புதிய பதிவுகள்2

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

6 days 20 hours ago
அதிக வெப்பம்: பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு Mar 30, 2026 - 04:21 PM தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்: 1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்). 2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். 3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல். முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும். பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்: அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்). பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்: தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல். பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்). வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல். மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை: அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல். அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்). வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல். அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல். https://adaderanatamil.lk/news/cmnd2issh0000356plzog1i7h அதிக வெப்பமான காலத்தில் பாடசாலை நேரத்தை மாற்றலாமே?! 8.30 - 2.30 வரை என்றால் தாக்கம் குறையுமே.

இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

6 days 20 hours ago
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 04:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242304

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்

6 days 20 hours ago
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. கட்டுரை தகவல் எம்மா பெங்கெல்லி, ஷயான் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த புகைப்படங்களில் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது. சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். புகைப்படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதை அடையாளங்கள் ஆகியவை செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது. விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். குறைந்தது இரண்டு அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஒரு ஷாஹெட் டிரோன் மூலமாக ஈ-3 விமானம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மார்ச் 11 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்திலும் இதே இடத்தில் ஒரு ஈ-3 உளவு விமானம் இருப்பதை பிபிசி வெரிஃபை பார்த்துள்ளது. ஆனால் இவை இரண்டும் ஒரே விமானம் தானா என்று எங்களால் கூற முடியாது. சரிபார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் அந்த விமானத்தின் வால் பகுதி எண் தெரிகிறது. இதை வைத்து பிளைட்ரேடார்24 என்ற விமானப் பயணக் கண்காணிப்புத் தளத்தில் சோதித்தபோது, அந்த விமானம் மார்ச் 18 அன்று தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்தது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படம், ஈ-3 விமானம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே சுமார் 1,600 மீட்டர் (5,200 அடி) தொலைவில் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படங்களில் காணப்படும் விமானம் சேதமடைந்த அதே தாக்குதலின் ஒரு பகுதியா இது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஈ-3 உளவு விமானத்தின் ரேடார், நீண்ட தூரங்களில் உள்ள சாத்தியமான இலக்குகளைக் கண்காணிக்க உதவுகிறது (கோப்புப் படம்). போயிங் ஈ-3 அவாக்ஸ் என்பதன் விரிவாக்கம் 'வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு' (AWACS - Airborne Warning and Control System) என்பதாகும். இது போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் உடற்பகுதியின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான சுழலும் ரேடார் தட்டைக் கொண்டுள்ளது. இந்த ரேடார், இலக்குகளை நீண்ட தூரத்திலேயே கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் போர் நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடிகிறது. அமெரிக்க விமானப்படை வலைத்தளத்தின் படி, அந்த விமானம் "வான்வழிப் போரின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் வான்வழி நடவடிக்கைகளின் தளபதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது". இந்த வகை விமானங்களில் முதலாவது 1977 ஆம் ஆண்டு சேவையில் இணைந்தது. ஈ-3 ரக விமானங்கள் 2035 ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7jvvr7g8qo

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

6 days 21 hours ago
ஒரு திங்கட் கிழமை பிற்பகலில் பெரம்பூரில் விஜை வேட்புமனு தாக்கல் செய்ய போன போது மறுபடியும் கட்டுக்கடங்கா கூட்டம். ஸ்டாலின் போகும் போது வழமையான கூட்டம்தான்.

யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு

6 days 21 hours ago
காலை வணக்கத்தோடு யாழின் முகப்புத் தோற்றம் குறிப்பாக 28ம் ஆண்டு தோற்றம் மிகவும் நன்றாக இருக்கிறது.இனிய 28ம் ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.இது யாயினி.🙏

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

6 days 22 hours ago
வீட்டையே ஆட்டையைபோடலாம் என்று போய் இப்ப வீடு கிடக்கட்டும் பின் கோடிக்குள்ள சாக்கடையை திறந்துவிடுகிற நாத்தத்தில வந்து நிக்குது . ........! 🙂

குட்டிக் கதைகள்.

6 days 22 hours ago
destnporSo4aag21guel141m2ttàm52 :g0r0i u1h94u2f4hsL8876 a65 · ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா "மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் "ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்"ன்னு... ராஜா சொன்னான் "யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பார்க்கலாம்"... வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் "யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?". அந்த குருடன் சொன்னான் "அது பக்கத்துல 'கை' மாதிரி பச்சை இலை இருக்கும்.. அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிற்கும்"ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து "உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்" என்று கேட்க , குருடன் சொன்னான் "ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிப்பிஞ்சை விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தால் இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வச்சிடுவான்".. ராஜாக்கு சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு..." என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். "ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக்கறீங்களா"ன்னு கேட்டான். 'இது ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது' என்று மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால் எதையாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் "மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா.. அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்"னான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் "டேய் இதுல ஒரிஜினல் வைரம்... டூப்ளிகேட் வைரம் கலந்திருக்கான்னு பார்த்து சொல்லு". அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொறுத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா "இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் "எதோ தெரியாம நடந்துடுச்சு"ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடனை பார்த்து கேட்டான் "எப்படி கண்டுபிடிச்ச காரண காரியத்தோட சொல்லு..." குருடன் சொன்னான் "ராஜா வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்".. ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து " மேற்கு வாசலுக்கு போ... இந்த டோக்கனை கொடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம். யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் "கூப்பிட்றா அந்த கபோதியை..". குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் "என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு" அப்படின்னான். குருடன் சொன்னான் "ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க"ன்னான். "அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்..". ராஜாவுக்கு ஒரே குஷி. "சபாஷ். இந்தாடா டோக்கன்... வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு" அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். "டேய் நான் ஒண்ணு கேட்பேன்... சரியா காரண காரியதோட சொல்லணும்" அப்படின்னான். குருடனும் சரின்னான். "இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?... அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்... குருடன் சொன்னான் "ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்" அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். "ஏன்டா"ன்னு கேட்டான். "ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா கொடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை கொடுத்திருப்பான்... அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்திருந்தா கழுத்திலிருந்த வைர மாலைய கொடுத்திருப்பான். ஆனா நீங்க கொடுத்தது பட்டை சாத டோக்கன்... மூணாவது.. ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எனக்கு எழுதி கொடுத்திருப்பான். நீங்க கொடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதிலிருந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல.... 🤔" அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்... Voir la traduction....!

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

1 week ago
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தனர் . இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன . சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470408

விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!

1 week ago
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை! ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராக உள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த வாரம், மார்ச் 19 அன்று ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது 112 டொலருக்கும் சற்றுக் குறைவாக இருந்தது. அதேநேரத்தில் முந்தைய அமர்வில் 5.5% விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.86 டொலர் அல்லது 1.87% அதிகரித்து, 101.50 டொலராக இருந்தது. வார இறுதியில் யேமன் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை இந்த மாதம் 59% உயர்ந்துள்ளது. இதுவே 1990 வளைகுடாப் போரின்போது காணப்பட்ட ஆதாயங்களை விட மிக அதிகமான, மிகப்பெரிய மாதாந்திர ஏற்றமாகும். பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமையன்று (28), ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்கள் முதல் தாக்குதல்களைத் தொடுத்தனர். இது அரேபிய தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரிணையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்ட சவுதி மசகு எண்ணெய் ஏற்றுமதி, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 4.658 மில்லியன் பீப்பாய்களை எட்டியதாக, Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டின. யான்புவிலிருந்து ஏற்றுமதி தடைபட்டால், சவுதி எண்ணெய் மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் எகிப்தின் சூயஸ்-மத்தியதரைக் கடல் (SUMED) குழாய்வழியை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வார இறுதியில் இப்பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்து, ஓமானின் சலாலா முனையத்தைச் சேதப்படுத்தின. அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளை நாடிய போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வொஷிங்டன் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. இப்பகுதியில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடிய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470391

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

1 week ago
இவ்வளவு பேரும்தான் கட்சியே கட்சிகளில் வேறு யாரும் இல்லை. கூடிப்பேசி அனைவரும் உள்ளடங்கிய இணைப்புக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Checked
Mon, 04/06/2026 - 07:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed