"மூன்று கவிதைகள் / 07"
'வண்டியில மாமன் பொண்ணு'
வண்டியில மாமன் பொண்ணு வாரார்
கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று?
பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது
பருவ எழில் உடலை வாட்டுது
பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ?
கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே
கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ?
கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா?
காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ?
காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
..............................................
'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்'
விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்
களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும்
இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும்
வளர்பிறையாக அன்பு நாள்தோறும் வளரட்டும்!
சாளரம் திறக்கிறேன் விடியவிடிய வீசட்டும்
அளவான புன்முறுவல் பாசத்தைக் கொட்டட்டும்
ஈடில்லா உன்னழகு ஆசையைத் தூண்டட்டும்
முடிவில்லா எம்முறவு நிரந்தரம் ஆகட்டும்!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
...............................................................
'சீவி முடித்து சிங்காரித்து'
சீவி முடித்து சிங்காரித்து கண்ணே,
சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு,
சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ!
சித்திரம் சொல்லாத வனிதை நீயே,
சீதை காணாத காதல் தருவேன்!
கூவி அழைக்குது சிட்டுக் குருவி,
தாவிப் போகுது அன்ன நடையில்,
தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்!
ஆவி பொருள் உடல் அனைத்தும்,
தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
"மூன்று கவிதைகள் / 07"
https://www.facebook.com/groups/978753388866632/posts/31203921829256390/?