அரசியல் அலசல்

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2 weeks 4 days ago

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

image_df9ac4d177.jpeg?resize=1200%2C550&

Photo, SUNDAY TIMES

இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்கட்சிகள் தம் அரசியல் செயற்பாட்டினை வடகிழக்கிலும் முன்னெடுத்து வந்தன. ஆயினும், இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முடியாமற் போய்விட்டது. இப்பின்புலத்தில் எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலது சாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது.

ஆயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தப்பின்னரும் வலதுசாரி கட்சிளும் இடதுசாரி கட்சிகளும் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி. – தே.ம.ச. (என்பிபி). தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. இதேபோல் மலையகத்தில், பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய திருப்புமுனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடாந்து தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கின் தமிழ் தேசியம் எனும் தரிசனம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும்  நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கின் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன் அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிடவில்லையென்பதை  நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் களம் இறங்கின. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையகத் தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம், ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர்.

ஆனால், நடந்துள்ளது என்னவெனில் தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ். மாவட்டத்தின் பதினேழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் எனக் கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப்  வகித்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. ஆனால், வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும், நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது .

 

கட்சி

 

யாழ் மாநகர சபை

 

வல்வெட்டி துறை நகர சபை

 

பருத்தித்துறை நகரசபை

 

சாவகச்சேரி நகர சபை

நெடுந்தீவு பிரதேச சபை

இ.த.க.

13

5

4

6

6

அ.இ.த.கா.

12

7

5

6

 

தே.ம.ச.

10

3

2

3

3

ஜ.த.தே.கூ.

 

2

2

 

ஈ.ம.ஜ.க.

 

 

 

 

4

அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம் (பருத்திதுறை, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்திச் துறை நகரசபை மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களையும் பெற்றுள்ளது (கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜே.வி.பி./ தே.ம.ச. அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது).

கட்சி

வலிகாமம் மேற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

சாவகச்சேரி பிரதேச சபை

நல்லூர் பிரதேச சபை

இ.த.க.

10

13

13

8

7

அ.இ.த.கா.

6

6

7

7

 

தே.ம.ச.

4

5

6

6

3

ஜ.த.தே.கூ.

 

 

 

 

3

ஈ.ம.ஜ.க.

 

6

 

 

 

ஐ.தே.க.

 

 

 

 

3

கட்சி

ஊர்காவற்துறை பிரதேச சபை

வேலணை பிரதேச சபை

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

பருத்தித்துறை பிரதேச சபை

இ.த.க.

2

8

11

8

11

9

தே.ம.ச.

3

4

9

6

9

4

அ.இ.த.கா.

3

 

6

 

5

ஐ.தே.க.

 

 

 

 

 

 

சு.கு

 

 

 

 

2

ஜ.த.தே.கூ.

 

 

 

5

5

4

த.ம.கூ.

4

 

 

 

 

 

ஈ.ம.ஜ.க.

 

3

 

 

 

 

கட்சி

காரைநகர் பிரதேச சபை

தே.ம.ச

2

இ.த.க

2

அ.இ.த.கா

2

சு.கு

2

ஜ.த.தே.கூ

2

சுருக்கம்

இ.த.க. – இலங்கை தமிழரசு கட்சி

அ.இ.த.கா. – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி

ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி

சு.கு. – சுயாதீன குழு

ஜ.த.தே.கூ. – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

த.ம.கூ. – தமிழ் மக்கள் கூட்டணி

ஈ.ம.ஜ.க. – ஈழ மக்கள் ஜன நாயக கட்சி

இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடதுசாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளூராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜே.வி.பி./ தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் (Cadre) கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்டுகின்றனர். அதன்படி பார்க்கும்போது ஜே.வி.பி./ தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜே.வி.பி. தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும். மறுபுறம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பக்கச்சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப் பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்? தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டிவைத்து தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களையும் ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜே.வி.பி./ தே.ம.ச. மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்?

எவ்வாறு வடகிழக்கில் ஜே.வி.பி./ தே.ம.ச. தன் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக  உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும். ஆனால், இவ்விரு கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகர சபை, தலவாகெல்லை – லிந்துள்ள நகர சபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய, கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களாவர். இவர்கள் மலையகக் குடியிறுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால் மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை  தம்பால் வென்றெடுக்க முடியும் . மேலும், இந்தியா வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை ஜே.வி.பி./ தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறானதாக அமையும். வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை  தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையகக் கட்சிகளின் பால் மலையக  இளைஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்?

கட்சி

நுவரெலியா மாநகர சபை

ஹட்டன் – டிக்கோயா நகர சபை

தலவாக்கலை – லிந்துலை நகர சபை

மஸ்கெலியா பிரதேச சபை

ஐ.தே.க

3

 

 

2

தே.ம.ச

12

6

4

7

இ.தொ.கா

 

2

2

 

ஐ.ம.ச

4

5

2

6

சு.கு

3

 

 

2

ம.ம.மு

 

3

 

கட்சி

நோர்வூட் பிரதேச சபை

அம்பகமுவ பிரதேச சபை

அகரப்பத்தனை பிரதேச சபை

கொட்டகலை பிரதேச சபை

தே.ம.ச

6

8

4

5

இ.தொ.கா

6

2

4

5

ஐ.ம.ச

5

6

4

4

கட்சி

நுவரெலியா பிரதேச சபை

கொத்மலை பிரதேச சபை

ஹங்குரன்கெத்த பிரதேச சபை

வலப்பனை பிரதேச சபை

தே.ம.ச

7

22

20

30

இ.தொ.கா

6

8

 

 

இ.பொ.மு

 

4

7

ஐ.ம.ச

17

9

15

சு.கு

5

 

 

 

குறிப்பு – இடம் கருதி சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;.

ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி

ம.போ.மு. – மக்கள் போராட்ட முன்னணி

தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி

இ.தொ.கா. – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இ.பொ.மு. – இலங்கை பொதுசன முன்னணி

ஐ.ம.ச. – ஐக்கிய மக்கள் சக்தி

சு.கு – சுயாதீன குழு

ம.ம.மு. – மலையக மக்கள் முன்னணி

வடகிழக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி  அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைததுக் கொள்வதும் சவாலாக அமையும்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் விளைவாக உருவாக்கிக் கொண்ட பிரதிநிதிகளை ஜே.வி.பி. களப்பணியார்களாக மாற்றிவிடும். எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது வடக்கு மற்றும் மலையக கட்சிகள் பாரிய சவாலை எதிர்க்கொள்ள நேரிடும். மாகாண சபையில் இதையொத்த வெற்றியை ஜே.வி.பி. பெறுமாயின்   சுயர்நிர்ணய உரிமை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் ஏற்றுள்ளதாக தேசமும் சர்வதேசமும் கருதும். எனவே, தமிழ் கட்சிகள் புதிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

பெ.முத்துலிங்கம்

https://maatram.org/articles/12120

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? — கருணாகரன் —

2 weeks 5 days ago

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

June 4, 2025

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

— கருணாகரன் —

NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா?

அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்?

இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 

அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இனவாதத்தையே NPP யும் கைக் கொள்கிறது என்ற  கோபமா? 

சிங்கள இனவாதச் சக்திகளைச் சமாளித்துக் கொள்வதற்காக NPP யும் இனவாதத்தைப் பேச முற்படுகிறதா? அது சரியானதா? 

NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?

ஊழலுடன் NPP யும் தொடர்பு பட்டுள்ளதா? அல்லது ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அது உறுதியாகவே நிற்கிறதா?

NPP செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?

ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு NPP யின் நடவடிக்கைகள் வேகமாக இல்லையா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

இதைக்குறித்து NPP யினர் தெளிவாக்காது இருப்பது ஏன்? 

“NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்?

“தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது”  என்று சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.

“சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPPயும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்” என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.

அப்படியென்றால் இதில் எது உண்மை?

இரண்டு தரப்பினாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பு எப்படியாக இருக்கும்?

சுருக்கமாகக் கேட்டால், சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் ஆட்சி செய்த ஏனைய அரசியற் தரப்பினரை விட NPP மோசமான தரப்பா?

என்றால் அது எந்த வகையானது என்று அரசியற்கட்சிகளும் NPP யை எதிர்ப்போரும் தெளிவாகச் சொல்ல (விளக்க) வேண்டும்அல்லவா?

NPP யை எதிர்த்து அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் வேறு எந்தச் சக்தியை அமர்த்தலாம்? அல்லது எந்தச் சக்தி அதிகாரத்துக்கு – ஆட்சிக்கு – வரும்?

1.      ஐ.தே.க

2.      ஐக்கிய மக்கள் சக்தி

3.      பொதுஜன பெரமுன

4.      சிறிலங்கா சுதந்திரக் கட்சி

5.      இந்தக் கட்சிகளின் கூட்டு அல்லது கலவைதானே!

இவை NPP யை விட சிறப்பான நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களுக்கோ இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கோ வழங்கி விடுமா?

அதற்கான உத்தரவாதம் என்ன?

தற்போதைய சூழலில் NPP யை நீக்கினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன அல்லது சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றில் ஒன்றுதான் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

இவை இரண்டும் NPP ஐ விட முற்போக்கானவையா? அதாவது தீங்கற்றவையா? 

இவற்றுக்கு அப்பால் வேறு புதிய சக்தி ஏதாவது வரக்கூடிய சாத்தியமுண்டா?

என்றால் அது, எது?

இதற்கெல்லாம் யாரும் பதில்  சொல்லத் தயாரில்லை.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் NPP மீதான எதிர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது?

தமிழ் பேசும் மக்கள் NPP ஐ எதிர்க்கும்போது அது தவிர்க்க முடியாமல் மேற்சொன்ன ஐந்து தரப்புகளில் ஒன்றுக்கோ அல்லது ஐந்துக்கோதானே ஆதரவாக இருக்கும்?

அந்தத் தரப்புகள் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறையையும் – பாரபட்சத்தையும்  தாராளமாகவே மேற்கொண்டவையல்லவா?மட்டுமல்ல, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளவையே!

இதைப் புரிந்து கொண்டும் NPP ஐ எதிர்த்தால் அது மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்சொன்ன சக்திகளுக்கே வாய்ப்பாகும் அல்லவா?

இதனை யாராவது மறுக்க முடியுமா?

 அப்படியென்றால் அதைத்தான் தமிழ் பேசும் தரப்புகள்  செய்ய விளைகின்றனவா? அவற்றின் அரசியல் தெரிவும் நிலைப்பாடும் இதுதானா?

அல்லது தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு நல்லது என எண்ணுகின்றனவா? அல்லது ஏனைய சக்திகளை விட NPP ஆபத்தானது என விளைகின்றனவா? 

ஏனைய தென்னிலங்கை அரசியற் கட்சிகள் வடக்குக் கிழக்கில் வலுவாகக் காலூன்றவில்லை. ஆகையால் பிராந்திய அரசியலுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. மட்டுமல்ல, பிராந்திய அரசியலுக்கு அந்தச் சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தாரளமாக வாய்ப்பளித்தன. NPP இதை மறுத்து பிராந்திய சக்திகளின் இருப்பிலும் – பிராந்திய அரசியலிலும் கை வைத்துள்ளது என்ற அச்சத்தின் வெளிப்பாடா? 

இதெல்லாம் NPP யை எதிர்க்கும் தரப்பினர் மீதான கேள்விகளாகும். இதுபோல இன்னும் பல கேள்விகளுண்டு. இதில் தமிழ் பேசும் மக்களுக்குரிய தனியான கேள்விகளும் உண்டு. இவற்றை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. 

NPP ஐ மட்டுமல்ல எந்தவொரு தரப்பை எதிர்க்கும்போது அதற்குரிய போதிய காரணங்களை விளக்குவது அவசியமாகும். அப்பொழுதுதான் அதைக் குறித்து மக்களும் சிந்திக்க முடியும்? உரிய தரப்பும் (NPP) தன்னைப் பரிசீலித்துக் கொள்வதற்கு அதிக  வாய்ப்பிருக்கும்.

இதேவேளை NPP யின் மீதும்கடுமையான விமர்சனங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே இந்தக் கட்டுரை விடயங்களை விவாதிக்க முற்படுகிறது.

NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன.  

தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட சிலரைத் தவிர, ஏனையவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். 

அதாவது இனவாதத்தை முன்னெடுத்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றன நாட்டை அகரீதியாகப் பிளவு படுத்தியது மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்புகளையும் உண்டாக்கியவை. அவற்றின் அரசியல் (இனவாதம்) அந்தக் கட்சிகளையே காப்பற்ற முடியாமல் போய் விட்டது. சரியாகச் சொன்னால், அவை வளர்த்த இனவாதத்துக்கு அவையே பலியாகி விட்டன. 

அதனால்தான் ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியல் வேண்டும் என்ற அடிப்படையில் NPP க்கான ஆதரவை மக்கள் வழங்கினர். தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவும் அப்படியானதே. 

இதை மறந்து விட்டு அல்லது இதைப் புரிய மறுத்து ஏனைய தீய சக்திகளைப்போலவே NPP யும் செயற்படுமாக இருந்தால், அவற்றின் வழியையே தொடருமாக இருந்தால் நிச்சயமாக விரைவில் NPP தோல்வியைச் சந்தித்தே தீரும். தோல்வியை மட்டுமல்ல, அழிவையும்தான். 

இந்தச் சமரசமெல்லாம் தெற்கில் மேலெழும் அல்லது NPP ஐ பலவீனப்படுத்த முற்படும் சிங்களத் தீவிரவாத சக்திகளையும் திருப்பதிப்படுத்த வேண்டிய சூழலால் செய்யப்படுவது என்று இதற்கு யாரும் சமாதானம் சொல்ல முற்பட்டால் அவர்கள் சமகால வாய்ப்பைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கும் NPP க்கும் கூட தீமைகளையே சிந்திப்பவர்களாக இருப்பர். 

வடக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளங்குமரன் போன்றோர் மிகப் பலவீனமானவர்களாகவும் பாதகமானவர்களாகவுமே இருக்கின்றனர். மக்களுக்கும் NPP க்கும் மாறானவர்களாகவே செயற்படுகின்றனர். 

இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது இவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்றால் அதனுடைய பாரதூரமான விளைவுகள் NPP ஐயே பாதிக்கும். மக்களுக்கும் அதனால் பாதிப்பே. 

சிதறுண்டிருந்த தமிழ்க்கட்சிகளை ஆறுமாதங்களுக்குள் ஒன்றிணைய வைத்த, பிராந்திய அரசியலை வலுவாக்கம் செய்தது  NPP யின் நடவடிக்கைகள்தான். அதிலும் சந்திரசேகர் – இளங்குமரன் கூட்டணியே என்பதை NPP யும் அதனுடைய ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

NPP யின் ஆதரவாளர்களும் NPP யும் இதைக்குறித்தெல்லாம் இன்னும் தெளிவாகப் பேசாதிருப்பது ஏன்?

 இதேவேளை NPP இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதைப்போல அதனால் இலகுவாக ஆட்சியை நடத்தவும் முடியாது. குறிப்பாக அதிகாரத்துக்கு வந்தபோது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்  (கடன் பொறிக்குள்ளும் சர்வதேச நெருக்கடிகளுக்குள்ளும்) தள்ளப்பட்டிருந்தது. அல்லது சிறைப்பட்டிருந்தது.

இது போதாதென்று இனவாதம் மிகத் தீவிரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இராணுவப் பலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது இனமுரணும் அதற்கான இராணுவமும் அதற்கான உளநிலையும் உச்ச நிலைக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில்தான், இவற்றைச்சீர்ப்படுத்தும் ஆட்சியை NPP  நடத்த வேண்டியுள்ளது. இது எளிய விடயமல்ல.

ஆகவே இதையெல்லாம் நாம் எளிதில் மறந்து விடவோ கடந்து விடவோ முடியாது.

இருந்தும் தமது தவறுகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் காணாமல், நிவாரணம் தேடாமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே அனைத்துத் தரப்பும் முயற்சிக்கின்றன. 

இது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP இதையெல்லாம் புரிந்து கொண்டு  வேண்டும். இதற்கு NPP தன்னைத் தெளிவாக முன்னிறுத்துவது அவசியமாகும். தெளிவென்பது, குழப்பங்கள்,உள் முரண்பாடுகள் அற்ற நிலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதாகும்.

ஆனால், அதிகாரத்துக்கு NPP  வந்த பின்னரான எட்டுமாத கால நடவடிக்கைகளை அவதானிக்கும்போது அப்படித் தெரியவில்லை. அது தடுமாற்றங்களுக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. என்பதால்தான் அதற்கு (NPP க்கு) எதிரான சக்திகள் வலுப்பெறக் கூடியதாக உள்ளது. அதன் மீதான விமர்சனங்களும் உள்ளன.

https://arangamnews.com/?p=12060

அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்

3 weeks 1 day ago

அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்

இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? 

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

 

28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட  அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீறுகின்ற சட்டவிரோத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சி அளிக்கும் – வெட்கக்கேடான செயல் ஆகும்.

1. ஒன்று இத்தீர்மானத்தின் அடிப்படை தவறுகள்.
2. இத் தீர்மானம் செயற்படுத்த முடியாத ஒன்று.

இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபை நிரல். ஒன்பதாம் அட்டவணையின் 11ஆம் பிரிவின் முதல் (11.1) பகுதியின் பிரகாரம்;

போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர, பொது மருத்துவமனைகள் யாவையும், கிராமிய மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் தாபித்தலும் பேணுதலும்மாகாண சபைக்கு உரித்தானது.

இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? இக்கூட்டத்தில் ஒருவர் கூட இது அரசியல் யாப்பை மீறும் செயல். இது மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய தீர்மானத்தை இயற்றுவது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்ததாக தகவல் இல்லை.

மேலும் இத்தீர்மானத்தை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றளவில் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் யாப்புக்கு முரணாக ஜனாதிபதியால் கூட செயல்பட முடியாது. எனவே இத்தீர்மானம் நடவடிக்கைக்குதவாத ஒன்று என்பதை கூட இங்கிருந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளாமை  அவர்களது ஆற்றல், ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது 

இவை அனைத்துக்கும் மேலாக இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி செல்வம் அடைக்கலநாதன் இங்கிலாந்தில் இருப்பதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; மருத்துவரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சத்தியலிங்கம் கலந்து கொள்ளவில்லை; ரவிகரன் மட்டுமே கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. ஏனையோர் தமிழ் தேசியப் பரப்பு சாராத ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஸ்தானுமே.

இங்கு இத்தீர்மானத்தை எதிர்த்து, மாகாண அதிகாரங்களை மத்தியிடம் தாரை வார்க்கும் இத்தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்தினால் பெறப்பட்ட அதிகாரங்களை வேண்டாம் என்று மீழளிக்கும், வெட்கம் கெட்ட செயற்பாடு என்பதை அறைந்து சொல்லி இருக்க வேண்டியவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவிகரனே.

ஆனால் ‘இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் ஓர் செயல்பாடாக பார்க்கப்படக்கூடும்’ என்று அச்சம் வெளியிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதாவது, மிகப்பெரும் போராட்டத்தால் பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மத்திக்கு மீண்டும் வழங்குவதில் எனக்கு சிக்கல் ஏதும் இல்லை எனக் கூறும் இவர், எதைப் பெறுவதற்காக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் என்பதற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ‘இது மாகாணங்களின்  அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதாக பார்க்கப்படக்கூடும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பார்க்கப்படக்கூடும் அல்ல இது மிகப்பெரும் தியாகங்களால் கிடைத்த அதிகாரம். இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இருப்பது போல் உள்ளது. மேலும் இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் வெட்கம் கெட்ட செயல் என்பது அவருக்குமே புரியவில்லையா? இவற்றை புரியாமல் நாடாளுமன்றத்தில் என்ன உரிமை கேட்பார்?

இந்த அரசியல் யாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு மேலாக இங்கிருந்த உயர் மட்டத்தினர் எவருக்கும் 75 ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மக்களும் தலைமைகளும் அதிகார பகிர்வுக்காகவே போராடினார்கள் என்பது தெரியாதா? அதற்காக எத்தனை லட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது என்பது தெரியாதா? இன்றும் 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழ் தலைமைகளாலும் இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியாதா? இத்துணை தியாகங்கள் மத்தியில் பெறப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்தியிடம் வழங்குவது எமது கையாலாகத் தனத்தை எதிரியிடம் காண்பிக்கும் செயல் என்பது புரியாதா?

அதிகாரப் பகிர்வு பற்றி தமிழ் தலைமைகளோ இந்தியாவோ ஆட்சியாளரிடம் பேசும்போது; வழங்கப்பட்டதையே திருப்பித் தருகிறார்கள். அவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரப் பகிர்வு தேவையில்லை. சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகவே அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றனர் என்ற சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் பொய்யான – போலியான பிரசாரங்களுக்கு இது தீனி போடுவதாகும்.

சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது ஆகும். யாப்புக்கு முரணான சட்டவிரோதமான இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மீறி அதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 650 வரையிலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்க மத்திய அரசு முனைந்த போது இது 13 வது திருத்தத்திற்கு முரணானது- சட்டவிரோதமானது என வழக்குத்தாக்கல் செய்து அவை நிறுத்தப்பட்டது போல் இதுவும் தடுக்கப்படும்.

வடக்கிலிருந்து 50 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திய அரசு கையகப்படுத்த முனைந்தது. பல பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்கள் இதற்காக செயல்பட்டனர். இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தே மத்திய அமைச்சர்கள் இதனை செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் இக்கட்டுரையாளர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்ததுடன், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து மாகாண கல்வி அமைச்சு செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுக்கு இவ்வனைத்து பாடசாலைகளிலும் உள்ள தேசிய பாடசாலை பெயர் பலகைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்பட்டது.

மத்திய ஆட்சியாளர்கள் எவருக்கும் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வது அறவே விருப்பம் இல்லாத ஒன்று. எவ்வாறு மாகாண சபையை ஒழித்துக் கட்டலாம் என திட்டங்கள் தீட்டும் இனவாத ஆட்சியாளர்களுக்கு நாமே வலிந்து உதவும் மோசமான செயற்பாடே இத்தீர்மானம். நெருப்பு வைக்கும் ராசாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகள் செயல்பாடு போன்றது இத் தீர்மானம். அடுத்து வரும் கூட்டத்தில் இத் தீர்மானத்தை மீள பெறுவது மட்டுமே ஓரளவான பிராயச்சித்தமாக அமையும்.

வைத்தியசாலையின் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் கீழ் அன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, மன்னார் வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக (தேசிய பாடசாலை போல்) பெயர் பலகை மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தபோது அப்படியானால் நீங்களே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என ஏதோ தனது வீட்டு பணத்தில் செலவு செய்வது போல் பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்; வடக்குக் கிழக்கில் வரிகளை வசூலிப்பதை மாகாண அரசிடம் விடுங்கள், எமது வைத்தியசாலைகளை நாமே பார்த்து கொள்கிறோம் என பதிலளித்திருந்தார்.

இவ்வாறு மத்திய மாகாணத்து குறித்தான அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் இத்தீர்மானம் ‘நீங்கள் பறிக்க வேண்டாம்; நாங்களே தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருகிறோம்’ என்பதாக அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உரித்தான கல்வி அதிகாரத்தை தேசிய பாடசாலை என்கிற சட்டவிரோத யாப்பு விரோத கருத்துருவாக்கத்தின் ஊடாக பறிக்க முனைந்து சட்டப் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதேபோன்று சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வன்னி மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை மதிக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை மனதில் நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் அமைந்தால் மட்டுமே தமிழினம் உரிமைகளுடனும் அதிகாரத்துடனும் வாழ முடியும். அதிகாரத்துடன் வாழ்வதா? அடிமையாக வீழ்வதா? தேவை சிந்தனைத் தெளிவு.

https://thinakkural.lk/article/318640

காணி நிலம் வேண்டும் பராசக்தி - நிலாந்தன்

3 weeks 1 day ago

காணி நிலம் வேண்டும் பராசக்தி

viber_image_2024-03-18_09-54-35-963-02-1

சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆட்கள் இல்லாத, அல்லது உரிமை கோரத் தேவையான ஆவணங்கள் இல்லாத காணிகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணிகூடச் சொந்தமாக வைத்திருக்காத ஏழைகள்.

ஒருபுறம் பற்றைகள் மண்டிக் கிடக்கும் அல்லது பூதம் காக்கும் பிரம்மாண்டமான மாளிகைகள். அல்லது சிசிரீவி கமராக்களால் அல்லது செக்யூரிட்டி நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் பிரமாண்டமான மாளிகைகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணி கூட இல்லாத ஒரு தொகுதி மக்கள்.

தமிழ் மக்கள் நிலப் பறிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். அதே சமயம் தாய் நிலத்தில் உள்ள ஆளில்லாத வீடுகளையும் காணிகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணி இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முன் வர வேண்டும். அதை ஒரு தேசக் கடமையாகச் செய்ய வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்றாகச் செய்ய வேண்டும்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றின் போது,யாழ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த,ஒரு பெண் செயல்பாட்டாளர் சொன்னார், தன்னுடைய பகுதிக்குள் மட்டும் 24 ஆளில்லாத வீடுகள் உண்டு என்று. அதுபோல மானிப்பாயில் அந்தோணியார் கோவிலில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு ஒன்றின்போது அங்கு வந்திருந்த இளவாலை மறைக் கோட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினர் தந்த தகவல்களின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக பத்துக்குக் குறையாத ஆளில்லாத வீடுகள் உண்டு என்று தெரிகிறது.

தமிழர்கள் மத்தியில் ஆளில்லாத வீடுகள் இரண்டு வகைப்படும். முதலாவது வகை, ஆள் இல்லாத அல்லது பாழடைந்த சிதைந்த வீடுகள். இரண்டாவது வகை புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டியெழுப்பும் மாடமாளிகைகள். புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் காணிகளை வாங்கி அல்லது வீடுகளை வாங்கி அவற்றைப் புனரமைத்து வருகிறார்கள். இந்த வீடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. பருவ காலப் பறவைகளைப்போல அவ்வப்போது வந்து போகிறார்கள். ஊர்த் திருவிழாக்களுக்கு அல்லது நல்லது கெட்டதுக்கு வந்து போகிறார்கள். அவர்களுடைய அந்தஸ்தின் சின்னமாகிய அந்த வீட்டை ஒன்றில் சிசிரீவி கமராக்கள் கண்காணிக்கும். அல்லது பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கும்.

இவ்வாறாக, தமிழர் தாயகத்தில் இரண்டு வகை ஆளில்லாத வீடுகள் உண்டு. அதிலும் குறிப்பாக ஆளில்லாத பாழடைந்த வீடுகள் என்று பார்த்தால் தீவுப் பகுதிதான் அவ்வாறான வீடுகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவிலேயே ஏன் இந்தப் பிராந்தியத்திலேயே ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட கிராமங்களைத் தீவுப் பகுதியிலும் காணமுடியும். இவ்வாறு ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேசத்தில், ஆண்டு அனுபவிக்க ஆளில்லாத காணிகளை அரசாங்கம் அபகரிக்க முயற்சிக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் காணிகளை விடுவிக்கும் நிகழ்வொன்றில் பேசிய ஒரு தளபதி, “தமிழ் மக்கள் காணிக்காகப் போராடுகிறார்கள். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் வந்து குடியேறுகிறார்கள் இல்லை” என்று பேசியதாக ஒரு சமயப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

முகாமை அண்டிய பகுதிகளில் ஏன் மக்கள் குடியேற மறுக்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பு அவர்கள் இருந்தது ஒரு கிராமம். ஆனால் மீளக்கூடியமர்த்தும் போது அவர்களுக்குக் கையளிக்கப்படுவது பெரும்பாலும் ஒரு வெட்டை. ஒரு பெரிய முகாமின் சிறிய பகுதியாக மாற்றப்பட்டு வெட்டையாக்கப்பட்ட ஒரு இடம். எனவே அங்கே திரும்ப ஒரு கிராமத்தை ஸ்தாபிப்பதற்கு பல ஆண்டுகள் செல்லும். கிராமம் என்பது நிலம் மட்டுமல்ல. கிணறு வேண்டும்; கோயில் வேண்டும்; குளம் வேண்டும்; பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வேண்டும்; மின்சார, நீர் வினியோகங்கள் வேண்டும்… அதற்குரிய எல்லா உட்கட்டுமானங்களும் கட்டியெழுப்பப்படும் பொழுதுதான் அது ஒரு கிராமமாக மீள எழுச்சி பெறும்.எனவே மீளக் குடியேற்றம் எனப்படுவது தனிய நிலத்தைக் கையளிப்பது மட்டுமல்ல. அங்கு ஏற்கனவே செழிப்பாக இருந்து பின்னர் சிதைக்கப்பட்ட அழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்புவது. வெட்டப்பட்ட வேர்களில் இருந்து மீண்டும் ஒரு வனத்தை உருவாக்குவது போல.

ruins-of-war-574x1024.jpg

மேலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த மக்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இப்பொழுது இடம்பெயர்ந்து வாழும் புதிய இடங்களுக்குப் பழக்கப்பட்டு விட்டன. புதிய தலைமுறையின் தொழில் வாய்ப்புகளும் புதிய இடத்தைச் சுற்றித் தான் இருக்கும். இதனால் பூர்வ நிலத்துக்குத் திரும்பிச் செல்ல அந்தப் புதிய தலைமுறை தயங்குகிறது.

இப்படிப்பட்டதோர் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், அண்மையில் கிடைத்த சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி,வடபகுதியில் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பிள்ளைப்பேறு விகிதம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் குறைந்து கொண்டே போகிறது. ஒருபுறம் ஜனத்தொகை சிறுக்கின்றது. இன்னொருபுறம் நிலமும் சிறுக்கின்றது.

தவிர,இருக்கின்ற நிலத்திலும் ஆளில்லா வீடுகள். எனவே இந்த விடயத்தில் நிலத்தை அபகரிக்க முற்படும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடமிருந்து தாய் நிலத்தைக் காப்பாற்றுவதற்காக போராடும் அதே சமயம் தாய் நிலத்தைச் சனப்புழக்கம் உடையதாகக் கட்டியெழுப்புவது பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆளில்லா வீடுகளை வைத்திருக்கும் உள்நாட்டுத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்களிடமுள்ள மேலதிக காணிகளையும் வீடுகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணிகள் இல்லாதவர்களுக்கும் தானமாக வழங்கலாம்.

தமது பூர்வீக காணியை,பூர்வீக வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய பூர்வீக வீட்டையும் காணியையும் தானம் பண்ண வேண்டும் என்று இந்தக் கட்டுரை கேட்கவில்லை.மாறாக தமிழர் தாயகத்தில் பூதம் காக்கும் ஆளில்லாத வீடுகளை வீடில்லாதவர்களுக்கும்,பற்றைகள் மண்டிக் கிடக்கும் காணிகளை நிலம் இல்லாதவர்களுக்கும் விரும்பினவர்கள் தானமாக வழங்கலாம். அதை ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாக முன்னெடுக்கலாம்

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வினோபா அவ்வாறு பூமிதான இயக்கம் ஒன்றை நடத்தினார். சுதந்திரப் போராளியான அவர் காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகி குறிப்பாக ஆந்திராவில் இடம்பெற்ற நிலமற்ற விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் 1951ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக இருக்க முடியும். அதற்கு முன்னுதாரணங்கள் ஏற்கனவே உண்டு.கிளிநொச்சியில் பன்னங்கண்டிக் கிராமத்தில் சிவா பசுபதி கமத்தில் உள்ள மேட்டு நிலம் அவ்வாறு அங்கே குடியிருக்கும் மலையக மக்களுக்கு கொடையாக வழங்கப்பட்டது.

அது ஒரு வித்தியாசமான கதை. 2017 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் உள்ள காவேரி கலாமன்றத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றதற்காக ஒஸ்ரேலியாவில் இருந்து மாலதி வரன் எனப்படும் ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவர்களோடு இணைந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்ய வேண்டிய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் உரிய நேரத்தில் வராமல் பிந்தி வந்திருக்கிறார்.ஏன் என்று கேட்டபோது, பன்னங்கண்டி கிராமத்தில் நடக்கும் நிலமற்ற மக்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற காரணத்தால் பிந்தி வந்ததாகக் கூறியுள்ளார். உரையாடலின் போக்கில் அந்த காணியின் பெயர் சிவா பசுபதி கமம் என்றும் கூறியுள்ளார்.சிவா பசுபதி என்ற பெயரைக் கேட்டதும் அவர்களோடு பயணம் செய்த மாலதி வரன், இடையில் குறுக்கிட்டு அது தனது தந்தையாகிய முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதியின் கமம்தான் என்று கூறியுள்ளார். அதனால் அவரை கமத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கே போராடும் மக்களோடு கதைக்க வைத்துள்ளார்கள். மக்களோடு கதைத்த மாலதி,வெளிநாடுகளில் வசிக்கும் தனது எழு சகோதரர்களோடு கதைத்த பின் அந்தக் கமத்தைப் போராடும் மக்களுக்கே வழங்கத் தான் தயார் என்றும் உறுதி கூறியுள்ளார். உடனடியாகவே கொழும்புக்குச் சென்று தனது சகோதரர்களோடு கதைத்து அவர்களுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு கிளிநொச்சிக்குத் திரும்பி வந்திருக்கிறார்.அந்தக் கமத்தில் நீண்ட காலம் வசித்து வந்த நிலமற்ற மக்களுக்கு அந்தக் கமத்தைச் சேர்ந்த 33 ஏக்கர் மேட்டு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

bb46791d-cb22-4046-9c86-1dab2c46a552-ccc

மாலதி வரனும் காவேரி கலா மன்ற இயக்குனரும்

இது போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம். நிலம் இல்லாத தன் இனத்தவனுக்கு நிலத்தைக் கொடுப்பது என்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்று. மருத்துவர் மாலதி வரனைப் போல பல புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது காணிகளை, வீடுகளைத் தானமாக வழங்கி வருகிறார்கள்.

காணி உரிமைக்கும் சாதி ஒடுக்கு முறைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலங்கைக்கு வந்த பேராசிரியர் இசபெல்லா எனப்படும் புலமையாளரை சமூக ஏற்றத்தாழ்வுகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றேன்.அக்கிரமங்களுக்குச் சென்று ஆராய்ந்தபின் அவர் கேட்டார்,”சாதி ஒடுக்குமுறைக்கும் நில உரிமைக்கும் இடையே தொடர்புகள் உண்டல்லவா?” என்று. அது மிக வெளிப்படையான எளிமையான ஓருண்மை.

எனவே நிலமில்லாத மக்களுக்கு தமது நிலத்தை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலச் சுவாந்தர்கள் முன் வர வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன் வர வேண்டும். அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்படி பணியை ஒருங்கிணைக்கலாம். அதை ஒரு செயல்வாதமாகவே ஒழுங்கமைக்கலாம்.விரைவில் உருவாக்கப்படவிருக்கும் பிரதேச சபைகள் அதைச் செய்யலாம்.

நில அபகரிப்புக்கு எதிராக போராடச் செயற்பாட்டாளர்கள் தேவை.அதுபோலவே நிலத்தைத் தானமாக கொடுப்பதற்கும் செயற்பாட்டு இயக்கங்களும் அறக் கொடைகளும் தேவை. தாய் நிலத்தைக் காப்பாற்றுவது என்பது தாய் நிலத்தை அபகரிக்க முற்படும் அரச வர்த்தமானிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல,அதேயளவு முக்கியத்துவத்துவமுடையது,தாய் நிலத்தை சனச் செழிப்பு மிக்கதாக மாற்றுவது.காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவது;வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவது. அதுதான் உண்மையான தேசியக் கூட்டுணர்வு.

https://www.nillanthan.com/7440/

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 weeks 4 days ago

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

May 30, 2025 11:36 am

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது.

இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில் ”இனப்படுகொலை” யாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் ”இனப்படுகொலை”என்பதனை நிராகரித்து ”போர் வெற்றிக் கொண்டாட்டம்” என்ற பெயரில் வெற்றிநாளாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான் இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது ”தமிழ் இனப்படுகொலை” என்பதனை கனடா ஏனைய உலக நாடுகளுக்கு உரத்துக் கூறியுள்ளது.

இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் இறுதிக்கட்ட யுத்த தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, ”தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்தும் ”தமிழினப் படுகொலை”நடந்தது என்பதனை சர்வதேச மயப்படுத்தியுள்ளது.

கனடாவின் இந்த துணிச்சலான,மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கின்ற, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்ற,அநீதிகளை சமரசமின்றி எதிர்க்கின்ற,நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ,உண்மையை உரத்துக்கூறுகின்ற உயரிய அரசியலும் உயர்ந்த குணமும்தான் இன்று இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளதுடன் இவர்களை நெருப்பில் விழுந்த புழுக்களாக துடிக்கவும் துள்ளவும் வைத்துள்ளது.

தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்து,இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

canada-2.jpg

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்காவுசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.பிரம்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது எனவும் கனடிய தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் தொனியில் கண்டனம் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையிலுள்ள பிரதான தமிழ் தேசியக் கட்சிகள்,அமைப்புக்கள்,புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்கள் கனடா அரசுக்கும் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணுக்கும் கனேடிய தூதுவருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான இ லங்கைத் தமிழரசுக்கட்சி கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தது.

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்ததுடன் தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றையும் கையளித்துள்ளார். மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே கனேடிய ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில்தான் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ”தமிழின படுகொலை நினைவுத்தூபி”போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி மூலம் அச்சுறுத்தியுள்ளார்.

பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் , வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் இந்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. இது கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவினால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் கனடா அசரவில்லை. பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இது தொடர்பில் கூறுகையில் .நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்கக் கூடாது.இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் மேலும், தமிழர் படுகொலை நினைவுத்தூபி என் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. எனவே இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பினால்தான் கனடாவிலுள்ள சிங்களவர்கள் இந்த நினைவுத்தூபி தொடர்பில் சிங்கக்கொடியை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு அடுத்த அடியாக கனடாவின் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்டனில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் ராஜபக்ஸக்கள் சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்தான் கனடாவின் அடுத்த நினைவுத்தூபி அறிவிப்பு இலங்கை அரசுக்கும் சிங்களபேரினவாதிகளுக்கும் கடும் சினத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கே.பாலா

https://oruvan.com/canadas-memorial-and-the-screaming-sri-lankan-government/

தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது

3 weeks 6 days ago

தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது.

தலைமை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்று தருவேன்

கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!

4 weeks ago

கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!

கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது.

ஐ.வி.மகாசேனன்

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத் தூபி அந்நாட்டு அரச அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் அரச இயந்திரத்தின் நெருக்கடி பின்னணிகளுக்குள்ளேயே, மக்களின் தன்னார்வ எழுச்சிகளால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. எனினும் தாயகத்தில் நினைவேந்தல்கள் நிலையான வடிவத்தை பெற முடியவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியான துயராகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தை தழுவி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று தமிழினப் படுகொலைக்கான பொது நினைவேந்தல் கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனினும், முள்ளிவாய்க்காலின் நினைவு முற்றக்காணி தொடர்பிலும் இடையிடையே சில சச்சரவான வாதங்களும் அரச ஆளுகைக்கான முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றது.

அவ்வாறே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும் 2021 ஆம் ஆண்டு இராணுவ நெருக்கீட்டில் உடைக்கப்பட்டது. எனினும் மாணவர்கள், மக்களின் தன்னார்வ எழுச்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் மீள் நிர்மாணிப்புக்கு இலங்கை அரசாங்கம் மறுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டது. எனினும் அந்நிர்மாணமும் திட்டமிடப்பட்ட முழுமையான வடிவத்தை பெறவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே தாயகத்தில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி வெறுமையாக காணப்படினும், தாயகத்துக்கு வெளியே ஈழத்தமிழர் மீதான இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத கட்டமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் நினைவுத் தூபிகளாக பதிக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு தாய்த் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவாலயம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நவம்பர்-08, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

மேற்கு நாடுகளில்  இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும்.

இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது.

தற்போது கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நகர மேயரின் ஈடுபாட்டுடன் தமிழ் இனப்படுகொலைக்கான நினைவுத் தூபி மே-10, 2025 அன்று திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் ஆகஸ்ட் 14, 2024 அன்று நாட்டப்பட்டது. அன்றிலிருந்து இராஜதந்திர உறவின் அடிப்படையிலும், நீதித்துறையினூடாகவும் இத்தூபி நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எவையுமே சாத்தியப்படவில்லை.

canada1.jpg

இதற்கான உயர்ந்தபட்ச எதிர்வினையாக பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுத்தூபி திறப்பு விழாவில், “இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்களுக்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை. கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வான உற்சாகத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளங்களில் பிரம்டன் மேயரை நாயகனாய் கொண்டாடுகின்றார்கள்.

கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை அழைத்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான படங்களில் இலங்கையின் உடல்மொழி கடுமையானதாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமது போர் வெற்றி வாக்குகளை பேணும் வகையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது கனேடிய அரசாங்கத்தின் அரசியல் உந்துதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக பிரிவினையைத் தூண்டிவிட்டன.” என்றவாறு நாமல் ராஜக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எனினும் கனடா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது இலங்கை எதிர்க்கட்சிகளின் இனவாத பிரசாரங்களையோ பொருட்படுத்துவதாக அமையவில்லை. மாறாக தமது செயற்பாட்டின் நியாயப்பாட்டையும் இலங்கையின் இனவாத அரசியலின் முகத்தை தோலுரிப்பதாகவுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்சவின் பதிவை பகிர்ந்து, “தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கு ராஜபக்சவின் எதிர்ப்பானது, இந்தக் குடும்பத்தின் கையால் இழந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை உணர்ந்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்” என்றவாறு பதிலளித்துள்ளார்.

தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள்.

கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி நிறுவப்பட்டதும், அது சார்ந்து எழும் உரையாடல்களும் ஈழத்தமிழர்களிடையே எழுச்சிமிகு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை எதிர்கொண்டவர்களை உணர்ச்சிகள் வெகுவாக ஆட்கொண்டு விடுகின்றது. எனினும் இதனை வெறுமனவே உணர்ச்சிக்குட்பட்டதாக கடந்து விடமுடியாது. இது ஆழமான அரசியல் நடைமுறைக்கான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கம் 2024 இல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதனை நிறுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தற்போதும் தனது விசனத்தை கடுமையான உடல்மொழிகள் உள்ளடங்கலாக வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

முதலாவது, கனடா அரசியல் தரப்பினரது செயற்பாடுகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமான படிப்பினையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தாயக மக்களும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் வாக்குகள் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டதை இனப்படுகொலையாக குறிப்பிட முடியாதென்றவாறு கருத்துரைத்துள்ளனர். எனினும் கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  சுமந்திரனின் வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ச்சியாக  சுமந்திரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் கனவை விதைத்து வருகின்றார். இது மக்கள்  சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தமது வாக்கு பலத்தால் சரியான போதனையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதையே அடையாளப்படுத்துகின்றது.

இரண்டாவது, சர்வதேச தளத்தில் இலங்கை அரசாங்கங்களால் ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வதனை வெறுமனவே நிகழ்வாக கடந்திட முடியாது. நீண்டதொரு தந்திரோபாய நகர்வுக்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கனடா பூகோள அரசியலில் பிரதான சக்தியாக அமைகின்றது. கனடா இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை அங்கீகரித்துள்ளமையானது, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஓர் மைல்கல்லாகும். கனடாவின் உள்ளூர் அதிகார மட்டம் முதல் கனடா மத்திய அரசு வரை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளமையை உறுதி செய்துள்ளது.

இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே இன்றைய தேவையாகும். குறிப்பாக கனடாவில் மே 12 – 18, தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதனை வினைத்திறனாக கையாள்வதனூடாக வாக்குப்பலத்தினூடாக கிடைக்கப்பெற்ற அரசியல் தளத்துடன் ஏனைய மக்களின் ஒத்துழைப்புகளையும் பெறக்கூடியதாக அமையும்.

தமிழ்ச்  சமூகமும் இளைஞர்களும் ஏனைய மக்களோடு தமிழ் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் தலைமுறைகளுக்கு இடையேயான அதிர்ச்சியை ஏனைய சமூகங்களோடு பகிருவது அவசியமானதாகும். மேற்கு நாடுகளில்  இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும்.

மூன்றாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது 2009 களுக்கு பின்னர் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நீதியைக் கோருவதனை மையப்படுத்தியே காணப்படுகின்றது. அதுவே ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாய செயற்பாடாகும். எனினும் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள்.

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இனப்படுகொலை என்ற சொல்லாடலுடன் அரசொன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதலாவது நினைவுத் தூபி ஆகும். இதனை ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதற்கு சமாந்தரமாக ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இனவாதிகள் என கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இராஜதந்திர ரீதியான ஆட்சேபனைகளையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தனியன்களாக தமது சமூக வலைத்தளங்களில் பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுணை நாயகனாக கொண்டாடுகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். உயர்ந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளின் பிரசன்னம் அந்நிகழ்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையினூடாகவேனும் கனேடிய அரசாங்கத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு நன்றியினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை செய்ய தவறியுள்ளார்கள். மாறாக உள்ளூ ராட்சி சபை தேர்தல் முடிவுகளின் பின்னரான ஆசன இழுபறிக்குள் ஓய்வின்றி உள்ளார்கள்.

எனவே கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் கனடா அரசாங்கத்தின் ஆதரவும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை உந்திவிடும் ஓர் ஊக்கக்காரணியமாக அமைகின்றது. இதனைப் பற்றிக்கொண்டு சர்வதேச அளவில் ஏனைய சமூகங்களின் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை சர்வதேச போராட்டமாக மாற்றுவது ஈழத்தமிழர்களின் அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது.

புலம்பெயர் தளம் தமது வாக்குப்பலத்தினூடாக வெகுவாக அரசியல் மட்டத்தில் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஒருங்கு சேர்த்துள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபி மற்றும் சமகாலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் இம்முன்னேற்றம் அரசியல் மட்டத்தை கடந்து சமூக மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து கோரும் சூழலை உருவாக்க வேண்டும். இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டங்கள் உணர்வெழுச்சிகளுக்குள் சுருங்காது, தந்திரோபாயமாக நகர்த்தப்படுகையிலேயே நிலையான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.

https://thinakkural.lk/article/318257

முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன்

4 weeks 1 day ago

முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன்

May 26, 2025

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று நிறைவடைந்திருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டிருக் கின்றது. குறித்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது.

ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரச  அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றை யாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன் களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்கு முறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்பட வில்லை.

இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட, கனத்த காற்றுச் சுமந்து வரும் எம்மவர்களின் நினைவுகளின் மீதும், நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம் என்றுரைத்து ஐந்து முக்கிய விடயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

• சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் சிங்கள- பௌத்த மயமாக்கலைத் தடுக்கவும், தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ் வியலாக்கவும்

• ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி, அரச பொறுப்பையும், மேற்குலக நாடுக ளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி, குற்றவாளிகளை குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தவும்,

• தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒரு போதும் பாரதீனப் படுத்த சுயநிர்ணய அடிப் படையிலும், தமிழர்க ளின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்,

• கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும்,

• தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக் கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம் என்று அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

இரத்தினச்சுருக்கான தமிழின விடுதலையை வெளிப்படுத்தி நிற்கும் பிரகடனம். பொறுப்புக்கூறலும், அரசியலுரிமைகளும் வெவ் வேறாக கையாள முடியாதவை என்பதை அழுத்திக் கூறியிருக்கின்ற பிரகடனம். வரவேற்கத்தக்கது. ஆனால் பிரகடன இலக்குகளை அடைவதற்கு என்ன வழி என்பது கேள்விக்குரியது.

2009இல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 16வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது வரையில் ஒட்டுமொத்த சர்வதேசமும் மௌனம் சாதித்தே வருகின்றது. ஆனால் ஆட்சிப்பீடத்தில் மாறி மாறி இருக்கும் சிங்கள, பௌத்த மையவாத அரசுகள் தொடர்ச்சியாக ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில்’ ஈடுபட்டு வருகின்றன.

இனவழிப்பு, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகக் கொடூரமான மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை வரைமுறையற்ற வகையில் தமிழி னத்தின் மீது திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் பொறுப்புச் சொல்வதற்கும் தயாராக இல்லை.

பல்லினங்களைக் கொண்ட தீவை, சிங்கள, பௌத்த தீவாக மட்டும் பிரகடனப்படுத்தும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன் படுத்தி, வக்கிரமான வழிமுறைகளிலேயே கொடிய போரை அரச கட்டமைப்பு முன்னெடுத்தது என்பது பரகசியமான விடயம்.

தென்னிலங்கை தேசிய கட்சிகள் தான் அவ்வாறு நடந்து கொள்கின்றன என்றால் ஆட்சிப்பீடத்தில்; அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை மிகக்குறுகிய காலத்திலேயே வெளிப் படுத்திவிட்டது.

தாயக கோட்பாட்டை உடைப்பதற்கும், தமினத்தின் மீது உக்கிரமான போர் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் ராஜபக்ஷக்களுக்கு முட்டுக்கொடுத்த தரப்புத் தான் ஜே.வி.பி. அதன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்திருக்கும் அத்தரப்பு ‘முறைமை மாற்றத்தை’ மையப்படுத்தி ஆட்சிப் பீடம் ஏறியதால் முற்போக்காக செயற்படும், பாரபட்சமின்றி செயற்படும் போன்ற எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தது.

ஆனால் ஆட்சிப்பீடத்திலேறி ஆறுமாதங்களுக்குள் அனைத்தையும் அநுர அரசாங்கமே சிதைத்துக்கொண்டுள்ளது. தன்னுடைய உண்மையான முகத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி யிருக்கின்றது.

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ணீரால் தோய்ந்திருக்கையில் அதற்கு மறுநாள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள போர் வீரர்களுக்கான நினைவிடத்தில் ‘போர் வெற்றி விழாவும், நினைவேந்தல் நிகழ்வும்’ ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்விற்கான உத்தியோக பூர்வ மான அறிவிப்பைச் செய்தவர் பாதுகாப்புச் செயலாளர் ஏயர் வைஷ்மார்ஷல் சம்பந் தூயகொந்தா. அந்த அறிவிப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையிலேயே குறித்த நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

போர் நிறைவடைந்து கடந்த 16ஆண்டுக ளில் பதவியில் உள்ள ஜனாதிபதிகளே போர் வெற்றி விழாவுக்கு தலைமையேற்பது வழக்கம். ஆனால் அநுர ஆரம்பத்தில் அதற்கு தயாராக இருந்திருக்காதபோதும் பின்னர் சிங்கள பொளத்த மையவாத ஆட்சியின் தூண்களாக இருக்கும் பௌத்த தேரர்களும், பாதுகாப்புத்துறையும் ராஜபக்ஷக்களின் திட்டமிடலும் அநுரவை இறுகப் பிடித்து நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

ஈற்றில் ஜனாதிபதி அநுரதான் குறித்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். இராணுவத்தை பாதுகாத்து உரையாற்றினார். குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கான காணாமலாக்கப் பட்டவர்களின் அன்புக்குரிய உறவுகளுக்கு பதிலளிப்பைத் தவிர்த்து வடக்கு மக்களின் பிரச்சினையும், ஊழியத்துக்காக படைகளில் சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பங்கள் போரின் பின்னர் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளையும் சமநிலைப் படுத்த முயன்று தோற்றுப்போனார்.

எனினும் அநுரகுமாரவும் ‘சிங்கள,தேசிய பௌத்த மையத்துக்குள்’ ஊறித்திழைத்துப் போனார் என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இந்த நிலைமை தான் ராஜபகஷக்கள் மீண்டும் அரங்கிற்கு வருகை தருவதற்கு வித்திட்டிருக்கின்றது.

மஹிந்த,கோட்டா, நாமல் உள்ளிட்ட தரப்புக்கள் போர் வெற்றிவிழாவுக்கு மறுநாள் தேசிய வீரர்களுக்காக தமது அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம் என்ற பெயரில் செயற்பாட்டு அரசியல் தளத்துக்கு வந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு நிலைமைகள் இருக்கையில், தற்போது முள்ளிவாய்க்கால் மக்கள் பெரு வெள்ளத்துக்குள் பிரகடனம் செய்தாகிவிட்ட நிலையில் அடுத்தகட்டம் சம்பந்தமாக கடந்த காலங்கள் போலல்லாது முக்கிய சில தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை தமிழினத்துக்கே ஏற்பட்டுள்ளது.

அதில் முதலாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கு நிரந்தமான தூபியொன்றை அமைப்பதாகும். இது தமிழினத்தின் அடையாளமாக பிரகடனப் படுத்தப்படல் வேண்டும். இரண்டாவது, போரின் போதான அவலங் களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் தாங்கிய கலையகமொன்றை நினைவுத்தூபிக்கு அருகில் நிர்மாணித்தலாகும்.  இந்த இரு செயற்பாடுகளும் பரம்பரை ரீதியான பாய்ச்சலுக்கும், பாதிக்கப் பட்ட எதிர்கால சந்ததியின் மீட்சிக்கும் உதவுவதாக இருக்கும்.

மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்களை முன்னின்று முன்னெடுக் கும்  ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு(வடக்கு-கிழக்கு) செயற்பாட்டு ரீதி யான விரிவாக்கத்தையும் எதிர்கால பாதைவழி வரைபடத்தையும் தயாரிக்க வேண்டியுள்ளது.

வெறுமனே முல்லைத்தீவுக்குள் குறித்த கட்டமைப்பை முடங்குவதும், வரையறுத்துச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும். ஏனென்றால், தாயக தேசமெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே நினைவேந்தலின் பங்குதாரர்கள்.அதுமட்டுமன்றி குறித்த கட்டமைப்பு பிரகடனத்தினை தனியாக இறுதி செய்ய முடியாது. மாவட்ட அடிப்படையில் ஏகமனதான ஏற்றுக்கொள்ளலுடன் பிரகடனம் இறுதி செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு இறுதி செய்யப்படுவதன் ஊடாகவே செய்யப்படுகின்ற பிரகடனம் அடுத்த நினைவேந்தலுக்குள் எவ்வளவ தூரம் நடைமுறை ரீதியான அடைவு மட்டத்தினைக் கண்டிருக்கின்றது என்பதை அளவிட முடியும். அது இலக்கு நோக்கி மக்களை கூட்டாக அணிதிரட்டுவதற்கு வழிசமைப் பதாக இருக்கும்.

நான்காவதாக, தாயகத்தில் தெருவுக்குதெரு குழுக்களாகவும், அணிகளாவும் பிரிந்து நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளிலே முதலாம், இரண்டாம் போரில் மரணித்தவர்களுக்கான அஞ்சலிகள் ஓரிடத்தில் தான் நடைபெறுகின்றன. அவ்வளவு ஏன் போர் வெற்றியைக் கொண்டாடும் சிங்கள தேசத்துக்குள் ஆயிரம் முரண்பாடுகள் கொண்ட அரசியல், சிவில் அமைப்புக்கள் காணப்பட்டாலும் அவை மே 19இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலேயே கூடுகின்றார்கள். அஞ்சலித்து போர் வெற்றியை முன்னெடுக்கின்றார்கள்.

ஆகவே, பாதிக்கப்பட்ட உறவுகள் அரசியல், மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து நின்று நிகழ்வுகளை முன்னெடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டு அனைவரும் அணிதிரண்டவொரு பாரிய நிகழ்வாக மே-18முன்னெடுப்பதற்குரிய ஏகமனதான அங்கீகாரம் அவசியமாக உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த விடயத்தில் அரசியல், சிவில் தரப்புக்ககளின் கூட்டிணைவு தான் மக்களை ஓரிடத்தில் ஓரணியாக திரளச் செய்யும் என்ற ஆகக்குறைந்த புரிதல் அவசியமாகும். இதில் தீட்டுப்பார்த்துக்கொண்டிருப்பது வீணான செயலாகும்.

ஐந்தாவதாக, புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வீதிக்குவீதி, அமைப்புக்களின் பலத்தைக் காண் பிப்பதற்காக முன்னெடுக்க கூடாது. உண்மையான உணர்வெழுச்சியுடன் ஒரு நாட்டில் பிரதான இடமொன்றில் முன்னெடுக்கும் வகையில் அணிதிரள வேண்டும். அவ்வாறு அணி திரள்வதன் ஊடாகவே தாயகத்தில் காணப்படும் உள்ளக பிரிவுகளுக்கு முடிவு கட்ட முடியும்.

ஆறாவதாக, ஒட்டுமொத்த தரப்பினரும் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து பிரகடனத்துக்காக உரத்துக் குரலெழுப்பும் போது தான் அந்த ஒலியின் அதிர்வு சில செவிப்பறைகளை அடையயும் என்ற புரிதல் அவசியமானது. இதில் தனிப்பட்ட அடைவு மட்டங்களை தாண்டி, இனரீதியான அடைவே மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆகவே, சிறு முரண்பாடுகளை சில்ல றைக் கதைகளாக கூறுவதைத் தவிர்த்து முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் ஓரணியாக ஒருங்கி ணைந்து திரள்வதே தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் காத்திரமான செயற்பாடாக இருக்கும்.

அந்தத் திரட்சி பல செய்திகளை ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக் கும். அவ்விதமான செயற்பாடுகள் தான் பிரகடனங்களை நடைமுறையில் சாத்தியமாக்கும். இல்லாது விட்டால்முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆண்டுதோறும் ஏட்டுச்சுரக்காயாகவே இருக்கும்.மேற்கண்ட விடயங்களை அடைந்து தமிழினம் தனது அபிலாஷைகளை தொட்டுப்பார்ப்பதற்குரிய நகர்வுகளைச் செய்வதற்கான பொருத்தமான தருணம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த தருணத்தினை புரிந்தறிந்து நகர்வது இனவிடுதலைப் பயணித்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். அதுவே முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சியான திரட்சியின் அறுவடையாக இருக்கும்.

https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-பேரெ/

தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு

4 weeks 1 day ago

தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு

லக்ஸ்மன்

இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும்.  

தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. 

அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. விடுதலை அமைப்புக்களின் தோற்றமும் தமிழ் மக்களின் அபிலாசை என்ற  நோக்கத்தை அடைவதற்கான முயற்சியும் 80 வருடத்தை எட்டுகின்ற சுதந்திர இலங்கையில் கைகூடவில்லை.

தமிழ் மக்களின் சுயநிர்ணய விடயத்தினை அடைந்து கொள்வதற்காக 32க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றிருந்த, ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஏனைய இயக்கங்கள் அழித்து ஒழிக்கப்பட்டதும், அவை துரோகிகளாகக் காட்டிக்கொடுத்தவர்களாக, கொலைகாரர்களாக பட்டங்கொடுக்கப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து விரோதிகளாக விலக்கி வைக்கப்பட்டனர்.

ஏனைய ஆயுத அமைப்புகள் இணைக்கப்பட்ட ஏற்பாடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் தாங்கள் செய்தவைகள் அனைத்தும் தவறு என விடுதலைப் புலிகளால் வெளிப்படுத்தப்பட்டதான அறிவிப்பாகவே கொள்ளப்படலாம். அத்துடன் முடிந்து போனதாகவே அதற்கு அர்த்தமிருந்தாலும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பின் பின்னர் மீண்டும் அது கையிலெடுக்கப்பட்டது வேடிக்கையானது.

ஏகாதிபத்திய சிந்தனையுடன் ஏனைய ஆயுத அமைப்புகளை முடக்குவதற்குக் கையாளப்பட்ட அதிகார வேட்கைகளும், அதற்காக உபயோகிக்கப்பட்ட ‘துரோகி’ என்ற பதப்பிரயோகமும், தமிழர் அரசியலை ஆக்கிரமித்து வழிப்படுத்தியிருந்தது.

இதனால், அழிவுகளின் பாதையில் சொல்லொண்ணாத் துயரங்களின் மத்தியில் தமிழர்களைத் தள்ளியது. ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பின் பின்னரும் கூட தமிழர் அரசியலில் இருந்தும், தமிழ் மக்களிடமிருந்தும் ‘துரோகி’  என்ற பதப் பிரயோகம் நீக்கப்படவில்லை.

இன்று அப்பதப் பிரயோகம் தமிழர்களை, அவர்களின் அரசியல் இருப்பை நிர்க்கதியாக்கியுள்ளது என்ற கருத்துகள் உருவாகிவருவது இதற்கு எடுத்துக்காட்டு எனலாம்.

தங்கள் கருத்துக்கு முரணானவர்கள் அனைவரையும் ‘துரோகி’ என்னும் வரையறைக்குள் தள்ளி ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு அர்த்தம் புரியாத வகையில் இந்த பாசிசச் சிந்தனாவாத எழுச்சியின் வடிவமான ‘துரோகி’ என்ற பதப் பிரயோகம் இன்றும் தமிழ் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர்களுடைய நீண்ட விடுதலைப் பயணத்தில் அகிம்சாப் போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி அதன் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைக்கான ஜனநாயக அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திலும் சரி, ஜனநாயகத்திற்கு முரணான வகையில் கருத்தியல் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் துரோகிகள் பட்டங்களை வழங்கியிருக்கின்றது.

இது தனிநபர் துரோகச் சிந்தனைகள் மூலம் தங்கள் அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வெறும் வார்த்தை ஜால அரசியலால் நகர்த்தப்படுவது வேடிக்கையானது.

தமிழரின் பெயரால், தமிழ் இனத்தின் விடுதலையின் பெயரால், அரசியல் கசாப்புக் கடை நடத்தும் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் அனைவரையும் கருத்தியல் தெளிவும், கருத்தியல் சிந்தனையும், விமர்சன அரசியல் பற்றிய கோட்பாடுகளை ஆராயாமல் மறுதலிக்கும் போலித் தனமான நிலைப்பாடுடையவர்களாக வரலாற்றில் மாற்றிவருகிறது.

இதை நிரந்தரமானதாகப் பதித்துக் கொள்வதற்குத் தூண்டப்படுகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், விடுதலை இருப்பு, உரிமைகள் என ஒவ்வொன்றையும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வெறுமனே கதிரை அரசியல் அதிகார வர்க்கச் சிந்தனையின் பால் தமிழ் மக்களை மூழ்கடித்துள்ளது.

‘துரோகி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமல், எத்தகைய கருத்தியல் யதார்த்தங்களையும் ஆராயாமல், தமக்குத் தாம் முடியாதவற்றை ‘துரோகம்’ என்றும், எதிர்வாதம் புரிபவர்கள் மீது நடைமுறை யதார்த்தங்களுக்குப் புறம்பான வகையில் கருத்தியல்களை முன்வைத்து பொது வெளிகளில் தனிநபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில், தேர்தல் காலங்களில் ‘துரோக’ அரசியல் மூலம் மிக மோசமான முறையில், ஒட்டுக் குழுக்கள், மண்டையன் குழு, அடிவருடிகள் பாசிசவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், கடத்தல் காரர்கள், உரிமைகளை நிராகரிப்பவர்கள், சோரம் போனவர்கள் என்ற மாயாஜால வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு மக்களைக் குழப்பி, தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றி, கடுக்கன் பூட்டி தமிழ் விடுதலை அரசியல் அலங்கோலப்படுத்தப்படுகின்றது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த மௌனிப்புக்குப் பின்பு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டது, அது சிதையச் சிதைய கை காட்டுவதற்கு யாருமற்றவர்களாகத் தமிழர்கள் அரசியல் பொது வெளியில் அரசியல் அனாதைகளாக விடப்பட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னமும் கூட்டமைப்பு இருப்பதாகவும் அதற்கான சின்னம் வீடு என்றுமே பெரும்பாலான தமிழ் மக்கள் நம்புவதுதான். யுத்த மௌனிப்பின் பின் உருவான அரசியல் பொது வெளியை தம்வசப்படுத்திக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை (துரோகி) கொண்டு மேற்கொண்ட வேலையைச் செய்யத் தொடங்கி தமிழர் அரசியல் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றனர்.

போர் முடிந்து 16 ஆண்டுகளின் பின்னரும், நாம் எதையும் சாதிக்கவில்லை. அரசியல் அபிலாஷையை அடைவதில் ஒரு இம்மியும் நகரவில்லை என்பது புரிந்திருந்தாலும், சர்வதேசத்திடம் முறையிடுவோம், இந்தியாவிடம் முறையிடுவோம், மூன்றாம் தரப்பிடம் பேசுவோம், மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், மேற்குலகமே அங்கீகரி எனப் பல்வேறு கோசங்களைத் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்குக் கூறிக்கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் உரிமையின் பெயரால் ஒருவரை ஒருவர் தேர்தல் காலங்களில் தாக்கி எழுதும், பேசுவதும், துண்டுப்பிரசுர விநியோகமும் நடைபெறுகிறது. துரோகிகளுடன் கூட்டே இல்லையெனச் சபித்து மக்களை அணி திரட்டுகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஓரணியில் செல்வோம் என்ற கருத்துகள் வெளிப்படுகின்றன.

அதிகாரத்தைத் தக்கவைக்க எந்தப் பிசாசுகளுடனும் கூட்டுச் சேர்வதற்குத் தயார் என்கின்ற இந்தக் கருத்தியல் முரண் எதற்கு என்பதே இந்த இடத்தில் கேள்வியாகும்.

இத்தகைய போலித்தனமான அரசியல் மூலம், தமிழ் மக்களின் விடுதலையை இத் தலைமைகளால் வென்று கொடுக்க முடியுமா. இது எத்தனை காலத்திற்குத் தமிழர்களுடைய விடுதலைக்கான அரசியலாக இருக்கும் என்பதும் புரியாத புதிராக மாறுகிறது.

இவ்வாறு தமிழர்களுக்கான விடுதலைப் போராட்ட அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் தொடர்ச்சியாக இழுத்தடித்து வருவதிலேயே ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் காலப்போக்கில் காணாமலாக்கப்படுவதே நடைபெற்றாக வேண்டும்.

எனவே, எவ்வித ஆவணமுமற்ற, திட்டமில்லாத, வாய்ச்சவாடல் விடும் 
இந்தத் தலைமைகள் தங்கள் அதிகாரங்களைத் தக்கவைப்பதில் சிந்திப்பார்களாக இருந்தால் தமிழர்கள் பலிக்கடாவாகி தீர்வின்றி, அடுத்த தலைமுறைக்கும் ஆறாத வடுவாக உரிமைப் போராட்டத்தை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வடிவமாகக் கொண்டு நகர்த்தி விடுவர்.

எனவே இந்த நிலைமை மாற்றமடைய வேண்டுமாயின், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான தீர்மானத்தின் அடிப்படையில், தமிழர்களுக்கான வேலைத் திட்டத்தை ஒரு பொது வரைபின் மூலம் முன் நகர்த்திச்
 செல்ல வேண்டும்.

அதற்கு எவரும் தயாரில்லாத நிலை தொடர்ந்தால், சிங்களத் தேசியம் தமிழ் மக்கள் மட்டில் எவ்வித கவலையும் கொள்ளாது என்பதுடன்,  தமிழர்கள் வெறுமனே குரைப்பவர்களே. அவர்கள் கடிப்பவர்கள் அல்ல என்ற முடிவையும் நிரந்தரமாக்கிக் கொள்ளும்.

உள்ளொன்றும் புறம் ஒன்றும்  வைத்து தமக்குள்ளே குத்து வெட்டுக்கள் செய்வதும் கூட்டுக்குள்ளேயே கூட்டுச் சதி செய்து கூட்டுக்களை ஏமாற்றுவதும். “ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்தால் நீ யாரோ நான் யாரோ” என்று தங்கள் தங்கள் இருப்புக்களைப் பாதுகாப்பது தமிழர் நாம் கண்ட வரலாறு. இருந்தாலும், வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அனுபவங்களாகக் கொள்ளாத சமூகம் அழிந்து போகவேண்டியதும் வரலாற்றின் கட்டாயம்.

இதில் தமிழர்கள் விதிவிலக்கானவர்களா?  இனிவரும் காலங்களிலேனும் விட்டுக் கொடுப்பும், விண் பிடிவாதமின்மையும், வெளிப்படைத்தன்மையும், தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசை ஒன்றே இலக்கென்றும் நகரும் தமிழ்த் தேசிய அரசியலைக் காண்போம்.

ஏமாற்றுகளிலிருந்து வெளியேறி, இருப்பதில் ஒன்று என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு,அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலேனும் மக்கள் தெளிவுடன் முடிவுக்கு வருதல் நடைபெறட்டும். அரசியல் கட்சியை, அரசியல்வாதிகளை வழிப்படுத்துவதும் மக்களின் வேலை என்றவகையில் தமிழ்த் தேசிய அரசியல் வழிக்கு வரட்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-விடுதலைக்கான-துரோகக்-கோட்பாட்டின்-முடிவு/91-358040

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன்

4 weeks 1 day ago

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன்

facebook_1747659424569_73302149151089515கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்.

பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள்.

அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தளபதிகளோடு போய் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தைத்த தரிசித்தார்.

நாட்டின் ஒரு பக்கத்தில் தமிழ் மக்கள் துக்கத்தை அனுஷ்டித்த அடுத்த நாள் நாட்டின் தலைநகரில் சிங்கள மக்களும் அவர்களுடைய பிரதானிகளும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் எழுதியது போல “மே பதினெட்டு  கொல்லப்பட்டவர்களின் தினம்; மே பத்தொன்பது கொன்றவர்களின் தினம் “.

பதினெட்டாம் திகதி பெரும்பாலான தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் கூடியிருந்தார்கள்.19ஆம் திகதி பெரும்பாலான சிங்களத் தலைவர்கள் தமது வெற்றி நாயகர்களைப் போற்றி அறிக்கை விட்டார்கள்.

facebook_1747638109445_73301255129990216

பதினெட்டாம் தேதி தமிழ் மக்கள், உணவு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தின் நினைவாக கஞ்சியைப் பகிர்ந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் முன் பூக்களை வைத்து அஞ்சலித்தார்கள். அதே நாளில் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் முன் “பிவிதுறு ஹெல  உரிமை”யின் செயற்பாட்டாளரான பெண் ஒருவர் சிறப்பு அதிரடிப்படை வீரருக்கு ஒரு ரோஜாப் பூவை பரிசளித்தார்.

பதினெட்டாம் தேதி முள்ளிவாய்க்காலில் கூட்டுத் துக்கமும் கூட்டுக் காயங்களும் கூட்டு இழப்பும் கூட்டு அவமானமும் கண்ணீராய் பெருகி ஓடின. 19ஆம் திகதி கொழும்பிலும் ஏனைய தென்னிலங்கை தலைநகரங்களிலும் கூட்டு வெற்றி கொண்டாடப்பட்டது.

18 ஆம் தேதி தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களின் கூட்டுத் துக்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அதே நாளிலும் அடுத்த நாளும் சிங்கள அரசியல்வாதிகள் யுத்த வெற்றியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்… “சண்டை பிடிப்பது நமக்கு புறத்தியானது அல்ல. நாங்கள் சமர்க் களத்தில் சுய கட்டுப்பாடு உடையவர்கள். எங்களுக்கு நன்றாகத் தெரியும் சண்டை என்றால் என்ன? யாருடன் என்று? மகத்தான மன்னர்களான துட்டு கெமுனு, வளகம்பா,தாது சேனன்,விஜயபாகு ஆகிய மகத்தான மன்னர்கள் அந்நிய படையெடுப்பாளர்களை தோற்கடித்து வெற்றியை உறுதிப்படுத்திய நிலம் இது. பிரிட்டிஷ்காரர் டச்சுக்காரர் போர்த்துக்கீசர் போன்ற கொலனித்துவ சக்திகளுக்கு எதிராக தேசபக்தர்கள் சமர் புரிந்த நிலம் இது. வீரபுரான் அப்பு கெப்பிட்டிபொல போன்ற நாயகர்களும் பௌத்த துறவிகளும் மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்த நிலம் இது.நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கான வீரம் மிகுந்த யுத்த நாயகர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாடு இது.” அதாவது அவர் சுட்டிக் காட்டும் உதாரணங்கள் அந்நியப் படைகளுக்கு எதிரானவை. அதாவது தமிழர்களையும் அவர் அந்நியராகத்தான் பார்க்கிறார்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என்று தனது செய்தியில் கூறியுள்ளார்.

499252369_1091146629707751_7837245579222

499554400_10236104096959363_845879617227

தாயகத்தின் நீட்சியும் அகட்சியுமாகக் காணப்படும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கனடாவில் அண்மையில் ஒரு இன அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே அதிக தொகை தமிழர்கள் வாழும் இடம் கனடா.அங்கே அந்த நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை நிகழ்த்திய பிரம்டன் நகர மேயர் பின்வருமாறு சொன்னார் “இன அழிப்பு நடந்தது என்பதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொழும்புக்கு திரும்பி போய் விடுங்கள்” என்று. ஆனால் கொழும்பிலிருந்து கொண்டு நாமல் ராஜபக்ச அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.முன்னாள் வெளியுறவு அமைச்சரும் இந்நாள் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் கூறுகிறார்கள், நாட்டில் இன அழிப்பு நடக்கவில்லை என்று.

முள்ளிவாய்க்காலில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூறுகிறார்கள் நடந்தது இன அழிப்பு என்று. கனடாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கூறுகிறார்கள் அது இன அழிப்பு என்று. “பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது” என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்ணி தனது செய்தியில் கூறியுள்ளார். அவருடைய செய்தியில் இனஅழிப்பு என்ற வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறார்.கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர், “இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

அதாவது தமிழ் மக்களும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள், நடந்தது இன அழிப்பு என்று. அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள் அது இன அழிப்பு இல்லை என்று.இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்…இன அழிப்பு  என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று.

499531485_23927718970157122_494022494346

494463343_23929968383265514_758766060277

IMG-20250523-WA0015-642x1024.jpg

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? இச்சிறிய தீவில் இரண்டு வகை நினைவுச்  சின்னங்கள் உண்டு. இரண்டு மக்கள் கூட்டங்கள் உண்டு. இரண்டு வேறு அரசியல் அபிப்பிராயங்கள் உண்டு. இரண்டு வேறு தேசங்கள் உண்டு. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரான அபிலாசைகளோடும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகளோடும் காணப்படுகின்றன.

ஆனால் அரசுத் தலைவர் அனுர வெற்றி வீரர்களின் சின்னத்தை முன்னிறுத்தி பின்வருமாறு கூறியுள்ளார் “இந்த நினைவிடத்தின் முன் நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல்,வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக, சகோதரத்துவம் அன்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்று உறுதி மொழியை எடுப்பதற்காககும்” என்று.

அந்த நினைவுச் சின்னமே நல்லிணக்கத்திற்கு எதிரானது. ஒரு இனத்தின் வெற்றியைக் கொண்டாடுவது.நாடு இப்பொழுதும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகதான் நிற்கிறது. நாட்டின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் மற்றோர்  நினைவுச் சின்னம் உண்டு.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஒருவர்கூட அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை. அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை எந்த சஜித்துக்கு சுமந்திரன் சாய்த்துக் கொடுத்தாரோ அந்த சஜித்தோ அவருடைய கட்சிப் பிரமுகர்களோ அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை.அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை. ஆனால் சுமந்திரன் கொழும்பில் மே 18ஐ நினைவு கூர்ந்த பொழுது, சஜித் யுத்த வெற்றியைப் போற்றி அறிக்கை விட்டிருந்தார். சிங்களத் தலைவர்கள் எப்பொழுதும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படியிருக்கிறார்கள்?

facebook_1747659220385_73302140586984050

497928588_1280053547456830_3940048776674

நாடாளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற அனுர 19 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்…”நாம் முழுமையான வெற்றியாளர்கள் அல்ல. நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும்.எனவே அச்சமின்றி சமாதானத்துக்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்க நாம் தயாராக இருக்கிறோம்…. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன்மூலம் தாய்நாட்டின் முழுமையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை..”

கடந்த 16 ஆண்டுகளில் ஒரு பேருண்மையை ஒப்புக்கொண்ட முதலாவது அரசுத் தலைவர் அவர். 2009 மே மாதம் தாங்கள் பெற்ற வெற்றி முழுமையானது அல்ல என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். போரில் வெற்றி பெற்ற பின்னரும் நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை என்பதனை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதுதான் உண்மை. தமிழ் மக்களுக்குச் சமாதானம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் சமாதானம் இல்லை.இந்தப் பிராந்தியத்துக்கும் சமாதானம் இல்லை.16 ஆண்டுகளின் பின்னரும்  வென்றவர்களுக்கும்  தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கும் இலங்கைத் தீவு.

https://www.nillanthan.com/7420/

1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்

4 weeks 1 day ago

Published By: RAJEEBAN

23 MAY, 2025 | 02:39 PM

image

tamilguardian

67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து.

தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன.

1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன.

முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன..

அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர்.

அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன்.

"எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்."

"சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது.

அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம்.

இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது.

1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா?

https://www.virakesari.lk/article/215500

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

4 weeks 1 day ago

Kani-nilam.jpg?resize=520%2C300&ssl=1

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறையாதவை அடர் காடுகள், திறந்த வெளிச் சதுப்பு நிலங்கள், குளங்கள், ஆறுகள்,நீர்த் துளைகள்,வண்டில் பாதைகள்…என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆறுகள், குளங்கள், அடர் காடுகள்,சிறுகாடுகள் சதுப்பு நிலங்கள், வண்டில்பாதைகள் போன்றவற்றுக்கு யார் யார் உரிமை கோருவார்கள்?

மூன்று தசாப்தங்களுக்கு மேலான யுத்தம் ஈழத் தமிழர்களை ஆவணம் காவிகளாக மாற்றியது.ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும்,ஏன் புலப்பெயர்ச்சியின் போதும் கூட, ஈழத் தமிழர்கள் ஆவணங்களைக் காவுகின்றார்கள்.இறுதிக் கட்டப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்தவர்களுக்கு ஐநா முதலில் வழங்கிய பொருட்களில் ஒன்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பிளாஸ்டிக் ஃபைல் பைகள் ஆகும். எனினும் இடப்பெயர்வின் அகோரம் காரணமாக ஈழத் தமிழர்கள் எல்லா ஆவணங்களையும் காவ முடிந்ததில்லை. இறுதிக் கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தவர்கள் பலரிடம் அவர்களுடைய வீட்டில் நடந்த நல்லவைகள் கெட்டவைகள் தொடர்பான ஒளிப்பட ஆல்பங்கள் அனேகமாக இல்லை.

ஒரு பகுதியினரிடம் தமது தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இல்லை. தொடர்ச்சியான இடப்பெயர்களின் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதா அல்லது ஆவணப் பையைக் காவுதா என்று கேள்வி வரும் பொழுது, ஆவணங்கள் கைவிடப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆவணங்களில் காணி உறுதிகளும் உட்பட காணி தொடர்பான ஆவணங்கள் பல அடங்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெயர்வுக்கு உள்ளான ஒரு மக்களிடம் காணி தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமது உரித்தை நிரூபிக்குமாறு மேற்சொன்ன வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டது போல கோவகணத்தோடு வந்த மக்களிடம் காணி உறுதி உண்டா என்று கேட்கும் வர்த்தமானி அது.

ஒருபுறம் இடப்பெயர்ச்சி, புலப்பெயர்ச்சி காரணமாக தமிழ்க் கிராமங்களும் வாழிடங்களும் இடம் மாறியுள்ளன. ஒரு பகுதி தமிழர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வரும். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் பலருடைய காணிகளை அவர்கள் பராமரிப்பது இல்லை. நாட்டில் உள்ள உறவினர்கள் சிலர் பராமரிக்கிறார்கள். ஆனால் அதுவும் இப்பொழுது பல இடங்களில் சிக்கலாகி நீதிமன்றம் வரை வந்துவிட்டது. காணிகளைப் பராமரிக்கும் இரத்த உரித்துச் சொந்தங்களே அந்த காணிகளை அபகரிக்க முற்பட்டு அதனால் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தச் சகோதரர்களின் காணிகளை அபகரிக்க முற்படும் வழக்குகளும் இதில் அடங்கும்.

புலம்பெயர்ந்த நாட்டில் செற்றில் ஆகிவிட்ட தமது உறவினர்கள் திரும்ப வரப்போவதில்லை, திரும்பி வந்து காணிகளையும் வீடுகளையும் ஆண்டு அனுபவிக்கப் போவதில்லை என்பதனால் அவற்றை நாங்கள் திருடினால் என்ன அபகரித்தால் என்ன என்று இங்குள்ள ஒரு பகுதி சொந்தங்கள் சிந்திக்கின்றன. இது தமிழ்ச் சமூகத்தின் சீரழிந்த பகுதிகளில் ஒன்று. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மேற்சொன்ன அரச வர்த்தமானியானது 5940 காணிகளை மூன்று மாத கால அவகாசத்துக்குள் உரிய ஆவணங்களோடு வந்து உரிமை கோருமாறு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் ஒரு காணி விடுவிப்பு நிகழ்வின் போது ஒரு படைத்தளபதி பேசிய விடயத்தை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்தத் தளபதி கூறினாராம், தமிழர்கள் காணிகளை விடுவிக்குமாறு போராடுகிறார்கள். ஆனால் விடுவித்த காணிகளில் வந்து குடியமர்வது குறைவு என்று.

ஆனால் பலாலி என்ற கிராமமே இப்பொழுது வரைபடத்தில் மட்டும் தான் உண்டு,அது நடைமுறையில் இல்லை என்று பலாலியில் பிறந்தவர்களும் பலாலியில் வாழ்ந்தவர்களும் கூறுகிறார்கள். ஏனென்றால் அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு படைத்தளத்தின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. வடக்கு கிழக்கில் உள்ள கணிசமான படைத்தளங்கள் தனியார் காணிகளையும் சுவீகரித்துக் கட்டி எழுப்பப்பட்டவைதான்.

ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் முக்கிய ஐந்து அம்சங்களில் ஒன்று தாயகம்.பாரம்பரிய தாயகம். அதாவது நிலம். அந்த நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் ஒரு மக்கள் கூட்டம் தேசமாகவே இருக்க முடியாது.நிலம் இல்லையென்றால் கடல் இல்லை. நிலமும் கடலும் இல்லையென்றால் சனமும் இல்லை. எனவே நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவது;பேணுவது என்பது அரசியல் அதிகாரத்தின் பிரதான பகுதி.

இலங்கை அரசாங்கம் காணிகளை, அளந்தாலோ அல்லது காணிகள் தொடர்பான விவரங்களை ஒரு மையத்தில் சேகரிக்க முற்பட்டாலோ தமிழ் மக்கள் அதைக் கண்டு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் உரித்தாளர் இல்லாத காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கலாம் என்ற பயம். தமது மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி புலம்பெயர்ந்திருக்கும் ஒரு பின்னணியில்,ஈழத் தமிழர்களிடம் அப்படிப்பட்ட அச்சம் எழுவது இயல்பானதே. ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் மாகாணங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட காணி அதிகாரத்தின் கீழ்,நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் நியாயமான பயம் அது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக அமெரிக்காவின் மில்லீனியம் உதவித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த உதவி திட்டத்தின்படி பெருமளவு நிதியை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கப் தயாராக இருந்தது. அது கடன் அல்ல, தானம். ஆனால் அதற்காக அமெரிக்கா நாட்டின் கேந்திரமான பகுதிகள் சிலவற்றின் நிலம் தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தருமாறு கேட்டது. அவ்வாறு ஒர் உதவித் திட்டத்துக்காக உதவியைப் பெறும் நாட்டின் நிலம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களைக் கேட்பது சரியா? என்று ஒர் ஊடகவியலாளர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரைக் கேட்டபொழுது, அவர் சொன்னாராம், ஏன், அதில் என்ன தவறு? என்று. பின்னர் அந்தத் திட்டத்தை கோத்தாபய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணம் என்று ரணிலின் ஆதரவாளர்கள் முன்பு கூறி வந்தார்கள்.

அதாவது ஓர் உலகப் பேரரசு, சிறிய நாடு ஒன்றுக்கு உதவி செய்யும் பொழுது அந்த நாட்டின் நிலம் தொடர்பான ஆவணங்களை தன் கையில் வைத்திருக்க விரும்புகிறது என்றால், அந்த உதவிக்கு பதிலாக நிலத்தை தன் கண்காணிப்புக்குள் வைத்திருக்க விரும்புகிறது என்று பொருள்.

1998 இல் அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ‘பிம்சவிய’ என்ற பெயரில் காணி உரித்து பதிவுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. நாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணி உரித்துக்களை உறுதிப்படுத்தி புதிய, ஒரே ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும் என்று பிம்சவிய திட்டம் அறிவுறுத்தியது.

இப்படிப்பட்டதோர் உலகளாவிய மட்டும் உள்ளூர் அரசியல் பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு தேவையான ஆகப் பிந்திய பிடியைக் கொடுத்திருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மாதக் கடைசியிலும் மே மாதத்தின் தொடக்கத்திலும் இந்த விடயம் சூடான பேசுபொருளாக மாறியது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி மார்ச் 28. ஆனால் அது தமிழ் அரசியலில் சூடான பேசு பொருளாக மாறியது ஏப்ரல் கடைசியில். அதை தலைப்புச் செய்தியாக மாற்றியவர் சர்ச்சைக்குரிய விடையங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஊடகவியலாளர்களில் ஒருவர்.முன்பு யாழ் மாநகர சபையின் உறுப்பினராக இருந்தவர்.கெட்டிக்காரர்.அவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்று ஒர் அபிப்பிராயம் பரவலாக உண்டு.

அது உண்மையோ பொய்யோ, அந்த வர்த்தமானியை வைத்து சுமந்திரன் தன்னை தமிழ் அரசியலிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலப்படுத்தி வருகிறார். அந்த வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையிலும் அவர் கால அவகாசம் வழங்கியுள்ளார். இந்த விடயத்தை அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.இந்த விடயத்தில், நிலப் பறிப்பு தொடர்பில் சுமந்திரனின் நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துபவை.

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை மேற் சொன்ன வர்த்தமானி ஒன்றாக்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றினார்கள்.அதன் விளைவாக அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் இருந்து ஓரளவுக்குக் கீழிறங்கி வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி இது சம்பந்தமாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார். சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய காணிகளை சுவிகரிக்கும் உள்நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.எனினும் குறிப்பிட்ட வர்த்தமானி இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் மீளப் பெறப்படவில்லை. அடுத்த அமைச்சரவைக்கு கூட்டத்தில் அது தொடர்பில் பேசி முடிவெடுக்கப் போவதாக ஹரிணி கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1433124

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் — வீரகத்தி தனபாலசிங்கம் —

4 weeks 2 days ago

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

May 25, 2025

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள்  தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக  நடத்தப்படாமல் இருக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது  என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எதிர்க்கட்சிகளும் கூட மாகாணசபை தேர்தல்களை விரைவில் சந்திப்பதற்கு விரும்பப் போவதில்லை. அதனால், அந்தத் தேர்தல்களை  நடத்துமாறு தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு நெருக்குதல் வரப்போவதில்லை. 

அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தி மாகாணங்களின் நிருவாகத்தை  மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இந்திய தலைவர்கள் கொழும்பு வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுடனான சந்திப்புகளில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு  நெருக்குதலை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதை வழக்கமாகக்  கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  அரசாங்கத்துடன் நேரடியாக அதைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வருட இறுதியில் புதுடில்லிக்கு  மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன்  மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அதே வேண்டுகோளை கடந்த ஏப்ரலில் கொழும்புக்கு விஜயம் செய்த வேளையிலும்  முன்வைத்தார். அவருக்கு  எந்த பதிலையும் வெளிப்படையாக கூறாத ஜனாதிபதி திசாநாயக்க மாகாணசபை தேர்தல்கள் குறித்து தற்போது எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இப்போது பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள்  தொடர்பில் தனது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை தங்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடக் கூடாது என்பதில் மாத்திரமே அவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது. 

இத்தகைய ஒரு பின்புலத்தில், தென்னிலங்கையை சேர்ந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு  முன்னாள் இராஜதந்திரியும் மாகாணசபைகள் குறித்து அண்மையில் வெளியிட்ட  கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. 

மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று இடையறாது வலியுறுத்திவரும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா மக்களினால் தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளை வலுப்படுத்துவதன் மூலமாக அதிகாரப் பகிர்வுக்கு புத்துயிரளிக்க வேண்டும் என்றும் மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றும்  எழுதியிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதை போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான இன்னொரு குழுவை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்க வேண்டும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. உண்மையில் இந்தக் கோரிக்கை தமிழ்க் கட்சிகளிடம் இருந்தே வந்திருக்க வேண்டியதாகும். 

தற்போது இந்திய வெளியுறவுச் செயலாளராக இருக்கும் விக்ரம் மிஸ்றி பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த நாட்களில் அவருடனான சந்திப்பு ஒன்றின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் ஆளுநர்களுக்கு இருக்கும் அளவுகடந்த  அதிகாரங்கள் காரணமாக மாகாண முதலமைச்சர்களினால் பயனுறுதியுடைய முறையில் செயற்பட முடியவில்லை என்றும் மாகாணசபைள் மூலமாக  தமிழ் மக்களால்  எந்த பயனையும் அடைய முடியாமல் இருக்கிறது என்றும் கூறினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ஆளுநர்களின் அதிகாரங்களில் கணிசமானவற்றை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல்வாதிகள்  முன்வைத்து அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனறும் அவர் கேட்டார். 

ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டியதன் அவசியத்தை கலாநிதி ஜெகான் பெரேரா வலியுறுத்தியிருக்கும் நிலையில், விக்ரம் மிஸ்றி கொழும்பில்  அன்று தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது.

 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டு விட்ட தமிழ்க் கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை பாராளுமன்றத்தின் மூலமாக அகற்றி விரைவாக அந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கோருவதே தற்போதைய தருணத்தில் விவேகமான செயலாக இருக்கும் என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கூறியிருக்கிறார். 

அந்த கோரிக்கைக்கு தென்னிலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் புதிதாக தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளுக்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்துக்கும்  இடையிலானதாகவே இருக்க முடியும் என்றும் அவர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை சர்வகட்சி வட்டமேசை மகாநாடு ஒன்றில் சமர்ப்பித்து நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது தயானின் கருத்தாக இருக்கிறது. 

அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு தொடர்பாக முடிவற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது சிங்கள அரசியல் அதிகார வர்க்கம் கவனத்தை திசைதிருப்புவதற்கு காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் தயான் அத்தகைய ஒரு பொறியில் தமிழ்க் கட்சிகள் விழப்போகின்றனவா என்று  கேள்வியெழுப்புகிறார். 

தேசிய இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வைக் கண்டு அதில் இருந்து நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்பது குறித்து பேசிவரும் தமிழ்க்கட்சிகள் அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் குறித்து சிந்திப்பதில்லை.  சாத்தியமாகக்கூடியதும் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் ஆதரவைப் பெறக்கூடியதுமான  இடைக்கால ஏற்பாடுகள் குறித்து தமிழ்க்கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்களின் கருத்துக்கள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட  பிறகு நிறைவடையாமல் இருக்கும் எல்லை நிர்ணயச் செயன்முறைகள் மாகாணசபை தேர்தல்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவுசெய்யப்பட்டால் அல்லது முழுமையாக விகிதார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தை திருத்தினால் மாத்திரமே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். 

அதை ஆட்சேபித்து  அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேரா தற்போதைய சட்டக்கட்டமைப்பை ஆணைக்குழுவின் தலைவர் தவறாக வியாக்கியானம் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவு செய்யப்படாவிட்டாலும் கூட மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் கிடையாது என்று பெரேரா வாதாடுகிறார். 

சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது எல்லை நிர்ணயச் செயன்முறையை நிறைவுசெய்வதற்கு பாராளுமன்றம் தவறுவதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் செல்லுபடியற்றதாகப் போய்விடுவதில்லை என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் பெரேரா, புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் கைச்சாத்திடும் வரை, நடைமுறையில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகக் கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் ஆணைக்குழு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசின் எந்த நிறுவனத்திடமிருந்தும் அனுமதியைப் பெறவேண்டிய தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது   இத்தகைய கோரிக்கைகளும் கருத்துக்களும்  வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும். 

மாகாணசபைகளின் மூலமாகவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவோ தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் என்று இந்த கட்டுரையாளர் நம்புவதாக எவரும் கருதவேண்டியதில்லை. ஆனால், போரின் முடிவுக்கு பிறகு 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்கள் பெருமளவக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருப்பதால் அவர்களின் பிரச்சினைகளை கையாளுவதற்கான அணுகுமுறையை எங்கிருந்து தொடங்குவது என்ற தெளிவு தமிழ் அரசியல் சமுதாயத்திடம் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. 

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க்கட்சிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவிட்டதால் நிலைவரத்தில் எந்த மாற்றமும்  வந்துவிடவில்லை. தங்களுக்கு கிடைத்த வாக்குகள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியத்தை கைவிடவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாக தமிழ் அரசியல்வாதிகள் திருப்தியடைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அவர்களால் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னமும் வரமுடியவில்லை. தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மாத்திரம்தான் அவர்களால் ஒன்றுபட்டு நிற்கமுடிந்தது.

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபை தேர்தலில் தனது கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அது தொடர்பாக ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் செய்தியார்கள் கேட்டபோது மாகாணசபை தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாமல் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது அவசியமற்றது என்று அவர் பதிலளித்தார். மாகாணசபை தேர்தலைப் பற்றிக்கூட பேச வேண்டாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொணடார். 

யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த வாரம் நேர்காணல் ஒன்றை வழங்கிய சிறீதரனிடமும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து  சுமந்திரன் வெளியிட்ட விருப்பம் தொடர்பாக  கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்  சுமந்திரன் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்ததுடன் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். எல்லை நிர்ணயம் தொடர்பிலான  சட்ட இழுபறியை அதற்கு சிறீதரன் ஒரு காரணமாகவும் சொன்னார்.

முதலமைச்சராக யார் போட்டியிடுவது என்பது தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். ஒரு அரசியல்வாதி என்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சுமந்திரன் விரும்புவதிலும் தவறில்லை. தமிழரசு கட்சி தற்போது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவருக்கு எதிராக அனேகமாக சகல தமிழ்க்கட்சிகளும் செய்த படுமோசமான  பிரசாரங்களுக்கு மத்தியிலும்  வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் மக்கள் தமிழரசு கட்சிக்கே கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால், அவர் மீதான வெறுப்புப் பிரசாரங்களை தமிழ் மக்கள் தற்போது எவ்வாறு நோக்குகிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற நம்பிக்கையை சுமந்திரனுக்கு கொடுத்திருக்கலாம். அது வேறு விடயம்.

ஆனால், சிவஞானமும் சிறீதரனும் செய்தியாளர்கள்  சுமந்திரன் தொடர்பாக  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறுவதை விடுத்து முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினைக்கு அப்பால் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்போம் என்றுதான் கூறியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் பக்குவத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட ஆளுமை மோதல்களுக்கு அப்பால் மக்களின் நலன்களில் அக்கறை காட்டும் மனோபாவம் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது. 

தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்கள் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள்  இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தல்களே வேண்டாம் என்றுகூட  எமது அரசியல்வாதிகள் கூறிவிடுவார்கள் என்று அல்லவா எண்ண வேண்டியிருக்கிறது.

https://arangamnews.com/?p=12044

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —

4 weeks 2 days ago

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

May 24, 2025

NPP யின் தடுமாற்றங்கள்:  குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

— கருணாகரன் —

மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP,  தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? 

இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார்  அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? 

NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP  இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? 

ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP  இயங்குவதாக இருந்தால், அந்த அடையாளம் என்ன? 

இவ்வாறான கேள்விகள் NPP அரசாங்கத்தைக் குறித்தும் அநுரகுமார திசநாயக்கவைக் குறித்தும் எழுகின்றன. இவ்வாறான கேள்விகள் எழும் என்பதை NPP யும் புரிந்து கொள்ள வேண்டும். அநுரகுமார திசநாயக்கவும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

00

இலங்கையின் சீரழிந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவே -மாற்றுச் சக்தியாகவே NPP ஐ மக்கள் பார்த்தனர்; இன்னமும் பார்க்கின்றனர்.  மக்கள் மட்டுமல்ல, வெளியுலகமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறது.

NPP யும் அப்படிச் சொல்லித்தான் அதிகாரத்துக்கு வந்தது. குறிப்பாக முறைமையில் மாற்றம் (System Change) செய்வதாக. 

முறைமையில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால்தான் முறைமையில் மாற்றம் செய்வதற்கான அதிகார பலத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் NPPக்கு மக்கள் கொடுத்தனர். இல்லையெனில் 60 ஆண்டு வரலாற்றில் அப்படியொரு வெற்றியை NPP யோ JVP யோ பெற்றிருக்க முடியாது. இதனை JVP யும் NPP உம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆகவே முறைமை மாற்றத்தின் (System Change) மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பையும் NPP செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், முறைமை மாற்றத்தை (System Change) செய்வதற்குத் தயக்கம் கொள்கிறது NPP. அப்படியென்றால் இதைச் செய்யக் கூடிய ஆற்றல் NPP க்கு இல்லையா? அல்லது அதிகாரத்துக்கு வந்த பிறகு முறைமை மாற்றத்தை NPP விரும்பவில்லையா? அல்லது முறைமை மாற்றம் (System Change) தொடர்பாக  NPP க்குள் குழப்பங்களும் இழுபறிகளும் நிகழ்கின்றனவா?

NPP க்குள் குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்பதால்தான் ஜனாதிபதியின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறான முறையில் அமைச்சர்களின் கருத்துகளும் நடவடிக்கைகளும் உள்ளன. ஜனாதிபதி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்போடு உள்ளதாகக் காட்டுகிறார். அநுரவின் உரைகளும் முயற்சிகளும் இதைச் சொல்கின்றன. அவரிடம் நிதானமும் மென்போக்கும் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் முனைப்பும் உள்ளது. 

பௌத்த பீடங்களுடன் அநுரகுமார நெருக்கத்தைக் காட்டுவது கூட தன்னுடைய கடினமான நோக்கினை நிறைவேற்றுவதற்கான ஒரு வகையான அரசியல் உத்தியாகவே படுகிறது. அதாவது தனக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக அந்தத் தரப்பினர் உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால் அது தன்னுடைய மாற்று அரசியலை – முறைமை மாற்றத்தோடு கூடிய அரசியலை மேற்கொள்வதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதியே பௌத்த பீடங்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதாக தெரிகிறது. 

ஏறக்குறைய பிரதமர் ஹரிணியும் இந்த அலைவரிசையில்தான் உள்ளார். NPP யின் முகமே பிரதானமாக இவர்கள்தான்.  

ஆனால், அரசாங்கத்தரப்பிலுள்ள ஏனையவர்கள் (NPP யின் ஏனைய ஆட்கள்) JVP யின் அடையாளத்தையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இனவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. 

என்பதால்தான்  இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் உளநிலை (கரிசனை) NPP க்கு இல்லை என்பதை அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வரும் கருத்துகள் சொல்கின்றன. இது எவ்வளவு கவலைக்கும் வெட்கத்துக்கும் உரியது! இனவாதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் JVP யினால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இனவாதத்துக்கு வெளியே வந்து NPP யாக அது முகம் காட்டியபோதுதான் அதற்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது.  தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவை NPP பெற்றதும் இனவாதமற்ற போக்கை அது கொண்டிருக்கிறது என்றபடியாற்தான்.  

JVP யினர் NPP யைப் பிடித்துப் பின்னோக்கி இழுப்பதற்குக் காரணம், அவர்கள்  இயல்பில் இனவாத சிந்தனையில் ஊறியவர்கள் என்பதே. ஆனால், அதிலிருந்து விலகி, மீறி வரவேண்டும் என்பதே வரலாற்றின் நிபந்தனையாகும்.

ஆனாலும் இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் வழித்தடத்திலேயே NPP யும் பயணிக்க முயற்சிக்கிறது. அல்லது NPP ஐ அப்படிப் பயணிக்க வைக்க JVP முயற்சிக்கிறது. 

தன்னுடைய நிறைவேற முடியாதிருந்த நீண்டகாலக்கனவுகளை NPP யின் மூலம் நிறைவேற்றுவதற்கு JVP விரும்புகிறது. 

அதனால் அது  NPP யில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது. என்பதால்தான் NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் நீடிக்கின்றன. NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் உள்ளவரை அதனால் முறைமை மாற்றத்தை (System Change) மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கின்ற எதையும் செய்யவே முடியாது. 

இதுதான் இப்போது NPP மீதான விமர்சனங்களாகவும் நம்பிக்கையீனமாகவும் மேற்கிளம்புகின்றன. 

இதொரு புறமிருக்க, தமிழ் பேசும் சமூகத்தினர் நம்பிக்கை கொள்ளக் கூடிய அளவுக்கு NPP யின் எந்தச் செயற்பாடுகளும் அமையவில்லை. பதிலாக அவர்களுடைய நம்பிக்கையைச் சிதைக்கும்படியாகவே அமைச்சர்களின் பேச்சுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உள்ளன. 

இதனால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களிடம் NPP க்கான ஆதரவில் இறக்கம் நிகழ்ந்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவையும் விட உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதலான ஆதரவு கிட்டும் என்றே NPP எதிர்பார்த்தது. இதற்காக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகமெங்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் கிராமங்களுக்குக் கூடச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் NPP யே கைப்பற்றும் என்று அமைச்சர் சந்திரசேகரன் உள்பட NPP பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்;  நம்பினார்கள். ஆனால், ஒரு சபையைக் கூட NPP யினால் கைப்பற்ற முடியவில்லை. (இதற்குப் பிரதான காரணம் அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோரின் பொறுப்பற்ற அதிகாரத்தனமான பேச்சுகளும்  கேலிக்குரிய நடத்தைகளுமாகும் என்று சொல்கிறார்கள் வடக்கிலுள்ள NPP ஆதரவாளர்கள்).

வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் வெவ்வேறு விதமாக NPP  மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை NPP க்கு. இதனால்தான் தாம் ஆட்சியமைக்கக் கூடிய சபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு யாராவது இடையூறு விளைவித்தால் – இடைஞ்சலாக இருந்தால் –கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி நிதானமிழக்க நேர்ந்தது. 

இந்த நிதானமிழப்பை NPP யின் அமைச்சர்கள் பலரிடத்திலும் கூடக் காண முடிகிறது. 

அவர்கள் நிதானமிழந்தால் அவர்களுக்கும் NPP  க்கும்தான் நட்டம்; பாதிப்பு. மக்களுக்கும் பாதிப்புண்டுதான். ஆனால், அவர்கள் வரலாற்றின் ஓட்டத்தில் இன்னொரு மாற்றத்துக்காக முயற்சிப்பார்கள். ஒரு காலம் ராஜபக்ஸக்களை ஏற்றுக் கொண்ட மக்கள், இன்னொரு காலச் சூழலில் அவர்களை விரட்டி அடித்த்தைப்போல, NPP யை விட்டு விட்டு இன்னொரு சக்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.  

ஆகவே மக்களைத் தம்மோடு வைத்துக் கொள்வதா இல்லையா என்பதை NPP தான் முடிவு செய்ய வேண்டும். மக்களைத் தம்முடன் வைத்துக் கொள்வதென்றால், அவர்களுடைய நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். 

இதற்கு முறைமை மாற்றம் (System Change) அவசியம். அதைச் செய்வதற்கு காலம் தாழ்த்தவே கூடாது. காலம் தாழ்த்தினால் எதிர்த்தரப்புகள் பலமடையும். இலங்கை போன்ற நாடுகளில் எளிதாக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கான வரலாற்றுச் சூழல் எப்போதும் அமைவதல்ல. NPP அது கிடைத்துள்ளது. நாட்டுக்கும் அது வாய்த்திருக்கிறது.

இப்பொழுது –  கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே -எதிர்த்தரப்புகள் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மேலெழத் தொடங்கி விட்டன. மறுவளத்தில் NPP எதிர்த்தரப்புகளின் அரசியல் அழுத்த்ததிற்குப் பணியும் நிலையில் உள்ளது.  தடுமாற அல்லது குழம்பத் தொடங்கி விட்டது.  அதனால்தான் லால்கந்த, விஜித ஹேரத், ஹந்துன் நெத்தி போன்றவர்களெல்லாம் இனவாதத்தைத் தூக்க முற்படுகிறார்கள். இனவாதத்தைத் தூக்கினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். 

இனவாதத்தை தமது அரசியலாக – அரசியல் முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய சுதந்திரக் கட்சி, ஐ.தே.க மற்றும் ராஜபக்ஸக்களின் பெரமுன போன்ற சக்திகளை வரலாறு புறமொதுக்கித் தோற்கடித்து விட்டது.  மட்டுமல்ல, இனவாதத்தை அரசியல் மூலதமாக்கியதால்தான் அந்தக் கட்சிகள் தோற்றதோடு, நாடும் அழிவடைந்தது. பல்லாயிரம் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாயினர். பெருமளவு சொத்துகளும் இயற்கை வளமும் அழிந்தது. நாடு தாங்கவே முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அந்திய சக்திகளிடத்திலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கால்களில் விழ வேண்டியேற்பட்டது. 

வரலாறு இதை JVP க்கும் NPP க்கும் மக்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதை JVP – NPP புரிந்து கொள்ளத் தவறினால் இவர்களும் வரலாற்றின் குப்பைக்குள்தான் வீசப்படுவர்.

முடிவாக, அரசியலமைப்பு மாற்றம் உள்பட அனைத்திலும் திருத்தங்களை NPP தாமதிக்காமல் செய்ய வேண்டும். இலங்கையில் இப்போதுள்ளது காலனித்துவ ஆதிக்கச் சிந்தனைமுறையும் கட்டமைப்புகளுமேயாகும். இதை மாற்றியமைப்பதைப் பற்றி அரசாங்கமும் எதிர்த்தரப்புகளும் சிந்திக்க வேண்டும். அதாவது காலனித்துவச் சிந்தனையிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் (Decolinize) விடுபட வேண்டும். இதற்கான ஒரு புதிய அரசியற் பண்பாட்டைக் கொண்ட முன்னெடுப்பும் அதற்கான கட்டமைப்பும் அவசியமாகும். 

எதிர்ச்சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்  மீறி எழுந்து, நாட்டுக்குத் தேவையானதை, சரியானதைச் செய்வதே அரசியல் ஆளுமையின் பணியாகும். அநுரகுமார திசநாயக்க அந்தத் தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.  அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கிருக்கிறார்கள். மக்களுடைய ஆணைக்கும் அங்கீகாரத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனாதிபதிக்கான முதற்கடமை. அதற்குப் பின்புதான் அவர் தன்னுடைய கட்சிக்கான இடத்தை அளிக்க வேண்டும்.  கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பாழடிக்கக் கூடாது. 

வரலாறு எப்போதும் ஒரு சுழலுக்குள் நிற்பதில்லை. அப்படி நின்றிருந்தால் உலகில் முன்னேற்றமோ வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டிருக்காது. ஒரு காலம் மேற்கு நாடுகளில் மிக மோசமான பிற்போக்குத்தனமும் வெறித்தனமும் இருந்தது. விளைவாகப் பெரும் போர்கள் கூட நடந்தன. பேரழிவுகள் ஏற்பட்டன. அதிலிருந்து படித்துக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அவர்கள் முன்னேற்றத்தை அடைந்தனர். மாற்றங்களை உருவாக்கினர். 

எனவே NPP செய்ய  வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.

https://arangamnews.com/?p=12041

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

4 weeks 2 days ago

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

மீநிலங்கோ தெய்வேந்திரன்

May 23, 2025 | Ezhuna

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை இன்னொருவர் அறம் என்ற வியாக்கியானத்தோடு நியாயப்படுத்துகிறார். இதுவே போருக்குப் பிந்தைய கடந்தகால அனுபவமாகும்.

நாட்டின் வடக்குக் கிழக்கில் போருக்குப் பிந்தைய ஒன்றரைத் தசாப்தகாலத்தில் மேற்கொண்ட பல்வேறு களஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்நிலைகளில் அறம் என்கிற வினாவைத் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதில் பெரும்பான்மையானவை அரசியல் அறம் சார்ந்த கேள்விகள். ஆனாலும் அதற்குமப்பால் சமூகம்சார்ந்த, பொருளாதாரம்சார்ந்த அற நிலைப்பாடுகள், விழுமியங்கள், நெறிமுறைகள் குறித்த வினாக்கள், விசாரணைகள் மக்களிடமிருந்து எழுந்துள்ளன. ஆனால் அவை கவனத்திற்குரியனவாக அமையவில்லை. அக்கேள்விகளை, விசாரணைகளை இக்கட்டுரை கவனத்திற்கொள்கிறது.

இரண்டு கேள்விகளுடன் இதைத் தொடங்குவது பொருத்தம். போருக்குப் பிந்தைய சமூகங்களில் அறம்சார் சிக்கல்கள் ஏன் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகின்றன என்ற வினா முக்கியமானது. இரண்டாவது, அறம்சார் வேறுபட்ட வியாக்கியானங்கள் எவ்வாறு சமூகத்தின் மீள்எழுச்சியைப் பாதிக்கின்றன. இவ்விரண்டு வினாக்களும் சற்று விரிவான விளக்கத்தை வேண்டுவன.

போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் கடுமையான மோதல்களின் காலகட்டங்களிலிருந்து உருவாகின்றன; உடைந்த சமூகங்கள், சிதைந்த நம்பிக்கை மற்றும் நீதி மற்றும் ஒழுக்கம் பற்றிய முரண்பாடான கதைகளை விட்டுச்செல்கின்றன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காரணிகளால் அறம் என்பது சிக்கலுக்குரியதாகிறது. இதற்கு அடிப்படையாக நான்கு காரணிகளை நாம் இனங்காணலாம்.

1. தார்மீகத் தெளிவின்மை மற்றும் அதிர்ச்சி: போர் பெரும்பாலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது; ஏனெனில் போர்க்காலங்களில் உயிர்வாழ்வது என்பது தனிநபர்களையும் குழுக்களையும் அமைதிக்கால நெறிமுறை விதிமுறைகளுக்கு முரணான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சியரா லியோன் உள்நாட்டுப் போரில் (1991–2002) குழந்தைப் போராளிகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தனர்; இது பொறுப்புக்கூறல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைச் சிக்கலாக்கியது. இலங்கை நிலவரத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தியமை, தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அக அறச்சங்கடங்களை உருவாக்கியதால், போர் தார்மீகக் கோடுகளை மங்கச் செய்தது. அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற அரசு அட்டூழியங்கள் அறம்சார் அவலத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு மற்றும் அரசாங்க வன்முறைக்கு இடையில் சிக்கிய தமிழ்ப் பொதுமக்கள், உயிர்வாழ்வினால் இயக்கப்படும் தார்மீக சமரசங்களை எதிர்கொண்டனர்; பொறுப்புக்கூறலைச் சிக்கலாக்கினர்.

2. போட்டியிடும் கதையாடல்கள்: வெவ்வேறு குழுக்கள் – பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பார்வையாளர்கள் – நீதி மற்றும் பொறுப்புக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் தண்டனை நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் மறுசீரமைப்பு நீதியைச் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டது, மன்னிப்புக்கும் பழிவாங்கலுக்கும் இடையிலான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்குள், விடுதலைப் புலிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் – சிலரால் சுதந்திரப் போராளிகளாகவும், மற்றவர்களால் ஒடுக்குமுறையாளர்களாகவும் – அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. வெளிப்புறமாக, சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசின் ‘வெற்றி’ மற்றும் போர்க்குற்றங்களை மறுப்பது பற்றிய கதையாடல்கள் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.

3. வளப் பற்றாக்குறை: போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களை எதிர்கொள்கின்றன. புனரமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கடினமான தேர்வுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்புகள், புத்த விகாரைகளின் கட்டுமானம் மற்றும் தொல்லியல்துறை மூலம் அரசு ஆதரவுடன் ‘சிங்களமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ச் சமூகங்களுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் பொருளாதார மீட்சிக்கு எதிராக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட அறம்சார் விவாதங்களை அதிகரிக்கின்றன.

4. நிறுவனரீதியான அவநம்பிக்கை: போர் பெரும்பாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை அழித்து, அறம்சார் முடிவெடுப்பதில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. குறிப்பாக போரின் முடிவு ஒரு தரப்புக்கு வெற்றியைத் தருகின்றபோது தோல்வியடைந்த தரப்பின் மக்கள்கூட்டம் நிறுவனரீதியாக ஒதுக்கப்படுகிறது. அதிகளவான இராணுவப் பிரசன்னம், கண்காணிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை உள்ளிட்டவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிறது. இது அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்து, அறம்சார் நிர்வாகத்தை மழுப்பலாக்குகிறது.

அகமுரண்பாடுகள்சார் அறம்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், ஆழமான அறம்சார் சவால்களை எதிர்கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய சூழலில் தார்மீகத் தெளிவின்மை, போட்டியிடும் கதையாடல்கள் மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் ஆகியவை பல்பரிமாணரீதியில் அறம் என்கிற விடயத்தை  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் நிலவும் அக முரண்பாடுகளைப் புற முரண்பாடுகள் மேவியுள்ளதால், அகமுரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்படுவது குறைவு. இந்த விடயங்கள் மூன்று முக்கியமான தளங்களில் சிக்கலானவை. இதனாலேயே தமிழ்ச் சமூகம் அறம்சார் அம்சங்களைச் சவாலுக்குட்படுத்தும் உள் முரண்பாடுகளுடன் போராடுகிறது:

1. விடுதலைப்புலிகளின் மரபு மற்றும் பொறுப்புக்கூறல்: விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரத் தந்திரோபாயங்கள், எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அவர்களின் அரசியல் எதிராளிகளை – தமிழர்களை குறிவைத்தல் உட்பட்டவை ஒரு சிக்கலான சித்திரத்தை வழங்குகின்றன. இது அவர்களின் போராட்டத்தை மகிமைப்படுத்துவதற்கும் அவர்களின் துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதற்கும் இடையிலான அறம்சார் கேள்விகளை எழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, 1980களில், போட்டியாளர்களான தமிழ்ப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் ஒழித்தது; இது சமூகத்திற்குள் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கியது. இந்த முரண்பாடுகள் ஒரு பகிரப்பட்ட அறம்சார் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றிணைவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன.

2. சாதி மற்றும் பாலினம்: சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற உட்சமூகக் கட்டமைப்புகள், அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்ப் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள், களங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 49% பேர் பதட்டத்தையும் 42% பேர் மனச்சோர்வையும் அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளால் அதிகரிக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒற்றுமையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய சமூகத்தில் சாதிய மீளெழுச்சி சிக்கலான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

3. புலம்பெயர்ந்தோர்/ உள்ளூர் முன்னுரிமைகள்: புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு தொகுதியினர், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் உள்ளூரில் தமிழ் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தாலும்கூட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நில உரிமைகள் போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த வேறுபாடு கவனத்திற்குரியது. இது யாருடைய நலன்கள் முக்கியமானவை, யார் யாருக்காகப் போராடுவது போன்ற அறம்சார் விவாதங்களை உருவாக்குகிறது.

இந்தப் பின்புலம் மிகவும் முக்கியமானது. இம்மூன்று விடயங்களும் இன்றும் தமிழ் மக்களின் அறம்சார் செயலின்மைகளின் மையமாக உள்ளன. ஒரு சமூகமான எமது கடந்தகாலத்தை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற வினாவை இங்கு எழுப்புவது முக்கியமானது. போரின் முடிவின் 16 ஆண்டுகளின் பின்னர் ஈழத்தமிழரின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்தால் அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் அதற்கான பதிலைப் பெறுவது சிரமம் என்பதை நாமறிவோம். அதற்கப்பால் அறம்சார்ந்த சமூகமாக, அகமுரண்பாடுகளை அடையாளங்கண்டு ஏற்றுக்கொண்ட சமூகமாக நாம் இல்லை என்பதே இன்றைய முக்கிய சவாலாகும். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் பேசுவதற்குச் சிரமமான சங்கடமான ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்பதையும் நாம் ஏற்கவேண்டும். அதேவேளை நடந்து முடிந்த அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையினின்று விடுபடுவதும் முக்கியமானது. இது முக்கியமான ஒரு சமூகச் சவாலாகும். அறம் குறித்த பார்வைகள் இங்கு ஆழமான நேர்மையான பார்வையை வேண்டி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளை போராட்டத்தின் மையச்சக்தியாக ஆக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களை, மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்த்து நோக்க வேண்டியுள்ளது. இதை வழிப்படுத்துவதற்கு அறம்சார்ந்த பார்வை முக்கியமானது.  ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கம் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியது. இது தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய கருவியாகும். இது அகமுரண்பாடுகளை மறைத்து தமிழர் என்ற பொது இனத்துவ அடையாளத்துக்குள் அனைத்தையும் கரைக்கும் ஒரு தந்திரமாகவே செயற்பட்டது என்பது உண்மை. அதேவேளை மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன்விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமல் போய்விடவில்லை. இன்று அவை, முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். தேசியத்தினுள் செயற்படும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாதபோது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. விடுதலைப் புலிகளின் போரின்போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறுபலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில்கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக்கிடப்போரில் பெரும்பாலானோராக உள்ளனர். இவை ஒவ்வொன்றும் ஆழமாகப் பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். விடுதலைப் போராட்டம் என்பது அறம்சார்ந்தது என்ற புரிதலை நோக்கி நகர்தலும் அதை ஆழமாக விமர்சன நோக்கில் பார்க்கப் பழகுதலும் இன்றைய சூழலில் தவிர்க்கவியலாதது.

சமூக அசைவியக்கங்களில் அறம்சார் கேள்விகள்

போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அறம் குறித்த பார்வைகள் மிகவும் சிக்கலானவை. போரின் வீரமரபையும் விடுதலைப்போராட்டத்தையும் மையப்படுத்திய அறம்சார் பார்வை ஒருபுறமும், சமூகத்தின் பண்பாடு, மாண்பு, மானம், மரியாதை நோக்கிலான அறம்சார் பார்வை மறுபுறமுமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான வினாக்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவ்வினாக்கள் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகத் தவறவிடுகின்றன. அது களயதார்த்தம் பற்றியது; அம்மக்களின் வாழ்நிலை பற்றியது. நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட சிந்தனைமுறை பற்றியது. ஆழமாக ஊறிப்போன பண்பாட்டு வரைமுறைகள் பற்றியது. 

முன்னாள் போர் வலயங்களுக்கு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் கள ஆய்வுக்காக கிளிநொச்சியில் இருந்து அரச பேரூந்தில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தேன். ஒரு தரிப்பிடத்தில் பேரூந்து நின்றது. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பேரூந்தில் முன்பக்கமாக ஏறினார்கள். அவர்களின் தோற்றம் ஏழ்மையை உறுதிசெய்தது. வாடி மெலிந்த தேகம், ஆனால் முகத்தில் நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். எனக்குப் பின்னால் இரண்டு ஆண்குரல்களின் உரையாடலைத் தற்செயலாகக் கேட்கக் கிடைத்தது. அந்த உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது:

“இதுகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்திருக்கலாம். போராடப் போறம் என்று போய் எல்லாத்தையும் சீரழிச்சு இண்டைக்கு நடுத்தெருவில நிக்கிதுகள்.”

“இவயின்ர அப்பா, அம்மாவைச் சொல்லோனும். அவையள் எல்லோ கண்டிச்சிருக்கோணும்”.

“அப்படிச் சொல்லேலா, இவையளுக்கு அறிவெங்க போனது.”

“இதுகள் இயக்கத்துக்குப் போகேக்க 16 வயதுகூட இராது”.

“எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப இவையளுக்கு யாருமில்லை”.

இதற்கு மேல் அந்த உரையாடலைக் கேட்க மனமில்லாமல், அவ்விடத்தில் இருந்து எழுந்து பேரூந்தின் பின்னால் நடக்கத் தொடக்கினேன். அப்போது அக்குரல்களுக்கு உரியவர்கள் யார் என்பதை அறியும் நோக்கில் அவர்களை நோட்டமிட்டேன். அக்குரல்களிற்குரியவர்கள் கிட்டத்தட்ட 60 வயதை உடையவர்கள்; உள்ளூர்க்காரர்கள்; சாரமும் பழைய சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு இப்பெண்களை நன்கு தெரிந்திருந்தது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

I-1-19.jpg

இந்நிகழ்வு அறம்சார் கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது. முதலாவது, இந்தப் பெரியவர்களின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அந்தப் பெரியவர்கள் வெளிநபர்கள் அல்லர். அவர்களும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீளக்குடியேறி அதேசமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் கருத்துகள்தான் அச்சமூகத்தின் பொதுக்கருத்து என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டு தனிநபர்களின் கருத்து என்று ஒதுக்கிவிடுவதா? விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது என்ற கருத்தை இந்த உரையாடல் தகர்க்கிறது. அவ்வாறு இருந்திருக்குமாயின், இவ்வாறான குரல்கள் எழுந்திருக்காதல்லவா? விடுதலைப் போராட்டம் குறித்த மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது? இன்றும் பெண்கள் குறித்த எம்சமூகத்தின் பார்வை என்ன?

இரண்டாவது, முன்னாள் போராளிகள் இவ்வாறு அனாதரவாய் விடப்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது. உலகெங்கும் கோலாகலமாக ஈழத்தமிழர்கள் நிகழ்வுகளைச் செய்கிறார்கள். மாவீரர் தினங்கள், மே 18 எனப்பல நிகழ்வுகள் நடக்கின்றன. மில்லியன் கணக்கான பணம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் வன்னி நிலப்பரப்பில் வாழும் ஒரு தொகுதி மக்கள் இவ்வாறு திக்கற்றவர்களாக விடப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்விடத்தில் அறத்தின் அளவுகோல் என்ன? வன்னியில் ஒருதொகுதி மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும்போது, இவ்வாறான கொண்டாட்டங்கள் அறமா? அல்லது இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா? பொறுப்புக் கூறவேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தனிமனிதர்களா? அமைப்புக்களா? அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணுகிறோம் என்று அறிவித்துக் கொண்டவர்களா?

இந்த உதாரணம் அறம்சார்ந்த அம்சங்களின் சிக்கல்தன்மையைப் புலப்படுத்துகிறது. அதேவேளை இந்தக் கேள்விகளுக்கு நாம் சமூகமாக முகம் கொடுத்தாக வேண்டும். இந்த மனநிலை ஈழத்தமிழரிடம் இல்லை என்று அப்பால் நகர்ந்துவிட முடியாதபடியே நிகழ்வுகள் நடக்கின்றன. அதை நாம் ஏற்றாக வேண்டும். போரின் வடுக்களைச் சுமந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அறம் யாது? அதன் அளவுகோல்கள் என்ன? அவை சரியானவையா? போன்ற பதிலில்லாக் கேள்விகள் இன்றும் எம்மிடமுண்டு.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டபோது உயர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்துவந்த காலப்பகுதியில் அம்மக்கள் குறித்த ஏராளமான கதைகள் உலாவின. அவை கதைகள் என்பதைவிட நிகழ்வுகளின் பொதுமைப்படுத்தல்கள் என்று சொல்வது பொருத்தம். அவ்வாறான ஒரு கதைதான் ‘மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களில் வலுவற்றோர் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என்பது. இந்தக்கருத்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்தேசங்களில் இது பாரிய பேசுபொருளானது. இது மிகக்கொடுமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் செயற்படு தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நினைத்தேன். எனது பணியிடத் தேவையின் பொருட்டு, இந்த விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக, அதன் ஆழ – அகலங்களை விளங்கிக்கொள்வதற்காக வன்னிக்குச் சென்றேன்.

எனக்கு நன்கு பழக்கமான மனிதாபிமானப் பணியாளர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விடயம், ‘இது பேசப்படுவதைவிட மிகச் சிக்கலான ஒன்று’. ஒற்றைப் பரிமாணத்தில் இதைப் பார்க்க முடியாது. அதேவேளை பலர் இது குறித்து விரிவாகப் பேசுவது சரியாக இராது என்று கருதினர். இன்னும் சிலர், இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு இந்தக் கதையாடல் அவசியமானது, எனவே இப்போது சொல்லப்படுகின்ற அதேகதையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலானோரது கருத்து, ‘இந்த அதிர்ச்சி வைத்தியம் ஏற்படுத்தும் கவனயீர்ப்பு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு முக்கியமானது’ என்பதாகும். அவர்கள் குறித்த விடயத்தை ஆழமாக ஆராயாமல் இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கருதினர்.

சிலருக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தது. உண்மை முக்கியமானது. அதேவேளை திரிக்கப்பட்ட உண்மை, நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்யவல்லது என்று அவர்கள் கருதினர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், “நான் உங்களை இதனோடு தொடர்புடைய சிலரிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். பிறகு நீங்களே முடிவெடுங்கள்.” அதன்படி பலருடன் பேசக் கிடைத்தது. அதில் ஒரு உரையாடல் மட்டும் இன்றும் மனதை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது. அதைமட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

I-2-19.jpg

அது வன்னியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக இருப்பிடம் என்று சொல்வது பொருத்தம். மரம், தடிகள், தகரம் கொண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு வயதல்ல. 25 வயதினைத் தாண்டியிருக்காது. அப்பெண் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசினார். வாழ்க்கை குறித்த அச்சவுணர்வு அப்பெண்ணிடம் இருக்கவில்லை. அப்பெண் சொன்னவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்:

“நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சண்டை மீண்டும் தொடங்கிவிட்டது. இயக்கம் மீண்டும் ஆள்சேர்க்கத் தொடங்கியிருந்தது. என்னையும் கூட்டிப்போய்விடுவார்கள் என்று அப்பா பயந்தார். கலியாணம் கட்டிவைத்தால் பாதுகாப்பு என்று கருதினார். எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் சிறுவியாபாரமும் விவசாயமும் செய்துவந்தார். மெதுமெதுவாக இடப்பெயர்வுகள் தொடங்கின. திருமணமானவர்களையும் இயக்கத்தில் இணைக்கத் தொடங்கினர். அதிலிருந்து தப்புவதற்காக நான் கர்ப்பமானேன். எனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் திரும்பி வந்தார். நாம் ஒன்றாகப் பாதுகாப்புத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள்மீது விழுந்த குண்டில் எனது கணவர், எனது அப்பா, அம்மா என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் உயிர்தப்பிவிட்டேன். எனது குழந்தையை முகாமில் பெற்றெடுத்தேன். என் அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் மீளக்குடியமர்ந்தேன். தரப்பாள் வீடுதான். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது பிள்ளையை யாரிடமும் விட்டுவிட்டு கனதூரத்திற்கு வேலைக்குப் போகவும் இயலாது. கொஞ்சக்காலம் நிறுவனங்களின் உதவியில் வாழ்ந்தேன். பின்னர் வறுமையில் வீழ்ந்தேன். எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஆண்துணையற்ற பெண்ணாக குழந்தையோடு வாழ்வது மிகவும் பாதுகாப்பற்றது. எனது சமூகமே என்னை ஒதுக்கியது. எனது ஊர் ஆண்களே என்னை அணுகினார்கள். உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னால் இருந்த நோக்கம் இரகசியமானதல்ல. ஒவ்வொரு இரவும் அச்சத்துடனேயே கழிந்தது. யாராவது இரவில் வலுக்கட்டாயமாக வந்துவிடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. எங்கள் ஊர் ஆண்கள் ஒருபுறம் என்றால் இராணுவச் சிப்பாய்கள் மறுபுறம். அவர்களின் பார்வையும் விசாரணைகளும்கூட உறுத்தலாய் இருந்தது. ஒருநாள் குழந்தையுடன் நான் நடந்துசெல்லும்போது, தற்செயலாக எமது பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி என்னைக்கண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். குழந்தைக்கு உணவு வாங்கும்படி சிறுதொகைப் பணத்தைத் தந்துவிட்டுப் போனார். இப்போதும் அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருகிறார். என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் என்னிடம் வருவதால் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நலவிசாரிப்புகள் இல்லை. அவ்வளவு பயம். எங்கள் ஊர் ஆண்களின் சொறிச்சேட்டைகள் இல்லை. நான் இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன்.”

இது ஆழமான அதேவேளை பேசப்படாத, பேசப்படவிரும்பாத ஒரு பேசுபொருளை உடையது. சமூக அறம், மானம், போன்ற மறைப்புகளுக்கு அப்பால் போரின் பின்னான சமூகங்களில் வாழ்வோரின் நித்திய போராட்டத்தின் ஒரு சிறுதுளிதான் இது. இந்த விடயத்தில் அறம்சார் உயர்நிலை என்ற பெயரில் அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்லமுடியமா? இதைப் பாலியல்தொழில் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலுமா? அந்தப் பெண்ணையோ, அவரின் நடத்தையையோ மதிப்பிடும் அதிகாரத்தை யார் தந்தது? இவ்வாறு பல கேள்விகளைத் தொடர்ச்சியாக நாம் எழுப்பிய வண்ணமே இருக்கலாம்.

போருக்குப் பிந்தைய சூழலில் அறம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன இரு உதாரணங்களும் போதுமானவை. இந்தப் பின்புலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அறம் பாடுதல், அறம் பறைதல் ஆகிய இரண்டையும் நோக்கியாக வேண்டும்.

போருக்குப் பிந்தைய சூழலில், பல குழுக்கள் தங்களது கொடுமைகளை, நஷ்டங்களை மற்றும் நினைவுகளை தம்மோடு சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருவரோ ஒரு குழுவோ “நாங்கள் அறமானவர்கள்” என்று கூறுவது மற்றவர்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தலாம். இது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அறம்சார் உயர்நிலையை எடுப்பதென்பது சிக்கலானது. அதேவேளை இது பல சமயங்களில் அதிகாரமிக்கவர்களின் ‘மதிப்பீட்டுச் சிதைவான பார்வை’ (Biased perception) ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்; இது நீதிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். போரினால் சிதறுண்ட சமூகங்களில் பலநிலை உண்மைகள் (Multiple truths) உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்க்காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும், குழுவுக்கும் தங்கள் பார்வை இருக்கிறது. “நாங்கள்தான் நியாயம் பேசுகிறோம்” என்று ஒருபக்கம் சொல்வது, மற்ற உண்மைகளை நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் கொள்ளப்படும். “நாங்கள் அறத்தோடு இருக்கிறோம்” என்று ஒருவர் சொல்வது, உண்மையான வருத்தங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இது சமூகப் பிணைப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

நிறைவுக் குறிப்புகள்

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிளவுபட்ட சமூகங்களில் போருக்குப் பிந்தைய சூழலில் அறம்சார் நிலைப்பாட்டை எடுப்பதானது பல முக்கிய சவால்களைக் கொண்டது. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மை இருக்கும். அறவிழுமியம்சார் நிலைப்பாடு எடுக்க முயல்பவர்கள், ஒரு தரப்பினரால் சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் அல்லது அவர்களது நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது ஒரு தரப்பை மற்றொரு தரப்பிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தலாம்.

போருக்குப் பிந்தைய சமூகங்களில், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், மற்றும் பாதுகாப்பு ஆகியன முன்னுரிமையாக இருக்கும். இதனால், உயர்ந்த அற நிலைப்பாட்டை எடுப்பது பல சமயங்களில் அடிப்படைத் தேவைகளையே கேள்விக்குட்படுத்தும். இந்நிலையில் அறமா? உணவா” என்ற கேள்வி எழும்போது, உணவே பிரதானம். இந்த நிலைப்பாட்டை எடுத்தவர்களை அறமற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

இலங்கைச் சூழலில் போருக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் மீது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒருபிரிவினர் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு, ‘இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்கள், மாறிவிட்டார்கள், விடுதலைப் போராட்ட உணர்வற்றவர்கள்.’ இந்தப் பிரிவினர் சோறா, சுதந்திரமா? என்ற வினாவுக்கு சுதந்திரமே பிரதானம் என்பவர்கள். ஆனால் வன்னியில் மக்களைப் பொறுத்தவரை முதலில் சோறு. ஏனெனில் அன்றாட உயிர்வாழ்க்கையே அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அறம்சார் உயர்ந்த நிலைப்பாடு எடுப்பது ‘பயனற்ற’ அல்லது ‘எதார்த்தமற்ற’ ஒன்றாகவே கருதப்படுகிறது.

தமிழ்ச்சமூகமாக நாம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உண்டு. நாம் அறம்பாட முதல் இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்தேட விளைவது பயனுள்ளது:

போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு, ஏன் அறம்சார் சிக்கல்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் மீட்சிக்கு எவ்வகையான உள் மற்றும் வெளிப்புற அறப்பிரச்சினைகள் சவால் விடுகின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அக முரண்பாடுகள் அறம்சார் நெறிமுறைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன?

அறம்சார் முன்னுரிமைகளை வடிவமைப்பதில் நீதி, நல்லிணக்கம் மற்றும் வள ஒதுக்கீடுகள் எவ்வகையான பங்கை வகிக்கின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதற்கு, தமிழ்ச் சமூகம் இந்த அறம்சார் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?


About the Author

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

https://www.ezhunaonline.com/post-war-morality/

ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?

4 weeks 2 days ago

Screen-Shot-2025-05-24-at-3.45.08-AM.png

ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?

சிவதாசன்

இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து ஏறத்தாழச் ‘சிறைப்படுத்தப்பட்டுக் கிடந்த’ இரண்டு நாடுகளான யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் இரண்டாம் போரில் இந்நாடுகளைத் தோற்கடித்து சிறைப்படுவதற்குக காரணமான சோவியத் குடியரசின் பதாங்கமான ரஸ்யாவே அவற்றுக்கு இந்த இந்த விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஹிட்லரின் விஸ்தரிப்பைத் தடுத்து மேற்கைக் காப்பாற்றுவதற்காக சேர்ச்சில் வைத்த பொறியில் வீழ்ந்த ஸ்டாலின் இதற்காக காவு கொடுத்தது 9 மில்லியன் சோவியத் படைகளையும் 18 -19 மில்லியன் பொதுமக்களையும். மீண்டுமொரு தடவை கோர்பச்சேவ் வடிவத்தில் மேற்கின் பொறியில் சோவியத் வீழ்ந்து தன்னையே சிதலம் செய்து இன்று பலமிழந்த ரஸ்யாவாக மேற்கின் படையெடுப்பை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தடவை மேற்கின் படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஜேர்மனி ரஸ்யாவைப் பழிவாங்கப் போகிறதா? பட்சி அப்படித்தான் சொல்கிறது.

ஹிட்லரின் ஜேர்மனியை (ஜனவரி 30, 1933 – மே 8, 1945) ‘மூன்றாம் இராச்சியம்’ (Third Reich) என்பார்கள். முதலாவது ரோம் சாம்ராஜ்யமும் அதற்குப் பின்னர் ஜேர்மன் சாம்ராஜ்யம் இரண்டாவதாகவும் இருந்தன. தற்போது ஜேர்மனியின் அதிபராக வந்துள்ள ஃப்றைடிக் மேர்ஸ் வந்ததும் வராததுமாக உலக நீதிமன்றத்தினால் கைதாணை விடுக்கப்பட்ட இஸ்ரேலின் நெட்டன்யாஹுவைத் தனது விருந்தாளியாக அழைத்து உலக அபிப்பிராயம் எனக்குத் தேவையில்ல்லை என்பதுபோல அவரை உலக நாயகனாக அங்கீகரித்தமை ஹிட்லரின் மீள்வருகைக்குக் கட்டியம் கூறியமை போல இருந்தது. ஜேர்மனி நான்காவது சாம்ராஜ்யமாக உருவாகுவது இவரது காலதில் தான் ஆரம்பமாகும் என்பது எனது கணிப்பு.


லிதுவேனியா முன்பு சோவியத் குடியரசில் இருந்து கோர்பச்சேவ் புண்ணியத்தில் பிரிந்துபோன ரஸ்யாவின் எல்லை நாடு. அதன் சனத் தொகை 2.87 மில்லியன் மட்டுமே. கோர்பச்சேவுடனான ஒப்பந்தத்தின்படி பேர்லினைத் தாண்டி நேட்டோ ஒரு அங்குலமும் நகராது என்ற சத்தியத்தையும் மீறி நேட்டோ இப்போது லிதுவேனியா, ஃபின்லாந்து உட்பட பல ரஸ்ய எல்லை நாடுகளில் நிரந்தரமாகத் தளங்கள் அமைத்து விட்டது. ரஸ்யாவின் கலினின்கிராட் நகரினதும், ரஸ்யாவின் நடு நாடான பெலாறுஸ் நாட்டிநதும் எல்லைகளில் இருக்கிறது லிதுவேனியா. யூக்கிரெய்னிலும் இதே உத்தியை நேட்டோ கையாள முற்பட புட்டின் அதற்கு மறுத்தான் போட்டதன் விளைவே இன்றைய ரஸ்ய – யூக்கிரெய்ன் போர். இப்போரை நிறுத்தி ரஸ்யாவுக்கு ஒரு இடைவேளை வாங்கித்தர ட்றம்ப் முயற்சித்தமை நேட்டோவின் தலைமையை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் பிடுங்கிக்கொள்ள வாய்ப்பாகி விட்டது. அத்தோடு கனடா போன்ற நேட்டோ நாட்டுடனான தீர்வைச் சண்டையும் ஐரோப்பிய தலைமையை ஊக்குவிக்கும் கார்ணியின் தலைமையும் உலகின் அடுத்த அதிகார மையமாக ஐரோப்பாவைவையே முந்தள்ளி விட்டிருக்கிறது. எனவே ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் விரைவில் உக்கிரமடையும் இதில் நேட்டோ உறுப்பினர் என்ற வகையில் ஜேர்மனி தலைமையை எடுக்கும் என உறுதியாக நம்பலாம். இதற்கு காரணம் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற பலமான நாடுகளை விட ரஸ்ய எல்லைக்கு மிக நெருக்கமான நாடு ஜேர்மனி மட்டுமே என்பது தான்.

இதை உறுதிப்படுவதுபோல், கடந்த வியாழனன்று (மே 22) லிதுவேனியாவில் ஜேர்மனியின் 45 ஆவது கவசப் படையணியை வரவேற்று தலைநகர் வில்னியஸில் லிதுவேனியா கொண்டாடியிருக்கிறது. இது ஒரு நீண்டகால நிலைகொள்ளல் எனவும் ரஸ்யாவிடமிருந்து ஐரோப்பாவையும் நேட்டோவையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யூக்கிரெய்னை ரஸ்யா வெற்றி கொண்டால் அது அத்தோடு நிற்காமல் மீதமுள்ள சிறிய நாடுகளையும் கபளீகரம் செய்துவிடுமென்ற காரணத்தினால் தான் இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.

லிதுவேனியாவை நோக்கிய இந்த ஜேர்மானிய படை நகர்வு இவ்விரு நாடுகளும் தம்மிடையே மேற்கொண்ட இணக்கப்பட்டின் விளைவு இதில் இதர நேட்டோ நாடுகளின் பங்கு என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என்கிறார்கள்.

இரண்டாம் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது நேச நாடுகளால் அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானவை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பலம், உற்பத்தித்துறை ஆகியவையாகும். இருப்பினும் ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்ததும் (2022) ஜேர்மனியின் இராணுவ விஸ்தரிப்பின் மீதான கட்டுப்பாட்டை நேட்டோ தளர்த்தியிருந்தது. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஃப்றைட்றிக் மேர்ஸ் “ஜேர்மனியின் இராணுவத்தை ஐரோப்பாவின் பலமான இராணுவமாக மாற்றுவேன்” எனச் சபதமெடுத்தது மட்டுமல்லாது அதற்காக மிதமான செலவீனத்தையும் ஒதுக்கியிருக்கிறார்.

லிதுவேனியாவில் தற்போது 500 ஜேர்மன் இராணுவம் நிலைகொண்டுள்ளது. 2027 இல் இதை 5,000 இராணுவத்தினரும் சிவிலியன்களும் சேர்ந்த பலமான படையொன்றாக உருவாக்கவிருப்பதாகவும் கேர்மனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் அமெரிக்க படைகளும் நிலைகொண்டுள்ளனரெனினும் ட்றம்ப் நிர்வாகத்தில் அவர்கள் ஐரோப்பிய சகாக்களிடமிருந்து விலகியே இருப்பதாகவும் இதன் காரணமாகவே லிதுவேனியா ஜேர்மனியின் உதவியை நாடியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

தனது எல்லையில் இருக்கும் லிதுவேனியாவில் நேட்டோ வந்தமர்ந்தபோதோ அல்லது கடந்த சில ஆண்டுகளில் ஃபின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைந்தபோதோ புட்டின் எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது யூக்கிரெய்னில் மட்டும் தனது எதிர்ப்பைக் காட்டியதற்கு முக்கிய காரணம் யூக்கிரெய்னில் வாழும் கணிசமான ரஸ்ய மொழி பேசும் மக்கள் மீது யூக்கிரெய்ன் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறை எனபதும் கிரீமியா உடபட யூக்கிரெய்னில் அடங்கும் பல பிரதேசங்கள் ஒரு காலத்தில் ரஸ்யாவினால் தானமாக வழங்கப்பட்டமை என்பதுமே காரணம்.

யாவில் ஜேர்மனி படைகள் நிலைகொள்வது விரைவில் நேட்டோ ரரஸ்ஸ்யா மீது பாரிய போரொன்றுக்குத் தயாராகுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர். பொருளாதாரத் தடகள் மூலம் பலமிழந்திருக்கும் நிலையில் ரஸ்யா நேட்டோவின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள இயலாத பட்சத்தில் அது தனது அணுவாயுதங்களைப் பாவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இரண்டாம் உலகப் போரிலும் ஐரோப்பிய நேசநாடுகளுக்கு உதவியாகக் களமிறங்க அமெரிக்கா தயங்கியபோது சேர்ச்சில் தான் தனது தந்திரத்தால் அதைச் சாதித்தார். இப்போது ட்றம்பின் ஆட்சியில் அவர் நடுநிலையாக இருப்பாரானால் ரஸ்யா ஓரளவு தாக்குப் பிடிக்க வாய்ப்புண்டு.

மறுபக்கத்தில் ட்றம்பின் இறக்குமதித் தீர்வை விவகாரத்தால் குழம்பிப்போயிருக்கும் உலக பொருளாதாரம் யப்பான், தென் கொரியா, சீனா போன்ற எதிரி நாடுகளிடையே ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உலக மீளொழுக்கிற்கான காலம் நெருங்கி விட்டது. போரொன்றே அதைச் சாத்தியமாக்கும் போலிருக்கிறது.

https://marumoli.com/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be/

ஹமாசை முற்றாக அழித்தல்; இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்

1 month ago

22 MAY, 2025 | 02:52 PM

image

PELED ARBELI

பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்றவற்றின் கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிபுணருமான மொசே எலாட் பயங்கரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அழிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாரிவ் உடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அழிப்பது உண்மையிலேயே சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச அனுபவங்களை பயன்படுத்தியுள்ள அவர் மேற்குலக நாடுகள் விவாதிக்க தயாராகயிருக்கும் ஒரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை முற்றாக செயல் இழக்க செய்ய முடியுமா? முழுமையான வெற்றி சாத்தியமா என்ற சர்வதேச விவாதம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, பாலஸ்தீன ஜிகாத் போன்றவற்றின் சூழமைவில் பெருமளவிற்கு தீர்வுகாணப்பட்டதாக காணப்படுகின்றது.

காசா மக்களை பட்டினிபோடுதல், தென்லெபனான் கிராமங்களை அழித்தல், இஸ்ரேலின் ஒவ்வொரு தடையையும் மனிதாபிமான நெருக்கடி என முத்திரை குத்துதல், போன்றவற்றால் இஸ்ரேல் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், இஸ்ரேல் முழுமையான இராணுவ வெற்றியை பெறுவதற்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவரது வார்த்தைகளில் 'நாங்கள் நேர்மையாக பேசுவோம், உலகம் இஸ்ரேல் முழுமையான வெற்றியை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது"

israel_army_2025_1.jpg

பல்வேறு வழிகளில் மிகவும் திறமையாக அழிக்கப்பட்ட நான்கு பயங்கரவாத அமைப்புகளை அவர் வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டினார்.

இராணுவ மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அழிக்கப்பட்ட ஜாரிஸ்ட் ரஸ்யாவின் பிளக் ஹன்ட்ரட்ஸ், பெருவின் சைனிங் பாத் 1990களில் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டது, தானாகவே முன்வந்து கலைந்துபோன ஜேர்மனியின் செம்படை அரசியல் அமைப்பாக மாறி சின்பெய்னுடன் இணைந்த ஐரிஸ் விடுதலை இராணுவம்.

எலாட் ஐந்தாவது அதிகம் விவாதிக்கப்படாத உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்தது. தென்னாசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுத அச்சுறுத்தலாக விளங்கிய அமைப்பு.

வெற்றியின் விரிவான தன்மை, மற்றும் அதனை சாத்தியமாக்க பயன்படுத்தப்பட்ட தீவிரமான, பெரும்பாலும் தார்மீக ரீதியிலான நடவடிக்கை காரணமாக இலங்கை அனுபவம் விதிவிலக்கானது என அவர் விவரித்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்குவதற்காக அந்த அமைப்பு 26 வருடங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது.

ltte_women.jpg

இந்த குழு அதிநவீன இராணுவதிறன்களை வளர்த்துக்கொண்டது, தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது, அவர்களில் சிலர் பெண்கள் சிறுவர்கள்.

2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதை கைவிட்டு விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுத்தது.

இலங்கை தமிழ் புலிகளை தோற்கடித்தது எப்படி? இது இஸ்ரேலிற்கு ஏன் முக்கியமானது?

2006க்கும் 2009க்கும் இடையில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. இராணுவத்தை கணிசமான அளவு விரிவுபடுத்தவும், மேம்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், ஆயிரக்கணக்கான புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வளஙகள் ஒதுக்கப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பல முனைகளில் இராணுவநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, எதிரியின் பகுதிகளிற்குள் ஊடுருவி விசேட படைப்பிரிவுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அதற்கு சமாந்திரமாக விடுதலைப்புலிகளிற்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. புலம்பெயர்ந்தவர்களின் நிதி சேகரிப்பை இலக்குவைத்தது. குறிப்பாக கனடா, பிரிட்டன், ஸ்கன்டினேவியன் நாடுகளில் விடுதலைப்புலிகளை உத்தியோகபூர்வதாக பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு பல மேற்குலக நாடுகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் அந்த அமைப்பின் ஆதரவு கட்டமைப்புகள் பலவற்றை மூடியது.

உளவியல் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் இடையில் அதிருப்தியை அதிகரிப்பதற்காக தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒற்றர்களாக தகவல் வழங்குபவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கவில்லை என்கின்றார் எலாட்.

இறுதி அடி என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் வழிமுறை மூலம் சாத்தியமானது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், பலர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஆனால் கடும் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் கொல்லப்பட்டனர்.

srilanka_army.jpg

சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் மருத்துவமனைகளை இலக்குவைப்பது பொதுமக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியது, தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல்போனது போன்ற இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகளை ஆவணப்படுத்தியுள்ளன.

தமிழ் புலிகள் வெறுமனே பின்வாங்கச்செய்யப்படவில்லை. அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்கின்றார் எலாட். அவர்களிடமிருந்த பகுதி மீள கைப்பற்றப்பட்டது, தலைமைத்துவம் அழிக்கப்பட்டது, 2009ம் ஆண்டின் பின்னர் மீள எழுச்சி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தவில்லை.

2011 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மதிப்பீடுகள் குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் நடந்த சண்டையின் இறுதி மாதங்களில் 40000 முதல் 70000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகள் போராளிகள் என்று வலியுறுத்துகிறது.

மனிதாபிமான அமைப்புகள் மோதல் வலயங்களிற்குள் மண்டலங்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் வாயடைக்கப்பட்டதாகவும் அல்லது நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தார்மீக மற்றும் சட்ட மதிப்பீடுகள் சிக்கலாகின. பொதுமக்களின் இறப்புகளின் அளவு மோதலின் முடிவில் மிகவும் பிரச்சினைக்குரிய  அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

சர்வதேச  மௌனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் அவை வெறுமனே நிராகரிக்கப்பட்டன. இதனால் அரசாங்கம் சில விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இதனை பயங்கரவாத அமைப்பொன்று முற்றாக அழிக்கப்பட்ட மிகவும் வழமைக்கு மாறான தருணம் என தெரிவித்தார். ஆனால், பெரும் மனிதாபிமான விலை காரணமாக அது சர்ச்சையில் சிக்குண்டது.

நீதியை விட புவிசார் அரசியலே மேற்குலகின்  பதிலை தீர்மானித்தது என்கின்றார் அவர்

செப்டம்பர் 11க்கு பின்னர் இலங்கை தனது நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக முன்னிறுத்தியதால் பல நாடுகள் அதற்கு ஆதரவாகயிருந்தன.

அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களின் முயற்சிகள் குறைந்த வெற்றியையே அடைந்தன. கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே மிதமான தடைகளை விதித்தன, அல்லது உதவியை நிறுத்தி வைத்தன. விரிவான சர்வதேச விசாரணை எதுவும் பின்பற்றப்படவில்லை.

hamaz_33.jpg

இலங்கையும் மோதலை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக வெற்றிகரமாக சித்தரித்தது, அதன் நடவடிக்கைகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும் இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்ல என்றும் வாதிட்டது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கை சோர்வை எதிர்கொண்ட மேற்கத்திய நாடுகள் மோதலை விட கட்டுப்படுத்தலையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தன. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடமும் சீனாவுடனான வளர்ந்து வரும் உறவுகளும் மேற்கத்திய அரசாங்கங்களை உண்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்கலாம்.

https://www.virakesari.lk/article/215402

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும்

1 month ago

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும்

May 21, 2025

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை  கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து  விலகி 1965  மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். 

அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி.  ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரமாக கடந்த வருடம் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவசியமான 50 சதவீதத்துக்கும் அதிகமான  வாக்குகளை பெறாமல்  திசாநாயக்க  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்த போதிலும், இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தை அமைத்த  முதல் இடதுசாரி கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே.வி.பி. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆறு தசாப்தங்கள்  காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் மூண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கிளர்ச்சியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு வசதியான  அரசியல்  நிலைவரத்துக்கு வழிவகுத்தது.  தெற்காசியாவில் நேபாளத்துக்கு பிறகு  ஆயுதக் கிளர்ச்சி செய்த அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது.

தலைமறைவாக இயங்கிய புரட்சிகர இயக்கம் என்ற நிலையில் இருந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட  ஆளும் கட்சி என்ற நிலைக்கான  ஜே.வி.பி.யின் பயணம் இலங்கையின் அரசியல் நிலக்காட்சியை மாற்றியமைத்தது. அதன் வெற்றி நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புடைபெயர்வை பிரதிபலித்தது. இத்தகைய ஒரு  பின்புலத்தில், ஏழு மாதகாலமாக பதவியில் இருந்தவரும் நிலையில் ஜே.வி.பி. அதன் 60 வது வருட நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. 

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி திசாநாயக்க ஜே வி.பி. ஒரு அரசியல் சக்தியாக தொடருவதற்கு மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அரசியல் அறிவு ஆகியவை முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்று குறிப்பிட்டிருந்தார். தனது கட்சியின் கொந்தளிப்பான பயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன.

“ஜே.வி.பி.யின்  வரலாறு பூராவும் எமது மனச்சாட்சியே எமக்கு சரியான பாதையை காட்டியது. மனச்சாட்சியே எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும்  எமக்கு துணிச்சலை கொடுத்தது. எமது மனச்சாட்சியின் காரணமாகவே உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சகலரையும்  விடவும் நாம் மேம்பட்டு நிற்கிறோம். எமது மனச்சாட்சியின் அடிப்படையிலேயே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

“துரோகங்களுக்கு மத்தியிலும் கூட எமது மனச்சாட்சியின் அடிப்படையில் பணியாற்றுவோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு நாம் வழங்குகிறோம். மற்றைய எந்தவொரு அரசியல் முகாமிடமும் இல்லாத வெல்லமுடியாத துணிச்சல் எமது கட்சியிடம் இருக்கிறது. குறைபாடுகளையும் தவறுகளையும்  ஒத்துக்கொண்டு எம்மைத் திருத்திக் கொள்வதற்கு போதுமான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது. சொல்லொணா இடர்பாடுகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் பணியாற்றுவதற்கான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது.

“எமது அரசியல் பயணத்தை  நிறுத்துவதற்கு வழிவகுத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், பயணத்தை இடைவிடாமல் தொடருவதற்கு எமக்கு துணிச்சல் இருந்தது. கொந்தளிப்புகளின்  ஊடாக எமது கட்சியின் வெற்றிக்கு துணிச்சலே வழிவகுத்தது. அத்தகைய வலிமை வேறு எந்த கட்சியிடமும் கிடையாது.  எமது முகாம் வெற்றியை நோக்கிய  பயணத்தை தொடருவதற்கு  நடைமுறை அறிவும்  முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. வெற்றி தொலைவில் இருப்பதாக தோன்றிய ஒரு நேரத்தில் அதைச் சாதிப்பதற்கு நடைமுறை அறிவு எமக்கு உதவியது.

“சவால்களை எதிர்நோக்கவேண்டி வந்தாலும் கூட கொந்தளிப்புக்கு மத்தியிலும் கப்பல் சரியான பயண இலக்கை அடையும். எமது கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கொடுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானார்கள். எமது கட்சி  மனிதகுலத்தின் நன்மைக்காக தியாகங்களைச் செய்த வரலாற்றைக் கொண்டது.  உண்மைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராயிருப்பதால், எமது முகாம் வெல்ல முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. வெற்றிக்காக சளைக்காமல் பணியாற்றுவதற்கு நாம் தயாராயிருக்கிறோம்” என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி  கூறியதை சுருக்கமாகச் சொல்வதானால், மனச்சாட்சியும் துணிச்சலும் நடைமுறை அறிவுமே ஜே.வி.பி.யின் வெற்றியின் தூண்கள். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜே.வி.பி. அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்பதை மறுக்க இயலாது. ஆனால், அது இன்று எந்தளவுக்கு இடதுசாரி இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகின்றது என்ற ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது. 

முதன்முறையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஒரு இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஜே.வி.பி. தலைமையிலான  அரசாங்கத்தின் ஏழு மாதகால நிருவாகத்தை அதன் முழுமையான செயலாற்றலையும் மதிப்பிடுவதற்கு அளவுகோலாக பயன்படுத்ததுவது பொருத்தமானதல்ல. ஆனால், அதன் இதுவரையான ஆட்சி எதிர்காலத்தில்  அது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு  வல்லமையைக் கொண்டதாக செயற்படும் என்பதை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கு போதுமானது  எனலாம். 

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் போன்று நாட்டின் சகல இனமக்களினதும் சகல பிராந்தியங்களினதும் பெருமளவு ஆதரவுடன் வேறு எந்தவொரு அரசாங்கமும் முன்னர் பதவிக்கு வந்ததில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் கூடுதலான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியதைப் போன்று முன்னர் எந்தவொரு தென்னிலங்கை கட்சியும்  சாதித்துக் காட்டியதில்லை. நாடு தழுவிய ஆணையை தாங்கள் பெற்றிருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் எப்போதுமே பெருமையாகக் கூறுவதற்கு தவறுவதில்லை. 

ஆனால், தங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு பல்லின சமூகத்தின் ஆணை என்பதை மானசீகமாகப்  புரிந்து கொண்டு அரசாங்க தலைவர்கள் எந்தளவுக்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஆட்சிமுறையை முன்னெடுப்பதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இந்த இடத்தில் தங்களது அரசியல் பயணத்தை வழிநடத்தியதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறும் மனச்சாட்சி குறித்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

பாரம்பரியமான இடதுசாரி இயக்கத்தின் மீதான அதிருப்தியும் 1960 களின் நடுப்பகுதியில் ஜே.வி.பி.யின் தோற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணி என்று கூறப்படுவதுண்டு. அதே போன்று பாரம்பரியமான அதிகார வர்க்க அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பே அறுபது வருடங்களுக்கு பிறகு ஜே.வி.பி.யை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆறு தசாப்த காலகட்டத்தில் நாட்டைச் சின்னாபின்னப்படுத்திய முக்கியமான சகல நெருக்கடிகளில்  இருந்தும் முறையான படிப்பினையை பெற்றுக் கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் வகுக்க வேண்டும். அது விடயத்தில் அவர்களிடம் பாரிய கரிசனைப்  பற்றாக்குறை காணப்படுகிறது. 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப் போவதாகவும் இனவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் மீண்டும் தலைகாட்ட அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுவதை கேட்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்க அமைப்புகளுக்கு நியமனங்களைச் செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை தொடக்கம் சிறுபான்மைச் சமூகங்களின்  பிரச்சினைகளை கையாளுவது வரை அரசாங்கத்திடம் ஆரோக்கியமான மனமாற்றத்தை காணமுடியவில்லை. 

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த  சிக்கலான தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினால் குறுகிய காலத்திற்குள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த பிரச்சினைக்கு நாளடைவில் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முன்னைய அரசாங்கங்களை விடவும் வேறுபட்ட அணுகுமுறையை  புதிய அரசாங்கம் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டும் என்பதற்கான எந்தவிதமான அறிகுறியையும் கூட காணமுடியாமல் இருப்பது கவலைக்குரியது. 

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்றுடன் சரியாக பதினாறு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. அந்த கொடிய போரின் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளை கையாளுவதில் கூட தேசிய மக்கள் சக்தியிடம் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் காணமுடியாமல் இருக்கிறது. 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இதுவரையான சகல முயற்சிகளையும் எதிர்த்துநின்ற ஒரு கடந்த காலத்தை ஜே. வி.பி. கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை காலமும் அந்த பிரச்சினை தொடர்பில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச்  செய்யாமல்  புதிய அரசியல்  கலாசாரம் பற்றி உரத்துப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பாரம்பரியமாக தமிழ் தேசியவாத கட்சிகளுக்கு வாக்களித்துவந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவற்றை பெருமளவுக்கு நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள். அந்த  மக்களுக்கு எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க சரியான சமிக்ஞையைக் காண்பிக்காததன் விளைவை உள்ளூராட்சி தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த கருத்தை தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் நிராயப்படுத்துவதாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. 

ஆனால், தென்னிலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதற்காக எவ்வளவு காலத்துக்குத்தான் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் அரசாங்கங்களும் பெரும்பான்மையின சமூகமும் மாறாத நிலைப்பாட்டுடன் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளப் போகின்றன? சிறுபான்மைச் சமூகங்களின் நியாபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக தென்னிலங்கைச் சமூகத்தில் காணப்படும் கடுமையான உணர்வுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை அல்ல,  இனப்பிரச்சினைக்கு  தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை அந்த மக்களுக்கு உணர்த்துவதற்கும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குமான நடவடிக்கைகளிலலேயே தேசிய மக்கள் சக்தி இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஜே.வி.பி. தலைவர்கள் தங்களது பழைய  நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இந்த இடத்தில் மீண்டும் மனச்சாட்சி குறித்து அவர்களுக்கு  நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வலுவான முறையில் வெளிக்கிளம்புவதற்கு  சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட  பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்கள் இறுதியில்  தென்னிலங்கைச் சமுதாயத்துக்கும் கூட பாதகமாக அமைந்த வரலாற்றுப் பாடத்தை  அடிப்படையாகக் கொண்டு  மக்களுக்கு  சரியான பாதையைக்  காட்டுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும்.  தங்களை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை இந்த விடயத்திலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிக்காட்ட வேண்டும். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.

https://arangamnews.com/?p=12035

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில் பொருளாதார வழித்தடம் அவசியம்; தரைவழி தொடர்பு முக்கியம் - ரணில்

1 month ago

21 MAY, 2025 | 03:30 PM

image

ரொபட் அன்டனி

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொண்டு நாங்கள் இந்த நன்மையை அடையப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

பார்த் பைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த ஐந்தாவது வங்காள விரிகுடா மாநாடு நேற்று (20) கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிந்தனை குழாம் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,

வங்காள விரிகுடா தொடர்பான மாநாடு மிகவும் தீர்க்கமான கட்டத்தில் நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கு தீர்வை வரிகளை விதித்திருக்கின்றார். உலகமயமாதல் செயல்பாடு மாற்றமடையாது. ஆனால் அது தொடர்பான முறையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்யப்போகிறோம்? நாம் ஒரு பிராந்திய அமைப்பாக முன்வரப் போகின்றோமா?

அப்படியானால் எந்த அமைப்பு இதற்கு தலைமை தாங்கும்? பீம்ஸ்டெக் அல்லது பட்டுப்பாதை (BRI) அல்லது ஆசியான் அமைப்பு இவற்றில் எது இந்த மாற்றத்தை நோக்கி நகர்வதில் தலைமைத்தும் வகிக்கப்போகிறது? நாம் ஒரு பிராந்தியமாக செயல்படுவதா? போன்று கேள்விகள் எம்முன் எழுகின்றன.

அமெரிக்கா ஜனாதிபதி இந்த தீர்வை வரிகளை விதித்தவுடன் இந்தியா ஜப்பான் சீனா கொரியா போன்ற நாடுகள் அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தின.

இந்நிலையில் எமது இந்த வங்காள விரிகுடா நாடுகள் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகின்றன? எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா 30 ட்ரில்லியன் டொலர்களுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க போகிறது. இந்தோனேசியா நான்காவது பொருளாதாரமாக உருவெடுக்கும்.

பங்களாதேஷ் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் முதல் 30 நாடுகளுக்குள்ளே வந்துவிடும். இந்த இடத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வாறு இந்த அபிவிருத்தியை நாம் பயன்படுத்த போகிறோம் என்பது எமன் இருக்கின்ற கேள்வியாகும். இதில் இந்த பீம்ஸ்டேக் அமைப்பு அல்லது வங்காள விரிகுடா நாடுகள் என்ன செய்யப் போகின்றன? நாம் ஒரு பிராந்தியமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தற்போது நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றன. பொருளாதார வழித்தடங்கள் அவசியமாகின்றன. சீனா - சிங்கப்பூருக்கு இடையில் தொடர்பு காணப்படுகிறது.

சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையில் ரயில் பாதை தொடர்பு காணப்படுகிறது. இந்தியா மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ரயில்வே துறையுடன் ஒரு பொருளாதார வழித்தடம் காணப்படுகிறது.

இந்நிலையில் நாம் எவ்வாறு எமது தொடர்புகளை வலுப்படுத்த போகிறோம் என்பது முக்கியமாக இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் தெலுங்கானா ஆந்திரா தமிழ்நாடு இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் அவசியமாகின்றது. அதன் ஊடாகவே நாம் எமது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

மேலும் இலங்கை தற்போது மிக முக்கியமாக ஆடை துறையில் தங்கியிருக்கிறது. அதிலிருந்து நாங்கள் வெளியே வர வேண்டும்.

இலங்கை பிராந்திய ரீதியான வர்த்தகங்களை செய்கின்ற ஒரு தளமாக மாற்றமடைய வேண்டும். இதற்கு நாங்கள் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று புதிய துறைமுகத்தை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும்.

எமது பொருளாதார ஐந்து முதல் பத்து வீத வளர்ச்சி அடைய வேண்டுமானால் வருகின்ற கொள்கலன்களை எங்கே நாம் தரையிறக்குவது? அதற்கான வசதிகள் எம்மிடம் இருக்கின்றதா?

இலங்கை இந்திய தரை தொடர்பு தொடர்பாக நாம் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்திருக்கிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு இடையிலான பாலம் உருவாக வேண்டும். அதற்கு முன்னர் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் மற்றும் சுற்றாடல் ரீதியான விடயங்கள் ஆராயப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டி இருக்கின்றது. புதிய வர்த்தக தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/215333

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?!

1 month ago

20 MAY, 2025 | 12:46 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்'  என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில்  இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் 'பொய்ச்செய்தியை'  பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்” என்ற மாயைக்கு பின்னால் இருக்கும் குழுவே விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என்ற பொய்ச்செய்திப் பிரசாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டது என்று அறியவருகிறது. பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் கூட உயிருடன் இருக்கிறார்கள் என்ற மாயையையும் இந்த குழுவே பிரசாரம் செய்தது. ஐரோப்பாவில் இருக்கும் மதிவதனியின் சகோதரர்கள் உட்பட  பல்வேறு நபர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் முக்கியமான ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்களும் இந்த 'உயிருடன் இருக்கும்' புரளிக்கு ஆதரவளித்தார்கள்.

905cc18c-b5a0-43f4-84be-9b0dd6f2a0ae.jpg

போலி துவாரகா, பிரபாகரன் மற்றும் மதிவதனியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை 'தலைவரின்' குடும்பத்தின் எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஆதரவாளர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்கு ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஏமாற்று வேலையின் ஓர் அங்கமாகும். இதைப் பற்றி நான் 2023 மார்ச்சில் 'பிரபாவையும் குடும்பத்தையும் பயன்படுத்தி போலிச்செய்தி மோசடி' என்ற தலைப்பில் விரிவாக எழுதினேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த மோசடி வேலை பரிதாபத்துக்குரிய சிணுங்கலாக இப்போது தணிந்துபோய்விட்டது. துவாரகாவாக பாசாங்கு செய்தவர் அஞ்சி நடுங்கி தற்போது வெளியில் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

விடுதலை புலிகளின் பெருமளவு ஆதரவாளர்களை ஏமாற்றி அவர்களது யூரோக்களை, பிராங்குகளை, குரோனர்களை, ஸ்ரேர்லிங் பவுண்களை கறந்த மோசடிக்காரர்கள் பொன்முட்டையிடும் அந்த வாத்தை கைவிட்டுவிடத் தயாராக இல்லை. இப்போது அவர்கள் பொட்டு அம்மானை பிடித்திருக்கிறார்கள். அவர் உக்ரெயின் நாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பொட்டு அம்மானின் 'மீள்வருகைக்கும்' அதைத் தொடர்ந்து நிதி திரட்டலுக்குமான களம் அமைக்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில விவேகமுள்ள, அக்கறையுடைய உறுப்பினர்கள் இவ்வாரம் பொட்டு அம்மானின் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் இந்த பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளினால் குழப்பமடைந்த சில நபர்கள் உண்மை நிலையை எழுதுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டவர்களில் பலர் ஐரோப்பாவில் வளர்ந்த இளைஞர்களே. அவர்களில் சிலர் பொட்டு அம்மானை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். அதனால் இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை முன்னைய எனது எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் பொட்டு அம்மான் மீது கவனம் செலுத்துகிறது.

பொட்டு அம்மான் என்ற சண்முகநாதன் சிவசங்கர் விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக 2009ஆம் ஆண்டில் மரணமடையும் வரை 21 வருடங்கள் செயற்பட்டார். விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பொட்டு அம்மான் நடப்பின்படி அந்த இயக்கத்தின் இரண்டாவது பெரிய தலைவராக இருந்தார். உரிமைப்படி மூப்பின் அடிப்படையில் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என்றால் அது பேபி சுப்பிரமணியமே. ஆனால், இரண்டாவது தலைவராக நடைமுறையில் பொட்டு அம்மானே செயற்பட்டார். பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக சட்டப்படியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரது சடலமோ அல்லது எச்சங்களோ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் இறக்கவில்லை என்று சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.

a9240536-f25f-4cf6-9782-b49df3bd5374.jpg

பொட்டுவும் குடும்பமும்  உயிருடன் இல்லை

இந்த கட்டத்தில் நான் பொட்டு அம்மானின் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் போன்றே பொட்டு அம்மானும் அவரது குடும்பத்தினரும் கூட இறந்துவிட்டனர். பிரபாகரனும் மனைவி மதிவதனி, பிள்ளைகள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரனும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமடைந்தனர். அதேபோன்றே பொட்டு அம்மானும் அவரது மனைவி வத்சலா, மகன்களான பார்த்திபன், அருள்வேந்தன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை.

பொட்டுவின் மூத்தமகன் பார்த்திபனும் இரண்டாவது மகன் அருள்வேந்தனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து ஆயுதப் பயற்சிகளை பெற்றனர். போர்க்களத்தில் முன்னரங்கத்தில் நின்று போராடிய அவர்கள் இருவரும் வெவ்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். இருவரும் 2009 ஜனவரிக்கும் மேயிற்கும் இடைப்பட்ட மாதங்களிலலேயே கொல்லப்பட்டனர். திகதிகளை அறியக்கூடியதாக இல்லை.

இளைய மகன் கலைக்கண்ணன் 2009 மே 13ஆம் திகதி கொல்லப்பட்டான். ஒன்பது வயதான அவன் தாயுடன் சேர்ந்து மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து வெளியேறி அருகாமைப் பதுங்குகுழியில் இருந்த நண்பர்களுக்காக தண்ணீர் எடுக்கச் சென்றான். அந்தவேளை ஹெலிகொப்டரில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவன் இரத்தம் சிந்திய நிலையில் தாயாரின் கரங்களிலேயே உயிர்விட்டான். பொட்டுவின் மனைவி வத்சலா 2009 மே 16ஆம் திகதி மரணமடைந்தார். ஆட்டிலறி ஷெல் வெடிப்பு ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கணவர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

பொட்டு 2009 மே 18ஆம் திகதி மரணமடைந்தார். வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்த அவர் அதை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தான் தூள்தூளாகப் போவதை உறுதிசெய்வதற்காக பொட்டு தனது அங்கியில் மிகையான அளவுக்கு வெடிபொருட்களை நிரப்பியதாகவும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உதவியாளர்களையும் மெய்க்காவலர்களையும் வேறிடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு திரும்பிவந்து பார்த்த அவர்கள் சிதறிய பொட்டுவின் உடலில் எஞ்சிக்கிடந்தவற்றை அழித்தனர்.

முன்னர் குறிப்பிட்டதை போன்று பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் மூன்று பிள்ளைகள். தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் இருவரும் பெயர்களைச் சூட்டியதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரபாகரன் - மதிவதனி தம்பதியரின் மூத்த மகனுக்கு பிரபாகரனின் சிறந்த நண்பனும் மூத்த இராணுவ தளபதியுமான - சாவகச்சேரி மீசாலையில் இறந்த சார்ள்ஸ் அந்தனியின் பெயர் சூட்டப்பட்டது. அவர்களின் மகளுக்கு துவாரகன் (மயூரன்) என்ற அவரின் மிகுந்த விருப்பத்துக்குரிய மெய்க்காவலரின் நினைவாக துவாரகா என்று பெயர் சூட்டப்பட்டது. இளையமகனுக்கு விடுதலை புலிகளில் இணைந்து சண்டையில் உயர்துறந்த மதிவதனியின் சொந்தச் சகோதரன் பாலச்சந்திரனின் பெயர் சூட்டப்பட்டது.

பொட்டு அம்மானும் வத்சலாவும் தங்களது மூத்த மகனுக்கு பாரத்திபன் என்று பெயர் சூட்டினார்கள். 1987ஆம் ஆண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் உண்மையான பெயர் பார்த்திபன். அவர் சிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு விற்பன்னர். அதேபோன்றே பொட்டுவின் மகன் பார்த்திபனும் சதுரங்கத்தில் திறமையுடையவர். இரண்டாவது மகனுக்கு அவர்கள் கொழும்பில் தன்னைத்தானே வெடிக்கவைத்து இறந்த ஒரு கரும்புலியின் நினைவாக அருள்வேந்தன் என்று அவர்கள் பெயர் வைத்தனர். பொட்டுவின் பிரதி கேணல் சார்ள்ஸும் கூட விடுதலை புலிகள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் இயக்கத்தை ஆரம்பித்தபோது தனக்கு அருள்வேந்தன் என்று இயக்கப்பெயரை வைத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

பொட்டு தம்பதியர் தங்களது இளையமகனுக்கு சண்டையில் இறந்த மேஜர் கண்ணனின் பெயரைச் சூட்டினர். கண்ணன் வத்சலாவின் தாய்மாமனும் கூட. 2000ஆம் ஆண்டில் பிறந்த கலைக்கண்ணனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் பார்த்திபன், அருள்வேந்தன் ஆகியோருக்கு இடையில் நீண்ட வயது வித்தியாசம். அதேபோன்றே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா ஆகியோருக்கும் இடையில் நீண்ட வயது வித்தியாசம். பாலச்சந்திரன் 1997ஆம் ஆண்டில் பிறந்தவர்.

பொட்டுவின் சகோதரி கெப்டன் அருந்ததி

இரு மகன்களுக்கும் புறம்பாக பொட்டு குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து சண்டையில் இறந்தார். பொட்டுவின் இளைய சகோதரி காப்டன் அருந்ததி என்ற சிவரஞ்சனி சண்முகநாதனே அவராவார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தச்சன்காடு பகுதியில் 1990 நவம்பரில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டார். சிவரஞ்சனியின் இயக்கப்பெயர் அருந்ததியாக இருந்தபோதிலும், பொட்டுவின் சகோதரி என்பதால் தோழர்கள் அவரை 'பொட்டு' என்றே அழைத்தார்கள். பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட பொட்டுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானார். அவரின் இளைய சகோதரரும் வத்சலாவின் ஒரு உடன்பிறப்பும் லண்டனில் வசிக்கிறார்கள்.

பொட்டு இரு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலை புலிகளின் பலம் பொருந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மிகவும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டார். அவர் 1962ஆம் ஆண்டில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பொட்டு சுமார் 30 வருடங்கள் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1983 ஜூலை 23ஆம் திகதி விடுதலை புலிகள் திருநெல்வேலியில் இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் 23 முழுநேர உறுப்பினர்களும் ஏழு பகுதிநேர உதவியாளர்களும் மாத்திரமே இருந்தனர். பொட்டு இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் 30 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியாலை - நாயன்மார்கட்டு 

அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டில் வசித்தபோதிலும், அவர்கள் அயல் அரியாலையைச் சேர்ந்தவர்கள். சிறுவர் பராயத்தில் இருந்தே அரியாலையில் இருந்த தனது வயதையொத்த சிறுவர்களுடன் பொட்டு நெருங்கிப் பழகி நாயன்மார்கட்டையும் விட கூடுதலான நேரத்தை அரியாலையிலேயே கழித்தார்.

சிவசங்கரின் தந்தையார் சண்முகநாதன், சண்முகலிங்கம் என்றும் அறியப்பட்டிருந்தார். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் பல வருடங்களாக ஒரு எழுதுவினைஞராக அவர் பணியாற்றினார். பிள்ளைகளின் கல்விக்காக குடும்பம் யாழ்ப்பாணத்திலேயே வசித்தது.1990 களின் பிற்பகுதி வரை பொட்டுவின் தந்தையார் மலையகத்திலேயே தொடர்ந்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொட்டுவைப் பற்றி இலங்கை அதிகாரிகளுக்கு பெரிதாக எதுவும் தெரியாத காரணத்தால் தந்தையாருக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதில் மகன் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்தார்.

பொட்டு மகேஸ்வரி வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி) மன்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். மிகவும் உயரமான, அழகான தோற்றமுடைய பொட்டு அவரது நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கினார். கல்வியிலோ அல்லது விளையாட்டுகளிலோ அவர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், பெருமளவு கட்டுரைப் போட்டிகளில் அவர் பரிசுகளை வென்றார். விடுதலை புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியான பஷீர் காக்காவினாலும் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதியான சந்தோசம் மாஸ்டரினாலுமே சிவசங்கர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். இது 1981ஆம் ஆண்டில் நடந்தது.

முதலில் அவர் பகுதிநேர உதவியாளராகவே செயற்பட்டார். முழுநேர உறுப்பினராக மாறியதும் சிவசங்கருக்கு குமணண் என்ற இயக்கப்பெயரே கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அவர் பொட்டு என்ற அறியப்படலானார். பாடசாலை நாட்களில் இருந்து அவரை நண்பர்கள் பொட்டு என்றே அழைத்தார்கள்.

பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய்

பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. பொட்டு என்பது நெற்றியில் வைத்துக் கொள்வது. கோவில்களில் அல்லது சுப வைபவங்களில் பொட்டு வைப்பதற்கு சந்தனம் அல்லது குங்குமமே பயன்படுத்தப்படும்.

தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியவாதக் கொள்கையுடைய இலங்கை தமிழ் அரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் எழுச்சி போராட்டம் மற்றும் தியாகம் என்ற கோட்பாடுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இதன் ஒரு தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இரத்தத் திலகமிடும் பழக்கம் வந்தது. தமிழ் அரசியல் தலைவர்களினால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மேடைகளில் ஏறி தங்களது விரல்களை குத்தி அதில் இருந்து வெளிவரும் இரத்தத்தால் தலைவர்களின் நெற்றியில் பொட்டு வைத்து தங்களது இரத்தத்தையும் உயிரையும் தமிழ் இலட்சியத்துக்காக அர்ப்பணிப்பதாக சூளுரைப்பார்கள்.

இளம் சிவசங்கரும் ஒரு சந்தர்ப்பத்தில் உணர்சிவசப்பட்டவராக மேடையில் ஏறி பிளேட்டினால் தனது கையைக் கிழித்து தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் நெற்றிகளில் பொட்டு வைத்தார். தமிழர் அரசியலில் மிகவும் உணர்ச்சிவசமான பிரசாரங்களைக் கண்ட 1977 பொதுத்தேர்தலின் போதே இது நடந்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டது. யோகேஸ்வரன் அந்த தேர்தலில் கூட்டணியின் யாழ்ப்பாணம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

சிவசங்கரின் இந்த உணர்ச்சிவசமான சைகை அவரது நண்பர்களினால் பெரும் வேடிக்கையாக நோக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் அவரை சீண்டிக் குறும்பு செய்து பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு புதிய தோழர்களும் அவரை பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர்.

இயக்கத்தில் அவரின் மூப்புநிலை அதிகரிக்கவே பொட்டுவுடன் 'அம்மான்' என்ற விகுதியும் சேர்ந்து கொண்டது. விடுதலை புலிகள் மத்தியில் மூப்புநிலையில் இருந்தவர்களை 'அண்ணன்', 'மாஸ்டர்' அல்லது 'அம்மான்' என்று அழைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. பொட்டுவின் சர்வதேச வானொலி சமிக்ஞை 'பாபா ஒஸ்கார் ' (Papa Oscar) என்பதாகும். விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குண்டுகளை வெடிக்கவைக்கத் தொடங்கிய பின்னரான வருடங்களில் விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் பொட்டு அம்மானை கிண்டலாக 'வெடியரசன்' என்று அழைத்தனர்.

உத்தர பிரதேசத்தில் முதல் பயிற்சி அணி 

1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அட்டூழியமும்  அதன் விளைவுகளும் தமிழர் அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அன்று 'பொடியன்கள்' என்று அறியப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சியை வழங்கியதன் மூலம் இந்தியா துடிப்பான பாத்திரம் ஒன்றை வகித்தது. விடுதலை புலிகளின் முதலாவது அணியின் ஒரு உறுப்பினராக  ஆயுதப் பயிற்சிக்காக வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிவசங்கர் சென்றார்.  முதலாவது அணி பயிற்சி பெறுனர்களில் இயக்கத்தின் பழைய உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் கலந்திருந்தனர்.

இந்தியாவில் பயிற்சியைப் பெற்ற பிறகு குறுகிய காலம் பொட்டு பிரபாகரனின் மெய்க்காவலராக பணியாற்றினார். அந்த காலப்பகுதியில்தான் பொட்டு தனது தலைவரின் வெறிபிடித்த ஒரு சீடராக மாறினார். அடிமைத்தனமான அர்ப்பணிப்புடன  தனது தலைவருக்கு பொட்டு சேவை செய்தார். பிரபாகரன் மீதான பொட்டுவின் விசுவாசம் தடுமாற்றம் இல்லாததும் கேள்விக்கு இடமின்றியதுமாகும்.  என்றாலும் பொட்டுவின் புலனாய்வு ஆற்றலே அவரை மேல்நிலைக்கு கொண்டுவந்தது.  முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு லவ்னெனிற்றி பேரியா போன்று பிரபாகரனுக்கு பொட்டு இருந்தார்.

சீட்டாட்டம் 

சீட்டாட்டத்தில் பொட்டுவின் நிபுணத்துவம் அவரது ஆற்றலுக்கும் திறமைக்குமான அடையாளமாக இருந்தது. சீட்டாட்டத்தில் அவர் மிகுந்த பிரியம் கொண்டவர். சீட்டாட்டத்துக்காக பொட்டுவை இரவில் நித்திரையில் இருந்துகூட எழுப்ப முடியும் என்று அவரின் முன்னாள் இயக்கச் சகா ஒருவர் என்னிடம் கூறினார். எந்த நேரத்திலும் சீட்டாடுவதற்கு பொட்டு தயாராயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் ரோந்து அணியொன்று நெருங்கி வந்துகொண்டிருந்த காரணத்தால் மறைவிடம் ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் தப்பியோட வேண்டியிருந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட்டுகள் அடங்கிய பையொன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்த பொட்டு சீடடுப்பக்கெட்டை எடுத்துச் செல்ல மறக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.

பொட்டு 'திறீ நோட் ஃபோர்' விளையாட்டில் வியத்தகு திறமைசாலி. ஒரு குறுகிய நேரத்திற்குள் தன்னுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் எந்த வகையான சீட்டுக்கள் இருக்கின்றன என்பதை அவர் கண்டு பிடித்துவிடுவார். அதன் பிரகாரம் விளையாட்டில் அவர் தனது சீட்டுக்களை பயன்படுத்துவார். ஏமாற்றி வீம்பு பேசுவதிலும் எதிராளிகளை அம்பலப்படுத்துவதிலும் பொட்டு இயற்கைமீறிய திறமையைக் கொண்டிருந்தார். அவரது இந்த குணாதிசயம் புலனாய்வு தலைவராக திறமையுடன் செயற்படுவதற்கு உதவியது.

1985ஆம் ஆண்டில் பொட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். வெவ்வேறு காலப் பகுதிகளில் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக பஷீர் காக்கா, அருணா, குமரப்பா ஆகியோர் இருந்தபோது அவர்களின் முக்கியமான ஒரு தோழராக பொட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டார்.

பொட்டு கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதி நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. மட்டக்களப்பில்தான் பொட்டு வத்சலாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். வத்சலா மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரில் ஒருவர் மகழடித்தீவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் உறவினர்கள்.முன்னாள் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர், சம்பந்தமூர்த்தியின் மனைவியின் தந்தையார்.

மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்தில் பொட்டு அம்மான் தனது திறமையை நிரூபித்தார். மாங்கேணி முகாம், கறுத்தப்பாலம் சோதனை நிலை மற்றும் பொலன்னறுவை வீதியில் இராணுவ ரோந்துப் பிரிவு மீதான தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளுக்கு பொட்டு தலைமை தாங்கினார். ஒரு தடவை காரைதீவில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பொட்டு அகப்பட்டுக்கொண்டார். ஆனால், சாரம் அணிந்திருந்த அவர் படையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பொட்டு அம்மான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் புவியியலை தனது பிறங்கையைப் போன்று அறிந்திருந்தார். படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியில் நடமாடித் திரிந்தபோது அவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியையே பயன்படுத்தினார். பணத்தைப் பெறுவதற்காக தனவந்த நிலச்சுவாந்தார்களையும் வர்த்தகர்களையும் கடத்துவதில் பொட்டு ஈவிரக்கமற்றவராக நடந்துகொண்டார். அது விடயத்தில் அவர் பன்குடாவெளியில் அரிசி ஆலை மற்றும் நகைக்கடை உரிமையாளரான சின்னத்தம்பி (சம்பந்தமூர்த்தியின் தந்தையார்) உட்பட வத்சலாவின் உறவினர்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

1987 அக்டோபரில் இந்திய இராணுவத்துடன் போர் மூண்டபோது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து விநியோகங்கள் இடையூறின்றி வந்து சேருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பதில் யாழ்ப்பாண தளபதி 

பிறகு யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்ததும் பொட்டு இந்திய இராணுவத்துக்கு எதிரான கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இம்ரான், பாண்டியன்  மற்றும் மதி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததை அடுத்து அவர் ஒரு குறுகிய காலத்துக்கு  பதில்  யாழ்ப்பாணத் தளபதியாக செயற்பட்டார். இந்திய இராணுவத்தினருடனான சண்டையொன்றில் பொட்டு வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு வன்னியில் சிகிச்சை பெற்றார்.  பிரபாகரனும் அப்போது வன்னிக்கு நகர்ந்திருந்தார் .

அதற்கு பிறகு மேலதிக மருத்துவச்  சிகிச்சை பெறுவதற்காக பொட்டு இரகசியமாக தமிழ்நாட்டுக்கு சென்றார்.  இலங்கை மண்ணில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் காயமடைந்த விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இரகசியமாகச் சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தது உண்மையில் ஒரு விசித்திரமாகும். வத்சலாவும் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் இருவரும் வைபவரீதியாக தாலிகட்டித்  திருமணம் செய்து கொண்டனர்.  முன்னதாக அவர்கள் மட்டக்களப்பில் பதிவுத் திருமணமே  செய்திருந்தனர்.

புலனாய்வு தலைவர் 

முழுமையாக குணமடைந்து பொட்டு இலங்கை திரும்பிய பிறகு விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிருவகிக்கும் பொறுப்பு 1988 பிற்பகுதியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பிரிவு புலிகளின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை  (Tiger Organization Security Intelligence Service or TOSIS) என்று அழைக்கப்பட்டது. அந்த பிரிவின் தலைவராக இருந்த வசந்தன் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

புலனாய்வுப் பிரிவை பொறுப்பேற்ற பிறகு பொட்டு அம்மான் அதை முற்றாக மாற்றியமைத்து 21 வருடங்களாக தலைவராக இருந்தார். வருடங்கள் கடந்தோட அவர் மிகவும் அஞ்சப்படுகிற ஒருவர் என்ற 'புகழைப்'  பெற்றார்.  இயக்கத்திற்குள்ளும் அவரின் அந்தஸ்து வளர்ந்தது. அதற்கு பிறகுதான் அவர் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படலானார்.  விடுதலை புலிகளின் தலைவரை சென்றடைய வேண்டிய விடயங்கள் பொட்டுவின் ஊடாகவே தெரியப்படுத்தப்படுகின்ற அளவுக்கு அவரது நிலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில் பொட்டு பிரபாகரனை குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து தடவைகள் சந்திப்பார்.

விடுதலை புலிகளின் மூத்த தலைவர்களினால் சந்திக்க முடியாதவராக பிரபாகரன் மாறிய ஒரு காலகட்டம் வந்தது. ஆனால்,  எந்த நேரத்திலும் பொட்டுவினால் பிரபாகரனைச் சந்திக்க முடியும்.  ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு விடுதலை புலிகளின் தலைவரை  சந்திக்கக்கூடிய ஒரேயொரு இயக்கத் தலைவராகவும் பொட்டு விளங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தங்களின் ஆயுதங்களை கையளித்த பின்னரே பிரபாகரனைச் சந்திப்பதற்கு அரிதாக  அனுமதிக்கப்பட்டனர்.

சகல வல்லமையும் கொண்ட பொட்டு

பிரபாகரனுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்த நிலைமை ஏற்பட்டது. 'உள்ளேயிருக்கக்கூடிய எதிரிகள்'  பற்றிய அச்சம்  விடுதலை புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பிரபாகரன் பெருமளவுக்கு அன்னியப்பட்டவராக மாறும் நிலையை தோற்றுவித்தது. பொட்டு அம்மான் சசகல வல்லமையும்  பொருந்தியவராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைவரின் அன்றாட நடவடிக்கைகளை 'கட்டுப்படுத்துபவராக' அவர் விளங்கினார்.

https://www.virakesari.lk/article/215215

Checked
Tue, 06/24/2025 - 13:11
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed