உலக நடப்பு

10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம்

3 hours 2 minutes ago
10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம்
மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பக்கெட்டில் சேமித்து வைத்துள்ள மனித மூளைகளில் ஒன்று

1 ஏப்ரல் 2023, 06:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற பக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பக்கெட்களில் மொத்தமாக 9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

உலகிலுள்ள மிகப் பெரிய மனித மூளைகள் சேமிப்பகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மனித மூளைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன.

அந்தக் காலகட்டத்தில் மூளைகளின் செயல்பாடு தொடர்பாக மருத்துவத்துறைக்குப் பெரியளவிலான விவரங்கள் தெரியவில்லை. இதனால், மூளைகளைச் சேமித்து வைத்து எதிர்கால ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சிறிய யோசனைதான் மாபெரும் மூளை சேமிப்பகத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது. ஃபார்மால்டிஹைட் உதவியுடன் இந்த மூளைகள் சேமிக்கப்படுகின்றன.

   

"உலகில் உள்ள மிகப் பெரிய மூளை சேமிப்பகம் இதுதான் என்று நான் எண்ணுகிறேன். 1945இல் இருந்து 1980 வரை சுமார் 10,000 மூளைகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பிரேத பரிசோதனை முடிந்ததுமே அவர்கள் மூளையைத் தனியாக எடுத்து பக்கெட்டில் சேமித்துள்ளனர் என்று மூளை சேமிப்பகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன் கூறுகிறார்.

தற்போது இல்லையென்றாலும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலர் வந்து மூளையைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வார்கள் என்ற நோக்கில் அவர்கள் இதைச் சேமித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன ஆரோக்கியம் பற்றிய கருத்து சமீப ஆண்டுகளில் பெரிதும் மாற்றமடைந்துவிட்டது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் நோயாளிகளின் உரிமைகள் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மனித மூளை ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நோயாளிகள் இறந்ததும் அவர்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு அவர்களின் மூளை தனியாக எடுத்து சேமிக்கப்படும். இதற்காக எவ்வித அனுமதியும் பெறப்பட்டதில்லை.

இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான எஸ்பெர் வாச்சிவ் கவ் பேசும்போது, "ஆய்வகத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே இருந்து யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. மனநல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மிகக் குறைவான உரிமைகளே இருந்தன.

குறிப்பிட்ட சிகிச்சைக்கு நீங்கள் இசைவு தெரிவிக்காமலேயே அதற்கு சிகிச்சையளிக்கப்படலாம். அந்தக் காலத்தில் நோயாளிகள் பிற மக்களைப் போல் சமமாக மதிக்கப்படவில்லை," என்று தெரிவித்தார் .

எனினும் 1990இல் மனித மூளைகளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று டேனிஷ் நெறிமுறைகள் கவுன்சில் தீர்ப்பளித்தது.

மனித மூளை ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மூளை சேமிப்பகம் தொடர்பாக சமூகத்தில் நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்ததாகக் கூறிய மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன், "மனரீதியிலான நோய்கள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.

டிமென்ஷியா, மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலமின்மை தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது 4 ஆய்வுகளுக்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/articles/crgexe0w4ryo

400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை

5 hours 33 minutes ago
400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை 11.jpg

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம்.

எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம்.

உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்து உள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன என கூறியுள்ளார். கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=242339

வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு

5 hours 54 minutes ago
வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு பேரவை தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.

எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷ்யா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
 

https://thinakkural.lk/article/247420

 

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம்

5 hours 57 minutes ago
நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம்

Published By: Sethu

31 Mar, 2023 | 05:11 PM
image

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது.

ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். 

பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கையைக் கடைபிடித்த இந்நாடுகள்,  உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேட்டோவில் இணைவதற்கு தீர்மானித்தன.

நேட்டோவின் 29 நாடுகள் சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்த நிலையில், 

துருக்கியும் ஹங்கேரியும் தயக்கம்காட்டி வந்தன. 

 பின்லாந்தின் இணைவுக்கு ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் துருக்கியின் பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் ஏற்கெனவே இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதன்படி, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கடைசி தடங்கல் நீக்கியுள்ளது. 

'நேட்டோவின் 30 நாடுகளும்  பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்துள்ளன. அவர்களின் நம்பிக்கைகக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என பின்லாந்து பிரதமர் சவ்லி நீனிஸ்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு ஹங்கேரியும் துருக்கியும்  அங்கீகாரம் வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.
 

 

https://www.virakesari.lk/article/151856

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது

23 hours 15 minutes ago

ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதற்கான குற்றப்பத்திரிகையில் குறைந்தது ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ட்ரம்ப் மீது 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக "வழக்கு குறித்து நன்கு அறிந்த" இரண்டு நபர்கள் தெரிவித்ததாக அமெரிக்கா செய்தி தொலைக்காட்சியான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ட்ரம்ப் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மேலும் இரண்டு பெயரை குறிப்பிட விரும்பாத நபர்களை மேற்கோள் காட்டியுள்ளது.

ட்ரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவெளியில் வெளியாக நிலையில், மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் ட்ரம்ப் மீது என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளார் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், "தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று நியூயார்க் காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்த பணம் சட்டத்திற்கு புறம்பாக ட்ரம்பின் அதிபர் பிரச்சார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

"செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டிரம்பின் வழக்கறிஞர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமைபும் என்று பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் காரி குறிப்பிடுகிறார்.

'நேர்மையாக விசாரணை நடக்காது'
ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூயார்க்கில் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது என ட்ரம்ப் தனது சொந்த சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என்பதற்காக மட்டுமே என் மீது போலியான ஊழல் மற்றும் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நியூயார்க்கில் நேர்மையான விசாரணை என்னால் நடத்த முடியாது என அவர்களுக்கு தெரியும்" என்று ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மாட் கேட்ஸ், ட்ரம்ப் "உறுதியாகவும், தெளிவாகவும்" இருப்பதாக கூறினார்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், "சட்டத்திற்கு மேலே யாரும் இல்லை. நிரபராதி என்பதை நிரூபிக்க அனைவருக்கும் உரிமை உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

குயின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், 57% பேர், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் என்று வாக்களித்துள்ளனர்.

ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று 62% பேர் வாக்களித்து இருக்கின்றனர்.

"செவ்வாயன்று நீதிமன்றத்தின் முன்பு ட்ரம்ப் ஆஜராகவும், சரணடைவது குறித்தும் அவரின் வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறேன்" என்று அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக அமெரிக்காவின் சில பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஃப்ளோரிடாவில் கூடிய அவரது ஆதரவாளர்கள், 2024 அதிபர் தேர்தலுக்கான ட்ரம்பின் பரப்புரை கொடியுடன் நெடுஞ்சாலையில் போராடினர்.

ட்ரம்ப் மீது ஏன் விசாரணை?
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் ட்ரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது சர்ச்சை. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

மைக்கேல் கோஹனுக்கு ட்ரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, ட்ரம்ப் தனது பணப்பரிவர்த்தனை ஆவணங்களில் பொய்யாக பதிவு செய்திருப்பதாக வாதிடக் கூடும். நியூயார்க்கைப் பொருத்தவரை இது ஒரு தவறான நடத்தைதான். ஆனாலும், தீவிரமான வழக்காக மாற வழிவகுக்கும் வகையில், இது ஒரு குற்றமாக மாற்றப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டார்மி டேனியல்ஸின் இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் டிரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா - நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்" என்று ஸ்டார்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் - ஸ்டார்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்-இன் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

இதுதவிர, இந்த குற்றச்சாட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் போலிப் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் போலீசாரிடம் இருந்து ட்ரம்ப் தப்பிச் செல்வது போலவும், அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து செல்வது போன்ற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு

1 day 8 hours ago
ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு 6-23.jpg

ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன் பதிவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது. ரஷியா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவில் கசப்பு அதிகரித்து வருகிறது.

முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் பிப்ரவரி 20, 2023 அன்று உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது ரஷியாவை எரிச்சலூட்டியது. அப்போதிருந்து, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் போர் அதிகரிக்கும் என்று அமெரிக்காவை ரஷியா மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
https://akkinikkunchu.com/?p=242209

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி

1 day 8 hours ago
பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி

Published By: Sethu

31 Mar, 2023 | 10:15 AM
image

பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

'லேடி மேரி ஜோய் 3' எனும் இப்பயணிகள் கப்பல், மிண்டானோவா தீவிலுள்ளஸம்போங்கா நகரிலிருந்து சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவை நோக்கி நேற்றுமுன்தினம் சென்கொண்டிருந்தது. அப்போது கப்பலில் தீ பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரையோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் 195 பயணிகளும் 35 ஊழியர்களுமாக 230 பேர்   காப்பாற்றப்பட்டனர்.

31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பசிலான் ஆளுர் ஜிம் சலீமன் தெரிவித்துள்ளார். 18 பேரின் சடலங்கள் வாயு சீராக்கப்பட்ட அறை ஒன்றில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Lady-Mary-Joy-3---AFP.jpg

உயிரிழந்தவர்களில் 6 மாத குழந்தை உட்பட 3 சிறார்களும் அடங்கியுள்ளனர்.  இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்ள்ளது. 

எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தெரியவில்லை.

205 பயணிகள் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் அதைவிட அதிக எண்ணிக்கையானோர் பயணம் செய்ததாகவும் ஆளுர் சலீமன் கூறியுள்ளார்.  (AFP Photo)

 

https://www.virakesari.lk/article/151802

 

மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டப்பட்டார்.

1 day 15 hours ago

                 டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் குற்றம் சாட்டப்பட்டார், இந்த விஷயத்தை நன்கு அறிந்த பல ஆதாரங்களின்படி - அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. முத்திரையுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறியப்படவில்லை, ஒரு ஆதாரம் CNN இடம் கூறினார். மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கின் அலுவலகம் டிரம்பின் வழக்கறிஞர்களை அணுகி, அவர் சரணடைவதைப் பற்றி விவாதிக்கும்.

https://www.cnn.com/2023/03/30/politics/donald-trump-indictment/index.html

வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

1 day 21 hours ago
வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
வியட்நாம் போரில் அமெரிக்க சிப்பாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மார்க் ஷீ
  • பதவி,பிபிசி உலக சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆயினும்கூட, ஏறக்குறைய எட்டு ஆண்டுகாலப் போரில் பெருமளவிலான பணத்தையும் இராணுவ வளங்களையும் கொட்டிய போதிலும், அமெரிக்கா வடக்கு வியட்நாமியப் படைகள் மற்றும் அவர்களின் கொரில்லா கூட்டாளிகளான வியட் காங் ஆகிய சிறு நாடுகளிடம் தோல்வியடைந்தது.

மார்ச் 29, 1973 இல் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவையொட்டி, வியட்நாம் போரில் அமெரிக்கா எப்படி தோல்வியடைந்தது என்பது குறித்து, இரு பெரும் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கேட்டோம்.

அந்தக் காலகட்டத்தில் பனிப்போர் உச்சத்தில் இருந்தது, கம்யூனிச மற்றும் முதலாளித்துவ உலக சக்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

 

இரண்டாம் உலகப் போரால் ஃப்ரான்ஸ் ஏறக்குறைய திவாலாகிவிட்டது. இந்தோசீனா பிராந்தியத்தில் அதன் காலனியைக் காப்பாற்ற முடியவில்லை, மேலும் ஒரு சமாதான உடன்படிக்கையின் படி, வியட்நாம் இரண்டாகப் பிளவு பட்டு, வடக்கில் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கமும் தெற்கில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும் அமைந்தன.

ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்களின் தோல்வி வியட்நாமில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. முழு வியட்நாமும் அண்டை நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடுகளாகிவிடக் கூடாதே என்ற அச்சத்தால் போர் தொடரப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாகவே ஒரு தசாப்த காலமாக நீடித்து லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபட்டது.

உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவ சக்தி படைத்த ஒரு நாடு, கிளர்ச்சியாளர்களிடமும், வறிய தென்கிழக்காசிய தேசத்திடமும் எவ்வாறு அடிபணிந்தது என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

இது குறித்து, இங்கே இரண்டு வல்லுநர்கள் பொதுவாக நம்பப்படும் காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

மிகப்பெரிய திட்டம்
ஒரு கட்டத்தில் 5 லட்சம் அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் இருந்தனர்

பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஒரு கட்டத்தில் 5 லட்சம் அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் இருந்தனர்

உலகின் மறுபுறத்திற்குச் சென்று ஒரு போரில் ஈடுபடுவது என்பது நிச்சயமாக ஒரு பெரிய முயற்சியாகும். போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வியட்நாமில் 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்த போருக்கு ஆன செலவு மிகவும் வியப்புக்கு உரியது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸின் ஒரு அறிக்கை மொத்தமாக 686 கோடி டாலர்கள் இந்தப் போருக்காகச் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இன்றைய மதிப்பில் அது 950 கோடி டாலருக்கும் அதிகமானது.

ஆனால் இதற்கு முன்னர், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது இதை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகச் செலவு செய்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை நிபுணர் டாக்டர் லூக் மிடுப், போரின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தது என்கிறார்.

அவர் பிபிசியிடம், "வியட்நாம் போர் முழுவதும் நீடித்த விசித்திரமான விஷயங்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.

 

"அமெரிக்கா பல பிரச்னைகளை முழுமையாக அறிந்திருந்தது. அமெரிக்க இராணுவம் அந்தச் சூழலில் செயல்பட முடியுமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்த போதிலும், 1968 வரை அமெரிக்க அரசாங்கம் இறுதியில் வெற்றி பெறுவோம் என்று நம்பியது." என்று அவர் கூறுகிறார்.

இந்த நம்பிக்கை விரைவில் குறையத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி 1968 இல் கம்யூனிஸ்ட் டெட் படைகளின் தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது, இறுதியில் போர் செலவினங்களுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லாததால் 1973 இல் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் துவாங் வூ-உம், அமெரிக்க போர்ப் படைகள் வியட்நாமில் இருந்திருக்க வேண்டுமா என்று டாக்டர் மிடுப் போலவே கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க இராணுவத்துக்குப் பொருத்தமற்ற போர்
கம்போடிய எல்லைக்கு அருகில் அமெரிக்க சிப்பாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கம்போடிய எல்லைக்கு அருகில் அமெரிக்க சிப்பாய்

ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் இளம் அமெரிக்க வீரர்கள் காட்டில் சண்டையிடுவதைப் போல் சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வியட் காங் கிளர்ச்சியாளர்கள் அடந்த புதர் வழியாகத் தங்கள் வழியைப் புத்திசாலித்தனமாகச் சூழ்ச்சி செய்து ஆச்சரியமான தாக்குதல்களை நடத்தினர்.

"அமெரிக்க வீரர்கள் போருக்குக் கட்டளையிடப்பட்ட பகுதி போல எந்த ஒரு பெரிய தேசத்தின் ராணுவத்திற்கு இடப்பட்டிருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் இருந்திருக்கும். இது தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் சாதாரணமாகக் காணப்படுவது போன்ற மிக அடர்த்தியான காட்டுப்பகுதியாகும்." என்று டாக்டர் மிடுப் கூறுகிறார்.

இரு தரப்புக்கும் இடையிலான திறன் வேறுபாடு சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் போராளிகளுக்குப் பழக்கமான நிலைமைகளை அமெரிக்க இராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என்று ஒரு கட்டுக்கதை உள்ளது, இது உண்மை இல்லை." என்கிறார் அவர்.

"வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் ஆகியவையும் அந்தச் சூழலில் சண்டையிட மிகவும் போராட வேண்டியிருந்தது." என்பது அவர் கருத்து.

மிக முக்கியமாக, கிளர்ச்சியாளர்கள் தங்கள் சண்டையின் நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்ய முடிந்ததும் லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு எல்லையைத் தாண்டி பின்வாங்க முடிந்ததும் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது அவரது கூற்று. பின்தொடர்ந்த அமெரிக்க இராணுவம் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பேராசிரியர் வூவைப் பொருத்தவரை, அமெரிக்கர்கள் வியட் காங் கொரில்லாக்களுடன் போரிடுவதில் அதிக கவனம் செலுத்தினர், இதன் விளைவாகத் தோல்வி ஏற்பட்டது.

அவர் பிபிசியிடம் "தெற்கில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ஒருபோதும் சைகோனை தோற்கடித்திருக்க முடியாது." என்று கூறினார்.

அமெரிக்காவில் உள்நாட்டில் விதைக்கப்பட்ட தோல்வி மனப்பான்மை
போருக்கு எதிராக திரண்ட மக்கள்

பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போருக்கு எதிராக திரண்ட மக்கள்

இந்த மோதல் பெரும்பாலும் "முதல் தொலைக்காட்சிப் போர்" என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் இந்தப் போரின் போது ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயல்பட்டன.

1966 ஆம் ஆண்டு வாக்கில் 93% அமெரிக்கக் குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருந்ததாகவும், அவர்கள் பார்த்த காட்சிகள் அதிகம் தணிக்கை செய்யப்படாமலும் முந்தைய மோதல்களைக் காட்டிலும் உடனடியானவையாக இருந்ததாகவும் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் மதிப்பிட்டுள்ளது.

இதனால்தான் அமெரிக்க தூதரக வளாகத்Corbis via Getty Imagesதைச் சுற்றி நடந்த சண்டையின் காட்சிகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது.

வியட் காங் போராளிகள் போராட்டத்தை நேரடியாக தெற்கு அரசாங்கத்திற்கும் அமெரிக்க பொதுமக்களின் படுக்கையறைகளிலும் கொண்டு வந்ததை பார்வையாளர்கள் நெருக்கமாகவும் நிகழ்நேரத்திலும் பார்த்தார்கள்.

ஆனால் 1968 க்குப் பிறகு, தொலைக்காட்சி ஒளிபரப்பு பொதுவாக போருக்கு விரோதமாக மாறியது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், காயப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் போன்ற படங்கள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டன.

அமெரிக்கக் குடிமக்கள் இந்த படங்களால் திசைதிருப்பப்பட்டு, அவர்கள் போருக்கு எதிராகத் திரும்பினர். நாடு முழுவதும் பெரும் போர் எதிர்ப்பு நிகழ்வுகள் வெடித்தன.

மே 4, 1970 அன்று, அத்தகைய ஒரு ஆர்ப்பாட்டத்தில், ஒஹாயோவில் அமைதியான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த கென்ட் மாநில பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் தேசியக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

"கென்ட் அரசு படுகொலை", போருக்கு எதிராக அதிகமான மக்களைத் திரட்டியது.

வியட்நாமில் இருந்து வந்த அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளின் புகைப்படங்களைப் போலவே மக்களுக்கு ஒவ்வாத, இளைஞர்களின் ஆட்சேர்ப்பு, பொதுமக்கள் மன உறுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போரில் 58,000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.

வட வியட்நாமிய வீரர்களுக்கு இது மிகப்பெரிய நன்மை என்று பேராசிரியர் வூ கூறுகிறார்: அவர்களின் இழப்புகள் மிக அதிகமாக இருந்தாலும். அவரது சர்வாதிகார அரசு, ஊடகத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டையும், தகவல் மீதான ஏகபோகத்தையும் கொண்டிருந்தது.

போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்

பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்

"அமெரிக்காவும் தெற்கு வியட்நாமும் மக்கள் கருத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள் போல வெற்றிகரமாகச் செயல்படத் தவறிவிட்டன” என்கிறார் பேராசிரியர் வூ.

"அவர்கள் எல்லையை மூடி, எதிர்ப்பை அடக்கினர். போருக்கு உடன்படாத எவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்." என்றார்.

தென் வியட்நாமில் இதயங்களையும் மனதையும் வெல்லும் போரிலும் அமெரிக்கா தோல்வி
வியட்காங்கை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்

பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வியட்காங்கை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்

இது மிகவும் கொடூரமான போராட்டமாக இருந்தது, இதில் அமெரிக்கா பல பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இதில் நாபாம் மற்றும் ஏஜென்ட் ஆரஞ்சு பயன்பாடும் அடங்கும்.

நாபாம் என்பது 2700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரியக்கூடிய பெட்ரோகெமிக்கல் பொருள். மேலும் அது எதனுடனும் தொடர்பு கொள்ளும்போது அது ஒட்டிக்கொண்டுவிடும்.

அதே சமயம், ஏஜென்ட் ஆரஞ்சு என்பது காடுகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். ஆனால் அது வியட்நாமிய வயல்களில் இருந்த பயிர்களையும் அழித்தது, இதனால் உள்ளூர் மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர்.

இந்த இரண்டு விஷயங்களின் பயன்பாடும் வியட்நாமின் கிராமப்புற மக்களின் மனதில் அமெரிக்காவின் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதில் பங்கு வகித்தது.

அமெரிக்க இராணுவத்தின் 'தேடுதல் மற்றும் அழிப்பு' நடவடிக்கைகளில் எண்ணற்ற அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

நூற்றுக்கணக்கான வியட்நாம் பொதுமக்கள் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட 1968 மை லாய் படுகொலையும் இதில் அடங்கும். பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை உள்ளூர் மக்களை அந்நியப்படுத்தியது, அவர்கள் வியட் காங்கிற்கு ஆதரவாக இல்லை.

டாக்டர். மிடுப், "தென் வியட்நாமின் பெரும்பாலான மக்கள் இடதுசாரிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது சமாளித்து போரைத் தவிர்க்கவே விரும்பினர்." என்று தெரிவித்தார்.

சாதாரண மக்களின் இதயங்களிலும் இடம் பெறுவதில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.

"அந்நிய ராணுவம் சாமானியர்களை மகிழ்விப்பது எப்பொழுதும் கடினம். அயல்நாட்டு ராணுவம் சாமானியர்களின் பாசத்திற்குத் தகுதி பெறாது என்று நினைப்பதும் இயற்கையானது" என்கிறார்.

இடது சாரிகளின் மனவலிமை
வீரர்கள்

பட மூலாதாரம்,HULTON ARCHIVE/GETTY IMAGES

தெற்கு வியட்நாமுக்குப் போரிட ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை விட இடது முன்னணிக்காகப் போராடியவர்கள் போரில் வெற்றி பெறுவதற்கு அதிக அர்ப்பணிப்புடன் இருந்ததாக டாக்டர். மிடுப் நம்புகிறார். "போரின் போது அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்கா ஏராளமான இடதுசாரி கைதிகளை (கடுமையாக) விசாரித்தது தெரியவந்துள்ளது."

"இந்த ஆய்வுகள் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்த ஒரு சிந்தனைக் குழுவான ராண்ட் கார்ப்பரேஷன், வட வியட்நாம் மக்களும் வியட் காங் மக்களும் ஏன் சண்டையிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்பியது.

அவர்கள் அனைவரும் (வட வியட்நாமியர்கள்) தாம் செய்வது தேசபக்திக்கான பணி என்று உணர்ந்தனர், எளிமையாகச் சொன்னால், ஒரு அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஒருங்கிணைத்தல் என்ற முடிவுக்கு வந்தது"

ஏராளமான ராணுவ வீரர்களை இழந்த நிலையிலும் இடதுசாரி சக்திகள் போராட்டத்தைத் தொடர்ந்த விதம் அவர்களின் வலிமையான மன உறுதிக்குச் சான்றாகும்.

இந்தப் போரின்போது முடிந்தவரை பல வீரர்களைக் கொல்ல வேண்டும் என்பதில் அமெரிக்கத் தலைமை உறுதியாக இருந்தது. எதிரிகளை வேகமாகக் கொன்றால் இடதுசாரிகளின் மன உறுதி உடைந்து விடும் என்று அமெரிக்கத் தலைமை கருதியது.

இந்த போரின் போது 1.1 மில்லியன் வட வியட்நாம் மற்றும் வியட் காங் போராளிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னரும் இடதுசாரிகள் யுத்தம் முடியும் வரை யுத்த பிரதேசத்தில் உறுதியாக இருந்தனர்.

வட வியட்நாமிய மனோபலம் வலுவாக இருந்ததா இல்லையா என்பது பேராசிரியர் வூக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் வட வியட்நாம் வீரர்களின் மனதில் ஊட்டப்பட்ட வலு, அவர்களை ஆபத்தானவர்களாக மாற்றியது என்று அவர் நம்புகிறார்.

"இந்த எண்ணத்தை மக்களை நம்ப வைக்க அவர்களால் முடிந்தது. பிரசாரம் மற்றும் அவர்களின் கல்வி முறையால், அவர்களால் மக்களைத் தோட்டாக்களைப் போல கொடியவர்களாக மாற்ற முடிந்தது." என்கிறார் அவர்.

மக்கள் செல்வாக்கற்ற, ஊழல் மிகுந்த தென் வியட்நாம் அரசு
After receiving a fresh supply of ammunition and water flown in by helicopter, men of the US 173rd Airborne Brigade continue on a jungle 'Search and Destroy' patrol in Phuc Tuy Province, Vietnam, June 1966.

பட மூலாதாரம்,HULTON ARCHIVE/GETTY IMAGES

தென் வியட்நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை நம்பகத்தன்மையின்மை மற்றும் முன்னாள் காலனித்துவ சக்தியுடனான உறவுகள் தாம் என்று டாக்டர் மிடுப் கருதுகிறார்.

"வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் இடையேயான பிளவு எப்போதும் செயற்கையானது, இது பனிப்போரால் ஏற்பட்டது. வியட்நாமை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க கலாசார, இன அல்லது மொழி அடிப்படை எதுவும் இல்லை." என்கிறார் அவர்.

தெற்கு வியட்நாமில் வாழும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறும் அவர், இருப்பினும், முழு வியட்நாமிய மக்கள்தொகையில் இந்தக் குழுவின் பங்கு 10 முதல் 15 சதவீதம் மட்டுமே என்கிறார். வட வியட்நாமில் இருந்து பலர் பழிவாங்கலுக்கு பயந்து தெற்கு வியட்நாமிற்கு தப்பிச் சென்றனர், இது தென் வியட்நாமிய அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுத்தது. அது ‘க்ரிடிகல் மாஸ்’ என்ற நிலையை உருவாக்கியது

சமூகவியலில், கிரிட்டிகல் மாஸ் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் நம்பிக்கை யதார்த்தமாக மாறத் தொடங்கும் சூழ்நிலையைக் குறிக்கிறது.

தெற்கு வியட்நாமின் முதல் ஜனாதிபதியான ந்கோ தின் தியம், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி போன்ற பிரமுகர்கள் உட்பட, அமெரிக்காவில் சக்திவாய்ந்த கத்தோலிக்க நண்பர்களைக் கொண்டிருந்தார்.

"ஒரு மதச் சிறுபான்மைக் குழுவின் மேலாதிக்கம், பௌத்த மதத்தைப் பின்பற்றும் பரந்த வியட்நாமிய மக்களிடையே தென் வியட்நாமிய அரசாங்கத்தை பிரபலமடையச் செய்தது." என்கிறார் மிடுப்.

இதன் காரணமாக, தென் வியட்நாம் அரசாங்கத்திற்குச் சட்டப்பூர்வ நெருக்கடி ஏற்பட்டதாக அவர் நம்புகிறார். ஏனென்றால் பெரும்பாலான வியட்நாமிய மக்கள் இந்த அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கமாகவே கருதினர். இது பிரெஞ்சு ஆட்சியின் மரபு போன்றது. ஏனென்றால் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் பிரான்சின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

"ஐந்து லட்சம் அமெரிக்க துருப்புக்கள் அங்கு இருந்தது, தென் வியட்நாம் அரசாங்கம் வெளிநாட்டினரை எல்லா வகையிலும் சார்ந்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.”

ஊழல் உச்சத்தில் இருந்த அரசாங்கத்தை அமைக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது என்று அவர் கூறுகிறார்.

"வியட்நாம் குடியரசு அதன் தொடக்கத்தில் இருந்து அதன் இறுதி வரை, ஊழலில் திளைத்திருந்த நிலையில், 1960 மற்றும் 1975 க்கு இடையில் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பெரும் பொருளாதார உதவியால் ஊழல் புதிய உச்சத்தை எட்டியது. இது தென் வியட்நாமிய பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்தது. லஞ்சம் கொடுக்காமல் ராணுவத்திலோ அல்லது சிவில் அரசாங்கத்திலோ பதவியைப் பெற முடியாது என்பதே இதன் பொருள்.”

இது ஆயுதப்படைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக மிடுப் கூறுகிறார்.

"இதனால், அமெரிக்காவால் ஒரு திறமையான மற்றும் நம்பகமான தென் வியட்நாம் இராணுவத்தை ஒருபோதும் தயார் செய்ய முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்ததே. மேலும் அமெரிக்க துருப்புக்கள் வியட்நாமை விட்டு வெளியேறினால், தெற்கு வியட்நாம் அழிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.”

அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமின் கையறுநிலை
Viet Cong soldiers charging the enemy in South Vietnam, 1968.

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் வியட்நாம் அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகியிருக்கவில்லை என்றும் அமெரிக்க வல்லுநர்கள் வியட்நாம் விவகாரத்தில் சாக்குப்போக்குகளைத் தேடுகிறார்கள் என்றும் பேராசிரியர் வூ கூறுகிறார்.

"இந்த இழப்புக்கு அவர்கள் யாரையாவது குற்றம் சொல்ல விரும்புகிறார்கள். மேலும் தெற்கு வியட்நாமைக் குறை கூறுவது மிகவும் எளிதானது," என்று அவர் கூறுகிறார்.

இதனுடன், கத்தோலிக்க மதத்தை நம்புபவர்களின் ஊழல் மற்றும் பாரபட்ச நிலை குறித்த விமர்சனங்கள் அமெரிக்கச் செய்திகளில் மிகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“ஊழல் அதிகமாக இருந்தது உண்மை தான், ஆனால், அதுவே போருக்குக் காரணமாக அமையும் அளவுக்கு இல்லை. ஊழல் பல திறமையின்மை மற்றும் பயனற்ற இராணுவப் பிரிவுகளுக்கு வழிவகுத்தது, ஆனால் மொத்தத்தில், தெற்கு வியட்நாமிய இராணுவம் மிகவும் நன்றாகப் போராடியது.” என்பது அவரது வாதம்.

இத்தகைய சூழ்நிலையில், தென் வியட்நாம் இராணுவம் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் தானாகப் போரிடுவது சிறப்பாக இருந்திருக்கும் என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.

வட வியட்நாமின் நீண்ட நாள் போரில் ஈடுபடும் திறன், இதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.

ஏனெனில் தென் வியட்நாமின் மிதவாத அரசால் இதை நீண்ட காலம் செய்ய முடியவில்லை.

இந்த அரசியல் அமைப்பில் மக்கள் போரில் நம்பிக்கை வைத்திருந்தாலும், உயிரிழப்புகள் போன்றவற்றைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

america helicopters

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அமெரிக்காவும் தெற்கு வியட்நாமும் பொதுக் கருத்தை உருவாக்குவதில் இடதுசாரிகள் அளவுக்கு வெற்றியடைய முடியவில்லை. பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் அவர்களால் புதிய படைகளை உருவாக்க முடிந்தது. அதாவது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு வடக்கில் வசதி இருந்தது, ஆனால் தெற்கில் இல்லை.” என்கிறார் வூ.

இதனுடன், சோவியத் யூனியனிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் வடக்கு வியட்நாம் பெற்ற பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவு குறையவில்லை. இதன் பாரத்தையும் தென் வியட்நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c03kk5kr3r1o

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை

2 days 8 hours ago
யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை

Published By: Rajeeban

29 Mar, 2023 | 12:02 PM
image

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.

மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஸ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

skynews-alexei-moskalyov-russia_6102766.

வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின்  செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என அவரின் சட்டத்தரணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த குற்றச்சாட்டின் கீழ் 13 வயது மாசா இரண்டு மாதங்களிற்கு முன்னர் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

இதனை தொடர்ந்து ரஸ்ய இராணுவத்தை  கடுமையாக விமர்சித்து வந்த தந்தை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல் நாள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ரஸ்ய இராணுவத்தை அவமதித்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ள பலரில் இவரும் ஒருவர்.

எனினும் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தமைக்காக மகளை வீட்டிலிருந்து  ரஸ்ய அதிகாரிகள் அகற்றி சிறுவர் இல்லத்தில் சேர்த்தமை  உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என  நகரத்தின் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை தெரிவித்தமைக்காக சிறைத்தண்டனை என்பது மோசமான விடயம்,இரண்டரை வருட சிறைத்தண்டனை பயங்கரமானது என அவர் குறிப்பிட்டார்.

அலெக்சே தப்பியோடிவிட்டார் என நாங்கள் கேள்விப்படுகின்றோம் அது இரண்டாவது அதிர்ச்சி அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என கருதுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குடும்பத்தின் பிரச்சினைகள் கடந்த வருடம் ஆரம்பமாகின.கடந்த ஏப்பிரலில் தங்கள் பாடசாலை மாணவிஉக்ரைனிற்கு வாழ்த்து தெரிவித்தும் ரொக்கட்கள் ரஸ்ய கொடியுடன் யுத்தம் வேண்டாம் எனவும் வரைந்துள்ளார் என பாடசாலை நிர்வாகம் முறையிட்டது.

 

https://www.virakesari.lk/article/151659

 

பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி!

2 days 8 hours ago
பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

86 வயதான பரிசுத்த பாப்பரசருக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பரிசுத்த பாப்பரசருக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசரை சில நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்து முறையான சிகிச்சைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டியுள்ளதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்து பரிசுத்த வாரம், உயிர்த்த ஞாயிறு வரை திருப்பலிகள் மற்றும் வழிபாடுகளை பரிசுத்த பாப்பரசர் தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பதற்கு ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஏப்ரல் மாத இறுதியில் ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்வதற்கும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டிருந்தார்.
 

http://www.samakalam.com/பாப்பரசர்-வைத்தியசாலையி/

உலகம் முழுவதும் 30 கோடி பேரின் தொழில் ஆபத்தில்!

2 days 21 hours ago
உலகம் முழுவதும் 30 கோடி பேரின் தொழில் ஆபத்தில்!

தொடர்ந்து வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 300 மில்லியன் மனிதர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் என என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள், வாகனத் துறையில் 85 மில்லியன் வேலைகள் செயற்கை நுண்ணறிவால் இல்லாமலாக்கப்படும். எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு ஆரோக்கியம், இசை மற்றும் மருத்துவத் துறைகளிலும் பயன்படுத்தப்படும். இதனால் பெரும்பாலோர் வேலை இழப்பார்கள் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் பேர் வேலைகள் இழக்கும் அபாயம் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

https://thinakkural.lk/article/246893

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்

2 days 22 hours ago
சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்

Published By: RAJEEBAN

29 MAR, 2023 | 01:15 PM
image

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு சுமார் 9000 மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலியா குறித்த தனது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சீனா குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் துருவமயப்படுத்தலிற்கான ஒரு காரணம் உள்ளது இது அமெரிக்காவிற்கு மாத்திரம் உரியது இல்லை என தெரிவித்துள்ள பராக்ஒமாஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அவை சொல்லும் செய்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ருபேர்ட் என்ற பெயருடன் ஒருநபர் இருக்கின்றார் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் அவரே இதற்கு காரணம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

qnlN4Oz2.jpg

தொலைக்காட்சி பேசும்வானொலி சமூக ஊடகங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதன் பரந்துபட்ட போக்கை அவர் சிறந்த முறையில் பயன்படுத்தினார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தங்கள் கொள்கை சார்ந்த ஊடகங்களை பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  என்ற நிலை காணப்படுகின்றது  அமெரிக்காவில் பொக்ஸ் நியுஸ் அவுஸ்திரேலியாவில் ஸ்கை நியுஸ் நீங்கள் பார்ப்பது எதுவாகயிருந்தாலும் நீங்கள் பார்ப்பது எல்லாம் ஒரு செய்தி மூலத்தை தான் என பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கூட்டு உரையாடலும் பகிரப்பட்ட கதையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊடகங்களின் பொருளாதாரம் - கிளிக்குகள் நாங்கள் எப்படி மக்களை கவர்ந்திருக்கலாம் என்பதிலேயே தங்கியுள்ளது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிறைய கற்பனையோ சிந்தனையோ சுவாரஸ்யமான விடயங்களோ இல்லாமல் மக்களை கவருவதற்கான ஒரே வழி அவர்களை கோபக்காரர்கள் ஆக்குவது வெறுப்பு மிக்கவர்களாக்குவது எனவும்  அவுஸ்திரேலியாவில் கருத்து தெரிவித்துள்ள பராக் ஒபாமா மக்களை யாரோ கோபப்பட வைப்பது போலவும் அவர்களிற்குரியவற்றை யாரோ பறித்துக்கொள்ளமுயல்வது போலவும் உணர்வை ஏற்படுத்துவதே  ஊடகங்கள் மக்களை கவருவதற்கான இலகுவான வழி எனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பழைய பாணியிலான இனவெறியையும் ,பாலின வெறி ஓரினச்சேர்க்கை போன்ற விடயங்களையும்  வழங்கினால் ஊடகங்களால் மக்களை கவர முடியும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது அடையாள அரசியலின் காலத்தில் இருக்கின்றோம் அடையாள அரசியல் குறித்து விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

எதிர்கால  செயற்கை நுண்ணறிவும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் போல பேச முடிவதும் எதிர்காலத்தில் நிலைமையை மேலும் சவாலானதாக்கும் என குறிப்பிட்டுள்ள பராக் ஒபாமா  தன்னை போல குரல்பதிவொன்று வெளியானால்  தனது மனைவியினால்  மாத்திரம் உண்மையை கண்டுபிடிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/151672

'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்

3 days 3 hours ago
'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
  • ஆண்ட்ரூ கர்ரி
  • பிபிசி ட்ராவல்
13 செப்டெம்பர் 2021
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்
துருக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும்

மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்சியை ஆய்வு செய்தபோது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்கள் மிகவும் அசாதாரணமானவை, தனித்துவம் மிக்கவை என நம்பினார்.

உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் "கோபெக்லி டெபே" என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட வட்டக் கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. கோபெக்லி டெபே என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள்.

செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.

 

இந்த கட்டமைப்புகள் 11,000 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை அவை தங்குவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட மனிதகுலத்தின் பழமையான கட்டுமானமாகக் கருதப்படுகிறது.

ஒரு தசாப்த பணிகளுக்குப் பிறகு, ஷ்மிட் ஒரு முடிவுக்கு வந்தார். நான் 2007இல் உர்பாவின் பழைய நகரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, "மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்கியது, நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கியது ஆகிவற்றுக்கான அடிப்படைகளை விளக்குவதன் மூலம் மனித நாகரிகத்தின் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு கோபெக்லி டெபே உதவும்" என்று என்னிடம் கூறினார்.

அந்த இடத்தில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் பிற சான்றுகள், வட்டக் கல் அடைப்புகள், வேட்டையாடுபவர்களால் கட்டப்பட்டவை என்பதை உணர்த்தின. அவர்கள் கடந்த பனி யுகத்திற்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள். கண்டுபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விலங்கு எலும்புகள் காட்டு இனங்களுடையவை. பயிரிடப்பட்ட தானியங்கள் அல்லது பிற தாவரங்ககள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

 

இந்த வேட்டைக்காரர்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வந்து கோபெக்லி டெபேவின் T-வடிவ தூண்களை கல் கருவிகளால் செதுக்கியிருக்கலாம் என்று ஸ்மிட் கருதினார். அதற்கு குன்றின் அடிவாரத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் பாறையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தூண்களை செதுக்குவதும் நகர்த்துவதும் மிகப்பெரிய பணியாக இருந்திருக்கும். தூண்கள் மலை அடிவாரத்தின் இயற்கை சுண்ணாம்பு அடுக்குகளிலிருந்து செதுக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்பு கல்லின் பளபளப்பு அந்த நேரத்தில் கிடைத்த மரக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யத் தக்க அளவில் மென்மையாக இருந்திருக்கிறது.

மேலும் மலையின் வடிவங்கள் 0.6 மீ மற்றும் 1.5 மீ தடிமன் கொண்ட கிடைமட்ட அடுக்குகளாக இருந்ததால், பக்கங்களில் இருந்து அதிகப்படியானவற்றை வெட்டியிருக்க வேண்டுமே தவிர, கீழே இருந்து வெட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

துருக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வேட்டைக்காரர்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வந்து கோபெக்லி டெபேவின் T-வடிவ தூண்களை கல் கருவிகளால் செதுக்கியிருக்கலாம் என்று ஸ்மிட் கருதினார்

ஒரு தூண் செதுக்கப்பட்டவுடன் அவற்றை கயிற்றில் கட்டி மலை உச்சியில் சில நூறு மீட்டர் நகர்த்தியுள்ளனர். அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கு கூடி கட்டுமானப்பணிகள், விருந்து விழாக்கள் போன்றவற்றை முடித்துவிட்டு மீண்டும் கலைந்து சென்றிருக்கிலாம் என்று ஸ்மிட் கூறினார். இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்றும் ஸ்மிட் கருதினார்.

அது உண்மையெனில் அது மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பயிரிடுவது மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் சடங்குகள், மற்றும் வழிபாடுகள் போன்றவற்றுக்கான வளாகங்கள் உருவானதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்கள். இந்தக் காலகட்டத்தை புதிய கற்காலம் என்கிறார்கள். உணவு உபரியான பிறகுதான் அவற்றைப் படைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

ஆனால் கோபெக்லி டெபே இந்த காலக் கோட்டை தலைகீழாக மாற்றுகிறது என்று ஷ்மிட் கூறினார். இந்த இடத்தில் கிடைத்த கற்கருவிகள் கார்பன் ஆய்வு மூலம் புதிய கற்காலத்துக்கு முந்தையவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் முதல் அகழ்வாராய்ச்சி நடந்து முடிந்து 25 ஆண்டுகள் ஆன பிறகும் அங்கு பயிரிடப்பட்டதற்கோ, பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் இருந்ததற்கோ ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கு நிரந்தரமாக யாரும் வாழ்ந்திருக்க முடியும் என்று ஷ்மிட் கருதவில்லை. அதை ஒரு "மலையின் தேவாலயம்" என்று அவர் அழைத்தார்.

வளாக சடங்கு மற்றும் சமூகக் கூட்டம் ஆகியவை விவசாயத்துக்கு முன்னரே வந்திருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. 1,000 ஆண்டு காலத் தொடர்ச்சியில் பெரிய கற்பாறைகளைச் செதுக்குவது, அதற்கு ஏராளமான மனிதர்களைப் பயன்படுத்துவது போன்றவை, மக்களைத் திரட்டுவதற்கும் தூண்டியிருக்கின்றன. அவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டியிருந்திருக்கிறது. அதற்காக விவசாயமும் வீட்டு விலங்குகளும் பயன்பாட்டுக்கு வந்திருக்கலாம். அதுவே புதிய கற்கால புரட்சியைத் தொடங்கியது.

நான் அவரைச் சந்தித்த 2007-க்கு ஓராண்டு முன்பு கோபெக்லி டெப் பற்றிய தனது முதல் அறிக்கையை ஷ்மிட் முன்பு வெளியிட்டபோது கற்கால அகழ்வாராய்சியில் ஈடுபடுவோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும்அதன் பிறகு பெரிய அளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

துருக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2000 ஆண்டின் நடுப்பகுதியில் தனது அறிக்கையை ஷ்மிட் வெளியிட்டபோது, ஊடகங்கள் அதை மதங்களின் பிறப்பிடம் என்று அழைத்தன. ஒரு ஜெர்மன் ஊடகம் இதை ஏதேன் தோட்டத்துடன் ஒப்பிட்டது.

அதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் அங்கு கூடினர். அடுத்த ஒரு தசாப்தத்திற்குள், மலை உச்சி முற்றிலும் மாறிவிட்டது. 2012 ஆம் ஆண்டில் அருகிலுள்ள சிரியாவில் உள்நாட்டுப் போரால் சுற்றுலா பாதிக்கப்படும்வரை, உலகின் "முதல் கோவில்" என்று அழைக்கப்படும் கட்டுமானத்தைக் காண மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

எனினும் ஐந்து ஆண்டுகளில் மீண்டும் இந்த இடம் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இன்று, சாலைகள் மற்றும் கார் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய உர்பாவில் 2015 இல் கட்டப்பட்ட சான்லூர்பா தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இங்கிருந்து எடுக்கப்பட்ட ‘T’ வடிவத் தூண்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும் துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை "கோபெக்லி டெபே ஆண்டு" என்று அறிவித்தது.

"அந்த இடம் ஒரு மலை உச்சியில், ஒரு தொலைதூர இடமாக எனக்கு இன்னும் நினைவிருக்கிறது" ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளர் ஜென்ஸ் நோட்ராஃப் கூறுகிறார். அவர் 2000 ஆண்டின் நடுப்பகுதியில் அந்த இடத்தில் ஒரு மாணவராக வேலை செய்யத் தொடங்கினார். "இது முற்றிலும் மாறிவிட்டது." என்கிறார்.

2014 இல் கோபெக்லி டெபே பற்றிய உலகுக்கு அறிவித்த ஆராய்ச்சியாளரான ஸ்மிட் இறந்துவிட்டார். தூசி நிறைந்த மலை உச்சி இப்போது சுற்றுலாத் தலமாக மாறியிருப்பதை அவர் காணவில்லை. ஆனால் அவரது கண்டுபிடிப்புகள் புதிய கற்கால மாற்றத்தில் உலகளாவிய ஆர்வத்தைத் தூண்டின.

துருக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது ஷ்மிட்டைத் தொடர்ந்து லீ கிளாரின் தலைமையில் அங்கு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அவர் முக்கியக் கட்டுமானத்தின் அடியில் பல மீட்டர்கள் தோண்டி ஆய்வு நடத்தியிருக்கிறார்.

கிளார் கண்டுபிடித்தவை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை மீண்டும் மாற்றி எழுதலாம். அவரது கண்டுபிடிப்பு அங்கிருந்தது ஒரு கோயில் மட்டுமல்ல, ஒரு குடியிருப்புப் பகுதியைச் சுற்றி கோயில் அமைந்திருப்பதாகக் கூறுகிறது.

மழைநீரைச் சேகரிப்பதற்கான ஒரு பெரிய நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன. உணவு சமைப்பதற்கும் பீர் தயாரிப்பதற்கும் தானியங்களை பதப்படுத்துவதற்குமான ஆயிரக்கணக்கான அரைக்கும் கருவிகளை கிளார் தலைமையிலான குழு கண்டறிந்தது.

"கோபெக்லி டெபே இன்னும் ஒரு தனித்துவமான, சிறப்பான இடம். ஆயினும் மற்ற தளங்களில் இருந்து நமக்குக் கிடைத்த தகவல்களுடன் இது நன்றாகப் பொருந்துகிறது" என்று கிளேர் கூறினார். "இது நிரந்தர மக்கள் குடியேற்றத்தைக் கொண்ட இடமாகும். இது இந்த இடத்தைப் பற்றிய இதுவரையிலான புரிதலை மாற்றியிருக்கிறது" என்கிறார் கிளார்.

இதற்கிடையில், உர்பாவைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பணிபுரியும் துருக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது மலை உச்சியில் அமைந்த இதேபோன்ற தூண்களைக் கொண்ட பல இடங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடித்தனர். "இது ஒரு தனித்த கோவில் அல்ல" என்று கூறுகிறார் ஆஸ்திரிய தொல்பொருள் நிறுவன ஆராய்ச்சியாளர் பார்பரா ஹோரெஸ். இவர் புதிய கற்கால ஆய்வில் ஈடுபட்டு வரும் நிபுணர்."இந்தக் கண்டுபிடிப்புகள் கதையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது" என்கிறார் அவர்.

துருக்கிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த பகுதியை "தென்கிழக்கு துருக்கியின் பிரமிடுகள்" என்று குறிப்பிடலாம் என கூறினார்.

துருக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து கிடைக்கும் புதிய சான்றுகள் மூலம், மற்ற இடங்களில் உள்ள மக்கள் விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கும், பயிரிடுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வளர்க்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களை பரிசோதிப்பதை காட்டுகிறது.

தளத்தின் கல் சிற்பங்கள் ஒரு முக்கியமான துப்பு என்று கிளேர் வாதிடுகிறார். கொபெக்லி டெபேவின் தூண்கள் மற்றும் சுவர்களில் உள்ள நரி, சிறுத்தை, பாம்பு மற்றும் கழுகுகளின் சிற்பங்கள், "நாம் வழக்கமாகப் பார்க்கும் விலங்குகள் அல்ல" என்று அவர் கூறுகிறார். "அவை வெறும் படங்கள் அல்ல. அவை குழுக்களை ஒன்றாக வைத்திருப்பதற்கும், பொதுவான அடையாளத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு வகையான விவரிப்புகள்" என்கிறார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் இந்தப் பகுதிக்கு வந்தபோது, ஒரு தொலைவின் உணர்வு ஏற்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள கல்வட்டத்துக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது கோபெக்லி டெபே. அதன் சிற்பங்களின் உண்மையான பொருள், ஒரு காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்த உலகத்தைப் போன்றே, புரிந்துகொள்ள இயலாதது.

இதுதான் மக்களை ஈர்க்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத இடத்தில் இப்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து ஆச்சரியப்படுகிறார்கள். அது ஏன் கட்டப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இந்த இடத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே அறிந்தவற்றை மாற்றக்கூடியவையாக இருக்கின்றன.

"புதிய கண்டுபிடிப்புகள் கிளாஸ் ஸ்மிட்டின் ஆய்வறிக்கையை அழிக்கவில்லை; மாறாக அவை அவரது தோள்களில் நிற்கின்றன" என்று கூறினார் ஹோரெஸ்.

"என் பார்வையில் பெருமளவு அறிவு பெறப்பட்டிருக்கிறது. அதனால் விளக்கம் மாறுகிறது. ஆனால் அதுதான் அறிவியல்"

https://www.bbc.com/tamil/global-58537324

ரஷிய – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் – டிரம்ப்

3 days 8 hours ago
ரஷிய – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் – டிரம்ப் 3-23.jpg

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தப்போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக திரண்டன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிபர் தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

https://akkinikkunchu.com/?p=242041

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்?

3 days 9 hours ago
ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்? ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்?

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும்.
50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார்.

37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் முஸ்லீம் ஆவார் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் சிறுபான்மை இனத் தலைவராகவும் ஆனார்.

ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டக்ளஸ் ரோஸ், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் மற்றும் ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அலெக்ஸ் கோல்-ஹாமில்டன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை.

https://athavannews.com/2023/1328790

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்க வட கொரிய அதிபர் அழைப்பு

4 days 1 hour ago
ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்க வட கொரிய அதிபர் அழைப்பு 

Published By: SETHU

28 MAR, 2023 | 03:05 PM
image

ஆயுத தரத்திலான அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்குமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோன் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய, சிறிய அணுவாயுதங்கள் எனக் கருதப்படும் பொருட்களை இராணுவ அதிகாரிகள் சகிதம் கிம் ஜோன் உன் பார்வையிடும் படங்களையும் அந்நாட்டு அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சுவரிலுள்ள படங்கள் மூலம் மேற்படி ஆயுதம் "Hwasan-31" என அடையாளம் காணப்பட்டுள்ளது.

North-korea-Nuclear---Kim-Jong-Un---AFP3

அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக, தனது ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய சிறிய அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு வட கொரியா நீண்ட காலமாக முயற்சித்து வந்தது. 

இந்நிலையில், மேற்படி நிகழ்வின்போது, வட கொரியாவின் அணுவாயுத நிறுவகத்தின் அதிகாரிகளால் கி;ம ஜோன் உன்னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. அப்போது ஆயுத தரததிலான அணுசக்திப் பொருட்கள் தயாரிப்பை விஸ்தரிக்குமாறு கிம் ஜோன் உன் அழைப்புவிடுத்தார் என அச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டமையானது முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளதுடன், விரைவில் அணுசக்தி சோதனை ஒன்று நடத்தப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

North-korea-Nuclear---Kim-Jong-Un---AFP2

https://www.virakesari.lk/article/151594

லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது ஜேர்மனி

4 days 1 hour ago
லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது ஜேர்மனி

Published By: SETHU

28 MAR, 2023 | 09:47 AM
image

லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட்2  (Leopard 2 tanks) ரக நவீன இராணுவத் தாங்கிகளை தனக்கு வழங்குமாறு உக்ரேன் கோரி வந்தது. 

ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஜேர்மனி மறுத்தது. பின்னர் வேறு நாடுகள் இந்த தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதியளித்தது. இறுதியில் தானும் உக்ரேனுக்கு இத்தாங்கிகளை வழங்க ஜேர்மனி கடந்த ஜனவரியில் சம்மதித்தது.

இந்நிலையில், உக்ரேனுக்கான லெப்பர்2 தாங்கிகளின் முதல் தொகுதி உக்ரேனுக்கு அனுப்பப்பட்டுள்தளாக ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளால் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த யுத்த தாங்கிகளாக லெப்பர்ட் 2 தாங்கிகள் கருதப்படுகின்றன. 

ரஷ்யாவின் T90 தாங்கிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஏற்ப லெப்பர்ட் 02 தாங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஐரோப்பாவில் சுமார் 2000 லெப்பர்ட் 2 தாங்கிகள் பாவனையில் உள்ளன. இத்தகைய தாங்கிகளை இயக்குவதற்கு உக்ரேனியர்களுக்கு ஜேர்மனி பல வாரங்கள் பயிற்சிகளை வழங்கின.

இதேவேளை, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட சலெஞ்சர் 2 ரக இராணுவத் தாங்கிகள் ஏற்கெனவே உக்ரேனை வந்தடைந்துள்ளதாக உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/151554

தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ - எவ்வளவு மதிப்பு தெரியுமா?

4 days 2 hours ago
தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ - எவ்வளவு மதிப்பு தெரியுமா?
தங்கம்

பட மூலாதாரம்,DARREN KAMP

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு மலிவு விலை மெட்டல் டிடெக்டருடன் தங்கத்தை தேடி அலைந்தவருக்கு அடித்தது ஜாக்பாட். 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்.

1800-களில் ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டையின் மையமாக இருந்த விக்டோரியாவின் தங்க வயல்களில் தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்தத் தங்கப்பாறை கிடைத்தது. அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

“எனது 43 ஆண்டுகால தங்க வேட்டை வாழ்க்கையில் இது தான் மிகப்பெரியது” என்று கூறினார் அவரிடமிருந்து தங்கப் பாறையை மதிப்பிட்டு வாங்கிய டேரன் கம்ப் என்பவர்.

"இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் பொக்கிஷம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 

மெல்போர்னுக்கு தென்மேற்கே சுமார் ஒரு மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஜீலாங்கில் டேரன் கம்பின் கடை உள்ளது. பெரிய பையை தோளில் மாட்டிக் கொண்ட ஒரு நபர் தனது கடைக்கு வந்தபோது, கம்ப் அவரைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

 

“பொதுவாக மக்கள் ‘முட்டாள் தங்கம்’ அல்லது தங்கம் போலத் தெரியும் வேறு பாறைகளுடன் கடைக்கு வருகிறார்கள்” என்று கம்ப் கூறுகிறார்.

"ஆனால் அவர் இந்த பாறையை வெளியே எடுத்து, அதை என் கையில் கொடுத்து, '10,000 ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பு இருக்குமா?’ என்று கேட்டார்”

"நான் அவரைப் பார்த்து, ஒரு லட்சம் டாலர் கேட்கலாம் என்றேன்."

அப்போது அந்த நபர், கிடைத்த மொத்த பாறையில் இது பாதி தான் என்று கம்ப்பிடம் கூறியிருக்கிறார்.

மதிப்பிட்டபோது 4.6 கிலோ எடையுள்ள பாறையில் 83 அவுன்ஸ் அல்லது சுமார் 2.6 கிலோ தங்கம் இருந்தது.

அதை மதிப்பிட்ட பிறகு, கம்ப் அதை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

அந்த நபர் தனக்குக் கிடைத்த அதிருஷ்டத்தின் பலனை குடும்பத்துடன் செலவழிக்கக் காத்திருப்பதாகக் கூறுகிறார் கம்ப்.

"அவர் என்னிடம், 'என் மனைவி மகிழ்ச்சிடைவார்' என்று கூறினார்."

இது போன்ற கண்டுபிடிப்புகள் அரிதானவை என்றாலும், ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய அளவில் தங்கத் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய தங்கக் கட்டிகள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தங்க வேட்டை

பட மூலாதாரம்,AUSSIEGOLDHUNTERS/DISCOVERYCHANNEL

இதற்கு முன் 2020-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு வியப்பளிக்கும் வகையில், சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்கக்கட்டிகள் கிடைத்தன..

விக்டோரியா மாநிலத்திலுள்ள தங்க சுரங்க நகரமான தர்னகுல்லா அருகே ப்ரெண்ட் ஷானன் மற்றும் ஈதன் வெஸ்ட் ஆகியோர் இந்த தங்கக்கட்டிகளை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சில இடங்களில் மண்ணை தோண்டி, அங்கு ஆழத்தில் தங்கம் இருக்கிறதா என்பதை உலோகத்தை கண்டறியும் கருவியை கொண்டு ஆய்ந்தனர்.

 

ஈதன் வெஸ்ட்டின் தந்தையோடு சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தங்க வேட்டையில், ஒரு நாளுக்குள்ளாகவே மொத்தம் சுமார் 3.5 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக்கட்டிகளை அவர்கள் கண்டறிந்ததாக இதுதொடர்பாக டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதற்கு முன்னர் யாருமே தோண்டாத இடத்தை தெரிவு செய்திருந்தோம். அங்குதான் எங்களுக்கு இந்த தங்கக்கட்டிகள் கிடைத்தன. நான் சுமார் நான்காண்டுகளாக தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கிட்டத்தட்ட 'ஆயிரக்கணக்கான தங்கக்கட்டிகளை' கண்டறிந்திருப்பேன்" என்று ஈதன் வெஸ்ட் அப்போது கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cxxr7yd0xjro

அமெரிக்க துப்பாக்கிச் சூடு : குழந்தைகள் உட்பட 6 பேர் பலி; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்

4 days 8 hours ago
அமெரிக்க துப்பாக்கிச் சூடு : குழந்தைகள் உட்பட 6 பேர் பலி;  மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்

 

  967176.jpg  

 அமெரிக்காவில் நாஷ்வில் பகுதியில் நேற்று திங்கள்கிழமை ஆரம்ப பாடசாலை  ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று  ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகொலையில் ஈடுபட்ட நபர் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள ஆரம்ப பாடசாலையில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர   பாடசாலை ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர பொலிஸ்   உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் பொலி ஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஜோன் டிரேக் கூறுகையில், “கொடுமையான இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தியவர் அடையாளம் தெரியவந்துள்ளது. ஆட்ரி ஹேல் என்ற 28 வயது மூன்றாம் பாலினத்தவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நபர் அவரது லிங்க்ட் இன் புரொஃபைலில் தன்னை அண் என்று அவர் அடையாளப்படுத்தியிருந்தார். அதனால் சிறு குழப்பம் நிலவியது. இப்போது அவர் மூன்றாம் பாலினத்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

அவரிடமிருந்து சதித்திட்டக் குறிப்புகள்,  பாடசாலையின் வரைபடம், பொலிஸ்  சுற்றிவளைத்தால் எப்படி எதிர்கொள்வது எனப் பல்வேறு விவரங்கள் அடங்கிய குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் இந்தப்  பாடசாலையில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

அந்த நபரிடமிருந்து 2 ரைஃபிள் துப்பாக்கிகள், ஒரு கைத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. ஹேல் பாடசாலையின் பக்கவாட்டு வாயில் வழியாக நுழைந்துள்ளார். இறந்துபோன 3 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 6, இன்னொரு குழந்தைக்கு வயது 9. உயிரிழந்த மூன்று பெரியவர்களும் 60 முதல் 61 வயது கொண்டவர்கள். அவர்களில் கேத்தரின் கூன்ஸ் என்பவர்   பாடசாலையின் தலைவர் என்பது தெரியவந்துள்ளது” என்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவது அதுவும் குறிப்பாக   பாடசாலைகளில் நடப்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் பேசுகையில், “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும், தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி வன்முறைகளும் தேசத்தின் ஆன்மாவை கிழிக்கிறது. அமெரிக்க பாரா ளுமன்றம் விரைவில் துப்பாக்கி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்” என்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.

https://thinakkural.lk/article/246615

Checked
Sat, 04/01/2023 - 13:45
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe