நாளை வாஷிங்டனில் லிங்கனின் உரை.. தலைப்பு: றோனாயகம்..!
பிரிட்டன் தெருவில்
ஒற்றை மரணம்..!
ஊடகங்கள் விம்புகின்றன
ஊர்கள் அழுகின்றன..!!
கொன்றவன்
சரணடைய
தயாராய் நின்ற போதும்..
சுட்டு வீழ்த்தி
வீரம் காட்டி
பிடித்து
நீதி கேட்கிறது…
ஊரையே கொல்ல
கொள்கை வகுக்கும்
உலகம்..!
அடுத்தவன் நிலத்தில்
குண்டுகள் கொட்டி
பிடித்து அடித்து
அழித்து…
வளர்த்த பகை
தேடி வந்து
உயிர் எடுத்தால்
அது…
பயங்கரவாதம்..!
இருந்தும்…
மானுட உலகில்
கேள்விகள்
ஆராய்ச்சிகள்
முளைக்கும்..!
அதுவே….
மனிதனை
இயந்திரம் கொன்றால்
“Just war”..!
நோபலின் நாயகன்
சமாதானப் புறா
ஒபாமாவின்
தாரக மந்திரம் இது..!
ஏவி விட்டு
தூர இருந்து
கொன்று விட்டால்
இல்லை இல்லை..
ஊரையே அழித்திட்டால்
சாட்சியும் இல்லை
குற்றவாளியும் இல்லை
அழுவதற்கும் ஆளில்லை
ஒப்பாரி வைக்க…
ஊடகங்களும் தயார் இல்லை..!
அதுமட்டுமா
றோனுக்கு என்ன
சனநாயகம்..?!
மனித உரிமைகள்..??!
இயந்திரத்திற்கு
என்ன சிறைச்சாலை..???!
நீதி கேள்வி கேட்கும்..!
ஒப்பற்ற கண்டுபிடிப்பு
அணு குண்டால்
மனிதனை அழித்த
பரம்பரை…
இன்று
றோன்களால்
மிச்சம் மீதி தொடர்கிறது..!
இதுவரை…
அழித்த உயிர்களின்
கணக்கு மட்டும்
பல ஆயிரங்கள்..!
“குற்றவாளி”
அமெரிக்காவின்
சந்தேகம் ஒன்றே போதும்
ஓர் உயிர் எடுக்க..
இத்தனை ஆயிரம்
சாவுகளும்
அவ்வழி வந்தவையே.!
பச்சிளம் குழந்தை முதல்
பள்ளிப் பாலகர் வரை
அதில் அடங்கும்..!
இவை கண்டு…
ஐநாவும்
மூச்சின்றி கிடக்கும்
யுனிசெப்பும்
வாய்மூடிக் கிடக்கும்..!
நீதிக்கும் அங்கு
வேலை..
பூச்சியம்..!
நாளை
வாசிங்கடனில்
லிங்கனின் உரையாம்…
றேகனின் பரம்பரை
றோனால் உலகை
ஆள்வதே
றோனாயகம்..!
அதுவே
அமெரிக்காவின்
21ம் நூற்றாண்டின் சனநாயகம்..!
இதுதான் தலைப்பாம்..!
வாக்குச் சீட்டும்
போறடிச்சுப் போச்சு
றோனால் அடிச்சு
சாவுகளை எண்ணுவதே
மேற்குலகின்
தர்மமாய் ஆச்சு..!
நாளை இது
பஞ்சசீலம் வரை
படர்ந்து விடும்..!
தம்பி பிரபாவும்
தமிழர்
உயிர் எடுக்க வந்த
இஸ்ரேலின் றோன்களுக்கு
அடிக்கடி
வன்னியில் ஆப்படிச்சதுண்டு..!
அதனாலும்..
அவனைக் காலி செய்யும்
திட்டம்
றோனாயகத்திற்கு
வந்திருக்கும்..!
(2013 இல் எழுதியது.. மீள்பிரசுரம்.. ஆண்டுகள் ஓடினாலும்.. வல்.. ஆதிக்க சக்திகளின் எண்ணங்கள் மாறுவதில்லை.)
https://kuruvikal.wordpress.com/2013/05/24/நாளை-வாஷிங்டனில்-லிங்கனி/