"மூன்று கவிதைகள் / 20"
"மூன்று கவிதைகள் / 20"
'பட்டாம்பூச்சியின் காதல் ... '
பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல
பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு!
தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு
பட்டால் தெரியும் அதன் மாயை!
திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு
திட்டம் இல்லா மனிதனின் ஆசை!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.............................................................................
'புத்தருக்கும் ஆசை வருமா'
புத்தருக்கும் ஆசை வருமா?
இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்—
சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
..............................................................................
'வெள்ளை மழை இங்கு பொழிகிறது'
வெள்ளை மழை இங்கு பொழிகிறது
பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது
வள்ளி உன்னை மனம் தேடுகிறது!
துள்ளி இருவரும் பனியில் சறுக்கி
அள்ளி அணைத்து குளிர் காய்ந்து
பள்ளி அறையில் இன்பம் காண்போம்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
............................................................................
துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?

