எங்கள் மண்

என் பார்வையில் தமிழீழ மாணவர் அமைப்பு

1 month 1 week ago

இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பல உன்னதமான விடயங்களை கொண்டிருக்கின்றன. அதில் ஒற்றைப் பக்கம் தான் மாணவர் அமைப்பு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணச் சிந்தனையிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உறுதியான நம்பிக்கையிலும் விதையிடப்பட்டது தான் மாணவர் எழுச்சிக்கான களம். எமது விடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு, மகளிரின் பங்களிப்பு என தேசக்கடமைகள் விரிந்து கிடந்த போது விடுதலைக்கான எழுச்சியின் படிக்கல்லை மாணவர்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் களத்தின் திறவுகோள்.

1985 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் முதலாவது பொறுப்பாளராக பொறுப்பெடுத்தார் முரளி என்ற போராளி. அவரின் தீவிர முயற்சியின் பெறுபேறு தமிழீழ மாணவர்களின் எழுச்சி மிக்க செயற்பாடுகளாக உருமாறியது. பெரும் சாதனைகளைச் செய்த போராளிகளை உருவாக்கவும், தமது உரிமைகளுக்காக புதுப் புதுப் போராட்டக் களங்களை உருவாக்கவும் தமிழீழ மாணவர்களுக்கு புது வழிகளைத் திறந்தது மாணவர் இயக்கம்.

அனைத்து தமிழீழ மாணவர்களையும் எழுச்சி மிக்க தமிழீழ உணர்வாளர்களாக மாற்றுவதற்கும் தமிழீழ மாணவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் உருவாக்கம் கண்ட மாணவர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் கீழ் இயங்கிய கிட்டத்தட்ட 54 உப பிரிவுகளுக்குள் மிக முக்கியமான பிரிவாக இயங்கத் தொடங்கி 2009 மே 18 வரை தனது பணியை சிறப்பாக செய்து வந்தது.

கல்வி ஒடுக்குமுறையால் மற்றும் வெட்டுப்புள்ளித் திட்டத்தால் உயர்கல்விகளை தொடர முடியாமல் தமிழ் மாணவர்களை ஒடுக்க நினைத்த சிங்களத்துக்கு பெரும் எழுச்சி மூலம் பதில் சொல்லவும், பாதிக்கப்பட்டிருக்கும் எம் தமிழ் மாணவர் சமூகத்தின் அரசியல் பொருளாதார விழுமியங்களில் வளர் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும், பொறுப்பாளர் முரளி தன் துவிச்சக்கர வண்டியோடு வயல்வெளிகளிலும் புற்றரைகளிலும் குச்சொழுங்கைகளிலும் என்று பயணிக்கத் தொடங்கினார். இதனூடாக விடுதலை பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே பெரும் கருத்துப் பரம்பல்களை விதைத்து அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை புரட்சிகர விடுதலைப் பாதையில் பயணிக்க வைத்தார். அதை நிரூபிக்கும் விதமாக,

“எம் மக்களில் எதிர்காலத்தை நோக்கி “ என்ற பெரும் பொருட்காட்சி ஒன்றை மாணவர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பொருளியலாளர்கள் என்று அனைத்து தமிழீழ வளங்களையும் ஒருங்கிணைத்து வளமற்ற தமிழீழம் என்று கருத்தாடல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு தமிழீழம் வளமுள்ளது என்று அடித்துக் காட்டினார். தமிழீழத்தில் உள்ள அனைத்துத்துறை வல்லுனர்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தமிழீழம் சுய பொருளாதார நாடாக அமையும் என்ற செயற்பாட்டு நிலையை உறுதிப்படுத்தினார். இதுவே மாணவர் இயக்கத்தின் முதல் வெற்றியாக பதியப்பட்டது. அதன் பின்பு அறிவியல் கழகங்கள் தமிழீழ பரப்பெங்கும் உருவாக்கப்பட்டன. அதனூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மெருகூட்டப்பட்டது மட்டுமல்லாது போட்டிகள், கருத்தரங்குகள் என்று வளர்நிலையை நோக்கிப் பயணிக்க வைத்தார் பொறுப்பாளர் முரளி.

23.12.1987 இந்திய இராணுவத்தின் கோப்பாய் பகுதியில் நடந்த சுற்றிவளைப்பு ஒன்றில் இருந்து தப்பிக்க முனைந்த போது நடந்த நேரடிச் சண்டையில் தமிழீழ மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளர் மேஜர் முரளியாக வீரச்சாவடைந்தில் இருந்து அவரால் நிலைநிறுத்தப்பட்ட தமிழீழ மாணவர் இயக்கம், 2009 மே 18 ஆம் நாள் விடுதலைப் போராட்டம் மௌனிக்கும் வரை பல பத்து பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டு தமிழீழ மாணவர்களுக்கு தன் பணி செய்தது.

தமிழீழ மாணவர் அமைப்பின் இறுதிப் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணன் அல்லது இளந்திரையன் என்று அழைக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி. மேஜர் முரளி முதல் கண்ணன் வரை பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களும் அவர்களுடன் பணியாற்றிய போராளிகளும் தளராத துணிவோடு இறுதி நாள்வரை மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபட்டார்கள்.

யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழீழ நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்த 1995 இற்கு முன்பான காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது நடுவப்பணியகத்தை நிறுவியும் அதன் பின்பான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நிர்வாக கட்டமைப்புக்கள் நகர்த்தப்பட்ட பின்பு கிளிநொச்சி, மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி என்று தன் நடுவகத் தளங்களை நிறுவி தென்தமிழீழம் வடதமிழீழம் என்று அனைத்து பிரதேசங்களிலும் மாணவரமைப்பு தன் பணியாற்றி வந்தது. 2001 ஆம் வருடத்துக்கு பின் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நடுவப்பணியகத்தை நிறுவிக் கொண்டது. சுற்றி வர தேக்கு மரங்களால் சூழப்பட்ட நல்ல இயற்கையின் சூழலில் அமர்ந்திருந்த நடுவப்பணியகம் தனது பணிகளை அதற்கான பொறுப்பாளர்களூடாக பணியாற்றியது.

மாணவர் அமைப்பு தனது கட்டமைப்பை பல வழிகளில் நிறுவிக் கொண்டது. பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள் என்றும் போராளிகள் பொறுப்புக்களை வகித்த அதே நேரம் வெறும் கற்றல் செயற்பாடுகள் மட்டுமல்லாது, தேசிய எழுச்சி நீரோட்டத்தில் மாணவர்களை வழிப்படுத்தவும் ஏராளமான திட்டவரைவுகளோடு பணியாற்றியது மாணவரமைப்பு.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை வழிகாட்டுதல் செயலரங்குகளும் முன்னோடிப் பரீட்சைகளும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் வெற்றித் திறவுகோளாக அமைந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் நான் நினைக்கிறேன், 1997 ஆம் வருடமாக இருக்க வேண்டும் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்ற மாணவர்கள் சிலரை தேசியத்தலைவர் சந்தித்து அவர்களுக்கான மதிப்பளிப்பு ஒன்றை செய்திருந்தமை மிக முக்கியமாகின்றது. இத்திட்டம் தமிழீழ கல்விக்கழகம் மற்றும் தமிழீழ மாணவர் அமைப்பு என்ற இரு கட்டமைப்புக்கள் இணைந்து செய்த செயற்றிட்டம் என நினைக்கின்றேன். (இதன் உண்மைத்தகவல் எனக்கு நினைவில்லை தேசியத்தலைவர் சந்தித்தாரா அல்லது அவரின் கையெழுத்துடனான சான்றிதழ் வழங்கப்பட்டதா என்று நினைவு வருக்குதில்லை இந்த தகவலை உறுதிப்படுத்த என்னால் முடியவில்லை தயவு செய்து தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். )

வசதிகள் அற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிதொகைக் கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்குவதில் இருந்து கற்பதற்கு வசதிகள் அற்ற பள்ளிப் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லங்கள் வரை மாணவரமைப்பால் உருவாக்கப்பட்டநிர்வகிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக மல்லாவியில் இயங்கிய ஆண்கள் இல்லமான மாறன் மற்றும் பெண்கள் இல்லமான சாந்தி மற்றும் கற்சிலைமடுவில் இயங்கிய சிறுவர் இல்லம். ( பெயர் நினைவில்லை) ஆகியவை சான்றாகின்றன. இது மட்டுமல்லாது பல இடங்களில் பல சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை விட ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களின் அலுவலகங்களிலும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கணனி பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படைக் கணனிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடிப்படை வசதிகளற்ற பல கிராமங்களில் கல்வி படிக்கல்லை தொட வேண்டும் என்பதற்காக கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையங்கள் “கல்வி வளர்ச்சிக் கழகம் “ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு மாலைநேரக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. இவை தவிர, மாதாந்த சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு அவை மாணவர்களுக்கு அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியை பற்றிய அறிவூட்டல்களை செய்தன. இதை விட ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படைக் கணனி கற்கைகளை அறிமுகம் செய்வதற்காக சுழற்சி முறையிலான கணனி செயலமர்வுகள் செய்யப்பட்டு மாணவர்கள் முதல் பெற்றறவர்கள் வரை தொழில்நுட்பக் கல்வியின் அவசியங்கள் பற்றித் தெளிவு படுத்தப்பட்டு தொழில்நுட்ப அறிவு ஊட்டப்பட்டது.

முரளி என்ற தொலைத்தொடர்பாடல் நிலைய பெயரைக் கொண்ட மாணவரமைப்பின் நடுவப்பணியக தொலைத்தொடர்புக் கருவியில் ஒலிக்கும் குரல்கள் அனேகமான நேரங்களில் மாணவர்களின் வளர்ச்சி பற்றியே ஒலிக்கும். தேசிய எழுச்சி நீரோட்டத்தில் தமிழீழ மாணவர் அமைப்பும் தமிழீழ கல்விக் கழகமும் இணைந்து எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் செய்த பணிகளை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் என் நினைவில் இருந்தவன்றை கொஞ்சமேனும் தொட்டுச் செல்கின்றேன்.

மேஜர் முரளி தொடக்கம் லெப். கேணல் ராணிமைந்தன், லெப் துளசி, …. வீரவேங்கை சக்கரவர்த்தி, லெப். புயல்வீரன், வீரவேங்கை கோபி என தமிழீழ தேசத்துக்கான விதைகளாக மாணவரமைப்பு பல போராளிகளை விதைத்துள்ளது. அந்த வரிசை மிக நீளமானது. அந்த வரிசையை அறிந்தவர்கள் பட்டியலிடுங்கள்…

குறிப்பு: தயவு செய்து இக்கட்டுரையை பகிருங்கள் பிரதி செய்து பதிவேற்றாதீர்கள் இக்கட்டுரையில் சிறு தகவல் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்தால் நீங்கள் பிரதி எடுத்து பதிவேற்றும் போது தவறி விடும்.

மீள் பதிவு.

எழுதியது : இ.இ.கவிமகன்

நாள் 06.06.2022

எல்லாம் முடிஞ்சு போச்சு.

1 month 1 week ago

பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது.

வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம்.

அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள்.

மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அருகில் பல குழந்தைகளின் அழுகுரல்கள். மாமா பசிக்குது என்று மருமகள் என்னிடம் கெஞ்சுகிறாள். அவளுக்கு அம்மா அப்பாவை காணவில்லை என்ற ஏக்கம் வேறு.

வாய் திறந்து பசிக்குது என்று கூற முடியாத மருமகன் என்னை கட்டிப்பிடித்தபடி தாயின் அரவணைப்புக்காக ஏங்கியபடி அழுது கொண்டிருக்கிறான். என்னிடமோ என் அம்மா அப்பாவிடமோ எதுவும் இல்லை.

பச்சைத்தண்ணீர் கூட தீர்ந்துவிட்ட நிலை. தலைநிமிர்த்த முடியவில்லை. முல்லைத்தீவுப்பகுதியில் இருந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் வரும் கந்தகக் குண்டுகளும் எறிகணைகளும் ரவைகளும் எந்த நிமிடமும் எங்களை உணவாக்க காத்திருக்கின்றன.

இருந்தும் சின்னப்பிள்ளைகள் பசியில் துடிப்பதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மருமக்களை அம்மாவிடமும் சித்தப்பாவின் தங்கையிடமும் கொடுத்துவிட்டு மைத்துனனும் நானும் குனிந்தபடி திசைதெரியாது நகர்கிறோம். கையில் இரண்டு போத்தல்கள். எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்பது மட்டுமே எமது ஏக்கம். மெதுவாக குனிந்தநிலையில் நகர்கிறோம்.

நிரையாக நாலைந்து பனைமரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. எதிரில் இருந்து வரும் குண்டுகளை தம்மில் தாங்கியபடி அரைகுறை உயிரில் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அருகில் ஒரு “ஐ பங்கர்” என்று சொல்லப்படும் சிறிய ஒரு பதுங்ககழி. அதற்குப் பக்கத்தில் பனைமரத்துக்கு கீழே இறுதியாக நான் பார்த்த அண்ணா ஒருவனினதோ அல்லது அக்காவினதோ ஒரு வோக்கி. அதை பற்றியபடி ஒரு கரம். அக்கரத்துக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நம்பக்கூடியதாக வரி உடையில் சிதறிய ஒரு உடல்.

அழுகை கண்ணை அடைக்கிறது. எப்படி வாழ்ந்தம்? எதற்கும் அஞ்சாமல் அண்ணனின் நிழலில் வாழ்ந்த நாம் இப்போது எல்லாத்துக்குமே அஞ்சும் பாவிகளாக ஊர்ந்து கொண்டிருக்கிறோமே என்ற சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைத்தது.

இரண்டு மூன்று மீட்டர்கள் நடந்த போது கால்கள் இடறின. கால்களுக்கிடையில் தட்டுப்பட்டது உயிரற்ற உடல்கள் என்பதை பார்க்காமலே உணரக்கூடியதாக நாற்றம் வந்தது.

அவற்றின் அருகே ஒரு உடுப்புப்பை கிழிந்த நிலையில் கிடக்கிறது. அதற்குள்ளிருந்த ஒரு நெஸ்டமோல்ட் டின் தெரிந்தது. ஓடிச்சென்று அதை எடுத்தேன். பைக்குள் இருந்த ஒரு அல்பம் வெளியே வீழ்ந்தது. பள்ளிச்சீருடையில் அழகாக வாரியழுத்த இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியும் அவளின் சகோதரனும் சிரித்தபடி ஒரு நிழல்படத்தில் நின்றார்கள். ஒருவேளை கால்கள் இடறிய போது தட்டுப்பட்ட உடல்களுக்குள் அவர்களும் உயிரற்று இருந்திருக்கலாம்.

நான் அதைப்பற்றி எல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் நெஸ்டமோல்ட் டின்னை எடுத்து குலுக்கிப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட முக்கால் டின் அளவுக்கு மா இருந்தது. பெரும் சந்தோசம். உதடுகள் புன்னகைத்தன.

டின்னைப் பிடித்திருந்த கை கொஞ்சம் பிசுபிசுத்தது. என்னவென்று பார்த்தேன் கையில் இரத்தம். டின்னைத் திருப்பிப் பார்க்கிறேன் டின்னிலும் குருதிபட்டிருந்தது. அப்பையினை பார்த்தேன் குருதி அதிலும் இருந்தது. அப்போது தான் அல்பத்திலும் குருதி பட்டிருப்பது புரிந்தது.

ஒருவேளை அந்த நிழல்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளின் குருதியாகக் கூட இருக்கலாம். மனம் ஓவென்று கத்தி அழவேண்டும் போல எண்ணியது. இருந்தும் அடக்கிக்கொண்டு “ என்ட மருமக்களுக்கு கொஞ்சம் பசி தீர்க்க உதவும் இது” சொல்லியபடி நகர்கிறேன்.

மைத்துனனோ “ அண்ண இரத்தம் எல்லாம் பட்டுக்கிடக்கு அதை எடுக்காத அண்ண” என்கிறான். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க இப்போது அது மட்டுமே மனதில் நிலைத்த எண்ணம். “பரவாயில்ல வா”

நெஸ்டமோல்ட் டின் மடித்துக் கட்டிய என் சாறத்துக்குள் பத்திரப்படுத்தப்படுகிறது. எப்படியாயினும் பசிக்குது மாமா என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தைகளின் பசியில் கொஞ்சத்தையாவது இப்போது என்னால் நிவர்த்தி செய்ய முடியும்.

திரும்பி அவர்களிடம் நடக்கிறேன். சிதறிக்கிடந்த கரத்தில் அமைதியாக கிடந்த அந்த வோக்கி திடீர் என்று உயிர் பெற்று யாரையோ அழைத்தபடி இருக்கிறது. அது எதுவும் அப்போது எனக்கு செவியில் விழவில்லை. பள்ளிச்சீருடையில் புன்னகைத்தபடி இருந்த குழந்தைகளின் குருதியில் தோய்ந்து போய்க்கிடந்த அந்த நெஸ்டமோல்ட் மாவினால் என் மருகர்களின் பசியாற்ற கொஞ்சமாவது முடியுமே என்பதை மட்டுமே என் மனம் சொல்லிக்கொண்டது…

நான் நடந்து கொண்டே இருந்தேன்….

நினைவுகளுடன்: இ.இ.கவிமகன்

17.05.2025

வட்டுவாகல் பாலத்திற்குள்ளால் நகர்கின்ற போது

1 month 1 week ago

வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன.

என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன். இறுதிவரை சிறிய முதலுதவி செய்யக் கூடியதாக மருத்துவப் பை ஒன்றைக் கைவிடாது என் தோழில் வைத்திருந்தேன். அப்போது எனக்கு பெரிதாகத் தெரிந்த சொத்துக்களில் அந்த நெஸ்டமோல் டின்னும் இதுவுமே இருந்தன.

அதற்குள் பெரிதாக ஒன்றும் இல்ல. நானே அம்மப்பாவின் வேட்டிகளைக் கொண்டு உருவாக்கிய “பீல்ட்கொம்ரேசர்” என்று இராணுவப்பாசையில் சொல்லக்கூடிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் துணி போன்று சுருட்டப்பட்டுக்கிடந்த நீண்ட வேட்டித் துண்டுகளே இருந்தன. அதனோடு ஓரிரண்டு பனடோல்கள் மட்டுமே இருந்தன.

ஒருவேளை திடீர் என்று யாருக்காவது காயம் வந்தால் அதைக்கொண்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்பாடு அது. அதுகளைக் கொண்டு வந்ததால் அதை வைத்து எதிரி எதாவது பிரச்சனை தரலாம் என்ற பயம் வந்ததனால் என் சித்தப்பா அவற்றை எறியச்சொல்கிறார். அதனால் வட்டுவாகல் நீரேரி அதை தனக்குள் வாங்கிக் கொண்டது.

நேற்று குருதியில் நனைந்து கிடந்த நெஸ்டமோல்ட் டின் இப்போது வெறுமையாகி இருந்தது. சின்னவர்கள் அதை முடித்துவிட்டார்கள். அதனால் அதையும் எறிகிறேன். எங்கள் உடல்கள் குருதி நாற்றத்தாலும் பயத்தினாலும் ஒடுங்கிப் போய் கிடந்தது. குரல்வளை நீருக்காகவும் இரைப்பை சாப்பாட்டுக்காகவும் ஏங்கிக் கொண்டிருந்தன.

அதைவிட எங்கள் முன்னே நீண்டு கிடந்த வரிசையைத் தாண்டி கனரக ஆயுதங்களைத் ஏந்திக் கொண்டு முறைத்தபடி நின்ற சிங்கள கொடூரர்களின் அடுத்தது என்ன செய்யப்போகிறார்கள் என்று எண்ணி மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தன. இரு எறிகணைகள், இரண்டே இரண்டு எறிகணைகள் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தால் போதும் நாம் அனைவரும் உடல்சிதறிப் பலியாகிடுவோம்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதுவும் தெரியாத பதட்டமான நிலை. திடீர் என்று எமக்கு பின்னால் இருந்து சில துப்பாக்கி வேட்டுக்கள். என் அருகில் இருந்த சிலர் காயப்படுகிறார்கள். என் சகோதரன் ஒருவன் முதுகில் காயமடைகிறான். குருதி கொப்பளிக்கிறது. அவலத்தின் ஓசை வானில் எழுந்தது. இன்னமும் நாங்கள் யுத்த பிரதேசத்துக்குள் தான் இருக்கிறோம் என்பது புரிந்தது. ஐயோ ஐயோ என்று அத்தனைபேரும் குளறுகிறார்கள். நாங்கள் அப்பாவி மக்கள் எங்களை சுடாதீர்கள் என்று கத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நகைக்கிறது எம்மைச் சுற்றி நின்ற சிங்கள வல்லூறுகள்.

பீறிட்ட குருதியை கட்டுப்படுத்த எதுவும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் நீருக்குள் எறிந்த வேட்டித்துண்டுகளை திரும்பிப்பார்க்கிறேன். அவை நனைந்து போய் கிடந்தன. காயப்பட்டவர்களை அணைத்தபடி குருதி வரும் இடங்களுக்கு ஏதோ ஒன்றை கிழித்துக் கட்டுகிறார்கள் உறவுகள்.

மீண்டும் மீண்டும் ஏவப்பட்டுக்கொண்டிருக்கும் எறிகணைகளின் வீச்சு கொஞ்சம் தூரவாக சென்று வெடித்தது. எம் தலைகளுக்கு மேலாக துப்பாக்கி ரவைகளும் எம்மை தாண்டிச்சென்றன.

வழமை போல் பாதுகாப்பு வலையம் என்று ஓரிடத்தில் மக்களை குவிய வைத்து இனவழிப்பு செய்ததைப் போல வட்டுவாகல் பாலத்தில் முண்டியடித்தபடி கூடிநிற்கும் எம் எல்லோரையும் இதில் வைத்தே சுட்டுக் கொல்லப்போகிறது இந்த சிங்கள வல்லூறுகள் என்று எனக்குத் தோன்றியது.

நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு அருகில் மூடிய நிலையில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்ககழி ஒன்றில் நான்கு நாட்களுக்கு முன் பத்துப்பேருக்கு மேல் ஒரே ஒரு எறிகணைத் தாக்குதலால் இறந்த சம்பவம் கண்ணுக்குள் வந்தது. அதைப் போலவே இப்போதும் நடக்கப்போவதாகவே உள்மனம் சொல்கிறது. மனமும் உடலும் நடுங்குகிறன. நான் மருமகனை இறுக கட்டியணைத்தபடி அவன் அழுவதை நிறுத்த முயற்சிக்கிறேன். பாவம் ஒன்றரை வயதுக் குழந்தை அனுபவிக்க கூடாத எல்லா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

திடீர் என்று ஏதோ ஆரவாரம். முன்னே வரச்சொல்லி சொல்லி சிங்களத்தில் கட்டளைகள். சிறிய நேரத்தில் தமிழிலும் கட்டளை. வட்டுவாகல் பாலத்தில் இருந்து இறுதியாக என் மண்ணை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். அது குருதிக்காடாக சோர்ந்துபோய் பிணங்களைச்சுமந்து கிடக்கிறது. மருமகனை அணைத்தபடி எழுந்து கொள்கிறேன். கொலைவெறி ஆடிய சண்டைக்களத்தில் இருந்து தப்பி வந்து பலிக்களத்துக்கு இழுத்துச்செல்லப்படும் பலிக்கடாக்களைப் போல எம்மை வரிசையில் கொண்டு சென்றார்கள் கொடிய சிங்கள இராணுவம்.

நடைப்பிணமாக நடந்து கொண்டிருந்தோம். முப்பது வருடங்களாக லீமா சேராவையும்,கிலோ9 ஐயும், அல்பாவையும் அழைத்துக்கொண்டருந்த வோக்கிகள் அப்போது எனக்குப்புரயாத சிங்களத்தில் யாரையோ அழைத்துக்கொண்டிருந்தன…

நினைவுடன் இ.இ.கவிமகன்

18.05.2025

இறுதிப்போரில் இறுதி நேரப் பிரிவு

1 month 1 week ago

தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள்.

“மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்”

சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர்.

சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர்.

சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர்.

“அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்று கத்துகின்றனர் கதறுகின்றனர். உங்கள விட்டிட்டு போகமாட்டம் என்று அழுகின்றனர். இருந்தும் அக்குழந்தைகளின் முகங்களை, அவர்களின் அழுகையினை அவர்களின் பிரிவை விட தாய் மண்ணை எதிரியிடம் விட்டு வர முடியாது தவித்த போராளிகள் அவர்களை விட்டு வந்து கொண்டிருக்கும் எதிரியை நோக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் இணையிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காது துப்பாக்கிகளை இறுகப்பற்றியபடி எதிரியை நோக்கி போகின்றார்கள்.

அதுவரை கண்முன்னே சாவும் பட்டினியும் எம்மரவை உலுக்கி எடுத்தது. இருந்தாலும் களமாடிய வேங்கைகள் உயிருடன் என்றோ ஒருநாள் மீள்வார்கள் என்று நம்பி உறவுகள் காத்திருப்பார்கள் பலர் மீண்டு வருவார்கள். சிலர் மீளமாட்டார்கள். அவர்கள் எமக்காக காவியமாகி இருப்பார்கள்.

இப்போது அவ்வாறில்லை.

இது பயங்கர மணித்துளி. சுற்றிவர முட்கம்பி வேலிகளைப்போல கந்தகக்குண்டுகளால் நிரப்பப்படும் குறுகிய பிரதேசத்தில் தம் இணையை இனி காண்போமா இல்லையா என்ற உத்தரவாதம் எதுவும் இல்லாத பொழுதில் அவர்கள் தம் இணைகளைப் பிரிந்தார்கள். மனதுக்குள் துடித்தாலும் கொண்ட இலட்சியத்தின் உறுதி அவர்களின் துப்பாக்கிகளை இறுகிப்பற்ற வைக்கிறது.

இது ஒரு புறம் இருக்க சிலர் இணையாகவே கரத்தில் ஏந்திய துப்பாக்கிகளை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். குறுக்கும்மறுக்கும் வரும் ரவைப் பின்னல்களுக்குள் அவர்கள் இருவரும் இணையாகவே எதிரியை எதிர்கொள்கின்றனர். சிலர் குழந்தைகளை உறவுகளிடம் கையளித்துவிட்டு உறுதியோடு நிற்கிறார்கள்.

இன்னொரு புறம்,

அம்மா பிள்ளையை பிடித்து இழுக்கிறாள். அப்பா கெஞ்சுகிறார் “எங்களுடன் வா “என்று. பிள்ளை வர மறுக்கிறது. தங்கை அண்ணனை, தம்பி அக்காவை, அண்ணன் தங்கையை, அக்கா தம்பியை என்று கெஞ்சுகிறார்கள். “ஆமியட்ட போவம் வா சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் தருவதாக அறிவிக்கிறாங்கள் தானே வாடா ” என்று வற்புறுத்துகிறார்கள்.

பற்றி இருந்த கையினை விலக்கியபடி நீங்கள் போங்கோ நான் வரேல்ல. என்னால வர முடியாதும்மா என்னை நினைச்சுக் கொண்டிருக்காமல் உடம்பை கவனமா பாருங்கோ நான் போறன் என்று நெஞ்சில் இருந்த கோள்சரை இறுக்கிக் கொள்கிறார்கள் பல போராளிகள்.

அவர்கள் நிச்சயமாக ஒன்றை அறிவார்கள். இது எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்போகும் இறுதிமணித்துளிகள் இவை. உயிர்களுக்கு எப்போதும் உத்தரவாதம் இல்லை. இருந்தாலும் எதிரியிடம் மண்டியிட்டு அடிமையாக சாவதை விட வரும் எதிரியில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டு பெருமையாக சாகலாம் என்ற உறுதி அவர்களுக்குள் இருந்தது. அதனால் தான் அவர்களால் தம் உயிரான உறவுகளைப் பிரிய முடிந்தது.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி எதிரியின் பிரதேசத்துக்குள் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் எம் தாயகத்தை வன்பறித்து வந்து கொண்டிருக்கும் எதிரியன் கதை முடிக்க நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

திடீர் திடீர் என்று பெரும் வெடியோசைகள் தனித்தனியாக பாரிய சத்தமாக கேட்கின்றன. என் நினைவுக்குத் தெரிந்தவரை அவை பெரும்பாலும் எங்கள் வேங்கைகள் கட்டியிருந்த வெடியங்கிகளின் வெடிப்போசைகளாகவே இருக்கக்கூடும்.

நாங்கள் அடிமைகளாக எதிரியினை நோக்கி….

அவர்களோ உறுதிமிக்கவர்களாக எதிரியை நோக்கி…

வெடியோசைகள் கேட்டவண்ணமே இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு முடிவில்லை.

நினைவுடன்: இ.இ. கவிமகன்

18.05.2025

தண்ணியும் ஏறிச்சுது பாம்புகளும் ஏறிச்சுது.

1 month 1 week ago

எங்கட சனத்துக்கு என்ன வழிகளில் எல்லாம் சாவுகள் வருகுது. மருத்துவ நண்பர் சலித்து கொள்கிறார்.

என்னாச்சு டொக்டர்?

நேற்று இரவு 40 சனத்துக்கு மேல சாகிற நிலையில் கொண்டு வந்தாங்கள். அவ்வளவு பேரும் கண்டங்கருவளலை பாம்பு கடிச்ச கேஸ். ஒரே இரவில ஒரே நேரத்தில இவ்வளவு சனமும் பாம்புக்கடியால சாக கிடக்குதுகள்.

அந்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் நடந்த சம்பவத்தை கூறத்தொடங்கினார்.

தர்மபுரம் சந்தியில இருந்து கல்மடு போற பாதையில இருக்கிற இடங்கள் எல்லாம் சனம் இருக்குதுகள். எது மேட்டு நிலம் எது தாழ் நிலம் என்று எதையும் சிந்திக்க முடியாத நிலமை. எங்கையாவது தங்கிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் மக்களுக்கு இருந்தது. சனம் தறப்பாளை போட்டு இருக்குதுகள். திடீர் என்று மழை பெய்ததும் தாழ்நிலப்பகுதி எல்லாம் தண்ணி ஏறீட்டுது. அதோட பாம்புகளும் ஏறீட்டுது. யாரும் பாம்புகள் வந்தத பெரிசா பார்க்கல்ல எங்கையாவது தங்கினா சரி என்று சனம் நினைச்சுது. சனத்தின் படுக்கைக்கு கீழையும் உடுப்புகளுக்கையும் இந்த கண்டங்கருவளளை பாம்பு சுருண்டு கிடந்திட்டு தீண்டி இருக்குது. முதலில் பலருக்கு பாம்புக் கடி என்றது கூட தெரியவில்லை ஏனென்றா இந்த வகை பாம்புகள் கடித்தால் கடி அடையாளங்கள் கூட தெரியாது.

அவர் கூறிவிட்டு வெற்று நிலத்தை வெறித்து பார்க்கிறார்.

குரலை சீர்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறார்.

இங்கே பாம்பு தீண்டுவது சாதாரணமாக இருந்தாலும் இப்பிடி பெரும் தொகையாக ஒரே நேரத்தில் தீண்டியது இல்லை. நினைக்க விசரா கிடக்கு தம்பி. ஒரு புறம் இயற்கை சீற்றம் மறுபுறம் கொடிய விலங்குகள் இன்னொருபுறம் சிங்கள வெறியனின் கொலைவெறித்தாண்டவம் சனம் எப்பிடி தாங்குறது? அவர் மௌனித்து போகிறார்.

மச்சான் இயற்கை கூட எங்கள வாழ விடாதா? நண்பன் கேட்கிறான். பதில் கூற முடியாது விக்கித்து நின்ற என்னை மீண்டும் மருத்துவரின் குரல் அசைக்கிறது.

எங்கட சனம் கிளிநொச்சிய விட்டு நகர்ந்து கொண்டிருக்குது இங்க இருக்கிறது இனி பயங்கரம் இப்ப கிளிநொச்சி ஒரு சூனிய பிரதேசம் மாதிரி எந்தநேரமும் தாக்குதல் நடக்கலாம். தெரிந்தும் பாம்புக்கடியால அங்க இருந்து சனத்த இங்க கொண்டு வந்தனாங்கள். அவர்கள காப்பாத்தியே ஆகவேணும். மருந்துகள் இல்லை எந்த மருந்து பொருட்களையும் சிங்கள அரசு எமக்கு அனுப்புவதில்லை. இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு சென்ற பின் எமக்கு முன்பிருந்ததை விட அதிகமான மருந்து பொருட் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பாம்புக்கடி நோயாளிக்கு குறைந்தது 25 க்கு மேற்பட்ட விசமுறிவு மருந்தை நாம் கொடுக்க வேண்டி வரும் இந்த நிலையில் எம்மிடம் இருக்கும் இருப்பு குறைவாக இருந்தாலும் எம்மக்களை காப்பாற்ற வேண்டி தேவை இருக்கிறது. அதனால எந்த இடரையும் சந்திக்க மருத்துவப்பிரிவும் எம் போராளிகளும் தயாராக உள்ளோம்.

ஏன் டொக்டர் பாம்பு கடிச்சா அங்க வைச்சு ட்ரீட் பண்ண முடியாதா?

முடியும் ஆனால் அதற்கு Medical Ventilator எங்களால கொண்டு போக முடியவில்ல அதனால தான் ஆக்கள இங்க கொண்டு வந்தம். அவர் கூறிய வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக்கருவி பற்றி எதுவும் விளங்காமல் திருப்ப வினவிய போது, பாம்புக்கடி பற்றி சிறு விளக்கமே தந்தார்.

இந்த வகை பாம்புகள் கடித்தால் உடனடியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். அதிலும் சுவாசநரம்பியல் தொகுதியை முற்றமுழுதாக செயலிழக்க செய்யும். இதனால் மூச்சுத்திணறலை உருவாக்கி சுவாசப்பிரச்சனையை கொண்டுவரும் அதனால் தான் சாவுகள் நடக்கும். இதற்கு உடனடி மருத்துவம் செயற்கை முறை சுவாசம் கொடுக்கப்பட வேணும் அத்தோடு உடனடியாக ASV குடுக்க வேணும் அதாவது Anti Snake Venom (விசமுறிவு மருந்து.) இது அடிப்படை பாம்புக்கடி மருத்துவ சிகிச்சை. அதோட செயற்கை சுவாசம் குடுக்க வேண்டும். அதற்காக நாம் Ambu bag முறையில் செயற்கை சுவாசத்தை கொடுத்தோம் ஆனால் தமிழீழ மருத்துவப்பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள் என்பன எமக்கு பட்டறிவைத் தந்தன. Ventilator போன்ற கருவிகளை பயன்படுத்த தொடங்கினோம் அதனூடாகவே செயற்கை சுவாசமுறமையை இலகு படுத்தினோம். இப்போதும் இந்த பாம்புக்கடி நோயாளர்களுக்கு செயற்கை சுவசம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்தது.

ஆனால் இப்போது "வென்டிலேட்டர்" கருவியை இங்கிருந்து கழற்றி உடனே நகர்த்திக் கொண்டு செல்ல முடியாத சூழல் அதனால் இவர்களை செயற்கை சுவாசம் கொடுப்பதாற்காக அங்கிருந்து இங்கே கொண்டுவந்திருக்கிறோம். அவர் கூறிய போது என்ன டொக் சொல்லுறீங்கள் இந்த சூனியபிரதேசத்துக்கா? எம் மக்கள் எவ்வகை துன்பங்களை எல்லாம் சந்திக்கிறார்கள். என்பது புரிந்தது. அத்தோடு இந்த மருத்துவ போராளிகளும் மக்களுக்காக எத்தகைய துன்பங்களை சுமக்கின்றனர் மனம் ஒரு முறை நினைத்தாலும்

டொக்டர் ஆக்களுக்கு பிரச்சனை ஒன்றுமில்லையா? ஒரே ஒரு பிள்ளை உடனடியாகவே இறந்திட்டுது. சின்ன பிள்ள இருக்கிறதுக்கு கூட இடமில்லாமல் மதகு ஒன்றுக்குள் இருந்திருக்குது. திடீர் என்று தண்ணி ஏறினதும் மதகுக்கு மேல படுத்திருக்குது பெட்சீட்டோட பாம்பு கிடந்தது தெரியாமல் இழுத்து போர்த்துக் கொண்டு கிடந்த போது பாம்பு கடிச்சிருக்கு பிள்ளைய தப்ப வைக்க முடியவில்லை. மற்ற ஆக்கள காப்பாத்திடுவம் என்று நம்புறன்.

அவர் எத்தனை காயங்களை கண்டிருப்பார்? எத்தனை மக்களை சந்தித்திருப்பார் ? ஆனாலும் மனது ஒரு நிலைப்பட முடியவில்லை. இயற்கையும் எம்மீது சாவினை திணிப்பது கண்டு நொந்திட வழியற்று நிற்கிறார். செல்களினால் சிதறிப்போகும் உறவகளின் குருதியை கண்ட போதும் தயங்காத அவர் இப்போது விழி கலங்கி நிற்கிறார். என்ன செய்ய என்று தெரியாத நாமும் மக்களின் துன்பங்களை எண்ணி அழுவதை தவிர வேறு எதுவும் இல்லை.

இது 2008 ஆம் வருடத்தின் மாரி காலம் நடந்த சம்பவம். தாயகம் இன்று மழைநீரால் மூடப்பட்டுக்கிடக்கும் நிலை கண்டு இது நினைவில் எழுந்து ஆடியது.

நன்றி தணிகை அண்ணா

இ.இ.கவிமகன்

நாள்: 06.12.2025

இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஈழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல்.

1 month 1 week ago

11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ்

12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம்

13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு

14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி

15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம்

16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம்

17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம்

18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம்

19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை)

20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி

21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை

22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி

23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி

24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி

25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி

26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை

27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை

28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி

29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை

30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை

31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை

32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை

33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை

34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை

35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல்

36) 25.10.1987 - சேரதீவு படுகொலை

37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல்

38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை

39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை

40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை

41) 26.10.1987 - புத்தூர் படுகொலை

42)26.10.1987 - அளவெட்டி படுகொலை

43) 26.10.1987 - புத்தூர் படுகொலை

44) 27.10.1987 - சாவகச்சேரி சந்தை, கந்தசட்டி கோயில் படுகொலை

45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை

46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை

47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை

48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை

49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை

50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை

51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை

52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை

53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை

54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை

55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை

56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை

57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை

58) 20.11.1987 - அச்செழு படுகொலை

59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை

60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை

61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை

62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு

63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை

64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை

65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை

66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை

67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை

68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை

69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை

70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை

71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம்

72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை

73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை

74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை

75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை

76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை

77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை

78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல்

79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு

80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை

81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை

82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை

83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல்

84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை

85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்)

86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை

87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை

88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை

89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை

90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை

91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு

92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை

93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை

94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை

95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை

96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை

97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை

98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை

99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை

100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை

101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை

102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை

103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை

104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF)

105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்)

106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை

107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு

108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி)

109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)

110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)

111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை

112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை

113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை

114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை

115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை

116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை

117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை

118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை

119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல்

120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை

121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்)

122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை

124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை

125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை

126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு

127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல்

128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்)

129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை

130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை

131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை

132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்)

133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை

134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி)

135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை

136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை

137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை

138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை

139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை

140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை

141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை

142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை)

143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை

144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை

145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை)

146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை

147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை

148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை

148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை

148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை

149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை

150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை

151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை

152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை

153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை

154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை

155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை

156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி)

157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி)

158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்)

159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி)

160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி)

161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை

162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை

163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை

164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை

165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை

166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை

167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை

168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை

169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை

170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை

171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை

172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை

173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை

174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை

175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை

176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை

177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை

178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை

179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை

180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை

181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை

182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை

183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை

184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை

185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை

186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை

187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை

188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம்

189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை

190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை

191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை

192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை

193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை

194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை)

195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை

196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை

197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை

198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை

199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை

200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை

201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை

202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை

203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை

204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை

205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை

206) 22.11.1988 - கல்முனை படுகொலை

207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை

208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை

209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை

210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை

211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை

212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை

213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை

214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை

215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை

216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை

217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை

218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை

219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை

220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை

222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை

223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை

225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல்

226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF)

227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை

228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை

229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை

230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை

231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை

234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF)

235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம்

236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு

237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை

238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு

239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை

240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை

241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை

242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை

243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை

244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை

245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை

246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை

247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை

248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை

249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்)

250) 10.02.1989 - பேசாலை படுகொலை

251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர்

252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை

253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை

254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF)

255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை

256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல்

257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை

258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை

259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை

260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை

261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை

262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை

263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை

264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை

265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை)

266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை

267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை

268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை

269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல்

270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை

271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது

272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல்

273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை

274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை

275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை

276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை

277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை

278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை

279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

280) 20.05.1989 - சுதுமலை படுகொலை

281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை

(சாவச்சேரி)

285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்)

286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை

287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை

288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை

289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை

290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை

291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை

292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை

293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை

294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல்

295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை

296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை

297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை

298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை

299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை

300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை

301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை

302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை

303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை

304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை

305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை

306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை

307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை

308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை

309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை

310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை

311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை

312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு

313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை

314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம்

315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF)

316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை

317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு

318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை

319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல்

320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு

321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை

322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை

323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை

324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை

325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை

326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை

327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை

328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது

329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி)

330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை

331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை

332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை

333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல்

334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு

335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை

336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை

337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை

338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை

339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்)

340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி)

341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை

342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை

343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்)

344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை

345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை

346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை

347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை

348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை

349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல்

350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை

351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை

352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை

353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை

354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை

355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை

356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை

357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை

358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை

359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை

360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை

361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை

362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை

363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை

364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை

365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை

366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை

(இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESOHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஈழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல்.

களத்தில்

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

1 month 1 week ago

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.

இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர்.

1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.

வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்

நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும்.

எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.

தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார்.

அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார்.

இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.

தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்

பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.

பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.

தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.

இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து.

அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.

குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின்

பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.

தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.

இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன.

இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர்.

படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.

இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார்.

(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.)

இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று

வழிநடாத்திய..

மேஐர் .சங்கர்.அவர்களுடன்

2ம் லெப்ரினன்.மதுவன்.

வீரவேங்கை .முசோலினி .

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்குவந்திருந்தனர்.

ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.

இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது.

கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.

அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து......

களத்தில்


பற்சமயத்தவருக்கு நடந்த வித்துடல் விதைப்புகள்

1 month 1 week ago

சமாதான காலத்தின் பின் முகமாலை முன்னரங்கில் வீரச்சா வேந்திய இராமநாதபுரத்தை சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடல் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல ஆழஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவெய்ந்திய மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடலும் இதே கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது.

மகன் கட்டளைத் தளபதியாக முதன்மைச்சுடரேற்றிய அதே மேடையில் இரு மாவீரர்களின் (பிரிகேடியர் தீபன் லெப்.கேணல் கில்மன்) இந்த தந்தையாக இறுதி யுத்ததின் பின்னர் வேலாயுதபிள்ளை அவர்கள் நின்று பிரதான சுடரை ஏற்றிய வரலாறும் இதே துயிலுமில்லத்தில் நிகழ்ந்து.

சிங்களப் பெண்மணியின் வாரிசுகளின் வித்துடல் முழங்காவில் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. 1990 ஏப்ரலில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த றியாஸ் என்பவர் மாவீரர் ஆனார். இவரின் வித்துடல் முஸ்லிம் மையவாடியிலேயே விதைக்கப்பட்டது இந்திய ராணுவ காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஆளுமை மிக்க இந்த மாவீரரின் வித்துடலுக்கு 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் உரையாற்றினார்.

முஸ்ஸிம் மாவீரரான உஸ்மான் -கிழக்கு என்பவரது வித்துடல் விதைப்பு யாழ் -முஸ்ஸிம் மையவாடியில் மார்க்க முறைப்படி நடைபெற்றது. இங்கேயே கப்டன் பாரூக்கின் (கனீபா- அக்கரைப்பற்று) வித்துடலும் விதைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட தளபதியாக விளங்கிய லெப் கேணல் விக்ரர் மற்றும் நாயுடு ஆகிய மாவீரர்களின் வித்துடல்கள் ஆட்காட்டிவெளியில் பொதுமக்களின் சவக்காலையிலேயே விதைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் தவறுதலான வெடி விபத்தில் வீரச்சாவடைந்த ஆரையம்பதியைச் சேர்ந்த மாவீரர் ஒருவரின் சிதைக்கு கிட்டு கொள்ளி வைத்தார். தாவடியில் விமானத் தாக்குதலில் வீரச்சாவடைந்த நாவலப்பிட்டியைச் சேர்ந்த லூக்காஸ் என்ற மாவீரருக்கு இன்னொரு போராளியே கொள்ளி வைத்தார்.

தம்மை வெளிப்படுத்த முடியாத காலத்தில் வீரச்சாவேந்திய லெப். செல்லக்கிளியம்மானின் வித்துடல் இரகசியமான ஓரிடத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல இந்திய இராணுவத்தின் காலத்தில் சிலரை எரிக்காமல் விதைக்க வேண்டியேற்பட்டது. பின்னர் துயிலும் இல்லங்களை அமைக்க ஏற்பாடு செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்னர் ஒரு மேடையில் வித்துடல்கள் வைத்து எரிக்கப்பட்டது. அக் காணொலியை கண்டபின்னரே எரிப்பதனை விட விதைப்பதுதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்தார் தலைவர் . இது சகல சமயத்தவருக்கும் பொதுவானது என்று முடிவாயிற்று.

மூத்தபோராளி பசீர்/காக்காவிடம் பெற்ற தவகலை அவரது மகன் கீதன் எழுத்தாக்கம் செய்து வெளியிட்டார்

படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த இரகசியப் பிரிவொன்று

1 month 1 week ago

எழுத்தாளர்: புரட்சி தமிழன்

இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள்.

பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலருக்கு தெரியும். சிலர் இராணுவ கட்டுபாட்டுக்குள்ளேயே வேலை செய்தனர்.

இந்த அணியின் ஒரு 30% வீதமானோர் உயிரோடுள்ளனர். தப்பி வந்தவர்கள் அல்ல கட்டளைகளுக்காக காத்திருந்தவர்களாக . இன்று அவர்கள் போராளியாக இருந்தார்கள் என்பது தெரியாமல் சமூக ஓட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு முறை என்றும் போராளிகளுக்கான ஒரு அடையாளம் .

Brigadier-Aathavan-4.jpg

 

Brigadier-Aathavan.jpg.

கடத்தப்பட்ட தமிழ் பெடியன் ஒருவனின் தாயாரின் வாக்குமூலம்

1 month 1 week ago

என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன்.

என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார்.

1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.

காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார்.

அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம்.

அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள்.

அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர்.

சிறிது நேரத்தில் ராஜீவ் என்னை அழைத்து நடந்ததைப் பகிர்ந்தார்.

நான் திரும்ப அழைத்தபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 14, 2008 — எதிர்பாராத ஒரு அழைப்பு

ராஜீவ் எங்களை மீண்டும் தொடர்பு கொண்டார்.

சம்பத் முனசிங்க என்ற கடற்படை வீரர் தம்மை பிடித்து ஹெட்டியாராச்சி என்பவரிடம் ஒப்படைத்ததாகச் சொன்னார்.

அவர்கள் முதலில் வெலிசராவில் வைத்திருந்து பின்னர்

திருகோணமலையின் Gunsite கடற்படை வதை முகாமுக்கு மாற்றப்பட்டதாக கூறினார்.

2009 மே 21 — என் மகனின் கடைசி குரல்

அன்று ராஜீவ் என்னை இறுதி தடவையாக அழைத்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மனம் நெகிழ்ந்த நபரிடமிருந்து தொலைபேசியை வாங்கி பேசினார்.

அவரது குரல் நடுங்கியது…

அங்கு நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை பற்றி கூறினார்.

“அம்மா… 18–20 வயதுடைய இளைஞர்களை இங்கு கொண்டு வந்து சு*ட்*டு*க் கொ*லை செய்கிறார்கள்…”

கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரத்தக்கறைகள் மற்றும் பெருமளவு இரத்தத்தை கண்டதாகச் சொன்னார்.

தனக்கும் அந்த விதி ஏற்படும் என அச்சத்தில் இருந்தார்.

நான் அவனை உற்சாகப்படுத்தி:

“ஜயப்பனை வணங்கு… கடவுள் உன்னை காப்பாற்றுவார்,”

எனச் சொன்னேன்.

அப்போதே, அவன் சாப்பாடு வந்து முடிச்சிருந்த பேப்பரில் ஐயப்பனின் படம் இருந்ததாகவும், அதை தன்னிடம் வைத்திருப்பதாகவும் சொன்னான்.

அதன் பின்… 16 ஆண்டுகள் கழிந்தும் ஒன்னு கூட தகவல் இல்லை.

இன்று வரை, ராஜீவ் 2009 மே 21க்குப் பிறகு கொ*லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.facebook.com/namathuyalpanam

ஹாட்லிக் கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது

1 month 1 week ago

எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?

1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி.

"பருத்தித்துறை படுகொலை"

18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள்.

நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள்.

ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள்.

யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981.

மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒரு பெரிய நூலகத்தை 1983 இல் சிறிலங்கா பேரினவாதம் கொழுத்தி வேடிக்கை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது.

1998ம் ஆண்டு செக். குடியரசில் கடத்தப்பட்ட 4 வானூர்திகளும் குற்றம்சாட்டப்பட்ட புலிகளும்

1 month 1 week ago

இது 1998ம் ஆண்டு யாழிலிருந்து வெளியாகும் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி. முழு விரிப்பு எனக்குத் தெரியாது. இருப்பினும் அறிந்தவற்றை இங்கே வரலாறாக எழுதி வைத்துச் செல்கிறேன்.

செக் குடியரசிலிருந்த (அப்படித்தான் நினைவு) ஓர் வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட தெற்காசியர்கள் வேலைசெய்து வந்ததாகவும் ஒருநாள் பின்னேரம் அவர்கள் அங்கிருந்த 4 வானூர்திகளை களவாடிச் சென்றுவிட்டனர் என்பதுதான் முக்கிய செய்தியே.

அந்த வானூர்தி களவாடல் நிகழ்விற்குப் பிறகு ஒரு கிழமை கழித்து நான்கு வானூர்திகளுக்குமான உரிய பணம் காசோலையில் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிகழ்விற்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அக்காலத்திய சிங்கள அரசாங்கம் குற்றம் சுமத்தியதை அந்நிறுவனம் மறுத்தது.

ஆருக்கேனும் நேரமிருந்தால் அக்காலத்திய யாழ் செய்தித்தாள்களை புரட்டி இச்செய்தியை கண்டுபிடியுங்கள்.

நன்றி

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

1 month 2 weeks ago

சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா!

குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.

வேவுப்புலிகள் பற்றிய போர்க்கால இலக்கியப் பாடல்கள்

1 month 2 weeks ago

ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள்

 

  • சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும்.

  • தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும்.

  • புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும்.

  • உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும்.

  • அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது இடம்பெற்றுள்ளது.

  • அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும்.

  • தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது.

  • பூநகரி நாயகன் என்ற இறுவட்டிலுள்ள "மழை மேகம்" என்ற பாடலானது தவளை பாச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள் மேல் பாடப்பட்டதாகும்.

 

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

2 months 1 week ago

மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

November 25, 2025

மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது.

வீரத்தின் தன்மை.

1.தன் நாட்டைக்காத்தல்

2.நேர்மையாக இருத்தல்

3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல்

4.நினைத்ததை சாதித்தல்

5..விடாமுயற்சி

6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல்

இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின்  “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார்.

அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும்  மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” .

என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது.

ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது.

விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு  முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15  மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து  ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள்.

விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27  வரை 16  வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம்.

புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18  வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390  மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர்.

இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957  (ஆண்கள்:10834 பெண்கள்:4123

கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083,  (ஆண்கள்: 6580  பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282  பெண்கள்:68) 2009  ஜனவரி தொடக்கம் மே 18  வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009  மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல்  விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது.

அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009  கார்த்திகை,27  தொடக்கம் தற்போது 16  வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16  வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை .

2025 கார்த்திகை 27  மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம்.

https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகத்தை-உ/

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01

2 months 1 week ago

கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1

வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது.

'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!'

நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின்.

உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான்.

'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!'

அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா

அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது.

ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது.

ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள்.

அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான்.

“போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு.

“போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள்.

அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்?

'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.'

இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான்
ஈஸ்வர்யாவும் நோக்கினாள்.

அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?”
அவள்:“ஈஸ்வர்யா.”
அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.”

அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது.

அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது.

"நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ."
"அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான்.

அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........

'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை'

பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல்.

பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்!

அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான்.

அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அத்தியாயம் 02 தொடரும்

THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01

The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war.

It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope.

She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm.

She bent down to a frightened little boy and whispered,

“Don’t worry, kanna… write your name. I will protect your books.”

At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped.

“Even in a war?” he asked softly.

She looked up at him. Her smile was tired — but firm and unbreakable.

“Especially in a war.”

And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break.

That afternoon, he finally spoke to her.

“What is your name?” he asked.

“Ishwarya,” she replied.

“Meaning?” he teased gently.

“Grace and prosperity,” she said, then added with a faint smile,
“Though these days, just call me a wandering teacher of wandering children.”

Kavin smiled.
No one had spoken to him like that in months.
Her courage felt like warmth in a frozen desert.

Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun.

“Do you ever imagine a different world?” he asked.

She skipped a small stone across the surface of the water.

“I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.”

“And you?” he asked, turning towards her.

She looked at the distant horizon.

“I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.”

He laughed softly.

“When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.”

She stopped walking and turned to face him.

“No, Kavin… when this ends… you won’t just build a school.”

She looked into his eyes, with a hope that belonged to another world.

“You will rebuild a country.”

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

Chapter 02 Will follow

துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?

சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”

2 months 1 week ago

சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”

“அணையாத விளக்கு”
[ஆருரான் & மையழகி — போரின் விளிம்பிலிருந்து ஒரு காதல் கதை]

ஆரூரன் கொழும்பில் பிறந்து வளர்ந்த, சகவாழ்வில் இன்னும் நம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் இளைஞன். அவன் கொழும்பு றோயல் கல்லூரியில், தனது உயர் வகுப்புவரை படித்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அங்கு அவன் உயிரியல் பாடத்தில் தனது வகுப்புகளில் முதலிடம் பிடித்ததுடன், ஆங்கில மற்றும் தமிழ் விவாதக் குழுக்களுக்கும் தலைவராகவும் இருந்தான். மேலும் சிங்கள நாடக விழாக்களில் கூட சிலவேளை நடித்தான். யோசிக்காமல் மூன்று மொழிகளையும் மாற்றி மாற்றி பேசும் வல்லமை கொண்டவன். பள்ளியில் ஆங்கிலம், நண்பர்களுடன் தமிழ் மற்றும் சிங்களம், தனது குடும்பத்துடன் தமிழ் என, தன் வாழ்வை அமைத்த அழகான, வாட்டசாட்டமான, பயமற்ற தைரியம் கொண்ட இளைஞன் அவன்.

அவனது ஆசிரியர்கள் ஒருமுறை பள்ளி மன்றபத்தில் [school assembly], அவனை சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்: “அமைதிக்கு ஒரு முகம் இருந்தால், அது மென்மையான புன்னகையுடன் இருக்கும் இந்த சிறுவனாகத் தான் இருக்கலாம்.” என்று. அவன் பின்னாளில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ இளங்கலை, அறுவை சிகிச்சை இளங்கலை [MBBS] ஐ முடித்து பெருமையுடனும் நிம்மதியுடனும் தனது வெள்ளை அங்கியைப் பெற்றான். அவனது இலட்சியம் எளிமையானது: “யாரையும், எங்கிருந்தும் குணப்படுத்துவது, மகிழ்ச்சி கொடுப்பது”

அவனது முதல் நியமனக் கடிதம் வந்தபோது, அதில் பதியப் பட்டுள்ள "யாழ்ப்பாண போதனா மருத்துவமனை - ஜூனியர் ஹவுஸ் ஆபீசர்" என்ற வார்த்தைகளை உற்றுப் பார்த்தான். அவன் மகிழ்ச்சியில் சிரித்தான். அவன் இதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததில்லை. ஆனால் அவனது தந்தையின் பிறந்த இடம் அது, அவனது மூதாதையரின் வீடு, ஒரு காலத்தில் குண்டுகள் அழிக்கப்படுவதற்கு முன்பு அங்கு நிமிர்ந்து இருந்தது. அதன் படத்தை அவன் பலதடவை பார்த்துள்ளான். அதுதான் அவன் அங்கு சேவை செய்ய விரும்பினான்.

ஆனால், விதி தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நபரைச் சந்திக்க அங்கு அனுப்புகிறது என்பது அவனுக்குத் தெரியாது.

மையழகி — புத்தகங்கள், பரதநாட்டிய அணிகலன்கள், வேலிக்கு மேல் வளர்ந்த மல்லிகையின் மெல்லிய வாசனை, உயர்ந்து நிமிர்ந்து திடமாக நிற்கும் பனைமரம், செவ்வரத்தம் பூமரம் என பலவற்றால் நிரம்பிய ஒரு வீட்டில் பிறந்தாள். அவள் வேம்படி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தாள், அங்கு அவள் தனது வகுப்புகளில் முதலிடம் பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்திலும் சிறந்து விளங்கினாள். அவள் வடக்கிற்கு வெளியே ஒருபோதும் காலடி எடுத்து வைத்ததில்லை. அதுமட்டும் அல்ல, அவளது ஒரே மொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் - ஆனால் அவளது கனவுகள் பரந்ததாக இருந்ததால் அவளது உலகம் பரந்ததாகவே இருந்தது.

மையழகி தான் மருத்துவராக வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்தாள். மிகவும் நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கூட சிரிக்க வைக்கக் கூடிய ஆற்றல் அவளுக்கு இருப்பதாக, அவளது நண்பர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அவளின் இளமை, அழகு, நளினம் , நடை, உடை எவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

காமரம் முரலும் பாடல், கள், எனக்
கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்
அணங்கு ஆம்" என்னத்
தாமரை இருந்த தையல், சேடி
ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது
ஏழைமைப்பாலது அன்றோ?

காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் மையழகி பற்றி எப்படி சொல்ல முடியும்.

என்றாலும் போர் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் அச்சுறுத்தியது. ஆனால் அவள் படிப்பை நிறுத்த மறுத்துவிட்டாள். கனவு காண்பதை நிறுத்த மறுத்துவிட்டாள். வாழ்ந்து காட்டுவேன் என்று பனைமரம் போல் துணிந்து நின்றாள்.

அவர்கள் இருவரும் ஒரு ஈரப்பதமான காலையில், மருத்துவமனை வார்டு கண்காணிப்பின் போது சந்தித்தனர். ஆரூரன் ஒரு நோயாளியின் அட்டவணையை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தபோது, மையழகி வெள்ளை கோட் படபடவென்று ஆட , தலைமுடி லேசாக பின்னப்பட்ட நிலையில், உள்ளே நுழைந்தாள். “ஆயுபோவன் … ஓ—மன்னிக்கவும்,” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே தன்னைத் திருத்திக் கொண்ட, ஆரூரன் “வணக்கம். நீ மையழகியாகத்தான் இருக்க வேண்டும்?” என்று ஆரூடம் கூறினான்.

அவள் கண் சிமிட்டினாள். கொழும்பிலிருந்து வந்த பெரும்பாலான மருத்துவர்கள் அவ்வளவு எளிதாகத் தமிழ் பேச மாட்டார்கள். அன்று காலை முதல், நோயாளர்களின் மருத்துவ விவாதங்கள் மூலம் உருவான நட்பு மெதுவாக மென்மையான, சொல்லப்படாத அன்பாக மலர்ந்தது. அவளுடைய அமைதியான வலிமையை அவன் பாராட்டினான். அவனுடைய கருணையை அவள் பாராட்டினாள்.

தெற்கிலிருந்து இங்கு வாழும் நோயாளிகளுடன் அவன் சிங்களத்தில் சரளமாக பேசியபோது, அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் மருத்துவச் சொற்களை குறைபாடற்ற ஆங்கிலத்தில் விளக்கியபோது, கவிதையைக் கேட்டு ரசிப்பது போல் அவளைப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் ரசித்தனர். காலப் போக்கில், அவர்கள் தங்களுக்கென ஒரு சிறிய உலகத்தை உருவாக்கினர்.

ஆனால் போர் இறுக்கமடைந்தது. சோதனைச் சாவடிகள் பெருகின. சந்தேகம் அதிகரித்தது.

இளம் தமிழ் சிறுவர் சிறுமிகள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், அதிகளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர், விசாரிக்கப்பட்டனர், தடுத்து வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் பற்றிய வதந்திகள் பரவின. செம்மணி அருகே ஆழமற்ற கல்லறைகளில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. கடமைகள் செய்ய வேண்டியிருந்தது.

ஒரு மதியம், ஆருரன் அவளைத் தனது மோட்டார் சைக்கிளில், அவளின் வீட்டிற்கு இறக்கிவிட முன்வந்தான். அவனுக்கு சாலைகள் நன்றாகத் தெரியும். அவனுக்கு மொழி நன்றாகத் தெரியும். எனவே அது அவர்களைப் பாதுகாக்கும் என்று அவன் நம்பினான். அவர்கள் செம்மணி சோதனைச் சாவடியை நெருங்கினர். மணல் மூட்டைகள். துப்பாக்கிகள். காற்றில் சுழலும் சற்று கிழிந்த இலங்கைக் கொடி அங்கு காணப்பட்டது.

சோதனைச் சாவடி நெருங்க, ஆருரன் மோட்டார் சைக்கிளை மெதுவாக்கினான். மையழகி அவனின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்தாள். அவர்கள், அங்கு நின்ற இராணுவ வீரர்களால் கீழே இறக்கப்பட்டனர்.

முதலில் வீரர்கள் ஆருரனின் அடையாள அட்டையைச் சரிபார்த்தனர். “டாக்டரா? கொழும்பு?” அவர்களின் தொனி மாறியது. அவர் “ஏற்றுக்கொள்ளத்தக்கவர்.” ஆனால் மையழகியின் அடையாள அட்டையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - மருத்துவ பீடம்” என்று இருந்தது. ஒரு சிப்பாயின் கண்கள் சுருங்கின. “இளங்கலைப் பட்டதாரியா? நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் யாரைச் சந்திக்கிறீர்கள்?” தொனி கூர்மையாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது.

ஆருரன் உடனடியாக முன்னுக்கு வந்து, சிங்களம் மூலம் அவர்களுடன் அமைதியாக, சரளமாக பேசினான். “அவள் என் சக ஊழியர். ஒரு மருத்துவ மாணவி. நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். அவள் அப்பாவி.” ஆனால் அவனது சிங்களம் அவர்களை மேலும் கோபப்படுத்தியது. சிங்களம் நன்றாகப் பேசி, தங்களுடன் எதிர்த்து வாதிடுகிறான். அது ஒன்றே காணும், அவன் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறான் என்று சந்தேகிக்க என்று இராணுவ வீரர்கள், வழமைபோல்
நினைத்தார்கள்.

ஒரு இராணுவ வீரன் திடீரென்று தன் கையால் அறைந்தான். பின்னர் அடித்தார்கள். அவன் தரையில் விழுந்தான். மற்றோரு இராணுவ வீரன் பூட்ஸ் காலால் உதைத்தான். துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கினர். அதனால், அவன் மூச்சுத் திணறும்போது, அங்கேயே அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் மையழகியை முகாமை நோக்கி இழுத்துச் சென்றனர்.

அவன் ஒருவாறு தவழ்ந்து, தன் கை நீட்டி - "நிறுத்து! அவள் ஒரு பெண்! அவள் ஒரு மாணவி! தயவுசெய்து - தயவுசெய்து -" என்று கத்தினான், கெஞ்சினான். ஆனால், உடனடியாக ஒரு சிப்பாய் அவன் முகத்தில் அடித்தான். ஒரு ஐந்து ஆறு இராணுவவீரர்கள் தங்களுக்குள் சிரித்து பேசியபடி மகிழ்வாக பின் தொடர்ந்தனர்?

ஆருரன் சாலையோர மணலில், இரத்தம் வழிய, அரை மயக்கத்தில் கிடந்தான். முகாம் வாயிலை அங்கிருந்து அரைகுறை மயக்கத்தில் பார்த்தான். நுழைவாயிலில் புத்தர் சிலை சிறப்பாக குந்தி இருந்தது. அங்கே இரண்டு துறவிகள் பிரித் சத்தமாக உச்சரித்துக் கொண்டிருந்தனர். அது உலக மக்களின் ஆசிர்வாதத்திற்கான தாள ஒலி - ஆனால், அதே காற்றினால் சுமந்து செல்லும் அலறல்களின் கொடூரமான சத்தம் பறைமேளமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

அவள் குரல் கேட்டது. குறுகிய அழுகைகள். பின்னர் மூச்சுத் திணறல். பின்னர் அமைதி. பின்னர் மீண்டும் - அழுகை ... முனகல் ... பலவீனம்... கெஞ்சுதல்.

அவன் நிற்க முயன்றான் .... முடியவில்லை ... சரிந்தான் .... மீண்டும் முயற்சித்தான். ஒரு சிப்பாய் அவனை எட்டி உதைத்தார். "அங்கேயே இரு. இல்லையெனில் நீ சாவாய்." என்று கத்தினான்.

அவனுக்கு மணிநேரங்கள் வருடங்கள் போல கடந்தன. முகாமில் இருந்து வரும் ஒவ்வொரு சத்தமும் அவனை நெஞ்சில் குத்தியது. ஒரு கட்டத்தில் அவன் கண் , உணர்வு எல்லாம் இருண்டு போய்விட்டது.

விடிந்ததும், முகாம் மிகவும் அமைதியாக இருந்தது. வீதியின் ஒருபுறம் சுடலையருகேயும் மறுபுறம் வயல் வெளிகளாகவும் இருந்தன,

ஆருரன் சாலையை நோக்கி ஊர்ந்து சென்றான். அந்த வழியாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர் அவனைப் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாதால் அவன் உயிர் பிழைத்தான்.

மையழகி வீட்டிற்கு வரவில்லை. அவளுடைய பெற்றோர் தேடினர். அவளுடைய நண்பர்கள் தேடினர். மனித உரிமைக் குழுக்கள் தேடினர். ஆனால் எந்த விபரமும் இல்லை. செம்மணி இராணுவத்தினர் தமக்கு தெரியாது என்று , அதே புத்தர் சிலைக்கு முன்பே கைவிரித்தனர்.

ஆனால், சமீபத்தில் செப்டம்பர் 2025 வரை, செம்மணி வெகுஜன புதைகுழி தளத்தில், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 240 மனித எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் 239 முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிப் பகுதியை ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்க்கர் தூர்க் 2025 சூன் 25 அன்று நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அரசாங்கம் அனுமதித்து தேவையான வசதிகளை வழங்கினால், அடுத்த அகழ்வாராய்ச்சியில் இன்னும் நிறைய உடல்கள் காத்திருக்கிறது. அதில் மையழகியும் ஒன்றாக இருக்கலாம்? மண் பல பாவங்களை மறைத்தது ஒவ்வொன்றாகத் தெரிய வருகிறது.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே
கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே
செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே
காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே
பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே
புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே
அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே
விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே
விளக்கம் இல்லாத மதபோதனை எனோ
களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே
இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே
பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே
சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்கோ!

அன்றிரவு பணியில் இருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுக்கடங்காத ஆண்களால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கிசுகிசுத்தனர். 1996 ஆம் ஆண்டு இராணுவ சோதனைச் சாவடியில் காணாமல் போய் பின்னர் கொலை செய்யப்பட்ட இளம் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் துயரத்தை அவளுடைய விதி எதிரொலித்தது, மேலும் அவளைத் தேடிய குடும்ப உறுப்பினர்களும் அதே இராணுவ சோதனைச் சாவடி உறுப்பினர்களால் கொல்லப்பட்டது வரலாறு மட்டும் அல்ல, சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மற்றவர்கள் அவள் எப்படியோ தன்னைத் துன்புறுத்தியவர்களிடமிருந்து தப்பித்து, பின்னர் விரக்தியில் தன்னைத் தானே மாய்த்து இருக்கலாம் என்று கற்பனை செய்தனர். இருப்பினும், உண்மை செம்மணி மண்ணில் புதைந்துவிட்டது . ஆனால் ஆரூரனுக்குத் தெரியும். இரவுக் காற்றால் சுமந்து செல்லும் அவளுடைய கடைசி அழுகையை அவன் கேட்டிருந்தான். அவளுடைய இறுதி மணிநேரங்கள் எப்படி வெளிப்பட்டன என்பதை அவன் மட்டுமே புரிந்துகொண்டான் - அது அவனுக்குள் எரிந்துகொண்டு இருக்கிற ஒரு நினைவு, இதயத்தில் மூட மறுத்த ஒரு காயம்.

இராணுவ உளவுத்துறையின் அச்சுறுத்தலுக்கு ஆளான ஆரூரன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கையை விட்டு தற்காலிகமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

மருத்துவமனைகளில் உடனடியாக வேலை கிடைத்து, அங்கே, அவன் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கினான். அத்துடன் பல்வேறு நாடுகளிலிருந்து, முக்கியமாக இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் அகதிகளுக்கு உதவினான். ஆனால் அவன் எந்த சந்தர்ப்பத்திலும் அவளுடைய நினைவை மட்டும் விடாமல் எல்லா இடங்களிலும் சுமந்து சென்றான்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, மையழகிக்கும் அவளைப் போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், மற்றும் அவனைப் போன்ற ஒவ்வொரு பையனுக்கும், அவன் ஒரு விளக்கை ஏற்றி வைக்க என்றும் மறப்பதில்லை.

“இந்த நாள் ஏன் இவ்வளவு முக்கியமானது?” இங்கிலாந்தில் உள்ள மக்கள் கேட்டபொழுது, அவன் மெதுவாக ஆனால் ஆணித்தரமாக, “ஏனென்றால் காதல் அங்கே இறந்துவிட்டது. ஏனென்றால் உண்மை அங்கே புதைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மௌனம் இன்னும் அங்கே அழுகிறது.” என்று பதிலளித்தான்.

சில நேரங்களில், யாரும் பார்க்காதபோது, அவன் தீபத்துக்கு கண்ணீருடன் கிசுகிசுப்பான்:

"மையழகி...

என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை.

ஆனால் உலகம் உன்னை மறக்க விடமாட்டேன்."

நன்றி

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

“The Lamp that Did Not Go Out”
[Aaruran & Maiyazhagi — A Love Story from the Edge of War]

I. The Boy from Colombo

Aaruran—ஆரூரன்—grew up in Colombo, the child of a Tamil family that still believed in coexistence. He studied at Royal College, where he topped his classes in biology, captained the debate team, and even acted in Sinhala drama festivals. He was the boy who could switch languages without thinking: English in school. Tamil & Sinhala with friends. Tamil with his family.

His teachers said: “If peace had a face, it might be this boy with the gentle smile.” He completed his MBBS at the University of Colombo, receiving his white coat with pride and relief. His ambition was simple: “To heal—anyone, from anywhere.”

When his first appointment letter arrived, he stared at the words: “Jaffna Teaching Hospital — Junior House Officer.” He smiled. He had never lived in Jaffna before. But that was where his father was born, where his ancestral house once stood before shells destroyed it. He wanted to serve there.

He did not know that fate was sending him to meet the one person who would change his life forever.

II. The Girl from Jaffna

Maiyazhagi—மையழகி—was born in a house filled with books, Bharatanatyam bells, and the faint smell of jasmine that grew over the fence. She studied at Vembadi Girls’ High School, where she topped her classes and excelled in English literature. She had never stepped outside the North. Her only languages were Tamil and English— but her world was wide because her dreams were.

She entered the Faculty of Medicine, University of Jaffna, with the clear purpose of becoming a pediatrician. Her friends said she had a gift: she could make even the sickest child smile.

War threatened everything around her. But she refused to stop studying. Refused to stop dreaming.

III. The Meeting in the Ward

They met on a humid morning during rounds. Aaruran was reviewing a patient chart when she walked in, white coat fluttering, hair lightly braided. “Ayubowan… oh—sorry,” he corrected himself with a shy laugh, “Vanakkam. You must be Maiyazhagi?”

She blinked. Most doctors who came from Colombo did not speak Tamil with such ease. From that morning, friendships formed over case discussions slowly bloomed into a gentle, unspoken love. He admired her quiet strength. She admired his kindness.

When he spoke Sinhala with patients who fled from the South, she watched, amazed. When she explained medical terms in flawless English, he looked at her as if discovering poetry.

They completed each other. In a world tearing itself apart, they built a small world of their own.

IV. Shadows Near Chemmani

But the war tightened. Checkpoints multiplied. Suspicion deepened.

Young Tamil boys and girls—especially university students—were increasingly stopped, questioned, detained. Rumors spread of disappearances. Of bodies found in shallow graves near Chemmani. Still, life had to be lived. Exams to be written. Duties to be done.

One afternoon, Aaruran offered to drop her home on his motorbike. He knew the roads. He knew the language. He believed that would protect them. They approached the Chemmani checkpoint. Sandbags. Rifles. A torn Sri Lankan flag twisting in the wind.

Aaruran slowed the bike. Maiyazhagi tightened her hold around his waist. They were flagged down.

V. The Checkpoint

The soldiers checked Aaruran’s ID first. “Doctor? Colombo?” Their tone changed. He was “acceptable.” But Maiyazhagi’s ID said: “University of Jaffna – Medical Faculty.” A soldier’s eyes narrowed. “Undergraduate? What are you doing here? Where are you going? Who are you meeting?” The tone was sharp, rehearsed, dangerous.

Aaruran stepped forward immediately. He spoke Sinhala—calmly, fluently. “She is my colleague. A medical student. We work together. She is innocent.” But his Sinhala only seemed to anger them more. A Tamil who spoke Sinhala well, who argued back— that was threatening.

The slap came suddenly. Then the blows. He fell to the ground. Boots kicked. Rifle butts struck. Even as he gasped for breath, he heard them dragging her toward the camp.

He crawled, reached out— “Stop! She is just a girl! She is a student! Please—please—” One soldier struck him across the face.

VI. A Nightmare with No Sunlight

He lay in the sand by the roadside, bleeding, half-conscious. He saw the camp gate. The Buddha statue at the entrance. Two monks chanting pirith loudly there, the rhythmic sound meant for blessings — but here it felt like a cruel mockery of the screams carried by the wind.

He heard her voice. Short cries. Then choked ones. Then silence. Then again— fading… weak… pleading.

He tried to stand. Collapsed. Tried again. A soldier kicked him down. “Stay there. Or you die.”

Hours passed like years. Every sound from the camp stabbed him. At some point he blacked out.

VII. What Happened After

When dawn broke, the camp was silent. Too silent.

Aaruran crawled toward the road until a passing lorry driver saw him and took him to a clinic. He survived—but barely.

Maiyazhagi never came home. Her parents searched. Her friends searched. Human rights groups searched.

But, as recently as September 2025, a total of 240 human skeletal remains, including many women and children, were identified at the Chemmani mass grave site, It is worth noting that 239 of them were completely excavated.It is also worth noting that the UN High Commissioner for Human Rights, Volker Durk, personally visited the mass grave discovered in Chemmani on June 25, 2025. If the government allows and provides the necessary facilities, there are many more bodies waiting to be excavated in the next excavation. Could Meizhagi be one of them? The soil is revealing the many sins it has hidden, one by one.

Buried in red earth, they do not sleep—
little innocent bodies the soil itself refuses to hold,
while wild men dance above their graves.

A schoolgirl lies shattered,
her schoolbag still beside her.
Buddha’s teachings lie in dust,
yet worship is done with one hand,
while the other hand commits atrocities
against Tamil-speaking, non-Buddhist people—
denying justice, taking their lands,
and twisting the Dharma into a tool for conquest.

Even animals show some culture.
Blind preaching without truth
defiles this sacred soil.

Rows of bones speak pain;
tiny remains expose the sin.
O Buddha, who came to end suffering—
why do your name and statues now march
to erase other lives and cultures?

Some whispered that she may have been sexually assaulted by one or more unruly men who were on duty that night and was later killed. Her fate echoed the tragedy of Krishanthi Kumaraswamy — the young Tamil schoolgirl who vanished at an army checkpoint in 1996 and was later found murdered, along with the family members who searched for her. Others imagined she had somehow escaped her tormentors, only to surrender later to despair. The truth, however, lay buried in shadow. But Aaruran knew. He had heard her last cries carried by the night wind. He alone understood how her final hours unfolded — a memory that burned within him, a wound that refused to close.

VIII. The Man Who Survived to Speak

Threatened by military intelligence, unable to sleep, unable to stay, Aaruran migrated to England, leaving Sri Lanka temporarily through Katunayakka International Airport

He built a new life. Worked in hospitals. Helped refugees who come to England from varies countries, mainly Srilanka . But he carried her memory everywhere.

On November 27, each year, he lights a lamp. For Maiyazhagi. For every girl like her. For every boy like him. For every dream that was cut down too soon.

People in England ask him: “Why does this day matter so much?”

He answers softly:

“Because love died there. Because truth is buried there. Because silence still cries there.”

And sometimes, when no one is watching, he whispers into the flame:

“Maiyazhagi…

I could not save you.

But I will not let the world forget you.”

Thanks

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

துளி/DROP: 1908 [சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out”]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32487883494193544/?

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர.

2 months 3 weeks ago

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர

------------- -

* 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார்.

* ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து

* அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி

------ -

அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது.

ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம்.

அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு.

தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம்.

ஆனால் --

வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன?

தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ----

A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்...

B) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்...

C) சர்வகட்சி மாநாடு என்பர்...

D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர்.

இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும்.

இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது.

இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்...

குறிப்பாக ---

2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர.

ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார்.

அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர.

அதாவது ---

நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர்.

ஆகவே --

அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர.

ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா?

பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும்.

உண்மையும் அதுதானே!

ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...?

1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார்.

2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார்.

3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார்.

4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்...

இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்...

இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு.

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது?

ஆனால் ---

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ----

------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா?

1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன?

அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது...

2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன?

A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை”

B) ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்”

C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்”

இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு.

இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே?

மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே?

அதென்ன?---

தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது?

சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்!

ஆகவே

இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு...

ஆனால்---

சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து”

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.

3 months ago

 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.

written by admin November 1, 2025

1000173468.jpg?fit=1080%2C720&ssl=1

பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது.

ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன்.

துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும்.

பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை.

ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார்.

இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார்.

துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.

துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார்.

ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது.

கிரிஜா மானுஶ்ரீ

கிழக்கு பல்கலைக்கழகம்


https://globaltamilnews.net/2025/222165/

Checked
Wed, 02/04/2026 - 07:31
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed