இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன்
சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு வீதியில் நின்று போராடுகின்றனர். இலங்கையின் நிலைமை இது தான்.
—————————————————————————————————————
-இந்து சமுத்திரத்தின் முத்து இப்போ இருளுக்குள் கிடக்கு பா.உதயன்
இந்து சமுத்திரத்தின் முத்து
இப்போ இருளுக்குள் கிடக்கு
எல்லா சனமும் இங்கு
பசியோடு இருக்கு
அரிசி மாவு இல்லாம
அட பசியாய் சனம் கிடக்கு
அடக முடியா கோபத்தோட
நாடு இருக்கு
எங்க பணத்தை எல்லாம்
திருடிப் போட்டு
கொழுத்து திரியிறாங்கள்
நாம தின்ன குடிக்க வழி இல்லாம
தெருவில தான் தஞ்சம்
குடிக்கக் கூட பால் இல்லாம
குழந்தை குட்டி இருக்கு
குளிக்கக் கூட சோப் இல்லாம
நாடு நாறிக் கிடக்கு
கையை எல்லாம் நீட்டி
கடனை எல்லாம் வேண்டி
கொடுக்க வளி இல்லாம
அட சொல்லக் கூடி வெட்கம்
எங்க நாடு படும் பாடு
யுத்தம் என்று சொல்லி
பணத்தை எல்லாம் கொட்டி
ஆயுதங்கள் வேண்டி
அழிச்சு போட்டு எம்மை
குந்தி இருக்க கூட
விடமாட்டோம் என்று
தமிழ் இனத்தை அடித்து
அவன் நிலத்தை பறித்தான்
புத்தர் சிலைகள் எல்லாம்
புதுசு புதுசாய் முளைத்து
தமிழர் நிலம் எல்லாம்
இப்போ புத்தர் நிலம் ஆச்சு
எங்கள் வேதனையில் நீங்கள்
வெற்றி விழா என்று
வீதி எல்லாம் பாடி
இப்போ வேதனையில் நீங்கள்
பாடி அழுகிறீர்கள்
தூர நோக்கு இல்லை
தெளிந்த பாதை இல்லை
பங்கு போட்டு நாட்டை
ஏலம் போட்டு விற்றார்
அபிவிருத்தி என்று
ஆயிரம் கதைகள்
எல்லாம் சொல்லி
வடக்கு கிழக்கு எல்லாம்
வசந்தம் வரும் என்று
திருகு தாளம் பண்ணி
திருடி போட்டான் பணத்தை
ஆளுக்கு ஒரு பங்காய்
அரசியல் வாதி எல்லாம்
அமத்தி போட்டான் பணத்தை
திருடிய பணத்தை எல்லாம்
திரும்ப தாரும் என்று
மக்கள் கேட்கிறார்கள்
எந்தப் பதிலும் இல்லை
காலி முகத் திடலில்
கன நாளாய் சனங்கள்
கோத்தா போ வீடு என்று
கொதிச்சு போய் கிடக்கு
கத்திப் போட்டு சனங்கள்
கலைந்து போவார் என்று
விட மாட்டேன் என்று
விடாப் பிடியாய் நின்று
கொடாப் பிடியாய் கோத்தா
இனி தமக்கு
எதிர் காலமே இல்லை
என்று பலர் இப்போ
இருக்கும் வரை இருந்து
பறித்து மக்கள் பணத்தை சுருட்டி
பதவியில் உட்கார தவிப்பு
பாராளுமன்றம் இப்போ
பாய்ந்து தாவித் திரிபவர் போலும்
பைத்தியக்கார வைத்தியசாலை போல
ஆளுக்கு ஆள் திட்டி
குரைத்தபடி கிடக்கு
அங்க ஏதும் தெளிவாய்
கதைத்தபடி காணோம்
ஒரு சிலர் மட்டும்
ஒழுங்கா ஏதும் கதைப்பார்
நாளுக்கு ஒரு அமைச்சர்
மூன்றி இரண்டு
பலம் இல்லாத
முதல் அமைச்சர்
கேலிக் கூத்தாய் போச்சு
மக்கள் எல்லாம் ஏதோ
மடையர் என்று நினைப்பு
புதிய மொந்தையில்
பழைய கள்ளு போல்
ஆடையை மாற்றிய
அதே திருடர்கள்
அமைச்சர்கள் ஆனார்கள்
உழைத்தவன் பணத்தை எல்லாம்
உறுஞ்சிக் குடித்து
கோட்டை கட்டி ஆண்ட
மன்னர் எல்லாம் ஒருநாள்
மக்கள் புரட்சி வந்தால்
இவர்கள் கதை முடிச்சு போகும்
வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம்
காலம் மீண்டும் சுழலும்
மாற்றம் மட்டும் ஒன்றே
மாறாது இருக்கும்.
பா.உதயன்