“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)
“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)
எழுபத்தெட்டு ஆண்டுகள் கொடியேறி நிற்கிறது
ஆனால் எல்லோரும் தலையை உயர்த்தவில்லை
சுதந்திரம் ஒவ்வொருமுறையும் விழாவாக வருகிறது
ஆனால் நீதி மட்டும் வாசலில் நின்றுவிடுகிறது!
வாக்களிக்க சுதந்திரமாம், தேசியகீதம் பாட சுதந்திரமாம்
அனுமதிக்கப்பட்டதை நினைவில் கொள்ள சுதந்திரமாம்
இரத்தம் குடித்ததை, கற்பழித்ததை மறக்கச் சுதந்திரமாம்
கொடியை ஏற்றி உன்னை மறக்க சுதந்திரமாம்!
திரும்பாத காலடிகளை, மீளாத உயிர்களை
துப்பாக்கிமுனையில் பறிபோன வயல்களை, ஆலயங்களை
வரலாறுகள் மாற்றியமைத்து மறுபெயரிடவைகளை
"வளர்ச்சி”யின் போர்வையில் மறந்திட சுதந்திரமாம்!
சந்தேகம்தவிர்க்க கட்டித்தழுவும் மொழிகள் ஒருபக்கம்
தேசத்துரோகமாகும் நினைவகங்களின் வழிபாடுகள் மறுபக்கம்
கண்காணிப்புடன் பதில் அளிக்கப்படும் கேள்விகள் ஒருபக்கம்
சிறைச்சாலையால் மௌனம் ஆக்கப்படும் எதிர்ப்புகள் மறுபக்கம்!
பெண்கள் உடலில் போர்கொடுமைகளை இன்னும்சுமக்க
குழந்தைகள் சோதனைச் சாவடிகளை பயத்துடன்கடக்க
மாணவர்கள் பயத்தின் வடிவத்தை தினம்கற்றுகற்று
கீழ்ப்படிந்து தங்கள் சுதந்திரத்தை அடகுவைக்கிறார்கள்!
சட்டம் சமத்துவத்தை உறுதி அளித்தாலும்--
நீதி வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது
சில கல்லறைகள் விசாரிக்கப் படுகின்றன
சில கல்லறைகள் காப்பகப் படுத்தப்படுகின்றன
சிலவற்றை புல்டோசர்கள் உடைத்து அழிக்கின்றன!
தடுப்புக்காவலுக்கு குற்றச்சாட்டு தேவையில்லாத போது
உண்மைக்கு அனுமதி தேவைப்படும் போது
முரண்பாடு நீக்க மறப்பதைக் கோரும்போது
இதுதான் சுதந்திரமா? நெஞ்சு வலிக்கிறது!
ஆனாலும் நாங்கள் சகித்துக் கொள்கிறோம்.
சங்கிலிகள் உடைந்து விட்டதால் அல்ல
நாம் மரத்துப் போக மறுப்பதால்
நாம் நினைவுகூர்ந்து தினம் வாழ்வதால்!
நிலம் திரும்பக் கொடுக்கப்படும் நாள் எதுவோ
காணாமல் போனவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படும் நாள் எதுவோ
நினைவுகூறல் குற்றமல்ல என்று சொல்லப்படும் நாள் எதுவோ
அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்!
எல்லோரும் சட்டத்தின்முன் சமமான நாள் எதுவோ
அதிகாரம் வழிவிட்டு விலகிய நாள் எதுவோ
தொல்லியல் ஆயுதம் ஒழிந்த நாள் எதுவோ
நம்பிக்கை பலத்தால் திணிக்கப்படாத நாள் எதுவோ
அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்!
அதுவரை, இந்தநாளை பட்டாசுகளால் அல்ல
கேள்விகளால் தைரியத்துடன் நாம் புறக்கணிப்போம்
சுதந்திரத்திற்கான முடிக்கப் படாத கோரிக்கையுடன்
கருத்தக் கொடிகளை ஏற்றி வெளிப்படுத்துவோம்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
சுதந்திரம்: இன்னும் சமத்துவமற்ற ஒரு வாக்குறுதி (இலங்கை, 2026)
பிப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கை சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. கொடிகள் பறக்கின்றன, உரைகள் எதிரொலிக்கின்றன, வரலாறு ஒத்திகை பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கு - சுதந்திரம் என்பது ஒரு வாழும் யதார்த்தமாக இல்லாமல் ஒரு அரசியலமைப்பு அறிக்கையாகவே உள்ளது.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் கடந்த போதிலும், இன அடிப்படையிலான பாகுபாடு, சட்டத்தின் இரட்டை அளவுகோல்,பாதுகாப்பு பெயரில் அடக்குமுறை இன்னும் தொடர்கிறது.
நாடு அதிகாரப்பூர்வமாக இறையாண்மை கொண்டதாக இருந்தாலும், கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியால் வரையறுக்கப்படும் உண்மையான சுதந்திரம் - இன்னும் சமமற்ற முறையில் இனங்களுக்கிடையில் விநியோகிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்தவரை, போருக்குப் பிந்தைய யதார்த்தம் பின்வருவனவற்றால் குறிக்கப்படுகிறது:
இராணுவம் அன்றாட வாழ்வில் தலையிடுகிறது
தொல்பொருள் என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்படுகின்றன
இந்து ஆலயங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கின்றி நீண்டகால தடுப்புக்காவல்கள்
நினைவேந்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை கண்காணித்தல், தடைகள் போடுதல்.
போர்க்கால அட்டூழியங்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் இல்லாமை, நீதி வழங்காமை
நல்லிணக்கம் பெரும்பாலும் பேசப்படுகிறது, ஆனால் அரிதாகவே நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே மறக்கச் சொல்கிறது. அதே நேரத்தில் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு
உயர்வு கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மௌனம் ஆக்குகிறார்கள். நினைவுகூர்தல் குற்றமாக்கப்படுகிறது, ஆனால் மறுப்பு அதிகாரப்பூர்வமாக்கப்படுகிறது.
அதாவது, இறந்தவர்களை நினைவுகூருவது, உண்மையை பேசுவது அல்லது ஆதாரங்களை சேகரிப்பது சட்டவிரோதமானதாகவோ, தேசத்துரோகமாகவோ கருதப்பட்டு, அதைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது சிறைபிடிக்கப் படுகிறார்கள். அதே நேரத்தில், நடந்த கொடுமைகள், இனப்படுகொலை அல்லது வன்முறையை அரசு நிறுவனங்கள், அரசமைப்பு, அதிகாரிகள் அல்லது வரலாற்றாசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக மறுக்கிறார்கள். அதாவது "அப்படி ஒன்றும் நடக்கவில்லை" அல்லது "நடந்தது சரிதான்" என்று அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்கின்றன. இது கொடுமையிலும் கொடுமை இல்லையா ? அதுவும் புத்தரை வழிபாடுபவர்களால்??
தீவு முழுவதும் ஆட்சியை ஊழல் தொடர்ந்து அரித்து வருகிறது. ஊழல் பொதுவாக ஒரு இனத்துக்கே உரியது அல்ல — என்றாலும் சட்டத்தின் ஆட்சி நீதியை நோக்கி அல்ல, அதிகாரத்தை நோக்கி சாய்கிறது. அத்தகைய சூழலில், அதன் விளைவுகள் சிறுபான்மையினரை அதிகமாக நசுக்குகின்றன.
சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
அதாவது உண்மையான சுதந்திரம் என்பது:
பயமில்லா, பாகுபாடு இல்லா வாழ்வு
இராணுவமயமாக்கப்பட்ட தேசியவாதமோ அல்லது மத தீவிரவாதமோ இல்லா வாழ்வு
சமச்சீர் சட்டம்
நிலம், மொழி, பண்பாடு பாதுகாப்பு
பொய்மைப்படுத்தப் படாத உண்மை வரலாறு
நீதி மற்றும் பொறுப்பு
ஒரு தேசம் அதன் காயங்களை அமைதிப்படுத்துவதன் மூலம் குணப்படுத்த முடியாது.
எனவே, இவை இல்லாமல், சுதந்திர தினம் ஒரு விழா மட்டுமே— விடுதலை அல்ல.
உண்மையான சுதந்திரம் எப்போது வரும் என்றால் :
சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம்
நிலம் திருப்பித் தரப்படுகிறது, மறுபெயரிடப்படவில்லை
வரலாறு உண்மையாகச் சொல்லுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அல்ல
பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படவில்லை
நீதி என்பது மறுசீரமைப்பானது, செயல்பாட்டுக்குரியது (நாடகத்தனமானது) அல்ல.
அதாவது, நீதி என்பது குற்றவாளியைத் தண்டிப்பதோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்டவரின் இழப்பைச் சரிசெய்து (Repair), சமூகத்தில் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் (Restore). இது ஏனோதானோவென்று பெயரளவில் தண்டனை வழங்கி, நாடகம் ஆடுவது (Performative) போல இருக்கக் கூடாது.
அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - அது ஒரு முடிக்கப்படாத பயணத்தின் நினைவூட்டலாகும்.
சுதந்திரம் மரபுரிமையாக இல்லை. இது கட்டமைக்கப்படுகிறது - தைரியம், உண்மை மற்றும் கூட்டு பொறுப்புக்கூறல் மூலம்.
"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!
[இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
“Independence, Still Deferred” (04.02.2026)
Seventy-eight years since the flag was raised,
Yet some hands still tremble to lift their heads.
Freedom arrived dressed in ceremony,
But justice stayed locked outside the gate.
They say we are free—
Free to vote, free to sing an anthem,
Free to remember only what is permitted,
Free to forget what still bleeds.
In the North, the land remembers footprints
Of those who never returned.
Fields guarded by guns,
Shrines renamed, histories relabelled,
Bones buried beneath “development”.
A language spoken softly to avoid suspicion,
A memory treated as sedition,
A question answered with surveillance,
A protest met by silence—or prison.
Women still carry wars in their bodies,
Children inherit checkpoints instead of playgrounds.
Students learn early the geography of fear,
And the curriculum of obedience.
The law promises equality,
But justice speaks different tongues.
Some graves are investigated,
Some are archived,
Some are erased by bulldozers at dawn.
Is this independence—
When detention needs no charge,
When truth needs permission,
When reconciliation demands forgetting?
Yet still, we endure.
Not because the chains are gone,
But because we refuse to become numb.
Independence is not a date.
It is the day land is returned,
The day the disappeared are named,
The day memory is not a crime.
It is the day Tamil, Sinhala, Muslim
Stand equal before law—not power.
The day archaeology stops being a weapon,
The day faith is not enforced by force.
Until then,
We mark this day not with fireworks,
But with questions,
With courage,
With an unfinished demand for freedom.
[Kandiah Thillaivinayagalingam
Athiady, Jaffna]
Independence: A Promise Still Unequal (Sri Lanka, 2026)
On the 4th of February, Sri Lanka celebrates independence. Flags rise, speeches echo, and history is rehearsed. Yet for many—particularly Tamil-speaking communities—independence remains a constitutional statement rather than a lived reality.
Seventy-eight years after the end of British rule, Sri Lanka continues to struggle with structural injustice, selective law enforcement, and ethnic majoritarianism. While the country is officially sovereign, true freedom—defined by dignity, equality, and justice—remains unevenly distributed.
For Tamils in the North and East, the post-war reality is marked by:
Militarisation of civilian life
Land appropriation under archaeology and security narratives
Encroachment on Hindu temples and cultural spaces
Prolonged detentions under the Prevention of Terrorism Act
Surveillance of memorialisation and dissent
Absence of accountability for wartime atrocities
Reconciliation is often spoken of, but rarely practised with sincerity. Victims are asked to forget, while perpetrators are promoted. Memory is criminalised, while denial is institutionalised.
Corruption continues to corrode governance across the island. From daily bribery to elite impunity, the rule of law bends not toward justice, but toward power. In such an environment, minorities suffer disproportionately, lacking both protection and political leverage.
Independence must mean more than independence from colonial rulers.
It must mean freedom from:
Fear
Discrimination
Militarised nationalism
Religious extremism
Historical falsification
A nation cannot heal by silencing its wounds.
True independence will arrive only when:
All citizens are equal before the law
Land is returned, not renamed
History is told truthfully, not selectively
Diversity is protected, not controlled
Justice is restorative, not performative
Until then, February 4th is not merely a celebration—it is a reminder of an unfinished journey.
Independence is not inherited.
It is built—through courage, truth, and collective accountability.
"Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake"
[Gitanjali / Rabindranath Tagore]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
துளி/DROP: 2014 [“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026)
https://www.facebook.com/groups/978753388866632/posts/33625230760458806/?




