மூன்று கவிதைகள் / 26"
மூன்று கவிதைகள் / 26"
புகைப்படக் கவிதை'
பனி பொழியும் மாலை வேளையிலே
பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்!
பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது
பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
...........................................................
"மின்னலாய் ஒரு பின்னல்"
[வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்]
வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே
புன்னகை பொழியும் அணங்கே!
கன்னம் சிவந்தது யாராலோ?
கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
............................................................
'நீயின்றி நானில்லை கண்ணே'
நீயின்றி நானில்லை கண்ணே- உன்
நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்?
மூச்சின்றி பிழைப்பில்லை பெண்ணே - என்
கிழத்தியின்றி இயக்கம் எங்கே என்னில்?
உயிரின்றி உடலில்லை நுண்ணிடையே - தேன்
மொழியின்றி இன்பம் யாது உலகில்?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
துளி/DROP: 2055 ["மூன்று கவிதைகள் / 26"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33980369108278301/?

