Interests
" இன்று திசைக் ஒவ்வொன்றாய் எறியப்பட்டு சிளிம்பிபோணோமே எனினும் எங்கள் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் தாயின் மடியின் நாமம் உரைத்தே துடிக்கிறது கிளைகள் எங்கெங்கோ பறந்து கிடந்தாலும் எமது வேர்கள் இன்றும் புழுதி நிலத்தின் கீழேதான் கிடக்கிறது எங்கையர் பூமியில் இருந்தும் நாங்கள் வித்தியாசமான முறையில் விரட்டப்பட்டுள்ளோம் சிலர் வீட்டிலிருந்து இன்னோர் வீட்டுக்கு சிலர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு சிலர் நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு களைக்கப் பட்டுள்ளோம் இடங்கள் மாறினாலும் ஊர் பிரிந்த துயர்கள் எல்லோருக்கும் பொதுவானது வெளியே தெரியா வண்ணம் நாங்கள் குழி பறிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளோம் சிறை இருத்தலே எமது ஜீவிதம் ஆனது ஊர் பிரிதலே ஈழத் தமிழனுக்கு எழுதிய விதி என ஆகிவிட்டது தாய் நினைவில் துடிதுடித்து சாவதே எங்கள் தலை எழுத்து ஆனது இன்று கம்பி வேலிகளும் காவலரண்களும் எங்கள் விதிகளை ஆழ்கின்றன "