புதிய பதிவுகள்2

செம்மணியில் பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு

2 months 3 weeks ago
அதிகாலையில் கண்விழிக்கு முன்பே, வேலிகளை வெட்டிக்கொண்டும் மதில் பாய்ந்தும் உள்ளே நுழைவார்கள் இராணுவத்தினர். எல்லோரையும் ஒரு பொது இடத்தில கூடும்படி அறிவிப்பார்கள், அங்கே விழித்த கண்ணுடனும் கழுவாத முகத்துடனும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூடுவோம். தனித்தனியாக விசாரிப்பார்கள் சிலரை தடுத்துவிடுவார்கள். இந்த நேரத்தில் அப்பிரதேசத்திற்கு யாரும் வரவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், சுற்றி வளைப்பு பெயர். அதன் பின் குடும்ப அட்டை என்று ஒன்று கொண்டு வந்தார்கள். அதில் வீட்டிலுள்ளோரின் பெயர்கள் பதியப்பட்டு கிராமசேவகர் பிரதேசசபையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள இராணுவத்தினரால் சரி பார்க்கப்பட்டு வீட்டில் தொங்க விடப்பட்டிருக்கும். அவர்கள் சோதனைக்கு வரும்போது அந்த அட்டையில்உள்ளவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆட்கள் யாராவது கூட்டியோ, குறைந்தோ இருந்தால் மேலதிக விசாரணை. யாராவது உறவினர்கள் வந்தால், அருகிலுள்ள இராணுவ காவலரணில் அறிவிக்க வேண்டும். அதைவிட வீட்டுக்குள் புகுந்து சோதனை. ஒரு சூட்கேஸு பூட்டி வைத்திருந்தால் கூட திறக்கும்படி செய்து சோதனை செய்வார்கள். இப்படி பல சோதனைகள் பல நேரங்களில் காலம் நேரம் அறிவிப்பு கிடையாது. அகால நேரங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் குழந்தைகளின் உடலாக இருக்கலாம். இதை செய்தவர்கள் உயிரோடு இருந்தால் இவைகள் வெளிவரும்போது அவர்களது மனச்சாட்சியை உலுக்காதா? அவர்களால் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆம், மிருகங்கள் ஒவ்வொரு நாளும் அப்பாவி விலங்குகளை துடி துடிக்க கொன்று புசிக்கின்றன, அடுத்த நாளும், வாழ்நாளெல்லாம் அவர்களது வாழ்க்கை சூழல் அதுவாயிற்றே.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months 3 weeks ago
விமான நிலையங்களில் அந்தக் காந்தப்புல பரிசோதனை வளைவூடாக நான் செல்வதில்லை. வைத்தியர் தந்த எச்சரிக்கை அட்டை ஒன்று என்னிடம் எப்போதும் இருக்கும். அதனைக் காண்பித்தவுடன் என்னைத் தனியாக ஒருவர் அழைத்துத் தடவி பரிசோதிப்பார். ஒருதடவை அழகான இளமங்கை ஒருவர் என்னை அழைத்துத்து உச்சம் தலைமுதல் உள்ளம் கால்வரை தடவி பரிசோதித்த சம்பவமும் உண்டு.🤗

ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்!

2 months 3 weeks ago
ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னலம் துறந்து வாழ்நாள் முழுவதும் போராடி, களத்தில் வீரச் சாவு அடைவது என்பது உலகம் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு! அத்தகைய மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை மண்ணில் - விதைக்கப்படுகிறார்கள்! அவர்களின் வீர மரணத்தைத் தோல்வி என்று கருதி, தலைவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மிகப்பெரும் வீர வணக்கத்திற்குத் தடையாக ஆகிவிடும்! இதனை உணர்ந்தே, போராளிகள் இயக்கத்தில் தலைவருடன் இருந்த மூத்தவர்கள் சிலர், இந்த முடிவை இப்போது எடுத்து இருக்கிறார்கள்! நவம்பர் 27- மாவீரர்கள் நாள், மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பவைகளைத் தாண்டி, இப்போது ஏன் ஆகஸ்ட் 2 என்று ஒரு வினா எழலாம் ! ஏதோ ஒரு காரணம் கருதியே அவர்கள் இந்த நாளைக் குறித்திருக்கக் கூடும்! எனவே நாள் பற்றிய விவாதங்களுக்கு இடம் தராமல், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அந்த மாபெரும் தலைவனுக்கு அன்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்பதே நம் விருப்பம்! - சுப. வீரபாண்டியன் https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul25/48395-akast-2-viravanakka-nal

புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர்

2 months 3 weeks ago
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர் Published By: Vishnu 26 Jul, 2025 | 02:24 AM (எம்.ஆர்.எம்.வசீ்ம்) புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும். விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள்,சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசாங்கம் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதனால் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்கு திறந்துவிடப்பட வேண்டும், அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும். அதன் பிரகாரம் அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும். அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் இதற்காக சில காலம் தேவைப்படும். எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒருவருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/220973

10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது

2 months 3 weeks ago
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது செய்திகள் யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார். பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmdjnbjn101nmqp4kln447ceb

வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!

2 months 3 weeks ago
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வடக்கு_கிழக்கில்_ஆரம்பமாகும்_பாரிய_போராடடம்!

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

2 months 3 weeks ago
நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

2 months 3 weeks ago
இலங்கை அரசை போலவே இஸ்ரேலும் உணவை ஆயுதமாக பயன்படுத்துகிறது, உலக நாடுகளிலிருந்து வரும் உணவு பொருள்களை வழங்குவதற்கு இஸ்ரேல் அமெரிக்க நிறுவனத்தின் மூலமான உணவு பங்கீட்டினை வலியுறுத்துகின்றது, இதன் மூலம் அமெரிக்க இஸ்ரேல் இணைந்து உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகிறது, தன்னார்வ நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படும் உணவு கமாசிற்கு சென்று விடும் என குற்றம் சாட்டும் இஸ்ரேல் விமானம் மூலம் பாரசூட்டில் உணவு பகிர்வதனை தடுக்கமாட்டோம் என கூறுயுள்ளதாம், ஆனால் பாரசூட்டில் முன்னர் உணவு போட்டதில் பொதுமக்கள் சிக்கி உயிர் இழந்துள்ள நிலையில் அதனை செய்ய உலக நாடுகள் விரும்ப்பாது, இஸ்ரேலின் குற்றச்சாட்டான தன்னார்வ நிறுவனங்களின் உணவு பரிமாற்றத்தினால் கமாஸ் உணவினை பெறும் என்றால் விமானத்திலிருந்து போடும் போது அது கமாசிற்கு கிடைக்காதா? நெத்தயாகு செலன்ஸ்கி போல அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் நபர்.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months 3 weeks ago
90 களில் வந்த படமா? சின்ன வயதில் படம் பார்ப்பதுண்டு 90 களில் இல்லை பின்னர் வெளிநாடு வந்த பின்புதான் பார்க்க ஆரம்பித்தேன், தொலைக்காட்சியில் இந்த படத்தில் ஒன்றை தற்செயலாக பார்த்தேன், சுவாரசியமாக இருந்தது, இந்த படத்தின் ஆரம்பம் அவ்வளவு சுவாரசியமில்லாமல் இருந்ததாக உணர்ந்தேன் ஆனால் பின்னர் படம் சுவாரசியமாக இருந்தது. டொமினோ பாதிப்பு எனும் உத்தியினை படத்தின் சுவாரசியதிற்காக பயன்படுத்துகிறார்கள் என கருதுகிறேன், வண்ணாத்து பூச்சியின் இறக்கையின் அதிர்வு ஒரு சுனாமியினை உருவாக்கும் என்பது போல ரூப் கோல்ட்பேர்க் முறையில் மரணம், மரணத்தினை தவிர்க்க முயலுபவர்களுடன் முகமில்ல்லாத ஒரு எதிரியாக போரிடுவது சுவாரசியத்தினை ஏற்படுத்துகிறது என கருதுகிறேன்.

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

2 months 3 weeks ago
இது ஒரு முக்கிய பிரச்சினை, ஏனோ பெரிதாக கவனத்திற்கு வருவதில்லை, எதிர்கால சந்ததியின் எதிர்காலம் குறித்த உங்கள் அக்கறை புரிகிறது, ஆனால் பெரும்பாலும் இக்கால கட்டத்தில் பெரிதாக இந்த விட்யங்களில் மக்கள் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைமுறையினர் கூட தமெக்கென சொந்த வீடுகளற்றவராகவும் நிலங்களற்றவராகவும் மாறுகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரேட்டோ எனும் பொருளியலாளரின் 80/20 எனும் தத்துவம் இயல்பியல் விதியில் தவிர்க்க முடியாத உண்மை என கூறினார்கள், ஆனால் தற்போது 1% உலக வளத்தின் 44% மேலாக உரிமை கொண்டாடுகின்றனர் என கிரெடிட் சுய்ஸ் மற்றும் யுபிஸ் வங்கியின் 2022-2023 அறிக்கை கூறுகிறது. இது அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் நிகழுகிறது, அமெரிக்காவில் 1% மொத்த அமெரிக்க வளத்தில் காற்பங்கினை தமது உரிமையாக்கியுள்ளார்கள், அவுஸ்ரேலியாவில் 20% மொத்த அவுஸ்ரேலிய வளத்தில் 60% -65% தமது உரிமையாக கொண்டுள்ளார்கள். இந்த வளப்பரம்பல் சமநிலை இன்மையால் பொருளாதார சுனாமி அடிக்கடி ஏற்பட்டு உலக பொருளாதாரம் பேரழிவிற்குள்ளாகிறது, இதில் என்ன வருத்தம் என்றால் சாமானியமானவர்கள்தான் இந்த கொள்கையினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள், இந்த கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களே இந்த கொள்கைகளை ஆதரிக்கும் மனப்பாண்மை எவ்வாறு தோன்றியது என தெரியாவிட்டாலும் மக்கள் அடிபடையில் கூட்ட மனப்பாண்மை கொண்டவர்களாக இருப்பதே இதற்கான காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இலங்கையில் சிறிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் அயல்நாட்டு பெரும் முதலாளிகள் ஒரு புறமும் அதானி குழு என மறு புறம் என நாட்டை கொள்ளையடிக்கிறார்கள், ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு தட்டி கேட்டால் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடும் எனும் எண்ணத்தில் அதனை கண்ணை மூடி கண்டு கொள்ளாது விடுகிறார்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல சாதாரண மக்களை பரம ஏழையாக்கும் இந்த நிலை தொடர்கிறது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months 3 weeks ago
குடும்பச் சண்டைக்கு எல்லாம் விளக்கமறியலில் வைத்தா விசாரிப்பார்கள். கிளிநொச்சி காவல் நிலையத்தில்…. அதுகும் மதியம் 12 மணிக்கு நடந்த கொலையை, கிளிநொச்சி பொலிசாருக்கு விசாரிக்க தகுதி இருக்கா? அப்படி விசாரித்தாலும் அவர்களிடம் இருந்து உண்மை வெளிவந்து விடுமா?

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months 3 weeks ago
பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

2 months 3 weeks ago
முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு இனத்தை அழிவின், இருளின் விளிம்புக்கு துரத்தினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக மன்னிப்பு கோரவேண்டும், இனிமேல் இப்படி நடக்காது என உறுதி செய்து பொறுப்பு எடுக்கவேண்டும். அப்போதான் உண்மையான நம்பிக்கை, நல்லிணக்கம், சமாதானம் ஏற்படும். அதைவிட்டு அந்த மக்களின் நிலங்களை பறிப்பதாலேயோ, அவர்களுக்கு பொருத்தமில்லாத கட்டிடங்களை எழுப்புவதாலேயோ, அவர்களை அச்சுறுத்துவதாலேயோ, அல்லது அவர்களை குற்றம் சுமத்துவதாலேயோ இழந்த ஐக்கியதை ஒருநாளும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக சந்தேகம், வெறுப்பு, பகைமை மட்டுமே வளரும். இதை புரிந்து கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அனுபவமில்லை, மத தலைவர்களுக்கும் ஞானமில்லை, கற்றவர்களுக்கும் அறிவில்லை. நமது தலைவர்களும் புலிகளை குற்றம் சுமத்தி இல்லாத குற்றத்திற்கு மன்னிப்பு கோரி அவர்களை நிஞாயப்படுத்துவதை விடுத்து, பிரச்சனைக்கான மூல காரணத்தை விளக்கி, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தார்கள் என்பதை விளக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். அதை செய்வதற்கு வரலாறு தெரியாவிட்டால் விலகியிருக்க வேண்டும். நாம் குற்றவாளிகள் என்று அவர்களை சந்தோஷப்படுத்த முனைந்தால்; அவர்கள் தங்களை நிஞாயவாதிகளாக காட்டி நம்மை இல்லாமற் செய்ய வழி வகுக்கும். இதுவரையில் இத்தனை மக்களை கொன்றவர்கள், எங்களை விரட்டியவர்கள் ஒரு தடவையாவது மன்னிப்பு கேட்டார்களா? அல்லது தவறு நடந்து விட்டதென ஏற்றுக்கொண்டார்களா? ஆக்கிரமிப்பை நிறுத்தித்தான் கொண்டார்களா? ஒரு பக்கம் சமாதான கரம் நீட்டி பயனில்லை. தாக்குதலாளி உணரவேண்டும் உணர வைக்கப் பட வேண்டும்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months 3 weeks ago
சாரத்தின் ஒரு பகுதிக்கு இவ்வளவு பலம் இருக்கு என்று இதுவரை நான் நினைத்திருக்கவில்லை. அது சரி, எங்கே எப்படி தூக்குப்போட்டார்? சாரம் மட்டும் போதாதே தூங்குவதற்கு?

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

2 months 3 weeks ago
உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்! இதுவும் ஒரு பிக் பொஸ் நிகழ்ச்சியாக அமையுமோ? யார் யாரை வெற்றிகரமாக வெளியில் அனுப்புகின்றார் என பார்ப்போம்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
வாசிங்டன் சுந்தர் கொஞ்சம் செய்கிறார் போல் உள்ளது. சாய் சுதர்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இப்போது முன்னிலையில். ஆனால் இந்தியாவை வெற்றிகொள்ளுமா என்பது சந்தேகமே.
Checked
Thu, 10/16/2025 - 21:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed