புதிய பதிவுகள்2

பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!

2 weeks 4 days ago
26 Sep, 2025 | 11:01 AM கொழும்பு, கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செப்டெம்பர் 24 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் திருடர்கள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226112

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 4 days ago
அறிவியல் செய்தித் தளமாக வாசகர்களை ஈர்த்த யாழ்களத்தை வளரவிடாமல் ஒரு தலைப்பட்சமாக சிலரது அரசியல் கருத்துக்களையும் அவர்களது பொழுது போக்காக உரையாடும் தளமாகவும் கிணற்று தவளைத் தளமாக மாற்ற எடுத்த முயற்சிகளை கடிவாளம் போட்டு தடுத்து அறிவியல் தளமாக பேண யாழ்கள நிர்வாகத்தினராகிய நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். உங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

2 weeks 4 days ago
இத்தனை பெருந்தொகை ஈழத்தமிழர்களும் மேற்குலகு வந்து அவுத்துப் போட்டு அவர்களை அரவணைத்து நடப்பதால் தான் எம்மை இந்த நாடுகளில் தங்குமிட வசதி கொடுத்துள்ளார்கள் என்று கூற வருகின்றீர்களா?

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

2 weeks 4 days ago
வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி தொழில் தொடங்குவதற்காக கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டிற்கு அனுப்பியிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் டொலர்கள் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1448549

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

2 weeks 5 days ago
குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂 எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

2 weeks 5 days ago
இதன் உள்நோக்கம் இன்னமும் வெளிவரவில்லை. பொறுத்திருந்து பார்ப் போம்.

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

2 weeks 5 days ago
இது ஒரு போருக்கான அமெரிக்காவின் தயாரிப்பாக நிச்சயமாக இல்லை என கருதுகிறேன், அமெரிக்க பொருளாதாரம் ஒரு பெரியளவிலான போர் ஒன்றை இரஸ்சியாவிற்கெதிராக ஆரம்பிக்காது, ஆனால் என்றுமில்லாதவாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரஸ்சிய ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் அத்துமீறுவதாக கூறுகின்ற செயல்பாடு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு போருக்காக தயாராகி வருவதாக காட்டுகின்றன. முழு அளவிலான போர் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்புடைய சூழ்நிலை ஐரோப்பாவிலும் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய அறிக்கைகள் கடுமையாக இருக்கிறது, ஐரோப்பிய ஒன்றியம் தற்போதய உக்கிரேன் இரஸ்சிய போரில் ஏதேனும் வகையில் தலையீடு செய்யலாம். சில வேளை அமெரிக்க பொருளாதார அழுத்தத்திற்கு ஈடு கொடுக்கும் முகமாக தேவையற்ற உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

2 weeks 5 days ago
மேற்குலகை அரவணைத்து நடந்தால் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவுத்துப் போட மறுத்தால் ஒரேஒரு அறிக்கையில் எவருமே போகாமல் பண்ணி விடுவார்கள்.

மிகவும் அசாதாரணமான சந்திப்புக்காக நூற்றுக்கணக்கான மூத்த இராணுவ அதிகாரிகளை வர்ஜீனியாவிற்கு ஹெக்ஸெத் கட்டளையிடுகிறார்.

2 weeks 5 days ago
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிகாரிகள் பெருமளவில் பணிநீக்கம் செய்வது வரை பல கோட்பாடுகளை அவர்கள் கேள்விப்பட்டதாக ஒரு வட்டாரம் கூறியது, ஆனால் இவ்வளவு மூத்த இராணுவ அதிகாரிகள் திடீரென கூட்டப்பட்டது ஏன் என்பது மிகவும் அசாதாரணமானது. "இது பொது ஸ்க்விட் விளையாட்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது," என்று ஒரு அதிகாரி நகைச்சுவையாகக் கூறினார். ஒரே நேரத்தில் இவ்வளவு உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பது குறித்து சில அதிகாரிகள் பாதுகாப்பு கவலைகளையும் தெரிவித்தனர். ஹெக்ஸெத் "ஒரு பெரிய புதிய இராணுவ பிரச்சாரத்தை அல்லது இராணுவ கட்டளை கட்டமைப்பின் முழுமையான மாற்றத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தால், இதற்கு ஒரு நல்ல காரணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று காங்கிரஸ் உதவியாளர் ஒருவர் CNN இடம் கூறினார். வாஷிங்டன் போஸ்ட் முதலில் கூட்டத்தின் செய்தியை வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்டது. பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், ஹெக்ஸெத் "அடுத்த வார தொடக்கத்தில் தனது மூத்த இராணுவத் தலைவர்களை உரையாற்றுவார்" என்பதை உறுதிப்படுத்தினார். கூட்டத்தின் நோக்கம் அல்லது இந்த உத்தரவு இராணுவத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் கொடி அதிகாரிகளுக்கும் உள்ளதா என்பது குறித்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார், "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சந்திக்க வருவது நன்றாக இல்லையா?" https://edition.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டாவது தவணையில் யாருடனாவது போர் செய்து முத்திரை பதிப்பதையே விரும்புவர். இப்போதுள்ள போர்ச் சூழலில் ரம்பின் கை முந்தப் போகிறதா?

முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது குற்றச்சாட்டு.

2 weeks 5 days ago
முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும். ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். “அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார். தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் நடவடிக்கைகளைத் தடுத்ததாகவும் கோமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Former FBI Director James Comey has been indicted by a federal grand jury, an extraordinary escalation in President Donald Trump’s effort to prosecute his political enemies. Comey, a longtime adversary of the president, is now the first senior government official to face federal charges in one of Trump’s largest grievances: the 2016 investigation into whether his first presidential campaign colluded with Russia. “JUSTICE IN AMERICA! One of the worst human beings this Country has ever been exposed to is James Comey, the former Corrupt Head of the FBI,” Trump wrote in a Truth Social post. Comey has been charged with giving false statements and obstruction of a congressional proceeding, and he could face up to five years in prison if convicted, the Justice Department said in a statement. https://www.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
ராமசெயம் கடைந்தெடுத்த காடை கும்பல் தலைவன் ரியல் எஸ்டேட் மாபியா . குறுநில இளவரசன் பெண் பொறுக்கி ,ரோட்டில் கண்ணுக்கு அழகாக தெரிந்தால் யாரையும் விட்டு வைப்பதில்லை. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ அப்படிப்பட்ட இளவரசனுக்கு ஒரு இட பிரச்சனையில் இடத்தின் மீதும் இடத்தின் ஓனர் மகளின் மீதும் ஒருங்கே ஆசை வர பலவந்தமாக அடைந்துவிட்டர் இரண்டையும் நெஞ்சில் கனன்ற நெருப்பை சிறிது காலம் பொறுமை காத்து தீவிரமாக களத்தில் இறங்கினார் அந்த சாதாரண மிடில் கிளாஸ் மனிதர் .இங்கிருந்து ஆட்களை கொல்ல வைத்தால் மாட்டுவோம் என்று இலங்கையில் இருந்து ஆட்களை வரவைத்தார்.. அதிலும் வித்தியாசமான கொலை செய்யுமாறு பணித்தார். அதென்ன வித்தியாசமான கொலை (கடைசியில்) ஒருவழியா கூலிக்கு கொலை செய்து முடித்தாகி விட்டது. இலங்கைக்கும் படகு ஏறி தப்பித்தும் போய்விட்டார்கள் கிடைத்த ஒரே ஒரு துப்பு அவர்கள் பயன்படுத்திய மாருதி வான் மற்றும் சமீபத்திய பத்திர பதிவுகள் நம்ம காவல்துறையும் ஸ்காட்லாண்டுக்கு ஈடாச்சே ? விரைவாகவே அந்த குற்றவாளியை நெருங்கினர் இங்கதான் ருவிஸ்ற் இருக்கு அப்போதையை திருச்சி ஏ.சி (பெயர் நினைவில் இல்லை. ) கொலைக்கான காரணத்தை அறிந்து வெகுவாக அவரை பாராட்டி விட்டு எஞ்சிய சாட்சியங்களை அழித்துவிட்டு சென்றார் ( விக்ரமின் சாமி மாதிரி நல்ல போலீஸ் போல் இருக்கு) போலீஸ் சாட்சிய அழித்தால் ? சிஐடி அல்ல சிபிஐ , தங்கள் அபிமான ரோ, இண்டர் போல் வந்தாலும் துப்பு துலக்க முடியாது. அதுதான் இப்ப நடக்கிறது இந்த வழக்கு கலியுகம் முடியும் வரை நடக்கும் டிஸ்கி ராம ஜெயம் சடலம் கண்டெடுக்க பட்ட போது ஏதோ மர்ம பொருள் வாயில் திணித்து கொலை செய்தார்கள் அது என்ன மர்ம பொருள் ? பேரை போடுங்க.. ஊடக தர்மமா..? எந்த உறுப்பு தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோ அதை வெட்டி அவன் வாயிலேயே வைக்குமாறு கட்டளை இட்டார் அன்பு தந்தை அதுதான் டாஸ்க் டிஸ்கிக்கு டிஸ்கி தலைப்பை விட்டு விலகி செல்கிறோம் என நினைக்கிறேன் தோழர் வேறு திரியில் இது பற்றி விவாதிப்போம்..

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

2 weeks 5 days ago
ஆட்சிக்கு வந்தவுடன் இனப்பிரச்சனையை தீர்க்க முற்பட்டால் (அதாவது ஒரு கதைக்கு தமிழர் கேட்கும் உரிமைகளை கொடுப்பது) மகிந்த,கோத்தபாய ரணில் போன்ற இனவாத கும்பல் சும்மா இருப்பார்களா? இதுதான் சந்தர்ப்பம் என ஆட்சியையே கவிழ்த்து விடுவார்கள் அல்லவா? இந்த கருத்தை நான் எழுதியதால் நீங்கள் என்னை அனுர ஆதரவாளன் என நினைப்பீர்கள் என எண்ணுகின்றேன்.😂

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

2 weeks 5 days ago
விவசாயம் செய்தவர்களுக்கு தெரியும் குரங்குகளின் அழிப்புகளும் ஆக்கினைகளும்.....இதுகளை வெருட்டுறதுக்கெண்டே அனுமான் வெடி கொழுத்திய அனுபவங்கள் எக்கச்சக்கம். நாள் செல்ல செல்ல மூலைவெடிக்கும் குரங்குகள் அசையவில்லை. எல்லாம் அதுகளுக்கு பழகி விட்டது.😂 கடைசியாக எடுத்த ஆயுதம் வெற்றியளித்தது.😎

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
இவ்வளவு நேரமும் நீங்கள் தலைப்பை விளங்காமல் வாதாடி உள்ளீர்கள் தோழர். இந்த திரியியிலோ வேறு எந்த திரியிலோ நான் எந்த தலைவரையும் ஒழுக்க சீலர் என வாதிடவில்லை. என் வாதம்…. ஒன்றே ஒன்றுதான் … இரு குடும்பபெண்கள்…. தாமாகவே பொதுவெளியில் முன் வந்து அப்படி எதுவும் நடக்கவில்லை + நான் கருணாநிதி மனைவி இல்லை என சொன்ன பின்னர் - அதை மீள மீள பரப்புவது - அந்த பெண்களின் மானத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடும் செயல்…. என்பது மட்டுமே.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
தலைவர் சொன்ன தமிழ்த்தேசியற்கும் இங்கு அரசியல் ஆதாயம் இல்லை சீமானுக்கும் அரசியல் ஆதாயம் இல்லை ஏதோ நாம் இங்கே கருத்தாடியதை பார்த்து படித்து தெளிந்து வாக்களிக்க போவது இல்லை.. காச வாங்கி கொண்டு எப்படியும் சுடாலின் அடுத்த முறை விடியல் தர போகிறார். நமக்குள் தர்க்கம் தலைவர்களது ஒழுக்கம் சார்ந்ததே..

டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

2 weeks 5 days ago
போலி கதைகள் சொல்லி தம் மக்களின் வாய்களை அடைத்து வைப்பதில் மேற்கத்தையவர்கள் வலு கெட்டிக்காரர்கள். ஆனால் இன்றைய சமூகம் கொஞ்சம் சுதாரிப்பதாக தெரிகின்றது. அதனால் தான் மாற்றுக்கருத்து கட்சிகள் இன்று முன்னிலையில் நிற்கின்றன.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர். எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது. ஜெ யிடம் வாய்ப்பே இல்லை. அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.
Checked
Wed, 10/15/2025 - 03:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed