யாழ்ப்பாணத்து வேலி.

புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி
இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார்.
அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது.
இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக ஒழுக்க விழுமியங்கள், தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலக் கல்வி என்பன மேலோங்கிக் காணப்பட்டன.
இன்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி
உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வண்ணமாய், அக்கல்லூரி மாணவர்களின் திறமை போற்றப்படுகிறது. இக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்த்தால், இப்பாடசாலையின் பரிணாம வளர்ச்சியை அறியலாம்.
ஏழு மாணவருடன் முதல் பள்ளி:
1823 இல் தன் வீட்டிலேயே ஏழு மாணவர்களுடன் சிறந்ததொரு பள்ளியை அமைத்து அம் மாணவர்களுக்கான வாழ்வாங்கு வாழ கல்வியை ஆரம்பித்தார். 1824இல் பதின்மூன்று மாணவர்களையும் 1825இல் முப்பது மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி வளர்ச்சி பெற்றது.
இதன்பின் 1824 இல் ஜோசப் நைற் அவர்களிடமிருந்து வண வில்லியம் அட்லி (Rev.William Adley) பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையுள்ள ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் நிறைந்தவராகவும் காணப்பட்டார். 1839 முதல் 1841 வரை D.W.Tailor என்பவர் வில்லியம் அட்லி அவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.
1841 காலப்பகுதியில் பெண்கள் தங்கியிருந்து கற்பதற்காக தனியார் விடுதியாக நல்லூர் ஆங்கில செமினரி மாற்றம் நடந்தது. அவ்வாண்டிலேயே நல்லூர் ஆங்கில செமினரி சுண்டிக்குளிக்கு இடமாற்றம் பெற்று சுண்டிக்குளி செமினரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது.
புளியமர நிழலில் வகுப்புகள்:
ஆரம்ப நிலையில் வகுப்பறை வசதியின்மையால் ஓங்கி வளர்ந்த புளியமர நிழலிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அக்காலத்தில் Rev.J.T.Johnstone அதிபராகப் பணியேற்றார். அவருடன் இணைந்து John Hensman அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து Rev.Robert William அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுட்பேற்றார். ஆயினும் 1866 இல் கொடிய நோய் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அதன் பின் J.Evarts 1867 – 1878 வரை தலைமை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
ராபர்ட் வில்லியம்ஸ் நினைவு மண்டபம்:
1866 ஆம் ஆண்டில் நாட்டைப் பேரழிவிற்குள்ளான காலரா தொற்றுநோய் காரணமாக, ராபர்ட் வில்லியம்ஸ் தனது 8 வயது மகனை இழந்தார். அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 10, 1866 இல் காலமானார். திரு. ராபர்ட் வில்லியம்ஸ் நோயுற்ற படுக்கையில் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டார்.
இலங்கைத் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாளான மார்னிங் ஸ்டார் மற்றும் முதல் தமிழ் மொழி செய்தித்தாள் உதயதாரகை அவரது மரணச் செய்தியை அப்போது வெளியிட்டன. அவரது அகால மறைவைக் குறிப்பிடுகையில், “ராபர்ட் வில்லியம்ஸ் தனது பூமிக்குரிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி கடவுளின் அருளால் யாழ் மக்கள் மனதில் நுழைந்தார். அவரது மரணம் சுண்டிக்குளி செமினரிக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர் நினைவாகவே தற்போது புதிய மண்டபம் 200வது ஆண்டில் திறக்கப்பட உள்ளது.
சிறு விதை பெரு விருட்சமாக :
இத்தகைய கல்விப் பணியாளர்களின் தன்நலமற்ற சேவையாலும் அயராத உழைப்பாலும் விதைக்கப்பட்ட சிறு விதை இன்று பெரு விருட்சமாக ஓங்கி வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு நிழல் கொடுக்கின்ற ஒரு ஸ்தாபனமாக மிளிர்கின்றது.
இங்கிலாந்து திருச்சபையின் இறுதி மிசனரியாளரும், கல்லூரியின் பதினாறாவது அதிபருமான அருட்திரு ஹென்றி பிற்றோ அடிகளார் கல்லூரியின் அதிபராக இருந்தபோது கல்லூரி மேலும் ஓங்கி வளர்ந்தது.
அருட்திரு ஹென்றி பிற்றோவின் (1920-1940) பின்னர், முதலாவது தேசிய அதிபர் என்னும் அந்தஸ்தினைப் பெற்ற அருட்திரு J.T.அருளானந்தம் (1940-1957), திரு.P.T.Mathai (1957-1959), திரு.A.W. ராஜசேகரம் (1959-1966) திரு.க.பூரணம்பிள்ளை (1967-1976),திரு.சி.இ.ஆனந்தராஜன்(1976-1985) திரு.குணசீலன் (1985-1987), திரு. தனபாலன் (1990-2006), திரு. ஞானப்பொன் ராஜா(2006-2017), தற்போது திரு. துஷிதரன் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி உள்ளனர்.
மகாத்மா காந்தி வருகை :
இக்கல்லூரியிலேயே 1927 நவம்பர் 29இல் இந்திய தேசபிதா மகாத்மா காந்தி கல்லூரிக்கு வருகை தந்து, வில்லியம் மண்டபத்தில் உரையாற்றிய வரலாறும் உண்டு.
ஆயினும் 1945ல் நடைமுறைக்கு வந்த அன்றைய இலவசக் கல்வித் திட்டத்துடன் இணைந்து செயற்படாது தனித்துவமாக வெளியே இருக்க தீர்மானித்தது. மீண்டும் பல்வேறு நோக்கங்களுக்காக 1951ல் இலவச கல்வித் திட்டத்தில் இக் கல்லூரி இணைந்து கொண்டது.
கல்லூரி எதிர்கொண்ட சவால்கள் :
1960ல் அரசு பாடசாலைகளைக் கையகப்படுத்தி பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பிரகாரம் இக்கல்லூரியையும் அரசாங்கப் பாடசாலையாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரி தன் தனித்துவத்தை இழக்க விரும்புவதைத் தவிர்த்து, தனித்து இயங்க முற்பட்டது.
பல்வேறுபட்ட தியாகங்கள், சோதனைகள், வேதனைகள் போராட்டங்கள்,மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பல்வேறு பட்டவர்களின் மேலான ஒத்துழைப்பினாலும், பக்கபலத்தினாலும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் தனியார் பாடசாலையாக இயங்குவதற்கு தீரமானிக்கப்பட்டது.
கல்லூரி நிர்வாகத்தை ஆளுகை செய்வதற்கு ஆளுகைக்குழுவும் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையும் உருவாக்கப்பட்டது.
அரச உதவிகள் தடைப்பட்டமையினால் கல்லூரி நிர்வாகம் பாரிய நிதிப்பற்றாக் குறையை எதிர்கொண்டது. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாது திண்டாடியது. கல்லூரியிலிருந்து வெளியேறினர் சிலர் பாதிவேதனத்தில் பணிபுரிந்தனர் பலர் இலவசமாகவும் பணியாற்றினர்.
பல்வேறு அளப்பெரும் ஆளுமைகளால் வளர்க்கப்பட்ட ‘பரியோவான் கழுகு’ (Johnian Eagle) தன் கூரிய பார்வையுடன் நேரிய இலக்கை நோக்கி உயரப் பறந்து வருகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வர
இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு,
மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்.
இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம்.
வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள்.
வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில்,
சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும்.
இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட
சங்கப் படலையானது காலப் போக்கில் ஓடுகள், சீமெந்து கொண்டு அமைக்கப்பட்டது.
சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும்
இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன.
இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகவிருக்கும் சங்கப்படலைகள்
எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ?
முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த
பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக்
கூடப் பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கிறோ என்பது அவமானமே !
படம்:
யாழ்ப்பாணத்தில், "அளவெட்டி" என்னும் ஊரிலிருந்து "அம்பனை" என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.
Sriram Govind
–மோகன் பரன்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது
குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் .
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில் இருந்து செத்தல் மிளகாய், நெல், அரிசி, மற்றும் கடலுணவுப்பொருட்கள் ஏற்றிய பொருட்கள் தென்னிலங்கையை நோக்கிச் சென்றன .
திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து, கடலுணவுப் பொருட்கள், நெல் என்பன லொறிகள் மூலம் சென்றன.
இத்தகைய பொருட்களைச் சந்தைப்படுத்திய வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்மக்கள், மண்ணெண்ணை, பெற்றோல் போன்ற எரிபொருட்கள் மற்றும் கட்டட பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்களை தென்னிலங்கையில் இருந்து வரும் போது கொள்வனவு செய்து வாங்கி வருவார்கள்.
கிட்டத்தட்ட பணப்புழக்கம் இருந்தாலும், பண்டமாற்று மாதிரியான விடயம் இடம்பெற்றது .
இந்தக்காலப்பகுதியில் தமிழர்பகுதிகள், முன்னேற்றகரமான அபிவிருத்தியை நோக்கிச் சென்றது.
ஒரு உற்பத்திப் பொருளாதாரம் தமிழர்களின் கையில் இருந்தது.
மாணவர்கள் கூட பாடசாலையில் இருந்து வீடு வந்தவுடன். மேற்குலக விவசாய செய்கையாளரின் குடும்பங்களைப்போல வயல்களிலும் தோட்டங்களிலும் பெற்றோர்க்குத் துணையாக வேலை செய்து படித்து வந்தார்கள்.
பெரியளவு பணம் இல்லாவிட்டாலும், வீட்டின் நாளாந்த வாழ்க்கைச் செலவைக் கழித்து சொற்ப பணத்தைச் சேமித்து வந்தார்கள். அத்தகைய வாழ்க்கை முறை அன்றிருந்தது .
ஆனால் தற்போது இலங்கை சென்று திரும்பியபோது அவதானித்த விடயம் ,
அன்றைய காலம் போல தமிழர்களிடம் உற்பத்திகள் எதுவும் இல்லை . உற்பத்திப் பொருளாதாரத்தில் ஒப்பீட்டு ரீதியில் வளர்ச்சி இல்லை.
தமிழர்பகுதியில் இருந்து கடலுணவு, நெல், அரிசி தவிர்ந்த ஏனைய உற்பத்திப் பொருட்கள், தென்னிலங்கைச் சந்தைகளுக்கு செல்வது அருகிவிட்டது.
அத்தகைய உற்பத்தி முயற்சிகள் சொல்லும் அளவுக்கு பெரிதாக செய்வதும் இல்லை.
வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் குறைவடைந்து, கொழும்பு, தம்புள்ள, புத்தளம், மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் இருந்தே பெருமளவு உற்பத்திப்பொருட்கள் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள் வருகின்றன.
அன்று தென்னிலங்கையில் சந்தைவாய்ப்பைக் கொண்டிருந்த தமிழர்கள், இன்று தென்னிலங்கை மக்களுக்கு தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களில் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, சோம்பெறிச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம்.
இதற்கான காரணங்கள் முற்றுமுழுதாக புலம்பெயர் தமிழர்களே காரணம்.
பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களில் உற்பத்திப்பொருளாதார முறைமையின் கீழ் , இலங்கையில் வாழ்ந்து, கஷ்டங்கள் பலவற்றை சந்தித்தவர்கள் .
அந்த கஷ்டங்கள் துன்பங்களின் நினைவுகளோடு வாழும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களின் மனநிலை.
அந்த மனநிலையின் பிரகாரம் அந்த வாழ்வியலின் உணர்வாக, தனது தாய் , தந்தை சகோதரர்கள், உறவினர்கள் கஷடப்படக்கூடாது என்பதற்காக, பெருமளவு பணத்தினை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமது உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
பாடசாலைகள் சனசமூக நிலையங்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றின் கட்டுமானங்களுக்கு எனவும் பெருமளவு பணத்தை அனுப்புகிறார்கள்.
உள்ளக கட்டுமான செயற்பாடுகள் என்பற்றுக்கும் பணத்தை அனுப்புகிறார்கள்.
அதனைவிட, புலம்பெயர் தேசத்தில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு என, சமூக சேவைநிறுவனங்கள், அறங்கட்டளைகள், நலன்புரி அமைப்புக்கள் என பலவற்றை அமைந்து, அவை மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளுக்காக நன்கொடைகளை அனுப்பி உதவுகிறார்கள்.
ஆகவே ஒட்டுமொத்தமாக, புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களைச் சென்றடைகிறது.
இந்தப்பணமே, வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழர்களைச் சோம்பேறி ஆக்கியுள்ளது.
இந்தப்பணத்தின் வருகையால் குழந்தைப் பிறப்பில் இருந்து மரணச்சடங்குவரை கேளிக்கைகளும் செல்வச்செருக்கும் மிகுந்த வாழ்வியலாக மாறியிருக்கிறது.
உடல் உழைப்பு பின்தள்ளப்பட்டு விட்டது . இதனால் அங்கு வாழும் இளைய சமூகத்திற்கான ஒய்வு நேரங்கள் அதிகமாகின்றன.
தேவைக்கு அதிகமான பணமும் , அதிக ஒய்வு நேரமும் ஒரு சமூகத்தைச் சோம்பெறிகள் ஆக்குவதோடு, குற்றச்செயல்களிலும் ஈடுபட வைக்கிறது.
இதன் தாக்கம் வடக்கு கிழக்கு இளைய சமூகத்தின் பெரும்பாலனவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை, சமூகப்பெரியவர்களிடம் இருக்கிறது.
அதைவிட புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் , பெருந்தொகைப் பணம் வடக்கு கிழக்கில் தங்கி நிற்பது கிடையாது. நிதிநிறுவனங்கள், வங்கிகள் மூலமாக, தென்னிலங்கை முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.
வடக்கு கிழக்கில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்க்கைக்கான பொருட்கள், சேவைகள் பெருமளவு தென்னிலங்கைப் பகுதியில் இருந்தே வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு கிடைப்பதால், அவற்றுக்கான கொடுப்பனவாக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பபடும் பணம், இன்னொரு மார்க்கமாக தென்னிலங்கையைச் சென்றடைகிறது.
அடிப்படையில் நோக்கினால் புலம்பெயர் தமிழர்களால் வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம், தென்னிலங்கைச் சமூகத்தினைச் சென்றடைகிறது என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் உள்ள சொந்தங்களுக்கு பணம் எதிர்காலத்திலும் அனுப்ப முடியுமா என்றால், அது விவாத்திற்கு உட்பட்டதே.
அதற்கு ஒரு சமூகவியல் பார்வை அவசியம்.
1985/1990 களில் புலம்பெயர்ந்து வந்த ஊர் மண்வாசனையை நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த புலம்பெயர் சமூகம் மூப்படைந்துவிட்டது .
ஓய்வூதியத்தினை அண்டிவிட்டது .
அவர்களால் இனி பணம் அனுப்புவது குறைவடையப் போகிறது .
அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்பனவற்றிலேயே அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்கள்.
புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகள் இலங்கை வந்து திரும்பிய போது, ஏற்பட்ட வாழ்வியல் ஒப்பீடு திருப்திகரமானது இல்லை .
அவர்கள் இலங்கையில் உள்ள தாய்வழி உறவுக்கோ, தந்தைவழி உறவுக்கோ உதவுவார்கள் என கட்டியம் கூற முடியாது .
எனவே இன்னும் 10 வருடங்களில புலம் பெயர் தமிழர்களின் பணம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வருவது வீழ்ச்சியடையும் .
இது வடக்கு கிழக்கு தமிழர்களை மேலும் பாதிப்படைச் செய்யும் .
எனவே வடக்கு கிழக்குத் தமிழர்கள் கொள்முதல் பொருளாதாரமாக தங்கி இருக்காமல், உற்பத்திப் பொருளாதாரத்தினை கட்டி அமைக்கவேண்டிய தேவை, அவசியமாகவும் அவரமாகவும் இருக்கிறது .
இதன் அவசியப்பாட்டை உணர்ந்து அனைவரும் செயலாற்றவேண்டும் .
(இக்கட்டுரை முழுக்க முழுக்க தமிழ் தேசியவாத நோக்குடனேயே எழுதப்பட்டுள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் யுத்தத்திற்கு முன்னரான வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார நிலைமையின் ஒரு பகுதியைச் சொல்லுவதாலும், வடக்கு கிழக்கு மக்கள் புலம்பெயர் சமூகத்தில் தங்கி வாழும் நிலையில் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுவதாலும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
https://chakkaram.com/2023/03/03/வடமாகாண-பொருளாதாரமும்-ப/
வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்
வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.
150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.
இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன.
வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.
150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.
உள்ளே பண்ணைக்குரிய அடையாளங்களைத் தவிர சிறுவர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்வூட்டும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.
Adventure rides, Roller coasters, fun rides,boat rides போன்றன காணப்படுகின்றன. இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில் உள்ள வயது வந்தவர்களும் தங்களை் மறந்து தங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்துடன் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் எனக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோயில்களுக்கு பணம் வழங்கி கோயில்களை ஹோட்டேல் ஆக்குவபவர்கள் மத்தியிலும், மக்களுக்கு பணம் வழங்கி அவர்களை அடிமைகளாகவும், சோம்பேறிகளாகவும் உருவாக்கும் மக்கள் மத்தியில் இந்த பண்ணையின் உரிமையாளர் எனக்கு அதிசயப் பிறவியாக தெரிந்தார். கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
தாயக நிலத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். Organic விளைச்சல்களை ஊக்குவிப்பதுடன் Organic பொருட்களை பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறார்.மற்றவர்களை சந்தோஷப்டுத்துகிறார் போன்றவற்றிற்காக இவரது முயற்சிக்கு பெரியதொரு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும். இப்படி சமூகமாக முன்னேற்றுபவர்களை ஆதரிப்போம்.உற்சாகப்படுத்துவோம்.
-கலைச்செல்வி
1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை.
1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் தலைவர் அவர்கள். அந்தவகையில் 1998 ஆம் ஆண்டு முற்பகுதியில் புதிதாக கொள்வனவு செய்ப்பட்ட ஆயுதங்களில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட கனரக ஆயுதத்திற்க்கான பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டு அதன் சிறந்த சூட்டாளனாக வெளியே வருகிறான். இம்முறை அக்கனரக ஆயுதத்தின் மூலம் கடற் சண்டைகளில் பெரும் பங்காற்றியவன். தனது அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பால் படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அங்கும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்கிறான் .அவ் வேளையில்தான் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கனரக ஆயுதம் தரைத்தாக்குதலுக்கு தேவையான போது சிறப்புத் தளபதியால் விடுதலையின் தலைமையில் அணிகள் அங்கே அனுப்பப்ட்டது. அங்கு சிலமாதங்களாக தரைத்தாக்குதலில் தனது அநுபவங்களைப் பெற்று தனது அணிகளை செவ்வனவே வழிநடாத்தினான். மீண்டும் தரைத் தாக்குதலில் ஈடுபட்ட கடற்புலிகளின் அணிகளை கடலில் ஒரு வலிந்த தாக்குதலுக்காக எடுக்கப்பட்ட போது விடுதலையும் தனது அணிகளுடன் வந்து 16.09.2001 அன்று நடைபெற்ற இலங்கைக் கடற்படையினரின் மீதான வலிந்த தாக்குதலிலும் பங்குபற்றினான்.
23.09.2001ல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கைக்கு எதிரான கடற்சமரில் பாரிய விழுப்புண்ணடைகிறான். இச் சமரில் இவனது நெருங்கிய நண்பணான மேஜர் திருமலை வீரச்சாவடைகிறான். விழுப்புண்மாறி முகாம் திரும்பிய விடுதலை அக்காலப்பகுதியில் சமாதானம் நிலவியதால். முகாமில் நின்றார். அவ்வேளையில் ஆழ் கடல் விநியோகம் தென் தமிழீழத்திலும் தொடருமாறு தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு பணிக்கப்படுகிறது. அதற்கமைவாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்படுகிறார். அங்கு சென்ற அணிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ் விநியோகமுறை முற்றிலும் மாறுபட்டிருந்து .சாலையிலிருந்து வேகமான படகுகளிலில் கப்பலுக்குச் சென்று பொருட்களை இரவிற்க்குள் கொண்டு வந்தவர்களுக்கு ரோலரில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்து கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து வருவதுமாக இருந்தது.விநியோக நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டபோது ஒரு பகுதிக்கான பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்பட்டு அதனை செவ்வனவே வழிநடாத்தினான்.
அவ் வேளையில் தான் ஒரு துரோக நடவடிக்கை உருவானபோது அணிகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான். அத்துரோக நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடல் நடவடிக்கையை கடலில் நின்ற அணிகளுக்கு பொறுப்பாக கடலில் நின்றே வழிநடாத்தி வெற்றிக்கு வித்திட்டான்.அதனை தொடர்ந்து தென்பகுதிக்குச் சென்று ரோலர் கொள்வனவு செய்து அவ் ரோலரில் கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை மன்னாருக்கு கொண்டுவந்த விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்த்தான்.
இது ஒரு இலகுவான காரியமல்ல வன்னியிலிருந்தால் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் உடனடியாக சிறப்புத்தளபதியுடன் கதைத்து ஆலோசனை பெறலாம் அல்லது சிறப்புத்தளபதி பொறு அண்ணையிட்டை கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி அதற்கேற்ப உடனடியாக முடிவுகளைச் சொல்வார். இது அப்படியல்ல என்னவாகிலும் விடுதலையே முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படியாக இக்கட்டான இடங்களிலிருந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றிய விடுதலை . தென்தமிழீழத்தில் நடைபெற்ற பல்வேறு தரை கடற்சமர்களிலும் பங்குபற்றினான்.
தென் பகுதி துறைமுகம் மீதான தாக்குதலுக்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த விடுதலை
அத்தோடு நின்று விடாமல் அணிகளை கூட்டிச் சென்று துறைமுகத்துக்கு அருகில் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தான். இப்படியாக இருந்தவேளையில் தென் தமிழீழத்தில் இருந்த போராளிகளை வன்னிக்கு அழைத்தபோது இறுதியாக வந்த போராளிகளுடன் தனக்கு இட்ட பணிகளை செவ்வனவே செய்த திருப்தியுடன் வந்து சேர்ந்தான். வன்னிக்கு வந்து லெப் கேணல் எழிற்கண்ணன் படையனிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு அப்படையணியுடன் மன்னார் சென்றான். கப்பலிலிருந்து ரோலர் மூலம் மன்னாருக்கு லெப். கேணல் டேவிற் படையணி மூலம் கொண்டு வந்த பொருட்களை மன்னாரிலிருந்து கடல்வழியாக லெப் கேணல் எழிற்கண்ணன் படையணி சுட்டபிட்டிக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள் இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து விடுதலை செயற்பட்டான்.
இவ்வேளையில் கடற்புலிகளின் தரைத்தாக்குதலுக்கு அணி ஒன்றை உருவாக்கி அவ் அணியை மன்னார் களமுனைக்கு அனுப்புமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டது.அதற்கமைவாக அணி ஒன்று உருவாக்கப்பட்டு விடுதலையிடம் சூசை அவர்களால் கொடுக்கப்பட்டு மன்னார் களமுனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது .அங்கு முன்னேறிவரும் படையினருக்கு எதிரான மறிப்புத் தாக்குதலிலும் முறியடிப்புத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு இரு தடவைகள் விழுப்புண்ணடைந்தும் விழுப்புண்மாறமுன்னரே களமுனைக்குச் சென்றவன் விடுதலை.
மன்னார் களமுனையைப் பொறுத்தளவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களுமே சண்டையாகயிருந்தது.அதன் பின்னர் மணலாற்றின் கடற்கரையோர முன்னரங்கப் பகுதி கடற்புலிகளிடம் வழங்கப்பட அதன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விடுதலை அங்கு முன்னேறிய படையினருக்கு எதிரான சமரை திறம்பட நடாத்தினான். அதில் உடுப்புக்குளப்பகுதியில் பகுதியில் காலையில் முன்னேறியபடையினர் மீது ஒரு முறியடிப்புத் தாக்குதல் நடாத்தி பெருமளவில் படையினரைக் கொன்று பெருமளவிலான ஆயுதங்களும் படைச் சடலங்களும் கைப்பற்றப்பட்ட இவ் வெற்றிகர சமரை விடுதலையே வழிநடாத்தினான். இதற்க்கு பழிதீர்க்குமுகமாக குறிப்பிட்ட மணித்தியாலயத்திற்குள் ஆறு தடவைகள் விமானத்தாக்குதல் நடாத்தினான். இதிலிருந்தே தெரிய வேண்டும் இத்தாக்குதலின் இழப்பை. அதன் பின்னர் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடல் தரை என இருபகுதியில் நடைபெற்ற சமர்களை அணிகளுடன் நின்றே வழிநடாத்தினான்.
பல்வேறு களங்களில் பல்வேறு பணிகளை இக்கட்டான சூழ்நிலையில் மாவீரர்களையும் தலைவரையும் மனதில் சுமந்து தன்னால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்க்கு திறம்பட செயற்பட்ட விடுதலை .இறுதிவரை முள்ளிவாய்க்காலில் களமாடி வீரச்சாவடைகிறான்.
இவர் வீரச்சாவடைந்த திகதியோ தெரியாத நிலையில் உள்ளனர். இது மாதிரியான எத்தனையோ மாவீரர்கள் இம் மண்ணின் விடுதலைக்காக போராடி வெளித்தெரியாத் தடங்களாக இருக்கிறார்கள்.
“கடலிலே காவியம் படைப்போம்”
என்றும் அலையரசி.
.
சமாதான காலத்தில் நடந்த நிகழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாணவர்களும் பொது மக்களும் முன்னெடுத்த ஆர்பாட்டம்
வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ்
இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா !
ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார்.
கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம்.
அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட.
ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது.
தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா!ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது.
அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது.
வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள்.
நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே!
அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.
நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை.
மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள்.
செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.
வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும்.திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான்.
அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன.
இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள்.
ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி.
இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும்.
இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி.
முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது.அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை.
1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது.
ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!… நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம். அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள்.
நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை.
செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’
இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?
தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share
அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.
அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது. இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா நிரோசினி, ஊடகவியலாளர் வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின் சமூக நிலமைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது.
இவ்வாலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன.
ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை. இந்நிலையில் ஆலயத்தைச் சுற்றாடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும் அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டிற்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
ஏனெனில் இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த “திஸ” என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.
பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு இக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார்.
அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சாசனங்கள் தமிழ் மொழியில் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன.
அவற்றுள் நாகன், ணாகன், தம்பன், வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர்.
இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது.
இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும். நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபடப்பட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டிடமாகக் காணப்படுகின;றது.
ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாது காப்பு அரண்களாக உள்ளன. இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது.
நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டிட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன.
அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமெந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில் அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமெந்து கொண்டு மீள் உருவாகம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டிடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திவாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமெந்து கொண்டு கட்டப்பட்ட ஆலய பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.
இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை. ஆலயத்தின் கர்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுளைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
இதனால் அச்சமின்றி அக்கட்டிடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது.
அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது. பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலைவடிவங்கள் தெளிவற்றுக் காணப்படுகின்றன.
இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு, விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும் அவற்றின் நீள அகலங்கள், கர்பக்கிரம், அந்தராளம் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் நீள அகலங்கள், வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.
எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள் வழிபடப்பட்ட தெய்வங்கள் காலரீதியான ஆலய வளர்ச்சி மாற்றம் ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும் அசையாத சொத்துக்கள் ஆலயத்தைப் பராமரித்த மக்கள் வழிபாட்டு மரபுகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
on January 11, 2023
வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத் தேடி உட்கார்ந்தவாறு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டநேரத்தின் பின்னர் வயதான ஒரு ஐயாவும் இளைஞனொருவனும் வருவதைக் கண்டேன். நான் தேடி வந்தவர் இவர்தான் என்பதை கண்டுணர்ந்து அவரோடு பேச்சுகொடுக்க ஆரம்பித்தேன்.
மூச்சிரைத்தபடி எனது அருகில் உட்கார்ந்தார். “இப்போதெல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியாது தம்பி. கொஞ்சம் நடந்தாலே மூச்சிரைக்குது. நீண்டநேரம் நிற்கவும் முடியாது.” இரண்டு கைகளையும் பின்பக்கமாக தரையில் ஊன்றியவாறு கால்களிரண்டையும் நீட்டி உட்கார்ந்தார்.
ஏற்கனவே, தொலைபேசி வழியாக செல்வரத்தினம் ஐயாவுடன் பேசியதால் நேரடியாக விசயத்துக்கே வந்தேன். எப்போ ஐயா உங்கள கைதுசெய்தாங்க? எப்ப விட்டாங்க?
“தம்பி, என்னை ரெண்டு தரம் பிடிச்சவங்க. முள்ளிவாய்க்கால் வழியா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போய் முகாமல்ல இருந்தப்போ ரி.ஜ.டி. ஆக்கள் என்னை பிடிச்சவங்க. இரண்டு நாள் விசாரணை முடிஞ்ச பிறகு விட்டவங்க. நான் இயக்கத்துல எந்த பிரிவிலயும் எந்த வேலையும் செய்ததில்ல. அவங்க (விடுதலைப் புலிகள்) பங்கர் வெட்ட கூப்புடுவினம். அதுக்குப் போய் உதவி செய்திருக்கன். அவ்வளவுதான். முகாம்ல இருந்து இங்க வீட்டுக்கு வந்த பிறகு வெள்ளை வான் ஒன்டுல ரி.ஐ.டி. ஆக்கள் வந்தவங்க. திரும்பவும் விசாரிக்கனும் என்று கூட்டிட்டுப் போனவங்க 12 வருஷம் கழிச்சுத்தான் விட்டவங்க. 58 வயசுல போய் 70 வயசுல வெளியில வந்திருக்கன் தம்பி. எந்தக் குற்றச்சாட்டும் என் மீது சுமத்தல.”
காய்ந்த நிலத்தையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவர் மகனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.
“கடைசி காலம் வரைக்கும் இவங்களின்ட தயவுலதான் வாழனும். செத்தாலும் இவங்கதான் தூக்கி அடக்கம் செய்யனும். என்னால தனியா ஒன்டுமே செய்ய முடியுதில்ல. இப்படியே பாரமா இருந்திட்டு செத்திட வேண்டியதுதான்.”
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி வாழ்க்கையைத் தொலைத்த பலருள் செல்வரத்தினமும் ஒருவர். முதுமையான வயதில் குடும்பத்தினரோடு வாழவேண்டிய செல்வரத்தினம் போன்ற பலர் இந்தக் கொடூரச் சட்டத்தால் தங்களுடைய எஞ்சிய காலத்தை சிறையிலோ அல்லது விடுதலையின் பின்னர் இறுதி கொஞ்ச காலத்தை உபாதைகளுடனோ கழிக்கவேண்டியிருக்கிறது. குடலில் ஏற்பட்டிருக்கும் தீவிர புண் காரணமாக தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு நகரத்தை நோக்கி செல்வரத்தினத்தால் போகவேண்டியிருக்கிறது. “இன்னும் எத்தனை நாள்தான் வாழப்போறன் தம்பி, அதுவரைக்குமாவது இவங்க யாருக்கும் தொந்தரவில்லாம வாழ்ந்திட்டுப் போயிரனும்.”
* பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செல்வரத்தினத்துடனான முழுமையான நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.
அதாவது இன்று காலை பத்து மணிக்கு இவ் நினைவேந்தல் நடைபெறுமென சிவாஜிலிங்கம் அறிவித்திருந்த நிலையில் காலை 9.30 மணியளவில் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடாத்தப்பட்டிருந்தது.
இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தமிழரசு கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதேநேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவுகூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்துகொண்டிருந்தன.
அத்துடன் இலங்கைத்தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளியாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்துக்காக கொல்லப்பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடுமொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழிவுகளை வரலாறாகப் பதிவு செய்வதில் காட்டிய அக்கறையை விலாவாரியாக விபரித்தார். அதனைப் போலவே ஈழநாதம் காட்டும் அக்க றையை குறிப்பிடத்தக்க விடயம் எனப் பாராட்டினார்.
இறுதி யுத்தம் முடிந்து பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னமும் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய பதிவுகளை எம்மினம் பூரணப்படுத்த வில்லை. இறுதி நாட்களில் நடைபெற்ற வீரச்சாவு விபரங்கள் கூட முழுமைப்படுத்தப் படவில்லை. இந்த விடயங்களில் யாராவது அக்கறை காட்ட முனைந்தால் தலையில் குட்டி அமர வைக்கும் போக்கினையே சிலர் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். வரலாற்றை மாற்றி எழுதும் பிரகிருதிகள் தமது கற்பனைகளை ஓரிரு சம்பவங்களில் சோடித்து இணையத்தளங்கள், முகநூல்களில் உலாவ விடுகின்றனர். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரைக்கொண்ட மாவீரருக்கு சீலன் எனப் பெயர் வைத்தவன் தானே என்றும் தான் ஒரு மூத்த உறுப்பினர் என்றும் அண்மையில் ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.மூத்த உறுப்பினர் என்று சொல்வதற்கு அவர் தலை நரைக்கும் வரை காத்திருந்தார் போலும்.
வரலாற்றில் நடைபெறும் திணிப்புக்கள் என்ற விடயத்தில் நாம் எச்சரிக்கையாகத் தான் இருக்கவேண்டும். அந்த விடயத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள்,முடிவுகள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை தமக்கே உள்ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது.
விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத்தில் எரியூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்ணர்) இரண்டாவது,மூன்றாவது மாவீரர்களான லெப்.சீலன் மற்றும் ஆனந்தின் உடலங்கள் யாழ்.போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ தகவல் அறிந்த சீலனின் தாயார் தனது மகனின் உடலை தன்னிடமே கையளிக்கவேண்டுமென பொலிஸாரிடம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலிஸார் நிராகரித்தனர். ஊர்காவற்துறைப் பகுதியிலேயே பொலிஸாரால் இவ்விரு உடல்களும் எரியூட்டப்பட்டன. வரலாற்றுச் சமரான 1983 ஜூலை திருநெல்வேலியில் வீரச்சாவெய்திய லெப். செல்லக்கிளி அம்மானின் வித்துடலைப் புலிகளே கொண்டு சென்றனர். நீர்வேலிப் பகுதியில் இவ் வித்துடல் விதைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இவ் விடயம் பகிரங்கப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. சுவரொட்டிகள் மூலமே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது. முதல் மாவீரரான சங்கரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவரது வீரச்சாவுச் சம்பவமும் வெளிப்படுத்தப்பட்டது .
முதல் மாவீரர் சங்கர்
அன்றைய காலகட்டத்தில் இருவரின் பாதுகாப்புக் கருதி சங்கரின் வீரச்சாவை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாள ரான நித்தியா னந்தனையும், அவரது துணைவியார் நிர்மலாவை யும் கைது செய்ய இராணுவத்தினர் யாழ். நாவலர் வீதியிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ”27.10 1982 அன்று இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன்,புலேந்திரன். ரகு (குண்டப்பா) ஆகியோர் இவர்களது வீட்டிலேயே தங்கவைத்து சிகிச்சை யளிக்கப்பட்டனர்” என்ற தகவல் படையினருக்குக் கிடைத்திருந் தது. படையினர் இவர்களது வீட்டை முற்றுகை யிடச் சென்ற போது அங்கிருந்த சங்கர் அந்த முற்றுகையிலிருந்து தப்ப முயன்றார்.படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வயிற்றில் காயமடைந்த அவர் கைலாசபிள்ளையார் கோவிலடிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தார் அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவனும் பின்னாளில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின் பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்கரைக்கண்டார். ஏற்கனவே அறிமுகமாயிருந்த சங்கரை தனது துவிச்சக்கர வண்டி யில் ஏற்றிக்கொண்டு சென்றார். யாழ்.பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள குமாரசாமி வீதியிலுள்ள 41 எண்ணுடைய வீட்டுக் குக்கொண்டுபோனார். இந்தப்போராட்டத்துடன் சம்பந்தமுடைய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பழகி வந்த இந்த வீட்டில் இருந்த ஏனையோருடன் இணைந்து சங்கரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அன்றைய காலகட்டத்தில் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது முடியாத விடயம். எனவே மேலதிக சிகிச்சைக்காக சங்கர் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சிவகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்ரனே இவரைத் தமிழகத்துக்குக் கொண்டு சென்றார்.
சங்கருக்காக உண்ணாவிரதமிருந்த தலைவர்
பொதுவாக எவருமே நினைவு தப்பி வலியில் துடிக்கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்றுவதுண்டு . ஆனால் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்தச் சமயத்தில் சங்கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்றினார். தலைவர் சங்கரின் மனதில் எந்தளவுக்கு ஆழமாக உறைந்திருந்தார் என்பதற்கு இதுவோர் சிறந்த உதாரணம். தமிழர்களின் விடுதலைக்காக இதுவரை 36 ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தோன்றிய போதும் அதில் புலிகள் மட்டுமே வித்தியாசமாகத் தெரிந்தார்கள் என்றால் அதற்கு இது போன்ற உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். வேறு எங்கும் காண முடியாத விடயம் இது . அந்தப் பாசப்பிணைப்பே வரலாற்றில் முதல் மாவீரனாக (விடுதலைப் புலிகள் இயக்கத்தின்) பெயர் பதித்த சங்கரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருக்கும் எண்ணத்தைக் தலைவருக்கு ஏற்படுத்தியது
மாவீரர் நாள் அறிவிப்பு
இதன் அடுத்தகட்டம் தான் மாவீரர் நாள் பற்றிய அறிவிப்பு.இந்திய இராணுவம் செயற்பட்ட காலத்தில் 1989 ம் ஆண்டில் இந்த அறிவிப்பு மணலாற்றுக் காட்டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்திய தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்கர் என்ற மூத்தபோராளி உரையாடலொன்றின்போது தலைவரிடம் குறிப்பிட்டார் (இவரே பின்னாளில் விமானப் படையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்ததுடன் அதனை வழிநடத்தியவர். (இயற்பெயர் வை.சொர்ணலிங்கம்)
இந்த பொப்பி மலர் உதாரணமே இலங்கையில் ‘சூரியமல்’ எனப்படும் சூரியகாந்தி இயக்கத்துக்கு வழி வகுத்தது.
அந்தப்பொறியை சங்கர் தட்டியபோதே எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய போராளிகளுக்கும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற சிந்தனை தலைவர் மனதில் உருவானது . அந்தவகையிலேயே புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் (சத்தியநாதன் ) நினைவு நாளை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார் அவர். இது பற்றி குறிப்பினை தேவர் அண்ணாவும் வெளியிட்டிருந்தார் .
கிழக்கில்…!
மட்டக்களப்புக்கு இந்த அறிவிப்பு வந்தபோது வடக்கு,கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் கட்டம்கட்டமாக வெளியேறும் நிலையில் இருந்தது .முதலாவது தொகுதியினர் அம்பாறை மாவட்டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்றாக வெளியேறிவிட்டனர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்கங்களுக்கு கூடுதலான ஆயுதங்களையும் அவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியும் வழங்கிவிட்டே இம் மாவட்டத்திலிருந்து வெளியேறினர்.இந்தியப்படையினர். இவர்களால் பயிற்சியளிக்கப்பட்டோர் திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய இடங்களில் இரு பெரும் முகாம்களை அமைத்திருந்தனர் .இந்தநிலையில் அன்றைய அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய அன்ரனி தலைமையில் ஒரு முகாமையும் இன்னொன்றை அன்றைய மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய ரீகன் தலைமையிலும் 05.11.1989 அன்று தாக்கி கைப்பற்றினர்புலிகள்.
இந்த நிலையில் அம்பாறையில் அன்ரனி முதல் மாவீரர் நாளை திறம்பட நடத்தினார். திருக்கோயில் பகுதியில் தளபதி அன்ரனி தலைமையில் போராளிகள் பாதுகாப்பு வழங்க அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் நிகழ்வை நடத்தினர்.
ஆனால் மடடக்களப்பு மாவடடத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததால் பெரும்பாலான கிராமங்களில் மாவீரர்களின் படங்கள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.வந்தாறுமூலையில் புலிகளும் மக்களும் கூடியிருந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக இந்தியப்படையினர் வந்தபோதும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
திருகோணமலையைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவ்வாறிருந்தும் சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் பாதுகாப்புக்காக ஒரு அணி அனுப்பப்பட்டிருந்தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலையிலான சுரேஷ் என்ற போராளியையும் (பின்னர் படகு விபத்தில் ஆகுதியானார் ) நிகழ்வைப் பொறுப்பேற்று நடந்த அரசியல் பொறுப்பை ஏற்றிருந்த ரூபனையும் அனுப்பியிருந்தார் பதுமன். அன்றைய காலகட்டத்தில் சங்கரின் புகைப்படம் கூட இவர்களின் கைவசம் இருக்கவில்லை.
நிகழ்வு நடைபெறும் தகவல் அறிந்து இந்தியப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை எதிர்த்து புலிகள் போரிட்டனர். ஒரு பக்கம் மோதலில் ஈடுபட்டுக்கொண்டே நிகழ்வையும் நடத்திமுடித்தனர் .மாவீரர்களின் பெற்றோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுருக்கமாக நிகழ்வு நடந்தன. ரூபன் சுடரேற்றி வைத்தார்.அதேவேளை இந்தியப்படையினரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட லெப்.ரிச்சாட் (இராமசாமி குணராசா, இறக்கண்டி, திருகோணமலை.)என்ற போராளி களப்பலியானார். இன்னுமொரு போராளியும் இந்தச் சமரில் காயமடைந்தார்.மாவீரர் நாளின் மாண்பைப் பேணவும் மாவீரரின் பெற்ரோரைக்காக்கும் முயற்சியி லும் தன்னை ஆகுதியாக்கிய முதல்மாவீரனாக ரிச்சாட்டின் வரலாறு அமைந்தது.
வடக்கில்..!
கிளிநொச்சி மாவட்டத்தின் நிகழ்வு பிரதேசப் பொறுப்பாளராக இருந்த அத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உருத்திரபுரம் சிவன்கோயி லடி, அக்கராயன்,கிளிநொச்சி ஆகிய இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் இருந்தபோதும் இவற்றுக்கு நடுவில் இருந்த கோணாவில் அ.த.க பாடசாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. வாடகை மோட்டார் வண்டியில் ஒலி பெருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டது. சில வேளை இவர்களுக்கு இந்தியப்படையினரால் தொந்தரவு ஏற்படலாம் எனக்கருதி, நகரில் இருந்த சகல ஒலிபெருக்கி மற்றும் வாடகை மோட்டோர் வண்டிகளின் உரிமையாளர்கள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
“வானம் பூமியானது பூமி வானமானது” என்ற பெருமாள் கணேசனின் பாடலை பின்னாளில் பிரபல எழுச்சிபாடகராக விளங்கிய S .G சாந்தன் பாடினார். அடிமைத்தனத்துக்கு எதிரான சினிமாப் பாடல்களை மாணவர்கள் பாடினர். (சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , உள்ளத்திலே உரம் வேண்டுமடா போன்ற) “ஓநாயும் ,சேவல்களும்” என்ற நவீன குறியீட்டு நாடகமும் மேடையேற்றப்பட்டது.வன்னியில் முதன்முதல் மேடையேற்றப்பட்ட இக் குறியீட்டு நாடகத்தை நா. யோகேந்திரநாதன் எழுதியிருந்தார். அன்ரன் அன்பழகன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். மாவீரர் நாளுக்கான சுடரேற்றல் முதலான நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பான முறையில் அனைத்தும் நடைபெற்றன.மூன்று முகாம் களிலிருந்தும் இந்தியப்படையினர் வந்தால் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைத்தும் நடைபெற்றன.
மன்னார்ப் பிராந்தி யத்தின் சகல மாவீரர் விபரங்களை யும் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் அமுதன் (சுரேஷ் ) தலைவரிடம் சமர்ப்பித்திருந்தார். பண்டிவிரிச்சான் , நானாட்டான், கறுக்காய்க் குளம், முழங்காவில் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பண்டிவிரிச்சான் பாடசாலையில் பிரதேசப்பொறுப் பாளர் கணேஷின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. கவிதை, பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்வுகளின் போட்டிகளும் முன்கூட்டியே ஏற்பாடு செயப்பட்டிருந்தன. நானாட்டான் நெல் களஞ்சியத்தில் பிரதேசப் பொறுப்பாளர் ஞானியின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடந்தன. பின்னாளில் தமிழீழ நிர்வாக சேவையில் பிரமுகராக விளங்கிய சின்னப்பா மாஸ்டர் இந் நிகழ்வை திறம்படச் செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.
கறுக்காய்க் குளத்திலும் நெற்களஞ்சியத்திலேயே நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேசப்பொறுப்பாளர் பாரதி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.பூநகரி பிரதேசத்துக்கான நிகழ்வு முழங்காவில் மகா வித்தியாயத்தில் நடைபெற்றது. பிரதேசப் பொறுப்பாளர் சாம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக பொட்டுவே செயற்பட்டார். அவர் தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜன் (பின்னாளில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவர்) சூட் ( தவளை நடவடிக்கையின் போது வீரச்சாவெய்தி யவர்) ஜக்சன் (தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர்) முதலானோரிடம் மாவீரர் நாள் அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்டார். இந்தியப் படையினரின் நடவடிக்கை தீவிரமாயிருந்ததால் சிறு சிறு குழுக்களாக காலத்துக்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். நீர்வேலி வாதரவத்தை, குப்பிளான், மாதகல் போன்ற இடங்களில் இந்த நகரும் குழுக்கள் பெரும்பாலும் தங்கியிருந்தன. பகிரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வது சிரமமென்பதால், சுவரொட்டிகள் அடித்து சாத்தியமான இடங்களில் ஒட்டுவோம் என ராஜனிடம் தெரிவித்தார் பொட்டு.
முதல் சுவரொட்டி
திலீபன் காலத்தில் அரசியற் பணிகளை மேற்கொண்டவர் என்ற வகையில் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் பற்றி ராஜனின் அபிப்பிராயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. ‘‘உங்கள் சுவடுகளில் தொட ரும் பாதங்கள்’’ என்றொரு வசனத்தை (சுலோகம் என்றும் சொல்லலாம்) எழுதிக் கொண்டுபோய் பொட்டுவி டம் காட்டப்பட்டது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். எனினும் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வைப்பது எப்படி என்று சிந்தித்த வாறே தொடர்ந்து செயலில் இறங்கினார்.
எங்கேயாவது கறுப்பு வர்ணம் (பெயின்ற்) எடுத்து வரும்படி சொன்னார். வெளியே சென்றவர்கள் ஒரு வாளியில் அதனைக் கொண்டு வந்தனர். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அருகில் நின்ற சூட்டை அழைத்து அவரது காலின் அடிப்பாதத்தில் பெயின்றை அடித்து அத்தாளில் பதிய வைத்தார். அச்சொட்டாக கால் பதிந்தது. எனினும் அங்கு நின்ற அன்னையொருவர் இவரது கால் சிறியதாக உள்ளது; வேறொருவரின் கால் பெரிதாக இருக்குமாயின் நன்றாக இருக்கும் எனத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். அது சரியாகவே இருந்தது பொட்டுவுக்கு. உடனே அருகில் நின்ற ஜக்சனின் காலில் மை பூசப்பட்டது. அது மிகப் பொருத்தமாக இருந்தது. ராஜன் எழுதிய வசனத்தில் பாதங்கள் என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக …. (டொட் டொட்) என குறிப்பிட்டார் பொட்டு.
அந்த வகையில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டியே முதன் முதலில் மாவீரர் நாளுக்கென மக்களின் பார்வைக்கு வந்தது. துவிச்சக்கரவண்டி மூலமாக பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று ஒட்டினர் புலிகள்.
ஒதுங்கிய இராணுவம்
புத்தூர் முகாமிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவத்தினரை நாடகக் கலைஞர் செல்வம் மற்றும் பாலன் முதலானோர் வழி மறித்தனர். மாவீரர் நாள் தொடர்பான விடயங்கள் இருப்பதால் வெளியே வராமலிருக்குமாறு அவர்கள் இராணுவத்திடம் கூறினர். தாங்கள் எப்படியும் வெளியேற வேண்டியவர்கள் தானே என்ற நினைப்பிலோ என்னவோ மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து திரும்பிச் சென்றனர் இந்தியப் படையினர்.
புலிகளின் கட்டளைப் பணியகமான மணலாறு’ 14: முகாமில் தேவர் அண்ணாவோடு இணைந்து ஏற்பாடுகளை கவனிக்குமாறு தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் பெண் போராளிகள் உட்பட அனைவரும் உணர்வுபூர்வமாக பணிகளில் ஈடுபட்டனர். புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை இயக்கமும் காட்டுக்குள் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை இசைக்க விட்டு தமது தோழர்களை நினைவுகூர்ந்தி ருக்காது.
இந்நிகழ்வுகள் நடைபெறும்போதும் இந்தியப் படை வந்தால் எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்ச்சி ஏதும் இருக்கவில்லை.
நிகழ்வுகளை கார்த்திக் மாஸ்டர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே காட்டுக்குள் வைத்தே புகைப்படக் கருவியைக் கையாள்வது, அதன் நுணுக்கங்கள் என்பவற்றைக் கிட்டு கற்பித்திருந்தார். தலைவரின் உரை முதலான விடயங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை சங்கர் மற்றும் தேவர் அண்ணா திட்டமிட்டிருந்தனர்.
1990 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 12 மணி இரு நிமிடத்துக்கு சுடரேற்றுமாறு விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்திருந்தனர் மக்கள். ஆலயங்களில் மணிகள் ஒலிக்க வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்கள் சுடரேற்ற தலைவரின் உரை வானொலியில் ஒலிபரப்பானது. வீட்டு வாசலில் சுடரேற்றிய சமயம் மழை பெய்தது. அதனால் சுடர் அணைந்து விடாமலிருக்க குடை பிடித்தனர். இந்தக் காட்சி ஒரு ஓவியரின் மனதில் தைத்தது. அவர் இக்காட்சியைத் தத்ரூபமாக வரைந்திருந்தார். தீபமேற்றல், மணியோசை ஒலிக்கச் செய்தல் முதலான விடயங்க ளெல்லாம் கவிஞர் புதுவை அண்ணாவின் ஆலோசனையே. அதனைத் தலைவர் ஏற்றிருந்தார். மாவீரரின் பெயரை வீதிகளுக்கு சூட்டுவதும் நடைபெற்றது.
மாவீரர் பெற்றோரைக் கெளரவித்தல் நிகழ்வும் இந்த ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. வலிகாமம் பகுதி மாவீரர்களது பெற்றோர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் வடமராட்சியைச் சேர்ந்தோர் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் தென்மராட்சியைச் சேர்ந்தோர் டிறிபேர்க் கல்லூரியிலும் தீவகத்தைச் சேர்ந்தோர் வேலணையிலும் கெளரவிக்கப்பட்டனர். புதிய உடைகள், அன்பளிப்புகள் வழங்கல், விருந்தோம்பல் முதலான விடயங்கள் பெற்றோரை நெகிழ வைத்தன. தாங்கள் இழந்த பிள்ளைகளை அங்கிருந்த போராளிகளின் வடிவில் கண்டனர். இந்திய இராணுவ காலத்தில் ஒரு போராளி வீரச்சாடைந்தார். அவரது உடல் ஓரிடத்தில் எரியூட்டப்பட்டது. ஏதோ அனாதைகள் போல எங்கள் சகாவை எரிப்பது ஒரு போராளியின் மனதைத் தைத்தது. விடுதலைக்காகப் புறப்பட்ட வர்கள் என்றாலும் அவர்களுக்கான நிகழ்வு கெளரவமாக நடத்தப்பட வேண்டும்– எங்கள் கட்டுப்பாட்டில் ஒரு நிலம் இருக்குமாயின் தனிப் போராளிகளுக்கென ஒரு சுடலை அமைக்க வேண்டும் என ராஜன் நினைத்தார்.
துயிமில்லங்களின் உருவாக்கம்
நெருக்கடிகள் தானே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும். எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை காரணமாக பட்டினி கிடக்க வேண்டியேற்பட்டது. அந்த வலி மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் தான், தாம் முதலமைச்சராக வந்தபோது சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தான் சாப்பிடக் கூடிய நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் கல்வியை இடைநிறுத்தியிருக்க மாட்டார். இந்த நிலை தனது ஆட்சியில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது . முதலில் உணவுக்காகவேனும் பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் வரட்டும் என நினைத்தார்.
அதுபோல் வாழைத்தோட்டத்தில் சேரி வாழ்க்கையை அனுபவித்ததால்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குத் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென்று பிரேமதாஸ நினைத்தபடியால்தான் வீட்டுத் திட்டத்தில் அதீத அக்கறை காட்டினார். 10 லட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றினார். அதைப் போன்றதே போராளிகளுக்கான தனிச் சுடலை என்ற சிந்தனையும். ராஜன் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரானதும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த முனைந்தார். முதலில் நிலம் வேண்டுமே? சிறைச்சாலைத் திணைக்க ளத்துக்கு சொந்தமான நிலம் கோப்பாய்– இராசபாதையில் உள்ளது என்ற தகவலை ஒரு போராளி தெரிவித்தார். அதனையே போராளிகளின் சுடலையாக்குவோம் என முடிவெடுத்தார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜன். காணியைத் துப்புரவாக்குதல் போன்ற பணிகளில் பொ.ஐங்கரநேசனின் ‘தேனீக்கள்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டனர். அடுத்து சுட லையையும் வடிவமைக்க வேண்டும். யாழ்.நகரப் பொறுப்பாளராக இருந்த கமல் மாஸ்டர் (வீரச்சாவடைந்துவிட்டார்) தனது பணிமனைக்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து வந்த கட்டட வடிவமைப்பாளர் ஒரு வர் இருக்கிறார் என்று தெரிவித்தார். அவரையே வரவழைத்து சுடலைக்கான வடிவம் அமைக்கப்பட்டது. வடிவமைப்பாளர் கோரியபடி கந்தர்மடத்திலிருந்த பொறியியலாளர் பங்களிப்பும் கிடைத்தது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதபோதும் இருவரும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டனர். பொற்பதி வீதியிலுள்ள கட்டடத் தொழிலாளிகளின் பங்களிப்பில் நடந்த பணிகளில் உடலை எரிப்பதற்கான மேடையும் அடங்கியிருந்தது.
இதன்பின்னர் வீரச்செய்தியவர் ஒரு கிறிஸ்தவர். அவரை எப்படி எரிப்பது என்ற பிரச்சினை. அதுவும் தனிச் சுடலையில் ஏன் எரிப்பான் என்பது அடுத்த கேள்வி. விவகாரம் எழுந்ததும் ராஜன் அங்கு சென்றார். ‘‘பொதுச் சுடலையில் கண்ட காவாலி, கழிசறைகளையும் எரித்திருப்பார்கள். எங்கள் மகனோ புனிதமான மாவீரர். காவாலிகளை எரித்த இடத்தில் இவரையும் எரிப்பதை ஏற்கமாட்டார்கள் தானே?” எனக் கேட்டார். யதார்த்தத்தைப் புரிந்தனர் பெற்றோர். மேடையில் இவரது சடலம் எரிப்பதை ஒளிப்படமாக எடுத்து தலைவருக்குக் காண்பிக்கப்பட்டது. ‘‘தனி மயானம் நல்லதுதான்; நாங்கள் ஏன் எரிக்க வேண்டும்? புதைக்கலாமே?’’ இந்தக் கேள்வி தான் வித்துடல்களைப் புதைக்கும் வழக்குக்கு அத்திபாரம். அடுத்ததாக வீரச்சாவெய்துபவரின் வீட்டுக்கு சென்றபோது அங்கும் பிரச்சினை எழுந்தது. ஏன் எங்கள் பிள்ளையைச் சுடலையில் எரிக்காமல் புதைக்க வேண்டும்? என்று கேட்டனர். நீங்கள் மகனின் நினைவு எழும் போதெல்லாம் அந்த இடத்துக்குச் சென்று கும்பிடலாம். அழலாம். பூப்போடலாம் என்று விளக்கமளிக்கப்பட்டது.
வரலாற்றில் துயிலுமில்லத்தில் முதன் முதலாக விதைக்கப்பட்டவர் என்ற வரலாறு சோலை என்ற மாவீரருக்குக் கிடைத்தது. மாவீரரை விதைக்குமுன் வாசிக்கப்படும் வாசகங்களையும் (மாவீரர் பெயர் தவிர்த்தது )புதுவை அண்ணாவே எழுதினார்.
மாவீரர் பதிவுகள்
இந்தக்காலப் பகுதிகளிலே மாவீரர் பணிமனை முழு அளவில் செயற்பட ஆரம்பித்தது. இந்தியப் படையினரின் வருகைக்கு முன்னர் மாவீரர்களின் விபரம் பேணப்பட்டிருந்தது. எனினும் இந்தியப் படையினரின் காலத்தில் புதிதாக இணைந்து கொண்டோர் பற்றிய விவரம் தலைமைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்திலேயே இணைந்து அக்காலப் பகுதியிலேயே சிலர் மாவீரராகியும் இருந்தனர். எனவே இவ்வாறான விடயங்களைத் தெரிவிக்கும்படி பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பொன்.பூலோகசிங்கம் என்ற சட்டத்தரணியின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது. அவர் நாள்தோறும் தினக்குறிப்பு (டயரி) எழுதும் பழக்கமுடையவர். பத்திரிகைகளில் வரும் மாவீரர் இழப்பு, பொதுமக்கள் இழப்பு (படையினர் மற்றும் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை) குறித்து அவர் எழுதிய குறிப்புகளே மாவீரர் பட்டியலை கணிசமான அளவு சரியாக்க உதவிற்று. தாவடியில் தும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சில் லூக்காஸ் என்பவர் மாவீரரானார். ஆனால் இந்த மாவீரர் பற்றிய விவரம் எவருக்கும் தெரியாது. நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்று மட்டுமே தெரியும்.
1990 இல் ஈழநாதம் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டபோது வீரவணக்க விளம்பரங்கள் வெளிவந்தன. தங்கள் பிள்ளைகளை, உறவுகளை, நட்புகளை நினைவுகூர வசதியான சிலரால் மட்டுமே முடிந்தது. அதேசம்பவங்களில் வீரச்சாவெய்திய ஏனைய மாவீரர்களை எவரும் நினைவுகூரவில்லை. இதனைக் கண்ணுற்ற ஒரு போராளி அப்போதைய அரசியல் தலைமையை வகித்த மாத்தயாவிடம் இவ்விடயம் பற்றிக் குறிப்பிட்டார். நாளாந்தம் அதே நாளில் வீரச்சாவெய்தியோர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார். வருடம் 365 நாளில் மட்டுமல்ல 4 வருடங்களுக்கு ஒருமுறைவரும் (லீப்வருடம் ) பெப்ரவரி 29 இல் கூட மாவீரர் விவரம் உண்டு என்பதும் தெரியவந்தது. இதற்கென இயங்கிவந்த பணிமனை இரண்டு மாவீரர்களின் தந்தையான பொன்.தியாகம் அப்பாவின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டு மாவீரர் பணிமனையுடன் இணைக்கப்பட்டது. (பின்னர் இவர் மூன்று மாவீரர்களின் தந்தையானார். பள்ளமடுவில் இவரது மகளும் வீரச்சாவடைந்தார்) பெயரில், திகதியில், முகவரியில் என பல்வேறு தவறுகளுடன் இருந்த பட்டியல்கள் தியாகம் அப்பாவின் முயற்சியால் திருத்தப்பட்டன. மாவீரர் நிகழ்வுகள் பற்றிய சுற்றுநிருபங்கள் இந்தப் பணிமனையினால் விடுக்கப்பட்டன. இந்தப்பணிமனை கோரும் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிராந்தியத் தளபதிகளுக்கும் தலைவரும் உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தெந்தத் துயிலுமில்லங்களில் யார் ,யார் விதைக்கப்பட்டார்கள், வித்துடல் கிடைக்காத யார் யாருக்கு எங்கெங்கு நினைவுக்கல் உள்ளன போன்ற முழு விவரங்களும் இந்தப்பணிமனையில் இருந்தது.இதன் மூலம் மிகவும் காத்திரமான பணியை செய்துவந்தார் பொன் தியாகம் அப்பா.
‘‘தாயகக் கனவுடன்..”
1992 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. அப்போது மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய ஜெயா ஒரு ஆலோசனையை முன்வைத்தார். மாவீரர் பெற்றோரும் போராளிகளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உருவாக்கப்பட வேண்டும் என்றார். உடனே தலைவர் புதுவையண்ணாவைப் பார்க்க கையைப் பொத்தி பெருவிரலை உயர்த்திக் காட்டினார் புதுவையண்ணா.
ஈழநாதம், விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவை வெளிவந்த மாவீரர்கள் பற்றிய கட்டுரைகளை தனியான நூல்களாக வெளியிட வேண்டும் என்ற அறிவனின் யோசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துயிலு மில்லத்துக்கு வருவோர் தமது பிள்ளைகளின் நினைவாக வீடுகளில் நாட்டுவதற்கு அவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களுக்கு முன்னால் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைக்க வேண்டும் என்று பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் வைக்கப்பட்ட யோசனையும் ஏற்கப்பட்டது. இந்த யோசனை இன்று பல்வேறு வகையிலும் பின்பற்றப்படுவது ஆரோக்கியமான விடயம்.
ஜெயாவின் கருத்தை உடனடியாக செயலாக்கினார் புதுவையண்ணா. அதுதான் ‘‘தாயகக் கனவுடன்’’ என்று ஆரம்பிக்கும் மாவீரர் பாடல். மனதைப் பிழியும் இப்பாடல் இன்றுவரை மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள்மற்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. கண்ணன் இசையமைக்க வர்ணராமேஸ்வரன் குரலில் ஒலித்த பாடல் இது. கோப்பாய் துயிலுமில்லத்தில் தனக்குப் பக்கத்தில் நின்று நேரில் அதனைப் பாடவேண்டும் என்று அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் வர்ணராமேஸ்வரனின் வேண்டிக் கொண்டார். ஒலிபெருக்கியிலும் இந்தப்பாடல் இசையுடன் ஒலித்தது.
முதன்முதலாக இவ்வரிகளைக் கேட்ட மாவீரர் குடும்பத்தினர் கதறி அழுதனர். இப்பாடலின் ஒலிநாடாவை ஒரு போராளியிடம் (கரும்பறவை) வழங்கிய புதுவையண்ணை முதன் வரிகளைக் கேட்கும்போது உங்களுக்கு நினைவில் வரும் சம்பவங்களையும் கருத்துக்களையும் எழுதித் தாருங்கள் என்றார். அந்த விடயம் வெளிச்சம் இதழில் வெளிவந்தது. ஒரு மாவீரனின் தாயாரான மலரன்னையும் அன்றைய மாவீரர் நாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார்.
மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்சுடரை தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.1991 இல் இதனை மாத்தயா ஏற்றியிருந்தார். மாவீரர் பாடலில் வரும் ‘‘நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்’’ என்ற வரி ‘‘வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’’ எனப் பின்னாளில் மாற்றப்பட்டது. ஏனெனில் முன்னர் நள்ளிரவிலேயே மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது. பின்னரே தற்போதுள்ள மாலை 6.05 க்கு மாவீரர் சுடர் ஏற்றும் முறை வழக்கத்துக்கு வந்தது . தற்போதைய நேரமே முதல் மாவீரரான சங்கர் வீரச்சாவெய்திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயிரம் அளவில் மாவீரர்களின் விவரம் கிடைத்தன. இதன் பின்னர் தரவுகளைப் பேணவோ வழங்கவோ இயலக் கூடிய நிலையில் சூழல் அமையவில்லை.
https://eelamhouse.com/?p=2591
'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்'
இதனுள் தமிழீழத் தேசப் பாடகர்களில் ஒருவரான எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 'எழுச்சிப் பாடல்'களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்துப் பதிவிட்டுள்ளேன். சில பாடல்கள் விடுபட்டிருக்கக் கூடும். விடுபட்டவற்றை அறிந்தவர்கள் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவர் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள்
கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
பெரும்பாலான பாடல்களில் தமிழீழப் பாடகர் சாந்தன் அவர்களுடன் கூடப் பாடியவர்கள் யாரென என்னால் பிரித்தறிய இயலாமலுள்ளதால் அவர்களைக் வினாக்குறியால் குறித்துள்ளேன். அறிந்தவர்கள் தெரிவித்துதவவும்.
உசாத்துணை:
ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்
மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022
ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத படைத்துறைப் படையாகப் புலிகளை நிறுவியுள்ளது.
'ஆனையிறவினை மீட்டபின்னர், சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பேரரையர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்'
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலாட்படை உருவாக்கங்களும் வீறல் அதிரடிப்படைப் பிரிவுகளும் ஏப்ரல் 21 அன்று யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலில் அகலக்கால்பரப்பி பரந்து விரிந்திருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பின.
'ஆனையிறவையும் அதன் சுற்றுப்புறங்களையும் காட்டும் வரைப்படம். | படிமப்புரவு: தமிழ்நெற்'
புலிகளின் படைத்துறை உருவாக்கங்களை எதிர்கொள்ளும் அதன் தென்முகப்பில், ஆனையிறவுக் களப்பு, அதன் உவர்க்கம் மற்றும் கரையோர நிலப்பகுதிகளில் மூன்று முக்கிய வலுவெதிர்ப்புக் கோடுகளால் தானைவைப்பு வலுவாக அரணப்படுத்தப்பட்டது. இவை மைல்களுக்கு கற்காரை மற்றும் எஃகுக் கட்டமைப்புகள், கண்ணிவயல்கள், முட்கம்பி அடுக்குகள், கண்ணிவயல்கள் மற்றும் கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டன.
'களப்பினுள் தாட்டுப் புதைக்கப்பட்டிருந்த கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் | படிமப்புரவு: பெயர் அறியில்லா வலைப்பூ'
சிறிலங்கா தரைப்படையானது பூநகரி (நவம்பர் 93), முல்லைத்தீவு (ஜூலை 96), கிளிநொச்சி (செப்டம்பர் 98) ஆகிய தானைவைப்புகளைப் புலிகள் பரம்புவதற்காகக் கறந்த இவற்றின் வலுவெதிர்ப்பிலுள்ள ஓட்டைகள் மற்றும் வலுவீனங்களை கவனமாக கற்றறிந்தது; மற்றும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறையின் ஆலோசனை உள்ளீடுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான கேந்திர நுழைவாயிலை வைத்திருப்பதற்கு ஒரு அஞ்சத்தக்க அரண முறைமையைத் திட்டமிட்டுக் கட்டமைத்தன.
'ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கைக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் புலிகளின் தலைமையும் கட்டளையாளர்களும். | படிமப்புரவு: தமிழ்நெற்'
இந்த வலுவெதிர்ப்புகள் ஆனையிறவுக்கு நேராக வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு கொத்தளம் போல கட்டமைக்கப்பட்ட பரந்தனிலுள்ள ஒரு பெரிய சிறிலங்கா படைமுகாமால் காக்கப்பட்டன.
வடக்கில் அதன் பாரிய படைமுகாம்களின் வலுவெதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் "நிலையான அணுகுமுறையை" எடுத்துக்கொண்டதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் சிறிலங்கா தரைப்படையானது நீண்டகாலமாகத் திறனாயப்பட்டது.
அவர்கள் சிறிலங்கா படையத் தலைமையை வல்லோச்சான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறும், இளக்கமான, பெயர்ச்சியான வலுவெதிர்ப்புக் கோடுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பரப்பில் பதிதாக்கல் வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
ஆனையிறவின் அரணங்கள் மீளொழுங்குபடுத்தப்பட்டு வலுவூட்டப்பட்ட போது அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை.
ஆனையிறவின் வலுவெதிர்ப்பென்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகளின் எவ்வுருவத்திலுமான 'அதிர்ச்சி மற்றும் மதிப்பச்சம்' என்ற கேந்திரத்திற்குத் தடுப்பாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
சிறிலங்காவின் நவீன படைத்துறை வரலாற்றில் ஆனையிறவின் வலுவெதிர்ப்பின் ஆழம் முன்னிகழ்வற்றதாகும்.
அதன் பிற்பகுதியான யாழ் குடாநாடானது சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த போதிலும் அங்கு விடுதலைப்புலிகளின் தவிர்க்கவியலா கமுக்க நடவடிக்கைகளானவை படைத்துறை வகையாகப் புறக்கணிக்க முடியாததாகக் கருதப்பட்டது. 51, 52 மற்றும் 53 ஆகிய மூன்று படைப்பிரிவுகள், புலிகளால் அச்சுறுத்தப்பட்ட குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் படைகளைக் ஒருங்குவிக்கும் வகையில் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தன.
தானைவைப்பானது குடாநாட்டின் முக்கிய நகரத்திலிருந்து ஒரு கல்வீதிப்பாவாலான முதன்மை வழங்கல் பாதையையும் யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நிச்சயமற்ற முதன்மை வழங்கல் பாதையையும் கொண்டதால் 'முற்றிலும்' ஓம்பலானதாகக் கருதப்பட்டது.
பரந்தனின் நன்னீர் கிணறுகளிலிருந்து ஆனையிறவிற்கான நீர் வழங்கலிற்கான மாற்றீடு பின்புறத்தில், இயக்கச்சியில், தளத்திற்கு மைல்களிற்குப் பின்னால், பாதுகாப்பாகயிருந்தது.
இவற்றைத் தவிர, அதை அழிப்பதற்காக வலுவெதிர்ப்பு வேலிகளுக்குப் பின்னால் ஊடுருவும் புலிகளின் முயற்சியை முறியடிக்க, பலாலியில் ஒரு டசின் சேணேவிச் சுடுகலன்கள் அடங்கிய ஒரு சூட்டுத்தளம், ஆனையிறவு தானைவைப்பிற்குப் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஆழமாக’, அமைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தானைவைப்பின் வலுவெதிர்ப்பிற்குக் கொடுக்கப்பட்ட 'ஆழத்தின்' வலுவான கூறு, கட்டைக்காடு-வெற்றிலைக்கேணி கடற்கரையிலுள்ள சிறீலங்கா தரைப்படை, கடற்படைத் தளம் ஆகும். இது நிலம் மற்றும் வானின் தொடர்பு துண்டிக்கப்படும் போது, ஒடுவில் முயற்சியான வழங்கல் பாதையாக தொழிற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறிலங்காப் படைத்துறைத் தலைமையானது, அவர்களின் மேற்கத்திய பாடநூலின் 'வலுவெதிர்ப்பு ஆழம்' பற்றிய அறிவுக்கு இணங்க, புலிகள் ஆனையிறவின் 'வலுவெதிர்ப்பின் ஆழத்திற்கு' எதிராக, பாரிய கடல் கடப்புகள் மற்றும் படைத்துறை உருவாக்கங்களை போதுமான வேகத்துடன் நகர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கிய தடூகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சரியாகவே கருதினர்.
சிறிலங்கா படைய உசாவல் நீதிமன்றங்களின் அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிலங்கா தரைப்படை அதிகாரப் படிநிலை மற்றும் அதன் பிரித்தானிய/அமெரிக்க 'வலுவெதிர்ப்பு ஆலோசகர்கள்', முன்னோக்கிய படைநிலைகள் மீது தீவிரமான பல்லங்களை ஏவுவதன் மூலமும், முன்னோக்கிய தாக்குதல்களில் தற்கொலைப் படையினரின் அலைகளை வீசுவதால் ஊடறுத்து கட்டளை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை ஒரேயடியில் வீழ்த்துவதன் மூலமும், கடந்த காலத்தில், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை முகாம்களில் பேரளவிலான வெற்றியை பெற்றனர் என்ற பொதுவான பார்வையைக் கொள்ள முனைந்தனர்.
கொழும்பிலும் வெளிநாடுகளிலுமுள்ள மேற்கத்திய படைத்துறை மற்றும் புலனாய்வு ஆளணியினருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அல்லது ஆலோசனை செய்யும் சிங்கள வலுவெதிர்ப்பு ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்களால் இந்தக் கருத்து முக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
சிறிலங்கா தரைப்படை மற்றும் அதன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நண்பர்கள், ஆனையிறவு போன்ற பெரிய தானைவைப்பை கடுமையாக அச்சுறுத்துவதற்குத் தேவையான அளவிலான தடூகப் போர்முறைக் கேந்திரத்தை ஒருங்கிணைக்கும் திறனை தவிபு பெற்றிருக்கும் என்று வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கவில்லை.
20ஆம் நூற்றாண்டில், எந்தவொரு தேச எதிர்ப்பு ஆய்தக் குழுவும் அவ்வாறு செய்து வெற்றிபெறவில்லை - வியட் கொங் கூட.
('தியம் பியன் பூ'க்கான சமரானது அடிப்படையில் 200 சேணேவித் துண்டுகள் மற்றும் 20,000 வழக்கமான வழங்கல்துறை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆதரவுடன் 15,000 க்கும் மேற்பட்ட படையினரால் முற்றுகையிடப்பட்டதோடு வியட்நாமியருக்கு தனிப்பட்ட முறையில் சாதகமான நிலப்பரப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது ஆகும்.)
1997ஆம் ஆண்டுமுதல் போர் பற்றிய மெய்யுண்மைகளின் அடிப்படையில் அவர்களின் பார்வை ஏரணமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
மே 1997 முதல் நவம்பர் 1999 வரை சிறீலங்கா படைத்துறையின் 'ஜெய சிக்குறுய் நடவடிக்கை'க்கு எதிரான அவர்களின் வலுவெதிர்ப்புச் சமர்களில் புலிகள் வன்னியிலுள்ள முக்கிய மக்கள்தொகை மையங்களையும் (புளியங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், மாங்குளம்), 3000க்கும் மேற்பட்ட படையினரையும் (காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்கள்), மதிப்புமிக்க படையப் பொருட்களையும் இழந்தனர்.
'ஜெயசிக்குறுய் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர். | படிமப்புரவு: தமிழ்நெற்'
மென்மேலும், விடுதலைப் புலிகள் 1995-96 இல், தீவின் வடகிழக்கில் இயக்கத்தின் மிகப்பெரிய வருவாய்த் தளமான யாழ்ப்பாணத்தையும் இழந்தனர்.
எனவே, கடுமையாக வலுவெதிர்க்கப்பட்ட தெற்கு யாழ்ப்பாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான சிக்கலான தடூகப் போரைத் தொடங்குவதற்கும், பொருண்மத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் திறனற்றவர்கள் என்ற முடிவுக்கு சிறிலங்கா தரைப்படை மிகவும் ஏரணமாக வந்தது.
பின்னோக்கிப் பார்த்தால், ஆனையிறவுத் தானைவைப்பின் 'அசைக்க முடியாத பாடநூல்' மீதான சிறிலங்கா தரைப்படையின் நம்பிக்கையானது, அதைப் பார்வையிட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசதந்திரிகளின் பாராட்டுகளால் சிறியளவில் மீளுறுதிப்படுத்தப்பட்டதோடு, தெற்காசியாவின் நவீன படைத்துறை வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றுக்கு பங்களித்தது என்று ஒருவர் திறவினையாகக் கூறலாம்.
இது 1999 திசம்பரில் கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உள்ள சிறிலங்கா தரைப்படை-கடற்படைக் கூட்டுத்தளத்தைப் புலிகள் கறங்கி நொறுக்கியபோது கல்மேல் எழுதப்பட்ட எழுத்துப் போலானது.
ஆனையிறவுத் தானைவைப்பின் முக்கிய உவர்க்கத்தலை இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து, சிறிலங்கா தரைப்படையானது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட அதிசிறப்பு 53 வது படைப்பிரிவினரைக் கொண்டு, கட்டைக்காட்டிற்கு வடக்கேயுள்ள தாளையடி முகாமை விரைவாக வலுவூட்டியதோடு வத்திராயன் பெட்டியையும் கட்டியது.
புலிகள் முன்னோக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே திறன் கொண்டவர்கள், ஆனால் ஈரூடகத் தடூகத்திலில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே இந்த நகர்வு இருந்தது.
(வத்திராயன் பெட்டியின் கருத்தாக்கம், தாளையடியிலிருந்து ஏ9 வீதியில் புதுக்காட்டுச் சந்தி வரையிலான கனமாக அரணப்படுத்தப்பட்ட செவ்வகக் கொத்தளம், இந்தத் தற்கோளின் அடிப்படையிலேயே அமைந்தது)
சிறிலங்கா மற்றும் செந்தரப்படுத்தப்பட்ட மேற்கத்திய படைய ஞானத்தின்படி, எந்தவொரு விடுதலைப்புலிகளின் ஊடுருவல் குழுவும் தப்பிப்பிழைப்பதும் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு முக்கியமான பிற்பகுதியிலுள்ள முகாமையான சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளுக்கு ஒரு சிறும நிலைத்தன்மையற்ற அச்சுறுத்தலைக் கூடப் பொதிப்பதும் சாத்தியமற்றது என்று கருதப்பட்டது.
தொடர்ந்து வந்த மூன்று வாரங்களில், புலிகள், வான்வழி ஆதரவில்லாமல் பகையின் நன்கு வலுவூட்டப்பட்ட பிற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட சமரில் சண்டையிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நவீன படைத்துறை ஞானத்திற்கு மெய்ப்பித்துக் காட்டியதன் மூலம் இன்னும் தெரிவித்து பல கற்பிதங்களை சிதறடித்தனர்.
'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் விரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் தரையிறக்கத் தலைமைக் கட்டளையாளர் பேரரையர் பால்ராஜ். | படிமப்புரவு: தமிழ்நெற்'
26 மார்ச் 2000 அன்று, புலிகளின் மூத்த படையக் கட்டளையாளர் பேரரையர் பால்ராஜ், கடற்புலிகள் 1200 படையினரையும் அவர்களது படைய வழங்கல்களையும், உரகடலில் சிறிலங்கா கடற்படையின் ஒரு பெரிய கடலணி மூலம் அமைக்கப்பட்ட கடற்றடுப்பூடாக தங்கள் வழிக்குச் சண்டையிட்டு, சிறிலங்கா தரைப்படையின் பிற்பகுதியிலுள்ள, இரும்பு போர்த்திய வத்திராயன் பெட்டிக்கு அப்பால், குடாரப்பு-மாமுனையில் தரையிறக்கிய போது, ஒரு அரசின் மரபுவழி தரைப்படையின் எந்த ஆழமான பிற்பகுதி வலுவெதிர்ப்பையும் கேந்திர வான்வலு கொண்ட ஒரு ஆயுதப்படையைத் தவிர வேறு யாராலும் கடுமையாக அச்சுறுத்த முடியாது என்ற கருத்தாக்கத்தைப் பொய்ப்பித்தார்.
எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட போர்களை நடத்துவதில் ஒரு முன்னுதாரண பெயர்ச்சியை இது சைகை செய்வதை சிலர் கவனித்துள்ளனர்.
2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களினால் 2000 திசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.
மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர்.
அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர்.
அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.
இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.
அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.