Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.

  1. "மௌனம் சம்மதமா?" இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகலவன் என்ற இளைஞன், கொழும்பின் மையப் பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில், மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தான். அவனது நாட்கள் கூட்டங்கள், அறிமுகப்படுத்துகை [விளக்கக் காட்சிகள் / presentations] மற்றும் நகர வாழ்க்கையின் சலசலப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. அப்படியான மும்முரமான ஒரு வேலையான நாளின் போதுதான், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணைந்து இருந்த பயிற்சி ஊழியரான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆழினி என்ற இளம் பெண் சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு அவனுக்கு வந்தது. அவன் அந்த மின்னஞ்சல் [ஈ-மெயிலில்] குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் பெரிதாக கவனிக்காமல…

  2. "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" "பனியில் நனையலாமா? படியிறங்கி வாராயா இனிய காதலை இன்பமாக கழிப்போமா? தனிமை வாட்டும் தணியாத வெப்பத்தை கனியும் அன்பால் கடந்து போவோமா?" "மின்னும் இடையை தொட்டுப் பார்க்கவா சின்ன இதழை கொஞ்ச விடுவாயா? மன்னன் இவனை கட்டி அணைத்து அன்ன நடையில் இன்பம் கொட்டுவாயா?" "கண்ணில் நுழைந்த அழகு வனிதையே விண்ணில் வாழும் தேவதை நீயா? மண்டியிட்டு மலர் ஏந்தி வேண்டுகிறேன் வண்ண மயிலே நிலவிலே காயலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "என்றுமே முதலாளி" "என்றுமே முதலாளி உழுதுண்டு வாழ்பவரே எல்ல…

  3. "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" "மூன்றும் உடையது", குறள் 1085 தாய், மனைவி, மகள் என தான் கொள்ளும் மூன்று நிலையில் தனயனை வருத்துவது இளம் பெண்ணே! வஞ்சனிக் கண்கள் கூற்றவன் வலையோ வனிதை விழிகள் காதல் பேசுமோ வஞ்சிப் பார்வை பெண்மான் மருட்சியோ வதைக்குது என்னை, மீட்சி தாராயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. "பனிப்பொழிவு" "பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது பச்சை மரமோ வெண்ணிற ஆடையில் பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!" "பருவப் பெண் கனவு காண்கிறாள் படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள் பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி வி…

  4. “போராடி வென்றவள்" விதை செடியாக வளர மண்ணுடன் ஒரு போராட்டம் செடி நிலைத்து நிற்க வானிலையோடு ஒரு போராட்டம். பூ மலர இதழ்களோடு ஒரு போராட்டம் நதி ஓட நிலத்தோடு ஒரு போராட்டம் கோழிக்குஞ்சு வெளியேவர முட்டைஓட்டோடு ஒரு போராட்டம். மீன்கள் உயிர்வாழ அலைகளோடு ஒரு போராட்டம். அருளம்மா மட்டும் இதற்கு விதிவிலக்காக ? ஆமாம், அருளம்மாவின் வாழ்க்கை, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பின்னணியில், ஒரு போர்க்களமாகவே இருந்தது. முல்லைத்தீவின் ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள், அது பின்னாளில் ஒரு கலவரப் பூமியாக மாறும் என்று, என்றும் நினைக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள ஒரு மனைவியாகவும் மூன்று சிறு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் அன்று இருந்தாள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சூழ்ந்த வன்…

  5. "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" "உழவர் திருநாள்" உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும்! ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும்! உலகமும் சுழலாது உழவு இல்லையேல் உண்மையைப் புரிந்தால் வாழ்வு செழிக்கும்! உண்பது நாழி உடுப்பவை இரண்டே உயர்வு கொண்ட தொழிலும் அதுவே! உயிர்கள் வாழ உணவு தேவை பயிர்கள் பண்ணைகள் அங்கு வேண்டும்! குயில்கள் மயில்கள் பாடி ஆட மையிட்ட மங்கை பொங்கட்டும் பொங்கல்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "தித்திக்கும் பொங்கல் திருநாள்" பத்திக்கும் பெருமைக்கும் புகழ் வீசும் புத்திக்கும் ஆற்றலுக்கும் களம…

  6. குறள்மொழி இன்பம் / "குறள் 1265" [நீங்குமென் மென்றோள் பசப்பு] "அரிவை என்னுடன் இன்பம் பொழியாமல் பிரிந்து போகும் அன்புக் காதலனே புரிதல் உனக்கு சொற்பமும் இல்லையோ?" "தெரிவை இவளின் வளையல் கழலுதே வரிகளாய் தோலில் பசப்பு வாட்டுதே கரிய உள்ளம் படைத்தவன் நீயோ?" "ஆதவனைக் கண்டு மலர் மலரும் நாதனைப் பார்த்தால் பெண் பூரிக்கும் இதனையும் நான் சொல்ல வேண்டுமோ?" "மதியைக் கண்டால் மனம் குளிரும் மங்கை எனக்கோ நீயே திங்கள் மனையாளனே காதல் ஒளி வீசாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] "எது தான் சரி புரிகிறதா புரிந்து தான் என்ன பயன்? பயன் அற்ற உலக வாழ்வில் வாழ்வது ஒரு கேடு இல்லையா? இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும் அலை மோதும் நெஞ்சு உனக்கா? உனக்காக முதலில் வாழப் பழகி பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா? பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய் கண்டத்தில் எது தான் சரி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. "மாங்கல்ய கனவுடன்" "மாங்கல்ய கனவுடன் தையை எதிர்பார்த்தேன் பொங்கலோ பொங்கல் கடிமணம் தராதோ? அங்கங்கள் எல்லாம் பூரித்து மகிழ்கிறதே தங்கத் தாலியை கழுத்து ஏற்காதோ? ஏங்காத எவரும் வெற்றி கண்…

  8. "உயிர்பெறுமா ஓவியம்" உயிர்பெறுமா ஓவியம் எழுந்து நடப்பானா உலகம் இவனுக்கு நீதி வழங்குமா? உள்ளம் கொண்டு பாகுபாடு நிறுத்தி உண்மை வரலாற்றை நன்கு அறிந்து உள்நாட்டில் அரசு வேற்றுமை அகற்றாதா? வன்னியில் நடந்தது உனக்குத் தெரியாதா வளமான தேசம் சிதைந்தது உணராயா? வஞ்சகம் தவிர்த்து அவனைப் பார்க்காயா வருத்துதல் ஒரு மனிதச் செயலல்ல வலி தரும் கொடூரம் இதுவல்லவா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. "வீட்டு வேலைக்காரி" மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டும், வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லது இருந்தாலும், ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும், இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும், வயல்களும் பள்ளங்களும் மற்றும் பனையும் தென்னையும் குடை பிடித்து நிழலோடு வளம் தரும் நிலப்பரப்பையும் கொண்டும் உள்ள அந்த நகரத்தில் கலா என்ற பெண்மணி வாழ்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள பலரைப் போலவே அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியின் இழைகளால், குறிப்பாக 2009 இன் பின் பின்னப்பட்டது. ஒரு காலத்தில் அமைத…

  10. "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] "பணம் படுத்தும் பாடு" "பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு படித்த அறிவை மூடி வைத்து பண்பு மறந்த செயல்கள் மூலம் பணம் படுத்தும் பாடு தெரியுமா?" "நாணயம் கொடுத்தாலே ஆண்டவனுக்கும் பூசை நாணும் கோதையும் பாய் விரிப்பாள்! நாக்கு கூட பொய் உரைக்கும் நாடகமும் ஆடும் பதவிகள் சேர்க்கவே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. ஹைக்கூ கவிதை / "தைப்பொங்கல்” "தைத்திங்கள் பிறந்தால் எமக்கு வழி காட்டும் பொங்கலே புத்தாண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................…

  11. "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" "சொல்ல துடிக்குது மனசு" "சொல்ல துடிக்குது மனசு எனக்கு மெல்ல மெல்ல ஆசை பிறக்குது நல்ல அழகில் நெஞ்சைப் பறிகொடுத்து நல்லாள் அவளை அணைக்கத் தோன்றுது!" "கள்ள எண்ணம் என்னிடம் இல்லை குள்ளப் புத்தியும் அறவே கிடையாது அள்ள அள்ள குறையாத அன்பே உள்ளம் நாடும் ஆடவள் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "பாலகன்பிறந்தார்" "பாலகன்பிறந்தார் குமாரன் கொடுக்கப்பட்டார் கேளுங்கள் கதையை அன்பு இரட்சகரின் வானத்தில் ஒளிர்ந்து தாரகை வழிகாட்டிட அன்புத் தெய்வத்தை தேடிவந்தனர் ஞானிகள்!" "கந்தல்களில் மறைந்திருந்த பாலகனைக் கண்டு மண்ணுக்கும் விண்ணுக்க…

  12. "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] "யாரொடு நோக என்னையே கேட்கிறேன் கேட்கிறேன் தினம் வானத்தைப் பார்த்து பார்த்து பார்த்து கண்ணும் கலங்கியது கலங்கிய மனதில் குண்டுகள் வெடிக்குது! வெடித்து சிதறிய உடல்களைக் காண்கிறேன் காண்கிறேன் என்றும் அவைகளின் கண்ணீரை கண்ணீரால் கழுவிய இரத்த உடல்களை உடல்களைத் தாண்டி ஓடும் மனிதர்களை! மனிதர்களை மதியா குண்டு விமானங்களை விமானங்கள் சத்தத்தில் பதுங்கும் குழந்தைகளை குழந்தைகள் பட்டினியில் படும் வேதனைகளை வேதணையிலும் தளராத மண்ணின் மைந்தர்களை! மைந்தர்கள் போற்றிய நீதி தேவதையை தேவதைகள் வாழ்ந்த எங்கள் மண்ணை மண்ணோடு மண்ணாய் மடிவதைப் பார்த்து பார்த்து கலங்குகிறேன் யாரொடு நோக!" [கந்தையா தில்…

  13. "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] "தைமகளே வருக பொங்கலோ பொங்கல் பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆகட்டும் ஆகும் எல்லாம் பெருமை பேசட்டும் பேசும் பேச்சில் பண்பாடு தெரியட்டுமே! தெரியும் உண்மைகள் தையை வாழ்த்தட்டும் வாழ்த்தும் திருநாளே பொங்கல் விழாவாகட்டும் விழாவெடுத்து மங்கையர் கொண்டாடும் தையே தைத்திங்கள் பிறந்தால் வழி பிறக்குமே! பிறக்கும் தையில் திருமணம் வேண்டி வேண்டிய வரத்திற்கு முன்பனி நீராடி நீராடி தவம் முடித்து வணங்கினாளே வணங்கி அழைத்தாள், தைமகளே வருக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. "வாடகை வீடு..!" இலங்கையின் துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் கவி என்ற இளைஞன் இருந்தான். அவன் உயரமானவன், வசீகரிக்கும் புன்னகை மற்றும் சாகச மனப்பான்மையுடன் மக்களை சிரமமின்றி தன்னிடம் ஈர்த்தான். கவி, தனது உயர் படிப்பைத் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடரும் போது தங்குவதற்கு ஒரு இடத்தைத் கண்டியில் தேடி, அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான வீட்டைக் கண்டான். உரிமையாளர் திரு ராஜன் அவனை அன்புடன் வரவேற்று வாடகைக்கு தனது வீட்டில் ஒரு அறை கொடுத்தார். திருவாளர் ராஜன் கண்டியில் பெரும் வர்த்தகராகும். அவர் நுவரெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்த பெற்றோருக்கு ஒரே மகனாக இரு சகோதரிகளுடன் பிறந்து, லைன் அறை குடிசையில் [வரிசை வீடு ஒன்றில்] தனது வாழ்வை ஆரம்பித்தவர். …

  15. "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை" செயற்கைக் கால்களைப் பெற வரிசையில் நின்ற ஒரு இளம் தாய், கால் கருகிய தன் சேயை இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ’ என்று கைகளை நீட்டிய படி அவள் அங்கு கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' என்ற தீபச்செல்வனின் கவலைக்கு ஒரு அத்தாட்சியாகக், கிளிநொச்சியின…

  16. ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீத…

  17. "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வாழ்ந்து காட்டுவோம்" "மாழ்ந்த நாகரிகங்களை பாடமாய் படித்து ஆழ்ந்த சிந்தனையில் இலக்கியம் படைத்து தாழ்ந்த சமூகத்துக்கு அறிவுரை வழங்கி வீழ்ந்த உறவுக்கு கைகள் கொடுத்து சூழ்ந்த பகையை அறுத்து எறிந்து வாழ்ந்து காட்டுவோம் நாம் யாரென்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே உயர்வை நோக்கி கனவு அமையட்டும்! அயர்வை அகற்றி உழைத்து துயர்வைப் போக்குங்கள்!" " பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர் தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர் வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்ப…

  18. "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "இதுவும் கடந்து போகட்டும்" "இதுவும் கடந்து போகட்டும் என்கிறாய் இதயம் உடைந்து சிதறுவது தெரியாதோ? இதமாகப் பழகி ஆசையைத் தூண்டி இன்பக் கடலில் என்னை மூழ்கடித்து இப்படிச் சொல்வதின் நோக்கம் என்னவோ?" "காதல் உணர்வை வியாபாரம் செய்கிறாய் காத்து கிடந்தவனைத் தட்டிக் கழிக்கிறாயே? காலம் போக்க ஆடவன் நாடுபவளே காமம் ஊட்டி விளையாடும் ஆடவளே காரணம் தேடி கண்ணீர் கொட்டுதே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "மாற்றங்கள் வேண்டி வாக்குரிமை செலுத்தியவனே செலுத்திய உனக்கு வேறுபாடு தெரிகிறதா? தெரிவதை உண்மையில்…

  19. "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்ட , பசுமையான மற்றும் சுறுசுறுப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட வவுனியா நகரின் மத்தியில், கவிதன் என்ற இளம் குடும்பத்தர் ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு ஊதாரித்தனமான கணவன் மட்டும் அல்ல, சுயநலமி, பொறுப்பற்றவன், அளவு கடந்து பொய் சொல்பவனாகவும் கவலையற்ற இயல்பு உடையவனாகவும் இருந்தான். அவனது மனைவி ஆதிரா, பொறுமை மற்றும் கருணையின் உருவகமாக இருந்ததுடன் எல்லா சூழ்நிலைகளிலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் கணவனின் குறையை, குடும்பத்தின் பலவீனத்தை வெளியே காட்டாமல் சமாளித்து வாழ்வை கொண்டு இழுத்தாள். தான் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணத்தை எவன் ஒருவன் எள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.