தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ....
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்