தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை
-இரா.துரைரெத்தினம்-
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும். இந்த படுகொலைகளை சிறிலங்கா படைகளின் துணையுடன் முஸ்லீம் ஊர்காவல் படையினரே செய்திருந்தனர்.
1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படைகள் அமைக்கப்பட்டன. முஸ்லீம் ஊர்காவல் படை என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த ஆயுதக்குழுக்களின் முக்கிய நோக்கம் தமிழர்களை படுகொலை செய்து கிழக்கில் தமிழினத்தை முற்றாக இல்லாமல் செய்வதாகும்.
முஸ்லீம் ஊர்காவல் படை தவிர கிழக்கில் ஜிகாத் குழு, ஒசாமா குழு உட்பட 18க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
முஸ்லீம் ஆயுதக்குழுக்களுக்கு தானே ஆயுதங்களை வழங்கி வைத்ததாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வீடியோ மூலமான உரை ஒன்றில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முதல் கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்தனர். இந்த நிலையை மாற்றி தாம் பெரும்பான்மை இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கிழக்கில் தமிழர்கள் மீது காலத்திற்கு காலம் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். தமிழர்களை அழித்து வந்ததுடன் கிழக்கில் 43க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி விட்டு அக்கிராமங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என அழிந்த தமிழ் கிராமங்கள் என்ற நூலில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விபரித்துள்ளார்.
1990ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1945ஆம் ஆண்டிலும் வீரமுனை கிராமத்தில் இருந்த தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தி அந்த அழகிய கிராமத்தை இரத்த களறியாக்கினார்கள் என கிழக்கில் நடந்த படுகொலைகள் பற்றி எழுதிய மணலாறு விஜயன் தனது நூலில் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லீம்களின் வாள் வெட்டுக்கும் கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.
1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் முஸ்லீம்களின் தாக்குதல்களால் தமிழர்கள் துன்பத்தையே அனுபவித்தனர் என மணலாறு விஜயன் தனது நூலில் தெரிவித்திருக்கிறார்.
கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம்களும் வீரமுனை போன்ற தமிழ் கிராமங்களிலிருந்து தமிழர்களை அகற்ற வேண்டும் என்றே செயற்பட்டனர்.
தமிழர்கள் மீதான உச்சக்கட்ட தாக்குதல் 1990ல் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வீரமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, காரைதீவு படுகொலை, சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா படையினரின் துணையுடன் முஸ்லீம்கள் படுகொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவங்களில் ஒன்றுதான் அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 54 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் வீரமுனை பகுதியில் மொத்தம் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை யும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இருந்து வாள்கள் கத்திகள் துப்பாக்கிகள் சகிதம் புறப்பட்ட முஸ்லீம்கள் வீரமுனை பிள்ளையார் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்த அப்பாவி தமிழ் மக்களை வெட்டியும் குத்தியும் சுட்டும் கொன்றனர். முஸ்லீம் காடையர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஆலய மூலஸ்தானத்திற்குள் ஓடிய பொதுமக்களையும் முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர்.
ஆலயம் வெள்ளக்காடாக மாறியது.
1990ஆண்டு ஏற்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
வீரமுனை துறைநீலாவணை கிராமங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேதினமான 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11ஆம் திகதி அன்று இராணுவத்தினரும் முஸ்லீம் ஆயுதக்குழுவும் இணைந்து செங்கலடி கிரான் போன்ற கிராமங்களை சுற்றிவளைத்து தமிழ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் சுமார் 15பேர் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மறுநாள் 12.08.1990 அன்று இரவு 11மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பொதுமக்கள் 12பேரையும் வைத்தியசாலைக்குள் வைத்தே முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவத்தினருடன் சென்ற முஸ்லீம்களே அப்பொதுமக்களை வெட்டி கொன்றனர் என இப்படுகொலையிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து 1990 ஒகஸ்ட் 14ஆம் திகதி மட்டக்களப்பு கோரவெளி, ஈச்சையடித்தீவு கிராமங்களில் இராணுவத்தினருடன் புகுந்த முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்துப்பாக்கி பிரயோகங்களில் வீடுகளில் இருந்தவர்கள் வீதிகளில் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என 18பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கல்லடி செங்கலடி ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து சென்ற இராணுவத்தினரும் ஏறாவூரில் இருந்த முஸ்லீம் ஆயுதக்குழுவுமே இத்தாக்குதலை நடத்தினர்.
இதேபோன்று 1990 ஓகஸ்ட் 11ஆம் திகதி கல்முனையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டது. பாண்டிருப்பு கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் வீடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்தனர். ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் கையை உயர்த்திவாறு வெளியில் வந்தனர். பெண்கள் தமது குழந்தைகளை இறுகப்பற்றிய படி வெளியில் வந்தனர். 25ஆண்களை இராணுவத்தினர் காரைதீவு முகாமுக்கு கொண்டு சென்றனர். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை விடுமாறு பின்னால் சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர்.
அடுத்த நாள் இராணுவம் கொண்டு சென்ற பொதுமக்களின் உறவினர்கள் கல்முனை நகரிலிருந்து காரைதீவு இராணுவ முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என பெருந்தொகையானோர் கூடியிருந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை தெரிவு செய்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆண்களை இராணுவத்தினர் சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அங்கு இரு மணித்தியாலங்களில் 37பொதுமக்கள் கொல்லப்பட்டனர். முதல் நாள் காரைதீவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கூட கொடுக்காது எரித்து விட்டனர். 11ஆம் திகதி 12ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் கல்முனையில் 62 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று கிழக்கில் ஒவ்வொரு தமிழ் கிராமங்களிலும் வகை தொகையின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இப்படுகொலைகள் பற்றி அடுத்து வரும் வாரங்களில் தொடராக பார்ப்போம்.
(தொடரும்.)
வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது.
பேராசிரியர் R.Surenthirakumaran, Dean, Faculty of Medicine, UoJ அவர்களுடனான நேர்காணல்.
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள்.
ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை
ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர்.
A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.
ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!
இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்
"தோற்றிடேல், மீறி
தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
-நன்னிச் சோழன்
எல்லா(hello)...
வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட படைத்துறை சார்ந்த கல்லூரிகள், அறிவுக்கூடங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்தோர் அணிந்த சீருடைகள் பற்றியே. பல பத்து கல்லூரிகள் அவர்களிடம் இருந்தாலும் என்க்கு தகவல் கிடைக்கப்பெற்றது இரண்டு கல்லூரிகள் பற்றியே. கிடைத்த இரண்டையும் கீழே விரித்திருக்கிறேன்.
வாருங்கள் அவை பற்றிக் காண்போம்…
இது கணினிப் பிரிவு என்று அழைக்கப்படும் 'கேணல் ராயு படைய அறிவியல் தொழினுட்பவியல் கல்லூரி'இன் கீழ் செயற்பட்டதாக கீழுள்ள பெயர்ப் பலகையினை வைத்து அறிய முடிகிறது.
இக்கல்லூரியில் பணியாற்றியோர் தனியான ஒரு வேறுபட்ட சீருடையினை அணிந்திருந்தனர். இச் சீருடையானது வரிப்புலி தைக்கப்பட்ட படங்குபோன்ற துணியில் தைக்கப்படவில்லை. மாறாக சாதாரண சட்டை தைக்கும் துணியில்தான் தைக்கப்பட்டுள்ளது.
இச்சீருடையின் மேற்சட்டையானது இள நீல நிறத்தில் இருந்தது. இதன் நீளக் காற்சட்டை ஒரு விதமான கபில நிறத்தில் இருந்தது.
இதன் மேற்சட்டையின் இரு மாரிலும் இரு பக்குகள் இருந்தன. அவை சதுர வடிவில் இருந்தது. தோளில் தோள்மணை வைப்பதற்கான துண்டங்கள் இருந்தன. சட்டையின் கை முடிவு சாதாரண சட்டையின் கை முடிவு போலவேதான் இருந்தது. நீளக்காற்சட்டையும் அஃதே. சாதாரண நீளக்காற்சட்டையின் முடிவு போலவே இதன் காலகளும் இருந்தது. நீளக் காற்சட்டையின் இடுப்பிற்குக் கீழே சாதாரண நீளக்காற்சட்டைக்கு இருப்பது போலவே பக்குகள் இருபுறமும் இருந்தன. தொடையின் அடிப்பகுதியில் இரு பக்கவாட்டாக இரு பக்குகள் இருந்தன, படைத்துறை நீளக்காற்சட்டையில் இருப்பது போலவே. இவர்கள் அணிந்திருந்த இடுப்புப்பட்டியின் நிறமும் அதே கபில நிறம்தான்.
இவர்கள் படைத்துறையில் அணியும் நெடுஞ்சப்பாத்திற்குப் பகரமாக சாதாரண சப்பாத்தே அணிந்திருந்தனர்.
தலையில் இவர்கள் அணிந்திருந்த தொப்பியானது முற்றிலும் வேறுபட்ட தோற்றமுடையதாக இருந்தது. அது உச்சிமுடி தொப்பி (எண்:16) ஆகும். அதுபற்றிக் காண கீழுள்ள கொழுவியை சொடுக்கவும்.
இக்கல்லூரியில் பணியாற்றியோரின் சீருடையானது வரிப்புலி தைக்கப்பட்ட படங்குபோன்ற துணியில் தைக்கப்படவில்லை. மாறாக சாதாரண சட்டை தைக்கும் துணியில்தான் தைக்கப்பட்டுள்ளது.
இச்சீருடையின் மேற்சட்டை & நீளக் காற்சட்டை ஒரு விதமான கடும்பச்சை நிறத்தில் இருந்தது.
இதன் மேற்சட்டையின் இரு மாரிலும் இரு பக்குகள் இருந்தன. அவை சதுர வடிவில் இருந்தது. தோளில் தோள்மணை வைப்பதற்கான துண்டங்கள் இருந்தன. சட்டையின் கை முடிவு சாதாரண சட்டையின் கை முடிவு போலவேதான் இருந்தது. நீளக்காற்சட்டையும் அஃதே. சாதாரண நீளக்காற்சட்டையின் முடிவு போலவே இதன் காலகளும் இருந்தது. நீளக் காற்சட்டையின் இடுப்பிற்குக் கீழே சாதாரண நீளக்காற்சட்டைக்கு இருப்பது போலவே பக்குகள் இருபுறமும் இருந்தன. தொடையின் அடிப்பகுதியில் இரு பக்கவாட்டாக இரு பக்குகள் இருந்தன, படைத்துறை நீளக்காற்சட்டையில் இருப்பது போலவே. இவர்கள் அணிந்திருந்த இடுப்புப்பட்டியின் நிறம் கறுப்பு நிறம் ஆகும். அது படைத்துறையினர் அணியும் அதே இடுப்புப் பட்டிதான்.
இவர்கள் படைத்துறையில் அணியும் நெடுஞ்சப்பாத்திற்குப் பகரமாக சாதாரண சப்பாத்தே அணிந்திருந்தனர்.
தலையில் பச்சை நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தனர்.
உசாத்துணை:
படிமப்புரவு:
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்
'நம் வரலாற்றை
நாமே எழுதுவோம்'
------------------------
என்னிடம் இருக்கின்ற வேவுப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"
"எத்தனை எத்தனை மாபெரும் வெற்றிகள்
வேங்கைகள் கண்டது எங்கள் நிலம்?
அத்தனை மாபெரும் வெற்றிக்கும் காரணம்
வேவுப்புலிகளின் ஆய்வுத்திறம்!"
--> எந்த இறுவெட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்பது அறியில்லை
போக்கூழாக இவர்களின் இலச்சினை வரலாற்றில் விடுபட்டது!
இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்: