2 months 3 weeks ago
நீர் உவராதல், சலக்கடுப்பு/சிறு நீர் கடுப்பு, கிணற்று நீரின் குடிக்கும் தகுதி, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். நீர் உவராதல் என்பது கடல் நீரின்/பாறைகளின் உவர்த்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக நன்னீர் நிலைகள், கிணறுகளுக்குள் பரவுதல். இது இலங்கை போன்ற சிறிய தீவுகளில், கடலுக்கு அண்மையில் இருக்கும் நீர் நிலைகளில் நிகழக் கூடியது. இது நிகழும் வேகம் மட்டுமே வேறுபடும். உதாரணமாக, உள்நாட்டு யுத்த காலத்தில் எரிபொருள் தட்டுப் பாட்டினால் வடக்கில் கிணறுகளை இறைக்கும் செயல்பாடுகள் குறைவாக இருந்தமையால், அந்தக் காலப்பகுதியில் ஒரு அவகாசம் ஏற்பட்டு நீர் உவராதல் தாமதமாகி இருக்கலாம். இப்போது அந்த வேகம் அதிகரித்திருக்கலாம். இதை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தள்ளிப் போடலாம், முற்றாக இல்லாமலாக்க இயலாது. சலக்கடுப்பு என்பது எங்கள் உடல் நீரைச் சேமித்து முக்கிய தேவைகளுக்காக பத்திரப் படுத்தும் போது, சிறு நீர் வெளியேறும் அளவு குறைவதால் சிறு நீர் வெளியேற்றும் பாதைகளில் ஏற்படும் வலி. இது நீரிழப்பின் (dehydration) ஒரு தற்காலிக அறிகுறி. இதற்கும் நீரில் இருக்கும் கல்சியத்திற்கும் தொடர்பில்லை. இலகுவான தீர்வு, ஒரு தேக்கரண்டி சீனியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இந்த சீனி கலந்த தண்ணீர், குடல் நீரை உறிஞ்சிக் கொள்ள உதவுவதால் உடல் சாதாரண நிலையை உணர்ந்து சிறு நீரை வெளியேற அனுமதிக்கும். சலக்கடுப்பும் நீங்கும். சலக்கடுப்போடு நீரில் இருக்கும் கல்சியத்திற்குத் தொடர்பில்லா விட்டாலும், குடி நீரில் கல்சியம் இருந்தால் சிறு நீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கல்சியம் அதிகரித்த குடிநீர் தீங்கற்றது என்று சொல்ல முடியாது. ஒரு கிணற்று நீரின் குடிதண்ணீர் தராதரம் அப்படியானால் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? மேற்கத்தைய நாடுகளில் கிணற்று நீர் சில பகுதிகளில் குடிநீராக இருக்கிறது. அங்கே, குடி நீரில் இருக்கும் வயிற்றோட்டம் தரக் கூடிய பற்றீரியாக்களின் அளவு (Coliform count), கல்சியம், புளோரைட் போன்ற கனியுப்புக்களின் அளவு, என்பவற்றுடன் தீங்கு தரும் இரசாயனங்களின் அளவுகளும் பரிசோதிக்கப் படும். இவற்றை எப்படி நாம் சிறி லங்காவில் பயன்படுத்தலாம்? நகரப் பகுதிகளில் கிணற்றிற்கும், septic tank (?) எனப்படும் மலசலக் குழிக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்கிறார்கள். இதனால், நகரக் கிணறுகளின் தண்ணீரை நிச்சயம் Coliform count செய்து தரத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். எங்கள் நாட்டில் பாரிய தொழிற்சாலைகள் இல்லாமல், விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதனால், விவசாய உரங்களில் இருந்து வரும் கழிவுகள், நைற்ரேட் போன்றவை, பரிசோதிக்கப் பட வேண்டும். நகரங்களுக்கு வெளியே இருக்கும் கிணறுகளுக்கு இந்த உரக்கழிவுப் பரிசோதனைகள் முக்கியமாக இருக்கும். எனவே, கிணற்று நீரைக் குடிக்கலாமா என்ற கேள்விக்குப் பதில், வடக்கைப் பொறுத்த வரை 1. பற்றீரியாக்களின் செறிவு. 2. உரக்கழிவின் செறிவு 3. கல்சியத்தின் செறிவு ஆகிய 3 காரணிகளில் தங்கியிருக்கும் ஒரு பதில்.
2 months 3 weeks ago
இது என்ன தரவுகள் எல்லாம் தாறீங்க… செல்லாது…செல்லாது…. கருணாநிதிக்கு நாக்கு பச்சை கலர் அவர் ஒரு ஏலியன் எண்டு சொன்னாலும் ஏத்துகொள்ள வேண்டும். அதுதான் தன்மானமுள்ள புலம்பெயர் ஈழதமிழனுக்கு அழகு 🤣. மக்ரோனின் அம்மா பிறந்தது 1950. அவரின் மனைவி பிறந்தது 1953. இது என்ன மாடல்? அல்லது நாம் பஞ்சம் பொழைக்கும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் கள்ள மெளனமா🤣.
2 months 3 weeks ago
நம்ம தல மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்… மோடி ஜிப்பாவ சந்தில வச்சி உருவ நம்ம தல போல யாரும் இல்லை🤣 தல போல வருமா🤣 மல்லாவி எண்டா கிளிநொச்சி பக்கம்தானே🤣
2 months 3 weeks ago
இராசாத்தி அம்மாள் பிறப்பு - 1945, கலைஞருடன் திருமணம் - 1966, கனிமொழி பிறப்பு - 1968 மு.க.முத்து பிறப்பு - 14.01.1948 ஆகவே சித்தியைவிட 2+ வருடங்கள் இளையவர்.
2 months 3 weeks ago
👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈 சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇 திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
உலக நாடுகள் என மோடி குறிப்பிட்டவை, சோமாலியா, நைகர், எத்தியோப்பியா, மொசாம்பிக், புருண்டி, சியாரா லியோன் (சன்னி லியோன் அல்ல) மாலாவி போன்ற நாடுகள்.
2 months 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440043
2 months 3 weeks ago
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு ( (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இதனையடுத்து ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரம்வாய்ந்த உரிமமாகக் கருதப்படுவதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain)பணியாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440041
2 months 3 weeks ago
ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.
2 months 3 weeks ago
கோழிக்கு அரிசி போட்டது போல அப்பப்ப சொல்லிக் கொண்டே இருங்கள். முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்.
2 months 3 weeks ago
நான் எழுத நினைத்ததை நழுங்கள் எழுதிவிட்டீர்கள்.
2 months 3 weeks ago
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்! முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, முந்தைய அரசாங்க காலத்தின் போது, அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீது இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440017
2 months 3 weeks ago
5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியதா நம்ம தலை சொல்லியிருக்காபில!🤣
2 months 3 weeks ago
முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே. அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள். நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. (உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்). இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே. ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது. இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக. செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன? தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான். Vs அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான். வேறவாய் vs நாறவாய் 🤣 இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣
2 months 3 weeks ago
பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌
2 months 3 weeks ago
உலக நாடுகள்: ஆமா…அப்படியே ஷாக் ஆயிட்டோம்…அவ்….
2 months 3 weeks ago
ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம். பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.
2 months 3 weeks ago
இதை பெற்றோர்களுக்கு சொல்லி பிரயோசமில்ல. வேறு விளையாட்டுச் சாமான்கள் தருகிறோம். இனிமேல் கைபேசிகளை தொடாதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள்.
2 months 3 weeks ago
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ். ”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு அமைச்சர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439988
Checked
Wed, 10/15/2025 - 21:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed