2 months 2 weeks ago
வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 27 ஜூலை 2025, 01:52 GMT இந்த டெஸ்ட் தொடர் தனது இயல்பை (எதிர்பாராத்தன்மை) மாற்றிக்கொள்ளாது போல. ஆட்டம் முடிந்தது, எல்லாம் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டுவருவதை பார்க்கிறோம். நான்காம் நாளில் இந்தியா பெட்டியைக் கட்டும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், உறுதியுடன் போராடி ஆட்டத்தை கடைசி நாளுக்கு எடுத்து சென்றிருக்கிறது இந்தியா. எவ்வளவு நேரம் தோல்வியை தள்ளிப்போட முடியும் என்ற கவலையுடன் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 544–7 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. மழை பெய்திருந்ததால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெந்த் பிடிக்காமல் பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர். ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் தென்பட்டது. பழைய வேகம் இல்லையென்றாலும் பும்ராவின் பந்துவீச்சில் நம்பிக்கை தெரிந்தது. நல்ல லெந்த்தில் டாசனுக்கு அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத உயரத்துக்கு எழும்பியது. அடுத்த பந்தை அதே லெந்த்தில் வீசிய அவர், சரியாக ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியை தாக்கி டாசனின் விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் ஆட்டமிழந்ததும், களமிறங்கிய கார்ஸ், கேப்டன் ஸ்டோக் உடன் இணைந்து அடித்து விளையாட தொடங்கினார். சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு சுமாராக பந்துவீசிய சுந்தர் பந்துவீச்சையும் ஸ்டோக்ஸ் விட்டுவைக்கவில்லை. ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து, சுந்தரின் லெந்த்தையும் ரிதத்தையும் சீர்குலைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு முன்பாக, இந்தியாவை பேட் செய்ய வைத்திட வேண்டும் என்கிற திட்டத்துடன் இங்கிலாந்து விளையாடியது. கில்லின் கேப்டன்சி, வழக்கம் போல நேற்றும் சொதப்பலாகவே இருந்தது. ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்டோக்ஸ் விரும்பமாட்டார் என்பதை மறந்துவிட்டு, நேரம் கடந்த பின்தான் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார். சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டனை ஜடேஜாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு இது சாதனைகளை நிகழ்த்துவதற்கான டெஸ்ட் போல. நேற்று ரூட் பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், இன்று ஸ்டோக்ஸ், தன் பங்குக்கு சிலவற்றை நிகழ்த்தினார். ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்களும் கைப்பற்றிய, நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக, டோனி கிரைக், இயன் போத்தம், கஸ் அட்கிட்சன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், காலிஸ் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜடேஜா பந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக 47 ரன்கள் குவித்த கார்ஸ் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து, 600 ரன்களுக்கு மேல் குவிப்பது, இது ஏழாவது முறையாகும். 6 இல் 5 டெஸ்ட்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 2002 டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இந்திய அணி டிராவிட் சதத்தின் உதவியுடன் போராடி தோல்வியை தவிர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாய் சுதர்சன் உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில், 311 ரன்கள் பின்தங்கிய இருந்த இந்தியா இன்னிங்ஸை தொடங்கியது. ஒன்றரை நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்கிற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க சுமாராக பந்துவீசிய வோக்ஸ், நேற்று சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பினார். 311 ரன்கள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விட உணவு இடைவேளைக்கு முன்பு 15 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் விளையாடியாக வேண்டும் என்ற நெருக்கடியே அவர்களது விக்கெட்டை காவு வாங்கிவிட்டது எனலாம். ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை சரியான கோணத்தில் பேட்டை வைக்காமல் தடுக்க முயன்று, ஸ்லிப் திசையில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழும் என எதிர்பார்க்காத சாய் சுதர்சன், முறையான தயாரிப்புகளின்றி அவசர அவசரமாக களத்துக்கு ஓடிவந்தார். கடுமையான உடற்சோர்விலும் மனச்சோர்விலும் இருந்த சுதர்சன், ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வோக்ஸ் வீசிய பந்தை தொடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில், கடைசி நொடியில் பேட்டை உயர்த்தி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்'காகி பெவிலியன் திரும்பினார். கில்லின் உச்சபட்ச ஆட்டம் கடைசியாக இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ' டக் அவுட்' ஆனது, 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில். அந்த டெஸ்டில் நான்காவது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் முதல் சில ஓவர்களுக்கு தாறுமாறாக ஸ்விங் ஆனதால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விரைவில் சரணடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனுபவ வீரர் கேஎல் ராகுலுடன் கைகோர்த்த கில், தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் வழக்கம் போல, பந்தை தேய்த்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக்கொள்ள, தைரியமாக கில் பவுண்டரிகளை அடித்து விளையாடத் தொடங்கினார். கோட்டுக்கு (crease) வெளியே நின்றுகொண்டு, நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளையும் ஹாஃப் வாலிகளாக மாற்றி கோடு கிழித்தது மாதிரி சில டிரைவ்கள் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாயிண்ட் திசையில் கில் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கில், அபாரமாக விளையாடி அதிரடியாக அரைசதத்தை கடந்தார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி எடுத்த 655 ரன்களை கில் முந்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை (732) நெருங்குகிறார். மறுமுனையில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல், தவறான லைன் அண்ட் லெந்த்தில் கிடைத்த பந்துகளை பின்னங்காலுக்கு சென்று பவுண்டரிக்கு அனுப்பவும் செய்தார். இந்திய அணி இந்தளவுக்கு போராடும் என்பதை இங்கிலாந்து நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஸ்டோக்ஸ் பந்துவீசாததை இந்திய பேட்ஸ்மென்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் களத்தில் சோர்வில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் சுவாரசியமே இதுதான். எல்லா வித தடைகளையும் கடந்து எந்த அணி கடைசி வரை உறுதியுடன் நிற்கிறதோ அதுவே வெற்றிபெறும். தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா காயம்பட்ட ரிஷப் பந்தின் காலுக்கு குறி வைத்த இங்கிலாந்து - வியூகத்தில் கோட்டை விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்–கில் இணை, கிட்டத்தட்ட 60 ஓவர்களுக்கு மேல் உறுதியுடன் விளையாடி, 174 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரன்னின்றி (0–2) ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது, வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1977/78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், மெல்பர்ன் டெஸ்டில் மொஹிந்தர் அமர்நாத்–குண்டப்பா விஸ்வநாத் (105), 1902 இல் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆர்ச்சி மெக்லாரன்–ஸ்டான்லி ஜாக்சன் (102*). ஐந்தாம் நாளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நிச்சயம் ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும். பந்த் உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், ராகுல்–கில் இருவரும் இன்று முடிந்தமட்டும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம். இந்தியா கடந்த காலத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில், மனஉறுதியுடன் விளையாடி தோல்வியை தவிர்த்துள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட், ஒரு சிறந்த உதாரணம். டிராவிட்–லக்ஷ்மண் போல, ராகுல்–கில் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்களா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn41n7e3eo
2 months 2 weeks ago
27 JUL, 2025 | 10:29 AM இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்.. இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர். https://www.virakesari.lk/article/221042
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இந்த நவீன கருவியின்...நோக்கமே வேறு சார்....இந்தப் புதைகுழி விவகாரத்தை மடைமாற்றும் நோக்கம்...அரூண் சித்தார்த் தூக்கிபிடிக்கும் துணுக்காய் புதை குழி ...இசுலாமியர் தூக்கிபிடிக்கும் குருக்கள் மடம் என்ப்வை ..தோண்டப்பட்டு..புலிச்சாயம் பூசி ..அரசு தன்னை வெள்ளை யடித்துக்கொள்ளும்..அவ்வளவே
2 months 2 weeks ago
செம்மணி ஆய்வுக்காக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஜி.பி.ஆர் (Ground Penetrating Radar)என்ற நவீன கருவியை பிள்ளையானின் அலுவலக காணிக்குள்ளும் கொஞ்சம் ஓட்டிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
2 months 2 weeks ago
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1440814
2 months 2 weeks ago
நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது. மேலே குறிப்பிட்ட மண் அகழ்வுக்கான அனுமதியை வைத்திருக்கும் அம்பனில் உள்ள தனி நபர்தான் இங்கு ஏதோ சுத்துமாத்து செய்கிறார் போல் தெரிகிறது. கோவில் விவகாரங்களில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றவேண்டும் என்றுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். இப்போது நடந்து முடிந்ததை விட்டு அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு தேவையான மண்ணை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகமும் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து சுமுகமான தீர்வொன்றை காணவேண்டியது மிக அவசியம்.
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Sortspdeno0m0m6cug390gha0l61u95ut5gt 11ul1t7uiu401g80tml77a8 · ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நாட்டு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மேல் போருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால் மகாராணியை தனியாக விட்டு செல்ல பயம்! அதனால் ராணியை ஒரு அறையில் தேவையான உணவுகளை வைத்து மன்னர் பூட்டு பூட்டி விட்டார் ! தன்னுடைய உயிர் நண்பனும் மந்திரி கிட்ட அறையின் சாவியை கொடுத்து ! எனக்கு இந்த அரண்மனையில் யார் மேலும் நம்பிக்கை இல்லை ! உன்னை தவிர . இந்தா ராணியின் அறையின் சாவி ! ஒருவேளை நான் நான்கு நாட்களில் போரில் இருந்து வரவில்லை என்றால் ராணியின் அறை கதவை திறந்துவிடு என்று சொன்னார் ! சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறி புறப்பட்டார் . கொஞ்சம் தூரம் சென்று இருப்பார், பார்த்தால் யாரோ ஒருவர் குதிரையில் அவரை நோக்கி வேகமாக வருவதை பார்த்து தன் குதிரையை நிறுத்த, வந்தது தன் நண்பனான மந்திரி. மன்னர் என்ன விஷயம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர் சொன்னார் ! மன்னா நீங்க மகாராணியை பூட்டிய அறையின் சாவியை விட்டு விட்டு தவறுதலாக வேற சாவியை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் ! என்றார் ! Voir la traduction
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன் கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காப் போராடும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தவர்கள்,மத குருக்கள்…என்றிவ்வாறாக பலதரப்பட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள். முதலில் கஜேந்திரக்குமார் பேசினார். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் பேசினார்கள். ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டத்தின் நோக்கம் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவது என்று சொன்னார். வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கும் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். அந்தக் கடிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாகவும், அந்தக்கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவற்றை வலியுறுத்தியும் எழுதப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறினார்.அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி குருபரனும் அதே கருத்தைக்கூறி அந்த நோக்கத்துக்காகத்தான் அந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று கூறினார்.ஆனால் அழைக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு அது பொதுவாக சர்வதேசப் பொறிமுறையைக் குறித்து ஆராய்வதற்கு என்றுதான் கூறப்பட்டது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்காக என்று தெளிவாகக் கூறப்படவில்லை. அதனால் அந்தச் சந்திப்பில் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஆழமாக உரையாடப்படவில்லை. இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிறீகாந்தா, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர்.. போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அப்பால் சந்திப்பு பெருமளவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்போகும் கடிதத்தை நோக்கியே குவி மையப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் அதற்கு முன் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறவேண்டும். அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் வேலையை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன்.அதன்பின் அவர் இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட வேறு சிலரையும் அதற்குள் ஈர்த்துக் கொண்டார். முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்.இந்த மூன்றாவது சந்திப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக்கூட்டுக் கடிதத்தில் பிரதான அம்சங்கள் இரண்டு.ஒன்று,பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது.அதாவது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான அந்தப் பொறிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை என்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டிருக்காமல் ஐநா பொதுச் செயலர் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டு,அதனை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்குமிடத்து அதற்கு கால வரையறை இருக்க வேண்டும் என்பது. அதன்படி கஜேந்திரக்குமார் 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.ஆனால் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது வழங்கவேண்டும் என்று கேட்டன. முடிவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டுக்கடிதம் எழுதப்பட்டது. 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அவ்வாறு உலக நிறுவனம் ஒன்றுக்கு ஒற்றுமையாக ஒரு கூட்டுக்கடிதம் எழுதியமை என்பது அதுதான் முதல் தடவை. ஆனால் அந்த கடிதத்திற்கு ஐநா பெருமளவுக்கு சாதகமாக பதில் வினையாற்றவில்லை.பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியதோடு, சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு உட்பட்டதாக, அணையாளருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக உருவாக்கப்பட்டது. அதற்குரிய கால எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றுவரை அது செயல்படுகிறது. அதாவது அந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ஐநாவானது தமிழ் மக்கள் திருப்திப்படத்தக்க விதத்தில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஐநா கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதே டில்கோ சந்திப்பின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு உடன்படாதவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில், கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறியிருக்கும் ஒரு பின்னணியில்,இலங்கை அரசாங்கமானது சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக கஜேந்திரகுமார் அந்தச் சந்திப்பில் தெரிவித்தார். அந்தக் கட்டமைப்பானது நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உள்நோக்கத்தை கொண்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமானது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதனால் அதன் சுயாதீனப் பண்பு குறித்து கேள்விகள் உண்டு.எனவே உத்தேச சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சுயாதீனமானது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,அதுபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்றும் கஜேந்திரக்குமார் கேட்டுக்கொண்டார். சந்திப்புக்குத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருந்த போதிலும் அது வந்திருக்கவில்லை. அண்மையில் அக்கட்சியின் பதில் தலைவர் சிவஞானம், ஐநாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் சில நாட்களின் பின் சிவஞானம் நடத்திய ஊடகச் சந்திப்பில்,தமது கட்சி அனுப்பிய கடிதம் உள்நாட்டுப் பொறிமுறையைக் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஐநாவுக்கு கடிதம் எழுதவேண்டும்.அதில் சந்தேகம் இல்லை.தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் அதுதான்.அது பலவீனமானது.காஸாவில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலைத் தடுக்க முடியாத ஐநா தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். எனினும், தமிழ் மக்கள் ஐநாவுடன்தான் ”என்கேஜ்” பண்ணவேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், ஐநா பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தைக் கூட்டாக எழுதுவதால் மட்டும் அது நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. டில்கோ சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மா ஒருவர் தெரிவித்ததுபோல தமிழ் மக்கள் ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.அவ்வாறு அனைத்துல சமூகத்தைத் தம்மை நோக்கித் திரட்டிக் கொள்வது என்றால், அதற்கு முதல் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். இது டில்கோ சந்திப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.ஆனால் அத்தகைய பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் பெரிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை.அவை ஒரு சந்திப்பில் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடிய விடையங்கள் அல்ல. முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தாயகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்திராத ஒரு பின்னணிக்குள்,ஐநா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டா விதத்தில் விடயங்களை நகர்த்திக் கொண்டுவரும் ஒரு பின்னணியில், மீண்டும் ஒரு கடிதம் எழுதுவதை எப்படிப் பார்ப்பது? அதிலும் குறிப்பாக அக்கடிதத்தில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை என்றுசொன்னால் அந்த கடிதத்துக்கு ஒப்பீட்டளவில் பெரிய அங்கீகாரம் இருக்காது.தமிழரசுக் கட்சி அவ்வாறு ஒரு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்து போடக்கூடிய நிலைமைகள் இல்லை என்பதைத்தான் டில்கோ சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சிவஞானம் கூறிய பதிலுக்கூடாக உணரக்கூடியதாக உள்ளது.ஆயின், தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள். இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்பது என்பது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள விரும்புகின்ற வெளிச் சக்திகளுக்கு வாய்ப்பானது. ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கே ஐநாவின் பதில்வினை சாதகமாக இல்லாத ஒரு பின்னணிக்குள், மீண்டும் ஒரு கடிதத்துக்கு, அதிலும் உள்ளதில் பெரிய கட்சி கையெழுத்திடாத ஒரு கடிதத்துக்கு ஐநாவின் பதில்வினை எப்படியிருக்கும்?. அதிலும் குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகராக அரசாங்கத்துக்கும் ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்குத் தனக்கும் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறக்கூடிய நிலைமைகள் அதிகமுடைய அரசியல் மற்றும் ராஜீயச் சூழலில், தமிழ்த் தரப்பில் பிரதான,பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? முதலாவது கடிதத்தின் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நோக்கி அனைத்துலக சமூகத்தை உந்தித்தள்ளும் விதத்தில் தாயகத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய நிர்ணயகரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதன் விளைவாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பில் வைத்து அரசாங்கத்துக்கு நோகாமல் கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்.இந்நிலையில்,மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்த் தரப்பு எழுதப் போகிறது. கடிதம் எழுத வேண்டும்.ஆனால் அதோடு மட்டும் நிற்கமுடியாது.அனைத்துலக சமூகத்தில் ஆதரவு சக்திகளைத் திரட்ட வேண்டும்.இதுதான் முன்னைய கடிதத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட பாடம். https://www.nillanthan.com/7576/
2 months 2 weeks ago
மனிதமும் மிருகமும் கலந்ததுதான் மனித இனம். எந்தக்கடவுளாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களில் உறைந்திருக்கும் மிருக குணங்களை அழித்து மனித மனத்தோடு ஆனந்தமாக, அமைதியாக வாழவைப்பது. அழிக்கத்தான் வேண்டும் என்றால் தவறாக உணரப்படும் வழிபாட்டு முறைகளை அழிக்கலாம். “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” என்பது அனேகமாக தமிழர்களின் கடவுள் வழிபாட்டில் தலையாக உள்ளதைக் காட்டுகிறது.🙏
2 months 2 weeks ago
யாதும் ஊரே யாவரும் கேளீர் .......... ! 🙏
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
எங்கே ஜப்பானுக்கு எதிராக ஒருவரும் குரைக்க காணோம்?
2 months 2 weeks ago
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும். 🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள் புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும். ✅ கட்டாய Subjects – 5: இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்: 1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3) 2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3) 3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3) 4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3) 5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2) 🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14 ✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2: மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2. Second National Language Information and Communication Technology History Civic Education Health and Physical Education Technology : Tourism and Hospitality Management Technology Design and Engineering Technology Livestock Product Technology Artistic Product Technology Entrepreneurship and E-commerce Technology Geography Aesthetics Education: Oriental Music Western Music Carnatic Music Oriental Dance Bharatha Dance Western Dance Drama and Theatre Art Entrepreneurship and Financial Literacy ➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும். 🔹 GPA (Grade Point Average) முறைமை: பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை. இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும். ✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக): % Marks Range Grade Point 90% - 100% 4.0 80% - 89% 3.7 70% - 79% 3.3 60% - 69% 3.0 50% - 59% 2.7 40% - 49% 2.0 (Pass) Below 40% 0.0 (Fail) 👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே. ✅ GPA கணக்கீட்டு முறை: மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு: Mathematics: 3.7 English: 3.3 Mother Tongue: 4.0 Religion: 3.7 Science: 3.0 Optional Subject 1: 3.5 Optional Subject 2: 3.2 📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4 📌 Final GPA = 24.4 / 7 = 3.48 இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும். 🔹 GPA முறைமையின் நன்மைகள்: ✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது ✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம் ✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது ✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும் ✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம் 🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்: 📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும் 📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும் 📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது. 📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை. இணையத்தில் இருந்து....
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
Checked
Fri, 10/17/2025 - 00:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed