உலக நடப்பு

'வெடிக்கும் இரும்பு அரக்கன்': காஸாவில் பீதி ஏற்படுத்தும் இஸ்ரேலின் 'ரோபோ' ஆயுதம்

2 months 2 weeks ago

காசா நகரத்தின் ரிமால் பகுதியில் உள்ள ஒரு தெருவில் இடிபாடுகள் சிதறிக் கிடக்கின்றன. மக்கள் சிறிய குழுக்களாகக் கூடியிருக்கும் தெருக்களில் பல சேதமடைந்த கார்கள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

கட்டுரை தகவல்

  • அத்னான் எல்-பர்ஷ்

  • பிபிசி அரபிக்

  • மர்வா கமால்

  • பிபிசி அரபிக்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது."

காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார்.

தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

"இந்த ரோபோக்கள், இனி பயன்படுத்த முடியாத பழைய டாங்கிகள் அல்லது கவச வாகனங்களாக இருக்கலாம்," என்று அல்-கூல் கூறினார்.

"அவற்றைக் கொண்டு சென்று, வெடிபொருட்களால் நிரப்பி, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி காஸா நகரத்தின் தெருக்களில் செலுத்துகிறார்கள்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட பகுதியில் அவை வைக்கப்பட்ட சில நிமிடங்களில், ஒரு பெரும் வெடிப்பு நிகழ்கிறது." என்று அவர் கூறினார்.

"வெடிப்பு நடந்த இடத்தில் மக்கள் இருந்தால், அவர்களின் எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படாது. உடல் பாகங்கள் கூடச் சிதறிவிடும், அவற்றை முழுமையாக எங்களால் கண்டுபிடிக்க முடியாது," என்று காஸாவில் போரில் பலியானவர்களின் உடல்களை மீட்க அவ்வப்போது தன்னார்வத் தொண்டு செய்யும் அல்-கூல் கூறினார்.

வெடிப்பு எவ்வளவு அருகாமையில் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து கட்டடங்கள் முழுமையாக இடிந்து அல்லது சேதமடைந்து விடுகின்றன. இதனால் இஸ்ரேல் படைகள் அப்பகுதியைக் "அழிக்கும் நடவடிக்கையை" மேற்கொள்ள எளிதாகிறது என்றும் அல்-கூல் கூறினார்.

பேரழிவின் விளைவுகளை நேரில் கண்ட அவர், "முழு குடும்பங்களும் அழிந்துவிட்டன" என்று பிபிசி-யிடம் தெரிவித்தார். அழிவின் வரம்பு 300 முதல் 500 சதுர மீட்டர் வரை இருப்பதாக கூறிய மூன்று பேருடன் நாங்கள் பேசினோம்.

"இவை வெடிக்கும்போது குடும்பங்கள் வீட்டில்தான் இருக்கின்றன, அவர்களின் வீடுகள் அவர்கள் மீது இடிந்து விழுகின்றன. அல்-ஜைதூன், ஷேக் ராத்வான் மற்றும் ஜபாலியா போன்ற பகுதிகளில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்."

ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் (ஜிஎம்ஓ) செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் குறைந்தது 1,984 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜிஎம்ஓ வெளியிட்ட ஓர் அறிக்கையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் போர் விமானங்கள் மூலம் 70-க்கும் மேற்பட்ட நேரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும், கூடுதலாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்பட்டன என்றும், இது பரவலான கட்டாய இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வெடிப்புகளின் தாக்கம், 70 கி.மீ தொலைவில் உள்ள டெல் அவிவ் நகரத்திலும் உணரப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம் இந்த ஆயுதங்களைச் பொதுமக்கள் மீது பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க, பிபிசி நியூஸ் அரபி, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அவிசாய் அட்ராய்-ஐ தொடர்பு கொண்டது.

அட்ராய் பிபிசி-யிடம், "நாங்கள் செயல்பாட்டு முறைகள் குறித்து விவாதிப்பதில்லை. ஆனால், எங்கள் நோக்கங்களை அடையவும், ஹமாஸ் பயங்கரவாதிகளை அகற்றவும், இஸ்ரேல் வீரர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம், அவற்றில் சில மிகவும் புதுமையானவை மற்றும் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார்.

பேரழிவு ஏற்படுத்தும் வெடிப்பு

காஸா நகரம், இஸ்ரேலிய ஆயுதங்களைச் சோதிக்கும் களமாக மாறியுள்ளதா என மற்றொரு காஸா நகரவாசியான நிதால் ஃபவ்ஸி கேள்வி எழுப்பினார்.

இந்த ரோபோக்கள் "குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்துகின்றன, மேலும் மக்களைத் தப்பி ஓடச் செய்கின்றன" என்று கூறினார்.

ஒரு முந்தைய ராணுவ நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக அவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"நள்ளிரவு நேரம். ஒரு ராட்சத, செவ்வக வடிவ 'ரோபோ' ராணுவ வாகனத்தால் இழுத்து வரப்படுவதைப் பார்த்தேன். அதை ஒரு சுவரின் அருகில் விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். எனது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறும்படி நான் கத்தினேன். நாங்கள் தப்பி ஓடிய சில நிமிடங்களில், நான் இதற்கு முன் கேட்டிராத ஒரு வெடிப்பு நிகழ்ந்தது."

இந்த வெடிப்பு பேரழிவை ஏற்படுத்துவதாக ஃபவ்ஸி கூறுகிறார்.

"அல்-ஜைதூன் பகுதியில், உடல் பாகங்கள் மிகச் சிறிய துண்டுகளாகச் சிதைந்திருப்பதைக் கண்டேன். 100 மீட்டருக்கு அப்பால் இருந்த மக்கள் கூட வெடிப்பால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், மூச்சுத் திணறலாலும் இறந்தனர். இந்தப் போரில் நாங்கள் கண்ட மிகவும் பயங்கரமான ஆயுதம் இதுதான்."

"வெடிப்பதற்கு முன் தப்பி ஓடிய மக்கள், 'வெடிக்கும் இரும்பு அரக்கனிடம்' இருந்து தப்பிப்பது பற்றி மட்டுமே யோசித்தனர்," என்று ஃபவ்ஸி நினைவுகூர்ந்தார்.

ஒரு கட்டடத்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள நான்கு அறைகள் தெரிகின்றன. இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. ஒரு ஆணும் குழந்தைகளும் சேதமடைந்த அந்தக் கட்டிடத்தில் உள்ள திறந்த அறைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் பலத்தீனர்களை காஸா நகரிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஏராளமானோர் அங்கேயே தங்கியுள்ளனர்.

ராணுவ நடவடிக்கைக்கான செலவைக் குறைத்தல்

கத்தாரில் உள்ள ஜோஆன் பின் ஜாசிம் பாதுகாப்பு ஆய்வு அகாடமியின் பாதுகாப்பு நிபுணரும், முன்னர் காஸா பகுதியில் பணியாற்றியவருமான பேராசிரியர் ஹானி அல்-பசௌஸ், "ராணுவ நடவடிக்கையின் செலவைக் குறைக்கவும், இஸ்ரேலியப் படையினரின் இழப்புகளைத் தவிர்க்கவும் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வெடிகுண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறது'' என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

இவை பெரும் அளவிலான வெடிபொருட்களைக் கொண்டு செல்கின்றன என்றும், சுரங்கங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் பயன்படுத்தப்பட்டு, பெரும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 2025-ஆம் ஆண்டு, காஸா நகரத்தின் கிழக்கில் உள்ள ஒரு பல மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இந்த ஆயுதம் செயல்படுவதை நேரில் பார்த்ததாக காஸாவைச் சேர்ந்த கரீம் அல்-கரப்லி பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"நான் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்தேன், இருப்பினும், அனைத்து சிதறல்களும், கற்களும் எங்கள் வீட்டை வந்தடைந்தன," என்று அல்-கரப்லி நினைவு கூர்ந்தார்.

"வானம் சிவப்பாக மாறியது மற்றும் ஒளி கண்களைப் பறித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது."

பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முனீர் அல்-பர்ஷ், இஸ்ரேலிய ராணுவம் இப்போது காஸா நகருக்குள் இந்த வெடிக்கும் 'ரோபோக்களை' தினசரி நம்பியுள்ளது என்றும், இது "பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றும் மனிதாபிமானப் பேரழிவை மோசமாக்கும் ஒரு உத்தி" என்றும் கூறினார்.

ஒவ்வொரு ரோபோவும் ஏழு டன் வெடிபொருட்களைக் கொண்டு செல்கிறது என்றும், தினசரி ஏழு முதல் பத்து ரோபோக்கள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இது பெரிய அளவிலான இடப்பெயர்வுக்கு வழிவகுத்து, மேற்கு காஸாவில் மக்கள்தொகை அடர்த்தியை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 60,000 பேராக அதிகரித்துள்ளது என்று முனீர் அல்-பர்ஷ் கூறினார்.

*காஸாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் படங்கள் அல்லது வெடிப்புக்குப் பிந்தைய உடனடிப் படங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள், இஸ்ரேலின் சமீபத்திய காஸா நகரத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2z1kyn8zlo

சிங்கப்பூரில் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை!

2 months 2 weeks ago

Published By: Digital Desk 1

26 Sep, 2025 | 10:33 AM

image

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என அந்த நாட்டில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது.

39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமையால் தடை ஏற்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய சட்டத்தரணி நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்;.

இருப்பினும், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரணதண்டனை தொடரும் என்றும், இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலை சேகரிக்குமாறும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவரது மரணதண்டனையை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

அவருக்கு முழு சட்ட நடைமுறையும் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் கருணை மனுக்கள் தோல்வியடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் எடுத்துச் சென்ற போதைப்பொருட்களின் அளவு சுமார் 540 பேரை ஒரு வாரத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது.

மேலும், “தனிப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை எதிர்த்து இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் மற்றும் 11வது நபர் இவர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாரம் 30க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் சிங்கப்பூர் மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் குடிமக்களைப் பாதுகாக்க இவ்வாறான தண்டணைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/226102

ஐ.நா.வில் நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

2 months 2 weeks ago

நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்படி, இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். 

அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.

உலகின் பெரும்பகுதியினர் ஒக்டோபர் 7ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். 

பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg10h5q000nwqplpsibo47mf

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள்

2 months 2 weeks ago

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள்

27 Sep, 2025 | 10:06 AM

image

காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு மத்தியில், "ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வான்வழித் தாக்குதலை" நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன், சர்ச்சைக்குரிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் தளங்களிலிருந்து உதவி பெற முயன்றபோது வெள்ளிக்கிழமை பலர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன

https://www.virakesari.lk/article/226219

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி

2 months 2 weeks ago

donald-trump-131221607-16x9_0.jpg?resize

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி.

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1448657

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

2 months 2 weeks ago

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

September 26, 2025 11:41 am

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

“வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார்.

https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/

ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

2 months 2 weeks ago

ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

26 Sep, 2025 | 11:02 AM

image

ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.

உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார்.

ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார்.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.

நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226113

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

2 months 2 weeks ago

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை.

வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார்.

குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிகாரிகள் பெருமளவில் பணிநீக்கம் செய்வது வரை பல கோட்பாடுகளை அவர்கள் கேள்விப்பட்டதாக ஒரு வட்டாரம் கூறியது, ஆனால் இவ்வளவு மூத்த இராணுவ அதிகாரிகள் திடீரென கூட்டப்பட்டது ஏன் என்பது மிகவும் அசாதாரணமானது.

"இது பொது ஸ்க்விட் விளையாட்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது," என்று ஒரு அதிகாரி நகைச்சுவையாகக் கூறினார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பது குறித்து சில அதிகாரிகள் பாதுகாப்பு கவலைகளையும் தெரிவித்தனர். ஹெக்ஸெத் "ஒரு பெரிய புதிய இராணுவ பிரச்சாரத்தை அல்லது இராணுவ கட்டளை கட்டமைப்பின் முழுமையான மாற்றத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தால், இதற்கு ஒரு நல்ல காரணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று காங்கிரஸ் உதவியாளர் ஒருவர் CNN இடம் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் முதலில் கூட்டத்தின் செய்தியை வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்டது.

பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், ஹெக்ஸெத் "அடுத்த வார தொடக்கத்தில் தனது மூத்த இராணுவத் தலைவர்களை உரையாற்றுவார்" என்பதை உறுதிப்படுத்தினார். கூட்டத்தின் நோக்கம் அல்லது இந்த உத்தரவு இராணுவத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் கொடி அதிகாரிகளுக்கும் உள்ளதா என்பது குறித்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை.

வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார், "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சந்திக்க வருவது நன்றாக இல்லையா?"

f_avif

https://edition.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia

அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டாவது தவணையில் யாருடனாவது போர் செய்து முத்திரை பதிப்பதையே விரும்புவர்.

இப்போதுள்ள போர்ச் சூழலில் ரம்பின் கை முந்தப் போகிறதா?

முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது குற்றச்சாட்டு.

2 months 2 weeks ago

முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும்.

ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார்.

“அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார்.

தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் நடவடிக்கைகளைத் தடுத்ததாகவும் கோமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Former FBI Director James Comey has been indicted by a federal grand jury, an extraordinary escalation in President Donald Trump’s effort to prosecute his political enemies.

Comey, a longtime adversary of the president, is now the first senior government official to face federal charges in one of Trump’s largest grievances: the 2016 investigation into whether his first presidential campaign colluded with Russia.

“JUSTICE IN AMERICA! One of the worst human beings this Country has ever been exposed to is James Comey, the former Corrupt Head of the FBI,” Trump wrote in a Truth Social post.

Comey has been charged with giving false statements and obstruction of a congressional proceeding, and he could face up to five years in prison if convicted, the Justice Department said in a statement.

https://www.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia

டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

2 months 2 weeks ago

Published By: Digital Desk 1

25 Sep, 2025 | 02:27 PM

image

டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை ட்ரோன்கள் தென்பட்டதாக, டேனிஷ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஏனைய விமான நிலையங்கள் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமானநிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது.

எஸ்டோனியன், போலந்து மற்றும் ருமேனிய வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்களுடன் தொடர்புடைய, அண்மைய சம்பவங்கள், ரஷ்யா நேட்டோ பாதுகாப்புகளை சோதித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன.

இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரித்து வருவதாகவும், ஒரு வேடிக்கையான என்பதை நிராகரிக்க முடியவில்லை எனவும் டென்மார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது.

வடக்கு டென்மார்க்கில், ஜட்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஆல்போர்க் விமான நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் காணப்பட்டதாக பொலிஸ் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

ஆல்போர்க்கில் ட்ரோன்கள் தென்பட்ட சம்பவங்கள், திங்கற்கிழமை, கோபன்ஹேகன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் விமானங்களை நிறுத்தியதை போன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்காண்டிநேவியாவின் விமான நிலையமொன்றின் அருகில் பெரிய மற்றும் அடையாளம் தெரியாத பல ட்ரோன்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டமையானது, டென்மார்க்கின் ஆயுதப் படைகளைப் பாதித்துள்ளது.

ஏனெனில் அது ஒரு இராணுவ தளமாகப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா விமானங்களின் நோக்கம் என்ன, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது மிக விரைவில் அறியமுடியும் என பொலிஸார் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகளில் அந்த நாட்டின் மற்றும் தேசிய பெரிஸாருக்கு உதவுவதாக டென்மார்க் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

https://www.virakesari.lk/article/226052

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

2 months 2 weeks ago

New-Project-349.jpg?resize=750%2C375&ssl

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு.

மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.

https://athavannews.com/2025/1448540

வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

2 months 2 weeks ago

வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

25 Sep, 2025 | 11:27 AM

image

வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார்.

நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

https://www.virakesari.lk/article/226033

நோர்வேயில் குண்டு வெடிப்பு

2 months 2 weeks ago

Published By: Digital Desk 3

24 Sep, 2025 | 02:51 PM

image

நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் தென்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/225948

சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி

2 months 3 weeks ago

24 Sep, 2025 | 09:55 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.

இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி, 'புஜியான்' கப்பல் முழுமையாகத் தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம், பல வகையான விமானங்களை இந்த கப்பலுடன் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு கடற்படை அணியை உருவாக்க முடியும்.

சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது சீன கடற்படையை, கடலோரப் பாதுகாப்பிலிருந்து ஆழ்கடல் பாதுகாப்பு நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய படியாகும்.

செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்,J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும்.

ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது.

மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கினார்.

'புஜியான்' கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான 'லியாவோனிங்' மற்றும் 'ஷாண்டோங்' ஆகியவற்றுக்கு மாறாக, 'புஜியான்' கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளைத் தொடங்கியதில் இருந்து, 'புஜியான்' கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது.

https://www.virakesari.lk/article/225921

பிரித்தானியாவில் இராணுவத்தை விட அதிகளவில் பார்க்கிங் வார்டன்கள்: அதிகரித்த லாபம்..என்ன காரணம்?

2 months 3 weeks ago

பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டுக்கு 2.3 பில்லியன்

நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. parking wardens morethan soldiers in uk

அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள். நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித்தானியாவின் இராணுவத்தை பாதித்த போதிலும், கவுன்சில்கள் தங்கள் பார்க்கிங் வார்டன்களின் படைகளில் இருந்து பெரும் லாபத்தை ஈட்டுவது தெரிகிறது.   parking wardens morethan soldiers in uk

சாரதிகளிடமிருந்து வரும் வருவாய்

நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 961 பவுண்டு மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கவுன்சில்கள் கட்டணங்களை உயர்த்துவதனால் பார்க்கிங் அனுமதிகள், டிக்கெட்டுகள் மற்றும் அபராதங்களுக்கான சாரதிகளிடமிருந்து வரும் வருவாய், இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களை தெரிவிப்பதுதான் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்கள் தெருக்களில் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் 1.4 பில்லியன் பவுண்டுகளையும், கவுன்சில் நடத்தும் கார் பார்க்கிங் மூலம் 876 மில்லியன் பவுண்டுகளையும் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.parking wardens morethan soldiers in uk  

parking wardens morethan soldiers in uk

https://tamilwin.com/uk

அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார்.

2 months 3 weeks ago

அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார்.

8f005d7e3b8fe3195ec44df7cc46238e

லோகன் ஹிட்ச்காக்

செப்டம்பர் 9, 2025 2 நிமிடம் படித்தது

இந்தக் கட்டுரையில் :

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆலோசகர் ஒருவர், அமெரிக்கா தனது பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ மற்றும் தங்கத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று கூறினார். 

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற இறுதி செய்தியாளர் சந்திப்பில் , மன்றத்தின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவரும் புடினின் ஆலோசகருமான அன்டன் கோப்யகோவ், அமெரிக்கா "உலகின் செலவில்" தனது கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்கிறது என்று கூறினார். 

சிறந்த அடமான விகிதங்களை வாங்கவும்

ராக்கெட் அடமானம்

நிமிடங்களில் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணங்கள்

மேலும் அறிக

விரைவான கடன்கள்

நிதி சுதந்திரத்திற்கான விரைவான பாதை

மேலும் அறிக

http://s.yimg.com/cv/apiv2/default/share-new-american-funding.png

வீட்டு உரிமைக்கான உங்கள் பாதை

மேலும் அறிக

Money
No image previewMoney – Finance News & Advice Since 1972
Money has been helping people enrich their lives for over 50 years. We provide news, educational resources and tools to achieve financial success.

ஆல் இயக்கப்படுகிறது - மேலே உள்ள இணைப்புகளிலிருந்து Yahoo கமிஷனைப் பெறலாம்.

"அமெரிக்கா இப்போது தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி சந்தைகளின் விதிகளை மீண்டும் எழுத முயற்சிக்கிறது. அவர்களின் கடனின் அளவு - 35 டிரில்லியன் டாலர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரண்டு துறைகளும் (கிரிப்டோ மற்றும் தங்கம்) அடிப்படையில் பாரம்பரிய உலகளாவிய நாணய முறைக்கு மாற்றாகும்," என்று ரஷ்யா டைரக்டின் மொழிபெயர்ப்பின்படி கோப்யகோவ் கூறினார். 

"இந்தப் பகுதியில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன: டாலரின் மீதான குறைந்து வரும் நம்பிக்கையை அவசரமாக நிவர்த்தி செய்வது."

 

கோப்யகோவின் கூற்றுப்படி, அமெரிக்கா இறுதியில் அதன் கடனை ஸ்டேபிள்காயின்களில் முதலீடு செய்து பின்னர் அதன் மதிப்பைக் குறைக்கும். 

"எளிமையாகச் சொன்னால்: அவர்களிடம் $35 டிரில்லியன் நாணயக் கடன் உள்ளது, அவர்கள் அதை கிரிப்டோ மேகத்திற்கு நகர்த்தி, அதன் மதிப்பைக் குறைத்து - புதிதாகத் தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார். "கிரிப்டோவைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இதுதான் உண்மை."

டிக்ரிப்ட்  அமெரிக்க வர்த்தகம் மற்றும் வெளியுறவுத் துறைகளை அணுகியது.


வளர்ந்து வரும் அமெரிக்க கடன் நெருக்கடி இறுதியில் சொத்து வகுப்பிற்கு பயனளிக்கக்கூடும் என்று கிரிப்டோ ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளனர், ஜூன் மாதத்தில் Coinbase தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது பிட்காயின் உலகளாவிய இருப்பு நாணயமாக மாற  வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தார் .

அமெரிக்கா கிரிப்டோவுடன், குறிப்பாக ஸ்டேபிள்காயின்களுடன் அதிகரித்து வரும் பிணைப்பைச் சுற்றியுள்ள சந்தேகம் ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் பொதுவாக ஃபியட் நாணயங்களின் மதிப்புடன் இணைக்கப்படும் இந்த டிஜிட்டல் சொத்துக்களுடன் மிகவும் வசதியாகிவிட்டனர். 

ஜூலை மாதம் டிரம்ப் GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார், இது அமெரிக்காவில் ஸ்டேபிள்காயின்களை வெளியிடுவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கியது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், கிரிப்டோ அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் என்று நம்புவதாகவும் , அதைக் குறைக்க அல்ல என்றும் கூறினார். 

கோபியாகோவின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ரஷ்யா ஸ்டேபிள்காயின்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ஜூலை மாதம், ரஷ்ய அரசு ஊடகங்கள், அரசுக்குச் சொந்தமான ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் ட்ரானில் தொடங்கப்படும் ரூபிள் ஆதரவு ஸ்டேபிள்காயினில் பணியாற்றி வருவதாக செய்தி வெளியிட்டன. 

https://finance.yahoo.com/news/putin-advisor-accuses-us-using-214522644.html


இவ்வாறு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என நான் நம்புகிறேன், யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை கூறவும்.

சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் இது ஒரு பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டாக இருப்பதாக எனதளவில் கருதுகிறேன், இந்த விடயத்தில் பெரிதாக புரிதல் குறைவாக உள்ளது அதனால் இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் என கருதுகிறேன் , தங்கம், கிப்டோ மற்றும் அமெரிக்க பணமுறிகள் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தவென இவ்வாறான குற்றச்சாட்டினை வெளியிடுகிறார்களா?

பாலஸ்தீன தனிநாட்டுக்கு பிரான்ஸ் ஆதரவு : உலக நாடுகளில் அதிகரித்த அழுத்தம்

2 months 3 weeks ago

23 Sep, 2025 | 05:00 PM

image

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு நாடுகள் தீர்வு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்றார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்று ஈடுபாடாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது, இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்றும், இது ஹமாஸ் அமைப்புக்கான தோல்வியாகும் என்றும் மக்ரோன் தெரிவித்தார்.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை சர்வதேச நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஐ.நா.வில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான முன்மொழிவு வந்தபோது, கனடா முதலில் ஆதரவு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தும் ஆதரவு அளித்தன.

இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஜி7 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இந்த முடிவு, பாலஸ்தீன தனிநாட்டுக்கான சர்வதேச ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/225878

ஒரு விமான தளத்துக்காக தாலிபன்களை எச்சரித்த டிரம்ப்; தலையிட்டு பதில் கொடுக்கும் சீனா

2 months 3 weeks ago

பக்ராம் விமானத் தளம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார்.

மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார்.

இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பயணத்தின்போது டிரம்ப் இதேபோன்ற கருத்தை வெளியிட்டபோது, தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது.

தாலிபன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஜாகிர் ஜலாலி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "ஆப்கானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டதில்லை. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் போது இந்த சாத்தியக்கூறு முழுமையாக நிராகரிக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன" என்று கூறினார்.

2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்த தூதரக உறவுகளும் இல்லை.

டிரம்ப் சமீபத்தில் தனது பிரிட்டன் பயணத்தின்போது பக்ராம் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்ட பின் இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர், "பக்ராம் உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் ஒன்றாகும், அதை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து அது ஒரு மணிநேர தூரத்தில் உள்ளது என்பதால் இப்போது அந்தத் தளத்தை மீண்டும் பெற விரும்புகிறோம்," என்று கூறியிருந்தார்.

இந்த ராணுவத் தளத்தைப் பற்றி அவர் பேசும் ஒவ்வொரு முறையும், சீனாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களிலும் அவர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். பக்ராம் விமானத் தளத்தைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் பேசினார்.

இந்த விமானத் தளம் பல காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தாலிபனுக்கு எதிரான போரில் இது 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் மையமாக இருந்தது.

அமெரிக்க ராணுவம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியபோது, பெரிய அளவிலான ராணுவ உபகரணங்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் அங்கேயே விடப்பட்டிருந்தன.

பக்ராம் விமானத் தளத்தை யார் கட்டியது?

சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது

பக்ராம் விமானத் தளம் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது.

இது முதன்முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அது அவர்களின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது.

2001-ல் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அது இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது.

அப்போது பக்ராம் இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆனால் சுமார் 30 சதுர மைல்கள் (77 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் விரிவடைந்துள்ள அந்த தளத்தை அமெரிக்க ராணுவம் மீண்டும் கட்டியது.

கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பக்ராம் தளம், அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமானத் தளங்களில் ஒன்றாக இருந்தது.

இது பல கிலோமீட்டர் நீளமுள்ள வலுவான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பாக இருந்தது. எந்த வெளியாட்களும் அதற்குள் நுழைய முடியாது.

இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்கள் உள்ளன.

பக்ராமின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று இரண்டரை கிலோமீட்டருக்கும் மேல் நீளமானது. டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, "இந்தத் தளத்தில் வலிமையான மற்றும் மிக நீளமான கான்கிரீட் ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதையின் தடிமன் சுமார் இரண்டு மீட்டர் ஆகும்."

சீனாவின் அணுசக்தி மையத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செப்டம்பர் 3, 2025 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் காணப்பட்டன.

ஜூலை 2025-ல் பிபிசி ஆப்கன் சேவையால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெரிய ராணுவத் தளத்தில் சீனா இருக்கிறதா என்பதை கண்டறியச் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

முந்தைய மற்றும் பிந்தைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருப்பதும், போர் விமானங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.

பக்ராம் ராணுவத் தளத்தில் பெரிய அளவிலான உத்தி ரீதியான மாற்றம் எதுவும் இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஏப்ரல் 2025-ஆம் ஆண்டுப் படங்கள் இரண்டு ஓடுபாதைகளும் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பிபிசி குழுவிடம் தெரிவித்தார். ஆனால் 2025-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் எந்த விமானமும் காணப்படவில்லை.

பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள 'லோப் நூர்' என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பல மணிநேரம் ஆகலாம்.

ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் கடந்துவிட முடியும்.

இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவம் என்ன?

பக்ராம் விமானத் தளத்தில் தாலிபன் வீரர்கள் நடத்திய அணிவகுப்பு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாலிபன் வீரர்கள் பக்ராம் விமானத் தளத்தில் அணிவகுப்பு நடத்தினர்.

இருபது ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.

ஜோ பைடன் 2011-ல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார்.

ஏர் கால்குலேட்டர் வலைத்தளத்தின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள இரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது.

மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்துக்கும் இந்த விமானத் தளம் முக்கியமானது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, பக்ராம் விமானத் தளத்தில், அமெரிக்க வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தித் தாலிபன் படைகள் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

சீனாவின் பதில் என்ன?

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் கருத்துக்கு சீனாவின் பதில் மிகவும் நிதானமாக இருந்தது.

பக்ராம் விமானத் தளம் குறித்த டிரம்பின் கருத்துக்கு கடந்த சனிக்கிழமை சீனாவிடம் இருந்தும் ஒரு பதில் கிடைத்தது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், "ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீனா மதிக்கிறது, அதன் எதிர்காலம் ஆப்கானிஸ்தான் மக்களின் கைகளில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

அவர், "பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவைப் பெறாது என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

தற்போது, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

ஆனால், சீனாவுக்கும் தாலிபனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறலாம்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான நாடுகளுக்கு தூதரகங்கள் இல்லை, ஆனால் சீனா தனது தூதரை இங்கு அனுப்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு தாமிர சுரங்கத்தின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.

சீனாவுக்கு இது ஏன் ஒரு பதற்றமான விஷயம்?

பராம் விமானத் தளம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விடப்பட்டிருந்தன.

சர்வதேச விவகார நிபுணரும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான ரேஷ்மா காசி, பிபிசி நிருபர் மான்சி தாஷிடம் ஒரு பிபிசி நிகழ்ச்சியில், உத்தி ரீதியாக இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

அவர், "இது உத்தி ரீதியாக ஒரு முக்கியமான மையம் மட்டுமல்ல. இங்கிருந்து ஒரு மணிநேர தூரத்தில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதன் அணுசக்தி மையங்கள் உள்ளன. அதன் கண்காணிப்புக்கும் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தளத்திலிருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளைக் கண்காணிக்க முடியும்" என்றார்.

அவர் கூற்றுப்படி, தற்போது பக்ராம் விமானத் தளம் உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டது.

அவர், "சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மிகவும் அதிநவீனமானவை. அது இந்தத் திசையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2030-க்குள் சீனாவிடம் 1000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை எடுத்துச் செல்வதற்கான அதிநவீன ஏவுகணை அமைப்புகளும் அதனிடம் உள்ளன" என்றார்.

"ஒரு எதிரி நாட்டின் விமானத் தளம் இவ்வளவு அருகில் இருப்பது சீனாவுக்கு ஒரு கவலைக்குரிய விஷயம். அணு ஆயுதங்களின் போக்குவரத்து, பராமரிப்பு, அவற்றின் பயன்பாடு அல்லது வேறு நாட்டுக்கு அவற்றைக் கொடுக்கும் நடவடிக்கை ஆகியவை கண்காணிப்பில் வரலாம்," என்கிறார் ரேஷ்மா காசி.

பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் 'பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்' (BRI) திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd9ykv5xxdko

ஐநாவில் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

2 months 3 weeks ago

பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர்.

பட மூலாதாரம், Guy Smallman/Getty Images

படக்குறிப்பு, 2024 டிசம்பர் 14 அன்று லண்டனில், பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர்.

22 செப்டெம்பர் 2025

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம்.

அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன.

ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை.

மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால், 1990களில் அமைக்கப்பட்ட பாலத்தீன ஆட்சி தன் நிலம், தன் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. காஸா பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து, இப்போது பேரழிவு தரும் போரின் மத்தியில் சிக்கியுள்ளது.

பாலத்தீனத்தின் 'அரை-நாடு' (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை.

பாலத்தீனத்தின் 'அரை-நாடு' (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அந்த குறியீட்டு அர்த்தம் (symbolism) மிக வலுவானது.

"இரு நாடுகள் தீர்வை ஆதரிக்க பிரிட்டனுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது"என ஜூலை மாதம் ஐ.நா.வில் உரையாற்றியபோது, முன்னாள் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி கூறினார்.

1917-ஆம் ஆண்டு வெளியான பால்ஃபோர் பிரகடனத்தை அவர் குறிப்பிட்டார்.

அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த ஆர்தர் பால்ஃபோர் அதில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனத்தில், "யூத மக்களுக்கு பாலத்தீனில் ஒரு தேசிய இல்லம் அமைப்பதற்கு" பிரிட்டன் ஆதரவு தரும் என முதன்முறையாக அறிவித்திருந்தது.

1948-ல்  பிரிட்டிஷ் படைகள் யூனியன் கொடியை கீழிறக்கினர்.

பட மூலாதாரம், Bettmann via Getty Images

படக்குறிப்பு, 1948-ல் பாலத்தீனத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஷ் படைகள் யூனியன் கொடியை கீழிறக்கினர்.

முதல் உலகப் போருக்குப் பிறகு, 1922 முதல் 1948 வரை, 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' ஆணையின் கீழ் பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கொடுக்கப்பட்டது.

அந்த ஏற்பாட்டின் படி, போரில் தோற்ற ஜெர்மனி மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் நிலங்களை மற்ற நாடுகள் நிர்வகிக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

பிரிட்டன் அப்போது ஒரு நுட்பமான சமநிலையை பேண முயன்றது. (இது சாத்தியமற்றது என சிலர் கருதினார்கள்) .

ஒருபுறம், யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் ஒரு "தேசிய இல்லம்" அமைக்க ஆதரவு தரும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்தது.

மறுபுறம், அங்கு வாழும் பெரும்பான்மையான அரேபியர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் உறுதியளித்தது. இந்த இரு முரண்பட்ட வாக்குறுதிகளும், யூதர் மற்றும் அரபு சமூகங்களுக்கு இடையே அதிகரித்த பதற்றமும் சேர்ந்து, பல ஆண்டுகளாக அமைதியின்மையை ஏற்படுத்தின.

1948-ல் பிரிட்டன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியது.

அதன் பிறகு, இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதும், போர் வெடித்து, பல பாலத்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல வரலாற்றாசிரியர்கள், பிரிட்டன் அந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகளே இன்றைய இஸ்ரேல்–பாலத்தீன் மோதலுக்கான அடிப்படையாக அமைந்தது என்றும், பாலத்தீன பிரதேசத்தின் தீர்வு இன்னும் முடியாத சர்வதேச பிரச்னையாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், 1917-ல் வெளியான பால்ஃபோர் பிரகடனத்தில் பாலத்தீனர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, அவர்களின் தேசிய உரிமைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என வாதிடுகிறார்கள்.

லாமி கூறியது போல, இப்போது "இரு நாடுகள் தீர்வு" என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.

'இரு நாடுகள் தீர்வு' என்பது, 1967 அரபு–இஸ்ரேல் போருக்கு முன்பிருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளைச் சேர்த்து ஒரு பாலத்தீன நாடு உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதில், கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் அந்தக் கருத்தின் ஒரு பகுதியாகும்.

ஆனால், பல ஆண்டுகளாக நடந்த சர்வதேச முயற்சிகள் எந்தச் சிறப்பான முடிவையும் தரவில்லை. மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைத்த குடியேற்றங்கள், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவையாக இருந்தாலும், 'இரு நாடுகள் தீர்வு' என்ற கருத்தை வெறும் கோஷமாகவே மாற்றி விட்டன.

பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது யார்?

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் சுமார் 75% நாடுகள் தற்போது பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

ஐ.நா.வில், பாலத்தீனத்திற்கு "நிரந்தர பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்து உள்ளது. அதனால் பாலத்தீன் கூட்டங்களில் பங்கேற்கலாம், ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற 4 நாடுகளும் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துவிட்டன.

சீனாவும் ரஷ்யாவும் 1988 இல் பாலத்தீனத்தை அங்கீகரித்தன.

இதனால், இஸ்ரேலின் மிக வலுவான கூட்டாளியான அமெரிக்கா மட்டும் தனியாக நிற்கும் நிலை உருவாகிறது.

அமெரிக்கா 1990களின் நடுப்பகுதியில், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான (பாலத்தீன அதிகார சபை) அரசை அங்கீகரித்தது.

அதன் பிறகு வந்த சில அமெரிக்க அதிபர்கள், பாலத்தீன நாடு உருவாக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக இருந்தார். அவரது ஆட்சிக் காலங்களில், அமெரிக்காவின் கொள்கை முழுமையாக இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் இருந்தது.

பிரிட்டனும் மற்ற நாடுகளும் இப்போது பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பது ஏன்?

தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.

ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.

காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

வடக்கு காஸா  பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் பாலத்தீனியர்கள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, காஸா பகுதியில் "பஞ்சத்தின் மிக மோசமான நிலைமை தற்போது உருவாகி வருகிறது" என்று ஐ.நா. ஆதரவு பெற்ற உலக உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.

ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.

காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பாலத்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க சில நாடுகள் முடிவு செய்துள்ளன.

உதாரணமாக, பாலத்தீனம், அதிகாரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும், 2026-இல் தேர்தல் நடத்த வேண்டும், மேலும் உருவாகும் பாலத்தீன நாடு ராணுவமற்றதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அங்கீகாரம் தரப்படும் என கனடா கூறியுள்ளது.

பிரிட்டன் தனது முடிவை அறிவிக்கும் போது, பொறுப்பை இஸ்ரேலின் மீது வைத்தது.

காஸாவில் உள்ள துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்தை ஏற்படுத்த, மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பதை தவிர்க்க, மேலும் இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான சமாதான முயற்சிக்கு இஸ்ரேல் உறுதியளிக்காவிட்டால், ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாலத்தீனம் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த முடிவு சில குழப்பங்களை ஏற்படுத்தியது.

சில விமர்சகர்கள், குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என்றும், அங்கீகாரம் எந்த நிபந்தனையுடனும் இருக்கக் கூடாது என்றும் வாதிட்டனர்.

ஆனால் பிரிட்டன் குறிப்பிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்ததால், அங்கீகாரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியது.

பாலத்தீன் அரசை அங்கீகரிக்க முன்வரும் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அதன் பிறகு எப்படியான அரசியல் செயல்முறை இருக்க வேண்டும் என்பதற்கான சிந்தனையை ஊக்குவித்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றன.

சில நாடுகள் பாலத்தீனத்தை ஏன் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை?

பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள், பெரும்பாலும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவுக்கு வராததால் அங்கீகாரம் தரவில்லை.

"பாலத்தீன அரசை உருவாக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா வாய்மொழியாக ஏற்கிறது. ஆனால், அது இஸ்ரேலும் பாலத்தீனமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனால், பாலத்தீன மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறுவதில் மறுப்பு சொல்லும் அதிகாரம் இஸ்ரேலுக்கு கிடைக்கிறது" என்று லண்டன் பொருளாதார பள்ளியின் சர்வதேச உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணர் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் கூறுகிறார்.

1990-களில் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், பின்னர் 'இரு நாடுகள் தீர்வு' என்பதை இலக்காகக் கொண்டன.

அதாவது, இஸ்ரேலியரும் பாலத்தீனரும் தனித்தனி நாடுகளில் அருகருகே வாழ வேண்டும் என்பதே அந்தத் தீர்வு.

ஆனால் 2000-களின் முற்பகுதியிலிருந்தே, அமைதிக்கான அந்தச் செயல்முறை வீழ்ச்சியடையத் தொடங்கியது.

குறிப்பாக 2014-ல் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, நிலைமை மேலும் மோசமானது.

  • எதிர்கால பாலத்தீன நாட்டின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டும்?

  • அந்த நாட்டின் தன்மை என்ன?

  • ஜெருசலேமின் நிலை என்ன?

  • 1948–49 இல் இஸ்ரேல் உருவானபின் நடந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்த பாலத்தீன அகதிகளின் நிலைமை என்ன?

போன்ற கடினமான பிரச்னைகள் அனைத்தும் இன்னும் பதில் கிடைக்காதவையாகவே உள்ளன.

மேலும், ஐ.நாவில் உறுப்பினராக சேர பாலத்தீனம் எடுக்கும் முயற்சியை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது.

ஏப்ரல் 2024-ல், இஸ்ரேலின் ஐ.நா தூதர் கிலாட் எர்டன் கூறியதை ஏஎப்ஃபி (AFP) மேற்கோள் காட்டியது.

ஐ.நா.வில் பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நடப்பது கூட "இனப்படுகொலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன் கூறியிருந்தார். மேலும், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அங்கீகாரம் வழங்கப்படுவது பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண விரும்பும் நாடுகள், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தங்கள் கூட்டாளியான இஸ்ரேலை கோபப்படுத்தும் என்பதை நன்றாகவே அறிந்துள்ளன.

இஸ்ரேலின் ஆதரவாளர்கள் சிலர், பாலத்தீனர்கள் தனி நாடு ஆவதற்கான அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வாதிடுகிறார்கள். 1933-ஆம் ஆண்டு மான்டிவீடியோ ஒப்பந்தம் கூறும் அந்த நிபந்தனைகள்:

  • நிரந்தர மக்கள்தொகை

  • தெளிவான எல்லைகள்

  • செயல்படும் அரசு

  • பிற நாடுகளுடன் தூதரக உறவை ஏற்படுத்தும் திறன்

ஆனால், சிலர் மிகவும் நெகிழ்வான வரையறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, மற்ற நாடுகள் தரும் அங்கீகாரமே ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிக்க போதுமானது என்பதே அவர்களின் வாதம்.

அமெரிக்கா என்ன சொல்கிறது?

டிரம்ப் நிர்வாகம், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மறைக்கவில்லை.

2025 செப்டம்பர் 18 அன்று, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "அந்த விஷயத்தில் [பிரிட்டிஷ்] பிரதமருடன் கருத்து வேறுபாடு உள்ளது" என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

உண்மையில், அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது பாலத்தீன சுதந்திரம் என்ற கருத்துக்கே நேரடியான எதிர்ப்பாக மாறியுள்ளது.

"பாலத்தீனத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் முயற்சிப்பது ஹமாஸுக்கு மேலும் தைரியம் தரும்"என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

அதே நேரத்தில், அங்கீகாரத்தை வலியுறுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார். 'அது, மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள தூண்டிவிடக்கூடும்' என அவர் கூறினார்.

16 மே 2024, பாகிஸ்தானின் கராச்சியில், பாலத்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது, இமாமியா மாணவர்கள் அமைப்பின் (ISO) ஆதரவாளர் பாலத்தீனக் கொடியை பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், SHAHZAIB AKBER/EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, பல நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரிக்கின்றன

ஐ.நா.வில் பாலத்தீனத்தின் நிலை :

பாலத்தீனம் தற்போது, ஹோலி சீயைப் போலவே, ஐ.நா.வில் "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

2011-ல், பாலத்தீனம் முழுமையான ஐ.நா உறுப்பினராக சேர விண்ணப்பித்தது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான ஆதரவு இல்லாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பிற்கே அது செல்லவில்லை.

அதற்குப் பிறகு, 2012-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் அந்தஸ்தை உயர்த்தி, "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என அறிவித்தது.

இதனால், தீர்மானங்களில் வாக்களிக்க முடியாதபோதிலும், பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்கும் உரிமை பெற்றது.

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இந்த முடிவு வரவேற்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை விமர்சித்தன.

இந்த அந்தஸ்து, பாலத்தீனத்திற்கு மற்ற சர்வதேச அமைப்புகளில் சேரும் வாய்ப்பையும் வழங்கியது. 2015-இல், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உட்பட பல அமைப்புகளில் இணைந்தனர்.

மே 2024-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் உரிமைகளை மேம்படுத்தியது. சூடான விவாதத்துக்குப் பிறகு, பாலத்தீனத்தை உறுப்பினராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது.

அந்த தீர்மானத்தின் மூலம், பாலத்தீனம் முழுமையாக விவாதங்களில் பங்கேற்க, செயல்திட்டங்களை முன்மொழிய, மற்றும் குழுக்களில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், வாக்களிக்கும் உரிமை இன்னும் வழங்கப்படவில்லை.

ஐ.நா.வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம்.

அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக அமெரிக்கா, பாலத்தீனத்தை ஒரு நாடாக ஏற்கும் முயற்சியை "முன்கூட்டியது" என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்தது.

பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்கள் சட்டப்படி கட்டாயமானவை. ஆனால் பொதுச் சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு அந்த வலிமை இல்லை.

"ஐ.நா. முழு உறுப்பினராக மாறுவது, பாலத்தீனர்களுக்கு அதிக ராஜ்ஜீய செல்வாக்கை தரும். அதில் தீர்மானங்களை நேரடியாக முன்மொழிவது, பொது சபையில் வாக்களிப்பது (இப்போது 'உறுப்பினர் அல்லாத' நாடு என்பதால் வாக்களிக்க முடியவில்லை), பின்னர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற/வாக்களிக்க கூட வாய்ப்பு உண்டு"என்று வாஷிங்டனில் உள்ள மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட் (Middle East Institute) அமைப்பில், பாலத்தீன மற்றும் இஸ்ரேல் தொடர்பான நிகழ்ச்சிகளின் இயக்குனர் கலீத் எல்கிண்டி கூறுகிறார்,

"ஆனால், இவை எதுவும் 'இரு நாடு தீர்வு'வைக் கொண்டு வராது. அது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) நிறுவனத்தில் வளர்ச்சிக் கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியரான கில்பர்ட் அச்சார், இதைப் பற்றி கூறுகையில், "ஐ.நாவில் முழு உரிமை கிடைத்தாலும், பாலத்தீன அதிகார சபை, அதனால் பெரிதாக ஒன்றும் சாதிக்காது" என்கிறார்.

"இது வெறும் அடையாள வெற்றியாக இருக்கும். 1967ல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு சிறிய பகுதியிலும், இஸ்ரேலை முழுமையாகச் சார்ந்து இருக்கும், அதிகாரமற்ற 'பாலத்தீன அதிகார சபையின்' உண்மைக்கு எதிராக, கற்பனையான 'பாலத்தீன அரசு' அங்கீகாரம் மட்டுமே"என்று கூறும் அவர்,

மேலும், இது சுயாட்சி மற்றும் முழு உரிமை கொண்ட பாலத்தீன நாடு என்ற இலக்கிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது," என்றும் குறிப்பிட்டார்.

பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசத்தின் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8exxe7kl7ko

'பாலஸ்தீனம் ஒரு உரிமை, பரிசு அல்ல' - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

2 months 3 weeks ago

23 Sep, 2025 | 10:56 AM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள்  பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார்.

பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த மோதலுக்கு 'இரு நாடுகள்' என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களின்படி, இரு நாடுகளும் ஜெருசலேம் நகரைத் தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹமாஸ் அமைப்பை இலக்காகக் கொண்டு, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 63,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினரும் அடங்குவர். உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் பாலஸ்தீனியர்கள், பட்டினியாலும் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குட்டெரெஸ், ஒரு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க மறுப்பது பயங்கரவாதத்திற்குப் பரிசளிப்பது போன்றது என்றும், இரு நாடுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/225826

Checked
Mon, 12/15/2025 - 13:46
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe