புதிய பதிவுகள்2

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும்

3 months 2 weeks ago
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும் August 28, 2025 12:33 pm இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆணுறை பயன்பாடு குறித்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற, அறிவை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது. முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போது, அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட உயிரிமருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்காமல், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலம் HIV ஐத் தடுக்க முடியும் என மட்டுமே குறிப்பிடுகின்றன என்று ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். ஆணுறை ஊக்குவிப்புக் குழுவின் சமீபத்திய மதிப்பாய்வின் பிரகாரம், இந்த விவரங்கள் இல்லாதது மாணவர்களுக்கு முக்கிய தடுப்பு உத்திகள் குறித்து போதுமான அளவு தகவல்களை அளிக்கவில்லை என்பதை தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் IEC வலியுறுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார். 2024 உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) கண்டுபிடிப்புகள் சீர்திருத்தத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 63% மாணவர்கள் மட்டுமே HIV அல்லது AIDS பற்றி கேள்விப்பட்டதாகக் கூறியுள்ளனர். 2016 இல் 77% ஆக இருந்த இந்த தரவு தற்போது சரிவை சந்தித்துள்ளது. HIV தொற்றைத் தவிர்ப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2016 இல் 67.1% ஆக இருந்தது. 2024 இல் வெறும் 44.2% ஆகக் குறைந்துள்ளது. பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாணவர்களில் 4.6% பேர், சரியான நேரத்தில் கல்வி கற்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, சுகாதார மேம்பாட்டு பணியகம் யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைந்து, வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் ஒரு புதிய விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது. ஓர் உயிரியல்-உளவியல் சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டம் மாணவர்கள் நடத்தை அபாயங்களை சந்திப்பதற்கு முன்பு வயதுக்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் 264, STD கிளினிக்குகளால் நடத்தப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாக மருத்துவர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார். பாடத்திட்ட சீர்திருத்தத்துடன் ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள் எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார். அதேவேளை , இந்த முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://oruvan.com/awareness-about-condom-use-needs-to-be-included-in-sri-lankas-school-curriculum/

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 months 2 weeks ago
இந்தோனசியாவில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கையின் நம்பர் 1 பாதாள உலக கும்பலின் தலைவர் ஹெகல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சாலிந்த குழுவினரும் இலங்கைக்குகொண்டு வரப்படுகின்றனர். பாதாள குற்றக் கும்பல் முக்கியஸ்தர்களான கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.! Kunalan Karunagaran

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

3 months 2 weeks ago
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது. நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர். தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது. எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=338624

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 months 2 weeks ago
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது! கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444938

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

3 months 2 weeks ago
செம்மணி செல்லவுள்ளார் ஜனாதிபதி? 28 Aug, 2025 | 10:51 AM யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம். அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது. சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223557

களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக வைத்தியர் நந்தகுமார் இன்று கடமையேற்பு

3 months 2 weeks ago
களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக வைத்தியர் நந்தகுமார் இன்று கடமையேற்பு 28 Aug, 2025 | 12:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் கனகராஜா நந்தகுமார் இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக நேற்று புதன்கிழமை (28) கடமையேற்றுக்கொண்டார். வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த இவர் முன்னதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என பல பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுகாதார நிர்வாகத்துறையில் கடமையாற்றியதோடு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகியாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223564

கருத்து படங்கள்

3 months 2 weeks ago
வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

3 months 2 weeks ago
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி ஆலையடிவேம்பில் “நீதியின் ஓலம்” கையெழுத்துப் போராட்டம் 28 Aug, 2025 | 11:58 AM சர்வதேச நீதி கோரும் போராட்டமான 'நீதியின் ஓலம்' (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த சனிக்கிழமை (23) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பமானது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம்.எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவிக்கையில், இது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் செம்மணி போன்ற அவலங்களுக்கும் வீரமுனை, திராய்க்கேணி, உடும்பன்குளம், கல்முனை, காரைதீவு போன்ற பல இடங்களில் நடந்த படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள்தான் பொருத்தமானது. எனவே எமது மக்களும் அதைத்தான் கோருகிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் கையெழுத்துகளுடனான கோரிக்கைகளை ஐ.நா மன்றத்திற்கு அனுப்புவதற்கானதே இந்த கையெழுத்துப் போராட்டம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223565#google_vignette

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

3 months 2 weeks ago
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியின் அன்றைய நாளுக்கான செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை, மறுநாள் 02ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://athavannews.com/2025/1444982

வேலணையில் தீ!

3 months 2 weeks ago
வேலணையில் தீ! adminAugust 28, 2025 மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பி வாகனம் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர். இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றனர். பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை. இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219693/

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

3 months 2 weeks ago
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்! adminAugust 28, 2025 ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பயணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://globaltamilnews.net/2025/219695/

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

3 months 2 weeks ago
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்! வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது அவரது முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது. “வெற்றி நாள்” என்று அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சீனா நூற்றுக்கணக்கான விமானங்கள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் அண்மைய ஆயுதங்களை இதன்போது காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இராணுவத்தின் புதிய படை அமைப்பு ஒரு அணிவகுப்பில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த அணிவகுப்பில், தியனன்மென் சதுக்கத்தின் வழியாக பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லவுள்ளனர். இதில் சீன இராணுவத்தின் 45 பிரிவுகளின் வீரர்களும், போர் வீரர்களும் அடங்குவர். வியாழக்கிழமை (28) சீனாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பியோங்யாங்கின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பெய்ஜிங், அதன் அண்டை நாட்டின் பல தசாப்த கால பாரம்பரிய நட்புறவை பாராட்டியது, அத்துடன், இரு நாடுகளும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியது. இந்த நிலையில் கிம்மின் வருகை, 2015 இல் நடந்த சீனாவின் கடைசி வெற்றி தின அணிவகுப்பிலிருந்து ஒரு முன்னேற்றமாகும். இந்த அணிவகுப்பின் போது பியோங்யாங் அதன் உயர் அதிகாரிகளில் ஒருவரான சோ ரியோங்-ஹேயை பெய்ஜிங்கிற்கு அனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444965

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 months 2 weeks ago
மேலே அந்த படத்தில் உள்ள முன்நோக்கி ஓடுவதாக பேய் காட்டுகின்ற நாடுகளோடு சேர்ந்து ஓடுவதற்கு பொருத்தமானவர் தான் டொனால்ட் ரம்ப். அந்த நாடுகளின் வண்டவாளங்களை கற்று தெளிந்து அதில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள்.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 months 2 weeks ago
Here’s the current situation: Yes, Exxon Mobil is exploring a potential re-entry into Russia’s Sakhalin-1 oil and gas project, but no official deal is in place yet. These discussions are contingent on evolving geopolitical conditions and regulatory approvals. Here’s what’s happening in more detail: What’s Going On 1.Confidential Talks with Rosneft Exxon Mobil has conducted back-channel negotiations with Russia’s state oil giant Rosneft about possibly returning to the Sakhalin-1 project. These talks hinge on a potential peace process progress in Ukraine and would require approvals from both U.S. and Russian governments. 2. Legal and Political Conditions U.S. licenses from the Treasury Department allow Exxon to discuss “stranded assets” with Russian counterparts. Any formal re-entry would need U.S. government approval amid existing sanctions. 3. Russian Legal Framework On August 15, 2025, Russian President Putin signed a decree that conditionally reopens the Sakhalin-1 project to foreign investors—including Exxon—provided they: Supply foreign-made equipment, Assist in lifting Western sanctions, and Invest capital into the project. Russia also extended the deadline to 2026 for Exxon to claim its unclaimed stake in the project. 4. Strategic and Market Considerations Sanctions remain a significant obstacle, complicating any return even though Sakhalin-1 itself isn’t directly sanctioned. U.S. officials and the Trump administration have floated this as part of broader diplomatic incentives in Ukraine peace talks. On the other hand, some industry experts doubt a full-scale U.S. return, citing tremendous past losses and unstable political risks. ஆம் என்று தான் சாட் ஜிபிரியும் சொல்கிறது. இது தான் இந்தியாவின் குற்றச்சாட்டும். அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது. ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.

கற்க கசறும்

3 months 2 weeks ago
இங்கு வந்த பின்புதான் இந்தனை விதம் விதமான கிளிகள் பல வர்ணங்களில் இருக்கும் என அறிந்து கொண்டேன், வீட்டில் இந்த கிளிகள் பாண், பிஸ்கட் என்பன உண்பதற்காக வருகின்றன, மழைகாலங்களில் அவை அதிகமாக வரும். வீட்டில் இருக்கும் பாதுகாப்பு இரும்புக்கதவை மனிதர்கள் தட்டுவது போல பலமாக தட்டும், இரவு வேலை முடித்துவிட்டு உறங்கும் நேரத்தில் அவற்றின் தொல்லை இருக்கும், ஆனால் கண்டு கொள்வதில்லை, குழந்தைகளின் கைகளில் இருந்து பிஸ்கட்டினை வாங்கி உண்ணும் அதனால் எனக்கு பிஸ்கட் கிடைப்பதில்லை.🤣

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 months 2 weeks ago
ஆனால் அமெரிக்காவிற்கு இலவச எரிபொருள் கிடைக்கிறது🤣, தற்போது அமெரிக்க நிறுவனமான எக்சன் மொபில் இரஸ்சியாவிலும் இரஸ்சிய ஆதரவுடன் வடதுருவத்தில் எரிபொருள் எடுக்கவுள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றனவே?
Checked
Mon, 12/15/2025 - 22:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed