4 weeks ago
பிளேட்டுக்கு மேல பெப்பர் பிளேட்டுக்கள் ,அல்லது வாழை மடலில் சில பிளேட்டுக்களை இந்தியாவில் தயாரிக்கின்றனர்
4 weeks ago
என்னைப்பார் என் அழகைப் பார் . .......... நான் அழகாய் இருக்கேனா மம்மி ..........! 😍
4 weeks ago
4 weeks ago
முன்பு அசைவ கடைகள் தவிர்ந்த ஏனைய சாப்பாடுகடைகளில் வாழை இலை , வாழைத்தட்டு , தாமரை இலை போன்றவைதான் கடைகளில் இருந்தன ........! நான் அடிக்கடி வாகன உதிரிபாகங்கள் எடுக்க கொழும்பு செல்வது வழமை ........ அப்போதெல்லாம் வாழையிலையில் குண்டு தோசையை தேங்காய் சம்பலில் முக்கி வைத்து கட்டிக்கொண்டு செல்வதுண்டு ........பிரயாணத்துக்கு இது ஒரு நல்ல உணவு . ...... ஓரிரு மணித்தியாலத்தின் பின் நன்றாக ஊறி இருக்கும் சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ......அருகில் இருப்பவர்களுக்கும் குடுத்து சாப்பிடலாம் . ....... கை கழுவ என்று தண்ணி செலவழிக்க தேவை வராது ....... இங்கும் அநேகமாய் தூரப்பயணங்களுக்கு செய்து கொண்டு போவதுண்டு .........! 😇
4 weeks ago
இன்றும் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மேடையில் ஒப்பனாக விஜைக்கு தூதுவிடுவதை காணலாம். விஜை மீது விமர்சனம் எனக்கும் உண்டு ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு ஆனானப்பட்டதுதான். குறிப்பாக செல்லாகாசு சீமானுடன் ஒப்பிடும் போது.
4 weeks ago
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄 நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.
4 weeks ago
காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 10:44 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து 65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது. பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதி திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அரசாங்கத்தை கூட்டி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தார். காசாவில் நடந்த போரினால் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. ஏனெனில் போர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்தால் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முதலீட்டாளர்கள் எடைபோட்டனர். உக்ரேன் சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் தடைப்பட்டதால் ரஷ்யாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் தொடரும் என முதலீட்டாளர்கள் கருதியதால, புதன்கிழமை மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1 சதவீதம் அதிகரித்து. ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிகபட்ச நிலையை எட்டியது. கடந்த வாரம் மொத்த அமெரிக்க பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் — அமெரிக்க எண்ணெய் நுகர்வின் ஒரு அளவுகோல் — ஒரு நாளுக்கு 21.990 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்தன. இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக புதன்கிழமை எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/227282
4 weeks ago
காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 09:53 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில், "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்," “இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். “சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227277#google_vignette
4 weeks ago
போக்கிரி பட வடிவேலு மாரி கண்மூடித்தனமாக தலையையே அண்ட குடுக்கும் முரட்டு முட்டு சிங்கங்கள் எப்படி கூட்டமாக சேர்ந்து சாயி பஜன் செய்வார்கள் என்பதை களமறியும்🤣. ஆனால் நான் இங்கே விஜி அண்ணிக்கு என்றும் வக்காளத்து வாங்கவில்லை. மாறாக பலவருடமாக நான் முன்வைத்த ஒரே கோரிக்கை, அறுதியும் இறுதியுமாக சீமான் மீதான பாலியல் வல்லுறவு குற்றசாட்டு நியாயமான நீதி விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டும் என்பது மட்டுமே. அதில் சீமான் விடுவிக்கபட்டிருந்தால் அவர் குற்றமற்றவர். ஆனால் இப்போ மொள்ளமாரித்தனம் பண்ணி, விசாரணையை அடித்து நூத்து உள்ளார். ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு தந்தையாக ஒரு பாலியல்தொழிலாளியான பெண் வந்து நான் வல்லுறவுக்கு ஆளானேன் என சொன்னாலும் அதை தீரவிசாரிக்க வேண்டும் என்ற நிலை எடுப்பதே சரியாக இருக்கும். எங்கள் பக்கம் இதை மாண்பு என்பார்கள். சுண்ணாம்பைதான் பிடிக்காது, வெண்ணையை அல்ல. வன்மையாக கண்டிக்கிறேன். விஜயலட்சுமி மட்டும் அல்ல யாழ் போன்ற பொதுவெளியில் கூட கீழ்தரமான வார்த்தை பிரயோகம் செய்பவர்களை அவர்கள் முகத்துக்கு நேராக கண்டித்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைத்தான் கெட்டித்தனமா கவிட்டு கொட்டி போட்டமே. அங்கே மகிழ என்ன இருக்கிறது.
4 weeks ago
எனக்கென்ன கவலை - ஒரே ஜாலிதான்🤣. என்ன இனி சீமான் மேடையேறி மானம் பற்றி பேசினால் - யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
4 weeks ago
4 weeks ago
அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1449938
4 weeks ago
வாராயோ வெண்ணிலவே படம் மிஸ்ஸியம்மா
4 weeks ago
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பாடு. 67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின. இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிராந்திய மோதலாக உருவெடுத்த போரை நிறுத்துவதற்கான முந்தைய எந்த முயற்சியையும் விட இரு தரப்பினரும் நெருக்கமாக அமைதிருக்குத் திரும்புவார்கள். இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எனினும், புதன்கிழமை (08) தாமதமாக ட்ரம்ப் அறிவித்த ஒப்பந்தம் விவரங்கள் குறைவாகவே இருந்தது. மேலும் முந்தைய அமைதி முயற்சிகளில் நடந்தது போல, அதன் சரிவுக்கு வழிவகுக்கும் பல தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார். திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார். அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது, இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறியது. 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் எழுந்துள்ள போதிலும், நேரம், காசா பகுதிக்கான போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் ஹமாஸின் தலைவிதி உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1449915
4 weeks ago
சின்ன அரும்பு மலரும் படம் பங்காளிகள்
4 weeks ago
09 Oct, 2025 | 10:42 AM முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார். தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் அழைப்பின் பேரில் விமல் வீரவன்ச, அப்பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227286
4 weeks ago
09 Oct, 2025 | 10:10 AM முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார். எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227281
4 weeks ago
Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/227268
4 weeks ago
09 Oct, 2025 | 11:52 AM யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/227301
4 weeks ago
கையில கல்லு இருக்கு டென்மார்க்கில் இருந்து எறிந்தால் கலிபோனியாவில் வந்து விழும் , இன்னொரு முறை இந்தியா தோக்கனும் என நினைப்பே உங்களிடத்தில் இருக்க கூடாது ஹா ஹா லொள்😁.....................
Checked
Thu, 11/06/2025 - 12:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed