3 months 2 weeks ago
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445160
3 months 2 weeks ago
ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது. எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார். இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன. https://athavannews.com/2025/1445216
3 months 2 weeks ago
ICUவில் உயிருக்கு போராடிய ரணில்! 2 நாளில் எழுந்து வீடு சென்ற அதிசயம். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இவ்வாறு பல நோய் நிலமைக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு விரைவில் வீடு சென்றார். அது மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள எவ்வாறு திட்டமிட்டு இருந்தார் என்கின்ற பல கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
3 months 2 weeks ago
உண்மை, ஆனால் எங்கள் அரசியல்வியாதிகள் சிலருக்குப் புரியவில்லையே.
3 months 2 weeks ago
இப்ப நல்ல ஆரோக்கியமாக இருக்கின்ற கோத்தாவுக்கும், மைத்திரிக்கும்… இதயத்தில் அடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், கிட்னியில் கல்லு, மூத்திரம் போவதில் சிக்கல் என்று வியாதிகள் வர ஆரம்பிக்குமே. 😂 🤣
3 months 2 weeks ago
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) சீனா செல்கிறார். அங்கு, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அவர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பயணத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதால், இது டிரம்ப்புக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் கலந்துகொள்வது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-சீனா உறவில் ஒரு புதிய அத்தியாயம் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் சீன ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து ரகசிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த தொடர் பயணங்கள் மூலம் இரு நாடுகளும் உறவை புதுப்பித்து, அமைதிக்கு வழி வகுக்கின்றன. இந்தியாவின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை சீனா வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஷாங்காய் மாநாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளைத் தாண்டி, அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் தற்போது இந்தியா என மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதால், இது உலக அரசியலின் போக்கையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மாநாடாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/223754
3 months 2 weeks ago
பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் ஆவணத்துடன், இந்த விசா ரத்து நடவடிக்கை இணங்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது. அமைதி முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்காகவும், "பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கோரியதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக, இந்த அமர்வின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பிரான்ஸ் தலைமை தாங்குவதால் இந்தத் தடை வந்துள்ளதாக கருதப்படுகிறது முன்னதாக, ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், நாட்டின் தூதுக்குழுவின் தலைவராக, நியூயார்க்கில் நடைபெறும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் அப்பாஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். https://hirunews.lk/tm/417351/us-cancels-visas-of-palestinian-president-80-palestinian-officials
3 months 2 weeks ago
கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை செய்திகள் முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmexjjmlv003sqplp8xkhyrpm
3 months 2 weeks ago
முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளன. அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது வழக்கறிஞர்கள் அதற்கான தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். அவற்றில், மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமாணங்களும், கோட்டபாய ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பல மோசடிகளும் அடங்கும். இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “இது போன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். சந்தேகநபர் முன்னர் வகித்த பதவிகள் அத்தகைய சட்டச் செயல்பாட்டில் பொருத்தமானவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/முன்னாள்_ஜனாதிபதி_இருவரை_கைது_செய்ய_நடவடிக்கை!#google_vignette
3 months 2 weeks ago
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு - மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை! இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளனர். அவ்வாறான நபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களின் உறவினர்கள் நீண்ட காலமாக துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 வருடகாலத்துக்கும் மேலாக காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பில் அவர்கள் இறந்து விட்டதாக கருதப்பட்டு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் உறவினர்களின் துயரங்களை குறைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டோருக்கு_-_மரண_அத்தாட்சிப்_பத்திரம்_வழங்க_நடவடிக்கை!
3 months 2 weeks ago
தெரபிஸ்ட் ஆகலாம் போல இருக்கிறது🤣. அண்மையில் ஒரு குடும்ப நிகழ்வில் ஒருவரை சந்திக்க நேர்ந்த்து, அந்த நிகழ்வில் 3 மணித்தியாலத்திற்கு மேலாக இருக்கவேண்டியதாக இருந்தது. நல்ல மனிதர் படித்து உயர் பதவியில் இருக்கிறார், அவர் நீண்ட நேரம் தனது வெற்றிப்பயணம் (வேலை) தொடர்பாக பேசினார், அவர் ஆரம்பத்தில் எதிர்பார்த்த பிரிவு (ஒரே துறையில் வெவ்வேறுபட்ட பிரிவுகள் அந்த கற்கை நெறியில் உள்ளது) அவருக்கு கிடைக்கவில்லை அதனை ஒரு சவாலாக எடுத்து அவர் அவர் விரும்பிய துறையினை தெரிவு செய்தவர்களை விட நல்ல நிலையில் இருப்பதாக அவர் பேச்சின் சாரம்சம் இருந்தது (ஆனால் தற்போதும் மற்றவர்களின் மேல் அவருக்கு உடன்பாடில்லாமல் இருப்பதாக தோன்றியது). அவர் ஒரு அங்கீகாரத்தினை எதிர்பார்ப்பது போல இருந்தது அவரது பேச்சில் (, நீண்ட நேரம் பேசினார் நான் எதுவித இடைமறிப்பும் செய்யவில்லை; ஒரு கட்டத்தில் அவருக்கே அதிகமாக பேசிவிட்டது போல உணர்ந்து பேச்சை நிறுத்த முயன்றார், மீன்டும் அவரை அப்படி இல்லை என கூறி தொடரக்கூறினேன் கடைசியாக போகும் போது கூறினார் என்னுடன் பேசிய பின்னர் புத்துணர்ச்சியாக உணர்வதாக கூறினார், அந்த 3 மணிநேரத்திற்கு மேலான உரையாடலில் ஆரம்பத்தில் என்னை எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டார் அதற்கு நான் வேலை செய்யும் இடத்தின் பெயரை கூறினேன், அந்த ஒரு வார்த்தையும் இல்லை தொடருங்கள் என கூறிய வார்த்தைகள்தான் முழு சம்பாசணையில் நான் பேசியது.🤣 நான் சிறுவயதில் படித்த செக்கோவின் குதிரைக்காரன் கதைதான் என்னை இப்படி மாற்றியிருக்கலாமோ என கருதுகிறேன், அந்த கதையில் ஒரு குதிரைவண்டிக்காரரின் மகன் இறந்துவிட்டார், ஆனால் அவரின் கதையினை யாரும் காது கொடுக்கவில்லை, கடைசியாக தனது குதிரைக்கு அவர் கூறியபோது அது எதேச்சையாக தலையசைத்தது, தனது கதையினை குதிரை கேட்பதாக நினைத்து குதிரையிடம் தனது கதையினை கூறுவார். உலக மாற்றத்திற்கேற்ப எமது சிந்தனைகள் கருத்துக்கள் காலத்திற்கு காலம் மாறவேண்டும் அவ்வாறில்லாமல் மனலில் விளையாடும் குழந்தைகள் போல் உள்ளங்கையினை இறுகப்பிடித்தால் மண் விழாது என இறுக இறுக பிடிக்கும் போதுதான் மண் அதிகமாக கொட்டுப்படும், அதனால் இந்த சம்பாசணையினை இத்துடன் விட்டுவிடுகிறேன்.🤣
3 months 2 weeks ago
உக்ரேனின் மிகப்பெரிய உளவு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 03:18 PM உக்ரேன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல் கடற்படை கப்பல் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (29) அறிவித்தது. ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் உளவுத்துறைக்காக வடிவமைக்கப்பட்ட லகுனா-வகுப்பு, நடுத்தர அளவிலான கப்பல், டானூப் நதியின் டெல்டாவில் தாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி உக்ரேனின் ஒடெசா பிராந்தியத்தில் உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது. உக்ரேன் அதிகாரிகளும் கப்பல் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என உக்ரேன் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2019 இல் சிம்ஃபெரோபோல் கப்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உக்ரேன் கடற்படையில் இணைந்தது. https://www.virakesari.lk/article/223702
3 months 2 weeks ago
Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியது. நிலப்பரப்பு மற்றும் நன்கு அறியப்பட்ட ஆண் யானை ஆகியவற்றை வைத்து, இது மத்திய மாகாணமான லைக்கிபியாவில் உள்ள 'ஓல் ஜோகி' (Ol Jogi) சரணாலயத்தில் படமாக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது. கென்யா வனவிலங்கு சேவை (KWS) மற்றும் சரணாலய நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த நபர் விதிகளை மீறியுள்ளதாகவும், இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சரணாலய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். குறித்த நபர், மற்றொரு சரணாலயத்தில் காண்டாமிருகத்தைத் தொட்டு உணவளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார், இதுவும் விதிகளுக்கு எதிரானது. இந்த நடத்தை அந்த நபரின் உயிருக்கும், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாசாய் மாராவில் சுற்றுலாப் பயணிகள் காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, கென்ய சுற்றுலா அமைச்சு வனவிலங்கு பூங்காக்களில் கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223687
3 months 2 weeks ago
Published By: Vishnu 29 Aug, 2025 | 03:39 AM தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம். https://www.virakesari.lk/article/223647
3 months 2 weeks ago
பகிர்விற்கு நன்றி.
3 months 2 weeks ago
Published By: Vishnu 30 Aug, 2025 | 02:45 AM ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட வரும், கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223745
3 months 2 weeks ago
தாய்லாந்து பெண் பிரதமர் நீக்கம் - தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். 29 ஆகஸ்ட் 2025 தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெறிமுறையை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷினவத்ராவின் இந்த செயல் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனையே முக்கியமாகக் கருதி, நெறிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். இவர் தாய்லாந்து நாட்டின் இளம் தலைவராக அறியப்படுகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.இவருக்கு முன்பாக 2011 - 2014ஆம் ஆண்டில் இவரின் உறவினரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சி செய்தார். இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள். தாய்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார். பின் 2021ஆம் ஆண்டு ஃப்யூ தாய் (Pheu Thai) கட்சியில் சேர்ந்தார். 2023-இல் கட்சியின் தலைவரானார். கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு முதல் இருந்து அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்படும் 5வது பிரதமர் ஆவார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹுன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், அவரை 'அங்கிள்' என அழைத்த பேடோங்டார்ன், அவரின் தேவைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஹுன் சென்னிடம் தொலைபேசியில் பேசிய பேடோங்டார்ன், 'தாய்லாந்து ராணுவ தளபதி கூலாக தோன்றவே விரும்பினார்' எனக் கூறியுள்ளார். இது நாட்டின் அரசியல் செல்வாக்கு கொண்ட ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த தொலைபேசி அழைப்பை 'பேச்சுவார்த்தை யுக்தி' எனப் பேடோங்டார்ன் கூறினார். இனி ஹுன் சென்னுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் கூறினார். ஹுன் குடும்பத்துடனான ஷினவத்ராவின் நட்பு பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஹுன் சென்னும், பேடோங்டார்னின் தந்தை தக்ஷின் ஷினவத்ராவும் நல்ல உறவில் இருந்துள்ளனர். ஆனால் தொலைபேசி உரையாடல் கசிந்த பின், ஹுன் சென், தக்ஷின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். பேடோங்டார்ன் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். "ஆனால், தாய்லாந்தை சேர்ந்தவராக இந்த நாட்டுக்காக உழைக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களின் உயிர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பொதுமக்களும் சரி, ராணுவ வீரர்களும் சரி." எனக் கூறிய அவர், நான் ஹுன் உடனான உரையாடலில் சொந்த நலனுக்காக எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் "மக்களின் உயிர்களை காப்பாற்றவே நினைத்தேன். அந்த உரையாடலில் அதைதான் வலியுறுத்தினேன்" என்றார். இந்த தீர்ப்பு தாய்லாந்து அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓராண்டாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாடு, மதம், அரசாட்சியை மிகவும் நேசிக்கிறேன்" என்றார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார். பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியதால், துணை பிரதமர் பும்தாம் வேச்சயாசாய், இவருக்கு பதிலாக பிரதமராக (செயல்) பொறுப்பேற்பார். கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இவரே பிரதமராக செயல்பட்டு வருகிறார். பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly34v4z23do
3 months 2 weeks ago
29 Aug, 2025 | 05:26 PM (நா.தனுஜா) இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்தி உரையாற்றிய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது சுமை மிகுந்ததாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அந்த உறவுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நீதிகோரித் தொடர்ந்து போராடிவருவதாகத் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படாமல் நாடு என்ற ரீதியில் நிலையான வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ சாத்தியமில்லை எனவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எடுத்துரைத்தார். அதேபோன்று தற்போது யாழ். செம்மணியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியில் சிறுவர்களது மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களும், பாடசாலைப்புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இது மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மையில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டதை நினைவுகூர்ந்ததுடன் இம்மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் எனத் தெரிவித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, மனிதப்புதைகுழி அகழ்வு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணை என்பன உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயன்முறைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உரியவாறு உள்வாங்கப்பட்டு, பங்காளிகளாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பிரஸ்தாபித்தார். அத்தோடு 'நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்த வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒத்துழைப்புடன் செயலாற்றுவதன் ஊடாகவே அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும்' என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் இவ்விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படல் என்பன குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அவர், நீதியை நாடுவது என்பது ஒருபோதும் குற்றமாக இருக்கமுடியாது என்றார். 'குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முறையான விசாரணைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருக்கிறது. அதற்கமைய கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்' எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/223723
3 months 2 weeks ago
இந்த சின்ன வயதில் பழையபாடடை அருமையாக பாடுகிறார். பாராட்டுக்கள்.
3 months 2 weeks ago
உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி @Kavi arunasalam அண்ணை.
Checked
Tue, 12/16/2025 - 07:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed