"மூன்று கவிதைகள் / 22"
"மூன்று கவிதைகள் / 22"
மின்னலாய் ஒரு பின்னல்
[சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி]
சாந்தம் நிறைந்த விழிகள் எனோ
கோபம் கொண்டு பார்க்குதே
பொறுமை தொலைத்து ஏங்குதே
மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
..................................
'காதல் கோட்டைகள்'
காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது
காதலன் காதலி சேர்ந்து அமைத்தது
காலம் முழுவதும் நினைவில் நிற்குதே!
ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை
ஆரவாரம் இல்லா உறவின் கனவு
ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
............................................................
புகைப்படக் கவிதை
பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட,
மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட,
அலை அலையாக இன்பம் பொங்க,
சோலைவனம் மனதில் துளிர் விட்டது!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
...........................................................................
துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?

