உலக நடப்பு

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

4 hours 33 minutes ago

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

இரானியப் படைகள் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக 100க்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா

  • பிபிசி வெரிஃபை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது.

கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது.

கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும்.

இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது.

ஹோர்மூஸ் நீரிணை

எந்தெந்த கப்பல்கள்

சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும்.

ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன.

இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும்.

நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன.

சிவலிக் கப்பல் இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

திட்டம் என்ன?

அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்

அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார்.

"தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது".

"அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார்.

''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.''

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்

கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள்

மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை.

மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது.

அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை.

கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.

அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன.

"வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார்.

இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார்.

"அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

துபை அருகே உள்ள வணிக கப்பல்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள்

நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான்

டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார்.

"மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார்.

நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது.

ஹோர்மூஸ் நீரிணை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை

இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.

கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது.

"இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ்.

ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன.

இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது.

"அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம்

கிராபிக்ஸ் : டாம் ஷீல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c203r13d2rzo

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

6 hours 58 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

March 20, 2026 5:53 pm

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என ஜெலென்ஸ்கி  குற்றஞ்சாட்டியுள்ளார்.

அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என ஜெலன்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

https://oruvan.com/ukraine-faces-missile-shortage/

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

9 hours 58 minutes ago

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

Mar 20, 2026 - 06:40 AM

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, 

சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. 

மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். 

நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். 

ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

13 hours 30 minutes ago

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

இரானில் தாங்கள் நடத்தி வரும் போரினால் எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில், பகுதியளவிலான இரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஃபாக்ஸ் நேர்காணல் ஒன்றில் இந்த யோசனையை முன்வைத்தார், ‘சர்வதேச அளவில் அதிக எண்ணெய் கிடைக்க இது உதவும்’ என்றும் கூறினார்.

மத்திய கிழக்கு போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன.

இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அது நீண்டகால அமெரிக்கக் கொள்கையின் ஒரு வியக்கத்தக்க மாற்றமாக அமையும். மேலும் இது மிகவும் நிச்சயமற்ற பலனைக் கொண்ட ஒரு நடவடிக்கையாக இருக்கும்.

இது கச்சா எண்ணெய் விலைகளில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும், இரானிய ஆட்சிக்குச் செல்லும் நிதியை இது அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

போருக்கு முன்பு, இரானில் இருந்து வெளியேறும் எண்ணெயை வாங்கும் முதன்மை நாடாக சீனா இருந்தது; அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்த தடைகள் காரணமாக பெரும் தள்ளுபடி விலையில் அந்த எண்ணெய் பேரல்களை அது பெற்று வந்தது.

வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று ஃபாக்ஸ் பிசினஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த நேர்காணலில், “விற்பனைக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பது, இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற எண்ணெய் தேவைப்படும் பிற நாடுகளுக்கு அந்த விநியோகங்களில் பெரும்பகுதியைத் திசைதிருப்ப உதவும் என்றும், அதே நேரத்தில் சீனாவை ‘சந்தை விலையை’ செலுத்த நிர்பந்திக்கும்” என்றும் பெசென்ட் கூறினார்.

ஏற்கெனவே கடலில் இருக்கும் இரானிய கச்சா எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் கூறினார், இது சுமார் 140 மில்லியன் பேரல்கள் ஆகும். இது 10 முதல் 14 நாட்களுக்கு உலகளாவிய எண்ணெய் விலைகளைக் குறைக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

ஆனால், சாத்தியமான இந்த விலக்கு எவ்வாறு செயல்படும் அல்லது விற்பனை மூலம் கிடைக்கும் பணம் இரானிய அரசாங்கத்திற்குத் திரும்பச் செல்வதைத் தடுப்பதற்கான விதிகளை இது உள்ளடக்குமா என்பது குறித்த விரிவான தகவல்களை பெசென்ட் தெரிவிக்கவில்லை. இந்த முன்மொழிவு குறித்த கூடுதல் விவரங்களை வழங்க அமெரிக்க கருவூலத் துறை மறுத்துவிட்டது.

இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

13 hours 47 minutes ago

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

ஜப்பானியப் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

பட மூலாதாரம்,EPA/Shutterstock

படக்குறிப்பு,ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சியுடன் ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது டிரம்ப் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

இரு தலைவர்களின் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்துக் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில், அதிபர் டிரம்ப்பிடம், 'தாக்குதலுக்கு முன்பு, அது குறித்து ஜப்பான் போன்ற தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஏன் தெரிவிக்கவில்லை?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "ஒன்று, நாங்கள் அதிக சமிக்ஞைகளை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தபோது, மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம். நாங்கள் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். இத்தகைய ஆச்சரியங்கள் குறித்து ஜப்பானை விட நன்றாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள், சரியா?" என்று கூறினார்.

இதற்கிடையில், டிரம்ப் பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) குறித்தும் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது.

ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

14 hours 2 minutes ago

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Getty Images

இரான் மீதான போர் குறித்து நேற்று (மார்ச் 19) உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எவ்வளவு காலம் தேவையோ அதுவரை போர் நடக்கும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஆயுதக் கிடங்கு, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் ஏவுகணை பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற அணுசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட, இரானில் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வரும் அனைத்து விஷயங்களையும் நெதன்யாகு பட்டியலிட்டார்.

“இரானியத் தொழில்துறையை இதற்கு முன்பு நாம் தாக்காத வகையில் அழித்து வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, அதை நாம் செய்யப்போகிறோம்” என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் தான் அமெரிக்காவை இரானுடனான மோதலுக்குள் இழுத்துச் சென்றது என்ற ‘போலிச் செய்தியை’ தான் அகற்ற விரும்புவதாக” நெதன்யாகு கூறினார்.

"அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவரிடம் போய் சொல்ல முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை," என்று அவர் கூறினார்.

“டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார்" என்றும் அவர் தெரிவித்தார்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

14 hours 5 minutes ago

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

ஹோர்மூஸ் நீரிணை, இரான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,கோப்புப் படம்

உலக நாடுகள் ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்த இரானுக்கு சுங்க கட்டணம் மற்றும் வரிகள் செலுத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக இரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமயே ரஃபீ தெரிவித்துள்ளார்.

கப்பல்களின் பயணம், எரிபொருள் மற்றும் உணவுப் போக்குவரத்துக்கு ஹோர்மூஸ் நீரிணை பாதுகாப்பான பாதையாக பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்த கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இஸ்னா செய்தி முகமையின் வெளியான செய்தியின்படி, இரான் தலைநகரில் உள்ள வலியசர் சதுக்கத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

"நமது எதிரிகளின் முந்தைய சௌகரியங்களை அவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். அவர்களால் இந்த யதார்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை." என்றார்.

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரான் பரிசீலனை

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

14 hours 24 minutes ago

F-35.jpg?resize=750%2C375&ssl=1

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விமானி உயிர் தப்பி, தற்போது சீரான நிலையில் உள்ளார். 

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அந்த விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம், தற்போதைய மோதலின் போது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றை தெஹ்ரான் தாக்குவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். 

இந்தக் கூற்றை வொஷிங்டன் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஈரானியத் தாக்குதல் என்று நம்பப்படும் ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், 

ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானம் ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தரையிறங்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறினார்.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியும் சீரான நிலையில் உள்ளார் என்று கூறிய அவர், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய விடயம்

F-35 லைட்னிங் II என்பது சாதாரண போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் வான் சக்தியின் முதுகெலும்பாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும் பரவலாகக் கருதப்படுகிறது.

ஒரு விமானத்துக்கு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 19க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படும் அல்லது ஆர்டர் செய்யப்பட்ட F-35, உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும்.

இது மறைந்திருந்து தாக்கும் திறன், மேம்பட்ட உணர்விகள் மற்றும் வலையமைப்புப் போர் திறன்களை ஒருங்கிணைத்து, வான்வழிப் போர் நடத்தப்படும் விதத்தை அடியோடு மாற்றியமைக்கிறது.

இதன் பிரதான விடயம் மறைந்திருந்து தாக்கும் திறனாகும். 

இந்த விமானம் அதன் வடிவம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளக ஆயுதக் கிடங்குகள் மூலம் ரேடார் கண்டறிதலில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக இது எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விமானத்தை கண்காணிப்பதையோ அல்லது குறிவைப்பதையோ மிகவும் கடினமாக்குகிறது.

https://athavannews.com/2026/1469336

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

1 day 3 hours ago

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை

19 Mar, 2026 | 04:10 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழுவில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், ஈரான் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் இராணுவ கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் “பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என உளவுத்துறை மதிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் தற்போது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும், முன்னைய சேதத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலா (Imminent Threat) என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க துளசி கப்பார்ட் மறுத்தார். “எது அச்சுறுத்தல் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து உளவுத்துறை முன்னதாகவே கணித்திருந்ததாகவும், அதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் அந்த நீரிணையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்ற அபாயமும் முன்கூட்டியே மதிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் விசாரணையின் போது, சிஐஏ பணிப்பாளர் ஜோன்ன் ரொட்க்ளிஃப் (John Ratcliffe) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் ஈரான் “உடனடி அச்சுறுத்தல் இல்லை” எனக் கூறி பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், ரொட்க்ளிஃப் அதற்கு மாறாக, ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக வாதிட்டுள்ளார்.

விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றிலும் அழிக்கப்பட்டது” என்ற எழுத்துபூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கவில்லை எனக் கூறப்பட்டதால் அரசியல் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செனட்டர் ஒருவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலைப்பாட்டுக்கு முரணான பகுதிகள் தவிர்க்கப்பட்டதா என சந்தேகம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த கப்பார்ட், அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகள் சுருக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2025 ஜூனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திறனை குறிவைத்து நடத்திய 12 நாள் இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தற்போதைய அரசியல் மற்றும் உளவுத்துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

https://www.virakesari.lk/article/241381

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி

1 day 7 hours ago

ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி

Published By: Digital Desk 3

19 Mar, 2026 | 03:42 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்களைத் தணித்து, பிராந்திய போர் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்காக ஜீ -7 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு இராஜதந்திர முயற்சியை கனடா முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒரு “கொள்கை ஆவணத்தை” (Document of Principles) தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆவணம், பிராந்தியத்தில் போர் பரவுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர் (Yvette Cooper) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் பேசிய அனிதா ஆனந்த், பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த ஜீ -7 கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அதில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அனிதா ஆனந்த், “மத்திய சக்திகள் (Middle Powers)” ஒன்றிணைந்து செயல்பட்டால் உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரான் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற உறுதியை கோரினாலும், தற்போதைய சூழலில் அத்தகைய உத்தரவாதம் வழங்குவது சிக்கலானதாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியமான சவால்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241376

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

1 day 10 hours ago

Pentagon.jpg?resize=750%2C375&ssl=1

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது.

இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. 

இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது.

போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. 

தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது.

2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1469194

இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?

1 day 12 hours ago

இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் - இனி என்ன நடக்கும்?

கருப்பு உடையில் அலி லாரிஜானி

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • அமீர் அசிமி

  • பிபிசி பாரசீக சேவை

  • 18 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது.

லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார்.

தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது.

இரானின் போர் பதிலடியை நிர்வகித்த லரிஜானி மரணம் - இனி என்ன ஆகும்?

பட மூலாதாரம்,Getty Images

பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார்.

அவரது மரணம், ஒரு சில வாரங்களுக்குள் பல மூத்த இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு விரிவான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த முறைமை, போர்க்காலத்தில் இரானிய அரசுத் தலைமை அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியைக் காட்டுகிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், லரிஜானி பெரும்பாலும் இரான் நாட்டிற்குள் ஒரு யதார்த்தவாதியாக விவரிக்கப்பட்டார்.

அவர் சித்தாந்த விசுவாசத்தை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையுடன் இணைத்தார்.

பேச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட கணக்கிடப்பட்ட உத்திகளுக்கு முன்னுரிமை அளித்தார்.

மேற்கத்திய சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் அவர் மிகுந்த சந்தேகத்துடனேயே இருந்தார், ஆனால் சீனாவுடனான இரானிய அரசின் நீண்டகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு தூதராகச் செயல்படுவது உட்பட, முக்கிய ராஜ்ஜீய முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

லாரிஜானி மற்றும் பிற அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமார்கள் இரான் கொடிக்கு அருகில் நிற்கிறார்கள்.

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் சுற்றில் கொல்லப்பட்ட இரானிய முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடன் லரிஜானி (இடமிருந்து நான்காவது) இருக்கும் படம்.

மூன்று முக்கிய பொறுப்பு

அவரது மரணம் குறித்த செய்தி வந்த நேரத்தில், லரிஜானி மூன்று முக்கிய நெருக்கடிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார்.

போர்தான் அதில் முதலாவது நெருக்கடி. இரான் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது உட்பட, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இரண்டாவது, உள்நாட்டு அமைதியின்மை ஆகும். இது பொருளாதார பிரச்னைகளுடன் தொடங்கியது. ஆனால் விரைவில் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த போராட்டங்களாக மாறியது. இவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்ற ஒடுக்குமுறையைச் சந்தித்தன.

மூன்றாவது, இரானிய அரசின் அணுசக்தித் திட்டம் மற்றும் முடங்கிப்போயுள்ள அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆகும். இவை இரண்டுமே ராணுவத் தாக்குதல்களால் ஏற்கெனவே சீர்குலைக்கப்பட்டிருந்தன.

அவர் கொல்லப்பட்டது இந்த விவகாரங்களைத் தீர்க்கப்படாமல் விட்டுள்ளதுடன், மிகவும் பலவீனமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இன்னும் அறியப்படாத ஓர் அடுத்த தலைமைக்கு இவற்றை மாற்றுகிறது.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைப்பதன் மூலம் இரான் ஓரளவு மீண்டு வரும் தன்மையைக் காட்டினாலும், அது தொடர்ச்சியான வான் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

எந்தவொரு புதிய மூத்த பிரமுகரும் உடனடியாக இலக்கு வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வார்.

லரிஜானி

பட மூலாதாரம்,Getty Images

எதை நோக்கி செல்லும்?

இது அதிகாரத்தை ராணுவத்தை நோக்கி மேலும் நகர்த்தக்கூடும்.

அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்கள், மூத்த தலைமைச் செயலிழந்தால் நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான அதிகாரம் ஆயுதப்படைப் பிரிவுகளுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன.

நடைமுறையில், இது முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் குறிக்கலாம், ஆனால் குறைந்த மத்திய ஒருங்கிணைப்புடன் இருக்கும்.

அடுத்த தலைமைகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதில் தலைமை சிரமப்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரானிய அரசு பொது அறிவிப்புகளைத் தாமதப்படுத்தியுள்ளதுடன், புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பெரும்பாலும் வெளி உலக கண்ணில் படாமல் வைத்துள்ளது.

இது பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது உள் நிச்சயமற்ற தன்மையாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குறுகிய காலத்தில், இதன் விளைவு மிகவும் நிலையற்ற ஒரு சூழ்நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போரில் கடினமான ராணுவ நிலைப்பாடு மற்றும் உள்நாட்டில் கடுமையான ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம்

இருப்பினும், காலப்போக்கில், மூத்த தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வரும் ஓர் அமைப்பு, குறிப்பாக 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், திறம்படச் செயல்படுவது கடினமாக இருக்கும்.

லரிஜானியின் மரணம் ஒரு தனி தலைவரின் இழப்பு மட்டுமல்ல. இது போரின் போக்கு மற்றும் இரானிய அரசின் நிலைத்தன்மை ஆகிய இரண்டையுமே பாதிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவ நெருக்கடியை தீவிரப்படுத்தும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg8gv84yklo

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

1 day 13 hours ago

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Mar 19, 2026 - 07:11 AM

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். 

அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. 

ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de

ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.

2 days 3 hours ago

ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது

--- --- ---

*வோசிங்டன்போஸ்ட் ஊடகம் விமர்சனம்

*கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பரிந்துரை

*ஈரான் பலமாக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு...

--- --- ---

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ள, ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதாக வோசிங்டன்போஸ்ட் (washingtonpost) இன்று செவ்வாய்கிழமை பிரசுரித்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது எனவும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அதாவது, ஈரானியர்களை வீதியில் இறங்கி கிளர்ச்சி செய்ய இஸ்ரேல் தூண்டுவதாக வோசிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் ஜோன் கட்சன் (John Hudson) எழுதிய செய்திக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

வோசிங்டன்போஸ்ட் அமெரிக்காவின் பிரதான ஊடகமாகும். ஜோன் கட்சன், இந்த ஊடகத்தின் தேசிய பாதுகாப்புச் செய்தியாளர் (National security reporter).

தான் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ஈரான் பக்கம் கூடுதல் கவனத்தில் வைத்திருக்க இஸ்ரேல் முற்படுவதாக குற்றம் சுமத்துகிறார்.

ஈரானின் ஆட்சியில் "விரிசல் இல்லை" பெப்ரவரி 28 ஆம் திகதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டாலும், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஈரான் இறுதிவரை போராட தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் மதிப்பீடு ஒன்றை செய்திருக்கிறது.

இந்த மதிப்பீட்டு அறிக்கையை இஸ்ரேல் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்துள்ளதாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விபரிக்கிறார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானில் ஒரு மக்கள் கிளர்ச்சி எழும் என நம்புவதாகவும், அப்படி ஒரு கிளர்ச்சி நடந்தால், ஈரான் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக அக் கட்டுரை மேலும் கூறுகிறது.

உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டபோது தான், புதிதாக பதவியேற்றுள்ள அவருடை மகன், மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

அதேநேரம், அமெரிக்க இராஜதந்திரிகளையும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளையும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற தொனி ஜோன் கட்சன் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில் தெரிகிறது.

ஈரானின் பிரதான இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர படை கூடுதல் அதிகாரம் கொண்டது என இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்க அதிகாரிகளை, இஸ்ரேல் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கட்டுரையாளர் கற்பிதம் செய்கிறார்.

அதேவேளை, ஈரான் தமது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறுவதாக வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்திக் கட்டுரையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் தெஹ்ரானில் பலவீனமான, ஆனால் மிகவும் கடினமான அரசாங்கத்தை அமெரிக்க அதிகாரிகள் காண்பதாக வோசிங்டன்போஸ்ட் விபரிக்கிறது.

ஈரானின் ஆட்சி அப்படியே தைரியமாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டுள்ளது. போரின் ஆரம்பத்தில் இருந்து இந்த மதிப்பீட்டை அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்டிருக்கிறது.

ட்ரம்பை எதிர்த்து நின்று உயிர் பிழைத்ததாக ஈரான் நம்புவதாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பிட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் விபரிக்கிறது.

ஈரான் அரசின் மூலோபாயம் உறுதியாக உள்ளது. ஹார்மூஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்தி, அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது. நீண்ட ஒரு போருக்கு ட்ரம்ப் தயாராக இல்லை என்பதை ஈரான் உணர்கிறது எனவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்ற வெள்ளிக்கிழமை வரை 15,000 இலக்குகளைத் தாக்கி, ஈரானின் இராணுவம் மற்றும் அதன் தலைமையின் மீது அமெரிக்க - இஸ்ரேல் இராணுவங்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய அழிவை, ட்ரம்பின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார்.

ஆனால், ஈரான் வலுவாக இருப்பதாக அக் கட்டுரை ஆதாரங்களுடன் தனது விமர்சனத்தை முன்வைக்கிறது.

அதேநேரம், ஐரோப்பிய நாடுகள், ட்ரம்பின் தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பாக தப்பியுள்ளன என்று வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.

அதாவது, ஐரோப்பாவில் உள்ள வோசிங்டனின் கூட்டாளிகள் போரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியிருப்பதாக வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான அமெரிக்கா அனுபவிக்காத எரிபொருள் விலை உயர்வை, ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதால் ட்ரம்ப்புக்கு ஒத்தழைக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

(The spike in energy costs is threatening to slow economic growth and increase prices in Europe more sharply than in the United States)

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bR7Y33RuCDGMpbYDWtASavJLkuep63iLu3TeyEZkpzCmFr3RwNwPYpsiyAbfAcpUl&id=1457391262&mibextid=wwXIfr

ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை

2 days 4 hours ago

ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை

hindutamil-prod%2F2026-03-17%2F90v0oxze%

வாஷிங்டன்: ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் தமக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (மார்ச் 16) இருமுறை தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “ஈரான் மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் குறிவைத்துத் தாக்க முற்பட்டிருக்கக் கூடாது. இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்றார்.

இந்த சூழலில், அமெரிக்க உளவுத்துறை தரப்பில் வெளியான தகவல்களில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் முற்படக்கூடும் என ட்ரம்ப்புக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டக்கூடும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகள் அமெரிக்கத் தாக்குதல்களை அங்கீகரிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ ஈரான் கருதினால், அந்நாடுகளின் தலைநகரங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று போருக்கு முன்னரே ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதல்கள் மூலம் ஈரானிய தலைவர்களைக் கொல்ல முயல்வது, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் தூதரகத் தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது பிப்ரவரி 28-ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக கடந்த இரண்டு வாரங்களாக, ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கியுள்ளன. அதேபோல, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் ஈரான் நிறுத்தியுள்ளது; இதனால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்

இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

2 days 6 hours ago

இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,AL-ARAB, AL-AKHBAR

படக்குறிப்பு,சில வளைகுடா நாடுகள் இரானின் சக்தியைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை பல அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டுரை தகவல்

  • பிபிசி மானிடரிங்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் போரின் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் அமெரிக்கா தொடர்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பல்வேறு கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இரானை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் ராய்ட்டர்ஸ் செய்திக்குச் சில ஊடகங்கள் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளன.

இதற்கு மாறாக, வேறு சில ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தும், "வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும் சூழலை அமெரிக்கா புறக்கணிப்பதாக" குற்றம் சாட்டியும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

வளைகுடா ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளிவரும் சில தகவல்கள், அமெரிக்கா மீதான தங்களின் நீண்டகால பாதுகாப்புச் சார்புநிலையை வளைகுடா நாடுகள் மறுமதிப்பீடு செய்யும் என்று தெரிவிக்கின்றன.

நேட்டோ பாணியிலான ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்புக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

பதற்றத்தைக் குறைப்பதற்கான வளைகுடா நாடுகளின் முயற்சிகள் குறித்து பல ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் ராணுவ மோதல்களைத் தவிர்ப்பதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் விடுக்கப்பட்ட அழைப்புகளும் அடங்கும்.

'இரானின் திறன்களை அழிக்க' விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,மார்ச் 18 அன்று, இரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைகளை ஏவியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி.

மார்ச் 16 அன்று வெளியான இந்த ராய்ட்டர்ஸ் செய்தி, சில அரபு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்துள்ளது.

பெத்லஹேமைச் சேர்ந்த 'மா-ஆன்' செய்தி இணையதளம், "டிரம்பிற்கு வளைகுடா நாடுகளின் செய்தி: இரானின் திறன்கள் அழிக்கப்படும் வரை நிறுத்தாதீர்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

"இரான் மீதான தாக்குதல்களைத் தொடருமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வளைகுடா நாடுகள் : நாங்கள் மட்டும் தனியாகத் துன்பப்படுமாறு விடப்படுவதை விரும்பவில்லை" என்று லெபனானின் ஹெஸ்பொலா ஆதரவு நாளிதழான 'அல்-அக்பர்' எழுதியுள்ளது.

"வளைகுடா நாடுகள் இரானுடன் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவைக் கேட்கவில்லை என்றாலும், இப்போது பல நாடுகள் அமெரிக்கா இந்த வழியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும், வளைகுடா எண்ணெய் விநியோகப் பாதைகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் நிலையில் இரானை விட்டுவிடக் கூடாது என்றும் விரும்புகின்றன"என மூன்று வளைகுடா வட்டாரங்கள் கூறியதாக அந்த செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.

"அமெரிக்கர்கள் தங்கள் பணி முடிவதற்குள் வெளியேறினால், நாங்கள் இரானை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று சௌதி அரேபியாவைச் சேர்ந்த வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் சகிர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா அச்சுறுத்தலைப் புறக்கணித்ததா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன.

வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன.

ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் இரான் வளைகுடா நாடுகளை இலக்கு வைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்திருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா இந்தச் சூழலை 'புறக்கணித்திருக்கலாம்' என்றும் லண்டனைச் சேர்ந்த நாளிதழான 'அல்-அரப்' செய்தி வெளியிட்டுள்ளது.

இரானின் எதிர்வினை குறித்த தவறான கணிப்பின் விளைவாகவோ அல்லது அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கைகளை விட தனது அரசியல் கணக்குகளுக்கே முன்னுரிமை அளித்தது என்பதற்கான அறிகுறியாகவோ இது இருக்கலாம் என்று அந்த செய்தி கூறியது.

ஓமன் பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான சலீம் அல்-ஜஹோரி எகிப்திய தனியார் சேனலான 'யோம்7'-னிடம் கூறுகையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் அமெரிக்கா மீதான தங்கள் "பாதுகாப்புச் சார்புநிலையை" மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒரு பொதுவான தடுப்பு முறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகள் "போருக்குள் இழுக்கப்பட்டுள்ளன" என்றும், அவற்றின் எல்லைகளில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் "எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள்" என்றும் அவர் கூறினார்.

அல் ஜசீராவிடம் அல்-மாதர் அரசியல் ஆய்வு மையத்தின் தலைவர் சலே அல்-முதைரி கூறுகையில், 'அமெரிக்காவை விட வளைகுடா நாடுகள் இந்தப் போருக்கு அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும், குறிப்பாக அதன் நீண்டகால பொருளாதார தாக்கம் காரணமாக இது நிகழும்' என்றார்.

அல் ஜசீராவிடம் ஓமன் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான முகமது அல்-அரைமி கூறுகையில், அச்சுறுத்தல் என்பது இரானிடமிருந்து மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கான "அபாயகரமான இஸ்ரேலியத் திட்டத்திலிருந்தும்" வருகிறது என்று தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் வேண்டுகோள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய அரபு தேசிய தொலைக்காட்சி சேனல்களும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எதிர்வினைவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின.

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக செயல்பாட்டில் வைப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை அவை முன்னிலைப்படுத்தின.

பல நாடுகளின் எதிர்வினையானது "சந்தேகத்திலிருந்து நேரடி எதிர்ப்பு வரை" பலவாறாக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 'ஸ்கை நியூஸ் அரேபியா' தெரிவித்தது.

பல அமெரிக்க நட்பு நாடுகள் "கவனமாகவோ அல்லது தயக்கமாகவோ" இருப்பதாகத் தெரிவதாகவும், சில நாடுகள் இப்பிரச்னையைத் தீர்க்க மாற்று வழிகளைக் கூட பரிந்துரைத்துள்ளதாகவும் கத்தாரின் 'அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அல் ஜசீரா செய்தியின்படி, லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரைடன், அமெரிக்காவின் 'அழுத்தத்திற்கு' தனது நாடு பணியாது என்று கூறியுள்ளார்.

இரான் மீது இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற டிரம்பின் கூற்றையும் சில சேனல்கள் முன்னிலைப்படுத்தின.

இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் 'அல்-அரேபியா' மற்றும் 'ஸ்கை நியூஸ் அரேபியா' செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், ஆனால் நிபுணர்கள் மற்றும் ஊடக தகவல்கள் அந்நாட்டிடம் பல்வேறு அல்லது நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிப்பதாகவும் ரஷ்யாவின் 'ஆர்டி' ஊடகம் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20l0wng7xqo

நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!

2 days 9 hours ago

நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்! 

18 Mar, 2026 | 11:02 AM

image

நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில் உள்ள தபால் நிலையமொன்றுக்கு அருகில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் அப்பகுதியிலிருந்து வெவ்வேறு திசைக்கு பாதுகாப்பு தேடி ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர் சந்தைப் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

அதனையடுத்து, மைதுகுரி பல்கலைக்கழக வைத்தியசாலை நுழைவாயில் பகுதியிலும் தொடர்ந்து கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மைதுகுரியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு “போகோ ஹரம்” என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது மைதுகுரி நகரம் முழுவதும் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் போகோ ஹரம் என்ற பயங்கர அமைப்பினை ஒடுக்க முன்னதாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/241263

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2 days 12 hours ago

5628246_20250301t183744z-675495603-rc2h4

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer ஆகிய இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

லண்டனில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசிய பின் பிபிசி-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் செலென்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் காரணமாக சர்வதேச நாடுகளின் கவனம் உக்ரைன் மீதிருந்து திசைமாறுவதாகவும், இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போவதாகவும் அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மீது ட்ரம்ப் அண்மையில் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை மிக அவசியம் என Zelensky சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ரஷ்யாவும் ஈரானும் வெறுப்பினால் இணைந்த ஆயுதச் சகோதரர்கள் என்றும், இத்தகைய ஆட்சிகள் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.

ஈரான் போர் சூழலால் உக்ரைனின் நான்கு ஆண்டுகாலப் போராட்டம் பாதிக்கப்படுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் Volodymyr Zelensky கோரிக்கை விடுத்தார்.

https://athavannews.com/2026/1469024

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2 days 12 hours ago

New-Project-1-16.jpg?resize=750%2C375&ss

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

ஈராக் அரசாங்கமும் குர்திஷ் அதிகாரிகளும் துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியமை மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளித்து.

இதையடுத்து, சர்வதேச சந்தையில் புதன்கிழமை (18) எண்ணெய் விலைகள் ஓரளவு சரிந்தன. 

எனினும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைப் பெருமளவில் நிறுத்தியுள்ள ஈரான் மோதல் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை கடந்த நான்கு தொடர்ச்சியான அமர்வுகளாக ஒரு பீப்பாய் 100 டொலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது.

செவ்வாயன்று 3% க்கும் அதிகமாக உயர்ந்த பின்னர், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை புதன்கிழமை 0209 GMT நிலவரப்படி 67 சென்ட்கள், அதாவது 0.65% சரிந்து, ஒரு பீப்பாய் $102.75 ஆக இருந்தது. 

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் $1.18, அதாவது 1.23% சரிந்து, $95.03 ஆக இருந்தது.

பாக்தாத்தின் அரச ஊடக தகவல்களின்படி, செய்ஹானில் இருந்து எண்ணெய் வரத்து புதன்கிழமை காலை 0700 GMT மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈராக்கின் எண்ணெய் அமைச்சர் ஹயான் அப்தெல்-கனி தெரிவித்தார். 

அத்துறைமுகம் வழியாக ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100,000 பீப்பாய்கள் மசகு எண்ணெயை அனுப்ப ஈராக் முயன்று வருவதாக இரண்டு எண்ணெய் அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

ஈராக்கின் பெரும்பாலான மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் அதன் முக்கிய தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி 70% சரிந்து, ஒரு நாளைக்கு வெறும் 1.3 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது என்று மார்ச் 8 அன்று தகவல்கள் தெரிவித்தன.

உலகளாவிய எண்ணெயில் சுமார் 20% கடந்து செல்லும் முக்கிய ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதே இதற்குக் காரணம்.

இதேவேளை, இஸ்ரேலிய தாக்குதலில் தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. 

அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கிய முதல் நாளிலிருந்து குறிவைக்கப்பட்ட மிக மூத்த தலைவர் இவரே ஆவார்.

இடைநிலை நாடுகள் தெரிவித்த பதற்றத்தைத் தணிக்கும் சலுகைகளை ஈரானின் புதிய உச்ச தலைவர் நிராகரித்துவிட்டதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறினார்.

ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அங்குள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் கடற்கரையோர இடங்களைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் செவ்வாயன்று கூறியது.

லாரிஜானியின் மரணம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய கடலோர நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்கள், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன என்று சைனா ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் இரசாயனங்களுக்கான தலைமை ஆராய்ச்சியாளர் மிங்யு காவ் கூறியுள்ளார்.

மார்ச் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு 6.56 மில்லியன் பேரல்கள் அதிகரித்துள்ளதாக, செவ்வாயன்று வெளியான API புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 13-ஆம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு சுமார் 380,000 பேரல்கள் அதிகரித்திருக்கும் என ரொய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2026/1468929

இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

2 days 12 hours ago

இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

ஜோ கென்ட் ராஜினாமா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோ கென்ட் நீண்டகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராகவும், அமெரிக்க இராணுவத்தின் கௌரவிக்கப்பட்ட ஒரு படைவீரராகவும் இருந்து வருகிறார்.

கட்டுரை தகவல்

  • பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர்

  • வெள்ளை மாளிகையிலிருந்து

  • 13 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இரானால் அமெரிக்காவிற்கு "உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.

"இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள சக்தி வாய்ந்த அதன் ஆதரவு சக்திகளின் அழுத்தம் காரணமாகவே இந்த நிர்வாகம் போரைத் தொடங்கியது" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகை இந்தக் கடிதத்தை நிராகரித்துள்ளது. இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான "வலுவான ஆதாரங்கள்" அதிபரிடம் இருப்பதாக அது கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெறுப்புணர்வைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று, கென்ட் "யூத எதிர்ப்பு உணர்வுகளைத்" தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஜோ கென்ட்டின் விலகல், டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே இருந்து இரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலைப் பகிரங்கமாக விமர்சித்த மிக உயர்மட்ட நபராக அவரை மாற்றியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், கென்ட் ஒரு "நல்ல மனிதர்", ஆனால் "பாதுகாப்பு விஷயத்தில் பலவீனமானவர்" என்று கூறினார். கென்ட்டின் ராஜினாமா கடிதம் குறித்து பேசிய டிரம்ப் "அவர் வெளியேறியது ஒரு நல்ல விஷயம்" என்பதைத் தனக்கு உணர வைத்திருப்பதாக கூறினார்.

கடிதத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்

டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில், "உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகள்" மற்றும் செல்வாக்கு மிக்க அமெரிக்க பத்திரிகையாளர்கள் "தவறான தகவல்களைப்" பரப்பியதாகவும், இது அதிபரின் "அமெரிக்காவே முதன்மை" என்ற கொள்கையை சீர்குலைக்க வழிவகுத்ததாகவும் கென்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

"இரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்ப வைக்க இந்தத் தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இது ஒரு பொய்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக டிரம்பின் ஆதரவாளராக இருந்த கென்ட், இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். டிரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே அவர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்று பதவியேற்றார். 2022 தேர்தலின் போது 'பிரவுட் பாய்ஸ்' (Proud Boys) என்ற தீவிர வலதுசாரி குழுவின் உறுப்பினரை ஆலோசகராக நியமித்ததற்காக கென்ட் மீது ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் வைத்திருந்தனர்.

தனது நியமன உறுதிப்படுத்தல் விசாரணைகளின் போது, அமெரிக்க கேபிட்டலில் ஜனவரி 2021-ல் நடந்த கலவரத்தை பெடரல் ஏஜென்ட்கள் தூண்டிவிட்டார்கள் என்றோ, 2020 தேர்தலில் டிரம்ப் தோற்கடிக்கப்படவில்லை என்றோ அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்க கென்ட் மறுத்துவிட்டார்.

எதிர்ப்புகளும் எதிர்வினைகளும்

அமெரிக்காவின் யூத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான 'அவதூறு எதிர்ப்பு லீக்' (ADL), கென்ட்டின் குற்றச்சாட்டுகள் "பழைய கால யூத எதிர்ப்பு கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன" என்று கூறியுள்ளது. "அவர் இஸ்ரேல் மீதும் ஊடகங்கள் மீதும் பழி சுமத்துவதில் ஆச்சரியமில்லை," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆதரவு குழுவான அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (Aipac), ADL-இன் அறிக்கையை எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு Aipac உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

தாராளவாத இஸ்ரேல் ஆதரவுக் குழுவான ஜே ஸ்ட்ரீட்டின் மூத்த அதிகாரியான இலான் கோல்டன்பெர்க், கென்ட்டின் கடிதத்தை "மிக மோசமான யூத-விரோதக் கருத்துகளைப் பயன்படுத்தும் அருவருப்பான விஷயம்" என்று விவரித்தார்.

சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி

45 வயதான கென்ட், அமெரிக்கச் சிறப்புப் படை மற்றும் சிஐஏ (CIA) ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவியும், கடற்படை குறியீட்டு தொழில்நுட்ப வல்லுநருமான ஷானன் கென்ட், 2019-ல் சிரியாவில் நடந்த ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படை உட்பட, அமெரிக்க ராணுவத்துடன் 11 முறை வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டார்.

பின்னர் சிஐஏ-வில் துணை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார், அதன்பின்னர் தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து அரசுப் பணியிலிருந்து விலகினார்.

தனது கடிதத்தில் இராணுவச் சேவை மற்றும் மனைவியின் இறப்பைக் குறிப்பிட்டுள்ள கென்ட், "அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் தராத, அமெரிக்க உயிர்களின் இழப்பிற்கு நியாயம் கற்பிக்க முடியாத ஒரு போரில் அடுத்த தலைமுறையினரைச் சண்டையிட அனுப்புவதை என்னால் ஆதரிக்க முடியாது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில், கென்ட் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டின் கீழ் பணியாற்றினார். கென்ட்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, துளசி கப்பார்ட் இரான் மீதான டிரம்பின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "அதிபர் அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவை எடுத்தார்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"முப்படைத் தளபதி என்ற முறையில், எது உடனடி அச்சுறுத்தல், எது அச்சுறுத்தல் அல்ல என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அதிபருக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

"தனக்கு முன் இருந்த அனைத்து தகவல்களையும் கவனமாக ஆய்வு செய்த பின்னர், இரானில் உள்ள பயங்கரவாத இஸ்லாமிய ஆட்சி உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற முடிவுக்கு டிரம்ப் வந்தார், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "மற்றவர்களின் செல்வாக்கின் பேரில்தான் டிரம்ப் இந்த முடிவை எடுத்தார் என்ற கென்ட்டின் கருத்து அவமதிப்புக்குரியது மற்றும் வேடிக்கையானது," என்றார்.

"டிரம்ப் வெளிப்படையாக கூறியது போல, இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான வலுவான சான்றுகள் அவரிடம் இருந்தன," என்றார்.

பழமைவாத ஊடக விமர்சகரான டக்கர் கார்ல்சன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனக்கு நெருங்கிய உறவான கென்டைப் பாராட்டினார்.

"எனக்குத் தெரிந்தவர்களிலேயே ஜோதான் மிகவும் தைரியமானவர், அவரை ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்று ஒதுக்க முடியாது," என்று கார்ல்சன் கூறினார்.

"உயர்மட்ட, தொடர்புடைய உளவுத் தகவல்களை அணுகும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய ஒரு வேலையை அவர் விட்டுச் செல்கிறார். அதற்காக பழமைவாதிகள் அவரை அழிக்க முயற்சிப்பார்கள்."

"அது தெரிந்தும் அவர் அதைச் செய்தார்," என்றார் அவர் .

கென்ட் விலகலை தொடர்ந்து, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் அமலாக்க இயக்குநர் மார்கரெட் ரியான் மற்றும் கென்னடி மையத்தின் தலைவர் ரிக் கிரெனெல் உட்பட, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இருப்பினும் முந்தைய 2017-21 காலகட்டத்தை விட இப்போது அதிகாரிகளின் மாற்றம் குறைவாகவே உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70n0zdjryro

Checked
Fri, 03/20/2026 - 19:44
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe