"மூன்று கவிதைகள் / 32"
"மூன்று கவிதைகள் / 32"
"மானல்லவோ கண்கள் தந்தது"
மானல்லவோ கண்கள் தந்தது அன்று
தேனல்லவோ இதழ்கள் தந்தது இன்று
மையலில் மயங்கி நின்றேன் மெல்ல
கையினைத் தந்து அருகே அழைத்தாய்!
சித்திரப் பெண்ணே காதல் கொண்டேன்
நித்தமும் உன்னையே எண்ணி வாழ்வேன்
மென்மை அழகில் மெய்மறந்து நின்றேன்
உண்மை அன்பில் முழுதும் நனைந்தேன்
வாழும் காலம் உன்னுடன் இணைய
சாட்சி சொன்னது இயற்கை அன்னை!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
........................................................
'ஏடு துவக்கல்'
[புகைப்படக் கவிதை]
அம்மாமா அண்ணன் வாழ்த்துக் கூறவே
செம்மாந்த தாத்தா ஏடு துவக்கினார்!
அம்மாவின் அருளாசி விண்ணில் ஒலிக்கவே
செம்மையாய் மகளும் மருத்துவர் ஆனாரே!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
...........................................................................
'நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்'
சுவரில் படரும் பாசியாய்க் கடந்தகாலம்
சுமக்கும் கனவுகள் மகிழ்ச்சியின் கோலம்!
பிரிந்த உருவம் உள்ளத்தில் நிலைக்கப்
பழைய எண்ணங்கள் மனதில் இனிக்கும்!
கடந்து போன வசந்த காலங்கள்
கண்ணில் ஆடும் இன்ப உருவங்கள்!
நிலைத்து வாழும் என்றும் நம்முடன்
நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
துளி/DROP: 2101 ["மூன்று கவிதைகள் / 32"
https://www.facebook.com/groups/978753388866632/posts/34382484418066766/?

