தமிழகச் செய்திகள்

சென்னை: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

1 month 2 weeks ago
சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. அதில் என்ன பிரச்னை?

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று காலையில் சுமார் 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் அனுப்பப்பட்டது.

அந்த மின்னஞ்சலில், "உங்கள் பள்ளிக்கூடத்தில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எந்தப் பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை எடுக்கக்கூடியவை. நேரம் குறைந்துகொண்டே வருகிறது.

உடனடியாக எல்லோரையும் கட்டடத்தில் இருந்து வெளியேற்றவும். இல்லாவிட்டால் இந்தத் துயரத்தைத் தவிர்க்க முடியாது. இது ஒன்றும் வேடிக்கையல்ல. உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

எல்லாக் குழந்தைகளின் உயிரும் இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. காவல்துறையை உடனடியாக அழைத்து, இந்தத் துயரத்தை நிறுத்தவும்," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 
சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலில் ஆறு பள்ளிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. அந்தந்தப் பள்ளிக்கூடங்களில் இருந்த மாணவர்களின் பெற்றோருக்கு செய்தி அனுப்பப்பட்டு, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிறகு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து வந்து சோதனை நடத்தியது. இதற்குப் பிறகு மேலும் 7 பள்ளிகளுக்கும் இதேபோல மின்னஞ்சல் மிரட்டல் வந்தது. அங்கேயும் காவல்துறை சோதனைகளை நடத்தியது.

ஆனால், இந்தச் சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தபோதும், நகரம் முழுவதும் இந்தச் செய்தி பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவொரு பொய்யான மிரட்டல் என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை அறிவிப்பை வெளியிட்டபோதும், பதற்றம் நீங்கவில்லை. பிற்பகல் இரண்டு மணி வரை இந்தப் பதற்றம் நீடித்தது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னையின் கூடுதல் ஆணையர் பிரேம் சின்ஹா, ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்துதான் எல்லாப் பள்ளிகளுக்கும் மிரட்டல் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 
சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெடிகுண்டு மிரட்டலை அனுப்ப, jhonflow1@protonmail.me என்ற மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மிகச் சிக்கலான வழக்கு என்பதால், முழுமையான விவரங்களை இப்போது வெளியிட முடியாது எனக் கூறியிருக்கிறார்.

ப்ரோட்டோன் மின்னஞ்சல் சேவையைப் பொறுத்தவரை, முழுமையான என்க்ரிப்ஷனை (End to End encryption) பயன்படுத்தி வருகிறது. இதனால், இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். ப்ரோட்டோன் மெயிலின் அலுவலகங்கள் மற்றும் சர்வர்கள் ஸ்விட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தனியுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையானவை என்பதால், மின்னஞ்சலைப் பயன்படுத்துவோர் குறித்த தகவலைப் பெற அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே கோரிக்கைகளை அனுப்ப வேண்டியிருக்கும்.

 
சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஜிமெயில், அவுட்லுக் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பினால், உடனடியாக அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்குக் காரணம், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கின்றன.

ஆகவே அவை இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அவற்றிடம் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்தால் 36 மணிநேரத்தில் தகவல்களைத் தந்துவிடுவார்கள். ஆனால், ப்ரோட்டோன் மெயில் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

ஆகவே, இதுபோன்ற கோரிக்கைகளை அவர்கள் பரிசீலிக்கவே மாட்டார்கள். இதனால் இன்டர்போல் மூலமாகத்தான் தகவலைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு சற்றுத் தாமதமாகிறது. இன்டர்போல் மூலம் செல்லும்போது 15 - 20 நாட்களுக்குள் தகவல் கிடைத்துவிடும்," என்கிறார் சைபர் குற்றப்பிரிவு வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

சென்னை நகர காவல்துறையின் இன்டர்போலுக்கான நோடல் அதிகாரி மூலம், இந்த மின்னஞ்சல் முகவரியின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c3gd4e8r3rro

India Today Survey: தமிழ்நாட்டில் திமுக முந்துகிறதா? | தெலங்கானா, கர்நாடகாவில் என்ன நிலவரம்?

1 month 2 weeks ago

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில், இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் பா.ஜ.க தலைமையில் ஆளும் NDA கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் INDIA கூட்டணியும் களமாடி வருகின்றன.

 
பா.ஜ.க - காங்கிரஸ்
 
பா.ஜ.க - காங்கிரஸ்
 

இந்த நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம், இந்தியா முழுவதும் மூட் ஆஃப் தி நேஷன் ( Mood of the Nation) என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024 வரை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், 35,801 பேரை பங்கேற்பாளராகக் கொண்டு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை மக்களவை இடங்கள், எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளையும் தற்போது இந்தியா டுடே அறிவித்திருக்கிறது.

அதன் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்:-

 

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், தி.மு.க அங்கம் வகிக்கும் INDIA கூட்டணி வெற்றி பெறலாம்.

வாக்கு சதவிகிதம்!

INDIA கூட்டணி - 47 சதவிகிதம்

NDA கூட்டணி - 15 சதவிகிதம்

மற்றவை - 38 சதவிகித வாக்குகளைப் பெறக்கூடும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 
  • 2/2
     
  • 1/2
    vikatan%2F2024-02%2F38bf7984-7dfb-4073-b603-557148ca147c%2Ftn_elect.PNG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
  • 2/2
     
  • 1/2
     
 

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் மம்தா பானர்ஜி தலைமையிலனா திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பா.ஜ.க 19 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெறும் என முடிவு வெளியாகியிருக்கிறது.

வாக்கு சதவிகிதம்!

திரிணாமுல் காங்கிரஸ் - 53 சதவிகிதம்

பா.ஜ.க - 40 சதவிகிதம்

மற்றவை - 7 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது.

 

கேரளா:

கேரளாவில் இருக்கும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், INDIA கூட்டணி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு சதவிகிதம்!

INDIA கூட்டணி - 78 சதவிகிதம்

NDA கூட்டணி - 17 சதவிகிதம்

மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 
  • 2/2
     
  • 1/2
    vikatan%2F2024-02%2F486ebcc5-99b7-4608-a785-09e1e1b6d1c6%2Fkerala.PNG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
  • 2/2
     
  • 1/2
     
 

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

வாக்கு சதவிகிதம்!

தெலுங்கு தேசம் கட்சி - 45 சதவிகிதம்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி - 41 சதவிகிதம்

INDIA கூட்டணி - 3 சதவிகிதம்

NDA கூட்டணி - 2 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 

கர்நாடகா:

கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 24 இடங்களிலும், INDIA கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.

வாக்கு சதவிகிதம்!

NDA கூட்டணி - 53 சதவிகிதம்

INDIA கூட்டணி - 42 சதவிகிதம்

மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 
  • 1/1
     
  • 1/1
    vikatan%2F2024-02%2Fc6d63b24-d00f-4eb4-8938-4325ffcd955b%2Fkarna.PNG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
  • 1/1
     
 

தெலங்கானா:

தெலங்கானாவில் இருக்கும் 17 மக்களைவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 10 இடங்களிலும், NDA கூட்டணி 3 இடங்களிலும், முன்னாள் முதல்வர் கே.சி.ஆர்-ன் பி.ஆர்.எஸ் 3 இடங்களையும், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 1 இடத்தையும் கைப்பற்றலாம்.

வாக்கு சதவிகிதம்!

காங்கிரஸ் - 41.2 சதவிகிதம்

பி.ஆர்.எஸ் - 29.1 சதவிகிதம்

பா.ஜ.க - 21.1 சதவிகிதம்

மற்றவை - 9.6 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 

உத்தரப்பிரதேசம்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் 80 இடங்களில், NDA கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெறலாம். INDIA கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு சதவிகிதம்!

NDA கூட்டணி - 52 சதவிகிதம்

INDIA கூட்டணி - 36 சதவிகிதம்

மற்றவை - 12 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது.

 
  • 2/2
     
  • 1/2
    vikatan%2F2024-02%2F6d4abb72-310d-4f71-a4c6-98601d871782%2Futtar.PNG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
  • 2/2
     
  • 1/2
     
 

டெல்லி:

டெல்லியில் இருக்கும் 7 மக்களவைத் தொகுதிகளையும் NDA கூட்டணி கைப்பற்றக்கூடும்.

வாக்கு சதவிகிதம்!

NDA கூட்டணி - 57 சதவிகிதம்

INDIA கூட்டணி - 40 சதவிகிதம்

மற்றவை - 3 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 

பீகார்:

பீகார் மாநிலத்தில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளில், NDA கூட்டணி 32 இடங்களையும், INDIA கூட்டணி 8 இடங்களையும் கைப்பற்றலாம். (இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024-க்கு இடையில் நடத்தப்பட்டது. எனவே, கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை)

வாக்கு சதவிகிதம்!

NDA கூட்டணி - 52 சதவிகிதம்

INDIA கூட்டணி - 38 சதவிகிதம்

மற்றவை - 10 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 
  • 1/1
     
  • 1/1
    vikatan%2F2024-02%2F8921d5ca-5489-4173-b605-7cf404659a82%2Fbihar.PNG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
  • 1/1
     
 

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் இருக்கும் 48 தொகுதிகளில் INDIA கூட்டணி 26 தொகுதிகளிலும், (காங்கிரஸ் - 12, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா + சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14) NDA கூட்டணி 22 தொகுதிகளையும் கைப்பற்றும்.

வாக்கு சதவிகிதம்!

INDIA கூட்டணி - 45 சதவிகிதம்

NDA கூட்டணி - 40 சதவிகிதம்

மற்றவை - 15 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

 
இந்தியா டுடே - மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின்படி, பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைத் தாண்டி 335 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதேபோல காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

எதுவுமே நிரந்தரமல்ல...................

1 month 3 weeks ago
எதுவுமே நிரந்தரமல்ல
 
சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது:
 
"செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு துணி வேணாமா? சாப்பிடறதுக்கு பணம் வேணாமா? வீட்டில வளர்க்கிற நாய்க்குகூட வேளாவேளைக்கு சாப்பாடு போடுவாங்க. தேசத்துக்காக நாங்க எவ்வளவு பண்ணறோம். எங்களுக்கு என்ன பண்ணிச்சு தேசம்? கவர்மெண்ட் எங்களை ஜெயில்ல வைப்பாங்களா? வீடு கூட ஜெயில் மாதிரிதான் இருக்கு. இருக்கு! சாப்பிடறதுக்கு இருக்கு! பிச்சை எடுக்கறதுக்கு இன்னும் . . . . . ", இப்படி பேசிக்கொண்டே சென்றார்.
 
பல மொழிகளில் நாற்பதாயிடம் பாடல்களுக்கு மேல் பாடியவர். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாடி வந்துள்ளார். அந்த கானக்குயிலின் குரல் பல நாட்கள் நம் கவலைகளை மறந்து உறங்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் பி. சுசீலாவின் குரலை கேட்காமலோ, முணுமுணுக்காமலோ ஒரு நாள்கூட நாம் கடந்துவிட முடியாது. தவிர்க்க முடியாத இசையரசியாக வாழ்ந்தவர், இன்று தொலைந்துபோன தன் முகத்தை இன்றைய சமுதாயத்தில் தேடிக்கொண்டிருக்கிறார். இவரைப் போலவே தன் முகத்தை தொலைத்த பல பெரிய மனிதர்களை இன்றும் பார்க்கிறோம். சிலர் வெளிப்படையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னமும் 'முன்னால்' சிந்தனையோடு இந்நாளும் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
 
சமீபத்தில் கிராமத்து கோவிலில் ஒரு பெரியவரை சந்தித்தேன். நெற்றியில் விபூதிப்பட்டை. பார்ப்பதற்கு எளிமையான தோற்றம். அவரின் படிப்பறிவை அனுமானிக்க முடியாத தோற்றம். மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சர்யத்தில் தள்ளியது. அவர் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
"நான் சர்வீஸ்ல இருக்கும் போது என்னைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாரைப் பார்த்தாலும் இவனுக்கு நம்மைவிட அதிகம் தெரியாது என்று நினைக்கத் தோன்றும். சிறிய தவறுக்கும் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றும். கோபமே பணியாளர்களை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் என்று நினைப்பேன். பணியின் கடைசி நாளில் கல்கத்தாவிலிருந்து ரசகுல்லா வாங்கி வந்து அழகாக பேக் செய்து எல்லா பணியாளர்களின் மேஜைக்கும் அனுப்பிவைத்தேன்.
 
மாலை பிரிவு உபசார விழா நடந்தது. அது முடிந்ததும் என் இருக்கைக்கு வந்து கடைசியாக ஒரு முறை அமர்வதற்காக வந்தேன். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய மேஜை முழுவதும் ரசகுல்லா நிரம்பியிருந்தது. யாருக்கெல்லாம் நான் கொடுத்தேனோ, அவர்கள் எல்லாம் மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் கோபத்தை வெளிபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நாளை நான் எதிர்பார்க்கவில்லை. பிறகு அங்கிருந்து வந்து இந்த கிராமத்தில் தங்கிவிட்டேன். என்னை மறைத்துக்கொள்ள இந்த கிராமமும், பக்தியும் எனக்கு உதவுகிறது, என்றார் அந்த மனிதர்.
 
எல்லாம் முடிந்தபிறகு உணர்ந்துகொள்வது அடுத்தவரின் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு பாடமாக உதவலாம். அது நமக்கு எந்த வகையிலும் உதவாது.
 
அட்டென்ஷன் சீக்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தனிமை, வருத்தம், தன்னம்பிக்கை இழந்த நிலை, இன்னும் சிலருக்கு பொறாமை, இவையெல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பலருக்கு இருப்பதை பார்க்கிறோம். அவர் குடும்பத்தோடுதான் இருக்கிறார். அதெப்படி தனிமை என்று சொல்ல முடியும்? உண்மையில் அதுவும் தனிமைதான். சுற்றி பலர் இருந்தாலும், அந்த கூட்டத்தினிடையே தன்னை தனிமையாக உணரும் நிலை அது. ஒரு காலத்தில் எதையெல்லாம் சாதனை என்று நினைத்தோமோ அவையெல்லம் இன்றைய நாளின் நினைவுகளாய், சோதனைகளாக மாறிப்போயிருக்கும். ஒரு குட்டிக்கதை.
 
ஒர் முதிர்ந்த அரசன். வயது தொன்னூறு. ஒருநாள் இளவரசன் அவரிடம் வந்து,
தந்தையே! எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. எல்லோரும் என்னை இளவரசே என்று தான் அழைக்கிறார்கள். எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி, 'பதினெட்டுவயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டேன்', என்றுபெருமையாக சொல்வீர்களே! அதே போன்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லையே! எனக்கு எப்போது முடிசூட்டப்போகிறீர்கள்? என்று கேட்டான்.
 
அரசன் பதிலளித்தான்.
 
மகனே! பல காலங்களுக்கு முன் ஒரு சாதுவை சந்தித்தேன். நான் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வேன் என்று எனக்கு வரமளித்திருக்கிறார். அரசன் என்ற பதிவியில்லாமல் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. ஆகையால், உன்னுடைய ஆசையை விட்டுவிடு என்று சொன்னான் அரசன்.
 
அதிர்ந்துபோனான் இளவரசன். அடுத்த நாள் காலை. தனது ஆதரவாளர்களுடன் அரண்மனைக்குச் சென்றான். தூங்கிக்கொன்டிருந்த அரசனை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தான்.
 
இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அரசனை சந்திக்க சாது வந்தார்.
 
'சாதுவே! என் நிலையைப் பார்த்தீர்களா? இந்த நாட்டையும், மக்களையும் சிறப்பாக ஆட்சி செய்தேன். ஆனால், இன்று வீட்டுச் சிறையில் இருக்கிறேன். எனக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் குரலெழுப்பவில்லை', என்று வருத்தப்பட்டார்.
அதோடு நிற்காமல் தான் செய்த சாதனைகளையெல்லாம் சாதுவிடம் சொல்லி புலம்பினார்.
 
'சாதுவே! என் ஆயுள் நூற்றி ஐம்பது வருடங்கள் என்று வரமளித்திர்கள். அன்று அது வரமாகத் தெரிந்தது. இன்று அது சாபமாகத் தெரிகிறது. எந்த முக்கியத்துவமும் இல்லாமல் எப்படி அடுத்த அறுபது ஆண்டுகள் உயிர்வாழ்வது? என்னுடைய மனைவிகள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள். என் மகன் என்னை புறக்கணித்துவிட்டான். நான் உங்களிடம் வரம் கேட்கும் போதே அந்த வரத்தில் ஒளிந்திருக்கும் இந்த மோசமான நிலையை எனக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா? நீங்கள் எனக்கு அளித்தது வரமல்ல. சாபம்', என்று வருத்தப்பட்டான் அரசன்.
 
'அரசனே! ஒரு மனிதனின் ஆயுட்காலம் வயதோடு தொடர்புடையது. அதில் குறிப்பிட்ட சில வருடங்களை சாதனைக்காலம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல, அந்தக்காலம் நீங்கள் செய்த சாதனைக்கானது என்றால், அந்தச் சாதனைகளையெல்லாம் நீங்களே செய்தீர்கள் என்றால், இன்று அது உங்களுடனே இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லையே! இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சாதனைகளை செய்வதற்கான காலத்தின் கருவியே நாமெல்லாம். உயர்ந்த நிலையை அடையும் போது,
 
இது நிரந்தரமானதல்ல என்பதை நீங்கள் உணரவில்லை. "நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி ஒரு மோசமான நிலை நமக்கு வரும் என்று கணிக்கத் தவறியவனும், மோசமான நிலையில் இருக்கும் போது வாழ்ந்து முடித்த நாட்களே உயர்ந்தது என்று கணக்குப்போடுபவனும் நிம்மதியாக வாழமுடியாது". ஆகையால், பிரச்னையோ அல்லது அதன் தீர்வோ எல்லாமே நம் மனத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுமே மாயைதான். இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் இறந்த காலத்தை உயர்ந்த காலம் என்று சொல்லமாட்டார்கள்.
 
நிகழ்காலத்தை ரசிக்கின்ற ஒருவனே வாழ்க்கையின் கடைசி நாள்வரை நிம்மதியாக வாழ்கிறான். இதை உணராதவனின் வரங்கள் எல்லாமே சாபமாகிறது, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது
அரசன் சிறையில் இருக்கும் நிகழ்காலம் ரசிக்க வேண்டிய விஷயமல்ல. ஆனால், இந்த நிலையை இறந்தகாலத்தில் உணர்ந்திருந்தால், அதை அரசன் தவிர்த்திருக்கலாம். இராமாயணத்தில், தசரதன், தன் தலையில் முதல் நரை முடியைப் பார்த்தவுடன், ராமனுக்கு முடிசூட்ட விரும்பினான் என்று படித்திருக்கிறோம். இருக்கும் வரை தான் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்று தசரதன் நினைக்கவில்லை. தன்னைச் சார்ந்தவர்களை அமர்த்தி அழகு பார்க்கும் பக்குவம் அவனிடம் இருந்தது. இந்தப் பக்குவம் மொகலாய பேரரசர் ஷாஜகானிடம் இல்லை.
 
அதனால்தான் அவனுடைய கடைசி நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை அவனது மகன் ஒளரங்கசீப் ஏற்படுத்தினான்.
இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷங்கள் இரண்டு.
 
ஒன்று, உயர்ந்த நிலயாகக் கருதப்படும் நிலையிலிருக்கும் போது அது நிரந்தரமல்ல என்பதை உணருதல்.
 
மற்றொன்று, தனக்கு மட்டுமே எல்லாக் காலங்களிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
 
"அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்", என்று இதற்கு ஒரு பெயரிட்டு உலவியல் ரீதியாக இதை அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடந்துதான் தீரவேண்டும். இந்த நிலையை கடப்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு உதவியாக இருந்தது இறைநம்பிக்கை, பக்தி. உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்ட காலங்களிலும், நலிவடைந்த நிலை என்று சொல்லப்பட்ட காலத்திலும் நம்முடன் இணைந்திருக்கும் ஒரே இணைப்பு பக்தி.
 
ஒன்றை உதற வேண்டுமென்றால், மற்றொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எந்த நேரமும் இறைநம்பிக்கையை பிடித்துக் கொண்டவனுக்கு மற்ற விஷயங்கள் நிரந்தர பிடிப்பை ஏற்படுத்தாது.
 
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய நிலைக்கு என்ன பெயர் வைத்தாலும் சரி, அல்லது அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றே வைத்துக் கொண்டாலும் சரி, அவர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது. ''உயர்ந்த மனிதன்'' என்ற திரைப்பத்தில் அவருக்கு தேசிய விருதுபெற்றுத் தந்த அந்தப் பாடல் வரிகள் என்றும் இளமையானவை. அவை நம் நினைவிற்கு வருகிறது. முகம் தெரியாத காதலனுக்காக பாடுவதாக அந்தப்பாடல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்காகத்தான் பின்னணி பாடகர்களுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றார் திருமதி. பி. சுசீலா. ஐந்து முறை தேசிய விருதும் பெற்றவர்..
 
நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா . . .
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. . . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு. . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு . . .
 
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய தனிமைக்காக தென்றல் நின்று போனாலும் வருத்தத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் அவருக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
 
(Bala shares..........))
May be an image of road, fog and street
 
 
 
 

திருப்பூர்: தீண்டாமைச் சுவரா? பாதுகாப்புச் சுவரா? - பிபிசி கள ஆய்வு

1 month 3 weeks ago
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

சர்ச்சைக்குரிய சுவரை ஏறி குதிக்கும் சிறுமி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச. பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, "தீண்டாமைச் சுவரால் அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக" பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அது தீண்டாமைச்சுவர் அல்ல, குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர் என எதிர்தரப்பும் புகார் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை கண்டறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் ஊராட்சியின் தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர்.

‘‘இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது. இதனால், தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானதால், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

 

குன்னத்தூர் சாலையின் ஓரத்தில் தேவேந்திரன் நகர் அமைந்திருக்கிறது. அந்த நகருக்கும் வி.ஐ.பி கார்டனுக்கும் மத்தியில், அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதி எம்எல்ஏவுமான தனபால் தொகுதி மேம்பாட்டு நிதி 8.5 லட்சம் ரூபாயில், ஊராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் ஒரு பகுதியில் தான் அந்தச்சுவரும் அமைந்திருக்கிறது.

நாம் தேவேந்திரன் நகருக்குள் சென்றதும் சில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அந்தச்சுவரின் மீது ஏறிக்குதித்து வி.ஐ.பி நகருக்குள்ளும், மறுமுனையில் இருந்து தேவேந்திரன் நகருக்குள்ளும் வந்து சென்றனர்.

தேவேந்திரன் நகரில் சிலரிடம் சுவர் குறித்தும் சுவரை மக்கள் தாண்டிக்குதிப்பதையும் பற்றி விசாரித்தோம்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

20 ஆண்டுகளாக கோரிக்கை விடுப்பதாக குமரேசன் கூறுகிறார்.

‘20 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கிறோம்’

பிபிசி தமிழிடம் பேசிய தேவேந்திரன் நகரைச்சேர்ந்த குமரேசன், ‘‘300-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் தேவேந்திரன் நகருக்குள் குடியிருக்கிறோம். வி.ஐ.பி கார்டன் பகுதியில் மனை இடங்கள் உருவாக்கப்பட்ட போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்பைச்சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6-7அடி உயரத்துக்கு இந்த தீண்டாமைச்சுவரை கட்டினர். அப்போதே நாங்கள் எதிர்த்தும் எந்தப்பயணும் இல்லை.

எங்கள் பகுதியிலுள்ள அரசு ரோட்டின் அருகேயுள்ள வி.ஐ.பி கார்டன் அரசு ரோடுகளை பயன்படுத்தி 2-3 நிமிடங்களில் சேயூர் பேருந்து நிலையம் செல்ல முடியும். ஆனால், இந்தச்சுவர் அகற்றப்படாமல் உள்ளதால், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி நாங்கள் பேருந்து நிலையம் செல்கிறோம். சுவரின் அருகே அந்தப்பக்கம் இருக்கும் சேவை மையம் செல்லவும், ரேஷன் கடைக்கும் செல்லவுமே நாங்கள் பல தொலைவு நடக்க வேண்டியுள்ளது,’’ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘நாங்கள் பலமுறை இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். விசாரணை நடத்திய முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள், ‘உடனடியாக தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்தித்தர சேயூர் ஊராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என பதிலளித்து உள்ளனர்.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்த வேண்டுமென ஊராட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சுவர் இன்னமும் அகற்றி பாதை ஏற்படுத்தப்படவில்லை,’’ எனக்கூறினார்.

மேலும், நம்மிடம் முதல்வரின் தனிப்பிரிவு பதில் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு தொடர்பான ஆவணங்களை காண்பித்தார்.

 
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

அரசு ரோட்டில் ஏன் சுவர் இருக்க வேண்டும் என மனோன்மணி கேள்வி எழுப்புகிறார்.

‘அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்’

பிபிசி தமிழிடம் பேசிய மனோன்மணி, ‘‘வி.ஐ.பி நகரில் இருக்கும் மூன்று ரோடுகளை அரசிடம் ஒப்படைத்து தான் மனையிடத்தை உருவாக்கியுள்ளனர். அரசு அமைத்துள்ள இந்த மூன்று ரோடும் நாங்கள் இருக்கும் தேவேந்திரன் நகரில் எம்.எல்.ஏ நிதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோட்டுக்கு வருமாறு தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு அரசு ரோடுகளுக்கு மத்தியில் சுவர் இருக்கிறது. அரசு ரோட்டில் சுவர் ஏன் இருக்க வேண்டும்?"

"எங்கள் பகுதி ரோட்டுக்கு அந்தப்பக்கம் வி.ஐ.பி கார்டன் அரசு ரோட்டின் ஓரம் சேவை மையம் உள்ளது. இதைப் பயன்படுத்தவும் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி வி.ஐ.பி கார்டனுக்குள் வந்து சேவை மையத்தை பயன்படுத்த வேண்டுமா? சுவரை முழுமையாக அகற்ற வேண்டுமென நாங்கள் கூறவில்லை, மூன்று அரசு ரோடு இணையும் பகுதியில் 5 அடிக்கு சுற்றுச்சுவரை இடித்து வழி ஏற்படுத்தித்தர அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள்,’’ என்றார் மனோன்மணி.

 
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

வி.ஐ.பி நகருக்குள் தான் வேலைக்கு செல்வதாக கோவிந்தராஜ் கூறுகிறார்.

‘வி.ஐ.பி நகருக்குள் தான் வேலைக்கு செல்கிறோம்’

நாம் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது வி.ஐ.பி நகரில் இருந்து சுவரை ஏறிக்குதித்து வந்த கோவிந்தராஜிடம் பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘தேவேந்திரன் நகருக்குள் வசிக்கும் நான் வி.ஐ.பி கார்டன் பகுதிக்குள் செயல்படும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறேன். சுவரை தாண்டாமல் சாதாரண ரோட்டில் நடந்து சென்றால், கம்பெனிக்கு செல்ல 20 நிமிடங்கள் ஆகிவிடும். உணவு இடைவேளையில் சீக்கிரம் வந்து செல்ல சுவர் ஏறிக்குதிக்கிறேன். இப்படி வந்தால் நான் வீட்டுக்கு வர, 3 நிமிடங்கள் கூட ஆகாது,’’ என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த கோவிந்தராஜ், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை விட அதிக பனியன் கம்பெனிகள் உள்ளன. இங்கு எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் தான், 90 சதவீத தொழிலாளர்களாக உள்ளனர். இந்தச்சுவரை நான் மட்டுமல்ல, பெண் பணியாளர்களும் ஏறிக்குதித்து தான் கடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சுவரை ஏறிக்குதித்து தான் பேருந்து நிலையம் செல்கின்றனர்,’’ எனக்கூறினார்.

மேலும், தாங்கள் ஏறிக்குதிப்பதால் அந்த சுவற்றில் ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும், அதில் காலை வைத்து தான் அனைவரும் ஏறிக்குதிப்பதாக நம்மிடம் சுவற்றையும் காண்பித்தார்.

 
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

சுவர் அருகே உள்ள அரசு சேவை மையம்

‘நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம்’

தேவேந்திரன் நகர் மக்கள் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து வி.ஐ.பி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த கோவிந்தசாமியிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் 72 மனையிடங்கள் உள்ளன. 2006-ல் இருந்து இங்கு மக்கள் மனையிடங்கள் வாங்கி வசித்து வருகின்றனர். நாங்கள் மனையிடம் வாங்கும் போது வி.ஐ.பி கார்டன் உருவாக்கிய நான்கு பேரும், இந்த நான்கு பேரிடம் விவசாய பூமியை வாங்கியுள்ள கே.சி.பழனிசாமியும் இணைந்து இந்த சுற்றுச்சுவரை பாதுகாப்புக்காக கட்டியுள்ளனர். அதுவும் கே.சி பழனிசாமி என்பவரின் இடத்தில் தான் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்தச்சுவர் எங்கள் பகுதிக்கு பாதுகாப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரோடு பழனிசாமிக்கு சொந்தமானது என அவர் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த கோவிந்தசாமி, ‘‘சில நாட்களாக இந்தச்சுவரை தீண்டாமைச்சுவர் என, அரசு அதிகாரிகளும், தேவேந்திரன் நகரை சேர்ந்தவர்களும் தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது. புகார் தெரிவிக்கும் தேவேந்திரன் நகரைச் சேர்ந்தவர்களின் உறவினரான ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் கூட எங்கள் பகுதியில் வசித்து வருகிறார், குடியிருப்பு சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம், எங்களை குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பது, தீண்டாமை எனக்கூறுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்துள்ளோம்,’’ என்கிறார் அவர்.

 
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

சுவர் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியின் உத்தரவு

‘மக்கள் நடக்கும் ரோடு எனக்கு சொந்தமான இடம்’

இந்த நிலையில், தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு சாலையே தனது சொந்த நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் கே.சி.பழனிசாமி.

இது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த கே.சி.பழனிசாமி, ‘‘5.6 ஏக்கர் நிலம் ராவாளன், சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம் மற்றும் நடராஜன் ஆகியோருக்குச் சொந்தமானது. இதில், 4 ஏக்கர் நிலம் வி.ஐ.பி கார்டன் மனையிடமாக மாற்றப்பட்டது, 1.6 ஏக்கர் நிலத்தை நான் இந்த நான்கு பேரிடம் இருந்து விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். வி.ஐ.பி கார்டன் பகுதிக்கும் தேவேந்திரன் நகர் பகுதிக்கும் இடையில் இருக்கும் சுவர் மற்றும் அந்த வழித்தடம், எனக்கும் இந்த நால்வருக்கும் கூட்டாக பாத்தியப்பட்டது."

"அந்த மக்களின் நலன் கருதி பெருந்தன்மையாக அந்த இடத்தில் அவர்கள் நடந்து செல்ல அனுமதித்தேன். இன்று தீண்டாமை எனக்கூறி அவர்கள் புகார் தெரிவித்துள்ளது எனக்கு மன உளைச்சலை தருகிறது. அந்த இடம் எனக்குச்சொந்தமானது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது,’’ என்றார்.

கே.சி.பழனிசாமி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பிப்ரவரி 5-ம் தேதி மனுவும் கொடுத்துள்ளார்.

 
திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை
படக்குறிப்பு,

சுவர் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு

அரசு என்ன சொல்கிறது?

‘ஒரு தரப்பு சுவரை தீண்டாமைச்சுவர் என்கிறார்கள், மறு தரப்பு பாதுகாப்புச்சுவர் என்கிறது. எது உண்மை, தீர்வு தான் என்ன’? என்ற கேள்வியை பிபிசி தமிழ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவிநாசி தாசில்தாரிடம் முன்வைத்தது.

அதற்கு விளக்கமளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ‘‘இருதரப்பிடமும் மனு பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான விவகாரம் என்பதால் வருவாய்த்துறை மூலம் கலெக்டர் விசாரிக்கிறார். இடத்தை அளந்து, முழு விசாரணை முடித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தால் அதை நாங்கள் செயல்படுத்துவோம்,’’ என்றார்.

அரசு சாலை அமைத்துள்ளதே தனது நிலத்தில் தான் என கே.சி.பழனிசாமி தெரிவிக்கிறார். அப்போது, சாலை அமைக்கும் போது அது யார் இடம் என ஊராட்சி நிர்வாகம் விசாரிக்கவில்லையா? தனியார் இடத்தில் ஊராட்சி ரோடு அமைத்தது எப்படி? என்ற கேள்வியை பிபிசி தமிழ் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த விஜயகுமார், "ஊராட்சியினர் முறைப்படி சாலை அமைத்துள்ளனர். சாலை அமைத்த இடத்தில் 5 அடி எனக்குச் சொந்தம் என பழனிசாமி தெரிவிக்கிறார். அந்த இடத்தை அளவீடு செய்தால் உண்மை என்னவென்று தெரியவரும்," என்றார்.

பிபிசி தமிழிடம் விளக்கமளித்த தாசில்தார் மோகனன், ‘‘இரண்டு நாட்களில் பிரச்னை குறித்து துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருதரப்பு புகார்களையும் பெற்றுள்ளோம். விசாரணை முடித்து ஒருவேளை அது தீண்டாமைச்சுவராக இருந்தால் இடித்து அகற்றப்படும். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் விசாரணை முடிந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cz9m0qm49gqo

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

1 month 3 weeks ago
home-700x375.jpg தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அதனை திறந்து வைத்துள்ளனர்.

சுமார் 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இநட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1368732

சாலையோரத்தில் கல்லை நட்டு சுவாமி என கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

1 month 3 weeks ago
06 FEB, 2024 | 10:40 AM
image

சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும் எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.

சாலையில் நடப்பட்டுள்ள அந்த கல் சிலையா இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இதற்காக இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதுஎன்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்.

எனவே மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

https://www.virakesari.lk/article/175684

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தொடர்வது ஏன்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

1 month 3 weeks ago
05 FEB, 2024 | 05:35 PM
image

சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா "கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

https://www.virakesari.lk/article/175649

தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?

1 month 3 weeks ago
திருவள்ளுவர் சிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 பிப்ரவரி 2024, 03:01 GMT

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐபோன் உற்பத்தி ஆலையான பாக்ஸ்கான் அமைந்துள்ளதை மையமாக வைத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறையில் வெற்றியாளராக பயணித்து வருவதாகவும், நாட்டிலேயே அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ஒவ்வொரு விதமான தொழில்களையும் குறிப்பிட்டு தமிழக தொழில்துறையை பாராட்டியுள்ளது அந்த பத்திரிகை.

ஆனால், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது ஏன்? இதற்கான விதை எங்கு போடப்பட்டது? ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பாதையில் செல்லும்போது தமிழகம் தனக்கான பாதையை அமைத்து முன்னேற தொடங்கியது எப்போது? அதன் பலன் என்ன? உண்மையில் தமிழகம் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா?

 
தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

தமிழ்நாட்டின் தனித்துவம்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிட சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகிய கூறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் சிசு மரண விகிதம் (IMR) 1000 பேருக்கு 8.2, தனிநபர் வருமானம் ரூ.1,66,727, உயர்கல்வி சேர்க்கை (GER) விகிதம் 47% என அனைத்திலும் இந்தியாவின் டாப் இடங்களை பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த வளர்ச்சிக்கு காரணமாக 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் அவர்களிடம் பேசினோம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,LINKEDIN

படக்குறிப்பு,

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

தமிழ்நாடு vs மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை, மற்றுமொரு மாடலோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தொடங்கிய அவர் மத்திய அரசோடு ஒப்பிட்டு பேசினார்.

“மத்திய அரசு தங்களது வளர்ச்சி பாதையை 50, 60 களில் தான் முன்னெடுக்க தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த வளர்ச்சி பாதைக்கு நேர்மாறான பாதையை நாம் எடுத்ததின் விளைவு தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

இதற்கு உதாரணமாக “மத்திய அரசு வளர்ச்சி பகிர்வு(Growth With Distribution) என்ற பாதையை கையில் எடுத்தார்கள். அதன்படி முதலில் வளர்ச்சியடைதல், பின்னர் அதை பகிர்ந்து கொடுத்தல் என்ற வழியில் சென்றார்கள். முதலில் இந்த திட்டம் வளர்ச்சியை தந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை” என்கிறார்.

ஆனால், தமிழகமோ 1960களுக்கு பிறகு வேறு விதமான கொள்கையை பின்பற்ற தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் அரசு மாறி திமுக ஆட்சியை பிடித்த போது, சாமானிய மக்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தினார்கள். யாசகர்கள் மறுவாழ்வு திட்டம், குடிசைமாற்று வாரியம், கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி, சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

மேலும் பேசிய அவர், “திமுக வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அதற்கு முன்பெல்லாம் அரசு செலவு செய்ததெல்லாம் அணை கட்டுவது போன்ற மூலதனம் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இவர்கள் தான் கல்வி, சுகாதாரம் என மக்கள் வளர்ச்சிக்கு தேவையான செலவுகளை செய்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,SALEM DHARANIDHARAN

படக்குறிப்பு,

திமுக செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன்

இதே கருத்தை முன்வைக்கிறார் திமுகவின் செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன், “1960களில் உத்தரபிரதேசத்தின் தனிநபர் வருமானமும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமும் ஒன்றுதான். ஆனால், 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உத்தரப்பிரதேசத்தை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் தொழிற்துறை வளர்ச்சியிலும் கூட இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்று..”

“அதற்கு முக்கிய காரணம் திமுக மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தியது. இடஒதுக்கீடு, கல்விக்கான ஏராளமான திட்டங்கள், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி, பெண்களுக்கான கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொருளாதாரம் வளர மூலதனமும், மனிதவளமும் மிக அவசியம். மனிதவளத்தை வளர்க்க கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு மிக முக்கியமென கருதி பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக” அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேவைத்துறை மீது கவனம் செலுத்திய மத்திய அரசு

மத்திய அரசு சேவைத்துறை சார்ந்து முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்த காலத்தில், தமிழக அரசு வறுமை ஒழிப்பு, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்திருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய அரசு மக்களுக்கு வளர்ச்சியை பகிர்தல் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதலில் தேக்கமடைந்து விட்டதாக குறிப்பிடுகிறார் அவர்.

ஆனால், மனிதவளத்தை மேம்படுத்துவதில் குறிக்கோளாக இருந்த தமிழக அரசு அதற்காக கல்வியை ஜனநாயக படுத்தியது, கிராமங்களில் இருந்த மக்களை நகரங்களை நோக்கி அழைத்து வந்தது, சாலை வசதி, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திவிட்டு அமைதியாக இல்லாமல் அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வழங்கியது உள்ளிட்ட பல காரணிகளை அடுக்குகிறார் ஜோதி சிவஞானம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,DMK / AIADMK

படக்குறிப்பு,

முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்

கட்சி பேதமற்ற வளர்ச்சி கொள்கைகள்

மக்கள்நலன் சார்ந்த கொள்கைகள் தமிழ்நாட்டில் மட்டுமே கட்சிபேதமின்றி தொடர்ந்து வந்துள்ளதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

உதாரணமாக, “காமராஜர் பள்ளிகளை கட்டினார். மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில் திமுக அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் புதிய புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டன. ஆக எப்படியாவது மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்பதில் தமிழக கட்சிகள் ஒத்த கருத்தோடு இருந்தன” என்கிறார் அவர்.

குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எம்ஜிஆரும் அப்படியே தொடர்ந்தார். திமுக கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியது. எம்ஜிஆர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார்.

இதில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்பட்டன. அதன் விளைவாக 90களுக்கு பிறகு வந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இங்கு படித்தவர்கள் நேரடியாக வேலைக்கு சேர முடிந்தது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்த திட்டங்களின் விளைவாக 1990களில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் முதலீடு செய்ய வந்த பல நிறுவனங்களும் டெல்லி, மும்பைக்கு அடுத்து தமிழ்நாட்டை நோக்கி வந்ததாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். அதற்கு காரணம் மனிதவள மேம்பாட்டில் அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட வேலையின் காரணமாக திறன்மிக்க தொழில் நிபுணர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்கிறார்.

 
சென்னை ரயில் நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

வளர்ச்சியை பகிர்தல் எனும் பாணியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட மன்மோகன் சிங் 2004க்கு பிறகு உரிமை சார் அணுகுமுறையை கொண்டுவந்தார்.

"வளர்ச்சி கிடைத்தும் பகிர்தல் நடக்கவில்லை என்றபோது வேலைக்கான உரிமை, உணவுக்கான உரிமை, ஆரோக்கியத்திற்கான உரிமை உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்தார். இந்த பிரச்னைகளை அரசே இனி நேரடியாக அணுகும் என்றும் அறிவித்தார்" என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

"ஆனால், 2014க்கு பிறகான ஆட்சியில் அந்த முழக்கங்களையே விட்டுவிட்டார்கள். பகிர்தல் என்பதை விட்டுவிட்டு வளர்ச்சியே பெரிய விஷயம் என்ற பாதையில் எடுத்து செல்கிறார்கள்" என்றும் கூறுகிறார் அவர்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,TIDEL PARK

படக்குறிப்பு,

சென்னை டைடல் பார்க்

உலக மாற்றத்திற்கு ஏற்ப ஏற்பாடுகள்

தமிழகம் எப்போதும் உலக அளவில் நடைபெறும் மாற்றங்கள், ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அப்படி தமிழகத்தில் இதற்கு முன்னாலும் உலகளவில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்பவும் தயக்கமே இல்லாமல் முன் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறுகிறார் பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம்.

அப்படித்தான் டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

இதுகுறித்து பேசிய சேலம் தரணிதரன், "இந்தியாவின் முதல் ஐடி கொள்கையே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது" என்று கூறுகிறார்.

மேலும், சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளை உருவாக்கியதையும் குறிப்பிடுகிறார்.

"அதே சமயம் தற்போதைய ஆட்சியில் ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, முதலீடுகளை ஈர்த்தல், பட்டியலின மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு ஒதுக்கீடுகளையும்” மேற்கோள் காட்டுகிறார் அவர்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,D JAYAKUMAR / TWITTER

படக்குறிப்பு,

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

இதேபோல் பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறை நிறுவனங்களின் அனுமதிக்கான ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடும் அவர், “நான் ஐடி அமைச்சராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கும் எளிய வழியில் அனுமதி வழங்கப்பட்டது. சிறுசேரியில் நிறுவனம் தொடங்க ஹெச்சிஎல் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு அரசு விலையில் நிலம் வழங்கப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் தொழில்துறை வளர்ச்சிக்காக ஐடி காரிடார் அமைப்பு, சரக்கு பெட்டகம் செல்வதற்கான எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

பெண்களுக்கான முன்னேற்றம்

ஒட்டுமொத்த இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். பெண்களின் கல்விக்கு இன்னும் தடை போடும் சமூக கட்டமைப்பில் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை கேட்டபோது,

“பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தை சமீபத்தில் தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 1960 களிலேயே தமிழக பெண்கள் அதற்காக போராடியுள்ளனர். பெண்களுக்கெதிரான பல அநீதிகளுக்கு எதிராக அன்று பெண்களே போராடினர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த ஆட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களும் பெண்கள் வளர முக்கிய காரணம். அதன் விளைவே இன்று பொதுத்துறை பணிகளில் 100க்கு 65 பெண்கள் இருக்கின்றனர்” என்கிறார் ஜோதி சிவஞானம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு,

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தன்னுடைய புத்தகமான Uncertain Glory-இல் கூறியுள்ள சில விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

அந்த புத்தகத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ள போதிலும், தமிழ்நாடு எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார் அமர்த்தியா சென்.

அதில், "குஜராத் உற்பத்தி துறையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் வளர்ச்சியை பகிர்தல் மற்றும் மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. கேரளா மனிதவள மேம்பாட்டில் உச்சத்தில் உள்ளது. ஆனால் உயர்கல்வி, உற்பத்தி துறை, ஐடி துறையில் பின்தங்கியுள்ளது. ஆனால், இது இரண்டையும் ஒன்றாக இணைத்து வளர்ந்து வந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தம்" என்று அவர் குறிப்பிட்டு தமிழக வளர்ச்சியை பாராட்டி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார் ஜோதி சிவஞானம்.

 
குடியரசு தின வாகனம் தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முதன்மையாக தெரிந்தாலும், தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமானதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதுகுறித்து பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம் கூறுகையில், “நாம் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நாம் மிக மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது இரண்டுமே தேவை. இது இரண்டிலும் தமிழ்நாடு மட்டுமே சுட்டிக்காட்ட கூடிய ஒரே மாநிலம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c4nk8wrq48ko

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

1 month 3 weeks ago
கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!
tCdfLC4U-Rajan.jpg

ராஜன் குறை 

Actors want to rule and are fear to talk about politics

மக்களாட்சியில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவளித்தால் ஆட்சி அமைக்கலாம். இது சிறு குழந்தைக்கும் தெரியும். சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும். அவர்களை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது சுலபம். அதனால் அவர்கள் கட்சி தொடங்க விரும்பலாம். மக்களாட்சியில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் அதனை பொதுமக்கள் மாண்பு கருதி வரவேற்கவே செய்வார்கள்.

அப்படி ஒரு நடிகர் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் சேராமல் தன் தலைமையில் கட்சி தொடங்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எதனால் கட்சி தொடங்கும் கதாநாயக நடிகருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அவர் சினிமாவில் நன்றாக நடனம் ஆடினார், சண்டை போட்டார், சிரிப்பு வரும்படி நடித்தார், உணர்ச்சிகரமாக நடித்தார் அதனால் அவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். அது அபத்தமாக இருக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

அதனால் அந்த நடிகர் பொதுவாக என்ன சொல்வாரென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஜாதி, மத பிரிவினைகளைப் பார்க்கின்றன; நான் அனைத்து மக்களும் பொதுவானவன், ஊழலே செய்ய மாட்டேன், என் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளானால் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

அதை எப்படி நம்புவது என்று கேட்டால், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக செயல்படுகின்றன என்று கூறுவார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தினார்கள், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, வேட்டி கொடுத்தார்கள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று பல நற்பணிகளைப் பட்டியில் இடுவார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த அரசே ஒரு நற்பணி மன்றம் போல செயல்பட்டு மக்களுக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று கூறுவதுபோல தோன்றும். அப்புறம் ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை மாற்றி அமைப்போம், முழுப்புரட்சி செய்வோம், “போர்! போர்!” என்றெல்லாம்  வீரமாக பொத்தாம் பொதுவாக எதையாவது பேசுவார்கள்.

ஒட்டுமொத்தத்தில் நடிகர் மிகவும் பிரபலமானவர் என்பதால் மக்கள் அவர் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தால் அவர் முதல்வராகிவிட்டால் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று முடித்துவிடுவார்கள்.

இவ்வாறு பேசுவது ஆட்சிக்கு வரும் விருப்பம்தானே தவிர, அரசியலுக்கு வரும் விருப்பமல்ல. அரசியல் என்பது எண்ணற்ற சமூக முரண்பாடுகளின் களம். கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர் கூறியதுபோல எதிரி x நண்பன் என்பதே அரசியல். எதிரி என்றால் தனிப்பட்ட எதிரி அல்ல; போட்டி நடிகர் அல்ல. அரசியல் எதிரி என்பது வேறு ரகம்.
grMtvP1Z-Rajan-2.jpgஅரசியல் என்றால் என்ன?

இன்றுள்ள மக்களாட்சி நடைமுறை உருவாகி இன்னம் 250 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை எனலாம். அதாவது மன்னரல்லாத அரசியலமைப்பு சட்ட குடியரசு 1776-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன்முதலில் உருவானது. மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி. அதற்கு 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி 1789-ம் ஆண்டு வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கம் உலகளாவிய மக்களாட்சி லட்சியமாக முன்மொழியப்பட்டது.

அதற்கு முன்னால் மன்னராட்சியில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், சாதாரண மக்கள் என்ற கட்டமைப்புதான் பரவலாக இருந்தது. இதிலும் மத அமைப்பிலோ அல்லது வேறு விதமாகவோ பலவிதமான ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசர்களின் எதேச்சதிகாரமாக இருந்தது. மக்களுக்கான உரிமைகள் என்பது உத்தரவாதமில்லாமல் இருந்தன.

இதில் முதலீட்டிய பொருளாதாரம் உருவான பிறகு வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஆகிய புதிய அதிகார மையங்கள் உருவானபோது அவர்கள் புதியதொரு அரசமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அச்சு ஊடகத்தின் பரவல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் சேர்ந்த புதிய மத்தியதர வர்க்கமும் இந்த மாற்றத்தை வலியுறுத்தியதால் மக்களாட்சி என்ற நடைமுறை உருவாகியது. அனைத்து மக்களும் சுதந்திரமானவர்கள், சமமானவர்கள் ஆகிய சிந்தனைகள் உருவாயின.  

ஆனால், ஏற்கனவே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவினைகள் ஆகியவையும் இருந்தன. அதனால் மக்களில் பல்வேறு தொகுதியினருக்குள் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சமூக இயக்கங்களைத் தோற்றுவித்தன. குறிப்பாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்கள் பிரச்சினைகளுக்காக போராடினார்கள். விவசாயிகளும் அவர்கள் கோரிக்கைகளுக்காக போராடினார்கள். அப்படியே சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்கள் உரிமைகள், கோரிக்கைகளுக்காக அமைப்பாக மாறுவதில்தான் மக்களாட்சி அரசியல் கால்கொண்டது.

அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், வரி விதிப்பில் எத்தகைய கொள்கைகளை பின்பற்றுவது, முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வரி விதித்து, பிற சாமானிய மக்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது என்ற மக்கள்நல அரசு மாதிரிகள் தோன்றின.

முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பது, சந்தையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, தனிச்சொத்தைப் பெருக்குவது என்பவை வலதுசாரி முதலீட்டியக் கொள்கைகள். செல்வக் குவிப்புகளுக்கு அதிக வரி விதித்து, சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சமூக முழுமைக்கும் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வது இடதுசாரி சோஷலிச சிந்தனை.

சமூகத்தின் அனைத்து வளங்களும் பொது உடமையாக இருக்க வேண்டும், எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமும் தோன்றியது.

இந்தியாவிலோ கூடுதலாக ஜாதீயம் ஏற்படுத்திய கடுமையான சமத்துவமின்மையை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல காலமாக கல்வி மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட அடிமைகள் போல வைக்கப்பட்டிருந்த சூத்திரர், அவர்ணர் என்று கூறப்பட்ட மக்களை எப்படி சம வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கப்பட்டது.

ஆனாலும் இன்னமும் சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள இடைவெளி குறையவில்லை. செல்வாக்கான பதவிகளில், தொழில்களில் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற மக்களாட்சி அரசியலே ஒரே களமாக உள்ளது.

அதனால்தான் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடையேயான கடுமையான மோதல் களமாக மக்களாட்சி அரசியல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவோர் தாங்கள் ஏழைகள் பக்கமா, பணக்காரர்கள் பக்கமா, வரி விதிப்பு பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தங்கள் நிலைப்பாடு என்ன, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக எப்படி போராடப் போகிறோம் என்றெல்லாம் அரசியலில் ஈடுபடுபவர்கள் பேச வேண்டும்.

இந்தியாவின் மற்றொரு முக்கியமான அரசியல் பிரச்சினை என்பது அதன் கூட்டாட்சி வடிவமாகும். மாநிலங்களில்தான் அரசுகள் உள்ளன. அனைத்தையும் இணைக்கும் ஒன்றிய அரசாங்கம்தான் தேசிய அளவில் உள்ளது. ஒன்றியத்திற்கும், மாநிலத்திற்குமான அதிகாரப் பகிர்வு சரிவர வகுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் அதிகாரம் குவிந்திருப்பது பல்வேறு மாநில அரசுகளாலும் கண்டிக்கப்படுகிறது. நாள்தோறும் பிரச்சினைகள் பெருகுகின்றன. ஒரு மாநிலக் கட்சி இந்த முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும், வரி விதிப்பும் சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அரசு என்பது வெறும் நற்பணி மன்றமல்ல. ஓர் அரசியல் கட்சி எந்த வகையில் சமூக இடைவெளிகளைக் குறைப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் கொள்கை என்று அழைக்கிறோம். முரண்பாடுகளை சமன் செய்வதே அரசியல் என்னும் கலை என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
M26YAdjF-Rajan-3.jpgபெரும்பாலான அரசியல் கட்சிகள் எப்படி உருவாயின?

திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதீய ஏற்றத்தாழ்வை களையும் சமூகநீதியை முன்வைத்தும், மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் பிறந்தது. அது முதலில் தென்னிந்திய மாநிலங்களை தனி கூட்டாட்சி குடியரசாக, திராவிட நாடாக உருவாக்கும் லட்சியத்தைக் கொண்டிருந்தது. பின்னர் இந்திய கூட்டாட்சியிலேயே மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. சோஷலிச பார்வை கொண்டது.

எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும் அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார். அண்ணா பெயரில்தான் கட்சியே தொடங்கினார். அதனால் அவர் தி.மு.க-வின் நகல் என்றுதான் கூற வேண்டும். நாளடைவில் தி.மு.க-விலிருந்து சில பல அம்சங்களில் வேறுபாடுகளை உருவாக்கினார். ஆனாலும் மாநில உரிமை, சமூகநீதி அரசியல் தடத்திலிருந்து முற்றாக விலகவில்லை. அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.க-விற்கு ஒரு மாற்று என்பதே அதன் வரலாற்று விளக்கம்.

முத்துராமலிங்க தேவரின் ஃபார்வார்டு பிளாக் முக்குலத்தோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக உருவானது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறி வன்னியர் நலனுக்கான கட்சியாக நிறுவிக்கொண்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வர்க்க நலன்களை முன்னெடுக்கும் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களின், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் முற்போக்குக் கட்சியாக உருவாகியுள்ளது.

மக்களாட்சியில் எல்லா கட்சிகளுமே பொதுவான சமூக நலனுக்கு இயங்கினாலும் அவர்கள் முன்னிலைப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகள் என்ன, அவர்கள் கொள்கைகள் எந்த லட்சியங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாக இருப்பதுதான் அரசியல்.

நடிகர்களின் கட்சிகள் எப்படி உருவாகின்றன?
 
கதாநாயக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை எல்லோருமே பார்த்து ரசிப்பதால் எல்லா மக்களுக்குமான கட்சியையே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சமூகத்திலுள்ள முரண்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டால் ஏதாவது பொத்தாம்பொதுவாக மனிதநேய சிந்தனைகளைக் கூறுகிறார்கள். எந்த அரசியல் பிரச்சினையையும் எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசியல் பேச அஞ்சுகிறார்கள்.

pkDeQooa-Rajan-4.jpg
விஜய்காந்த்:

விஜய்காந்த் என்ற கதாநாயக நடிகர் அப்படித்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கலவையான பெயரில் கட்சி தொடங்கினார். தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிக்கும் மாற்று என்றார். ஒன்பது சதவிகித வாக்குகளை இந்த “மாற்று” என்ற பெயரில் பெற முடிந்தது.

ஆனால், அதற்குமேல் அவரால் அரசியல் பேச முடியவில்லை. எந்த பிரச்சினைக்காகவும் எந்த மக்கள் தொகுதியையும் அணி திரட்ட முடியவில்லை. இறுதியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு “மாற்று” என்ற லட்சியம் காணாமல் போனதில் அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறிவிட்டார்கள். இறுதியில் அவர் கட்சி எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.
7jbbV2xE-Rajan-5.jpgரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி அலையில் அவர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததில் அவருக்கு பங்கிருப்பதாக ஒரு பிம்பம் உருவானது. ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்தார். அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வர சோ ராமசாமி உள்ளிட்ட பாஜக-வினர் கடுமையாக முயன்றார்கள்.

அவருக்கு தனிப்பட்ட முறையில் பாஜக அரசியல் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த அரசியல் பேசினால் சிக்கல் என்பதை பாபா படம் அடைந்த தோல்வியிலிருந்து புரிந்துகொண்டார். அதனால் அவரால் கட்சி தொடங்குவதைப் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்க முடியவில்லை. கலைஞரையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி புகழ்ந்தார்.

கலைஞரும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அரசியலுக்கு வர முற்பட்டார். அப்போதும் தான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றார். ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றப் போகிறேன் என்றார். கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுத்துகிறது என்றார்.

எல்லோரும் மக்களை அணி திரட்டுங்கள் – நான் பிறகு வந்து தலைமையேற்கிறேன் என்று கூறி திடுக்கிட வைத்தார். நான் முதலமைச்சராகப் பதவியேற்று எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் என்றார். இவர் கட்சியை கட்டமைத்துக் கொடுக்க பாஜக-விலிருந்து ஒருவரை இரவலாகப் பெற்றார். இறுதியில் நல்லவேளையாக உடல்நிலை சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiகமல்ஹாசன்:
 
மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்தார். வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத நடுப்பாதை, செண்டிரிஸ்ட் (Centrist) கட்சி என்றார். ஆனால் தெளிவாக நான் பாஜக-வை எதிர்க்கிறேன். அ.இ.அ.தி.மு.க-வை எதிர்க்கிறேன். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்றெல்லாம் பேச மாட்டார். பள்ளப்பட்டியில் போய் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி இந்து தான் என்பார். மற்ற இடங்களில் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவுபடுத்தும் இயக்கம் என்று சொல்ல மாட்டார்.

திரைப்படங்களில் போட்டி நடிகர்களை இவர்கள் குறை சொல்ல முடியாது. விஜய்காந்துக்கு நடிக்கத் தெரியாது என்று பொதுவெளியில் கமல்ஹாசன் சொல்ல முடியாது. அது தொழிலுக்கு நல்லதல்ல. ஒருவர் படத்தை மற்றவர் விமர்சித்தால் பொதுவாக தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் அது விரும்பத்தக்கதல்ல.

அரசியல் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை; அவர் ஊழல் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்லத்தான் வேண்டும். ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்று எடப்பாடி கூறத்தான் வேண்டும். “செளகிதார் சோர் ஹை” என்று மோடியை திருடன் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட வேண்டும். ஏனெனில் அரசியலில் முரண்களும், எதிர்ப்பும் அவசியம். வன்முறை கூடாதே தவிர, கருத்தியல் எதிர்ப்பு, கண்டனம் என்பது இன்றியமையாதது.

ஆனால், நடிகர்களாகவே வாழ்ந்து பழகியதால் இவர்களால் பகிரங்கமாக அரசியலில் யாரையும் விமர்சித்து பேச முடிவதில்லை. கமல்ஹாசனால் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்குக் கூட தெளிவாகப் பதில் கூற முடியவில்லை. அருகிலிருந்தவரைக் காட்டி அவர்தான் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிவிட்டார்.  
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiவிஜய்:

இந்தப் பட்டியலில்தான் மற்றொரு கதாநாயக நடிகர் விஜய் இப்போது சேர்ந்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று ஒற்றுப்பிழையுடன் பெயர் வைத்துவிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எந்த நிலைப்பாடும் கிடையாதாம்.

நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாடே கொந்தளித்ததே, அப்போது விஜய் எங்கே போயிருந்தார்? அவருக்கு நீட் தேர்வு எத்தகைய பிரச்சினை என்றே தெரியாதா? நடிகர் சூர்யா கூட குரல் கொடுத்தாரே?

அவரையே ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசி பாஜக விமர்சித்ததே? அது மத அடையாளம் பேசி நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று தெரியாதா? தமிழ்நாட்டு நலன்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறதென்று ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் ஓயாமல் குரல் கொடுக்கிறார்களே? அதெல்லாம் அவர் காதிலேயே விழவில்லையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்தில் அமலாக்கிவிடுவோம் என பாஜக அமைச்சர் ஒருவர் பேசுகிறாரே? முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விடுகிறாரே? அதையெல்லாம் படிக்க மாட்டாரா இந்த எதிர்கால அரசியல்வாதி?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு நிலைப்பாடே இல்லாமல் எதற்காக தேர்தல் நெருங்கும்போது கட்சி தொடங்குகிறார்? இது யார் கொடுத்த அசைன்மைண்ட் என்று மக்கள் கேட்கிறார்களே? அவருக்குப் புரியாதா?

பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதி

பிரகாஷ் ராஜ் விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர். அவர் வளர்ந்த ஊரான பெங்களூருவில் கெளரி லங்கேஷ் என்ற சிந்தனையாளர் கொலை செய்யப்பட்டபோது அவர் வலதுசாரி அரசியலுக்கு எதிராக பொங்கி எழுந்தார். மதவாத சக்திகளை பகிரங்கமாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என பெயர் சொல்லி கண்டித்தார். தன் கண்டனத்தைத் தெரிவிக்க சுயேச்சையாக தேர்தலில் கூட நின்றார்.

பிரகாஷ் ராஜ் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. ஆனால் மத அடையாளவாத வன்முறை நாட்டை பாழ்படுத்தி விடும் என்று துணிந்து குரல் கொடுக்கிறார்.

எந்த ஒரு நடிகராவது அரசியலுக்கு வந்தாரென்றால் பிரகாஷ் ராஜைத்தான் கூற முடியும். உதயநிதி அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்கச் சென்றவர் என்பதால் அவரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் நினைக்கிறார்களே தவிர, அரசியலுக்கு வர நினைப்பதில்லை. அரசியல் பேசவே அஞ்சுகிறார்கள். நேராக தேர்தல்; முதல்வர் பதவி. அவ்வளவுதான் அவர்கள் ஆசை. சின்னச்சின்ன ஆசை. பாவம்.
 

 

https://minnambalam.com/political-news/actors-want-to-rule-and-are-fear-to-talk-about-politics-by-rajan-kurai/

நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி

1 month 3 weeks ago
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 பிப்ரவரி 2024

“அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.”

கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர்.

“இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத்.

“படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி.

நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை.

நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

 
நீயா நானா உருவான கதை
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா.

நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான்.

மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி.

மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை.

அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார்.

 
பிற மொழிகளில் நீயா நானா?
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

“நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார்.

இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி.

“ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார்.

மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி.

ஆண்டனி
படக்குறிப்பு,

ஆண்டனி

'இது மக்களுக்கான மேடை'

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார்.

 
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB

படக்குறிப்பு,

கோபிநாத்

"அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத்.

“நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத்.

சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது.

வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத்.

 
நீயா நானா எப்படி தயாராகிறது?
திலீபன்
படக்குறிப்பு,

திலீபன்

"இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து.

“நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார்.

நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார்.

"ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள்.

ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார்.

 
நீயா நானாவும் சர்ச்சைகளும்...
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன.

நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர்.

"தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம்.

தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன்.

கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

 
'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு'
விஜய் டிவி சங்கவி

பட மூலாதாரம்,VIJAYTV

கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம்.

“நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி.

“பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார்.

“நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும்.

தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார்.

'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்'
Kavin Malar

பட மூலாதாரம்,KAVIN MALAR/FB

படக்குறிப்பு,

கவின் மலர்

“வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது.

ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு.

சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன்.

நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர்.

https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo

ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   04 FEB, 2024 | 09:58 AM

image

ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள், ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னையில் சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற ஈழம் குறித்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம் ,ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

https://www.virakesari.lk/article/175495

'20 வருஷமா பால்தான் உணவு' இளைஞரை தாக்கிய அபூர்வ நோய்...

1 month 3 weeks ago

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர். பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர்.

ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது. அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி நட்பு பாராட்டுவதாக அவரது தந்தை சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்.

 

 

கண்ணகி - முருகேசன்: ஆணவக்கொலை என்ற சொல்லாடல் உருவாகக் காரணமான கொடூர சம்பவம்

1 month 3 weeks ago
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

கண்ணகி முருகேசன்

25 நிமிடங்களுக்கு முன்னர்

ஜூலை 8, 2003.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு. எப்போதுமே ஆள் அரவம் இல்லாத அந்தக் காட்டிற்குள் அன்று ஊரே கூடியிருந்தது. குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசனும், அவரது சித்தப்பாவும் கை கால்கள் கட்டப்பட்டு கிழே தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தில், கண்ணகி கட்டப்பட்டிருந்தார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.

எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றப்பட்டது. வாயைத் திறக்க மறுத்து இறுக்கி மூடியிருந்த இருவரின் காது மற்றும் மூக்கில் நஞ்சை ஊற்ற, இருவரும் அலறித் துடித்திருக்கிறார்கள்.

ஊரே பார்க்க, இருவரும் துடிதுடிக்க இறந்த பிறகு, இருவரின் உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் எடுத்துச் சென்று தனித்தனியாக எரித்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த கண்ணகியும் முருகேசனும், மே 5, 2003 அன்று காதல் திருணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இப்படி ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள்.

கொலை நடந்து ஒராண்டுக்கு பிறகு வெளியே எப்படித் தெரிந்தது? இந்த வழக்கை எப்படி சிபிஐ விசாரித்தது? வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

இங்கு விரிவாகப் பார்ப்போம்...

 
என்ன நடந்தது?
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்கள்

ஜூலை 7, 2003.

ஊரில் எப்போதும் போல வயல் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை மறித்த கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியன், “உம்மவன் முருகேசன் எங்கே?” எனக் கேட்டுள்ளார்.

ஒன்றும் புரியாத சாமிக்கண்ணு, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு முறையான பதில் எதுவும் சொல்லாமல், “உன் மகன் எங்க இருந்தாலும், அவனை உடனடியாக கூட்டிக்கிட்டு வா,” எனக் கூறியுள்ளார் மருது பாண்டியன்.

மருதுபாண்டியனின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வந்த ஆட்கள் செய்த களேபரத்தில், குப்பநத்தம் புதுக்காலனியே பதற்றமானது. இதற்கிடையில், முருகேசனின் தம்பி வேல்முருகன் அவர்களின் கண்ணில் பட, “முருகேசன் எங்கே?” எனக் கேட்டு, அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற மருதுபாண்டியனும் அவரது ஆட்களும், சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

சம்பவம் அறிந்து சமாதானத்திற்கு முயன்ற முருகேசனின் சித்தப்பாவிற்கும் கெடு விதிக்கப்பட்டு, முருகேசனை அழைத்து வருவதே ஒரே வழி, இல்லையேல், வேல்முருகனை விடமாட்டோம் என மருதுபாண்டியன் கூறியுள்ளார்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தன் மகன் எங்கிருப்பான் என அறிந்துகொண்ட முருகேசனின் சித்தப்பா, முருகேசனை விருதாச்சலம் வண்ணான்குடிகாட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில் இருந்து அழைத்து வந்தார்.

“வந்தவனை அவர்கள் சற்றும் இறக்கமின்றிக் கொடுமைப் படுத்தினார்கள். அவன் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் கண்ணகி எங்கிருக்கிறாள் என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில், அவனைக் கயிற்றில் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தபோதும், அவன் தலை கீழே அடித்தபோதுதான், அவன் கண்ணகியை எங்கே வைத்திருந்தான் என்பதையே சொன்னான்,” எனக் கூறியிருந்தார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.

கண்ணகியையும் அழைத்து வந்த அவரது குடும்பத்தினர், இருவரையும் துன்புறுத்தி, காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்தனர்.

 
எப்படித் தெரிந்தது?
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,KIZHAKU PATHIPAGAM

படக்குறிப்பு,

ஓராண்டுக்குப் பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை பொறியியல் படித்து வந்தார். அதே பல்கலையில் துரைசாமியின் மகள் கண்ணகி வணிகவியல் துறை படித்து வந்தார்.

இருவரும் தங்களது கல்லூரி நாட்களில் இருந்து காதலித்து வந்த நிலையில், மே 5, 2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் ஊரைவிட்டு வெளியே சென்று வாழ முடிவெடுத்து, ஜூலை 6ஆம் தேதி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இரண்டு மணிநேரத்திலேயே இருவரும் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

“முருகேசனை அழைத்து வந்ததுதான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அன்று நான் அவனை அழைத்து வராவிட்டால், இந்நேரம் எங்காவது சென்று வாழ்ந்திருப்பான்,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.

இந்தக் கொலைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆணவப் படுகொலை என்னும் பதத்தை தமிழ்நாடு பாவிக்கத் தொடங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், தனது ‘சாதியின் பெயரால்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

“இதற்கு முன்பே இத்தகைய நிகழ்வுகள் நடத்திருக்கின்றன என்றாலும், சாதிய மோதல், சாதியக் கொலை என்றெல்லாம் எவை அழைக்கப்பட்டு வந்தன. சாதியம் எப்படி இயல்பானதாக, எங்கும் நிறைந்ததாக இருக்கிறதோ, அதேபோல சாதியக் கொலைகளும் இயல்பானவையாகவும் அவ்வப்போது நிகழ்பவையாகவும் கருதப்பட்டு வந்தன,” என எழுதியுள்ளார் இளங்கோவன்.

கண்ணகியும், முருகேசனும் கொலை செய்யப்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டதாக இந்த வழக்கை ஓராண்டுக்குப் பிறகு கையில் எடுத்த தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுகுமாரன் தெரிவித்தார்.

சுமார் 10 நாட்களுக்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி, கண்ணகியும் முருகேசனும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், கண்ணகியை அவரது குடும்பத்தினரும், முருகேசனை அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கண்ணகியின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் என நான்கு பேர், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி மற்றும் இவர்களது உறவினர்கள் இரணடு பேர் என மொத்தம் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எட்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுமார் ஓராண்டுக்கு பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் சமூக ஆர்வலர் சுகுமாரன் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் விளைவாக, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.

 
போலீஸ் மீதும் வழக்குப் பதிவு செய்த சிபிஐ
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரை சிபிஐ கைப்பற்றியது.

ஏப்ரல், 2004இல் வழக்கைக் கையில் எடுத்த சிபிஐ, வழக்கு தொடர்பாக அனைவரையும் விசாரணை செய்தது. இதில், சம்பவ இடத்தில் இருந்த முக்கிய ஆதாரங்களையும் சிபிஐ சேகரித்தது. கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரையும் சிபிஐ கைப்பற்றியது.

மேலும், இந்தக் கொலையை நேரில் பார்த்த முருகேசனின் சகோதரி தமிழரசி, அப்பா சாமிக்கண்ணு, முருகேசனின் தம்பி வேல்முருகன், பழனிவேலு ஆகியோர் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

சிபிஐ.யின் விசாரணையில், விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்த்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த முருகேசனின் குடும்பத்தினர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். கடலூர் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 2021இல் தீர்ப்பளித்தது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில், 13 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காகப் பதியப்பட்டதாகவும், சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.

 
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சென்னை உயர்நீதி மன்றம்

சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்தக் கொலை சம்பவத்திற்குத் தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர்.

மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு ஒரு முன்மாதிரி வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்.

“கண்ணகி முருகேசன் வழக்கில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும், அவற்றை முறையாக வழக்கில் சேர்த்து, சாட்சிகளைக் காப்பாற்றி, நீதிமன்றத்தில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதனால், இந்த வழக்கு அனைத்து ஆணவக்கொலை வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரி வழக்கு,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c84ng8wx0dgo

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம்,  அரசியலில் அறிமுகமாகிறது.

1 month 3 weeks ago

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், 
அரசியலில் அறிமுகமாகிறது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு  அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும்.

அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள்.

அந்த விசாரணையில் சில பல உண்மைகளைத் தெரிந்துகொண்ட அமுலாக்கல்துறை எதிர்காலத்தில் தேவைப்படுவதற்காக அவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருப்பார்கள் என்பது புலனாய்வுபற்றிய அரிவரிப்பாடம் மட்டும் தெரிந்தவர்களுக்கே  சாதாரணமாக மனதில்படும்.

ஆனால் "விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளோ" எங்கள் தளபதி கறைபடாத கைகளையுடையவர் ஆகவே அவரை எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என ஊளையிட்டார்கள்.

இன்னுமொருபுறத்தில் விஜைக்கு இப்படியான விசாரணையும் தேவைப்பட்டது தவிர ஆளும் ப ஜ க அரசுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமிர்த்ஸா அவர்களுக்கும் தேவைப்பட்டது.
காரணம் தங்கள் சொல்லுக்கு ஆடக்கூடிய ஒரு கைப்பாவை முகவும் செல்வாக்கனவராக இருக்கவேண்டும் அவர் மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் உணரப்படவேண்டும் இந்த மிஸ்டர் கிளீன் எனும் பிம்பத்தை நாம் தான் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என ப ஜ க மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டது. அதன்மூலம் விஜையது விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளுக்கு அண்மையானவர்களது ஆதரவும் கூடும் எனும் கணக்கிடல்மூலம் தனது அரசியல் சதுரங்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க உருட்டும் பகடக்காயாக விஜை உருவாக்கப்பட்டார்.

இந்திய உபகண்டத்தில் பல்வேறு மாநினங்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் அபரிமிதமான முதலீடுகளும் கல்வி முதலீடுகளும் தொழில்நுட்ப அறிவாற்றலும் செறிந்துகாணப்படுவதும் தவிர சகிப்புத்தன்மை ஒருங்கிணைவு ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றமுடையதும் முக்கியமாக ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் உள்ளகக் கட்டமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதும் ப ஜ வுக்கும் அவர்களை முண்டுகொடுக்கும் வடநாட்டு மார்வாடிகளுக்கு எரிச்சலூட்டும் விடையம் தவிர எப்போது இந்தக் கனிந்தபழம் தங்கள் கைகளுக்கு வந்துசேரும் எனும் கனவில் வாழும் அவர்களது காதுகளுக்குத் தேன்வார்க்கச் சிறுகச் சிறுகத் திட்டமிட்டு நடாத்தப்படும் அரசியல் சதுரங்கத்தின் ஓரங்கம்தான் விஜை அவர்களது அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு.

இப்பெயர் ஒன்றும் விஜையது மூளையிலிருந்து உதித்ததல்ல இதை ப ஜ க ஏஜண்டு ஆளுனர் ரவியின் வாயிலிருந்து உதித்த "தமிழகம்" எனும் வார்த்தை எச்சத்தில்தான் இப்பெயர் கருவுற்றது. தனது கணக்குக்காட்டாத பணவருவாயின் தகிடுதித்தங்களை இன்றுவரைக்கும் மறைத்த நடுவண் அரசின் எஜமானர்களுக்குத் தனது விசுவாசத்தின் ஒரு பகுதியாவது காட்ட தனது கட்சியின் பெயரின் ஒருபகுதியிலாவது அவர்களது எச்சிலை இட்டு நிரப்புவது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

"தமிழக வெற்றிக் கழகம்" அறிவிப்பு வந்தாச்சு.

இந்த அறிவிப்பு எப்போ வந்திருக்கு! அப்போ இப்போ என்றிருந்த நடிகர் விஜயகாந் அவர்கள் காலமாகிக் கடைசிநாள் காரியம் முடிந்த கையுடன் வந்திருக்கு. மண்ணுக்குள் புதைத்த வரது உடலை கரையான் மற்றும் இன்னபிற நுண்கிருமிகள் உள்நுளைந்து டீகொம்போஸ் பண்ண ஆரம்பித்தனவோ இல்லையோ அதற்கும் இந்தாபிடி ஒரு விருது எனக்கொடுத்து அவர்களது கட்சியின் தொண்டர்களைக் குசியாக்கி " ஆமா இவைங்களை என்னமோண்ணு அநியாயத்துக்கும் நினைச்சோமே, ஆனா இவைங்க அநியாயத்துக்கும் நியாயமானவங்களா இருக்காங்களே" என தொண்டர்கள் மூக்கில விரலை வைக்க, இதுதாண்டா தருணம் என ஆரம்பிங்கடா கச்சேரியை என விஜையை உசுப்பிவிட்டாச்சு.

அந்தக்கையோடு நாம் தமிழர் கட்சியை உண்டு இல்லை என ஆக்குறம் அவர்களுக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை அசைத்து இந்தப்பக்கம் திருப்புறம் எனச்சொல்லி அமூலாக்கல்துறை நாம்தமிழர்களது இரண்டாம் நிலைத்தலைவர்களது வீடுகளுக்கு சோதனைசெய்ய உள்நுழைந்துள்ளது.

இதில் என்ன வேடிக்கை என்றால் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் கணிசமானவர்கள் சீமானது நாம்தமிழர் ஆட்சியில் ஈழம் வெல்லலாம் எனக் கனவுப்பால்குடித்து மேற்படி இரண்டாம் நிலைத்தலைவர்களுடன் தாம் வாழும் நாடுகளிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்து அவசரத்துக்கு காசு உதவி மற்றும் காதுகுத்து, குலசாமிக்கு மொட்டையடிப்பு ஆகியவற்றுக்கு  "சப்றைஸ்" பரிசுப்பொட்டலங்கள் பணமுடிச்சுகள் அனுப்பி தாங்களும் குதூகலமாகி அவர்களையும் குதூகலப்படுத்து கடைசியில கூமுட்டையாகிவிடும் கோஸ்டிகளால் இப்போ இந்த இரண்டாம் கட்ட தலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் போதை கடத்தல் கும்பல்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என கலந்துகட்டி ஒரு பட்டியலே இருக்கு, இக்கும்பலில் முன்னாள் போராளிக்குழுக்கலிள் இருந்தவர்களும் உள்ளார்கள் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அக்கும்பலில் உள்ள அனைவரும் (யார் சிங்களவர் இஸ்லாமியர் புலிகள்தவிர்ந்த தமிழர்கள்) விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய சிறப்பி முகாமுக்குள்(?) இருந்து போதைப்பொருள் கடத்துகிறார்கள் அதன்மூலம் ஆயுதங்கள் கடத்தத் திட்டமிடுகிறார்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் அவர்களை மத்திய புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் கைது செய்துள்ளது (?) எனப் பத்திரிகைகளில் கண்டமேனிக்கு வதந்திபரப்பும் இந்தப் புலனாய்வுப்புலிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்தமிழர்களது ரசிகப்பெருமக்களைப் புலிகளது ஏஜண்டு எனப் பெயர் சூட்டினால் நம்ம சனம் நம்பும்தானே (அத்துதானே நம்பாம")

அப்போ தமிழ்நாட்டின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விஜையை வைத்து இன்னுமொரு அங்குலம் நெருங்கியாச்சு. அப்போ விஜையது அரசியல் எதிர்காலம்?

அவர்தானே நாடாளுமன்றத் தேர்தல் எனது குறி இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் நான் குதிக்கப்போகிறென் எனச்சொல்லிப்போட்டார்.

மார்வாடிகளது கைகளுக்கு பொருளாதாரம் போகவேண்டுமெனில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் அப்போ யார் ப ஜ கவின் கைத்தடியோ அவர்தார் முதல்வர். சிலவேளை ட்ரில்லியன் டாலர் கைக்கு எட்டும்போது அண்ணாமலைக்கு வசசுபோய் நடைபயணம்போகமுடியாத அளவுக்கு உடல் நிலை சீரற்றதாக இருக்கலாம் இருக்கவே இருக்கிறது இன்னுமொரு  மலை.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜையது ஆசீர்வாதத்தில் பி ஜெ பி கணிசமான வாக்குகளை அள்ளினால். வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் விஜை கட்சியின் இரண்டாம் நிலைத் தலைகளது வீடுகளுக்குள் அமூலாக்கத் துறையை அனுப்பினால் அலுவர் முடிந்துவிடும். 

விஜையது பணத்தில் ஒரு சினிமா ரசிகன் எப்படி அரசியல் கட்சியின் தொண்டனாக மாறி மக்கள் முன்பு வாக்குகள் சேர்க்கவேண்டும் எனும் பயிற்சியை முடித்துப் பட்டம்பெற்ற இரண்டாம் நிலைத்தலைவர்கள் பி ஜே பியினுடன் இணைந்தால் சட்டமன்றத்தேர்தலில் விஜை பி ஜே பி சொன்னதைச் செய்யத்தான் வேண்டும்.

அமூலாக்கல்துறை இருக்கும்மட்டும் எங்களுக்குத் திருவிழா. 

விஜை அரசியலில் வெல்வாரா? இல்லை மூழ்குவாரா?

இதைப்பற்றி யோசிக்கும்போது திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது நினைவிருக்கு,

அவரது (நடிகர் சத்தியராஜ்) வீட்டுக்கும் அமூலாக்கல்துறைச் ச்சோதனையை நடத்திவிட்டால் போச்சு என.

கதையோட கதையாக இந்திய உழவுத்துறையது கைகளுக்குள் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒரு பெண்ணும் நாம் தமிழர் கட்சியுடன் கருத்துவேறுபாடுகொண்டுள்ளதால் அகப்பட்டுள்ளார். 

கொஞ்சம் பொறுங்கோ யாரோ கதவைத்தட்டினம் அமூலாக்கல்துறையாக இருக்கப்போகிறது.

அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

1 month 3 weeks ago
"தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்

பட மூலாதாரம்,AGS

2 பிப்ரவரி 2024, 08:03 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :

"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

"தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. "

"ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. "

"மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்."

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

'2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு'

"இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

'சினிமாவிலிருந்து விலகுகிறேன்'

அந்த அறிக்கையில் மேலும், "இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்." என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,PIB ARCHIVE

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

சர்ச்சையில் சிக்கிய விஜயின் திரைப்படங்கள்

2011ல் விஜயின் 'காவலன்' திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.

அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜய்

பட மூலாதாரம்,YOUTUBE/SONY MUSIC INDIA

தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51w53dx1lno

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

1 month 3 weeks ago
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
February 2, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள்  வெளியாகி உள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி  உள்ளது.

இந்நிலையில்  நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து  என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர்  சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது.
 

https://globaltamilnews.net/2024/200289/

முருகன், ராபர்ட்பயஸ் கால வரையறையற்ற உண்ணாவிரதம்?!

1 month 4 weeks ago

 

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் வாடுகின்றோம்; முருகன், ராபர்ட்பயஸ் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்; கால வரையறையற்ற உண்ணாவிரதம்!

Published By: RAJEEBAN   01 FEB, 2024 | 11:14 AM

image

திருச்சி சிறப்பு  முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது,

murugan_letter2.jpg

 "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார்இ சாந்தன் முருகனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். எங்களது உடல் நலத்தை சரி செய்ய நடைபயிற்சி செய்ய அனுமதி கேட்டும்இ இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் நோய்வயப்பட்டுள்ளோம்.

கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம் கொழுப்பு சிறுநீரகக் கல் மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 ஆம் தேதி அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இந்த முகாமில் எங்களது உரிமைகளுக்கோ உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. இதனால் தான் சாந்தன் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

murugan_letter.jpg

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும் சிறப்பு முகாமை இழுத்து மூடக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தலைமையில் வருகின்ற பிப்.3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175291

‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

1 month 4 weeks ago
1191044.jpg  
 

மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகை சில மணி நேரத்தில் அகற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சில இளைஞர்கள் மாமிச உணவு சாப்பிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இந்து கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். இந்துக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதி அருகே தொழுகை நடைபெறும் நேரமாக இருந்தாலும், இல்விட்டாலும் பேண்ட், வாத்தியம் இசைப்பதில்லை. இந்த முறை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே பழநி கோயில் மற்றும் உப கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாது என மீண்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் வாதிடுகையில், “பெரும்பாலான அறநிலையத் துறை கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ஊடக வெளிச்சம் பெறும் நோக்கத்திலும், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சினை செய்கின்றனர்.

பழநி கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பழநி கோயில் சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் புனித இடமாகும். இங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது.

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலில் ரூ.50 கட்டணம் செலுத்தி வெளிநாட்டினர் செல்கின்றனர். அவர்கள் கொடி மரம் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை பிற கோயில்களிலும் உள்ளது. கோயிலில் முக்கியத்துவம் அறியும் வகையில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

இதேபோல், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சார்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ‘கோயில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் பட்டியலில் துணை கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள். கோயில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது. இதனால் கோயில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ஐ மீறுவதாகது. மாறாக இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு மதங்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் நிலை நாட்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13, 15 குறிப்பாக 15(1)-ல் கூறப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் சேர்க்கப்படவில்லை. கோயில் சேர்க்கப்படாத நிலையில் கோயில்களை சுற்றுலா தலமாக கருத முடியாது. இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை ஒவ்வொரும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிறர் மத நம்பிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பிற மதத்தினர் இடையிலான மதநல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. தஞ்சை கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும். இந்துக்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் உரிமை உண்டு. இந்து கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர்.

பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இந்துக்கள் அல்லாதவர்களை மலையேற அனுமதித்து மலையேறிய பிறகு அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என தெரியவந்து தடுக்கப்பட்டால் அவர்கள் விரக்தி அடைவர். ஏன் முன்கூட்டியே சொல்வதில்லையா என கேள்வி எழுப்புவர். இதுபோன்ற நிலைய தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும்.

எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள் என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோயிலுக்கு வந்தால் அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற வேண்டும். அதன் பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உறுதியளித்து கோயிலுக்கு செல்லும் இந்து அல்லாதவர்கள் குறித்து கோயில்களில் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு | Non-Hindus should not be allowed in TN temples: HC orders in Palani temple case - hindutamil.in

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ

1 month 4 weeks ago
31 JAN, 2024 | 10:50 AM
image
 

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில்  தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள்இ இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.

எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார்இ இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நான்இ நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜிஇ சிங்கப்பூர் மைதானத்திலிருந்துஇ 

“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களேஇ இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜிஇ மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.

ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே  என்றார் பிரகலாத் ஜோசி.

வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும்இ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.

இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்துஇ இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ | Virakesari.lk

Checked
Fri, 03/29/2024 - 10:27
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed