கவிதைக் களம்

நாளை வாஷிங்டனில் லிங்கனின் உரை.. தலைப்பு: றோனாயகம்..!

1 week ago

predator-firing-missile4.jpg

பிரிட்டன் தெருவில்

ஒற்றை மரணம்..!

ஊடகங்கள் விம்புகின்றன

ஊர்கள் அழுகின்றன..!!

கொன்றவன்

சரணடைய

தயாராய் நின்ற போதும்..

சுட்டு வீழ்த்தி

வீரம் காட்டி

பிடித்து

நீதி கேட்கிறது…

ஊரையே கொல்ல

கொள்கை வகுக்கும்

உலகம்..!

 

அடுத்தவன் நிலத்தில் 

குண்டுகள் கொட்டி

பிடித்து அடித்து

அழித்து…

வளர்த்த பகை

தேடி வந்து

உயிர் எடுத்தால்

அது…

பயங்கரவாதம்..!

இருந்தும்…

மானுட உலகில்

கேள்விகள்

ஆராய்ச்சிகள்

முளைக்கும்..!

அதுவே….

மனிதனை

இயந்திரம் கொன்றால்

“Just war”..!

 

நோபலின் நாயகன்

சமாதானப் புறா

ஒபாமாவின்

தாரக மந்திரம் இது..!

 

ஏவி விட்டு

தூர இருந்து

கொன்று விட்டால்

இல்லை இல்லை..
ஊரையே அழித்திட்டால்

சாட்சியும் இல்லை

குற்றவாளியும் இல்லை

அழுவதற்கும் ஆளில்லை

ஒப்பாரி வைக்க…

ஊடகங்களும் தயார் இல்லை..!

 

அதுமட்டுமா

றோனுக்கு என்ன

சனநாயகம்..?!

மனித உரிமைகள்..??!

இயந்திரத்திற்கு

என்ன சிறைச்சாலை..???!

நீதி கேள்வி கேட்கும்..!

 

ஒப்பற்ற கண்டுபிடிப்பு

அணு குண்டால்

மனிதனை  அழித்த

பரம்பரை…

இன்று

றோன்களால்

மிச்சம் மீதி தொடர்கிறது..!

இதுவரை…

அழித்த உயிர்களின்

கணக்கு மட்டும்

பல ஆயிரங்கள்..!

 

“குற்றவாளி”

அமெரிக்காவின்

சந்தேகம் ஒன்றே போதும்

ஓர் உயிர் எடுக்க..

இத்தனை ஆயிரம்

சாவுகளும்

அவ்வழி வந்தவையே.!

பச்சிளம் குழந்தை முதல்

பள்ளிப் பாலகர் வரை

அதில் அடங்கும்..!

இவை கண்டு…

ஐநாவும்

மூச்சின்றி கிடக்கும்

யுனிசெப்பும்

வாய்மூடிக் கிடக்கும்..!

நீதிக்கும் அங்கு

வேலை..

பூச்சியம்..!

 

நாளை

வாசிங்கடனில்

லிங்கனின் உரையாம்…

றேகனின் பரம்பரை

றோனால் உலகை

ஆள்வதே

றோனாயகம்..!

அதுவே

அமெரிக்காவின்

21ம் நூற்றாண்டின் சனநாயகம்..!

இதுதான் தலைப்பாம்..!

 

வாக்குச் சீட்டும்

போறடிச்சுப் போச்சு

றோனால் அடிச்சு

சாவுகளை எண்ணுவதே

மேற்குலகின்

தர்மமாய் ஆச்சு..!

 

நாளை இது

பஞ்சசீலம்  வரை

படர்ந்து விடும்..!

தம்பி பிரபாவும்

தமிழர்

உயிர் எடுக்க வந்த

இஸ்ரேலின் றோன்களுக்கு

அடிக்கடி

வன்னியில் ஆப்படிச்சதுண்டு..!

அதனாலும்..

அவனைக் காலி செய்யும்

திட்டம்

றோனாயகத்திற்கு

வந்திருக்கும்..!

(2013 இல் எழுதியது.. மீள்பிரசுரம்.. ஆண்டுகள் ஓடினாலும்.. வல்.. ஆதிக்க சக்திகளின் எண்ணங்கள் மாறுவதில்லை.)

https://kuruvikal.wordpress.com/2013/05/24/நாளை-வாஷிங்டனில்-லிங்கனி/

மனிதா உன்னைத்தான்!

1 month 1 week ago

No photo description available.

View of our Earth from Mars
 
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.

சிவனா...?!

1 month 3 weeks ago

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E

 

சிவனா..

தமிழ் பேசும்

சிவ பூமியில்

சீறிய ஒரு வரலாற்று வாசலில்

ஹிந்தியத்தின் கொடுக்கதில்

கந்தகம் தடவச் சென்ற கதியதில்

காற்றோடு கலந்திட்ட உத்தர தாண்டவத்தின்

குறியீடோ..?!

 

படம்: பிரபா சிதம்பரநாதன் அக்கா.(யாழில் இருந்து)

திரும்பியது வேரறுந்த வாழ்வு! | ஆழிப்பேரலைக் கவிதை

3 months ago

கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" 

 

திரும்பியது வேரறுந்த வாழ்வு!

 

"அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த 
அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று!

அன்றாடங்காய்ச்சிகள் முதல்
அன்னைமண் காத்தோர் வரை
உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் 
உதித்திட முன்னரே காவுகொண்டாய்!

புத்தனை வணங்கிய பேய்கள் 
ஓய்ந்தனவென்றிருக்க,
புதுப்பேயாய், 
நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ?

தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே
தொங்கி மிதந்தனர் 
தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்)

அவர் நடந்த கரையோரம், 
திரைதொட்ட காலம் மலையேறிட,
அவர் கிடக்கக் கரையெங்கும், 
திரைதொட்ட காலமானதன்று!

நாம் நத்தார் நாளில் திழைத்திருக்க,
நம் வீதிபோட வந்தவை எம்மைத் தூக்க,
உலையேற்றக்கூட வழியின்றி
திரும்பியது வேரறுந்த வாழ்வு!

 

--> நன்னிச் சோழன்

 

Checked
Sat, 04/01/2023 - 13:45
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/