Jump to content

அமெரிக்கா – செவ்விந்தியர்கள் இனப்படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தயாரித்து மற்ற நாடுகள் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான்.

அமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுடியினர் உடல்கள் மீது தான். அமெரிக்காப் போல் அடிமையாக இருந்த நாடில்லை. அடிமைகளை வைத்துக் கொண்ட நாடுமில்லை. ஆனால், அமெரிக்க கருப்பின அடிமைகள் வேறு. செவ்விந்தியர்கள் வேறு. செவ்விந்தியர்கள் அடிமைகளாக வாழ்பவர்கள் இல்லை. போராடும் குணம் இவர்கள் இரத்தத்தில் உரிப்போன ஒன்று !

உலகில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு, ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கி முதல் இனப்படுகொலை அது ‘செவ்விந்தியர் இனப்படுகொலை’ எனலாம். இருபதாம், இருப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எத்தனையோ இனப்படுகொலை நடந்திருப்பதை படிக்கும் நாம், இப்படி பதிவாகப்படாத இனப்படுகொலை பலருக்கு எப்படி தெரியும். ஏன் அமெரிக்காவே மறந்திருக்கலாம் !

அமெரிக்க மண்ணின் உண்மையான சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் தான். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அலாஸ்காவும், ஆசியாக் கண்டமும் ஒரே நிலப்பரப்பாக இருக்கும் போது ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்த மக்கள் அலாஸ்கா வழியாக அமெரிக்கா சென்று இருக்க வேண்டும். அமெரிக்க முழுவதும் பரவி ‘ செவ்விந்தியர்கள்’ இனம் உருவானது என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது.

இன்னொரு குறிப்பில், மெக்சிகோவில் இருந்த இந்திய வம்சாவளிகள் என்று கூறுகிறார்கள். இந்தியாவை கண்டு பிடிக்க கிளம்பிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மண்ணின் சொந்தக்காரர்களிடம் கடுமையாக மோதி, சண்டையிட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினார். ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்பது போல், தான் கைது செய்த மண்ணின் மைந்தர்களை ‘இந்தியர்கள்’ என்றும், இரத்தக்கரையுடன் காணப்பட்டதால் இவர்களுக்கு ‘செவ்விந்தியர்க:’ என்று பெயர் வைத்தார் என்று வேடிக்கையாக சொல்லப்படுகிறது. எது எப்படியானாலும் இவர்கள் தான் ‘அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் ‘ என்பது மாற்று கருத்து இல்லை.

இவர்கள் பேசும் மொழிக்கு இன்று வரை பெயரிடப்பட வில்லை. ஆனால், செவ்விந்தியர்களுக்கு, இந்தியர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்தது. இரண்டு நாட்டு மக்களுமே சுதந்திரமாக திரிந்தார்கள், பிரிட்டன் கண்கள் படும் வரை. ஆனால், நம்மைப் போல் உள் நாட்டுக்காரர்களை காட்டி கொடுத்ததும், பேராசை பிடித்து வெள்ளையனை வணிகம் செய்ய அனுமதித்ததும், அவர்களிடம் சரணடையவும் இல்லை.



Pagans2.jpg


மண்ணாசை பிடித்து பிரிட்டன் அமெரிக்காவை முற்றுகையிட்ட போது செவ்விந்தியர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாக தாக்கினார்கள். பிரிட்டன் அவர்களை அடக்கி, ஒடுக்கி நடத்த முடியவில்லை. முரட்டு தனமாக அவர்கள் தாக்குதல் இருந்தது. கல்லும், விஷ அம்பு தாக்குதலை சமாளிக்க பிரிட்டன் எதிர் தாக்குதல் நடத்தியது. கடும் ஆயுத பலம் கொண்ட பிரிட்டனை எதிர்த்து பூர்வ குடியான செவ்விந்தியர்கள் யுத்தம்மிட முடியவில்லை. பிரிட்டனின் துப்பாக்கிக்கு லட்சக் கணக்கான செவ்விந்தியர்களை இறையானார்கள்.

ஏராளமான மரணங்கள். ரத்த நிறத்தில் மாறிய இயற்கை வளங்கள். குழந்தைகள், பெண்கள் என்று யாரும் பாகுபடில்லை. பல லட்ச உயிர்களில் மேல் தான் பிரிட்டன் தனது அமெரிக்கா மீது சாம்ராஜ்ஜியத்துக்கான உயில் எழுதியது. பலர் இறந்த பிறகு மிச்சம் மீதி இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வடப்பகுதியில் கொஞ்சமும், தென் பகுதியில் கொஞ்சமும் பதுங்கி இருந்து வாழ்ந்தார்கள்.

பல வருடங்களாக பிரிட்டன் ஆட்சிக்கு அஞ்சி ஒதுங்கி இருந்து தங்கள் வாழ்க்கை நடத்தினர். நகர வாழ்க்கையில் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்துக் கொண்டனர். சத்திர வீடு முறை எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆயிரம் பேர் தங்கக்குடிய மிக பெரிய வீட்டில் ஒருவர் மட்டும் சென்று வருவது போல் தங்கள் வாழ்க்கை நடத்தினர். எல்லொரும் ஒரு குடும்பமாக எதிரிகளிடம் பாதுகாத்துக் கொண்டனர்.

ஒரு சில செவ்விந்தியர்கள் பழக்க வழக்கங்கள் அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் கலந்திருக்கிறது. குறிப்பாக ப்ரீ செக்ஸ் !! செவ்விந்தியர்கள் யார் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்தார்கள்.

இன்று, அமெரிக்க மக்கள் அந்த முன்னோடியாக இருக்க காரணம் செவ்விந்தியர்கள். இன்று பல செவ்விந்தியர்கள் நாகரிகமடைந்து நகர்ப்புற வாழ்க்கை வாழ்க்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒரு நினைவு சின்னமாக இருக்கிறது. அதை சுற்றுலா தளமாக்கி அமெரிக்க அரசு அதிலும் பணம் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு நிலம்க் கூட இல்லை என்பது தான் வருத்தம். திருட்டு, வழிப்பறி, சட்ட விரோத காரியங்கள் ஈடுப்பட்டு தான் தங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அமெரிக்க அரசு எவ்வளவோ சலுகை வழங்கியும் அவர்கள் வாழ்க்கை தரம் உயரவில்லை. அதேப் போல் குடித்து விட்டு கலாட்டா, பிரச்சனை என்று எது வந்தாலும் போலீஸ் அவர்களை ஒன்றும் செய்யாது. பூர்வ குடிகள் என்ற சலுகை !!

இது இனப்படுகொலையாக இன்று கருதப்படாததற்கு இரண்டு காரணம். ஒன்று, ஆளும் வர்க்கத்தில் அமெரிக்கா இருப்பது. இன்னொன்று இரண்டு நாடுகளுக்குள் நடந்திருக்கும் யுத்தமாக பார்ப்பது. ஒரு நாடு அடிமையாக்கி இன்னொரு நாடு ஆட்சி செய்வது காலனி ஆதிக்கத்தில் காலம் காலமாக நடப்பது தான். இந்தியாவிலும் பிரிட்டன் அப்படி தான் நடந்துக் கொண்டது. கொலையும், கொள்ளையும் காலனி ஆதிக்கத்தில் சகஜம் தானே என்று இருக்கலாம். இதை போய் இனப்படுகொலை என்றா சொல்வது ?



american-genocide-denial.png
 

போரில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துவது வேறு. ஒரு இனம், கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு ஆட்சி செய்ய நினைப்பது வேறு. தங்கள் நாடு என்ற சொந்தமரியாமல் செவ்விந்தியர் வாழ்ந்து வருகிறார்கள். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவது ?

http://guhankatturai.blogspot.co.uk/2012/09/blog-post_17.html

 

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஆதவன் .கு .சாமியண்ணே அது சரி இப்பதிவை யாழில் கொண்டு வந்து ஒட்டி இரு வருடங்களுக்கு மேல் .....                   செவ்விந்தியரின் நீண்ட கதைகள் அதிலும் ukசிலுவை காரர்களினால் 13 கோடிக்கு மேல் இன அழிப்பு செய்யபட்ட இனம் இப்போதைய is காரரை விட  பலமடங்கு கொலை வெறியுடன்   இயேசு அன்பு செலுத்துகின்றார் என சொல்லியவாறு கூட்டம் கூட்டம் ஆக அழிப்பு நடைபெற்றது.இதில் கிட்லரின் இன அழிப்பு எல்லாம் ஜுஜுப்பி .

 

இந்த கட்டுரை இங்கு ஓட்டுவதுக்கு எனக்குள்ள ஒரே காரணம் .

 

 

அதேப் போல் குடித்து விட்டு கலாட்டா, பிரச்சனை என்று எது வந்தாலும் போலீஸ் அவர்களை ஒன்றும் செய்யாது.

இந்த லைன் இப்ப நமது ஈழத்தில் நான் கனக்க சொல்ல தேவையில்லை விளங்கியவர்களுக்கு விளங்கினா சரி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போவதுக்கு ஒன்றில் நல்ல குடிகாரனாக இருக்கணும் இல்லை குழைந்தைகள் பாலியல் சேட்டை புரிபவராக இருக்கணும் ,லேட்டஸ்ட் போதைபொருள் பாவிப்பவராக இருக்கணும் அங்குள்ள சிங்கள போலிஸ் சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்க்கும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனப்படுகொலையை ஆஸ்திரேலியாவின் அபரோயனீஸ்இன் படுகொலையுடன் ஒப்படலாம். இன்று அவர்கள் கள்ளர்களாக சித்தரிக்கபடுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ragaa என்ன எல்லாம் பேராசை லண்டன்காரர் ஜேம்ஸ் குக் இன் பேராசை ஒரு கண்டத்தையே தங்கள் நாடு என உரிமை கொண்ட்டாடின பேராசை .

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா உலகெங்கும் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல்.. அதைச் செய்யும் அரசுகளுக்கு நேரடி அல்லது மறைமுக ஆதரவு வழங்கி வருவதே பொதுவான உண்மையாகும். அதற்கு நவ அமெரிக்கர்களின் இந்த வரலாற்றுப் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

லண்டன் நிலக்கீழ் தடங்களுக்கு கீழ் கறுப்பின அடிமைகளின் மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் புதைபட்டிருப்பது போல் தான் இந்த இனப்படுகொலையும். அதனால் தான் இன்றும் சிங்களம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையையும் அமெரிக்கா மூடிமறைக்க உதவி நிற்கிறது. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.