புதிய பதிவுகள்2

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 weeks ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965

கிளிநொச்சி பெண் நோயியல் வைத்தியசாலை சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு

3 weeks ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965

கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? - ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

3 weeks ago
பட மூலாதாரம், TN Archaeology Department கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டன. இந்த நான்கு நூல்களில் Archaeological Excavations in Tamil Nadu: A Preliminary Report சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறது. சென்னனூர், மருங்கூர், கீழ்நமண்டி, கீழடி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருமால்புரம் ஆகிய 8 இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை இந்த அறிக்கை தந்திருக்கிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் கிடைத்த காலக் கணிப்புகள்தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பட மூலாதாரம், TN Archaeology Department திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசியில் இருந்து தென்மேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழ்நமண்டி கிராமம். தற்போது கீழ்நமண்டி கிராமம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்றே கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலப்பரப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 55 ஏக்கர் தரிசு நிலப்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக் குழிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடத்தில் 2022-இல் இருந்து 2024 வரை இரு கட்டங்களாக தொல்லியல் ஆய்வுகள் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. கீழ்நமண்டியில் மொத்தம் 7 இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. இதில் முதல் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (இறந்தோரைப் புதைத்த இடங்கள்) இருந்தன. அதில் அகழாய்வுக்காக 18 குழிகள் அடையாளம் காணப்பட்டன. மற்ற ஆறு இடங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருந்து சில தொல்பொருட்கள் கிடைத்ததோடு, இரும்பு உலை இருந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. இரண்டு இடங்கள் ஈமக் குழிகளுக்காக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன. கீழ்நமண்டியில் கிடைத்த ஈமக் குழிகள் இரு வகைகளாக இருந்தன. முதலாவது வகையில், நிலத்தைத் தோண்டி நான்கு புறமும் பலகையைப் போன்ற கற்களை இறக்கி ஒரு குழி உருவாக்கப்பட்டு அதில் மண்ணால் ஆன ஈமப்பேழைகள் (sarcophagus) வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வெறுமனே குழியைத் தோண்டி ஈமப் பேழைகள் புதைக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம், TN Archaeology Department சில ஈமக் குழிகளில் ஒரே ஒரு சவப்பெட்டி மட்டுமே இருந்தது. சில ஈமக் குழிகளில் இரண்டு மூன்று சவப்பெட்டிகள் இருந்தன. 18 இடங்களில் மொத்தம் 27 ஈமப்பேழைகள் கிடைத்தன. இதில் எட்டு பேழைகள் மட்டுமே உடையாமல் இருந்தன. மற்ற பேழைகள், மேலே இருந்த மண்ணின் அழுத்தத்தால் சிதைந்து நொறுங்கியிருந்தன. ஒரே ஒரு ஈமப்பேழை மட்டுமே இருந்த இடங்களில் அந்தப் பேழையிலேயே மனித எலும்புகளின் எச்சங்களும் ஈமச் சடங்குக்கான பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று ஈமப்பேழைகள் இருந்த ஈமக் குழிகளில் ஒரு சவப்பெட்டியில் மனித எலும்பின் எச்சங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் ஈமச் சடங்குகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஈமப் பொருட்களைப் பொறுத்தவரை, உயர்தரமான கறுப்பு - சிவப்பு பானைகள், மூடியுடன் அல்லது மூடி இல்லாத சிவப்புப் பானைகள், இரும்புப் பொருட்கள், அலங்கார மணிகள் ஆகியவை இருந்தன. இந்த சவப்பெட்டிகளும் அதிலிருந்த பொருட்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூகச் செல்வாக்கை குறிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது முதல் வகை ஈமக்குழிகளை உருவாக்குவதற்கு 10 - 15 பேர் சில நாட்களாவது பணியாற்றியிருக்க வேணடும். இரண்டாம் வகை மிகச் சிலரால், சில நாட்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதல் சவக்குழியில் இருந்த நபர், இரண்டாவது நபரைவிட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும். பட மூலாதாரம், TN Archaeology Department மொத்தமுள்ள 18 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே மனித எச்சங்கள் கிடைத்தன. இவை எல்லாமே இரண்டாம் நிலை எச்சங்கள்தான். அதாவது, இதுபோன்ற ஈமக்குழிகளை உருவாக்க நாட்கள் ஆகும் என்பதால், ஒருவர் இறந்தவுடன் அந்த நபர் தற்காலிகமாக ஒரு இடத்தில் புதைக்கப்படுவார். இந்த ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழி உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த இடத்தில் புதைக்கப்படும். ஆகவே, ஒரு மனிதனின் எல்லா எலும்புகளும் இந்தப் பேழைகளில் இருக்காது. எஞ்சியிருந்த எலும்புகள் மட்டுமே இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த எலும்புகளோடு இறந்தவர்களுக்குத் தகுந்த ஈமப் பொருட்கள் வைத்து குழிகள் மூடப்பட்டுள்ளன. கீழ்நமண்டியில் கிடைத்துள்ள தொல் பொருட்கள் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இரும்புக்கால குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக தொல்லியல் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கு கிடைத்துள்ள ஈமக் குழிகளை வைத்து, இந்தப் பகுதியில் வசித்தவர்களின் ஈமச் சடங்குகள் குறித்த சில தகவல்களையும் அறிக்கை தருகிறது. இங்கு வைக்கப்பட்டிருந்த ஈமப்பேழைகள் உறுதியாக இல்லாத சார்னோகைட் (charnokite) கற்களால் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே பெரும்பாலான ஈமப்பேழைகளின் மூடிகள் உடைந்திருந்தன. "இம்மாதிரி கற்களை வெட்டி எடுத்து மெல்லிய பலகைகளைப் போலச் செய்ய அவர்களிடம் தரமான இரும்புக் கருவிகள் இருந்திருக்க வேண்டும். கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மரத்தாலான உருளைகளால் இந்தக் கற்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது இந்த அறிக்கை. "3,700 ஆண்டுகள் பழமையான ஈமப்பேழைகள்" பட மூலாதாரம், TN Archaeology Department இந்த ஈமக் குழியில் இருந்து கிடைத்த கரித் துண்டும் சில இரும்புப் பொருட்களும் ஏஎம்எஸ் (Accelerator Mass Spectrometry) காலக் கணிப்புக்காக பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்படி, அந்தக் கரிமப் பொருளின் காலம் கி.மு. 1450 (3400 ± 30) எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட காலக் கணிப்பின்படி (Calibrated AMS) இது கி.மு. 1769ஆம் ஆண்டு முதல் கி.மு. 1615ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது. ஆகவே, சராசரியாக இந்தக் கரிமப்பொருள் கி.மு. 1692 ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம் என்கிறது அறிக்கை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதாவூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமப்பேழைகளின் கரிமப் பொருட்கள் காலக் கணிப்புக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு ஈமப்பேழையின் காலம் கி.மு. 1692ஐத் தொடுவது இதுவே முதல் முறை. மேலும் இந்த ஈமக் குழுயில் இருந்து கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவையும் மறைமுகமாக இவற்றின் காலத்தை கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்றே குறிக்கின்றன என்கிறது அறிக்கை. இந்த ஈமக்குழிகளில் உளி, கோடாரி போன்ற பொருட்களும் கிடைத்தன. மேலும், சில இடங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள (carnelian) மணிகளும் கிடைத்தன. இங்கே கிடைத்த பானைகளின் விளிம்பில் சூலாயுதம், U போன்ற குறியீடுகளும் கிடைத்தன. கீழ்நமண்டிக்கு சிந்துச் சமவெளியோடு தொடர்பா? பட மூலாதாரம், TN Archaeology Department கீழ்நமண்டியில் இருந்தவர்கள் சிந்துச் சமவெளி பகுதிகளோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன். "சூதுபவள மணிகளைப் பொறுத்தவரை, அவை தென்னிந்தியப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இந்த மணிகள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் இவை கிடைக்கின்றதென்றால், அவை அங்கிருந்ததுதான் வந்திருக்க வேண்டும். இங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிகளோடு வர்த்தகத் தொடர்பில் இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த ஈமப் பேழைகளின் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. இதற்கு இணையாக வடமேற்கு இந்தியப் பகுதியில் பிற்கால ஹரப்பா (Late Harappan 1900-1300 BCE) நாகரிகமே நிலவியது. ஆகவே அதனோடு இதனை இணைத்துப் பார்க்கலாம்" என்கிறார். குறியீடுகளைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த சில குறியீடுகள், சிந்துச் சமவெளியில் கிடைத்த சில குறியீடுகளைப் போலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் கிடைத்த கரிமப் பொருளின் காலம் ஏஎம்எஸ் காலக் கணிப்பில் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்தாலும், இங்கு கிடைத்த வேறு சில பொருட்களை OSL (Optically Stimulated Luminescence) காலக் கணிப்புக்கு அனுப்ப மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1l8qqvn0r7o

அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார்.

3 weeks ago
Satoshi Nakamoto என்ற பூனை குட்டி வெளியில் துள்ளி குதித்து வந்து விட்டது 😁

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 weeks ago
கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃 நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா ........! --- தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ---

அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார்.

3 weeks ago
அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார். லோகன் ஹிட்ச்காக் செப்டம்பர் 9, 2025 2 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : ஜிசி=எஃப் -0.15% DX-Y.NYB (டிஎக்ஸ்-ஒய்.என்ஒய்பி) +0.19% ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆலோசகர் ஒருவர், அமெரிக்கா தனது பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ மற்றும் தங்கத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று கூறினார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற இறுதி செய்தியாளர் சந்திப்பில் , மன்றத்தின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவரும் புடினின் ஆலோசகருமான அன்டன் கோப்யகோவ், அமெரிக்கா "உலகின் செலவில்" தனது கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்கிறது என்று கூறினார். சிறந்த அடமான விகிதங்களை வாங்கவும் நிமிடங்களில் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணங்கள் மேலும் அறிக நிதி சுதந்திரத்திற்கான விரைவான பாதை மேலும் அறிக http://s.yimg.com/cv/apiv2/default/share-new-american-funding.png வீட்டு உரிமைக்கான உங்கள் பாதை மேலும் அறிக MoneyMoney – Finance News & Advice Since 1972Money has been helping people enrich their lives for over 50 years. We provide news, educational resources and tools to achieve financial success. ஆல் இயக்கப்படுகிறது - மேலே உள்ள இணைப்புகளிலிருந்து Yahoo கமிஷனைப் பெறலாம். "அமெரிக்கா இப்போது தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி சந்தைகளின் விதிகளை மீண்டும் எழுத முயற்சிக்கிறது. அவர்களின் கடனின் அளவு - 35 டிரில்லியன் டாலர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரண்டு துறைகளும் (கிரிப்டோ மற்றும் தங்கம்) அடிப்படையில் பாரம்பரிய உலகளாவிய நாணய முறைக்கு மாற்றாகும்," என்று ரஷ்யா டைரக்டின் மொழிபெயர்ப்பின்படி கோப்யகோவ் கூறினார். "இந்தப் பகுதியில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன: டாலரின் மீதான குறைந்து வரும் நம்பிக்கையை அவசரமாக நிவர்த்தி செய்வது." கோப்யகோவின் கூற்றுப்படி, அமெரிக்கா இறுதியில் அதன் கடனை ஸ்டேபிள்காயின்களில் முதலீடு செய்து பின்னர் அதன் மதிப்பைக் குறைக்கும். "எளிமையாகச் சொன்னால்: அவர்களிடம் $35 டிரில்லியன் நாணயக் கடன் உள்ளது, அவர்கள் அதை கிரிப்டோ மேகத்திற்கு நகர்த்தி, அதன் மதிப்பைக் குறைத்து - புதிதாகத் தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார். "கிரிப்டோவைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இதுதான் உண்மை." டிக்ரிப்ட் அமெரிக்க வர்த்தகம் மற்றும் வெளியுறவுத் துறைகளை அணுகியது. வளர்ந்து வரும் அமெரிக்க கடன் நெருக்கடி இறுதியில் சொத்து வகுப்பிற்கு பயனளிக்கக்கூடும் என்று கிரிப்டோ ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளனர், ஜூன் மாதத்தில் Coinbase தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது பிட்காயின் உலகளாவிய இருப்பு நாணயமாக மாற வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தார் . அமெரிக்கா கிரிப்டோவுடன், குறிப்பாக ஸ்டேபிள்காயின்களுடன் அதிகரித்து வரும் பிணைப்பைச் சுற்றியுள்ள சந்தேகம் ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் பொதுவாக ஃபியட் நாணயங்களின் மதிப்புடன் இணைக்கப்படும் இந்த டிஜிட்டல் சொத்துக்களுடன் மிகவும் வசதியாகிவிட்டனர். ஜூலை மாதம் டிரம்ப் GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார், இது அமெரிக்காவில் ஸ்டேபிள்காயின்களை வெளியிடுவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கியது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், கிரிப்டோ அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் என்று நம்புவதாகவும் , அதைக் குறைக்க அல்ல என்றும் கூறினார். கோபியாகோவின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ரஷ்யா ஸ்டேபிள்காயின்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ஜூலை மாதம், ரஷ்ய அரசு ஊடகங்கள், அரசுக்குச் சொந்தமான ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் ட்ரானில் தொடங்கப்படும் ரூபிள் ஆதரவு ஸ்டேபிள்காயினில் பணியாற்றி வருவதாக செய்தி வெளியிட்டன. https://finance.yahoo.com/news/putin-advisor-accuses-us-using-214522644.html இவ்வாறு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என நான் நம்புகிறேன், யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை கூறவும். சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் இது ஒரு பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டாக இருப்பதாக எனதளவில் கருதுகிறேன், இந்த விடயத்தில் பெரிதாக புரிதல் குறைவாக உள்ளது அதனால் இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் என கருதுகிறேன் , தங்கம், கிப்டோ மற்றும் அமெரிக்க பணமுறிகள் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தவென இவ்வாறான குற்றச்சாட்டினை வெளியிடுகிறார்களா?

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks ago
ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ. ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும். ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks ago
நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.

குட்டிக் கதைகள்.

3 weeks ago
Thava Arumugam · Suivre rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 · ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர அவள் : Welcome home, Are you tired darling? அவன் : Today I am so tired ... அவள் : Ok...Rest in Peace !!! கிழிஞ்சுது போ😂"

புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு

3 weeks ago
புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. CID அதிகாரிகள் தெரிவித்ததாவது, மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட 6,000 பொருட்கள் எடை மற்றும் கலவை விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அந்தத் தங்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஒப்படைத்தவை என நீதிமன்றத்தில் முன்பு வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/50707

மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

3 weeks ago
மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/421865/president-directs-to-continue-progressing-the-mannar-wind-farm-project
Checked
Wed, 10/15/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed