புதிய பதிவுகள்2

மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி!

3 months ago
மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி A9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பலமுறை இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும் மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை. இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணமும் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ” உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி ஏற்படும் விபத்தையும் அசௌகரியத்தையும் தடுக்குமாறு ஆதவன் செய்திப் பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது. https://athavannews.com/2025/1438818

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

3 months ago
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது. இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது. இதில், விபத்து இடம்பெற்ற தினத்தில் விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்ததாகவும் ஆனால் விபத்துக்குப் பின்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன. விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category ‘C’ Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438853

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months ago
பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்.....வந்திட்டாங்க வந்திட்டாங்க....

3 months ago
பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி

3 months ago
அப்பாவி மக்களை கொல்வதற்கென்றே இந்த மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்களா? இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் புரிகிறது. கமாஸை காரணமாக வைத்து அந்த நாட்டை அழிப்பது போர் நிறுத்தம் ஒன்று வருவதற்குமுன் அதை செய்து முடித்து கமாஸை அழித்து விட்டோமென விழா எடுப்பார்கள். இத்தனை மக்கள் நாளாந்தம் கொத்துக்கொத்தாக இறக்கிறார்கள், காரணம் நெதன்யாகு எனும் கொலைக்குற்றவாளி. அவனை கைது செய்ய முடியவில்லை, அதன் பின் மக்கள் எல்லாம் இறந்து புதைகுழியானபின் விசாரணையென உலகத்தை ஏமாற்றும், காலத்தை இழுத்தடிக்கும் செயலை அரங்கேற்றுவார்கள். ஒருதடவையில் பாடம் படிக்காதவர்கள் எப்போதுமே படிக்கச மாட்டார்கள். தாக்கப்பட்டவனையே பழி சொல்வார்கள். கோத்தா சொன்னானே, சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர எங்களை வற்புறுத்தியது, நாங்கள் அதற்கு செவிமடுக்காமல் போரை தொடர்ந்து செய்தோம், அதனால் சர்வதேசம் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்குகிறது. இதுதான் ஒரு இனத்தை அழிக்கும் யுக்தி. எப்போ எதிர்த் தரப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தவில்லையோ, அப்போதே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள். தொடர்ந்து ஒரு தரப்பு அதுவும் வென்ற தரப்பு போரை நடத்துவது என்பது மிஞ்சியுள்ள பொதுமக்களை அழித்து, அவர்களுக்கு சொந்தமான நாட்டை, நிலத்தை கைப்பற்றும், அபகரிக்கும் செயல். அதற்கு வேறு விளக்கம், நாம் செய்தது எதிரியுடனான போர் என, கோழைத்தனமான விளக்கம். அதையும் பார்த்துக்கொண்டே மனிதாபிமான சபைகள் நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகள் நடந்து கொள்ளும் விதமும் ஒவ்வொரு போரின்போதும் வெளியில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இவர்களே போரை உந்தித் தள்ளுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு? இவர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை, பாதுகாப்பு? அவர்கள் முன்னாலேயே இவ்வளவு கொடூரங்களும் நிகழ்கின்றனவே.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months ago
கிளி/ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தமது முகப்புத்தகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்: ஊற்றுப்புலத்தின் வரலாற்று சாதனை.... வெளியாகிய 2024(2025) க/பொ/த சாதாரண தரப்பெறுபேற்றில் எமது பாடசாலை மாணவன் செல்வன் சக்திவேல் குயிலன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான் பாடசாலை சார்பாக 9A சித்தி பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மாணவனுக்கும் இச் சித்தியினை பெற அவனை நெறிப்படுத்திய எமது பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திரு மு.பிரேம்குமார், வகுப்பாசிரியை திருமதி பன்னீர்ச்செல்வி சிவகுமார் , ஆசிரியர்கள்,மற்றும் அவனது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்..... இவ் மாணவன் கல்விச் செயற்பாடு மட்டுமன்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்குபவர் என்பது குறிப்பிட தக்கதது க.பொ.த உயர்தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றினை பெற இறையாசியினை வேண்டி நிற்கின்றோம்

உன்னால் முடியும் தம்பி

3 months ago
அப்ப கனடாவில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் எப்படி? உங்கள் அணி கிண்ணம் ஏதும் வென்று வந்தீர்களா? என்னையும் இந்த அணியொன்றில் இணைத்து வார இறுதியில் சீரியசாகப் பெண்டு நிமித்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ஒரே நேரத்தில் பல குடும்பங்கள் அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவிற்காக வட கரோலினாவிற்குப் போக வேண்டியதாகி விட்டது! ரீம் காலி😂! பின்னர் வட கரோலினா பற்றி விரிவாக எழுதுகிறேன்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months ago
மேலே புலவர் பொங்கியிருப்பதைப் பார்த்தீங்கள் தானே? நா.த.கவாவது இல்லாமல் போறதாவது! இவையள் பாம்பு பூச்சி ஓணாணைக் கூப்பிட்டு சீமான் மாநாடு வைச்சாலும் "இது வரை யாரும் செய்யாததைச் செய்பவன் தான் தலைவன்!" 😎 என்று பின்னால் செல்லும் மூளை பிரஷர் வாஷரால் மினுக்கப் பட்ட ஆட்கள்! இவையள் பெருகிவீனமேயொழிய அருகாயீனம்!

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months ago
Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்.....வந்திட்டாங்க வந்திட்டாங்க....

3 months ago
Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months ago
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும். விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம். இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே. நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months ago
இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months ago
தமிழ்நாட்டு அரசே டாஸ் மார்க்கில் சரக்கு விற்கிக்றது.காலம் காலமாக தமிழ்மக்களால் அருந்தப்பட்டு வந்த கள்ளுக்குத் தடை விதிக்கின்றது.காரணம் சாராய ஆலை வியாபாரிகள் எல்லோரும் முக்கிய அரசியல்வாதிகள். அவர்களின் சாராயததை விட கள்ளில் அற்ககோல் வீதம் மிகக் குறைவு.கள்ளுக் குடிப்பதால் ஒருவருக்குஏற்படும் பாதகத்தை விட இவர்களின் சாராயத்தைக் குடிப்பதால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோரூக்கும் தெரிந்த விடயம் சீமானை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது வெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. இந்தியாவின் முன்னேறிய மாநிலமான கேரளாவில் கள்ளுக்குத்தடை இல்லை. பாண்டிச்சேரியில் கள்ளுக்குத் தடை இல்லை. அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலஊழல்வாதிகள் அல்ல.பெரியாரின் மண்ணில்தான் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.கள் ஒரு மது.பெரியாரின் சீடர்கள் விற்பது அமிர்தம். இவையெல்லாம் சீமான் எதிர்ப்பாளர்களின் கண்களுக்குத் தெரியாது. சீமான் எது செய்தாலும் அது தவறு. பெரியாரின் சீடர்கள் எது செய்தாலும் அது தமிழநாட்டு மக்களின் நலனுக்காக என்று நம்புவர்கள்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months ago
இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

3 months ago
இறுதியில் மூளைதான் இறுதி முடிவு எடுக்கிறது. வயிற்றுக்குள்ளே ஒரு இடதுசாரி அரசாங்கமே நடக்கிறது என்பதைத் தத்துரூபமாக விளக்கப்பட்டுள்ளது. 😂 இன்னொன்றையும் இக் கட்டுரையில் சேர்த்திருக்கலாம். சர்க்கரை நோய் கண்டவுடன் சனி பகவானுக்கு நேர்த்தி வைத்து பூசைகள் செய்ய வேண்டும். ஏனென்றால் ... இப்படியான குப்பைகளை நம்பும் தமிழர்களும் உள்ளனர்.
Checked
Tue, 10/14/2025 - 09:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed