புதிய பதிவுகள்2

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

32 minutes 39 seconds ago
வீரப்புலி எனும் ஒரு தலைமுறைக்கு முன் தமிழராக இருந்த தற்போதைய சிங்களவர் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

36 minutes 44 seconds ago
பாண்டே சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒரு தரம் நிருபித்துள்ளார். சீமான் முதலமைச்சர் ஆனால் என்ற ஜோக்குக்கு சிரிக்காமல் விட்டது கூட ஓக்கே… காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, திமுக, விசிக, தமிழ் தேசியம், இடையில் அதிமுக என அத்தனை மேடையிலும் வாயை வாடகைக்கு விட்ட… அரசியல் சொப்பன சுந்தரி அண்ணணை …. Ideologically driven என்றார் பாருங்கோ சிரிக்காமல்…அதுதான் ஹைலைட். Seeman is not ideologically driven, he is driven by the desire to drive Pajero and Innova 😂

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

1 hour 21 minutes ago
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை. இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோணத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக களமிறங்கும் வீனஸ் வீரப்புலி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும். வீனஸின் தந்தை அஜந்த வீரப்புலி, இலங்கையின் முன்னாள் முதல் தரக் கிரிக்கெட் வீரர் ஆவார். இலங்கை வீராங்கனை அவர் கோல்ட்ஸ், NCC, லங்கன் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய அணிகளுக்காக 36 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1,243 ஓட்டங்களை குவித்துள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அஜந்த, தனது மனைவி கிறிஸ்டீனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார். பிரித்தானியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வரும் அவர், தனது மகளையும் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளார். வீனஸ் வீரப்புலி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகக்குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளார். இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை ஷார்லட் எட்வர்ட்ஸ் பெயரில் வழங்கப்படும் 16 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனை விருதை வீனஸ் வென்றுள்ளார். இதன் பின்னரே அவருக்கு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அணியின் தலைவி தந்தை அஜந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், மகள் வீனஸ் வலதுகை பந்து வீச்சாளராகும். இருவருடைய கைகளும் திசைகளும் வேறாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து சுழன்று வரும் திசை ஒன்றாகவே அமையும். இது வீனஸுக்கு தனது தந்தையிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளப் பெரும் உதவியாக உள்ளது. வீனஸ் தனது முன்மாதிரியாக கருதுவது இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து என குறிப்பிட்டுள்ளார். வீனஸின் சகோதரரும் இங்கிலாந்தில் ஒரு இளம் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகின்றார். தற்போது இங்கிலாந்து அணிக்காக இலங்கை மண்ணில் விளையாடினாலும், வீனஸ் விடுமுறைக்காக இலங்கை வரும் போதெல்லாம் கொழும்பு மைதானங்களில் பயிற்சி பெறுவதையும், இலங்கை சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-in-england-women-s-cricket-1775270415

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

1 hour 59 minutes ago
போருக்குரிய ஆடைகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும்போதே பேசவேண்டும் என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. எல்லோரையும், எல்லாவற்றையும் அழித்து விட்டோம், ஈரானை கற்காலத்திற்கு அனுப்புவோம் என்று சவால் விட்டவரை துவைத்து எடுக்கிறது ஈரான். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல், நட்பு நாடுகளால் கைவிடப்பட்டார், அரபு நாடுகளில் இருந்து வெளியேற்றப்படப்போகிறார், அமெரிக்க டொலர் மதிப்பிழக்கப்போகிறது, இவரின் பதவி இழப்பு, சிறைக்கு கூடச்செல்லலாம். தலைக்கனம் அழிவைத்தரும். சும்மா இருந்த ஈரானை சீண்டி தன் அழிவை தானாகவே தேடிக்கொண்டது மட்டுமல்லாமல், ஈரானின் பலமும் இந்தமுட்டாளால் உலகறியச்செய்யப்படுள்ளது. இவரது வேண்டுகோளை மறுத்த பிரான்ஸ் அதிபரை, மனைவியிடம் வாங்கிய அடியில் அவரது தாடை சுகப்படவில்லைபோல், எனக்கு உதவி தேவையில்லை சும்மா கேட்டுப்பார்த்தேன் என்று நகைச்சுவை வேறு. இவருக்கு அடி, உதை கொடுக்கக்கூடிய ஒரு பெண்டாட்டி வாய்க்காதபடியினாலேயே உந்த விசர் ஆட்டம் போடுகிறார். நாகரிகம் தெரியாத ஒருவர், நாட்டுத்தலைவனாக வருவது, அந்த நாட்டுக்கே நாசம். பாபிலோன் எரியும் போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போல், அங்கே சொந்த இராணுவ வீரர் போராடுகிறார்கள் இவருக்காக, இவர் இங்கே ஏளனம் செய்து சிரிக்கிறார். இவரை எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள், இவர் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்.

வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்

2 hours 11 minutes ago
வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் 04 Apr, 2026 | 06:02 PM ( எம்.நியூட்டன்) வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (09) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. புகையிரத சேவைக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும் , புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242733

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 hours 14 minutes ago
உண்மையில் இவை பலவீனமாவை. அமெரிக்கா பழைய விமானம் தாங்கியை தாக்கி, சோதனை செய்து, மூழ்கடிக்க கிட்டத்தட்ட்ட 21 நாட்கள் தொடர் குண்டு / ஏவுகணை வீச்சு தாக்குதல் தேவை என்று கண்டறிந்து இருந்தாலும். இவை பலமான காலம் இருந்தது, அது கடந்து விட்டது. இவற்றில் உள்ள பிரச்னை சிறு தொழில்நுடப்ப, மற்றும் 1000 கணக்கான தொழிற்படும் முறைகளில் (procedures) சிறிய பிரச்னையும் இவற்றை ஆபத்தில் இலகுவாக சிக்கவைத்து விடும். இதனால் தான் லிங்கன் இரானில் இருந்து 1000 km அப்பால் முறையான இந்து சமுத்திரத்தில் தரித்து இருக்கிறது. ஆனால், மெடிட்டரெனியனில் தரித்து இருந்து இஸ்ரேல் க்கு இரான் அடிக்கும் ஏவுகணைகளை குறிவைத்த போர்ட் சாதாரண drone ஆல் அடிக்கப்பட்டு, தொழிற்பட முடியாமல், திருத்துவதற்கு முதலில் கிரெக்கம் கொண்டு செல்லப்பட்டது. இப்பொது எங்கு இருக்கிறதோ தெரியாது. இறுதியாக சொல்லபப்பட்டது, ஆண்டு இறுதி வரை பாவிக்கப்பட்ட முடியாது என்று. இது ஒரு சிறிய drone ஆல் வந்த விளைவு, யானையின் துதிக்கையில் எறும்பு புகுந்த கதை.

ஒரு வைத்தியரை உருவாக்க 60 இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே!

2 hours 15 minutes ago
ஒரு வைத்தியரை உருவாக்க 60 இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே! Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 02:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் உபாலி பன்னிலகே இந்தத் தகவல்களை வெளியிட்டார். இலங்கையின் சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் இலவச சுகாதார சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஒருவரின் பணப்பையிலுள்ள பணத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீட மாணவர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின் வைத்தியராக வெளியேறுவதற்கு அரசாங்கம் மிக அதிக தொகையைச் செலவிடுகிறது. ஒரு பொறியியலாளரை உருவாக்க 30 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் நிலையில், ஒரு வைத்தியரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது பொறியியலாளருக்கான செலவை விட இரு மடங்காகும்," என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் 35,000 முதல் 38,000 வரையான வைத்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 25,000 முதல் 28,000 வரையிலானோர் அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்ட அவர், சமூகத்தில் அவர்கள் கொண்டுள்ள விசேட பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/242721

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

2 hours 16 minutes ago
ராணுவத் தளபதியை நீக்கியதை விட... பைத்தியக்கார தம்பரை நீக்கி இருந்தால், உலகம் உருப்படியாக இருக்கும்.

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

2 hours 18 minutes ago
வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் அடிப்படையற்றது: நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 01:59 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நியாயமான காரணங்களுக்காக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், ஆனால் தற்போதைய போராட்டமானது தேவையற்றது என்றும் குறிப்பிட்டார். அமைச்சருடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு அவர் வைத்திய சங்கத்திற்குத் தெரிவித்தார். இதேவேளை, வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை (04) மதியம்; 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இக்கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும், குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது ஊதியமோ வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242716

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

2 hours 22 minutes ago
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது Apr 4, 2026 - 06:53 PM வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற வேளையிலேயே இவ்விரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmnkbpghy000c356p9fqzljb7

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 hours 22 minutes ago
சீமான் ஸ்டாலினை சந்தித்த சில நாட்களில் 50 ஏக்கர் நிலம் வாங்கியதை எது காட்டுகிறது ? அதேதான். ஓக்கே நாதக 12% எடுக்காது என நான் உங்களுடன் பெட் கட்டுகிறேன். எனது கணிப்பு கந்தப்புவின் போட்டியில் வெளியாகும். ஆவலோடு காத்திருங்கள் 😂 விஜை இப்படி தடுமாறியதும், பின்னர் மேலதிக பிராமணபத்திரம் கொடுத்து பிழை திருத்தியதும்…. சுத்த தற்குறி விஜை என்பதை காட்டுகிறது என்பதை நான் ஏற்கிறேன். இதையே போன தேர்தலில் சீமான் செய்தார்😂… சீமானும் ஒரு தற்குறி என்பதை நீங்களும், சிரிக்கும் அண்ணாவும் ஏற்பீர்களா?

வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்

2 hours 30 minutes ago
வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம் Apr 4, 2026 - 12:17 PM வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்ட இடத்தை யாரோ மர்ம நபர்கள் மீண்டும் தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் அகற்றிச் சென்றுள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற வேறொருவரின் இறுதிச் சடங்கின் போது, அப்பகுதியில் இருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்நாற்றம் வீசிய இடத்தை பொதுமக்கள் சென்று பார்வையிட்ட போதே, சடலம் தோண்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmnjyynmk0004356p0mjw7ncz

தீபச்செல்வனின் நாவல் சுங்கத்தினால் தடுத்து வைப்பு! - படைப்புகளை விடுவிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்தது?

2 hours 42 minutes ago
சுங்கம் தடுத்து வைத்துள்ள தமிழ் எழுத்ததாளரின் படைப்புகளை விடுவிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதி 'காற்றில் பறந்தது?' 04 Apr, 2026 | 02:02 PM சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். நூல்களை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்து மீண்டும் வினவியபோது, எழுத்தாளரை இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜி.ஜி. சரத் ஆனந்தவினால் 'ஸ்மாரக சிலாவத' என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, ‘நடுகல்’ நூலின் ஆசிரியராக வாசகர்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்த பிரதீபன் தீபச்செல்வன், இலங்கையில் கலை மற்றும் இலக்கியத்துக்கான சுதந்திரம் இன்னும் மறுக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயம் எனக் குறிப்பிடுகிறார். “உண்மையில் எனது நூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டமை குறித்து நான் மிகுந்த கவலையுடனும் மன உளைச்சலுடனும் இருக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஒரு சிந்தனையாளனுக்கு அரசாங்கம் இவ்வாறான விடயங்களைச் செய்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு நல்ல விடயமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் கலை மற்றும் இலக்கியத்துக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னும் அந்த ஒடுக்குமுறை, உரிமைகளை மறுத்தல், எழுத்துச் சுதந்திரத்தை மறுத்தல் என்பன இடம்பெறுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.” பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுகள் இலங்கையின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி அந்தப் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தனது விற்பனை முகவருக்கு கையால் எழுதப்பட்ட கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக எழுத்தாளர் கூறுகிறார். “எனது புத்தகத்தின் விற்பனை முகவர் சுங்கத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பெப்ரவரி 18 எனத் திகதியிடப்பட்ட கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் எனது புத்தகங்கள் இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் அந்தப் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சு அனுமதியுடனேயே அந்தப் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.” இது தொடர்பில் தான் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, அமைச்சர் உடனடிப் பதிலளித்ததாகவும் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) இவ்விடயத்தில் தலையிடுவதாக உறுதியளித்ததாகவும் பிரதீபன் தீபச்செல்வன் தெரிவிக்கிறார். “நான் சனிக்கிழமை (மார்ச் 28) பகல் கலாசார அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது புத்தகங்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், அவற்றை விடுவிக்குமாறும் குறிப்பிட்டிருந்தேன். கடந்த காலங்களிலும் எழுத்தாளர்களுக்கு இவ்வாறான பல தடைகள் விதிக்கப்பட்டன, பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வாறு இன்றி நாம் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக எழுதவும் இடமளிக்க வேண்டுமென அந்த கடிதத்தில் கோரியிருந்தேன். நான் அந்த கடிதத்தை அனுப்பி சில மணித்தியாலங்களில் - ஒரு மணித்தியாலத்திற்குள் என்று நினைக்கிறேன் - அமைச்சர் எனது நண்பர் ஒருவருக்கு செய்தி அனுப்பியிருந்தார். தான் இந்தியாவில் இருப்பதாகவும், இரண்டு நாட்களில் வந்து புத்தகங்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.செய்தி அறிவிப்புகள் அடுத்த நாள் (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை, கலாசார அமைச்சர் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, திங்கட்கிழமை இலங்கை வந்தடைந்தவுடன் அந்த வேலைகளை கவனிப்பதாகக் கூறினார்.” புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஏப்ரல் 2ஆம் திகதியும் பிரதீபன் தீபச்செல்வனுக்கு அவரது படைப்புகள் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் பொறுமையாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். "அப்போது நான் நினைத்தேன் பழைய அரசாங்கங்களின் கொள்கையினால்தானே இந்தப் புத்தகங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் அதனால் அமைச்சர் தலையிட்டால் இரண்டு நாட்களில் இவை விடுவிக்கப்படும் என்றும் கருதினேன். ஆனால் இன்னும் புத்தகங்கள் விடுவிக்கப்படவில்லை, ஆனாலும் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாக அறியக் கிடைத்துள்ளது. கலாசார அமைச்சர் அந்த வேலைகளைச் செய்துள்ளார், பாதுகாப்பு அமைச்சு ஊடாகவும் அது குறித்து கவனிக்கப்படுவதாக இன்றும் (ஏப்ரல் 02) அமைச்சர் சொன்னார். புத்தகங்கள் விரைவில் விடுவிக்கப்படும், சற்றுப் பொறுமையாக இருக்குமாறு அவர் சொன்னார்.” South Asians & Diaspora சுங்கத் திணைக்களம் படைப்புகளைத் தடுத்து வைப்பதற்கும் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அந்தப் படைப்புகளின் ஆசிரியர் தமிழராக இருப்பதுதான் காரணமா என பிரதீபன் தீபச்செல்வன் கேள்வி எழுப்புகிறார். “ஆனால் உண்மையில் எமது புத்தகங்களை, எமது படைப்புகளை இவ்வாறு சுங்கத் திணைக்களம் தடுத்து வைப்பதையும் விசாரணைகளை முன்னெடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் என்பதால்தான் அல்லது தமிழ் மொழியில் இருப்பதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.” மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் முதல் பிரஜையாக இருந்தபோது, தனது நூலின் தமிழ் பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்த விதத்தையும் நினைவுகூர்ந்த பிரதீபன் தீபச்செல்வன், அந்த நூல் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட பின்னர் இலங்கையின் சிங்கள வாசகர்கள் எந்தவொரு எதிர்ப்புமுமின்றி அந்த நூலை ஏற்றுக்கொண்ட விதத்தையும் நினைவுகூர்ந்தார். “தடுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் - கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது ‘நடுகல்’' நாவலின் 60 புத்தகங்களை இலங்கைக்கு கொண்டு வந்தபோது சுங்கத் திணைக்களம் அவற்றை தடுத்து வைத்தது. அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்துக்கு நான் ஒரு ஓவியத்தை மட்டுமே பயன்படுத்தியிருந்தேன். ஆனால் அதே நாவல் சிங்களத்தில் அச்சிடப்பட்டு வந்தபோது, அதன் அட்டைப்படத்தில் எல்.ரி.ரி.ஈ துயிலும் இல்லத்தின் கல்லறை புகைப்படத்தைப் போட்டிருந்தும் சிங்கள மக்கள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை. எல்லோரும் அந்த நாவலை ஏற்றுக்கொண்டார்கள்.” இவ்வாறானதொரு நிலையில் கலை மற்றும் இலக்கியத்துக்கு இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளை அரசாங்கமே முன்னெடுக்கிறதா என குறித்த தமிழ் எழுத்தாளர் மேலும் கேள்வி எழுப்புகிறார். “அப்படியானால் சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது இந்தப் படைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்கிறது? அரசாங்கமே இவ்வாறான ஒடுக்குமுறைகளைச் செய்கிறதா? இந்த அரசாங்கமும் அதையே செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு புத்தகம் தமிழில் எழுதப்படும்போது பிரச்சினையாகி, அதுவே சிங்களத்தில் வரும்போது பிரச்சினையாகாமல் இருப்பது எப்படி? தமிழில் எழுதுவது ஒரு தமிழர் என்பதாலா இந்தப் பிரச்சினை வருகிறது? இதுதான் இலங்கையிலுள்ள பாரபட்சமா என்ற கேள்வியும் எழுகிறது.” இலங்கையில் எந்தவொரு படைப்பாளிக்கும் தனக்கு நேர்ந்த கதி ஏற்படக்கூடாது என எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் மேலும் தெரிவித்திருந்தார். “எனது புத்தகங்கள் விடுவிக்கப்படுவதோடு மாத்திரம் இது முடிந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அரசாங்கத்தின் கொள்கை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இனிமேல் இலங்கையில் எந்தவொரு தமிழ் எழுத்தாளருக்கு மாத்திரமல்ல, எந்தவொரு படைப்பாளிக்கும் தனது புத்தகங்கள் குறித்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடக்கூடாது என, நான் பிரார்த்திக்கிறேன்.” பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுப் படைப்பின் 360 பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்ததன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சித்த தணிக்கையானது, பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் ஏப்ரல் 2ஆம் திகதி கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த அமைப்பின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினூடாக, எழுத்தாளர் தீபச்செல்வனின் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திடம் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அவையாவன, • இந்தப் படைப்புகளைத் தடுத்து வைப்பது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய தரப்பு எது? • இந்தப் படைப்புகளின் உள்ளடக்கம் சட்டவிரோதமானதாகவோ அல்லது தேசியப் பாதுகாப்புக்கு பாதகமனதாகவோ அமையுமா? அவ்வாறெனில் அது எவ்வாறு? • சுங்க விடுவித்தல் பணிகளின் போது இலக்கியப் படைப்பு தொடர்பான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு சுங்கத் திணைக்களத்திடம் உள்ள துறைசார் நிபுணத்துவம் என்ன? என்பனவாகும். இலங்கைச் சுங்கத் திணைக்களம் இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறான பதில்களை வழங்கினாலும், ஒரு படைப்பாளிக்குரிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அவரது வாசகர்களுக்குரிய அறிந்து கொள்ளும் உரிமையை மீறுவதற்கே அவர்கள் முறையற்ற விதத்தில் தலையிட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களம் என்பது ஒரு அரச நிறுவனம் என்பதால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பேணப்பட வேண்டிய வகைக்கூறலிலிருந்து அரசாங்கமும் விலகிச் செல்ல முடியாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242715

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 hours 52 minutes ago
விஜை இன்று மீண்டும் திருத்தப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.ஒரு வேட்பு மனுவை சரியாக நிரப்பத்தெரியாத ஒருவர் நாட்டை எப்படி ஆளப்போகிறார்.2 தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 2 மனுக்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு வேண்டாமா?தேர்தல் வியூக வேட்பாளர்கள் வேறு இருக்கிறார்கள்.அவர்களுக்கு தலைவரின் வேட்பு மனுவையாவது பரசீலிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?அத்தக்கட்ணியைப் பொறுத்தவரை அந்தக் கட்சியின் தலைவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்பது தெரியாதா?இதனால்தான் தற்குறிகளின் அரசியல் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

2 hours 52 minutes ago
எந்த வெளிஉதவி என்றாலும், முழுமையாக இரான் கட்டுப்பாட்டில். இரான் அதுவாக தொழில்நுட்ப தந்திரோபாயத்தை வகுக்கிறது. Iran’s Network of Cameras Bolsters Air Defenses, Expert Says https://www.wsj.com/livecoverage/iran-war-news-2026/card/iran-s-network-of-cameras-bolsters-air-defenses-expert-says-IqjSSuOcGNrxzsrp52i8?gaa_at=eafs&gaa_n=AWEtsqdtDIAuWi3nByKGotTMrdpBdFKcv32QwkCV7o0lH6zvzRNOsDUueqZVQrOAsNk%3D&gaa_ts=69d10da6&gaa_sig=djYnodT3u1JhXquFj-lEktr3htYIG7V3y2zc1_GPF60TBP6AG9t5OEYjl8gMyhtzFiEGoiQqF5ScZd_3H8d82A%3D%3D
Checked
Sat, 04/04/2026 - 15:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed