4 weeks ago
நான் அந்தக் காலத்தில் இருந்து பார்க்கிறேன் மகளிர் உலக கோப்பை கந்தப்பு அண்ணா தமிழ் நாட்டை சேர்ந்த மகளிர் தான் பல ஆண்டுகள் இந்தியா அணிக்கு கப்டனாய் இருந்தவா................அவா நிறைய செஞ்சேரி அடித்து இருந்தா............... தொடர்ந்து உலக கோப்பைய அவுஸ்ரேலியா தான் வெல்லுது போன வருடம் 20ஓவர் உலக கோப்பைய நியுசிலாந் மகளிர் வென்றவை இந்தியா இதுவரை ஒரு உலக கோப்பை கூட வென்றதில்ல இந்த முறை நல்ல சர்ந்தப்பம் இருக்கு வெல்ல நவம்பர் 2ம்திகதி தெரியும் எந்த அணி சம்பியன் என........................
4 weeks ago
மீசையை வழித்துவிட்டு மண் ஒட்டவில்லை என்று முறுக்கெடுக்கும் மன்னர்கள்.🤗
4 weeks ago
நான் வாழ்க்கையில் இம்முறைதான் மகளிர் உலகக்கிண்ணப்போட்டி பார்க்கிறேன். ஆண்கள் போட்டிகள்தான் சிறுவயதில் இருந்து பார்ப்பதுண்டு.
4 weeks ago
நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும் பட மூலாதாரம், X/Ajithkumar Racing கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 8 அக்டோபர் 2025, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது. நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். தூக்கம் வருவது எப்படி? இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார். தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி. நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா. இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார். "59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர். 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி. தூக்கமின்மைக்கான அறிகுறிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது. அவை போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது தவறான நேரத்தில் தூங்கச் செல்வது நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது. "தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது. தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை? வயது தூங்கும் முறை வளர்சிதை மாற்றம் இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு மது அருந்துவது தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை இதய நோய் சிறுநீரக நோய் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பக்கவாதம் உடல் பருமன் மன அழுத்தம் உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது. தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி. "தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார். வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார். குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்? கற்றல் குறைபாடு ஞாபக மறதி கல்வியில் ஈடுபாடு குறைவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்? மன அழுத்தம் மனச்சோர்வு ரத்த அழுத்தம் சிந்திக்கும் திறன் குறைவது வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்? ஞாபக மறதி அதிகரிக்கும் இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும் இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும் தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா. தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும் தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம். உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o
4 weeks ago
இப்ப இங்கே சிலர் தரையில் கிடந்து தலையில் அடித்து அழுவது சீமான் என்ற நபர் மீது இனி புழுதி வார வழியில்லை என்று தானே.
4 weeks ago
சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Published:Today at 8 AMUpdated:Today at 8 AM தஷ்வந்த் Join Our Channel 31Comments Share சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய கொடூரம்! இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார். தஷ்வந்த் தாயைக் கொன்ற தஷ்வந்த்! அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார். பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைதுசெய்து சென்னை கொண்டுவந்தனர். தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது. தூக்கு தண்டனை + 46 ஆண்டுகள் சிறை! மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனையும், பிறழ் சாட்சியான தந்தையும்! தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார். இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது. ஆதாரமில்லை... DNA ஒத்துப்போகவில்லை... விடுதலை! இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை. எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை விடையின்றி நிற்கும் கேள்விகள்... காவல்துறை பதில் என்ன? முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்? இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது. அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்? கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன? மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்! போதிய ஆதாரம் இல்லை; 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தஷ்வந்த்தை விடுவித்த உச்ச நீதிமன்றம் | Supreme Court acquits Daswanth in rape and murder case of 6-year-old girl due to insufficient evidence - Vikatan
4 weeks ago
Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:50 - 0 - 47 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார். Tamilmirror Online || நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
4 weeks ago
இணையத்தில் புயல் கிளப்பும் Perplexity-ன் 'Comet AI முகவர் உலவி' Perplexity நிறுவனத்தின் AI முகவர் உலவி (Agentic browser) ஆன Comet தற்போது இணைய உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இத்தனை நாட்களாக Perplexity Pro பயனர்களுக்கு, அதுவும் அழைப்பின் (invitation) அடிப்படையில் மட்டுமே கிடைத்துவந்த இந்த உலவி (browser), இப்போது அனைத்து இணையப் பயனர்களுக்கும் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது. நான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த Comet AI முகவர் உலவி-ஐ எனது முன்மைக் உலவி (default browser) ஆகப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முற்றிலும் புதிய அனுபவத்தை நான் வெகுவாக ரசித்து வருகிறேன். செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் தானியக்கம் (AI-driven automation), சூழலுக்கேற்ற தேடல் (contextual search), மற்றும் அறிவார்ந்த பணிப்பாய்வுக் கருவிகள் (intelligent workflow tools) ஆகியவற்றின் உதவியுடன், வெவ்வேறு வகையான பயனர்களின் தேவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட பல்துறைத் திறன்களை (versatile capabilities) இந்த Comet AI முகவர் உலவி வழங்குகிறது. ஒவ்வொரு பிரிவினரும் இந்த Comet AI உலவி-ஐப் பயன்படுத்தக்கூடிய எளிமையான ஐந்து வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: 1. Common User: • முகவர் பணிப்பாய்வுகள் (agentic workflows)-ஐப் பயன்படுத்தி, கட்டணம் செலுத்துதல் (bill payments), பொருட்களை வாங்குதல் (shopping), அல்லது பதிவுகள் (bookings) போன்ற அன்றாட ஆன்லைன் வேலைகளை தானியங்குதல் (automating) செய்தல். • AI சக்தியூட்டப்பட்ட சுருக்கங்கள் மூலம், செய்திகள், பொழுதுபோக்கு, சமையல் குறிப்புகள், மற்றும் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற இணையத் தேடல்களை எளிமைப்படுத்துதல். • தனிப்பட்ட திட்ட அட்டவணைகள் (schedules), நினைவூட்டல்கள் (reminders), மற்றும் செய்ய வேண்டிய பட்டியல்களை (to-do lists) உலவிக்குள்ளேயே நிர்வகித்தல். • அறிவார்ந்த வகைப்படுத்தல் (smart categorization) மூலம் புக்மார்க்குகள், கட்டுரைகள் (articles), மற்றும் குறிப்புகள் (notes) ஆகியவற்றைத் தடையின்றி ஒழுங்கமைத்தல். • AI பரிந்துரைகள் வாயிலாக, திரைப்படங்கள், இசை, மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுதல். 2. தொழில் வல்லுநர்கள் (Professionals) • ஆராய்ச்சியைத் தானியங்குதல்: அலுவலக திட்டங்களுக்காகத் (projects) தேவையான பொருத்தமான அறிக்கைகள் (reports), கட்டுரைகள், தரவுகள் (data) அல்லது ஆவணங்கள் (documentation) போன்றவற்றைத் திறம்படச் சேகரித்தல். • உருவாக்கும் AI எழுத்து உதவியாளர்களின் (generative AI writing assistants) உதவியுடன் மின்னஞ்சல்கள், திட்ட முன்மொழிவுகள் (proposals), மற்றும் விளக்கவுரைகள் (presentations) ஆகியவற்றைத் தயாரித்தல். • உலவிப் பணிகளை அட்டவணைகள் (calendars), பணி மேலாண்மை மென்பொருட்கள் (task managers), மற்றும் திட்ட மேலாண்மைத் தளங்கள் (project management platforms) போன்ற கருவிகளுடன் ஒருங்கிணைத்தல் (integrating). • பல்வேறு மூலங்களில் இருந்து தொழில்சார் கற்றல் வளங்களையும், தொழில் துறைப் புதுப்பிப்புகளையும் ஒரே முகப்புப் பலகையில் (dashboard) தொகுத்து வைத்தல். • மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிர்வாகப் பணிகளை (admin duties) (எ.கா: தரவு உள்ளீடு, சந்திப்புத் திட்டமிடல்) நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை (productivity) மேம்படுத்துதல். 3. வணிகர்கள் (Business People) • சந்தைப் புதுப்பிப்புகள் மற்றும் போட்டியாளர்களின் நகர்வுகளுக்காக இணையதளங்களைத் தானாகவே கண்காணிப்பதன் மூலம் போட்டி பகுப்பாய்வை (competitive analysis) நடத்துதல். • அறிவார்ந்த முகவர் பணிப்பாய்வுகள் வழியாக முன்னணிகளை உருவாக்குதல் (lead generation) மற்றும் வாடிக்கையாளர் ஆய்வு (client research) ஆகியவற்றைத் தானியங்குதல். • விற்பனை முயற்சிகளை (sales outreach) நெறிப்படுத்துதல்—தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் அல்லது தொடர்புகளைத் தயாரித்தல் மற்றும் அனுப்புதல். • தொழில் செய்திகள், போக்குகள், மற்றும் அரசாங்க விதிமுறைகளை உண்மையான நேரத்தில் (real-time) கண்காணித்தல். • AI-யால் இயக்கப்படும் அமைப்பு மற்றும் மாதிரி அடிப்படையிலான பரிந்துரைகள் (model-based recommendations) உதவியுடன் நிதிச் சுருக்கங்கள், ரசீதுகள் (invoices), மற்றும் ஒப்பந்தங்கள் (contracts) ஆகியவற்றை நிர்வகித்தல். 4. தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் (IT Industry Workers) • மென்பொருள் உருவாக்குநர்களுக்கான ஆதாரங்கள் (developer resources) அனைத்திலும் குறியீடு தேடல்கள் (code searches), ஆவணத் தேடல் (documentation lookup), மற்றும் பிழை கண்காணிப்பு (bug tracking) ஆகியவற்றைத் தானியங்குதல். • உலவியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முகவர் செயல்பாடுகளை (browser-integrated agentic actions)ப் பயன்படுத்தி சோதனை (testing) மற்றும் வெளியீட்டுப் படிகளை (deployment steps) நெறிப்படுத்துதல். • AI சக்தியூட்டப்பட்ட உரையாடிகள் (chatbots) மற்றும் பணிப்பாய்வுக் கருவிகளை மென்பொருள் உருவாக்கத் தளங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தொலைதூர ஒத்துழைப்பை (remote collaboration) நிர்வகித்தல். • அமைப்பின் இயக்க நேரம் (system uptime), பாதுகாப்பு எச்சரிக்கைகள், மற்றும் செயல்திறன் முகப்புப் பலகைகள் (performance dashboards) ஆகியவற்றை உலவிக்குள்ளேயே கண்காணித்தல். • தனிப்பட்ட அல்லது குழுவின் பொருத்தத்தின் அடிப்படையில் தொழில்நுட்பப் புதுப்பிப்புகள், திருத்தக் குறிப்புகள் (patch notes), மற்றும் பயிற்சிகளை (tutorials) தொகுத்தல். 5. மூத்த குடிமக்கள் (Senior Citizens) • தேடல்கள், கேள்விகள், அல்லது செய்திகள் ஆகியவற்றுக்கு, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முகவர் சுருக்கங்கள் மூலம் விளக்கங்களைப் பெறுதல். • ஆன்லைன் கட்டணங்கள் செலுத்துதல், பயன்பாட்டுச் சேவைகளைப் புதுப்பித்தல், அல்லது உடல்நலன், மருத்துவச் சந்திப்புகளைத் திட்டமிடுதல் ஆகியவற்றைத் தானியங்குதல். • மருந்து நினைவூட்டல்கள், பொருட்கள் வாங்க வேண்டிய பட்டியல்கள் (shopping lists), அல்லது நிகழ்வு அறிவிப்புகள் அமைப்பதன் மூலம் நினைவாற்றல் மற்றும் அமைப்புக்கு உதவுதல். • உடல்நலன் குறிப்புகள், பொழுதுபோக்கு, மற்றும் உள்ளூர் சமூக நிகழ்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளைப் பெறுதல். • ஒருங்கிணைந்த செய்திப் பரிமாற்றம் (integrated messaging) மற்றும் காணொளி அழைப்புக் கருவிகள் (video-calling tools) மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்வதை எளிதாக்குதல். ஒவ்வொரு பிரிவினரும் Comet-ன் AI-யால் இயக்கப்படும் முகவர் பணிப்பாய்வுகள் மூலம் பலன் பெறுகிறார்கள். இது இந்த உலவியை பல்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்பான உற்பத்தித்திறன் தளமாக (dynamic productivity platform) மாற்றுகிறது. https://www.facebook.com/story.php?story_fbid=10162956954806698&id=565071697&post_id=565071697_10162956954806698&rdid=XWSp9Jjwb5Yb1SX7#
4 weeks ago
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து, கும்பலொன்று பெருமளவு பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும், அதற்காக 10 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் செலவாகும் எனவும் சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் ஊடாக அந்தக் குழு விளம்பரம் செய்துள்ளது. இதற்காக, சில பெண்களின் ஒளிப்படங்களை அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழு பயன்படுத்துகின்றது. இந்த விளம்பரத்தை நம்பி அதிலுள்ள இலக்கத்துக்கு சிலர் தொடர்புகொள்ளும் போது குறித்த தனியார் விடுதிகளில் அந்தப் பெண்கள் உள்ளனர் என்று தெரிவித்து மோசடியாளர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயத்தை அறிந்து கொள்கின்றனர். இதுதொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யத் தயங்குவதால், குறித்த குற்றக்குழுவினர் தொடர்ச்சியாக பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து இந்த மோசடிகள் இடம்பெறுவதால், தமது விடுதிகளின் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பொலிஸார் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த சட்டவிரோதச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
4 weeks ago
08 Oct, 2025 | 08:57 AM கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் ஆபத்து பகுதிகளாகவும், பன்றிகள் 1992 ஆம் ஆண்டு 59 ஆம் எண் கொண்ட கால்நடைநோய்கள் சட்டத்தின் கீழ் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு 2025 அக்டோபர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் இந்த வர்த்தமானி முன்னர் இரத்து செய்யப்படாமலோ, தொடர்புடைய சட்டத்தின் பிரிவு 5(3) இன் கீழ் நீடிக்கப்படாமலோ செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும், நிலவும் நோய் நிலைமையைப் பொறுத்து செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk
4 weeks ago
"குடும்ப நல வழக்கில் எதிர் தரப்பில் இருப்பவரை "பாலியல் தொழிலாளி, சைக்கோ" என்று dehumanize செய்யலாம், கிரிமினல் வழக்கில் அப்படிச் செய்யக் கூடாது" என்கிறீர்களா😂? ஒன்று "வாத்தியார்" என்ற அவதாரப் பெயரை மாற்றுங்கள், அல்லது சீமான் போன்ற மூன்றாந்தர அரசியல்வாதிக்கு நிபந்தனையில்லாத முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்கள்! இந்த இரு பாத்திரங்களும் ஒத்து வரவில்லை என்பது என் அபிப்பிராயம்😎!
4 weeks ago
08 Oct, 2025 | 09:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உயர்ஸ்தானிகரும், எம்.ஏ. சுமந்திரனும் விரிவாகக் கலந்துரையாடினர். விசேடமாக, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார். இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு ! | Virakesari.lk
4 weeks ago
இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார் சொல்லி, பின் விலத்தியது (எப்படி நடந்த உடல் உறவு இல்லாமல் போகும்) மற்றது கோயிலில் திருமணம் (இதுவே எல்லாரையும் ஏய்க்காட்டும் கதை). (நடிகை புகாரை விலத்துவது என்பது, புகார் பகிடிக்கு சொன்னது என்று வரும், வருகிறது) நடிகை தங்கி இருந்தது 'பெண்' என்ற போர்வைக்குள்ளும் (மேற்கிலும் இது பொதுவாக பாவிக்கப்படுவது) - அதை நீதி மன்றம் கிழித்து விட்டது. சீமானின் நிலை ஏறி இருக்கிறது - எந்த விதமாக பார்த்தாலும், சீமான் செய்தது நடிகையின் குற்றச்சாட்டுக்கு செய்த மறுதாக்கம் - அதுக்கு தானே நீதி மன்ற உத்தரவு சீமான் மன்னிப்பு கேட்கும்படி அப்போது என் சீமான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை சொல்வதை மறுக்கும் போது. நடிகை சொல்வதை சீமான் மறுத்தது, சட்டத்துக்கு உண்மை என்று நடிகையே நிரூபித்துவிட்டார் . சீமான் அவதூறு பேசியது கூட, அது இயற்கையா (மனித சுபாவம்) என்றல்லவா வருகிறது. செய்யாத ஒரு விடயத்தை செய்தது என்று குற்றம் சுமத்தும் போது, எவருக்கும் ஆத்திரம் தலைக்கேறும் என்பது.
4 weeks ago
Published By: Digital Desk 3 08 Oct, 2025 | 03:59 PM மின்சார பொறியாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (07) மாலை 4:15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார். இந்த தீர்மானம் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துபூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். வேலை விதிமுறைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்கத்தின் தீர்மானத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களை கடிதங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். “அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கு மேல், அவசரம் எதுவாக இருந்தாலும், எந்த பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணியும் நடைபெறாது,” என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227234
4 weeks ago
08 Oct, 2025 | 04:47 PM தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள பலரும் இணைந்து , 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அதிபர் எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர நீச்சல், 6 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோ மீட்டர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தாலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இந்த நிகழ்வில் இந்திரா ஜயசூரியவின் தந்தையான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது மகள் மார்பகப் புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்ட போராட்டத்தையும் நினைவுகூர்ந்திருந்தார். அத்தோடு இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும், 19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு | Virakesari.lk
4 weeks ago
08 Oct, 2025 | 04:54 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு | Virakesari.lk
4 weeks ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
4 weeks ago
இன்றைய போட்டியைப் பார்த்தா, அவுஸ்ரேலியா மயிரிலையில் தப்பியுள்ளது போல் உள்ளது. பெத் மூனி தான் ஒரு ராணி என்று இன்று காட்டியிருக்கிறா.
4 weeks ago
இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது. விபரங்கள் கீழே: Sean 'Diddy' Combs sentenced to over 4 years in prisonCombs apologised to his mother, children, and victims, specifically naming his two ex-girlfriends, Casandra Ventura and "Jane".சுருக்கமாக, டிடி கோம்ப்ஸ் பல ஆண்டுகளாக பல பெண்களை உணர்வு ரீதியாகச் சித்திரவதை செய்து தானும் அனுபவித்து விபச்சாரத்திற்கும் தூண்டியிருக்கிறார். அவர்கள் விலக முடியாத படி அந்தக் காட்சிகளை மிரட்டும் சாட்சியாக (blackmail) சேமித்து வைத்திருக்கிறார். 12 மாதங்கள் முன்பு இதற்காக குற்றம் சாட்டப் பட்டுக் கைதான போது, கோம்ப்ஸ் பேசியது கிட்டத் தட்ட சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பேசியது போலவே இருந்தது😂. கோம்ப்ஸ் தரப்பினர் மிரட்டினார்கள் , பெண்களை விபச்சாரிகள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஆனால், கோம்ப்சை குற்றவாளியாக ஜூரிகள் தீர்ப்பளித்த பின்னர் ரெக்கோர்ட்டை மாற்றிப் போட்டார்கள் கோம்ப் தரப்பினர். கடந்த வாரம் "11 வருட சிறை வழங்க" வேண்டுமென அரச தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்ட போது. "நான் திருந்தி விட்டேன், 14 மாத சிறையில் நான் திருந்தி விட்டேன்" என்று கடிதம் எழுதி நிறைய கண்ணீரெல்லாம் விட்டார்கள் கோம்ப்சும் குடும்பத்தினரும். ஆனால், நீதிபதி சுப்ரமணியன் (ஆம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த நியூ யோர்க்கின் முக்கிய மாவட்டத்தில் பெடரல் நீதிபதி, தமிழராக இருக்கக் கூடும்) "நீ திருந்துவதாக இருந்திருந்தால் 2019 இல் ஒரு வீடியோ வெளியே வந்த பின்னரே திருந்தியிருக்க வேண்டும். இது மனம் வருந்திய திருத்தம் அல்ல" என்று 4 ஆண்டுகள் சிறை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார். பிந்திய செய்திகளின் படி, கோம்ப்ஸ் குற்றவாளியாகத் தீர்ப்புக் கிடைத்தவுடன் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் தூது அனுப்பியிருக்கிறாராம். ஒரு ஒப்பீட்டுக்கு, யாழ் கள பெரிசுகளுக்காக, இதைப் பகிர்ந்திருக்கிறேன்.
4 weeks ago
ஆகவே சீமானுக்கு எதிரான பாலியல்~ புகாரே தவிர அங்கு மழை இல்லை. ஈரம் இல்லைப்போல் தெரிகிறது. உண்மை என்ன??? அது சீமானுக்கும் அந்த நடிகைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும். சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது, அதை ஏந்த ஒருவர் இருப்பதையும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அது சீமானுக்குப் பொருந்தும்போல் தெரிகிறது.
Checked
Thu, 11/06/2025 - 12:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed