடியும் என்று சொன்னேன். நடந்திருக்கிறது. மோடன். இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த மனமில்லை. பைத்தியங்கள்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்ளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றிரவே கரூர் மாவட்டத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிடவிருக்கிறார். திமுக அடித்து ஆடுகிறது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
இதுவரையில் 35 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள்.சினிமா மோகம் அடுத்து அரசியல்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
கவலையான செய்தி. அநியாயமாக இறந்த 29 உயிர்கள். இப்பிடியான சன நெரிசல் மிகுந்த இடங்களுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்வதை தவிர்க்க வேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்.

இலஞ்சம், ஊழலுடன் தொடர்புடைய பொது சேவைகளில் முதலிடத்தில் பொலிஸ் - இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்

2 weeks 2 days ago
27 Sep, 2025 | 05:02 PM (எம்.மனோசித்ரா) இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸார் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாணசபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகம், பதிவாளர் நாயக அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன. மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவை இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய முதல் 10 நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 5 பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது சுங்க திணைக்களம், இரண்டாவது உள்நாட்டு வருமான திணைக்களம், கலால் வரி திணைக்களம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பன முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் பண சுத்தீகரிப்பிற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுகின்றன. எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஊழல், மோசடிகு ஏதுவான காரணிகளாக மக்கள் கூறியவற்றில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கமைய நாட்டில் சட்டம், அமைதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, மோசடி கலாசாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளமை, அரச சேவையில் வழங்கப்படும் மிகக்குறைந்த சம்பளம், இலஞ்சம் , ஊழல் தொடர்பில் மக்கள் உரிய நடவடிக்கை எடுக்காமை என்பனவாகும். எனவே இவற்றை இல்லாதொழிப்பதறக்கான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/226254

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks 2 days ago
ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4இல் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 4ஆவது இலங்கையரானார் நிஸ்ஸன்க Published By: Vishnu 27 Sep, 2025 | 12:48 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. இலங்கையும் இந்தியாவும் ஒரே எண்ணிக்கையை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை 2 விக்கெட்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அர்ஷ்தீப் சிங் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பதிலுக்கு சப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஒரே பந்தில் 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் கன்னி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 58 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 107 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் முழு கிரிக்கெட் உலகிலும் மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 28ஆவது வீரரானார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 3ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களை பகிர்ந்தார். அவர்கள் இருவரை விட தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் மற்றைய வீரர்கள் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறினர். இந்த வருட ஆசிய கிண்ணத்தில் இந்தப் போட்டிpல் விளையாடிய ஜனித் பெரேரா ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அபிஷேக் ஷர்மா மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆசிய கிண்ணத்தில் தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட திலக் வர்மா 49 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 39 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/226205

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 weeks 2 days ago
கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசல்; 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழப்பு! மிகவும் கவலையான செய்தி!கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளை வரவேண்டாம்அழைத்து வர வேண்டாம். என்று தவெக அறிவித்திருந்தும் அவர்கள் போனது விஜையின்தவறல்ல.திமுக இதை சாதகமாகப் பயன்படுத்தும்.இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks 2 days ago
பங்களாதேஷை வீழ்த்தி ஆசிய கிண்ண இறுதியில் இந்தியாவை எதிர்த்தாட பாகிஸ்தான் தகுதி பெற்றது Published By: Vishnu 26 Sep, 2025 | 12:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (25) இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான முறையில் 11 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை பாகிஸ்தான் ஈட்டியது. இந்த வெற்றியை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிரத்தாட பாகிஸ்தான் தகுதிபெற்றுக்கொண்டது. இதற்கு அமைய பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இன்றைய சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் அதன் பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசி அந்த மொத்த எண்ணிக்கையைத் தக்கவைத்து தமது அணியை வெற்றிபெறச் செய்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷின் பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் முதல் 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஷஹிப்ஸதா பர்ஹான் (4), சய்ம் அயூப் (0), பக்கார் ஸமான் (13), ஹுசெய்ன் தலாத் (3), அணித் தலைவர் சல்மான் அகா (19) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். மத்திய வரிசையில் மொஹம்மத் ஹரிஸ் (31), ஷஹீன் ஷா அப்றிடி (19), மொஹம்மத் நவாஸ் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். மொஹம்மத் ஹரிஸ், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பாகிஸ்தான் ஓரளவு நல்ல நிலையை அடைந்தது. பின்வரிசையில் பாஹிம் அஷ்ரவ் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெஹெதி ஹசன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பாகிஸ்தானைப் போன்றே துடுப்பாட்டத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் முதலாவது ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். தௌஹித் ஹிர்தோய் (5), சய்ப் ஹசன் (18), மஹெதி ஹசன் (11), நூருள் ஹசன் (16) ஆகியோர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. பதில் அணித் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஜாக்கர் அலி களம் புகுந்த சற்று நேரத்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது பங்களாதேஷுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. மத்திய வரிசை வீரர்களான ஷமின் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன் சக்கிப் ஆகிய இருவரும் பங்களாதேஷை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், ஷமின் ஹொசெய்ன் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது விக்கெட்டை அனுபவசாலியான ஷஹீன் ஷா அப்றிடி வீழ்த்தியதும் பங்களாதேஷின் இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவத் தொடங்கியது. தொடர்ந்து தன்ஸிம் ஹன் சக்கிப் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். மத்திய பின்வரிசையில் ரிஷாத் ஹொசெய்ன் கடுமையாகப் போராடி 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/226090

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

2 weeks 2 days ago
மூன்றாவது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்! 27 Sep, 2025 | 05:04 PM இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்து தமிழின அழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை (27) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. வலிந்து காணமால் ஆக்கபட்பவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணா விரத போராட்டத்தில் மன்னார் மாவட்ட காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள், இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர் வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226255

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 weeks 2 days ago
அதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் அப்படி நம்பவில்லை. விஜை தனித்து நின்றால் ஒரு சீட் 10-15% வாக்கு என்பதே என் தற்போதைய கணிப்பு. A week is a long time in politics என்பார்கள். 7 மாதத்தில் என்னவும் நடக்கலாம். கரூர் மரணங்களை விஜை எப்படி எதிர் கொள்கிறார் என்பது அவரின் அரசியலுக்கு வாழ்வா, சாவா கேள்வி. ஆனால் 2026 இல் அதிபர் ஆட்சி அமைப்பது உறுதி😂.

'வெடிக்கும் இரும்பு அரக்கன்': காஸாவில் பீதி ஏற்படுத்தும் இஸ்ரேலின் 'ரோபோ' ஆயுதம்

2 weeks 2 days ago
பட மூலாதாரம், Anadolu via Getty Images கட்டுரை தகவல் அத்னான் எல்-பர்ஷ் பிபிசி அரபிக் மர்வா கமால் பிபிசி அரபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது." காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார். தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "இந்த ரோபோக்கள், இனி பயன்படுத்த முடியாத பழைய டாங்கிகள் அல்லது கவச வாகனங்களாக இருக்கலாம்," என்று அல்-கூல் கூறினார். "அவற்றைக் கொண்டு சென்று, வெடிபொருட்களால் நிரப்பி, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி காஸா நகரத்தின் தெருக்களில் செலுத்துகிறார்கள்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "குறிப்பிட்ட பகுதியில் அவை வைக்கப்பட்ட சில நிமிடங்களில், ஒரு பெரும் வெடிப்பு நிகழ்கிறது." என்று அவர் கூறினார். "வெடிப்பு நடந்த இடத்தில் மக்கள் இருந்தால், அவர்களின் எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படாது. உடல் பாகங்கள் கூடச் சிதறிவிடும், அவற்றை முழுமையாக எங்களால் கண்டுபிடிக்க முடியாது," என்று காஸாவில் போரில் பலியானவர்களின் உடல்களை மீட்க அவ்வப்போது தன்னார்வத் தொண்டு செய்யும் அல்-கூல் கூறினார். வெடிப்பு எவ்வளவு அருகாமையில் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து கட்டடங்கள் முழுமையாக இடிந்து அல்லது சேதமடைந்து விடுகின்றன. இதனால் இஸ்ரேல் படைகள் அப்பகுதியைக் "அழிக்கும் நடவடிக்கையை" மேற்கொள்ள எளிதாகிறது என்றும் அல்-கூல் கூறினார். பேரழிவின் விளைவுகளை நேரில் கண்ட அவர், "முழு குடும்பங்களும் அழிந்துவிட்டன" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். அழிவின் வரம்பு 300 முதல் 500 சதுர மீட்டர் வரை இருப்பதாக கூறிய மூன்று பேருடன் நாங்கள் பேசினோம். "இவை வெடிக்கும்போது குடும்பங்கள் வீட்டில்தான் இருக்கின்றன, அவர்களின் வீடுகள் அவர்கள் மீது இடிந்து விழுகின்றன. அல்-ஜைதூன், ஷேக் ராத்வான் மற்றும் ஜபாலியா போன்ற பகுதிகளில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்." ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் (ஜிஎம்ஓ) செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் குறைந்தது 1,984 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஎம்ஓ வெளியிட்ட ஓர் அறிக்கையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் போர் விமானங்கள் மூலம் 70-க்கும் மேற்பட்ட நேரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும், கூடுதலாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்பட்டன என்றும், இது பரவலான கட்டாய இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வெடிப்புகளின் தாக்கம், 70 கி.மீ தொலைவில் உள்ள டெல் அவிவ் நகரத்திலும் உணரப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் இந்த ஆயுதங்களைச் பொதுமக்கள் மீது பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க, பிபிசி நியூஸ் அரபி, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அவிசாய் அட்ராய்-ஐ தொடர்பு கொண்டது. அட்ராய் பிபிசி-யிடம், "நாங்கள் செயல்பாட்டு முறைகள் குறித்து விவாதிப்பதில்லை. ஆனால், எங்கள் நோக்கங்களை அடையவும், ஹமாஸ் பயங்கரவாதிகளை அகற்றவும், இஸ்ரேல் வீரர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம், அவற்றில் சில மிகவும் புதுமையானவை மற்றும் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார். பேரழிவு ஏற்படுத்தும் வெடிப்பு காஸா நகரம், இஸ்ரேலிய ஆயுதங்களைச் சோதிக்கும் களமாக மாறியுள்ளதா என மற்றொரு காஸா நகரவாசியான நிதால் ஃபவ்ஸி கேள்வி எழுப்பினார். இந்த ரோபோக்கள் "குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்துகின்றன, மேலும் மக்களைத் தப்பி ஓடச் செய்கின்றன" என்று கூறினார். ஒரு முந்தைய ராணுவ நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக அவர் பிபிசி-யிடம் தெரிவித்தார். "நள்ளிரவு நேரம். ஒரு ராட்சத, செவ்வக வடிவ 'ரோபோ' ராணுவ வாகனத்தால் இழுத்து வரப்படுவதைப் பார்த்தேன். அதை ஒரு சுவரின் அருகில் விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். எனது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறும்படி நான் கத்தினேன். நாங்கள் தப்பி ஓடிய சில நிமிடங்களில், நான் இதற்கு முன் கேட்டிராத ஒரு வெடிப்பு நிகழ்ந்தது." இந்த வெடிப்பு பேரழிவை ஏற்படுத்துவதாக ஃபவ்ஸி கூறுகிறார். "அல்-ஜைதூன் பகுதியில், உடல் பாகங்கள் மிகச் சிறிய துண்டுகளாகச் சிதைந்திருப்பதைக் கண்டேன். 100 மீட்டருக்கு அப்பால் இருந்த மக்கள் கூட வெடிப்பால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், மூச்சுத் திணறலாலும் இறந்தனர். இந்தப் போரில் நாங்கள் கண்ட மிகவும் பயங்கரமான ஆயுதம் இதுதான்." "வெடிப்பதற்கு முன் தப்பி ஓடிய மக்கள், 'வெடிக்கும் இரும்பு அரக்கனிடம்' இருந்து தப்பிப்பது பற்றி மட்டுமே யோசித்தனர்," என்று ஃபவ்ஸி நினைவுகூர்ந்தார். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் பலத்தீனர்களை காஸா நகரிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஏராளமானோர் அங்கேயே தங்கியுள்ளனர். ராணுவ நடவடிக்கைக்கான செலவைக் குறைத்தல் கத்தாரில் உள்ள ஜோஆன் பின் ஜாசிம் பாதுகாப்பு ஆய்வு அகாடமியின் பாதுகாப்பு நிபுணரும், முன்னர் காஸா பகுதியில் பணியாற்றியவருமான பேராசிரியர் ஹானி அல்-பசௌஸ், "ராணுவ நடவடிக்கையின் செலவைக் குறைக்கவும், இஸ்ரேலியப் படையினரின் இழப்புகளைத் தவிர்க்கவும் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வெடிகுண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறது'' என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். இவை பெரும் அளவிலான வெடிபொருட்களைக் கொண்டு செல்கின்றன என்றும், சுரங்கங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் பயன்படுத்தப்பட்டு, பெரும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு, காஸா நகரத்தின் கிழக்கில் உள்ள ஒரு பல மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக காஸாவைச் சேர்ந்த கரீம் அல்-கரப்லி பிபிசி-யிடம் தெரிவித்தார். "நான் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்தேன், இருப்பினும், அனைத்து சிதறல்களும், கற்களும் எங்கள் வீட்டை வந்தடைந்தன," என்று அல்-கரப்லி நினைவு கூர்ந்தார். "வானம் சிவப்பாக மாறியது மற்றும் ஒளி கண்களைப் பறித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது." பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முனீர் அல்-பர்ஷ், இஸ்ரேலிய ராணுவம் இப்போது காஸா நகருக்குள் இந்த வெடிக்கும் 'ரோபோக்களை' தினசரி நம்பியுள்ளது என்றும், இது "பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றும் மனிதாபிமானப் பேரழிவை மோசமாக்கும் ஒரு உத்தி" என்றும் கூறினார். ஒவ்வொரு ரோபோவும் ஏழு டன் வெடிபொருட்களைக் கொண்டு செல்கிறது என்றும், தினசரி ஏழு முதல் பத்து ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார். இது பெரிய அளவிலான இடப்பெயர்வுக்கு வழிவகுத்து, மேற்கு காஸாவில் மக்கள்தொகை அடர்த்தியை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 60,000 பேராக அதிகரித்துள்ளது என்று முனீர் அல்-பர்ஷ் கூறினார். *காஸாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் படங்கள் அல்லது வெடிப்புக்குப் பிந்தைய உடனடிப் படங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள், இஸ்ரேலின் சமீபத்திய காஸா நகரத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2z1kyn8zlo

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
உயிரிந்தோருக்கு அஞ்சலிகள். டிவி நேரலையை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம் - சமீபத்திய தகவல் 27 செப்டெம்பர் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கிடையே கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மருத்துவனைக்கு வந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மீ. தங்கவேல், "கரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது வேறு எதுவும் கூற முடியாது" எனக் கூறினார். கரூர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாது, ஒரு தனியார் மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. தமிழக அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@mkstalin இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார். "கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்." என்று கூறியுள்ளார். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து மருத்துவ குழு கரூர் செல்கிறது. அதேபோல நானும் இன்று இரவு கரூர் செல்கிறேன்" என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2j4nx9pyxo

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks 2 days ago
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்! Halley KarthikUpdated: Saturday, September 27, 2025, 20:52 [IST] கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். டிஸ்கி செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா? இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள். என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

2 weeks 2 days ago
பொலிஸ் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி : மக்கள், அருட்தந்தையர்கள் மீது பொலிஸார் தாக்குதல்! 27 Sep, 2025 | 06:16 AM ( மன்னார் செய்தியாளர் ) மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி கொண்டு வெள்ளிக்கிழமை (26) இரவு முதல் இன்று (27) அதிகாலை வரை வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தினர். கலகம் அடக்கம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது . இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. மன்னாரில் நேற்று (26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர். மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றது. இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னனியில் ஜனாதிபதி மக்களின் எதிர்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை (26) இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது . அதனை தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிப்பாகங்களை கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/226209

இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் ஆரம்பம்

2 weeks 2 days ago
Published By: Vishnu 27 Sep, 2025 | 01:59 AM இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் இன்று, 2025 செப்டம்பர் 26, அன்று அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகியது. இந்த மத நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ருவன்வெலி மகா சேய முன்பிருந்து ஆரம்பமாகிய இராணுவக் கொடிகளை ஏந்திய ஊர்வலம், ஜய ஸ்ரீ மஹா போதிக்குச் சென்று அங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றது. இந்த மதச் சடங்குகள் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்றன. மேலும் இராணுவக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் வளாகத்தில் இராணுவத் தளபதியின் தலைமையில் இந்து மத சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்கள் சிகிச்சை பெறும் நல விடுதியான 'அபிமன்சல 1' நலவிடுதியினை சிறப்பு விஜயம் மேற்கொண்டு அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/226208
Checked
Tue, 10/14/2025 - 09:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed