எங்கள் மண்

மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

2 weeks 3 days ago

மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

November 25, 2025

மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது.

வீரத்தின் தன்மை.

1.தன் நாட்டைக்காத்தல்

2.நேர்மையாக இருத்தல்

3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல்

4.நினைத்ததை சாதித்தல்

5..விடாமுயற்சி

6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல்

இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின்  “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார்.

அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும்  மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” .

என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது.

ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது.

விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு  முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15  மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து  ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள்.

விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27  வரை 16  வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம்.

புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18  வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390  மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர்.

இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957  (ஆண்கள்:10834 பெண்கள்:4123

கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083,  (ஆண்கள்: 6580  பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282  பெண்கள்:68) 2009  ஜனவரி தொடக்கம் மே 18  வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009  மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல்  விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது.

அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009  கார்த்திகை,27  தொடக்கம் தற்போது 16  வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16  வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை .

2025 கார்த்திகை 27  மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம்.

https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகத்தை-உ/

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01

2 weeks 5 days ago

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1

வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது.

'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!'

நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின்.

உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான்.

'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!'

அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா

அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது.

ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது.

ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள்.

அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான்.

“போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு.

“போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள்.

அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்?

'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.'

இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான்
ஈஸ்வர்யாவும் நோக்கினாள்.

அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?”
அவள்:“ஈஸ்வர்யா.”
அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.”

அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது.

அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது.

"நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ."
"அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான்.

அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........

'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை'

பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல்.

பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்!

அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான்.

அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 02 தொடரும்

THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01

The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war.

It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope.

She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm.

She bent down to a frightened little boy and whispered,

“Don’t worry, kanna… write your name. I will protect your books.”

At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped.

“Even in a war?” he asked softly.

She looked up at him. Her smile was tired — but firm and unbreakable.

“Especially in a war.”

And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break.

That afternoon, he finally spoke to her.

“What is your name?” he asked.

“Ishwarya,” she replied.

“Meaning?” he teased gently.

“Grace and prosperity,” she said, then added with a faint smile,
“Though these days, just call me a wandering teacher of wandering children.”

Kavin smiled.
No one had spoken to him like that in months.
Her courage felt like warmth in a frozen desert.

Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun.

“Do you ever imagine a different world?” he asked.

She skipped a small stone across the surface of the water.

“I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.”

“And you?” he asked, turning towards her.

She looked at the distant horizon.

“I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.”

He laughed softly.

“When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.”

She stopped walking and turned to face him.

“No, Kavin… when this ends… you won’t just build a school.”

She looked into his eyes, with a hope that belonged to another world.

“You will rebuild a country.”

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

Chapter 02 Will follow

துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?

சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”

3 weeks 1 day ago

சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”

“அணையாத விளக்கு”
[ஆருரான் & மையழகி — போரின் விளிம்பிலிருந்து ஒரு காதல் கதை]

ஆரூரன் கொழும்பில் பிறந்து வளர்ந்த, சகவாழ்வில் இன்னும் நம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் இளைஞன். அவன் கொழும்பு றோயல் கல்லூரியில், தனது உயர் வகுப்புவரை படித்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அங்கு அவன் உயிரியல் பாடத்தில் தனது வகுப்புகளில் முதலிடம் பிடித்ததுடன், ஆங்கில மற்றும் தமிழ் விவாதக் குழுக்களுக்கும் தலைவராகவும் இருந்தான். மேலும் சிங்கள நாடக விழாக்களில் கூட சிலவேளை நடித்தான். யோசிக்காமல் மூன்று மொழிகளையும் மாற்றி மாற்றி பேசும் வல்லமை கொண்டவன். பள்ளியில் ஆங்கிலம், நண்பர்களுடன் தமிழ் மற்றும் சிங்களம், தனது குடும்பத்துடன் தமிழ் என, தன் வாழ்வை அமைத்த அழகான, வாட்டசாட்டமான, பயமற்ற தைரியம் கொண்ட இளைஞன் அவன்.

அவனது ஆசிரியர்கள் ஒருமுறை பள்ளி மன்றபத்தில் [school assembly], அவனை சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்: “அமைதிக்கு ஒரு முகம் இருந்தால், அது மென்மையான புன்னகையுடன் இருக்கும் இந்த சிறுவனாகத் தான் இருக்கலாம்.” என்று. அவன் பின்னாளில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ இளங்கலை, அறுவை சிகிச்சை இளங்கலை [MBBS] ஐ முடித்து பெருமையுடனும் நிம்மதியுடனும் தனது வெள்ளை அங்கியைப் பெற்றான். அவனது இலட்சியம் எளிமையானது: “யாரையும், எங்கிருந்தும் குணப்படுத்துவது, மகிழ்ச்சி கொடுப்பது”

அவனது முதல் நியமனக் கடிதம் வந்தபோது, அதில் பதியப் பட்டுள்ள "யாழ்ப்பாண போதனா மருத்துவமனை - ஜூனியர் ஹவுஸ் ஆபீசர்" என்ற வார்த்தைகளை உற்றுப் பார்த்தான். அவன் மகிழ்ச்சியில் சிரித்தான். அவன் இதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததில்லை. ஆனால் அவனது தந்தையின் பிறந்த இடம் அது, அவனது மூதாதையரின் வீடு, ஒரு காலத்தில் குண்டுகள் அழிக்கப்படுவதற்கு முன்பு அங்கு நிமிர்ந்து இருந்தது. அதன் படத்தை அவன் பலதடவை பார்த்துள்ளான். அதுதான் அவன் அங்கு சேவை செய்ய விரும்பினான்.

ஆனால், விதி தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நபரைச் சந்திக்க அங்கு அனுப்புகிறது என்பது அவனுக்குத் தெரியாது.

மையழகி — புத்தகங்கள், பரதநாட்டிய அணிகலன்கள், வேலிக்கு மேல் வளர்ந்த மல்லிகையின் மெல்லிய வாசனை, உயர்ந்து நிமிர்ந்து திடமாக நிற்கும் பனைமரம், செவ்வரத்தம் பூமரம் என பலவற்றால் நிரம்பிய ஒரு வீட்டில் பிறந்தாள். அவள் வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தாள், அங்கு அவள் தனது வகுப்புகளில் முதலிடம் பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்திலும் சிறந்து விளங்கினாள். அவள் வடக்கிற்கு வெளியே ஒருபோதும் காலடி எடுத்து வைத்ததில்லை. அதுமட்டும் அல்ல, அவளது ஒரே மொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் - ஆனால் அவளது கனவுகள் பரந்ததாக இருந்ததால் அவளது உலகம் பரந்ததாகவே இருந்தது.

மையழகி தான் மருத்துவராக வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்தாள். மிகவும் நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கூட சிரிக்க வைக்கக் கூடிய ஆற்றல் அவளுக்கு இருப்பதாக, அவளது நண்பர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அவளின் இளமை, அழகு, நளினம் , நடை, உடை எவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

காமரம் முரலும் பாடல், கள், எனக்
கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்
அணங்கு ஆம்" என்னத்
தாமரை இருந்த தையல், சேடி
ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது
ஏழைமைப்பாலது அன்றோ?

காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் மையழகி பற்றி எப்படி சொல்ல முடியும்.

என்றாலும் போர் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் அச்சுறுத்தியது. ஆனால் அவள் படிப்பை நிறுத்த மறுத்துவிட்டாள். கனவு காண்பதை நிறுத்த மறுத்துவிட்டாள். வாழ்ந்து காட்டுவேன் என்று பனைமரம் போல் துணிந்து நின்றாள்.

அவர்கள் இருவரும் ஒரு ஈரப்பதமான காலையில், மருத்துவமனை வார்டு கண்காணிப்பின் போது சந்தித்தனர். ஆரூரன் ஒரு நோயாளியின் அட்டவணையை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தபோது, மையழகி வெள்ளை கோட் படபடவென்று ஆட , தலைமுடி லேசாக பின்னப்பட்ட நிலையில், உள்ளே நுழைந்தாள். “ஆயுபோவன் … ஓ—மன்னிக்கவும்,” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே தன்னைத் திருத்திக் கொண்ட, ஆரூரன் “வணக்கம். நீ மையழகியாகத்தான் இருக்க வேண்டும்?” என்று ஆரூடம் கூறினான்.

அவள் கண் சிமிட்டினாள். கொழும்பிலிருந்து வந்த பெரும்பாலான மருத்துவர்கள் அவ்வளவு எளிதாகத் தமிழ் பேச மாட்டார்கள். அன்று காலை முதல், நோயாளர்களின் மருத்துவ விவாதங்கள் மூலம் உருவான நட்பு மெதுவாக மென்மையான, சொல்லப்படாத அன்பாக மலர்ந்தது. அவளுடைய அமைதியான வலிமையை அவன் பாராட்டினான். அவனுடைய கருணையை அவள் பாராட்டினாள்.

தெற்கிலிருந்து இங்கு வாழும் நோயாளிகளுடன் அவன் சிங்களத்தில் சரளமாக பேசியபோது, அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் மருத்துவச் சொற்களை குறைபாடற்ற ஆங்கிலத்தில் விளக்கியபோது, கவிதையைக் கேட்டு ரசிப்பது போல் அவளைப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் ரசித்தனர். காலப் போக்கில், அவர்கள் தங்களுக்கென ஒரு சிறிய உலகத்தை உருவாக்கினர்.

ஆனால் போர் இறுக்கமடைந்தது. சோதனைச் சாவடிகள் பெருகின. சந்தேகம் அதிகரித்தது.

இளம் தமிழ் சிறுவர் சிறுமிகள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், அதிகளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர், விசாரிக்கப்பட்டனர், தடுத்து வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் பற்றிய வதந்திகள் பரவின. செம்மணி அருகே ஆழமற்ற கல்லறைகளில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. கடமைகள் செய்ய வேண்டியிருந்தது.

ஒரு மதியம், ஆருரன் அவளைத் தனது மோட்டார் சைக்கிளில், அவளின் வீட்டிற்கு இறக்கிவிட முன்வந்தான். அவனுக்கு சாலைகள் நன்றாகத் தெரியும். அவனுக்கு மொழி நன்றாகத் தெரியும். எனவே அது அவர்களைப் பாதுகாக்கும் என்று அவன் நம்பினான். அவர்கள் செம்மணி சோதனைச் சாவடியை நெருங்கினர். மணல் மூட்டைகள். துப்பாக்கிகள். காற்றில் சுழலும் சற்று கிழிந்த இலங்கைக் கொடி அங்கு காணப்பட்டது.

சோதனைச் சாவடி நெருங்க, ஆருரன் மோட்டார் சைக்கிளை மெதுவாக்கினான். மையழகி அவனின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்தாள். அவர்கள், அங்கு நின்ற இராணுவ வீரர்களால் கீழே இறக்கப்பட்டனர்.

முதலில் வீரர்கள் ஆருரனின் அடையாள அட்டையைச் சரிபார்த்தனர். “டாக்டரா? கொழும்பு?” அவர்களின் தொனி மாறியது. அவர் “ஏற்றுக்கொள்ளத்தக்கவர்.” ஆனால் மையழகியின் அடையாள அட்டையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - மருத்துவ பீடம்” என்று இருந்தது. ஒரு சிப்பாயின் கண்கள் சுருங்கின. “இளங்கலைப் பட்டதாரியா? நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் யாரைச் சந்திக்கிறீர்கள்?” தொனி கூர்மையாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது.

ஆருரன் உடனடியாக முன்னுக்கு வந்து, சிங்களம் மூலம் அவர்களுடன் அமைதியாக, சரளமாக பேசினான். “அவள் என் சக ஊழியர். ஒரு மருத்துவ மாணவி. நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். அவள் அப்பாவி.” ஆனால் அவனது சிங்களம் அவர்களை மேலும் கோபப்படுத்தியது. சிங்களம் நன்றாகப் பேசி, தங்களுடன் எதிர்த்து வாதிடுகிறான். அது ஒன்றே காணும், அவன் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறான் என்று சந்தேகிக்க என்று இராணுவ வீரர்கள், வழமைபோல்
நினைத்தார்கள்.

ஒரு இராணுவ வீரன் திடீரென்று தன் கையால் அறைந்தான். பின்னர் அடித்தார்கள். அவன் தரையில் விழுந்தான். மற்றோரு இராணுவ வீரன் பூட்ஸ் காலால் உதைத்தான். துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கினர். அதனால், அவன் மூச்சுத் திணறும்போது, அங்கேயே அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் மையழகியை முகாமை நோக்கி இழுத்துச் சென்றனர்.

அவன் ஒருவாறு தவழ்ந்து, தன் கை நீட்டி - "நிறுத்து! அவள் ஒரு பெண்! அவள் ஒரு மாணவி! தயவுசெய்து - தயவுசெய்து -" என்று கத்தினான், கெஞ்சினான். ஆனால், உடனடியாக ஒரு சிப்பாய் அவன் முகத்தில் அடித்தான். ஒரு ஐந்து ஆறு இராணுவவீரர்கள் தங்களுக்குள் சிரித்து பேசியபடி மகிழ்வாக பின் தொடர்ந்தனர்?

ஆருரன் சாலையோர மணலில், இரத்தம் வழிய, அரை மயக்கத்தில் கிடந்தான். முகாம் வாயிலை அங்கிருந்து அரைகுறை மயக்கத்தில் பார்த்தான். நுழைவாயிலில் புத்தர் சிலை சிறப்பாக குந்தி இருந்தது. அங்கே இரண்டு துறவிகள் பிரித் சத்தமாக உச்சரித்துக் கொண்டிருந்தனர். அது உலக மக்களின் ஆசிர்வாதத்திற்கான தாள ஒலி - ஆனால், அதே காற்றினால் சுமந்து செல்லும் அலறல்களின் கொடூரமான சத்தம் பறைமேளமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

அவள் குரல் கேட்டது. குறுகிய அழுகைகள். பின்னர் மூச்சுத் திணறல். பின்னர் அமைதி. பின்னர் மீண்டும் - அழுகை ... முனகல் ... பலவீனம்... கெஞ்சுதல்.

அவன் நிற்க முயன்றான் .... முடியவில்லை ... சரிந்தான் .... மீண்டும் முயற்சித்தான். ஒரு சிப்பாய் அவனை எட்டி உதைத்தார். "அங்கேயே இரு. இல்லையெனில் நீ சாவாய்." என்று கத்தினான்.

அவனுக்கு மணிநேரங்கள் வருடங்கள் போல கடந்தன. முகாமில் இருந்து வரும் ஒவ்வொரு சத்தமும் அவனை நெஞ்சில் குத்தியது. ஒரு கட்டத்தில் அவன் கண் , உணர்வு எல்லாம் இருண்டு போய்விட்டது.

விடிந்ததும், முகாம் மிகவும் அமைதியாக இருந்தது. வீதியின் ஒருபுறம் சுடலையருகேயும் மறுபுறம் வயல் வெளிகளாகவும் இருந்தன,

ஆருரன் சாலையை நோக்கி ஊர்ந்து சென்றான். அந்த வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர் அவனைப் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாதால் அவன் உயிர் பிழைத்தான்.

மையழகி வீட்டிற்கு வரவில்லை. அவளுடைய பெற்றோர் தேடினர். அவளுடைய நண்பர்கள் தேடினர். மனித உரிமைக் குழுக்கள் தேடினர். ஆனால் எந்த விபரமும் இல்லை. செம்மணி இராணுவத்தினர் தமக்கு தெரியாது என்று , அதே புத்தர் சிலைக்கு முன்பே கைவிரித்தனர்.

ஆனால், சமீபத்தில் செப்டம்பர் 2025 வரை, செம்மணி வெகுஜன புதைகுழி தளத்தில், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 240 மனித எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் 239 முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிப் பகுதியை ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்க்கர் தூர்க் 2025 சூன் 25 அன்று நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அரசாங்கம் அனுமதித்து தேவையான வசதிகளை வழங்கினால், அடுத்த அகழ்வாராய்ச்சியில் இன்னும் நிறைய உடல்கள் காத்திருக்கிறது. அதில் மையழகியும் ஒன்றாக இருக்கலாம்? மண் பல பாவங்களை மறைத்தது ஒவ்வொன்றாகத் தெரிய வருகிறது.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே
கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே
செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே
காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே
பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே
புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே
அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே
விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே
விளக்கம் இல்லாத மதபோதனை எனோ
களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே
இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே
பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே
சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்கோ!

அன்றிரவு பணியில் இருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுக்கடங்காத ஆண்களால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கிசுகிசுத்தனர். 1996 ஆம் ஆண்டு இராணுவ சோதனைச் சாவடியில் காணாமல் போய் பின்னர் கொலை செய்யப்பட்ட இளம் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் துயரத்தை அவளுடைய விதி எதிரொலித்தது, மேலும் அவளைத் தேடிய குடும்ப உறுப்பினர்களும் அதே இராணுவ சோதனைச் சாவடி உறுப்பினர்களால் கொல்லப்பட்டது வரலாறு மட்டும் அல்ல, சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மற்றவர்கள் அவள் எப்படியோ தன்னைத் துன்புறுத்தியவர்களிடமிருந்து தப்பித்து, பின்னர் விரக்தியில் தன்னைத் தானே மாய்த்து இருக்கலாம் என்று கற்பனை செய்தனர். இருப்பினும், உண்மை செம்மணி மண்ணில் புதைந்துவிட்டது . ஆனால் ஆரூரனுக்குத் தெரியும். இரவுக் காற்றால் சுமந்து செல்லும் அவளுடைய கடைசி அழுகையை அவன் கேட்டிருந்தான். அவளுடைய இறுதி மணிநேரங்கள் எப்படி வெளிப்பட்டன என்பதை அவன் மட்டுமே புரிந்துகொண்டான் - அது அவனுக்குள் எரிந்துகொண்டு இருக்கிற ஒரு நினைவு, இதயத்தில் மூட மறுத்த ஒரு காயம்.

இராணுவ உளவுத்துறையின் அச்சுறுத்தலுக்கு ஆளான ஆரூரன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கையை விட்டு தற்காலிகமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

மருத்துவமனைகளில் உடனடியாக வேலை கிடைத்து, அங்கே, அவன் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கினான். அத்துடன் பல்வேறு நாடுகளிலிருந்து, முக்கியமாக இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் அகதிகளுக்கு உதவினான். ஆனால் அவன் எந்த சந்தர்ப்பத்திலும் அவளுடைய நினைவை மட்டும் விடாமல் எல்லா இடங்களிலும் சுமந்து சென்றான்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, மையழகிக்கும் அவளைப் போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், மற்றும் அவனைப் போன்ற ஒவ்வொரு பையனுக்கும், அவன் ஒரு விளக்கை ஏற்றி வைக்க என்றும் மறப்பதில்லை.

“இந்த நாள் ஏன் இவ்வளவு முக்கியமானது?” இங்கிலாந்தில் உள்ள மக்கள் கேட்டபொழுது, அவன் மெதுவாக ஆனால் ஆணித்தரமாக, “ஏனென்றால் காதல் அங்கே இறந்துவிட்டது. ஏனென்றால் உண்மை அங்கே புதைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மௌனம் இன்னும் அங்கே அழுகிறது.” என்று பதிலளித்தான்.

சில நேரங்களில், யாரும் பார்க்காதபோது, அவன் தீபத்துக்கு கண்ணீருடன் கிசுகிசுப்பான்:

"மையழகி...

என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை.

ஆனால் உலகம் உன்னை மறக்க விடமாட்டேன்."

நன்றி

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

“The Lamp that Did Not Go Out”
[Aaruran & Maiyazhagi — A Love Story from the Edge of War]

I. The Boy from Colombo

Aaruran—ஆரூரன்—grew up in Colombo, the child of a Tamil family that still believed in coexistence. He studied at Royal College, where he topped his classes in biology, captained the debate team, and even acted in Sinhala drama festivals. He was the boy who could switch languages without thinking: English in school. Tamil & Sinhala with friends. Tamil with his family.

His teachers said: “If peace had a face, it might be this boy with the gentle smile.” He completed his MBBS at the University of Colombo, receiving his white coat with pride and relief. His ambition was simple: “To heal—anyone, from anywhere.”

When his first appointment letter arrived, he stared at the words: “Jaffna Teaching Hospital — Junior House Officer.” He smiled. He had never lived in Jaffna before. But that was where his father was born, where his ancestral house once stood before shells destroyed it. He wanted to serve there.

He did not know that fate was sending him to meet the one person who would change his life forever.

II. The Girl from Jaffna

Maiyazhagi—மையழகி—was born in a house filled with books, Bharatanatyam bells, and the faint smell of jasmine that grew over the fence. She studied at Vembadi Girls’ High School, where she topped her classes and excelled in English literature. She had never stepped outside the North. Her only languages were Tamil and English— but her world was wide because her dreams were.

She entered the Faculty of Medicine, University of Jaffna, with the clear purpose of becoming a pediatrician. Her friends said she had a gift: she could make even the sickest child smile.

War threatened everything around her. But she refused to stop studying. Refused to stop dreaming.

III. The Meeting in the Ward

They met on a humid morning during rounds. Aaruran was reviewing a patient chart when she walked in, white coat fluttering, hair lightly braided. “Ayubowan… oh—sorry,” he corrected himself with a shy laugh, “Vanakkam. You must be Maiyazhagi?”

She blinked. Most doctors who came from Colombo did not speak Tamil with such ease. From that morning, friendships formed over case discussions slowly bloomed into a gentle, unspoken love. He admired her quiet strength. She admired his kindness.

When he spoke Sinhala with patients who fled from the South, she watched, amazed. When she explained medical terms in flawless English, he looked at her as if discovering poetry.

They completed each other. In a world tearing itself apart, they built a small world of their own.

IV. Shadows Near Chemmani

But the war tightened. Checkpoints multiplied. Suspicion deepened.

Young Tamil boys and girls—especially university students—were increasingly stopped, questioned, detained. Rumors spread of disappearances. Of bodies found in shallow graves near Chemmani. Still, life had to be lived. Exams to be written. Duties to be done.

One afternoon, Aaruran offered to drop her home on his motorbike. He knew the roads. He knew the language. He believed that would protect them. They approached the Chemmani checkpoint. Sandbags. Rifles. A torn Sri Lankan flag twisting in the wind.

Aaruran slowed the bike. Maiyazhagi tightened her hold around his waist. They were flagged down.

V. The Checkpoint

The soldiers checked Aaruran’s ID first. “Doctor? Colombo?” Their tone changed. He was “acceptable.” But Maiyazhagi’s ID said: “University of Jaffna – Medical Faculty.” A soldier’s eyes narrowed. “Undergraduate? What are you doing here? Where are you going? Who are you meeting?” The tone was sharp, rehearsed, dangerous.

Aaruran stepped forward immediately. He spoke Sinhala—calmly, fluently. “She is my colleague. A medical student. We work together. She is innocent.” But his Sinhala only seemed to anger them more. A Tamil who spoke Sinhala well, who argued back— that was threatening.

The slap came suddenly. Then the blows. He fell to the ground. Boots kicked. Rifle butts struck. Even as he gasped for breath, he heard them dragging her toward the camp.

He crawled, reached out— “Stop! She is just a girl! She is a student! Please—please—” One soldier struck him across the face.

VI. A Nightmare with No Sunlight

He lay in the sand by the roadside, bleeding, half-conscious. He saw the camp gate. The Buddha statue at the entrance. Two monks chanting pirith loudly there, the rhythmic sound meant for blessings — but here it felt like a cruel mockery of the screams carried by the wind.

He heard her voice. Short cries. Then choked ones. Then silence. Then again— fading… weak… pleading.

He tried to stand. Collapsed. Tried again. A soldier kicked him down. “Stay there. Or you die.”

Hours passed like years. Every sound from the camp stabbed him. At some point he blacked out.

VII. What Happened After

When dawn broke, the camp was silent. Too silent.

Aaruran crawled toward the road until a passing lorry driver saw him and took him to a clinic. He survived—but barely.

Maiyazhagi never came home. Her parents searched. Her friends searched. Human rights groups searched.

But, as recently as September 2025, a total of 240 human skeletal remains, including many women and children, were identified at the Chemmani mass grave site, It is worth noting that 239 of them were completely excavated.It is also worth noting that the UN High Commissioner for Human Rights, Volker Durk, personally visited the mass grave discovered in Chemmani on June 25, 2025. If the government allows and provides the necessary facilities, there are many more bodies waiting to be excavated in the next excavation. Could Meizhagi be one of them? The soil is revealing the many sins it has hidden, one by one.

Buried in red earth, they do not sleep—
little innocent bodies the soil itself refuses to hold,
while wild men dance above their graves.

A schoolgirl lies shattered,
her schoolbag still beside her.
Buddha’s teachings lie in dust,
yet worship is done with one hand,
while the other hand commits atrocities
against Tamil-speaking, non-Buddhist people—
denying justice, taking their lands,
and twisting the Dharma into a tool for conquest.

Even animals show some culture.
Blind preaching without truth
defiles this sacred soil.

Rows of bones speak pain;
tiny remains expose the sin.
O Buddha, who came to end suffering—
why do your name and statues now march
to erase other lives and cultures?

Some whispered that she may have been sexually assaulted by one or more unruly men who were on duty that night and was later killed. Her fate echoed the tragedy of Krishanthi Kumaraswamy — the young Tamil schoolgirl who vanished at an army checkpoint in 1996 and was later found murdered, along with the family members who searched for her. Others imagined she had somehow escaped her tormentors, only to surrender later to despair. The truth, however, lay buried in shadow. But Aaruran knew. He had heard her last cries carried by the night wind. He alone understood how her final hours unfolded — a memory that burned within him, a wound that refused to close.

VIII. The Man Who Survived to Speak

Threatened by military intelligence, unable to sleep, unable to stay, Aaruran migrated to England, leaving Sri Lanka temporarily through Katunayakka International Airport

He built a new life. Worked in hospitals. Helped refugees who come to England from varies countries, mainly Srilanka . But he carried her memory everywhere.

On November 27, each year, he lights a lamp. For Maiyazhagi. For every girl like her. For every boy like him. For every dream that was cut down too soon.

People in England ask him: “Why does this day matter so much?”

He answers softly:

“Because love died there. Because truth is buried there. Because silence still cries there.”

And sometimes, when no one is watching, he whispers into the flame:

“Maiyazhagi…

I could not save you.

But I will not let the world forget you.”

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

துளி/DROP: 1908 [சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32487883494193544/?

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர.

1 month ago

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர

------------- -

* 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார்.

* ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து

* அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி

------ -

அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது.

ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம்.

அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு.

தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம்.

ஆனால் --

வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன?

தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ----

A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்...

B) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்...

C) சர்வகட்சி மாநாடு என்பர்...

D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர்.

இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும்.

இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது.

இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்...

குறிப்பாக ---

2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர.

ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார்.

அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர.

அதாவது ---

நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர்.

ஆகவே --

அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர.

ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா?

பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும்.

உண்மையும் அதுதானே!

ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...?

1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார்.

2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார்.

3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார்.

4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்...

இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்...

இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு.

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது?

ஆனால் ---

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ----

------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா?

1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன?

அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது...

2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன?

A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை”

B) ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்”

C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்”

இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு.

இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே?

மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே?

அதென்ன?---

தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது?

சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்!

ஆகவே

இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு...

ஆனால்---

சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து”

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.

1 month 1 week ago

 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.

written by admin November 1, 2025

1000173468.jpg?fit=1080%2C720&ssl=1

பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது.

ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன்.

துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும்.

பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை.

ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார்.

இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார்.

துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.

துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார்.

ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது.

கிரிஜா மானுஶ்ரீ

கிழக்கு பல்கலைக்கழகம்


https://globaltamilnews.net/2025/222165/

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

1 month 1 week ago

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

sachinthaOctober 30, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு.

அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள்.

பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார்.

உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது.

ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன.

பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது.

இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது.

அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும்.

இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும்.

இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது.

யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது.

யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம்.

பானுஷா நிமல்…

ஊடகக் கற்கைகள் துறை,

யாழ் பல்கலைக்கழகம்

https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/

ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..!  : பா. அரியநேத்திரன்

1 month 2 weeks ago

ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..!  : பா. அரியநேத்திரன்

October 27, 2025

ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

2. 1990 அக்டோபர்  30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம்.

3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம்.

இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் மாதத்தில் இடம்பெற்றவை. யாழ்ப்பாண நகரம் 1980, தொடக்கம் 1995 வரை 15, ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான கோட்டையாக இரு ந்து வந்தது. ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் 1987 யூலை29, இலங்கை ஒப் பந்தம், 1987ஆகஷ்ட் 04ல் தலைவர் பிரபாகரனின் சுதுமலை பிரகடனம் எல்லாம் இடம்பெற்றது. 1987 அக்டோபர் 10ல் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும்  போர் ஆரம்பித்த பின்னர் சரியாக 11,  தினங்களால் 1987 அக்டோபர் 21ல்  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட மிலேச்சத்தன மான படுகொலையால் 70 தமிழர்கள் கொன்றழி க்கப்பட்டு 2025-10-21ம் திகதியுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

1990, செப்டம்பரில் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணம் அம் பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக் களப்பு மாவட்டம் கதிரவெளிவரையும் முஸ்லீம் ஊர்காவல்படையினர் இலங்கை இராணு வத்துடன் இணைந்து பல தமிழ் கிராமங்களில் இனப்படுகொலைகளை மேற்கொண்டனர் அத னால் முஸ்லீம் கிராமங்களான காத்தான்குடி, ஏறா வூர் பகுதிகளிலும் முஸ்லீம்மக்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் முஸ்லீம்மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்தால் விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர், 30ல் யாழ்ப்பாண முஸ்லீம்மக்கள் பாதுகாப்பாக ஒரே நாளில் வெளியேறிய சம்பவம் வருகின்ற 2025-10-30 ம் திகதியுடன் 35ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.

1995 ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 17 இல், இலங்கை இராணுவத்தி னர் 10,000 பேர் யாழ்ப்பாண நகரத்திற்கு  25 மைல் தொலைவில் போரை தொடரத் துவங்கினர்.

அது தொடர்ந்ததமையால் யாழ் குடா நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் 1995, அக்டோபர் 30ல் இடம்பெயர்ந்தனர். அது இடம்பெற்று 2025, அக்டோபர் 30ல் 30ம் ஆண்டு நினைவாகும்.இந்தத் தாக்குதல் 1995, திசம்பர் 05, வரை நீடித்தது. இந்த 50 நாள் போரில் 300 வரையிலான இலங்கை இராணுவ வீரர்களும், 550இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக அப் போது கூறப்பட்டது.

இறுதியில் இராணுவம் புலிகளிடமிருந்து நகரத்தையும் குடாநாட்டையும் கைப்பற்றியது. இதனால் விடுதலைப்புலிகள்  வன்னியில் சென்று தமது படைத்தளத்தை முழு மையாக பலப்படுத்தினர்.

1995 அக்டோபரில் யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் விடுதலைப்புலிக ளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாத நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று அப் போது நினைத்திருக்க வில்லை.

இலங்கைப் படையினரின் ‘ஒப்பரேசன் ரிவிரச’ இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெற்றது. இச்சண்டையைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணு வத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, வலிகாமம் பகுதி முழுமை யாகப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி முழு வதும் படையினரால் கைப்பற்றப்பட்டு, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக் கோடு 1995 அக்டோபர் 17ம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்ப ரேசன் ரிவிரச, சூரியக்கதிர் என்னும் இராணுவ நடவடிக்கையை அடுத்து இலங்கை இராணுவத் திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது.

அந்த இராணுவ நடவடிக்கை கந்தசஷ்டி விரத காலம் ஆலயங்களில் எல்லாம் விசேட பூசை வழிபாடுகள் நடந்த வேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போது பேசும் பொருளாக வடக்கு கிழக்கு முழுவதும் ஆச்சரியத்தை தந்திருந்தது.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு  விடுதலைப்புலிகள் ஒலிபெரு க்கி மூலமாக அறிவிப்பு விடுத்தனர்.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல் லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிக ளின் கைகளில் தான் மீண்டும் இருந்தது. இடப் பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் விடுதலைப்புலிகள்.

மீண்டு இராணுவம் யாழில் விடுதலைப் புலிகளுடன் ஆங்காங்கே மோதல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விடுதலைப்புலிகள் யாழ் குடா நாட்டில் இருந்த படைமுகாங்களை வன்னிக்கு நகர்த்தினர்.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத் துக்கான யுத்தம் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், புலிகளால் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய யுத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் இராணுவம் அறிவித்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்த தாக மக்களாலும்நம்பப்பட்டது.

1995 திசம்பர் 23ல், மட்டக்களப்பு மாவட் டத்தில் இராணுவப் பிரிவு ஒன்றின் மீது விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 33 படையினர் கொல்லப்பட்ட போது போர் முடிவு க்கு வரவில்லை என்பது உறுதியானது. அடுத்த ஏழு மாதங்களில் புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைத்தனர்.

யாழ்குடா நாட்டில் இருந்து வன்னி காட்டுக் குள் தமது படைகளை மீளவும் மறுசீரமைத்த விடுதலைப்புலிகள் தாம் யாழ் குடா நாட்டில் கற்றுக்கொண்ட பாடத்தை மீள் பரிசீலனை செய்து 1996 ஜனவரி 22ல் இலங்கை வான் படையினரின்  M.J:17 உலங்குவானூர்தி பருத்தித்துறைக் கடலில் 39, படையினருடன் வீழ்ந்தசம்பவம், 1996, யூலை18ல்,   முல்லைத்தீவில் உள்ள படைத்தளத்தின் மீது  ஓயாத அலைகள் நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல் லப்பட்டதுடன் இராணுவ தளமும் அழிக்கப்பட் டது.

2000, மார்ச், 26ல் ஆனையிறவு இராணுவ முகாம் கைப்பற்றியது, இவ்வாறு இன்னும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒரு கரந்தடி தாக்குதல் அணியாக தோற்றம் பெற்ற விடுதலைப்புலிகள் மரபுப்படையணியாக வளர்ச்சிபெற்று 2009 மே 18, வரையும் போராடி மௌனித்தனர். இலங்கை இராணுவத்தால் அவர் களை தோற்கடிக்காதபோதுதான் உலகநாடுகள் 32க்கு மேல் இலங்கைக்கு உதவியதன் நிமிர்த்தம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித் தது என்பதே வரலாறு.

ஈழப்போர் வரலாற்றில் 1987, 1990, 1995, ஆகிய மூன்று வருடமும் அக்டோபர் மாதமும் மறக்க முடியாத மாதமாகும்..

https://www.ilakku.org/ஈழப்போர்-காலத்தில்-மறக்க/

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

1 month 4 weeks ago

சில கேள்விகள் - சில புரிதல்கள்

----- -------- ------

*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

* 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்?

*ஜெனிவாவின் மடைமாற்றல்!

-------- --- ------

இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது.

13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு.

ஆனால் ---

ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை.

சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார்.

இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்...

ஆகவே ------

A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்?

B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்?

அப்படியானால் ----

13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா?

இல்லையே?

1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே?

2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே?

இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது.

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது...

அது மாத்திரமல்ல ---

ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்?

அத்துடன் ----

ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது.

இந்த மடைமாற்றங்கள் ---

ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்?

புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது.

ஆகவே -----

ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்-----

-------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------

அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்?

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

2 months ago

IMG-2745-Original.jpg

1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது.

இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார்.

நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை.

இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார்.

இதனால் சோதனைக்கு வரும் கேள்விகள் இவருக்கு முதலே தெரியவருகிறது என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு.

வீதிகளில் எப்ப கண்டாலும் 5 வினாடிகள் என்றாலும் கதைக்காமல் போக மாட்டார்.அவ்வளவு ஒன்றிப் போயிருந்தோம்.

1977 களில் வெளிநாடு வெளிக்கிட்ட பின்பு என்ன ஆனார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தேன்.அனேகமாக வெளிநாடு சென்றிருப்பார் என எண்ணியிருந்தேன்.

இரு தினங்களுக்கு முன் முகப்புத்தகம் ஊடாக இந்த செய்தியைப் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது.

இளம் வயதிலேயே காலமாகியுள்ளார்.காலமாகி 5 வருடங்களின் முன் காலமாகியுள்ளார்.

எப்படி காலமானார்?சுகயீனமாக இருந்தாரா?குடும்பம் பிள்ளைகள் என்று இருந்தாரா?

எதுவுமே தெரியவில்லை. என்னைப் போல இதை வாசிக்கும் நீங்களும் இவரைப் பற்றி முன்னரே அறிந்திருக்கலாம்..இவரிடம் படித்திருக்கலாம்.ஏன் இவர் இறந்த செய்தி கூட தெரியாமல் இருக்கலாம்.

யாருக்காவது விபரங்கள் தெரிந்திருந்தால் அறியத் தரவும்.

நன்றி.

ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம்

2 months ago

மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா.

adminOctober 10, 2025

ba.jpg?fit=797%2C753&ssl=1

பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர்.

ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலைமுறையினராகவே தற்போதைய சிறுவர்கள் காணப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு காலத்தில் இருந்து கொண்டு நான் பயணம் செய்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் மீண்டும் வராதா அந்த அழகிய நாட்கள் என உள்ளம் ஏங்குகின்றது.

ஆவணி மாதம் பிறந்ததும் எப்போது முதல் மழை பெய்யும், எப்போது வீட்டிலிருந்து சேனைப் பயிற்ச்செய்கைக்காக அம்மாவும் அப்பாவும் போவார்கள் என்ற காத்திருப்பு, அவர்கள் போகும்போது பாடசாலை விடுமுறை நாட்களில் அவர்களுடன் நானும் சேனைக்காட்டிற்கு செல்வதும் ஓடி ஆடி விளையாடுவதும் என்ற அழகிய நினைவுகள். எப்போது பாடசாலை விடும் என்று காத்திருந்து பாடசாலை விட்டதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பிள்ளையும் என்னோடு இணைத்துக்கொண்டு பின் கரியலில் மூன்று குட்டி பிள்ளைகளையும் ஏற்றி எடுத்து போற பாதையில் உள்ள சின்னக்கடையில் பக்கெட் ஐஸ்பழம், குச்சிமிட்டாய் எல்லாம் வாங்கி சைக்கிள் கூடைக்குள் போட்டு பாதை நீட்டுக்கும் சாப்பிட்டு விளையாடிக் கொண்டு பல கதைகள் பேசிய படி காட்டுப்பாதை வழியாக சேனைக்காடு சென்ற காலம்.

போற பாதையில் நாவல், இளந்தை, கூழா, விழாத்தி, கிலா, சூரை போன்ற மரங்களில் பழங்களைக் கண்டால் மரத்தில் ஏறி பழம் பறித்த காலம்.

அது மட்டுமா போற பாதையில் உள்ள குளக்கட்டுக்களுக்கு போகாமல் போன சரித்திரமே இல்லை. குளக்கட்டில் எல்லாரும் கொஞ்ச நேரம் இருந்து அங்கு உள்ள நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்ற பல பறவைகளையும் அங்கு காணப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் பார்த்து ரசித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த காலம்.

செல்லும் வீதி ஏற்றம் இறக்கம் கூடிய வீதியாகும். அந்த ஏற்றத்தால் மூச்சுப்பிடிக்க மிதித்து சைக்கிளை கஷ்டப்பட்டு ஏற்றிய பின் அப்பாடா இறக்கம், இறக்கத்தில் சத்தமிட்டு கூச்சல் போட்டுக்கொண்டு பறவையாய் பறந்து சென்ற காலம்.

அந்த மரத்துல பேய் இருக்காம் இந்த பற்றை குள்ள பேய் இருக்காம் என்று பயந்து பயந்து சென்று புளியங்காய் பறித்து உண்டு பயணத்தை தொடர்ந்த காலம்.

இப்படியாக ஒரு மாதிரி 30 நிமிட சைக்கிள் ஓட்டத்தை 1:30 மணி நேர ஓட்டமாக நீடித்து சேனைக்காட்டை வந்து அடைந்ததும், காரல் கீரை சொதி, கானந்தி கீரை சொதி, ஆரல் கீரை சொதி, குமிட்டி கீரை கடையல், திராய்கீரை சுண்டல் என்பவற்றில் கட்டாயமாக ஒரு கீரை கறியாவது அம்மா சமைத்து வைத்திருக்க அதை சோறுடன் வைத்து அதோடு மீன் பொறியலும் வைத்து உண்ட பின்னர், சேனைக்காட்டு வெட்டையில் ஏதாவது விளையாடி களைப்பாறிய பின் குளத்துக் கரை நோக்கி அனைவரும் சென்று அங்கு மண்வெட்டியால் மண்புழுவை வெட்டி எடுத்து தூண்டிலில் குத்தி குளத்துக்கரை நீரோடை ,ஆரைப்பற்றை நீரில் மீன் பிடித்து விளையாடிய காலம்.

வயல் வெட்டையில் குட்டிக் குளம் கட்டி மீன் குஞ்சுகளை ஓடையில் இருந்து பிடித்து வந்து கட்டிய குளத்தினுள் இட்டு விளையாடிய காலம்.

காய்ந்த மாட்டு சாணிகளைத் தூக்கி ஆட்காட்டியின் முட்டைகளை தேடி திரிந்து அழைந்து திரிந்த காலம்.

இப்படியாக பின்னேரம் ஐந்து மணி ஆகிவிடும். எப்படியாவது காட்டுப்பாதையில் யானை வருவதற்கு முன்னர் அப்பாவின் காவலில் அவசர அவசரமாக வீடு திரும்பிய காலம்.

இவ்வாறாக பாடசாலை முடிந்த பின்னும், சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாடிய என் நினைவுகள் கண்களில் கண்ணீரை சிந்த வைக்கின்றது.

அதுமட்டுமா வேளாண்மை விதைப்புக்கு முதல் உழவு செய்யும்போது வயளோடு வயலாக நானும் விளையாடிய நாட்கள், வயல் விதைப்பன்று குடும்பம் குடும்பமாக வந்து சமைத்து வயல் விதைப்பில் ஈடுபட்டவர்களுடன் உணவருந்தி அவர்களின் பழங்கால கதைகளை கேட்டு சிரித்த காலம்.

இவ்வாறாக வயல் விதைப்பு முடிந்ததும் குருவிக்காவல், ஆகா என்ன ஒரு சந்தோசம் கிழிந்த தகரத் துண்டு ஒன்றை எடுத்து வயல் வரம்பில் காணப்படும் சிறிய ஆத்தி மரத்தை வளைத்து அதில் இருக்கை கட்டி அமர்ந்து அதில் தகரத் துண்டை கட்டி தடியால் அடித்து காய் கூய் என குருவி, புறா துறத்திய காலம்.

இடையிடையே விளாத்தியடி பிள்ளையாரடிக்கு சென்று விளாங்காய் ஆய்ந்து சாப்பிட்ட நினைவுகள், பின்னர் வாகைத் தண்டுகளை முறித்து அதை படுக்கை போல் பரவி அதன் மேல் குளத்துக் காற்றில் எண்ணையே மறந்து நித்திரை செய்த காலம்.
ஆரைப் பற்றை மணலை எடுத்து வந்து பரவி ஆரைப் பற்றையில் பிள்ளையார் போன்ற கல்லை எடுத்து வந்து சாமி வைத்து விளையாடிய காலம்.

இவ்வாறாக ஆரைப்பற்றை நீரில் குதித்து குதூகலமாக விளையாடி பின்னர் மழை பெய்ததும் அதில் நனைந்து விளையாடிய காலம்.
கச்சான் அறுவடை, சோளன் அறுவடை என்றால் அது இதைவிட விஷேசம் வீடுகளில் இருந்து சின்ன மிஷின், மாட்டு வண்டி என்பவற்றில் அனைவரும் குடும்பமாக வந்து, கச்சான் என்றால் அனைவரும் வட்டமாக இருந்து பல கதைகளையும் கதைத்துக் கொண்டு கச்சான் ஆய்வார்கள், ஒரு கொத்து ஆய்ந்தால் பத்து ரூபாய் என்ன ஒரு சந்தோசம் ஒரு கொத்து கச்சான் ஆய்ந்து அப்பாவிடமே பத்து ரூபாய் வாங்கும் போது. பின் பெரிய பானை ஒன்று வைத்து கச்சான் அவிய விட கச்சான் அவிய முதலில் ஒவ்வொரு கட்டம் கட்டமாக ருசி பார்க்கும் அனுபவம் இருக்கே மறக்கவே முடியாது. பானை சூடே ஏறி இருக்காது அதுக்கு முதலே எடுத்து சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சண்டை. இவ்வாறாக சோளன் சேனைக்குள் கிளி, குரங்கு வராமல் காவல் பார்த்துக் கொண்டே சோளன் கதிரை முறித்து அடுப்பில் சுட்டு சாப்பிட்டு மகிழ்ந்த காலம்.

மழை அதிகமாக பெய்து வெள்ளம் . இந்நேரம் என்னோட குட்டி நண்பர்களை கூட்டிக்கொண்டு குளம் வான் போறது பார்க்க போன நினைவு. அது என்ன ஒரு அழகிய காட்சி.

இப்படியாக நான் நடந்து வந்த பாதையை கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போதைய சிறுவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நீ வந்த பாதையை திரும்பிப் பார்த்து கூறு என்றால். நான் அந்த இடத்தில் மேலதிக வகுப்பிற்குச் சென்றேன் இங்கு மேலதிக வகுப்புக்குச் சென்றேன் என்ற ஒரு கவலையான ஒரு பதிலையே கூறுவார்கள்.
ஆனால் எனது பாதை ஒரு சிட்டுக்குருவி எப்படி ஒரு சுதந்திரமான பாதையில் பறந்து வந்து உயர பறந்ததோ. அதேபோன்று நானும் அழகான நினைவுகள் பலவற்றை கூறக்கூடிய நீண்ட பாதையால் பறந்து வந்து பல்கலைக்கழகத்தை அடைந்துள்ளேன். இப்போது எண்ணுகின்றேன் அந்த அழகிய காலம் மீண்டும் வருமா என்று. ஆம் கட்டாயம். என்னை எப்படி சுதந்திரமாக எனது தாய் தந்தையர் வளர்த்தார்களோ அதே போன்று எனது குழந்தையையும் நான் பல அழகிய கதைகள் கூறக்கூடிய பாதையால் சுதந்திரமாகப் பறந்து வரச் செய்வேன்.
நாகராசா லக்சிகா
கிழக்கு பல்கலைக்கழகம்

https://globaltamilnews.net/2025/221345/

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

2 months ago

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை.

”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது.

நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்தரணி சிறிநாத் பெரேரா ஆகியோர் உரைற்றியிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நண்பர் இ. ரஜீவ்காந் தொடக்க உரையை நிகழ்த்தினார்.

ரஜீவ்காந், வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட இலங்கைத்தீவை மையப்படுத்திய அரசியல் செயற்பாட்டாளர்.

கொலைச் சம்பவம் பற்றிய நேரடி அனுபவத்தை சபையில் விரிவாக எடுத்து விளக்கினார்..

https://www.facebook.com/1457391262/posts/pfbid0cu5c1L46icqT2RhQB36yAv11acvbT2gUvDqwDcseskYXNTR87mencLwpMMQEHE7Gl/?

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

2 months 2 weeks ago

பதில் வழங்கமால் நழுவிய பிரதமர் ஹரிணி

--------- ----- ----- ----- ----

*பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

*தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும் காரணம்!

---- ---- ----- -----

புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் சைவ சமய பாடநூல் விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை பற்றிய கேள்விக்கு பதில் வழங்கவில்லை.

சைவ சமய பாடநூல் தவறுகள் உட்பட மேற்படி சில கேள்விகளை சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சிக் குழு தலைவர் என்ற முறையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வினா தொடுத்தார்.

ஆனால் தமிழர் வரலாறுகள் பாடநூலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன, என்ற ஒரு கேள்வியே கேட்கப்படவில்லை என்ற தொனியில் தனது ஆசனத்தில் அமர்ந்தார் ஹரிணி.

தமிழ் வரலாற்று பாடநூலில் பௌத்த சமய வரலாறுகள் புகுத்தப்பட்டுள்ளமை பற்றி பல சந்தர்ப்பங்களில் என்னுடைய அரசியல் பத்தி எழுத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சிங்கள மக்கள் தங்களை போற்றுவர் என நம்பி நூல்களை எழுதிய தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும், இந்த மூடி மறைப்புகளுக்கு பிரதான காரணம்.

பொலன்னறுவையில் உள்ள சிவன் - பார்வதி சிலை காதலர் சின்னம் என்று வரலாற்று பாடநூலில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி கொழும்பில் நடந்த பாடநூல் கூட்டம் ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்ட முற்பட்டபோது, தமிழ் வரலாற்றுத் துறையின் மூத்த பேராசிரியர், தனக்கு அருகில் இருந்த அந்த ஆசிரியரை மெல்லச் சுரண்டி ”அது பற்றி இப்ப கதைக்க வேண்டாம்” என்று கட்டைக் குரலில் கட்டளையிட்டு நிறுத்தினார்.

அந்தப் பேராசிரியர், தான் தமிழில் எழுதிய வரலாற்று நூலில் சிவன் - பார்வதி சிலை என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் கூட்டத்தில் இருந்த பிக்குமார் மற்றும் சிங்கள அதிகாரிகள் சங்கடப்படக் கூடாது என்ற நோக்கில் சரியானதை சுட்டிக்காட்ட விடாமல், தடுத்து நிறுத்தி, சிங்கள அதிகாரிகள் முன்னிலையில் தன்னை ஒரு பக்கச் சார்பற்ற வரலாற்று பேராசிரியராக நிறுவி பெருமைப்பட்டுள்ளார்.

மறுபுறம் ---

தனது சொந்த இனத்துக்குத் தான் அநீதி இழைப்பதை அந்த பேராசிரியர் உணர மறுத்துவிட்டார்.

அந்த பேராசிரியர் தமிழ் மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் ஆங்கில மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் உண்டு.

அதாவது ஆங்கிலத்தில் தான் எழுதிய வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகளை நாசூக்காக மறைத்து, சிங்கள வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் அந்த பேராசிரியர்.

பொலன்னறுவையில் சோழர்கள் கட்டிய பல இந்துக் கோயில்களில் நடராஜர் சிலை மற்றும் பார்வதி சிலை போன்ற இந்து சமய சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்ததாலேயே இந்துக் கோவில்களை சோழர்கள் கட்டியிருக்கின்றனர்.

ஆனால் சோழ மன்னர்கள் ஏதோ பிராமணர்களை தூக்கிப் பிடிப்பதற்காக கட்டியுள்ளனர் என்ற தோற்றப்பாட்டை, சில தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் மடைமாற்றி எழுதியிருக்கின்றனர்.

தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலரினதும், தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினதும் வரலாற்று மூடி மறைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டு, மிகச் சரியான தமிழ் வரலாறுகள் மிக விரைவில் நூலாக வெளிவரவுள்ளன.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

2 months 4 weeks ago

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

“When I say Jaffna, Mullaitivu, Trincomalee, Batticaloa—your heart feels pain. You remember massacres, burnt homes, destroyed temples. Some of you think, ‘Why should we go back there?’ But I am here to tell you—that is exactly why you must go back. ”Visiting the North and East of Sri Lanka is not just tourism. It is a duty—cultural, political, economic, and spiritual. / "நான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என்று சொல்லும்போது - உங்கள் இதயம் வலிக்கிறது. படுகொலைகள், எரிக்கப்பட்ட வீடுகள், அழிக்கப்பட்ட கோயில்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. உங்களில் சிலர், 'நாம் ஏன் அங்கு திரும்பிச் செல்ல வேண்டும்?' என்று நினைக்கிறீர்கள், ”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வது வெறும் சுற்றுலா மட்டுமல்ல. அது ஒரு கடமை - கலாச்சார, அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீகம் ஆகும், அதனை, ஏன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை, நான் இங்கே கீழே விபரமாக ஆங்கிலத்தில், - காரணம் இது புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் சேர்த்து என்பதால் - பதிவிடுகிறேன்

1. Cultural & Historical Continuity

The Tamil people have lived in the North and East of Sri Lanka for more than two millennia. Ancient travelers, inscriptions, and chronicles such as Dipavamsa and Mahavamsa record the existence of Tamil and Nāga kings who ruled these lands. Despite this deep history, post-independence Sri Lanka (1948 onwards) brought systematic discrimination, ethnic riots (1956, 1977, 1983), mass displacement, and finally the devastating war that ended in 2009.

Today, while many Tamils live abroad due to forced migration, their connection to the homeland must not fade. One powerful way to maintain this connection is regular visits to the North and East of Sri Lanka.

Visiting these lands keeps alive the visible presence of Tamils. If diaspora Tamils don’t go, the government and others may claim, “Tamils have abandoned it.”

Example: In Jaffna, many ancient temples (Nallur Kandaswamy, Ketheeswaram, Naguleswaram, Thirukoneswaram) are living testimonies of Tamil heritage. When diaspora families visit and worship there, they affirm that these are not “abandoned ruins” but part of a living culture.

2. Counteracting State Narratives

Successive governments have promoted “Sinhala-Buddhist heritage” in Tamil areas, often erasing or overshadowing Tamil symbols with new Buddhist statues or army-built structures.

Example: After 2009, many Buddhist shrines were erected in Mullaitivu, Kilinochchi, and Trincomalee where no Sinhala people live.

In brief, The Sri Lankan state has tried to erase Tamil heritage by replacing temples with Buddhist shrines and by changing place names.

Regular visits by diaspora Tamils challenge this narrative by showing the world community and local Sinhala authorities that Tamils abroad have not forgotten or surrendered these lands. In brief, When Tamils visit in large numbers, it challenges the narrative of abandonment and sends a message that the land is still ours.

3. Support for the Local Population. In other words , Strengthening the Local Economy

Tourism dollars spent in Jaffna, Trincomalee, Batticaloa, Mullaitivu, and Vavuniya directly support Tamil businesses, helping communities recover. This reduces dependency on state-driven projects that often marginalize locals.

For examples, Tamils who remain in the North and East still face:

Military occupation of land

Lack of job opportunities

Psychological trauma of war

Diaspora visits bring not only emotional strength but also economic support. Tourists spend money on hotels, guides, transport, small businesses — strengthening the Tamil economy rather than making it collapse. Example: In Jaffna, during Nallur festival, diaspora visitors boost the entire city’s economy, helping small traders, food stalls, transport workers, and local hotels. specially staying in Tamil-owned guesthouses, using local guides, and buying from small traders sustains the Tamil economy.

4. Global Awareness, Documentation & A Political and Cultural Statement

Every diaspora family that visits, takes photos, writes blogs, or shares experiences on social media. This creates a counter-narrative to government propaganda. Example: If Tamil Canadians, British Tamils, and French Tamils post about their visits to Mullaitivu massacre sites, Thileepan memorials, or burned Jaffna library grounds, the international audience sees the truth. This keeps Tamil suffering and history alive beyond Sri Lanka’s borders.

Every diaspora visit is a subtle reminder to the government and the world that Tamils have not forgotten their homeland. It is similar to how Palestinians, even if exiled, insist on returning to their villages to show ownership. That is, Diaspora visits remind the world that Tamils are alive and present, not forgotten.

5. Generational Identity & Education

Children born abroad may grow up knowing only Canada, UK, Switzerland, Australia, etc. Without seeing Jaffna or Batticaloa, they may believe “we are outsiders.” Many second-generation diaspora youth have never seen their ancestral villages. So Visiting allows them to connect emotionally, bridging the gap between exile and homeland.

For Example, Visiting the homeland allows them to: See their ancestral temples, schools, and villages. Hear Tamil spoken in its natural setting. Feel the soil of their forefathers. Example: Many Tamil families take children to the Jaffna Public Library site to teach them about its 1981 burning. This ensures that Tamil memory continues beyond one or two generations.

6. Diplomatic & Political Message and World Historical Examples

When diaspora Tamils travel back in large numbers, it sends a message to: Sri Lankan government: “We still care for this land.”

International observers: “Tamils are not a disappearing minority; they are a global people tied to their homeland.”

Example: During Nallur festival, thousands of diaspora Tamils return. Even Colombo newspapers report: “Diaspora floods Jaffna.” This cannot be ignored by authorities—it proves Tamil homeland identity is alive.

Jewish diaspora: For centuries, Jews visited Jerusalem despite displacement, keeping their bond alive until Israel was established.

Armenian diaspora: Armenians dispersed after the genocide still regularly visit Armenia to strengthen ties.

African diaspora: Many African Americans visit Ghana and other African countries as “homecoming” journeys to reclaim identity.

Similarly, Tamil diaspora visits maintain ownership and memory.

7. Preventing or Protecting Land Grabs & Countering State Narratives of Development

Government often justifies army occupation by saying, “No Tamils live here anymore, so we will develop it.”

If diaspora visits increase, they strengthen claims of ancestral ownership.

Example: In Mullaitivu, army-run tourist resorts have been built on seized Tamil lands. If diaspora visitors insist on staying in Tamil-owned guesthouses and demand access to Tamil lands, it resists this land-grab silently but effectively. The Sri Lankan government promotes "development tourism" in the North and East to justify Sinhalization. Diaspora visits counter this narrative by prioritizing Tamil spaces, schools, temples, and villages.

8. Healing and Remembrance

Many Tamils lost loved ones (1956, 1977, 1983 pogroms, and the 2009 Mullivaikkal massacre). Visiting those lands is a pilgrimage of memory. Example: Visiting Mullivaikkal on May 18th, lighting candles, and praying together sends a message: “We have not forgotten our dead.” It also heals families abroad who carry grief and trauma.

9. Religious & Spiritual Duty

For Hindus, Saivaite temples of the North-East (Thirukoneswaram, Naguleswaram, Ketheeswaram, Nallur) are among the oldest shrines of Tamil Saivism. For Christians, churches like Madhu shrine hold deep meaning.

Visiting is a spiritual reaffirmation—keeping the faith alive in Tamil soil. that is, Visiting preserves faith and spirituality on Tamil soil.

10. Examples or Lessons from Other Nations

Jewish diaspora: Even after 2000 years of dispersion, Jews regularly visited and prayed towards Jerusalem until they regained Israel.

Armenians: Spread worldwide but maintain pilgrimages to Armenia, keeping alive their claim to history.

Kurdish diaspora: Visits Kurdistan regularly to strengthen its recognition.

Similarly, Tamil diaspora must visit Sri Lanka’s North-East to ensure homeland identity is not erased.

Conclusion

Yes—diaspora Tamils must regularly tour the North and East of Sri Lanka.

It is not just tourism; it is:

A political act of resistance

A cultural duty of remembrance

An educational investment for future generations

An economic lifeline for local Tamils

A global declaration that the Tamil homeland is alive

Without diaspora visits, silence and absence will allow governments and international allies to say: “Tamils don’t care anymore.”

With regular visits, the truth remains visible—both to Sri Lanka and to the world

In brief , For Tamils abroad, visiting the North and East of Sri Lanka is more than a holiday. It is an act of cultural preservation, political resistance, and emotional healing. Each step taken in Jaffna, each prayer at Trincomalee, each embrace with local relatives echoes across history, reminding both the Sri Lankan state and the world that this land is still Tamil land.

If we do not visit, silence may slowly erase us from memory. If we do visit, we prove—like other displaced peoples throughout history—that our roots cannot be cut. The North and East are not just geography; they are identity, memory, and future.

Before I conclude, let me share a few key historical facts, briefly but meaningfully, for you to remember. / Historical Context (Brief but Essential)

1. Ancient Tamil Presence

Archaeological and literary evidence confirms that Tamils and Nagas (Saivite-related communities) lived in Sri Lanka long before Vijaya’s arrival (around 500 BCE). Stone inscriptions, Brahmi scripts, and Sangam literature refer to Tamil-speaking peoples in the island. Ancient texts like Mahavamsa and Dipavamsa—though written with Sinhala-Buddhist bias—acknowledge the existence of Tamil kings and Naga chieftains. Major Saivite temples—Ketheeswaram (Mannar), Naguleswaram (Keerimalai, Jaffna), Thirukoneswaram (Trincomalee), Munneswaram (Chilaw)—all existed from early centuries and prove the depth of Tamil religious civilization. Thus, Tamils are not “immigrants” but one of the founding civilizations of the island.

2. Medieval Tamil Kingdoms

From 10th century onwards, the Chola influence spread into the island. By the 13th century, the Jaffna Kingdom (Arya Chakravarthi dynasty) was firmly established, ruling from Jaffna over much of the North and parts of the East. The Jaffna Kingdom maintained Tamil literature, culture, and trade until its fall to the Portuguese in 1619. This period solidified the North-East as a Tamil homeland, with its own rulers, coinage, temples, and laws.

3. Colonial Period (1505–1948)

Portuguese, Dutch, and British successively colonized Sri Lanka. British rule brought the North-East Tamil regions and Kandyan Sinhalese regions into one administrative unit in 1833 (Colebrooke-Cameron reforms). This was the first artificial unification of the island. Tamil Saivite revival movements flourished (e.g., Arumuga Navalar in Jaffna). Tamils gained prominence in education and administration due to missionary schools and British appointments.

4. Post-Independence Betrayals (1948 onwards)

When Sri Lanka gained independence (1948), the Sinhala political elite began to sideline Tamils systematically: 1948–49: Citizenship Act disenfranchised nearly 1 million Indian Tamils (plantation workers). 1956: Sinhala Only Act imposed Sinhala as the sole official language, sparking anti-Tamil riots. 1958, 1977, 1981, 1983: Large-scale anti-Tamil pogroms killed thousands and destroyed properties—especially the burning of the Jaffna Public Library (1981) and Black July (1983). 1972 & 1978 Constitutions: Elevated Buddhism and Sinhala primacy, sidelining Tamil rights. Standardization (1970s): Denied Tamil students equal university access. Thus, Tamils realized they could not secure justice within a Sinhala-majority framework.

5. Civil War (1983–2009)

The Tamil struggle turned into an armed conflict, led by the Tamil youth groups. Tamils sought to protect their homeland in the North - East from state oppression and colonization. For 26 years, the North - East experienced war, displacement, and destruction. 2009 Mullivaikkal massacre: Tens of thousands of Tamils were killed in the final months. Even after the war ended, justice was denied, and militarization continued.

6. Post-War Situation (2009–Present)

High militarization: The Northern Province has the highest soldier-to-civilian ratio in the world. Land grabs: Army and state acquire fertile Tamil lands for military camps, Buddhist shrines, and Sinhala settlements.

Demographic changes: Sinhala colonization schemes continue, particularly in Trincomalee, Mullaitivu, and Batticaloa. Cultural erasure: Ancient Saivite temples are replaced or overshadowed by new Buddhist constructions. Economic suppression: The North-East lags in investment and jobs, forcing youth to migrate. Psychological trauma: War survivors live with grief, disappearances, and unhealed wounds.

7. New Rulers & Political Climate

Different governments (Rajapaksas, Sirisena, Gotabaya, Wickremesinghe) promised reconciliation but failed to deliver justice or political rights. International pressure (UNHRC reports) highlights human rights violations, but Sri Lanka resists accountability. Current rulers speak of “development,” but often it masks Sinhala-Buddhist expansion in Tamil areas. Without diaspora presence, the North-East risks becoming a “museum piece,” where Tamil culture exists only in books, not in living communities.

8. Why Diaspora Must Visit North & East

Now connecting history to present: To show unbroken connection. Tamils have lived there for 2300 years. Visits prove this continuity to the Sri Lankan state and to the world. To prevent erasure. If diaspora Tamils stop visiting, the government may argue: “They left permanently; this is now Sinhala land.” To educate the next generation. Children abroad must see Nallur, Jaffna Library site, Mullivaikkal beach, Trincomalee temples—otherwise, they risk losing homeland identity. To support local Tamils. Tourism brings money to Tamil-owned businesses, strengthening local survival instead of depending on state or army establishments. To preserve memory & justice. Visiting massacre sites, memorials, and destroyed villages keeps international awareness alive. Silence benefits only the state. To mirror global examples. Jews, Armenians, Kurds—all maintain ties to their homeland through visits, even when they lived in diaspora for centuries. Tamils must do the same.

9. Practical Outcomes of Regular Visits

Each diaspora visit is not just a holiday but an act of political resistance and cultural reaffirmation. It sends a strong message to: Sri Lankan rulers: “This land still belongs to Tamils.” World community: “Tamils are not erased; we are alive.” & Future Tamil generations: “This is your motherland, never forget it.”

— Kandiah Thillaivinayagalingam, following my last visit to Sri Lanka in August 2025 --

“My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."

https://www.facebook.com/groups/978753388866632/posts/31322667227381849/?

செம்மணியும் ஆன்மீகவாதி

3 months 1 week ago

செம்மணியும் ஆன்மீகவாதி

--------- ------------------

*அரசியல் சாராத செல்வாக்குள்ள ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல்

*சித்துப்பாத்தி மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்!

*வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை...

*கூட்டுரிமை விவகாரங்களில், செல்வாக்கு மிக்கவர் - கல்வியாளர் என்பது தவிர்க்கப்படல் வேண்டும்...

*நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் அமைதிப்பது ஏன்?

---------- ----- ------ --------

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேற்றுகிறது.

ஆனாலும், ஈழத்தமிழ் தரப்பில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் செய்தியாளர்கள், செம்மணி விவகாரத்தை திசை திரும்ப விடாமல் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

2009 மே மாதம் போரின் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடுதலாக வடக்கு மாகாணத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாள முன்னூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை.

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனை மேற்கொள்வதற்கான (கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு -C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அதற்கான நிதியை கோரி, ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் கண்டறியும் அலுவலகத்திடம் விலை மனு கோரப்பட்டு இருந்தது.

ஆனால், அதற்கான பதில் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம் ---

மன்னார் சதொச கட்டிடத்தின் கீழ் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருத்தன.

ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப ஓகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவின் மியாமி பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம், (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த எலும்புகள் போர்க்காலத்துக்குரியவை என அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட சில மனித எச்சங்கள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவிடம் சமீபத்தில் தான் ஆய்வுக்காக கை யளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன அழிப்பு என்பதை மூடி மறைக்கும் முயற்சிகள் 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர முடிகிறது.

இவ்வாறான பின்னணியில் செம்மணி மனித புதைகுழி விவகாரமும் மூடி மறைக்கப்படக் கூடிய ஆபத்துகள் இல்லாமலில்லை.

இப் பின்புலத்தில்தான் செம்மணியில் உள்ள அரசாங்க காணி என கருதப்படும் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அதுவும் செல்வாக்குப் பெற்ற ஒரு ஆன்மீகவாதி ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர்.மத அறக்கட்டளை நிறுவனங்களையும் நடத்தி வருபவர்.

இதற்கு ------

1) காரண - காரியத்தோடு கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு செலுத்தியுள்ளது...

2) காணியில் சங்கிலியன் சிலை ஒன்றும் ஆன்மிகத் தலம் ஒன்றும் அமைக்கப்படுவதற்கான யோசனைகள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் -----

குறித்த மூன்று ஏக்கர் காணி 1996 ஆம் ஆண்டு கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினர் ஒன்பது பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகும்.

அத்துடன் கிரிசாந்தியை தேடிச் சென்ற தாயாரும் அயல் வீட்டாரும் அந்த இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று, 1999 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், முதலாம் எதிரியான சோமரட்ன ராஜபக்ச தனது இறுதி விருப்பத்தை நீதிபதியிடம் வெளிப்படுத்தினார்.

அப்போது செம்மணியில் சுமார் 600 இற்கும் அதிகமான இளைஞர்கள் - யுவதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சாட்சியத்தின் பிரகாரம், சோமரட்ணவுடன் செம்மணிக்கு சென்றிருந்த மன்னார் மாவட்ட அப்போதைய நீதிபதி இளஞ்செழியன், மனிதப் புதைகுழிகள் இருப்பதாக காண்பித்த இடங்களை அடையாளப்படுத்தினார்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதியைத் தான் ஆன்மீகவாதி ஒருவருக்கு கொழும்பு அரச அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர்.

நகர்த்தல் பிரேரணை ----

கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த மூன்று ஏக்கர் காணிக்குள் விசாரணை முடிவடையும் வரை கட்டிடங்களை கட்ட வேண்டாம் என கோரி சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை ஒன்றை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டும் இப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்மீகவாதி பெற்றுள்ள காணியில் கட்டடங்கள் கட்டப்படும் போது, அதனால் எழும் விளைவுகள் அங்குள்ள மனித புதைகுழி பற்றிய விசாரணைக்குத் தடையாக இருக்கும் எனவும் நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேநேரம், காணிக்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க்கால மனிதபுதை குழி அகழ்வு நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நகர்த்தல் பிரேரணையை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் (Jurisdiction) மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், இதனை யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இது பற்றி சட்டத்தரணி வைஷ்ணவியிடம் நான் வினவியபோது, நகர்த்தல் பிரேரணையை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர்கள் எவரும் முன்வர தயங்குவதாக கவலை வெளியிட்டார்.

நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு என்பது செம்மணியை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் பற்றியது.

அதாவது ----

இருபாலை, கல்வியங்காடு வலிகாமம் கிழக்கின் ஒரு பகுதி, நல்லூர் பிரேத சபையின் ஒரு பகுதி, அரியாலை போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டு.

இது வலி கிழக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளதால், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நான் வினவினேன்.

முதலில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஆன்மீகவாதி அரசாங்கத்திடமிருந்து பெற்ற காணியில் கட்டிடங்களை கட்டுவதற்குரிய அனுமதிக்கு கோப்பாய் பிரதேச சபையிடம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சித்துப்பாத்தி மயானத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் இடப்பட்டுள்ள செம்மணி காணிக்குள் கட்டிடங்கள் அமைப்பதை தற்காலிகமாக பிற்போடுங்கள் என தொலைபேசியில் தாழ்மையாக தான் கேட்டுக் கொண்டதாகவும் என்னிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த விவகாரத்தில் குறித்த ஆன்மீகவாதியிடம் இருந்து மாற்றம் வரும் என தான் நம்புவதாகவும் நிரோஷ் என்னிடம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ----

யாழ்ப்பாணத்தில் மழையினால் பெறப்படும் வெள்ள நீரை கடலுக்குச் செல்ல விடாமல் தொண்டமானாறு, செம்மணி போன்ற இரண்டு பிரதேசங்களை தெரிவு செய்து பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம் செயல்படுத்தி வருகிறது.

உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்துள்ளது.

ஆனால், செம்மணி திட்டம் இன்னும் செய்யப்படவில்லை.

விளக்க குறிப்புகள் ---

A) இவ்வாறான ஒரு நிலையில் குறித்த ஆன்மீகவாதி, செம்மணியில் தான் பெற்றுக் கொண்ட காணியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கும் விடயத்தில் பொருத்தமான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

B) இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவ மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் பொருத்தமான முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

C) குறித்த ஆன்மீகத் தலைவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமைதி காப்பது ஆரோக்கியமானதல்ல.

அதேவேளை, தமிழர்களின் கூட்டுரிமை சார்ந்த விவகாரங்களில் ---

1) செல்வாக்கு மிக்கவர்

2) கல்வியாளர்

3) புத்திஜீவி

என்ற நோக்கு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் -----

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற காரண - காரியத்தோடு மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை ஒற்றையாட்சி அரசு மீளவும் பெறுகிறது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற வினா தொடர்ந்து தொக்கி நிற்கிறது.

இப்பின்னணியில், கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு என்ற அடிப்படையில் அரச காணிகளை பெற, தமிழ் தரப்பில் யார் ஈடுபட்டாலும் அது கூட்டுரிமை மீறலாகும்.

இவ்வாறான செல்வாக்குடன் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதையும் மறுக்க முடியாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆகவே --

இந்த ஆபத்துகள் பற்றி கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு உள்ள தமிழர்கள் உணர தலைப்பட வேண்டும்.

அதேநேரம் --

செம்மணியில் மாத்திரமல்ல, வேறெந்த இடங்களிலும் காணிகளை பெறும் முறைமை அல்லது காணிகளை இழப்பது போன்ற விவகாரங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்கவும் முடியாது.

ஏனெனில், அது அரசியல் பிரச்சினை. அதை சட்டங்களினால் தீர்க்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரப்படுகின்றது.

ஜெனீவா ஆணையாளர் கூட தனது அறிக்கையில் இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மை அற்ற பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, ஒற்றையாட்சி நீதிமன்றத்தின் மூலமாகவோ தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது பட்டறிவு.

இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ”தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாடு.

இதை புரிந்து கொண்டு 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்க கூடிய பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்க கூடாது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியலுக்குள் (Conspiracy Politics) பலியாகாமல், ஈழத்தமிழர்களின் கூட்டுரிமை என்ற வியூகத்தில் உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கை நீதிமன்றங்களுக்கு சென்று, தமிழர்கள் தமக்குள் வாக்குவாதப்படும் அவலங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மற்றும் சிவபூமி அருங்காட்சியகம் ஆகியவை மரபுரிமை - பண்பாட்டு அடையாளங்களை பேணும் முறை.

இவ்வாறு தமிழர்களின் மரபுரிமை மற்றும் சைவ சமய மாண்புகளை, இன ஒதுக்கல் சவால்களுக்கு மத்தியில் பேணி வரும் ஒரு ஆன்மிகவாதி, சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆரோக்கியமான புரிதல் உருவாக வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RRkj82ywfozotwZ3NMazQang75E19TBfQDyRvDHTqYkmwhTdnjJJzvGtpZdd4NFyl&id=1457391262

தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்

3 months 1 week ago

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடத்தில் இல்லை.

  • விடுதலைப்புலிகளின் கொடி:

தவிபு அமைப்பின் கொடிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கொடியாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணக்கருவிற்கேற்ப 1977 அம் ஆண்டு வரையப்பட்டது. இது முதன் முதலில் 1978ம் ஆண்டு அவர்களின் கடிதத்தில் பாவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் இவ் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் 'சிறில் மத்தியூவின் அரசபணியில்' என்ற கடித உறைக்குள் வைக்கப்பட்டு இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது (ஆதாரம்: மூத்த உறுப்பினர் தேவர்).

large.firstletterofltte.jpg.fb83ef3b1c36

விடுதலைப்புலிகளின் முதல் உரிமைகோரல் கடிதம்

இக்கொடி உருவான கதை தொடர்பில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் அவர்களால் வரலாறு வெளியிடப்பட்டது. இருந்தபோதிலும் 2015ம் ஆண்டிலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் 'வர்ணகுலத்தான்' அவர்களாலும் எழுத்தாளரும் கேலிச்சித்திர ஓவியருமானன 'மூனா' அவர்களால் 2016ம் ஆண்டிலும் அதனோடு முரணாகும் வகையில் வேறொரு தோற்றக்கதை கூறப்பட்டுள்ளது.

எவ்வாறெயினும் கால வரிசையின் படி இரண்டு வகையான தோற்றக்கதைகளும் இங்கு தரப்படுகின்றன. 

முதலில் புலிகளால் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தோற்றக்கதையினை காண்போம்:

"...இன்று எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான 'நடராஜன்' என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசனைக்கமைய பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்த புலிச்சின்னம் இன்று எமது தேசியக்கொடியை அலங்கரிக்கின்றது.... ”

இரண்டாவதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளரான 'வர்ணகுலத்தான்' அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தோற்றக்கதையினை இங்கு காண்போம்:

"இதேபோல் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் ஒரேஎத்தனத்தில் இன்றுள்ள வடிவத்தை எடுக்கவில்லை.

"1916இல்அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய GOLDWIN PICTURES நிறுவனமே பின்னாட்களில் METRO GOLDWIN MAYER எனும் பிரமாண்டமான MEDIA COMPANY யாக உருவாயிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் TRAD MARK ஆக காணப்படுவது திரைப் பட சுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1975 இல் ‘வாசு சிகார்’ அட்டைப் பெட்டிக்காக மோகண்ணா ஆரம்பத்தில் உருவாக்கிய சித்திரமே ‘வாசு சிகார்’ அட்டைப்பெட்டியில் காணப்பட்ட ‘சுவரை உடைத்துக் கொண்டு பாயும் சிங்கமாகும். இச்சிங்கத்தின் மாதிரியே தலைவர் பிரபாகரன் அவர்களின் விருப்பத்திற்கமைய 1976இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுதிகொண்ட உத்தியோக பூர்வமான இலச்சினை வடிவத்தில் காணப்பட்ட புலியாக ஆரம்பத்தில் மாற்றப் பட்டது. குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்திற்காக பின்னர் பண்டாரவன்னியனின் ஓவியத்தில் கேடயத்தின் குறுக்காக காணப்படும் வாள்கள் துப்பாக்கிகளாகவும் சோவியத் நாடு சஞ்சிகையில் வளைந்து ஓவல்வடிவத்தில் காணப்பட்ட நெற்கதிர்களின் நெல்மணிகளை துப்பாக்கியின் ரவைகள்(குண்டுகள் ) ஆகவும் மாதிரியாக கொண்டு இறுதியாக 1977ன் இறுதியில் மோகண்ணா உருவாக்கிய அவ் அடையாளச் சின்னமே விடுதலைப்புலிகளின் முதலாவது அடையாளச் சின்னமாகும்......"

இதில் கூறப்படும் அமரர் மோகன் (ராமதாஸ் மோகனதாஸ்) என்பார் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். முன்னாளில் அவர்களின் ஆதரவாளராக விளங்கியதோடு பின்னர் விடுதலைப்புலிகளின் முதல் கப்பலான 'சோழன்' என்பதின் கலக்குழுவினருள் ஒருவராக பணியாற்றியும் இருந்தார். இவரது இந்த இலச்சினை வடிவமைப்பு தொடர்பில் எழுத்தாளர் மூனா அவர்கள் மோகனின் அமரத்துவத்திற்குப் பின்னர் அவர் பற்றி எழுதிய 'மோகன் ஆர்ட்ஸ்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"ஒரு தடவை ஒரு தேயிலை பெட்டியில் இருந்த ஒரு புலியின் படத்தைக் காட்டி, 'தங்களுக்கு ஒரு புலிச் சின்னம் கீறித் தரச் சொல்லி கேக்கிறாங்கள். இதை கீறலாம் எண்டு பாக்கிறன்' என்று என்னிடம் சொன்னார். அதையே அவர் வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பதை பின்னாட்களில் வந்த விடுதலை இயக்கத்தின் துண்டுப் பிரசுரங்களில் கண்டு கொண்டேன். அவர் எழுபதுகளில் வடிவமைத்த அந்தச் சின்னத்தின் சொந்தக்காரராக பின்னாளில் தமிழ்நாட்டில் ஒருவர் பாராட்டப்பட்டது வேதனையானது. ஆனாலும் 'நான்தான் அந்த சின்னத்தை வடிவமைத்தேன்' என்று இவர் சண்டைக்கு வரவும் இல்லை, குரல் எழுப்பி உரிமை கேட்கவும் இல்லை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே இவரது பாணி. தன்னால் முடிந்த உதவிகளை இவர் அந்த விடுதலைக் குழுவிற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது மோகனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். "

அடுத்து இந்தப் பாயும் புலி என்னும் எண்ணக்கரு எவ்வாறு தனக்கு எழுந்தது என்பது குறித்து தேசியத் தலைவர் 'விடுதலைத் தீப்பொறி' என்னும் ஆவணப்படத்தில் விரிவாக கூறியிருந்தார். எனினும் அதில் இதனை யார் வரைந்து தந்தது என்பது குறித்து அவர் கூறவில்லை. 

அவ் ஆவணப்படத்தில் இனி உருவாகின்ற நாட்டிலும் கடைசியாக இருந்த ஆட்சியின் சின்னமே வரவேண்டும் என்பதே தனது நோக்கமாகயிருந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது மீண்டும் எமது பழைய வரலாறு [அப்படியே] புதுப்பிக்கப்படும் படியாக சின்னம் இருத்தல் வேண்டுமாம்; கடைசியாக இருந்தது புலிச் சின்னமே, ஆகவே அதையே மீளவும் கொண்டு வந்தாராம். அதே நேரம் ஈழத்தின் பண்டாரவன்னியனின் கொடியின் சின்னமாக தமிழர்கள் நாம் வரைவது தறியப்போடப்பட்ட இரு வாள்களும் அதன் பின்புலத்தில் ஒரு வட்டக் கேடயமும் ஆகும். எனவே இதையும் சோழர்களின் புலியையும் அடிப்படை கருத்துருவாகக்கொண்டு தான் எமது கொடியினை தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பண்டாரவன்னியனின் வட்டக் கேடயத்திற்குப் பதிலாக இரு வட்டங்களைப் பாவித்தாராம். அந்த வட்டத்திற்குள் வரும்படியாகவும் அதற்கேற்பவும் சோழர்களின் புலியும் கொணரப்பட்டது. அதற்காக அந்த வட்டத்திற்குள்ளால் நவீன வெடிபொருள் உகத்திற்குள் புலி பாய்வது போன்ற வடிவத்தை தெரிவு செய்தார். 

பாயும் புலியிற்கு சோழர்களின் புலி பாவிக்கப்பட்டது. பழைய சோழர்களின் புலியென்பது முழு உடலுடன் பாய்வது போல வருவதாகும். எனவே அந்தப் பழைய புலியின் பாயும் வடிவினையும் மாற்றினார்; அதாவது அழிந்துபோன எமது சின்னம் (புலி) திரும்பவும் ஒரு புத்துயிர் பெற்று எழுச்சியுடனும் கடுஞ்சினத்துடனும் வட்டத்திற்கு வெளியே தலையை நீட்டி முன்னங்கால்களை எடுத்துப் பாய்ந்து கிளம்புவது போல மாற்றி வடிவமைக்கப்பட்டது என்றுள்ளார்.

மொத்தத்தில் இந்த நவீன உகத்திற்குள் தமிழர்களின் தேசிய எழுச்சியை உருவாக்குகின்றோம் என்பதே அவரின் சின்னத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வடிவிலான சின்னத்தைப் பெற அவர்கள் மிகவும் மினக்கெட்டு கன படங்கள் எல்லாம் தேடித் திரிந்தார். அவ்வாறு தேடித் திரிந்தது புலி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே என்று முடிவடைகிறது அவ் ஆவணப்படத்தில் கொடி தொடர்பான வரலாறு.

அந்தப் பண்டாரவன்னியனின் வாள்களிற்குப் பகரமாக புலிகள் இயக்கத்தில் முதன்முதல் பாவனைக்கு வந்த .303 துமுக்கியின் துவக்குச்சொண்டும் அதில் பொருத்தப்பட்ட சனியன்களும் (குத்துக்கத்தி) வரையப்பட்டன. அடியில் அத்துமுக்கியின் பிடங்கு (butt) புலியின் கால்களுக்கு பின்புலத்தில் இருக்கத்தக்கனையாக வரையப்பட்டன. சன்னங்களும் .303 இயின் சன்னங்களே ஆகும்.

large.firstsymbol.jpg.27fc8beb01bef019ac

முதல் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் 1985 சனவரிக்கு அண்மையாக "TAMIL EELAM" என்று மாற்றப்பட்டது. | படிமப்புரவு (Img. courtesy): விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.liberationtigersoftamileelamsymbol

முதல் நிறச் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எமது நாட்டின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் "TAMIL EELAM" என்று 1985 சனவரிக்கு அண்மையாக மாற்றப்பட்டது. | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.tamileelam.jpg.371b08f2abf8a5e3315

01/11/1994 அன்று பாவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடியும் சின்னமும். இதில் "TAMIL EELAM" என்று மாறியுள்ளதைக் காண்க. அதே நேரம் லையன்னாவின் வடிவமும் மாறியுள்ளதை நோக்குக. மேலும் ஆங்கில எழுத்துக்களின் எழுத்துருவும் மாறியுள்ளது.

large.lastflagofliberationtigersofTamilE

விடுதலைப்புலிகள் கொடியின் இறுதி விருத்து. இதனையே புலிகள் இறுதிவரை பாவித்தனர். இதில் லையன்னாவின் வடிவம் மீண்டும் பழைய நிலைக்கே மாறியுள்ளதை நோக்குக. | படிமப்புரவு: meethaku.com

  • தமிழீழத் தேசியக் கொடி:

இக்கொடியானது தவிபு இன் கொடியிலுள்ள எழுத்துக்களை நீக்குவதால் உருவாகிய கொடியாகும். இக்கொடியினை 1990ம் ஆண்டு மாவீரர் கிழமையின் முதல் நாளன்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியாக சாற்றாணைப்படுத்தியதோடு அதனைத் தானே ஏற்றி வைத்து எமது நாட்டின் முதல் கொடியினை அறிமுகமும் செய்து வைத்தார். இவ்வாறாக தமிழீழம் என்ற நாடு முற்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே எமக்கு எமது கொடி பிறந்திருந்தது.

இக்கொடியில் புலியே முதன்மைச் சின்னமாக உள்ளதாலும் புலிகள் அமைப்பின் கொடியிலிருந்து பிறப்பிக்கப்பட்டதாலும் இது 'புலிக்கொடி' என்றும் அழைக்கப்பட்டது. 

புலிக்கொடியானது தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் போது எமது நாட்டின் கொடியாக ஏற்றிவைக்கப்பட்டது.

இப்புலிக்கொடியானது  ஒரு மாவீரரின் (நிரந்தரப்படை மற்றும் மக்கள்படை) வித்துடல் மீது போர்த்தப்பட்ட பின்னர் திரும்ப எடுக்கப்பட்டு அன்னாரின் குடும்பத்தினரிடத்தில் மிகுந்த மரியாதையுடன் கையளிக்கப்படும். இது தொடர்பில் இக்கொழுவியினை சொடுக்கி வாசிக்கவும்.

முதலில் சின்னத்தைப் பற்றி தவிபு இன் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பற்றி காண்போம்: 

“தேசியக்கொடியின் மையத்தில் புலிச்சின்னம் அமையப் பெற்றிருக்கின்றது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாக புலியின் தலையும், முன்னங் கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.…. 

"தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும் தமிழீழ விடுதலை இலட்சித்தையும் சித்தரிக்கும் சின்னமாக புலிச் சின்னம் விளங்குகின்றது. புலிச் சின்னத்தை தமிழீழத்தின் தேசிய சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேருன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக்காட்டும் ஒரு குறியீடு. வீரத்தையும் தன்னம்பிக்கையையும் குறித்துக்காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும் புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சிகொள்ளச் செய்தனர். இன உணர்வை, தேசியப்பற்றுணர்வை, பிரதி பலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீட்டாகத் திகழ்கிறது புலிச்சின்னம். அது தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது. பாயும் புலியை ஒத்த எமது விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. 

“புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன.” 

“ஒட்டு மொத்தத்தில், எமது தேசியக்கொடி, சுதந்திரத்தையும் சமதர்மத்தையும் வேண்டி நாம் நடத்தும் வீர விடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று பிறப்பிக்கப்போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக்கொடி திகழ்கிறது.”

தேசியக்கொடியில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் உள்ளன. இவற்றின் குறித்து நிற்பவையாக நான்காம் ஈழப்போரில் வெளியிடப்பட்ட 'தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை' இல் உள்ள குறிக்கோள்கள்:

“எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.”

“தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.”

“விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.”

“விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.”

புலிக்கொடியானது தொடர்ந்து ஒரே சீராக இருக்கவில்லை. அதன் சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் புலிக்கொடியின் நிறங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

large.tamileelamflag.jpg.d96364ce128c7e3

1988ம் ஆண்டு புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சாரில்லா தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: சோசலிசத் தமிழீழம்: விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம், 1988

large.TamilEelamflag1994.jpg.075eca5409e

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை, 1994

large.LastversionoftheTamilEelamFlagofLT

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடியின் இறுதி விருத்து (version)

  • வெற்றிக்கொடி:

இது ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியாகும். இது நீள்சதுர வடிவிலே கிடைமட்டமாக நிறங்கள் இணைக்கப்படுவதால் வந்த கொடியாகும். இதுவே இதன் செந்தரமான வடிவமுமாகயிருந்தது. ஆயினும் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். இவற்றிற்கு பெயருண்டோ என்பது குறித்து தெரியவில்லை. இவை யாவும் நீள்சதுர வடிவிலே காணப்பட்டன. இவ்வாறாக மாவீரர் துயிலுமில்லங்களில் பறக்கவிடப்பட்ட செந்தரமான வடிவம் தவிர்ந்த ஏனைய 4 வடிவமைப்புகளையும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:

  1. செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  2. இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  3. இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடி

  4. ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடி.

large.main-qimg-83e19e1905c98a690b967d11

செந்தரமான வெற்றிக்கொடி

large.maaveerarthuyilumillam(4).jpg.3e22

புனிதபூமி மாவீரர் துயிலுமில்லத்தில் செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடிகளும் செந்தரமான வெற்றிக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large_2004.jpg.2d167f93f08df0a80771efc62

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி பறப்பதைக் காண்க

large.126853053_KanagapuramMartyrsgravey

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடிகள் பறப்பதைக் காண்க

large.Flags_Kopai_Heroes_Graveyard_Jaffn

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடிகள் பறப்பதைக் காண்க

செந்தரமான கொடியின் வடிவமானது சமர்க்களங்களிலும் புலிகளால் பாவிக்கப்பட்டது. சிங்களப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளுக்குள் ஊடறுத்து செல்லும் போதும் படைத்தளங்களின் படைவேலிகள் உடைக்கப்பட்டு நுழையும் போதும் எம்மவரின் முன்னணி அணிகள் இதனை தடியில் கட்டி தலைக்கு மேலே பிடித்தபடி ஓடிப்போவர். 

large.main-qimg-e6f7714942415c9f96abdfb5

சமர்க்களத்தில் நடந்து செல்லும் இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே செந்தரமான வெற்றிக்கொடியாகும்

  • எழுச்சிக்கொடி:

இவைதான் எழுச்சி நாட்களின் போதும் வீரச்சாவு வீடுகளிலும் ஊர்வழிய சோடினைகளுக்குப் பாவிக்கப்படும் கொடியாகும். இது சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களும் தனித்தனியாக முக்கோண வடிவில் ஓர் நூலில் கட்டப்பட்டிருக்கும். முக்கோணத்தின் அகண்ட பரப்பே நூலில் கட்டப்பட்டு கூரானது கீழே தொங்கும் படியாக விடப்பட்டிருக்கும்.

இதனை உணர்ச்சிப் பெருக்கில் சிலர் உடலிலும் ஊசிகொண்டு குத்திருப்பர். 

large.1641582942_102002...jpg.ea3e5a32dc

ஒக் 10, 2002 அன்று 2ம் லெப். மாலதியின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர். | படிமப்புரவு: Associated Press

large.puthukudiyiruppu27-005.jpg.5fac69e

27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம்

large.ltteimages(19).jpeg.f39ab656c3ae34

வன்னியிலிருந்த துயிலுமில்லமொன்று மாவீரர் நாளன்று எழுச்சிக்கொடிகளால் சோடிக்கப்பட்டுள்ளதைக் காண்க

  • மாவீரர்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இதில் சின்னமாக கறுப்பு நிறத்தில் மாவீரர் பொதுத் திருவுருவப்படம் இருக்கும். பின்புலத்தில் தேசிய நிறங்களான சிவப்பு அல்லது மஞ்சள் இருக்கும்.

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)

  • வீரவணக்கக்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இவற்றை மாவீரர் துயிலுமில்லங்களில் காணலாம். இவை தேசிய நிறங்களான மஞ்சள் அல்லது சிவப்பை கொண்டிருக்கும். ஒவ்வொரு கொடியிலும் இரு சின்னங்கள் காணப்படும்:

1) இரு நிறக் கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் தான் தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் காணப்படும்.

2) இரு நிறக் கொடிகளிலும் கறுப்பு நிறத்தில் மாவீரர் வீரவணக்கச் சின்னமான 'உறுதியின் உறைவிடம்' உம் அதன் அடியில் சுடர்கொண்ட சிட்டிகளும் முன்புலத்தில் காணப்படும்

large.265705864_image(20).png.dc77afb000

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் வெற்றிக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large.1680868837_.jpg.66a1c9f57b49c4f5a1

அண்மையாக்கப்பட்ட படிமம்

large.32119434892_ba1f214986_o.jpg.eb4a1

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் தேசியக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க

  • நிறக்கொடிகள்:

இவை முழுமையாக ஒன்றில் சிவப்பையோ அ மஞ்சளையோ நிறமாக கொண்டு நீளசதுர வடிவில் இருக்கும்.

large.46173037_112505023092162_543267405

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் நிறக்கொடிகள் பறப்பதைக் காண்க

  • படையணிக்கொடிகள்:

இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைத்துறைக் கட்டுமானத்திற்குமென அவர்களின் சண்டை உருவாக்கத்தின் சின்னத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதை அவர்கள் பொதுநிகழ்வுகள், அணிநடை போன்றவற்றில் அணிநடை சீருடையுடன் சேர்த்து தாங்கிச் செல்வர். அப்போது தமிழீழத் தேசியக் கொடியினையும் தேவைப்படின் பாவிப்பர்.

large.52169709_onmalathy15.png.ab58cfe8e

2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள் (Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி

இக்கொடிகளில் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களுக்குமிருந்த கொடிகளும் உள்ளடங்கும்.

large.main-qimg-45c61515846505fa830cb666

'போராளிகளுக்குப் பின்னால் தேசியக்கொடியுடன் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களின் கொடிகளும் கடற்புலிகளின் கொடியும் பறப்பதைக் காண்க.'

  • நீலக்கொடி:

கடற்புலிகளின் வீரத்தை பறைசாற்றுகின்ற விதமாக இருந்த கடுநீலம் மற்றும் வான்நீல நிறத்தை உடைய கொடி நீலக்கொடி எனப்படும். இது கடற்புலிகளின் ஆழுமைக்குள்ளிருந்த துயிலுமில்லங்களிற்குள்ளும் அவர்கள் சார் நிகழ்வுகளிலும் பறக்கவிடப்படும்.

large_gui.jpg.d3fa6bc204054d2a371b190411

கடற்புலிகளின் நிகழ்வொன்றில் வெற்றிகொடியுடன் நீலக்கொடியும் அடுத்தடுத்து பறக்கடிடப்பட்டுள்ளதைக் காண்க

  • கரும்புலிகள் வீரவணக்கக்கொடி

இது கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும். இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது.

large.BlackTigersRememeranceflag.png.3be

இவ்வாறாக தமிழீழத்தில் கொடிகள் பாவிக்கப்பட்டன.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

புலிகளின் யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு - ஓகஸ்ட், 2006

3 months 2 weeks ago

கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..!

https://www.errimalai.com/?p=53311

2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது.

சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோட்டார் படையணி, கிட்டுப்பீரங்கிப் படையணி , சண்டைவாகன அணி, வழங்கல் அணி, மருத்துவ அணி பின்னனியிலும் என சண்டை நகர்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இவ்வேளைகளில் வடபோர்முனையின் வலது பக்கமாக இம்ரான் பாண்டியன்படையணி, சோதியா படையணி மற்றும் ராதா படையணியின் விசேட அணியும் [கனரக ஆயுத அணி], இடது பக்கமாக சாள்ஸ் அன்ரனி படையணியும் மாலதி படையணியும் கிளாலி கரையோரமாக அரசியல் துறையினரும் ராதாபடையணியின் ஓர் அணியினரும் களம் இறக்கப்பட்டனர். இதில் கிளாலி கடல் நீரேரி ஊடாக லெப் கேணல் ராணி மைந்தன் கடற்புலிகளின் வீரம் சொறிந்த தாக்குதல் பலவற்றில் லெப்.கேணல் இரும்பொறையுடன் செயற்பட்ட நல்ல போர்வீரன் தலைமையில் அரசியல் துறை போராளிகள் தரையிறக்கம் நடைபெற்ற போது அந்த தரையிறக்கம் சாதகமற்றதாகிப் போனதால் லெப்கேணல் ராணிமைந்தன் தானே முன்வந்து கிளாலி முன்னரங்கினை நோக்கி முன்னேற முயன்ற வேளை வீரச்சாவை தழுவிக்கொண்டான்.

இப்போது சண்டை மாற ஆரம்பித்தது. கிளாலி பகுதியில் இருந்தும் யாழில் இருந்து பிராதான வீதீயூடாகவும் நாகர் கோயில் பகுதியில் இருந்தும் இராணுவம் ஊடறுப்பு சண்டையினை சமநேரத்தில் ஆரம்பித்தது. இதன்போது பலத்த எறிகணைைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன ஒருபுறமும் எழுதுமட்டுவாழில் இரகசிய மண்ணரண் அமைத்து இராணுவம் தாக்க ஆரம்பி்க்கவும் சண்டையின் போக்கு தலைகீழாகிப் போனது.

14 ஆம் திகதி மதியத்தின் பின் எதிரி தனது மூன்றாவது மண்ணரணை மீளவும் கைப்பற்றி கொள்ளவும் பக்கவாட்டாக நகர்ந்த இராணுவ அணியை புலிகள் துவம்சம் செய்ய சண்டையின் போக்கு எமக்கு சாதமாக மாறத் தொடங்கியது. மீண்டும் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்தது.

இதில் சண்டையின் போக்கினை மாற்றியது சோதியா படையணியின் லெப்.கேணல் செல்வி தலைமையிலான போராளிகளும் ராதா படையணியின் சினைப்பர் அணி, உந்துகணை அணியும் ஆவர். இதில் மோட்டார் மற்றும் ஆட்லறி அணியினரின் சூட்டாதரவு முக்கிய பங்காற்றியது முக்கியமாகும்.

இவ்வாறு சண்டை மாற இரண்டு காரணங்கள்: ஒன்று தளபதி தீபன் அண்ணருடன் தளபதி பால்ராஜ் அண்ணா கைகோர்த்தமை போராளிகளின் உக்கிரமான தாக்குதலாகும். எதிரியின் மொனிற்றரிங் அணி இரானுவ தளபதிக்கு பால்ராஜ் அண்ணரின் வருகை பற்றியும் சண்டையில் போராளிகள் உக்கிர தாக்குல் பற்றியும் தெரிவிக்க வெலவெலத்துப்போன இராணுவத் தலைமை கேழைத்தனமான தாக்குதலை ஆரம்பித்தது. அதுதான் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலாகும். இதன் காரணமாக சண்டை மீதான கவனத்தை விடவும் புலிகளின் முழுக்கவனமும் செஞ்சோலை மீது திரும்பியது. மருத்துவ வழங்கல் உட்படஇதனால் தலைவர் சண்டை நிறுத்தி தற்காப்பு போர்முறைக்கு மாறுமாறு தளபதி தீபனுக்குக் கூற களமுனையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்த புலிகளின் அணிகளால் எதிரியின் பகுதிகளில் ஊடுருவி நின்ற போராளிகளால் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைக் கொண்டுவர முடியவில்லை. காரணம் தொடர் சண்டையின் தாக்கம் ,காயமடைந்த போராளிகள், ஆயுதங்கள் என பெரும்சுமையின் காரணமாக வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலை எதிரியின் பதுங்குகுழிகளிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளைகளில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களே இவைகளாகும்.

FB_IMG_1590509979178-1.jpg

அந்த யுத்தத்தில் எமது தரப்பில் 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர் இதில் 30 க்குட்பட்ட போராளிகளின் வித்துடல்கள் கிடைக்கப் பெறவில்லை. அதில் எம்மால் தவறவிடப்பட்ட போராளிகளது வி்த்துடல்களாகவே இவை இருக்கும்…!

கனத்த நெஞ்சோடு
வட போர்முனையின்
ஒரு கீற்றின் குரல்

அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!

Checked
Sun, 12/14/2025 - 04:34
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed