2 months 3 weeks ago
1- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி சந்தோசம் திருப்பி மற்றும் சந்ததி பற்றிய தூர நோக்கு இருக்கும். எனது சந்ததி விருத்தி சார்ந்த பயமே அவனை தடுக்க காரணம் 2- அது பரதேசி வாழ்க்கை அல்ல அது வேறு ஓர் வாழ்க்கை பரிமானம். எமது அடுத்த அடுத்த தலைமுறை அதற்குள் தான் பயணிக்கும். என்னால் முடிந்த வரை ஒரு தலைமுறையை தள்ளிவிட்டு உள்ளேன். அவ்வளவு தான்.
2 months 3 weeks ago
எப்படி 30 வயது ஆள் 22 வயது ஆளானார்? 😎
2 months 3 weeks ago
விசுகர் ஏற்கனவே தன் பிள்ளைகளின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் பற்றிப் பெருமைப் படும் ஒரு தந்தை தான். அவர் மட்டுமா? நாம் எல்லோரும் அப்படித் தான். ஆனால், அதைப் பற்றியா இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? இதை ஏன் பத்திரிகையில், அல்லது இணைய செய்தித் தளத்தில் போட வேண்டிய தேவை வருகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப் பட்ட விருப்பு, வெறுப்பு என்று கடந்து போகலாம். ஆனால், இது கருத்துக் களம், எனவே வாழ்த்தும் சொல்லி விட்டு, "இது பெரிய செய்தி அல்ல" என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். மற்றபடி , அனுஜன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை. அவர் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க Naval Academy இல் பயிற்சி விமானியாகி, விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளி வீரராகவும் வரக் கூடும். அது செய்தியாகும்! அப்படி வளர வேண்டுமென்பது தான் எங்கள் வாழ்த்தும்.
2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 04:30 PM கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/220836
2 months 3 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார். சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன? பெண் வழக்கறிஞரின் புகார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். "இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். "இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது? ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார். மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார். இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது. "ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார். இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார். சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன். "அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. "இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார். அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார். தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா? "பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன். "இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன." ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்." இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன். "ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன." பட மூலாதாரம்,GETTY IMAGES இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை." இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார். இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார். "இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா? பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். "குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o
2 months 3 weeks ago
தகவலுக்கு நன்றி ஐயனே. கட்டுரைகள் எழுதும் போது ஆதாரங்கள் இணைத்தல் தகவல்கள் சரிபார்ப்பிற்கு உதவியாக இருக்கும். நன்றி
2 months 3 weeks ago
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு] எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into fragments by domestic walls; Where words come out from the depth of truth; Where tireless striving stretches its arms towards perfection; Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action-- Into that heaven of freedom, my father, let my country awake.” (இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore வங்காள மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali))
2 months 3 weeks ago
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதியில் பரப்புவதற்கான மணலை வழங்குவதில் இடர்ப்பாடு - அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை 24 JUL, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அவ்வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவை முன்னிட்டு அடியவர்களின் நன்மை கருதி வீதிக்கு மணல் பரப்புவது வழக்கம். இந்த ஆண்டு மணல் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என அறிகிறோம். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகள் செய்யும் திருவீதி தார்வீதியாக உள்ளது. உடனடியாக மணல் வழங்குவதற்கான ஏற்பாட்டை பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யவேண்டும். இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும். காலந்தோறும் நான்கு வீதியும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து தெய்வீகமாக நடைபெறும் திருவிழாச் சிறப்பை பேணுவதற்கு அனைவரும் உடன் அக்கறை எடுங்கள். இந்து சமய திணைக்களம், சமய விவகார அமைச்சு இத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பல ஆயிரம் மக்கள் கூடும் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக் கால ஒழுங்குகளை பேண உதவுங்கள். இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்தவர்களும் கூடிய அக்கறை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் அனைவரது கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/220835
2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 03:55 PM திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள வீரஞ்சோலை கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்களம் நாட்டியுள்ள எல்லைக்கற்கள் காரணமாக, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தோழர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வியாழக்கிழமை (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது: "குச்சவெளி பிரதேசத்தின் வீரஞ்சோலை பகுதியில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னிச்சையாக எல்லைக்கற்களை நாட்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், விவசாயத்தின் வழியே தங்களது குடும்பத்தை நடத்தி வரும் இக்கிராம மக்கள் மீதான இச்செயல் அநீதியானதொரு நடவடிக்கை எனவும், எல்லைக்கற்களை அகற்றி, விவசாய நடவடிக்கைகள் தொடர சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/220830
2 months 3 weeks ago
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். "மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில 'நாடுகளின்' தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வாகனங்களில் தூதரக ரீதியிலான, போலியான எண் தகடுகள் இருந்தன, அவை எந்த அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை" என்று எஸ்டிஎஃப் எஸ்எஸ்பி சுஷில் குலே தெரிவித்தார். ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற நபர் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போலி தூதரகத்தை நடத்தி வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இதுபோன்ற போலி எண்களைக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மீட்கப்பட்ட முத்திரைகள், போலி பான் அட்டைகள் மற்றும் போலி புகைப்படங்கள் "குற்றம் சாட்டப்பட்டவர் காஜியாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே கூறினார். மேலும், "அவர் மக்களிடம் பிரபலமாகவும், அவர்களை ஏமாற்றவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம், அவர் பல பிரமுகர்களுடன் நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டார்" என்றும் எஸ்எஸ்பி சுஷில் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடி நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான ஏராளமான பொருட்களையும், போலியான பொருட்களையும் சிறப்புப் படையினர் மீட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பின்வருவன அடங்கும்: போலி தூதரக எண் தகடுகள் கொண்ட நான்கு வாகனங்கள் 12 வெவ்வேறு சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் இரண்டு போலி பான் கார்டுகள் 34 வெவ்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் போலி முத்திரைகள் இரண்டு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் ரொக்கமாக 44 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பல நாடுகளின் நாணயங்கள் கூடுதலாக 18 போலி எண் தகடுகள் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் ஹர்ஷ் வர்தன் 2011 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை பதிவுகள் கூறுகின்றன. "அப்போது, அவரிடமிருந்து செயற்கைக்கோள் மூலம் பயன்படுத்தப்படும் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டது, பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே குறிப்பிட்டார். தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது காஜியாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள், போலி ஆவணங்களை வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு ஆர்க்டிகா என்றால் என்ன? பட மூலாதாரம், HTTPS://WWW.WESTARCTICA.INFO/ படக்குறிப்பு, மேற்கு ஆர்க்டிகா என்று அழைக்கப்படும் நாட்டின் கொடி இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மேற்கு ஆர்க்டிகாவும் பேசுபொருளாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தன் தான் தூதராக இருப்பதாகக் கூறி வந்த நாடுகளில் ஒன்று மேற்கு ஆர்க்டிகா. முதலில் கேட்கும்போது அது ஒரு சிறிய அல்லது தொலைதூரத்தில் உள்ள நாடு எனத் தோன்றலாம். ஆனால் மேற்கு ஆர்க்டிகா என்பது 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியான டிராவிஸ் மெக்கென்ரி என்பவரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடு. இது தனக்கென ஒரு வலைத்தளம், கொடி, சின்னம் மற்றும் நாணயத்தைக் கொண்டுள்ளது. எந்த நாடும் முறையான உரிமை கோராத, அண்டார்டிகாவின் பனி சூழ்ந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, இது தன்னை விவரிக்கிறது. இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கம் என்றும் வெஸ்ட் ஆர்க்டிகாவின் வலைதளம் கூறுகிறது. 'தூதர்', 'குடியுரிமை' மற்றும் 'கௌரவப் பட்டங்கள்' போன்ற பதவிகளையும் வெஸ்ட் ஆர்க்டிகா வழங்குகிறது. ஆனால், உலகின் எந்தவொரு நாடும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையும் அதை ஒரு உண்மையான நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த 'நாட்டின்' அரசாங்கம் கிராண்ட் டியூக் டிராவிஸால் தலைமை தாங்கப்படுகிறது என்றும், அவருக்கு ஒரு பிரதமரும், ஒரு 'ராயல் கவுன்சிலும்' உதவி செய்கின்றனர் என்றும் மேற்கு ஆர்க்டிகாவின் வலைதளம் குறிப்பிடுகிறது. இது தவிர, மேற்கு ஆர்க்டிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களை விளக்குவதற்கு 'கிராண்ட் டூகல் கோர்ட்' என்ற ஒரு நிறுவனமும் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, தங்களது அறிவு, நேரம் மற்றும் திறன்களை பங்களிக்கும் நபர்களை அந்த வலைதளம் 'உறுப்பினர்கள்' என்று விவரிக்கிறது. ஆனால், இவை அனைத்தும் டிஜிட்டல் மற்றும் குறியீட்டு கட்டமைப்புகளில் மட்டுமே இயங்குகின்றன. நிஜத்தில் அவற்றுக்கு எந்தவொரு சட்ட ரீதியான அல்லது ராஜ்ஜிய அங்கீகாரமும் கிடையாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தனுடன், மேற்கு ஆர்க்டிக்காவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2nnjwqp2o
2 months 3 weeks ago
மகன் ஆசைப்படுகின்றானே என அப்போது நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள் என வைப்போம். உங்கள் மகன் வர்த்தக விமானி ஆகும் போது மகிழ்ச்சி அடைவீர்களா இல்லையா? உங்கள் மகன் ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக வேலை பார்த்தால் பெருமைப்படுவீர்களா இல்லையா? விமானிகளுக்கு பிள்ளைகள், குடும்பம் இல்லை பரதேசி வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 06:27 PM வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையிலான அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது. இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை (24) காலை 10.00 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!”, “இது நாடா இடுகாடா?”, “சர்வதேசமே மௌனத்தை கலை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கிருந்த அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் முடிவில், மக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜர், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220859
2 months 3 weeks ago
ஜஸ்ரின்... அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாத அலட்டல்களும் வேண்டாம். *** ################### ################### போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கைதுசெய்யப்பட்டு காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 22 வயது. போர் முடிவடையும் போது 06 வயது பையன் தவழ்ந்து கொண்டு இருந்தபோதே அந்தச் சிறுவன் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா? Selvanajakam Nijanthan Kunalan Karunagaran
2 months 3 weeks ago
நல்ல வேளையாக நீங்கள் முந்தி கொண்டீர்கள். அல்லது இந்த விளக்கத்தை கஸ்டபட்டு எழுத வேண்டி வந்திருக்கும். நன்றி. கேள்வியை யார் இப்பெல்லாம் கவனிக்கிறார்கள். மாடு, மரம், கட்டுதல் ரகத்தில்தான் பதில்கள் பெரும்பாலும். தமிழர்கள் ஏன் விமானியாக போவதில்லை (கேள்வி குறைவு, வழங்கல் அல்ல) என நியாயத்துக்கு நான் சொன்னமைக்க்கான வாழ்க்கை உதாரணம். பிகு எவரேனும் பிள்ளைகள் இந்த துறையை விரும்பினால் Air Traffic Controller நல்ல வேலை. ரிஸ்க் குறைவு. குடும்ப வாழ்வும் குலையாது. 8 மணி நேரம் பெட்டிக்குள் இருந்து விட்டு, அங்கே போய் படுத்தெழும்பி, மீண்டும் 8 மணி நேரம் பெட்டிக்குள் இருக்கும் அலுப்புகள் இல்லை. ஆனால் விமானியை விட stress அதிகம்.
2 months 3 weeks ago
சர்ச்சைக்குரிய இந்துக் கோவிலை, முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கம்போடியா அறிவிப்பு!
2 months 3 weeks ago
படத்தை மட்டும் பார்த்து விட்டுக் கருத்தெழுதாமல், முழுச்செய்தியையும் வாசித்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. ATPL (Air Transport Pilot License) என்பது வணிக விமானங்களை இயக்குவதற்கான அடிப்படையான தகுதி. செய்தியிலேயே சொல்லியிருப்பதன் படி வணிக விமானங்களை இயக்குவதற்கான Commercial Pilot License (Aeroplanes) CPL(A) எடுத்திருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் கொண்ட பிஸ்ரன் (MEP Multi-Engine Piston) விமானங்களை இயக்குவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார். காற்றாடி இயந்திரங்களால் இயங்கும் விமானங்களில் பிஸ்ரன் விமானங்கள்(அவரோடு படத்தில் இருப்பது) குறைந்த உயரத்திலும், வேகத்திலும் பறக்கும் விமானங்கள். Turboprop என்ற வகை அனேகமாக பயணிகளை நீண்ட தூரம் ஏற்றிச் செல்லப் பயன்படும் அதிக உயரத்திலும், வேகத்திலும் பறப்பவை - இதனால் சிக்கலானவை. இதனால் தான் MEP என்று குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் ATPL இனை வைத்துக் கொண்டு B737, A320 எல்லாம் போய்விட்டீர்கள்😂. இந்த சிக்கலான விமானங்களில் First Officer எனப்படும் துணை விமானியாக வரவே, அவர் இன்னும் பல ஆயிரம் மணித்தியாலங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். எடுப்பார் என்று தான் நம்புகிறோம். ஆனால், அப்படி போயிங், எயார்பஸ் பறக்க லைசென்ஸ் எடுத்தாலும் கூட அது ஒரு செய்தியா என்பது தான் இங்கே பலருடைய கேள்வி.
2 months 3 weeks ago
உங்களை மாதிரி ஒரு "கணக்குப் புலியும்", வன்னியில் இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாத @satan உம் இருக்கும் போது, வாசகர்களை யாருமே கேனையர்களாக்கி விட முடியாது😂!
2 months 3 weeks ago
ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை என்று மனிதர்கள் உண்ணும் ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்துக்குமே உயிருண்டு. அத்துடன் மாமிசம் மட்டுமல்ல நாங்கள் உண்ணும் தாவரங்கள் அனைத்துக்குமே உயிருண்டு என்பதை இன்றல்ல அன்றே மனிதர்கள் அறிந்துள்ளனர். அதிலும் சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் ஒரு சிலர் மாமிசம் உண்டாலும். உயிர்கொலை மகா பாவம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவேதான் வருடத்தில் ஒருமுறையாவது, மிகக் கசப்பான. உண்ணவே வயிற்றைக் குமட்டும் காத்தோட்டிக்காயை பொரித்து உண்டு அதன் கசப்பால் துன்பத்தை அனுபவித்து, உயிர்களைக் கொல்லும் பாவத்திலிருந்து சற்று விடுபடுவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. ஆகவேதான் அந்த நம்பிக்கையை வருடத்தில் ஒருமுறை வரும் ஆடி அமாவாசையன்று கடைப்பிடித்துப் பாவத்தைப் போக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2 months 3 weeks ago
இதுவரை சிம்மாசனத்திலிருந்து சுகபோகங்களை அனுபவித்து வந்த தாய்லாந்து அரசர் இனிமேல் களத்தில் இறங்கிப் போர் செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டது.
2 months 3 weeks ago
ஆதரங்களுக்கு நன்றி ரஞ்சித். ஜோக்குகளுக்கு அப்பால்… இப்படியானவற்றை சும்மா புலித்தேவனை வைத்து பொத்தாம் பொதுவாக மறுப்பறிக்கை விடாமல் - இதை விட வலுவாக புலிகள் ஆணித்தரமான மறுத்திருக்க வேண்டும். இதையே நான் அப்போதும் நினைத்தேன். இப்போதும் நம்புகிறேன். இந்த தாக்குதல் நடந்த சமயம் - தலைவர் பிபிசியையோ அல்லது சி என் என் நையோ அழைத்து - திட்டவட்டமாக இதை தாம் செய்யவில்லை என ஒரு பேட்டி கொடுத்திருக்கலாம். தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை பகிரங்கபடுத்தி - இதில் தமக்கு சம்பந்தம் இல்லை, யாருக்கும் சம்பந்தம் என கூறி இருக்கலாம். இராஜதந்திர விடயத்தில் “குற்றம் சொன்னவர்தான் நிரூபிக்க வேண்டும்” என்ற கதை எடுபடாது. ஏலவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, அல்லது அப்படி முத்திரை குத்தப்பட்ட இயக்கம், நடக்கும் சதியை புரிந்து கொண்டு, இந்த களங்கத்தை துடைக்க வலுவாக உழைத்திருக்க வேண்டும். எவனை பற்றியும் எனக்கு கவலை இல்லை, எனது ஊரில் நாந்தான் ராஜா என்ற ஏண்டாப்பில், அல்லது யுத்தம் எப்படியாவது தொடங்கட்டும் (மகிந்தவை வெல்ல வைத்த அணுகுமுறை) போன்ற காரணங்களுக்காக இவற்றை இயக்கம் சும்மா ஒப்புக்கு ஒரு அறிக்கை என்ற அளவில் நிறுத்தி கொண்டது. இதனால் மகிந்தவின் சதி திட்டம் வெற்றியாகியது. இதுதான் உண்மை.
Checked
Thu, 10/16/2025 - 12:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed