உலக நடப்பு

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி

7 hours 26 minutes ago

Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM

image
 

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார்.

ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். 

கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். 

இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. 

கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது.

இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/179895

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு

13 hours 32 minutes ago

1000178888.jpg

 

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
 
அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
 
வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார்.
 
 
தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர்களுக்கு இடையே நடக்கும் நிக்காஹ் சடங்குகள் செல்லுபடியாகும் திருமணமாக கருதப்படுமா என்று விசாரித்தார்.
 
அதற்கு பதிலளித்த மதகுரு, "ஆம், நிச்சயமாக, இரண்டு சாட்சிகளுடன் ஒரு தொலைக்காட்சி நாடகக் காட்சியில் நிக்காஹ் நடத்தப்பட்டால், அது சரியான திருமணமாக கருதப்படும் என பதில் அளித்தார்.
 
அறிஞரின் கூற்றுப்படி, இரண்டு நடிகர்கள் ஒரு நாடகத்தில் நிக்காஹ் காட்சியை நடித்தால், அவர்களின் திருமணம் உண்மையில் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.
 
மத அறிஞரின் கூற்று பரவலான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர்.
 
 

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ் விபத்து : ஐவர் பலி

1 day ago

Published By: SETHU  27 MAR, 2024 | 06:06 PM

image
 

ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். 

லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. 

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/179843

நூறாண்டுக்கு முன் காணாமல் போன ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது?

1 day ago
ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,TOMAS TERMOTE

படக்குறிப்பு,

முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள்

27 மார்ச் 2024, 10:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது.

1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.

அதோடு சேர்த்து இந்த மோதலில் லேடி ஆலிவ் கப்பலும் கடலுக்குள் மூழ்கிப்போனது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது.

அதற்கான படப்பிடிப்பு ஆழ்கடலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த UC-18 நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கப்பலை கண்டுபிடிக்கவும், அதை அடையாளம் காணவும் டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) குழுவுக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

ஆழ்கடல் திரைப்பட தயாரிப்பாளரான கார்ல் டெய்லர், தற்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'The Hunt for Lady Olive and the German Submarine' என்ற பிபிசியின் ஆவணப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE

படக்குறிப்பு,

கப்பல் தேடும் பணியில் நீச்சல் வீரர்கள்

230 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல்

UC-18 மற்றும் லேடி ஆலிவ் ஆகிய இரண்டு கப்பல்களுமே இந்த போரில் மூழ்கின. இதனால், UC-18 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 28 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

பிபிசி ஆவணப்படத்திற்கான படைப்பின்போது, UC-18 இன் எஞ்சிய பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்ட நீச்சல் வீரர்கள் குழு, லேடி ஆலிவ் மூழ்கிய இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கார்ல் டெய்லர், குறைந்த வெளிச்சத்தில் கடலின் அடித்தளத்தை ஆராய்வது சவால்கள் நிறைந்தது என்று கூறினார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள UC-18 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் 70 மீட்டர் (230 அடி) ஆழத்தில் நீச்சல் வீரர்களால் அடையாளம் காணப்பட்டது.

இந்த தேடுதல் பணியில் ஈடுபட்ட குழு, கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் யு-படகு நிபுணரான தாமஸ் டெர்னாட்டுடன் இணைந்து பணியாற்றியது.

 
ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE

படக்குறிப்பு,

"ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும்"

வரலாற்றுச் சான்றுகளின்படி, ஆங்கிலக் கால்வாயில் ஜெர்சி கடற்கரையிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கப்பல்களுக்கிடையில் போர் நடந்துள்ளது.

ஆனால், UC-18 மற்றும் லேடி ஆலிவ்ஸ் ஆகிய கப்பல்கள் மேற்கில் 64 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாக கார்ல் டெய்லர் கூறியுள்ளார்.

ஆழ்கடல் நீச்சல் குழுவினர் தங்கள் தேடுதலின் போது, இந்த மோதலில் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய கார்ல் டெய்லர், “இந்தக் கப்பல்களுக்குப் பின்னால் இருந்த நீண்டகால மர்மம் விலகியுள்ளது போல் தெரிகிறது. ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c80k90w5ywzo

சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!

1 day 5 hours ago
UK02-600x375.jpg சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!

புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது.

உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,

32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் முன்னர், தங்கள் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் நாடு திரும்பும் நாளில் இருந்து 3 மாதங்கள் வரையில் உங்கள் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் கடவுச்சீட்டானது செப்டம்பர் 2018க்கு முன்னர் விநியோகிக்கப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் செல்லுபடியாகும்.

இந்த 10 ஆண்டுகள் விதியானது, கண்டிப்பாக ஐரோப்பாவை விரும்பும் பிரித்தானிய பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும் முன்னர் தங்களது கடவுடுச்சீட்டுகளை ஒருமுறை பரிசோதித்து உறுதி செய்யுமாறு பெரும்பாலானோர் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், இதுபோன்ற சிக்கலால் நாளும் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுவதுடன், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 57.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1375315

'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

1 day 10 hours ago

1000178471.jpg

 

மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

 

27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

“மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

https://www.madawalaenews.com/2024/03/i_922.html

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

2 days 3 hours ago
usa-750x375.webp அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் இன்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இந்த கப்பல் இலங்கை நோக்கிச் சென்றதாகவும் டாலி என்ற கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அத்துடன் பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் மேலும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1375067

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு - ஜூலியன் அசஞ்சேயிற்கு சிறிய நிம்மதி

2 days 3 hours ago
26 MAR, 2024 | 05:06 PM
image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே முன்னெடுத்துள்ள போராட்டத்தில் அவருக்கு சிறிய வெற்றி கிடைத்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்காவிட்டால் அசஞ்சே தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அடுத்த சில நாட்களில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பார்.

வேவுபார்த்த குற்றச்சாட்டுகளிற்காக அவரை நாடு கடத்தவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரண்டுநாட்கள் விசாரணையின் பின்னர் நீதிபதிகள் ஜூலியன் அசஞ்சேயின் வழக்கறிஞர்கள் அசஞ்சேயிடம் வாதிடக்கூடிய வழக்குள்ளதை என்பதை உறுதி செய்துள்ளனர் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும் அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்கமுடியாவிட்டால் மாத்திரம் அவரின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

https://www.virakesari.lk/article/179770

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

2 days 6 hours ago
பாலம் இடிந்து விழுந்து விபத்து
26 மார்ச் 2024, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o

 

 

 

சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை; மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணைய கணக்குகள் ஊடுருவல் - அமெரிக்கா தெரிவிப்பு

2 days 11 hours ago

Published By: RAJEEBAN   26 MAR, 2024 | 10:54 AM

image

அமெரிக்காவைசேர்ந்த  மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன.

ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

china_hackerrs.jpg

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்களிற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவை விமர்சனம் செய்யும் அமெரிக்கர்கள் வெளிநாட்டவர்கள் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளை சீனாவை சேர்ந்த இந்த நபர்கள் இலக்குவைத்தனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மின்னஞ்சல்களை அனுப்பினார்கள். இதன் காரணமாக பல கண்டங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க நீதித்திணைக்களம் இது சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.

இன்றைய அறிவிப்பு நமது நாட்டின் இணைய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அமெரிக்கர்களை குறிவைத்து அவர்களின் கண்டுபிடிப்புகளை குறிவைக்கவும் சீனா மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது என எவ்பிஐயின் இயக்குநர் கிறிஸ்டர் ரே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179717

டொனால்ட் ட்ரம்பின் சட்ட முன்னேற்றங்களின் காட்டு நாளிலிருந்து எடுக்கப்பட்டவை

2 days 18 hours ago

டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை நீதிமன்றங்களில் இருந்து உயிர்நாடி மற்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் முதல் குற்றவியல் விசாரணைக்கான விசாரணை தேதி ஆகிய இரண்டையும் பெற்றார், ஒரு ஜோடி தீர்ப்புகள் அவரைச் சுற்றியுள்ள சட்ட சாட்டையடியைத் தாக்கின.

திங்களன்று இரட்டை தீர்ப்புகள், ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் வந்தவை, ட்ரம்பின் பிம்பத்திற்கும் அவரது புகழ்பெற்ற வணிக சாம்ராஜ்யத்திற்கும் சவால்களின் குறுக்குவெட்டு, அவர் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க முயன்றார்.

ட்ரம்பின் நியூயார்க் ஹஷ் பண வழக்கில் அவருக்கு எதிரான வரலாற்று குற்றவியல் விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் தொடங்கும் என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் திங்கள்கிழமை தெரிவித்தார், ஆவணங்களை தாமதமாக தயாரிப்பது தொடர்பான தகராறு நீதிபதி ஆரம்பத்தில் தொடக்கத் தேதியைத் தள்ளியது.

இருப்பினும், டிரம்ப்பைப் பொறுத்தவரை, திங்களன்று மிகவும் குறிப்பிடத்தக்க தீர்ப்பு நியூயார்க் மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்திருக்கலாம், இது அவர், அவரது வயது வந்த மகன்கள் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராக $464 மில்லியன் நியூயார்க் சிவில் மோசடி தீர்ப்பை மேல்முறையீடு செய்ததால், குறைக்கப்பட்ட $175 மில்லியன் பத்திரத்தை பதிவு செய்ய அனுமதித்தது. பணப்பத்திரத்தை பிணையமாகப் பயன்படுத்தி பத்திரத்தை வெளியிடுவேன் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிரம்பின் மற்றொரு வரலாற்று நாளில் இருந்து எடுக்கப்பட்டவை இங்கே:

Trump’s hush money trial will begin April 15

மற்றொரு எதிர்பாராத விக்கலைத் தவிர்த்து, ட்ரம்ப் சம்பந்தப்பட்டபோது ஒருபோதும் நிராகரிக்க முடியாது, முன்னாள் ஜனாதிபதி நவம்பர் தேர்தலுக்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு விசாரணைக்காக கிரிமினல் குற்றச்சாட்டில் நடுவர் மன்றத்தை எதிர்கொள்வார்.

மைக்கேல் கோஹன் மீதான 2018 ஃபெடரல் வழக்கு தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை இந்த மாத தொடக்கத்தில் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் திருப்பிய பிறகு, குற்றச்சாட்டுகளை நிராகரித்து மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுமதியளிக்கும் டிரம்பின் கோரிக்கையை திங்களன்று விசாரணை பரிசீலிக்க இருந்தது. டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மற்றும் திருத்துபவர்.

திங்களன்று நியூயார்க்கில் உள்ள நீதிமன்ற அறைக்கு வெளியே உள்ள நடைபாதையில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார்.
தொடர்புடைய கட்டுரை
டொனால்ட் டிரம்பின் குற்ற வழக்குகள், ஒரே இடத்தில்
மதியத்திற்கு முன், ட்ரம்பின் வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டுகளை மெர்சன் ஏற்கனவே நிராகரித்திருந்தார், எந்த மீறலும் இல்லை என்றும் ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் விசாரணை தொடங்கும் என்றும் தீர்ப்பளித்தார்.

2016 தேர்தலுக்கு முன்பு வயது வந்த திரைப்பட நட்சத்திரம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டிரம்ப்புடன் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பகிரங்கமாகச் செல்வதைத் தடுப்பதற்காக கோஹனுக்கு பணம் திருப்பிச் செலுத்தியதற்காக 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் டிரம்ப் மீது குற்றம் சாட்டினார். முன்னாள் ஜனாதிபதி குற்றமற்றவர் மற்றும் இந்த விவகாரத்தை மறுத்துள்ளார்.

தேதி முதலில் திட்டமிடப்பட்டதை விட மூன்று வாரங்கள் தாமதமானது, ஆனால் தாமதம் டிரம்பின் 2024 நாட்காட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - மேலும் அவரது மற்ற மூன்று சோதனைகளில் ஏதேனும் தேர்தலுக்கு முன் நடக்குமா என்பது இன்னும் குழப்பமாக உள்ளது.

https://www.cnn.com/2024/03/25/politics/takeaways-trump-legal-drama-hush-money-trial-fraud-bond/index.html

காஸாவில் 'உடனடி போர் நிறுத்தம்' கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் - அமெரிக்கா என்ன செய்தது?

3 days 1 hour ago
இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 நிமிடங்களுக்கு முன்னர்

காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது.

இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

 

இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.

இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா.

ஆனால் வியாழனன்று, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்மு றையாக முன்வைத்தது அமெரிக்கா. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 32,000க்கும் அதிகமான மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காஸாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சமீப காலமாகவே அமெரிக்கா முன்பை விட அதிகமாக இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகிறது.

காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவு இன்றி தவிப்பதாக கூறும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

மனிதநேய உதவிகளை செய்ய இஸ்ரேல் தடையாக இருப்பதாக ஐநா சபை குற்றம் சுமத்தியிருந்தது. அதே சமயம் உதவிகளை விநியோகிப்பதில் ஐநா சரியாக செயல்படவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

காஸாவை ஆட்சி செய்து வரும் பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில், 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக்கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது. அதனால், அக்டோபர் 7 தொடங்கிய போர் தற்போது வரை நடந்து வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/c3gmw4p94yeo

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு

3 days 7 hours ago
தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை மெக்ஸிகோ அரசு தொடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக வன்முறை மோதலில் ஈடுபடும் மெக்ஸிகன் கிரிமினல் குழுக்கள் அல்லது கும்பல்கள் இந்த ஆயுதங்களை பெறுகின்றன என்பதை இந்த நிறுவனங்கள் நன்கு அறிந்திருப்பதாக மெக்ஸிகோ அரசு கூறுகிறது.

கோல்ட்ஸ் ஸ்மித் & வேசன் போன்ற பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அதற்கு அவை பொறுப்பல்ல என்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு இந்த நிறுவனங்களுக்கு உள்ளது.

ஆனால் இந்த வழக்கின் வாதங்களுக்கு எதிராக இந்த பாதுகாப்பு போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் மெக்ஸிகோ வெற்றிபெற முடியுமா என்பதைக் கண்டறிய நாம் முயற்சிப்போம்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை அழித்த மெக்சிகன் இராணுவம்.

மெக்ஸிகோவில் குற்ற அலை

இயோன் கிரில்லோ, மெக்ஸிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர். அங்கு திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் குறித்து பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

மெக்ஸிகோவில் கிரிமினல் குழுக்களுக்கு இடையேயான சண்டை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் மோதல்கள் அல்ல. மாறாக அது போரின் வடிவத்தை எடுத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

அவரது புத்தகங்களில் ஒன்றான ‘Blood Gun Money: How America Earns Gangs and Cartels’, இந்த வழக்கில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“2006 முதல் மெக்ஸிகோவில் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 70 சதவிகிதம் பேர் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டுள்ளனர். சில சண்டைகள் மிகவும் கடுமையானவை.

500 துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இரண்டாயிரம் போலீசாருக்கும் இடையே நீண்ட நேரத்திற்கு துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 100 கொலைகள் நடக்கின்றன," என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 12 கோடியே 90 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்தப்பரந்த நாட்டில் இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. ஆனால் இது எங்கு நடந்தாலும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை மற்றும் வன்முறை நிறைந்தவை. பல சமயங்களில் சாதாரண மக்கள் இந்த மோதலுக்கு பலியாகின்றனர்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் வந்து கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் சுட்டுக்கொள்கின்றனர். பல சமயங்களில் கார்களில் செல்லும் சாதாரண மக்கள் அல்லது சாலையோர வண்டிகளில் இருந்து உணவு உண்பவர்களும் இதற்கு பலியாகின்றனர் என்றும் அயன் கிரில்லோ கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளில், இந்த மாஃபியா குழுக்கள் அல்லது கார்டெல்கள் தங்களுடைய சொந்த ராணுவத்தை உருவாக்கியுள்ளன. பல தாக்குதல்களில் சுமார் 100-200 பேர், AK-47 மற்றும் AR-15 போன்ற துப்பாக்கிகளால் தாக்குகிறார்கள்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெக்சாஸில் உள்ள ஒரு துப்பாக்கி கடை.

மெக்ஸிகோவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் ஆயுதங்கள்

ஆனால் நாட்டுக்குள் ஆயுதங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதை எப்படி அறிவது?

குற்றவாளிகளிடமிருந்து ஆயுதங்கள் காவல்துறையால் கைப்பற்றப்படும்போது அல்லது குற்றம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்படும்போது காவல்துறை அவற்றின் வரிசை எண்களை அமெரிக்க நிர்வாகத்திடம் கொடுக்கிறது. இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை அது கண்டுபிடிக்கிறது என்று அயன் கிரில்லோ விளக்குகிறார்.

இதில் 70 சதவிகித ஆயுதங்கள் அமெரிக்க துப்பாக்கி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து மெக்ஸிகோவை சென்றடைந்ததாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து கடத்தல் மூலம் மெக்ஸிகோவை அடைவதாக அரசு மதிப்பிடுகிறது. இது வன்முறைக்கு வழிவகுக்கிறது.

“ராணுவம் பயன்படுத்தும் மட்டத்தில் உள்ள துப்பாக்கிகள் இங்கு வந்தடைகின்றன. பல துப்பாக்கிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை 50 காலிபர் தோட்டாக்களைப் பயன்படுத்துகின்றன. அவை போலீஸ் கவச வாகனங்களைத் துளைக்கும் சக்தி கொண்டவை,” என்று அவர் குறிப்பிட்டார்.

மெக்ஸிகோவில் தனிநபர்கள் துப்பாக்கிகளை வாங்க முடியும். ஆனால் ஒரே ஒரு துப்பாக்கி கடை மட்டுமே ராணுவத்தால் நடத்தப்படுகிறது. துப்பாக்கிகளை வாங்கும் செயல்முறை கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

"இந்த கடையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயுதங்களின் விலை மிகவும் அதிகம். மிக முக்கியமாக அடையாள அட்டை உட்பட ஏழு வெவ்வேறு வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆயுதம் வாங்கும் நபருக்கு குற்றப்பின்னணி பதிவு இல்லை என்று சான்றளிக்கும் காவல் துறையின் ஆவணம் அவற்றில் ஒன்று,” என்று இதுகுறித்து அயன் கிரில்லோ கூறினார்.

ஆனால் கார்டெல் நபர்கள் அத்தகைய ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து எளிதாகப் பெற முடியும்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹூஸ்டனில் உள்ள ஒரு துப்பாக்கி கடை.

அமெரிக்காவிலிருந்து வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள்

மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக 16,000 ஆயுதங்கள் விற்பனையாகின்றன. ஆனால் அதே நேரம் அமெரிக்காவிலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் இங்கு வந்துசேருகின்றன.

”கடைகளில் குற்றப்பின்னணி பதிவுகள் இல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றன. அவர்கள் டஜன் கணக்கான ஏகே 47 ரக துப்பாக்கிகளை வாங்கி கார்டெல்லிடம் ஒப்படைக்கிறார்கள், அதற்கு அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்,” என்று அயன் கிரில்லோ விளக்குகிறார்.

மற்றொரு வழி அமெரிக்காவில் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்குவது. அவர்கள் குற்றப்பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை வாங்கி மெக்ஸிகோவிற்கு கொண்டு வருவதன் மூலம் வாரத்திற்கு 15-20 ஆயிரம் டாலர்களை தாங்கள் சம்பாதித்ததாக, மெக்ஸிகோ சிறைகளில் உள்ள பல குற்றவாளிகளை தான் நேர்காணல் செய்தபோது அவர்கள் குறிப்பிட்டதாக கிரில்லோ கூறுகிறார்.

இந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கெஞ்சிய பிறகு மெக்ஸிகோ அரசு இப்போது சட்டப் போராட்டத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கறிஞர்கள், துப்பாக்கிகள் மற்றும் பணம்

”தற்போது அமெரிக்காவில் சாதாரண குடிமக்களிடம் 40 கோடி ஃபயர் ஆர்மஸ் அதாவது துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் போன்ற ஆயுதங்கள் உள்ளன,” என்று கலிஃபோர்னியாவில் உள்ள யுசிஎல்ஏ சட்டக்கல்லூரியில் சட்டப் பேராசிரியரான ஆடம் விங்க்லர் கூறினார்.

“அமெரிக்க அரசியலமைப்பின்படி தனிநபர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க உரிமை உண்டு. மக்கள் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் தெருக்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றம் இதை விளக்குகிறது."

ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் முதலில் ஆயுதத் தொழிலை பார்ப்போம்.

"2000வது ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி கம்பெனிகள் தயாரிக்கும் ஆயுதங்கள் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டால் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்களை குற்றவாளிகளாக கருத முடியாது," என்று ஆடம் விங்கிள் கூறினார்.

"இந்தச்சட்டம் ’ஆயுதங்களின் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்."

அதாவது, ஆயுதம் தயாரிப்பவர்கள் மீது பொறுப்புக் கூற முடியாதா? ஆயுதங்கள் பழுதடைந்தால் அல்லது பயன்பாட்டின் போது வெடித்தால், நிறுவனம் மீது வழக்குத் தொடரலாம். ஆனால் அவை கடத்தப்பட்டாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்கப்பட்டாலோ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம் என்று ஆடம் விங்கிள் குறிப்பிட்டார்.

வழக்குகளில் இருந்து நிறுவனங்களை பாதுகாப்பது அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆயுதம் தாங்கும் உரிமை அமைப்பான நேஷனல் ரைஃபிள் அசோசியேஷனுக்கு முன்னுரிமை பணியாக இருந்தது.

வழக்குகள் தங்கள் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று அஞ்சுவதால் ஆயுத நிறுவனங்கள் இந்த வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டதாக ஆடம் விங்க்லர் கூறினார்.

"புகையிலை மற்றும் சிகரெட் நிறுவனங்கள் வழக்குகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டியிருந்தபோது உடனடியாக ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏனென்றால் அவர்களுக்கு எதிராக இதேபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் அபாயம் இருந்தது.”

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன்

அமெரிக்காவின் பலவீனமான துப்பாக்கிச் சட்டங்கள்

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் சொந்த சட்டங்கள் உள்ளன. பல மாகாணங்களில் அவை மிகவும் தளர்வாக உள்ளன. மெக்ஸிகோவுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்களில் மக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள். இது ஆயுதக் கடத்தலுக்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது என்று ஆடம் விங்க்லர் கூறினார்.

இந்தக் கடத்தலை கண்காணிக்கும் பொறுப்பு உள்ள அமெரிக்க நிறுவனம், ’Bureau of Alcohol, tobacco and fire arms explosive’ அதாவது ஏடிஎஃப் என்று அழைக்கப்படுகிறது.

“ATF மிகவும் பயனுள்ளதாக இல்லை. அமெரிக்காவில் இருக்கும் 40 கோடி ஆயுதங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினம். இந்தப் பணிக்கு இந்த ஏஜென்சியிடம் போதிய பணம் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மெக்ஸிகோவின் எல்லை போலீஸாருக்கும் சமமான பெரிய பொறுப்பு உள்ளது. மெக்ஸிகோ எல்லை போலீசார் அங்கு வரும் வாகனங்களை கண்டிப்புடன் சோதனை செய்வதில்லை என்கிறார் ஆடம் விங்க்லர்.

மெக்ஸிகோ அரசு 2021இல் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு எதிராக மாசசூசெட்ஸில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. ஆனால் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி ஒரு வருடம் கழித்து நீதிமன்றம் அதை நிராகரித்தது..

மெக்ஸிகோ அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மெக்ஸிகோ ஒரு இறையாண்மை நாடு என்றும் அமெரிக்காவின் இந்த பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் வாதிட்டது. அதன் முறையீடு வெற்றி பெற்றது.

அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக சட்டவிரோத வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றுவதாக மெக்ஸிகோ கூறுகிறது. 2005 இல் இயற்றப்பட்ட ’ஆயுதங்களில் சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான பாதுகாப்புச் சட்டம்,’ அமெரிக்க ஆயுத நிறுவனங்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்து வருகிறது, ஆனால் அது தொடருமா?

ராபர்ட் ஸ்பிட்சர், SUNY Cortland பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக உள்ளார். துப்பாக்கி கொள்கை குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நேஷனல் ரைஃபிள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

2005 ஆம் ஆண்டில் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான துப்பாக்கி ஏந்தியவர் ஒருவர் பள்ளிக்கூடத்தில் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் மற்றும் 6 பெரியவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கனெக்டிகட்டின் உள்ளூர் சட்டத்தின் கீழ் வேறு வாதத்தை முன்வைத்து, 200 ஆண்டுகள் பழமையான ஆயுத உற்பத்தியாளர் ரெமிங்டன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

“1970 முதல் கனெக்டிகட்டில் ஒரு சட்டம் உள்ளது. நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டம் அது. இந்த வழக்கில் 2022 இல் ஏற்பட்ட ஒரு சட்ட தீர்வின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் ரெமிங்டன் நிறுவனத்திடமிருந்து 73 மில்லியன் டாலர்கள் இழப்பீடு பெற்றனர். துப்பாக்கி நிறுவனம் இதுவரை செலுத்திய மிகப்பெரிய இழப்பீடு இது ஆகும்,” என்று பர்ட் ஸ்பிட்சர் விளக்குகிறார்.

இந்த வழக்கின் வெற்றிக்கு இழப்பீடு மட்டுமே முக்கிய காரணியாக இருக்கவில்லை.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

“சமூகத்தின்மீது ஏமாற்றமடைந்த இளைஞர்களை தனது தானியங்கி துப்பாக்கிகளின்பால் ஈர்க்க, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை பயன்படுத்தியதைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான உள் ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ரெமிங்டன் நிறுவனத்திற்கு ஏற்பட்டது,” என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார்.

இந்த ஆயுதங்களின் ராணுவத் திறனை நிறுவனம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதாவது இவை தற்காப்புக்காகவோ, துப்பாக்கிச் சூடு இலக்கு பயிற்சி அல்லது பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அல்ல.

சட்டப்பூர்வ தீர்வின் கீழ் ரெமிங்டன் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படவில்லை. சமரசம் ஏற்பட்டு வழக்கு முடிந்தது.

விசாரணை முழு அளவில் நடந்திருந்தால், கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர் வெற்றி பெற்றிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ராபர்ட் ஸ்பிட்சர் கூறுகிறார்.

அதே நேரத்தில் பொறுப்பற்ற சந்தைப்படுத்தலுக்கு எதிரான சட்டம் கனெக்டிகட் மாகாணம் உட்பட நாட்டின் ஐந்து மாகாணங்களில் மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் முழு நாட்டிற்கும் இது பொருந்தாது.

இதுபோன்ற மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ராபர்ட் ஸ்பிட்சர் கூறினார். இந்த வழக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பார்க்லேண்ட் உயர்நிலைப் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையது.

இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க இப்போது துப்பாக்கி நிறுவனங்கள் தங்கள் ஆயுத சந்தைப்படுத்தல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிமன்றப் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும்?

”மெக்ஸிகோ அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புக்கூறலை தவிர்த்துவந்துள்ளன. இப்போது மற்ற நாடுகளும் இந்த திசையில் பார்க்கின்றன,” என்று ஹேக்கில் உள்ள ’ஏசர் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் யுரோபியன் லா’ வின் மூத்த ஆராய்ச்சியாளர் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச் குறிப்பிட்டார்.

“லத்தீன் அமெரிக்க நாடுகளில் துப்பாக்கியால் ஏற்படும் 70 முதல் 90 இறப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக வந்தவை. குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் ஈக்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலும் இதே போக்கு காணப்படுகிறது," என்றார் அவர்.

"ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளிலும் இதேதான் நடக்கிறது. இப்போது ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் நீதிமன்றத்தில் மெக்ஸிகோவின் கோரிக்கையை ஆதரித்துள்ளன. இந்த வழக்கில் மெக்ஸிகோ வெற்றி பெற்றால் இந்த நாடுகளில் சில அந்த அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரக்கூடும்.”

மெக்ஸிகோ வெற்றி பெற்றால் ஆயுத நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் முதல் மாற்றம், அவர்களின் சந்தைப்படுத்தல் கொள்கைகளாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். மரணத்தை அதிகரிக்கும் விதமாக மாற்றியமைக்கக்கூடிய பிற ஆயுதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

அரிசோனா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கடைகளில் இருந்து ஆயுதங்கள் தனது நாட்டை வந்தடைகின்றன என்பதை மெக்ஸிகோ நிரூபித்துள்ளது.

அரிசோனா ஆயுத விற்பனையாளர்கள் மீது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டையும் மெக்ஸிகோ பதிவு செய்துள்ளது. இதன் பொருள் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிரான வழக்குகள் மூலம் இவர்கள் இருவருமே சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள்.

 
அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழக்கில் என்ன நடக்கும்?

மெக்ஸிகோ தாக்கல் செய்த வழக்கு இன்னும் தொடங்கவில்லை ஆனால் இந்த வழக்கில் என்ன நடக்கும்?

"மெக்ஸிகோ, நீதிமன்றத்திற்கு வெளியே எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அதன் நோக்கம் இந்த துப்பாக்கி நிறுவனங்களை அம்பலப்படுத்துவதாகும். இந்த ஆயுதங்கள் அதன் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் இழப்பீடாக மெக்ஸிகோ கோரியுள்ளது. ஆனால் மெக்ஸிகோவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இவ்வளவு பெரிய இழப்பீட்டு தொகைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று தோன்றவில்லை” என்றார் லியோன் காஸ்டெல்லானோஸ் ஜனேகிவிச்.

அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் மெக்ஸிசிகோ வெற்றிபெறுமா? மெக்ஸிகோ அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாப்பு தடையை முறியடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த நிறுவனங்களுக்கு எதிராக கடத்தல் தொடர்பான உறுதியான ஆதாரங்களை அந்த நாடு முன்வைக்க வேண்டும்.

மெக்ஸிகோ எல்லைப் போலீசார் சோதனைகளில் மெத்தனமாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. இது ஒரு நீண்ட மற்றும் செலவுமிக்க சட்டப் போராட்டமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூருகின்றனர்.

இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முடிவு எதுவாக இருந்தாலும் சரி, அது நிச்சயமாக ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரச்னை தொடர்பான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலிருந்து எதோ ஒரு நன்மை நிச்சயமாக ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/c6p4np1v7xdo

பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் - வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்

5 days 11 hours ago

Published By: RAJEEBAN   23 MAR, 2024 | 06:32 AM

image

பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ அறிக்கையொன்றில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்

புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார்.

நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை, ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது. சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் சிகிச்சை ஆரம்பமாகியுள்ளது – நோய் சிகிச்சை குறித்த ஏனைய விபரங்களை  வெளியிடப்போவதில்லை என கென்சிங்டன் அரண்மணை தெரிவித்துள்ளது.

இந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நான் இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன்  என தெரிவித்துள்ள இளவரசி கேட் (42) இந்த வகை நோயினை அதன் எந்த வடிவத்தில் எதிர்கொள்பவராக நீங்கள் இருந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள் நீங்கள் தனியாக இல்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179472

ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்

5 days 11 hours ago
23 MAR, 2024 | 06:35 AM
image

ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர்.

அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றதால் அப்பகுதியில் தீ பரவியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டடுள்ளது.

இணையத்தில் பரவும் பல தாக்குதல் காணொளிகளில், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தரையில் வீழ்ந்து பாதுகாப்பைத் தேடுவதும், இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் மற்றும் கூச்சல் இடம் சந்தம் கோட்பதையும் அங்கிருந்து பலர் வெளியே பாதுகாப்புத் தேடி ஓடுவதையும் வெளிப்படுத்துகின்றது.

தாக்குதலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ரஷ்யா பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179471

மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்; ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

6 days 5 hours ago

Published By: RAJEEBAN    22 MAR, 2024 | 02:14 PM

image

மொங்கோலியா அரைநூற்றாண்டு  காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என  மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

mongo_cli4.jpg

வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும்  அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

mongo_cli3.jpg

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்  அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

mongo_cli1.jpg

தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179391

உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ

6 days 6 hours ago

6 மணி நேரங்களுக்கு முன்னர்
செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார்.

செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார்.

இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார்.

மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo

இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

6 days 6 hours ago
இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் இந்தியாவில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், நோரா பதேஹி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/296731

டவுன் சிண்ட்ரோம் - ஒரு தன்னம்பிக்கை இளைஞரின் கதை

1 week ago
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், அலெக்சாண்ட்ரா ஃபௌச்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டவுன் சிண்ட்ரோம் எனும் மனநல குறைபாடு மீதான கற்பிதங்களை ஒழிப்பதுதான், இந்தாண்டு சர்வதேச டவுன் சிண்ட்ரோம் தினத்தின் கருப்பொருளாக உள்ளது.

டவுன் சிண்ட்ரோம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறித்தும் அவர்கள் எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள எண்ணங்களை எதித்துப் போராடுவதே இந்நாளின் இலக்கு. டவுன் சிண்ட்ரோமுடன் வாழ்ந்துவரும் இந்தோனேசியாவை சேர்ந்த மோர்கன் மேஸ் தன் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

டவுன் சிண்ட்ரோம் இண்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பின் தூதராக மோர்கன் உள்ளார். இந்த அமைப்பில், உலகம் முழுவதிலும் இருந்து தங்கள் நலன்களுக்காக தாங்களே குரல் கொடுக்கும் குழுவிலும் மோர்கன் உள்ளார்.

”என் பெயர் மோர்கன் மேஸ், எனக்கு 25 வயதாகிறது. இந்தோனேசியாவின் ஜாகர்டாவில் என் அம்மாவுடன் வசித்துவருகிறேன்.

”YAPESDI (இந்தோனேசியன் டவுன் சிண்ட்ரோம் கேர் ஃபவுண்டேசன்) எனும் அமைப்பால் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட இளம் வயதினருக்கு நடத்தப்படும் வார ஆன்லைன் வகுப்புகளுக்கு வகுப்பு உதவியாளராக நான் பணிபுரிகிறேன்.” இந்த அமைப்பு டவுண் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கிவரும் லாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த அமைப்பின் பணியாளர்கள் கூட்டத்தில், டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மோர்கன்.

ஆனால், அவருக்கு சமையல் மீதும் ஆர்வம் இருக்கிறது.

”வாரத்திற்கு இரு நாட்கள் நான் உணவகத்தில் பணிபுரிகிறேண். உணவகத்தில் பணிபுரிவது என்னுடைய கனவு. ஏனென்றால், எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.

”ஒருநாள் நான் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க விரும்புகிறேன். என்னுடைய சம்பளம் மற்றும் மற்ற வருமானங்களை சேமித்து என்னுடைய கனவை நிறைவேற்றுவேன்.”

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
படக்குறிப்பு,

”ஒருநாள் நான் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் மோர்கன்.

மோர்கனுக்காக தான் செய்யும் அனைத்தையும் குறித்து தன் மகன் அறிந்திருப்பதையும் அதில் பங்கேற்பதையும் உறுதிசெய்ய தான் எப்போதும் முயற்சிப்பதாக அவருடைய தாய் டேவி தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றுக்கு முதன்முறையாக மோர்கனை அழைத்துச் சென்றபோது, தான் ஏன் நன்றாக பேசுகிறேன் என்றும் ஆனால் அவனுடைய புதிய நண்பர்கள் ஏன் அப்படி பேசுவதில்லை என்றும் அவர் கேட்டதாக தாய் டேவி தெரிவித்தார். பின்னர் அவர்கள், முணுமுணுத்துக் கொண்டிருந்ததாகவும், மோர்கன் புரிந்துகொள்ள முடியாத வகையில் உரையாடியதாகவும் அவர் கூறினார்.

வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போதும் தன் புதிய நண்பர்களால் ஏன் தெளிவாக பேச முடியவில்லை என, மோர்கன் மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தன்னை போன்றவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் அதேநேரத்தில் அவர்களை புரிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்த மோர்கன், எப்படி பேச வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உதவ முடியுமா என்றும் தன் தாயிடம் கேட்டுள்ளார்.

இப்படித்தான் டேவி மற்றவர்களுடன் இணைந்து மோர்கன் தற்போது அங்கம் வகிக்கும் அமைப்பை உருவாக்கினார். “லெட்ஸ் ஸ்பீக் அப்” என்ற பெயரில் வகுப்புகளை நடத்த தனக்கு ஒரு நிதியுதவி வழங்கியதாகவும் பின்னர் YAPESDI அமைப்பை நிறுவியதாகவும் டேவி தெரிவித்தார்.

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?
படக்குறிப்பு,

டவுண் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்காக சில கட்டுரைகளையும் மோர்கன் மதிப்பாய்வு செய்கிறார்.

அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மொழியான ’ஈஸி லாங்வேஜ்’ எனும் மொழியை பயன்படுத்தி டவுண் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்காக சில கட்டுரைகளையும் மோர்கன் மதிப்பாய்வு செய்கிறார்.

”இன்றுவரை, டவுன் சிண்ட்ரோம் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களில் ‘ஈஸி லாங்க்வேஜ்’ மூலம் மதிப்பாய்வு செய்வது நான் மட்டும்தான். நான் மதிப்பாய்வு செய்யும் புத்தகங்கள் என்னுடைய அமைப்பில் மட்டும் வெளியிடப்படவில்லை மாறாக மற்ற அமைப்புகளும் மதிப்பாய்வு செய்யுமாறு என்னை கேட்கின்றன."

”கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் வங்கி சேவை ஆகியவற்றில் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கான உரிமைகள் குறித்த ஆய்வை தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறேன்,” என்கிறார் மோர்கன்.

வேலை கிடைப்பதில் சிரமம்

“இந்தோனேசியாவில் என்னை போன்று டவுன் சிண்ட்ரோம் உள்ள வயது வந்தவர்கள் வேலை செய்வது கிடையாது. நிறுவனங்கள் எங்களை வேலைக்கு எடுப்பது இல்லை. எங்களுக்கு வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதற்காக எங்களை வேலையில் அமர்த்த பயப்படுகின்றனர்.”

இது உண்மைதான். சில சிறிய நிறுவனங்கள் குறைபாடு உடையவர்களுக்கு வேலை வழங்குகின்றன. ஆனால், வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது பாகுபாடுகளை சந்திப்பதாகவும் பிபிசி நியூஸ் இந்தோனேசியா செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

”எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எந்த பள்ளிகளும் தொழில் பள்ளிகளும் இல்லை. என்னுடைய அம்மா மற்றும் அவருடைய நண்பர்கள் மிக கடினமாக போராடி, எனக்கு பயிற்சி அளித்ததால்தான் என்னால் இப்போது நல்ல வேலையில் இருக்க முடிகிறது” என்கிறார் மோர்கன்.

குறைபாடு உள்ளவர்களுக்காக சில சிறப்புப் பள்ளிகள் உள்ளன என்றும் ஆனால் தொழில் பயிற்சி பள்ளிகள் இல்லை என்றும் பிபிசி நியூஸ் இந்தோனேசியா செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அலுவலக நிர்வாக பணி தொடர்பாக சில அமைப்புகள் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு பயிற்சியை வழங்குகின்றன. ஆனால், அவை குறைவாகவே உள்ளன என்றும் நாடு முழுவதும் உள்ள டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு அதனை பெற முடிவதில்லை என்றும் கூறுகின்றனர்.

 
டவுன் சிண்ட்ரோம் என்பது என்ன? அவர்களால் என்னென்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

‘எதிர்மறை கற்பிதங்கள்’

மோர்கன் மற்ற சில திறன்களையும் கற்றுள்ளார்.

“நான் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆமாம், நான் இந்தோனேசிய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் என மூன்று மொழிகளை பேசுவேன்.

“ஆனால், இன்னும் எங்கள் மீது சமூகம் தவறான கற்பிதங்களை வைத்துள்ளது. அரசாங்கம் எங்களுக்காக அதிகமாக ஏதும் செய்வதில்லை.”

மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி இடமளித்து வருவதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நடத்துவதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

2016-ம் ஆண்டு இந்தோனேசிய சட்டம், குறைபாடுகள் கொண்டவர்களுக்கான சம உரிமை குறித்து பேசுகிறது. அச்சட்டத்தின்படி, சம ஊதியத்துடன் கூடுதலாக, முதலாளிகள் அவர்களுக்கேற்ற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதற்கு இணங்காத நிறுவனங்கள் மீது அபராதமும் விதிக்கப்படும்.

அச்சட்டத்தின்படி வேலையில் இடஒதுக்கீடும் உள்ளது. அதன்படி, அரசு வேலைகளில் 2 சதவிகிதமும் தனியார் துறையில் ஒரு சதவிகிதமும் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

பணியைத் தாண்டி மற்ற சில வேலைகளையும் தான் விரும்புவதாக மோர்கன் தெரிவித்தார்.

“பணி, கடினமாக உழைப்பதைத் தாண்டி இசை வாசிப்பது, பயணம், படங்கள் பார்ப்பது, வார இறுதிகளில் சினிமாவுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். கடைசியாக நான் குங் ஃபு பாண்டா 4 திரைப்படத்திற்கு சென்றேன்.

”எப்படி என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்படியே என் மற்ற நண்பர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

”உலக டவுன் சிண்ட்ரோம் நாள் வாழ்த்துகள் - கற்பிதங்களை முறியடிப்போம்!”

https://www.bbc.com/tamil/articles/cxezldpk9m0o

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

1 week ago
03-14.jpg

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/296581

Checked
Thu, 03/28/2024 - 16:25
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe