3 months 2 weeks ago
31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர். தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229190
3 months 2 weeks ago
ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு 2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎
3 months 2 weeks ago
இதை நான் வழிமொழிகிறேன். மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும். முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது. எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால், அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம். பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும். எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம். நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும். வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும். இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன். இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும். இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.
3 months 2 weeks ago
கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்ப்பு.! கிளிநொச்சி - உருத்திரபுரத்தைச் சேர்ந்த, சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சு*டப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் இருந்ததாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர் காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். நம்ம யாழ்ப்பாணம்
3 months 2 weeks ago
அலிசா ஹீலி விளையாடாமல் விட்டிருந்தால் ஆஸ்திரேலியா இலகுவாக வென்றிருக்கும். 😞
3 months 2 weeks ago
எங்களோடை சரிக்குச் சமன் இவங்களாலை நிக்கமுடியுமே! அதுவும் சுத்த வடமராட்சி ஆக்களோட!🤓
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் இலஞ்ச விவகாரத்தில் சிக்குபட்டார்...📍 இடத்திற்கான உரிமத்தை பெற்றுதருவதாகக் கூறி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தை பெற்ற சந்தர்ப்பத்தில், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் இன்று (31) முற்பகல் குச்சவெளி பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Lanka Truth தமிழ் ·
3 months 2 weeks ago
யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிப்பு..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர். பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Sakthi FM
3 months 2 weeks ago
பொலிஸ் முஸ்தீபு - தமிழை கொல்கிறார்கள். நூறாண்டு கால பாரம்பரியம் உள்ள வீரகேசரி எழுதும் தலையங்கம் இந்த கேவலத்தில் உள்ளது.
3 months 2 weeks ago
31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk
Checked
Fri, 02/20/2026 - 13:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed