1 week ago
'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 30 மார்ச் 2026, 07:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். சாம்சன், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. 2025 சீசனுக்கான ஏலத்தில் எமோஷனலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான பல வீரர்களை அவர்கள் வாங்கியிருந்தார்கள். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் என அவர்கள் அனைவருமே ஒரேபோல் ஆடுபவர்கள். அங்கு வெரைட்டியே இல்லாமல் இருந்தது. அதன்பிறகு வந்த மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற மாற்றுவீரர்களாக சிறப்பாக அணியில் இணைத்தனர். அதுபோக இம்முறை இரு இளம் நட்சத்திரங்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த சீசன் இருந்த அணியை விட இந்த சீசன் அணி பலமானதாக இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா இல்லாதது நிச்சயம் பெரிய பின்னடைவு தான். ஆனால், அகீல் ஹொசைன் அந்த இடத்துக்கு சிறந்த மாற்றாக இருப்பார். அவரால் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கடினமான ஓவர்களை அவரால் சிறப்பாக வீசமுடியும். திறமையான வீரர் அவர். அதனால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது. ஒட்டுமொத்தமாக கடந்த சீசனை விட இந்த முறை நல்லதொரு அணியை சிஎஸ்கே கட்டமைத்திருக்கிறது. பலமான பேட்டிங் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார் (கோப்புப் படம்) சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய இரு பேட்டர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது இருவருமே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். சாம்சன் வந்திருப்பது சீரான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைய வழிவகுக்கும். துபேவின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகவும் அவர் நன்கு விளையாடினார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தன்னால் அடித்து ஆட முடியும் என்று காட்டினார். அதனால் அவர் சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவார். அடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரான செயல்பாட்டைக் கொடுப்பார். தற்போது ஓப்பனராக விளையாட போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அனுபவ ஓப்பனர்கள் அணுகுமுறையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நிலையான ஒரு வீரர் ஆடுவது மறுபக்கம் சாம்சனுக்கும் நெருக்கடியைக் குறைக்கும். டெவால் பிரெவிஸ் மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். சுழல், வேகம் இரண்டுக்கு எதிராகவும் அதிரடி காட்டக்கூடியவர். சாம்சன், கெய்க்வாட், மாத்ரே, பிரெவிஸ், துபே என இந்த டாப் 5-ஐ பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. சிலபல ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணி 180+ ஸ்கோர்களை சேஸ் செய்ய தடுமாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் 180 ரன்களை சேஸ் செய்தது. முழுமையான அதிரடி அணுகுமுறைக்கு ஏற்ற அணியாக சூப்பர் கிங்ஸ் இருக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த பேட்டிங் படை அதையெல்லாம் மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கிடைக்காத பெரும் நம்பிக்கையை அது கொடுக்கிறது. முதல் போட்டியில் பிரெவிஸ் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பலவீனமான பந்துவீச்சு பட மூலாதாரம்,Getty Images சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஏரியாக்கள் சரியாக சிறப்பாகவே இருக்கின்றன. பலவீனம் என்று குறிப்பிட வேண்டுமெனில் அவர்களின் டெத் ஓவர் பந்துவீச்சை குறிப்பிடலாம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும்படியான பௌலர் இந்த அணியில் இல்லை. கலீல் அஹமது எப்படியும் நிச்சயம் டெத் ஓவரில் பந்துவீசுவார். ஆனால், வேறு யார் அங்கு பந்துவீசுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் என யார் பந்துவீசப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி. அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது ஒருவகையில் அந்த அணியைப் பாதிக்கலாம். இந்நிலையில் பெரிதும் நம்பப்பட்ட பௌலரான நாதன் எல்லிஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியிருக்கிறார். இது பந்துவீச்சை இன்னும் பலவீனமாக்கியிருக்கிறது. அவருடைய இடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சனும் முழு ஃபிட்னஸோடு இல்லை என்று தெரிகிறது. சொல்லப்போனால், சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சன்ரைசர்ஸ் பாணியைக் கடைபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 'பந்துவீச்சு அதிக ரன் போய்விடலாம். பேட்டிங்கில் 20-30 ரன்கள் அதிகமாக எடுத்துவிடலாம்' என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன். அதேசமயம் சிஎஸ்கே-வின் பேட்டிங் பலப்பட்டிருக்கும் விதம், அந்த பந்துவீச்சில் இருக்கும் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பிளெமிங் மற்றும் அவரது பயிற்சியாளர் குழு இதை சரியாகக் கையாண்டுவிடுவார்கள் என நம்பலாம். கேப்டன் ருதுராஜுக்கு முக்கியமான சீசன் பட மூலாதாரம்,Getty Images இந்த சீசன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மிகவும் முக்கியமானது. தற்போது இரண்டாவது முழுமையான சீசன் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவரது முடிவுகள் அதிகம் கவனிக்கப்படும். அவர் தலைமைப் பண்பில் முன்னேற்றம் காண நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் தன் தவறுகளில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். தோனியே, "அவராகவே கற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் இந்த சீசனில் நடக்கும். என்ன, கடந்த ஆண்டு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. காயமடைந்து பாதியில் வெளியேறிவிட்டார். இந்த முறை அந்த அதிர்ஷ்டம் அவர் வசம் இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு அவருக்கு ஒரு தரமான அணியும் கிடைக்கவில்லை. ஒரு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் கேப்டனின் செயல்பாடும் இருக்கும். அது அவருக்கு கடந்த சீசனில் அமையவில்லை. ஆனால், இப்போது நல்லதொரு அணி அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன். தோனியின் பங்கு பட மூலாதாரம்,Getty Images மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரு வாரங்கள் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமான விஷயம். அதேசமயம் இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இந்த புதிய சீசன் மஹேந்திர சிங் தோனியின் பங்கு அவ்வளவுதானா என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவருடைய பங்களிப்பு நிச்சயமாக முடிந்துவிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, காயத்திலிருந்து திரும்பியதும் தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் - அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு 'சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்' நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம். அதேசமயம், களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும்போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு 'வழிகாட்டியாக' இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். இந்த சீசனுக்கான கணிப்பு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்ட சூப்பர் கிங்ஸ், இம்முறை அதை உடைத்து நிச்சயமாக டாப் 4 இடத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்களில் அந்த அணி நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சீசனின் கடைசி கட்டத்தில் இப்படியான இளம் வீரர்கள் தான் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்படி தரமான வீரர்களை நிறைய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். அது நிச்சயம் அணிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. மாத்ரே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, உர்வில் போன்ற இளம் வீரர்கள் அணியின் 'ஹிட்டிங்கை' பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள். அதேசமயம் பல அனுபவ வீரர்களையும் அணிக்குள் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிகம் கவனம் ஈர்க்காத ராகுல் சஹார், முகேஷ் சௌத்ரி போன்றவர்கள் ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள். அகீல் ஹொசைன் அப்படித்தான். அவர் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் சோபித்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் இந்த சீசன் சென்னை அணியின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குவார். முன்பே சொன்னதுதான், இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றை சிஎஸ்கே கொண்டிருக்கிறது. ஆனால், பந்துவீச்சு தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக டெத் பௌலிங். அதை சரியாகக் கையாள முடிந்தால் சிஎஸ்கே இந்த சீசனில் வெகுதூரம் செல்லலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே நிச்சயம் முன்னேறும். அதற்கு மேல் அந்தந்த நாளில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது அவர்கள் முடிவைத் தீர்மானிக்கும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgldx2kk1dro
1 week ago
அமெரிக்கா: தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பயங்கரவாத முத்திரை குத்தி இறுதிவரைக்கும் தமிழின அழிப்பிற்காக துணை நின்ற, இந்தியாவுக்கு நிகரான நாடு. ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது. இருவரும் அடிபடும் போது எந்த தரப்பு தோற்றாலும், எந்தத் தரப்புக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் உந்த காஸ் (gas / petrol) விலைதான் விசரை ஏற்றுது
1 week ago
செல்லாது செல்லாது! இவண் அகில உலக செவ்வந்தி ரசிக மன்றம் சார்பாக வெள்ளை மாளிகையில் இருந்து.
1 week ago
நன்றி.
1 week ago
ஹாப்பி பேர்த்டே செவ்வந்தி. 😂 🤣
1 week ago
செவ்வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இப்படிக்கு செயலாளர் க.செ.ர.ச
1 week ago
அது 2 லட்சம் பேர் அண்ணை.
1 week ago
மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி Mar 30, 2026 - 02:15 PM 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmncxysd60007356pqpyrrftt இந்தக் கட்டண நிர்ணயமானது, உச்ச நேரங்களில் மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்கு மின்சார விநியோக நிறுவனங்களையும் மின்சார நுகர்வோரையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் தொழிற்சாலைகள், விடுதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறைகளுக்குக் குறைந்த மின்சாரக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பாக ஒரு பொது கலந்தாய்வை நடத்தியதுடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் தகவலுக்கு, திரு ஜயசூரியன் (உதவி பணிப்பாளர்- பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவு) அவர்களை 0770 399 119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
1 week ago
எல்லாமே விலை உயரும். ஏனெனில், எல்லாமே இப்போது வழங்கல் சங்கிலி வழியாகவே கிடைப்பது. அதன் உயிர் நாடி போக்குவரத்து, அதன் உயிர்நாடி மசகு / சுவடு எண்ணெய் / எரிபொருள். இது என்ன பூனை ஒரே நேரத்தில் இறந்தும் / உயிரோடும் இருக்கிறது என்ற (Schrodinger இன் ) என்ற ((பௌதிக) விஞ்ஞானமா? இதில் விலை உயர்வதற்கான தாக்கத்திரி பற்றாவைக்கப்பட்டு வவிட்டது ஏனெனில், மத்திய கிழக்கில் இருந்த்து சராசரியான சரக்கு கப்பல் பிரயாண காலம் 3-4 கிழமைகள். இது முறிந்து விட்டது, மீண்டும் ஓரளவு சுமுக நிலைக்கு திரும்ப (இப்போதைய நிலையில் ) ஆக குறைந்தது 8-12 கிழமைகள் தேவை. ஏனெனில், (எரிபொருள், இரசாயன) உற்பத்தி / தொழிற்சசாலைகளை மீண்டும் முன்பு இருந்த உடற்த்தி கொள்ளளவுக்கு கொண்டுவர ஆக குறைந்தது , 4-8 கிழமைகள் தேவை.
1 week ago
1 week ago
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் Mar 30, 2026 - 09:01 AM தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார். அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmncmrpwd0007356p0fkc258o
1 week ago
1 week ago
சீமான் தனது பரப்புரையில் வழமைபோல் அனைவருக்கும் அரசவேலை என அடித்து விட… கூட்டத்தில் இருந்தே ஒருவர் எழும்பி, இந்த ஊரிலேயே 2000 வேலை தேடி வெளி ஊர் போறாங்க அனைவருக்கும் அரச வேலை எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார். சீமான் பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி) கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது. #அன்பான சர்வாதிகாரி
1 week ago
போரில் அடைய முடியாத இலக்குகளை 15 அம்ச பட்டியலின் ஊடாக அடைய முயற்சிக்கிறது அமெரிக்கா ; “சமரசத்துக்கோ சரணடைதலுக்கோ வாய்ப்பில்லை" - ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் 30 Mar, 2026 | 12:34 PM “அமெரிக்கா, அது விரும்பியவற்றை, போரின் ஊடாக அடைய முடியாத நிலையில், அதன் இலக்குகளை 15 அம்ச நிபந்தனைப் பட்டியலில் முன்வைத்து, அவற்றை தன் ராஜதந்திரத்தின் மூலம் அடைய முயற்சிக்கிறது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபுறம் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் தரை இறங்கவிருப்பதை எங்களது படையினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களை அழிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் சூளுரைக்கிறார். மேலும், ஈரானுடனான மோதல் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமைய சரணடையவோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ ஈரான் முன்வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய நாள் முதல் ஈரானில் அரசாங்கத்துக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பொது முழக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இனி சமரசம் இல்லை, சரணடைதலும் இல்லை, அமெரிக்காவுக்கு எதிராக போராடு” என்ற பேரணியினரின் முழக்கத்தின் வாயிலாக, அவர்கள் நாட்டின் ஏவுகணைகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்” என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரானும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 15 அம்ச நிபந்தனைகளை பட்டியலிட்டு அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதற்காக 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் என அறிவித்தது. அதேவேளை இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்து வரும் அதே சந்தர்ப்பத்தில் மேற்காசியாவில் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தையும் இராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எதற்கும் அடிபணியப் போவதில்லை என்றும் ஈரான் பதிலளித்துள்ளது. https://www.virakesari.lk/article/242294
1 week ago
இயற்கையாக தேனீக்கள் கூடுகட்டி சேகரிக்கும் தேன் கெடாது. அந்தத் தேனில் சேமிக்கப்படும் எந்தப் பொருட்களும் கெடாது.
1 week ago
அதிக வெப்பம்: பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு Mar 30, 2026 - 04:21 PM தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்: 1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்). 2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். 3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல். முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும். பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்: அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்). பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்: தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல். பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்). வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல். மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை: அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல். அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்). வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல். அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல். https://adaderanatamil.lk/news/cmnd2issh0000356plzog1i7h அதிக வெப்பமான காலத்தில் பாடசாலை நேரத்தை மாற்றலாமே?! 8.30 - 2.30 வரை என்றால் தாக்கம் குறையுமே.
1 week ago
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 04:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242304
1 week ago
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. கட்டுரை தகவல் எம்மா பெங்கெல்லி, ஷயான் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த புகைப்படங்களில் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது. சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். புகைப்படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதை அடையாளங்கள் ஆகியவை செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது. விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். குறைந்தது இரண்டு அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஒரு ஷாஹெட் டிரோன் மூலமாக ஈ-3 விமானம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மார்ச் 11 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்திலும் இதே இடத்தில் ஒரு ஈ-3 உளவு விமானம் இருப்பதை பிபிசி வெரிஃபை பார்த்துள்ளது. ஆனால் இவை இரண்டும் ஒரே விமானம் தானா என்று எங்களால் கூற முடியாது. சரிபார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் அந்த விமானத்தின் வால் பகுதி எண் தெரிகிறது. இதை வைத்து பிளைட்ரேடார்24 என்ற விமானப் பயணக் கண்காணிப்புத் தளத்தில் சோதித்தபோது, அந்த விமானம் மார்ச் 18 அன்று தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்தது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படம், ஈ-3 விமானம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே சுமார் 1,600 மீட்டர் (5,200 அடி) தொலைவில் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படங்களில் காணப்படும் விமானம் சேதமடைந்த அதே தாக்குதலின் ஒரு பகுதியா இது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஈ-3 உளவு விமானத்தின் ரேடார், நீண்ட தூரங்களில் உள்ள சாத்தியமான இலக்குகளைக் கண்காணிக்க உதவுகிறது (கோப்புப் படம்). போயிங் ஈ-3 அவாக்ஸ் என்பதன் விரிவாக்கம் 'வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு' (AWACS - Airborne Warning and Control System) என்பதாகும். இது போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் உடற்பகுதியின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான சுழலும் ரேடார் தட்டைக் கொண்டுள்ளது. இந்த ரேடார், இலக்குகளை நீண்ட தூரத்திலேயே கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் போர் நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடிகிறது. அமெரிக்க விமானப்படை வலைத்தளத்தின் படி, அந்த விமானம் "வான்வழிப் போரின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் வான்வழி நடவடிக்கைகளின் தளபதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது". இந்த வகை விமானங்களில் முதலாவது 1977 ஆம் ஆண்டு சேவையில் இணைந்தது. ஈ-3 ரக விமானங்கள் 2035 ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7jvvr7g8qo
1 week ago
Top 10 Best Indian Players Run Outs In Cricket History Ever || Cricket Plus.....! 😂
1 week ago
ஆஹா... வில்லேஜ் விஞ்ஞானிகள், இவர்களின் திறமையை ஊக்குவிக்க வேண்டும். கைது செய்து அவமானப் படுத்தக் கூடாது. 😂
Checked
Tue, 04/07/2026 - 07:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed